Followers

Search Here...

Friday 12 November 2021

இரவு தூங்கும் முன் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும்? பகவானை தரிசிக்க எப்படி தயாராக இருக்க வேண்டும்?

இரவு தினமும் படுத்து கொள்ளும் முன், கை கால் அலம்பி கொண்டு, துடைத்து கொண்டு, படுக்க வேண்டும்.

பகவத் தரிசனம் கனவில் ஏற்பட கூடும், அசுத்தமாக படுக்க கூடாது. 

வடக்கே தலை வைத்து படுக்க கூடாது.

தெய்வத்தின் (ஸ்வாமி அறை) பக்கம் கால் வைத்து படுக்க கூடாது.

ஏதாவது துணியாவது படுக்கையுமாக போட்டு தான் படுக்க வேண்டும். வெறும் தரையில் படுக்கக்கூடாது. உடல் ஆரோக்கியம் முக்கியம்.


அம்மாவாசை போன்ற பித்ரு தினங்களில், ஏகாதசி போன்ற விரத தினங்களில் மனைவியோடு படுக்க கூடாது. அன்று சவரம் செய்வதும் கூடாது.


படுப்பதற்கு முன் கீழே சொல்லியுள்ள பிரார்த்தனையை சொல்லி விட்டு படுக்க வேண்டும்.

அகஸ்திய: மாதவ: ச ஏவ

முசுகுந்தோ மஹாபல: 

கபில: முனி அஸ்திக:

பஞ்சைதே ஸுகசாயின:

அகஸ்தியர், மாதவ, முசுகுந்த, கபில, அஸ்திகர், ஆகிய ஐவரும் சுகமாக சயனிக்க அருள் புரியட்டும்

ஸச்சித்த-சாயீ புஜகேந்த்ர-சாயீ

நந்தாங்க-சாயீ கமலாங்க-சாயீ

அம்போதி-சாயீ வடபத்ர-சாயீ

ஸ்ரீரங்க-சாயீ ரமதாம் மனோமே

ஸ்ரீ ஆதி சங்கர பகவத்பாதாள் (ஸ்ரீரங்க அஷ்டகம்)

ஸாது ஜனங்களில் சித்தத்தில் சயனிப்பவன், நந்தகோபன் மடியில் சயனிப்பவன், மஹாலக்ஷ்மி மடியில் சயனிப்பவன், பாற்கடலில் சயனிப்பவன், ப்ரளய காலத்தில், ஆலிலையில் பால முகுந்தனாக சயனிப்பவன், ஸ்ரீரங்கத்தில் சயனிப்பவன் மேல் என் மனம் எப்போதும் ஒன்றியுள்ளது. 

கரார-விந்தேன பதார-விந்தம்

முகார-விந்தே வினிவேச-யந்தம்

வடஸ்ய பத்ரஸ்ய புடே சயானம்

பாலம் முகுந்தம் மனஸா ஸ்மராமி

- கிருஷ்ண கர்ணாம்ருதம்

(தாமரை போன்ற கைகளால், தாமரை போன்ற தன் இடது பாதத்தை, தாமரை போன்ற தன் வாயில் வைத்து தன்னையே சுவைத்து கொண்டிருக்கும் ஆலிலை மேல் சயனித்திருக்கும் குழந்தை முகுந்தனை மனதினால் நினைக்கிறேன்) 



அனாயாஸேன மரணம்

வினா தைன்யேன ஜீவனம்

தேஹி மே க்ருபயா சம்போ

த்வயீ பக்திம் அசஞ்சலாம்

மரண பயம் இல்லாத கண் இமைப்பது போல சுலபமான  மரணம், வறுமை, கஷ்டம் இல்லாத வாழ்க்கை அமைய, உன்னுடைய கிருபையைக் கொடுத்து அருளவும் சம்போ மகாதேவா. உங்களிடம் நிலையான பக்தியையும் கொடுங்கள்.

வ்யத்யஸ்த-பாதம் அவதம்ஸித பர்ஹி-பர்ஹம்

ஸாசீ க்ருதானன நிவேசித வேணுரந்த்ரம்

தேஜ: பரம் பரம-காருணிகம் புரஸ்தாத்

ப்ராண: ப்ரயாண ஸமயே மம ஸன்னிதத்தாம்

- கிருஷ்ண கர்ணாம்ருதம் (லீலா-சுகர்)

மாற்றி வைத்த பாதங்கள் உடையவனும், மயில் தொகை சூடியவனும், சாய்ந்த முகத்தில் குறுக்காக வைக்கப்பெற்ற குழலின் துவாரங்களை உடையவனும், சிறந்த கருணை உடையவனும், பரஞ்ஜோதி வடிவானவனுமான கிருஷ்ணன், என்னுடைய பிராணன்  வெளி கிளம்பும் சமயத்தில், என் முன் காட்சி அளிக்கட்டும்.

அதராம்ருத சாரு வம்ச நாளா:

மகுடாலம்பி மயூர பிஞ்ச மாலா:

ஹரி நீல ஸிலா விபங்க நீலா:

ப்ரதிபா: ஸந்து மம அந்திம ப்ரயாணே

(கோபால விம்சதியில் ஸ்வாமி தேசிகன்)

நச்சியே கையினில் வேய்ங்குழலை ஏந்தியே, நளினவாய் தன்னில் வைத்து நயமுடன் ஓசைதனை எழுப்பிய வண்ணமே, இணையிலா உச்சியிற் கொண்டையும், மயிலினது இறகையும் அதில் சேர்த்தியே, அடியேற்கு வரப்போகும் மரண உற்சவத்தினில், நீ குழந்தை வடிவாய் எழிலுடன் காட்சியருள் கண்ணனே !


தேஹாவஸான ஸமயே தயயா ரகூணாம்

நாத: கராம்புஜ: விராஜத பீதி முத்ர:

ஆருஹ்ய புஷ்பகம் அலங்க்ருத வாமபாக: 

தேவ்யா விதேஹ ஸுதயா மம ஸந்நிதத்தாம்

(ராம ஸ்தவ கர்ண ரஸாயணம் - ராமபத்ர தீக்ஷிதர்) 



க்ருஷ்ண த்வதீய பதபங்கஜ பஞ்சராந்த

மத்யைவ மே விசது மானஸ ராஜஹம்ஸ:

ப்ராண ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:

கண்டா வரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே

(முகுந்தமாலை - குலசேகர ஆழ்வார்)

கிருஷ்ணா! இந்த சமயத்தில் என்னுடைய மனம் என்ற அன்னப் பறவைக்கு, தங்களுடைய தாமரைப் பாதத் தண்டுகளில் இப்போதே அடைக்கலம் கொடுங்கள். மரண வேளையின் பொழுது என்னுடைய தொண்டை கபம், வாதம், பித்தம்,  போன்றவைகளால் தடைபடும் போது தங்களை எப்படி என்னால் நினைக்க  முடியும்?


இவ்வாறு பிரார்த்தனை செய்து கொண்ட பிறகு படுக்க வேண்டும்.

படுத்து இருக்கும் போது, பகவன் நாமத்தை ஸ்மரணம் செய்து (நினைத்து) கொண்டே தூங்க வேண்டும்.


இடையிடையே விழிப்பு வந்தால், தூக்கம் வரும்வரை  பகவன் நாமத்தை சொல்லி கொண்டே இருக்க வேண்டும்.


தூக்க கலக்கத்தில் புரண்டு படுத்தாலும் பகவன் நாமத்தை சொல்லும் அளவுக்கு நாக்கை மனசை பழக்கிட வேண்டும்.


இரவில் மலம் மூத்திரம் கழிக்க எழுந்தால், கை கால் அலம்பி, துடைத்து கொண்டு படுக்க வேண்டும்.


இரவில் அசுத்தமாக படுப்பவனிடம், பூத பிரேத பிசாசுகள் வரும். இதனால் கெட்ட கனவுகள் வரும்.

இரவு சுத்தமாக படுக்க வேண்டும். கனவில் பகவான் தரிசனம் தரக்கூடும்.

எனவே கை கால் அலம்பி சுத்தமாக படுத்து உறங்க வேண்டும்.


அதிகமான தூக்கம் கூடாது. 

இரவு 10 மணிக்குள் படுத்து கொண்டு, 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டும்.

இது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.


இவ்வாறு சாஸ்திரப்படி தினமும் வாழ்க்கை நடத்துபவர்கள் இகத்திலும், பரத்திலும் சுகமாக இருப்பார்கள்.


குருநாதர் துணை

Tuesday 9 November 2021

மாயவரம் என்ற மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள இந்தளூர் என்ற திவ்ய தேசத்தில் உள்ள பெருமாளை நினைத்து திருமங்கையாழ்வார் பாடிய பாசுரம் "முன்னை வண்ணம்". அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

மயிலாடுதுறை பெருமை கொள்ள முக்கிய காரணம் பரிமள ரங்கநாதன் ஆலயம் இருக்கும் "திருஇந்தளூர்" என்ற திவ்ய தேசம். 

