Followers

Search Here...

Thursday 20 June 2019

இன்பத்தை தரும் கடவுள், எதற்காக துன்பங்களையும் தருகிறார்? ஒரு அலசல்...

திருநாங்கூரிலிருந்து கிழக்கே 2km தொலைவில் அமைந்துள்ளது - "திருமணிக்கூடம்" என்ற திவ்ய தேசம்.
திருநாங்கூரில் உள்ள 11 திருப்பதிகளுள், இக்கோயிலும் ஒன்று.


இங்கு நாம் அனைவரும்  தரிசிப்பதற்காக வீற்றிருக்கிறார் "கஜேந்திரவரதன்" என்ற "வரதராஜ பெருமாள்".

இந்த பெருமாளை பார்த்து, திருமங்கையாழ்வார்,
பாவமும், அறமும், வீடும்,
இன்பமும், துன்பந் தானும்,
கோவமும், அருளும்,
அல்லாக் குணங்களுமாய எந்தை,
மூவரில், எங்கள் மூர்த்தி இவன் என
முனிவரோடு, தேவரும் வந்து இறைஞ்சும்
நாங்கூர்த் திருமணிக்கூடத்தனே
---- என்று மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.
(பெரிய திருமொழியில் இந்த பாசுரம் உள்ளது)

இங்கு "மூவர்" என்று சொல்லுமிடத்தில் 'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மும் மூர்த்திகளையும் குறிப்பிட்டு,
அந்த மூவரில் நடுநாயகனாக (prime hero) இருக்கும் விஷ்ணுவே, இங்கு திருமணிக்கூடத்தில் வரதராஜனாக இருக்கிறார் என்பதால்,
தன்னை போன்ற அடியார்களும், முனிவர்களும், தேவர்களும் வந்து வந்து  சேவிக்கிறார்கள் என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மேலும், வரதராஜ பெருமாளை பார்த்து
"எல்லா குணங்களுமாக பெருமாளே இருக்கிறார்"
என்று திருமங்கையாழ்வார் சொல்வதை, ஆழ்ந்து கவனிக்கும் போது தான், அவர் பக்தன் மட்டுமில்லாது, வைராக்கியம் உள்ள ஞானி என்றும் தெரிகிறது.
அற்புதமான பிரபந்தம் இது.
புரிந்து கொள்வதும் எளிது.
இது போன்ற பாசுரங்கள் மனப்பாடம் செய்யவும் எளிதானது. தமிழும் வாழும்.

நாமும் திருமணிக்கூடம் செல்லும் பாக்கியம் பெற்றால், பெருமாள் முன் சென்று நிற்கும் போது, என்ன சொல்வதென்றே தெரியாமல்!! இருப்பதற்கு பதில்,  திருமங்கையாழ்வார் பாடிய, இந்த பிரபந்தத்தை நாமும் சொல்லி சேவிக்கலாம்.


ஆழ்வார் பாடிய பாடலை நாமும் சொல்லும் போது, 
நம்மை கண்டு பெருமாளும் சந்தோஷப்படுவார். 
நமக்கும் ஞானத்தை தருவார். 
சகல பாக்கியங்களும் கிடைக்க, நமக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்.

வரதராஜனை பார்த்து, திருமங்கையாழ்வார்
"நமக்கு ஏற்படும் பாவமும், அறமும், வீடும் (மோக்ஷமும்), இன்பமும், துன்பமும்,
கோபமும், அருளும், மற்றும் அனைத்து குணங்களும் வரதராஜனே" என்று ஆச்சர்யமாக பாடுகிறார்.

"புண்ணியமும் நீயே, வீடும் நீயே,
அருளும் நீயே, இன்பமும் நீயே"
என்று பகவானை பார்த்து சொன்னால் ஒரு நியாயம் தெரிகிறது....
"பகவான் நமக்கு நல்ல குணங்களை கொடுக்கிறார்" என்று சொன்னால், அதில் ஒரு நியாயம் உள்ளது...

அது என்ன?
திருமங்கையாழ்வார் துணிந்து "பாவமும் நீயே, துன்பமும் நீயே"  என்று சொல்லிவிட்டார்?
அது மட்டுமா!!
"எல்லாக் குணங்களும் நீயே" என்று 'அனைத்து குணங்களுக்கும் காரணம் வரதராஜனே' என்று சொல்லிவிட்டாரே?

பாவ செயல்களை, நம் புத்தியை கொண்டு தான் செய்கிறோம்.
செய்த தவறான செயல்களுக்கு (கர்மா) பலனாக, துன்பம் நமக்கு கிடைக்கிறது.
இப்படி இருக்க,
நாம் செய்யும் பாவத்தையும், அனுபவிக்கும் துன்பத்தையும் கூட பகவான் செயல் என்று சொல்லிவிட்டாரே..திருமங்கையாழ்வார்??

அது எப்படி நியாயம் ஆகும்? என்று நமக்கு தோன்றலாம்.

"பாவமும் பகவான் கொடுத்தது தான்" என்று திருமங்கையாழ்வார் சொல்வது, துரியோதனன் ஒரு சமயத்தில் சொன்னது போல இருக்கிறதே? என்று கூட நமக்கு தோன்றலாம்.
மகாபாரத சமயத்தில், பெரிய போர் சம்பவித்து விடும் என்ற நிலையில்,
துரியோதனனை பார்க்க ஸ்ரீ கிருஷ்ணர் பாண்டவர்களுக்காக தூது வந்தார்.

சபையில் இருந்த அனைவரும், துரியோதனனை பார்த்து,
"துரியோதனா... வந்திருப்பது பரமாத்மா..
ஸ்ரீ கிருஷ்ணர் சொல்வதை கேள்" என்று புத்திமதி சொல்லியும்,
"குறைந்த பட்சம் 5 கிராமமாவது தானமாக பாண்டவர்களுக்கு கொடு. போர் ஏற்படாமல் தடுத்து விடலாம்"
என்று ஸ்ரீ கிருஷ்ணரே கேட்டும் கூட,
"ஒரு குண்டூசி குத்தும் இடம் கூட பாண்டவர்களுக்கு தர மாட்டேன்.
'பாண்டவர்களுக்கு கொடுக்க கூடாது' என்று இந்த புத்தியை கொடுத்ததும் உங்கள் பரமாத்மா கிருஷ்ணன் தான்"
என்று பதிலுக்கு சாமர்த்தியமாக பேசி, முடிவாக மறுத்தான் துரியோதனன்.


திருமங்கையாழ்வார் "பாவமும் இறைவனே" என்று சொன்னது போலவே,
துரியோதனன் 'தான் செய்யும் பாவ காரியத்துக்கு காரணம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் தான்" என்று சாமர்த்தியமாக சொல்ல,
"இவன் உண்மையில் ஞானியாக பேசுகிறானா? இல்லை திமிர் பிடித்து பேசுகிறானா?"
என்று அங்கிருந்த ரிஷிகளே திகைத்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்து கொண்டே, "போரில் சந்திக்கலாம்" என்று சபையை விட்டு கிளம்பினார்.

துரியோதனன் "பாண்டவர்களுக்கு கொடுக்க முடியாது" என்று 'சுயமாக' முடிவு செய்து விட்டு,
தான் தெரிந்தே செய்யும் பாவ செயலுக்கு, "இறைவன் பெயரால்" என்று தனக்கு சாதகமாக பேசி,
அங்கு இருந்த அனைவரையும் எதிர்க்கவும் முடியாமல் செய்தான்.

"எல்லாம் ஈசன் செயல்" என்று ஞானிகள், மகாத்மாக்கள் சொல்லும் வார்த்தையை,
துரியோதனன் போன்ற துர்புத்தி உள்ளவர்கள், தாங்கள் செய்யும் பாப செயல்களுக்கு மட்டும் "எல்லாம் ஈசன் செயல்" என்று சாமர்த்தியமாக பேசி ஏமாற்றுவார்கள்.
"இறைவன் பெயரால்' என்று சொல்லிக்கொண்டு, தான் செய்யும் பாவ செயல்களுக்கு இறைவனை இழுக்கும், துரியோதனனை போன்றவர்கள்  எப்பொழுதுமே உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்கள் துரியோதனன் போலவே அழிவார்கள்.

"இறைவன் பெயரால்" என்று சொல்லி, துரியோதனன் போன்ற செயல்கள் செய்பவர்களின்  சுற்றத்தை முதலில் அடியோடு அழித்து,
கடைசியில் "இறைவன் பெயரால்" என்று சொல்லி பாவ காரியங்கள் செய்பவனையும், "தெய்வமே அழிக்கும்" என்பது தான் துரியோதனன் வாழ்வில் நடந்த உண்மை.

ஆழ்வார் சொன்ன படி "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்". இது உண்மைதான்.

ஆனால் இதை உண்மையான ஞானிகள் சொன்னால், 'அதில் உண்மை இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.
அதே சமயத்தில்,
துரியோதனன் போன்ற மூடர்கள், அசுர கூட்டம் சொல்லும் போது, 'அதில் சுயநலம் இருக்கிறது' என்பது நமக்கு கூட புரியும்.

ஞானிகள் "பாவமும் ஈசன் செயல் தான், புண்ணியமும் ஈசன் செயல் தான்" என்று வாழ்வில் நிரூபித்து காட்டுகிறார்கள்.

