Followers

Search Here...

Saturday 27 January 2018

உலகம், வேத சப்தத்தால் உருவானது

உலகம், வேத சப்தத்தால் உருவானது என்கிறது நம் சனாதன தர்மம்.

வரிசையாய் சொல்ல வேண்டுமென்றால், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், பூமி என்று உலக ஸ்ருஷ்டி சொல்லப்படுகிறது நம் சாஸ்திரத்தில்.

அதாவது,
கண்ணுக்கு தெரியாத ஒலியால், அதன் அதிர்வால் அணுக்கள் நகர்ந்து, கண்ணுக்கு புலப்படும் இந்த உலகமும், அதில் பல வித உடல்களும், நதிகளும் உருவாகின என்கிறது நம் தர்மம்.

எத்தனை தெளிவு மற்றும் உண்மை இருந்தால், ஒலியில் இருந்து உலகம் பிறந்தது என்று சொல்ல தைரியம் வரும் நம் ரிஷிகளுக்கு?

உலகம் உருண்டை என்று நம் தர்மம் சொல்ல, வராக மூர்த்தியாக வந்த பெருமாள் உருண்டையான உலகை காத்தார் என்று புராணங்கள் சொல்ல, பின்னால் மனிதனால் ஏற்பட்ட பொய் மதங்கள், உலகம் தட்டை என்று புது விஞ்ஞானம் சொன்னது.

விளைவு?

அறிவியல் மூலம் கலிலியோ என்ற விஞ்ஞானி உலகம் உருண்டை தான் என்று ஆராய்ச்சி செய்து சொல்ல, தங்கள் புத்தியை கொண்டு உருவாக்கப்பட்ட மத நம்பிக்கையை இது குலைப்பதாக உள்ளது என்று 1633ADல் ஆயுள் தண்டனை கொடுத்தனர்.

இதுவே நம் ரிஷிகளின் பெருமையையும், மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற மதங்ளுக்கும் உள்ள வேறுபாடு.

ஹிந்து மதம் என்ற ரிஷி தர்மம் அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தெய்வங்களின் தொடர்பால் உருவானது.
ஹிந்துவாய் பிறந்ததற்கே கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
இதன் அருமையை உணர்ந்தவன் கோடி புண்ணியம் செய்தவன். பெருமையை உணர்ந்து, வாழ்வில் கடைபிடிப்பவன் அதை விட புண்ணியம் செய்தவன்.

அதுவே உண்மை என்றும் இன்றைய  விஞ்ஞானம் சொல்கிறது.

உலகத்தில் மழை இல்லை என்றால், உலகத்தில் துன்பங்கள் ஏற்பட்டால், உடலில் உபாதை ஏற்பட்டாலும், சரி செய்வதற்கு, பொதுவாக அததற்கு வேத மந்திரங்கள் உண்டு.

மழை வேண்டி வருண ஜெபம் செய்யும் வேதியர்கள் இன்றும் உண்டு.

வேத மந்திரங்கள் ஒலிக்கும் இடங்களில், அந்த இடங்களில் உள்ள தோஷங்கள் தானே விலகி விடுகிறது.

வேத சப்தத்தால் உருவானது தான் இந்த உலகமே, என்பதே இதற்கு காரணம்.

இந்த ரகசியத்தை புரிந்து கொண்டாலே, உலக பிரச்சனைக்கும், நம் உடல் மன பிரச்சனைக்கும் வேத மந்திரங்கள் கொண்டு சரி செய்து கொள்ளலாம் என்று தெரிகிறது.

வேதியர்களை கொண்டாடிய இந்த பாரதம், தன்னிறைவு பெற்ற நாடாக இருந்தது 947AD வரை.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை.

உலகமே பாரதத்தை நோக்கி படை எடுத்து செல்வங்களை எடுத்து செல்ல முயன்றது என்பது நடந்த வரலாறு.

1947ல் பிச்சைகாரர்களாக விடப்பட்ட பாரத மக்கள், வேதத்தின் மகிமையை மறந்து இருந்தனர்.

1300 வருட கலாச்சார சீற்கேட்டால், வேதத்தின் மகத்துவம் அந்த 1947ல் இருந்த தலைமுறையில் மறைந்து இருந்தது.

இதனால் வேதமும் புறக்கணிக்கப்பட்டு, வேதியர்களும் புறக்கணிக்கப்பட, வேத சப்தங்கள் குறைய, சீர்கெட்டு போகும் உலகம், உருவாகியது. இன்னும் சீரழிகிறது.

பாரத மண்ணில் இருந்தவன் எவனும் பொருள் சம்பாதிக்க வெளிநாடு போகவில்லை என்ற நிலை மாறி, பிச்சைக்காரன் போன்று விடப்பட்ட பாரத மக்கள், எங்கு பணம் கொடுத்தாலும், எவன் கொடுத்தாலும், அங்கே சென்று வாழ்வதற்கும் தயார் என்ற நிலையில் இன்று உள்ளனர்.

வேதம் என்ற ஒலியால், உலகம் ஸ்ருஷ்டி ஆனது என்ற பொழுது, அந்த ஒலியை அதற்கு உரிய மாத்திரைகளில் உச்சரிக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படுகிறது.

சரியான உச்சரிப்பே வேத சப்தத்திற்கு முக்கியம்.

இதனால் வேதத்தை சரியான உச்சரிப்புடன் சொல்ல தன் வாழ்வை இதை கற்பதற்காக, சொல்வதற்காக வேதியர்கள் என்ற பிராம்மண சமுதாயத்துக்கு இந்த கடும் சவாலான பொறுப்பு கொடுக்கப்பட்டது.
உலக விஷயங்கள், பொருள் சேர்ப்பது போன்றவை தடுக்கப்பட்டது.

12 வருடங்கள் வேதத்திற்காகவே வாழ்ந்து, வேதம் மட்டுமே கற்று, வாழ்நாள் முழுவதும் வேதத்தை மட்டுமே சொல்லி கொண்டு, இன்றும் வேதியர்களாக சிலர், உலகம் பொருளை நோக்கி ஓடினாலும், இன்றும் கோவிலையும், வேதத்தையும் காப்பாற்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இன்றைய அறிவியல் wave energy, sound energy போன்ற ஆராய்ச்சியில் உலகம் ஒலியால் உருவானது என்கிறது.

அணுக்களை ஏதோ ஒரு சப்தத்தால் நகர்ந்து கொண்டே இருக்கிறது என்கிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், நம் உடம்பிலும் உள்ள அணுக்களும் நகர்வதின் காரணத்தால், வயது ஆகி கிழ வயது வருகிறது.

இந்த நகர்வின் காரணமாக தான், 100 வருஷம் முன் கட்டிய கட்டிடம் கூட உலுத்து போகிறது.

சரியான பராமரிப்பு செய்தால், கட்டிடங்கள் காலத்துக்கும் நிற்கவும் செய்கிறது.
பராமரிப்பு என்று நிற்கிறதோ, அன்றிலிருந்து அழிய தொடங்குகிறது.

உடலும் இதே போல சரியான பராமரிப்புடன் கவனிக்கபட்டால், காப்பாற்ற படுகிறது. இதற்கும் யோகம், சித்த வைத்தியம் என்று நம் ரிஷிகள் நீண்ட ஆயுசுடன் வாழ வழி செய்துள்ளனர். ஆரோக்கியத்துடன் வாழ்ந்து காட்டியும் உள்ளனர்.

இந்த நகர்வால், அணுக்கள் சேரும் போது கண்ணுக்கு புலனாக ஒரு உலகமாக உருவெடுத்து, அதில் பல திரவியங்கள், உலோகங்கள், மனித, மர, விலங்கு, பறவை உடல்கள் உருவாகின்றன என்கிறது.

இதை எப்பொழுதோ சொல்லிவிட்டது நம் சனாதன தர்மம்.

