Followers

Search Here...

Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள். 


Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)





Saturday 25 August 2018

உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன? தப, ஸ்வாத்யாய நிரதம்,தபஸ்வி,வாக்விதாம் வரம்,முனி புங்கவம்,நாரதம்.. அர்த்தம் தெரிந்து கொள்வோமே


உண்மையான குருவின் 6 லக்ஷணங்கள் (qualities) என்ன?

तपः स्वाध्याय निरताम् तपस्वी वाग्विदाम् वरम् |
नारदम् परि पप्रच्छ वाल्मीकिः मुनि पुंगवम् ||

தப ஸ்வாத்யாய நிரதம்
தபஸ்வி வாக்விதாம் வரம் |
நாரதம் பரி ப்ரக்ஷூசா வால்மீகி முனி புங்கவம் ||
இது வால்மீகி இராமாயணத்தின் முதல் ஸ்லோகம்.



1. தப - யார் உடலை துச்சமாகவும், சாஸ்திர (வேத) ஞானியாகவும்
2. ஸ்வாத்யாய நிரதம் - யார் சாஸ்திரம் படித்த ஞானத்தோடு மட்டும் நிற்காமல், தானே அனுஷ்டானம் செய்பவராகவும்
3. தபஸ்வி - யார் அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும்
4. வாக்விதாம் வரம் - யார் வாக்கு ஸித்தி பெற்றவராகவும்,
5. முனி புங்கவம் - யார் எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும்,
6. நாரதம் - யார் அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்,
யார் இருக்கிறாரோ, அவரே உத்தம குரு.

இந்த 6 லட்சணமும் சேர்ந்த ஒருவரை தரிசிப்பதே அரிது.
அப்படிப்பட்டவர் குருவாக கிடைப்பது அதை விட துர்லபம்.

இப்படி ஆறு லட்சணமும் சேர்ந்த குருவை தேடி தேடி அலைந்தாலும் கண்டுபிடிப்பது அரிது.
கிடைத்தவர்கள் மகா பாக்கியவான்கள்.

அபரோக்ஷ அனுபூதி (பகவத் அனுபவம்) கொண்ட சம்யக் ஞானியாகவும், வாக்கு ஸித்தி பெற்றவராகவும், சாஸ்திர (வேதம்) ஞானியாகவும், எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவராகவும் கூட குரு கிடைப்பார். ஆனால் அவரிடமும் ஒரு குறையாக, சாஸ்திரத்தை அனுஷ்டானம் செய்யாமல் இருப்பார்.

சிலருக்கு 1 லட்சணம் மட்டுமே கொண்ட "குரு கிடைப்பார்".
சிலருக்கு ஒன்றிலிருந்து ஐந்து வரை லட்சணங்கள் உடையவர் "குருவாக கிடைத்து விடுவார்".

ஆறு லட்சணங்களும் சேர்ந்த குரு கிடைப்பது துர்லபம்.

6 லக்ஷணங்களும் உடைய உத்தம குருவை அடைந்தவன், எப்படி குருவிடம் உபதேசம் பெறவேண்டும்? என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.
தத் வித்தி ப்ரணி பாதேன
பிரிப்ரஷ்நேன சேவயா |
உபதேக்ஷந்தி தே ஞானம்
ஞானினஸ் தத்வ தர்ஷின: ||
Chapter 4.  Sloka 34
"6 லட்சணங்கள் உடைய உண்மையான ஞானியை (குருவை) நீ தேடி சென்று, அவருக்கு அடி பணிந்து, அவருக்கு தொண்டு செய்து, அவரின் அபிமானத்துக்கு பாத்திரமாகி, அவர் பிரியப்பட்டு, சிஷ்யனான உனக்கு ஞானத்தை உபதேசமாக தர வேண்டும்"
என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சிஷ்யன் "குருவுக்கு தொண்டு செய்து உபதேசம் பெற வேண்டும்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் சிஷ்யனுக்கு சொன்னாலும், 6 லக்ஷணங்களும் கொண்ட குருவோ, கருணை உள்ளவராக இருப்பதால், தகுதி இல்லாத சிஷ்யனுக்கும், 'ராம' நாம உபதேசம் செய்கிறார்.