ஜடபரதர் என்ற யோகியை, உட்காரவைத்து சந்தனம் இட்டு, புதிதாக துணிகள் கொடுத்து
, அவருக்கு கட்டி விட்டு, மாலைகள் போட்டு, ராஜா உபசாரம் செய்து பூஜை செய்தார்கள்.
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் சுகத்தை ஏற்றுக்கொண்டார்.
அலங்காரம் முடிந்ததும்,
ஜடபரதரை கூட்டி கொண்டு போய், பலிபீடத்துக்கு அருகில் நிறுத்தி, பெரிய வாளுடன் ஆவேசம் வந்தது போல, ஒருவன் ஓடி வந்து இவரை வெட்ட வர, 
ஜடபரதர் அப்பொழுதும்
"எல்லாம் பகவான் செயல்" என்று வரும் ஆபத்தையும் ஏற்றுக்கொண்டார்.





"வாளும். எம்பெருமான் தான்,
வெட்ட வருபவனும். எம்பெருமான் தான்,
தன் கழுத்தில் போட்ட பூ மாலையும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்பட்ட சுகமும். எம்பெருமான் தான்,
தனக்கு ஏற்படும் துக்கமும். எம்பெருமான் தான்"
ன்று இருந்தார் ஜடபரதர்.
ஜடபரதர் தன்னை கொல்ல வருபவனையும் தடுக்கவில்லை.
ஆனால், தெய்வம் சும்மா இருக்குமா?
ஒரு ஞானியை "காளியின் பெயரால்" என்று சொல்லிக்கொண்டு, கொலை செய்ய வந்தவர்களை பார்த்து காளி தேவி கோபம் கொண்டாள்.
மகாகாளி மகா கோபம் கொண்டு, தன் பெயரால் நடக்கும் இந்த காரியத்தை பொறுக்க முடியாமல் ப்ரத்யக்ஷமாகி, அங்கு இருந்த அனைவரையும் வெட்டி சாய்த்தாள்.

ஜடபரதர் போன்ற ஞான வைராக்ய நிலையில் உள்ளவர்கள், திருமங்கையாழ்வார் பாடிய இந்த பிரபந்தத்தை பாடினால், அவர்களுக்கு தான் இதன் பூரணமான அர்த்தம் புரியும்.

துரியோதனன் போன்றவர்கள், சூதாடி ஏமாற்றி பாண்டவர்களின் சொத்தை பிடுங்கிய போது, "இது என் சாமர்த்தியம்" என்று சொல்லிக்கொண்டான்.

தனக்கு சாதகமான விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் "தன் முயற்சி, தன் செயல், தன் சாமர்த்தியம்" என்று சொல்லி,
தனக்கு விபரீதமான விஷயங்கள் நடக்கும் போது மட்டும், இறைவன் மீது பழி போட்டான் துரியோதனன்.

துரியோதனன் போன்றவர்கள் அவனை போலவே அழிவார்கள்.

"பாண்டவர் சொத்தை திருப்பி கொடு" என்று கேட்ட பொழுது, 'கொடுக்க முடியாது' என்று தானே சுயமாக முடிவு செய்து விட்டு,
"நான் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஈசன் ஆசைப்படுகிறார்" என்று அப்பொழுது மட்டும் "ஈசன் செயல்" என்று சொல்லி, ஏமாற்றினான் துரியோதனன்.

துரியோதனனை போன்று பேசுபவர்கள், தன் சக மனிதர்களை வேண்டுமானால் ஏமாற்றி விடலாம்.
ஆனால், தெய்வம் மன்னிக்காது. 

ஜடபரதர், ஆழ்வார் போன்ற ஞானிகள் "தன் வாழ்வில் சம்பவிக்கும் இன்பத்தையும், துன்பத்தையும் பகவான் இஷ்டம்" என்று சொல்லும் போது, அவர்களின் ஞான நிலையை கண்டு, பகவான் அவர்களுக்கு கருணை செய்கிறார். மோக்ஷத்தையே கொடுக்கிறார்.

இன்பத்தை தரும் பகவான், அதே சமயம் எதற்காக துன்பங்களையும் தருகிறார்?
பூலோகத்தில் இன்பம் மட்டுமே இருக்க செய்தால், இங்கு இருக்கும் ஒரு ஜீவனுக்கு கூட, மோக்ஷம் அடைய வேண்டும் என்ற எண்ணமே எழாது.

ஜீவன் உலகில் உடல் எடுத்து பிறப்பதே, மோக்ஷம் அடைய வேண்டும் என்பதற்காக தான்.
நாம் ஜீவ ஆத்மா, அவர் பரம் ஆத்மா. நம் இருவருக்கும் உறவு உண்டு.
"ஓம்" என்ற பிரணவமே - 'ஜீவனுக்கும், பரமாத்மா வாசுதேவனுக்கும் உள்ள இந்த உறவை தான்' நமக்கு உணர்த்துகிறது..
புரிந்து கொள்ள கிளிக் செய்யுங்கள்.


ஜீவாத்மாவாகிய நாம் செய்யும் காரியங்களை,
'மனசாட்சி' என்ற பெயரிலும்
'அந்தர்யாமி' என்ற பெயரிலும்,
உள்ளிருந்து 'பரமாத்மா வாசுதேவன்' பார்த்து கொண்டே இருக்கிறார்.

தவறான காரியங்கள் ஜீவன் செய்யும் போதெல்லாம்,
கூடவே இருக்கும் பரமாத்மா 'தவறு செய்யாதே' என்று சொல்லவும் செய்கிறார்.

பரமாத்மா வாசுதேவன், உலகத்தில் இன்பம் மட்டுமே கிடைக்கும் படியாக செய்து இருந்தால், ஜீவாத்மாவாகிய நாம், பரமாத்மாவாகிய நாராயணனை அடைய வழி என்ன? என்று யோசித்து கூட இருக்க மாட்டோம்.

பல வித விதமான துன்பத்தை நமக்கு கொடுத்து,
ஜீவனாகிய நம்மை, உலக ஆசைகளில் இருந்து நாமாகவே விரும்பி,
சிறிது சிறிதாக விலகும் படியாக செய்து,
மெதுவாக நம்மை பகவான் நாராயணன் பக்கம் திருப்பி,
பக்தி அனுபவத்தை கொடுத்து, பரமாத்மாவை உணரும் ஆனந்தம் என்ற அனுபவத்தை கொடுத்து,
கடைசியில் மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார்.

"மோக்ஷம் அடைய வேண்டும் என்ற ஆசை" நமக்கு ஏற்பட, துன்பங்களையும் நமக்கு கொடுக்கிறார் பகவான்.

இத்தனை துன்பங்கள் உலகில் இருந்தும் கூட,
பல கோடி மக்கள், இன்னும் கோவிலுக்கு சென்று பெருமாளை சரண் அடைய வேண்டும் என்று நினைக்கவில்லை,
பெருமாளிடம் பக்தி செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை,
என்று பார்க்கிறோம்.

துன்பமே இல்லாமல் இந்த உலகை பகவான் படைத்து இருந்தால்?!! ஒருத்தன் கூட மோக்ஷத்தை பற்றியோ,
பகவானை பற்றிய எண்ணமோ,
பகவானிடம் பக்தியையோ செய்து இருக்க மாட்டான்.

நம்மை சுகமாகவே வாழ செய்தால்,
"உலகமே லட்சியம்" என்று வாழ்ந்து, 
இறைவனை நினைக்க மறந்து விடுவோம் என்பதால் தான்,
உலக துன்பங்களை பார்த்து பார்த்து, ஒரு சமயத்தில் நாமே விருப்பப்பட்டு விலக,
நம் கவனம் ஒரு சமயத்தில் பகவான் பக்கம் திரும்ப,
பகவான் அவ்வப்போது, நமக்கு துன்பமும் கொடுக்கிறார்.

ஆதலால் தான், "எல்லா குணங்களும் (இன்பமும், துன்பமும், பாவமும்) பகவான் கொடுத்தது தான்" 
என்று திருமங்கையாழ்வார் சொல்கிறார்.

தனக்கு வரும்
சுகத்தையும், துன்பத்தையும்,
லாபத்தையும், நஷ்டத்தையும்,
பாராட்டையும், இகழ்ச்சியையும்,
ஜனனத்தையும், மரணத்தையும்,
வெற்றியையும், தோல்வியையும்,
ஆரோக்கியத்தையும், நோயையும்,
இளமையையும், முதுமையையும்
"பகவான் செயல்" என்று பார்க்க தெரிந்தவன்,
மோக்ஷத்திற்கு தயாராகிறான்.
"இறைவன் செயல்" என்று இருக்கும் ஞானிகள், ஒரு வெளி மனிதனை போல வேடிக்கை பார்ப்பதால், இந்த குணங்கள் இவர்களை அசைக்க கூட முடிவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் டக்கும், எந்த 'துக்க நிலையிலும்' துவண்டு போவதில்லை.
ஞானிகள் தங்கள் வாழ்வில் கிடைக்கும், எந்த 'சுகபோக நிலையிலும்' கர்வமும் கொள்வதில்லை.
சுகத்திலும், துன்பத்திலும் இறைவனை மறப்பதும் இல்லை. மறுப்பதும் இல்லை.
மறு பிறவி எடுக்க அவசியமில்லாத நிலையை பெறுகிறார்கள்.

