Followers

Search Here...

Tuesday 10 September 2019

உடுப்பி கிருஷ்ணர் எப்படி வந்தார்? அணையா விளக்கு கோவிலில் ஏற்றுகிறார்களே!! அணையா விளக்கு என்று எதை சொல்கிறார் திருமங்கையாழ்வார்? தெரிந்து கொள்வோமே...

பத்ரிநாத்தில் "நர-நாராயணன்" இருக்கிறார்.
வட இந்திய யாத்திரை சென்றவர்கள் பதரி நாராயணனை கட்டாயம் தரிசித்து இருப்பார்கள்.



நாகப்பட்டினம் திருநாங்கூரில் உள்ள "மணிமாட கோவிலில்" பெருமாள், "நாராயணன்" என்ற பெயரில் அருள் செய்கிறார்.

வட இந்தியாவில் உள்ள பதரிநாத் வரை சென்று, நர-நாராயணனை நம்மால் பார்க்க இயலாது போனால், அதே பெருமாளை மணிமாட கோவிலில் நாம் தரிசிக்கலாம்.

பெருமாள் கருணை கொண்டு, தானே இங்கு மணிமாட கோவிலுக்கு வந்து விட்டார்.
திராவிட தேசத்தில் குறிப்பாக தமிழகத்தில் உள்ள அனைவரும் பார்க்க வேண்டிய திவ்ய தேசம்.

"பதரியில் உள்ள நர நாரணனே இங்கு மணி மாட கோவிலில் நமக்காக இருக்கிறார். அவரை வணங்கு மனமே"
என்று பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
மணிமாட கோவிலில் உள்ள  பெருமாளை பார்த்து
"நந்தா விளக்கே, அளத்தற்கரியாய்
நரநாரணனே
கரு மாமுகில் போல் என் தாய்"
என்று, வேதத்தின் ரகசியத்தை, எளிதான பதங்கள் போட்டு,
பெருமாளை மங்களாசாசனம் செய்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

"நந்தா விளக்கு" என்றால் என்ன?
"அளத்தற்கரியாய்" என்றால் என்ன?
"என் தாய்" என்று எதற்கு சொன்னார்?

"நந்தா விளக்கு" என்று கோவில்களில் வைத்து இருப்பதை நாம் பார்த்து இருப்போம்.
அந்த விளக்கு அணையாமல் இருக்க,
பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொண்டு, அந்த விளக்கு அணைந்து விடாமல், அதற்கு எண்ணெய் ஊற்றி கொண்டே இருப்பார்கள்.

அணையாமல் விளக்கு எரிவதால், அந்த விளக்கை "அணையா விளக்கு" என்று கூட போர்டு போட்டு வைத்து இருப்பார்கள்.


"நந்தா" என்றால் "அணையாத" என்று அர்த்தம்.

"நந்தா விளக்கு" என்றால் "அணையா விளக்கு" என்று அர்த்தம்.

கோவிலில் வைக்கப்பட்டு இருக்கும், இந்த "நந்தா விளக்கையா"?திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? இல்லை.

உண்மையில் உலகில் நாம் காணும் அனைத்து விளக்குகளும் நந்தி (அணையும்) போகும் விளக்குகள் தான்.

யாரும் தூண்டாமல் தானாகவே பிரகாசமாக எந்த விளக்கும் கிடையாது.
யாரோ ஒருவர் தூண்டியோ,
யாரோ ஒருவர் துணை கொண்டோ தான்,
நாம் காணும் விளக்குகள் அனைத்தும் உள்ளன.
இவை எல்லாம் "நந்தி போகும் விளக்குகள்" தான்.

"நந்தா விளக்கு" என்பதோ,
யாருமே தூண்டாமல்,
யார் துணையும் இல்லாமல்,  'சுயமாகவே பிரகாசமாக' இருக்கும் விளக்கு.

அப்படி ஒரு "நந்தா விளக்கு" உள்ளதா?

எந்த 'நந்தா விளக்கை' திருமங்கையாழ்வார் இங்கு சொல்கிறார்? 
என்ற கேள்வி நமக்கு எழலாம்.
இந்த இருண்ட உலகம், எந்த விளக்கு மூலம் பிரகாசம் அடைகிறது?
சூரியன், சந்திரன், அகல், மின்சாரம் போன்ற  'விளக்குகள்' மூலம் பிரகாசம் அடைகிறது.

இந்த வெளி விளக்குகள் மூலம், உலகம் பிரகாசமாகிறது.
'உலகம் பிரகாசமாக இருக்கிறது' என்று, 'எந்த விளக்கு'? மூலம் நமக்கு தெரிகிறது?
"கண்" என்ற விளக்கு மூலம் உலகம் தெரிகிறது...
மின்சார விளக்கு அணைந்து இருக்கும் போது, இருட்டில் மாட்டியவனுக்கு கண் இருந்தும் ப்ரயோஜனமில்லையே!! 

கண் இல்லாத குருடனுக்கு எந்த விளக்கை கொண்டு வெளி உலகம் தெரியும்?
ஆயிரம் 'சூரியன்' இருந்தாலும்,
ஆயிரம் 'மின்சார விளக்குகள்' போட்டாலும்,
வெளி உலகம் இருப்பது 'குருடனுக்கு தெரியாதே'..


ஆதலால்,
'கண்' என்ற விளக்கும், 
'வெளியில் உள்ள' அனைத்து விளக்குகளும் 
நந்தி போகும் விளக்குகளே...

ஆனால், குருடனாக இருப்பவனுக்கும், வெளி விளக்குகள் அணைந்து இருட்டில் இருப்பவனுக்கும் கூட,
அவனுள்ளேயே, எப்பொழுதும் ஒரு விளக்கு "சுயமே பிரகாசமாக எரிந்து கொண்டே" இருக்கிறதே!!...
அந்த விளக்கு என்றுமே அணைவதில்லையே..

அது யார் தூண்டுதலும் இல்லாமல், 
யார் துணையும் இல்லாமல் 
தானே சுயம் பிரகாசமாக உள்ளதே!!  

அந்த நந்தா விளக்கு ஒவ்வொருவருக்குள்ளும் இருந்து கொண்டே இருக்கிறதே!! அதை தெரிந்து கொள்ள வேண்டாமா நாம்?.
அணையாத சுயம் பிரகாச இருக்கும் அந்த நந்தா விளக்கு "பரவாசுதேவன் நாராயணன்" அல்லவா..!!
அவர் நமக்குள் தான் இருக்கிறார் என்று தெரியாமல் இருக்கலாமா?

நந்தா விளக்காக உள்ள அந்த 'பரவாசுதேவன்' நம் உடம்பில் இருக்கும் வரை தானே, நாம் இந்த உடலில் ஜீவிக்க முடிகிறது!!.

அந்த ஜோதி ஸ்வரூபமான பரமாத்மா உடலை விட்டு விலகும் போது, பரமாத்மாவோடு "ஜீவனாகிய நாமும்" கிளம்ப வேண்டியது தான்.

குருடனிடம் "உலகம் பிரகாசமாக இருக்கிறதே... உனக்கு தெரிகிறதா?" என்று கேட்டால்,
வெளியில் உறுப்பாக உள்ள "கண் என்ற விளக்கு" அவனுக்கு எரியாததால்,
குருடன் "தனக்கு உலகம் தெரியவில்லை" என்கிறான்.

ஆனால்,
நந்தா விளக்காக (சுயமே பிரகாசம்) பரமாத்மா அவன் உள்ளும்  இருப்பதால்,
குருடனிடம் "உலகம் தெரியவில்லை சரி. நீ இருக்கிறாய் என்று தெரிகிறதா?" என்று கேட்டால்,
அவன் உள்ளே சுயம் பிரகாசமான நாராயணன் என்ற விளக்கு அவனுக்குள் எரிவதால்,
"கண் இல்லாததால், உலகம் எனக்கு தெரியவில்லை. 
ஆனால் நான் இருக்கிறேன் என்று தெரிகிறது" என்கிறான்.
குருடன் கூட, "நான் இருக்கிறேனா என்று தெரியவில்லை!!. " என்று சொல்வதில்லை.

"நான் இருக்கிறேன்" என்பதை, பரமாத்மா என்ற "நந்தா விளக்கு" இருக்கும் வரை, நாம் தெரிந்து கொள்கிறோம்.





'நான் இருக்கிறேன்' என்று தெரிய காரணம் எது?
எந்த அணையா விளக்கை கொண்டு, குருடன் கூட, தான் இருப்பதை தெரிந்து கொள்கிறான்?

"பரமாத்மா நாராயணன்" என்ற நந்தா விளக்கு இருப்பதால் தான், 'நான் இருக்கிறேன் என்பது எனக்கு தெரிகிறது' என்ற உண்மையை ஞானிகள் புரிந்து கொள்கின்றனர்.

இந்த அர்த்தத்தை "நந்தா விளக்கு" என்ற பதம் மூலம் நமக்கு காட்டுகிறார் திருமங்கை ஆழ்வார்.

"பரமாத்மா எப்பொழுதும் அணையாமல் உள்ளே இருந்து கொண்டு, நமக்கு பிரகாசத்தை கொடுக்கிறார்" என்பதாலேயே பரமாத்மா நாராயணனை  "நந்தா விளக்கே" என்று கூப்பிடுகிறார்.

'சுயம் பிரகாசமாக ஜோதி ஸ்வரூபமாக இருக்கும் நாராயணன், நமக்குள்ளும் இருக்கிறார்' 
என்பதை குறிக்கவே "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நந்தா விளக்கே என்று பரமாத்மாவை குறிக்கும் திருமங்கையாழ்வார், பரமாத்மா ஜோதி ஸ்வரூபமானவர் என்று காட்டுகிறார்.
அவர் அரூபமானவர்,
அவரே வேதம் உரைக்கும் ப்ரம்மம் என்று காட்டுகிறார்.

ஜோதி ஸ்வரூபமானவர் (அரூபமானவர்), சுயமே பிரகாசமாக நந்தா விளக்காக இருக்கிறார் என்கிறார்.

அவர் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார்.

"அவர் நம் உடலின் உள்ளே இருப்பதால் தான், நாம் இருக்கிறோம்"
என்பதை சுட்டி காட்டவே, "நந்தா விளக்கே" என்ற பதத்தை வைத்து பாடுகிறார் திருமங்கையாழ்வார்.

நம் உடம்பை விட்டு அந்த நந்தா விளக்கு (பரமாத்மா) விலகி விட்டால்? "சவம்" என்ற பெயரை பெற்று விடுகிறது இந்த உடல்.

பரமாத்மா உள்ளே இருந்தவரை, இந்த உடல் இயங்கி வந்தது...
அந்த நந்தா விளக்கு உடலை விட்டு விலகிய அடுத்த நொடி, மரம் போல உடல் சாய்ந்து விடுகிறது...

நம் உடலுக்கு ஆதாரமாக இருந்த அந்த நந்தா விளக்கை, சுயம் பிரகாசமான ஜோதியை, பரமாத்மாவை, ஜீவனாகிய நாம் மதிக்காமல், உணராமல் போனால், நமக்கு தானே நஷ்டம்...
நாத்தீகம் பேசுவதால் யாருக்கு லாபம்?..

"உடலை விட்டு நந்தா விளக்கான பரமாத்மா விலகி விட்டால், அவரும் அழிந்து விடுவாரோ?"
என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடாது என்பதற்காக, உடனேயே "அளத்தற்கரியாய்" என்ற பதத்தை  திருமங்கையாழ்வார் பயன்படுத்துகிறார்.

நம் உடலை விட்டு போனாலும், பரமாத்மா (நந்தா விளக்கு) அழிவதில்லை என்று காட்டுகிறார்.
அவர் உலகம் எங்கும் பிரகாசமாக பரவி இருக்கிறார் என்கிறார்.

'அளத்தற்கரியாய்' என்றால் என்ன?
அளத்தற்கரியாய் என்றால் "அளவிட முடியாதவர்" என்று அர்த்தம்.


தமிழ் வளர, திவ்ய பிரபந்தங்களை படித்தாலே போதும்.
பல தமிழ் சொற்கள் தெரிந்து கொள்ளலாமே...

"நந்தா விளக்கே அளத்தற்கரியாய் நர நாரணனே"
என்று சொல்லும் போது,
"பரஞ் ஜோதியாக, யார் துணையும் இல்லாமல், தானே சுயம் பிரகாசமாக (நந்தா விளக்காக) உள்ள நாராயணன் நம் உடம்புக்குள் மட்டும் இல்லை, அவர் அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்"
என்று பர தத்துவத்தை 'அளத்தற்கரியாய்' என்ற சொல்லை வைத்து பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
'தேசத்தால், காலத்தால், வஸ்துவால்' கட்டுப்பட்டவர்கள்.

ஒரு மனிதன் ஒரு தேசத்தில் இருக்கும் போது, அதே சமயத்தில் இன்னொரு தேசத்தில் இருக்க முடியாது..
பரவாசுதேவன் நாராயணனோ தேசத்துக்கு கட்டுப்படாதவராக இருக்கிறார்.
எந்த தேசத்திலும், எப்பொழுதும் இருக்கிறார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது, நாரதர்
"ஸ்ரீ கிருஷ்ணர் தேசத்துக்கு கட்டுப்பட்டவரா?" என்று பார்க்கலாம் என்று துவாரகை வந்தார்.
16108 ராணிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் தர்ம பத்னிகள்.

நாரதர் ஒவ்வொரு ராணியின் அரண்மனைக்கும் சென்று சென்று பார்க்கிறார்.
நாரதரின் மனோபாவம் புரிந்து கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர்,
"ஒவ்வொரு அரண்மனையிலும் ஒவ்வொரு கிருஷ்ணனாக இருந்து, தான் தேசத்துக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காண்பித்தார்.
நாரதர் பரமானந்தம் அடைந்தார்.
பரவாசுதேவன்  தேசத்துக்கு கட்டுப்படாதவர் என்று நிரூபித்தார்.

ஜீவனாகிய நாம் அனைவரும்,
"காலத்தால் கட்டுப்பட்டவர்கள்".

மனிதன் காலத்துக்கு கட்டுப்பட்டு வாழ்கிறான்.
மனிதன் தன் பிறப்பை இறப்பை கூட தீர்மானிக்க முடியாதவன்.

பரவாசுதேவன் நாராயணனோ, எந்த காலத்துக்கும் கட்டுப்படாதவர். "நடந்தது, நடப்பது, நடக்க போவது" என்று எந்த காலத்திலும் இருப்பவர்.
"காலம் தன் கையில் அடங்கி உள்ளது" என்பதை காட்டுவதற்கே "கால சக்கரத்தை" நாராயணன் வைத்துள்ளார்.

பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, உஜ்ஜயினியில் (மத்திய பிரதேசம்) சாந்தீபினியின் ஆசிரமத்தில் படித்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று அறிந்த சாந்தீபினி, 12 வருடம் முன் கடலில் விழுந்து இறந்து விட்ட தன் மகனை மீட்டு தர கேட்டார்.

குருவின் ஆசையை நிறைவேற்ற, காலத்துக்கும் கட்டுப்படாத ஸ்ரீ கிருஷ்ணர், 
எம லோகம் சென்று, யமதர்மனிடம் அந்த ஜீவனை அனுப்ப சொல்லி,
12 வருடம் கழித்து அவன் எப்படி வளர்ந்து இருப்பானோ அதே போன்ற உடலையும் கொடுத்து, எம லோகத்தில் இருந்து உஜ்ஜயினி வருவதற்குள் சகல வேதங்களையும் தானே சொல்லி கொடுத்து தன் குருவிடம் ஒப்படைத்து விட்டார்.

மகாபாரத போர் முடிந்த பிறகு, துவாரகையில் ஒரு சமயம், தேவகி ஸ்ரீ கிருஷ்ணரிடம் "தன்னால் கிருஷ்ணனின் பால லீலையை பார்க்க முடியாமல் போய் விட்டதே... குழந்தை கிருஷ்ணனை கொஞ்சும் பாக்கியம் அந்த யசோதை தானே பெற்றாள்" என்றாள்.
தன் தாய் ஆசைப்படுகிறாள் என்றதும், தன் மாய சக்தியால், அங்கேயே யசோதை அனுபவித்த குழந்தையாக ஆகி, பால லீலைகள் அனைத்தையும் தேவகிக்கு காட்டினார்.

காலத்துக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.

'அளவிட முடியாதவராக' எங்கும் இருக்கிறார்.

இந்த ஆச்சர்யத்தை ருக்மிணி பார்த்து விட, தான் கண்ட 2 வயது கிருஷ்ணனை சிலை செய்தாள்.
அந்த பால கிருஷ்ணனை தானே பூஜை செய்ய ஆசைப்பட்டு, ஸ்ரீ கிருஷ்ணரிடம் காண்பித்தாள்.

ஸ்ரீ கிருஷ்ணரும் தன் கையால் தொட்டு, தன் சாநித்யம் இந்த சிலையில் இருக்கும் என்று அணுகிரஹித்தார்.
கலியுகம் ஆரம்பித்து, துவாரகை கடலில் மூழ்கிய பின், மத்வாச்சாரியார் காலத்தில் ருக்மிணி வழிபட்ட அந்த மூர்த்தி இவருக்கு கிடைத்தார்.

உடுப்பியில் இந்த கிருஷ்ண விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, இன்று வரை லக்ஷகணக்கான பக்தர்களை ஆகர்ஷிக்கிறார்.
ஜீவனாகிய நாம் அனைவரும்,
"தேசத்தால், காலத்தால், வஸ்துவால்" கட்டுப்பட்டவர்கள்.

மனிதன் மனிதனாக தான் இருக்க முடியும். 
மனிதனே பல வஸ்துவாக ஆக முடியாது..

பரவாசுதேவன் நாராயணனோ எந்த வஸ்துவுக்கும் கட்டுப்படாதவர்.
எந்த வஸ்துவாகவும் இருப்பவர்.
ராமராக, கிருஷ்ணராக அவதாரம் செய்த பரவாசுதேவன், தேவைப்படும் போது, மீனாக, பன்றியாக, ஆமையாக, நரசிம்மராக கூட அவதரித்து விட்டார்..
தான் எந்த வஸ்துவாகவும் வர இயலும் என்று காட்டினார்..
ப்ரம்ம தேவன் படைப்பில் இல்லாத நரசிம்மமாக கூட வந்து விட்டார்..

பரவாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்த போது,
"உயிருள்ள, உயிரற்ற பொருள் யாவும் தானாக ஆகி, தான் வஸ்துவுக்கு கட்டுப்பட்டவன் இல்லை" என்று காட்டினார்.

ப்ரம்ம தேவன், இடையர் சிறுவர்களை ஸ்ரீபிருந்தாவனத்தில் இருந்து மறைத்து சத்ய லோகம் எடுத்து சென்று விட்டார்.
ஸ்ரீ கிருஷ்ணர் இதை பற்றி துளியும் கவலைப்படவில்லை.
தானே அனைத்து இடையர் சிறுவர்களாகவும் ஆகி,
அவர்கள் கட்டி இருந்த ஆடைகளாகவும் ஆகி,
சாப்பிட கொண்டு வந்திருந்த மண் சட்டியாகவும் தானே ஆகி விட்டார்.

வஸ்துவுக்கு கட்டுப்படாதவர் என்று காட்டினார்.
அளவிட முடியாதவராக எங்கும் இருக்கிறார்.

ஒரு வருட காலம் ஆகி விட்டது. பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், ஸ்ரீ கிருஷ்ணரே உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற  பொருளாகவும் இருந்த ஆச்சர்யத்தை கண்டு பிரமித்தார்.
வஸ்துவுக்கு கட்டுப்படாத பரமாத்மாவே ஸ்ரீகிருஷ்ணராக இருக்கிறார் என்று உணர்ந்தார்..ப்ரம்ம தேவன்

நாம் இருப்பதற்கு ஆதாரமாக, அணையாமல் இருக்கும் அந்த பரஞ்ஜோதியை "நந்தா விளக்கு" என்ற பதத்தை கொண்டும்,
"அளத்தற்கரியாய்" என்ற பதத்தை பயன்படுத்தி, பரவாசுதேவன் எங்கும் இருக்கிறார் என்ற பரத்துவத்தை காட்டியும் இந்த பாசுரத்தை ஆரம்பித்து,
அப்படிப்பட்ட "அரூபமானவர், பரஞ்சோதி, அளவிட முடியாதவர்"
நம் மீது உள்ள கருணையின் காரணத்தால், "நாங்கூரில் மணிமாட கோவிலில் உருவம் தரித்து நாராயணனாக இருக்கிறாரே!!"
என்பதை பார்த்ததும், திருமங்கை ஆழ்வாருக்கு தன்னை பிள்ளையாகவும், கருணா மூர்த்தியான நாராயணனை "தாயாகவும்" தோன்ற,
"கரு மா முகில் போல் என் தாய்" 
என்று "தன் தாய்" என்று கொஞ்சுகிறார்..


ஆழ்வார்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு சொல்லும், ஆழ்ந்த வேத அர்த்தங்கள் கொண்டது... என்று அறிகிறோம்.
ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை,
ஆழ்ந்து படித்தாலேயே தமிழ்நாட்டில் தமிழும் வளரும், இறை பக்தியும் வளரும்.

ஆழ்வார் பாசுரங்ககளை, நாயன்மார் பதிகங்களை படித்தாலேயே, தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இறை பக்தி வளர்ந்து விடுமே!! என்று, நாதீகர்கள், ஹிந்து தெய்வங்களை மறுப்பவர்கள்,
தமிழ் வளராமல் போனாலும் சரி,  'ஆழ்வார் பாசுரங்கள், நாயன்மார் பதிகங்கள் தமிழ் மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் செய்வோம்'
என்று கடந்த 70 ஆண்டுகளில் முயற்சி செய்து,
தமிழ் கல்வியில் இந்த பாசுரங்கள் இடம்பெற செய்யாமல் அழிக்க முயன்றனர்.
போலிகளை எதிர்போம்.

பெரிய திருமொழியில்"மணிமாட கோவிலில்" பெருமாளை தன் தாய் என்று கொஞ்சி மகிழும் "திருமங்கையாழ்வார்" அருளிய பாசுரம் இதோ:

நந்தா விளக்கே அளத்தற்கரியாய், நர நாரணனே
கரு மா முகில் போல் எந்தாய்,
எமக்கே அருளாய் என நின்று இமையோர் பரவும் இடம்,
எத் திசைக்கும் அந்தாரம் அந்தேன் இசைபாட
மாடே களிவண்டு மிழற்ற
நிழல் துதைந்து, மந்தாரநின்று மணமல்கு 
நாங்கூர் மணிமாடக் கோயில் வணங்கு என் மனமே

வாழ்க தமிழ்.
வாழ்க ஹிந்துக்கள்
வாழ்க ஹிந்து தர்மம்.



Sunday 8 September 2019

கடவுளுக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன?... பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல்.

பரமாத்மா-ஜீவாத்மா பற்றி ஒரு அலசல். 
பரமாத்மா 'நாராயணன்' சங்கல்பித்து தான், "ப்ரம்ம தேவன்" படைக்கப்பட்டார்.
அதற்கு பின்,
"சனகாதி முனிவர்கள்" பிரம்மாவால் படைக்கப்பட்டனர்.
அதற்கு பின்,
பரவாசுதேவன் நாராயணனே, ப்ரம்ம தேவன் நெற்றியில் சம்ஹார மூர்த்தியாக  "ஏகாதச (11)ருத்ரர்களாக" அவதாரம் செய்தார். 
இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கு படிக்கவும்..



மேலும், 
ப்ரம்ம தேவன் தொடர்ந்து, "ரிஷிகள், தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள்" 
என்று பல படைப்புகள் செய்தார்.

நாராயணன் ஒருவரே "பரமாத்மா".  
மற்ற அனைவரும், "ஜீவாத்மாக்களே".
என்று வேதம் சொல்கிறது.

"ப்ரம்ம தேவன்" முதல் பூலோகத்தில் பிறக்கும் புழு பூச்சி வரை, அனைத்தும் "ஜீவாத்மாக்களே". 

அவரவர்கள் செய்த புண்ணியத்துக்கு "ப்ரம்ம பதவி, தேவ பதவி, மனித உடல், விலங்கு, பறவை, புழு, பூச்சிகளாக, மரமாக" பிறக்கின்றனர்
என்று வேதம் சொல்கிறது.

மஹா புண்ணியங்களை செய்து "ப்ரம்ம பட்டத்தில் ப்ரம்ம தேவனாக இருக்கும் ஜீவாத்மாவுக்கும்" ஆயுசு எல்லை உண்டு என்று வேதம் சொல்கிறது.
இப்பொழுது இருக்கும் "ப்ரம்ம தேவன்" காலம் முடிந்த பின், பரமாத்மா நாராயணன் மீண்டும் இன்னொரு புண்ணிய ஆத்மாவை (ஜீவன்) ப்ரம்ம பதவியில் அமர்த்தி, வேதத்தை கொடுத்து, உலகை நடத்த ஆணை இடுகிறார்.

"நாராயணனை பக்தி செய்து அவர் கருணையால் மோக்ஷம் அடையாதவரை",
செய்த புண்ணியங்களுக்கு, செய்த பாவங்களுக்கு
"மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து கொண்டே இருக்க வேண்டியது தான்"
என்றும் வேதம் சொல்கிறது.

"பரமாத்மாவுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள உறவை" புரிந்து கொள்ள முயற்சி செய்வோம்...

பொதுவாக,
ஜீவாத்மாவை "பரமாத்மாவின் அம்சம்" என்று சொல்வது வழக்கம்.

ஜீவாத்மா "பரமாத்மாவின் அம்சம்" என்றால் என்ன? புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
எளிதான உதாரணம் மூலம், நாம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

பரமாத்மா "பரஞ்ஜோதி ஸ்வரூபமாக இருக்கிறார்" என்று சொல்லி கேட்டு இருப்போம்.

அந்த பரமாத்மாவை (பரஞ்ஜோதியை) "ஒரு அணையா விளக்கை" உதாரணமாக கொண்டு, பார்க்கும் போது
பரமாத்மா யார்? ஜீவாத்மா யார்? 
அத்வைதம் எப்போது தெரிகிறது?
த்வைதம் எப்போது தெரிகிறது?
விஷிஷ்ட அத்வைதம் எப்போது தெரிகிறது?
என்ற புரிதல் நமக்கு ஏற்படும்.



"பரமாத்மா ஒருவனே" (பரஞ்ஜோதியை) - என்று வேதம் சொல்வதை, 
ஒரு அணையா விளக்காக பார்ப்போம்.  
ஒரே ஒரு அணையா விளக்கிள் உள்ள ஜோதியை கொண்டு, 
கார்த்திகை மாதத்தில், ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றுகிறோம் அல்லவா?!!.

அது போல, 
பரஞ்ஜோதியாக இருக்கும் பரமாத்மா வாசுதேவன், 
'தன் அம்சமாகவே' பல ஜீவஜோதிகளை (ஜீவாத்மாக்களை), தானே படைக்கிறார்.
ஆனால்,
இந்த ஜீவாத்மாக்களுக்கு, பரமாத்மாவை போல உயிரற்ற உலகங்கள், உடல்கள் ஸ்ருஷ்டி செய்ய சக்தி கிடையாது. 

பரமாத்மா வாசுதேவன், 
தன்னை போன்றே அம்சமுள்ள "ஜீவாத்மாக்களை படைக்கவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார், 
உயிரற்ற "உலகங்களாக தானே ஆகவும்" சக்தி உள்ளவராக இருக்கிறார்.

பூலோகத்தில் ஸ்ரீ கிருஷ்ணனாக அவதரித்த போது,
இதை தன் அவதாரத்தில் காட்டி, நமக்கு புரியவும் வைக்கிறார், பரமாத்மா வாசுதேவன்.

ஒரு சமயம், "ப்ரம்ம தேவன்" கோகுல சிறுவர்களை மறைத்து ப்ரம்ம லோகத்துக்கு எடுத்து சென்றுவிட்டார்.  
ப்ரம்ம தேவனின் செயலை அறிந்த பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர், 
தானே அனைத்து கோகுல சிறுவர்களாகவும் (ஜீவாத்மாக்கள்) ஆகி, 
தானே அவர்கள் உடுத்தி இருந்த "ஆடை", 
கொண்டு வந்திருந்த "மண் சட்டி" வரை உயிரற்ற பொருளாகவும் ஆகி விட்டார். 

ஒரு வருடம் கழித்து பிருந்தாவனம் வந்து பார்த்த ப்ரம்ம தேவன், பரமாத்மாவின் சக்தியை அறிந்ததும், ஸ்ரீ கிருஷ்ணர் "பரமாத்மா" என்று உணர்ந்தார்.


"உயிருள்ள பொருளாகவும், உயிரற்ற பொருளாகவும்" ஸ்ரீ கிருஷ்ணரே ஆகி இருப்பதை கண்டு ஆச்சரியப்பட்டார்.
சிறுவன் போல காட்சி கொடுக்கும் ஸ்ரீ கிருஷ்ணரை "பகவான்" என்று அறிந்து, மன்னிப்பு கேட்டார் என்று பார்க்கிறோம்.
"உயிருள்ள ஜீவாத்மாக்களை மட்டும் தான் படைக்கிறேன் என்று நினைத்து விடாதே!! 
'உயிரற்ற பொருளாகவும்' நானே இருக்கிறேன்"
என்று ஸ்ரீ கிருஷ்ணர் ப்ரம்ம தேவனுக்கு காட்டியதை,
நாம் மனதில் பதிய வைக்கும் போது தான், நமக்கு உலக படைப்பின் ரகசியங்கள் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
"தானே 14 உலகங்களாக" ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
14 லோகங்களில் ஒன்றான "பூலோகமாகவும்" (earth) நாராயணனே இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நாராயணனே "பூலோகமாகவும் இருக்கிறார்" என்று நாம் புரிந்து கொள்ளும் போது தான்,
"நமக்கு ஏன் இந்த உலக விஷயங்களில் உள்ள ஆர்வம் குறைவதே இல்லை!!" என்று புரிந்து கொள்ள முடியும்.

இந்த உலக மயக்கத்தை "மாயை" என்று சொல்கிறது வேதம்.

பரமாத்மா வாசுதேவன்,
தானே பஞ்ச பூதங்களாக இருக்கிறார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம்)  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நீரிலும் பல நீர் வகையாக (sweet, salt) தன்னை காட்டுகிறார்  என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
காற்றிலும் பல வித காற்றாக (Hydrogen, Oxygen, etc.,) ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

பரமாத்மா வாசுதேவன்,
நெருப்பிலும், விளக்கில் ஒரு நெருப்பாக, சூரியனில் ஒரு நெருப்பாக பல விதங்களில் இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
பரமாத்மா வாசுதேவன்,
நிலத்திலும் பல வித நிலங்களாக ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.

நிலத்தின் அம்சமாக உருவாகும் மனித உடல்கள்,  மிருக உடல்கள், பறவை உடல்கள், மரங்கள், பூக்கள், அனைத்திலும்  பல ரூபங்கள் தரித்து இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.
இப்படி தானே ஆயிரக்கணக்கான ரூபங்களை எடுத்துக்கொண்டு, உயிரற்ற பொருளாகவும் ஆகி இருக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


இப்படி "உயிரற்ற பொருளாக" பல கோடி ரூபங்கள் எடுத்துக்கொண்டு, "தன் அம்சமாக உருவான ஜீவாத்மாக்களுக்கு" 
தானே உடலும் கொடுத்து, வாழ தானே இடமும் கொடுத்து பிறக்க வைக்கிறார் என்ற ரகசியம் புரியும்.


வேதம் "சஹஸ்ர சீர்ஷ புருஷ:" என்று ஏன் சொல்கிறது? 
என்ற ரகசியம் புரியும்.

"சர்வம் ப்ரம்ம மயம்" (அனைத்திலும் நாராயனே தெரிகிறார்) என்று மகான்கள் ஏன் சொன்னார்கள்? 
என்ற ரகசியமும் புரியும்.
"பரமாத்மாவின் அம்சமாக" வெளிப்பட்ட ஜீவாத்மாக்கள், 
"தான் தனியாக இருப்பது போல தெரிவதால், ஜீவாத்மாக்கள் தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று உணர்வதில்லை.

பரமாத்மாவே மனித உடலாக இருக்கிறார்.
பரமாத்மாவே உலகங்களாகவும் இருக்கிறார் என்று ஜீவாத்மாக்கள் புரிந்து கொள்ள முடியாமல், "இயற்கை" என்று பார்த்து மயங்குகிறார்கள். 
இதையே "மாயை" என்று வேதம் சொல்கிறது.

இந்த உலகில் உள்ள உடல்களை பார்த்து ஆசை கொள்கின்றனர்.
இந்த உலகில் உள்ள நகரங்களை பார்த்து, ஆசை கொள்கின்றனர்.

உலகத்தில் பல ஆசைகளை வளர்த்து கொள்கின்றனர். 
அந்த ஆசைகள் நிறைவேற பல வித முயற்சிகள் செய்ய ஆரம்பிக்கின்றனர். 
இதனால் காமம், கோபம், பொறாமை போன்ற குணங்களை சம்பாதிக்கின்றனர். 
செய்த முயற்சியின் பலனாக புண்ணியங்களை, பாவங்களை சேர்த்து கொள்கின்றனர்.
ஆயுசு முடிந்து, கிடைத்த மனித உடலை விட்ட பின், அந்த ஜீவாத்மா மீண்டும் செய்த பாவ புண்ணிய மூட்டையை பொறுத்து, மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
முடிவே இல்லாத இந்த சுழலில், கோடிக்கணக்கான ஜீவாத்மாக்கள் இறந்து, பிறந்து கொண்டே இருக்கிறது.



இதை "சாட்சியாக" பார்த்து கொண்டே இருக்கும் பரமாத்மா நாராயணன், "ஏதாவது ஒரு ஜீவனாவது, உலகில் ஏற்படும் சுக துக்கங்களை கண்டு வெறுத்து, பயந்து, தனக்கு அபயம் தருபவர் எங்கே? என்று 
ஜீவாத்மா தன்னை திரும்பி பார்ப்பானா?" 
என்று காத்து கொண்டு இருக்கிறார். 
ஆனந்த மூர்த்தியான தானே "உலகமாகவும் இருப்பதால்"
உலகத்தை கண்டு ஜீவாத்மாக்கள் மோஹித்தாலும், பரமாத்மா வாசுதேவன் தவறாக நினைப்பதில்லை. 
ஆனால், 
"உலகமாகவும் (உயிரற்ற) நானே இருக்கிறேன்" என்று புரிந்து கொள்ளாமல், "இயற்கை என்றும், உடல்கள் என்றும்" சொல்லிக்கொண்டு ஆசை கொள்வதால், 
பாவ புண்ணியங்கள் அடையும் ஜீவாத்மாவின் நிலையை, கண்டு வருந்துகிறார் பரமாத்மா வாசுதேவன்.
இதற்காக, 
தானே ரிஷிகளாகவும், அவதாரங்கள் செய்தும், 
ஆதி சங்கரராகவும், ராமானுஜராகவும் வந்து, 
புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கும் கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களுக்கு வழி காட்டினார்.  வழி காட்டி கொண்டே இருக்கிறார்.  
தானே அர்ச்சா அவதாரங்கள் செய்து திருமலையில், காஞ்சியில், பதரியில், பாரத தேசங்கள் முழுக்க, அர்ச்சா அவதாரங்கள் செய்து நிரந்தரமாக நமக்கு கல் ரூபத்தில் காட்சியும் கொடுக்கிறார். 

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார். 
தன் உடலாகவும் அவர் தான் இருக்கிறார்.
  
தானும் (ஜீவன்) "பரமாத்மாவின் அம்சம்" தான் என்று புரிந்து கொள்ளும் போது, 
"அஹம் ப்ரம்மாஸ்மி" (நாம் அனைவரும் பிரம்மமே) 
என்ற ஞானம் ஏற்பட்டு விடுகிறது. 
அப்பொழுதான் அந்த ஜீவனுக்கு "அத்வைதம்" புரிய ஆரம்பிக்கிறது. 
"இந்த அனுபவம் நமக்கு ஏற்பட வேண்டும்" என்ற கருணையின் காரணமாக தான், 
ஆதி சங்கரராக சிவபெருமானே அவதரித்து "அத்வைத" சித்தாந்தத்தை வெளிக்காட்டினார்.





ப்ரம்ம தேவன் ஆயுள் முடிந்த பின், 
பரமாத்மா நாராயணன் "உயிரற்ற உலகங்களை தன்னிடமே மறைத்து கொண்டு", "தான் படைத்த ஜீவாத்மாக்களை தன்னோடு சேர்த்து கொண்டு" தான் மட்டுமே இருக்கிறார். 
பல விளக்கில் ஏற்றப்பட்ட தீபங்கள் அந்த அணையா விளக்கில் சேர்ந்து மறைந்து விடுவது போல, 
உயிரற்ற உலகங்களும், தன் அம்சமான ஜீவாத்மாக்களையும் தன்னுடன் சேர்த்து கொண்டு விடுகிறார். 
பிரளய காலம் முடிந்து, மீண்டும் புது ப்ரம்ம தேவனை நியமித்து, 
தன்னுள் வைத்து இருந்த அனைத்து ஜீவாத்மாக்களையும் மீண்டும் பிறக்க வைக்கிறார். 
அவர்களுக்கு உடலாகவும், உலகங்களாகவும் இவரே ஆகி, மோஹிக்க செய்கிறார் பரமாத்மா.

உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
நாமும் (ஜீவனும்) அந்த பரமாத்மாவின் அம்சமே என்பதால், 
"எங்கும் பரப்ரம்மமே இருக்கிறது. ஒரே தெய்வம் தான்" 
என்று ஆதி சங்கரர் அத்வைத வேத சித்தாந்தத்தை வழிகாட்ட வேண்டிய அவசியம் அவர் காலத்தில் ஏற்பட்டது.  
வேதத்தை "கர்மமாகவே செய்யும் கர்மடர்கள்" அதிகமாகி போனதால், வேதத்தில் உள்ள இந்த "ஞானத்தை" புரிந்து கொள்ளாமல், வெறும் செயலாகவே செய்து கொண்டிருந்தனர்.  
அவர்களுக்கு "அத்வைத சித்தாந்தத்தை" வெளிக்காட்டி ஆதி சங்கரர் ஹிந்துக்களை மீண்டும் நேர் வழிக்கு திருப்பினார்.

அரேபிய இஸ்லாமியர்கள், பாரத தேசத்தில் நுழைந்து 
ஹிந்துக்கள் கொல்லப்பட, 
லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட, 
மத மாற்றம் செய்யப்பட, 
ஹிந்துக்கள் நிலை குலைந்த சமயத்தில், ஹிந்துக்களை மீண்டும் நிலை பெற செய்ய மத்வாச்சாரியார் அவதரித்தார்.



உயிரற்ற பொருளாகவும் நாராயணனே இருக்கிறார், 
கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் "நாராயணனின் அம்சமே" என்ற "அத்வைத ஞானம்" உண்மை தான். 
ஆனால், 
அந்த பக்குவம் அனைத்து ஜீவாத்மாவுக்கும் வருமா? 

"ஆதி சங்கரருக்கு, பிரகலாதனுக்கு, ஜடபரதருக்கு" அந்த பக்குவம் இருந்தது. அத்வைத ஞானம் இருந்தது. 
தன்னை கொல்ல வந்தாலும் "கொலை செய்ய வருபவனும் நாராயணனே" என்று இருந்தனர்.

கோவில்களை இடித்து, 
ஹிந்துக்களை கொன்று, 
மதம் மாற்றும் அரேபியர்களுக்கு இந்த ஞானம் இல்லையே ! 
இந்த பக்குவம் ஹிந்துக்களுக்கு மட்டும் புரிந்து இருப்பதால், 
வேதமே அழியும் அபாயம் ஏற்பட்டது. 

வேத தெய்வங்கள் சும்மா இருக்குமா? பொய் தெய்வங்கள் இல்லையே ! 

மனிதர்கள் உருவாக்கிய மதம் இல்லையே, ஹிந்து தர்மம்.

பிற மதங்களை காப்பது "மனிதர்கள்". 
ஹிந்து தர்மத்தை காப்பது "தெய்வங்கள்" அல்லவா.



காலத்தை அனுசரித்து, யதிராஜர் ராமானுஜர் மூலம் "விஷிஷ்டாத்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.

காலத்தை அனுசரித்து, மத்வாச்சாரியார் மூலம் "த்வைத" சித்தாந்தம் வெளி வந்தது.
பரமாத்மா நாராயணன், "தன் அம்சமாகவே கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களை படைத்து இருக்கிறார்" என்று பார்த்தோம்.

"தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு இருக்கும் ஜீவாத்மாக்கள், 
"தன்னை படைத்தவன் தான், தன் உடம்பாகவும், உலகமாகவும் இருக்கிறார்" என்று புரியாமல், மயங்கி இருக்க, 
"தான் இருப்பதை உணரும் வரை, தன்னை படைத்தவனை தேடும் வரை" மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கிறார் என்று பார்த்தோம்.

"அத்வைதம்" என்ற உண்மை நிலையை  ஒரு சிலரே அனுபவத்தில் உணர முடியும் என்பதால், "அத்வைத பக்குவம் மட்டுமே மோக்ஷம் கிடைக்க வழி" என்று சொன்னால், கோடிக்கணக்கான ஜீவனுக்கு மோக்ஷமே கிடைக்காது.

இந்த உலகமும் நாராயணனே, 
இந்த உடலும் நாராயணனே, 
தான் (ஜீவன்) நாராயணின் அம்சமே 
என்று உணர்வதற்கு, நாராயணனாக பார்த்து கருணை செய்தால் தான் வழி.  

அத்வைத நிலை நமக்கு ஏற்பட, பரவாசுதேவன் தான் ஜீவாத்மாவுக்கு  வழி காட்ட வேண்டும். 

"உலகமே நாராயணன், நாமும் அவர் அம்சமே" என்ற ஞானம் ஏற்படாத வரை, நமக்கு நாராயணன் "மோக்ஷம்" கொடுக்க போவதில்லை.  
ஜீவன் "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து கொண்டு, 
"தன்னை படைத்தவன் ஒருவன் இருக்கிறான்" என்று நினைவே இல்லாமல், 
நாராயணனே உலகமாக இருப்பதை அறியாமல் "இயற்கை" என்று சொல்லிக்கொண்டு இருக்கும் வரை, பாவ, புண்ணியத்துக்கு ஏற்றவாறு மீண்டும் மீண்டும் உலகில் பிறக்க செய்கிறார்



ஜீவன், "இயற்கை" என்ற பெயரில் 'தன்னை தானே ரசிக்கிறான்' என்பதால், 
மோக்ஷம் கொடுக்க அவசியமில்லாமல் இருக்கிறார் பரமாத்மா நாராயணன்.

உலகில் சுகங்கள் கிடப்பது போல, பல துன்பங்களும் நமக்கு ஏற்படுகிறது.

உலகில் ஏற்படும் துன்பங்களை பார்த்து, மூப்பை பார்த்து, மரணத்தை பார்த்தும், 
நமக்கு அத்வைத பக்குவம் நமக்கு வரப்போவதே இல்லை.

"நம்மை நாராயணன் தான் படைத்தார். 
அவர் நினைத்தால் மட்டுமே, நமக்கு மோக்ஷம் தர முடியும்" 
என்ற அளவுக்காவது நமக்கு அறிவு இருக்க வேண்டாமா!!
பரமாத்மாவின் பரத்துவத்தை படித்து புரிந்து கொண்டாலும், அனுபவத்தில் கொண்டு வர முடியாத நம்மை போன்றவர்களுக்கு (ஜீவாத்மா), 
அந்த அத்வைத பக்குவத்தை "நாராயணனே" கொடுக்கவல்லவர். 

ஆதலால், நாம் அஞானியாக இருப்பதால், "நம்மை படைத்த நாராயணன் நம்மை காக்கிறார்" என்ற அளவுக்காவது நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
நம்மை படைத்தவர் மேல், நமக்கு அன்பு (பக்தி) இருக்க வேண்டும்.
ஆதலால், 
"நாம் அஞானியாக இருப்பதால், நாம் நாராயணனை பக்தி செய்ய வேண்டும். அவர் கருணையால் மோக்ஷம் அடைய வேண்டும்" 
என்று "த்வைத" சித்தாந்தத்தை மத்வாச்சாரியார் மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.



அத்வைத பக்குவம் (நிலை) ஏற்படாதவரை, ஜீவாத்மா மோக்ஷம் அடைய முடியாது என்பது உண்மை என்பதால், "ஜீவாத்மா வேறு, பரமாத்மா வேறு" என்று புரிந்து கொண்டு, அந்த பரமாத்மாவிடம் பக்தி (அன்பு) செய்ய வேண்டும்.
அஞானியாக இருந்தாலும், உலகத்தை உலகமாகவே பார்த்தாலும், பக்தி செய்ய ஆரம்பித்து விட்டால், 'தன்னை பார்க்கும் ஜீவனை, தன்னை நினைக்கும் ஜீவனை', பரமாத்மா 
கருணையோடு பார்க்க ஆரம்பிக்கிறார். 
தன் மீது பக்தி வளர செய்கிறார். 
உலகத்தில் ஏற்படும் துன்பங்கள் தான் பக்தனுக்கு வராமல் செய்கிறார். பக்குவத்தை கொடுத்து, தன் கருணையால் "மோக்ஷம்" கூட கொடுத்து விடுகிறார்.

"நம்மை படைத்த நாராயணன் மீது அன்பு (பக்தி) செய்தால், அஞானியும் மோக்ஷம் அடைய முடியும்" என்ற த்வைத சித்தாந்தம் கோடிக்கணக்கான மக்களுக்கு ஏற்பு உடையதாக இருப்பதால், மத்வாச்சாரியார் த்வைத சித்தாந்தத்தை மீண்டும் வெளிக்கொண்டு வந்தார்.
ராமானுஜர் வேதத்தின் முழுமையான அபிப்ராயமான "விஷிஷ்டாத்வைதத்தை" வெளிக்காட்டினார்.

"பரமாத்மா ஒருவரே மெய்.  
உலகம் பொய்" என்கிறது அத்வைதம்.

"உலகத்துக்கும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார். 
அதனால் உலகத்தை வெறுக்காமல், உலகத்தில் பார்க்கும் அனைத்திலும் அந்தர்யாமியாக பரமாத்மாவே இருக்கிறார் என்று பார்" 
என்று அத்வைத சித்தாந்தத்தில்  அந்தர்யாமி தத்துவத்தையையும் காட்டி '"விசேஷ அத்வைதம்" காட்டப்பட்டது. ஸ்ரீ ராமானுஜர் அவர் காலத்தில் (1017AD-1137AD) விஷிஷ்டாத்வைதம் பிரகாசம் அடைந்தது.

வாழ்க ஸ்ரீ ராமானுஜர்.
வாழ்க சங்கரர்.

நாராயணின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் அல்லவா.. ஸ்ரீ ராமானுஜர்.
வேதம் "த்வைதம், அத்வைதம்" இரண்டையும் சொல்வதால்,
ஸ்ரீ ராமானுஜர், 
த்வைத சித்தாந்தம் சொல்லும் "பக்தியை" ஏற்கிறார், 
அத்வைத சித்தாந்தம் சொல்லும் "பரதத்துவ" ஞானத்தை ஏற்கிறார்.  



வேதத்தின் முழு அபிப்ராயமான, "விஷிஷ்டாத்வைத சித்தாந்தம்" ஸ்ரீ ராமானுஜர் காலத்தில் மீண்டும் வெளிப்பட்டது. 

அஞானியாக இருந்தாலும் பரவாயில்லை. 
உலக கஷ்டங்கள் விலக, பெருமாள் கருணையை பெற, "நமோ நாராயணாய" என்று அனைவரும் சொல்லுங்கள். 
"அனைவரும் ஹரியின் ஜனங்களே" என்று த்வைத சித்தாந்தமான பக்தியை செய்ய சொன்னார் ஸ்ரீ ராமானுஜர்.

பகவானின் கருணை நம் மீது திரும்பும் பொழுது, நமக்கு அத்வைத அனுபவத்தை நாராயணனே கொடுப்பதால், 
"மோக்ஷம்" என்பது உடலை விட்டு பிரிந்து பரஞ்சோதியின் சேர்ந்தால் மட்டும் தான் கிடைக்கும் என்று த்வைதம் சொல்கிறது

அத்வைத அனுபவம் நமக்கு ஏற்படும் போது, நாம் உலகில் இருக்கும் போதே, 'மோக்ஷ அனுபவம் கிடைக்கும்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தத்தையும் ஏற்கிறது "விஷிஷ்டாத்வைதம்".
'பிரகலாதன், ஆதி சங்கரர், ஜடபரதர்' போன்றோருக்கு "பரமாத்மா எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலை இருந்தது. 
தன்னை கொல்ல வந்தவர்களை கூட வேறாக பார்க்க முடியாமல் இருந்தனர். 

"'பரமாத்மா எங்கும் உள்ளார்' என்ற இந்த பரதத்துவ நிலை, 
அஞானியாக இருந்து பக்தி செய்தால் கூட ஏற்படும், பகவான் நமக்கு அந்த அனுபவத்தை கொடுப்பார்" 
என்று 'வேதத்தின் ரகசியத்தை' ராமானுஜர் விஷிஷ்டாத்வைதத்தை காட்டி வெளிப்படுத்தினார்.

ஆழ்வார்கள் பாசுரங்களை பார்க்கும் போது நமக்கு இந்த உண்மை புரிகிறது. 

"பக்தியை நமக்கு ஊட்டும்" 4000 பாசுரங்களை கொடுத்த ஆழ்வார்கள், 
பல இடங்களில் 
"ஸ்ரீ ரங்க வாசமே எங்களுக்கு போதும், 
திருமலை வாசமே போதும், 
காஞ்சி வரதனே போதும், 
மோக்ஷத்தை இங்கேயே நாங்கள் அனுபவிப்பதால், பரமபதம் என்ற வைகுண்டம் கூட எங்களுக்கு வேண்டாம்" 
என்று சொல்வதை பார்க்கும் போது, அத்வைத நிலையை காட்டுகின்றனர்.




மகாத்மாக்கள் "அத்வைத நிலையிலேயே" வாழ்கிறார்கள்.  
அஞானியாக நாம் இருப்பதால், 
"உலகமே நாராயணன் தான்" என்ற அனுபவம் நமக்கு ஏற்படாததால், 
"நாம் சேர வேண்டியது அந்த பரஞ்ஜோதியான நாராயணனை தான்" என்ற உண்மை நமக்கு புரியாததால்,
"சுதந்திரமானவர்கள்" என்று நினைத்து கொள்வதால்,
சம்சார சூழலில் சிக்கி, உலக துன்பங்களை அனுபவித்து கொண்டே, மீண்டும் மீண்டும் இறந்து பிறந்து கொண்டே இருக்கிறோம்.

அஞானியாக இருக்கும் நமக்கும் வழி உண்டு. 
அஞானியாக இருக்கும் நமக்கும் 'மோக்ஷம்' கிடைக்க வழி உண்டு.

முதல் படியாக "நம்மை படைத்த நாராயணன் மீது அன்பை (பக்தியை) வளர்த்து கொண்டு"
நாராயணன் கருணை நம் மீது விழுந்து, அவர் கருணையாலேயே நமக்கும் அத்வைத அனுபவம் ஏற்பட்டு, நாமும் மோக்ஷம் அடையலாம். 

ஸ்ரீ ராமானுஜர் சொன்ன விஷிஸ்டாத்வைதம் நமக்கு ஏற்றது. 

மற்ற இரண்டு சித்தாந்தங்களையும் ஏற்று கொண்டு இருப்பதால், விஷிஷ்டாத்வைதம் வேதத்தின் அபிப்ராயம் கூட.

ஆதி சங்கரரை வணங்குவோம்.
மத்வாச்சாரியாரை வணங்குவோம்.
யதிராஜரான ராமானுஜரை வணங்குவோம்.

நம் பாரத பூமியில் அவதரித்த அனைத்து மகாத்மாவையும் வணங்குவோம். 



நம் குருநாதரை நமஸ்கரிப்போம்.

மோக்ஷம் அடைய வழி என்ன?  
நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவு என்ன? என்று காட்டி வழிநடத்தும், 
நம் ஆன்மீக பூமியான பாரத பூமியை நினைத்து, பெருமை படுவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.



Wednesday 4 September 2019

ஏன் குடம் பாலை சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ? ஒரு டம்ளர் பாலை பக்திக்காக அபிஷேகம் செய்ய கூடாதா? ஏழைகளுக்கு கொடுக்கலாமே...

ஏன் குடம் பாலை சிவனுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் ? 
பக்திக்காக (ஆசைக்காக வேண்டுமானால்), ஒரு டம்ளர் பாலை அபிஷேகம் செய்து விட்டு, மீதியை ஏழைகளுக்கு கொடுக்கலாமே!!.....



இப்படி ஒரு கேள்வியை "ஏழைக்காக தன் சொத்தையே கொடுத்து வாழும்" தியாகிகள் சிலர் சொல்லி கேட்டு இருக்கலாம்...

சில பேச்சுக்கள், நல்ல 'விஷயம்' போல வெளியில் தெரியும், ஆனால்
அது 'விஷயமாக' இருக்காது, 'விஷ' பேச்சாக தான் இருக்கும்.

புரிந்து கொள்ளும் தெளிவு இல்லாததாலோ,
ஹிந்து தர்மத்தின் மீது உள்ள 'பொறாமை கலந்த வெறுப்பாலோ' தான்,
இப்படிப்பட்ட பேச்சுக்கள் வெளிப்படுகிறது என்பதை நாம் மறக்க கூடாது.
இப்படி கேட்பவன் ஹிந்துவாக இருந்தால்,
அவன் வீட்டிலும் ஒரு சின்ன விக்ரஹம் பூஜை அறையில் இருக்க வாய்ப்பு உண்டு.
புரிந்து கொள்ளும் தெளிவு இல்லாததால் தான் இப்படி ஒரு கேள்வி இவர்களுக்கு எழுகிறது.
ஏழைக்காகவே உருகும் இது போன்ற நல்ல உள்ளங்கள், குடம் பாலை தன் வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹத்துக்கு அபிஷேகம் செய்யவே வேண்டாம்.
பக்திக்காக, அந்த விக்ரஹத்துக்கு ஒரு அரை ஸ்பூன் பாலை அல்லது தண்ணீரை விட்டு அபிஷேகம் செய்து விட்டு,
ஏழைக்கு உதவும் நெஞ்சக்காரன்,
வாசலுக்கு சென்று ஒரு பிச்சைக்காரனை தன் வீட்டுக்கு அதிதியாக (விருந்தாளி) அழைத்து,
ஆசனம் போட்டு, கால் அலம்பி,
"அவன் உள்ளும் பரமாத்மா இருக்கிறார்" என்ற நினைவோடு அவன் காலில் விழுந்து நமஸ்கரித்து,
"ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கிறேன்" என்ற நினைவோடு,
தன் வீட்டில் அருமையான உணவு செய்து சாப்பிட சொல்லி,
கையில் கொஞ்சம் காசும் கொடுத்து வழி அனுப்பலாம்.

இது 'நடைமுறையில் இருந்த வழக்கம் தான்', என்பதையும் நாம் மறக்க கூடாது...  

"பாலை கொட்டுகிறார்களே!! ஏழைக்கு கொடுக்கலாமே!!" என்று வருந்தும் உத்தமர்கள்,
தங்கள் வீட்டில் செலவுகளை குறைத்துக்கொண்டு,
அதிக காசு கொடுத்து மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தி, 
விலை கம்மியான காய் கனிகள் மட்டுமே சாப்பிட்டு,
முடிந்தால் எதுவுமே சாப்பிடாமல் விரதம் இருந்து, தண்ணீர் மட்டுமே குடித்துக்கொண்டு, 
ஏழைகளுக்கு, தான் சம்பாதிக்கும் பணத்தை செலவு செய்யலாமே..  
ஊருக்கு தான் உபதேசமா?
வீட்டில் உள்ள தெய்வ விக்ரஹங்களுக்கு குடம் பால் வேண்டவே வேண்டாம்.
பக்தி (ஆசை) இருந்தால் முடிந்தால், கொஞ்சம் தண்ணீர் மட்டும் விட்டு அபிஷேகம் செய்யுங்கள். போதும்.


பாலை வீண் செய்ய வேண்டாம். 
அந்த பாலை ஏழைக்கே கொடுக்கலாம். 
ஏழைக்கு கொடுக்கும் போது, பரமாத்மா அவர்களிடத்திலும் இருக்கிறார் என்று அவர்களுக்கே கொடுக்கலாம். தவறே இல்லை.
ஊருக்கு உபதேசம் செய்யும் இது போன்றவர்கள், தன் வீட்டில் செய்து, தான் ஏழையாக போனாலும் பரவாயில்லை என்று அன்ன தானம் செய்து வாழலாமே. 
ஊருக்கு தான் உபதேசமா?




ஒரு வேளை இப்படி ஒரு கேள்வி, ஹிந்து அல்லாத ஒருவனுக்கு வந்தால்? அவனுக்கு பூஜையே கிடையாது என்ற சுதந்திரம் வேறு உள்ளது..
ஒரு மாதம் விரதம் இருப்பதற்கு பதில், வருடம் முழுவதும் விரதம் இருந்து, தான் சம்பாதிக்கும் அனைத்தையும் வைத்து, ஊருக்கே உணவு போடலாமே..  
பூஜையும் கிடையாது.. அன்னதானம் செய்யும் பழக்கம் உண்டா?...
தான் ஏழையாக போனாலும் பரவாயில்லை என்று அன்ன தானம் செய்து வாழலாமே. 
ஊருக்கு தான் உபதேசமா?
"வீட்டில் நீங்கள் சொல்வதை போல செய்கிறோம்..  எதற்காக கோவிலில் குடம் குடமாக ஊற்றுகிறார்கள்?...  கொஞ்சம் பாலை ஏழைக்கு கொடுக்கலாமே..!!"

இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால்....
அப்படி கோவிலில் வீண் செலவு ஆகிறது.. பால் அபிஷேகம் என்ற பெயரில் வீண் செய்கிறார்கள் என்று நாம் சொன்னால், அப்படி நஷ்டம் அடையும் கோவிலை எதற்கு அரசாங்கம் வைத்து இருக்கிறது?.. 
வருமானம் இல்லாமலா கோவிலை பிடித்து கொண்டு தொங்குகிறார்கள்?

பழனி, சபரி மலையில் கிடைக்கும் பணத்தை, அரசாங்கம் வாங்கி கொண்டு,
கோவில் வழியாக கிடைத்த பணத்தை வாங்கி, 
ஹஜ் பயணம் போகும் போது, 
ஜெருசலம் பயணம் போகும் போது 
புத்தி உள்ளவனுக்கு என்ன தோன்றும்?
கோவில்கள் ஏழைக்கு மட்டுமல்ல, தன் கோவிலுக்கு வராமல் வேறு எங்கோ போக ஆசைப்படுபவர்களுக்கும் உதவி செய்கிறதே என்று கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து விடும்..


1000 ரூபாய்க்கு பால் பழ அபிஷேகம் செய்யும் கோவிலில், 
அதை பார்க்க வரும் கூட்டம், தரிசனம் பெற்ற ஆனந்தத்தில், 
அதை விட அதிகம் கொடுத்து விட்டு போகிறார்கள் என்று கவனிக்க வேண்டும்.

தெய்வத்துக்கு 1000 ரூபாய் செலவு, 
கோவிலுக்கு மட்டும் வருமானம் தரவில்லை, அரசாங்கத்துக்கே தருகிறது.. 
அங்கு வேலை பார்க்கும் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு
"சிவனும், பெருமாளும், முருகனும்" தான் மாத சம்பளம் கொடுத்து சோறு போடுகின்றனர். 
வெறும் 1000ரூபாய் தெய்வத்துக்கு பால் செலவு செய்வதால்
பிரசாத ஸ்டால் போடுபவனும் கோவிலில் பிழைக்கிறான்.
கோவிலில் கோலம் போடுபவனும் கோவிலில் பிழைக்கிறான்.
பூஜை செய்பவன்மாலை கட்டுபவன்வளையல் விற்பவன், என்று அனைவரும் பிழைக்கிறார்கள்...
இன்று எந்த பிச்சைக்காரனும் வீட்டுக்கு வந்து பிச்சை கேட்பதில்லை..  அவர்களுக்கும் சோறு போடுகிறது 'கோவில்'.

திருப்பதி போன்ற கோவிலுக்கு இது போன்று பேசுபவர்கள் போனால், இவர்களுக்கும் இலவசமாக சோறு போட்டு அன்னதானம் செய்கிறது கோவில்கள்.
ஏழைக்காக மனம் இறங்கும் இது போன்ற போலிகள்,
கோவில்கள் அருகிலேயே பெரிய அன்ன தான கூடம் அமைத்து சோறு போடுங்கள்.. யார் வேண்டாம் என்றது?
கோவிலில் வேலை பார்க்கும் அனைவருக்கும் நாங்களே சம்பளம் கொடுக்கிறோம், நீங்கள் சும்மா இறை பக்தி மட்டும் செய்யுங்கள் என்று சொல்லலாமே...

இவை செய்ய முடிந்தால், கோவிலில் உள்ள சிவனுக்கு ஒரு டம்ளர் பால் மட்டும் அபிஷேகம் பக்திக்காக செய்ய சொல்லலாம்.
பாம்புக்கு விஷம் உண்டு.. 
"நல்ல பாம்பு" என்று பெயரை வைத்து கொண்டு விட்டால் மட்டும், விஷம் இல்லாத பாம்பு என்று நினைத்தால் எத்தனை முட்டாள் தனம் அது.
"நல்ல பாம்பு" என்று பெயரை வைத்து போர்த்தி கொண்டு வந்தாலும், பாம்பு பாம்பு தானே...


அது போல,
நல்ல "விஷயம்" பேசுவது போல "விஷத்தை" பேசும் முட்டாள்களை,
ஹிந்து தர்மத்தை குறை சொல்ல முயற்சிக்கும் போலிகளை
கடுமையாக எதிர்க்க வேண்டும்.

ஹிந்துவாக இருந்தும், போலிகளால் குழப்பப்பட்டதால் இது போன்ற கேள்வி கேட்டால், புரிய வைக்க முயற்சிக்க வேண்டும்..

இதற்கு முதலில் நமக்கு தெளிவு வேண்டும்.
தெளிவு இல்லாத பட்சத்தில், "காலம் காலமாக நடக்கும் ஹிந்து சம்பந்தமான விஷயங்கள் பல ஆழ்ந்த காரணங்களால் தான் கடைபிடிக்க படுகிறது"
என்ற அளவாவது ஹிந்துக்களுக்கு புத்தி இருக்க வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்..