Followers

Search Here...

Saturday 30 April 2022

காந்தாரி ஸ்ரீகிருஷ்ணரை சபிக்கிறாள்.. காந்தாரி யாதவ வீரர்கள் அழிந்து, அவர்களின் பெண்கள் கதறி அழ வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணர் வனத்தில் மறைய வேண்டும் என்று சபிக்கிறாள்... மஹாபாரதம் பேசுகிறது..

காந்தாரி 'யாதவ வீரர்கள் அழிந்து, அவர்களின் பெண்கள் கதறி அழ வேண்டும், ஸ்ரீ கிருஷ்ணர் வனத்தில் மறைய வேண்டும்' என்று சபிக்கிறாள்... மஹாபாரதம் பேசுகிறது..

पाण्डवा धार्तराष्ट्रा: च द्रुग्धाः कृष्ण परस्परम् |

उपेक्षिता विनश्यन्त: त्वया कस्माज जनार्दन ||

- வியாசர் மஹாபாரதம்

கிருஷ்ணா! பாண்டவர்களும், கௌரவர்களும் ஒருவருக்கொருவர் பகை கொண்டிருந்தனரே.  ஜனார்தனா ! இவர்கள் இருவருமே அழிந்து போகட்டும் என்று ஏன் இருவரையுமே புறக்கணித்தாய்?


शक्तेन बहु भृत्येन विपुले तिष्ठता बले |

उभयत्र समर्थेन श्रुतवाक्येन चैव ह ||

- வியாசர் மஹாபாரதம்

கிருஷ்ணா! உனக்கு சக்தி இருந்தும், உனக்காக போர் செய்ய மகா பராக்கிரமசாலிகளான யாதவ வீரர்கள் இருந்தும், இப்படி ஒரு பெரு நாசத்தை தடுக்காமல் இருந்து விட்டாயே!


इच्छतॊपेक्षितॊ नाशः कुरूणां मधुसूदन |

यस्मात् त्वया महाबाहॊ फलं तस्माद् अवाप्नुहि ||

- வியாசர் மஹாபாரதம்

மதுசூதனா! நீ விருப்பப்பட்டு தான் இவர்களை உபேக்ஷித்து, குரு வம்சத்தின் நாசத்தை ஏற்படுத்தி இருக்கிறாய். இப்படி ஒரு குலநாசத்தை ஏற்படுத்தியதன் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்.

पतिशुश्रूषया यन् मे तपः किं चिद् उपार्जितम् |

तेन त्वां दुरवापात्मञ शप्स्ये चक्रगदाधर ||

- வியாசர் மஹாபாரதம்

என்னுடைய கணவனுக்கு இதுநாள் வரை பணிவிடை செய்த தவத்தின் பயனை கொண்டு, சக்கரமும், கதையும் தரித்து இருக்கும் உன்னை சபிக்கிறேன்.


यस्मात् परस्परं घ्नन्तॊ ज्ञातयः कुरुपाण्डवाः |

उपेक्षितास ते गॊविन्द तस्माज् ज्ञातीन वधिष्यसि ||

- வியாசர் மஹாபாரதம்

எப்படி உறவுக்காரர்களான பாண்டவர்களும், கௌரவர்களும் தங்களுக்குள் அடித்து கொண்டு இருக்கும் போது, அவர்களை பார்த்து கொண்டே இருந்தாயோ, அது போல, உன்னுடைய உறவுகள் தங்களுக்குள் அடித்து கொண்டு மடிவதை காண்பாய். நீயே உன்னுடையவர்களை வதமும் செய்வாய்.


त्वम् अप्य उपस्थिते वर्षे षट्त्रिंशे मधुसूदन |

हतज्ञाति: हतामात्यॊ हतपुत्रॊ वनेचरः |

कुत्सितेनाभ्युपायेन निधनं समवाप्स्यसि ||

- வியாசர் மஹாபாரதம்

மதுசூதனா! இன்றிலிருந்து 36வது வருடம் வரும் போது, உன்னுடைய உறவுகளும், மந்திரிகளும், புத்ரர்களும் மடிந்து போவார்கள். நீயும் அனாதை போன்று வனத்தில் சஞ்சரித்து மறைவாய்.


तवाप्य एवं हतसुता निहतज्ञातिबान्धवाः |

स्त्रियः परिपतिष्यन्ति यथैता भरत स्त्रियः ||

- வியாசர் மஹாபாரதம்

எப்படி பரத குல பெண்கள் இப்பொழுது கண்ணீர் வடித்து அழுகிறார்களோ, அது போல, உன் குல பெண்களும், தங்கள் கணவனை, பிள்ளையை, சொந்தங்களை இழந்து அழுவார்கள்.


இவ்வாறு, 100 புத்ரர்களை இழந்த சோகத்தில், தன்னையும் மீறி காந்தாரி இப்படி பேசிவிட்டாள். 


மஹாபாரத சரித்திரத்தை, மன்னன் ஜனமேஜெயனுக்கு சொல்லிக்கொண்டு வந்த  வைசம்பாயனர் மேலும் சொல்கிறார். 


तच छ्रुत्वा वचनं घॊरं वासुदेवॊ महामनाः |

उवाच देवीं गान्धारीम् ईषद अभ्युत्स्मयन्न इव ||

- வியாசர் மஹாபாரதம்

உதார குணம் கொண்ட வாசுதேவன், இப்படி கடுமையான சாபத்தை வழங்கிய காந்தாரியை பார்த்து, புன்சிரிப்புடன் பேசலானார்..


संहर्ता वृष्णिचक्रस्य नान्यॊ मद् विद्यते शुभे |

जाने ऽहम् एतद् अप्य एवं चीर्णं चरसि क्षत्रिये ||

- வியாசர் மஹாபாரதம்

க்ஷத்ரிய ஸ்திரீயே! நான் இவ்வாறு நடக்கப்போவதை அறிவேன். என்னுடைய சங்கல்பத்தையே, நீ இப்பொழுது சொன்னாய். இப்படி ஒரு சாபத்தை ஏன் கொடுத்தோம் என்று நீ உன்னையே சந்தேகிக்க அவசியமில்லை. 

