Followers

Search Here...

Saturday 17 August 2019

Which is cruel, rare, great, new, pleasant?.. A beautiful conversation with Lord Muruga - அரியது கேட்கும் வடிவடிவேலோய்... தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..

Hanuman Chalisa with meaning (ஹனுமான் சாலிசா அர்த்தத்துடன்) தெரிந்து கொள்ள..இங்கே படிக்கவும்..

This is the beautiful conversation between avvai and muruga (karthik), son of Lord Shiva.
You will Enjoy this beautiful vedic conversation.


Lord Muruga asks avvai:
Avvai tell me, which is "rare"? 
அரியது என்ன...

Avvai grand mother, devotee of Lord Muruga, spells out Vedic Core in her replies..
Avvai says,
Muruga, you are asking me which is rare. Hence i reply. 
This Soul can born as crow or goat or other million species in this world. Hence, It is very rare gift for a soul to born as human.
அரியது கேட்கும் வடிவடிவேலோய்
அரிது அரிது மானிடராதல் அரிது


More than gifted to born as a human being, it is rare gift to born without any disease, blind, deaf. 
மானிடராயினும் கூன் குருடு
செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது

More than gifted to born as a human being,without being blind, deaf and without any disease, it is very rare to be gifted with right education and knowledge.
கூன் குருடு செவிடு பேடு
நீங்கிப் பிறந்தகாலையும்
ஞானமும் கல்வியும் நயத்தலரிது

More than gifted to born as a human being,without being blind, deaf and without any disease, with right education and knowledge,
It is very rare to be gifted to live the life by giving charity to poor and doing penance to think about god. 
ஞானமும் கல்வியும் நயந்தகாலையும்
தானமும் தவமும் தான் செய்தல் அரிது
Those human, who does charity work by giving his knowledge to others and wealth to others and spends his life in penance to think about God, is the the rarest thing in this world. 
Such rare person reaches moksha as well.
தானமும் தவமும் தான் செய்வராயின்
வானவர் நாடு வழி பிறந்திடுமே...


Lord Muruga hearing Avvai response, says
"Avvai Grandma, Your answer to my question on 'which is rare?' has been beautifully explained. 
With extreme happiness i want to hear from you "which is cruel?"
அரியது கேட்டமைக்கு அழகான தமிழில் விளக்கம் தந்த மூதாட்டியே
கொடியது என்ன...

Avvai says,
"Muruga, you are asking me which is cruel?
Being poor (Poverty) is the cruel thing in this world.
கொடியது கேட்கின் வடிவடிவேலோய்
கொடிது கொடிது வறுமை கொடிது
Being poor at young age is more cruel than being poor.
அதனினும் கொடிது இளமையில் வறுமை...

Facing Incurable disease is more cruel than being poor at young age.
அதனினும் கொடிது ஆற்றுணாக் கொடு நோய்

Being with women who have no love towards his husband is more cruel than facing incurable disease.
அதனினும் கொடிது அன்பில்லாப் பெண்டிர்
To get food from such person who don't have love towards us is more cruel than being with woman who have no love to his husband.
அதனினும் கொடிது அவர் கையால் இன்புற உண்பது தானே...

Lord muruga says,
"Excellent. Your ability to compare and explain complex questions makes me happy to talk to you more. Your in-depth knowledge will give victory wherever you go over the entire world.
Oh talented avvai, my devotee, tell me, 'Which is Great?'"
மிக்க மகிழ்ச்சி சொல்லால் தமிழால்
வெல்லாத உலகையெல்லாம் வெல்லும்
திறமை படைத்த ஔவையே
பெரியது என்ன...


Avvai says,
"Muruga... When we look at this big universe (earth, stars, son space etc), we can definitely say that this universe is Great"
பெரியது கேட்கின் நெறி தமிழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
But this Universe is created by Lord Brahma. Hence Brahma is greater than Universe.
புவனமும் நான் முகன் படைப்பு




But Lord Brahma himself born to Narayana thru his Naval.
Hence Lord Narayana is Greater than Lord Brahma.
நான் முகன் கரிய மால் (திருமால்/விஷ்ணு) உந்தியில் (தொப்புள்) வந்தோன்
But Lord Narayana himself resides in cosmic ocean. 
Hence cosmic ocean is Greater than Lord Narayana.
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்

But great yogi (muni) had capacity to hold and control this ocean in their hands with their mighty power.
Hence Yogi are greater than ocean.
அலை கடலோ குருமுனியன் கையிற் அடக்கம்
But yogi is also made of flesh.
Hence this flesh is greater than Yogi.
குருமுனியோ கலசத்துப் பிறந்தோன்


But such yogi's body is created by earth. Hence earth (bharat bhumi) ia greater than yogi's body.
கலசமோ புவியிற் சிறுமண்
But this entire earth is just a small ornament stone over a Snake's forehead in kailash.
Hence that snake in kailash is greater than Earth.
புவியோ அரவினுக்கொரு தலைப் பாரம்

But that Snake itself is worn as a ring for Goddess Uma (wife of Lord Shiva).
Hence Goddess Uma is greater than the snake at kailash. 
அரமோ (அரவம்/பாம்பு) உமையவள் சிறு விரல் மோதிரம்

But Goddess Uma herself is a part of Lord Shiva. 
Hence Lord Shiva ia greater than Goddess Uma.
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
But God Shiva himself resides in the devotee's heart.
Hence Devotee is greater than anyone.
இறைவரோ தொண்டருள்ளத்து ஒடுக்கம்

To talk about the such devotee who serves his life for Lord Shiva is the greatest of all. Greatness of a devotee is incredible.
தொண்டர் தம் பெருமையை சொல்லவும்
பெரிதே...

Lord Muruga with great joy, says
"Avvai Grand lady, its no surprise... your speech not only will attract people in earth, but will attract the heavenly gods and make slave for your speech. Such is the depth knowledge you have.
I want to hear from you one more.. explain me, 
Which is pleasant?"
ஔவையே... வானவரும் உனது
வாக்கிற்கு அடிமையாகி விடுவர் என்றால் அதில் வியப்பில்லை
இனியது என்ன...


Avvai responds to Lord Muruga,
She says
"Muruga, you are asking me which is pleasant.
'Being alone' is the greatest pleasant thing that can happen to a soul.
இனியது கேட்கின் தனிநெடு வேலோய்
இனிது இனிது ஏகாந்தம் இனிது
Praying the supreme god is more pleasant than being alone.
அதனினும் இனிது ஆதியை தொழுதல்
Having Association with great saints, mahatma, yogi is more pleasant than praying supreme god.
அதனினும் இனிது அறிவினம் சேர்தல்
To see the learned mahatma, yogi in person and also in dream all the time (awake, sleep) is the greatest pleasant than just association with great learned mahatma, yogis. (Smaraney sukam)
அதனினும் இனிது அறிவுள்ளோரை
கனவிலும் நனவிலும் காண்பது தானே

Lord Muruga after hearing Avvai beautiful explanation, says
"Avvai, you had explained rare, cruel, great, pleasant with beautiful comparison.
Can u explain which is always new and fresh?"
அரியது கொடியது பெரியது இனியது
அனைத்திற்கும் முறையோடு
விடை பகன்ற ஔவையே
புதியது என்ன...

Avvai says
"Muruga, songs are always new and fresh to soul".
என்றும் புதியது...
பாடல் என்றும் புதியது

More than just a song, songs with excellent meaning are more fresh and new.
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது
The meaningful sensible songs that spells out from a kind hearted spiritual mahatma is always fresh and new.
அருள் நிறைந்த புலவர் நெஞ்சில்
அமுதம் என்னும் தமிழ் கொடுத்த
பொருள் நிறைந்த பாடல் என்றும் புதியது

Muruga, More than meaningful songs, songs which praises you is more fresh and new.
முருகா உன்னை பாடும் பொருள் நிறைந்த
பாடல் என்றும் புதியது

Muruga, the beauty that you possess as a small beautiful boy is always fresh and new.
முருகன் என்ற பெயரில் வந்த
அழகே என்றும் புதியது
Muruga, your beautiful little smile as a young child of Lord Shiva is always fresh and new.
முறுவல் (புன்முறுவல்/சிரிப்பு) காட்டும் குமரன் கொண்ட
இளமை என்றும் புதியது

Muruga, the happiness that your parents (shiva and uma) gets by seeing your play is fresh and new.
உன்னை பெற்ற அன்னையர்க்கு
உனது லீலை புதியது
Muruga, the happiness that your father (shiva) gets by seeing you beautiful little child with spear and sitting in peacock is fresh and new.
உனது தந்தை இறைவனுக்கும்
வேலும் மயிலும் புதியது....
Muruga, for sun and moon, your beautiful child like appearance is fresh and new.
திங்களுக்கும் ஞாயிறுக்கும்
கந்தன் மேனி புதியது

Muruga, those who will become your devotees, son of lord shiva, the blessing you shower on them is fresh and new.
சேர்ந்தவர்க்கு வழங்கும்...
கந்தன் கருணை புதியது
Muruga, your knowledge is priceless and rare...your blessings are unlimited... 
அறிவில் அரியது அருளில் பெரியது

Muruga, your sweet speech in tamil is fresh and new. Your sweet speech in tamil, makes me to swallow your beautiful tamil speech like a food.
அள்ளி அள்ளி உண்ண உண்ண
உனது தமிழ் இனியது
Those great mahatma who knows past, present and future, feel fresh and new by seeing your 6 faces of Avatar.
முதலில் முடிவது முடிவில் முதலது
மூன்று காலம் உணர்ந்த பேர்க்கு
ஆறுமுகம் புதியது.
Enjoy this beautiful interaction in this song...

Interested to Read More? Click Here -> Is Meat Eating is wrong? Why cant we eat Meat?



Thursday 15 August 2019

சந்தியா வந்தனத்தை, மகான்கள் எப்படி பார்க்கிறார்கள்? நாம் தெரிந்து கொள்வோமே...

சந்தியா வந்தன மந்திரங்களை,
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை),
நாம் நன்றாக கவனித்தோமானால்,
அதில் அதி அற்புதமான "ஆனந்தம்" என்ற பொக்கிஷம் உள்ளது என்று புரிந்து விடும்.


மேலும் நாம் நன்றாக கவனித்தோமானால்,
ஒரு சாதாரண மனிதன், பகவானை எந்த வழியில் அடைய முயற்சிக்க வேண்டும்? என்ற ரகசியமும் வெளிப்படையாக காட்டுகிறது என்பதும் புரிந்து விடும்.   .

ஒரு சின்ன 5 நிமிட பிரார்த்தனையில் "வேதத்தின் சாரத்தை, பேரானந்தத்தை தரக்கூடிய பொக்கிஷத்தை அடக்கி கொண்டு உள்ளது, சந்தியா வந்தனம்" என்று புரிந்து விடும்.

இந்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் புரிந்து இருப்பதால், சந்தியா வந்தனம் செய்வதை மிகவும் விரும்பி செய்கிறார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போது மகாத்மாக்கள் அனுபவிக்கும் அந்த ஆனந்தம் என்ன? என்று நாமும் புரிந்து கொள்வோமே!!
ஆரம்பத்தில் இருந்து கடைசி வரை சந்தியா வந்தனம் எப்படி உள்ளது? என்று நன்றாக கவனித்து பாருங்கள்..

