Followers

Search Here...

Saturday 20 July 2019

Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...9

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு...





மேலும் படிக்க






Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...8

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு...





மேலும் படிக்க



Thought for Hindus - ஹிந்துக்கள் சிந்தனைக்கு...7

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் சிந்தனைக்கு..






மேலும் படிக்க


Saturday 6 July 2019

கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

"தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது.
.


மாதா கோவில்களில் "ஜபம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஜபம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.

மசூதிகளில் "தியானம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த தியானம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.
"கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக சொல்லப்படுகிறது.

  • கோவில்  உத்சவங்கள் நடந்த வரை, 
  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை,

ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
இன்று,

  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும்,
  • கோவிலில் உத்சவங்கள் நடக்காமல் இருந்தால், அதை நடத்த முயற்சி செய்யாமல் இருப்பதாலும்,

ஹிந்துக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றோம். இது ஹிந்துக்களுக்கு பேராபத்து.

ஹிந்துக்கள் "ஹிந்துக்களாக இருக்க வேண்டும்" என்றால், நாம் கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்ய வேண்டும்.

"உத்சவங்கள் நடத்துவதற்காக" தான், ஹிந்து கோவில்கள் அரசர்களால் அமைக்கப்பட்டன.
"தியானம்", "ஜபம்" செய்வதற்காக கோவில்கள் அமைக்கப்படவில்லை.

ஹிந்து தர்மத்தின் நோக்கம், நம் அனைவருக்கும் "தெய்வ சிந்தனையை" ஏற்பட செய்வது தான்.

தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'ஜபமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'தியானமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை, பாசுரங்கள், பிரபந்தங்கள்' உள்ளது.
ஆனால் இவை அனைத்துக்கும், சில தகுதிகள் தேவைப்படுகிறது.

தியானம் செய்து தெய்வ அனுபவம் ஏற்பட, நமக்கு "வைராக்யம்" வேண்டும்.

உலக ஆசையில் வெறுப்பும், தெய்வத்தை அடைவதில் ஆர்வமும் இருந்தால், தியானம் ஸித்திக்கும்.

யோகத்தை உலகுக்கு கற்றுக்கொடுத்து,
தியானம் எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லி கொடுத்து, கூடவே "ஓம்" என்று ஜபமும் 'செய்'
என்று சொல்லி கொடுத்ததே, ஹிந்துக்கள் தானே.


நம்மிடம் இல்லாத விஷயங்கள் பிறரிடம் இல்லை.
நம்மிடம் பிச்சை வாங்கித்தான் அனைவரும் பிழைக்கின்றனர்.
இல்லாதவர்கள் பொறாமைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வளவு தான்.
ஹிந்துக்களின் பெருமையை ஹிந்துக்கள் உணர வேண்டும்.

தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் கூட தேவைப்படவில்லை..
ஆழ்வார்களில், நம்மாழ்வார் கோவிலுக்கு சென்றதே இல்லை.
நம்மாழ்வார் தியானத்திலேயே ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளையும் தரிசனம் பெற்று இருந்தார்.
ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளும் இவர் இதயத்துக்குள் வந்து தரிசனம் தந்தனர். நமக்கு திவ்ய தேச பாசுரங்கள் கிடைத்தது.
தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் தேவை இல்லை.
தியானம் செய்ய கோவில்கள் கட்டப்படவில்லை. தியான மண்டபம் தனியாக உள்ளது.

புலன்கள் அடங்காதவர்கள் தியானம் செய்தும், ஜபம் செய்தும், புராணங்கள் படித்தும் தெய்வ சிந்தனை எளிதில் ஏற்படாது.

கோடிக்கணக்கான மக்களுக்கு, புலன் அடக்கம் கிடையாது. உலக நாட்டமும் அதிகம்.
இவர்களுக்கும் வழி காட்டுவதே நம் "ஹிந்து மதத்தின் நோக்கம்". 
இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட வழி காட்டுவதே நம் ஹிந்து மதத்தின் நோக்கம்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு,

  • வித விதமாக சாப்பிடுவதில் ஆர்வம் (நாக்கு) உள்ளது,
  • வித விதமான காட்சிகளை பார்ப்பதில் ஆர்வம் (கண்) உள்ளது,
  • வித விதமான நறுமணங்கள் நுகர்வதில் ஆர்வம் (மூக்கு) உள்ளது,
  • வித விதமான இசைகளை கேட்க ஆர்வம் (காது) உள்ளது,

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, 'நம்மாழவார் போல தியானம் செய்' என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, "கோடி ராம ஜபம் செய்" என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தெய்வ சிந்தனை ஏற்பட செய்வற்கே 'கோவில் உத்சவங்கள்'.

