Followers

Search Here...

Friday 17 January 2020

மோக்ஷம் யாருக்கு கிடைக்கும்? உலக விஷயங்களில் விரக்தி எப்படி வரும்? தெரிந்து கொள்வோமே...

"மோக்ஷம் வேண்டும். மீண்டும் இந்த உலகில் பிறக்க கூடாது" என்று ஆசைப்பட்டால்,
முதலாவதாக, முதல் படியாக,
"நமக்கு உலக விஷயங்களில் விரக்தி வர வேண்டும்"
என்று சாஸ்திரம் சொல்கிறது.




இந்த விரக்தி, உலகை கண்டு பயப்படாத, ஆசையும் படாத  'வைராக்கியத்தை' (திடமான இதயத்தை) நமக்கு கொடுக்கும்.
நம் பாரத மண்ணில் வாழ்ந்த மகான்கள் எத்தனை வைராக்கியத்துடன் வாழ்ந்தனர் என்று நினைத்து பார்க்க வேண்டும்.

உலக விஷயங்களில் விரக்தி எப்படி வரும்? 
உலகத்தை உண்மையாக கவனித்தாலேயே நமக்கு விரக்தி வரும்.

"உண்மையை உண்மை என்று உணர்ந்தாலே", நமக்கு வைராக்கியம் கிட்டும்.
மோக்ஷ பாதைக்கு முதல் படியில் கால் வைத்து விடலாம்.

உலகம் உண்மையில் எப்படி இருக்கிறது? என்று பாருங்கள்...

"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
உலகத்தை பார்! உலகில் உனக்கு கிடைப்பது எல்லாம் கர்ம பலன் (cause and effect) தானே !" என்கிறது சாஸ்திரம்.

"அனைத்தும் கர்ம பலன்" என்று கண் எதிரே நிச்சயமாக தெரிகிறதே !!
இதற்கு சாட்சி நாம் தானே!!

  • ஒருத்தன் நொண்டியாக பிறக்கிறான்.
  • ஒருத்தன் கண் இல்லாமல் பிறக்கிறான்.
  • கண் இருந்த ஒருத்தனுக்கு, திடீரென்று கண் போய் விடுகிறது.
  • சிலருக்கு காது கேட்க முடியாமல் போய் விடுகிறது.
  • சிலருக்கு வாய் இருந்தும், தெளிவாக பேச முடியாமல் இருக்கிறது.
  • "அம்மா தாயே!" என்று பிச்சை கேட்பவனுக்கு கொஞ்சம் சாதம் போட வந்தால், சிலருக்கு வாங்குவதற்கு கையே இல்லை.
  • சிலருக்கு கால் இல்லாமல், இழுத்து இழுத்து கொண்டு கஷ்டப்படுகிறார்கள்.


  • சில ஜீவன்கள், மிருகங்களாக பிறந்து இருக்கிறது.
  • நாயாக பிறந்து வாழ்நாள் முழுக்க லொள் லொள் என்று கத்தி கொண்டே இருக்கிறது.
  • சில, பன்றியாக பிறந்து சாக்கடையில் உழல்கிறது.
  • மாடாக இருந்து, காலையிலிருந்து, மாலை வரை ஓயாமல் வயல் வெளிகளில் அலைந்து கொண்டு கஷ்டப்படுகிறது.
  • சில ஜீவன்கள் ஆடாக பிறந்து, இயற்கையான மரணம் கூட கிடைக்காதபடி, மனிதனிடம் வெட்டுப்பட்டு சாகிறது.
  • சில ஜீவன்கள், கோழியாக பிறந்து, இயற்கையான மரணம் கூட கிடைக்காதபடி, மனிதனிடம் வெட்டுப்பட்டு சாகிறது.

"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
இப்படி எவ்வளவு ஜீவன்கள், பிராணிகள் உலகில் கஷ்டப்படுகிறது!!" 
என்று கொஞ்சம் நிதானத்துடன் பார்..

இது மட்டுமா?


