Followers

Search Here...

Wednesday 27 December 2017

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.. சீதை பிறந்த ஊர் அல்லவா

மஹாபாரத சமயத்தில் நேபால் : Nepal எப்படி இருந்தது?




"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
ஆகிய தேசங்கள், இன்று "நேபால்" என்று அழைக்கப்படுகிறது.

ராமாயண காலத்தில், 
மிதிலை நகரில், சீதை அவதரித்தாள். 
"ஜனக மன்னர்" ஆட்சி புரிந்தார்.
மஹாபாரத சமயத்தில்,
"விராட தேசம், மல்ல தேசம், விதேஹ (மிதிலா) தேசம்" 
பாண்டவர்கள் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
"துருபதனை" படைதலைவனாக தொடர்ந்து இவர்கள் படையை செலுத்தினர்.

"மல்ல தேசம்" கங்கை நதி ஓரம் அமையப்பட்ட ஒரு நகரம். 
இது விராட தேசத்துக்கு, விதேஹ தேசத்துக்கு நடுவே இருந்தது.

பாண்டவர்கள் 13 வருட வனவாசத்தில், கடைசி 1 வருடம் அஃயாத வாசம் விராட தேசத்தில் இருந்தனர்.



"யுதிஷ்டிரர்" விராட ராஜாவுக்கு உதவியாளனாக, 
"பீமன்" சமையல்காரனாக, 
"அர்ஜுனன்" நர்த்தனம் சொல்லிக்கொடுக்கும் பேடியாக, 
"திரௌபதி" விராட ராணிக்கு 'மாலினி' என்ற பெயரில் வேலைக்காரியாகவும், 
"நகுலன் மற்றும் சகாதேவன்" குதிரை லாயத்தை பார்க்கும் பணியிலும் 
மறைந்து வாழ்ந்து கொண்டிருந்தனர்.


விராட அரசனின் தளபதி "கீசகன்", திரௌபதியிடம் தவறாக நெருங்க எண்ணினான். 
இதனை திரௌபதி பீமனிடம் சொல்ல,
கீசகன் தலையை ஓங்கி அடித்து, அவன் தலையை வயிற்றுக்குள் தள்ளி, 
ஒரு பந்து போல ஆக்கி கொன்று விட்டான்.

விராட தேச படை தலைவன் கீசகன், த்ரிகர்த தேச (பஞ்சாப்) அரசன் "சுசர்மனை" பலமுறை தோற்கடித்து இருக்கிறான்.

கீசகன் கொடூரமாக இறந்ததை கேள்விப்பட்டு, சந்தேகம் கொண்டான் த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்".

இப்படி ஒரு பலம், பீமன் போன்றவர்களுக்கு தான் உண்டு, என்று உணர்ந்த சுசர்மன், துரியோதனனை உடனே விராட தேசத்தை நோக்கி படை எடுக்குமாறு கூறினான்.




குரு தேச "இளவரசன் துரியோதனன்", "கர்ணன்", த்ரிகர்த தேச அரசன் "சுசர்மன்" அனைவரும் விராட தேசத்தை முற்றுகை இட்டனர்.

விராட அரசன், தன் மகன் "உத்தர" குமாரனை தலைமை ஏற்று, துரியோதனின் படையை எதிர்க்க சொன்னார். 

பயந்து போன உத்தர குமாரன், செய்வதறியாது திகைத்தான். 
'அர்ஜுனன்' சமாதானம் செய்து, தான் துணை வருவதாக தைரியம் சொல்லி, போருக்கு தயாரானான்.
விராட தேச படையுடன், அர்ஜுனன் ஒருவனாக சென்று அனைவரையும் தோற்கடித்தான்.

ஒரு வருடம் தங்கி இருந்தது பாண்டவர்கள் என்று அறிந்து பயந்தான் விராட அரசன்.
தன் தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.
யுதிஷ்டிரர் நட்பு கரம் நீட்டினார். 
விராட அரசன் தன் மகள் 'உத்தரா'வை அர்ஜுனன் மகன் அபிமன்யுவுக்கு மணம் செய்து வைத்தார்.