தியானம் செய்ய கோவில்கள் இல்லை.






முனிவர்களும், ரிஷிகளும், தியானம் செய்ய காட்டிற்கு தான் சென்றனர். தனிமையை தான் விரும்பினர். கோவிலுக்கு செல்லவில்லை.
தியானத்திற்கு தனிமை அவசியம். 

இத்தனை பெரிய கோவில்கள் நம் அரசர்கள் கட்டி, 
நான்கு வீதிகள் அமைத்தது, தியானம் செய்ய இல்லை. 
கோவிலில் உத்சவங்கள் செய்வதற்கே.
இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தன் தரிசனத்தை எப்படியாவது கொடுத்து, தெய்வ பக்தியை கொடுப்பதற்காக தான், நம் தெய்வங்கள் கோவிலில் வீற்று இருக்கிறார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை  கொடுக்க நம் ஹிந்து தெய்வங்கள் காத்து இருந்தாலும், இவர்கள் கோவிலுக்கு வர  வேண்டுமே?
தான் கோவில் கர்பக்ரஹத்திலேயே இருந்தால் சரி வராது என்று தான், அம்மன் வீதி உலா, பெருமாள் புறப்பாடு, சிவபெருமான் புறப்பாடு, கந்தன் புறப்பாடு என்று, நம் தெய்வங்கள், கோவிலை விட்டு தானே வெளியே வந்து, புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை கிடைக்க செய்கின்றனர்.

வீதியில் வரும் பெருமாளை, நாத்தீகனும் பார்க்கிறான், புலன் அடங்காதவனும் பார்க்கிறான்.

வீதியில் உலா வரும் தெய்வத்தை நாம் பார்க்கிறாமோ இல்லையோ, தெய்வங்கள் நம் அனைவரையும் பார்த்து விடுவதால், நம்மை அறியாமலேயே நமக்கு தெய்வ சிந்தனை விதைக்கப்படுகிறது.

ஹிந்து மதத்தின் நோக்கமே நம் அனைவருக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வது தான்.

தன் தரிசனத்தை கொடுத்து, நம் மன அழுக்கை நீக்கி, புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் நமக்கும் தெய்வ சிந்தனை கொடுக்கவே, கோவிலில் தெய்வங்கள் குடி கொண்டு உள்ளனர்.
தியானத்திலும், ஜபத்திலும் ஸித்தி அடைந்த ரிஷிகளும், முனிகளும், மகான்களும், ஞானிகளும்,
நமக்காக பகவானை பிரார்த்தனை செய்து, அவரை சாநித்யம் குறையாமல் தான் தரிசித்த இடத்திலேயே இருக்க செய்து, அங்கு ஒரு கோவில் அமைத்து, அந்த பெருமாளுக்கு உத்சவங்கள் செய்ய சொல்லி, நமக்கு தந்து விட்டு சென்றனர்.


புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களை, கோவிலுக்குள் வரவழைத்து தன் தரிசனத்தை எப்படி தருவார் பெருமாள்?
கோவிலுக்கு வந்தால் தானே, சிவனோ, பெருமாளோ, அம்மனோ  தன் தரிசனத்தை தர முடியும் !!

தெய்வ தரிசனம் பெற்றால் தானே நம் மன அழுக்குகள் நீங்கும்..
தெய்வ சிந்தனை ஏற்படும்...சித்தம் சுத்தி ஆகும்.. ஞானம் கிடைக்கும் !

இவர்களையும் இழுப்பதற்கே, கோவில் உத்சவங்கள்.. 
கோவிலில் தெய்வ விக்ரகங்களுக்கு செய்யப்படும் ஆராதனைகள், பூஜை, அபிஷேகம், தேர் இழுத்தல், வான வேடிக்கை, இசை, நடனம், நாட்டியம், சிற்பம், யாகங்கள், பிரசாத விநியோகம் எல்லாம், புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களையும் இழுத்து, தெய்வத்தின் முன் நிறுத்தத்தான்.

யோகாவினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
தியானத்தால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஜபத்தினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ப்ரவசனங்களால், உபன்யாசங்களால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஒரே ஒரு கோவில் திருவிழா மூலம் கோடிக்கணக்கான மக்களை கூட்ட முடிகிறது.
ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீனாக்ஷி திருக்கல்யாணம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, மீனாக்ஷி இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அண்ணாமலை தீபம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, சிவபெருமான் இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

சமயபுர மாரியம்மனுக்கு திருவிழா என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறக்க கூடாது.

புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக தான், கோவில் திருவிழாக்கள், ஆராதனைகள் எல்லாம் நடத்தப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் எப்படியாவது கோவிலுக்குள் இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து, பக்தியை ஊட்டி, ஞானத்தை கொடுக்க நம் தெய்வங்கள் காத்து இருக்கிறார்கள்.
நம் தெய்வங்கள் எத்தனை கருணை கொண்டு இருக்கிறார்கள் என்று, நாம் உணர்ந்து கொண்டாலே போதும்.


"'காதுக்கு நல்ல பாட்டு கச்சேரி கேட்க தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்'
என்று ஒலியில் (சப்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் கச்சேரி வைக்கிறேன். இங்கேயே வந்து கேள்.
பல வித வாத்தியங்கள், பல அற்புதமான பாடகர்கள் எல்லோரும் வந்து கோவிலில் கச்சேரி செய்வார்கள்.
இங்கேயே உட்கார்ந்து கேட்டு கொண்டிரு."
என்று இழுக்கிறது நம் கோவில்கள்.
யாரோ பெரிய பாடகர் வந்து பாடுகிறாராம் என்று, பாட்டு கேட்கும் ஆசையில் வருபவன், "சரி அப்படியே கர்பக்ரஹத்தில் உள்ள ஸ்வாமியையும் பார்த்து விட்டு செல்வோம்" என்று தரிசனம் செய்து விடுவான்.

புலனிகளில் விழுந்து கிடைக்கும் இவனுக்கு,
நல்ல கச்சேரி கேட்க செய்வது போல செய்து, கோவிலுக்கு வர செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, தன் தரிசனத்தாலேயே அவனுக்குள் இருந்த மன அழுக்குகளை நீங்க செய்து, தெய்வ சிந்தனை கிடைக்க செய்து, ஞானத்தை கொடுத்து, தன் பக்தனாக்கி, சகல சுகங்களும் கிடைக்க அருள் செய்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு சாப்பிட பிடிக்கும்' என்று சுவையில் (ரஸம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் அருமையான நெய் சொட்ட சொட்ட உனக்கு சாப்பிட பிரசாதங்கள் கிடைக்க செய்கிறேன்.
கோவில் விழா சமயத்தில் பல விதமான பானங்கள் (மோர், பானகம்), கல்யாண விருந்து போட்டு சாப்பிட செய்கிறேன்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு பார்க்க அழகான காட்சிகள் தான் பிடிக்கும்'
என்று பார்வையில் (ரூபம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கட்டாயம் கோவிலுக்கு வா.
தினசரி பெருமாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்கிறேன். பார்.
கண்ணுக்கு வித வித அலங்காரம் பார்க்க கிடைக்கும்.
கோவிலில் உத்சவங்கள் நடக்கும் போது, கோவிலே அலங்கார விளக்குகளால், பூக்களால் நிரப்பப்பட்டு, கண்ணுக்கு ஆனந்தம் தரும்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
'எனக்கு நல்ல வாசனை பிடிக்கும்' என்று நுகருதலுக்கு (கந்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை.
கோவிலில் தூபம், ஊதுபத்தி என்று வாசனை பொருட்களை ஏற்றி வைக்கிறேன்.
பூக்களின் சுகந்தமும் சேர்ந்து கோவிலே கமகமக்க செய்கிறேன். கோவிலுக்கு வா. இங்கேயே நீ அதை அனுபவிக்கலாம்."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

