Followers

Search Here...

Wednesday 27 March 2019

குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து பெயர் வைக்க வேண்டும்? கட்டுமரம் (wood), இடி(thunder) என்று இயற்கை பெயர்களை உண்மையான ஹிந்துக்கள் வைத்துக்கொள்வதில்லையே, ஏன்?

'க்ஷத்ரபந்து' என்று ஒருவன் இருந்தான். பிறப்பால் ஒரு "பிராம்மணன் அவன். 
இருந்தாலும், "ஆத்ம ஞானத்தை" சம்பாதிக்க நாட்டம் இல்லாமல் இருந்தான்.
"தெய்வ சிந்தனை இல்லாமல்", வாழ்க்கையை செலவழித்து கொண்டிருந்தான்.


"பரப்ரம்மத்தை" உபாசிக்காமல், அவனுடைய செயல்கள் "க்ஷத்ரிய" ஸ்வபாவத்திலேயே இருந்தது.

ஒரு க்ஷத்ரியனை போல, 'சண்டை செய்வதிலும், வேட்டை ஆடி பிராணிகளை ஹிம்சை செய்வதிலும்', ஆர்வம் இருந்ததால்,
இவன் 'ப்ரம்ம பந்து'வாக இல்லாமல், க்ஷத்ரியர்களின் பந்துவாக (உறவு) இருந்ததால், இவனுக்கு "க்ஷத்ர பந்து" என்று பெயர் அமைந்தது.

பிராம்மணனாக பிறந்தும், பிராம்மணனுக்கு உரிய காரியங்கள் இவனிடத்தில் இல்லை.
க்ஷத்ரியனை போல வாழ்ந்து கொண்டிருந்த இவனுக்கு, நாளைடைவில் மதுபானம் செய்வது, மாமிசம் உண்பது போன்ற பழக்கங்களும் ஏற்பட, பாவங்கள் அவனுடன் சேர்ந்து கொண்டன.

நரகத்திற்கு சென்று, செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்தால் தான், இவன் செய்த பாவ காரியங்கள் தொலையும், மறு ஜென்மம் கிடைக்கும் என்ற அளவுக்கு இவன் வாழ்க்கை இருந்தது.

ஒரு சமயம் வேட்டையாட, காட்டில் அலைந்து கொண்டிருந்தான் க்ஷத்ர பந்து.

அப்போது வழியில் "சௌனகர்" என்ற ரிஷியை எதேச்சையாக பார்த்து விட்டான்.
சாதுக்களை தரிசித்தாலேயே, நம் சித்தம் ஸுத்தி ஆகி விடும் என்கிறது சாஸ்திரம்.
இது சாதுக்களின் பெருமை.

தீய எண்ணம் கொண்டவனுக்கும் ஒரு சாதுவை கண்டால் 'மன மாற்றம் ஏற்படும்'. நல்வழியில் செல்ல ஆர்வம் ஏற்படும்.

சௌனக ரிஷியை பார்த்த 'க்ஷத்ரபந்து', மனதுக்குள் நினைத்துக்கொண்டான்,
"இவரும் ப்ராம்மணன். நானும் ப்ராம்மணன்.
நான் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்?. இவர் எப்படி வாழ்கிறார் !!
எப்பொழுதும் நாராயணனை மனதில் தியானம் செய்து கொண்டு இருக்கிறாரே இவர் !!
நாமோ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறோமே!!
ஐயோ !! நாமும் அவரை போல வாழ்ந்து இருக்க கூடாதா?"
என்று தன்னை தானே வெறுத்துக்கொண்டான்.

இப்படி நினைத்து கொண்டே, தன் கையிலிருந்த வில், அம்பை முறித்து தூக்கி எறிந்தான்.

நேராக சௌனக ரிஷியின் அருகில் வந்து, சரணத்தில் விழுந்து,
"எனக்கு சன்மார்க்கத்தை (நல்வழியை) காட்டுங்கள்" என்று பிரார்த்தித்தான்.

சௌனக ரிஷி, க்ஷத்ரபந்துவை பார்த்து,
"இனி மது மாமிசம் சாப்பிடுவதை விடு. வேட்டையாடுவதை விடு.
இதுநாள் வரை செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொள். தபசு செய்ய இப்பொழுதே கிளம்பி விடு"
என்று சொல்ல,