  • ஒரு 'பிராணிக்கு மற்றொரு பிராணி' சத்ருவாக இருக்கிறது.
  • 'மனிதனே மனிதனுக்கு' சத்ருவாக இருக்கிறான்.
  • மனிதனே இன்னொரு மனிதனை பணத்திற்காக குத்தி கொன்று விடுகிறான்.
  • சிலசமயம், காரணமே இல்லாமல் இன்னொரு மனிதனை கொன்று விடுகிறான்.
  • சில சமயம், தன் நம்பிக்கைக்கு எதிராக இருக்கிறான் என்று சொல்லி, ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொன்று விடுகிறான்.
  • சிலசமயம், வெளியூருக்கு சென்றவன் திடீரென்று எங்கு போனான்? என்று கூட தெரியாதபடி காணாமல் போய் விடுகிறான்
  • சிலசமயம், யாரிடம் கொலை செய்யப்பட்டானோ! யார் கொண்டு போனார்களோ!! என்று கூட தெரியாமல் தொலைந்து விடுகிறான்.


  • சில சமயம், குழந்தையாக இருக்கும் போதே இறந்து விடுகிறான்.
  • சில சமயம், குழந்தை இறந்து, தாய் தாங்க முடியாத வேதனையை அனுபவிக்கிறாள்.
  • சிலருக்கு, தகப்பனார் இறந்து விடுகிறார். தாயும் பிள்ளையும் கஷ்டப்படும்படியாக நேர்கிறது.
  • சிலருக்கு, தாய் இறந்து விட்டாள், தகப்பனும், குழந்தையும் கஷ்டப்படுகிறது
  • சிலருக்கு, தாயும் தந்தையும் இருவருமே போய் விட, குழந்தைகள் கஷ்டப்படுகிறது.

இத்தனை துயரங்கள் நம்மை சூழ்ந்து இருக்கும் போது, "சௌக்கியம் எங்கு இருக்கிறது?"




"சௌக்கியம்" என்பதே ப்ரமை (mirage) அல்லவா?

உலகில் சௌக்கியம் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருக்கிறாய். அவ்வளவு தான்.
பாகவதம் சொல்கிறது,
"உன் தலையில் உள்ள பெரும் சுமையை தூக்க முடியாமல், 
கொஞ்ச நேரம் தோளில் மாற்றி வைத்து கொண்டதும், 'சௌக்கியம்' போல தெரியுமே!! 
அது போல தான், நீ உலகத்தில் அனுபவிக்கும் சௌக்கியமும்!!
சிறிது நேரத்திலேயே, 
நீ தோளில் வைத்து இருக்கும் பாரமே, உனக்கு வலியை கொடுக்க ஆரம்பித்து விடும் !!




அஞானியாக இருக்கும் வரை, 
பாவம், புண்ணியம் என்ற மூட்டைகளின் சுமையை, 
உன் தலையிலும் தோளிலும் தூக்கி கொண்டு அலைய தோன்றுமே தவிர, அதை வீசிவிட்டு நிம்மதியாக இருக்க தெரியாது. 

ஒரு துக்கத்துக்கும், இன்னொரு துக்கத்துக்கும் இருக்கும் இடைவெளி, 
உனக்கு சுகம் போல தெரிகிறதே தவிர, 
'உண்மையான சுகம் உனக்கு இந்த மூட்டை சுமையை தூக்கி கொண்டு அலையும் வரை உனக்கு கிடைக்காது'.

இந்த ஜென்மத்திலும், கடந்த ஜென்மங்களிலும், 
அவரவர்கள் செய்த பாவ புண்ணியத்தால் எத்தனை விசித்திரங்களை, ஏற்றத்தாழ்வை உலகில் கண்கூடாக பார்க்கிறோம். 

அது மட்டுமா?

அவரவர் செய்த புண்ணிய, பாவத்தால், எத்தனை விதமான வேற்றுமையை உலகில் பார்க்கிறோம் என்று  பார்! 



  • இதே உலகில் ஒருவன் மனிதனாக மதிக்கப்படுகிறான்.  
  • இதே உலகில் ஒருவன் மனிதர்களில் மகானாக மதிக்கப்படுகிறான்.
  • மனிதனாக பிறந்தும் ஒருவன் மதிப்பு இல்லாமல் இருக்கிறான்.
  • மனிதனாக பிறக்காமல் சில ஜீவன்கள் தேவதைகளாக, தேவர்களாக இருக்கிறார்கள்.
  • சிலர் மரமாக பிறந்து விடுகிறார்கள்.
  • சிலர் பக்ஷியாக பிறந்து பறந்து கொண்டு இருக்கிறார்கள்.

