Followers

Search Here...

Friday 10 September 2021

இந்தியாவுக்குள் கால் வைக்கும் முன், வெளிநாட்டவர்கள் சமுதாயத்திற்கு ப்ரயோஜனமாக என்ன கண்டுபிடித்தார்கள்? பாரத தேச ஒப்பீடு.. ஒரு அலசல்...

 "சூரியன் ஒரே இடத்தில் தான் உள்ளது. சூரியனை மற்ற கிரகங்கள் சுற்றுகிறது" என்று ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளனர் இன்றைய விஞ்ஞானிகள்.

சூரியன் உதிப்பதும், மறைவதும் நம்மை பொறுத்து உண்மை போல தெரிகிறதே தவிர,  மஹாமேருவில் கஸ்யபரின் புத்ரனான சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை. எப்போதும் தெரிந்து கொண்டே இருக்கிறான் என்று என்றோ ஆராய்ச்சி செய்து அன்றைய விஞ்ஞானிகளான ரிஷிகள் சொல்லிவிட்டனர்.

கஸ்யப: அஷ்டம:

ஸ மஹாமேரும் ந ஜஹாதி

- தைத்தரீய (யஜு வேதம்)

"உலகம் உருண்டை" என்று வராக அவதாரத்திலேயே சொல்லிவிட்டது நம் வேதம்.


"செவ்வாய் (mars) சிவப்பு கிரகம்" என்று அறிவியல் சொல்கிறது. 

சர்வ சாதாரணமாக, நவக்ருஹ சன்னதியில், செவ்வாய் தேவதைக்கு "சிவப்பு துணி கட்டி", என்றோ நம்முடைய இந்த உண்மையை வேதம் சொல்லி விட்டது.


வேத ஒலியே, ஆகாசத்தில் நிரம்பி உள்ளது. (Sound that exist in space is Veda)

வேத ஒலியே, தன் அதிர்வினால் காற்றை உண்டாக்கியது. (Sound vibration created Air)

காற்றின் அதிர்வே, அக்னியை உண்டாக்கியது. (Air vibration created Fire)

அக்னியின் அதிர்வே, நீரை உண்டாக்கியது. (Fire vibration created water)

நீரின் அதிர்வே, மண் என்ற பல உலகங்களை உண்டாக்கியது. (Water vibration created sand)

இது படைப்பின் வரிசை.

"அழிவு" என்பது இதற்கு எதிராக செல்கிறது.

மண்ணில் உருவாகிய அனைத்து உடல்களும் மண்ணுக்குள்ளேயே மறைந்து விடுகிறது. 

அக்னியில் உருவான தேவதைகள், தங்கள் பதவி காலம் முடிந்தவுடன், அக்னியில் மறைந்து விடுவார்கள்..


'இப்படி உருவான மண் உலகம், அதே வரிசையில் அழிக்கப்பட்டு வேதத்தில் அடங்கி விடும்' என்று சொல்கிறது நம் வேதம்.

பிரளயம் ஏற்படும் போது, 

  • மண் உலகம் நீரில் கரைந்து, 
  • நீர் அக்னியில் மறைந்து,
  • அக்னி காற்றில் மறைந்து,
  • காற்று, சப்த ப்ரம்மம் என்று சொல்லப்படும் வேத ஒலியில் மறைந்து விடும்.
  • 'அந்த வேதம், பரவாசுதேவனின் ஞானம் (அறிவு) என்பதால், அனைத்தும் பரமாத்மாவில் அடங்கி விடும்' 

என்று படைப்பையும், பிரளயத்தையும் சொல்கிறது வேதம்.

வேதம் சொல்லும் பல விஷயங்களில், ஒரு அளவுக்கு தான் இன்று அறிவியல் அடி எடுத்து வைத்து கண்டுபிடித்துள்ளது. 

காற்றிலிருந்து, அக்னியிலிருந்து, தண்ணீர் எடுக்க இன்று முயற்சிகள் நடக்கிறது. 

இந்த வரிசையை படைப்பு சொல்லும் போதே வேதம் சொல்லிவிட்டது.