க்ஷத்ரபந்து,
"நான் என்னை நம்புவதற்கு இல்லை.
உறைந்து போன நெய்யை, வெயிலில் காட்டும் போது, உருகுவது போல உருகும்.
சரி, உருகி விட்டதே என்று உள்ளே எடுத்து வைத்தால், மீண்டும் உறைந்து விடும்.
அதுபோல,
என் மனதில் ஏதாவது ஒரு உருக்கம் ஏற்பட்டது என்றால், அது உங்கள் ப்ரபாவத்தால் ஏற்பட்டதே தவிர, என் ஸ்வபாவம் இல்லை.
என்னை தனியாக போய் தவம் செய் என்று சொல்கிறீர்கள்.
உங்களை விட்டு சிறிது விலகி சென்றாலும், என் ஸ்வபாவம் மேலோங்கி விடும்.
உருகிய உள்ளத்தோடு இருக்கும் நானே, உங்களை விட்டு விலகி சென்றால், மீண்டும் உறைந்து விடுவேன்.
இரக்கமற்ற வாழ்க்கை மீண்டும் வாழ ஆரம்பித்து விடுவேன். என்னை நானே நம்புவதற்கு இல்லை.
அதனால், என்னை நீங்கள் அதை செய், இதை செய் என்று சொல்லக்கூடாது.
எதற்கும் தகுதி அற்றவன் நான்.
உங்கள் கருணையினால் தான் என்னை நீங்கள் காப்பாற்றவேண்டும்"
என்று சொல்ல,

சௌனக ரிஷி,
"சரி. நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
என்று கேட்க,
"நான் இந்த காட்டில் தான் அலைந்து கொண்டிருப்பேன். ஏதோ கிடைத்ததை வேட்டையாடுவேன்.
கையில் பணம் வேண்டுமென்றால், யார் வீட்டிலாவது புகுந்து கொள்ளையடிப்பேன்.
மற்ற நேரங்களில், நான் வீட்டில் மாடு வைத்து இருக்கிறேன். நேரம் போக, அந்த மாட்டை கவனித்து கொண்டு இருப்பேன்."
என்றான் க்ஷத்ரபந்து.
சௌனக ரிஷ,
"மாட்டை நீ இல்லாத சமயத்தில் பார்த்து கொள்ள வேறு யாரையாவது வைத்து இருக்கிறாயா?"
என்று கேட்க,
"ஆமாம், ஒரு சின்ன பையன் இருக்கிறான். அவன் மாட்டை பார்த்து கொள்கிறான்"
என்று சொன்னான்.
"அவன் பெயர் என்ன?"
என்று சௌனக ரிஷி கேட்க,
"அவன் பெயர் கோவிந்தன்" 
என்று க்ஷத்ரபந்து சொல்ல,
"சரி.. நீ தவம் செய்ய செல்ல வேண்டாம். அடிக்கடி அந்த இடையன் பெயரை கூப்பிட்டு கொண்டே இரு. போ"
என்று அணுகிரஹம் செய்து அனுப்பினார்.





அன்றிலிருந்து, அடிக்கடி
"கோவிந்தா.. மாட்டுக்கு தீனி வைத்தாயா?
கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தாயா?"
என்று அடிக்கடி அவன் பெயரை சொல்லி சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு, "கோவிந்த" நாமத்தை அவன் ஆவர்த்தி செய்து கொண்டே வாழ்ந்து வந்தான்.

மரண காலம் அவனை நெருங்கி விட்டது.
யாருக்கு என்ன கவலை இருக்குமோ, அதை பற்றிய எண்ணம் தான் சாகிற சமயத்திலும் வரும்.

கடைசி மூச்சு போகும் சமயத்தில்
"மாட்டுக்கு தண்ணீர் வைத்தானோ இந்த கோவிந்தன்?" என்று கோவிந்தனின் நினைவு வர,
"கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் வைத்தாயா?.." என்று கேட்க வாயெடுத்த க்ஷத்ரபந்து, "கோவிந்தா..." என்று சொல்லும் போதே உயிர் பிரிந்து விட்டது.
கடைசி நேரத்தில் கோவிந்த நாமத்தை சொன்ன பலனாக, மோக்ஷத்தை கொடுத்துவிட்டார் எம்பெருமான் நாராயணன்.
"கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்" 
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில், 
'பாவங்களையே செய்து வாழ்ந்த க்ஷத்திர பந்துவும் கடைசி மூச்சு விடும் சமயத்தில் "கோவிந்தா" என்று சொன்னதால் நற்கதியான மோக்ஷம் அடைந்து விட்டான்' என்கிறார்.

'க்ஷத்ரபந்து' 'நாராயணனை' நினைத்து, கோவிந்த நாமத்தை சொல்லவில்லை
அந்த இடையனை நினைத்து தான் அழைத்தான். 
ஆனால் பகவன் நாமம் அவனை காப்பாற்றி விட்டது.

பகவானின் நாமத்தை அடிக்கடி சொல்லி சொல்லி, நாக்கும் மனசும் பழகி போக, கடைசி மூச்சு விடும் சமயத்தில், அந்த நாமமே க்ஷத்ரபந்துவை காப்பாற்றிவிட்டது.
அஜாமிளன் போன்று, பகவானின்  நாமத்தை உயிர் போகும் சமயத்தில் சொல்லியதால், மோக்ஷம் அடைந்தான் 'க்ஷத்ரபந்து'


பகவானின் நாமத்தை அடிக்கடி நாம் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் மரண காலத்திலும், அந்த பகவன் நாமமே நம்மை மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

"கோவிந்தா... கோவிந்தா..." என்று அடிக்கடி கூப்பிட்டு கூப்பிட்டு பழகி போன, 'க்ஷத்ரபந்து' மரண சமயத்திலும் "கோவிந்தா..." என்று அழைக்க, அந்த 'கோவிந்தன்' என்ற பெயரின் நிஜமான உரிமையாளன், திவ்ய காட்சி கொடுத்து, "பரம் என்ற வைகுண்டம்" கூட்டி சென்றார்.
பாவங்களையே சம்பாதித்த 'க்ஷத்ரபந்து', பகவன் நாமாவை கடைசி மூச்சு விடும் சமயத்தில் சொல்லி மோக்ஷம் அடைந்து விட்டான்.