இப்படி பல வித வேற்றுமைகளுக்கு நடுவே,

  • ஒரு இடத்தில் சுகம் கிடைக்கிறது,
  • ஒரு இடத்தில் பயம் உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் சிந்தனை உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் மூப்பு உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் மரணம் உண்டாகிறது.
  • ஒரு இடத்தில் தாங்கமுடியாத ரோகம் வந்து சாகும் வரை  வேதனை உண்டாகிறது.

உலகத்தை பார்.
"உலகத்தை கண்டு விரக்தி வருமா? என்று கேட்கிறாயே!! 
இப்படி எவ்வளவு ஜீவன்கள், பிராணிகள் உலகில் கஷ்டப்படுகிறது!!" 
என்று கொஞ்சம் நிதானத்துடன் உலகத்தை பார்.."




பகவான் ஸ்ரீமன் நாராயணன் கருணையே உருவானவன் ஆயிற்றே !! 
இப்படி ஒரு கஷ்டங்களை நமக்கு தந்து இருக்க மாட்டாரே!!
கருணையே வடிவான, பெருமாள் நமக்கு இருந்தும், 

  • பிறக்கும் போதே, எதற்காக ஒருவனை குருடனாக பிறக்க செய்தார்?
  • என்ன காரணத்தால், ஒருவனை குருடனாக படைத்தார்? 
  • ஏன் ஒருவனை, பணக்கார குடும்பத்தில் பிறக்க செய்கிறார்?

என்ற கேள்வி எழும் போது, உன் கர்ம வினை (cause and effect) என்று காரணத்தை காட்டுகிறது நம் சாஸ்திரங்கள்.
"தெய்வ அனுகிரஹித்தால், உன் கர்ம வினையும் மாறும்" என்கிறது  நம் சாஸ்திரங்கள்.

நேரிடையாக தெய்வ அனுக்கிரஹம் பெற நமக்கு துப்பு இருந்தால், என்றோ வைராக்கியம் நமக்கு ஏற்பட்டு, மோக்ஷத்துக்கான பாதையில் சென்று இருப்போமே!!

மோக்ஷம் அடைய 'துப்பு' இல்லாத நமக்கு, 
'வைராக்கியம்' இல்லாத நமக்கு, 
வைராக்கியம் நிறைந்த, ஞானத்தில் உயர்ந்த ஒருவர்,  'குருவாக கிடைத்தால்', 
அவர் உபதேசமும், அவர் சரித்திரமுமே, 
நம் சித்தத்தை சுத்தம் செய்து, வைராக்கியத்தை கொடுத்து,  
நாம் தூக்கி கொண்டு செல்லும் இந்த பாவ, புண்ணிய மூட்டையை அவர் எடுத்துக்கொண்டு, 
தன் சிபாரிசை கொண்டு, தெய்வத்திடம் நமக்காக பிரார்த்தனை செய்து, ஞானத்தை கிடைக்க செய்து, 
இந்த உலகில் வாழும் வரை வைராக்கியம் குறையாமல், மன சஞ்சலமில்லாமல் வாழ கற்று கொடுத்து, 
தெய்வ பக்தி என்றால் என்ன? என்றும் காட்டி கொடுத்து, 
தெய்வத்திடம் நமக்கு ஆசையை உண்டாக்கி, 
மோக்ஷத்தில் ஆசையை உண்டாக்கி, 
பிறவா நிலை என்ற வைகுண்ட வாழ்வை, குருநாதர், நாராயணனிடம் பெற்று நம் கையில் கொடுத்து விடுகிறார். 

ஹிந்து தர்மத்தின் பெருமை அளவிடமுடியாதது !  
பெருமை அடையவேண்டும் ஹிந்துக்கள் ஹிந்துக்களாக பிறந்ததற்கு ! 

ஹிந்து தர்மம் புரியாமல், குருவையும் நம்பாதவர்கள், மறு பிறவியையும் புரிந்து கொள்ள முடியாதவர்கள், உலகில் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஒரு காலத்தில் "உலகம் தட்டை" என்று உளறி நம்பியவர்களும் இந்த மூடர் கூட்டம் தான்.
கலிலியோவை அடித்து கொன்றவர்களும் இவர்கள் தான்.  
இந்த மூடர் கூட்டம்  சொல்லும் ஆன்மீகத்தை, ஹிந்து தர்மம் சொல்லும் ஆன்மீகத்தோடு ஒப்பீடு நினைப்பது கூட , ஹிந்து தர்மத்திற்கு பெருத்த அவமானம்.