अवध्यास् ते नरैर् अन्यैर् अपि वा देवदानवैः |

परस्परकृतं नाशम् अतः प्राप्स्यन्ति यादवाः ||

- வியாசர் மஹாபாரதம்

என்னை தவிர வேறொருவனால் யாதவ (வ்ருஷணீ வீரர்கள்) கூட்டத்தை அழிக்க முடியாது. என்னுடைய யாதவ வீரர்களை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்களாலும், தானவர்களாலும் கூட அழிக்க முடியாது. யாராலும் கொல்லப்படாதவர்கள். யாதவர்கள் தங்களுக்குள் அடித்து கொண்டு தான் மடிவார்கள்


इत्य उक्तवति दाशार्हे पाण्डवा: त्रस्तचेतसः |

बभूवु: भृशसंविग्ना निराशा: चापि जीविते ||

- வியாசர் மஹாபாரதம்

இவ்வாறு தாஸார்ஹன் (கிருஷ்ணர்) கூறியவுடன், பாண்டவர்கள் மனதில் நடுக்கமும், பெரும் துயரும் கொண்டனர். உலகில் உயிர் வாழ ஆசையில்லாதவர்களாகவும் ஆகினர்.


'தன் பக்கம் நிறைய ஆள் சேர்த்து கொள்ளவேண்டும்' என்பதற்காக பலமில்லாதவன், திறமையில்லாதவன், பேச தெரியாதவன், படிக்க தெரியாதவனை எல்லாம் சேர்த்து கொண்டு, தானும் பெரும் கூட்டத்திற்கு 'தலைவன்' என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள் உண்டு


பெருமாளோ, தன்னுடைய சேனையில், ஒவ்வொரு வீரனும் தோற்கடிக்க முடியாத சூரர்களாகவே வைத்து இருக்கிறார். 


பொதுவாக எந்த அரசனும், தன்னுடைய சேனையில் இருப்பவர்களிடையே, பலம் குறைந்தவரையே தூதுக்கு அனுப்புவார்கள்


மலையையே ஒரு கையால் தூக்கும், சாதிக்க முடியாத (அஸாத்ய) காரியங்கள் அனைத்தையும் சாதிக்க கூடியவரான ஹனுமானை தூதுக்கு அனுப்புகிறார், ராமபிரான்.


இலங்கைக்குள் ராவணன் அனுமதி இல்லாமல் கால் வைக்க இந்திரனும், சூரியனும் பயந்து கொண்டு எல்லையில் நிற்க, ஹனுமான் சீதாதேவியை அசோகவனம் வரை சென்று பார்த்து விட்டார். 

சீதாதேவியிடம் "ராமபிரான் வைத்திருக்கும் கோடிக்கணக்கான வானர சேனையில் கடைசி வரிசையில் நிற்கும் ஒரு சாதாரண வானரன் நான். என்னை விட பலசாலிகளான வானரர்களை கோடிக்கணக்கில் அழைத்து கொண்டு பிரபு ஸ்ரீராமர் உங்களை மீட்க வந்து கொண்டு இருக்கிறார்" என்று சொல்கிறார். 


யாராலும் தோற்கடிக்க முடியாத சூரர்களையே தன் சேனையில் வைத்து கொண்டு இருப்பவர் என்பதால் பெருமாளுக்கு "ஸூரஸேன:" என்று பெயர் உண்டு.


ராம அவதாரத்தில் தான் அப்படி ஒரு சூரசேனையை வைத்து இருந்தார் என்று நாம் நினைத்து விட கூடாது. 


கிருஷ்ண அவதாரத்திலும் இவருடைய யாதவ சேனை அழிக்கவே முடியாத சேனையாக இருந்தது


பாரத போர் முடிந்த பிறகு உலகத்தில் இருந்த அனைத்து க்ஷத்ரிய வீரர்களும் அழிந்து போன நிலையில், யாதவ சேனை மட்டும் அப்படியே இருந்தனர். 

கிருஷ்ணரோடு இருந்த சாத்யகியும் போரில் மடியவில்லை..

கௌரவர்களுக்காக போர் செய்த ஸ்ரீ கிருஷ்ணரின் யாதவ சேனையும் அழியவில்லை. கௌரவர்கள் பக்கம் நின்று போர் செய்த க்ருதவர்மனும் போரில் மடியவில்லை.  


இப்படிப்பட்ட அழிக்கவே முடியாத, அடக்க முடியாத யாதவ வீரர்கள், கிருஷ்ணருக்கு கட்டுப்பட்டு இருந்தார்கள் என்றால், கிருஷ்ணனின் பலம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? என்று நாம் அனுமானிக்கலாம். 


அவதார காரியம் முடிந்து விட்டதால், தான் வைகுண்டம் செல்ல முடிவு செய்தார் ஸ்ரீ கிருஷ்ணர். 

யாராலும் அழிக்க முடியாத யாதவ வ்ருஷ்ணீ சேனையை பூலோகத்தில் விட்டு விட்டு சென்றால், உலகம் தாங்காது என்பதால், தனக்கு முன்னால் இவர்கள் அனைவரையும் முதலில் அனுப்ப முடிவு செய்தார். 

இவர்களே தங்களுக்குள் அடித்து கொண்டு அழிந்து போகும் படியாக சங்கல்பித்து, போர் முடிந்த சமயத்திலேயே காந்தாரியை சாபமிடும் படி செய்வித்து, தன் கையாலேயே மிச்சமிருந்த யாதவ சேனையையும் காலம் வந்தபோது அழித்தார். 

மஹாபாரத நிகழ்வை அறிய.. இங்கே படிக்கவும்..


மற்றவர்கள் தோற்கடிக்க முடியாத சேனையை தனக்கு கீழ் வைத்து கொண்டு ஆட்சி செய்பவர் என்பதாலேயே, இவருக்கு, ஸூரஸேனன் என்று பெயர்.


(ஸூரஸேன:)

सद्गतिः सत्कृतिः सत्ता सद्भूतिः सत्परायणः ।

शूरसेनो यदुश्रेष्ठः सन्निवासः सुयामुनः ॥

ஸத்கதி: ஸத்க்ருதி: ஸத்தா

ஸத்பூதி: ஸத்-பராயண: |

ஸூரஸேனோ யது-ஸ்ரேஷ்ட:

ஸந்நிவாஸ: ஸுயாமுன: ||

- விஷ்ணு சஹஸ்ரநாமம்




What is the Age of Abhimanyu when he died? How long Abhimanyu and Uttara lived together? - Let us understand Vyasa Mahabharata

Uttara was pregnant when Abhimanyu went to war. How many years they lived together?