புலன் அடக்கம் இன்றி, காமத்தை அடக்க முடியாதவர்களையும் நம் ஹிந்து மதம் விட்டு விடுவதில்லை.
அவர்களுக்காக கோவில் கோபுரங்களில் கேளிக்கை நிறைந்த சிலைகள், சில ஆபாசமான சிலைகள் கூட கோபுரங்களில் செதுக்கி வைத்து இருப்பார்கள்.
காம சுகத்திலேயே சிக்கி உள்ள இது போன்ற மனிதர்களும், இது போன்ற சிலைகளை பார்ப்பதற்கென்றே கோவிலுக்கு வருவார்கள்.
"ஹாய்.. ஒய்" என்று கோவில் கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பார்த்து சிரித்து கொண்டே புலன்கள் அடங்காத இவர்கள், கோவிலுக்கு உள்ளேயும் இப்படி தான் இருக்குமோ? என்று நினைத்து வந்து, கடைசியில் பெருமாளை தரிசித்து விட்டு சென்று விடுவார்கள்.

"தன் தரிசனத்தை இது போன்ற ஆசாமிகளுக்கும் கொடுத்து", நாளடைவில் இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்து, கடைசியில் மோக்ஷத்திற்கான சாவியை கொடுத்து விடுகிறார் பெருமாள்.
தெய்வ சிந்தனை ஏற்பட,
தியானம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும், ஜபம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும்.. புராணங்கள் படிப்பவர்கள் தனியாக படிக்கட்டும்,,,

நம் ஹிந்துக்களுக்கு, தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு கொடுக்கப்பட்ட கடமை "கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்து, நாம் கலந்து கொள்வதே.."

'கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு, கோவிலில் உள்ள தெய்வத்தை நாம் தரிசித்து கொண்டு இருந்தாலே' நமக்கு எல்லா நன்மைகளும் தெய்வ அருளாலேயே ஏற்படும்.

காஞ்சியில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு பிறகு வருகிறார்  என்று கேள்விப்பட்டதும், ஹிந்துக்கள் கூடியதை பாருங்கள்.. இதை விட சான்று வேண்டுமா, ஹிந்துக்களை கோவில்களே காக்கிறது என்பதை...




ஹிந்துக்கள் மறக்க கூடாத சில விஷயங்கள் :

  1. "கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமை.
  2. கோவில் உத்சவங்கள் நடந்த வரை, கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை, ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
  3. கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு மாதமும் நடக்க செய்ய வேண்டும்.
  4. கோவில் திருவிழாக்கள் நின்று போன கோவில்களை, ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு முயற்சி செய்து மீண்டும் விழாக்களை நடத்த வேண்டும். பணம் படைத்தவர்கள் பொருள் உதவி செய்ய வேண்டும்.  உடலாலும்  தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
  5. கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வரை, நிலங்களையோ, வீடுகளையோ, ஹிந்துக்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு, பிற மதத்தினருக்கு விற்றால், கோவில் உத்சவங்கள் நின்று போகும். நம் தெய்வங்கள் மீது பொறாமை கொண்டு விழாக்கள் நடக்க விடாமல் செய்து விடுவார்கள். நம்மால் கோவில்கள் அழிந்த பாவத்தை நாம் சுமக்க கூடாது.
  6. ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ, ஹிந்துக்கள் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.


வாழ்க ஹிந்துக்கள் 


Wednesday 3 July 2019

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்". அதையும் விட சிறந்தது எது? தெரிந்து கொள்வோம். ஜபம் செய்வோம்

மந்திரங்களில் சிறந்தது "காயத்ரி மந்திரம்".


காயத்ரி மந்திரத்தையும் விட சிறந்தது "அஷ்டாக்ஷர மந்திரம்".
"காயத்ரி மந்திரத்தையும்" விட "அஷ்டாக்ஷர மந்திரம்" ஏன் சிறந்தது?
அஷ்டாக்ஷர மந்திரத்தின் விளக்கம் இதோ

கம்சன் கூட "காயத்ரி மந்திரத்தை" ஜபித்தான்.
ராவணனுக்கு புலஸ்திய மகரிஷியே "காயத்ரி மந்திரத்தை" உபதேசம் செய்து, வேத அத்யயனமும் செய்து வைத்தார். தினசரி அக்னி ஹோத்ரம் செய்து வந்தான் ராவணன். ப்ராம்மணன்.
ஹிரண்யகசிபுவும் கஷ்யப ரிஷியிடம் "காயத்ரி மந்திர" உபதேசம் பெற்றவன் தான்.