ஆனால், 

'மூலமான வேத ஒலிகளை ஆராய்ச்சி செய்தால், காற்றினால், அக்னியால், நீரால், மண்ணால் வரும் வியாதிகள், மாறுபாடுகளை சரி செய்ய முடியும்' என்ற ஆராய்ச்சியை இன்றைய அறிவியல் இன்னும் தொடங்கவில்லை.


ஜெர்மனி போன்ற நாடுகள் வேத ஒலியை ஆராய்ச்சி செய்ய ஆரம்பித்து உள்ளனர் என்று அறிகிறோம்.


வேதத்தை எழுதி படித்தால், படிக்க முடியுமே தவிர, ரிஷிகள் ஆகாசத்தில் எந்த ஒலி அதிர்வில் கேட்டார்களோ, அதே போல உச்சரிக்க முடியாது.

சரியான வேத உச்சரிப்பே, சரியான ஒலி அலைகளை உண்டாக்கி, காற்று, அக்னி, நீர், மண் போன்றவற்றால் உண்டாகும் மாறுபாட்டை, வியாதிகளை குணப்படுத்தும்.

அந்த உச்சரிப்பை இன்று வரை காப்பாற்றி வரும் ஒரே சமூகம் 'வேத ப்ராம்மணர்கள்' மட்டுமே. 

வேதத்தை விட்டு விட்டு, வேலைக்கு, வியாபாரத்துக்கு, நாட்டுக்கு வேலை செய்யும் பிராம்மணர்கள்

வியாபாரிகள் (வைஸ்யர்கள்), 

வேலைக்கு செல்பவர்கள் (employee/சூத்ரர்கள்), 

நாட்டை காப்பவர்கள் (க்ஷத்ரியர்கள்) அனைவரும், 

இன்று 1000 கணக்கில் மட்டுமே உள்ள வேத ப்ராம்மணர்களை சரியான முறையில் பயன்படுத்தினால், இருக்கும் கொஞ்சம் வேத ஒலிகளின் பலனையாவது இன்று பெறலாம்.

ராமாயண காலத்தில், 'பலை அதிபலை' என்ற இரு மந்திரங்கள் விசுவாமித்திரர் சொன்னார் என்று வருகிறது.

இந்த மந்திரம் பசி தூக்கம் ஏற்படாமல் செய்து விடும் என்று பலன் சொல்லப்படுகிறது.

அந்த மந்திரத்தை ராம லக்ஷ்மணர்களுக்கு விசுவாமித்திரர் உபதேசம் செய்தார்.

இன்று, 

இந்த மந்திரத்தை ஸித்தி செய்ய, ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை. 

மந்திரம் கிடைத்தாலும், அதன் உண்மையான வேத ஒலி எப்படி இருக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விட்டது. 

'த்ரேதா யுகத்தில், சுமார் 8 லட்சம் வருடங்கள் முன், குபேரன் அன்றே flight வைத்து இருந்தான். அதை ராவணன் பிடுங்கி வைத்து இருந்தான்' என்று ராமாயணம் காட்டுகிறது.

இன்று ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்து விட்டனர்.

அதே சமயம்,

ராவணன், தன் உருவை மாற்றி கொள்ளும் சக்தி கொண்டிருந்தான்.  

இந்த ரகசியத்தை கண்டுபிடிக்க இன்னும் முடியவில்லை.

மேலும்,

போரில், இவர்கள், வேடுவன் போல வெறும் அம்பு விட்டு சண்டை செய்யவில்லை.. 

அஸ்திரம், சஸ்திரம் என்று பல விதமான அணுகுண்டு பயன்படுத்தி உள்ளனர்.




அஸ்வத்தாமன் ப்ரம்மாஸ்திரம் விட்ட போது, அர்ஜுனன் பதிலுக்கு ப்ரம்மாஸ்திரம் எடுக்க, "உலகமே அழிந்து விடும்" என்று தடுத்தார் என்று பார்க்கிறோம்.

அந்த அஸ்திரங்களை "தனுர் வேதம்" என்ற பகுதியில் இருந்து கற்று கொண்டனர் என்று பார்க்கிறோம்.