Brahmam, the Supreme Creator (Narayana) created Brahma Deva.  From Brahma's right Chest, appeared Dharma Deva.  

Dharma Deva had 8 sons named as generally as Vasu.  

One Vasu named "Soma" whose father is Dharma Deva and Mother is Manasvini, had son named "Varchas"

When all the Asura took the form of humans and conquered the Human World (earth), Brahmam (Supreme Creator) decided to incarnate himself as Krishna. 

Hearing this news, all Deva started to incarnate themselves in Human Form.

At that time, Soma (one of Vasu) hesitated to let his son "Varchas" to born as Human. 

He told the other Devas as following:

नाहं दद्यां प्रियं पुत्रं मम प्राणैर्गरीयसम्।

समयः क्रियतामेष न शक्यम् अतिवर्तितुम्।।

सुरकार्यं हि नः कार्यमसुराणां क्षितौ वधः।

तत्र यास्यत्ययं वर्चा न च स्थास्यति वै चिरम्।।

ऐन्द्रिर्नरस्तु भविता यस्य नारायणः सखा।

सोर्जुनेत्यभिविख्यातः पाण्डोः पुत्रः प्रतापवान्।।

तस्यायं भविता पुत्रो बालो भुवि महारथः।

ततः षोडशवर्षाणि स्थास्यत्यमरसत्तमाः।।

अस्य षोडशवर्षस्य स सङ्ग्रामो भविष्यति।

यत्रांशा वः करिष्यन्ति कर्म वीरनिषूदनम्।।

नरनारायणाभ्यां तु स सङ्ग्रामो विनाकृतः।

चक्रव्यूहं समास्थाय योधयिष्यन्ति वःसुराः।।

विमुखाञ्छात्रवान्सर्वान्कारयिष्यति मे सुतः।

बालः प्रविश्य च व्यूहमभेद्यं विचरिष्यति।।

महारथानां वीराणां कदनं च करिष्यति।

सर्वेषामेव शत्रूणां चतुर्थांशं नयिष्यति।।

दिनार्धेन महाबाहुः प्रेतराजपुरं प्रति।

ततो महारथैर्वीरैः समेत्य बहुशो रणे।।

दिनक्षये महाबाहुर्मया भूयः समेष्यति।

एकं वंशकरं पुत्रं वीरं वै जनयिष्यति।

प्रनष्टं भारतं वंशं स भूयो धारयिष्यति।।

- adi parva (vyasa mahabharata)

"My son is dearer to me than all living beings. I will not give him away. You must accept the fate I am about to tell you. I agree that, It is our business to kill the demons incarnated on earth. My son 'Varchas' is going to be born for this. But he will not stay on earth for long. 

May he be born as the son of Nara, the consort of Narayana. While he is Young boy, a Great Warrior, O best of Gods! My child will be in the world for only 16 years. 

At that age, a great war between us and the Asuras will take place in the world. The Asuras will set up a cycle and fight. My child will roam inside without being able to break the cycle. He will turn his back on the enemies standing there and run away. There alone, my son will will send one-fourth of the asura army to their own city. Many great warrior will join together and fight with him. Finally, i will get him back again in the same evening to my place. He will give this dynasty a valiant son. That son will restore the lost dynasty of Bharata," he said to the other gods


After the end of war, gandhari along with her husband, vyasa, pandava, krishna visits the war zone.


Vyasa gives gandhari divine vision to see things despite she closed her eyes with silk cloth.


At that time, she sees uttara crying over Abimanyu who was killed by multiple warriors at same time.

Uttara cries...

एतावान् इह संवासॊ विहितस् ते मया सह |

षण् मासान् सप्तमे मासि त्वं वीर निधनं गतः ||

- vyasa Mahabharata (ஸ்திரீ பர்வா)

The union with me in this world had it seems only for 6 months, for in the 7th O hero! You have bereft of life.

இவ்வுலகில் என்னுடன் உமக்கு இந்த 6 மாத காலம் தான் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டது. 7வது மாதத்தில் நீர் வீரமரணத்தை அடைந்து விட்டீர்.

Uttara later gave birth a son named "Vishnu RAthan" alias "Parikshit".


Parikshit ruled the entire world with no enemies around, inherited from his grandfather "Yudhistra".


Friday 29 April 2022

பேராசை, கோபம், அகங்காரம் - கொண்ட மனிதர்களை நினைத்து வேதனைப்படுகிறார், யம தர்மன்... மஹாபாரதம் பேசுகிறது.

பேராசை, கோபம், அகங்காரம் - கொண்ட மனிதர்களை நினைத்து வேதனைப்படுகிறார், யம தர்மன்

த்ருதராஷ்டிரன் பாரத போர் முடிந்த பிறகு 100 பிள்ளைகளையும் இழந்த புத்ரசோகத்தில் மூழ்கி இருந்தான்.


விதுரர் சமாதானம் செய்து பேசலானார் 


अहॊ विनिकृतॊ लॊकॊ लॊभेन च वशीकृतः |

लॊभ क्रॊधमदॊन्मत्तॊ नात्मानम् अवबुध्यते || 

- vyasa mahabarata

Alas! This world is being deceived! Everyone is fascinated by greed!

Greed, anger, and arrogance (religion) make every human being self-arrogant.

அந்தோ! இந்த உலகம் வஞ்சிக்கப்பட்டு இருக்கிறதே! பேராசையினால் அனைவரும் கவரப்பட்டு இருக்கிறார்களே!

பேராசையும், கோபமும், அகங்காரமும் (மதமும்) தானே ஒவ்வொரு மனிதனையும், தன்னை உணர விடாமல் செய்கிறது.


कुलीनत्वेन रमते दुष्कुलीनान् विकुत्सयन् |

धनदर्पेण दृप्तश् च दरिद्रान् परिकुत्सयन् || 

- vyasa mahabarata

He who is born of a good caste, by greed or anger or arrogance, rejoices when he curses a person born of a low caste.

Similarly, The rich insult the poor  out of greed or anger or arrogance.

இந்த மூன்றினால் தானே, நல்ல குலத்தில் பிறந்தோம் என்பதற்காக, இழி குலத்தில் பிறந்தவனை திட்டி, ஆனந்தப்படுகிறான்.

இந்த மூன்றினால் தானே, பணக்காரன், ஏழையை அவமதித்து திட்டுகிறான்.