காயத்ரி மந்திரம் ஜெபித்து விஸ்வாமித்ரர் - "ரிஷி" என்ற அந்தஸ்தை பெற்றார்.
ஆனால் அதே மந்திரம் அனைவரையும் காப்பாற்றவில்லை.

காயத்ரி மந்திரத்தை ஜபித்தும் -  சிசுபாலன், கம்சன், ஹிரண்யகசிபு, ராவணன் அனைவரும் அழிந்து போனார்கள்.
கர்வம் உள்ளவர்களை கை விட்டு விடும் காயத்ரி மந்திரம்.

நாராயண மந்திரம், தீயவனாக இருந்து ஜபித்தாலும், நரர்களான நமக்கு பரமாத்மாவான நாராயணனை துதிப்பதால், நம் தீய குணத்தையும் சரி செய்து, நம் பக்தியை உயர்த்தி, மோக்ஷம் வரை கிடைக்க செய்திடும்.

விளையாட்டாக, தன் மகனை "நாராயணா" என்று மரண தருவாயில் கூப்பிட்ட அஜாமிலன் போன்றவர்கள் கூட, மோக்ஷத்தை அடைந்து விட்டார்கள்.
திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.

ஆனால் காயத்ரியை ஜெபித்து 'எல்லோரும்' கறையேறி விட்டார்கள் என்று சொல்ல முடியாது.

உலக தர்மத்துக்காக கொடுக்கப்பட்டது காயத்ரி மந்திரம். காப்பாற்றினாலும் காப்பாற்றும். ராவணன் போன்றவர்கள் ஜபித்தால்,  கைவிட்டாலும் கைவிடும்.
பகவானால் கொடுக்கப்பட்டது திருவஷ்டாக்ஷர மந்திரம். இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும். மந்திரத்தை ஜபித்தவனை கை விடவே விடாது.


காயத்ரி மந்திரத்தை ஜெபித்தால், காயத்ரி தேவி பலன் கொடுக்கிறாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கு சாஷாத் பரமாத்மா நாராயணனே பலன் தருகிறார் என்பதால், இந்த மந்திரம் அனைவரையும் காப்பாற்றவே காப்பாற்றும்.
"நமே பக்த ப்ரநஸ்யதி" என்று
"என் பக்தன் நாசமாக மாட்டான்" என்று பகவானே வாக்கு கொடுக்கிறார்.

திருமந்திரம் அனைவருக்கும் பொதுவானது.
அனைவரையும் காப்பாற்றக்கூடியது.

மந்திரங்களில் மிகவும் உயர்ந்தது. நிச்சயமாக மோக்ஷம் வரை தர கூடியது என்று கண்டு கொண்ட ஆழ்வார்கள்,
"கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்" என்று ஆனந்தபட்டதில் ஆச்சர்யம் இல்லையே.
4000 திவ்ய ப்ரபந்தமும் நாராயணனையே துதி செய்கிறது.

அதே நாராயணன் தான் நமக்காக கோவிலில் அர்ச்ச அவதாரம் செய்து, நமக்காக காலம் காலமாக காத்து கொண்டு இருக்கிறார்.
சிலையாக அர்ச்ச அவதாரமாக நாராயணன் கோவிலில் இருக்கிறார்.. அவர் பேசுவாரா?
கல்லாக காட்சி கொடுக்கும் அவரிடம் எப்படி பக்தி செய்வது?
என்று நாம் நினைப்போம் என்று தானோ, ஆழ்வார்கள் பூமியில் அவதரித்து, கோவிலில் இருக்கும் அதே அர்ச்ச அவதார பெருமாளிடம் பக்தி செய்து காட்டி, திவ்ய பிரபந்தங்களை பாடியும், பேசியும் பக்தி செய்து, நமக்கும் அந்த திவ்ய பிரபந்தங்களை கொடுத்து விட்டனர்.






'சாஷாத் நாராயணன், அர்ச்ச அவதாரமாக உள்ளார்' என்று அறிந்தும், மோக்ஷத்துக்கு ஆசைப்படும் ஆழ்வார்கள் பக்தி செய்யாமலா இருப்பார்கள்.

அவர்கள் அர்ச்ச அவதாரமாக இருக்கும் நாராயணனிடம் பேசி, உரையாடியதை 4000 திவ்ய ப்ரபந்தமும் நமக்கு காட்டுகிறதே...