இன்று அந்த வேத ஒலிகள் தொலைந்து விட்டது. 

காரணம்?

1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரமிப்பால், வடக்கில் இருந்த பல வேத ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டனர்.

கில்ஜி மற்றும் துக்ளக் காலத்தில் 80 வருடம் மட்டுமே சிக்கிய தமிழகத்தை, மராட்டிய மன்னர்களும், பிறகு விஜயநகர மன்னர்களும் காப்பாற்றி விட்டனர்

(கில்ஜியை தொடர்ந்து துக்ளக் காலத்தில் தமிழகத்தை கைப்பற்றி இருந்த இஸ்லாமியர்கள் என்ன செய்தார்கள் என்ற ஒரே ஒரு சம்பவம் இதோ... )

ஹிந்துகளாக உள்ள தமிழர்கள் ஆந்திர தேசத்துக்கும், கன்னட தேசத்துக்கும், மராட்டிய தேசத்துக்கும் என்றும் கடமைப்பட்டு இருக்கிறோம். 

ஹிந்துக்களாக இல்லாத மற்றவர்கள் இவர்களை மதிக்க வேண்டும் என்று நினைப்பது கூட அறிவீனம்.


1000 வருடம் முன்பு இருந்த கோவில்கள் இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளது.

1000 வருடம் முன்பு இருந்த வேத பிராம்மண பரம்பரை இன்றும் தமிழகத்தில் மட்டும் தான் அப்படியே உள்ளனர்.


வடக்கில் (பாகிஸ்தான், பங்களாதேஷ் உட்பட), கோவில்களும், ப்ராம்மணர்களும் 1000 வருட காலத்தில் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டதால், பல ஆராய்ச்சி குறிப்புகள், வேத சம்ஹிதைகள், ப்ராஹ்மண பாகங்கள் தொலைந்து விட்டது.


வடக்கில், இன்று நாம் காணும் கோவில்கள் அமைப்பும், ப்ராம்மணர்கள் வேதம் உச்சரிப்பதும் வித்யாசமாக இருப்பதற்கு இதுவே காரணம். இதை சரி செய்ய செல்வந்தர்கள் முன் வர வேண்டும். 


தமிழகத்தில் உள்ள கோவில்கள் போன்றே பாரத தேசம் முழுவதும் கட்டப்பட வேண்டும்.

வடக்கில் உள்ள வேத ப்ராம்மணர்களை தமிழகம் வந்து கற்று கொள்ள செய்ய வேண்டும்.


ஆந்திர தேசமும், உத்கல தேசமும் (ஒடிசா) சந்திக்கும் மகாநதி கரையில் உள்ள "ஜயமங்களம்" என்ற ஊரில், குமரிலபட்டர், தைத்தரீய யஜுர் வேத பிராம்மண குடும்பத்தில் பிறந்தார். 

அவரை ஆதிசங்கரர் சந்தித்தார் என்று பார்க்கிறோம்.

புண்ய ஸ்லோக மஞ்சரி என்ற நூல், ஆதி சங்கரர் கி.மு. 477ல் அவதரித்தார் என்று சொல்கிறது.

இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் நுழையாத  காலத்தில், மலையாள தேசத்தில் உதித்த ஆதி சங்கரர், மொழி பிரச்சனை இல்லாமல்,  குமரில பட்டருடன் பேசினார். 




பிறகு காஷ்மீர் சென்று அங்கு இருந்த காஷ்மீரி ப்ராம்மணரான மண்டல மிஸ்ரரை சந்தித்து வேதத்தின் ஞான மார்க்கத்தை பற்றி பேசினார் என்று பார்க்கிறோம்.

மொழி பிரச்சனை இல்லாத தேசமாக இருந்துள்ளது நம் தேசம். 

அதனால் வியாபாரிகள் எங்கு சென்றும் வியாபாரம் செய்துள்ளனர் என்றும் தெரிகிறது.

அன்று இருந்த ப்ராம்மணர்களை, அவர்கள் காப்பாற்றி வைத்து இருந்த பல சாஸ்திரங்களை கொளுத்தி, அவர்களை கொன்று, கோவிலை இடித்து சர்வ நாசம் செய்தனர் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள்.