"கடவுள் கருணை வாய்ந்தவர் என்று சொல்லி விட்டு, 
ஒரே பிறவி தான் ஜீவனுக்கு, மறுபிறவி கிடையாது"  
என்று மனிதர்களால் உருவாக்கப்பட்ட முட மதங்கள் சொல்கிறது.
இதை புத்தி உள்ள ஒரு மனிதன் நம்புவானா? 

பாரத மண்ணில் பிறக்காத மூட மதங்களை, சித்தாந்தங்களை, வெளி நாட்டினர் கூட இன்று கேள்வி கேட்கிறார்கள். 

பாரத மண்ணில் பிறந்தும் மூட மதங்களில் விழுபவனை, "அவன் செய்த பாப கர்ம வினை" என்று தானே சொல்ல முடியும்!! 




"கடவுள் கருணை வாய்ந்தவர்" என்று சொல்லி விட்டு, 

  • ஒரே பிறவி தான் என்கிறபோது, பிறக்கும் போதே கடவுள் கருணை இல்லாமல் எதற்காக ஒருவனை குருடனாக பிறக்க செய்தார்?
  • ஒரே பிறவி தான் ஜீவனுக்கு என்றால், என்ன காரணமும் இல்லாமல் ஒருவனை குருடனாக படைத்து ஏன் அந்த ஜீவனை தண்டித்தார்? 
  • ஒரே பிறவி தான் என்கிறபோது, ஏன் ஒருவனை பணக்கார குடும்பத்தில் பிறக்க செய்து ஒரு ஜீவனை வாழ வைக்கிறார்?

என்ற கேள்விக்கு மூட மதங்கள், தெய்வத்தை கருணை இல்லாதவன் என்று தான் பழிக்க வேண்டிவரும். 

மூட மதங்களை பற்றி ஆராய்ச்சி செய்வது கூட, ஒருவன் தனக்கே செய்து கொள்ளும் துரோகம்.

ஹிந்துவாக பிறப்பதே நாம் செய்த புண்ணியத்தால் தான்.

கீழ் புத்தி, பாவ புத்தி உடையவர்களுக்காக, போலி மதங்கள் ஒரு இடத்தில் உலகில் என்றுமே இருக்கதான் செய்யும். 

பாவத்தை வெறுப்பவர்கள். புண்ணியத்தை செய்ய ஆசைப்படுபவர்கள், ஹிந்துவாக வாழவே ஆசைப்படுவார்கள்.

பாவத்தை வெறுத்து, புண்ணியத்தையும் வெறுக்கும் முமுக்ஷுக்களும், ஹிந்துவாகவே பிறக்கிறார்கள். ஹிந்துவாகவே வாழ்கிறார்கள்.

1000 வருட அந்நிய போலி மதங்கள் ஆள முயன்றும், அழிக்க முடியாமல் ஹிந்து தர்மம் இருப்பதற்கு காரணம், அதன் அசைக்கமுடியாத ஆழ்ந்த கருத்துக்களே.. 

மற்ற மதங்களை மனிதர்கள் காக்கிறார்கள்.
ஹிந்து தர்மம் என்று இன்று அழைக்கப்படும் சனாதன தர்மத்தை, பகவான் நாராயணன், ருத்ரன், முப்பத்து முக்கோடி தேவர்கள் காக்கிறார்கள்.

தெய்வம் காக்கும் புண்ணிய தர்மத்தில் ஹிந்துவாக வாழ்வோம். 

போலி தத்துவங்களில் விழுந்து கிடைக்கும் அனைவரையும் ஹிந்து தர்மப்படி வாழ் வழி செய்வோம்.


Monday 13 January 2020

பாசுரம் (அர்த்தம்) - பறவை ஏறும் பரம புருஷா... இரவு செய்யும் பாவக் காடு (பெரியாழ்வார்). "பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்? காரணத்தை ஆழ்வார் மூலம் தெரிந்து கொள்வோமே !!