கோவிலுக்கு, சென்று பெருமாள் முன் நிற்கும் போது, ஏதாவது சொல்லி பேச வேண்டும் என்று பக்தியுள்ள நமக்கு தோன்றும்.
ஒரு பாசுரம் மனப்பாடம் செய்து சொன்னாலும் மனதில் பக்தி துளிர்க்குமே...  ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டாமா?

சிலர் பேசினாலும் ப்ரயோஜனமில்லாத பேச்சாக இருக்கும்.
பெருமாள் பேசாமல் இருந்தாலும், ப்ரயோஜனமாக இருக்கும்.

பெருமாள் சந்நிதி முன் பக்தன் நிற்கும் போது, பேசாமல் இருக்கிறார் என்று போல தோன்றினாலும், பெருமாள் நம்மிடம் பேசாமல் பேசுகிறார்.

நம் பக்தியை பொறுத்து, நாம் என்ன நினைத்து நிற்கிறோமோ, அதை செய்து கொடுக்கிறார் பெருமாள்.

பக்தன் பெருமாள் சன்னதியில் நின்று கண்ணீர் விடுகிறான். 'மனதில் உள்ள ஒரு குறையை, தெய்வம் தான் தீர்த்து வைக்க வேண்டும்' என்று நினைக்கிறான்.
அங்கு அர்ச்சகர் வேறு யாரையோ பார்த்து "கவலைப்படாதீர்கள்.. பெருமாள் உங்கள் குறையை தீர்ப்பார்" என்று சொல்கிறார்.

தன் குறையை பெருமாளிடம் சொல்லிக்கொண்டு நிற்கும் இந்த பக்தனுக்கு, அர்ச்சகர் சொல்வது காதில் விழுகிறது.
தனக்கு ஏற்பட்ட குறைக்கு, அர்ச்சகர் மூலமாக பெருமாள் தான், தனக்கு பதில் சொல்கிறார் என்று பெரும் நிம்மதியை அடைகிறான் பக்தன்.


பக்தியின் முதல் படியில், பகவான் பேசும் முறை இது.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன்,
தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் யாரோ ஒருவனை போல வந்து "நீ திருப்பதி போ... " என்று பேச ஆரம்பிக்கிறார்.
ஏதோ தெய்வ சங்கல்பம் என்று நினைத்து பக்தன் திருப்பதி செல்ல, அவன் குறைகள் தானாக தீருகிறது.

தன்னிடம் பெருமாள் பேச ஆசைப்படுகிறார், வழி காட்டுகிறார், காப்பாற்றுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பெருமாளே திவ்ய காட்சி கொடுத்து, பேச ஆரம்பிக்கிறார்.
"தான் இப்படி ஒரு திவ்யமான காட்சி கண்டோமே" என்று தனக்குள்ளேயே ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாள் பெருமாளிடம் பக்தி செய்து, பெருமாளை அடையவேண்டும் என்று திருப்பாவை இயற்றினாள். பெருமாளையே மணம் முடிக்க முடிவு செய்தாள்.
ஆண்டாளுக்கே பெருமாள் முதலில் கனவில் தான் காட்சி கொடுத்தார். இதை ஆண்டாளே 'நாச்சியார் திருமொழி'யில் தான் கண்ட கனவை, கனவில் தன்னை பெருமாள் மணந்ததை சொல்கிறாள் ஆண்டாள்.

வாரணம் ஆயிரம் சூழ
வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என் எதிர்,
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்,
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்
இதற்கு பின்பு தான் பெருமாள் உண்மையிலேயே வந்து ஆண்டாளை மணந்து கொள்கிறார்.

தெய்வ கனவுகள் எதுவுமே வீணான கனவுகள் இல்லை.

வேண்டாத கன்னா பின்னா கனவுகள் தான் எப்போதும் வரும். அது தான் இயற்கையும் கூட.

திவ்ய கனவுகள் அபூர்வமாக தான் வரும்.
திவ்ய கனவுகள் தெய்வ அருளால் மட்டுமே காண்கிறோம்.

தெய்வ கனவுகள் நமக்கு ஏற்பட்டால் அதுவே பாக்கியம்.

தூங்குவதற்கு முன், தினமும் "நாராயணா.. நாராயணா.." என்று தெய்வ பக்தியுடன் (அன்புடன்) உண்மையாக பகவானை பிரார்த்தித்து, நமக்கும் திவ்ய காட்சிகள் கிடைக்க பெருமாளிடம் பிரார்த்தித்து பின் தூங்க செல்லலாம்.
நம் உண்மையான அன்புக்கு, பகவான் ஒரு நாள் அணுகிரஹம் செய்வார்.