'அடிக்கடி பகவன் நாமாவை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பெரியோர்கள் சொல்வதற்கு காரணமும் இது தான்.

நாம் எதை அடிக்கடி வாக்காலும், மனதாலும் செய்கிறோமோ, அதே எண்ணங்கள் தான் மரண சமயத்தில் ஞாபகத்துக்கு வரும்.
'ராம... ராம... ராம..' என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், இறுதி மூச்சு விடும் போதும் "ராம" நாமத்தை சொல்லிக்கொண்டே உடலை விட்டு பிரிகிறார்கள்.

பகவன் நாமாவை சொல்லாமல், உலக, குடும்ப விஷயங்களிலேயே அடிக்கடி எண்ணம் உடையவர்கள், அது போன்ற விஷயங்களை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறார்கள். அது சம்பந்தமாகவே மறு பிறவி எடுக்கின்றனர்.
"பரத ரிஷி", கடைசி மூச்சு விடும் சமயத்தில், தான் வளர்த்த 'மானை இனி யார் காப்பாற்றுவார்களோ?' என்று மான் நினைவுடனேயே உயிரை விட்டார். மறு ஜென்மத்தில் மானாக பிறந்து விட்டார்.

"நாராயணா, ராமா, கோவிந்தா' என்று உயிர் பிரியும் சமயத்தில் சொல்லும் பாக்கியவான்கள், வைகுண்டம் அடைந்து விடுகிறார்கள்.

நாமும் மறு பிறவி எடுக்காமல் "வைகுண்டம்" அடைய, அடிக்கடி பகவன் நாமாவை சொல்ல வேண்டும்.

உலக வாழ்க்கையில் துக்கமே அதிகம்.
உலக வாழ்க்கை நிரந்தரமற்றதும் கூட. இளமையும் நிரந்தரமில்லை.

உலகம் நிரந்தரமற்றது, துக்கமே நிறைந்தது என்று அறிந்து, மறு பிறவி எடுக்காமல், மோக்ஷத்திற்கு ஆசை பட வேண்டும் என்று மகான்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.


பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்
"அநித்யம் அசுகம் லோகம், இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்"  (9 Chapter, 33 sloka)
என்று சொல்லும் போது,
'இந்த உலகம் உன்னை பொருத்தியவரை  'நிரந்தரமற்றது, துக்கம் நிறைந்தது' என்று அறிந்து, உலகத்தின் மீதான  பற்றை விட்டு விட்டு, என் நாமத்தை எப்பொழுதும் பஜித்து ( சொல்லி) கொண்டிரு' 
என்கிறார்.

"ராம நாம ஜபம் தினமும் 2 மணி நேரமாவது செய்" என்று சொன்னாலும், கலியில் உள்ள மனிதர்களால் முடிவதில்லை.

"உடல் அளவில், மனதளவில் உறுதி இல்லாதவர்களாக" கலியில் பிறக்கிறோம்.

ஒரு நாள் ஏகாதேசி அன்று மட்டும் 'பட்டினி இரு' என்று சொன்னால், கலியில் உள்ள நம்மால், ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. 

கடந்த யுகங்களில், ரிஷிகள் பல நாட்கள் தவம் செய்தது ஆச்சர்யமில்லை.
அசுரன், ராக்ஷஸர்கள் கூட, பல நாட்கள் சாப்பிடாமல் தவம் செய்து தெய்வங்களிடம் வரம் வாங்கினர் என்று பார்க்கிறோம்.
சிலர், தெய்வங்களையே அடைக்கவும் முயற்சித்தனர் என்றும் பார்க்கிறோம்.

பகவன் நாமாவை தொடர்ந்து சொல்ல கூட முடியாத நிலையில் துர்பலமாக இருக்கும் நமக்கு, ஆழ்வார்கள் வழி காட்டுகிறார்கள்.

வெறுமனே "ராம ராம ராம..." என்று சொல்லும் போது, ஆரம்பத்தில் தூக்கம் கூட வர வாய்ப்பு உண்டு.
ராம நாமம் அடிக்கடி சொல்லி சொல்லி பழகியவர்களுக்கு, அந்த நாமமே ருசிக்க ஆரம்பித்து விடும்.
அடிக்கடி பகவன் நாமத்தை நம் நாக்கு சொல்ல பழக்க வேண்டும்..
ஆரம்ப நிலையில், வெறும் நாமமாக சொன்னால் தூக்கம் வருகிறது.
"அடிக்கடி நம் வாயில் பகவானின் நாமம் வருவதே முக்கியம்" என்பதால்,
நம் குழந்தைகளுக்கு "கோபால்", "கோவிந்தன்" "ராமன்" என்று பெயர் வைத்து, குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொண்டே இருங்கள், என்று பக்தியை நமக்கு சுலபமாக்கி கொடுத்தார்கள் ஆழ்வார்கள் .

குழந்தைக்கு பகவானின் நாமாவை பெயராக வைத்து கூப்பிட்டு கொண்டே இருங்கள். குழந்தையை அழைக்கும் போதெல்லாம் பகவான் நாமாவை அடிக்கடி சொல்லி சொல்லி பழக, நம் உயிர் போகும் தருவாயில், அந்த நாமத்தின் உரிமையாளன் "நாராயணன்" நமக்கு காட்சி கொடுத்து பரலோகமான வைகுண்டம் அழைத்து செல்வான் என்கிறார் பெரியாழ்வார்

நம் பிள்ளைக்கு "கோபால்" என்று பெயர் வைத்து விட்டால், பிள்ளையை கூப்பிடும் சாக்கில், "கோபாலா.. கோபாலா..." என்று கூப்பிடலாம்.
தாய் தகப்பனுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவருமே, பகவானின் நாமாவை பஜனை செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்.
ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து தெய்வங்களின் பெயர் வைப்பது அவசியம். அதன் மூலமாக நாம் அனைவரும் அவன் நாமத்தை அடிக்கடி உச்சரிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியமும் காரணம் இல்லாமல் இல்லை.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka




Saturday 23 March 2019

சட்டை அணியாமல் கோவிலுக்கு வர சொல்வதின் நோக்கம் என்ன? பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். ஏன்?

"சரணாகதி" என்றால் என்ன?



வெறும் "கும்பிடு" போடுவது மட்டும், "சரணாகதி" இல்லை.

"சரணம், சரணம்..." என்று ஒருவன் கத்தி விட்டதால் மட்டும், அது "சரணாகதி"ஆகி விடாது.

"உள்ளொன்று பேசி, புறமொன்று பேசுபவர்கள்",
  • சாதாரண மனிதனை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
  • எம்பெருமானை ஏமாற்ற முடியாது. 
எம்பெருமான் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்.
"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசுபவன்,
  • "சரணம் சரணம்..." என்று வெறும் வார்த்தையாக கத்தினாலும்,
  • "கும்பிடு" போட்டாலும்,
'எம்பெருமான்' நம் சரண கோஷங்களுக்கு மயங்குவதில்லை. 

வெளி வேஷங்களை விட, நம் இதயத்துக்குள் ஓடும் நம் எண்ண ஓட்டத்தை தான் பார்க்கிறார் எம்பெருமான்.

"போலியாக போட்ட பக்தி வேஷத்திற்கும், பக்தி கோஷத்திற்கும்", அதற்கான "புண்ணியங்கள்" கிடைக்க செய்கிறார். 
தன்னையே தருவதில்லை.
தன் தரிசனத்தை தருவதில்லை.
கனவில் கூட திவ்ய காட்சி தருவதில்லை.

"உள்ளொன்று வைத்து, புறமொன்று பேசும்" போலி பக்தனையும் விட்டு விடுவதில்லை எம்பெருமான்.
தொடர்ந்து விடாமல் 'பஜனையும், ராம ஜபமும்' செய்யும் போது,
எம்பெருமான் கருணை கொண்டு, அவனிடம் தான் இருப்பதை காட்டி, ஒரு சமயத்தில் நிஜ பக்தனாகவே ஆக்கி விடுகிறார்.
தன் பக்தர்கள் கூட்டத்தில் சேர்த்து கொள்கிறார். 
ஆரம்ப நிலையில், போலி பக்தியே செய்தாலும், நாராயணனை வழிபட்டவர்கள் நாசமாவதில்லை.
இதை நாராயணனே ஊர்ஜிதப்படுத்துக்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த எம்பெருமான், அர்ஜுனனிடம்
"ந மே பக்த ப்ரநஸ்யதி" என்று சொல்லும் போது
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று தானே உத்திரவாதம் தருகிறார்.



பகவானே "நம்மை காப்பேன்" என்று சொன்ன பிறகு,
கிருஷ்ண பக்தனுக்கு என்ன கவலை இருக்க போகிறது? 

கவலையே இல்லாதவர்கள் கிருஷ்ண பக்தர்கள். 
காரணம், அவர்கள் கவலையை பரமாத்மா சுமக்கிறார்.