947ADக்கு முன்,, நம்முடைய தேசத்துக்குள் நுழைவதற்கு முன், எந்த உருப்படியான கண்டுபிடிப்பும் செய்யாத இவர்கள், பல வேத சூத்திரங்களை (formula) அர்த்தம் தெரிந்து வாங்கி கொண்டு, சொல்லி கொடுத்த ப்ராம்மணர்களை கொன்று விடும் பழக்கம் கொண்டிருந்தனர்.


குதுப்மினார் என்ற ஸ்தூபத்தை சிற்ப சாஸ்திரம் தெரிந்த ஹிந்துக்களை வைத்து கட்டிய பிறகு, "இதே போல நீ வேறு எங்கும் கட்டி விட கூடாது" என்று சொல்லி, கட்டிய அனைத்து ஹிந்துக்களையும் கொன்று விட்டான் குதுப்தின் ஐபக்.


இதே போல, 

தாஜ் மஹால் கட்டிய போது, ஸாஜஹான், கட்டிய ஹிந்துக்களை கொல்ல உத்தரவிட்டான்.


இப்படி வேத ஒலியால் பல ஆச்சர்யங்களை, சாஸ்திரங்கள், மந்திரங்கள், சூத்திரங்கள் (formula) என்று வைத்து இருந்த க்ஷத்ரியர்கள், ப்ராம்மணர்கள், வைஸ்யர்கள் அழிக்கப்பட்டு, தமிழ்நாட்டை தவிர மீதம் உள்ள அனைத்து தேசத்திலும் இருந்த பல ரகசிய சூத்திரங்கள் கடத்தப்பட்டன. 



இந்த சூத்திரங்களால் அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மாளிகைகள், கோவில்கள் தரை மட்டம் ஆக்கப்பட்டன. 

அறிவோடு எவர் இருந்தாலும் உயிரோடு விடாமல், கொலை செய்யப்பட்டனர்.

அல்லது தனக்கு அடிமையாகவோ, தனக்கு வேலை செய்யவோ அமர்த்தி கொண்டனர்.


ஆச்சர்யம்...  

இந்தியாவை நோக்கியே பிச்சை எடுத்து வந்து உலக மக்கள், திடீரென்று செல்வந்தர்கள் ஆனார்கள். 

தேனையும், ரொட்டியையும், பஞ்சு துணியை சுற்றி கொண்டும், தொப்பி அணிந்து கொண்டும் அலைந்த உலக மக்கள், 

திடீரென்று தங்க வைர நகைகள், கிராம்பு, மிளகு, ஏலக்காய், சுவையான உணவு, அலங்காரம், நாகரீகம் என்று பேச ஆரம்பித்தனர்.





ஒரு உருப்படியான ஆராய்ச்சியும் செய்யாத இவர்கள், இந்தியாவில் கால் எடுத்து வைத்த பிறகு, 

"Flight" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகை அழிக்கும் அஸ்திரங்கள்" கண்டுபிடிக்கின்றனர்.

"உலகம் உருண்டை" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"செவ்வாய் கிரகம் சிவப்பு" என்று கண்டுபிடிக்கின்றனர்.

"வாரத்தில் ஏழு நாள் தான்" என்று ஒப்புக்கொண்டனர்.

"வருடம், மாதம் எல்லாம் ஒத்து கொள்ள" ஆரம்பித்தனர்.

ஒலி அலைகளின் மகத்துவத்தை உணர்ந்து ரேடியோ கண்டுபிடித்தனர்.

"ஒலி மூலமாக தகவல்களை பரிமாற்ற முடியும்" என்று கண்டுபிடித்தனர்.


அடடா..  என்ன கண்டுபிடிப்பு...


நம் தேசத்துக்குள் நுழைந்து நாசம் செய்த பிறகு, தாங்கள் கண்டுபிடித்து விட்டது போல காட்டி விட்டனர்.