"அச்சுதாய நம:, அனந்தாய நம:, கோவிந்தாய நம:" என்று சொல்லும் போது,
இது "பகவானின் பெயர்கள், வேத மந்திரங்கள்" என்று மட்டும் நாம் நினைத்தால், மகாத்மாக்கள் அனுபவிக்கும் ஆனந்தத்தை நாம் புரிந்து கொள்ள முடியாது, நாம் அனுபவிக்கவும் முடியாது.
மகாத்மாக்கள் "அச்சுதா அனந்தா, கோவிந்தா" என்று பரமாத்மாவின் பல பெயர்களை சொல்ல சொல்ல,
பகவானின் பெயரை தன் வாயார சொல்லி அழைக்க, ஆனந்தமாக அனுபவிக்க கிடைத்த வாய்ப்பாக பார்க்கிறார்கள்.

ஒவ்வொரு பெயரையும் சொல்லும் போதே, பஜனை செய்த ஆனந்தத்தை மகாத்மாக்கள் அனுபவிக்கிறார்கள்.
கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, மதுசூதனா, த்ரிவிக்ரமா, என்று சொல்ல சொல்ல பஜனை செய்த ஆனந்தத்தில் மகாத்மாக்கள்  திளைக்கிறார்கள்.

இதனால் மகாத்மாக்கள், சந்தியா வந்தனத்தை ஆசை ஆசையாக செய்கிறார்கள்.

தனியாக பஜனை செய்ய கூட தேவை இல்லாமல், சந்தியா வந்தனமே பரமாத்மாவை பல பெயர்கள் கொண்டு பஜிக்கும் அழகை மகாத்மாக்கள் ரசிக்கிறார்கள்.
"மமோபாத்த சமஸ்த.." என்று சொல்லி, "பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்று முடிக்கும் போது,
"பரமேஸ்வரன் நான் செய்யும் சந்தியா வந்தனத்தை கண்டு ஆனந்தம் அடைகிறார். என்னை கண்டு பிரியம் கொள்கிறார்" என்று சொல்லும் போதே தான் செய்யும் சந்தியா வந்தனத்தில் பரமேஸ்வரன் ப்ரீத்தி அடைகிறாரே !! என்று மகாத்மாக்கள் மேலும் உற்சாகம் அடைகின்றனர்.


"தான் மட்டும் ஆனந்தத்தை அனுபவிக்கவில்லை. 
சந்தியா வந்தனம் செய்யும் என்னை பார்த்து பரமேஸ்வரனும் பிரியம் கொள்கிறார்" என்ற உண்மையை உணர்ந்து, மேலும் உற்சாகமாக அடைகிறார்கள்.

சந்தியா வந்தனமே, ஆரம்பம் முதல் கடைசி வரை பகவானின் பெயரை சொல்லி சொல்லி ஆனந்தத்தில் நம்மை ஆழ்த்தும், நமக்கு செய்ய கிடைத்த வாய்ப்பு என்று புரியும். 

சந்தியா வந்தனமே மகாத்மாக்களுக்கு பஜனையாக தெரிகிறது. பகவானை பஜிக்க கசக்குமா?

ஆரம்பமே பரமாத்மாவை எப்படி பஜிக்கிறது பாருங்கள்.

அச்சுதா நம (நிலையான பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)
அனந்தாய நம (எல்லையற்று இருக்கும் பரமாத்மாவே, உமக்கு நமஸ்காரம்)

அச்சுதா, ஆனந்தா என்று சொல்லி, பரமாத்மாவை பஜிக்க கசக்குமா?
மகாத்மாக்கள் இந்த ஆனந்தத்தை அனுபவிப்பதாலேயே சந்தியா வந்தனம் செய்ய மிகவும் பிரியப்படுகிறார்கள்.

இது மட்டுமா?...
சந்தியா வந்தனம் அமைக்கப்பட்ட க்ரமத்தை (வரிசையை) நன்றாக கவனியுங்கள்.

பொதுவாக, மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்ள முயற்சி செய்கிறான்.

தான் செய்யும் தினசரி காரியங்களையே (கர்மா) 'தெய்வம் நாம் செய்யும் செயலை பார்த்து ப்ரீத்தி (சந்தோஷம்) கொள்ளட்டும். தெய்வத்துக்காக செய்கிறேன்' என்று செய்ய ஆரம்பிக்கிறான்.
அப்போது, கர்மாவையே (செயல்கள்) யோக முறையில் செய்ய ஆரம்பிக்கிறான்.
"கர்ம யோகி" ஆகிறான்.
மனிதன் தன் பக்தியை உயர்த்தி கொள்கிறான்.

கர்ம யோகத்தின் பலனாக தெய்வ சிந்தனையுடனேயே இருந்ததால், மெதுவாக தெய்வத்துக்கு என்று நேரம் ஒதுக்கி, அவரை பற்றி நினைக்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவை (ஞானத்தை) வளர்த்து கொள்ள ஆரம்பிக்கிறான்.
அப்போது, தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற, ஞான யோக முறையில் முயற்சி செய்ய ஆரம்பிக்கிறான்.
"ஞான யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மேலும் உயர்த்தி கொள்கிறான்.
தெய்வத்தை பற்றிய அறிவு (ஞானம்) பெற்றபின், "அவரை அடைந்தே தீர வேண்டுமென்றும், அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆர்வத்தை பெறுகிறான்.
ஆழ்வார்களை போன்றும், நாயன்மார்களை போன்றும், ஆனந்தமாக பஜிக்க ஆரம்பிக்கிறான். பகவானிடத்தில் ப்ரேம பக்தி செய்கிறான்.
"பக்தி யோகி" ஆகிறான்
மனிதன் தன் பக்தியை, மென்மேலும் உயர்த்தி கொள்கிறான்.