நம்முடைய பூஜைகளும், ஜபமும் போலியாக இருந்தாலும், எம்பெருமான் சத்தியம் என்பதால், தொடர்ந்து நாம் சத்சங்கத்தில் இருந்து கொண்டே இருந்தால்,
ஒரு நாள், பெருமாள் நம் மீது கருணை கொண்டு, அஞானத்தை அகற்றி, நம் போலி பக்தியை அகற்றி, உள்ளும் புறமும் 'நாராயணனே கதி' என்கிற திட நம்பிக்கையை ஏற்படுத்தி, நம்மையும் ஆட்கொண்டு விடுவார்.

போலி பக்தியாக இருந்தாலும், தொடர்ந்து செய்ய வேண்டும். எம்பெருமான் கருணை நம் மீது படும் போது, நம் பக்தியும் நிஜமாகும்.

நம் இதயத்துக்குள் உள்ள பகவான், நாம் செய்யும் நிஜ பக்தியை கண்டு "சபாஷ்" போடுவதை நாமும் உணரலாம்.

"இவன் உண்மையில் என்னை மட்டுமே நினைத்து 'சரணம் சரணம்..' என்று சொல்கிறானா? இல்லை, இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று என்று இருக்கிறானா?" 
என்று இதயத்தை பார்க்கிறார் எம்பெருமான்.

பெருமாள் "நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார்" என்பதால்,
கோவிலுக்கு சென்று நம் குறைகளை, நாம் சொல்லி தான், பெருமாளுக்கு தெரிய வேண்டும் என்கிற அவசியமில்லை என்று பெரியோர்கள் சொல்வார்கள்.

எம்பெருமான் நாமத்தை சொல்வதற்காக தான் நமக்கு "வாக்கு" கொடுக்கப்பட்டு உள்ளது.
பரமாத்மா இதயத்தோடு பேசுபவர்.

"இதயத்தில் ஒன்று, உதட்டில் ஒன்று" என்று பேசும் குணம்,
ஸ்வபாவமாக ஆண்களிடம் இருப்பதாலும், 
பெருமாளோ இதய ஓட்டத்தை கவனிப்பவர் என்பதாலும்,
கோவிலுக்கு செல்லும் ஆண்கள், தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு செல்வதை கடைப்பிடித்தனர்.
'உள்ளும் புறமும் ஒரே எண்ணம் உள்ள' ஆழ்வார்கள், நாயன்மார்கள், மகான்கள், ஞானிகள், சித்தர்கள், கோவிலில் சென்று பகவானை தரிசிக்கும் போது, தன் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டிக்கொண்டு வழிப்பட்டதற்கு காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

'இதய ஓட்டத்தை கவனிக்கும் பெருமான்', இவர்கள் பாடிய பிரபந்தங்களை, பாசுரங்களை, கவசங்களை ஏற்றார். தெய்வ கவிகள் ஆனார்கள். 
இன்று இவர்கள் பாடிய திவ்ய பாசுரங்களை பாடினாலும் நமக்கு பக்தி ஏற்படுகிறது.
"தன் பக்தியில் களங்கம் இல்லை. தான் சொல்லும் கோஷத்தில் பொய் இல்லை, இதயப்பூர்வமானது" 
"பகவான் நம் இதயத்தை பார்க்கட்டும்"
என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பொதுவாக ஆண்கள் இடுப்பில் அங்க வஸ்திரம் கட்டிக்கொண்டு பகவான் முன் சென்றனர்.
காலப்போக்கில், "ஆண்கள் சட்டை அணியாமல் கோவிலுக்கு வரவும்" என்று வழக்கமாக மாறியது.


சட்டை அணியாமல் வர சொல்வதின் நோக்கம், பரமாத்மா நம் இதய ஓட்டத்தை கவனிக்கிறார் என்பதால் தான்.
பெருமாளிடம் நம் மரியாதையை வெளிப்படுத்தவும் தான்.

"இதயத்தோடு பழகும் பகவானிடம் நம் போலி வார்த்தைகள் எடுபடாது" என்று உணர்வதற்கே.

ஹிந்துக்களின் எந்த ஒரு நியதியும், பக்தியை வளர்த்து, நம்மை பெருமாளிடம் சேர்ப்பதற்காக தான்.

பொதுவாக பெண்களால், உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது ஸ்வபாவமாக இருக்காது. 
பெண்கள் ஸ்வபாவத்திலேயே நளினமானவர்கள். 
அவர்கள் முகமே அவர்கள் எண்ண  ஓட்டத்தை காட்டிவிடும்.
அவர்களால் ரகசியத்தை தங்களுக்குள் பூட்டி வைக்கவும் இயலாது.




ஸ்வபாவத்திலேயே 'அன்புக்கும், அடைக்கலம் தருபவருக்கும்' வசமாகும் இயல்பு உடையவர்கள் பெண்கள்.
ஆண்களை போல கரடு முரடானவர்கள் அல்ல. போலீஸ் உடையில் இருந்தாலும், ஆண்களை போல விறைப்பாக நின்றாலும், பெண்களின் நளினத்தை மறைக்க முடியாது.
ஸ்வபாவத்திலேயே எளிதில் நம்பிவிடும் இயல்பு உடையவர்கள்.

"அன்பும் அடைக்கலமும் கொடுப்பான்" என்பதால் தானே, 20-25 வருடங்கள் வளர்த்த தாய், தந்தையை விட்டு, கணவனோடு செல்ல முடிகிறது ஒரு பெண்ணால்.
இது இந்திய பெண்களுக்கு மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஸ்வபாவயத்திலேயே உள்ள குணமாக இருக்கிறதே.

இதன் காரணமாக தான், பெண்களுக்கு "தெய்வ பக்தியும்" எளிதில் ஏற்கிறது.

"நாராயணனே மூல பொருள். நாராயணனே பரமாத்மா"
என்று சொல்வதால் பெண்கள் மயங்குவதில்லை.
"நாராயணன் அன்பு வடிவானவன், அடைக்கலம் தருபவன்"
என்று கேட்கும் போதே, பெண்களுக்கு இயற்கையாகவே "தெய்வ பக்தி" உண்டாகிறது.
நாராயணன் என்ற வார்த்தைக்கே "மனித (நர) சமூகத்திற்கு அடைக்கலம் தருபவன்" என்று பொருள்.

நம் பாரத நாட்டில், நம் வீட்டில் வாழ்ந்த, வாழும் பெண்களால் தானே தெய்வ பக்தி வளர்கிறது. 
அடுத்து வரும் தலைமுறைகளுக்கும் 'நாராயணனே கதி' என்று பக்தியை ஊட்டி வளர்க்கும் கடமையும், இன்றைய பெண்களுக்கு உள்ளது.. 
பெண்கள் செய்யும் பிரார்த்தனை இதய பூர்வமாக தான் இருக்கும்.
வெளியில் ஒன்று, இதயத்தில் ஒன்றாக இருக்காது.

பூக்களை "பெண்களுக்கு" உதாரணம் காட்டி,
வண்டை போன்ற குணம் உடையவன் "ஆண்" என்று கவிகள் சொல்வதுண்டு.


பொதுவாகவே, ஆண்கள்  ஆராய்ச்சி செய்து தான் நம்புவார்கள். எதையும் எளிதில் நம்பமாட்டார்கள்.
நம்பிவிட்டால் பூரண சரணாகதியும் செய்வார்கள்.
நாராயணனே "பரதெய்வம்" என்று வேதமே சொன்னாலும்.
அவர் தான் பிரம்மாவை படைத்தார்.
அவர் கருணா வடிவானவர் என்று சொன்னாலும்,
அவர் படைத்த ப்ரம்மாவின் மூலம் தான் உலகமே ஸ்ருஷ்டி செய்யப்பட்டது  என்று வேதமே சொன்னாலும்.
ப்ரம்மா நமக்கு பாட்டனார் (தாத்தா - பிதாமஹ) என்றும்,  .
நாராயணன் நம் பிதாமஹருக்கும் தந்தை (ப்ரபிதாமஹ) என்று "உறவு" காட்டி பேசினாலும்,
ஆண்கள், இதயபூர்வமாக அனுபவத்திலோ, ஆராய்ச்சியிலோ நிர்ணயம் ஆகாத வரை, சரணாகதி செய்ய மாட்டார்கள்.
இது ஆண்களின் குணம். கடின ஹ்ருதயம் உள்ளவர்கள் ஆண்கள்.

பெண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதை போல,
ஆண்களுக்கு எளிதில் தெய்வ பக்தி வருவதில்லை.
பக்தியில் "உருக்கம்" முக்கியம் என்று சொல்லப்படுகிறது.
"எம்பெருமானே கதி" என்று வாழ்ந்த ஆழ்வார்கள், மகான்கள் கூட, எம்பெருமான் புருஷன் என்றும், தன்னை ஒரு பெண்ணாக பாவித்தும், பாசுரங்கள் பாடியதை பார்க்கிறோம்.

ஆணாக இருந்தும், எம்பெருமானின் கருணையை நினைத்து கண்ணீர் விடுவதற்கு, தன்னை ஒரு பெண்ணாக பாவிக்கும் போது தான் ஆழ்வார்களுக்கே அந்த பக்தி இனித்தது என்றால், "பக்தி" பெண்களுக்கு சுலபமாக ஸித்திக்கிறது என்று தெரிகிறது.

இதன் காரணமாகவே,
இன்றைய பெண்கள் வேதத்தில் சொல்லாத, பொய் தெய்வங்களை கூட நம்பி விடுகிறார்கள்.
கற்பனையான தெய்வங்களை "இவர் கருணைமிக்கவர், உங்களுக்கு அடைக்கலம் தருபவர்" என்று சொல்லும் போது, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், பொய் மதங்களில் சேர்ந்து ஏமாற்றப்படுகின்றனர்.
பொய் மதத்தில், தெய்வம் என்று போற்றப்படும் குப்பனும், சுப்பனும் கூட, உலகை படைத்த நாராயணன் அனுகிரஹத்தின் மூலம் தான் சில காலம் வாழ்கிறார்கள். பலன் தருவது நாராயணனே.