'வெளிநாட்டவன் கண்டுபிடித்தான்' என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், இவர்கள் இந்தியாவுக்குள் காலடி வைப்பதற்கு முன் என்ன கிழித்தார்கள்? என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.


இன்று இந்தியர்கள் பல தேசங்களுக்கு சென்று சம்பாதிப்பது நடக்கிறது.

அன்று,

இந்தியாவை நோக்கியே உலகம் வந்தது. 


பிச்சை எடுப்பவன் தானே அடுத்தவன் ஊருக்கு செல்வான். நம்மை நோக்கியே அரேபிய குதிரைகளும், போர்சுகல், பிரெஞ்ச், இங்கிலாந்து பாவாடைகளும், ஏன் அன்று படை எடுத்தார்கள்?  என்று ஹிந்துக்கள் கேட்க வேண்டும். 


கோடீஸ்வரர்களாக இருந்த நம்மை அழிக்க, நமக்கு ஆதாரமாக இருந்த அறிவை (வேத சூத்திரங்களை) மொழி பெயர்த்து தெரிந்து கொண்டு, 

விஷயம் அறிந்தவர்களை கொன்று விட்டு, 

முடிந்தவரை கோவில்களை இடித்து, கொள்ளை அடித்து, 

ப்ராம்மணர்களை வேதம் படிக்க விடாமல், ஆராய்ச்சி செய்ய விடாமல் தடுக்க, தங்கள் வேலைக்கு பணி அமர்த்தி, அறிவை அழித்தனர். 


அறிவுக்கு ஆதாரமாக இருந்த வேத ஒலிகளை ஒழிக்க, ப்ராம்மணர்களை கொன்றனர்.


ஸாம வேதத்தில் 100க்கும் மேற்பட்ட சம்ஹிதைகள் இருந்துள்ளது.

இன்று,

வெறும் இரண்டே இரண்டு சம்ஹிதைகள் மட்டும் தான் உள்ளன.

அதிலும் ஜைமினி சம்ஹிதை அறிந்துள்ள வேதியர்கள் அழியும் நிலையில் உள்ளனர். 

அவர்களிடம் பேசி, அவர்களை பாதுகாத்து, அதில் ஆராய்ச்சி செய்ய ஆள் இல்லை.


ஜைமினி சம்ஹிதை கற்றுள்ள ப்ராம்மணர்கள், தங்கள் பிள்ளையை வேதம் கற்று கொள்ள வேண்டாம் என்று ABCD கற்று சம்பாதிக்கட்டும் என்று அனுப்பி விட்டனர்.


இதனால் ஹிந்துக்களுக்கு பெரும் நஷ்டம்..

வேத ஒலிகள் எப்படி ரிஷிகள் கேட்டார்களோ, 

அதே முறையில் வேத ஒலி எழும்பினால், ஆரோக்கியம் உண்டாகும், வெற்றி உண்டாகும், 

செல்வம் தானாக தேடி வரும். 

தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சாமர்த்தியம் உண்டாகும்.

இந்த பல ரகசியங்கள் அவர்களோடு அழிந்து போய் விடும்


அனைத்தையும் இழந்து விட்டால், மீண்டும் ஆராய்ச்சி செய்து செய்து தான் வாழ வேண்டி வரும்.


மழை வேண்டுமானால், அதற்கான வேத ஒலிகள் இன்றும் உள்ளது. 

சரியான உச்சரிப்பில் மழைக்கான வேத ஒலிகள் உச்சரிக்கப்படும் போது, அந்த ஒலி அலைகள், காற்றை உருவாக்கி, மழையை கொண்டு வந்து விடும்.

இன்றும் வருண ஜபம் செய்தே, மழையை கொண்டு வரும் வேதியர்கள் உள்ளனர்.

இவர்களை காக்க மறந்து விட்டால், அந்த வேத ஒலிகள் மறைந்து விடும்.


எழுதி படித்தால், அறிவு உண்டாகுமே தவிர, மழையை உருவாக்கும் படி எப்படி அந்த வேத ஒலிகள் ஒலிக்க வேண்டும்? என்று தெரியாமல் போய் விடும்.