திருப்பதியில், ஆதிசேஷனே "7 மலைகளாகவும் இருக்கிறார்". 
இந்த 7 மலைகளுக்கு, பொதுவாக "திருமலை" என்றும் "சேஷாத்ரி" என்றும் "சேஷகிரி" என்றும் பெயர்.
அதில் சில மலைகள், சில பக்தர்களின் பெயர்களில் அமைந்தது.

ஏழு மலைகளின் பெயர்கள்:
1. நாராயணாத்ரி (நாராயண முனிக்கு ஸ்ரீனிவாச பெருமாள் வைகானச பூஜையை உபதேசித்த இடம் என்பதால்) ஸ்ரீனிவாச பெருமாள் இருக்கும் இடம்.
2. வேங்கடாத்ரி (பாபங்கள் பொசுங்கும் என்பதால்)
3. சேஷாத்திரி (ஆதி சேஷனை குறிக்கிறது). சிலர் நிலாத்ரி என்றும் சொல்கிறார்கள்.
4. அஞ்சனாத்ரி (ஆஞ்சநேயர் அவதரித்த இடம். அவள் தாய் அஞ்சனாவின் பெயரில்)
5. சிம்மாத்ரி ( நரசிம்ம  அவதார ஸ்தலம் என்பதால்)
6. கருடாத்ரி (கருடன் அம்ருத கலசத்தோடு இங்கு அமர்ந்ததால்)
7. வ்ருஷபாத்ரி (வ்ருஷபன் என்ற அசுரன் ஞானம் பெற்றதால்)





பாபங்கள் பொசுங்கும் என்பதால் திருமலைக்கு வேங்கடாத்ரி என்ற பெயரும் உண்டு.

வேங்கடம் (வேம்+கடம்) என்றால் "பாவங்களை எரிப்பது" என்று பொருள்.

  • "வேம்" என்றால் பாவம் என்று தமிழில் அர்த்தம்.
  • "கடம்" என்றா எரித்து (fry) என்று தமிழில் அர்த்தம்.


பெரியாழ்வார், பெருமாளை சரணாகதி செய்யும் போது, "திருமலையப்பனை நினைத்து கொண்டு, வெங்கட்ரமனா கோவிந்தா!!  என்று கதறி அழைத்து விட்டாலே, நம் பாவங்கள் எல்லாம் எரிந்து போகும்"
என்கிறார்.
"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போல, நமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பறவை ஏறும் பரம புருஷா!
நீ என்னை கைக்கொண்டபின்
பிறவி என்னும் கடலும் வற்றிப்  
பெரும்பதம் ஆகின்றதால்
இரவு செய்யும் பாவக் காடு
தீக்கொளீஇ வேகின்றதால்
அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே! 
-  திருமொழி (பெரியாழ்வார்)

"பாவம் செய்ய கூடாது" என்று தான் நாம் அனைவருமே நினைக்கிறோம். இருந்தாலும், "பாவம் தொடர்ந்து செய்கிறோமே!!".. ஏன்?

"அஞானம் தான், நாம் பாவம் செய்வதற்கு காரணம்"
என்கிறார் பெரியாழ்வார்.

'எந்த அஞானத்தை சொல்கிறார் பெரியாழ்வார்? தெரிந்து கொள்வோமே!

"இரவு செய்யும் பாவக் காடு" என்கிறார் பெரியாழ்வார்.
இங்கு "இரவு" என்று "அஞானத்தை" சொல்கிறார் பெரியாழ்வார்.

"ஏன் இப்படி தொடர்ந்து பாவத்தை செய்கிறேன்? ஏன் பாபியாகவே இருக்கிறேன்?"
என்று ஒரு பக்தன் தன்னையே நொந்து, ராமபிரானை பார்த்து உண்மையை சொல்கிறான்.
"ராமா, நீங்கள் தர்மத்துக்காக எத்தனை, படாதபாடு பட்டீர்கள் !!
தர்மத்துக்காகவே பூமியில் நீங்கள் அவதரித்தீர்கள்..., 
நானோ தர்ம துரோகியாக இருக்கிறேன்!!

மனிதர்கள் எப்படி தர்மத்தில் வாழ வேண்டும்? என்று காட்ட, வைகுண்டத்தை விட்டு விட்டுமனிதனாகவே தானும் அவதரித்து, தாங்கள் பட்ட கஷ்டங்கள் எல்லாம், தர்மத்துக்காக தானே !! 
தர்மத்தை நிலைநிறுத்துவதற்கு தானே !!
நானோ, தர்ம துரோகியாக இருக்கிறேன் !!
என்று சொல்ல,







"அப்படி என்ன, நீ அதர்ம செய்து விட்டாய்?" 
என்று ராமபிரான் பரிந்து கேட்க,

"ராமா, இப்படியா எனக்கு பரிந்து பேசுவது?
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு உகந்த காரியங்களோ, அது எதையுமே செய்யாதவன் நான்!
அது மட்டுமல்ல, 
எது எதுவெல்லாம் தர்மத்துக்கு எதிரானதோ, அதையெல்லாம் செய்தவன் நான்!

'இந்த அதர்மம் செய்தேன், அந்த அதர்மம் செய்யவில்லை என்று இல்லாமல்', உலகத்தில் உள்ள அனைத்து அதர்ம காரியங்களையும், 
தேடி தேடி, பார்த்து பார்த்து, ஆசைப்பட்டு ஆசைப்பட்டு செய்திருக்கிறேன்.

இப்படி பாபங்களே செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா?
'உடம்பே நான்' என்ற அஞானமே, நான் செய்யும் இத்தனை பாபத்துக்கும் காரணம்.
'உடம்பே நான்' என்ற அகம்பாவத்தால், இத்தனை பாவங்களும் செய்கிறேன்.
எத்தனை நாள் இப்படியே இருந்து விடப்போகிறேன்? 
ஒரு நாள் நிச்சயம் செத்து விடுவேனே!!
இவ்வளவு பாப காரியங்கள் செய்கிறேனே!! இப்படியாவது பிழைக்க வேண்டுமா? இந்த உடம்பு நிரந்தரமானதா!!
ஒரு சாண் வயிற்றுக்கு சோறு போட்டு காப்பாற்ற, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?
புலன்களுக்கு சுகம் கிடைக்க, இத்தனை பாபங்களை நான் செய்ய வேண்டுமா?

'உடம்பே நான்' என்ற அகம்பாவம் தானே, என் பாபங்கள் அனைத்துக்கும் காரணம்.
'உடம்பு நான் இல்லை, ஆத்மா தான் நான்' என்ற நினைவு கூட இல்லாமல் பாபம் செய்து கொண்டே போகிறேனே!!
அது போகட்டும்,
'ஐயோ!! இப்படி இந்த உடம்புக்காக இத்தனை பாபங்களை செய்கிறோமே!! என்று நினைத்தாவது கண்ணீர் விட்டாயா?' 
என்று கேட்டு விடாதீர்கள்.

'நான் பாபி' என்ற எண்ணம் ஒரு எள் அளவிற்காவது இருந்தால் தானே! என் கண்களில் நீர் சிந்தும்...

'நான் ஏதோ பரமபுண்ணியவான் போலவும், பாவமே செய்யாதவன் போலவும் தானே நானே என்னை பற்றி நினைத்து கொண்டு இருக்கிறேன்'.

'நான் ரொம்ப யோக்கியன். நான் நீதி தவறி நடக்க மாட்டேன்' 
என்று தைரியமாக சொல்லி கொண்டு இருப்பேனே தவிர, 
தனக்கு தானே ஒரு முறை கூட சிந்தித்து பார்த்தது கிடையாது. 
என்னை பற்றி ஒரு அனுதாபம் கூட ஏற்பட்டது கிடையாது, எனக்கு!!

நான் ஏன் சிந்தித்தது கிடையாது? என்று நீங்கள் கேட்டால், 
'ஆத்மா தான் நான்' என்ற ஞானம் இல்லாதது தான் நான் சிந்திக்காததற்கு காரணம். 
'உடம்பே நான்' என்ற அஞானம் தான் நான் சிந்திக்காததற்கு காரணம்.
என்றான் அந்த பக்தன்

பெரியாழ்வார் சொல்கிறார்,
'உடம்பே நான்' என்று இருக்கும் அஞான ஜனங்கள், 'பாபம் செய்கிறோம்' என்ற நினைவு கூட இல்லாமல், 
'புஷ்ப தோட்டம்' போடுவது போல,
தன் பாபங்களை கொண்டே அவரவர்களுக்கு ஒரு பெரிய 'பாப தோட்டம்' போடுகிறார்களாம்.

இதையே "இரவு செய்யும் பாவக்  காடு" என்று சொல்கிறார் பெரியாழ்வார்.

"தெரியாமல் இந்த பாவங்கள் செய்து விட்டாயோ?" என்று கேட்டால், "தெரிந்தே செய்த பாப காடு"  (செய்யும் பாவக் காடு) என்கிறார் பெரியாழ்வார்.

ஒரு தோட்டம் போடுவது போல, அஞானிகள், இந்த உடம்புக்காக, தெரிந்தே 'பாபம் என்ற தோட்டத்தை' அமைத்துக்கொள்கிறார்களாம்.

இப்படி அஞானிகள், 'உடம்பே நான்' என்று கஷ்டப்பட்டு, ஜென்ம ஜென்மாக ஆசையுடன் வளர்த்த இந்த பாபத்தோட்டம்,
திடீரென்று ஒரு சந்தர்ப்பம், ஒரு காட்டு தீயில் சிக்கி, அந்த காடே பொசுங்கி விட்டது!!
என்கிறார் பெரியாழ்வார்.
"திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா...வேங்கட ரமண கோவிந்தா"
என்று திருப்பதியில் இருந்து கூட வேண்டாம், இருக்கும் இடத்திலிருந்தே "திருமலையப்பா... கோவிந்தா... ரமா ரமண கோவிந்தா... வேங்கட ரமண கோவிந்தா"
என்று சொல்லிவிட்டால் கூட,
நாம் பார்த்து பார்த்து வளர்த்த இந்த பாப காடு, 
"கோவிந்தன்" என்ற பெரும் காட்டுத்தீயில் பொசுங்கி விடுமே!! 
என்கிறார் பெரியாழ்வார்.




"இப்படி நாம் வளர்த்த பாப காடு, 'கோவிந்தா' என்று சொன்னவுடனேயே பாபங்கள் பொசுங்கியது மட்டுமில்லாமல், கற்பகவருக்ஷங்களே நிறைந்த பசுமையான  காடாகவும் ஆகி விட்டது" என்கிறார் பெரியாழ்வார்.

அறிவையென்னும் அமுத ஆறும்
தலைப்பற்றி வாய்க்கொண்டதே

என்று சொல்லும் போது,
"கோவிந்தா" என்று சொன்னவுடன், அந்த வேங்கடநாதன் தன்னை கரம் பிடிக்க (நீ என்னை கைக்கொண்டபின்), 
அஞானம் என்ற இருள் விலகி, மோக்ஷம் நிச்சயமாகிவிட,
ஞானம் ஏற்பட்டு (அறிவையென்னும் அமுத ஆறும்), 
ஆத்ம ஞானம் புத்தியில் (தலைபற்றி) ஏற்பட்டு, 
பெருமாளின் கருணையை நினைத்து ஏற்பட்ட பக்தியால் 
"கோவிந்தா.. கோவிந்தா..." என்று நாமம் வாயில் வருகிறதே (வாய்க்கொண்டதே)!! 
என்கிறார் பெரியாழ்வார்.

"வேங்கடம்" என்ற சொல்லுக்கு விளக்கம் போலநமக்கு இந்த பாசுரத்தை காட்டுகிறார் - பெரியாழ்வார்.

பாபங்களை பொசுக்கும் வேங்கடாத்ரியில், வீற்று இருக்கும் ஸ்ரீனிவாசன், 'நம் பாபங்களை மட்டும் போக்குவதில்லை, பாபங்களை போக்கி, நமக்கு நல்லதையே கிடைக்க செய்து, நல்லதையே நினைக்க செய்து, தன்னிடம் பக்தி உண்டாகும் படி செய்து, மோக்ஷ வாசலையும் திறந்து விடுகிறார்'.


ஸ்ரீனிவாச பெருமாளை பக்தியுடன் சேவிப்போம்.

முழுசி வண்டாடிய - திருமங்கை ஆழ்வார் அஷ்டபூஜை பெருமாளை பார்த்து பாடிய பாசுரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோமே..