Followers

Search Here...

Monday 13 January 2020

பாசுரம் (அர்த்தம்) - பறவை ஏறும் பரம புருஷா... இரவு செய்யும் பாவக் காடு (பெரியாழ்வார்). "பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்? காரணத்தை ஆழ்வார் மூலம் தெரிந்து கொள்வோமே !!

திருப்பதியில், ஆதிசேஷனே "7 மலைகளாகவும் இருக்கிறார்". 
இந்த 7 மலைகளுக்கு, பொதுவாக "திருமலை" என்றும் "சேஷாத்ரி" என்றும் "சேஷகிரி" என்றும் பெயர்.
அதில் சில மலைகள், சில பக்தர்களின் பெயர்களில் அமைந்தது.

ஏழு மலைகளின் பெயர்கள்:
1. நாராயணாத்ரி (நாராயண முனிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் வைகானச பூஜையை உபதேசித்த இடம் என்பதால்) ஸ்ரீனிவாச பெருமாள் இருக்கும் இடம்.
2. வேங்கடாத்ரி (பாபங்கள் பொசுங்கும் என்பதால்)
3. சேஷாத்திரி (ஆதி சேஷனை குறிக்கிறது). சிலர் நிலாத்ரி என்றும் சொல்கிறார்கள்.
4. அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயர் அவதரித்த இடம். அவள் தாய் அஞ்சனாவின் பெயரில்)
5. சிம்மாத்ரி ( நரசிம்ம  அவதார ஸ்தலம் என்பதால்)
6. கருடாத்ரி (கருடன் அம்ருத கலசத்தோடு இங்கு அமர்ந்ததால்)
7. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால்)





பாபங்கள் பொசுங்கும் என்பதால் திருமலைக்கு வேங்கடாத்ரி என்ற பெயரும் உண்டு.

வேங்கடம் (வேம்+கடம்) என்றால் "பாவங்களை எரிப்பது" என்று பொருள்.

  • "வேம்" என்றால் பாவம் என்று தமிழில் அர்த்தம்.
  • "கடம்" என்றா எரித்து (fry) என்று தமிழில் அர்த்தம்.


பெரியாழ்வார், பெருமாளை சரணாகதி செய்யும் போது, "திருமலையப்பனை நினைத்து கொண்டு, வெங்கட்ரமனா கோவிந்தா!!  என்று கதறி அழைத்து விட்டாலே, நம் பாவங்கள் எல்லாம் எரிந்து போகும்"
என்கிறார்.
"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போல, நமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பறவை ஏறும் பரம புருஷா!
நீ என்னை கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்  
பெரும்பதம் ஆகின்றதால்
இரவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே! 
-  திருமொழி (பெரியாழ்வார்)

"பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்?

"அஞானம் தான், நாம் பாவம் செய்வதற்கு காரணம்"
என்கிறார் பெரியாழ்வார்.

'எந்த அஞானத்தை சொல்கிறார் பெரியாழ்வார்? தெரிந்து கொள்வோமே!

"இரவு செய்யும் பாவக் காடு" என்கிறார் பெரியாழ்வார்.
இங்கு "இரவு" என்று "அஞானத்தை" சொல்கிறார் பெரியாழ்வார்.

"ஏன் இப்படி தொடர்ந்து பாவத்தை செய்கிறேன்? ஏன் பாபியாகவே இருக்கிறேன்?"
என்று ஒரு பக்தன் தன்னையே நொந்து, ராமபிரானை பார்த்து உண்மையை சொல்கிறான்.
"ராமா, நீங்கள் தர்மத்துக்காக எத்தனை, படாதபாடு பட்டீர்கள் !!
தர்மத்துக்காகவே பூமியில் நீங்கள் அவதரித்தீர்கள்..., 
நானோ தர்ம துரோகியாக இருக்கிறேன்!!

மனிதர்கள் எப்படி தர்மத்தில் வாழ வேண்டும்? என்று காட்ட, வைகுண்டத்தை விட்டு விட்டுமனிதனாகவே தானும் அவதரித்து, தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தர்மத்துக்காக தானே !! 
தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு தானே !!
நானோ, தர்ம துரோகியாக இருக்கிறேன் !!
என்று சொல்ல,







"அப்படி என்ன, நீ அதர்ம செய்து விட்டாய்?" 
என்று ராமபிரான் பரிந்து கேட்க,

"ராமா, இப்படியா எனக்கு பரிந்து பேசுவது?
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு உகந்த காரியங்களோ, அது எதையுமே செய்யாதவன் நான்!
அது மட்டுமல்ல, 
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு எதிரானதோ, அதையெல்லாம் செய்தவன் நான்!

'இந்த அதர்மம் செய்தேன், அந்த அதர்மம் செய்யவில்லை என்று இல்லாமல்', உலகத்தில் உள்ள அனைத்து அதர்ம காரியங்களையும், 
தேடி தேடி, பார்த்து பார்த்து, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு செய்திருக்கிறேன்.

இப்படி பாபங்களே செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
'உடம்பே நான்' என்ற அஞானமே, நான் செய்யும் இத்தனை பாபத்துக்கும் காரணம்.
'உடம்பே நான்' என்ற அகம்பாவத்தால், இத்தனை பாவங்களும் செய்கிறேன்.
எத்தனை நாள் இப்படியே இருந்து விடப்போகிறேன்? 
ஒரு நாள் நிச்சயம் செத்து விடுவேனே!!
இவ்வளவு பாப காரியங்கள் செய்கிறேனே!! இப்படியாவது பிழைக்க வேண்டுமா? இந்த உடம்பு நிரந்தரமானதா!!
ஒரு சாண் வயிற்றுக்கு சோறு போட்டு காப்பாற்ற, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?
புலன்களுக்கு சுகம் கிடைக்க, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?

'உடம்பே நான்' என்ற அகம்பாவம் தானே, என் பாபங்கள் அனைத்துக்கும் காரணம்.
'உடம்பு நான் இல்லை, ஆத்மா தான் நான்' என்ற நினைவு கூட இல்லாமல் பாபம் செய்து கொண்டே போகிறேனே!!
அது போகட்டும்,
'ஐயோ!! இப்படி இந்த உடம்புக்காக இத்தனை பாபங்களை செய்கிறோமே!! என்று நினைத்தாவது கண்ணீர் விட்டாயா?' 
என்று கேட்டு விடாதீர்கள்.

'நான் பாபி' என்ற எண்ணம் ஒரு எள் அளவிற்காவது இருந்தால் தானே! என் கண்களில் நீர் சிந்தும்...

'நான் ஏதோ பரமபுண்ணியவான் போலவும், பாவமே செய்யாதவன் போலவும் தானே நானே என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன்'.

'நான் ரொம்ப யோக்கியன். நான் நீதி தவறி நடக்க மாட்டேன்' 
என்று தைரியமாக சொல்லி கொண்டு இருப்பேனே தவிர, 
தனக்கு தானே ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. 
என்னை பற்றி ஒரு அனுதாபம் கூட ஏற்பட்டது கிடையாது, எனக்கு!!

நான் ஏன் சிந்தித்தது கிடையாது? என்று நீங்கள் கேட்டால், 
'ஆத்மா தான் நான்' என்ற ஞானம் இல்லாதது தான் நான் சிந்திக்காததற்கு காரணம். 
'உடம்பே நான்' என்ற அஞானம் தான் நான் சிந்திக்காததற்கு காரணம்.
என்றான் அந்த பக்தன்

பெரியாழ்வார் சொல்கிறார்,
'உடம்பே நான்' என்று இருக்கும் அஞான ஜனங்கள், 'பாபம் செய்கிறோம்' என்ற நினைவு கூட இல்லாமல், 
'புஷ்ப தோட்டம்' போடுவது போல,
தன் பாபங்களை கொண்டே அவரவர்களுக்கு ஒரு பெரிய 'பாப தோட்டம்' போடுகிறார்களாம்.

இதையே "இரவு செய்யும் பாவக்  காடு" என்று சொல்கிறார் பெரியாழ்வார்.

"தெரியாமல் இந்த பாவங்கள் செய்து விட்டாயோ?" என்று கேட்டால், "தெரிந்தே செய்த பாப காடு"  (செய்யும் பாவக் காடு) என்கிறார் பெரியாழ்வார்.

ஒரு தோட்டம் போடுவது போல, அஞானிகள், இந்த உடம்புக்காக, தெரிந்தே 'பாபம் என்ற தோட்டத்தை' அமைத்துக்கொள்கிறார்களாம்.

இப்படி அஞானிகள், 'உடம்பே நான்' என்று கஷ்டப்பட்டு, ஜென்ம ஜென்மாக ஆசையுடன் வளர்த்த இந்த பாபத்தோட்டம்,
திடீரென்று ஒரு சந்தர்ப்பம், ஒரு காட்டு தீயில் சிக்கி, அந்த காடே பொசுங்கி விட்டது!!
என்கிறார் பெரியாழ்வார்.
"திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா...வேங்கட ரமண கோவிந்தா"
என்று திருப்பதியில் இருந்து கூட வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்தே "திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா... வேங்கட ரமண கோவிந்தா"
என்று சொல்லிவிட்டால் கூட,
நாம் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பாப காடு, 
"கோவிந்தன்" என்ற பெரும் காட்டுத்தீயில் பொசுங்கி விடுமே!! 
என்கிறார் பெரியாழ்வார்.




"இப்படி நாம் வளர்த்த பாப காடு, 'கோவிந்தா' என்று சொன்னவுடனேயே பாபங்கள் பொசுங்கியது மட்டுமில்லாமல், கற்பகவருக்ஷங்களே நிறைந்த பசுமையான  காடாகவும் ஆகி விட்டது" என்கிறார் பெரியாழ்வார்.

அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே

என்று சொல்லும் போது,
"கோவிந்தா" என்று சொன்னவுடன், அந்த வேங்கடநாதன் தன்னை கரம் பிடிக்க (நீ என்னை கைக்கொண்டபின்), 
அஞானம் என்ற இருள் விலகி, மோக்ஷம் நிச்சயமாகிவிட,
ஞானம் ஏற்பட்டு (அறிவையென்னும் அமுத ஆறும்), 
ஆத்ம ஞானம் புத்தியில் (தலைபற்றி) ஏற்பட்டு, 
பெருமாளின் கருணையை நினைத்து ஏற்பட்ட பக்தியால் 
"கோவிந்தா.. கோவிந்தா..." என்று நாமம் வாயில் வருகிறதே (வாய்க்கொண்டதே)!! 
என்கிறார் பெரியாழ்வார்.

"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போலநமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பாபங்களை பொசுக்கும் வேங்கடாத்ரியில், வீற்று இருக்கும் ஸ்ரீனிவாசன், 'நம் பாபங்களை மட்டும் போக்குவதில்லை, பாபங்களை போக்கி, நமக்கு நல்லதையே கிடைக்க செய்து, நல்லதையே நினைக்க செய்து, தன்னிடம் பக்தி உண்டாகும் படி செய்து, மோக்ஷ வாசலையும் திறந்து விடுகிறார்'.


ஸ்ரீனிவாச பெருமாளை பக்தியுடன் சேவிப்போம்.

முழுசி வண்டாடிய - திருமங்கை ஆழ்வார் அஷ்டபூஜை பெருமாளை பார்த்து பாடிய பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோமே..



Friday 10 January 2020

இந்த உலகில் இருக்கும் வரை, நாம் எப்படி வாழ வேண்டும்? நம் லட்சியம் என்ன? அறம் பொருள் இன்பம் வீடு என்றால் என்ன? ... தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?

சம்ஸ்க்ரிதத்தில்
"தர்ம, அர்த்த, காம, மோக்ஷ" என்று 4 விஷயங்கள் சொல்லப்படுகிறது..
அதையே தமிழில்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்று சொல்கிறோம்.

மோக்ஷம் என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு
  1. "விடுதலை" என்றும் அர்த்தம் உண்டு,
  2. "வீடு" என்ற அர்த்தமும் உண்டு.

வீடு:
நாராயணனை பக்தி செய்து, மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரவாசுதேவன் நாராயணனின் இருப்பிடமான வைகுண்டம் அடைந்தால், அந்த ஜீவன் தன்னுடைய சொந்த "வீடு" சேர்ந்தார் என்று அர்த்தம்.
அந்த ஜீவன் நிரந்தர ஆனந்த நிலையிலேயே இருக்கிறான்.




விடுதலை:
"உடம்பு நான் இல்லை, ஆத்மாவே நான்" என்று மட்டும் உணர்ந்து, வைராக்யத்துடன் வாழும் அத்வைதிக்கு, "கைவல்யம்" என்ற "விடுதலை" என்ற மோக்ஷம் மட்டும் கிடைக்கிறது.
அந்த ஜீவனுக்கு "வீடு" என்ற மோக்ஷம் கிடைப்பதில்லை.
இந்த ஜீவன், விடுதலை அடைந்த திருப்தி மட்டுமே பெறுகிறான்.

தமிழன், 
'மோக்ஷம்' என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உண்டு என்று அறிந்து இருந்தால் தானே, 
தமிழில் "விடுதலை" என்ற நேரிடையான அர்த்தத்தை பயன்படுத்தாமல், "வீடு" என்று குறிப்பாக பயன்படுத்தி இருக்க முடியும்.
நாம் சற்று யோசித்து பார்க்கவேண்டும்.

நம் தமிழ் முனிகள்,
"அறம் பொருள் இன்பம் விடுதலை"
என்று சொல்லாமல்,
"அறம் பொருள் இன்பம் வீடு"
என்று சொன்னதிலிருந்தே,
'தமிழ் அறிவும், சம்ஸ்க்ரித அறிவும்' எப்படி ஆழ்ந்து இருந்தது நம் தமிழர்களுக்கு என்று தெரிகிறது.

உலக மொழிகள் தோன்றுவதற்கு முன்,
காலம் கணிக்க முடியாததாக
'சம்ஸ்க்ரிதமும், தமிழும்' இருக்கும் போது,
இரண்டு மொழியுமே தெரிந்து இருந்த தமிழன்,
"தமிழும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. சம்ஸ்க்ரிதமும் காலம் சொல்ல முடியாததாக உள்ளது.. இரண்டும் அறிந்து இருந்தவர்கள் தமிழர்கள்" என்று சொல்லி கொள்ளாமல்,
"பழமையான தமிழ் வாழ வேண்டும், ஆனால் நாம் அறிந்து மற்றொரு பழமையான சம்ஸ்க்ரிதம் அழிய வேண்டும்"
என்று நினைப்பது, அறிவுள்ள பேச்சா? என்று தமிழர்கள் சிந்திக்க வேண்டும்.

இரண்டுமே பழமையான மொழிகள். 
"நாம் பேசிய மொழி" என்ற உணர்ச்சி இல்லாத தமிழன் தமிழனா?...

அறிவில்லாததால், போலி மதங்களை தழுவியதால்,
பழமையான நாம் பேசிய மொழிகளை வெறுக்கும் கேடுகெட்டவர்களை ஒடுக்க வேண்டும், சனாதன தர்மத்தில் இருக்கும் பாரத மக்கள்.
12 லக்ஷம் முன், த்ரேதா யுகத்தில், ராமபிரான் அவதரித்த போது,
திருச்சி அருகில் அன்பில் என்ற ஊரில் பிறந்த ஒரு வேடுவ தமிழன் தான், ராமபிரான் சரித்திரத்தை எழுதி, "வால்மீகி" என்று உலக புகழ் பெற்று, இன்றும் புகழ் குறையாமல் இருக்கிறார்..

போலி தமிழர்களுக்கு, போலி மதங்களில் புகுந்ததால் ஹிந்துக்களை வெறுக்கும் பொறமைக்காரர்களுக்கு, "வால்மீகி தமிழன்" என்று கூட தெரியாதே!!


அது மட்டுமா, ராமபிரான் காலம் வரை உத்திர பிரதேசம் சென்று வாழ்ந்த வால்மீகி, ராமபிரான் அவதாரம் முடிந்த பிறகு,
மீண்டும் தன் தாயகம் திரும்பி, "திருநீர்மலை" (சென்னை அருகே) என்ற ஊரில் முக்தி பெற்றார் என்றாவது தெரியுமா?

அதே ராமபிரானுக்கு சமஸ்க்ரிதத்தில் "ஆதித்ய ஹ்ருதயம்" சொன்ன அகத்தியரும் நம் தமிழ் முனி என்று தெரியுமா?
12 லட்சம் முன் த்ரேதா யுகத்தில் "நம் தமிழர் வால்மீகி, சமஸ்க்ரித மொழியில் ராமபிரானை பற்றி எழுதி உள்ளாரே!!  நாம் தமிழில் எழுதுவோம்"
என்று கலியுகத்தில் கம்பன் என்ற இன்னொரு தமிழன் எழுதினான் என்று கூட புரியாத முட்டாளா இன்றைய தமிழன்?
1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ அந்நியர்களால் அடிமைப்பட்டு கிடந்த நம்மை,
போலி மதவாத ஊடகங்களாலும்,
நம் சரித்திர பெருமை அறியாத சாக்கடை புத்தி கொண்ட ஏமாற்று தலைவர்களாலும்,
நம் பெருமை நமக்கு மறைக்கப்பட்டதே!!
அந்தோ பரிதாபம்!!
கும்பகோணத்தில் பல கோவில்கள் காணப்பட்டாலும்! 
யார் இதை அமைத்தாரகள்? 
அந்த மூலவர் எப்பொழுது வந்து இருப்பார்?
என்ற ஆராய்ச்சி செய்யும் புத்தி கூட இல்லாத மழுங்கிய தமிழர்கள் ஆனோமே!!
அந்தோ பரிதாபம் !!
மீனாட்சி கோவிலில் 'உடைக்கப்பட்ட சிவலிங்கம்' கண் எதிரே காட்டப்பட்டாலும்!! 
நம் கோவிலுக்கு என்ன நடந்து இருக்கும்? 
யார் செய்தார்கள்? 
என்ற சரித்திர அறிவு இல்லையே இன்றைய தமிழனுக்கு!!
அந்தோ பரிதாபம் !!
'காஞ்சி வரதன் 40 வருடம் ஒரு முறை 48 நாட்கள் காட்சி கொடுக்க போகிறார்' என்று மட்டும் அறிந்து, தனக்கு தெய்வ அருள் கிடைக்குமா? என்று ஓடி வந்து பார்த்த கோடிக்கணக்கான மக்களுக்கு,
இதே ஆதி வரதனை, 
1017ADல் அவதரித்த ராமானுஜர் பார்த்த போதும், 
அதற்கு பின் அவதரித்த வேதாந்த தேசிகர் பார்த்த போதும், 
இந்த விதி இல்லையே என்று ஆராய அறிவில்லையே?..
அந்தோ பரிதாபம் !!




ராமானுஜர் காலத்தில் 'அத்திவரதர் வெளியில் தான் இருந்தார்' என்கிற போது, எந்த இஸ்லாமிய கலவரத்தால், இந்த 1000 வருட காலத்தில் அத்திவரதர் குளத்தில் மறைக்கப்பட்டார்?
என்ற சாதாரண கேள்வி கூட இன்றைய ஹிந்துக்களுக்கு ஏழவில்லையே!!
அந்தோ பரிதாபம் !!
தற்காலிக ஏற்பாட்டை, 
ராமானுஜர், தேசிகர் பார்க்காத சம்பிரதாயத்தை, 
ஆகம விதி என்று நினைத்து மீண்டும் 
ஆதி வரதரை குளத்தில் வைக்க விட்டு விட்டனரே!! இன்றைய ஹிந்துக்கள்!
அந்தோ பரிதாபம் !!

- நம் பெருமை நாம் அறியாதவரை..
- இஸ்லாமிய ஆக்கிரமிப்புக்கு நம் ஊரின் வரலாறு முன் எப்படி இருந்தது? என்று 2000, 3000 வருடம் முன் சென்று பார்த்து தெரிந்து கொள்ளாதவரை...
- நம் ஊரில் உள்ள கோவில் முதன் முதலில் யாரால் அமைக்கப்பட்டது? என்று அறியாதவரை,
- கோவில் உருவாகும் முன் இருந்த இந்த மூலவர் எந்த காலத்தில் இருந்தார் யாருக்கு தரிசனம் கொடுத்தார்? என்று அறியாதவரை,
ஹிந்துக்களை மதம் மாற்றி, 
ஹிந்துக்களை கொண்டே, ஹிந்து கோவில்களை, மொழியை, கலாச்சாரத்தை அழித்து விடுவார்கள் இந்த போலி அந்நியர்கள்..

ஹிந்துவின் பெருமை அறியாது, "மதம் மாறிய ஹிந்துக்களே" ஹிந்துக்களை அழிக்க முற்படுவார்கள்.
இந்த உண்மையை இன்றும் ஹிந்துக்களாக வாழும் பாரத மக்கள் உணர வேண்டும்.
மீனாட்சி கோவிலில் சிவ லிங்கத்தை உடைத்தவன்,
ஸ்ரீ ரங்கத்தில் 10000 வைஷ்ணவர்களை கோவிலேயே கொன்று குவித்து செல்வங்களை எடுத்து சென்றவன்,
ககாத்திய தேசம் என்ற தெலுங்கானாவில் பெரும் கொள்ளை அடித்து, காளி கோவில் கோஹினூர் வைரம் இன்றும் பெருமையுடன் பேசப்படும் வைரம் உட்பட பல விலை உயர்ந்த ரத்தினங்களை கொள்ளை அடுத்து அலாவுதீன் கில்ஜிக்கு சமர்ப்பித்த மாலிக் காபூர் என்ற இஸ்லாமியன், பூர்வீகத்தில் "ஹிந்துவாக பிறந்தவன்" என்பதை மறக்க கூடாது.
அது மட்டுமா,
1200ADல் பாரத நாட்டில் ஹிந்துக்களை கொன்று, கோவில்களை இடித்து, பிருத்விராஜ் சவுஹான் என்ற ஹிந்து அரசனிடம் முதலில் மன்னிக்கப்பட்டு, மீண்டும் திடீர் தாக்குதல் செய்து பிருத்விராஜ் சவுஹான் கண்ணை பிடுங்கி, ஏளனமாக சிரித்து, கண் பிடுங்கிய நிலையிலும் தான் வைத்து இருந்த அம்பினால் அதே இடத்தில் கொலை செய்யப்பட்டவன் கோரி என்ற இஸ்லாமிய வம்சத்தில் வந்த "முகமது கோரி".. 
இந்த கோரி வம்சத்துக்கு விதை போட்டவன் "அமீர் சூரி" என்ற பௌத்த மதத்தை தழுவி இருந்த ஆதி ஹிந்து வம்சம் என்பதை மறக்க கூடாது.

அசோக மன்னர் "பௌத்த மதத்தில்" ஈர்க்கப்பட்டு, ஆப்கான் முதல் தன் ஆட்சியில் இருந்த அனைத்து சிற்றரசர்களையும் பௌத்த மதத்துக்கு இழுத்தார்.
அசோக மன்னனால் அன்று போடப்பட்ட விதை, 947ல் பெளத்த நாடாக இருந்தது ஈரான், ஆப்கான் போன்ற ஹிந்து தேசங்கள்.
பௌத்த மதத்தையும் விட்டு, இவர்கள் இஸ்லாமுக்கு மாறியதான் விளைவு, அவர்கள் வம்சத்தில் மற்ற மதங்களை வெறுக்கும் முஹம்மத் கோரி போன்றவர்கள் கிடைத்தார்கள்.
தங்கள் தாய் மதத்தை, கலாச்சாரத்தையே அழிக்க பெரு முயற்சி செய்தார்கள்.

சரித்திரம் அறிந்து கொள்ளாதவரை, ஹிந்துக்கள் ஏமாற்றப்பட்டு கொண்டே தான் இருப்பார்கள்..

இனி,
கைவல்யம் என்ற விடுதலைக்கும்,
வைகுண்டம் என்ற வீடுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிய இங்கே படிக்கவும்.
"உயிர் பிரிந்த பிறகு, நாம் போய் சேர வேண்டியது எங்கே?"
என்ற நமக்குள் எழும் கேள்விக்கு,
நமது அற்புதமான ஹிந்து தர்மம் "நீ மோக்ஷத்துக்கு செல்ல வேண்டும்" என்று பாதை காட்டுகிறது.
அதை காட்டவே 4வது பதமாக "மோக்ஷம் (வீடு)" என்று சொல்கிறது.




உலகில் பிறந்த நாம் அனைவருமே, "அடைய வேண்டிய லட்சியம், மோக்ஷமே" (சம்சார உலகில் மீண்டும் பிறந்து விடாமல் இருக்கும் நிலை)
என்று முடிவாக சொல்வதால்,
கடைசியாக "மோக்ஷம்" என்ற பதத்தை வைக்கிறது நம் சனாதன ஹிந்து தர்மம்.

"மோக்ஷம்" - உயிர் பிரிந்த பின் கிடைக்கப்போகும் விஷயம்.

இந்த உலகில் இருக்கும் வரை எப்படி வாழ வேண்டும்?
என்ற கேள்விக்கு விடையாக
"அறம் பொருள் இன்பம்" என்று பதில் சொல்கிறது, நம் சனாதன தர்மம்.

நம் சனாதன தர்மம் சொல்லும் ""தர்ம(அறம்), அர்த்த(பொருள்), காம(இன்பம்)"என்ற அற்புதத்தை, தன்னால் முடிந்த அளவுக்கு விவரிக்க, ஆசைப்பட்ட தமிழ் முனி அல்லவா நம் திருவள்ளுவர்.
'மோக்ஷம் என்ற லட்சியத்தை அடைவதற்கு', இந்த உலகில் நாம் எப்படி வாழ வேண்டும்? என்று சொல்லும் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றை, 
1330 குறள்களாக நமக்கு தந்து விட்டாரே!! நம் தமிழ் முனி திருவள்ளுவர்.

தான் சொல்ல போகும் அறம், பொருள், இன்பம் வழிகாட்டுதலின் முடிவு யார்?
என்று தன் முதல் குறளிலேயே சொல்கிறார் திருவள்ளுவர்.




"அகர முதல் எழுதெல்லாம் ஆதி பகவன்" என்று "பகவான் என்ற சம்ஸ்க்ரித சொல்லை" பயன்படுத்தி,
"எழுத்துக்களில் நான் 'அ'கரமாக இருக்கிறேன்" என்று பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் "அக்ஷரானாம் 'அ'காரோஸ்மி" என்று சொல்வதையே "அகர" என்ற சொல்லை கொண்டே ஆரம்பித்து,
தான் எழுதும் 1330 குறளின் லட்சியம், அந்த பரந்தாமனை அடைவதே என்று காட்டி விடுகிறார் திருவள்ளுவர்.

இப்படி,
நம்முடைய லட்சியம் "மோக்ஷம் என்ற வீடு பெறுவதே" என்று காட்டி,
நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல, 1330 அறிவுரைகளை வழங்கினார் திருவள்ளுவர்.


நாம் உலகில் வாழும் வரை "அறம் பொருள் இன்பம்" என்ற பாதையில் செல்ல வேண்டும் ஏன் சொன்னார்கள்?
எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று வரிசையில் சொன்னார்கள்?

உலகில் "பொருள்" தானே மிக முக்கியம்!! 
"பொருள், இன்பம், அருள்" என்று சொல்லி இருக்கலாமே?
ஏன் "அறம் பொருள் இன்பம்" என்று குறிப்பிட்ட வரிசையில் சொன்னார்கள்? 
இந்த கேள்வியே 'உண்மையான ஆன்மீக தேடல் உள்ள ஜீவனுக்கு' தான் தோன்றும்.

எதற்காக "அறம் பொருள் இன்பம்" என்று இந்த வரிசையில் சொன்னார்கள்?

"அறம், பொருள், இன்பம், வீடு என்ற மோக்ஷத்தை" சேர்த்து சொல்லும் அருமையான குறள் ஒன்றை பார்ப்போம்.
அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு        

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.
அதே  சமயம், 
"இந்த உலகில் நாம் வாழும் போது, அருள் என்ற அறம் ('தர்ம') செய்யாது போனால், மனித வாழ்வின் லட்சியமான அவ்வுலகம் (வைகுண்டம்) என்ற வீடு (மோக்ஷம்) என்ற லட்சியத்தை நீ அடைய முடியாது!! 
மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருப்பாய்!!" 
என்று எச்சரிக்கிறார் திருவள்ளுவர்.

வள்ளுவர் "அறம், பொருள், இன்பத்தை" 1330 குரளால் எழுதியதன் நோக்கமே, நாம் 'நம் வாழ்க்கையின் லட்சியமான வீடு என்ற மோக்ஷத்தை அடைய தான்' என்று அறிய வேண்டும்.

"உலகில் பணம் (செல்வம்/பொருள்) இல்லாமல் வாழ முடியாது" என்று வள்ளுவரே சொல்கிறார் பாருங்கள்.

"இந்த உலகில் நீ வாழ வேண்டுமானால், மற்றவர்களை ஏமாற்றியாவது!! அதர்மம் செய்தாவது!! பொருள் சம்பாதிக்க வேண்டும்" 
என்பதற்காகவா வள்ளுவர் "பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்று சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.
வள்ளுவர் அதர்மத்தை போதிக்கவா இப்படி சொன்னார்?
சற்று யோசிக்க வேண்டும்.

இதன் ரகசியத்தை கொஞ்சம் ஆராயும் போதே, நமக்கு இதன் அர்த்தம் புரிந்து விடும்.

"அறம், பொருள், இன்பம்" என்று ஏன் இந்த வரிசையில் சொன்னார்கள் என்பதும் புரியும்.

உலகில் வாழும் வரை, நாம் அனைவருக்குமே பொருள் அவசியமாகிறது. 

"பொருள்" இருந்தால் தான், 
நமக்கு உலக இன்பங்கள் கிடைக்கும்
நாம் உணவு உண்ண, உடை உடுத்த, "பொருள்" தேவைப்படுகிறது.

அதே சமயம், 
"பொருள்" இருந்தால் தான், 
"அறம்" என்ற 'தர்ம'த்தை செய்யவும் முடியும். 
பசி என்று வந்தவனுக்கு கொஞ்சம் அன்னம் (தர்மம்) கொடுக்க, "பொருள்" தேவைப்படுகிறது.

நாட்டில் நல்லவர்களை தீயவர்களிடமிருந்து காக்க, 
நாட்டில் தர்மத்தை காக்க, ஆயுதங்கள் வாங்க, "பொருள்" தேவைப்படுகிறது.

தெய்வத்துக்கு கோவில் கட்டி, நாம் ஆசையாக பூஜை என்ற தர்மத்தை செய்து காலத்தை கழிக்கவும் "பொருள்" தேவைப்படுகிறது.

"அறம்  செய்யவும் பொருள் தேவை. இன்பத்தை பெறவும் பொருள் தேவை" என்பதால், 
பொருளை நடுவில் வைத்து, "அறம் பொருள் இன்பம்" என்று சொல்கிறார்கள். 
எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 

"பொருள்" இருந்தால் தான், "அறம்" என்ற "தர்மம்" காரியங்களும் செய்ய முடியும், 
"பொருள்" இருந்தால் தான், "இன்பம்" என்ற "காமத்தை" பெற முடியும்,
என்பதால் தான், 
மறை (வேதம்) சொல்லும் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்த வள்ளுவர், 
"பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை" என்கிறார்.





இப்பொழுது இன்னொரு கேள்வியும், ஆன்மீக தேடல் உண்மையாக உள்ளவனுக்கு தோன்றும்.. 

"அறம் செய்ய... இன்பம் கிடைக்க... "பொருள் அவசியம்" என்பதால், "பொருள்" இந்த இரண்டுக்கும் நடுவில் வைக்கப்பட்டது என்பது புரிகிறது. 
ஆனால், அந்த பொருளை கொண்டு, 
  1. 'அறம்' - அதிகம் செய்ய வேண்டுமா? 
  2. உலக 'இன்பத்தில்' - அதிகம் செலவு செய்ய வேண்டுமா?" 

என்ற கேள்வி எழுகிறது.

"எது முக்கியம்? அறமா? இன்பமா?..   பொருளை கொண்டு அறம் செய்வதா? உலக இன்பத்தை அடைவதா?" 
என்ற கேள்விக்கு, வள்ளுவரே பதில் சொல்கிறார் என்பதும் கொஞ்சம் ஆழ்ந்து கவனித்தாலே புரியும்.

"அறம் செய்தால் தான் அவ்வுலகம் (வீடு) கிடைக்கும்"  என்று வள்ளுவர் சொல்வதை நன்றாக கவனிக்க வேண்டும். 
(அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை)

"அறம் செய்ய விரும்பு" என்று ஒளவையும் சொல்கிறாள். 

"பொருளை கொண்டு அதிகமாக "அறம்" மட்டுமே செய்" என்று நமக்கு அழுத்தமாக சொல்லவே, முதலாவதாக "அறம்" என்று ஆரம்பிக்கிறது.

"முடிந்த அளவுக்கு நீ அறம்  மட்டுமே செய்!! 
செய்தது போக, உன்னிடம் பொருள் இருந்தால், உனக்கும் கொஞ்சம் உணவு கொடுத்துக்கொள், உடை வாங்கிக்கொள்!!" 
என்று நமக்கு உணர்த்தவே, 
"அறம் பொருள் இன்பம்" என்று வரிசைப்படுத்தி சொல்கிறது, நம் சனாதன தர்மமாகிய ஹிந்து மதம்.

வள்ளுவர் சொன்னபடி, "அறம் செய்ய, பொருள் அவசியம்" என்று உணர்ந்து, 
தர்மப்படி பொருளை சம்பாதித்து, அறம் செய்தால்,
"இந்த உலகில் நாம் செய்த அறம், உலகை விட்டு சென்ற பின், 
வாழ்க்கையின் லட்சியமான மோக்ஷம் என்ற வீடு (அவ்வுலகம்) கிடைக்க செய்யும்" 
என்கிறார் வள்ளுவர்.





"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" 
என்று வள்ளுவன் சொன்ன 'தர்மத்தின் தலைவனான பரந்தாமனை அடைய, பொருளை கொண்டு அறம் செய்வோம்'.

எத்தனை ஆழ்ந்த அர்த்தம்!!  
எத்தனை அற்புதமான தர்மத்தில் நாம் பிறந்து இருக்கிறோம்!! என்று நினைத்து பார்க்க வேண்டும்.
ஹிந்துவாக பிறந்ததே பாக்கியமல்லவா? 



Thursday 9 January 2020

7 hills is AdiSesha. Where is the head,, heart and tail of the snake resides in Tirumala, Tirupati? Hindus should know this.

What is the length of AdiSesha in Tirumala, Tirupati?

When narayana, the supreme god decided to descent in this earth in Archa-Avatar himself,
Adisesha, the serpent immediately wished to offer his service for his new avatar.




Narayana asked Adisesha to goto earth and wait for his avatar.. 
Adishesha with 1000 heads laid down in form of 7 hills which is now called as Seshagiri or Tirumala.

This 7 hills spread across huge area...
Want to know where is the head portion of adisesha? 
Tail portion? 
Heart portion?..

Most importantly want to know where lord srinivasa himself standing over Adisesha?...

Lord srinivasa stands at top crown gem of Adisesha's head...

Lord Srinivasa standing at a hill named Venkatadhri.
Behind him, is the Narayanadri Hill.
In front of him is Karudadri hill..
4 more hills extends till Sri Chailam...
Ahobilam holds Simhadri hill.




Heart of Adisesha lies at Ahobilam.

Tail of Adisesha ends at Sri Chailam.

Head of Adisesha starts at Kalahasthi.

The Supreme God Srinivasa stands over the Crown head of Adisesha who appeared himself as idol (not man-made) in kaliyuga for Thondaimaan chakravarthy who ruled 12 forest regions starting from Thiruvahindrapuram (திருவஹீந்திரபுரம்) near cudaloor till tirumala.

These 12 forest regions were split into 2 and referred as "south arcot", "north arcot".

Thondaimaan king 1st had the darshan of narayana in Varaha roopam entering a snake pit.
From the same place, appeared Srinivasa as well in archa roopam form.

Thondaimaan chakravarthy, built the temple for lord Srinivasa which we are seeing now. 
Also he constructed a temple for Varaha in the same place where he appeared.

Both Srinivasa and Varaha archa moorthi can be seen in our Naked Eyes even today.

To give worldly wealth, to give moksha, Narayana descended in Tirumala just to give us the chance to see him thru our eyes.

The Supreme God who is the reason for us to live, to see, is appearing in front of our eyes. Such is the love he has over us.

This love affects everyone who goes to tirumala and see him at temple.
The mouth with no control, shouts "Govinda... Govinda..." once we saw him in our naked eyes.
Feel the divinity.

Arcot (ஆற்காடு) means 6 forest.

Know the value of our divine places.. Be proud to born as Hindu (Vedic principle followers).

மேலும் படிக்க..






பாசுரம் (அர்த்தம்) - கதியேல் இல்லை நின் அருள் அல்லது - திருமங்கை ஆழ்வார் திருநீர்மலையில் உள்ள பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார் "அர்ச்சா திருமேனியையே" பெருமாளின் அவதாரமாக அனுபவிப்பதால், பெருமாளின் திவ்ய காட்சியை பார்க்க கூட இவர் ஆசைப்படவில்லை..
அர்ச்ச அவதாரமே இவருக்கு பகவானாக தெரிவதால், பல இடங்களில் "கண்டு கொண்டேன்" என்று பாடுவதை பாசுரங்களில் கவனிக்கிறோம்..




கதியேல் இல்லை
நின் அருள் அல்லது
எனக்கு நிதியே
திருநீர்மலை நித்திலத் தொத்தே,
பதியே பரவித் தொழும்
தொண்டர் தமக்குக் கதியே 
உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே
என்று "பெரிய திருமொழி"யில் திருமங்கை ஆழ்வார் பாடும் போது,
வால்மீகி முனிவருக்கு ஏற்பட்ட தாபத்தை போக்க, அர்ச்ச திருமேனியுடன் திருநீர்மலையில் காட்சி கொடுத்த எம்பெருமானை பார்த்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று பாடுகிறார்.

புருவத்தின் மத்தியில் எம்பெருமான் திவ்ய காட்சி கண்டதை சொல்கிறாரா? இல்லை..
எம்பெருமான் ராமராக தன் விபவ அவதாரத்தை காட்டி தரிசனம் தந்ததை சொல்கிறாரா? இல்லை.
திருமங்கை ஆழ்வார், திருநீர்மலையில், அர்ச்சா திருமேனியுடன் இருக்கும் எம்பெருமானையே தனக்காக அவதரித்த பெருமாளாகவே பார்த்தார்.
சிலையாக தோன்றிய எம்பெருமானை பார்த்ததினால் வந்த உகப்பில் "கண்டு கொண்டேன்" என்று ஆனந்தப்படுகிறார்..



இந்த பாசுரத்தை ஆரம்பிக்கும் போது "கதியேல்" என்ற சொல்லை கொண்டு ஆரம்பிக்கிறார்.

திருநீர்மலை பெருமாளை நேரில் கண்ட திருமங்கை ஆழ்வார், "தனக்கு ஒரு கதி உண்டா? மோக்ஷத்துக்கு கதி (வழி) உண்டா?" என்று தன் மனசாட்சியையே கேட்க.. மனசாட்சியே பதிலாக
"என் திறமையால் எனக்கு மோக்ஷத்துக்கு கதி இல்லை." என்று  சொல்ல,
"எனக்கும் என்று ஒரு கதி (வழி) உண்டாகில், அது உம்முடைய அருளை கொண்டு தான்" என்று எம்பெருமான் அருளை எதிர்பார்த்து,
கதியேல் இல்லை...
நின் அருள் அல்லது
என்று ஆரம்பிக்கிறார் திருமங்கை ஆழ்வார்.
மேலும்,
உலகத்தில் உள்ளவர்கள் பொதுவாக, வயதான காலத்துக்காக தன் பாதுகாப்புக்காக, நிதியை சேர்த்து வைத்து கொள்வார்கள்..
அதே போல,
பரலோக வாழ்க்கைக்காக, புண்ணிய காரியங்களை செய்து புண்ணியம் என்ற நிதியையும் சேர்த்து வைத்து கொள்வார்கள்..

இந்த இரண்டு நிதியுமே அல்பமானவை, நிரந்தரமற்றவை..
சேர்த்த பணம் எல்லாம் ஒருநாள் செல்வழிந்து போய் விடும்..
இல்லை, செல்வம் இருக்கும் இவன் போய் விடுவான்..



புண்ணியம் காக்குமே என்றாலும், கொஞ்ச காலம் சொர்க்க லோகத்தில் இருக்க செய்து விட்டு, "பூலோகத்தில் நீ செய்த புண்ணியங்கள் இன்றுடன் தீர்ந்தது போ" என்று இந்திரனும் கீழே தள்ளி விட்டு விடுவான்..
மீண்டும் பிறக்க வேண்டியது தான்...

இதனை கருத்தில் கொண்டு,
செல்வம் என்ற நிதியையும் தள்ளி,
புண்ணியம் என்ற நிதியையும் தள்ளி விட்டு,
திருமங்கை ஆழ்வார், "எனக்கு இகத்திலும் பரத்திலும் என்றும் அழியாத வைப்பு மா நிதியாக எம்பெருமானே திருநீர்மலையில் இருக்கிறார்" என்று பாடுகிறார்.
எனக்கு நிதியே
திருநீர் மலை நித்திலத்தொத்தே

இங்கு நித்தில தொத்தே என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..

பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணி மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்..
இங்கு, பவள கொத்து என்று திருநீர்மலை எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

குளிர்ச்சி தரும் கருணை கொண்ட திருநீர்மலை பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலை என்ற தன் நிதியாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.




"எனக்கும் கதி உண்டா?" என்று மோக்ஷத்துக்கு வழி தெரியாமல் வந்த தனக்கும், "கதி உண்டு" என்று காட்டி விட்டார் திருநீர்மலை பெருமாள் என்றதும், அடுத்த பதத்தில் "பதியே" என்று சொல்லி, "உன்னை கண்டு கொண்டேன்" என்று சரண் அடைகிறார்..

பதியே பரவித் தொழும் தொண்டர் தமக்குக்
கதியே உனை "கண்டு கொண்டு" 
உய்ந் தொழிந்தேனே


ஆழ்வார்கள் பாசுரங்கள் தமிழே தமிழ்...

மேலும் பாசுரம் அர்த்தத்துடன் அறிந்து கொள்ள "முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை"



Monday 6 January 2020

ராக்ஷஸர்கள் வானரர்கள் யார்?...மனிதர்களை விட பலசாலிகளான இவர்கள் எப்படி அழிந்தார்கள்? அறிவியல் கண்டுபிடிப்புகள் இது போன்ற மனிதர் வர்கம் இருந்தது என்று கண்டுபிடித்து சொல்கிறதே! அறிவியல் சொல்வதை ஹிந்துக்களை பார்க்க வேண்டாமா?ராமாயணம் நிரூபிக்க படுகிறதே!

"ராக்ஷஸர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதி இன்று இல்லை.
அதே போல,
"வானரர்கள்" என்று அழைக்கப்பட்ட ஜாதியும் இன்று இல்லை.
ஆனால் "மனிதர்கள்" என்ற ஜாதி அன்றும் இருந்துள்ளது.. இன்றும் இருக்கிறோம்.




வானரர்கள், ராக்ஷஸர்கள் 'இருவருமே மனிதர்களை போல தான் இருந்தார்கள்..'
ஆனால்,
'மனிதர்களை விட பன்மடங்கு பலம் பொருந்தியவர்களாக இருந்தார்கள்' என்று நம் ராமாயணத்தில் காட்டப்படுகிறது.
வானத்தில் பறக்கும் சக்தியுடன், 
குரங்கு போலவும் மனிதன் போலவும் தேவைக்கு ஏற்றவாறு உருமாறி கொள்ளும் மாய சக்தி கொண்ட, 
மிகவும் பலசாலிகளாக இருந்த மனிதர்களை (நரர்கள்) - 
"வானரர்கள்" என்று அழைத்தனர்.

நர (மனித) மாமிசத்தை அப்படியே பச்சையாக சாப்பிடும், 
உருவத்தை சாதாரண மனிதனை போன்று மாற்றி கொள்ளும் சக்தி கொண்ட, 
ராக்ஷஸ ரூபத்தில் உயிர் நடுங்கும் உருவத்துடன், மாய சக்தி உடையவர்களாக, 
தனக்கு தேவைப்படும் போது எந்த அதர்மமும் செய்ய துணிந்தவர்களாக, 
எதையும் செய்ய துணிந்தவர்களாக, 
மனிதர்கள் நல்ல காரியங்கள் செய்தால் அவர்களை கொலை செய்து அப்படியே விழுங்கவும் துணிந்தவர்களாக, 
படித்தவர்களாகவும், தவம் செய்து பாவங்களை போக்கி கொள்ளும் சக்தி உள்ளவர்களாகவும், 
மஹா பலசாலிகளாகவும் இருந்த மனிதர்களை -
"ராக்ஷஸர்கள்" என்று அழைத்தனர்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயண சமயத்தில்,
மனிதர்களை விட பலசாலியான, வானில் பறக்கும் சக்தி கொண்ட "வானரர்கள்" என்ற ஜாதி இருந்தது தெளிவாக சொல்லப்படுகிறது.
அதே போல,
மனிதர்களை விட பலசாலியான, நர மாமிசம் சாப்பிடும், தனக்காக எதையும் செய்ய கூடியவர்களான, மாய சக்தி உடையவர்களான, "ராக்ஷஸர்கள்" என்ற ஜாதி இருந்தது பற்றியும் தெளிவாக சொல்லப்படுகிறது.
மனிதர்களில் உயர்ந்த "விஸ்ரவஸ்" என்ற ரிஷிக்கும், த்ருணபந்து என்ற ராஜாவின் (ராஜரிஷி ஆனவர்) பெண்ணான "இடவிடா" என்பவளுக்கும் "குபேரன்' பிறந்தான்.
அவன் தேவர்களில், யக்ஷர்களின் தலைவனானான்.
பூலோகத்தில், இலங்கையில் ஆட்சி புரிந்து வந்தான்.

"விஸ்ரவஸ்", ராக்ஷஸ குலத்தில் பிறந்த "கேகசி" என்பவளையும் மணந்தார்.
இவர்களுக்கு நேபாளத்தில் உள்ள சாலிக்ராம என்ற தேசத்தில், ராக்ஷஸனாக பிறந்தார்கள்  "ராவணன், கும்பகர்ணன், விபீஷணன், சூர்ப்பனகை" போன்றவர்கள்.
குறிப்பாக "ராவணன், சூர்ப்பனகை" இருவரும் 100 சதவீதம் "ராக்ஷஸ சக்தியுடன், ராக்ஷஸ குணத்துடன்" இருந்தனர்.
விபீஷணன் ராக்ஷஸ சக்தியுடன் இருந்தாலும், குணத்தில் மனித குணத்துடன் ஒத்து இருந்தான். தர்மமாதர்மம் பேசுவான்.

ராவணன் தன் தந்தையிடம் பூரணமாக வேதம் கற்றவன்.
ராவணன், குபேரன் சகோதர முறை.
புலஸ்திய ரிஷி இவர்களுக்கு தாத்தா முறை.
ராவணன் 'புலஸ்திய கோத்திரம்'.

தனக்கு தேவை என்றால், எந்த காரியமும் செய்ய துணிபவர்கள் ராக்ஷஸர்கள்.
யாருக்கும் அடங்காதவர்கள்.
ராவணன் தன் தம்பி என்று கூட பார்க்காமல், குபேரனை அடித்து துரத்தி, அவன் வைத்து இருந்த இலங்கையை பிடித்தான். அவன் வைத்து இருந்த குபேர சொத்தை பிடுங்கி, புஷ்பக விமானத்தையும் (flight) பிடுங்கி கொண்டான்.
மேலும்,
நர மாமிசம் பச்சையாக சாப்பிடுபவன் ராவணன்..
மாய சக்தி கொண்டவன்.
பொதுவாகவே ஒரு தலை, 2 கைகளுடன் இருக்கும் ராவணன், மஹா பலசாலிகளான, யாருக்கும் அடங்காத ராக்ஷஸர்கள் கூட்டத்துக்கு "தலைவன்" என்று காட்டி கொள்ள, சபைக்கு மட்டும், 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்.
ராக்ஷஸ கூட்டமே ராவணனை பார்த்து நடுநடுங்கும்.
மேலும்
'போர் சமயத்தில் எதிரிகளை பயமுறுத்த, 10 தலைகளுடன், 20 கைகளுடன் வருவான்' என்று வால்மீகி ராமாயணம் தெளிவாக காட்டுகிறது.




ஹனுமான் கடலை தாண்டி, இலங்கையில் சீதையை தேடிய போது, ராவணன் அவன் அரண்மனையில் ஒரு தலையுடன், 2 கைகளுடன் தான் படுத்து இருந்தான் என்று காட்டப்படுகிறது.
இதே ராவணன்,
சீதை அபகரித்து, ஜடாயுவுடன் போர் செய்யும் போதும், 
ராமபிரானிடம் போர் புரியும் போதும், 
10 தலைகளுடன், 20 கைகளுடன் தன்னை காட்டினான்.
மாய சக்தி நிறைந்தவன்.
செய்யும் பாவங்களுக்கு கடுமையான தவம் செய்து, பாவத்தை போக்கி கொள்ளும் சக்தியும் உடையவன் ராவணன்.

சீதையை இலங்கை இழுத்து வந்து, "10 மாதத்தில் தன்னை ஏற்று கொள்ள மறுத்தால், இவளை தனக்கு இரவு உணவாக வெட்டி சாப்பிட ஏற்பாடு செய்" என்று அவளை சுற்றியுள்ள ராக்ஷஸ பெண்களிடம் சொல்லி செல்கிறான்.

கும்பகர்ணன் தூக்கத்திலிருந்து எழுப்படும் போது, 100 பன்றிகளை விழுங்கி மேலும் பல மாமிசங்களை விழுங்கினான் என்று சொல்லப்படுகிறது.
இவனுடைய சாதாரண உடலே 100 அடிக்கு மேல் இருந்தது என்று காட்டப்படுகிறது. இதை தவிர மாய சக்தியும் கொண்டவன் கும்பகர்ணன்.

இரவிலிலும் கண் தெரியும் சக்தி உள்ளவர்கள் ராக்ஷஸர்கள். 
மனிதர்களை வெறுப்பவர்கள். 
முக்கியமாக மனிதர்களில் நல்ல காரியங்கள் செய்தால், அனைவரையும் நர மாமிசமாக சாப்பிட்டு விடுபவர்கள் ராக்ஷஸர்கள்.
வானரர்களில் "ஹனுமான்" மிகவும் பலசாலி, பாரத மண்ணிலிருந்து இலங்கை வரை தாண்டும் பலசாலி. மாய சக்தி கொண்டவர். ஆனால், சாத்வீகர்.
வானரர்களில் "வாலி" மஹா சக்தி வாய்ந்தவன். அறிவு குறைந்தவன். அதர்மம் செய்பவன். 
ஆனால் ராக்ஷஸர்களை போல மனிதர்களை ஹிம்சிப்பவர்கள் அல்ல. மனிதர்களை போலவே இரவில் கண் தெரியாதவர்கள்.