'பாவமும் புண்ணியமும் பகவான் செயல்' என்று தன்னை பற்றிய சுய தம்பட்டம் இல்லாத ஒருவனின் வாழ்வில் சம்பவிக்கும்
பாவ செயலால் ஏற்படும் பாவ மூட்டையையும்,
புண்ணியத்தால் ஏற்படும் புண்ணிய மூட்டையையும்
பகவான் எடுத்து கொண்டு,
பாவமும் செய்யவில்லை, புண்ணியமும் செய்யவில்லை என்று ஆக்கி, வைகுண்டத்தில் இடம் தந்து விடுகிறார்.

"குணங்களுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தை" நம்மை போன்றவர்களும் புரிந்து கொள்ள,
சமுத்திரத்தை (கடல்) உதாரணமாக காட்டி, புரிய வைப்பார்கள் பெரியோர்கள்.
கடற்ரைக்கு, நாம் சென்று பார்க்கும் போது,
வித விதமான அளவுகளில்,
திடீரென்று பெரிய அலையும்,
திடீரென்று சிறிய அலையும்,
மாறி மாறி, ஓயாமல் எழும்பி எழும்பி மறைந்து கொண்டே இருக்கிறது.

"கடல் அலைகள் போன்றது தான், நம் குணங்களும்"
என்று ஜடபரதர், திருமங்கை ஆழ்வார் போன்ற ஞானிகள் அறிந்து கொள்கிறார்கள்.
இதன் காரணத்தால் தான், திருமங்கையாழ்வார், "எல்லா குணங்களுக்கும் காரணம் நாராயணனே" என்று பாடுகிறார் என்று பார்க்கிறோம்.
திடீரென்று நமக்குள் ஏற்படும் பெரிய கோப அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் துக்க அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பாவ அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் தான அலையும்,
திடீரென்று நமக்குள் ஏற்படும் கொஞ்சம் பக்தி அலையும்,
மாறி மாறி நம்மிடம் தோன்றி தோன்றி மறைகிறது என்று அறிகிறார்கள்.

கடற்கரையில், அலைகள் ஏற்படுவதற்கு ஆதாரமாக இருப்பது எது?
அலைகளை தாண்டி கவனித்தால், அமைதியான கடல் இருப்பது தெரிகிறது.
'கடல் இருப்பதால், அலைகள் தோன்றுகிறது' என்று கவனிக்கும் போது, அனைத்து விதமான அலைகளும் ஏற்படுவதற்கு காரணம் அதற்கு ஆதாரமாக இருக்கும் "கடலே" என்று தெரிகிறது.
கடல் "அலைகளை," நம் "குணங்களுடன்" உதாரணமாக காட்டி,
அலைகள் ஏற்படுவதற்கு காரணம் "கடல்" என்று காட்டி புரிய வைப்பது போல,
நம்மிடம் பல வித குணங்கள் ஏற்படுவதற்கு காரணம், "ஜீவன்" இருப்பதால் தான், என்று புரிய வைக்கிறார்கள் பெரியோர்கள்.

நம் உடம்பில் உள்ள "ஜீவாத்மாவாகிய நாம்", நம் கூடவே அந்தர்யாமியாக (மனசாட்சியாக) இருக்கும் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன் என்று உணர்த்தி,
எப்படி கடல் அலைகளுக்கு ஆதாரமாக கடல் இருக்கிறதோ,
அதுபோல,
நம்மிடம் உருவாகும் அனைத்து குணங்களுக்கும், நமக்கும் ஆதாரமாக, "பரமாத்மா நாராயணனே" இருக்கிறார் என்பதால்,
உள்ளும் புறமும் எங்கும் உள்ள அந்த பரமாத்மாவே, நம் கண்ணுக்கு எதிரில், வெளியிலும் "திருமணிக்கூடம் வரதராஜ பெருமாளாக வீற்றிருக்கிறார்" என்று பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.

தமிழ் வளர,
ஆழ்வார்கள் பாடிய 4000 பிரபந்தங்களும், நாயன்மார்கள் பாடிய பதிகங்களுமே போதும்.

இதை நாம் தெரிந்து, புரிந்து கொள்ள, ஆர்வம் காட்டினாலேயே,
"தமில் தமில்..." என்று பேசி தமிழை அழித்து விடாமல், 
உண்மையிலேயே தமிழை வளர்க்கலாம்.

தமிழை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமில்லாமல், அதனோடு நம் இறை உணர்வையும் வளர்த்து கொள்ளலாம்.

போலி தமிழர்களையும்,
"பலம்" என்ற தமிழ் சொல்லை கூட "பெலம்" என்று உளரும் திருடர்களையும் தமிழகத்தில் இருந்து விரட்ட வேண்டும்.

ஹிந்துவாக பிறந்தால், ஹிந்துவாக வாழ்ந்தால் எத்தனை அருமை!! என்று இது போன்ற ஆன்மீக விளக்கங்கள், நம் தெய்வங்களின் மகத்துவங்கள் தெரிந்து கொண்டால் தான் புரியும்.

நம்முடைய ஆயுசை, பகவத் கீதை படிக்காமல், திவ்ய பிரபந்தங்கள் படித்து புரிந்து கொள்ளாமல் வீண் செய்து விட கூடாது.
இத்தனை வருஷம் வீண் செய்தோமே!! என்று வயதான பிறகு தோன்றி பிரயோஜனமில்லை.

அதிக பட்சம் நமக்கு கொடுக்கப்பட்ட ஆயுசு 100 தான்.
அதில் நமக்கு எத்தனை குறைவோ நமக்கு தெரியாது.
அதில் இப்பொழுதே இத்தனை வருடங்கள் வீண் செய்தோமே!! என்று ஒவ்வொரு ஹிந்துவும் நினைக்க வேண்டும்.

நம்மிடம் இல்லாத விஷயங்களா, போலி மதங்களிடம் உள்ளது?
இந்த ஒரு பாசுரத்துக்கு ஈடாகுமா, பிற மதங்கள்?

ஹிந்துவாக பிறந்ததில் கர்வம் கொண்டு, அனைவரையும் ஹிந்துவாக ஆக்க வேண்டும்.
பிற மதத்தில் விழுந்து விட்ட அனைவரையும் திவ்ய பிரபந்தம், பகவத் கீதை படிக்க வைத்து ஹிந்துவாக வாழ வைக்க வேண்டும்.


வாழ்க ஆழ்வார்கள்,
வாழ்க நாயன்மார்கள்..
வாழ்க இறை உணர்ச்சி..
வாழ்க ஹிந்து தர்மம்..
வாழ்க தமிழ்.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (with meaning)

Sandhya Vandanam - Morning (with meaning)



Sandhya Vandanam - Evening (with meaning)




Monday 17 June 2019

விரதம் எதற்காக? உடல் ஆரோக்கியம் பெற, ஆயுள் வளர, இறை உணர்வும் வளர, நமக்கு கிடைத்த எளிதான வழி.. கடைபிடிப்போமே !!

90% வியாதிகள் பொதுவாக வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது...

வயிற்றை நன்றாக வைத்து கொண்டாலே நீண்ட காலம் ஆரோக்கியம் குறையாமல் வாழலாம்.

நம் பாரத நாட்டில் வயிற்றை ஆரோக்கியமாக வைத்து கொண்டிருந்த வரை, கொடுமையான தீராத நோய்கள் இல்லாமல், நீண்ட நாள் சாதாரணமாக வாழ்ந்தனர்..

வயிற்றை ஓய்வெடுக்க விடாமல், 24 மணி நேரமும் நிரப்பி, வயிற்றை நாசமாக்கி, குடல் கோளாறு, கேன்சர் என்று உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம்..
ஹிந்துக்கள் விழித்து கொள்ள வேண்டும். நம் பெருமையை அறிய வேண்டும்.


நோயற்ற வாழ்வுக்கு நம் பாரதமக்கள் கடைபிடித்த வழியை பின்பற்றுவோமே...

உடல் ஆரோக்கியம் பெற,
ஆயுள் வளர,
இறை உணர்வும் வளர,
நமக்கு கிடைத்த எளிதான வழியை கடைபிடிப்போமே

உடல் ஆரோக்கியத்தை அடைவதற்கு, விரதம் நமக்கு பயன் தருகிறது.
சில குறிப்பிட்ட நாட்களில், தெய்வ சிந்தனையோடு விரதத்தை செய்யும் போது, தெய்வ அணுகிரஹமும் சேருகிறது.

விரதங்களில் மிகவும் உன்னதமானது "ஏகாதேசி".
இது மாதத்தில் இரண்டு நாட்களில் வரும்.


ஏகாதேசி விரதத்தை, குழந்தை வயதிலிருந்து கடைசி காலம் வரை கடைபிடிப்பவர்களை, நோய்கள் நெருங்க பயப்படும்.

ஏகாதசி விரதத்தை மேற்கொள்ள இருப்பவர்கள்,
ஏகாதசிக்கு முதல் நாளான தசமியன்று பகலில் ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடவேண்டும்.
தசமியில், இரவு உணவை தவிர்க்க வேண்டும்.
ஏகாதசி அன்று முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும்.

மாதத்தில் இரண்டு தினங்களில் ஏகாதேசி வருகிறது.

விரதம் இருந்தால், நமக்கு "கேன்சர் போன்ற உயிர்கொள்ளும் நோய்கள் கூட வராது" என்று ஆராய்ச்சி செய்து ஜப்பான்காரர் இன்று சொல்லி, நோபல் பரிசு கூட வாங்கி விட்டார்.

* ஏகாதசி அன்று அதிகாலையிலேயே குளித்து விட்டு, பூஜை செய்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

* ஏகாதசி திதி முழுவதும், முடிந்தவரை பூரண உபவாசம் (பட்டினியாக) இருக்கவேண்டும். 
முடியாத பட்சத்தில்,
குளிர்ந்த நீரை குடிக்கலாம்.
ஏழுமுறை துளசி இலையை சாப்பிடலாம்.

உடலுக்கு வெப்பம் கிடைக்க துளசியை சாப்பிடலாம்.
பூரண பட்டினி கிடப்பதினால், ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வுகிடைக்கிறது. 





குளிர்ந்த நீர் வயிறை சுத்தமாக்குகிறது.
அப்படி முழுவதும் பட்டினியாக இருக்க முடியாதவர்கள்,
காய்கனிகள்,பழங்கள், பால், தயிர் போன்றவற்றை பெருமாளுக்கு காண்பித்து உண்ணலாம்.

* ஏகாதசி அன்று பகல் தூக்கம் கூடாது. 
* இரவு முழுவதும் கண்விழித்து புராண நூல்களை படிப்பதும், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு பாடல்கள் முதலியவற்றை ஓதுவதுமாக பொழுதுபோக்க வேண்டும். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பஜனை செய்து கண் விழிக்கலாம். 
கண் விழிக்கிறோம் என்ற பெயரில் சினிமா, டிவி பார்க்க கூடாது.

* ஏகாதசிக்கு அடுத்த நாள் துவாதசி வருகிறது. 
துவாதசி அன்று அதி காலையில் உணவு அருந்துவதை 'பாரணை' என அழைக்கிறோம்.
துவாதசியன்று அதி காலையில் நெல்லிக்கனி, சுண்டைக்காய், அகத்தி கீரை இவைகளை உணவாக சேர்த்து
கோவிந்தா! கோவிந்தா!, கோவிந்தா... என மூன்று முறை கூறி, சாப்பிட்டு விரதத்தை முடிக்கவேண்டும்.

அகத்தி கீரை பொரியல், நெல்லிக்காய் பச்சடி, வறுத்த சுண்டைக்காய் சாம்பார் ஆகியவை முக்கியமானவை. 
'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' கட்டாயம் சேர்த்து சாப்பிடவேண்டும் என்று குறிப்பாக சொல்வதற்கு காரணம் என்ன? 
உடல் ஆரோக்கியத்துக்காக சொல்லப்படும் இவை மூன்றும், ஆயுர் வேத மருத்துவ உணவுகள்.

ஒரு நாள் முழுக்க பட்டினி போட்ட வயிற்றில் அக்னி உருவாகி, உடம்பில் இருந்த கெட்ட செல்களை அழித்து விடும்.
அக்னியின் பாதிப்பால், காலியான வயிறும், அதே சமயம் புண்ணாகி  இருக்கும்.

இந்த புண்ணை சரி செய்வதற்கே கட்டாயம் 'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' மூன்றையும் கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும் என்று நம் ஹிந்து சாஸ்திரம் சொல்கிறது .


வெறும்  கடவுள், இறை  பக்தி என்று மட்டும் சொல்லும் பொய் மதம் இல்லை, நம் ஹிந்து சனாதன தர்மம்.
நம் ஆரோக்கியத்துக்கும் அறிவுரை சொல்லும் அற்புதமான ஹிந்து  தர்மத்தை விட உயர்ந்த தர்மம் உலகில் கிடையாது.

* துவாதசியன்று பஞ்சாங்கத்தில் காட்டியபடி குறிப்பிட்டநேரத்தில் ஏகாதசி விரதத்தை முடிக்கவேண்டும்.

* உணவு சாப்பிடும் முன், அதை பெரியோர்களுக்கு வழங்க வேண்டும். * ஏகாதசி அன்று பகலில் தூங்காமல் இருக்க வேண்டும்.

ஏகாதசி விரதம் இருப்பவர்கள் சகலவிதமான சவுபாக்கியங்களையும் அடைவர்.
இவ்விரதத்தால் உடல் நலமும் ஆரோக்கியத்துடன் திகழும்.

பகலில் சாப்பிடாமல், இரவில் சாப்பிடுவது உடலுக்கு கேடு என்று இன்றைய உலக வாழ்க்கையே நமக்கு காட்டுகிறது.
இன்று இரவில் வேலை பார்க்கும் பலர், பகலில் சாப்பிடாமல், இரவில் உண்டு, உடல் ஆரோக்கியம் இன்றி அவதிப்படுகின்றனர்.

வருடத்தில், "ஒரு மாதம் முழுவதும் பகலில் பட்டினி இரு, இரவில் நன்றாக அசைவம் சாப்பிடு" என்று அர்த்தமில்லாத விரத கட்டுப்பாடுகளை சொல்லாமல்,
விரதத்தின் மூலம் 'ஆன்மீக வளர்ச்சி'க்கும்,
அதே சமயம், விரதம் முடிக்கும் போது 'மருத்துவமும்' செய்து கொள்ள வழி காட்டி,
'ஆயுள், ஆரோக்கியத்து'க்கு வழி காட்டும் அற்புதமான விரதமே 'ஏகாதசி' போன்ற விரதங்கள்.

நம் ஹிந்து தர்மம் சொன்ன படி, விரதம் இருப்பவர்கள், 100 வயது வரை எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். 
விரதங்கள் அனுஷ்டித்து தான், ஹிந்துக்கள் ஆரோகியமாக இது நாள் வரை வாழ்ந்தனர்.
விரதங்கள், நம் இறை வளர்ச்சிக்கும் மட்டும் அல்ல, நம் ஆரோக்கியத்துக்கும் மிக மிக தேவையான ஒன்று. 

100 வருடம் உழைக்க வேண்டிய இயந்திரங்கள், 50 வருடத்தில் பாழாகி போவதற்கு காரணம், அதற்கான ஓய்வு கொடுக்கப்படாமல் இருப்பதே..

'ஒரு வேளை' மட்டும் உண்டால், யோகி என்றும்,
'இரு வேளை' மட்டும் உண்டால், போகி என்றும்,
'மூன்று வேளை' மட்டும் உண்டால், ரோகி என்றும் சொல்வதுண்டு.
அந்த காலங்களில் அதிக பட்சம் மூன்று வேலைகள் தான் சாப்பிட்டார்கள் என்று தெரிகிறது..

இன்றோ நாலு வேளை, ஐந்து வேளை என்று கிடைக்கும் போதெல்லாம் வாயில் ஏதாவது போட்டுகொண்டு சாப்பிட்டு கொண்டே இருப்பதால்,  வயிற்றுக்கு ஓய்வு கிடைப்பதே இல்லை.

மனிதர்களின் பெரும்பாலான நோய்கள் வயிற்றில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.


இந்த வயிற்றுக்கு மாதம் இரு முறை ஓய்வு கொடுத்து, அந்த ஓய்வையும் ஏகாதசி போன்ற புண்ணிய காலங்களில் கடைபிடித்தால்,
உலகில் உணவு தேவையும் நம்மால் குறைகிறது. 
நம் வயிற்றுக்கும் மாதத்தில் இரண்டு நாள்  ஓய்வு கிடைக்கிறது. 

'நெல்லிக்காய், சுண்டைக்காய், அகத்தி கீரை' போன்ற மருத்துவ குணங்கள் கொண்ட உணவை விரதம் முடிக்க சாப்பிடும் போது,
உடல் ஆரோக்கியத்தையும், புத்துணர்ச்சியையும் பெறுகிறது.

உலகில் அனைவருக்கும் யோகத்தை சொல்லிக்கொடுத்தது ஹிந்து தர்மமே. 
விரதங்களின் மகத்துவத்தை என்றுமே வலியுறுத்தக்கூடிய ஹிந்து தர்மத்தை ஆராய்ச்சி செய்து, ஜப்பானியர்கள் இன்று நோபல் பரிசு பெறுகின்றனர். 

ஹிந்துக்கள் நம் பெருமை அறிவோம்.



Friday 14 June 2019

ருத்ர அவதாரம், ப்ரம்மா அவதாரம் , வராஹ அவதாரம் பற்றி.. தெரிந்து கொள்வோமே.

"வராஹ" அவதாரம் - உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்கும் போது, ஸ்வாயம்பு மனு (1st Manu) காலத்தில் நடந்தது.
அனைத்து அவதாரங்களுக்கும் முற்பட்ட அவதாரம், "வராஹ" அவதாரம்.


அதை தொடர்ந்து, "நரசிம்ம" அவதாரம் நடந்தது.
ப்ரகலாதனின் பேரன் "பலி சக்ரவர்த்தி" ஆண்ட போது, 
"கூர்ம" அவதாரமும், "வாமன" அவதாரமும் செய்தார்.
"மத்ஸ்ய" அவதாரம் - இப்பொழுது நடக்கும் வைவஸ்வத மன்வந்திர (7th Manu) ஆரம்பத்தில் நடந்தது.

'பாகவதத்தில்' முதல் அவதாரமாக "வராஹ" அவதாரமே சொல்லப்படுகிறது.

ஸ்வாயம்பு மனு (1st Manu), ப்ரம்ம தேவனின் மானஸ புத்திரர்.

இப்பொழுது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு வயது என்ன?
மனு அரசர்கள் யார் யார்? என்று தெரிந்து கொள்ள... Click செய்யுங்கள்..
முதன் முதலாக,
தாமரை மேல் ப்ரம்ம தேவனை சத்ய லோகத்தில் தன் நாபியில் இருந்து படைத்தார் பரவாசுதேவன் நாராயணன்.
பூலோகங்கள் படைக்கப்பட்டதற்கு முன்பேயே, ப்ரம்மாவுக்கும் முன், தாமரை படைக்கப்பட்டது என்று பார்க்கும் போது தாமரைக்கே (கமலம்) அது ஒரு ஏற்றம், பெருமை.

சத்ய லோகத்தில், படைக்கப்பட்ட ப்ரம்ம தேவன், ஞானியாக இருப்பதால்,
'இயற்கையாக பிறந்தோம்' என்று நினைக்காமல்,
'தன்னை படைத்தவர் இருக்க வேண்டுமே.. அவர் யார்?' என்று தியானம் செய்ய,
பகவான் நாராயணன் தியானத்திலேயே திவ்ய காட்சி கொடுத்து,
"உலக ஸ்ருஷ்டி என்ற கர்மாவை  செய்வதற்காக உன்னை நியமித்தேன்" என்று சொல்லி,
"வேதத்தை கொண்டு உலக ஸ்ருஷ்டி செய்" என்று பிரம்மாவிடம் வேதங்களை உபதேசித்தார்.
பரவாசுதேவன் கட்டளைக்கு கட்டுப்பட்டு, வேதத்தை கொண்டு, ப்ரம்மா உலக ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார்.

முதன் முதலில், சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர் என்ற 4 பாகவத உத்தமர்களை, தன் மனதால் ஸ்ருஷ்டி செய்தார் ப்ரம்ம தேவன்.
"நீங்கள் உலக ஸ்ருஷ்டியை செய்யுங்கள்"
என்று ப்ரம்ம தேவனே நியமித்தும்,
இவர்கள் நால்வருமே உலக விஷயமான ஸ்ருஷ்டியில் நாட்டமில்லாமல் இருந்தனர்.
ஞான மார்க்கத்திலேயே இருந்து மோக்ஷத்தை அடையவே விரும்பினார்கள்.


தன் முதன் ஸ்ருஷ்டியான, தன் 4 பிள்ளைகளும் இப்படி நிவ்ருத்தி என்ற ஞான மார்க்கம் சென்று விட்டார்களே!!... 
தான் சொன்னதை இவர்கள்  கேட்கவில்லை!! என்றதும், பிரம்மாவுக்கு கோபம் வந்தது.
ஞானியான ப்ரம்மா, கோபப்பட கூடாது என்று கோபத்தை அடக்கி கொள்ள,
பிரம்மாவின் நெற்றி புருவ மத்தியில் (ललाट) இருந்து சம்ஹார மூர்த்தியாக, ஒரு சிறு குழந்தை வெளிப்பட்டது.
धिया निगृह्यमाण: अपि भ्रुवो: मध्यात् प्राजापते: ।
सद्य: अजायत तत् मन्यु: कुमारो नील लोहित: || bhagavatham
திவ்யமான இந்த குழந்தை அழுது கொண்டே, பிரம்மாவை பார்த்து
"எனக்கு ஒரு பெயர் வை" என்று சொல்ல,
यद् अरोदी: सुर-श्रेष्ठ स-उद्वेग इव बालक: ।
तत: त्वाम् अभिधास्यन्ति नाम्ना रुद्र इति प्रजा: ॥ Bhagavatham
ப்ரம்ம தேவன் "நீ குழந்தை ரூபத்தில் அழுது (ரோதன) கொண்டே கேட்டதால், உனக்கு 'ருத்ரன்' என்று பெயர்" 
என்று சொல்ல,
அந்த குழந்தை, உடனே 11 ருத்ரர்களாக ஆகி காட்சி கொடுக்க,
அந்த 11 ருத்ரர்களுக்கும் ப்ரம்மா பெயர் கொடுத்தார்.
1. மன்யு
2. மனு
3. மஹினச
4. மஹான்
5. சிவன்
6. ருதத்வஜன்
7. உக்ரரேதா
8. பவன்
9. காலன்
10. வாமதேவன்
11. த்ருடவ்ரதா
யஜுர் வேதத்தில், ருத்ர ஸ்துதி செய்யும் போது,
'மன்யு' என்ற ருத்ரனின் பெயரை சொல்லி ஆரம்பிக்கிறது என்று பார்க்கிறோம்.

"நமஸ்தே ருத்ர மன்யவ உதோத இஷவே நம:"
- ருத்ரம் (யஜுர் வேதம்)

मृगव्याधश्च सर्पश्च निर्ऋतिश्च महायशाः।
अजैकपादहिर्बिध्न्यः पिनाकी च परन्तपः।। 
दहनोऽथेश्वरश्चैव कपाली च महाद्युतिः।
स्थाणुर्भगश्च भगवान् रुद्रा एकादश स्मृताः।।
- Adi Parva (Vyasa Mahabharata)
11 ருத்ரர்களுக்கு வேறு காரண பெயர்களும் சொல்லப்படுகிறது. மஹாபாரதத்தில் வ்யாஸர் அந்த பெயர்களை சொல்கிறார்.

1. ம்ருக-வியாதர்
2. சர்ப்பஸ்
3. நிர்ருதி
4. அஜைகபாத்
5. அஹிர்பித்ன்யர்
6. பினாகீ
7. தஹனர்
8. ஈஸ்வரர்
9. கபாலீ
10. ஸ்தாணு
11. பகன்
- 11 ருத்ரர்கள் 


'தன்னுடைய முதல் 4 பிள்ளைகள் ஞான மார்க்கத்தில் சென்று விட்டார்களே'
என்று கோபத்தில் இருக்கும் போது வெளிப்பட்ட ருத்ரன்,
தன்னையே 11 ருத்ரர்களாக ஆக்கி கொண்டு,
ஒவ்வொரு ருத்ரனும், ஆயிரக்கணக்கான கணங்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஏகாதச (11) ருத்ரர்களால் படைக்கப்பட்ட கணங்கள் யாவும் "பூத கனங்களாக" இருந்தார்கள்.


இந்த பூத கனங்கள், "பிரேதமாகவும், பிசாசாகவும், பூதமாகவும்"  அலையும் ஜீவன்களை கட்டுப்படுத்தும் அதிபதிகள் ஆகினர்.
வைகுண்டத்தில் உள்ள பரவாசுதேவன், தானே க்ஷீராப்தி என்ற பாற்கடலை ஸ்ருஷ்டி செய்து, ஆதிஷேஷன், ஜெய விஜயர்களுடன், தானே விஷ்ணுவாக வ்யூஹ அவதாரமும் செய்து விட்டார்.

அதற்கு பிறகு, ப்ரம்ம தேவன்,
ஒன்பது ப்ரஜாபதிகளை சத்ய, ஜன, தப லோகங்களில் ஸ்ருஷ்டி செய்தார்.
1. மரீச்சி (இவர் மகன் கஷ்யபர்)
2. அத்ரி (மனைவி அனசுயா)
3. ஆங்கிரசர் (இவர் பரம்பரையில் குத்ஸ ரிஷி, கௌதம ரிஷி, பரத்வாஜ ரிஷி வந்தார்கள்)
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்
8. ப்ருகு (இவர் பரம்பரையில் வந்த ரிஷிகள் ச்யாவன, ஆப்னவான, ஔர்வ, ஜாமதக்ன்ய)
9. தக்ஷன்

இவர்களில் 7 ப்ரஜாபதிகள், சப்த ரிஷிகளாக முதல் மனுவான 'ஸ்வாயம்பு மனு'வின் காலத்தில் உலக படைப்புகளில் ஈடுபட்டனர்.
1. மரீச்சி
2. அத்ரி
3. ஆங்கிரசர்
4. புலத்ஸ்யர்
5. புலகர்
6. க்ரது
7. வசிஷ்டர்

ப்ரஜாபதிகள் ஞான மார்க்கத்தை விரும்பினாலும், பரவாசுதேவனின் ஆணையை மறுக்காமல்,
ப்ரம்ம தேவனுக்காக உலக ஸ்ருஷ்டி செய்ய சம்மதித்து, உலகமெங்கும் மக்களை ஸ்ருஷ்டி செய்ய ஆரம்பித்தனர்.

முக்கியமாக, 'மரீச்சி' - கஷ்யப ரிஷியை ஸ்ருஷ்டி செய்தார்.
கஷ்யபர் - தேவர்களை, அசுரர்களை ஸ்ருஷ்டி செய்தார்.
இப்படி ஒன்பது ப்ரஜாபதிகளும்.
தேவ, அசுர, விலங்குகள், மனிதர்கள் என்று படைக்க ஆரம்பித்து விட்டனர்.



11 ருத்ரர்களால் ஸ்ருஷ்டி செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான பூத கணங்கள், ப்ரஜாபதிகளால் ஸ்ருஷ்டி செய்யப்பட்டவர்களை சம்ஹாரம் செய்ய ஆரம்பித்து விட்டனர்.
"பிரளய காலத்தில் சம்ஹாரம் செய்தால் தகும்.. இப்பொழுது தான் மனித ஸ்ருஷ்டியே ஆரம்பிக்கிறது, அதற்குள் சம்ஹாரம் நடக்கிறதே" என்றதும்,
ப்ரம்ம தேவன், 11 ருத்ரர்களிடமும்
"நீங்கள் இப்போது உங்கள் சம்ஹார லீலையை ஆரம்பிக்காதீர்கள்..
ஸ்ருஷ்டியே இப்போது தான் நடக்க ஆரம்பித்து உள்ளது. நீங்கள் சம்ஹாரம் செய்வதை நிறுத்தி விடுங்கள்.
உங்களுக்கு 'உக்ரன் என்றும் காலன்' என்றும் பெயர் உண்டு என்றாலும்,
இப்போது நீங்கள் யாவரும் சங்கரனாக (நல்லதை செய்பவர்) இருங்கள்.
சம் (நல்லதை) கரோதி (செய்பவர்) இதி(=) சங்கர:
ஹிம்சையை செய்யாதீர்கள். 
உலக ஸ்ருஷ்டியை தடுக்காதீர்கள்."
என்று சமாதானம் செய்ய,
பிரளய காலம் வரை சம்ஹார வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால்,
11 ருத்ரர்களும், தன் ஆயிரக்கணக்கான பூத கணங்களுடன், கைலாய லோகத்திற்கு சென்று தியான யோகத்தில் அமர்ந்தனர்.

அவ்வப்போது பூலோகத்தில் அவதாரம் செய்து, தன்னை பஜிக்கும் யோகிகளுக்கும், பக்தனுக்கும் காட்சி கொடுத்து, ஞானத்தை தருகிறார்கள்.




'ஓம்' என்ற ஓங்காரத்துக்கு ஈடான,
'ராம' என்ற தாரக மந்திரத்தையே எப்பொழுதும் ஜபம் செய்து கொண்டிருக்கும் ருத்ரர்கள், 
பூலோகத்தில் காசியில் விஸ்வநாதனாக, சிவபெருமானாக தானே இருந்து கொண்டு, 
காசியில் உயிர் பிரியும் பாக்கியம் பெற்ற அனைத்து ஜீவனுக்கும் (மனிதன், மிருகம், பறவை என்று அனைத்தும்), கடைசி மூச்சு போகும் சமயத்தில் அவர்கள் காதில் "ராம ராம ராம.." என்று தாரக மந்திரத்தை சொல்லி, தன் அணுகிரஹதால் எது சத்தியமான உண்மை என்ற  ஞானத்தை கொடுத்து,
ஞானம் அடைந்த ஜீவனுக்கு நாராயணன் மோக்ஷ வாசலை திறந்து விட வழி செய்து விடுகிறார்.

க்ஷீராப்தி என்ற பாற்கடலில், வ்யூஹ அவதாரத்துடன் இருக்கும் மஹாவிஷ்ணுவை தரிசிக்க, ஒரு சமயம் 4 குமாரர்களும் (சனகர், சனந்தனர், சனாதனர், சனத் குமாரர்) வந்த போது, ஜெய விஜயர்கள் தடுத்து விட, 
'பூலோகத்தில் பிறக்குமாறு' சபித்து விட்டனர்.
பிரம்மாவின் பிள்ளைகள் கொடுத்த சாபம், பொய் போக கூடாது என்பதற்காகவும்,
தானே விபவ அவதாரங்கள் செய்ய சங்கல்பித்ததால்,
'ஜெய விஜயர்கள்' முதலில் பிறக்கட்டும் என்று இப்படி ஒரு லீலையை செய்தார் பெருமாள்.


ஜெய விஜயர்களை பார்த்து,
'100 பிறவிகள் எடுத்து, விஷ்ணு பக்தி செய்து மீண்டும் க்ஷீராப்தி வருகிறீர்களா?
அல்லது
3 பிறவிகள் மட்டுமே எடுத்து, எனக்கு பரம எதிரியாக இருந்து, என் கையால் அழிக்கப்பட்டு, மீண்டும் வருகிறீர்களா?'
என்று மஹாவிஷ்ணு கேட்க,
100 ஜென்மங்கள் பெருமாளை பிரிந்து இருப்பதை விட, 3 ஜென்மங்கள் விஷ்ணுவுக்கு பகைவனாக இருந்து, அவர் கையாலேயே கொல்லப்பட்டு, வேகமாக பாற்கடல் அடைகிறோம் என்று சொல்ல,
முதல் பிறவியில் "ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு" என்று மகாபலம் கொண்ட அசுரர்களாக, அசுரர் குலத்தில் பிறந்தனர் ஜெய விஜயர்கள்.

ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு அவதரித்த பின், அசுரர்கள் பலம் கூடியது.
தேவர்களை அடக்கி, சொர்க்க லோகத்தில் அடிமைகள் ஆக்கினார்கள் அசுரர்கள்.

ப்ரம்ம லோகத்தையும் சேர்த்து 14 லோகங்களையும் கைப்பற்றினார்கள் அசுரர்கள்.

சொர்க்க லோகத்தில் இருந்து கொண்டு அட்டகாசம் செய்தனர் அசுரர்கள்.

மஹா விஷ்ணுவாகிய நாராயணன், தன் துவார பாலகர்கள் (gate keepers) கொஞ்ச காலம் 14 லோகங்களையும் ஆளட்டுமே என்று இருந்து விட்டார்.

அதர்மத்தின் கை ஓங்கியது.
இவர்களை எதிர்க்க தேவர்கள், ப்ரஜாபதிகள், மகரிஷிகள், ப்ரம்மா உட்பட எவராலும் முடியவில்லை.

தர்மம் அழிந்து, அதர்மம் ஓங்கி விட்டதால், பூமா தேவி வேதனையுற்றாள்.
ஹிரண்யாக்ஷன் ஒரு படி மேலே போய், 14 லோகங்களில் மனிதர்கள் வாழும் லோகமான பூலோகத்தை (earth) அதன் கதியில் இருந்தே அகற்றி,
கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் எடுத்து கொண்டு போய், மூழ்கடித்து மறைத்து விட்டான்.

பூலோகத்தையே (earth) அதன் சுழற்சியில் இருந்து எடுத்து, 
வெளி மண்டலத்தில் சொல்லப்படும் கர்போதகம் என்ற மஹா பிரளய ஜலத்தில் மறைத்து விட்டான் என்றால், 
அசுரர்களை, சாதாரண மனிதர்கள், என்று நாம் நினைத்து விட கூடாது..

பூமியே மறைந்து கிடந்த காலம் அது என்று கவனிக்க வேண்டும்.

ப்ரஜாபதிகளால் படைக்கப்படும் மக்களை, ஒரு அரசனாக இருந்து காப்பதற்காக, ப்ரம்ம தேவன் "ஸ்வாயம்பு" என்ற மனுவை ஸ்ருஷ்டி செய்தார்.

தேவர்கள், அசுரர்கள் என்று ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதிகள்,
மனிதர்களை படைக்க ஆரம்பிக்க, "இந்த மனிதர்களை தரிக்க (தாங்க) இடம் வேண்டுமே?"
என்று ஸ்வாயம்பு மனு, சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்ம தேவனை சரண் அடைந்தார்.

நம் அனைவரையும் பூமி தரிப்பதால் (தாங்குவதால்), பூமியின் தேவதையான பூமாதேவிக்கு "தரா" (Dhara) என்று பெயர்.

நாம் அனைவரும் மனிதனாகவோ, விலங்காகவோ, பறவையாகவோ இந்த பூமியிலேயே பிறக்கிறோம், நடக்கிறோம், வாழ்கிறோம், மடிகிறோம்.

இந்த பூமியிலேயே வாழ்ந்து கொண்டு, 
பூமியையே சில சமயம் உடைக்கிறோம், உதைக்கிறோம்,  தோண்டுகிறோம், எச்சில் துப்புகிறோம், ஒடுகிறோம், குதிக்கிறோம்.
பூமியிலேயே பிறந்து, வாழ்ந்து, மடியும் நாம் செய்யும் அபச்சாரங்களை, ஹிம்சையை பூமாதேவி 'தன் குழந்தைகள் தானே' என்ற தாய் பாசத்தில் மன்னிக்கிறாள்.
மஹா பொறுமை கொண்டு பூமாதேவி இருப்பதால் அவளுக்கு "க்ஷமா" (மன்னிப்பவள்) என்றும் பெயர் உண்டு.

ஹிரண்யாக்ஷன் பூலோகத்தையே எடுத்து ஒளித்து விட்டான், என்றதும் ஸ்வாயம்பு மனு, ப்ரம்ம தேவனிடம் பூலோகத்தை மீட்டு கொடுக்க பிரார்த்திக்க,
ப்ரம்ம தேவன், ஸ்ரீ மந் நாராயணனை மனதில் தியானிக்க,
நாராயணனே, ஒரு கட்டை விரல் (அங்குஷ்ட) அளவுள்ள வராஹ மூர்த்தியாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவனே, தர்மமே வடிவான, 'யஞ்ய வராஹ'னாக வெளிப்பட்டார்.