मूर्खान् इति परान् आह नात्मानं समवेक्षते |

शिक्षां क्षिपति चान्येषां नात्मानं शास्तुम् इच्छति || 

- vyasa mahabarata

One regards others to be ignorant fools, but seldom takes a survey of one’s own self. One attributes faults to others but is never desirous to punish one’s own self.

இந்த மூன்றினால் தானே,  மூர்க்கனாக இருந்து கொண்டு, மற்றவன் எப்படி? என்று எடை போடுகிறான். ஆனால், தான் யார் (ஆத்மா) என்று உணருவதில்லையே!

இந்த மூன்றினால் தானே, அடுத்தவர் குறையை பார்த்து அறிவுரை சொல்ல ஆசைப்படுகிறான்.

இந்த மூன்றினால் தானே, தான் செய்யும் தவறுக்கு தனக்கு புத்திமதி சொல்லிக்கொள்ள ஆசைப்படாமல் இருக்கிறான் !


अध्रुवे जीवलॊके ऽस्मिन् यॊ धर्मम् अनुपालयन् |

जन्मप्रभृति वर्तेत प्राप्नुयात परमां गतिम् ||

- vyasa mahabarata (Stri Parva)

Whoever listens to this sruti (this sentence uttered by the widower) and protects and follow essense of dharma from the birth will attains the ultimate destiny (Salvation).

எவன் இந்த ஸ்ருதியை (விதுரர் சொன்ன இந்த வாக்கியம்) கேட்டு, நிலையற்றதான இந்த பூலோக வாழ்க்கையில் பிறந்தது முதல் தர்மத்தை காத்து வருவானோ அவன் உத்தம கதியை அடைகிறான்.


एवं सर्वं विदित्वा वै यस् तत्त्वम् अनुवर्तते |

स प्रमॊक्षाय लभते पन्थानं मनुजाधिप ||

- vyasa mahabarata

O king (Drutharashtra)! 

Whoever knows the philosophy of Dharma and lives dharmic life, gets free himself from the path of samsara.

அரசே (த்ருதராஷ்டிரா) !

எவன் தர்மத்தின் தத்துவத்தை அறிந்து, வாழ்க்கையை வாழ்கிறானோ! அவன் தன்னை சம்சார பாதையில் இருந்து விடுவித்து கொள்கிறான்.

இவ்வாறு விதுரனாக அவதரித்திருந்த யம தர்மன், த்ருதராஷ்டிரன் மூலமாக பேராசை, கோபம், அகங்காரம் என்ற மூன்றின் அபாயத்தை சொல்லி, சம்சார சக்கரத்தில் இருந்து தப்பிக்க வழியை சொன்னார்.

Yama Dharma, thus incarnated as Vithura, told us, the three dangers "greed, anger, and pride" through Drudharashtra, and the way to escape from the wheel of samsara (to attain moksha).

Saturday 23 April 2022

குணவான் என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? ராமரே 'குணவான்', ராமரே 'வீர்யவான்' என்று தமிழரான வால்மீகி 'ராமாயணம்' காட்டுகிறார். தெரிந்து கொள்வோம்.

'குணவான்' என்றால் என்ன? வீர்யவான் என்றால் என்ன? '

நம்மிடம் பல நல்ல குணங்கள் இருக்கலாம். அதற்காக நம்மை குணவான் என்று சொல்லிவிட முடியாது.

'சரணாகதி செய்த பிறகு, பிறருடைய குற்றத்தை அறிந்தும், மன்னிப்பது' என்பது உயர்ந்த குணம்.


'தன்னை நம்பியவர்கள் செய்யும்/செய்த குற்றங்களை மன்னிக்கும் குணம் யாரிடம் இருக்குமோ!' அவர்களை 'குணவான்' என்று சொல்கிறோம்.

எப்படிப்பட்ட எதிரியானாலும், எதிர்த்து வெற்றி கொள்ளும் மஹாவீரனை, "வீர்யவான்" என்று சொல்கிறோம்.

'எதிரியை தண்டிக்கும் மஹாவீரனாக இருந்தும், இப்படி ஒரு குணவான், என் சமகாலத்தில் வாழ்கிறாரா? எதிரி என்று தெரிந்தும், குற்றவாளி என்று தெரிந்தும், தண்டிக்கப்படவேண்டியவன் என்று தெரிந்தும், தன்னை சரணமடைந்தால் மன்னிக்கும் குணம் கொண்டவன் உலகில் இப்பொழுது இருக்கிறாரா?' என்று அன்பில் என்ற தேசத்தில் அவதரித்த வால்மீகி, நாரதரை கேட்கிறார்.

कोन्वस्मिन् सांप्रतम् लोके 

गुणवान् कः च वीर्यवान् |

- வால்மீகி ராமாயணம்

40000 ராக்ஷஸ படையோடு, கர-தூஷணன் ராமபிரானை கொல்ல வந்தான். தனி ஒருவனாக ராமபிரான் மட்டுமே நின்று, 40000 பேரையும் ஒழித்து காட்டினார்.

ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்து சீதையை மீட்க நின்றார்.


'சீதாதேவியை ராமபிரான் இல்லாத சமயத்தில் கடத்தி, இங்கே கொண்டு வந்தது மிகப்பெரிய தவறு' என்று சொன்ன விபீஷணனை, ராவணன் எட்டி உதைத்து வெளியேற்றிய பிறகு, ராமபிரானை சரணாகதி செய்ய வருகிறான். 

சுக்ரீவன், 'ராக்ஷஸனான விபீஷணன், போர் நடக்க போகும் சமயத்தில், எதிரி பக்கத்தில் இருந்து வந்து இருக்கிறான். மஹா ஆபத்து' என்றான்.

ராவணனை நேருக்கு நேர் போர் செய்து வீழ்த்தும் மஹாவீரனாக இருந்தும், 'என்னிடம் சரணம் என்று ஒருவன் வந்தால், அவனுக்கு அபயம் கொடுப்பது எனக்கு விரதம். விபீஷணனை மட்டுமல்ல, அவனோடு அந்த ராவணனே வந்து இருந்தால் (रावणः स्वयम्) அவனையும் மன்னித்து விடுவேன்" என்றார்.

आनयैनं हरिश्रेष्ठ

दत्तमस्याभयं मया ।

विभीषणो वा सुग्रीव

यदि वा रावणः स्वयम्

- வால்மீகி ராமாயணம்

தன்னை அண்டியவன் செய்த குற்றத்தை மன்னிக்கும் குணம் கொண்ட ஒரு மனிதனை பார்ப்பதே அரிது. ராமபிரானுக்கோ, கடல் போன்ற குணங்களில் இதுவும் ஒரு குணமாக இருந்தது.


இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், "ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, தண்டனை ஒன்றே வழி. மன்னிப்புக்கு இடமே இல்லை" என்று சொல்லி இருப்பான்.


சீதாதேவியை தொலைத்து, பஞ்சவடியில் (மஹாராஷ்டிரா) இருந்து நடந்து, ராமேஸ்வரம் வரை வந்து, 5 நாளில் வானரர்கள் பாலம் அமைக்க, கடும்கோபத்துடன் போருக்கு தயாராக இருந்த சமயத்தில், விபீஷணன் என்று ஒருவன் சரணாகதி செய்ய வருகிறான் என்றதும், "அவனோடு, ராவணன் வந்திருந்தாலும் அபயம் கொடுக்கிறேன்" என்று சொல்வதை பார்க்கும் போது, ராமபிரான் "குணவான்" என்று தெரிகிறது.  


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனை மன்னிக்க அப்பொழுதும் தயாராக இருந்தார் என்று பார்க்கும் போது தான், "பதித பாவன சீதாராம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரிகிறது.


குணவானாக இருக்கும் ராமபிரான் சரித்திரத்தை, அன்பில் என்ற இடத்தில் அவதரித்த தமிழன் வால்மீகி, கவி நடையாக எழுதுகிறார்.


நல்ல மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்பை கொண்ட ராமபிரானை வணங்குவார்கள்.

What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.


Sunday 17 April 2022

அஸூயை இல்லாதவர் ராமர். மாத்ஸர்யம் என்றால் பொறாமை. அஸூயை என்றால் என்ன? தெரிந்து கொள்வோம்.

 அஸூயை இல்லாத ராமபிரான்...

நமக்கு, சிலர் செய்யும் குற்றத்தை பார்த்து கோபம் வரும். 

அவர்கள் குற்றத்தை பார்த்த பிறகு, அவர்களிடம் உள்ள குணங்கள் கூட தோஷமாக தோன்றும்.

இதற்கு 'அஸூயை' என்று பெயர்.


ஒருவர் குற்றத்தை பார்த்த பிறகும், அவர்களிடம் உள்ள மற்ற குணங்கள் தோஷமாக பார்க்காமல் இருப்பதற்கு, 'அனஸூயை' என்று பெயர்.


'அஸூயை இல்லாதவர் ராமபிரான்' என்று தமிழ் முனிவரான வால்மீகி, 24 வயது ராமபிரானை பார்த்து  சொல்கிறார். 

स हि रूपोपपन्नश्च वीर्यवान् अनसूयकः |

भूमौ अनुपमः सूनुर्गुणै: दशरथोपमः || 

- வால்மீகி ராமாயணம்


ராவணன் 'பேடித்தனமாக' ராமபிரான், லக்ஷ்மணன் இல்லாத சமயத்தை ஏற்படுத்தி, சீதாதேவியை கடத்தி சென்றான்.


ராமபிரான் பஞ்சவடியில் இருந்து கிளம்பி, சீதையை காப்பாற்ற இலங்கை வந்து போர் செய்கிறார்.


ராவணன் முதல் முறையாக ராமபிரானுடன் போர் செய்ய நேருக்கு நேர் வருகிறான்.

அன்று வரை, ராவணன் எந்த போரிலும் தோல்வியை பார்க்காதவன். மஹா வீரன்.

சீதாதேவியை கடத்தியது ராவணன் செய்த குற்றம். 

மற்றபடி, அவனும் மஹாவீரன் தான்.


இவன் செய்த ஒரு குற்றத்துக்காக, வீணாக இவன் வீரத்தை குற்றம் சொல்ல ஆசைப்படவில்லை ராமபிரான்.


முதல் முறை போர் புரிய வந்த ராவணனின் தேரை உடைத்து, கிரீடத்தை தட்டி, அவன் தேர் கொடியை உடைத்து தள்ள, யாரிடமும் இது வரை தோற்று அறியாத ராவணன், 38 வயது ராமபிரானிடம் தோற்றான். 


தன்னிடம் போர் புரிவதற்கு முன், ராவணன் சுக்ரீவனை, கவாக்ஷன், கவயன், ருஷபன், ஜ்யோதிமுகன், நபன், நீலன், ஹனுமான், லக்ஷ்மணன் அனைவரையும் கீழே விழ செய்து, கடைசியாக ராமபிரானிடம் போர் புரிய வந்தான்.


இவர்கள் அனைவரையும் தோற்கடித்த வீரன் என்பதால், ராமபிரான் தோற்று நிற்கும் ராவணனை பார்த்து,

"ராவணா! நீ பெரிய காரியத்தை செய்துள்ளாய். மஹாபலம் கொண்ட என் சேனையை எதிர்த்து வென்றுள்ளாய்.

பலருடன் போர் செய்ததால் நீ தோற்று இருக்கலாம். அதனால் உன்னை இன்று யமலோகம் அனுப்ப நான் நினைக்கவில்லை" என்று அஸூயையே இல்லாமல் சொல்கிறார்.

कृतं त्वया कर्म महत् सुभीमं

हतप्रवीरश्च कृतस्त्वयाऽहम् ।

तस्मात्परिश्रान्त इव व्यवस्य

न त्वां शरैर्मृत्युवशं नयामि ॥ 

- வால்மீகி ராமாயணம்

பெரும் அவமானத்தோடு திரும்பி நடந்து செல்கிறான் ராவணன்.

இந்த இடத்தில் சாதாரண மனிதன் எவன் இருந்திருந்தாலும், ராவணன் செய்த ஒரு குற்றத்துக்கு, அஸூயை கொண்டு, அவன் வீரத்தையும் கேலி செய்து, "பேடி ராவணா! நான் இல்லாத போது சீதாதேவியை கடத்தினாயே? நீயெல்லாம் ஒரு வீரனா?" என்று அவன் வீரத்தை குறையாக சொல்லி இருப்பான்.


சீதாதேவியை கடத்தினான் என்ற குற்றத்துக்கு தண்டனை கொடுக்க வந்த ராமபிரான், ராவணனிடம் உள்ள மற்ற நல்ல குணங்களையோ, திறமையையோ கேலியாகவோ, தோஷமாகவோ பேசவே இல்லை.


