Followers

Search Here...

Saturday 27 January 2018

உலகம், வேத சப்தத்தால் உருவானது

உலகம், வேத சப்தத்தால் உருவானது என்கிறது நம் சனாதன தர்மம்.

வரிசையாய் சொல்ல வேண்டுமென்றால், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என்று உலக ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது நம் சாஸ்திரத்தில்.

அதாவது,
கண்ணுக்கு தெரியாத ஒலியால், அதன் அதிர்வால் அணுக்கள் நகர்ந்து, கண்ணுக்கு புலப்படும் இந்த உலகமும், அதில் பல வித உடல்களும், நதிகளும் உருவாகின என்கிறது நம் தர்மம்.

எத்தனை தெளிவு மற்றும் உண்மை இருந்தால், ஒலியில் இருந்து உலகம் பிறந்தது என்று சொல்ல தைரியம் வரும் நம் ரிஷிகளுக்கு?

உலகம் உருண்டை என்று நம் தர்மம் சொல்ல, வராக மூர்த்தியாக வந்த பெருமாள் உருண்டையான உலகை காத்தார் என்று புராணங்கள் சொல்ல, பின்னால் மனிதனால் ஏற்பட்ட பொய் மதங்கள், உலகம் தட்டை என்று புது விஞ்ஞானம் சொன்னது.

விளைவு?

அறிவியல் மூலம் கலிலியோ என்ற விஞ்ஞானி உலகம் உருண்டை தான் என்று ஆராய்ச்சி செய்து சொல்ல, தங்கள் புத்தியை கொண்டு உருவாக்கப்பட்ட மத நம்பிக்கையை இது குலைப்பதாக உள்ளது என்று 1633ADல் ஆயுள் தண்டனை கொடுத்தனர்.

இதுவே நம் ரிஷிகளின் பெருமையையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற மதங்ளுக்கும் உள்ள வேறுபாடு.

ஹிந்து மதம் என்ற ரிஷி தர்மம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தெய்வங்களின் தொடர்பால் உருவானது.
ஹிந்துவாய் பிறந்ததற்கே கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
இதன் அருமையை உணர்ந்தவன் கோடி புண்ணியம் செய்தவன். பெருமையை உணர்ந்து, வாழ்வில் கடைபிடிப்பவன் அதை விட புண்ணியம் செய்தவன்.

அதுவே உண்மை என்றும் இன்றைய  விஞ்ஞானம் சொல்கிறது.

உலகத்தில் மழை இல்லை என்றால், உலகத்தில் துன்பங்கள் ஏற்பட்டால், உடலில் உபாதை ஏற்பட்டாலும், சரி செய்வதற்கு, பொதுவாக அததற்கு வேத மந்திரங்கள் உண்டு.

மழை வேண்டி வருண ஜெபம் செய்யும் வேதியர்கள் இன்றும் உண்டு.

வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில், அந்த இடங்களில் உள்ள தோஷங்கள் தானே விலகி விடுகிறது.

வேத சப்தத்தால் உருவானது தான் இந்த உலகமே, என்பதே இதற்கு காரணம்.

இந்த ரகசியத்தை புரிந்து கொண்டாலே, உலக பிரச்சனைக்கும், நம் உடல் மன பிரச்சனைக்கும் வேத மந்திரங்கள் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது.

வேதியர்களை கொண்டாடிய இந்த பாரதம், தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது 947AD வரை.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை.

உலகமே பாரதத்தை நோக்கி படை எடுத்து செல்வங்களை எடுத்து செல்ல முயன்றது என்பது நடந்த வரலாறு.

1947ல் பிச்சைகாரர்களாக விடப்பட்ட பாரத மக்கள், வேதத்தின் மகிமையை மறந்து இருந்தனர்.

1300 வருட கலாச்சார சீற்கேட்டால், வேதத்தின் மகத்துவம் அந்த 1947ல் இருந்த தலைமுறையில் மறைந்து இருந்தது.