பரவாசுதேவன் நாராயணனை இதயத்தில் தரிசனம் செய்து இருந்த ப்ரம்ம தேவன்,
இப்படி வராஹ மூர்த்தியாக சிறு ரூபம் எடுத்து கொண்டு தன்னிடம் இருந்தே வெளிபட்டதை கண்டு,
"இந்த குட்டி வராஹ மூர்த்தி என்ன செய்து விட போகிறது?"
என்று மனதுக்குள் ஒரு க்ஷணம் நினைக்க,
சத்ய லோகத்தை காட்டிலும் பெரிதாக வளர்ந்து, விஸ்வரூபனாக வளர்ந்து விட்டார் வராஹ பெருமான்.
கட்டை விரல் அளவுக்கு (அங்குஷ்ட மாத்ரத்தில்) காட்சி கொடுத்தாலும், உலகையே ரக்ஷிக்க கூடியவன் என்று காட்டுவது போலவும்,
"தான் அணுவுக்குள்ளும் அணுவாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனிடமிருந்தே தன்னை வெளிப்படுத்தி, "சர்வ ஜீவனுக்குள்ளும், நானே அந்தர்யாமியாக இருக்கிறேன்" என்று காட்டவும்,
ப்ரம்ம தேவனுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை போக்க, மிகப்பெரிய  வராஹ ரூபத்துடன் வளர்ந்து காட்சி கொடுத்தார்.

ப்ரம்ம தேவனுக்கு தன்னை சின்ன கட்டை விரல் அளவுக்கு வராஹ மூர்த்தியாக காட்டி கொண்ட பரவாசுதேவன்,
தேவைப்பட்டால் எத்தனை பெரிய விஸ்வரூபத்தையும் எடுத்து தர்மத்தை காப்பேன் என்று உணர்த்தினார்.

நம் வீட்டிலும் சின்ன சிவபெருமான் விக்ரஹமோ, குட்டி கிருஷ்ணரோ, குட்டி விஷ்ணுவோ பூஜைக்காக வைத்து இருக்கிறோம்.
நம் வீட்டில் உள்ள கிருஷ்ணர் விக்ரஹம் சின்னதாக இருப்பதால், "இந்த குட்டி கிருஷ்ணரா என்னை காக்க போகிறார்? காக்கிறார்?" 
என்று நாம் நினைக்க கூடாது என்பதற்காக தான், 
பிரம்மாவுக்கும் அது போன்ற மனநிலையை உருவாக்கி, குட்டி வராஹனாக வந்த அவதார ரூபத்தை பார்த்து, அளவை பார்த்து "இந்த குட்டி வராஹ மூர்த்தியா பூலோகத்தை மீட்க போகிறது? என்று கேள்வி எழ, 
அளவிடமுடியாத, எந்த ரூபமாகவும் ஆக சக்தி பெற்ற நாராயணன், கிடு கிடுவென வளர்ந்து பெரிய வராஹமாக ஆகி விட்டார். 
அவருக்கு முன்னால் பெரும் மலைகள் கால் தண்டையில் போட்டு கொள்ளும் சிறு மணிகள் போல காட்சி அளித்தன என்றால், எத்தனை பெரிய விஸ்வரூபம் வராஹ அவதாரம் என்று புரிந்து கொள்ளலாம்.

"வந்திருப்பது சர்வேஸ்வரன்" என்று அறிந்த ப்ரம்மதேவன் வராஹ பகவானை நமஸ்கரித்தார்.

"தன்னை பூஜிக்க சுலபமாக இருக்குமே" என்பதற்காக
'தன்னையே சுலபமாக்கி கொண்டு, குட்டி விக்ரஹமாக உள்ளார் பெருமாள்' என்று அறிந்து கொள்ளும் போது தான், நமக்கும் பக்தி வரும்.
நம் வீட்டில் உள்ள சிவ பெருமானும், கிருஷ்ணரும், ராமரும் வெறும் பொம்மை அல்ல,  அளவில் சிறிதாக தோன்றினாலும், உண்மையான பக்தி நமக்கு இருக்குமானால்,
"நம்மை காக்க வல்லவர், எதிலும் அந்தர்யாமியாக இருப்பவர், நமக்காக இந்த விக்ரஹத்தில் புகுந்து இருக்கிறார் என்று புரிந்து விடும்". நமக்கும் இறை பக்தி செய்ய தோன்றும்.

என் வீட்டின் பூஜை அறையில் உள்ள இந்த குட்டி கிருஷ்ணனா, குட்டி சிவனா என்னை காப்பாற்ற போகிறார்? என்று சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக தான்,
ப்ரம்ம தேவனுக்கே இது போன்ற எண்ணத்தை வர வழைத்து, தன் முதல் அவதாரத்திலேயே நமக்கு வரப்போகும் இது போன்ற சந்தேகங்களுக்கு பதில் சொன்னார் நாராயணன்.

தான் அணுவுக்குள் அணுவாக (அனைத்து உயிருக்கும் உயிராக) இருப்பவன் என்று காட்ட, சிறு ரூபத்தை காட்டினாரேவொழிய,
அவர் ஐஸ்வரயம் எல்லை இல்லாதது என்று புரிந்து கொள்ள, எதுவாகவும் வருவார், எவ்வளவு பெரிய ரூபத்தையும் எடுப்பார் என்று காட்ட,
மிக பெரிய விஸ்வரூபத்தை காட்டினார் பரவாசுதேவன்.
பூலோகமே இல்லாத போதே, வராஹ மூர்த்தியாக வந்ததால், வராஹம் என்றால் என்ன? என்று பார்த்திராத, ப்ரம்ம லோகத்தில் உள்ள ரிஷிகள் அனைவரும் நடு நடுங்கி போனார்கள்.

நாம் பூலோகத்தில் காணும் பன்றியையோ, சிங்கத்தையோ, மீனையோ, மனிதர்களையோ, பெருமாள் செய்த அவதாரத்தோடு ஒப்பிட்டு பார்த்து விட கூடாது...

இப்படி ஒப்பீடு செய்து பார்க்க தோன்றினாலேயே,
அவர் எதற்காக அந்த அவதாரத்தை செய்தார்?
என்ன காரியத்தை செய்ய அப்படி ஒரு அவதாரம் செயதார்?
என்ற ஆலோசனை தோன்றாமல், பக்தி இல்லாமல் போய், நாம் காணும் மனிதனை போலவும், மீனை போலவும், பன்றியை போலவும் நினைத்து கொண்டு, பகவானின் கருணையை புரிந்து கொள்ளாமல், வெறும் கதையாகவும், நாதீகனாக இருந்தால் "உங்கள் பகவான் பன்றியா? மீனா?" என்ற அளவுக்கு கீழ்தர பேச்சுக்கள் சம்பவித்து விடும்.


"இது என்னவென்றே தெரியவில்லையே.. பெரிய ரூபத்தில் வளர்ந்து கொண்டே போகிறதே.   இது தேவனா, அசுரனா என்று தெரியவில்லையே" என்று ரிஷிகள் பயந்து நடுங்க...
"அபயம்.. அபயம்" என்று வராஹ மூர்த்தியாகவே இருந்து கொண்டு கர் கர் என்று கர்ஜிக்க, வந்திருப்பது பரவாசுதேவன் தான், ப்ரம்ம தேவனுக்கு அணுகிரஹம் செய்ய காட்சி கொடுக்கிறார் என்று பயம் தெளிந்தனர் ரிஷிகள்.

உலகத்தில் யஞ்யம் (வேத முறைப்படி இறை வழிபாடு) இருக்கும் வரையில்,
நல்ல காரியங்கள் நடக்கும் வரையில்,
தர்மம் (நியாயம்) உலகில் நிலைத்து இருக்கும் வரை,
உலகில் ஒரு பதிவ்ரதையாவது இருக்கும் வரை,
ஒரு வைஷ்ணவனாவது உலகில் இருக்கும் வரை,
அக்னிஹோத்ரம் செய்யும் ஒரு ப்ராம்மணனாவது இருக்கும் வரை,
உலகம் நிலைத்து இருக்கும்.

உலகம் சத்தியத்தாலும், தர்மத்தாலும் (நியாயம்) நிலைத்து இருக்கிறது.
உலக மக்களிடையே பொய் (அசத்யம்), நியாயத்துக்கு எதிரான செயல்கள் அதிகரிக்கும் போது, ஜனங்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை இட்டு, அழிவார்கள்.

அதர்மத்தாலும், அநியாயத்தாலும் சூழப்பட்டதால், பூமியே பிரளய ஜலத்தில் மூழ்கி கிடக்க,
மீண்டும் சத்தியத்தை நிலைநாட்டி, தர்மத்தை (நியாயத்தை) நிலைநாட்ட,
பிரளய ஜலத்தில் இருந்து மீட்டு, மீண்டும் பூமியை அதனுடைய ஸ்தானத்தில் வைக்க,
பெருமாள் "தர்மமே ரூபமாக, சத்தியமே ரூபமாக" கொண்ட 'யஞ்ய வராஹ' அவதாரம் எடுத்தார்.

பெருமாள் எடுத்த இந்த வராஹ அவதாரம் என்பதே தர்ம ஸ்வரூபமானது.

பூலோகமே இல்லாத சமயத்தில், தன்னை தானே வராஹனாக ஸ்ருஷ்டி செய்து கொண்டார் என்று பார்க்க வேண்டுமே தவிர, வராஹ ஸ்வரூபம் நாம் உலகில் காணும் சாதாரண பன்றி என்று நினைக்கக்கூடாது..

வராஹ மூர்த்தியை "தர்மத்தின் ஸ்வரூபமாக பார்" என்று நமக்கு காட்டுகிறது நம் புராணங்கள்.

உலகில் அலையும் சாதாரண பன்றியை போன்று தான், வராஹ அவதாரம் என்று நாம் பார்த்து விட கூடாது என்பதற்காகவே,
வராஹ மூர்த்தியின் ஸ்வரூபத்தை, சத்ய, ஜன, தப லோகத்தில் உள்ள ரிஷிகளே விளக்குகின்றனர்.

வராஹ மூர்த்தியாக அவதாரம் செய்து, பூலோகத்தை மீட்டு,
மனிதர்களை பிறக்க வைத்து, அவர்களால் மீண்டும் உலகில் தர்ம காரியங்கள், வேத முறையில் இறை வழிபாடுகள் இனி நடக்க போகிறது என்று அறிந்த ரிஷிகள், வராஹ பகவானையே யஞ்ய வராஹனாக பார்த்தனர்.

யாக குண்டத்தை சுற்றி, 4 பேர் உட்கார்ந்து கொண்டு யாகத்தை (யஞ்யம்) செய்வார்கள்.
1. ஹோதா (ரிக்வேதத்தில் உள்ள வேத ஸ்துதிகளை சொல்லி, தேவர்களை, ப்ரம்மா, ருத்ரன், பரவாசுதேவனை அழைத்து, தாங்கள் கொடுக்க ஆசைப்படும் ஆஹுதிகளை ஏற்றுக்கொள்ள அழைப்பவர். யாகம் செய்பவர்களில் மிகவும் மதிப்புக்கு உரியவர்)
2. அத்வர்யு (யஜுர் வேதத்தில் உள்ள வேத மந்திரப்படி யாகத்தினை முறைபடி சரியாக  நடத்துபவர் ,செய்பவர்)
3. உத்காதா (சாம வேதத்தில் உள்ள வேத மந்திரங்களை கானமாக பாடி, ஹோதாவால் அழைக்கப்படும் தேவதைகளை விசேஷமாக மகிழ்விப்பவர்)
4. ப்ரம்மா (யாகம் ஒழுங்காக நடக்கிறதா! என்று மேற்பார்வை செய்பவர். கர்மாக்கள் செய்கையில், அவ்வப்போது அத்வர்யுவாக இருப்பவர், பிரம்மாவை அனுமதி கேட்பார். அதற்கு பிரம்மா ‘ஓம்’ என்று சொல்லி அனுமதி தருவார்.
அவ்வப்போது யக்ஞத்தில் ஏற்படக்கூடிய தவறுகளுக்கான பிராயச்சித்தத்தைக் கூறுவதும், பிரம்மாவின் பொறுப்பே)
பொதுவாக யக்ஞம் என்ற சமஸ்கரித சொல்லுக்கு 'வழிபடுதல்' என்று பொருள்.


யாகத்தை செய்யும் இந்த நான்கு பேரும், வராஹ பகவானின் நான்கு 'கால்கள்' போலவும்,
யாகத்துக்கு இரண்டு இலை போன்ற தருவி வைத்து இருப்பார்கள்.
இந்த தருவியே, வராஹ பகவானின் இரண்டு 'காதுகள்' போலவும்,
யாகத்தில் கடைசியாக ஒரு நீண்ட பாத்திரம் வைத்து பூரண ஆஹுதி கொடுப்பார்கள்.
அந்த நீண்ட பாத்திரமே, வராஹ பகவானின் நீண்ட 'முகம்' போலவும்,
யாகத்துக்கு பயன்படுத்தப்படும் தர்ப்பைகளே, வராஹ பகவானின் 'ரோமங்களாக' இருக்க...

ஹோமத்துக்கு விடப்படும் நெய் (ஆஜ்யம்) ப்ரகாசத்திற்கு காரணமாக இருப்பதால், அவருடைய 'கண்கள்' போலவும் இருக்க,

வராஹ ஸ்வரூபமே, ரிஷிகளுக்கு  யக்ஞ ரூபமாக தெரிந்தது.
ரிஷிகள் "யக்ஞ வராஹனாக" தரிசனம் செய்தார்கள்.

யக்ஞ வராஹனாக காட்சி கொடுத்த பெருமாள், பிரளய ஜலத்தில் மூழ்கி பூமியை தூக்க, ஹிரண்யாக்ஷனுடன் போரிட்டு அவனை கொன்று,
ஒரு யானை ஒரு தாமரை பூவை தூக்கி கொள்வது போல, தந்தங்களினால் மிக எளிதாக தூக்கிக் கொண்டு மேலே வந்தார்.
பூலோகத்தை அதன் கதியில் மீண்டும் வைத்து, மனிதர்களை படைக்குமாறு அணுகிரஹம் செய்தார்.

பரவாசுதேவன் நாராயணனுக்கு, பூமா தேவியும், மஹா லட்சுமியும் பத்னிகள்.
தன்னை காப்பாற்றி, பூலோகத்தில் மீண்டும் ஜனங்களை ஸ்ருஷ்டிக்க அணுகிரஹம் செய்த 'வராஹ பெருமானை', நாராயணன் என்று உணர்ந்தாள், பூமி தாயார்.
பூலோகத்தில் பிறக்கும் நமக்கெல்லாம் தாய் "பூமா தேவி", தந்தை "நாராயணன்".
யாரும் 'அனாதை'கள் இல்லை இந்த உலகில்.

நாம் இந்த தாய் தந்தையிடம் பக்தியுடன் இருக்க வேண்டும். 

"நாம் மோக்ஷம் பெற வேண்டும்" என்பதற்காகவே எடுத்த அவதாரம் 'வராஹ அவதாரம்'.

பூமா தேவியுடன், வராஹ பெருமாள், தமிழ் நாட்டில் ஸ்ரீ முஷ்ணம் என்ற திவ்ய தேசத்தில் இருக்கிறார்கள்.
நம்மை பெற்ற பூமி தாயையும், பூமியையே மீட்டு கொடுத்த தந்தையான பெருமாளையும், நாமும் ஸ்ரீ முஷ்ணம் சென்று தரிசிக்க வேண்டும்.


"வராஹ புராணம், பாகவதம்" போன்ற புராணங்கள் "சாத்வீக புராணங்கள்" என்று புகழப்படுகிறது.

நாராயணனே கிருஷ்ணராக அவதாரம் செய்த போதும், மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் "ராஜஸ புராணங்கள்" என்று சொல்லப்படுகிறது.
மகாபாரதத்தில் தான் பகவத் கீதை இருக்கிறது என்றாலும், பிற கதைகளை படிக்கும் போது பொறாமை, சூது, பழிக்கு பழி போன்ற ராஜஸ குணங்களும் காணப்படுகிறது.

ஆனால், பாகவதம், வராஹ புராணம் போன்ற சில புராணங்கள், மோக்ஷத்தை விரும்ப கூடியவர்கள் படிப்பதற்காகவே ஆரம்பம் முதல் கடைசி வரை சாத்வீகமாகவே உள்ளவை என்று சொல்லப்படுகிறது.

வராஹ புராணத்தில், ஹிரண்யாக்ஷனை ஒழித்து, பூமியை அதன் கதியில் நிறுத்தி விட்ட பின், வராஹ மூர்த்தியாக உள்ள நாராயணருக்கும், பூமா தேவிக்கும் இடையே நடந்த உரையாடல் உள்ளது.

"பூலோகத்தில் இப்படி ஜீவ கோடிகள் பிறந்து, வாழ்ந்து, இறந்து.. மீண்டும் பிறந்து, வாழ்ந்து, இறந்து கொண்டே இருக்கிறார்களே....
இவர்கள் இந்த சம்சார சூழலில் இருந்து விடு பட்டு, பரமபதம் என்ற மோக்ஷத்தை அடைய என்ன வழி?" என்று பூமா தேவி கேட்க,
வராஹ பகவான் 'நம்மை போன்ற ஜீவன்கள் மோக்ஷம் அடைய வழி என்ன" என்று சொல்கிறார்.
ஆரம்பம் முதல், கடைசி வரை,
ஒரு தாயும் தந்தையும், "தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டுமே" என்று கவலைப்பட்டு தங்களுக்குள் உரையாடி கொள்ளும் சாத்வீக புராணம் வராஹ புராணம்.

நம் மோக்ஷத்திற்காக, பெருமாளும், பூமி பிராட்டியும் பேசிக்கொள்ளும் அற்புதமான வராஹ புராணத்தை ஒருவன் படித்தாலே, அவனுக்கு மோக்ஷம் நிச்சயம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் வேதங்கள்.
வாழ்க நம் தெய்வங்கள்.

வளர்க நம் இறை பக்தி.

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)



Sandhya Vandanam - Evening (With meaning)