பிறகு மழை வேண்டுமென்றால், அறிவியல் ஆராய்ச்சி மூலம் மழை வரவழைக்க, கோடிக்கணக்கில் செலவு செய்ய நேரும்.


1000 வருட இஸ்லாமிய, கிறிஸ்தவ ஆக்ரம்பிப்பால், ப்ராம்மணர்கள் கொல்லப்பட்டதால், வேத ஒலிகள் பல இழந்து விட்டோம். 

இருக்கும் சில வேத சம்ஹிதையையாவது காப்பாற்ற வேத ப்ராம்மணர்களை காக்க வேண்டும்.


ஒலி அலையை ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும்.


சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொண்டால், 120 கோடி மக்களில் குறைந்தது 100 பேராவது ஆராய்ச்சி செய்து தொலைந்து போன பல ரகசிய அஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள், தெய்வத்தை வரவழைக்கும் சாமர்த்தியம்  உண்டாகும். 

Thursday 9 September 2021

ஓம் என்றால் என்ன? காயத்ரீ மந்திரத்தோடு ஓம் பூ: புவ: ஸுவ: என்று சேர்த்து சொல்வதன் அர்த்தம் என்ன? வேதம், பிரணவத்துடன், ப்ரம்மத்துடன் எப்படி தொடர்பு கொண்டுள்ளது?...

பகவானின் இதயத்திலிருந்து வந்த சங்கல்பமே "வேதம்".

நமக்கு சிவனும், முருகனும், பெருமாளும், பராசக்தியும் தெரிந்ததற்கு காரணமே "வேதம்" தான்.

நம்முடைய பல கேள்விகளுக்கு பதில் கொடுத்ததும் "வேதமே". 

வேதத்தை கிண்டல் செய்பவன், வேதம் நமக்கு காட்டிய சிவனையும், விஷ்ணுவையும், ஓங்காரத்தையும், முருகனையும், கணேசனையும், சக்தியையும் சேர்த்து கிண்டல் செய்கிறான் என்று ஹிந்துக்கள் உணர வேண்டும்.

வேதம் ஓத கூடாது என்று சொல்பவன், உண்மையில் நாம் வணங்கும் தெய்வத்தை அவமானப்படுத்த நினைக்கிறான் என்றே ஹிந்துக்கள் அறிய வேண்டும். 

வேதம் மட்டும் நமக்கு இல்லாமல் போயிருந்தால், அதிகபட்சம் 

"பரமாத்மா இருக்கிறார். எங்கோ இருக்கிறார். நமக்கு தெரிய மாட்டார். அவர் வரமாட்டார்

என்று அரைகுறையாக உருட்டிக்கொண்டு, 'தெய்வத்தின் பெயரால்' தங்கள் இஷ்டத்துக்கு பாவங்கள் செய்து கொண்டு இருப்போம். 




  • பரமாத்மா யார்?
  • அவருக்கும் ப்ரணவத்துக்கும் என்ன சம்பந்தம்?
  • அவர் விஷ்ணுவாகவும், சிவனாகவும், பிரம்மாவாகவும் ஏன் ரூபம் தரித்தார்? 
  • ஏன் உலகை படைத்தார்? 
  • எப்படி உலகை படைத்தார்?
  • நம்மை ஏன் படைத்தார்? 
  • உலகில் ஏன் இவ்வளவு வேறுபாடுகள்?
  • மனிதனின் குறிக்கோள் என்ன?
  • மனிதர்கள் துன்பத்தில் இருந்து விடுபட்டு விடுதலை அடைய வழி என்ன?

என்ற பல கேள்விகளுக்கு, பதில் தெரியாமலேயே போயிருக்கும்.

பகவான் மட்டுமே பதில் சொல்லக்கூடிய இந்த கேள்விகளுக்கு, பகவானின் இதயத்திலிருந்து வெளிவந்த வேதம், அனைத்து கேள்விக்கும் பதில் சொல்கிறது. 

பகவான் என்ன நினைக்கிறார்? என்று தெரிந்து கொண்டு விட்டால், இந்த கேள்விகள் அனைத்துக்கும் விடை கிடைத்து விடுகிறது.

"வேதம் என்ன சொல்கிறது?" என்று அறிவதன் மூலம், நமக்கு விடை கிடைக்கிறது.


அந்த வேதம், பகவானோடு எப்படி சம்பந்தப்பட்டு இருக்கிறது? என்று அறிவோம்.  


* வேதங்கள் நான்கு : ரிக், யஜுர், சாம, அதர்வண

* நான்கு வேதமும், அதனதன் வேத ஆதியில் (முதல் மந்திரம்) அடக்கம்.


வேத ஆதி (முதல் மந்திரம்) என்ன?

1. ரிக் வேத ஆரம்ப மந்திரம்: 

அக்நிமீளே புரோஹிதம் யக்ஞஸ்ய தேவம் ருத்விஜம் ஹோதாரம் ரத்ந தாதமம்

அர்த்தம்

யக்ஞத்தின் தேவனும், 

யக்ஞத்தில் வரிக்கப்பட்டவரும், 

முதன்மையாக இருப்பவரும், 

எல்லா தேவர்களையும் கூப்பிடுபவரும், 

செல்வத்தை தருபவரும், 

ஸ்ரேஷ்டமாக இருப்பவருமான 

அக்னி பகவானே ! 

பூ: புவ: ஸுவ: என்று விராட் ரூபத்தையே நாராயணனாக பார்க்கும் போது, அவருடைய கண்களாக இருக்கும் அக்னியே உன்னை துதிக்கிறேன்.




2. யஜுர் வேத ஆரம்ப மந்திரம்: 

இஷேத்வா - ஊர்ஜேத்வா - வாயவஸ்த - உபாயவஸ்த - தேவோவ: ஸவிதா - ப்ரார்ப்யது - ஸ்ரேஷ்டதம் ஆய கர்மணே

அர்த்தம்:

இஷ்டமான அதே சமயம் புஷ்டியான அன்னம் உண்டாவதற்காகவும்,

நல்ல பசும்பால் உண்டாவதற்காகவும்,

செய்யப்படும் சிறந்த யாகமாகிய கர்மத்தில், ஸவிதாவான ஈஸ்வரன் உன்னை தூண்டட்டும்.


3. சாம வேத ஆரம்ப மந்திரம்: 

அக்ந ஆயாஹி வீதயே க்ருணாநோ ஹவ்ய தாதயே  நிஹோதா ஸத்ஸி ப'ர்ஹிஷி

அர்த்தம்:

அக்னி தேவனே ! வருக.. வருக.. ஹவிசை பெறுவதற்காக கூப்பிடப்பட்ட தாங்கள், இந்த தர்ப்ப ஆஸனத்தில் அமருவீராக 


4. அதர்வண வேத ஆரம்ப மந்திரம்: 

ஸந்நோ தேவீ: அபிஷ்டய

ஆபோ பவந்து பீதயே

ஸம்யோ: அபி ஸர வந்து ந : 

அர்த்தம் :

நமக்கு நல்ல திவ்யமான குடி தண்ணீர் கிடைக்கட்டும். நல்ல மழை பொழியட்டும்.

* வேத ஆதியாக இருக்கும் இந்த நான்கு மந்திரமும், காயத்ரீ மந்திரத்தில் அடக்கம்.

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்


காயத்ரீக்குள் வேத மந்திரங்கள் அனைத்தும் அடங்கி இருக்கிறது என்பதால் தான், வேதம் கற்கும் முன், காயத்ரீ மந்திரத்தை முதலில் குரு ப்ரம்ம உபதேசமாக செய்கிறார்.


* காயத்ரீ வ்யாஹ்ருதியில் அடக்கம்.

(பூ: புவ: ஸுவ: என்ற கீழ், நடு, மேல் உலகங்களை, வ்யாஹ்ருதி என்று சொல்கிறோம். 

இந்த உலகங்களுக்குள் காயத்ரீ மந்திரம் அடங்கி உள்ளது என்று நினைத்து விட கூடாது.

மூன்று உலகங்கள் விராட் புருஷனான நாராயணனின் அங்கம் என்று ரூபமாக தியானித்து, அந்த விராட் புருஷனாக இருக்கும் நாராயணனின் அங்கத்தில் காயத்ரீ என்று அடங்கி இருக்கிறாள் என்று தியானிக்க வேண்டும்.

அதனால் தான், 

காயத்ரீ மந்திரம் சொன்னாலும், பிராணாயாமம் செய்தாலும், ப்ராயசித்த ஹோமங்கள், ப்ரோக்ஷணம், சமர்ப்பணம் செய்தாலும், பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்தே சொல்கிறோம். 





காயத்ரீ மந்திரம் மட்டும் அர்த்தம் தெரிந்து சொன்னால், பகவானின் நாமத்தை பூஜித்ததாகும். 

பூ: புவ: ஸுவ: என்ற வ்யாஹ்ருதியை சேர்த்து காயத்ரீயை சொல்லும் போது, பகவானின் ரூபத்தை தியானிக்க முடிவதால் பகவானின் ரூபத்தை பூஜித்ததாகவும் ஆகும்.

* வ்யாஹ்ருதி ப்ரணவத்தில் (ஓம்) அடக்கம்.

என்ற ஒலியும், என்ற ஒலியும், என்ற ஒலியும் சேரும் போது, "ஓம்" என்ற பிரணவம் கேட்கிறது.


மொழியின் அடிப்படையில்

"" என்பது உயிர் எழுத்து என்று அறிகிறோம்.

'உயிர்' என்றால் ஆத்மா என்று சொல்கிறோம்.


"ம்' என்பது மெய் எழுத்து என்கிறோம். 

'மெய்' என்றால் உடல் சொல்வோம்.


உயிர் ('ஆத்மா') மெய்யோடு (உடலில்) புகும் பொழுது, உயிர்மெய் என்று சொல்கிறோம்.

அதாவது,

+ம் = என்ற உயிர்மெய் வருகிறது.

ஓம் என்ற பிரணவம் இந்த ரகசியத்தை தான் நமக்கு சொல்கிறது.

என்ற உயிரே "பரமாத்மா".

அவரே ஆயிரக்கணக்கான உடல்களில் பிரவேசித்து, "" போல தெரிகிறார். அவரே என்று தனித்தும் இருக்கிறார். 

இந்த உறவை தெரிந்து கொள்ளவே "" என்ற உறவு காட்டுகிறது. 


* ப்ரணவம் (ஓம் - அஉம) ப்ரம்மத்தில் () அடக்கம்.


ப்ரம்மமே "பரமாத்மா". 

ப்ரம்மமே "பகவான்".

ப்ரம்மமே "கிருஷ்ணராக" வந்தார்.

"நான் ப்ரணவத்தில் '' என்ற அகாரமாக இருக்கிறேன்" என்று கீதையில் சொல்கிறார்.

ப்ரம்மமே ஒலி ரூபத்தில் 'ப்ரணவமாக' இருக்கிறார்.

ப்ரம்மமே பார்க்கும்படியாக ரூபத்துடன், '' என்ற விஷ்ணுவாக இருக்கிறார், மூன்று உலகங்களே அங்கமாக கொண்ட விராட் புருஷனாகவும் இருக்கிறார்.


இப்படி பரமாத்மாவிலிருந்து ஓம்

பிறகு பூ புவ ஸுவ

பிறகு காயத்ரீ

பிறகு 4 வேதத்தின் முதல் மந்திரங்கள்

பிறகு வேதங்கள்

வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன், உலகங்களை படைக்கப்பட்ட வரிசை காட்டப்படுகிறது.


இந்த வரிசையை தியானிக்கவே, காயத்ரீயை மட்டும் சொல்லாமல்,

ஓம்

பூ: புவ: ஸுவ:

என்று சொல்லி, பிறகு 

தத் ச வி துர் வ ரே ணி யம்

பர் கோ தே வஸ் ய தீ ம ஹி

தி யோ யோ நஹ் ப்ர சோ த யாத்

என்று காயத்ரீ மந்திரம் சொல்கிறோம்.


குருநாதர் துணை...