ஆறு லட்சணம் பொருந்திய குரு, ஒருவனுக்கு கிடைத்தால், ஒரு கவலையும் இல்லாமல், அந்த குருவின் அணுகிரஹத்தினால், நாராயணனை அடைகிறான் மோக்ஷம் அடைகிறான்.
** யார் தன் உடலை துச்சமாக நினைத்து, தன் உடல் வருந்தினாலும் விரதம், பூஜை, பஜனை என்று பகவத் கைங்கர்யம் எப்பொழுதும் செய்து கொண்டு, ஞானத்திலும் (அறிவிலும்) சாஸ்திர (சப்த ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து, சம்யக் (ப்ரம்மத்தில் நிஷ்டையுடைய) ஞானியாகவும் இருந்து,  தபஸ்வியாக இருக்கிறாரோ,
(‘தபோ நிரதம்’),
** யார் சாஸ்திரத்தை (சப்த ப்ரம்மம் என்ற வேதத்தை) படித்து,படித்ததோடு மட்டுமில்லாமல், அதன் படி தன் வாழ்க்கையில் தானே அனுஷ்டித்து கொண்டும் இருக்கிறாரோ ('ஸ்வாத்யாய நிரதம்’)
** சாஸ்திர (வேதம் என்ற சப்த ப்ரம்மம்) ஞானமும் இல்லாமல், சம்யக் ஞானிமும் இல்லாமல், அனுஷ்டானமும் இல்லாமல் தகுதி எதுவும் இல்லாமல் இருக்கும் ஒரு சிஷ்யன், யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் அவரிடம் ஆகர்ஷிக்கப்படுகிறானோ.
யார் வாக்கின் சக்தியை உணர்ந்து, வீண் பேச்சு பேசாமல், பகவானை பற்றியே பேசி கொண்டிருக்கிறாரோ. வாக்கினால் முதலில் ஈர்க்கப்பட்ட சிஷ்யன், அவனே பின்னர், சாஸ்திரத்தில் ஆர்வமும், அதை தன் வாழ்க்கையில் அனுஷ்டிக்கும்  ஆர்வமும் பெற்று, தன் குருவை போலவே தானும் ஆகும் அளவிற்கு, யாருடைய வாக்கை கேட்ட மாத்திரத்தில் ஏற்படுமோ ('வாக் விதாம்பரம்’)

** யார் உலக விஷயங்களில் ஈடுபட்டாலும், உலக விஷயங்கள் பேசினாலும், தனித்து இருந்தாலும், மனம் அடங்கி, எப்பொழுதும் மனது உலக விஷயத்தில் அலையாமல், மனதை பகவத் தியானத்திலேயே வைத்து இருப்பாரோ (முனிபுங்கவம்)
** யாரிடம் நாம் சரணடைந்தால், அந்த ப்ரம்ம ஸ்வரூபத்தை (நாராயணனை) நமக்கு கொடுக்கும் சக்தி உள்ளவராகவும்
இருக்கிறாரோ (நாரதம்)
அவரே உத்தம குரு.
'நாரம் ததாமி' என்ற சமஸ்கரித சொல்லுக்கு, "நாராயணனை தருபவர்" என்று அர்த்தம்.

'நாரம் ததாமி' என்பதே நாரதர் என்ற ஆனது.

நாரதருக்கு, 'நாரதர்' என்ற பெயர் கிடைத்ததே இதன் காரணமாக தான்.
நாரதரை குருவாக கொண்ட, துருவன், பிரகலாதன், வால்மீகி, வியாசர், புரந்தரதாசர் என்று அனைவருக்கும் பகவத் தரிசனம் கிடைத்ததே!
நாரதரே உத்தம குரு.
ஆறு லட்சணங்களும் உடையவர் நாரதர். 
நாரதரை மதிப்பு குறைத்து நினைப்பதே மகாபாபம்.