'ஒருவரிடம் உள்ள குற்றத்துக்காக, அவரிடம் உள்ள நல்ல குணத்தையும் தோஷமாக சொல்வது' - அஸூயை.


இந்த அஸூயையே இல்லாதவர் ராமபிரான் என்று வால்மீகி சொல்கிறார். 

மனிதனாக வாழ நினைக்கும் எந்த மனிதனும், இந்த உயர் பண்புகள் கொண்ட ராமபிரானை வணங்காமல் இருக்கமுடியாது.


What are the Qualities of Ram? ராமபிரானின் குணங்களை அறிந்த பிறகு, யார் தான் இவரை வழிபட மாட்டேன் என்பார்கள்? ராமபிரானின் குணங்களை அறிவோம்.. வால்மீகி ராமாயணம்.

Friday 15 April 2022

கள்ளழகர்... வைகை ஆற்றங்கரை வர காரணம்.... என்ன?

தன் பக்தர்களை பார்க்க, அவர்கள் கொடுப்பதை வாங்கி கொள்ள, புது புது பக்தர்களை உருவாக்க, மோக்ஷம் கொடுக்க, பக்தனிடம் தனக்கு இருக்கும் அன்பை காட்ட வருகிறார் கள்ளழகபெருமாள்...

ராம அவதாரம் செய்த பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் அரண்மனையை விட்டு விட்டு, 

ஆடை அலங்காரத்தை மாற்றி கொண்டு,  

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக லக்ஷ்மணனையும் சேர்த்து கொண்டு, 

தனக்காக காத்து கிடக்கும் பல ரிஷிகள், சபரி ஆஸ்ரமத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பழங்கள், கிழங்குகளை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்தினார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களான ஹனுமான், சுக்ரீவன், விபீஷணன் போன்றவர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி

மேலும் கோடிக்கணக்கான வானரர்கள், ராக்ஷஸர்கள், அணில் உட்பட பலரை தன் பக்தனாக்கி, 

உறவுகளால் விரட்டப்பட்ட தர்மாத்மாவான விபீஷணனுக்கு இலங்கையையே கொடுத்து, சகோதரனால் விரட்டப்பட்ட சுக்ரீவனுக்கு அவன் மனைவியோடு ராஜ்யத்தையும் கொடுத்து, 

ஜடாயுவுக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அயோத்திக்கு திரும்பினார்.


ராம அவதாரம் செய்த போது தான் பெருமாள் இப்படி செய்தார் என்று நினைக்க கூடாது.


பெருமாள், இன்றும் மதுரையில், ஒவ்வொரு வருடமும் இந்த ஆச்சர்யமான நிகழ்வை செய்து காட்டுகிறார்.


கள்ளழகராக வீற்று இருக்கும் பெருமாள், ஒரு காரணத்தை காட்டி, 

தன் கோவிலை விட்டு விட்டு, 

கையில் சாட்டை, கோடாலியோடு அலங்காரம் செய்து கொண்டு, 

வெயில் மழை பாராமல் வீதியில் கிளம்பி, 

தனக்கு காவலனாக பல போலீஸை சேர்த்து கொண்டு, 

தனக்காக மண்டகபடியில் காத்து கிடக்கும் பல பக்தர்களின் மண்டபத்துக்குள் புகுந்து அவர்களிடம் பழகி, அவர்கள் கொடுக்கும் பொங்கல் பழங்களை ஏற்றுக்கொண்டு, அவர்களுக்கு தரிசனம் கொடுத்து ஆனந்தப்படுத்துகிறார்.

மேலும், 

இன்றுவரை தன்னை பார்க்காத புது புது பக்தர்களை தானே அவர்கள் இடத்துக்கு சென்று தரிசனம் கொடுத்து, தன் பக்தனாக்கி, 

மேலும் கோடிக்கணக்கான வெளியூர், வெளிநாட்டவர்களை தன் பக்தனாக்கி

உறவுகளால் விரட்டப்பட்டவர்கள், சகோதரனால் விரட்டப்பட்டவர்கள், ஏழைகள் என்று அனைவருக்கும் சுகமான வாழ்வு கிடைக்க அணுகிரஹம் செய்து

மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுத்து விட்டு, 

மீண்டும் தன் அழகர்மலைக்கு திரும்புகிறார்.


கள்ளழகருக்கு காவல் புரிபவர்கள் தன்னை லக்ஷ்மணன் போலவும்,

அவருக்காக மண்டகப்படியில் காத்து இருந்து வரவேற்பவர்கள், தங்களை ரிஷிகள் போலவும்,

அவருக்கு போகும் வழியில் சேவை செய்பவர்கள், தங்களை பலம்வாய்ந்த வானர சேனை போலவும்,

ஏதோ முடிந்தவரை சேவை செய்பவர்கள், தங்களை ராமபிரானுக்கு சேவை செய்த அணில் போலவும்,

துக்கத்தில் இருந்து பெருமாளை பார்ப்பவர்கள், தங்களை சுக்ரீவன் போலவும், விபீஷணன் போலவும், நினைக்கும் போது, கள்ளழகரை ராமராக தரிசிப்போம். 

Saturday 2 April 2022

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார். வைஷ்ணவர்கள் தினமும் உச்சரிக்கும் நாமங்கள் - சிவ, மஹேஸ்வர, மஹாதேவ, தேவேஸ (தேவ ஈஸ்வர)

"சிவ சிவ" என்று சொன்னால் விஷ்ணு பிரசன்னமாவார்...

"மங்களம், பத்ரம், கல்யாணம், சுபம், பிரசன்னம், நிர்மலம்" என்ற அனைத்து அர்த்தங்களையும் உள்ளடக்கிய சொல் "சிவ". சமஸ்கரித நிகண்டு (dictionary) இந்த அர்த்தத்தை விளக்குகிறது.

"தன்மே மன: சிவ ஸங்கல்பமஸ்து"
என்னுடைய மனது கண்ட கண்ட சிந்தனைகள் கொள்ளாமல், நிர்மலமாக மங்களமாக ஆகட்டும்! என்று யஜுர் வேதத்தில் ஒரு வாக்கியம் உள்ளது.

ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த சமகாலத்தில் அடுத்த தெருவில், காஞ்சி மடாதிபதியாக போதேந்திராள் இருந்தார். ராம நாமத்தை பிரச்சாரம் செய்தார்.

பகவந் நாம போதேந்திராள் "ராம" நாமத்தை உலகம் முழுக்க சொல்லிக் கொண்டிருக்கும் சமயத்தில், அருகிலேயே இருக்கும் ஸ்ரீதர ஐயாவாள் "சிவ சிவ சிவ சிவ..' என்று சொல்வார்.

இருவரும் மகாத்மாக்கள். ஸ்ரீதர ஐயாவாள் சாக்ஷாத் சிவபெருமான் அம்சம் என்றே சொல்வார்கள்.

ராம நாமத்தின் மகிமை தெரியாதவரில்லை ஸ்ரீதர ஐயாவாள்.
அவரிடம் கேட்டால், வாயை திறந்தால் "சிவ சிவ" என்று தான் வருகிறது என்றாராம்.

'பகவானுடைய நாம உபதேசம்' பெறுவதாக தான் சாதாரண ஜனங்கள் நினைப்பார்கள்.
பகவன் நாமம் தான் உண்மையில் நம்மை பிடிக்கிறது.

சிலரை, "ராம" நாமம் பிடிக்கிறது.
சிலரை "சிவ" நாமம் பிடிக்கிறது.
சிலரை "திருவஷ்டாக்ஷரம்" பிடிக்கிறது.

மங்களாமான அந்த பரமாத்மாவை தியானத்து கொண்டே ஸ்ரீதர ஐயாவாள் ஒரு சமயம் "சிவ சிவ..' என்று சொல்ல, சிவபெருமானுக்கு பதிலாக "ஸ்ரீ கிருஷ்ணர் பாலகனாக புல்லாங்குழல் வைத்து கொண்டு" தரிசனம் கொடுத்து விட்டார்.

சொன்னதோ சிவ நாமம், தரிசனமோ கிருஷ்ண தரிசனம்..

சிவ சிவ என்று சொன்னதற்கு விஷ்ணு வந்தாரே! எப்படி?

மங்களமானவர், பிரசன்னமானவர் விஷ்ணு என்பதால், விஷ்ணுவுக்கும் "சிவ" என்று பெயர் உண்டு.

ஆயிரம் விஷ்ணு நாமத்தில், விஷ்ணுவுக்கு "சிவ" என்று பெயரும் உண்டு.

விஷ்ணு பக்தனும், மங்களமான விஷ்ணுவை "சிவ சிவ" என்றே ஜபிக்கிறான்..

அநிவர்தீ நிவ்ருத்தாத்மா
ஸம்-க்ஷேப்தா க்ஷேம-க்ருத் சிவ: |
ஸ்ரீவத்ஸ-வஷா: ஸ்ரீவாஸ:
ஸ்ரீபதி: ஸ்ரீமதாம்-வர: ||

விஷ்ணு சஹஸ்ரநாமமும் அர்த்தமும்

Friday 1 April 2022

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா? பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்

அன்று ப்ராம்மணர்கள் வேதம் படித்தீர்கள்? சூத்திரனுக்கு (employee) என்ன படிக்க கொடுத்தீர்கள்? படிக்க விட்டீர்களா?  பெரியார் வந்ததால் தானே இன்று படிக்கிறோம்.

அன்று, பிராம்மணர்கள் 

4 வேதங்கள், அதனுடைய உபநிஷத்துக்கள், 

4 உப வேதங்கள், 6 சாஸ்திரங்கள்,

ஸ்ம்ருதிகள், இதிகாசங்கள்,  புராணங்கள், 

8 வேதாந்த சித்தாத்தங்கள், 

64 கலைகள் படித்தார்கள், 

படித்தார்களே தவிர, அதில் கிடைக்கும் பயனை மற்றவர்களுக்கு தான் கொடுத்தார்கள்..

64 கலைகளில் கோவில் சிற்பம் வடிப்பது ஒரு கலை. அதை செய்தது சூத்திரன் (empoyee) தானே?

அரசர்கள் தானே அஸ்திரங்கள், சஸ்திரங்கள் பயன்படுத்தினர்? 

அன்று வைத்தியம் செய்தவர்கள் பிராம்மணர்கள் இல்லையே? 

பெரிய பெரிய மாளிகைகள் அமைத்தது பிராம்மணன் இல்லையே? 

க்ஷத்திரியர்கள், உபநிஷத்தில் சொல்லப்படும் தனுர் வேதத்தை (Army/weaponry) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.


சூத்திரனும், வைஸ்யர்களும் உபநிஷத்தில் சொல்லப்படும் ஆயுர்வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதத்தை (music) ப்ராம்மணர்களிடம் கற்று கொண்டனர்.

அது மட்டுமா, 

கீழே சொல்லப்பட்ட அனைத்தும் ப்ராம்மணர்களிடம் கற்றுக்கொண்டனர்.  


பணம் சம்பாதிக்கும் வழி அனைத்தையும், தொழில்களையும் மற்ற அனைவருக்கும் சொல்லிக்கொடுத்த பிராம்மணர்கள் தனக்கென்று புருஷ சூக்தம், ஸ்ரீ ருத்ரம் என்று தெய்வத்தை பற்றி பாடும் வேத மந்திரங்களை மட்டும் வைத்து கொண்டனர். 

அன்று சுயநலம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்த ப்ராம்மணர்களை, நன்றி உணர்ச்சியுடன் மற்றவர்கள் பொருள் உதவி செய்து  காப்பாற்றினார்கள்.

பிராம்மணன் தொழில் திறன் இருந்தும், அஸ்திர சஸ்திர அறிவு இருந்தும் பிறர் தொழில் செய்ய வழி விட்டு,  தினமும் யாசகம் செய்து வாழ்ந்தான்.

இதனால், பிராம்மணர்கள் மற்றவர்களால் காப்பாற்றப்பட்டனர். 


1000 வருட இஸ்லாமிய, மற்றும் கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில், செல்வம் கொழித்த பாரத மண்ணில் கோவிலை தாக்கிய  இவர்கள்,கோவிலில் இருந்த ப்ராம்மணர்களை முதலில் கொன்று  குவித்தனர். 

கோவில்களை இடித்தனர். தங்கள் ஸ்தூபங்களை கட்டினர். பொது மக்களை கொன்று குவித்தனர். ஊரில் உள்ள பெண்களின் மானத்தை அழித்தனர். எதிர்த்த பொது மக்களை தலை சீவினர். பயந்த பொது மக்களை மதம் மாற்றினர். பெண்களை கர்ப்பமாக்கி தன் மதத்துக்கு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை உருவாக்கி, பாரத மக்களாக வாழ்ந்த நமக்குள்ளே மத வேறுபாட்டை விதைத்து சண்டையிட வைத்தனர். 

பாரத மண்ணில் இருந்த க்ஷத்ரிய அரசர்களை நேரில் எதிர்த்தால் தோற்க வேண்டி இருக்கிறது என்றதும், சமயம் பார்த்து, இரவு நேரத்தில் திடீரென்று ஊரில் புகுந்து பொது மக்களை, கோவிலை பிடித்து அரசர்களை கீழ் படிய வைத்து, பிறகு தலை சீவி நாட்டை மெது மெதுவாக பிடித்தனர். 

க்ஷத்ரிய அரசர்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்ட போது, வைஸ்யர்களும், சூத்திரர்களும் அனாதை  ஆகினர்.

தங்களை காத்து கொள்ள முடியாத  நிலையில், பிராம்மணர்கள் கைவிட பட்டனர். 


முகம்மது பின் துக்ளக் - கடுமையான வரியை ஹிந்துக்களுக்கு விதித்து, மதம் மாற சம்மதித்த பாரத மக்களுக்கு வரி சலுகை செய்து ஆட்சி செய்தான்.

அப்பொழுது, தங்கத்தில் நாணயம் வைப்பதை காட்டிலும், செம்பு நாணயம் செய்தால் எளிதாக இருக்கும் நினைத்து நாணயத்தை மாற்றினான்.

அப்பொழுது பாரத நாட்டில் இருந்த அனைத்து ஹிந்துக்களும் தாங்களே செம்பு நாணயம் செய்து விட்டனர். இதனால், பெரும் குழப்பம் ஏற்பட, துக்ளக் மீண்டும் தங்கத்துக்கே நாணயத்தை மாற்றினான் என்று பார்க்கிறோம்.


64 கலைகளும் சர்வ சாதாரணமாக ஹிந்துக்கள் தெரிந்து வைத்து இருந்தனர் என்பது இந்த ஒரு நிகழ்விலேயே  தெரிகிறது.


இத்தனை கலைகளும் கற்ற சூத்திரர்கள், வைசியர்கள், தாங்கள் கற்ற கலைகளை முடிந்த அளவு 1800 வரை  காத்தனர்.  கிறிஸ்தவ ஆட்சி பாரதம் முழுவதும் ஏற்பட்டதும், இதுவும் நசுக்கப்பட்டு, பாரத மக்கள் அனைவரும் ஏழையாக்கப்பட்டனர். 

இந்த உண்மையை உணரும் போது, தான் சூத்திரர்களும், வைஸ்யர்களும் எத்தனை படித்து இருந்தார்கள் என்பது நமக்கு புரியும்.


இதோ சூத்திரனும், வைஸ்யர்களும் கற்று கொண்டவைகள்:

இசை, வாத்யம், ந்ருத்தம், நாட்டியம், ஆலேக்யம், விசேஷ கச்சேத்யம், தண்டுல குஸுமபலி விகாரா, புஷ்பா ஸ்தரணம், தசன வஸனாங்கராகா, மணி பூமிகாகர்ம, சயன ரசனம், உதக வாத்யம் உதககாத, சித்ர யோகா, மால்யக் ரதன விகல்பா, சேகரா பீட யோஜனம், நேபத்ய யோகா, கர்ணபத்ர பங்க, ஸுகந்த யுக்தி, பூஷண யோஜனம், இந்த்ர ஜாலம், கௌதுமார யோகா, ஹஸ்தலா கவம், விசித்ர சாகா பூப பக்ஷ்ய க்ரியா, பானக ரஸ ராகா ஸவ யோஜனம், ஸூசீவாயக கர்ம, ஸூத்ர க்ரீடா, வாத்ய க்ரியா, ப்ரஹேலிகா, ப்ரதிமாலா, துர்வசன யோகா, புஸ்தக வாசனம், நாடகாக் யாயிகா தர்சனம், காவ்ய ஸமஸ்யா பூரணம், பட்டிகா வேத்ர பாணி விகல்பா, தர்க்க கர்மாணி, தக்ஷணம், வாஸ்து வித்யா, ரத்ன பரீஷா, தாது வாத, மணி ராக ஞானம், ஆகார ஞானம், வ்ருஷ ஆயுர்வேத யோகா, மேஷ குக்குடலாவ யுத்த விதி, சுக ஸாரிகா பிரலாபனம், உத் ஸாதனம், கேச மார்ஜன கோசலம், அக்ஷர முஷ்டி காகதனம், தாரண-மாத்ருகா, தேச பாஷா ஞானம், நிர்மிதி ஞானா, யந்த்ர மாத்ருகா, மிலேச்ச பாஷை / மிலேச்ச குதர்க்கம், ஸம் வாச்யம், மானஸ காவ்ய க்ரியா, க்ரியா விகல்பர், ச்சலித யோகா, அபிதான கோச சந்தோ ஞானம், வஸ்த்ர கோபனம், த்யூத விசேஷா, ஆகர்ஷ க்ரீடா, பால க்ரீடா, நௌகா நிர்மாண கலா, புஷ்பச கடிகா நிர்மாணம், விமான நிர்மாண கலா

சாந்தீபிணி என்ற ப்ராம்மணர், குசேலன் என்ற ப்ராம்மணனுக்கும், இடையனான ஸ்ரீ கிருஷ்ணருக்கும் அனைத்தையும் சொல்லி கொடுத்தார்.


குசேலன் ஏழையாக வாழ்ந்தாலும், தொழில் செய்ய திறன் இருந்தும், தெய்வத்தை பற்றி சொல்லும் வேதத்தை மட்டுமே ஓதி வந்தார். 


'சூத்திரன் அடிமுட்டாளாக இருந்தார்கள்' என்று உளறி, 1000 வருடத்தில் இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் கற்ற கல்வியை இழந்தனர் என்பதை மறைப்பதற்காக, அனைத்தையும் கற்று கொடுத்த ப்ராம்மண சமுதாயத்தை பழிப்பது, முட்டாள்தனம்.


அன்று, அனைத்து கலைகளும் தெரிந்தவர்களாக அனைவருமே இருந்தார்கள்


 

மேலும் இந்த கலைகளை பற்றி அறிய ..   இங்கே படிக்கவும் 

x