எல்லா திசைகளிலும், அனைத்து தேவதைகளிலும், "பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.
யாரை பார்த்தாலும், பரமாத்மா வாசுதேவன்" இருப்பதை பார்க்கிறான்.

"அனந்தாய நம" என்ற சொற்களின் அர்த்தத்தை, அனுபவத்தை பெறுகிறான்.

இறுதியில் தெய்வ தரிசனம் பெற்ற பின்,
இனி சம்சார சூழலில் சிக்கி மீண்டும் பிறக்க ஆசைப்படாமல் இருக்க, "தான் செய்த பாவ, புண்ணியங்கள் அனைத்தையும் நாராயணின் திருவடிகளில் சமர்ப்பித்து விட", பரமாத்மா வாசுதேவன் அந்த ஜீவனுக்கு தன் இருப்பிடமான அழியாத வைகுண்டத்தில் நித்ய வாசம் செய்ய அனுக்கிரஹம் செய்து,
தன்னை எப்பொழுதும் தரிசித்து கொண்டே இருக்க அனுக்கிரஹம் செய்து, சம்சார சூழலில் இருந்து காப்பாற்றி விடுகிறார்.             

இதையே பகவத் கீதையில்,
"கர்ம மார்க்கம்" என்றால் என்ன? கர்ம மார்க்கத்தில் உள்ள  "கர்ம யோகி" எப்படி இருப்பார்?
"ஞான மார்க்கம்" என்றால் என்ன? ஞான மார்க்கத்தில் உள்ள "ஞானி" எப்படி இருப்பார்?
"பக்தி மார்க்கம்" என்றால் என்ன? பக்தி மார்க்கத்தில் உள்ள "பக்தன்" எப்படி இருப்பார்?
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கி சொல்கிறார்.
கடைசியில், 
இந்த மார்க்கங்களை கடந்து, "மோக்ஷத்தை அடைய, அனைத்து பாவ புண்ணியங்களையும் தன் திருவடிகளில் சமர்ப்பித்து, தன் ஒருவனையே சரணடைந்து விடு" 
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியில் காட்டி, மோக்ஷத்திற்கான வழியையும் காட்டுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவானை அடைய 
"கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம்" போன்ற வழிகளில் சென்று, கடைசியில் பெருமாளே கதி என்று, "உன் பாவ புண்ணியங்கள் அனைத்தையும் பெருமாளிடம் சரண் செய்து விடு" என்று சொல்லப்படும் மோக்ஷத்திற்கான வழியை
5 நிமிட சந்தியா வந்தனத்தில் அடங்கி உள்ளதை, மகாத்மாக்கள் பார்க்கின்றனர்.

சந்தியா வந்தனம் செய்யும் முறையை நன்றாக கவனித்தால்,
நாம் செய்யும் இந்த பிரார்த்தனையில் முதல் பகுதி "கர்ம யோகமாகவே" செய்வது நமக்கு புரியும்.
பகவானின் நாமத்தை சொல்லி சொல்லி,
தீர்த்தத்தை எடுத்துக்கொண்டும்,
நம் மீது புரோக்ஷித்துக்கொண்டும்,
நவ கிரஹங்களுக்கு தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்தும்,
வ்யூஹ அவதாரமாக உள்ள பரவாசுதேவனுக்கும் தீர்த்தம் கொடுத்து திருப்தி (தர்ப்பணம்) செய்வதையும் பார்க்க, முழுக்க முழுக்க  ஒரு கர்மாவை (செயல்) போல இருந்தாலும்,
பகவானின் பெயரை சொல்லிக்கொண்டே செய்வதால், "கர்ம யோகமாக" நாம் செய்வது புலப்படும்.


"கர்ம யோகம்" முடிந்து, "ஞான யோகம்" செல்லும் போது, நாம் செய்யும் சந்தியா வந்தனத்தை பாருங்கள்..
பகவானை மனதால் தியானித்து, ஞான அனுபவத்தை பெற,
பிரணவ ஜபம், காயத்ரி ஜபம் செய்வதை கவனித்தால்,
"ஞான மார்கத்தை" சந்தியா வந்தனம் நமக்கு காட்டுவது புரியும்.

பகவானை பற்றி ஜபத்தாலும், தியானத்தாலும், அறிவு (ஞானம்) பெற்ற பின், 
சந்தியா வந்தனம் நமக்கு, பக்தி மார்க்கத்தை காட்டுவதை கவனியுங்கள்.
"பகவானை காண வேண்டும்" என்ற ஆர்வம் ஏற்பட்டு, சூரியனை பார்த்து, சூரியனுக்கும் சூரிய நாராயணனாக, பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார் என்று சூரியனை கை கூப்பி வணங்குவதும்,
எல்லா திசைகளுக்கும், யமனுக்கு, அனைத்து தேவதைகளுக்கும், கடைசியில் நாராயணனுக்கும் வணங்குவதை பார்த்தால்,
பக்தி மார்க்கத்தில் ஆனந்த கூத்தாடும் பக்தனை போல நாம் இருப்பது புரியும்.
கடைசியில் சூரிய நாராயணனையே சரணம் அடைந்து,
தான் செய்த அனைத்து பாவ புண்ணியங்களை "நாராயணாயேதி சமர்பயாமி" என்று நாம் சொல்லி முடிப்பதை பார்த்தால், மோக்ஷ மார்க்கத்தை நமக்கு சந்தியா வந்தனம் காட்டுவது புரியும். 
இந்த அனுபவத்தில் சந்தியா வந்தன மந்திரங்களை சொல்லும் போது, 
"பஜனை செய்யும் ஆனந்தத்தையும்",
சந்தியா வந்தன க்ரமத்தை (வரிசையை) பார்க்கும் போது,
அதில் "ஜீவன் மோக்ஷம் வரை செல்லும் பாதை காட்டப்படுவதை" மகாத்மாக்கள் கவனிக்கின்றனர்.

சந்தியா வந்தனத்தை விரும்பி விரும்பி செய்கிறார்கள் மகாத்மாக்கள்.

மகாத்மாக்களின் இந்த அனுபவத்தை, நாம் உணரும் போது, 
நமக்கு சந்தியா வந்தனம் செய்ய ஆசை வந்தே தீரும்.




அர்த்தங்களுடன் சந்தியா வந்தனம் தெரிந்து கொள்வோமே...
அர்த்தங்கள் தெரிந்து கொள்வதின் மூலம் தான், ஸ்ரத்தை (ஈடுபாடு) நமக்கு வரும்.
நமக்கு சந்தியா வந்தனத்தில் ஈடுபாடு வர, அர்த்தங்களை புரிந்து கொள்வதும் அவசியம்.

இதோ...


Sandhya Vandanam -  Morning (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)





Wednesday 14 August 2019

இந்திய சுதந்திரத்துக்கு முன்.. பாரத இஸ்லாமிய, பாரத ஹிந்துக்கள் சந்தித்த பிரிவினை சக்திகள்... தெரிந்து கொள்வோமே

"அரேபிய இஸ்லாமியர்கள்" 947ADல் ஆரம்பித்து "கோரி, மாம்லுக், கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய" என்று 1800AD வரை பாரத தேசத்தை பெரும் சேதத்துக்கு உள்ளாகினர்.
அரேபிய முஸ்லீம்கள் பாரத தேசத்தில் நுழைந்து, சில ஆயிரம் பேர் இன்று வரை இந்தியனாக கூட சிலர் வாழ்கின்றனர். இதை மறுக்க முடியாது.
அவர்கள் நிறம் அவர்களை அடையாளப்படுத்துகிறது.



1720ல் முகலாய அரேபிய முஸ்லிம் ஆட்சி, அழிவை நோக்கி நகர்ந்தது.
"பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்", முகலாய அரேபிய முஸ்லிம்களை அடியோடு டெல்லி, பெங்கால், தமிழகம் போன்றவற்றில் இருந்து அகற்றினார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில், (947AD - 1720AD) 800 வருடங்களாக அரேபிய முஸ்லீம்களால், முஸ்லீமாக மாற்றப்பட்டு இருந்த சில லட்சம் பாரத மக்கள், கிறிஸ்தவர்கள் ஆட்சியில் கஞ்சிக்கு அலையும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

800 வருடங்களாகவே நசுக்கப்பட்டு இருந்த ஹிந்துக்கள், ஏழைகளாக வாழ்ந்தார்கள்.



மஹாராஷ்டிரா, கர்நாடக, ஆந்திர தேசங்கள் பெரும்பாலும் மராட்டிய ஹிந்து அரசர்களால் வலுவாக இருந்தது.
மேற்கு பாரதம் ஹிந்து ராஜ்யத்தில் இருந்தது.
ஆங்காங்கு இஸ்லாமிய ஆட்சியும் நடந்தது.

ஹிந்து ராஜ்யத்தை அழித்தால் தான், "இந்தியா முழுவதும் கிறிஸ்தவர்கள் கையில் வரும்" என்று, போர்ச்சுகல், பிரெஞ்ச், பிரிட்டிஷ் அனைவரும் சேர்ந்து கொண்டனர்.

மராட்டியர்களுடன் போர் தொடுத்து முதல் போரில் தோல்வி அடைந்தார்கள் பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள்.
மீண்டும் 1803ADல் இரண்டாவது முறை, மராட்டிய ஹிந்து ராஜ்யத்தை அழிக்க போர் தொடுத்தனர் பிரிட்டிஷ்காரர்கள்.


ஆப்கான் நாட்டில் இருந்து இந்தியாவுக்குள் கில்ஜி காலத்தில் இருந்தே தங்கி இருந்த ஒரு ஆப்கான் முஸ்லீம் கூட்டம், "Faiz Talab Khan" என்பவன் தலைமையில், சமயத்தில் தன் சிறு படையை பிரிட்டிஷ்கார படை பக்கம் நிறுத்தியது.
2வது Anglo-maratha போரில், மராட்டிய ராஜ்யத்தில் இருந்த பல  ஹிந்து ராஜ்யங்கள், பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் கைப்பற்றினார்கள்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் "Faiz Talab Khan"க்கு நவாப் (Viceroy) என்ற பட்டத்தை கொடுத்து, தாங்கள் கைப்பற்றி இருந்த ஹாயானாவில் உள்ள "பட்டோடி" என்ற ஊரையும் அதை சுற்றி உள்ள 40 கிராமங்களையும் 1804ADல் நிர்வாகம் செய்து கொள்ள பிச்சை போட்டனர்.

ஹிந்துக்களை அழிக்க உதவிய ஆப்கான்காரன் Faiz Talab Khan "Nawab of Pataudi" என்று அழைக்கப்பட்டான். 
மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யம் அழிய, உதவி செய்த இந்த ஆப்கான் முஸ்லீம் (nawab of pataudi) குடும்பம் இன்று இந்திய ப்ரஜைகள்.