தவம் என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன?
தபம் என்ற சொல்லுக்கு, இரண்டு அர்த்தங்கள் உண்டு.

ஒன்று, உடலை வருத்தி, சுத்தி செய்து கொள்ளுதல்.
மற்றொன்று ஞானத்தில் நிலைத்தல்.

யார் ஞானியாக இருக்கிறாரோ, யார் உடலை துச்சமென கருதி, உடல் வருத்தினாலும், பகவத் கைங்கர்யம் செய்து, சுத்தி செய்து கொள்கிறாரோ, அவரே தபஸ்வி.

எந்த விதத்திலாவது, தன் உடலை சுத்தி செய்து கொள்வதற்கு, தவம் என்ற சம்ஸ்கிருதத்தில் சொல்கிறோம்.

உண்ணாமல் ஒரு நாள் விரதம் இருந்து, உடலை சுத்தி செய்வதும், ஒரு தவம் தான்.

அதை ஏகாதசி அன்று பகவானை நினைத்து விரதம் இருந்தால் மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.
அதே தவத்தை பக்தி இல்லாமல், ராவணன், ஹிரண்யகசிபு போன்றவர்கள் போலவும் தவம் செய்து பெரும் வரங்களை பெற்று, அட்டகாசம் செய்து, பின்பு அழியவும் முடியும்.

தவத்தின் நோக்கம் உடல் சுத்தி மேலும் ஞான சுத்தியே.


ஞானம் (அறிவு) இரண்டாக உள்ளது.
சாஸ்திர ஞானம், சம்யக் ஞானம்.
இதை பற்றி தெரிந்து கொள்ள
www.proudhindudharma.com/2018/08/SastraSamyaggyaani.html

உபதேசம் பெற என்ன தகுதி வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது?

சாஸ்திரத்தில் சொன்ன கர்மாக்களை விடாமல் செய்து கொண்டு,
செய்யும் கர்மாவில் பலனை எதிர்பார்க்காமல், தான் கர்மா செய்வதே பகவான் என்னை பார்த்து ப்ரீதி அடைவான் என்ற நோக்கத்தில் மட்டும் செய்து,
இதனால் கர்வம் அகன்று, சித்தம் சுத்தி ஆகி, மனம் தெளிவு பெற்றவனே, குருவின் உபதேசத்திற்கு தகுதி ஆகிறான்.

இந்த தகுதியுடன், குருவின் உபதேசம் பெற்றவனுக்கு உடனே அந்த உபதேசம் ஸித்தி ஆகிவிடுகிறது.

உடல் வேறு ஆத்மா வேறு என்று குரு உபதேசம் செய்தாலும், அந்த உபதேசம் சிஷ்யனுக்கு மனதில் ஏறாததற்கு காரணம், இந்த தகுதியை சம்பாதிக்காத சிஷ்யனின் குறையே இது.

தகுதி அடைந்த சிஷ்யனுக்கு, குருவிடம் உபதேசம் பெற்றவுடன் அது பலித்து விடும்.

சமிகர் என்ற ரிஷியின் கழுத்தில் விதிவசத்தால், பரிக்ஷித் மன்னன் இறந்த பாம்பை போட்டு விட்டு சென்று விட்டார்.
சமிகர், தன் மகனுக்கு பூணல் போட்டு ப்ரம்ம உபதேசம் செய்து இருந்தார்.
உபதேசம் பெற தகுதி உள்ளவனாக இருந்த அந்த சிறுவன், உபதேசம் ஸித்தி பெற்று இருந்தான்.
"ஏழு நாளில் தக்ஷகன் என்ற பாம்பு கடித்து பரிக்ஷித் மரணிக்கட்டும்" என்று சபித்து விட்டான் அந்த சிறுவன். "தகுதி உள்ள ஒருவன், குருவிடம் உபதேசம் பெரும் போது, அவனுக்கு உடனே ஸித்தி ஆகி விடும்" என்பது இந்த சரித்திரத்தில் தெரிகிறது.

தகுதி பெற்ற ஒருவன், குருவின் உபதேசத்தின் உள் அர்த்தத்தை உணர்கிறான்.
தகுதி இல்லாமல் பெறும் உபதேசம், நமக்கு வார்த்தையாக இருக்குமே தவிர, அனுபவத்தில் வராது.

உபதேசத்திற்கு எந்த தகுதியும் இல்லாமல் இருக்கும் சிஷ்யனுக்கு, கருணையால், குரு "ராம" நாமம் உபதேசம் செய்கிறார்.

இந்த ராம மந்திரத்தை, தகுதி இல்லாதவனும் சொல்லலாம்.

உத்தம குரு, தகுதி இல்லாத தன் பக்தனுக்கு, "ராம" நாம உபதேசம் செய்கிறார்.
தன் அணுகிரஹத்தாலும், ராம நாமத்தின் பலத்தாலும், உபதேசம் பெற்றவனுக்கு, சிறிது காலத்திலேயே, தான் செய்யும் கர்மாக்கள் பகவான் ப்ரீதிக்காக தான் என்ற ஞானம் உருவாகுமாறு செய்து, சித்த சுத்தியாக்கி, ராம நாமத்தின் மகத்துவத்தை அனுபவிக்க ஆரம்பிக்கிறான்.

குரு, சிஷ்யனுக்கு உபதேசத்தை முதலில் கொடுத்து, பின்னர் தகுதியை
சம்பாதித்து மோக்ஷம் அடைய கருணை செய்கிறார்.

இப்படிப்பட்ட குருவை அடைந்த ஒரு சிஷ்யன், குருவின் நிலையை புரிந்து பழக வேண்டும்.

எப்பொழுதும் பகவத் தியானத்தில் இருக்கும் குருவிடம், நாம் போய், உலக விஷயங்களை பேச கூடாது.

நாம் குருவை தரிசிக்க போவதே, நமக்கு இந்த உலக விஷயங்கள் மறந்து, பகவத் விஷயமாக நினைவு வர வேண்டும் என்பதற்காக தான்.

ஆறு லக்ஷணங்கள் உடைய குரு கிடைத்தவர்கள் பாக்கியசாலிகள்.

ஹிந்துவாக நாம் பிறந்ததே புண்ணியத்தால் தான்.

வாழ்க ஹிந்துக்கள். நம் ஆத்ம குருவே, நமக்கு துணை.
ஹிந்துக்கள் ஒன்று சேருவோம்.

  



Monday 20 August 2018

யாரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது? இரண்டு ஞானிகள் உண்டு! சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்

நமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.
தெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
உலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
ஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.




ஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)
மற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)

ஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை "சாஸ்திர ஞானம்" என்று சொல்கிறது வேதம்.

"கல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும்" என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.
இதை "சாஸ்திர ஞானம்" என்று சொல்லுவார்கள்.
படித்ததினால் உண்டாகும் அறிவு இது.

படித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, 'சம்யக் ஞானம்' உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

மாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.
இதை 'சம்யக் ஞானம்' என்று சொல்லுவார்கள்.

படிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.
முதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.

பிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிறக்கின்றனர்.

சாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.

முதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.

ஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.

குரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.







சாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ!! அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.

ஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.

சாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும், அதர்மமே!
எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.

ஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது தான்.
அதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.

அமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் "சாஸ்திர ஞானம்" ஏற்படுகிறது.
எழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா? பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா? என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.

பொதுவாக, பாரத தேசத்தில், ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற நாடுகளில், உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.
அதே போல,
மற்ற நாடுகளில், உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.
மெய் ஞானிகளை, குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

தெய்வத்தை காண, வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.
சாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் "சாஸ்திர ஞானி".
அது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே "சம்யக் ஞானி".

சாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.
இப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.

தஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.

தன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம்.
தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, "100 கோடி தடவை "ராம ராம" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.

அனுபவத்தில் கொண்டு வந்து,
ஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.
தினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.

80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.

"80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே?" என்று தியாகராஜர் கேட்க,




"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்"
என்றாராம் ஸ்ரீ ராமர்.
இப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து
"பால கனக மய ... "
என்று பாடுகிறார். 
(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க
https://youtu.be/sw9lE0VKd1A
https://www.dailymotion.com/video/x1e607u )
அனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே "சம்யக் ஞானிகள்".
சம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.



Wednesday 8 August 2018

வைஷ்ணவம் இஸ்லாம்





வைஷ்ணவம்:
சாத்வீக உணவே உண்ண வேண்டும்.
மாமிசம் ராஜஸ உணவு. கோபம், பரபரப்பு போன்ற குணங்கள் உண்டாகும்.
மது தாமச உணவு. அழுகை, சோம்பேறித்தனம், தூக்கம் போன்ற குணங்கள் உண்டாகும். மூளையை குழப்பும்.

கோப குணமும், சோம்பேறித்தனமும் ஒருவன் தெய்வத்தை அணுக முடியாதபடி செய்யும் எதிரியாகும்.
ராஜஸ, தாமச உணவு உண்ண கூடாது. இது மனதை சஞ்சலப்படுத்தும்.

காய் கறிகளிலும் தாமச மற்றும் ராஜஸ உணவு உண்டு. அப்படிப்பட்ட  காய் கறிகளை தவிர்க்க வேண்டும்.
எப்பொழுதும் சாத்வீக உணவே உண்ண வேண்டும். முடிந்தால் மற்றவர் சமைத்த உணவை உண்ணாமல், தானே சாத்வீக உணவை சமைத்து உண்ண வேண்டும்.




இஸ்லாம்:
மது குடிக்க கூடாது.
வளர்க்கப்படும் விலங்குகளை சாப்பிடலாம்.
பன்றி, வேட்டையாடும் விலங்குகள், வேட்டையாடும் பறவைகள், இறந்த விலங்குகள் தவிர மற்ற அனைத்தையும் உண்ணலாம்.


வைஷ்ணவம்:
நாராயணனின் 5 வித அவதாரங்களில், ஒன்று அந்தர்யாமி.
அந்தர்யாமியாக ஒவ்வொரு ஜீவனுடனும் சேர்ந்தே உள்ளார். யோகிகள் யோகத்தினால் பகவானை தானே அடைகின்றனர். இது எல்லோருக்கும் எளிதல்ல.
இப்படி தெய்வத்துடன் பேசும் சக்தி உள்ள மகான்கள் கொண்டே, பகவானை அடைய முடியும். ஒரு தேச பிரதமரை தானே முயற்சி செய்து பார்க்கலாம், இல்லை அவருக்கு மிகவும் தெரிந்தவரை கொண்டும் பார்க்கலாம்.

இஸ்லாம் :
கடவுளின் மீதான நம்பிக்கை கொண்டு ஒவ்வொருவரும் தானே கடவுளை அடையலாம். தேவ தூதர், போதனைகள் செய்பவர்கள் யாவரும் அறிவுரை சொல்பவர்களே. இவர்கள் கடவுளை அடைய தேவையில்லை.


வைஷ்ணவம்:
ஒருவன் பிச்சைக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், கஷ்டப்படுவதும், பணக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், சுகமாக இருப்பதும் அவன் செய்த பூர்வ ஜென்ம பாப, புண்ணியத்தினால் மட்டுமே.