இதன் காரணமாகவே,
உலகில் அனைவரிடமும் பழக வாய்ப்பு உள்ள இன்றைய கால பெண்கள், கொஞ்சம்  அன்பாகவும், பாதுகாப்பு உணர்வும் கொடுப்பது போல ஒருவனை நினைத்தாலேயே, ஸ்வபாவத்திலேயே நளினமான இதயம் கொண்ட இவர்கள், கண்டவனிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.
"சுயநலமே முக்கியம்" என்று, இதுநாள் வரை வளர்த்த தாய் தந்தையையும் மீறி விடுகிறார்கள்.

பெண்களுக்கு உள்ள நளின குணம், "தெய்வ பக்தி"க்கு உகந்ததாக உள்ளது.
ஆனால்,
சமுதாயத்தில் "வண்டை" போன்ற குணம் உடைய ஆண்களுடன், இவர்கள் பழகும் போது, ஏமாற்றம், கற்பழிப்பு, விவாகரத்து, என்று முடிந்து விடுகிறது.
பெற்றோரை எதிர்த்து யாரையோ நம்பி ஓடுவதால், பெற்றோர் தயவையும் இழந்து, பல பெண்கள், வாழ்க்கையை தொலைத்து, மறுமணம் செய்து கொண்டு, முந்திய கணவன், புது கணவன் என்று, பல ஆண்களுடன் உறவு கொண்ட பாவத்தை பெறுகிறார்கள்.




"பூவை" போன்ற பெண்களை, நளின குணம் கொண்ட பெண்களை, "வண்டை" போன்ற இதயம் கொண்ட  ஆண்களுடன் பழக விடும் சமுதாயத்தில், இது போன்ற நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கிறது.

கட்டவிழ்த்து விட்ட கிறிஸ்தவ சமுதாயத்தில் எத்தனை விவாகரத்துகள், மறுமணங்கள் நடக்கின்றன என்று கிறிஸ்தவ நாடுகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.
ஹிந்து மதத்தில், கிறிஸ்தவ கொள்கைகளான மறுமணம், விவாகரத்து அனுமதிக்கபட்டவுடன், இந்தியாவும் கலாசார சீரழிவை இன்று சந்திக்கிறது.
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விவாகரத்து, ஓடிப்போய் கல்யாணம் செய்தவர் என்று வெட்கக்கேடான நிலையில் இன்று இந்தியா உள்ளது.

ஹிந்து மதத்தை காக்க, ஹிந்து பெண்களுக்கு கலாச்சாரத்தை சொல்லி கொடுக்க வேண்டியது பெற்றோர் கடமை.
சுயநலத்தை விட, தாய் தந்தையை நம்ப வேண்டும் என்று சொல்லி வளர்க்க வேண்டும்.
"எத்தனை பெரிய கோடீஸ்வரன் ஆனாலும், எத்தனை பெரிய மன்மதனாக இருந்தாலும், எத்தனை அன்பு ஒழுக பேசினாலும்", சீதை, அருந்ததியை போன்ற பெண்கள் பிறந்த நாட்டில் பிறந்தவள் என்று இருக்க இன்றைய பெண்களுக்கு கற்று தர வேண்டும்.

ஆண் சமுதாயம், ஸ்வபாவத்தின் காரணமாக எதையும் உடனே நம்புவதில்லை.
அதனால் உலகில் பழகினாலும், யாரையும் உடனே நம்புவதில்லை.
ஆனால்,
வண்டை போன்ற குணம் உள்ளவனாக ஆண் இருப்பதால்,  ஒரு பூவில் அமர்ந்து தேன் குடித்து விட்டு, மற்றொரு பூ கிடைத்தால் தாவி விடும் குணம் உடையவன்.
எளிதில் நம்பிவிட மாட்டான் என்பதால் ஆண்கள் உலகில் பழக ஏற்றவன் என்றாலும், இவனின் மற்றொரு குணம் பெண்களுக்கு ஆபத்தானது.
இது பொதுவாக ஆண்களின் குணம் என்பதால் தான், ஆண்களுக்கு மனதை கட்டுப்படுத்த யோகா, பிராணாயாமம், தவம், போன்ற மன அடக்க பயிற்சிகள் சொல்லி தரப்பட்டன.

இன்றோ, எந்த ஆணுக்கும் யோக பயிற்சியோ, ப்ராணாயாமமோ செய்ய தெரியாது.
மனதை அடக்கும் வழியை அடைத்து, இன்று மாமிசம் உண்டு, சிகரேட் புகைத்து, குடித்து மனதின் வேகத்தை இன்னும் வேகப்படுத்தி கொண்டு போகிறது ஆண் சமூகம்.
உலகில் பலருடன் பழக வேண்டிய பெண்கள், தங்களை  காத்து கொள்ள, நம் பாரத நாட்டில் பிறந்த கற்புக்கரசிகளின் வாழ்க்கையை தினமும் ஸ்மரிக்க வேண்டும்.