பகவான் நமக்கு ஏதாவது ரகசியமாக ஏதாவது சொல்ல நினைத்தால், கனவு மூலம் தெரிவிப்பார்.
பெருமாள் நேராக வந்து சொல்லலாமே என்று கேட்கலாம். அவர் வருவதற்கு தயாராக இருந்தாலும், நம் நம்பிக்கை, பக்குவத்தின் நிலையை அறிந்து இருப்பதால், வராமல் இருக்கிறார்.

உலக ஆசைகளே இல்லாத ஸ்ரீராமகிருஷ்ணர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகாத்மாக்களே, கிருஷ்ண தரிசனத்தை நேரில் பெற்ற பின், உன்மத்தமான நிலையை அடைந்து, உலக நினைவில்லாமல் இருந்தனர்.
அவர்களால் கூட தான் கண்ட திவ்ய காட்சியை ஜீரணித்துக்கொண்டு, உலகத்தோடு பழக முடியவில்லை.

கனவில் காட்சி தரும் பகவான், நேரில் வந்து நமக்கு காட்சி கொடுத்தால், நமக்கு உள்ள பக்குவ நிலையில் தாங்கி கொள்ள முடியாமல் உயிர் பிரிந்து விடும் இல்லை மனம் பேதலித்து விடும்.

நம் பக்தியை உயர்த்தி விட தான் பெருமாளுக்கு விருப்பமேயொழிய நம் உயிரை பறிப்பதில் விருப்பம் இல்லை.

தன்னிடம் பேச ஆசைப்படுகிறார் என்று உணர்ந்த பக்தன், தன் பக்தியை இன்னும் வளர்த்து கொள்ள முயற்சித்தான் என்றால், கனவில் பேச ஆரம்பித்த பெருமாள், ஆபத்தான காலங்களில், சமயத்திற்கு யாரோ போல வந்து உபகாரம் செய்து விட்டு மறைந்து விடுவார்.
துளசிதாஸ், நாம தேவர், சக்குபாய், பத்ராசல ராமதாசர் போன்ற பக்தர்கள் வாழ்வில் பாண்டுரங்கன் யாரோ போலவோ வந்து, சமயத்தில் சக்குபாய் போலவும் வந்து லீலைகள் செய்தார்.

தன்னிடம் பெருமாள் உறவாட ஆசைப்படுகிறார் என்று புரிந்து கொண்டு, மேலும் பெருமாளிடம் பக்தி செய்ய,
அர்ச்ச அவதாரமாகவே இருந்தாலும், பெருமாள் நம்முடன் பேச ஆரம்பிக்கிறார்.

திருமழிசை ஆழ்வார் போன்றவர்கள் பேசினால், பேசுவது மட்டுமின்றி, அவர் கூப்பிட்டார் என்றதும், கல் சிலையாக இருந்து கொண்டே, எழுந்து கொண்டு அவருடன் கிளம்பி விட்டார் காஞ்சியில் என்று பார்க்கிறோம்.
யதோகத்காரி பெருமாள், திருமழிசை ஆழ்வார் கூப்பிட்டார் என்று கிளம்ப, சொன்ன வண்ணம் செய்த பெருமாள் என்று பெயர் பெற்றார்.

நாராயணா என்று சொல்லும் அனைவருக்கும் மோக்ஷம்.
நாராயணா என்று சொல்லும் யாருமே நாசம் போவதில்லை.
நாராயணா என்று பக்தியுடன் சொல்ல சொல்ல, பகவான் நாராயணன் தன்னை வெளிக்காட்ட ஆசைப்படுகிறார். மறைமுகமாக தான் இருப்பதை உணர செய்து, பக்தியை (தன்னிடம் அன்பு) ஏற்படுத்தி, படிப்படியாக தன்னை வெளிக்காட்டுகிறார் பெருமாள்.

திருவஷ்டாக்ஷர மந்திரத்தை ஆச்ரயித்து ஜபித்தவன், இன்று வரை அழிந்து போனான் என்ற சரித்திரம் இல்லை. இனிமேலும் இருக்க போவதில்லை.


ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.