இவர்கள் நாங்கள் தான் "உண்மையான முஸ்லீம்கள்" என்று சொன்னால் கூட ஏற்க தான் வேண்டி இருக்கிறது.


முகலாய அரேபிய 'முஸ்லீம்' ஆட்சியை வேரோடு அறுக்க, பிரிட்டிஷ் 'கிறிஸ்தவர்கள்', பிரெஞ்ச், போர்ச்சுகல் போன்றவர்கள் துணையுடன், விஜயநகர 'ஹிந்து' சாம்ராஜ்யத்தின் துணையையும் பெற்று அழித்தனர்.

(947AD - 1720AD) 800 வருடங்கள் பயத்தால், பதவியால், இஸ்லாமுக்கு மாறி இருந்த அனைவரும் பிச்சைக்காரர்கள் ஆனார்கள்.

மராட்டிய ஹிந்து சாம்ராஜ்யத்தை, ஆப்கான் முஸ்லீம்கள் துணை செய்ய, பிரெஞ்ச் கிறிஸ்தவர்களின் துணை கொண்டு மூன்றாவது முறை செய்த போரில் வெற்றி கண்டனர்.

947ADல் அரேபிய இஸ்லாமியர்கள் உள்ளே நுழைந்து, ஹிந்துக்களை தாக்க, ஹிந்துக்களாக இருந்த பொது மக்கள் ஏழைகள் ஆனார்கள்.

1720ADகளில் அரேபிய இஸ்லாமியர்களை, பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் ஹிந்துக்களின் துணை கொண்டு அழித்து, கோரி, கில்ஜி, துக்ளக், சயித், லோடி, முகலாய என்று தொடர்ந்து கொண்டிருந்த அரேபிய இஸ்லாமிய ஆட்சியை வேரோடு அறுத்து, அரேபிய முஸ்லீம்கள் அழிக்கப்பட்டனர்.

1800ADகளின் ஆரம்பத்தில், மராட்டிய போன்ற ஹிந்து ராஜ்யங்களை அழிக்க, மீதம் இருக்கும் சில குட்டி முஸ்லீம் அரசர்கள் துணை கொண்டு, பெரும் ஹிந்து ராஜ்யங்களையும் முடிவுக்கு கொண்டு வந்தனர் கிறிஸ்தவர்கள்.

1857ADல், அரேபிய முஸ்லீம்கள் ஒருவர் கூட இல்லை.
அவரவர்கள் அவர்கள் ஊருக்கு போய் விட்ட நிலையில்,
900 வருடங்களாக ஏழையாக போய் இருந்த ஹிந்து பொது மக்களுடன், அரேபியர்களால் முஸ்லீமாக மதம் மாறியும் 100 வருடங்களாக கிறிஸ்தவ ஆக்கிரமிப்பில் சிக்கிய பாரத மக்கள், கிறிஸ்தவ பிரிட்டிஷ்காரர்களுக்கு அடிமை வேலை செய்ய ஆரம்பித்தனர்.

கிறிஸ்தவர்கள், 
"ஹிந்துவை அழிக்க இஸ்லாமியனை",
"இஸ்லாமியனை அழிக்க ஹிந்துவையும்"
பயன்படுத்தி பெரும் வெற்றி கண்டனர்.

அரேபிய ஆட்சி காலத்தில், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்தவர்கள், 1720ADக்கு பின், 100 வருடங்களாக, கிறிஸ்தவர்கள் ஆதிக்கம் தலையெடுக்க, பிழைப்புக்கு கிடைத்த வேளைகளில் நுழைந்தனர்.






கிறிஸ்தவ பிரிட்டிஷ் ராணுவத்தில், மதம் மாறி இருந்த இஸ்லாமியர்களும், ஹிந்துக்களும் வேலைக்காக  சேர்த்தனர்.
"கிறிஸ்தவர்களை எதிர்க்கும்  ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை" ஹிந்துக்களை, இஸ்லாமியர்களை வைத்தே சண்டையிட செய்தனர்.

அப்போது பிரிட்டிஷ் கிறிஸ்தவர்களால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட "என்பீல்டு வகை துப்பாக்கிகளுக்கு" வழங்கப்பட்ட தோட்டாக்கள் ஒரு வகை உறையால் மூடப்பட்டிருந்தன.
இவற்றை வாயால் கடித்து உறைகளை அகற்ற வேண்டியிருந்தது.

இந்த உறைகள் "மாட்டுக் கொழுப்பு" மற்றும் "பன்றிக் கொழுப்பினால்" ஆனவை என்று தகவல் பரவியது.

இது "இந்து" மற்றும் "முஸ்லிம்" சமயத்தைச் சார்ந்த ராணுவ வீரர்களின் சமய உணர்வை புண்படுத்துவதாக ராணுவ வீரர்கள் எண்ணினர்.

இதன் காரணமாக ராணுவ வீரர்கள் அவ்வகை உறைகளை வாயால் கடித்து நீக்க மறுத்து உயர் அதிகாரிகளை எதிர்த்தனர்.
இதன் தொடர்ச்சியாக 1857 மார்ச் 29 ஆம் நாளில் மங்கல் பாண்டே (Mangal Pandey) என்ற ராணுவ வீரர் ஒருவர் பாரக்பூரில், தனது உயரதிகாரியை தாக்கி தன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

இது ஆங்கிலேய ராணுவத்தில் பணிபுரிந்த இந்திய வீரர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட ஒரு ஆரம்பமாக அமைந்தது.
அடுத்த 100 வருடங்கள் ஹிந்துக்கள், இஸ்லாமியனாக மதம் மாறி இருந்த ஹிந்துக்கள் "கிறிஸ்தவ ஆட்சியை" எதிர்த்தனர்.


