Followers

Search Here...

Wednesday 27 December 2017

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகள்


தலைமுடியில், ஒரு முடி வெள்ளையாக தெரிய ஆரம்பித்தாலும், அதை பார்த்து வருத்தப்பட்டு, எப்படியாவது அதை கறுப்பு ஆக்க அல்லது மறைக்க பார்க்கிறோம்.

ஷவரம் (shave) செய்தாலும், சரியாக செய்து இருக்கிறோமா என்று பல முறை கண்ணாடியில் சரி பார்க்கிறோம்.

அலங்காரம் செய்து கொள்ள எத்தனையோ நேரம் செலவு செய்கிறோம்.

ஒரு எறும்பு கடித்தாலும், கடித்த இடத்தை பார்த்து உடனே ஏதாவது சிகிச்சை செய்து கொள்கிறோம்.

இந்த உடம்பை பாதுகாக்க எவ்வளவு பாடுபடுகிறோம்.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைபடுகிறோமே, இது தவறா ?
உடம்பை பார்த்துக்கொள்வது தவறே இல்லை.

இப்படி உடம்பை பார்த்து பார்த்து கவலைப்படுகிறோமே, எப்பொழுதாவது நம் மனசை பற்றியோ, நாம் உண்ணும் உணவை பற்றியோ கவலைப்படுகிறோமா ? இல்லை.

கொஞ்சம் இந்த உடம்பின் உள்ளே இருக்கும், ஆத்மாவுக்கும் இந்த ஆர்வம், பாதுகாப்பு கொடுக்கிறோமா? இல்லவே இல்லை.

இந்த ஆத்மா இருக்கும் வரை தான், இந்த உடம்புக்கு மரியாதை.
இந்த அறிவு நமக்கு முதலில் வர வேண்டும்.

ஆத்மா போய்விட்டால் பிணம்.

சாஸ்திரங்கள் இதை நமக்கு சொல்லி கொடுக்கிறது. சாஸ்திரங்கள் நமக்கு நன்மை மட்டுமே சொல்கிறது.

இப்பொழுது பொதுவாக குறைந்த ஆயுள், நோயுடன் சாவு அமைவதற்கு காரணம் என்ன?

நம்மிடம் உள்ள 2 பெரிய குறைகளே காரணம். அது என்ன தெரியுமா?

1. நம் மனதை நாம் கவனிப்பதே இல்லை. இந்த மனசை தேவை இல்லாமால், பல துக்கத்துக்கு நாம் விரும்பாமலே ஆழ்த்துகிறோம்.

மனசு சுத்தமாக வைத்து இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

2. உணவு கட்டுப்பாடு என்பதே இன்று நம்மிடம் கிடையாது.

நாக்குக்கு பிடித்தால் உடனே வயிறுக்குள்ளே தள்ளுகிறோம் நாம்.

உடம்புக்கு நல்லதா, நீண்ட நாள் இந்த ஆத்மாவை இந்த உடம்பில் வாழ வைக்குமா என்பதில் கவனமே இல்லை நமக்கு.

சரீரம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்ற உண்மையான அறிவு இல்லாததே நோய்க்கு காரணம். ஆயுள் குறைவுக்கும் காரணம்.

ஆக, நம் ஆயுளை குறைப்பவை இரண்டு :

- மனதில் துக்கம் ஆயுளை குறைக்கும்.
- உணவு கட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை ஆயுளை குறைக்கும்.

1. மனதை எப்படி துக்கம் இல்லாமல், சுத்தமாக வைத்து கொள்ள முடியும்?

மனது சொல்வதை எல்லாம் அறிவு (புத்தி) கேட்க கூடாது. மனதை புத்தியால் ஒழுங்குபடுத்த வேண்டும். மனசு நல்ல விஷயத்துக்கும் ஆசை படும். பல நேரம், கெட்ட விஷயத்துக்கும் (விஷத்துக்கும்) ஆசைபடும்.

புத்தியை கொண்டு, நல்ல விஷயத்துக்கு மட்டும் நம்மை நகர்த்த வேண்டும்.

இந்த மனசை புத்தியால் கவனிக்க கவனிக்க, அது தானாக செயல்படாமல் புத்தி சொல்வதை கேட்டு அடங்கி நடக்கும்.

பகவத் கீதையில் இதையே ஸ்ரீகிருஷ்ணரும் சொல்கிறார்.

மனசை புத்தி கொண்டு அடக்க முடியுமா? என்று கேட்கும் அர்ஜுனனுக்கு, ஸ்ரீகிருஷ்ணர் "வைராக்கியத்துடன், விடா முயற்சி செய்து கொண்டே இருந்தால், புத்திக்கு மனசு அடங்கும்" என்கிறார். பிராணாயாமம் என்ற யோகா செய்வதின் மூலமாக கூட மனசை அடக்க முடியும் என்று யோகத்தை சொல்கிறார். புத்திக்கு வழிகாட்டி நம் சாஸ்திரங்கள்.
ப்ராம்மண குலத்தில் பிறந்த ஆண் சாகும் வரை காயத்ரி ஜபம் செய்ய வேண்டும் என்கிறது சாஸ்த்திரம். தினமும் 1008 தடவை, 3 காலமும் சொல்ல சொல்ல, இவனிடம் இருக்கும் பாப மூட்டைகள் அழியும், முக்திக்கு வழி வகுக்கும். அப்படியானால், பெண்கள், மற்ற குலத்தில் உள்ளவர்கள் ஒன்றுமே சொல்லாமல் இருந்து விடலாமா ?
சாஸ்த்திரம் அப்படி எல்லாம் விட்டு விடாது. கடினமான கட்டுப்பாடு ப்ராம்மண குலத்தில் பிறந்துவனுக்கு விதிக்கும் நம் சாஸ்திரம், அதே புண்ணியத்தை எளிதாக "ராம, ராம" என்று இடைவிடாது சொல் என்று பெண்களையும், ஆண்களையும் எப்பொழுதும் சொல்ல சொல்கிறது.
"ராம, ராம" என்று எப்போதும் சொல்லி கொண்டு இருப்பவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல.
சாக்ஷாத் ருத்திரன் சிவபெருமானே "ராம, ராம" என்று சொல்கிறார். காசியில் உயிர் போகும் அனைவருக்கும் தானே அவர்கள் காதில் "ராம, ராம" என்று சொல்கிறார். இன்றும் வட இந்தியர்கள் இதையே "ராம நாம் சத்ய ஹை" என்று சொல்லிக்கொண்டே தகனம் செய்கின்றனர். ஹனுமான் "ராம, ராம" என்று சொல்கிறார். காந்தி சொன்ன கடைசி சொல்லும் "ராம்".
எவன் ஒருவனுக்கு எப்பொழுதும் "ராம, ராம" என்று மனதில் எப்பொழுதும் ஒடுகிறதோ, அவன் வாழ்வில் அசம்பாவிதம் ஏதும் நடக்காது. எந்த துன்பமும், வந்தது தெரியாமல் மறைந்து விடும். சமாளிக்கும் திறன் அதிகரிக்கும். ஆச்சர்யங்களும், வாழ்வில் சுகமும் நிகழும்.

எளிதாக இருக்கிறதே என்று பிராணாயாமத்தையும், ராம நாமத்தையும், காயத்ரி மந்திரத்தையும் சாதாரணமாக நினைத்து விட கூடாது. சொல்வது யார் என்று பார்க்க வேண்டும். ப்ரம்ம ரிஷியான விஸ்வாமித்திரர் வாக்கில் வந்தது காயத்ரி மந்திரம். சிவபெருமான், மற்றும் பதஞ்சலி போன்ற ரிஷிகளின் மூலம் கிடைத்தது யோகா.

நாம் எதற்கும் தகுதி இல்லாதவர்கள். மனதை அடக்க முடியாதவர்கள். மந்திரங்கள் கண்டுபிடிக்கும் திறன் இல்லாதவர்கள். யோக முறைகள் கண்டுபிடிக்க முடியாதவர்கள்.
ஒரு ரத்தினத்தில் ஒரு நூலை கொண்டு துளை போட முடியுமா? முடியாது. ரத்தினத்தில் துளை போடும் அளவிற்கு ஒரு நூலுக்கு திறன் கிடையாது.
அது போல நமக்கு மனதை அடக்கி, முக்தி அடையும் அளவுக்கு திறன் கிடையாது. ஆனால் முக்தி அடையாமல் இருந்தால், பிறந்து கொண்டே இருக்க வேண்டியது தான். சாஸ்திரம் நம்மை அப்படியே பிறந்து இறந்து கொண்டே இருங்கள் என்று விட்டு விடுமா? வழியை காட்டுகிறது.

ஒரு கூர்மையான ஊசி ஒரு ரத்தினத்தையும் துளை போடும் திறன் கொண்டிருக்கும். இந்த கூர்மையான ஊசியே காயத்ரி மந்திரம், ராம நாம மந்திரம். எப்படி ஒரு ஊசியின் நுனியில் ஒரு துளையில் நூலை கோர்த்து, அதே ரத்தினத்தின் உள்ளே ஊசியுடன் சேர்ந்து நூலும் மறு வழியே வருமோ, அது போல, எதற்கும் தகுதி இல்லாத நாமும் இந்த மந்திரங்களை நம் மனதில் நுழைத்துக் கொண்டே, பிறவி கடலில் இருந்து வெளியே சென்று விடலாம்.
கிடைத்தற்கு அறிய ராம நாம மந்திரத்தை விட்டு, காலத்தை வீணடிக்காமல் மனதில் உரு போட, பல ஜென்மங்களாக இன்று வரை சேர்த்த பாவ மூட்டை அழிவதால், உலகிலும் சுகமாக இருந்து, மோக்ஷமும் எளிதாக கிடைக்கும்.
பிராம்மணன் சம்பாதிக்கிறானோ இல்லையோ, கட்டாயம் காயத்ரி மந்திரமும் சேர்த்து 3 வேலையும் சொல்ல வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

ஒருவன் நன்றாக வேலை செய்தும், அவன் மேல் அதிகாரி, இன்னொருவனுக்கு வேலை சுமாராக செய்தாலும், அவனுக்கு உயர் பதவி, அதிக சம்பளம் கொடுத்துவிட்டார். உடனே இவன் மனசு "இது நியாயமா, தர்மமா ?" என்று கேள்வி எழுப்பியது. மனதை கெடுத்துக் கொண்டால் ஆயுள் குறையும் என்கிறது எச்சரிக்கிறது சாஸ்திரம்.

நம் ஸனாதன தர்மத்தில், முக்தி அடையும் வரை, பிறக்கும் ஒவ்வொருவனும் (ஆத்மாவும்) பல ஜென்மங்களாக ஒரு உடம்பில் பிறந்து, செத்து, இன்னொரு ஒரு உடம்பில் பிறந்து, செத்து வந்து கொண்டே இருக்கிறான். ஒவ்வொருவனும் தன் தன் பாவ புண்ணிய மூட்டையை எடுத்து கொண்டே வருகிறான்.

இப்படி "இது நியாயமா, தர்மமா?" என்று கேள்வி கேட்டு மனசை கெடுத்து கொண்டு புலம்பும் ஒருவனுக்கு, நம் சாஸ்திரம், இந்த உண்மையையே சொல்லி புரிய வைக்கிறது. காரணம் இல்லாமல் ஒருவனுக்கு கிடைக்கும் நன்மையும், துக்கமும் வருவதற்கு காரணம், அவனவன் சேர்த்து வைத்துள்ள பாவ, புண்ணிய முட்டையின் அளவை பொறுத்தது.
இந்த உண்மையை சொல்லும் நம் ஸனாதன தர்மம், நீ இப்போது நன்றாக செய்த வேலைக்கும் ஒரு புண்ணியத்தை தருகிறது. இது இப்போது தெரியாமல் போனாலும், இந்த புண்ணியம் உன் ஆயுசையும், உன் ஆரோக்கியத்தையும், உனக்கு பிரியமான ஒருவனின் ஆயுளை காக்கவும் கூட பயன் படலாம். உன் புண்ணியம் உனக்கே தக்க சமயத்தில் வந்து சேரும் என்கிறது. அதனாலேயே, நீ எப்போதும் மனசை இது போன்று கெடுத்துக் கொள்ளாமல், நீ உன் கடமையை நியாயமாக செய் என்று சொல்கிறது. புண்ணிய காரியத்தையே செய். இதையே ஸ்ரீ கிருஷ்ணரும் கீதையில் "கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே" என்று சொல்கிறார்.

நன்றாக வேலை செய்ததற்கு மதிப்பு இல்லையே என்று வருத்தப்படாதே.

இதை விட முக்கியமான ஆபத்து உனக்கு வர இருக்கும் போது, இந்த உன் புண்ணிய கர்மாவே உன்னை காப்பாற்றும் என்கிறது நம் சாஸ்திரம்.

இப்படி உண்மையை சொல்லி, மனதை எந்த விதத்திலும் கவலைக்கு ஆட்படுத்தாதே என்று சொல்கிறது. மனதில் கவலை அதிகரிக்க ஆயுள் குறையும்.

நம் ஆயுள் குறைய, நம் ஸனாதன தர்மம் ஒப்புக்கொள்ளவே கொள்ளாது. மனித சரீரம் கிடைப்பது அரிது. ஆயுள் அதிகம் இருந்தால், இந்த பிறவியிலேயே முக்திக்கு முயற்சி செய்யலாம்.

2. சரீரத்தை எப்படி ஆரோக்கியமாக வைத்து இருக்க முடியும்?

நாம் உண்பதில் தீவிரமான கவனம் வேண்டும்.

இந்த கவனமும், நாம் நீண்ட காலம் வாழ வேண்டும் என்ற ஆசையினால் வர வேண்டும்.

நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ்ந்தால், கோடி நன்மை நமக்கும், நம் குடும்பத்துக்கும்.

கண்டதை எல்லாம் தின்று, நோய் வந்து, அகால மரணம் அடைந்து, கிடைத்த மனித பிறவியை வீணடித்து விட கூடாது. அகால மரணத்தினால், நம்பி இருக்கும் குடும்பம் கஷ்டப்பட வேண்டி வரும்.

ஆகாரம் (உணவில்) நியமம் (கட்டுப்பாடு), நம் வாழ்வில் கட்டாயம் இருக்க வேண்டும். சுயநலமாகவாவது, இதில் நமக்கு ஆசை வர வேண்டும்.

முடிந்தவரை காலத்தில், பசி அடங்கும் வரை மட்டும், சாத்வீக உணவு மட்டும் உண்ண வேண்டும். மது மாமிசம் கூடவே கூடாது. உணர்ச்சிகளை உண்டு பண்ணும் உணவும் உண்ண கூடாது.

நாக்குக்கு அடிமைப்பட்டு பார்த்ததையெல்லாம் சாப்பிடக்கூடாது.

வெளி உடம்பில் மட்டும் கவனம் போதாது. உளளே இருக்கும் உடம்பும், உறுப்புகளும் நம் உடம்புதான் என்று மறந்து விட கூடாது.

மனிதனின் பூரண ஆயுசு 120 வருடம் என்கிறது சாஸ்திரம்.

நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசையும் வேண்டும். ஆரோக்கியமாகவும் கடைசி வரை தானே தன் வேலையை செய்து, முடிந்தால் கிழ வயதிலும் மற்றவர்க்கு உதவி செய்யும் நிலையிலும் இருந்து வாழ ஆசை வேண்டும்.

ஆசை மட்டும் போதுமா ? முதலில் நமக்கு நா அடக்கம் வேண்டும்.

நா அடக்கம் இருந்தால், உணவு கட்டுப்பாடு தானே வரும்.

உடல் உறுப்புகள் நீண்ட காலம் ஒத்துழைக்கும்.

உலகத்தில் சாப்பிட்டு சாப்பிட்டு நோய் வந்து இறந்தவனை விட, குறைந்த சாத்வீக சாப்பாடு மட்டுமே உண்டு, எந்த நோயும் இல்லாமல் போவதே மேல்.

பட்டினியால் இறந்தவனை விட, சாப்பிட்டதனால் நோய் வந்து இறந்தவர்களே உலகில் அதிகம்.

ஆகார நியமத்தில் நாம் அதிக ஆர்வம் கொண்டிருந்தால், தானாக நீண்ட நாள் இந்த ஆத்மா இந்த உடம்பில் தங்கும். உடம்பும் 100 வயது தாண்டினாலும் நோய் எதுவும் இல்லாமல் ஒத்துழைக்கும்.

நோய் வந்தவனுக்கு, மனம் துக்கம் அடைந்தவனுக்கு மட்டும் தான் போதுமே வாழ்க்கை என்று தோன்றும். மனதில் துக்கம் புத்தியின் துணை கொண்டு ஜெயித்து, கட்டுப்பாடான உணவு பழக்கத்துடன் இருப்பவன் வயதான காலத்திலும், நீண்ட நாள் வாழ ஆசை கொள்வான்.

நம் சனாதன தர்மம் நமக்கு சிறந்த வழிகாட்டி. நீண்ட நாள் வாழ்வோம். புண்ணியம் சேர்ப்போம்.

No comments:

Post a Comment