ஒலி அலைகளால், அணுக்கள் நகர்ந்து உருவம் தரிக்கிறது. இதை இன்று அறிவியல் கண்டுபிடிக்கிறது.

இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள், ஒரு ஆக்சிஜன் அணுவோடு சேர, தண்ணீர் உருவாகி, அதுவே நதியாக, கடலாக ஓடுகிறது.

இதை முன்னமே நம் ரிஷி தர்மம், வேத சப்தத்தால் உலகம் உண்டாகிறது என்று சொல்லி விட்டது.

ஹிந்துவாக இருப்பவன், தன்  வேதத்தின் மகிமையை எதிர்ப்பானா?
வேதத்திற்கே மூலமாக இருக்கும் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் மகிமையை எதிர்ப்பானா?
எந்த ஹிந்து இப்படிபட்ட பிரணவ மந்திரத்தையும், பிரணவத்தில் இருந்து உருவான வேதத்தையும் எதிர்ப்பான்.
எந்த ஹிந்து நான் இப்படிப்பட்ட ரிஷியின் வம்சத்தில் வந்தவன் அல்ல, ஆடையில்லா முட்டாள் ஆதாம், ஏவாள் மூலம் வந்தவன் என்று சொல்வான்?

அறிவியல் சொல்லும் அந்த ஒலி "வேதம்" என்றும் கண்டுபிடித்து, அந்த வேத மந்திரங்கள் என்னென்ன என்றும் ரிஷிகளின் தவ வலிமையால் நமக்கு கொடுத்து விட்டனர்.

இதையும் தாண்டி, இந்த வேதமே "ஓம்" என்ற பிரணவத்தில் அடக்கம் என்றும் கண்டுபிடித்தனர்.
இதை படைத்தவனும் யார் என்றும் சொல்கின்றனர்.

வேதம் "ஓம்" என்ற பிரணவத்தில் இருந்து உண்டானது.
ஓம் அந்த பரவாசுதேவனால் உண்டானது.

அந்த பரவாசுதேவன்  நாராயணனே என்றும் தெளிவாக "ஹரி: ஓம்" என்று வேதம் ஹரியின் பெயரை சொல்லி அதற்கு பின் தான் பிரணவம் என்கிறது.

அந்த பரவாசுதேவன் படைத்த ப்ரம்ம தேவனுக்கு வேதத்தை கொடுத்து, உலகை படைக்க ஆணை இட்டார் பரப்ரம்மாவாகிய வாசுதேவன்.

வேத சப்தங்கள் கொண்டு ப்ரம்ம தேவன் உலகை ஸ்ருஷ்டி செய்தார்.
உலகில் நாம் (ஜீவாத்மா) பிறக்கிறோம்.
நம்மை (ஜீவாத்மா) படைத்தவன் அந்த பரவாசுதேவன்.
நமக்கு உடல் என்ற மெய் கொடுத்தவர் ப்ரம்ம தேவன்.

வேதத்தை கொண்டு உலகை படைத்து, அதை நடத்தி கொண்டிருக்கிறார் ப்ரம்ம தேவன்.

வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம்.

அந்த ஓம் என்ற பிரணவமும் மூன்று அக்ஷரங்களால் ஆனது.

அந்த மூன்று அக்ஷரங்கள் "அ உ ம" எனப்படும்.

உலகம் வேதத்தில் அடங்குகிறது.
வேதம் பிரணவத்தில் அடங்குகிறது.
பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில், அக்ஷரங்களில் நான் "அ" என்ற அக்ஷரமாக இருக்கிறேன் என்கிறார்.

ஸ்ரீ கிருஷ்ணர் இதன் மூலம் என்ன சொல்கிறார்?

உலகமே வேதத்தில் அடக்கம். வேதமே பிரணவத்தில் அடக்கம்.

Thursday 11 January 2018

தாரக மந்திரம், மாயை, சம்சார என்றால் என்ன?

தாரக மந்திரம் என்று ராம நாமத்தையும், ஓம் என்ற ஓங்காரத்தையும் சொல்கிறார்கள். தாரகம் என்றால் என்ன? இதன் பயன் என்ன?

சம்சார என்றால் என்ன?

மாயை என்றால் என்ன?

மன அலையை, சம்சார அலையை ஓய வைப்பது எப்படி?

மறு பிறவி உண்டு என்று அனுமானிப்பது?

நம் சனாதன தர்மத்தின் நோக்கம் என்ன? பிற மேற்கு மத தர்மத்தின் நோக்கமும், அவர்கள் விழாவும், வாழ்க்கையின் நோக்கம் என்ன?

மேலும் படியுங்கள்...

மீண்டும் மீண்டும் வரக்கூடிய அலையை தான் பொதுவாக, சம்சாரம் என்கிறோம்.

கடலின் அலையை பார்த்தால் என்ன அர்த்தத்தை இது சொல்கிறது என்று நாமும் புரிந்து கொள்ளலாம்.
கடலில் ஒரு அலை எழும்பும், அது அழிந்து, பின் மீண்டும் ஒரு அலை உருவெடுத்து வந்து, ஒரு முடிவே இல்லாமல், "பிறந்து, அழிந்து', "பிறந்து, அழிந்து" என்று சுற்றிக்கொண்டே இருக்கும். இந்த சுழற்சிக்கு தான் சம்சாரம் என்று பெயர்.

இந்த கடலில் உள்ள அலை போல, நமக்கும் மனதிலும், உடலிலும் கூட இந்த முடிவில்லாத சுழற்சி  ஏற்படுகிறது.

1. மனதிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதையும் நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.
2. உடலிலும் இந்த சம்சார சக்கரம் என்ற அலை ஓடுகிறது. இதை நன்றாக கவனித்தால் புரிந்து கொள்ளலாம்.

விளக்கம்:
1. மனம் என்றாலே அலைபாயும் குணம் கொண்டது என்று அனைவருக்கும் புரியும். அனைவரும் அனுபவிப்பதால், ஒப்புக்கொள்வர்.
அலையை போன்று, நம் மனதில் ஒரு எண்ணம் உருவாகி, அது அழிந்து, உடனே மற்றொன்று உருவாகி, அதுவும் அழிந்து, மற்றொறு எண்ணம் உருவாகி இப்படியே நம் நினைவு தெரிந்த நாள் முதல், சாகும் வரை, எண்ணங்கள் நம் மனதில் வந்து கொண்டே இருக்கிறது.
இதற்கு முடிவே தெரிவதில்லை.

அலையாத மனம் கிடைப்பதே பலருக்கு அரிதான விஷயம்.

அலையும் மனது இருப்பதால் தான் மனிதன் துன்பத்தை அனுபவிக்கிறான். இன்றைய சமுதாயம் மனக்கட்டுப்பாடு இல்லாமல் தறிகெட்டு அழிவதால் தான், இன்றைய சமுதாயம், நம் முன்னோர்கள் அனுபவித்த stress, pressureஐ விட பல மடங்கு அனுபவிக்கிறது.

மனம் அலைவதே பல நோய்களுக்கு காரணம். அதாவது, ஒரே எண்ணத்தில் நிற்காமல், ஒரு எண்ணம் ஏற்படும் போதே, இன்னொரு எண்ணம் உருவாகி, அது அழிந்து இன்னொரு எண்ணம் என்று பல எண்ணங்கள் தோன்றி, மறைந்து கொண்டே இருப்பதால், மனம் அலைகிறது, நோய் வந்து சேருகிறது.

இந்த மனதின் அலையும் தன்மையை தடுத்து, ஒரு எண்ணத்தில் நிலை நிறுத்த ஒருவன் படாதபாடு பட வேண்டி உள்ளது.

யோகா, தவம் என்று பல வழிகள் மூலம் மனதை அடக்கி, மன அலையை ஓய செய்ய முடியும் என்று பார்க்கிறோம்.
மன அலைகள் ஏற்படாமல் இருக்க  மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே.
சொல்லி பார்த்தவர்களுக்கு தான் எப்படி மனம் அடங்குகிறது என்று புரியும்.
மேர்கத்திய மதங்கள் கொண்டாடும் பண்டிகைகள், உணவுகள், கொள்கைகள், அவர்களின் ஆலயங்கள் உட்பட அமைதியாக இருக்கும் மனதை தூண்டி விட்டு எண்ணங்களை கிளர்ச்சி செய்வதிலேயே உள்ளது. இதனாலேயே இந்தியாவை தேடி அமைதி எங்கே என்று வருகின்றனர்.

இவர்களின் ஆலய வழிபாடு கூட, அமைதியாக இருக்கும் மனதை கிளர்ச்சி செய்வதாக உள்ளது. இவர்களின் ஒரு பண்டிகையில், அழகாக இருக்கும் தன் குழந்தையை கூட பேய், பூதம் என்று வேஷம் செய்து கொண்டாடுவது. மனதை கிளர்ச்சி செய்து மன அலைகளை எழுப்புவதே இவர்கள் கொள்கையாக உள்ளது.

நேரெதிராக, சஷ்டி விரதம், ஏகாதேசி, ராம நவமி, நவராத்திரி, பொங்கல் என்ற அனைத்து ஹிந்து பண்டிகைகளும் தெய்வங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, சைவ உணவு மட்டும் உட்கொள்ளும் விதமாக, விரத நாட்களில் உணவு கூட உட்கொள்ளாமல் வழிபட செய்து, மனதின் அலையை ஒடுங்க செய்வதிலேயே அமைந்தது இருக்கிறது. கோவிலுக்கு சென்றாலும் மனஅமைதி கிடைக்க வழி செய்கிறது. "ஓம் சாந்தி" என்று எப்போதும் வேதமே நாம் மனம் அலையாமல், சாந்தியாக இரு என்று சொல்கிறது. நம் மதத்தின் நோக்கமே நம் மனதை சாந்தப்படுத்தும் நோக்கத்தில் இருக்கிறது.
மேற்குநாட்டு மதங்களோ, மனதின் அலையை கிளப்பி, மன குழப்பம், கோபம், ஆத்திரம், காமம் என்று பல வித உணர்ச்சிகளை தூண்டி, stress, pressure என்று நோய்களை உருவாக்குகிறது.
இவர்கள் கலாச்சாரம் நம் மீதும் இன்றைய காலத்தில் தோ
நம் சாஸ்திரம், மனதின் அலையை அடக்க வழியை காட்டிய பின்னும், முயற்சி கூட செய்யாமல் இருப்பவன், மனம் அலைந்து கொண்டே வாழ வேண்டியது தான்.
ஆஞ்சநேயரும், சிவபெருமானும் "ராம" என்ற தாரக மந்திரத்தை தாங்களே சொல்லி கொண்டு இருப்பதற்கு காரணம், நாமும் சொல்லவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே.

2. மன அலைகள் போல, நம் உடம்பும் இந்த சம்சார அலையில் சிக்கியது தான் என்று "உணர்ந்து கொள்" என்கிறது நம் சனாதன வேத தர்மம்.
நாம் இப்போது கொண்டுள்ள முழு உடம்பும் அழிந்து, ஆத்மாவாகிய நாம் மீண்டும் ஒரு உடலில் புகுவோம் என்கிறது நம் சனாதன தர்மம். மோக்ஷம் அடையாத வரை உடம்பு அழிந்து பின் இன்னொரு உடலில் புகுந்து விடுகிறது ஆத்மா என்கிறது நம் சாஸ்திரம்.

உடம்பே அழிந்த பின், எப்படி நாம் இன்னொரு உடம்பை பெறுகிறோம் என்று அனுமானிப்பது? எப்படி நம்புவது?
இதற்கான பதிலை கொஞ்சம் கவனித்தாலே நாமும் புரிந்து கொண்டு விடலாம்.
மறு ஜென்மம் இல்லை என்று உளரும் கூட்டத்தை மடையர்கள் என்று உணரலாம்.

இன்றைய அறிவியல் முன்னேற்றத்தில், ஆராய்ச்சியாளர்கள் நாம் இப்போது கொண்டுள்ள உடம்பிலேயே ஒவ்வொரு செல்களும் நகர்ந்து கொண்டே இருக்கிறது, அழிந்து கொண்டே இருக்கிறது, புதிதாக தன்னை உருவாக்கி கொண்டே இருக்கிறது என்று நம் சனாதன தர்மத்தில் சொன்ன விஷயத்துக்கு சார்பாக சொல்கிறார்கள்.

நம் உடம்பிலேயே எப்பொழுதும் அழிவும், உருவாக்கமும் நடந்து கொண்டே இருக்கிறது என்று அறியும் போது தான், மொத்த உடம்பும் ஒரு நாள், பயன்படாத போது, உள்ளிருக்கும் ஆத்மா, இந்த உடம்பை விட்டு, வேறொரு உடம்பில் அதன் பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப யமதர்மனால் கொடுக்கப்பட்டு ஏற்கிறது என்று நிர்ணயிக்க முடியும்.

அந்த ஆத்மா மட்டும் உண்மை, அது வேறொரு உடம்பை பெறும் என்று எப்படி உணர்வது?
இதற்கும் இந்த ஸம்ஸார சாகரத்தில் சுழலும் நம் உடம்பை கவனித்தாலே புரியும்.

40 வயதில் இருக்கும் ஒரு ஆணோ/பெண்ணோ, தான் பிறந்த குழந்தையாக இருந்த போது எடுத்த புகைப்படத்தையோ, அல்லது வீடியோவையோ பார்த்தால் கூட, அன்று இருந்த உடம்பும், இன்று இருக்கும் உடம்புக்கும் சம்பந்தமே இல்லை என்று புரியும்.
இன்னும் வயது ஆகி 90 வயதில் நாம் பெரும் உடம்பும், இன்று நமக்கு உள்ள உடம்பும் கூட சம்பந்தம் இருக்காது.
இது கண்ணுக்கு தெரிந்த உண்மை.

அன்றைய உடல் வேறு என்று தெளிவாக தெரிந்தாலும், உள்ளிருக்கும் "ஆத்மா" ஞானத்தோடு இருப்பதால், குழந்தையாக இருந்த உடம்பில் இருந்தவனும் 'நான் தான்',
இன்று இந்த உடம்பில் இருப்பவனும் நான் தான் என்று நம் மூளைக்கு புரிய வைக்கிறது.

ஆனால், யோகம், தவம் குன்றிய நம்மால், இந்த உடம்பே அழிந்த பின், என்ன நடக்கிறது என்று புரியவில்லை. புரிந்து கொள்ள முடியவில்லை.
இதை தான் நம் ஹிந்துக்கள் மாயை என்கின்றனர்.

தன் உடலே மாறிக்கொண்டு இருக்கிறது என்ற உண்மை தெரிந்தும், அழிவு, ஆக்கமும் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்று தெரிந்தும், ஒன்றுமே மாறாதது போல நம்மை நினைக்க செய்கிறது மாயை என்ற இயற்கை.

இந்த மன அலையையும், உடலில் ஏற்படும் அலையையும் (wave theory) உணர்ந்தவன், உள்ளிருக்கும் ஆத்மா மட்டுமே எப்பொழுதும் மாறாமல் இருக்கிறான், அது தான் தான் என்று புரிந்து கொண்டு விடுகிறான்.

அது எப்படி உடல் எப்பொழுதும் அழிந்தும் உருவாகி கொண்டு இருக்கிறதோ, அது போல, இந்த உடம்பே அழிந்தாலும், இந்த உடலை விட்டு பிரிந்த ஆத்மா, மீண்டும் வேறு உடல் பெறுகிறான் அவன் செய்த பாவ புண்ணியத்துக்கு ஏற்ப.

பாவ புண்ணியம் அற்ற, இரண்டுமே செய்யாத ஆத்மா, சம்சார கடல் அலையில் இருந்து பகவான் நாராயணனால் மீட்க்கப்பட்டு, வைகுண்டம் அடைகிறான். பக்தி இல்லாமல் வெறும் இந்த ஞானத்தோடு இருந்த சித்தர்களுக்கு கைவல்யம் கொடுக்கிறார்.

மன அலைகள் ஏற்படாமல் இருக்க , மீண்டும் பிறவி ஏற்படாமல், பிறவி கடல் என்ற அலையை கடக்கவும், மிகச் சிறந்த வழி "ராம ராம ராம" என்று தாரக மந்திரத்தை சொல்வதே ஆகும்.
ராம நாமத்திற்கு தாரகமந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரத்துக்கும் தாரகமந்திரம் என்று பெயர்.
தாரகம் என்றால், கடக்க செய்வது என்று பொருள்.
சம்சார அலையை, மனதின் அலையை கடக்க செய்வதால், இந்த இரண்டுக்கும் தாரக மந்திரம் என்று பெயர்.
ஓம் என்ற ஓங்காரம் யார் வேண்டுமானாலும் சொல்ல கூடாது. இதற்கு தகுதி பக்குவம் தேவை. கண்ட இடத்தில் எல்லாம் சொல்ல கூடாது. ஒழுக்கம் முக்கியம். இப்படி பல கட்டுப்பாடுகள் கொண்டது ஓம் என்ற பிரணவம்.
இந்த ஓங்காரமே, தன்  சௌலப்யத்தால் "ராம" என்று ஆனது.
ராம நாமத்தை பிற மதத்தவன் கூட சொல்லலாம். நம்பிக்கை இல்லாமல் கூட சொல்லலாம். எங்கும் சொல்லலாம். எப்போதும் சொல்லலாம். யார் வேண்டுமானாலும் சொல்லலாம். இப்படி சுலபமான தாரக மந்திரத்தை தான் ஆஞ்சநேயர் எடுத்து கொண்டார்.

காசியில் சிவபெருமான் ராம நாமத்தையே சொல்லிக்கொண்டு இருக்கிறார்.

ராம நாமம் சொல்ல சொல்ல, மன அலைகள் ஓயும், பிறவி கடலையும் கடக்க முடியும்.

குருநாதர் துணை

Wednesday 27 December 2017

நரகத்திற்கு அழைத்து போகும் நான்கு குணங்கள் எது? தெரிந்து கொள்வோமே...

நமது உபநிஷதம், "ஹே புத்தி உள்ளவனே" என்று நம்மை ஆசையாக,  கூப்பிட்டு, பின் வருமாறு சொல்கிறது. 



  1. அஸ்ரத்தை (ஈடுபாடு இன்மை),
  2. லோபம் (பேராசை),
  3. கோபம்,
  4. பொய்

- இந்த 4ம் உன்னிடம் இருந்தால், அது உன்னை "நரகத்திற்கு அழைத்து போகும்".
"ஹே புத்தி உள்ளவனே ! 
ஈஸ்வரனை அடைய, மேலும் உலகத்திலும் சௌக்கியமாக வாழ, 
மேல் சொன்ன இந்த நான்கையும், உன் குணத்திலிருந்து துரத்தி விடு.

  1. ஸ்ரத்தை (ஈடுபாடு)
  2. தானம்
  3. பொறுமை
  4. உண்மை 

- என்ற இந்த நான்கை உன் வாழ்வில் பிடித்துக்கொள்"
என்கிறது.

"இந்த உண்மையை நீ புரிந்து கொள்வாய்" என்பதால் தான், வேதம் நம்மை "ஹே புத்தி உள்ளவனே !" என்று அழைக்கிறது.

"இனி நரக வழியை தேர்ந்தெடுக்காதே, ஈஸ்வரனை நோக்கி வா" என்று  வைதீகமான வேதம், நம்மை ஆசையுடன் அழைக்கிறது.

நீ ஸ்ரத்தை (முழு மனதுடன் ஈடுபாடு) இல்லாமல் எந்த காரியம் செய்தாலும் அது பலன் அளிக்காது. 

உலக விஷய காரியமானாலும் சரி,
தெய்வ விஷய காரியமானாலும் சரி,
ஸ்ரத்தை இல்லாமல் நீ செய்தால், ஒரு பலனும் இல்லை. 

லோபம் என்றால் எது ?
"உலகில் உள்ள அனைத்தும் எனக்கு மட்டும் வேண்டும்" என்று சொல்வது லோபம்.
"தன்னிடம் உள்ள எதுவும் (அறிவு, செல்வம்) மற்றவர்க்கு கிடைக்க கூடாது என்று வைத்துக் கொள்வதும்" லோபம்.

இந்த "இரண்டுமே லோபம் தான்". 
இந்த லோபம் ஒருவனை நரகத்திற்கு தான் இட்டு செல்லும். 



அதனால் "லோபத்தை (பேராசை) விடு" என்கிறது உபநிஷத்.

அதே போல,
"பொய் பேசுதல், கோபப்படுதல் இதையும் விட்டு விடு" என்கிறது உபநிஷத்.

பொதுவாக, ஒரு விஷயத்தை விடு என்றால், அது தீயது என்று தெரிந்தாலும், மனிதனால் விட முடிவதில்லை.

நம் நிலையை அறிந்த ஸனாதன வைதீக வேதம், "இன்னொரு நான்கை காட்டி, அதை பிடி" என்கிறது.

"எப்பொழுதும் தானம் செய்யும் ஸ்வபாவம் வேண்டும்" என்று நாம் ஆசைபட ஆரம்பிக்கும் போது, தானாகவே, "தனக்கு என்று சேர்த்துக் கொள்ள வேண்டும், அது வேண்டும், இது வேண்டும்" என்கிற லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழியும்.

ஆக, புத்திசாலியான நீ, "லோபத்தை (பேராசை), தானத்தால் நீக்க வேண்டும்".
வெறும் தானம் செய்தால், "தான் செய்தோம் என்ற கர்வம் உண்டாகும்". அதனால்,
"தானம் செய்யும் போது, அந்த ப்ரம்மத்துக்கு (பரமாத்மா, பர வாசுதேவன்) தானம் செய்தோம்" என்ற புத்தியுடனேயே தானம் செய்ய வேண்டும்.

ஆக, புத்திசாலியான நீ, "தானம் செய்து செய்து லோபத்தை அழிக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ,
"நீ பொறுமையால், கோபத்தை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "உண்மையால், பொய்யை நீக்க வேண்டும்".

அதேபோல, புத்திசாலியான நீ, "அஸ்ரத்தையை, ஸ்ரத்தையால் நீக்க வேண்டும்".

எந்த காரியத்தை எடுத்தாலும் "ஸ்ரத்தை என்ற ஈடுபாடுடன்" நீ செய்தால், எத்தனை முறை தோற்றாலும், ஸ்ரத்தை இருந்தால், முயற்சி செய்து கொண்டே இருப்பாய்.


ஈஸ்வரனை நேரில் காண வேண்டும் என்றால் கூட, உன் ஸ்ரத்தையே வழி கொடுக்கும். உன் ஈடுபாடு ஒன்றே வழி கொடுக்கும்.

ஆக,
நாம் வாழப்போகும் இன்னும் சில கால ஜீவ வாழ்க்கையில்,
இந்த உபதேசத்தால், நாம் க்ரஹிக்க (மனதில் பதியவைக்க) வேண்டியது என்ன?
1. நாம் எப்போதும் "தானம் செய்யும்" ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.  
லோபம் (பேராசை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்
வெறும் தானம் "கர்வத்தை தரும்" என்பதால்,
அந்த "பரமாத்மாவுக்கு தானம் செய்தேன்" என்று நினைப்புடன் எப்போதும் தானம் செய்யும் ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும்.



2. எப்பொழுதும் நம் சாஸ்திரத்திலும், குரு வாக்கியத்திலும் நமக்கு ஸ்ரத்தையை(ஈடுபாடு) வளர்த்துக்கொள்ள வேண்டும். 
'அஸ்ரத்தை' (ஈடுபாடு இன்மை) தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.

3. நாம் எப்போதும் பொறுமை ஸ்வபாவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 

'கோபம்' தானாக நம்மை விட்டு அழிந்து விடும்.   

4. சத்யம் பேசும் ஸ்வபாவத்தை எப்பொழுதும் வளர்த்துக்கொள்ள வேண்டும். 
சத்தியத்தையே சொல்ல வேண்டும்.
அஸத்யத்தை (பொய்) எப்பொழுதும் சொல்லக்கூடாது.
அஸத்யம் (பொய்) என்றுமே இறுதியில் ஜெயிக்காது.


உபநிஷத் "சத்யம் ஏவ ஜயதே" (சத்தியமே ஜெயிக்கும்) என்று உறுதியாக சொல்கிறது.

ஆக,
"அஸ்ரத்தை, லோபம், கோபம், பொய்"
- இந்த நான்கை நம்மிடமிருந்து விரட்ட,
"ஸ்ரத்தை, தானம், பொறுமை, உண்மை"
என்ற இந்த நான்கை கொண்டு நீ ஜெயித்து விட்டால்,
"புத்திசாலியே !! நீ ஈஸ்வரனை எளிதில் கண்டு கொள்வாய்." என்று உபநிஷதத்தில் உள்ளது.

இது போன்ற பல உபதேசங்கள், வேதத்தில் உள்ளது, உபநிஷதத்தில் உள்ளது.

இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் உள்ள வேதத்தை நாம் காக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்கள் நடமாடும் தெய்வங்கள் என்பதை நாம் உணர்ந்து, அவர்களை மதிக்க வேண்டும். 
வேதம் அறிந்த வேதியர்களிடம் உபதேசங்கள் கேட்டு, "ஈஸ்வரன் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்?" என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

உபன்யாசம் extract from சிருங்கேரி பெரியவர்.


வாழ்க ஹிந்துக்கள்.   
ஹிந்துக்கள் சொல்லாத நல்ல விஷயங்கள், பிற போலி மதங்களில் இல்லை.

பிற போலி மதங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களும், நம்மிடம் இருந்து எடுக்கப்பட்டவை தான்.

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் யார்? தெரிந்து கொள்ள வேண்டாமா தமிழன்?

சமஸ்கரிதம் தெரியாது. அதை படித்து புரிந்து கொள்ள எங்களுக்கு அறிவும் இல்லை பொறுமையும் இல்லை. நியாயமான கோரிக்கை.

நாங்கள் ஏன் சமஸ்கரிதம் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன் முதலில் செய்ய வேண்டியது என்ன ?



12 ஆழ்வார்கள் :

தமிழ் மொழியை, சமஸ்கரிதத்திற்கு நிகராக பெருமைப்படுத்தியவர்கள் 12 ஆழ்வார்கள்.


ஸ்ரீ நாராயணனே முழு முதற் கடவுள் என்று நான்மறை வேதத்தின் உண்மையை தமிழில் பாசுரமாக செய்த மகாத்மாக்கள்.
தமிழ் இன்று வரை, நம்மிடம் ஓரளவாவது இருக்க நாயன்மார்களும், ஆழ்வார்களும் செய்த தமிழ் தொண்டே காரணம்.
12 ஆழ்வார்கள், 4000 திவ்ய பிரபந்தங்கள் தமிழனுக்கு தந்தார்கள்.
இந்த தமிழர்களை பற்றி சிறு குறிப்பு இதோ :

4203 BCE
1. பொய்கை ஆழ்வார்.
இவர் காஞ்சிபுரத்தில் உதித்தார். (முதல் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
2. பேயாழ்வார்.
இவர் மைலாப்பூர் - Chennaiயில் உதித்தார்(இரண்டாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
3. பூதத்தாழ்வார்.
இவர் மகாபலிபுரத்தில் உதித்தார்.(மூன்றாம் திருவந்தாதி இயற்றினார்)

4203 BCE
4. திருமழிசை ஆழ்வார்.
இவர் திருவள்ளூரில் உதித்தார். (நான்முகன் திருஅந்தாதி, திருச்சந்த விருத்தம் இயற்றினார்)
நான்கு ஆழ்வார்களும், ஸ்ரீகிருஷ்ணர் அவதாரத்துக்கும் முன் த்வாபர யுகத்தில் இருந்தவர்கள். இவர்களுடைய அந்தாதி ஸ்ரீ நாராயணனை குறித்தது. முதல் மூவரும் திருக்கோவிலூர் த்ரிவிக்ரம பெருமாள் கோவிலில் சந்தித்தனர்.

3227 BCE - 3102 BCE
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம். கிருஷ்ண அவதாரம் தொடர்ந்து வந்த ஆழ்வார்கள் 8.

3102 BC
5. மதுரகவி.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் உதித்தார். இவர் வேத சாத்திரங்களை நன்கு பயின்ற அந்தணர். (கண்ணி நுண் சிறுத்தாம்பு இயற்றினார்)



3059 BC
6. நம்மாழ்வார்.
இவர் திருக்குருகூர் என்ற ஆழ்வார் திருநகரி - தூத்துக்குடியில் பிள்ளைமார் சமுதாயத்தில் உதித்தார்.
நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் "வேதம் தமிழ் செய்த மாறன்" என்றே புகழ்ப்படுகிறார்.

நம்மாழ்வார் இயற்றிய பாசுர நூல்கள் நான்கு:
அவை, திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி.
இவை ரிக், யஜூர், அதர்வண மற்றும் சாம வேதத்தின் சாரமாக சொல்வார்கள்.

5000 வருடங்களுக்கு முன், மதுரகவி என்ற அந்தணர், ஞானத்தில் சிறந்த பிள்ளைமார் சமுதாயத்தை சேர்ந்த நம்மாழ்வாரை தன் ஆசாரியனாக ஏற்றார்.

ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி தன் ஆச்சாரியன் நம்மாழ்வாரை போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார்.

4000 திவ்யபிரபந்தங்களில் நம்மாழ்வார் மட்டுமே 1296 இயற்றினார்.
ஆழ்வார்களில் மிக மிக முக்கியமானவர் நம்மாழ்வார் மாறன், சடகோபன், குருகூர் நம்பி, குழந்தை முனி, ஸ்ரீவைணவக் குலபதி என்று பலவாறு நம்மாழ்வார் போற்றப்படுகிறார்.

பிறந்தது முதல் 16 வருடங்கள் யாரிடமும் பழகாமல், பேசாமல் இருந்த நம்மாழ்வார் என்ற சடகோபன், மதுரகவி ஆழ்வார் வந்தபின் அவரிடம் பேசினார். நம்மாழ்வார் சொல்ல மதுரகவி ஆழ்வார் சொல்ல நமக்கு கிடைத்தது தான், நம்மாழ்வாரின் 1296 திவ்யபிரபந்தம்.

மதுரகவி இல்லையேல், நம்மாழ்வார் யார் என்பதும் தெரிந்து இருக்காது, இவரின் 1296 திவ்யபிரபந்தமும் கிடைத்து இருக்காது.

3075 BCE
7. ராஜா குலசேகர ஆழ்வார்.
இவர் சேர அரசன். இவரின் ஆட்சியின் கீழ் கூடல் (மதுரை), கொல்லி (உறையூர், திருச்சி) போன்ற தேசங்களை ஆண்டு வந்த, க்ஷத்ரிய அரசன். (பெருமாள் திருமொழி இயற்றினார்)

3056 BC
8. பெரியாழ்வார்.
இவர் மதுரைக்கு அருகே உள்ள வில்லிபுத்தூரில் உதித்தார். விஷ்ணு சித்தர் என்றும் அழைப்பர். பெரியாழ்வார் மதுரையில் உள்ள கூடலழகர் கோயிலில் குடிகொண்டுள்ள பெருமாளை பார்த்தே திருப்பல்லாண்டு பாடினார். பெருமாளுக்கே மற்றவர் கண் பட்டு விடுமோ என்று இவர் பாடிய திருப்பல்லாண்டு, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசை க்ரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை 4000 திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.

பெரியாழ்வார், திருப்பல்லாண்டு மற்றும் பெரியாழ்வார் திருமொழி இயற்றினார்.

3005 BC
9. ஆண்டாள்.
இவள் ஸ்ரீ வில்லிபுத்தூரில் பெரியாழ்வார் பெண்ணாக, துளசி செடியின் அடியில் கிடைத்தாள். பெரியாழ்வார் வளர்ப்பு பெண்ணாக வளர்ந்தாள். 100 வருடங்களுக்கு முன்பு தான் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் நடந்து இருந்தது. கிருஷ்ண பக்தி ஆரம்பித்து இருந்த காலம் இது. ஆண்டாள் 'திருப்பாவை', 'நாச்சியார் திருமொழி' இயற்றினாள்.

வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண் ஆவார்.

ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாய் கருதப்படுகிறார்.

2814 BCE
10. தொண்டரடிப்பொடி ஆழ்வார்.
இவர் சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் உதித்தவர். இது பாபநாசம் தாலுக்கா தஞ்சாவூர் அருகே உள்ளது.



இவர் 'திருமாலை' மற்றும் 'திருப்பள்ளி எழுச்சி' இயற்றினார். ஸ்ரீரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அரங்கநாதனுக்கு பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார். இவர் இயற்றிய 'திருப்பள்ளி எழுச்சி' மார்கழி மாதத்தில் திருமலை உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் பாடப்படுகிறது.

பரமனாகிய திருமாலை அறிய விரும்புவோர், ஆழ்வாரின் 'திருமாலை' எனும் நூலை படித்தால் போதும். இதையே "திருமாலை அறியாதர் திருமாலையே அறியாதர்" எனும் வழக்கு இவரின் படைப்புகளுள் ஒன்றான திருமாலையின் உயர்வை செப்புகிறது.

2760 BCE
11. திருப்பான் ஆழ்வார்.
இவர் பாணர் குலத்தில் திருச்சி அருகே உள்ள உறையூரில் உதித்தார்.
இவர் 'அமலன் ஆதிப்பிரான்' ஸ்ரீரங்க அரங்கனை பார்த்து இயற்றினார்.

599 BC,
இந்தியாவில் மகாவீரர் பிறந்தார். ஜைன மதம் உருவாக்கப்பட்டது.

563 BC
இந்தியாவில் கௌதம புத்தர் பிறந்தார். பௌத்த மதம் உருவாக்கப்பட்டது.

சந்திரகுப்த, அசோக சக்ரவர்த்தி போன்ற வலிமைமிக்க அரசர்கள் கூட இந்த பௌத்த, ஜைன மதங்களில் ஈர்க்கப்பட்டனர்.
அந்தோ பரிதாபம் !! இந்தியாவுக்கு வந்த கேடு !

அரசர்கள் சந்யாசி தர்மத்தை எடுக்க, அரசர்களும், படை வீரர்களும் சோம்பேறிகள் ஆகி கொண்டிருந்த காலம்... இந்தியர்கள் கேடு காலம் ஆரம்பிக்க விதை போடப்பட்டது இந்த சமயமே.

664 AD
12. திருமங்கை ஆழ்வார்.
இவர் பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர்.
தஞ்சாவூர் சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் 'கலியன்'. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் "திருமங்கை" நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் "திருமங்கை மன்னன்" என அழைக்கப்பட்டார்.

இவர் 'பெரிய திருமொழி', 'திருக்குறுந் தாண்டகம்', 'சிறிய திருமடல்', 'பெரிய திருமடல்', 'திருவெழுக்கூற்றிருக்கை' போன்ற பிரபந்தங்கள் இயற்றினார்.

பௌத்த, ஜைன மதத்தின் காரணமாக, போர் பயிற்சியை விட்டு, கவனத்தை சிதற விட்டு கொண்டிருந்தார்கள் அரசர்கள். தமிழ்நாடு அரசர்கள் மட்டுமே சைவர்களாகவோ, வைஷ்ணவர்களாகவோ மட்டுமே இருந்ததால், இந்தியாவுக்கு வரப்போகும் பெரும் பாதிப்பில் இருந்து ஓரளவு தப்பித்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

947 AD
ஆப்கான் நாட்டில் இருந்த அமித் சூரி என்ற ஹிந்து அரசன் பௌத்த மதத்தை ஏற்று இருந்தான்.

முதல் இஸ்லாமிய படையெடுப்பின் போது, வீரம் குறைந்த பௌத்த மதத்தை விட்டு, இஸ்லாமியன் ஆனான்.

இவன் பரம்பரையே உருவாக்கியது முதல் இஸ்லாமிய ஆட்சி இந்தியாவில். முகம்மது கோரி போன்றவர்கள் இவன் சந்ததியினர் என்று மறுக்க முடியாதது. சரித்திரம் தெரிந்து கொள்வது அடிப்படை தேவை.

தமிழ்நாடு இன்றும் தமிழ் நாடாக இருப்பதற்கு காரணம் இந்த 12 ஆழ்வார்களும், 63 நாயன்மார்களும் தான்.

இவர்கள் எழுதிய பாசுரங்கள் தமிழனுக்கு தெரிய வில்லை என்றால், தமிழ் இனி சாகும் என்பதில் சந்தேகம் இல்லை.

நாத்தீகர்கள் தமிழை வளர்க்கிறேன் என்று கடந்த 60 வருடங்களில், பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் புறக்கணித்து, சாதித்து கிழித்தது தமிழை மெல்ல அழித்தது தான்.



சமஸ்கரிதம் தெரியாது, ஏன் நாங்கள் படிக்க வேண்டும் என்று கேட்கும் தமிழன், உண்மையான தமிழ் பற்று இருந்தால், இத்தனை வருட காலம் தமிழை காப்பாற்றி தந்த பாசுரங்கள், பிரபந்தங்கள் அளித்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் முதலில் மதிக்க வேண்டும்.

தமிழன், தமிழை காப்பாற்ற முதலில் செய்ய வேண்டியது இவர்கள் கொட்டி தந்துள்ள பாசுரங்களை ஒன்றையாவது படித்து தங்கள் மகனுக்கும், மகளுக்கும் சொல்லித்தருவதே.

தமிழை அழித்த, நாத்தீகனை தூக்கி ஏறிவோம்.

தமிழை இன்று வரை உயிரோடு வைத்து இருந்த ஆழ்வார்களையும், நாயன்மார்களையும மதிப்போம்.

கங்கை நதி சரித்திரம் தெரிந்து கொள்வோமே....பூமிக்கு பாய்ந்து வந்த விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டான கங்கை

பூலோகம் ஆரம்பித்து சத்ய லோகமான ப்ரம்ம லோகம் வரை, தன் தவத்தால், பலத்தால் கைப்பற்றி இருந்த பலி (bali) சக்ரவர்த்தியிடம் மூன்று அடி தானமாக கேட்டு,
* ஒரு அடி பூலோகம் ஆரம்பித்து,
* மற்றொரு அடியை ப்ரம்ம லோகம் வரை அளந்து,
* இன்னும் ஒரு அடி எங்கே? என்றார் த்ரிவிக்ரம பெருமாளாக நின்ற நாராயணன்.




மூன்றாம் அடியாக தன்னையே சமர்ப்பணம் செய்தார் பலி சக்ரவர்த்தி.

இவரே அடுத்த இந்திர ராஜன் என்று நியமிக்கப்பட்டு, இன்று வரை பாதாள லோகத்தில் அரசாட்சி புரிகிறார்.
இப்படி ப்ரம்ம லோகம் வரை பெருமாள் திருவடி செல்ல, ப்ரம்ம தேவன், "விஷ்ணு பதி" என்ற பெயருடன் அங்கு ஓடிக்கொண்டிருக்கும் ஜலத்தால், அவர் திருவடியை அபிஷேகம் செய்தார்.

நாராயணன் கால் நகம் பட்ட அபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர், ப்ரம்ம லோகத்தின் கீழ் உள்ள துருவ மண்டலத்தில் விழுந்தது.
நாராயணன் பாதம் பட்ட புனித தீர்த்தம் என்பதை அறிந்து, பக்தியுடன் நீராடினார் துருவன்.

துருவ மண்டலத்தில் இருந்து ஜன மற்றும் தப லோகங்களை வந்து அடைந்தாள், 'விஷ்ணு பதி" என்ற நதி தேவதை.
அங்கு சப்த ரிஷிகளும், முனிவர்களும் ஸ்நானம் செய்தனர்.

பின் அங்கிருந்து சொர்க்க லோகம் வந்து அடைந்தாள் விஷ்ணுபதி. அங்கு உள்ள தேவர்களும், அப்சரஸ் போன்றவர்களும் நாராயண பாதம் பட்ட தீர்த்தம் என்று பக்தியுடன் கொண்டாடினர். ஸ்நானம் செய்தனர். தேவலோகத்தில் "மந்தாகினி" என்ற பெயர் பெற்றாள்.

இப்படி ப்ரம்ம லோகத்தில் இருந்து கீழ் இறங்கி வந்த விஷ்ணுபதி, பூமிக்கு வர மறுத்து, சொர்க்க லோகத்திலேயே தங்கி விட்டாள்.

சத்ய யுகத்தில், ஸ்ரீ ராமர் பிறந்த குலத்தில், ராமருக்கும் முன், ஸகர சக்கரவர்த்தி என்ற அரசன் ஆண்டு வந்தார்.

இவருக்கு 60,000 பிள்ளைகள். மூத்த பிள்ளையின் பெயர் "அஸமஞ்சன்".

இவன் யாரிடமும் சமமாக பழகாமல் இருந்ததால், ஆட்சி செய்ய தகுதி இல்லாதவனாக இருந்தான். இதனால் நாடு கடத்தப்பட்டான்.

"அம்சுமான்" என்ற ஒரு மகன் இவனுக்கு உண்டு. 'அம்சுமான்' தன் தாத்தா ஸகர சக்கரவர்த்தியுடன் இருந்து வந்தார்.

சக்கரவர்த்தியாக இருப்பதால், ராஜா "அஸ்வமேத யாகம்" நடத்த திட்டமிட்டார்.

இந்திரன் தன் பதவி் போய் விடுமோ என்று எண்ணி, அந்த யாகத்திற்காக அனைத்து நாட்டுக்கும் செல்ல தயாராக இருந்த அஸ்வமேத குதிரையை கைப்பற்றி, பாதாள லோகத்திற்கு கொண்டு சென்று, அங்கு இருந்த கபில மகரிஷியின் ஆஸ்ரமத்தில் கட்டி விட்டு சென்று விட்டான்.

சகர சக்கரவர்த்தி, அஸமஞ்சன் தவிர்த்து, மற்ற 60000 மகன்களையும், "அந்த குதிரையை மீட்டு கொண்டு வாருங்கள்" என்று சொல்ல, தேடி தேடி, இறுதியில் பாதாள லோகத்தில் கபில ஆஸ்ரமத்தில் இருப்பதை கண்டு, கபில மகரிஷி தான் திருடி கொண்டு வந்து விட்டார் என்று தவறாக முடிவு செய்தனர்.
அவரை தாக்க சண்டைக்கு தயாரான போது, தியானத்தில் இருந்த கபில மகரிஷி கண் திறந்து பார்க்க, அவரின் தவ வலிமையினால் அவர் கண்ணிலிருந்து வந்த தீ ஜ்வாலையில், அந்த இடத்திலேயே 60000 பேரும் பொசுங்கி போயினர்.
சகர சக்கரவர்த்தி அனுப்பிய பிள்ளைகள் வராமல் போக, தன் பேரனை (அம்சுமான்) அனுப்பி வைத்தார்.




அம்சுமான் இறுதியில் கபில மகரிஷியின் ஆஸ்ரமம் வந்து குதிரை இருப்பதை கவனிக்க, 60000 பேரும் (சித்தப்பா முறை) சாம்பலாகி கிடைப்பதை பார்த்து, அவசரப்பட்டுவிடாமல், நிதானமாக, பணிவுடன் கபில மகரிஷியின் முன் வந்து, நடந்த விவரத்தை கூறுமாறு வேண்டினார்.

கபில மகரிஷி, "இந்திரன் நீங்கள் செய்யும் யாகத்தை பங்கம் செய்வதற்காக, குதிரையை இங்கு வந்து கட்டி விட்டு சென்று விட்டான். இதை அறியாமல், என்ன நடந்தது என்று விசாரிக்காமல், என்னிடம் இவர்கள் செய்த அபசாரமே இவர்களை இந்த நிலைக்கு தள்ளி விட்டது" என்றார்.
துர்மரணம் அடைந்த தன் சிறிய தகப்பனார்களுக்கு நல்ல கதி கிடைக்க வேண்டும் என்று எண்ணிய அம்சுமான், கபிலரிடமே கேட்க, அவர் "இந்திரன் ஆளும் சொர்க்க லோகத்தில் இருக்கும் விஷ்ணுபதி என்ற நதியின் தீர்த்தம் இவர்களின் சாம்பல் மேல் பட்டால், இவர்கள் அனைவரும் நல்ல கதியை அடைவர்" என்று சமாதானம் செய்தார்.

விடைபெற்ற அம்சுமான், குதிரையுடன் திரும்பி வந்து, நடந்ததை சகர சக்கரவர்த்தியிடம் சொன்னான்.

சகர சக்கரவர்த்தி "அஸ்வமேத யாகம்" நடத்தி முடித்து, பின்பு நாட்டை அம்சுமானிடம் ஒப்படைத்து, சொர்க்கம் சென்றார்.

அம்சுமான் நாட்டை கவனிப்பதே பெரிய காரியமாக இருப்பதால், அவர் காலம் வரை ஆட்சி செய்து விட்டு மறைந்தார்.
"மந்தாகினி" என்ற நதியை சொர்க்க லோகத்தில் இருந்து பூமிக்கு கொண்டு வர வைப்பது என்பது சாதாரண காரியமும் இல்லை. மேலும் பின் வந்த அரசர்களுக்கு நாட்டை ஆள்வதில் உள்ள சிரமங்கள், பொறுப்புகள் அதிகமாகி போக, இதை மறந்தே விட்டனர்.

இந்த வம்சத்தில் வந்த "பகீரதன்" என்ற அரசன், தன் மூதாதையர்கள் துர்மரணம் அடைந்து, இன்னும் விமோசனம் அடையாமல் இருப்பதை அறிந்து, தன் அரசாட்சியை தன் மந்திரிகளிடம் கொடுத்து, கடும் தவம் மேற்கொண்டான்.

மந்தாகினி என்ற நதியின் தேவதை ப்ரத்யக்ஷ்ம் ஆனாள்.

பகீரதன் நோக்கம் புரிந்தாலும், சொர்க்கம் வரை வந்த இவள், பூமியை தொடுவதற்கு அருவெறுப்பு கொண்டாள்.
மேலும் பகீரதனை பார்த்து "நான் பவன பாவனமாக, சுத்தமாக இருந்து வருகிறேன். என்னை போய் இந்த பூமிக்கு வரச் சொல்லி கூப்பிடுகிறாயே !! நான் உனக்காக வருகிறேன் என்று சம்மதித்தால், இதன் காரணமாக மகா பாவங்கள் செய்தவர்கள் எல்லாம் வந்து ஸ்நானம் செய்வார்களே !!" என்றாள்.

உடனே பகீரதன் "தேவி, பாவம் செய்தவர்கள் வந்து ஸ்நானம் செய்வார்கள் என்று நினைத்து கூசுகிறாயே, அதே ஸமயத்தில் ஹரி நாமம் சொல்லும் ஹரி தாசர்கள், பாகவதர்கள் வந்தும் ஸ்நானம் செய்வார்களே. இந்த பாக்கியத்தை நீ அனுபவிக்க வேண்டாமா ?




பாவிகள் வந்து ஸ்நானம் செய்யும் போது, அவர்கள் செய்த பாவம் உன்னை சேர்ந்து விடும். இவர்கள் கொடுத்த பாவத்தை எங்கு தொலைப்பேன் என்று நினைத்து தான் நீ பூமிக்கு வர தயங்குகிறாய் என்று அறிவேன்.

ஹரி தாசர்கள் வந்து ஸ்நானம் செய்யும் போதே உன்னிடம் சேர்ந்த பாவங்களை ஓடி விடும்.

ஹரி தாசர்களுக்கு என்ன அப்படி விசேஷம்?

உலக வாழ்வில் நாட்டம் உள்ள லௌகீகர்கள், உன்னிடம் வந்து ஸ்நானம் செய்யும் போது, 'எத்தனை குளிர்ச்சியாக இருக்கிறது, ஆஹா அருமை' என்று சொல்லிக்கொண்டு, உலக விஷயமாக பேசிக்கொண்டு ஸ்நானம் செய்வார்கள். அவர்களின் பாவங்களையெல்லாம் உன்னிடம் கரைத்து விடுவார்கள்.

புண்ணியம் செய்தவர்களோ, கரையில் அமர்ந்து சங்கல்பம் செய்து, தன் பாவங்கள் அனைத்தையும் சொல்லி உன்னிடமே கரைத்து விடுவர்.

இப்படி லௌகீகர்கள், புண்ணியம் செய்தவர்களின் மொத்த பாவத்தையும் சுமந்து இருக்கும் உனக்கு, எதையும் எதிர்பார்க்காமல், ஹரி தாசர்கள் ஸ்நானம் செய்ய வரும் போது, விஷ்ணுபதியே !! அவர்கள் வாய் நிறைய "ஹரி, ஹரி, ஹரி" என்று சொல்லி ஸ்நானம் செய்வார்கள். அந்த நாமமே உன்னிடம் சேர்ந்த அனைத்து பாவங்களும் விலகச் செய்து விடும்.

ஆகையால், அப்படிப்பட்ட பாகவதர்கள் சம்பந்தம் உனக்கு கிடைக்க இஷ்டம் இருந்தால், என்னோடு வா" என்றார்.
இதை கேட்ட மந்தாகினி தேவிக்கு பரமானந்தம் உண்டாகி பாகவதர்களை காணும் ஆசையில் சொர்க்கத்தில் இருந்து உற்சாகம் பொங்க பூமிக்கு வர ஆசை கொண்டாள்.
பகீரதனை பார்த்து "நான் இங்கிருந்து வரும் வேகத்தை பூமியில் யார் தாங்க முடியும்?" என்று கேட்டாள்.

பகீரதன், "அதற்கு நீயே தான் வழி சொல்ல முடியும்" என்றார்.

தேவி, "நான் வரும் வேகத்தை சிவபெருமான் மட்டுமே தரிக்க முடியும்" என்று சொல்ல, மீண்டும் பகீரதன், சிவனை நோக்கி பல வருடங்கள் தவம் செய்து, அவரின் தரிசனம் கண்டு, இந்த காரியத்துக்கு உதவி கேட்டார்.

மகிழ்ச்சியுடன் சிவபெருமான் சம்மதித்தார்.
ஹரி தாசர்களும், பாகவதர்களும் ஸ்நானம் செய்வார்கள் என்று சொன்ன காரணத்தினால் பூமிக்கு வர சம்மதித்த மந்தாகினிக்கு, முதல் பாகவதராக சிவபெருமானே முதலில் வந்து தன் தலையில் ஹரி பாத தீர்த்தம் படட்டும் என்று முன் வந்தார்.

"வைஷ்ணவானாம் யதா ஷம்பு:" என்று, சிவபெருமான் 'தானே முதல் வைஷ்ணவன்' என்று காட்டினார்.

இவர் தலையில் விழுந்து, பூமியில் இமாலய பர்வதத்தில் ஓடி வரும் வரும்போது, மந்தாகினி சிவபெருமானின் கேசத்தை ஆனந்தப்படுத்ததினால், "அலகனந்தா" என்ற பெயர் பெற்றாள்.

பகீரதனை பின் தொடர்ந்து வந்ததால், "பாகீரதி" என்ற பெயரும் கொண்டு, இமயமலையில் இருந்து, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் பூமியை நோக்கி வேகமாக வந்தாள்.

இப்படி ஓடி வருபவள், பூமியை அடைந்தபோது, "பாகீரதி", "அலகனந்தா" என்ற பெயரில் தேவப்ரயாகை என்ற இடத்தில் ஒரு நதியாக இணைந்து, "கங்கா" என்ற பெயர் பெற்றாள்.

தலையில் தாங்கியதால், சிவபெருமான் "கங்காதரன்" என்று பெயர் பெற்றார்.
இப்படி பாய்ந்து வந்த கங்கை பாதாளம் வரை பாய்ந்து, அங்கு இருந்த 60000 பேரின் சாம்பலில் பட்டதற்கே, பித்ருலோகம் அடையாமல் இருந்த அவர்களின் ஆத்மாக்கள் புண்ணிய லோகம் சென்றனர்.

உயிர் போன பின், உடல் எரிந்து அந்த சாம்பலில் கங்கை பட்டாலே அந்த ஆத்மா புண்ணிய லோகம் அடையும் என்றால், உயிருடன் இருக்கும் போது நாம் சென்று ஹரி நாமம் சொல்லி ஸ்நானம் செய்தால் புண்ணிய கிடைக்கும், பாவம் தொலையும் என்பதில் சந்தேகம் என்ன !!




இப்படி பாகவதர்களை எதிர்பார்த்து வரும் கங்கையில் ஸ்நானம் செய்யும் பாக்கியம் கிடைத்தால் நாம் சொல்ல வேண்டிய ஸ்லோகம் :

விஷ்ணு பாத சமுத் பூதே ! (விஷ்ணு பாதத்தில் இருந்து உண்டானவளே )
கங்கே த்ரிபத காமினி !!
(மூன்று உலகங்களிலும் சஞ்சரிப்பவளே )
தர்மத்த்ரவேதி விக்யாதே
(தர்மத்த்ரவம் என்ற பெயர் உடையவளே)
பாபம் மே ஹர ஜான்ஹவி
(என்னுடைய பாவங்களை நீக்கு)

கங்கையை ஸ்மரித்துக் கொண்டு, பொதுவாகவே நாம் எந்த ஜலத்திலும் ஸ்நானம் செய்தாலும், கங்கையில் ஸ்நானம் செய்தது போலாகும்.