இதற்கிடையில் பிரிட்டிஷ்காரர்கள் ஜெர்மனியுடன் மோத, இரண்டு முறை உலக போர் மூண்டது..
பெரும் சவாலை தங்கள் நாட்டில் எதிர்கொண்டு இருந்த பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள், இந்தியாவில் நடக்கும் கலவரங்களை கட்டுப்படுத்த வழி தெரியாமல், ஊரை விட்டு கிளம்ப முடிவு செய்தனர்.

"விடுதலை கிடைக்க போகிறது" என்ற நிலை வந்ததும்,
"முஸ்லீமாக 800 வருடங்களாக வாழும் தங்களுக்கு தனி இடம் தேவை" என்று ஜின்னா சொல்ல, அதனால் பல உயிர் சேதங்கள் ஏற்பட,
காந்தி, பாரத தேசத்தின் பெங்கால் தேசத்தின் ஒரு பகுதியை, சிந்து தேசத்தை 
"இஸ்லாமிய தேசமாக மாற்றி கொள்ள" அனுமதித்தார்.
நேருவை "இந்திய நாட்டுக்கு பிரதமராக" இருக்க செய்தார்.

'சிந்து தேசத்தில் இருந்த ஹிந்துக்கள்' கலவரத்தில் இறந்தும், பலர் இந்தியா என்று பிரிக்கப்பட்ட பாரத தேசத்தில் குடி பெயர்ந்தனர்.

அதே போல,
பல லட்சம் முஸ்லீம்கள் சிந்து தேசத்துக்கும், இன்றைய பங்களாதேஷ்க்கும் குடி பெயர்ந்தனர்.

ஜின்னா "பாகிஸ்தான், பங்களாதேஷ் இஸ்லாமிய நாடு" என்று சட்டம் ஏற்படுத்தினார்.
ஸ்ரீ ராமரின் மகன் லவன் உருவாக்கிய லவபுரம் (லாகூர்) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

ஸ்ரீ ராமரின் தம்பி பரதன் உருவாக்கிய புருஷபுரா (பெஷாவர்), தக்ஷசீலம் (Taxila) முழுவதும் இஸ்லாமிய நகரம் ஆனது.

அருமையான ஹிந்து தேசங்கள் "சாம, தான, பேத, தண்ட" நீதி படி, இஸ்லாமியர்களாக வாழும் நம் சகோதரர்களுக்கு "தானமாக" தரப்பட்டது.
ராமரின் மகன், தம்பிகள் ஆண்ட ஹிந்து தேசத்தை இழந்தாலும், நிலைமையை உணர்ந்து முடிவை மதித்தனர், ஹிந்துக்கள்.

ஆனால், நேரு "இந்திய தேசம் ஹிந்து ராஜ்யம்" என்று சொல்ல மறந்தார். மறுத்தார்.


1947AD Aug 14, பாகிஸ்தான் கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து முதலில் விடுதலை பெற்றது.
1947ADல் Aug 15, இந்தியா என்ற பெயரில் பிரிக்கப்பட்ட பாரத தேசம், கிறிஸ்தவ ஆட்சியில் இருந்து விடுதலை பெற்றது.

1526ADல் இந்தியாவில் நுழைந்து, அயோத்தியில் ஸ்ரீ ராமர் அவதரித்த கோவிலை அரேபியன் பாபர் இடித்து மசூதி கட்டினான்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன போது, இந்தியா 'ஹிந்து ராஜ்யம்' என்று நேரு அறிவிக்காததால்,
"பாபர் அரேபியனாக இருந்தாலும், மசூதியை இடிக்ககூடாது, இது எங்கள் நிலம்"
என்று பாகிஸ்தான் செல்ல மறுத்த இந்தியாவில் இருக்கும் ஒரு சில ஆயிரம் இஸ்லாமியர்கள் எதிர்த்தனர்... எதிர்க்கின்றனர்... சிலர் சரித்திரத்தை புரிந்து கொண்டு ஆதரிக்கின்ற்னர்.

1947ADல் பாகிஸ்தான் 'இஸ்லாமிய ராஜ்யம்' என்று ஜின்னா சொன்ன பிறகு, பாகிஸ்தான் முழுவதும் இருந்த கோவில்கள், பௌத்த ஆலயங்கள் இடிக்கப்பட்டு விட்டன.

800 வருடங்களுக்கு முன் அரேபிய அடக்குமுறையாலும், பயத்தாலும், பதவிக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறிய பாரத மக்கள்,
எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாமல், பதவிக்கு மயங்காமல்  ஹிந்துக்களாகவே 1000 வருடமும் இருந்து, இன்று வரை இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

1000 வருடங்களில் எத்தனை செல்வங்கள் இழந்து இருக்கிறோம்!! என்று புரியாமல், ஹிந்துக்களாகவே இவர்கள்  இருப்பதை பார்த்து பொறாமை அடைகிறார்கள்...

48000 பெரும் கோவில்களை இடித்தார்கள் அரேபியர்கள் என்ற உண்மை தெரிந்தும், ஒரு அயோத்தி கோவில் கட்ட எதிர்க்கிறார்கள். 


எத்தனை இடிக்கப்பட்ட கோவில்கள் இன்றும் காட்சி பொருளாக உள்ளது!!
இதை பார்த்தும் இன்று முஸ்லீமாக உள்ள பாரத மக்களுக்கு, ஹிந்துவாக உள்ள பாரத மக்களின் உணர்வு புரியவில்லை.

"தாங்களே மதம் மாற்றப்பட்டவர்கள் தான்" என்பது கூட புரிந்து கொள்ளும் பக்குவத்தை இழந்து உள்ளனர்.
பிரிக்கப்பட்ட பாரத தேசத்தை, மீண்டும் பிரிவினை செய்ய முயற்சிக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் தான் வாழ ஹிந்துவை சேர்த்து கொள்வான்.
தேவைப்பட்டால் முஸ்லீமையும் சேர்த்து கொள்வான் என்று சரித்திரமே சான்று கூறுகிறது.

இஸ்லாமியர்களை அழிக்க, ஹிந்துக்களை துணை கொண்டனர்.
ஹிந்துக்களை அழிக்க இஸ்லாமியர்களை துணை கொண்டனர்.
கடைசியில் இருவரையும் அடிமை ஆக்கி (1847AD - 1947AD)100 வருடங்கள் முழுமையாக ஆண்டனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

ஹிந்துவை எதிர்ப்பதாக நினைத்து, சுதந்திரம் அடைய தானும் பாடுபட்ட பாரத நாட்டு இஸ்லாமியன், கிறிஸ்தவனோடு சேர்கிறான்.

பாரத தேச இஸ்லாமியர்கள், ஹிந்துக்களின் உணர்வை மதிக்க வேண்டும்.

ஹிந்துக்கள் என்றுமே இஸ்லாமியனுக்கோ, கிறிஸ்தவனுக்கோ கூட பகைவனாக இருந்ததில்லை.

அமெரிக்க கிறிஸ்தவனும் இந்தியாவை மதிக்கிறான்.
இன்று சௌதி அரேபிய இஸ்லாமியனும் இந்தியாவை மதிக்கிறான்.
அரேபிய முஸ்லிம்களே இந்தியா ஹிந்து நாடு தான், நாங்கள் உள்ளே நுழைந்த பின் இஸ்லாமிய மதம் பூகுத்தப்பட்டது என்று சரத்திர உண்மையை ஆமோதிக்கிறார்கள்.

இஸ்லாமிய தேசமாகி போன பாகிஸ்தானை ஒருவனும் மதிப்பதில்லை.



"தாங்கள் ஹிந்துக்களாக வாழ்ந்து,  கில்ஜி அரசாட்சி சமயத்தில் இஸ்லாமியர்களாக ஆனவர்கள் தான்' என்று உண்மையை சொல்லும் முஸ்லிம்கள் இன்றும் இந்தியாவில் உள்ளனர்.

"மேயோ (Mev or Mewat) முஸ்லீம் மக்கள்" உண்மையை ஒப்புக்கொள்ளும் பக்குவம் கொண்டு இருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் அடையாளங்களை இன்று வரை  மறைக்கவில்லை.

இஸ்லாமியனாக மாறி குர்ஆன் தன் மத நூலாக ஏற்றாலும், இந்த சமூகம், "சங்கர் கான்", "ராம் கான்" என்று பெயர்களை வைத்து கொள்ள தயங்கவில்லை.
இவர்களிடம் ஹிந்துக்களும் தங்கள் வெறுப்பை காட்டுவதில்லை.
இவர்கள் முஸ்லீமாகவே தான் வாழ்கின்றனர்.

இவர்கள் ஈத் கொண்டாடுவது போல, ஹோலி, தீபாவளியும் கொண்டாடுகிறார்கள்.

குர்ரானில் பெயர் சொல்லப்படாத இறைவன் ராமர் தான் என்று, ராமரையும் அவர்கள் மதிக்கிறார்கள்.

ஹிந்துக்களின் உணர்வை, தாங்கள் எப்படி இஸ்லாமியனாக ஆனோம் என்ற சரித்திரத்தை பின்னோக்கி பார்த்தல், நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று தெரிந்து விடும்.

ஹிந்துக்களின் உணர்வுகள், இழப்புகள்  947ADல் இருந்தே உள்ளது...
மதம் மாறி போன இசுலாமியர்களுக்கு, மதம் மாற்றப்பட்டதே ஒரு பேரிழப்பு தான்.  

சரித்திர உண்மைகளை புரிந்து கொள்வோம்.
ஊரில் புகுந்து அட்டகாசம் செய்த அரபியர்களே, இன்று இந்தியர்களுடன் நட்பு கொள்ளும் போது, 
ஹிந்துக்களின் உணர்வை, நம்பிக்கையை காயப்படுத்தும் செயல்களில் ஈடுபடுவது நியாயம் ஆகாது.  



Tuesday 13 August 2019

ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்?...காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள். "ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.



சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.

"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.

இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.

நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.

இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.

இன்று புரியாமல் போனாலும்,  ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.

"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...

இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.

தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.

'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.

வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.

"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.

புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
'கேசவ, நாராயண, மாதவா' என்று சொல்லும் போதே பஜனை செய்யும் ஆனந்தம் மகான்களுக்கு ஏற்படுகிறது.

அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.

'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.


டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.

மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.

"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".

இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".

4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.

மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.

வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.

வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..

வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..

ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?






வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே.. 
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.

வேத மந்திரங்கள் மருந்து போன்றது.

அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.

நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.

போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது. 

உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) இருக்க வேண்டும்.

ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.


சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.

நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.

ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.

"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.

பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.

சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.

பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால், 
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.

இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.

வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.

இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.

வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.

அன்றைய காலத்தில் "குரு  சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..

போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.

இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.

இன்று, பல ப்ராம்மணரகள்

  • சூத்திர தொழில் செய்வதால் (employee),
  • ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
  • சுய தொழில், மருத்துவம் செய்வதால்,

அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.

வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.

அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.

சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.

"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".

வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"

"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.

ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.

வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.

சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.

புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.

வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.


உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.

நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.

தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.

மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.

ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.