இதனால் வேதமும் புறக்கணிக்கப்பட்டு, வேதியர்களும் புறக்கணிக்கப்பட, வேத சப்தங்கள் குறைய, சீர்கெட்டு போகும் உலகம், உருவாகியது. இன்னும் சீரழிகிறது.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை என்ற நிலை மாறி, பிச்சைக்காரன் போன்று விடப்பட்ட பாரத மக்கள், எங்கு பணம் கொடுத்தாலும், எவன் கொடுத்தாலும், அங்கே சென்று வாழ்வதற்கும் தயார் என்ற நிலையில் இன்று உள்ளனர்.

வேதம் என்ற ஒலியால், உலகம் ஸ்ருஷ்டி ஆனது என்ற பொழுது, அந்த ஒலியை அதற்கு உரிய மாத்திரைகளில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

சரியான உச்சரிப்பே வேத சப்தத்திற்கு முக்கியம்.

இதனால் வேதத்தை சரியான உச்சரிப்புடன் சொல்ல தன் வாழ்வை இதை கற்பதற்காக, சொல்வதற்காக வேதியர்கள் என்ற பிராம்மண சமுதாயத்துக்கு இந்த கடும் சவாலான பொறுப்பு கொடுக்கப்பட்டது.
உலக விஷயங்கள், பொருள் சேர்ப்பது போன்றவை தடுக்கப்பட்டது.

12 வருடங்கள் வேதத்திற்காகவே வாழ்ந்து, வேதம் மட்டுமே கற்று, வாழ்நாள் முழுவதும் வேதத்தை மட்டுமே சொல்லி கொண்டு, இன்றும் வேதியர்களாக சிலர், உலகம் பொருளை நோக்கி ஓடினாலும், இன்றும் கோவிலையும், வேதத்தையும் காப்பாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய அறிவியல் wave energy, sound energy போன்ற ஆராய்ச்சியில் உலகம் ஒலியால் உருவானது என்கிறது.

அணுக்களை ஏதோ ஒரு சப்தத்தால் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், நம் உடம்பிலும் உள்ள அணுக்களும் நகர்வதின் காரணத்தால், வயது ஆகி கிழ வயது வருகிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், 100 வருஷம் முன் கட்டிய கட்டிடம் கூட உலுத்து போகிறது.

சரியான பராமரிப்பு செய்தால், கட்டிடங்கள் காலத்துக்கும் நிற்கவும் செய்கிறது.
பராமரிப்பு என்று நிற்கிறதோ, அன்றிலிருந்து அழிய தொடங்குகிறது.

உடலும் இதே போல சரியான பராமரிப்புடன் கவனிக்கபட்டால், காப்பாற்ற படுகிறது. இதற்கும் யோகம், சித்த வைத்தியம் என்று நம் ரிஷிகள் நீண்ட ஆயுசுடன் வாழ வழி செய்துள்ளனர். ஆரோக்கியத்துடன் வாழ்ந்து காட்டியும் உள்ளனர்.

இந்த நகர்வால், அணுக்கள் சேரும் போது கண்ணுக்கு புலனாக ஒரு உலகமாக உருவெடுத்து, அதில் பல திரவியங்கள், உலோகங்கள், மனித, மர, விலங்கு, பறவை உடல்கள் உருவாகின்றன என்கிறது.

இதை எப்பொழுதோ சொல்லிவிட்டது நம் சனாதன தர்மம்.

ஒலி அலைகளால், அணுக்கள் நகர்ந்து உருவம் தரிக்கிறது. இதை இன்று அறிவியல் கண்டுபிடிக்கிறது.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணுவோடு சேர, தண்ணீர் உருவாகி, அதுவே நதியாக, கடலாக ஓடுகிறது.

இதை முன்னமே நம் ரிஷி தர்மம், வேத சப்தத்தால் உலகம் உண்டாகிறது என்று சொல்லி விட்டது.

ஹிந்துவாக இருப்பவன், தன்  வேதத்தின் மகிமையை எதிர்ப்பானா?
வேதத்திற்கே மூலமாக இருக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மகிமையை எதிர்ப்பானா?
எந்த ஹிந்து இப்படிபட்ட பிரணவ மந்திரத்தையும், பிரணவத்தில் இருந்து உருவான வேதத்தையும் எதிர்ப்பான்.
எந்த ஹிந்து நான் இப்படிப்பட்ட ரிஷியின் வம்சத்தில் வந்தவன் அல்ல, ஆடையில்லா முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவன் என்று சொல்வான்?

அறிவியல் சொல்லும் அந்த ஒலி "வேதம்" என்றும் கண்டுபிடித்து, அந்த வேத மந்திரங்கள் என்னென்ன என்றும் ரிஷிகளின் தவ வலிமையால் நமக்கு கொடுத்து விட்டனர்.

இதையும் தாண்டி, இந்த வேதமே "ஓம்" என்ற பிரணவத்தில் அடக்கம் என்றும் கண்டுபிடித்தனர்.
இதை படைத்தவனும் யார் என்றும் சொல்கின்றனர்.

வேதம் "ஓம்" என்ற பிரணவத்தில் இருந்து உண்டானது.
ஓம் அந்த பரவாசுதேவனால் உண்டானது.

அந்த பரவாசுதேவன்  நாராயணனே என்றும் தெளிவாக "ஹரி: ஓம்" என்று வேதம் ஹரியின் பெயரை சொல்லி அதற்கு பின் தான் பிரணவம் என்கிறது.

அந்த பரவாசுதேவன் படைத்த ப்ரம்ம தேவனுக்கு வேதத்தை கொடுத்து, உலகை படைக்க ஆணை இட்டார் பரப்ரம்மாவாகிய வாசுதேவன்.

வேத சப்தங்கள் கொண்டு ப்ரம்ம தேவன் உலகை ஸ்ருஷ்டி செய்தார்.
உலகில் நாம் (ஜீவாத்மா) பிறக்கிறோம்.
நம்மை (ஜீவாத்மா) படைத்தவன் அந்த பரவாசுதேவன்.
நமக்கு உடல் என்ற மெய் கொடுத்தவர் ப்ரம்ம தேவன்.

வேதத்தை கொண்டு உலகை படைத்து, அதை நடத்தி கொண்டிருக்கிறார் ப்ரம்ம தேவன்.

வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம்.

அந்த ஓம் என்ற பிரணவமும் மூன்று அக்ஷரங்களால் ஆனது.

அந்த மூன்று அக்ஷரங்கள் "அ உ ம" எனப்படும்.

உலகம் வேதத்தில் அடங்குகிறது.
வேதம் பிரணவத்தில் அடங்குகிறது.
பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில், அக்ஷரங்களில் நான் "அ" என்ற அக்ஷரமாக இருக்கிறேன் என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறார்?

உலகமே வேதத்தில் அடக்கம். வேதமே பிரணவத்தில் அடக்கம்.

Thursday 11 January 2018

தாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன?

தாரக மந்திரம் என்று ராம நாமத்தையும், ஓம் என்ற ஓங்காரத்தையும் சொல்கிறார்கள். தாரகம் என்றால் என்ன? இதன் பயன் என்ன?

சம்சார என்றால் என்ன?

மாயை என்றால் என்ன?

மன அலையை, சம்சார அலையை ஓய வைப்பது எப்படி?

மறு பிறவி உண்டு என்று அனுமானிப்பது?

நம் சனாதன தர்மத்தின் நோக்கம் என்ன? பிற மேற்கு மத தர்மத்தின் நோக்கமும், அவர்கள் விழாவும், வாழ்க்கையின் நோக்கம் என்ன?

மேலும் படியுங்கள்...

மீண்டும் மீண்டும் வரக்கூடிய அலையை தான் பொதுவாக, சம்சாரம் என்கிறோம்.

கடலின் அலையை பார்த்தால் என்ன அர்த்தத்தை இது சொல்கிறது என்று நாமும் புரிந்து கொள்ளலாம்.
கடலில் ஒரு அலை எழும்பும், அது அழிந்து, பின் மீண்டும் ஒரு அலை உருவெடுத்து வந்து, ஒரு முடிவே இல்லாமல், "பிறந்து, அழிந்து', "பிறந்து, அழிந்து" என்று சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சிக்கு தான் சம்சாரம் என்று பெயர்.

இந்த கடலில் உள்ள அலை போல, நமக்கும் மனதிலும், உடலிலும் கூட இந்த முடிவில்லாத சுழற்சி  ஏற்படுகிறது.

1. மனதிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதையும் நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
2. உடலிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதை நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

விளக்கம்:
1. மனம் என்றாலே அலைபாயும் குணம் கொண்டது என்று அனைவருக்கும் புரியும். அனைவரும் அனுபவிப்பதால், ஒப்புக்கொள்வர்.
அலையை போன்று, நம் மனதில் ஒரு எண்ணம் உருவாகி, அது அழிந்து, உடனே மற்றொன்று உருவாகி, அதுவும் அழிந்து, மற்றொறு எண்ணம் உருவாகி இப்படியே நம் நினைவு தெரிந்த நாள் முதல், சாகும் வரை, எண்ணங்கள் நம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு முடிவே தெரிவதில்லை.

அலையாத மனம் கிடைப்பதே பலருக்கு அரிதான விஷயம்.

அலையும் மனது இருப்பதால் தான் மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான். இன்றைய சமுதாயம் மனக்கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு அழிவதால் தான், இன்றைய சமுதாயம், நம் முன்னோர்கள் அனுபவித்த stress, pressureஐ விட பல மடங்கு அனுபவிக்கிறது.

மனம் அலைவதே பல நோய்களுக்கு காரணம். அதாவது, ஒரே எண்ணத்தில் நிற்காமல், ஒரு எண்ணம் ஏற்படும் போதே, இன்னொரு எண்ணம் உருவாகி, அது அழிந்து இன்னொரு எண்ணம் என்று பல எண்ணங்கள் தோன்றி, மறைந்து கொண்டே இருப்பதால், மனம் அலைகிறது, நோய் வந்து சேருகிறது.

இந்த மனதின் அலையும் தன்மையை தடுத்து, ஒரு எண்ணத்தில் நிலை நிறுத்த ஒருவன் படாதபாடு பட வேண்டி உள்ளது.

யோகா, தவம் என்று பல வழிகள் மூலம் மனதை அடக்கி, மன அலையை ஓய செய்ய முடியும் என்று பார்க்கிறோம்.
மன அலைகள் ஏற்படாமல் இருக்க  மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே.
சொல்லி பார்த்தவர்களுக்கு தான் எப்படி மனம் அடங்குகிறது என்று புரியும்.
மேர்கத்திய மதங்கள் கொண்டாடும் பண்டிகைகள், உணவுகள், கொள்கைகள், அவர்களின் ஆலயங்கள் உட்பட அமைதியாக இருக்கும் மனதை தூண்டி விட்டு எண்ணங்களை கிளர்ச்சி செய்வதிலேயே உள்ளது. இதனாலேயே இந்தியாவை தேடி அமைதி எங்கே என்று வருகின்றனர்.

இவர்களின் ஆலய வழிபாடு கூட, அமைதியாக இருக்கும் மனதை கிளர்ச்சி செய்வதாக உள்ளது. இவர்களின் ஒரு பண்டிகையில், அழகாக இருக்கும் தன் குழந்தையை கூட பேய், பூதம் என்று வேஷம் செய்து கொண்டாடுவது. மனதை கிளர்ச்சி செய்து மன அலைகளை எழுப்புவதே இவர்கள் கொள்கையாக உள்ளது.

நேரெதிராக, சஷ்டி விரதம், ஏகாதேசி, ராம நவமி, நவராத்திரி, பொங்கல் என்ற அனைத்து ஹிந்து பண்டிகைகளும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, சைவ உணவு மட்டும் உட்கொள்ளும் விதமாக, விரத நாட்களில் உணவு கூட உட்கொள்ளாமல் வழிபட செய்து, மனதின் அலையை ஒடுங்க செய்வதிலேயே அமைந்தது இருக்கிறது. கோவிலுக்கு சென்றாலும் மனஅமைதி கிடைக்க வழி செய்கிறது. "ஓம் சாந்தி" என்று எப்போதும் வேதமே நாம் மனம் அலையாமல், சாந்தியாக இரு என்று சொல்கிறது. நம் மதத்தின் நோக்கமே நம் மனதை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது.
மேற்குநாட்டு மதங்களோ, மனதின் அலையை கிளப்பி, மன குழப்பம், கோபம், ஆத்திரம், காமம் என்று பல வித உணர்ச்சிகளை தூண்டி, stress, pressure என்று நோய்களை உருவாக்குகிறது.
இவர்கள் கலாச்சாரம் நம் மீதும் இன்றைய காலத்தில் தோ
நம் சாஸ்திரம், மனதின் அலையை அடக்க வழியை காட்டிய பின்னும், முயற்சி கூட செய்யாமல் இருப்பவன், மனம் அலைந்து கொண்டே வாழ வேண்டியது தான்.
ஆஞ்சநேயரும், சிவபெருமானும் "ராம" என்ற தாரக மந்திரத்தை தாங்களே சொல்லி கொண்டு இருப்பதற்கு காரணம், நாமும் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே.

2. மன அலைகள் போல, நம் உடம்பும் இந்த சம்சார அலையில் சிக்கியது தான் என்று "உணர்ந்து கொள்" என்கிறது நம் சனாதன வேத தர்மம்.
நாம் இப்போது கொண்டுள்ள முழு உடம்பும் அழிந்து, ஆத்மாவாகிய நாம் மீண்டும் ஒரு உடலில் புகுவோம் என்கிறது நம் சனாதன தர்மம். மோக்ஷம் அடையாத வரை உடம்பு அழிந்து பின் இன்னொரு உடலில் புகுந்து விடுகிறது ஆத்மா என்கிறது நம் சாஸ்திரம்.

உடம்பே அழிந்த பின், எப்படி நாம் இன்னொரு உடம்பை பெறுகிறோம் என்று அனுமானிப்பது? எப்படி நம்புவது?
இதற்கான பதிலை கொஞ்சம் கவனித்தாலே நாமும் புரிந்து கொண்டு விடலாம்.
மறு ஜென்மம் இல்லை என்று உளரும் கூட்டத்தை மடையர்கள் என்று உணரலாம்.

இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், ஆராய்ச்சியாளர்கள் நாம் இப்போது கொண்டுள்ள உடம்பிலேயே ஒவ்வொரு செல்களும் நகர்ந்து கொண்டே இருக்கிறது, அழிந்து கொண்டே இருக்கிறது, புதிதாக தன்னை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்று நம் சனாதன தர்மத்தில் சொன்ன விஷயத்துக்கு சார்பாக சொல்கிறார்கள்.

நம் உடம்பிலேயே எப்பொழுதும் அழிவும், உருவாக்கமும் நடந்து கொண்டே இருக்கிறது என்று அறியும் போது தான், மொத்த உடம்பும் ஒரு நாள், பயன்படாத போது, உள்ளிருக்கும் ஆத்மா, இந்த உடம்பை விட்டு, வேறொரு உடம்பில் அதன் பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப யமதர்மனால் கொடுக்கப்பட்டு ஏற்கிறது என்று நிர்ணயிக்க முடியும்.

அந்த ஆத்மா மட்டும் உண்மை, அது வேறொரு உடம்பை பெறும் என்று எப்படி உணர்வது?
இதற்கும் இந்த ஸம்ஸார சாகரத்தில் சுழலும் நம் உடம்பை கவனித்தாலே புரியும்.

40 வயதில் இருக்கும் ஒரு ஆணோ/பெண்ணோ, தான் பிறந்த குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ பார்த்தால் கூட, அன்று இருந்த உடம்பும், இன்று இருக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லை என்று புரியும்.
இன்னும் வயது ஆகி 90 வயதில் நாம் பெரும் உடம்பும், இன்று நமக்கு உள்ள உடம்பும் கூட சம்பந்தம் இருக்காது.
இது கண்ணுக்கு தெரிந்த உண்மை.

அன்றைய உடல் வேறு என்று தெளிவாக தெரிந்தாலும், உள்ளிருக்கும் "ஆத்மா" ஞானத்தோடு இருப்பதால், குழந்தையாக இருந்த உடம்பில் இருந்தவனும் 'நான் தான்',
இன்று இந்த உடம்பில் இருப்பவனும் நான் தான் என்று நம் மூளைக்கு புரிய வைக்கிறது.

ஆனால், யோகம், தவம் குன்றிய நம்மால், இந்த உடம்பே அழிந்த பின், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை.
இதை தான் நம் ஹிந்துக்கள் மாயை என்கின்றனர்.

தன் உடலே மாறிக்கொண்டு இருக்கிறது என்ற உண்மை தெரிந்தும், அழிவு, ஆக்கமும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று தெரிந்தும், ஒன்றுமே மாறாதது போல நம்மை நினைக்க செய்கிறது மாயை என்ற இயற்கை.

இந்த மன அலையையும், உடலில் ஏற்படும் அலையையும் (wave theory) உணர்ந்தவன், உள்ளிருக்கும் ஆத்மா மட்டுமே எப்பொழுதும் மாறாமல் இருக்கிறான், அது தான் தான் என்று புரிந்து கொண்டு விடுகிறான்.

அது எப்படி உடல் எப்பொழுதும் அழிந்தும் உருவாகி கொண்டு இருக்கிறதோ, அது போல, இந்த உடம்பே அழிந்தாலும், இந்த உடலை விட்டு பிரிந்த ஆத்மா, மீண்டும் வேறு உடல் பெறுகிறான் அவன் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப.

பாவ புண்ணியம் அற்ற, இரண்டுமே செய்யாத ஆத்மா, சம்சார கடல் அலையில் இருந்து பகவான் நாராயணனால் மீட்க்கப்பட்டு, வைகுண்டம் அடைகிறான். பக்தி இல்லாமல் வெறும் இந்த ஞானத்தோடு இருந்த சித்தர்களுக்கு கைவல்யம் கொடுக்கிறார்.

மன அலைகள் ஏற்படாமல் இருக்க , மீண்டும் பிறவி ஏற்படாமல், பிறவி கடல் என்ற அலையை கடக்கவும், மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே ஆகும்.
ராம நாமத்திற்கு தாரகமந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரத்துக்கும் தாரகமந்திரம் என்று பெயர்.
தாரகம் என்றால், கடக்க செய்வது என்று பொருள்.
சம்சார அலையை, மனதின் அலையை கடக்க செய்வதால், இந்த இரண்டுக்கும் தாரக மந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரம் யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது. இதற்கு தகுதி பக்குவம் தேவை. கண்ட இடத்தில் எல்லாம் சொல்ல கூடாது. ஒழுக்கம் முக்கியம். இப்படி பல கட்டுப்பாடுகள் கொண்டது ஓம் என்ற பிரணவம்.
இந்த ஓங்காரமே, தன்  சௌலப்யத்தால் "ராம" என்று ஆனது.
ராம நாமத்தை பிற மதத்தவன் கூட சொல்லலாம். நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லலாம். எங்கும் சொல்லலாம். எப்போதும் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி சுலபமான தாரக மந்திரத்தை தான் ஆஞ்சநேயர் எடுத்து கொண்டார்.

காசியில் சிவபெருமான் ராம நாமத்தையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ராம நாமம் சொல்ல சொல்ல, மன அலைகள் ஓயும், பிறவி கடலையும் கடக்க முடியும்.

குருநாதர் துணை