"என்னை திருமணம் செய்து கொள்! என்னிடம் இல்லாத ஐஸ்வர்யம் உலகில் எவனிடத்திலும் இல்லை. 
யமன் என் அனுமதி இல்லாமல் உள்ளே வர முடியாது. மண்டோதரியை கூட விட்டு, உன்னை பட்டமகிஷி ஆக்கிவிடுகிறேன். 
உனக்காக நான் எதையும் செய்ய காத்து இருக்கிறேன்.
காட்டில் பரதேசியாக அலையும் ஸ்ரீ ராமனை விடு. அவன் இலங்கை வரை வந்து உன்னை காப்பாற்ற போவதே இல்லை. 
கைலாயத்தையே தூக்கிய என் பலத்தை கண்டு உலகமே அஞ்சும். அப்படிப்பட்ட நான் உனக்கு அடிமையாக இருக்கிறேன்.  
உன்னை தேவர்களும் வழிபட செய்கிறேன். 
என்னை மனம் செய்து கொள்"
என்று என்னென்னவோ பேசியும், ஆசை வார்த்தைக்கு மயங்க மாட்டேன் என்று ஒரு புல்லை எடுத்து அவன் முன்னால் தூக்கி போட்டாள் சீதை. 
இந்த கற்புக்கரசிகளான சீதையை போல, பெண்கள் நெருப்பாக இருந்தால், இந்த உலகில் மானத்தோடு வாழலாம்.
பெற்றோர் சொல்லும் பையனை மணந்து வாழ்ந்தால் போதும் என்று நினைக்காத பெண்கள் எதிர்காலம், கேள்விக்குறியாகவும் போகலாம்.

பக்திக்கு உதவும் பெண்ணின் நளின உள்ளம், உலகில் ஆபத்தை கொடுப்பதால், பெண்கள் ஆண்களுடன் பேசுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.   

வயது வந்த பின், தன்  சகோதரனை கூட தொட்டு பேச அனுமதிக்காத பாரத பூமியில் பிறந்தும், வேலை பார்க்கும் இடத்தில், படிக்கும் கல்லூரியில், ஆண்களை தொட்டு கொண்டு பேசும் பெண்கள், தானே அவமானத்தை தேடி கொள்கிறார்கள்.
இந்த கலாச்சாரம் (மறுமணம், விவாகரத்து) இந்தியாவுக்குள் நுழைந்ததே 1947ல் அமைந்த காங்கிரஸ் அமைப்பால் தான்.
அன்று இருந்த தேச தலைவர்களில் 'நேரு' உட்பட ஆங்கில மொழியில் படித்து, ஆங்கில மோகம் கொண்டவர்கள்.
இவர்கள் கல்வியுடன், மேற்க்கத்திய கலாச்சராமான மறுமணம், விவாகரத்து போன்ற கொள்கைகளை கொண்டு வந்தனர்.
70 ஆண்டுகளில், ஒரு மாதம் கூட வாழாத கணவனும் மனைவியும் விவாகரத்து கேட்டு பிரிந்து வாழ, சட்டத்தில் ஏற்பட்டு செய்து, இந்திய கலாச்சாரத்தை கெடுத்தனர்.

விவாகரத்து, மறுமணம் இது போன்ற சட்டங்களால், பெண்களிடம் பொறுமை அழிந்து விட்டது.

பொறுமை இல்லாத பெண், தானும் கெட்டு, குடும்பத்தையும் கலாசார சீரழிவுக்கு இழுத்து செல்கிறாள்.

சுதந்திரம் கொடுக்கப்பட்டதால், ஆன்மீகமும், பக்தியும் எளிதில் கைகூடும் பெண்கள், கோவில் பக்கமோ, நல்ல விஷயங்களை கேட்பதோ, பஜனைகளில் கலந்து கொள்வதோ கிடையாது.

யாராவது அன்பாக பேசினால், உனக்காக உயிரையும் கொடுப்பேன், உன் தாய் தந்தையையும் சேர்த்து காப்பாற்றுவேன் என்று சொன்னால், "இவனோடு வாழ்வோம்" என்று ஸ்வபாவத்தில் இதற்காக ஏங்கும் குணம் உடைய பெண்கள், பல ஆண்களால் ஏமாற்றப்படுகிறார்கள்.

பெண்கள், கற்புக்கரசிகளான பெண்களின்  சரித்திர படி வாழ ஆசைப்பட வேண்டும்.
பெண்கள், அனாவசியமாக ஆணிடம் சகஜமாக பேசுவது, அரட்டை அடிப்பதை, தொட்டு பேசுவதை தவிர்க்க வேண்டும்.

ஆண் சொக்க தங்கமாக இருந்தாலும், பேரழகனாக இருந்தாலும், துச்சமென நினைக்க வேண்டும் பெண்கள்.

உலகத்தில் பழகுவதால், பெண்கள் ஜாக்கிரதையாக தான் இருக்க வேண்டும்.

Hare Rama, Hare Krishna Bhajan

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka