Followers

Search Here...

Showing posts with label மஹாபாரத. Show all posts
Showing posts with label மஹாபாரத. Show all posts

Wednesday 27 December 2017

மஹா பாரத சமயத்தில், ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)


மஹா பாரத சமயத்தில்,
ஈரான் முதல் கிரீஸ் வரை : (Iran, Greece and beyond)

மஹா பாரத சமயத்தில், ஈரான் வரை பாரத தேசமாக இருந்தது.

ஈரான் நாட்டை தாண்டி இருக்கும் தேசங்களில் கிரேக்கர்களை "யவனர்கள்" என்று அழைத்தனர். இவர்களை மிலேச்சர்கள் என்று அறியப்படுகின்றனர்.

இன்றைய ஈரான் நாடு, மஹாபாரத சமயத்தில், காம்போஜ தேசம், பஹ்லவ தேசம், சாக தேசம் என்று 3 தேசங்களாக அழைக்கப்பட்டது.

பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் போனற தேசங்கள், ரமத தேசம் என்று அழைக்கப்பட்டது.

பஹ்லவ தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

வேத மார்க்கத்தை விட்டு, மது, மாமிசம் என்று வாழ்க்கை முறை இந்த அனைத்து தேசங்களிலும் பரவி இருந்தது. பொதுவாக இந்த தேசத்தவர்கள் யாவரையும் மிலேச்சர்கள் என்று அறியப்பட்டனர்.


சிறந்த க்ஷத்ரியர்களாக இருந்த இவர்கள், இந்த காலத்தில் மலேச்சர்களாகி இருந்தனர்.
வேதங்கள் ஓதும் வேதியர்கள் இங்கு வாழ மறுத்தனர்.

இந்த காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டான்.

சாக தேசம், காம்போஜ தேசம், பஹ்லவ தேச படைகள், க்ருபாச்சாரியார் தலைமையில் போர் புரிந்தனர்.

சிவபெருமான் வழிபாடு அதிகம் இருந்த தேசமாக இருந்தது சாக தேசம். பின்னர் மிலேச்சர்கள் ஆகினர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்கு திக்விஜயமாக வந்த பீமன், சாக தேச அரசர்களை பீமன் போர் செய்து அடக்கினான்.

சாகர்கள் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொள்ள வந்தனர். கொண்டு வந்த பரிசுகளை கொடுக்க மாளிகையின் வாசல் வரை சென்று வரிசையில் நிற்க வேண்டி இருந்தது. இவர்களுக்கு முன்னால் சீன தேசத்தவர்கள், வ்ருஷ்ணி என்ற யாதவ குலத்தை சேர்ந்தவர்கள் மேலும் பலர் முன் வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.

சாக படைகள், காம்போஜ தேச அரசன் "சுதிக்ஷ்ணன்" தலைமையில் போரிட்டனர்.

மஹா பாரத போரில், துரியோதனன் பக்கம் நின்று கடும் போர் புரிந்தனர் ரமத தேச, காம்போஜ தேச, பஹ்லவ தேச, சாக தேச, யவன தேச படைகள். அனைவரையும் அர்ஜுனன் ஒருவனே கொன்று குவித்தான்.

பாரத மண்ணில், காம்போஜ தேசத்தை தான் முதன் முதலில் பிற்காலத்தில் 3000 வருடத்திற்கு பிறகு வந்த கிரேக்க அரசன் அலெக்சாண்டர் கைப்பற்றினான். இதே ஊரில் பாபிலோன் என்ற இடத்தில், உயிர் விட்டான்.

மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas


மஹாபாரத சமயத்தில் காஷ்மீர், ஹிமாலய பிரதேசம் : Kashmir, himalayas

காஷ்மீர தேசம், தாரத தேசம், தர்வபிஸார தேசம், லடாக் தேசம் என்று அறியப்பட்டது.

புலிந்த தேசம் என்பது ஹிமாலயா என்று அறியப்பட்டது. புலிந்த தேசத்தவர்கள், இமாலயம் முதல் அஸ்ஸாம் வரை படர்ந்து இருந்தனர்.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து சில காலம் மறைந்து வாழ்ந்தனர். இந்த சமயத்தில் புலிந்த தேசம் அடைந்து அங்குள்ள மணலி (manali) என்ற தேசத்தை அடைந்தனர். குளு மணாலி என்று சுற்றுலா செல்லும் இடமாக இன்று உள்ளது.

அங்கு இடும்பன், இடும்பி என்ற அரக்கர்கள் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.

இடும்பனை பீமன் கொன்றான்.
தன் சகோதரனை கொன்றாலும், பீமனின் பலத்தை கண்டு ஆச்சரியப்பட்டு, பீமனை மணக்க ஆசைப்பட்டாள். குந்தி தேவி அனுமதி கொடுக்க பீமன் அவளை மணந்தான். இவர்களுக்கு கடோத்கஜன் என்ற மகன் பிறந்தான்.



பாண்டவர்கள் பதரிநாத் (உத்திர பிரதேசம்) நகரில் இருந்து, கடினமான இமாலயத்தை கடந்தனர். அப்பொழுது அங்கு இருந்த சீன தேசத்தை கண்டனர். அங்கிருந்து மேலும் பயணம் கொண்ட பாண்டவர்கள், இறுதியில், புலிந்த தேசத்தை (இமாலய தேசம்) மீண்டும் வந்து அடைந்தனர்.

13 வருடம் வனவாசம் செய்த இந்த சமயத்தில் தான், புலிந்த தேசத்தில், பீமன் ஹனுமானை தரிசித்தார்.

தாரத தேச அரசர்கள் க்ஷத்ரியர்கள். அங்கு இருந்த அரசர்கள் வேத கலாச்சாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், பிராம்மணர்களை மதிக்காமல், வேத மார்க்க ஒழுக்கத்தில் இருந்தும் மீறி வாழ்க்கை நடத்தினர். இதனால், தாரத தேசத்தை மிலேச்ச பூமி என்றும், இவர்கள் வாலிகர்கள் என்றும் அழைக்கப்பட்டனர்.

காஷ்மீர தேசத்தில் விதஸ்தா என்ற நதி ஓடிக்கொண்டு உள்ளது. (இன்று இந்த நதி ஜீலம் நதி என்று பாகிஸ்தான் பகுதி காஷ்மீரில் உள்ளது).
இந்த நதியின் நீர் மிகவும் தூய்மையானாதாக இருந்தது என்று மஹா பாரதத்தில் உள்ளது. இந்த விதஸ்தா நதி, கடைசியில் சிந்து நதியில் கலக்கிறது என்று உள்ளது.

லடாக் தேசத்தவர்கள் மிலேச்சர்களாக இருந்தனர்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த வேண்டி, அர்ஜுனன் வடக்கு நோக்கி படை எடுத்து, அனைவரையும் தோற்கடித்தான்.
காஷ்மீர தேச அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

தாரத தேசத்தவர்கள் மஹா பாரத போரில், 'யவன'ர்களோடும் (ஆப்கான் நாட்டை தாண்டி, இருக்கும் வடக்கு தேசத்தவர்கள்), தர்வபிஸார தேச அரசர்களுடனும் சேர்ந்து, துரியோதனன் பக்கம் நின்று படு வலிமையுடன் போர் புரிந்தனர்.

லடாக் தேசத்தவர்கள் மஹா பாரத போரில், பாண்டவர்களோடு நின்று போர் புரிந்தனர். யுதிஷ்டிரரை காக்கும் பணியில் இருந்த "த்ருஷ்டத்யும்னன்" இருந்தான். த்ருஷ்டத்யும்னன் படையில், லடாக் தேச படையினர் அணிவகுத்தனர்.



மஹா பாரத போரில், 13ஆம் நாள் யுத்தத்தில், அபிமன்யு பல பேரால் சேர்ந்து போர் நியதிக்கு எதிராக கொன்றனர்.
14ஆம் நாள் யுத்தம் எல்லா நியதியையும் மீறியது. சூரியன் மறைந்தும் போர் தொடர்ந்தது.
கடோத்கஜன் பலம் அதிகரிக்க, பல போர் வீரர்களை அடித்து கொன்றான். இவனை எதிர்க்க துரியோதனன் யாரும் அஞ்சினர்.

இதனால், கர்ணன் அர்ஜுனனுக்காக இந்திர தேவனிடம் வரமாக வைத்து இருந்த சக்தி ஆயுதத்தை கடோத்கஜன் மீது விட்டான். கடோத்கஜன் அடிபட்டு, கீழே விழும் போது, பீமன் வீர மரணம் அடையப்போகும் தன் மகனை பார்த்து, தன் உருவத்தை பெரிதாக்கி துரியோதனன் படை நோக்கி கீழே விழுமாறு சொல்ல, தந்தை சொல்லை இறுதி சமயத்திலும் கேட்டு, அதே போல செய்து, வீர மரணம் அடைந்தான்.

ஜம்மு (JAMMU) என்ற பெயர் யாரை கொண்டு ஏற்பட்டது? தெரிந்து கொள்ள... http://www.proudhindudharma.com/2018/06/jammu.html படிக்கவும்

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.

மஹாபாரத சமயத்தில் பூடான், அசாம்: Bhutan, Assam.




கிராட தேசம் என்று பூடான் அழைக்கப்பட்டது.

இமாலய தேசத்தின் மலை தொடரில் இந்த தேசம் இருந்தது.

ப்ரக்ஜ்யோதிச தேசம் என்று அசாம் அழைக்கப்பட்டது.

பௌண்ட்ரக தேசத்தை ஆண்ட பௌண்ட்ரக வாசுதேவன், வங்க தேசத்தின் கிழக்கு பகுதியையும், இந்த கிராட தேசத்தின் சில பகுதியையும் கைப்பற்றி ஆண்டு வந்தான்.

தேவர்கள் மனித குலத்தில் அர்ஜுனன், யுதிஷ்டிரர் என்று பிறந்தது போல, அசுரர்களும் மனித குலத்தில் பிறந்தனர்.
பாணாசுரன் என்ற அசுரனுடன், நரகாசுரன் நட்பு கொண்டிருந்தான்.

நரகாசுரன் ப்ரக்ஜ்யோதிச தேசத்தை கடகாசுரன் என்பவனிடம் இருந்து கைப்பற்றினான். அந்த தேச பெண்கள் மிகவும் அவதியுற்றனர். 


16000 இளவரசிகளை பிடித்து வைத்திருந்தான். இதனை கண்ட சத்யபாமா, ஸ்ரீ கிருஷ்ணரிடம் நரகாசுரனை வதம் செய்ய சொன்னாள்.

சத்யபாமாவுடன் ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையிலிருந்து ப்ரக்ஜ்யோதிச தேசத்தை அடைந்தார்.
நரகாசுரனின் 11 அக்சௌனி சேனையை அழித்தார். முரா என்ற அரக்கனை கொன்றார். பின் நரகாசுரனின் தலையை தன் சுதர்சன சக்கரத்தால் சீவினார்.

ஸ்ரீ கிருஷ்ணர், துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிசம் சென்ற இந்த சமயத்தில், சேடி நாட்டு அரசன் சிசுபாலன் துவாரகை சென்று, நகரில் தீ வைத்து ஓடினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலன் செய்த இந்த கீழ்தரமான செயலையும் மன்னித்தார்.

நரகாசுரன் ஸ்ரீ கிருஷ்ணரிடம், தன் இறந்த நாளை, அதர்மம் அழிந்து தர்மம் காப்பாற்றப்பட்டதன் நினைவாக, அனைவரும் கொண்டாட வேண்டும் என்று பிரார்த்தித்தான். நரகாசுரன் கொன்ற தினத்தினை, நரகாசுரனின் இறுதி ஆசைப்படி தீபாவளி திருநாளாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். இந்தியா மட்டுமில்லாமல், இந்தியா, நேபாளம், இலங்கை, மியான்மர், சிங்கப்பூர், மலேசியா மற்றும் பிஜி போன்ற நாடுகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இந்த தீபாவளி திருநாள் இன்று வரை இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.

பின்னர் பாணாசுரன் என்ற அசுரனும், ஸ்ரீ கிருஷ்ணரால் கொல்லப்பட்டார்.

நரகாசுரனின் மகன் "பகதத்தன்" அரசனானான்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்திற்கு, அர்ஜுனன் பல தேசங்களுக்கு திக்விஜயம் செய்தான். இந்த தேசத்திற்கு வந்து, பகதத்தனை தோற்கடித்தான்.
பகதத்தன், மற்ற அனைத்து இமாலய தேச அரசடகளுடன் சேர்ந்து, யுதிஷ்டிரரின் ராஜசுய யாத்தில் கலந்து கொண்டான்.

மஹாபாரத போரில், பகதத்தன் துரியோதனின் பக்கம் நின்று போரிட்டான்.

கிராட தேசத்தவர்கள் துரியோதனின் பக்கம் நின்று படு பயங்கர போர் புரிந்தனர். 
இவர்கள் பிரக்ஜ்யோதிச (அசாம்) அரசன் 'பகதத்தா'வின் ஒரு அக்ஷௌனி சேனையின் பகுதியாக அணி திரண்டு இருந்தனர்.




பகதத்தனை போரில் அர்ஜுனன் கொன்றார்.

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar. யார் இந்த ஊரில் பிறந்தார்கள்? எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் பீஹார் : Bihar.

மகத தேசம் என்று பீஹார் அழைக்கப்பட்டது.




ராமாயண காலத்தில், ஸ்ரீ ராமரின் தாய் கௌசல்யா இந்த தேசத்தில் பிறந்து, பின் கோசல அரசன் தசரதனை திருமணம் செய்து கொண்டாள்.
தசரதர் தன் காலத்திற்கு பிறகு, தன் பிள்ளைகள் ஒருவராவது, பீகாரில் உள்ள கயை என்ற நகருக்கு சென்று, விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

பிற் காலத்தில், ஸ்ரீ ராமர் கயை சென்று, தன் தகப்பனாருக்கு விஷ்ணு பாதத்தில் பிண்ட ப்ரதானம் செய்தார்.

குடும்பத்திலேயே மதம் மாறி இறந்து போனவர்கள், பிள்ளைகள் இருந்தும் திவசம் செய்யப்படாமல் இறந்து போனவர்கள், அனாதையாக இறந்தவர்கள், கர்பத்திலேயே இறந்தவர்கள், அடிபட்டு இறந்தவர்கள், காணாமல் போய் பல காலம் ஆகியும் இறந்தார்களா இல்லை இருக்கிறார்களா என்று நிலைக்கு ஆனவர்கள், இறந்தவர்கள் இப்படி எவருக்காகவும் இந்த விஷ்ணு பாதத்தில், யாவரும் தான் இருக்கும் சமயத்தில் வந்து, தன் நினைவில் உள்ள இறந்தவர்கள் அனைவருக்கும் பிண்ட ப்ரதானம் செய்யலாம், செய்ய வேண்டும். திவசம் செய்யாததால் அலையும் பித்ருக்கள் அனைவரும் திருப்தி அடைவார்கள்.

இனி,
மஹாபாரத சமயத்தில், ஜராசந்தன் மகத அரசனாக ஆண்டு வந்தான்.
யாதவர்களை தன் எதிரிகளாக நினைத்தான்.

ஜராசந்தன் பிறந்த ஊர் இன்றைய டாடாநகர் (TataNagar,Jamshedpur,Jharkhand). இது ஜாம்ஷெட்பூர் என்ற மாநிலத்தில் உள்ளது. இது பீகார் மாநிலத்தில் இருந்தது. Nov 15, 2000 ஆண்டு தெற்கு பகுதியில் இருந்த இந்த பிரதேசம் (ஜாம்ஷெட்பூர்) பிரிந்து தனி மாநிலம் ஆக்கப்பட்டது.

நரகாசுரன் (ப்ரக்ஜ்யோதிச தேசம் என்ற அசாம்), பௌண்ட்ரக வாசுதேவன் (பௌண்ட்ரக தேசம் என்ற பங்களாதேஷ்), சிசுபாலன் (சேடி தேசம் என்ற மத்யபிரதேசம்), வ்ருஷ்னி குல கம்சன் (மதுராவை ஆண்ட, ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா), துரியோதனன் (குரு தேசம் என்ற உத்திரபிரதேச இளவரசன்) ஆகியோர் ஜராசந்தனிடம் நட்பு கொண்டவர்கள்.




கம்சன் யாதவர்களை விரட்டி, மதுராவை கைப்பற்றியதால், கம்சனிடன் நட்பு கரம் நீட்டினான். தன் 2 மகள்களையும், கம்சனுக்கே மணம் செய்து கொடுத்தான்.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாமா கம்சன். தன் தங்கை என்றும் பாராமல், மதுராவில் ஜெயிலில் தள்ளினான். ஸ்ரீ கிருஷ்ணர் ஜெயிலில் அவதாரம் செய்து, கோகுலத்தில் வளர்ந்து, தன் 11 வயதில், மதுரா வந்து ஒரே குத்தில் கம்சனை பரலோகம் அனுப்பினார்.
தன் மகள்கள் விதவை ஆனதற்கு இந்த ஸ்ரீ கிருஷ்ணரும், யாதவர்களுமே காரணம் என்று, 17 முறை மதுராவை தாக்கினான். 
ஒவ்வொரு தடவையும் ஸ்ரீ கிருஷ்ணர் தோற்கடித்து விரட்டினார்.

இந்த முறை ஸ்ரீ கிருஷ்ணரை யவன தேசத்து (கிரீஸ் போன்ற மேற்கு தேசங்கள்) மிலேச்சனான "காலயவனன்" துணையுடன் எதிர்த்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் காலயவனனிடன் போர் புரிந்து சாமர்த்தியமாக அவனை கொன்றார்.
இந்த சமயத்தில் மதுராவை முற்றுகையிட்டான் ஜராசந்தன். யாதவர்களுக்கு ஏற்பட போகும் ஆபத்தை உணர்நத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.
இந்த மாயை புரியாத ஜராசந்தன் மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணரையும், யாதவர்களையும் தோற்க அடிக்க முடியாத ஜராசந்தன், சிவனை குறித்து தவம் செய்து, 100 க்ஷத்ரிய அரசர்கள் பலியிட்டு தன் பலத்தை கூட்ட எண்ணினான். இதற்காக பல தேசங்களை கைப்பற்றி அதன் 95 க்ஷத்ரிய அரசர்களை ஜெயிலில் போட்டான்.

யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்த திட்டமிட்டு கொண்டிருந்தார். இதற்கு ஜராசந்தன் போன்றவர்கள் தடையாக இருந்தனர். ஸ்ரீ கிருஷ்ணர் ஜராசந்தனை பீமனோடு மல்யுத்த போருக்கு அழைத்தார். பீமன் ஜராசந்தனை மல்யுத்தத்தில் இரண்டாக கிழித்து போட்டு விட்டான்.
ஜராசந்தன் மகன் சகதேவன் மகத தேச அரசனானான்.



சகதேவன் மஹா பாரத போரில் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டான்.

3000 வருடங்களுக்கு பிறகு கௌதம புத்தர், லும்பினி என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார். மகத தேசத்தில் (பீஹார்) உள்ள போத் கயா என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

Tuesday 26 December 2017

மஹா பாரத சமயத்தில், ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான் (Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)

மஹா பாரத சமயத்தில்,
ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜாகிஸ்தான்
(Iran, Afghanistan, Uzbekistan and Tajikistan, Kazakhstan)


இந்த தேசங்கள் அனைத்தும் பாரத தேசமாக இருந்தது.

Afghanistan, Uzbekistan and Tajikistan போன்ற தேசங்கள் அனைத்தும் "காந்தார தேசம்" என்று அழைக்கப்பட்டது. 


அனைவரும் துரியோதனனின் பக்கம் நின்று போரிட்டனர்.
ராமாயண காலத்தில்,
பரதனின் தாயார் "கைகேயி" கேகேய நாட்டின் இளவரசி. 
கேகேய நாடு இன்றைய பாகிஸ்தான் தேசம்.

கேகேய நாடும், காந்தார நாடும் அருகருகே உள்ள தேசங்கள்.

ராமரின் தம்பி பரதன், "காந்தார தேசம்" என்ற பெரிய தேசத்தை அமைத்தார். மக்கள் வாழும்படி நகரை அழகாக அமைத்தார்.

மஹாபாரத சமயத்தில், இந்த தேசங்களில், பெரும்பாலானோர் "வாலிகா அல்லது பாலிகா" என்று அழைக்கப்பட்டனர்.
யார் வாலிகர்கள்? யார் மிலேச்சர்கள்? 
https://www.proudhindudharma.com/2018/04/MlechaVahlika.html படிக்கவும்

அன்றைய பாரத தேசத்தில், இந்த தேசங்களும் அடக்கம்.

அனைவரும் சனாதன தர்ம வழியில் வேத கலாச்சாரத்தின் படி வாழும் பரம்பரையில் வந்தவர்கள்.

வேத கலாச்சாரம் உள்ள இந்த பாரதத்தில் பிறந்தும், தன் முன்னோர்கள் வேத கலாச்சார படி வாழ்ந்தவர்கள் என்று தெரிந்தும், வேத கலாச்சாரத்திற்கு எதிராக எண்ணம் கொண்டு நடப்பவர்கள், குடி பழக்கம், மாட்டு மாமிசம் உண்ணும் பழக்கம், பச்சை அரிசியாக வாங்காமல், புழுங்கல் அரிசியை வாங்கி உண்பவர்களும், பொதுவாக வாலிகர்கள் என்று அழைக்கப்பட்டனர்.
அனைத்து தேசமும் பாரத நாடாக இருந்த சமயம் அது.




ஆப்கான் (Afghan) நாட்டில் உள்ள காந்தகார் (Gandahar) என்ற நாட்டின் பெண், த்ரிதராஷ்டிரனுக்கு மனைவி ஆனாள். இவளே "காந்தாரி".
இவள் வேத கலாச்சாரத்தில் உள்ளவள்.
இவள் மூத்த சகோதரன் "சகுனி".
ஒரு சமயம், திக் விஜயமாக சென்ற கர்ணன், "காந்தார" தேசத்தை கண்டு, இவர்கள் வாழும் முறையை கண்டு, "இவர்கள் யாவரும் வாலிகர்கள்" என்றான்.
இதன் காரணமாகவே, சகுனிக்கும், கர்ணனுக்கும் ஒரு வித கசப்பு உணர்வு கடைசி வரை இருந்தது.

பாகிஸ்தான் பகுதியில், சிந்து நதி ஓரம் உள்ள பஞ்சாப் தேசம், அன்று மாத்ர தேசம் என்ற பெயருடன் இருந்தது.

இங்கு உள்ள மக்கள், பல சமயம் வேத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்கள் செய்தனர். 
இந்த தேசத்தை ஆண்டு வந்தார் "சல்லியன்" என்ற அரசர். 
வேத கலாச்சாசரத்திற்கு எதிராக பல சமயம் இந்த தேச மக்கள் நடப்பதால், இவர்களையும் பல சமயம் வாலிகர்கள் என்று அழைத்தனர்.

பொதுவாக, வேத மார்க்கத்தை இகழ்பவர்கள், வாலிகர்கள் என்று கூறப்பட்டனர். (Convert)

வேத மார்க்க வழியில் நடப்பவனை, "நீ ஒரு வாலிகன்" என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.

ஆப்கானிஸ்தான், உஸ்பேகிஸ்தான், தஜிகிஸ்தான் போன்ற தேசத்து அரசர்கள், குதிரைபடை கொண்டு போர் புரிவதில் வல்லவர்கள். 
இந்த தேசத்தில் உள்ள குதிரைகள் மிகவும் மதிப்பு உடையவையாக இருந்தன.




பீஷ்மரின் தந்தை சந்தனுவுக்கு ஒரு அண்ணன் இருந்தார். 
அவரின் செயல்கள் யாவும், வேத கலாச்சாரத்திற்கு எதிராகவும், மேலும் அரசாட்சி செய்யும் திறன் குறைந்தும் இருக்க, சந்தனு அரசனாக முடி சூட்டப்பட்டார். 
சந்தனு மகாராஜாவின், அண்ணனை பொதுவாக 'வாலிக அரசன்' என்று அழைத்தனர்.
இன்றைய பொழுதில், நாத்தீகன், ஆத்தீகன் என்று சொல்லி, இவன் கடவுள் மறுப்பாளியா, ஒத்துக்கொள்பவனா என்று அறிவது போல, வாலிகா என்பது "வேத கலாச்சாரத்தை" மீறி செயல் செய்பவர்களை குறிக்கும் ஒரு சொல்.

மஹாபாரத சமயத்தில், வியாச பகவானை பார்க்க நாரதர் வந்து பேசும் போது, வாலிகர்களை பற்றி சொல்லும்போது, 
"வாலிகர்கள் (convert) இந்த பூமிக்கு ஒரு கறை போன்றவர்கள்" என்று சொல்கிறார்.
இவர்களால் நல்லவர்கள் நிம்மதியாக தர்மத்தில் வாழ முடியாது. தானும் கெட்டு, மற்றவர்களையும் கெடுப்பவர்கள் என்கிறார்.

துரியோதனனும் அவன் சகோதரர்களும், தன் குரு 'துரோணர்' மற்றும் 'க்ருபர்' முன்னிலையில் தாங்கள் கற்ற வித்தைகளை செய்து காட்டி கொண்டு இருந்தனர். 
அந்த சமயத்தில் இந்த வாலிக அரசரும் (சந்தனுவின் சகோதரர்), உடன் இருந்து பார்த்தார்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடத்த மற்ற தேச அரசர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும். 
தன் சகோதரர்களை பல தேசங்கள் அனுப்பி சம்மதமோ, அல்லது போரில் ஜெயித்தோ வர சொல்லி அனுப்பினார்.

யுதிஷ்டிரரின் தம்பி "நகுலன்" இந்த வாலிக அரசரிடம் 'போர் புரிய வேண்டுமா? அல்லது உங்களுக்கு யுதிஷ்டிரரின் ராஜசுய யாகம் நடக்க ஆட்சேபனை ஏதும் இல்லையா?' என்றார்.
வாலிகா அரசர், 'போர் தேவையில்லை, யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகம் சிறப்பாக நடக்கட்டும்' என்று கூறி, முழுவதும் தங்கத்தில் ஆன தேரை பரிசாக தந்தார். 
யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டார்.

கர்ணனும், துரியோதனனும் அவன் தம்பி துச்சாதனனும், குல பெண் "திரௌபதி"யை சபையில் அவமானப்படுத்த முயற்சி செய்தபோது, எதிர்க்காமல், அமைதியாக உட்கார்ந்து இருந்தார், வாலிகா அரசர்.

மஹா பாரத போரில், பெரும்பாலான வாலிகா அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.

காந்தார தேச படைகள், "சகுனி"யின் பின்னால் நின்று போர் புரிந்தனர்.




13ஆம் நாள், போரில் பலரும் சேர்ந்து அர்ஜுனனின் மகன் 'அபிமன்யு'வை கொன்றனர். 
இந்த சமயமும் துரியோதனன் செயலை எதிர்க்காமல், அமைதியாக இருந்தார் வாலிகா அரசர்.

15ஆம் நாள் போரில், பீமன் தன் கதையால் ஓங்கி அடித்து, வாலிக அரசர் தலையை பிளந்தார்.

வாலிகா அரசரின் இரு புதல்வர்கள் 'சோமதத்தன், புரிச்ரவஸ்' இருவரும் 'சாத்யகி'யினால் கொல்லப்பட்டனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான். 
கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார். இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது.

போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே!' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, நீ ஒரு வாலிகன் என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம். சல்லியன் பெரும் அவமானம் கொண்டார். இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். 
கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.




18ஆம் நாள் யுத்தத்தில், காந்தார அரசன் சகுனி, கடைசியில், சகாதேவனால் அடித்து விழ்த்தப்பட்டான். 
சகுனியின் மகன் "உலுகன்" என்பவனும் சகாதேவனால் மரணத்தை தழுவினான்.

போர் முடிந்து, அஸ்வமேத யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட அர்ஜுனன், காந்தார தேசம் செல்லும் போது, சகுனியின் இன்னொரு மகனுடன் சண்டையிட்டான். 
இறுதியில் தோற்கடித்து, காந்தார தேசத்தை, யுதிஷ்டிரரின் அரசாட்சியின் கீழ் கொண்டு வந்தான்.

Sunday 3 December 2017

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan எப்படி இருந்தது?

மஹாபாரத சமயத்தில் ராஜஸ்தான் : Rajasthan

"நிஷாத தேசம்", "மத்ஸ்ய தேசம்", "சால்வ தேசம்", "மால்வ தேசம்" ஆகிய தேசங்கள், இன்று ராஜஸ்தானில் உள்ளது.


மஹா பாரத காலத்துக்கும் முன் வாழ்ந்த சத்யவான்-சாவித்ரி தம்பதிகள் ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
சத்யவான் "சால்வ தேச" அரசன்.
சாவித்ரி "மால்வ தேச" இளவரசி.
சத்யவான் உயிரை பறித்த யமனை காணும் சக்தி பெற்றவளாக இருந்தாள்.

யமனிடம் தர்க்கம் செய்து, போன உயிரை திரும்பப்பெற்றாள்.
எம தர்மராஜன், இன்னும் "நூறாண்டுகள் வாழ்க" என்று ஆசிர்வதித்து விட்டு சென்றான்.
இது ஹிந்துக்களான அனைவருக்கும் தெரிந்த சரித்திரம்.

மத்ஸ்ய தேசம் என்பது யமுனை நதி ஓரத்தில், மீன் பிடித்து வாழும் ஒரு சமூகம்.
குரு அரசன் (உத்திரபிரதேசம்) சந்தனு, இந்த தேசத்தின் மீன் பிடிக்கும் தலைவனின் மகள் "சத்யவதி"யை பார்த்து திருமணம் செய்ய நினைத்தார்.

பீஷ்மர் தன் தந்தைக்காக, சபதம் செய்து, சத்யவதியின் குழந்தைகளே சந்தனுவுக்கு அடுத்து அரசனாகட்டும் என்று சபதம் செய்து, சத்யவதிக்கும், சந்தனு மகாராஜாவுக்கும் மணம் செய்து கொண்டனர்.
இந்த தியாகத்தால், "விரும்பிய பொழுது மரணம்" என்ற வரத்தை பெற்றார் பீஷ்மர்.
இதே தேசத்தில் மகா பாரத காலத்தில் இருந்து, எழுதிய வியாச பகவானும் அவதரித்தார்.

சால்வ அரசன், காசி தேசத்து இளவரசி "அம்பா"வை விரும்பினான்.

காசி அரசன், தன் 3 மகள்களுக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்து இருந்தார்.
சாலவ அரசனும் இந்த  சுயம்வரத்திற்காக வந்தான்.

காசி ராஜன், குரு அரசன் 'விசித்ரவீர்யனுக்கு' அழைப்பு விடவில்லை. இதனால், பீஷ்மர் கோபத்துடன், காசி தேசத்துக்கு படையெடுத்தார்.

அங்கிருந்த அனைத்து அரசர்களையும், சால்வ அரசன் உட்பட, தன் பராக்ரமத்தால் வென்று, 3 இளவரசிகளையும் குரு தேசத்திற்கு கொண்டு சென்றார்.
"அம்பா" சால்வ அரசனை மணக்க இருந்ததாக சொல்ல, அம்பாவை சால்வ அரசனிடம் விட்டு சென்றார்.

காசியில் அம்பாவை காப்பாற்ற முடியாமல், பீஷ்மரிடம் தோற்றதால் அவமானம் அடைந்த சால்வ அரசன், ஒரு க்ஷத்ரியனாக இருப்பதால், அம்பாவை மணக்க முடியாது என்று மறுத்து விட்டான்.



இதனால் வேதனையும், பீஷ்மரிடம் கோபமும் கொண்டாள் அம்பா.

வாழ வழி இல்லாததால், தீ மூட்டி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
பின்னர், சிகண்டியாக துரௌபதிக்கு சகோதரனாக பிறந்தாள்.

நிஷாத தேச அரசன் பெயர் "நலன்".

நிஷாத அரசனும், கோசல அரசனும் (உத்திரபிரதேசம்) நண்பர்கள்.

இந்த நிஷாத தேசம், காடுகளும், மலைகளும் நிரம்பி இருந்தன.

பாண்டவர்களும், கௌரவர்களும் துரோணரிடம் பாடம் கற்று கொண்டிருந்த சமயம் அது.
இந்த காட்டு பகுதியில் சில நாள் தங்கி போருக்கான சஸ்திர பயிற்சி செய்து கொண்டிருந்தனர்.

ஏகலைவன் என்ற வேடுவன், துரோணரின் குருகுலத்தில் வில் வித்தை கற்று கொள்ள ஆசைப்பட்டான்.
துரோணர் க்ஷத்ரியனுக்கு மட்டுமே "இந்த சஸ்த்ர வித்தைகள் கற்று தர முடியும்" என்று மறுத்து விட்டார்.

ஏகலைவன், மறைந்து நின்று பல நாள் இவர்கள் செய்யும் பயிற்சியினை பார்த்தான்.
பின்னர், துரோணரின் பாத மண்ணை எடுத்துக்கொண்டு, அதை ஒரு இடத்தில் வைத்து அவரை போலவே ஒரு சிலை வடித்து, பல வருடங்கள் பார்த்த வில் வித்தையை பயிற்சி செய்ய ஆரம்பித்தான்.

அவன் கொண்ட குருவின் பக்தி, வில் வித்தையில் அர்ஜுனனுக்கு நிகராக நிற்கும் அளவிற்கு திறமை தந்துவிட்டது.

ஒரு நாள், துரோணர் பாண்டவர்களுடன் காட்டில் நடந்து கொண்டிருக்கும் போது, ஒரு நாய் குறைக்க முடியாத படி, அதன் வாயை சுற்றியும், அதனை சுற்றியும் அம்புகள் தெய்க்கப்பட்டு இருந்தன. ஆச்சர்யமாக, அந்த நாய் ஒரு காயமும் அடையாதவாறு அமைக்கப்பட்டு இருந்தது.

இதை கண்டு அர்ஜுனனே ஆச்சர்யப்பபட்டான்.
தேடிப்பார்த்த போது, ஏகலைவன் எதிர் வந்தான். தன் குரு தன் முன் இருப்பதை கண்டு ஆனந்தத்தில் மகிழ்ந்தான். அவரை வணங்கி "உங்கள் மூலமே இதனை கற்றேன்" என்றான்.

துரோணர் இது உடனே கண்டிக்கப் பட வேண்டியது என்று நினைத்து, இது பேராபத்து என்றும் உணர்ந்து, "எனக்கு குரு தக்ஷிணையாக உன் கட்டை விரலை கொடு" என்றார்.

ஏகலைவன் ஒரு வேடுவன்.
அம்பு விடுவதில் ஏற்கனவே வல்லவன்.
இவன் மறைமுகமாக கற்றுக் கொண்டது அஸ்திர, சஸ்திர ப்ரயோகம். அதாவது அணுகுண்டு போன்றவை உபயோகப்படுத்தும் முறை.
இவன் க்ஷத்ரியன் (army person) அல்ல. இவன் ஒரு சாதாரண பிரஜை (citizen). சாதாரண பிரஜை அணுகுண்டு தயாரிப்பது, உபயோகிப்பது ஆகியவை சட்ட விரோதமானது.


துரோணர் நினைத்தது போலவே, இவன் துரியோதனனின் பக்கம் போய், அதர்மத்தின் வழியில் சண்டை போட்டான்.

ஏகலைவன் தந்தை, மகத நாட்டின் (பீஹார்) அரசன் "ஜராசந்தனுக்கு" படை தளபதியாக இருந்தான்.
17 முறை ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை தாக்கினான்.
17 முறையும் தோற்றான். இதில் போரிட்ட ஏகலைவனின் தந்தை மாண்டு போனான்.

ஜாராசந்தனும் பீமனால் பின்னர் இரண்டாக கிழிக்கப்பட்டு கொல்லப்பட்டான்.

ஏகலைவன், துரியோதனிடம் நட்பு கொண்டான்.
இதனால் சமயம் எதிர்ப்பார்த்து பகைமை கொண்ட ஏகலைவன், பாண்டவர்களின் தாய் குந்தியின் ஊரான "குந்தி போஜ" (மத்யபிரதேசம்) அரசன் குந்திபோஜன் மீதும், மதுராவின் ஸ்ரீ கிருஷ்ணர் மீதும் யாதவர்களுக்கு எதிராக போரிட தயாரானான்.

"யாதவர்கள் அனைவரும் அழிய வேண்டும்" என்ற எண்ணத்துடன் குந்திபோஜ தேசத்தை தாக்க வந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வந்து, யாதவர்களுக்காக போரிட்டார்.

துரியோதனின் யோசனை பேரில், ஸ்ரீ கிருஷ்ணரின் மகன் "சம்பா"வை போரில் கொலை செய்ய ஏகலைவன் முயற்சி செய்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் தக்க சமயத்தில் வந்து, யாதவர்களை கொல்லும் எண்ணம் கொண்ட  ஏகலைவன் தலையை அங்கிருந்த பாறையில் மோத, தலை பிளந்தது.

யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்திற்கு திக்விஜயமாக புறப்பட்ட நகுலன், மால்வ தேசத்து அரசர்களை தோற்கடித்தான்.
மால்வ அரசர்கள், யுதிஷ்டிரரின் ராஜா சுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

மஹாபாரத போர் நிச்சயம் என்ற நிலையில், கர்ணன் மால்வ தேசத்து அரசர்களிடம் போர் புரிந்து வெற்றி பெற்றான்.

மஹாபாரத போரில், சில மால்வ அரசர்கள் துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில மால்வ அரசர்கள் பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மகத அரசன் (பீகார்) ஜராசந்தனுக்கு பயந்து, சால்வ தேச (ராஜஸ்தான்) அரசர்கள் பல சமயம் குந்தி தேசத்திற்கு (மத்யபிரதேசம்) ஓடி விடுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள் சிசுபாலன் இருக்கும் சேடி தேசம் (மத்யபிரதேசம்) வரை சென்று தஞ்சம் புகுவர்.

இன்னும் சில சால்வ அரசர்கள், ஜராசந்தனுக்கு பயந்து, ருக்மி இருக்கும் விதர்ப தேசம் (மஹாராஷ்டிரா) வரை சென்று தஞ்சம் புகுவர்.


மஹா பாரத போரில், ஒரு சில சால்வ அரசர்கள், துரியோதனன் பக்கம் நின்று போரிட்டனர்.
சில சால்வ அரசர்கள், பாண்டவர்கள்  பக்கம் நின்று போரிட்டனர்.

மஹாபாரத போரில், சில நிஷாத சிற்றரசர்கள், பாண்டவர்கள் பக்கம் போரிட்டனர்.
மற்றும் சிலர் துரியோதனன் பக்கம் போரிட்டனர்.
துரியோதனன் பக்கம் நின்ற நிஷாத அரசர்கள் அனைவரையும், பீமன் ஒருவனே கொன்றான்.

மஹா பாரத போரில், இந்த மத்ஸ்ய தேச படைகள், துரியோதனின் பக்கம் நின்று போரிட்டனர்.

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka





sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka


Monday 27 November 2017

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே

மஹாபாரத சமயத்தில் மஹாராஷ்டிரா : Maharashtra எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே


விதர்ப தேசம், குந்தல தேசம், கோமந்த தேசம் ஆகிய தேசங்கள், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்தன.

குந்தல தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள். பெரும்பாலும் இவை கிராமங்கள்.

கோமந்த தேசம், இன்றைய மஹாராஷ்டிரா மாநிலத்தில் மேற்கு மற்றும் கோவா பகுதிகள். இந்த தேசங்கள் ஸ்ரீ கிருஷ்ணரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

மகத அரசன் (பீஹார்) 'ஜராசந்தன்' யாதவர்கள் மீது தீராத கோபம் கொண்டு மதுராவை பல முறை தாக்கினான்.
இதனால், ஸ்ரீ கிருஷ்ணர், யாதவ மக்கள் அனைவரையும் துவாரகை (Gujarat) என்ற நகரை அமைத்து குடியேற்றினார்.
அங்கும் வந்து பல முறை போரிட்டு யாதவர்களை அழிக்க நினைத்தான் ஜராசந்தன்.
இந்த சமயத்தில், அங்கு இருந்த யாதவர்கள், தங்கள் எல்லையை பாதுகாக்க, துவாரகையிலிருந்து கோமந்த தேசம் வரை படைகளை நிறுத்தி யாதவ மக்களுக்கு பாதுகாப்பாக இருந்தனர்.
யாதவ ராஜ்யம் குஜராத்திலிருந்து கோவா (Goa) வரை, ஸ்ரீ கிருஷ்ணரின் கண் காணிப்பில், பாதுகாப்பாக இருந்தது.

மகாபாரத காலத்துக்கு பின், சுமார் 3000 வருடங்கள் பின் வந்த போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்கள், கோவா சூரத் போன்ற கடல் ஓர நகரங்களை ஆக்கிரமித்து, கலாச்சாரத்தை கெடுத்து இன்றுவரை கோவா போன்ற நகரங்களை கீழ் தரமான கண்ணோட்டத்தில் பார்க்கும் அளவிற்கு செய்தனர்.

947ADக்கு பிறகு, போர்ச்சுகல் (Portuguese), பிரிட்டன் (british) போன்ற கிறிஸ்தவ வணிகர்களை எதிர்த்து, இஸ்லாமியர்களையும் எதிர்த்து, யாதவர்கள் கடுமையாக போராடினர்.
947ADக்கு பிறகு, யாதவ சமுதாயம் தங்களை காத்துக்கொள்ள பல இடங்களுக்கு இடம் பெயர்ந்தனர்.
தமிழ்நாட்டில் இருந்த 'முல்லைக்கு தேர் கொடுத்தான்' என்றும், வள்ளல் என்றும் ஒளவையார் புகழ்ந்த பாரி போன்ற அரசர்கள் துவாரகையில் இருந்து பிற் காலத்தில் இடம் பெயர்ந்த க்ஷத்ரியர்கள்.
யாதவ அரசர்கள் எத்தனை நல்ல மனம் படைத்தவர்கள் என்பதற்கு பாரி போன்ற அரசர்களே ப்ரமானம்.
5000 வருடங்கள் தாண்டியும், யாதவர்கள் (yadav) இன்று வரை உள்ளனர். இவர்களுக்கு இன்று வரை ஸ்ரீ கிருஷ்ணரே அரசன், குல தெய்வம்.

விதர்ப தேசம், இன்றைய மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் கிழக்கு பகுதிகள்.
இன்றைய மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) வடக்கு எல்லையில்  உள்ளது என்றும் சொல்லலாம்.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள்.
இவள் ஸ்ரீ கிருஷ்ணரின் குழந்தைபருவம் முதல் இன்று வரை என்ன செய்தார்? எப்படி இருப்பார்? என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும் என்று முடிவு கொண்டாள்.
இதற்கு ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.



ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் (MadhyaPradesh) சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கு பிடிவாதமாக ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, "எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று எழுதி  அனுப்பினாள்.
ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.
ஜராசந்தன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, பலராமர் வந்து ஜராசந்தன் படையை சிதறடித்தார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, கடைசியில் சண்டையிட்டு தோற்றான்.
"இவனை கொல்ல கூடாது" என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், "ருக்மிணியின் அண்ணன்" என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.
அப்படியே விட்டால், "திருமணம் நடக்கும் முன், மீண்டும் படையை திரட்டி துவாரகை (Gujarat) நோக்கி வருவான்" என்பதால், ஒரு சில மாதங்கள் இவன் காட்டிலேயே அலையட்டும் என்று தீர்மானித்து ருக்மி உடம்பில் கரும் புள்ளி, செம் புள்ளி குத்தி, பாதி மொட்டை அடித்து 3 குடுமிகள் முன்னும் பின்னும் வைத்து அனுப்பினார்.
ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.
குஜராத்துக்கும் (Gujarat), மஹாராஷ்டிரத்துக்கும் (Maharastra) சம்பந்தம் உண்டானது.

ஒரு சமயம், துவாரகையில் இருக்கும் போது, தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் 'நீ குழந்தையாக இருந்த போது என்ன செய்தாய்? எப்படி இருந்தாய்? என்று பார்க்க முடியாது போய் விட்டதே!! 
இந்த பாக்கியம் யசோதைக்கு கிடைத்ததே. அவளே பாக்கியம் செய்தவள்' என்றாள்.
தன் தாய் தேவகியின் மனக்குறையை போக்க, அவளுக்காக தன்  மாய  சக்தியால், சிறு குழந்தையாக உருமாறி, அனைத்து பால லீலைகளையும் செய்து காண்பித்தார்.
அப்போது, இந்த அதிசயத்தை ருக்மிணியும்  பார்த்து விட்டாள். 

இந்த ஆச்சர்யத்தை கண்ட ருக்மிணி, தான் கண்ட குட்டி கிருஷ்ணரை போலவே ஒரு சிலை செய்தாள். அதை ஸ்ரீ கிருஷ்ணரிடமே காண்பித்து ஆசிர்வத்திக்க சொன்னாள்.
ஸ்ரீ கிருஷ்ணர் அதை தொட்டு, ருக்மிணியிடம் கொடுத்தார். 


அன்றிலிருந்து, தினமும் ருக்மிணி தேவியே அந்த விக்ரஹத்துக்கு பூஜை செய்து வந்தாள்.
இந்த விக்ரஹம், சுமார் 4000 வருடங்களுக்கு பிறகு, 12ஆம் நூற்றாண்டில் வந்த மத்வாசாரியர் மூலம் கர்நாடகாவில் உள்ள உடுப்பி (Udupi) என்ற நகரில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை காணும் படியாக இருக்கிறார். 

சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணரின் பால லீலையை பார்த்து, ருக்மிணி தேவியே வழிபட்ட மூர்த்தியே இன்று உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணராக உள்ளார்.

மகா பாரத போர் நிச்சயம் என்ற நிலையில், ருக்மி, "பாண்டவர்களுக்கு சகாயம்" செய்ய நினைத்தான். 
தன் நண்பனான கிருஷ்ணனிடம் ருக்மி பகைமை கொண்டவன், கிருஷ்ணனிடம் தோற்றவன்" என்பதால், விதர்ப தேச சகாயத்தை மறுத்து விட்டான் அர்ஜுனன்.
"அர்ஜுனன் மறுத்த தேசத்தை தான் ஏற்றுக்கொண்டால் அது அவமானம்" என்று துரியோதனனும் ருக்மியின் உதவியை மறுத்தான்.

மஹா பாரத போரில், விதர்ப தேசத்தை பொதுவாக பாண்டவர்களும், கௌரவர்களும் தங்கள் அணிக்கு அழைக்கவில்லை.

பெரும்பாலும், விதர்ப தேசத்தவர்கள், இருவருக்கும் பொதுவாகவே இருந்தனர்.
ஒரு சில விதர்ப தேசத்தவர்கள், துரியோதனன் படையில் சேர்ந்து கொண்டு பீஷ்மரின் கட்டளை படி போரிட்டனர்.

மஹா பாரத போரில், குந்தல தேசத்தவர்கள், பாண்டவர்கள் பக்கம் இருந்து போரிட்டனர்.


போருக்கு முன், துரியோதனன் ஆசைப்படி, ஸ்ரீ கிருஷ்ணர், தன் படைகள் துரியோதனன் பக்கமும், தான் ஒருவன் மட்டும் ஆயுதம் இல்லாமல் பாண்டவர்கள் பக்கமும் இருப்பதாக சொல்லி இருந்தார்.

கோமந்த தேச படைகள், ஸ்ரீ கிருஷ்ணரின் ஆணைப்படி, துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தனர்.