பிறக்கும் போது ஒருவன் பாபம், புண்ணியம் செய்யவில்லை. பூர்வ ஜன்மம் இல்லை என்றால்,
ஏன் ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஏழை குடும்பத்தில் பிறக்க வைத்தான்?
ஏன் வேறு மதங்களில், வேறு தேசங்களில் பிறக்க வைத்தான்? என்று கடவுள் மீது குறை உண்டாகும்.

கடவுள் காரணமே இல்லாமல் பலரை ஏழை குடும்பத்திலும், மற்ற மதத்திலும் பிறக்க வைக்கிறார் என்று ஆகும்.

வைஷ்ணவம் பூர்வ ஜென்மம் உண்டு, இன்னும் பல கோடி ஜென்மங்கள் உண்டு என்றும் சொல்கிறது.

எப்பொழுது எந்த பிறவியில், பாவ புண்ணியம் செய்யாமல், நாராயணனை சரணாகதி செய்து வாழ்கிறானோ, அப்பொழுது மோக்ஷம் அடைவான்.

இஸ்லாம் :
முற் பிறவி இல்லை. வயது வரும்வரை பாவங்கள் கடவுளால் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
பின் செய்யும் பாவங்களுக்கு அவனுக்கு தண்டனை கடவுளே கொடுப்பார்.
செய்யும் பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போதும். இதற்கு மத போதகர்கள் தேவை இல்லை.
நேரடியாக வேண்டினாலே கடவுள் பாவங்களை மன்னிப்பார்.
இறந்த பின் புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கமும், பாவம் செய்தவர்கள்  நரகம் போவார்கள்.
மீண்டும் பிறப்பு வாய்ப்பில்லை.
ஏழையாக ஏன் பிறக்கிறார்கள்? மற்ற மதங்களில் ஏன் பிறக்கிறார்கள்? இப்படி கேள்வி கேட்க கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார். அதில் அர்ச்ச அவதாரமே கோவில்களிலும், வீடுகளிலும் உள்ள விக்ரஹங்கள்.
பக்தியும், ஞானமும் வளர, சர்வ சக்தி உள்ளவர் அர்ச்ச அவதாரத்தில் பிரவேசித்து மகான்களிடம் பேசுகிறார். நம்பிக்கையை பொறுத்து மூடனுக்கு கூட அவன் கேட்டதை செய்கிறார்.

இஸ்லாம்:
கடவுள் இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய கூடாது. அவர் பெயரை கொண்டு கட்டிடம் கட்ட கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் சர்வ சக்தி உள்ளவர் என்பதால், மகான்களை உலகிற்கு அனுப்பி (ராமானுஜர், காந்தி, ஆதிசங்கரர்) உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
வேத தர்மம் உலகில் வீழ்ச்சி அடையும் போது தானே அவதாரங்களை செய்தார், செய்கிறார்.
அவர் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார் என்று வைஷ்ணவ தர்மம் காட்டுகிறது.




இஸ்லாம்:
கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றாலும், மகான்களை (ஆபிரகாம், மோசஸ், நபி போன்றோரை) உலகிற்கு அனுப்பி உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
ஆனால் அவரே அவதாரம் செய்ய மாட்டார்.


வைஷ்ணவம்:
ஒரே கடவுள். முழு முதற்கடவுள் நாராயணணே. அவரே ஆண் (புருஷ)
அவரே பரமாத்மா.
நாம் எல்லோரும் தேவர்கள் உட்பட ஜீவாத்மா (பெண்).
நம் லட்சியம் அந்த பரமாத்மாவை அடைவதே.
அவர் பார்க்க எப்படி உள்ளார், எங்கு உள்ளார், எப்படியெல்லாம் உள்ளார் என்று சொல்கிறது வைஷ்ணவம்.

இஸ்லாம்:
ஒரே கடவுள். கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், அவர் ஆனா பெண்ணா என்று கேட்க கூடாது. உலகையும், மனிதனையும் படைத்த கடவுளை உருவகப் படுத்தக் கூடாது. இருக்கிறார் என்று மட்டும் நம்பவேண்டும்.