விராட தேச (Nepal) படைகள், பாண்டவர்கள் பக்கம் நின்று போரிட்டனர்.

மஹா பாரத போரில், முதல் நாள் போரில், 
விராட அரசன் புதல்வன் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்டான்.
மாத்ர தேச (Pakistan) அரசர் "சல்யனால்" அதே நாளில் கொல்லப்பட்டான்.



உயிரை பற்றி கவலைப்படாமல் "உத்தர" குமாரன் வீரமாக போரிட்ட வீரத்திற்கு தலை வணங்கினார்சல்லியன்.

உத்தர குமாரன் இறந்ததை கண்டு ஆத்திரத்துடன் சல்லியனை நோக்கி பாய்ந்தான், அவன் சகோதரன் "ஸ்வேத" குமாரன். 
இதனை கண்ட பீஷ்மர், "ஸ்வேத" குமாரனை போருக்கு அழைத்தார். பீஷ்மருடன் போர் செய்து வீர மரணம் எய்தான்..

முதல் நாள் போரிலேயே இத்தனை உயிர் இழப்பு, யுதிஷ்டிரரை கலங்க செய்தது.
"வெற்றி துரியோதனன் பக்கம் நிச்சயம்" என்று சொல்ல ஆரம்பித்தார்.

ஸ்ரீ கிருஷ்ணர் தைரியம் ஊட்டி, மனம் தளரவிடாமல் தைரியம் சொன்னார்.

விராட அரசனை, 15ஆம் நாள் போரில் "துரோணர்" கொன்றார்.

பாண்டவர்கள் பக்கம் நின்று போர் செய்த அரசர்கள், பாண்டவர்கள் வெற்றிக்கு துணை நினறனர்.  பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். தர்மத்தை நிலை நிறுத்தினர்.

உலக க்ஷத்ரியர்கள் அனைவரும் பாண்டவர் பக்கமும், துரியோதனன் பக்கமும் நின்று போரிட்டு உயிரை விட்டனர்.


யுதிஷ்டிரர் உலகத்துக்கே சக்ரவர்த்தியானார்.


மஹாபாரத போர் முடிந்து, 
3000 வருடங்களுக்கு பிறகு "சித்தார்த்தன்" என்ற பெயரில் நேபாள தேசத்தின் இளவரசனாக"கௌதம புத்தர்", லும்பினி (Lumbini) என்ற நகரில் நேபாள தேசத்தில் பிறந்தார்.
மகத தேசத்தில் (பீஹார் (bihar)) உள்ள "போத் கயா" என்ற ஊரில், புத்தர் ஞானம் அடைந்தார் என்று அவரின் சரித்திரம் சொல்கிறது.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat எப்படி இருந்தது? தெரிந்து கொள்வோமே.

மஹாபாரத சமயத்தில் குஜராத் : Gujarat


ஸ்ரீ கிருஷ்ணரின் அரசாட்சி புரிந்த "துவாரகை" என்ற த்வாரவதி தேசம், குஜராத்தில் உள்ளது.
ஸ்ரீ கிருஷ்ணரின் ஆத்ம நண்பனான சுதாமா என்ற குசேலன், குஜராத் மாநிலம் போர்பந்தரில் இருந்து, ஸ்ரீ கிருஷ்ணர் கடலில் அமைத்திருந்த துவாரகை நகருக்கு நடந்தே சென்றார்.
ஏழையாக இருந்த குசேலனை தன் அனுக்ரஹித்தினால் கோடீஸ்வரன் ஆக்கினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

கம்சன் கொல்லப்பட்டான் என்ற ஆத்திரத்தில், மகத அரசன் 'ஜராசந்தன்' (Jamshedpur, Jarkhand near Bihar), ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கும் மதுராவை (உத்திர பிரதேசம்) தாக்கினான்.
ஸ்ரீ கிருஷ்ணர் 'ஜராசந்தன்' மற்றும் அவன் படையை அடித்து துரத்தினார்.

இதே போல, ஜராசந்தன் 17 முறை தொடர்ந்து படை எடுத்துக்கொண்டே இருந்தான். 
ஜராசந்தனை கொலை செய்ய எண்ணமில்லாத ஸ்ரீ கிருஷ்ணர், மதுரா நகர 5 லட்சம் யாதவ மக்களை மாய ஸ்ருஷ்டி மூலம், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து, அனைத்து மக்களையும் ஒரே ராத்திரியில் இடம் மாற்றினார்.

இந்த மாயை புரியாத ஜராசந்தன், மீண்டும் படை எடுக்க வந்த போது மதுரா நகரமே காலி ஆகி போயிருந்ததை கண்டு தேடி கொண்டே இருந்தான்.

ஸ்ரீ கிருஷ்ணர் ஆணைப்படி, தேவலோகத்தில் இருக்கும் விஸ்வகர்மா ஒரே நாளில், துவாரகை என்ற நகரை கடலில் அமைத்து கொடுத்தார்.




துவாரகை நகரம் சுற்றியும் பெரிய மதில் சுவருடன், நான்கு வாசல் கொண்டும் அமைக்கப்பட்டது.

நகரத்தின் வீடுகள் வரிசையாக அமைக்கப்பட்டு, நகரத்தின் வீடுகள் அனைத்தும் தங்கத்தால் இழைக்கப்பட்டு, வான் உயர இருந்தது.
ஒன்பது லட்சம் மாளிகைகள் அமைக்கப்பட்டன.

நகரின் தெருக்கள் வெயிலில் சூடாமல் இருக்க, தண்ணீர் தானாக தெளித்துக் கொள்ளும் விதமாக அமைக்கப்பட்டு இருந்தன.

பெரிய பெரிய பாய்கள் கொண்டு, வெயிலில் மக்கள் பாதிக்காதவாறு நகர வீதிகளில் நிழலுக்கு கட்டப்பட்டு இருந்தன.

ஸ்ரீ கிருஷ்ணரின் மாளிகை தனியாக, மிக பிரம்மாண்டமாக இருந்தது.

ஸ்ரீ கிருஷ்ணரின் பத்தினிகளுக்கு அதி ஆச்சர்யமாக 60,000 மாளிகைகள் கட்டப்பட்டு இருந்தன.

நகரம் முழுவதும் பொன்னால், ரத்தினங்களால் ஜொலித்தது.
நகரம் தோட்டம், ஓடை, பறவைகள் என்று இயற்கை வளத்துடன் நிறைந்து இருந்தது.

ஒரு சமயம், அசுரன் ஒருவன் தேவர்களையும் அடக்கி, இவர்கள் யாராலும் வெல்ல முடியாதபடி வரம்பெற்று, பூமியில் பிறந்து அட்டகாசம் செய்து வந்தான்.
இவன் ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசத்தில் இருந்து கொண்டு அசுரர் குலத்தை மனித அவதாரம் செய்து பெரும் அட்டகாசம் செய்து வந்தான்.

ப்ரக்ஜ்யோதிஸம் என்ற தேசம் இன்றைய 'அஸ்ஸாம்' தேசம்.

ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை சொர்க்கத்தில் உள்ள தேவர்கள் வந்து நாட, நரகாசுரனை அழிக்க துவாரகையில் இருந்து ப்ரக்ஜ்யோதிஸம் சென்றார்.

இந்த சமயத்தில், சேடி தேச (மத்யபிரதேச) அரசன் சிசுபாலன், தன் படையுடன் துவாரகை சென்று, துவாரகை நகரை தீ வைத்து கொளுத்தினான்.

நரகாசுரனை கொன்று திரும்பிய ஸ்ரீ கிருஷ்ணர், சிசுபாலனின் இந்த குற்றத்தையும் பொறுத்தார்.


நரகாசுரனின் வேண்டுதல் ஏற்று, அவன் இறந்த நாள், அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்ட பட்டதால், தேவர்களும் மகிழ்ந்ததால், அந்த நாள், தீபாவளி என்று இன்றுவரை கொண்டாடப்படுகிறது.

விதர்ப தேசத்தில் (மகாராஷ்டிரா) ருக்மிணி வளர்ந்து வந்தாள். 
ருக்மிணி, குழந்தை முதல் இன்று துவாரகை வரை ஸ்ரீ கிருஷ்ணர் என்ன செய்தார், எப்படி இருப்பார் என்று, அவரைப்பற்றி அறிந்து இருந்தாள்.

'மணந்தால், இவரை தான் மணக்க வேண்டும்' என்று நினைத்தாள். ருக்மிணியின் தந்தை சம்மதித்தார்.

ருக்மிணியின் சகோதரன் பெயர் 'ருக்மி'.
இவன், தன் தங்கையை சேடி அரசன் சிசுபாலனுக்கு கொடுப்பது என்று முடிவு கட்டி, திருமணத்திற்கும் ஏற்பாடு செய்தான்.

மனம் வெதும்பிய ருக்மினி, ஸ்ரீ கிருஷ்ணருக்கு கடிதம் ஒன்றை ஒரு யோகியிடம் கொடுத்து, 'எப்படியாவது வந்து, தன்னை ஸ்ரீ கிருஷ்ணர் திருமணம் செய்து கொள்ள வேண்டும்' என்று எழுதி அனுப்பினாள்.

ஸ்ரீ கிருஷ்ணர், விதர்ப தேசம் வந்து, ஜராசந்தன், ருக்மி போன்றோர் பார்க்க, ருக்மிணியை தூக்கி சென்றார்.

ருக்மி கோபத்துடன் ஸ்ரீ கிருஷ்ணரை துரத்த, சண்டையில் தோற்றான் ருக்மி.

இவனை கொல்வதா? என்று நினைத்த ஸ்ரீ கிருஷ்ணர், ருக்மிணியின் அண்ணன் என்பதால், உயிரோடு விட தீர்மானித்தார்.

ருக்மிணிக்கும், ஸ்ரீ கிருஷ்ணருக்கும் வெகு விமரிசையாக திருமணம் துவாரகையில் நடந்தது.

மஹா பாரத சமயத்தில், 13 வருடம் பாண்டவர்கள் நாட்டை விட்டு வனவாசம் இருந்த போது, இந்த தேசங்களில் சில காலம் இருந்தனர்.

'துர்வாசர்' இந்த குஜராத் தேசத்தில் பல வருடங்கள் இருந்தார்.
இந்த சமயத்தில், பாண்டவர்களை பார்க்க வந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணரின் அணுகிரஹத்தினால், இவரால் வர இருந்த இடையுறை சமாளித்தனர்.

வனவாச சமயத்தில், 13 வருடமும், பாண்டவர்களின் பணியாளர்கள் துவாரகையில் தங்கி இருந்தனர்.

ஸ்ரீ கிருஷ்ணர், பலராமர் தன் அவதாரத்தை முடித்த பின், துவாரகை தேசத்தை கடல் உள்வாங்கிக் கொண்டது.

அர்ஜுனன் தன் இறுதி யாத்திரையாக புறப்பட்ட போது, ஸ்ரீ கிருஷ்ணர் இருந்த துவாரகை கடலில் மூழ்கி இருக்கும் இடத்தை பார்த்து விட்டு, இமாலய பர்வதம் நோக்கி புறப்பட்டார்.


ஸ்யமந்தக மணி, ஸ்ரீ கிருஷ்ணர் சத்யபாமாவை மணம் செய்து கொண்ட சரித்திரம் தெரிந்து கொள்ள... Click  படிக்கவும்