ராக்ஷஸர்கள் பலத்துக்கு வானரர்கள் தூசுக்கு சமானமானவர்கள்.
ராக்ஷஸர்கள் மனிதர்களை மதிக்கும் அளவில் கூட வைக்கவில்லை.

'தன் 10 தலைகளையும் அறுத்து, ராஜசமான கோரமான யாகம் செய்து, ப்ரம்ம தேவனை அழைத்தான்' ராவணன்.
ப்ரம்ம தேவன் இவன் தவ வலிமைக்கு பணிந்து காட்சி கொடுக்க, "தேவர்கள், யக்ஷர்கள், கிண்ணரர்கள் என்று யாராலும் தான் சாக கூடாது" என்று அடுக்கி கொண்டே போன ராவணன், வானரர்களையும், மனிதர்களையும் சொல்லவில்லை.

மனிதனால், ராக்ஷஸ குலத்தில் உள்ள கடைசி ராக்ஷஸனை கூட எதிர்க்க முடியாது என்பதால், மனிதனை பற்றி அவன் நினைவில் கூட இல்லை.
பரமாத்மா நாராயணன் மனிதனாக பிறந்து, ப்ரம்ம தேவன் கேட்டு கொண்ட பிரார்த்தனைக்காக ராவணனை மனிதனாகவே இருந்து ஒழித்தார்.
ராவணன் அழிந்தாலும், ராக்ஷஸர்கள் பிறகும் இருந்தார்கள்.
இலங்கையில் மிச்சப்பட்ட ராக்ஷஸர்களுக்கு விபீஷணன் அரசனாகி, இலங்கையை ஆண்டான்.

12 லட்சம் வருடம் முன் நடந்த இந்த ராமாயண நிகழ்வில் சொல்லப்படும் இந்த மூன்று பேரை, இன்றைய ஆராய்ச்சி மூலம்

  1. Homo-erectus,
  2. Homo-neanderthal,
  3. Homo-sapiens (human)

என்று 3 வித மனிதர்கள் இருந்தார்கள் என்று கண்டுபிடிக்கிறார்கள்.
'Homo-erectus என்று சொல்லப்பட்ட இவர்களின் மண்டை ஓடு ஆப்ரிக்கா போன்ற தேசங்களில் ஆரம்பித்து பாரத தேசம் வரை இருந்தது'
என்று கண்டுபிடித்த இவர்கள், ஆப்ரிக்கா கலாச்சாரத்தை மட்டுமே கொண்டு இவர்கள் பலசாலிகளாகவும், கொஞ்சம் நல்லவர்களாகவும் இருந்தனர் என்று மேலோட்டமாக சொல்கிறார்கள்.
Homo-erectus என்று சொல்லப்பட்டவர்கள், ஆப்பிரிக்க முதல் இந்திய தேசம் வரை பரவி இருந்தார்கள் என்று மட்டும் இவர்கள் கண்டுபிடிப்பு நின்று விட்டது. இவர்கள் 6 லட்சம் வருடங்கள் முன்பு வரை இருந்தார்கள் என்று சொல்கிறது இன்றைய ஆராய்ச்சி.




Homo-neanderthal என்று சொல்லப்பட்டவர்கள் தான் "ராக்ஷஸர்கள் " என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது. 
இன்றைய ஆராய்ச்சியின் மேலோட்டமான அனுமானத்தின் படி "இப்படி தான் இவர்கள் இருந்தார்கள்" என்று காட்டுகிறது இன்றைய விஞ்ஞானம்.




இந்த உருவங்களைஇவர்கள் பலத்தை பார்த்தால், ராமாயணம் சொல்லும்  சூர்ப்பனகை, ராக்ஷர்கள் குணத்துடன் ஒத்து போகிறது. 
இந்த ஆராய்ச்சிகள் ஐரோப்பா கண்டத்தில் மட்டுமே செய்யப்பட்டதால், Homo-neanderthal என்று சொல்லப்பட்ட இவர்களை போன்றே வர்ணிக்கப்பட்ட்ட ராக்ஷஸர்களை பற்றி ராமாயணத்தில் சொல்லி உள்ளதை இவர்கள் ஆராய்ச்சி செய்யவில்லை என்று தெரிகிறது.

"Homo-erectus" என்று சொல்லப்பட்டவர்கள் தான் "வானரர்கள்" என்று நாம் சிறிது நம் ராமாயண சரித்திரத்தை படித்தாலேயே புரிகிறது.

12 லக்ஷம் முன் த்ரேதா யுகத்தில் நடந்ததாக சொல்லப்படும் இந்த நிகழ்வில் இவர்கள் இந்திய மண்ணில் யார்? எப்படி இருந்தார்கள்? என்று அறிய முடிகிறது.

ஆப்பிரிக்காவில் இந்த Homo-erectus மனிதர்களின் எலும்புகள் கிடைத்ததால், இவர்கள் காட்டு மிராண்டிகளாக வாழ்ந்தனர் என்று சொல்லி, நின்று விட்டனர் நவீன ஆராய்ச்சியாளர்கள்.

இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?
காரணம்,
பாரத தேசத்தின் சரித்திரத்தை கோரி, கஜினி போன்ற இஸ்லாமியர்கள் நுழைவதற்கு முன் சென்று ஆராய வெளிநாட்டினர் தயார் இல்லை. 

உலகமே பிச்சைக்கார நாடாக இருந்த போது, 
பாரத மக்கள் சுயசார்புள்ளவர்களாக, மிகவும் வலிமையுள்ள, செல்வ செழிப்புள்ள, கலாச்சாரம் மிக்க மனிதர்களை கொண்ட நாடாக இருந்தது.
பாரத நாட்டை ஆராய்ச்சி செய்வது,
பாரத மண்ணின் கலாச்சார பெருமையை, ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிஹாசங்களை உண்மை என்று சொல்ல வேண்டி வரும் என்பதால் இந்தியாவில் Homo-erectus  இருந்தார்கள் என்று சொல்லும் இவர்கள், இங்கு எப்படி இருந்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யவில்லை.

"பாரத மக்களை ஹிந்துக்களாக வாழ விடக்கூடாது" என்று இருக்கும் மேலைநாடுகளிடம், பாரத மண்ணில் நடந்த சரித்திரங்களை பிரபலப்படுத்துமா!! என்று எதிர்பார்ப்பதே அறிவீனம்.

பாரத மண்ணில் பிறந்த நாமாவது, நம் தேசத்தின் உண்மையை, பெருமையை அறிந்து கொள்ளலாமே, நாம் உலகுக்கு சொல்லலாமே!

12 லட்சம் வருடம் முன் இந்த மூவரும் யார்?
பாரத மண்ணில் இருந்து இவர்கள் என்ன செய்தார்கள்?
என்று ராமாயணத்தில், நம் கண் முன்னே காட்டி விடுகிறார், தமிழன் வால்மீகி.

  1. Homo-erectus (வானரர்கள்)
  2. Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)
  3. Homo-sapiens (human) (மனிதர்கள்)

என்று 3 வித மனித உருவம் கொண்டவர்கள் இருந்தார்கள். இவர்கள் இப்படி பட்டவர்கள்.. இப்படிப்பட்ட குணம் கொண்டவர்கள்.
அனைவரும் பொது மொழியான சம்ஸ்க்ரிதம் அறிந்தவர்கள் என்று காட்டி, இன்றைய ஆராய்ச்சியின் கண்டுபிடிப்பை, அன்றே எழுதி வைத்த்தார் வால்மீகி என்ற தமிழன். 

பாரத மக்களுக்கு காலம் காலமாகவே இந்த ஆராய்ச்சிகளின் உண்மை தெரிகிறது.
மனிதர்கள் பெரும்பாலும் சாதுக்கள். சக்தி குறைந்தவர்கள். தர்மத்தில் இருக்க ஆசைப்படுபவர்கள். மனிதர்களிலும் பொறமைக்காரர்கள் உண்டு.
இன்று இருக்கும் நாம் அனைவருமே மனிதர்கள் தான்.

ராக்ஷஸர்கள் பெரும்பாலும் பயங்கரமானவர்கள்.. நர மாமிசம் சாப்பிடுபவர்கள். எதையும் செய்ய துணிந்து விடுவார்கள். மாய சக்தி கொண்டவர்கள்.
தர்மத்தில் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைக்கும் சில நல்லவர்களும் இருப்பார்கள். ஆனால் இவர்கள் மிக குறைவே.

"இல்வலா, வாதாபி" என்ற இரு மாயாவி ராக்ஷஸர்கள், "அகத்தியர்" போன்ற தமிழ் முனியை நர மாமிசமாக சாப்பிட நினைத்து, தமிழ் முனி அகத்தியரின் தவ வலிமையால் அழிந்தனர். 

மாய சக்தி நிறைந்த ராக்ஷஸர்களும், மனிதர்களும் எந்த விதத்திலும் சமம் இல்லை.
மனிதர்களையே மதிக்காதவர்கள் ராக்ஷஸர்கள். 
இன்று இருக்கும் சில வேடிக்கை மனிதர்கள், தங்களை ராவணன் பரம்பரை என்று கூறிக்கொள்கிறார்கள். இது வேடிக்கையிலும் வேடிக்கை.

வானரர்களும் குணத்தில் எல்லை மீற கூடியவர்கள்.. வெகுளிகள்.. 
அதே சமயம், ஹனுமானை போன்ற சில வானரர்கள் அதி புத்திசாலியாகவும், இருந்தார்கள்.

இது வரை,
யார் Homo-erectus (வானரர்கள்)?
யார் Homo-neanderthal (ராக்ஷஸர்கள்)?
யார் Homo-sapiens (human) (மனிதர்கள்)?
இவர்கள் உண்மையில் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டியதை பார்த்தோம்.

இனி,
"பொதுவாக பலசாலிகள் தான் நிலைப்பார்கள்" என்று இந்த இன்றைய அறிவியல் சொல்கிறது.
"Survival of fittest" என்று சொல்கிறது.

"உலகில் வாழ வேண்டுமென்றால், எப்படியாவது போட்டி போட்டு ஜெயித்து காட்டு" என்று பயமுறுத்துகிறது..

இதன் அடிப்படையில் பார்த்தால்,
Homo-sapiens (human) என்ற மனிதர்களை விட பலமடங்கு பலசாலியாக இருந்த Homo-erectus (வானரர்கள்) ஜாதியும், Homo-neanderthal (ராக்ஷஸர்கள்) ஜாதியும், எப்படி இன்று இல்லாமல் போனார்கள்?





பலசாலிகளான ராக்ஷஸர்கள், பலசாலிகளான வானரர்கள்எப்படி அழிந்து இருக்க வாய்ப்பு உண்டு?
பலம் குறைந்த "மனிதர்கள்" இன்றுவரை எப்படி இருக்கிறார்கள்?

உலகத்தில் பலம் வாய்ந்தவர்கள் தான் அழிவார்கள் என்பதே உண்மை.
சாதுக்கள், தன் சாது குணத்தாலேயே அழிவில்லாமல் இருப்பார்கள் என்பதே உலக உண்மை.

பலம் வாய்ந்த யாழி, டைனோசர் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள் இன்று இல்லை.

புலி சிங்கம் போன்ற பலம்வாய்ந்த மிருங்கங்கள், இன்று குறைந்து விட்டது.

ஆச்சர்யம் என்னவென்றால், புலி, சிங்கம் குறைந்து விட்டது.. மான்கள் இன்றும் இருக்கிறது..

எப்படி பலம் பொருந்திய ராக்ஷஸர்கள், வானரர்கள் காணாமல் போனார்கள்? காணாமல் போயிருப்பார்கள்?
இன்று அழிந்து வரும் புலி இனத்தை கவனித்தாலேயே, நாம் காரணத்தை புரிந்து கொள்ளலாம்.

புலியின் எண்ணிக்கை மனிதர்கள் வேட்டை ஆடுவதால் உண்மையில் குறைவதில்லை..
மாறாக, புலிகளுக்குள்ளேயே பொறாமை உண்டு, புலிகளுக்கு உள்ளேயே சண்டைகள் ஏற்பட்டு விடும். 
சம பலத்தில் உள்ள சிங்கமும் தங்களுக்குள் சண்டையிட்டு கொள்ளும் 
தங்கள் இனத்தை தாங்களே அழித்து கொள்ளும் குணம் கொண்டவை.

மான்களுக்கு மனிதனாலும் ஆபத்து, மிருகங்களாலும் ஆபத்து.
ஆனால் அவைகளுக்குள் சண்டை செய்து சாவது கிடையாது. கூடி வாழ கூடியவை. சாது மிருகங்கள். 

பலம் வாய்ந்த ராக்ஷஸர்கள், வானரர்கள், பலம் குறைந்த மனிதர்களால் அழிக்கப்பட்டு இருக்கவே முடியாது. 
வாலியும் சுக்ரீவனும் சகோதர்கள். இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கு தங்களுக்குள் சண்டை இட்டு கொண்டனர்.

ராவணன், தன் சொந்த மாமன் "மாரீசனை" மாய மான் போல சென்று, ராமரை சீதையை விட்டு வெகு தூரம் இழுத்து செல்ல சொன்னான்.

"ராமபிரான் தன்னை நிச்சயம் கொன்று விடுவார்" என்று பயந்த மாரிசன் மறுக்க,  சீதையை அபகரிக்க திட்டமிட்ட ராவணன், "மறுத்தால் மாமன் என்று கூட பார்க்காமல் கொன்று விடுவேன்" என்று மிரட்டி அனுப்புகிறான்.
மாரீசன் ராமபிரானால் இறந்தும், துளியும் அதை பற்றி கவலைப்படவில்லை ராவணன்.
அதேபோல,
"பிறர் மனைவியை பேடி தனமாக கொண்டு வந்ததை கண்டித்த தன் சொந்த தம்பியை, சபையில் அனைவரும் பார்க்க எட்டி மிதித்தான்" ராவணன். 

இந்த உதாரணங்களே பலம் பொருந்திய இவர்கள், ஏன் காலப்போக்கில் அழிந்தார்கள் என்பதை விளக்குகிறது. 

எத்தனை பூகம்பம் வந்தாலும், மான்களை போன்ற, பலம் குறைந்த மனிதர்கள் இன்று வரை வாழ்கின்றனர்.

மனிதர்களில் கூட, ராக்ஷஸ குணம் கொண்ட மனிதர்களை  போலி மதங்கள் உருவாக்குகிறது. 
ஹிந்து மதத்தை அழிக்க, 
ஹிந்து தர்மத்தை அழிக்க, 
சாதுக்களான ஹிந்துக்களை மதம் மாற்ற 1000 வருடங்களாக முயற்சி செய்தும், 
ஹிந்துக்கள் அழியாமல், இன்று கூட 80 கோடி ஹிந்துக்கள் பாரத மண்ணில் இருக்கின்றனர். 
உலகம் முழுவதும் பார்த்தால், இன்னும் பல கோடி ஹிந்துக்கள் பரவி கிடக்கின்றனர். 

அழிக்க வந்த போலி மதங்கள், அழிக்க முடியாத ஹிந்து தர்மத்தை பார்த்து மலைத்து நிற்கின்றன. 

"நரமாமிசம் உண்ணும்" "மாய சக்திகள் கொண்ட" ராக்ஷஸர்கள் அழிந்தாலும், 
"ஆகாயத்தில் பறக்கும்", "மாய சக்திகள் கொண்ட" வானரங்கள் அழிந்தாலும், 
மனிதர்களாகிய நாம் அழியவில்லை. 
மனிதர்களில், பிற மதங்களை பார்த்து பொறாமைப்படாத சாதுக்களான,  ஹிந்துக்கள் என்றுமே அழிவதில்லை.




உருவாக்கப்பட்ட போலி மதங்கள், பொறாமை குணத்தாலேயே அழிந்து போகும். 

அறிவுள்ள மனிதர்கள், பொறாமையை தூண்டும், பிற வழிபாடுகளை இகழும், ஊருக்கு உதவாத அறிவுரையை கூறும்  போலி மதங்களை, பௌத்த மதம் பரவி, பிறகு பாரத மண்ணை விட்டு விரட்டப்பட்டது போல, அழிந்து போகும்.

ஹிந்துக்கள் அழிவதே இல்லை.
12 லக்ஷம் வருடம் முன்பு இருந்த அகத்தியரும், ராமரும் வாழ்ந்த சனாதன தர்மம் வாழ்க்கை முறையையே, இன்றும் ஹிந்து என்று அடையாளப்படுத்திக் கொண்டு வாழ்கிறோம் நாம்.

ஹிந்துவாக வாழ்வதில் பெருமை கொள்வோம்.   
வாழ்க ஹிந்துக்கள்.