ஹிந்துவாக பிறந்தவர்கள் வாழ்நாளில் காணவேண்டிய ஆலயங்களில் ஒன்று !

காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் இது.

மாயவரம் அல்லது மயிலாடுதுறையில் இருக்கும் இந்த திருஇந்தளூர் கோயிலின்  மூலவர் பெயர்: பரிமள ரங்கநாதன்.   

இவருக்கு இன்னொரு பெயர்: மருவினிய மைந்தன். 

உற்சவர் பெயர்:  சுகந்தவ நாதன்

108 திருத்தலங்களில் 86 தலங்களை நேரில் கண்டு பாடியவர் திருமங்கையாழ்வார்.

ஒரு சமயம், 

மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ‘திருஇந்தளூர்’ என்னும் திவ்ய தேசத்தில் குடி கொண்டிருக்கும் ‘பரிமள ரங்கனாதரை’ தரிசிக்கச் சென்ற பொழுது,  அர்ச்சகர் பூஜை முடிந்து, கதவு சாத்தி சென்று விட்டார்.

கோவில் சன்னதி மூடி இருந்ததால் பெருமாளை தரிசிக்க முடியவில்லை.

பெருமாளை பார்க்க முடியவில்லையே! என்ற தாபம் ஆழ்வாருக்கு ஏற்பட்டது.

நமக்கு வேண்டிய ஒருவன், நமக்குரிய பொருளை தரமறுத்தால் நாம் என்ன சொல்வோம்?

”பரவாயில்லை! நீரே வைத்துக் கொண்டு நலமாய் வாழுங்கள்" என்று உரிமையாக கோபத்தோடு சொல்வோம் இல்லையா?

அது போல,

ஆழ்வார்,  உள்ளே இருக்கும் பரிமள ரங்கநாதரை நோக்கி, "நான் உனது அடிமை என்று அறிந்த பின்னும், காட்சி கொடுக்காமல் தாழிட்டுக் கொள்வது உமக்குப் பழியைத் தேடித் தரும். உமது அழகை நீரே வைத்துக் கொள்ளவும்"

என்று பெருமாளிடம் உரிமையாக கோபப்பட, உள்ளே இருந்த பெருமாள், ஆழ்வாரை காண தானே வந்து விட்டார். 


பெருமாள், ஆழ்வாரை  பார்த்து, "என்னை பாரும்" என்று  சொல்லி, "நான் ஒவ்வொரு யுகத்திலும் எப்படி இருந்தேன் தெரியுமா? க்ருத யுகத்தில் வெண்மையாக இருந்தேன். த்ரேதா யுகத்திலே சிவப்பாக இருந்தேன். த்வாபரயுகத்தில் நீல வர்ணத்தில் இருந்தேன்" என்று காட்ட, தான் கண்ட காட்சியை பாசுரமாக நமக்கு தருகிறார்.




முன்னை வண்ணம் பாலின் வண்ணம்

முழுதும் நிலைநின்ற பின்னை வண்ணம்

கொண்டல் வண்ணம்

வண்ணம் எண்ணுங்கால்

பொன்னின் வண்ணம்

மணியின் வண்ணம் 

புரையும் திருமேனி இன்ன வண்ணம்

என்று காட்டீர், இந்தளூரீரே !

- பெரிய திருமொழி (திருமங்கையாழ்வார்)

க்ருத யுகத்தில் ஸத்வ குணம் நிறைந்தவர்களாக பெரும்பாலும் இருப்பதால், பால் போன்ற 'வெண்மை' நிறத்தை கொண்டீர்கள்

த்ரேதா யுகத்திலே 'சிவந்த' நிறத்தை கொண்டீர்கள். 

த்வாபர யுகத்தில் 'நீல' நிறத்தை கொண்டீர்கள். 

இந்தளூரில் உள்ள பெருமானே ! 

உமக்கு பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்கள் சொல்கிறது.

இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கும் இருப்பிலே எந்த நிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாமோ?" என்று கேட்க,

“இதோ பாராய், இதுவே என் வண்ணம்” என்று சொல்லி பரிமள ரங்கநாதர் ஆழ்வாருக்கு தன் அர்ச்சா ரூபத்தை காட்டி அருளினார்.

திருமங்கை ஆழ்வாரின் அழகு தமிழை பருக விரும்பியதே பரிமள ரங்கனின் விவாதத்தின் நோக்கம்!

இறுதியில், ஆழ்வார் அரங்கனைத் தரிசித்துவிட்டே சென்றார்!

மூலவர்: பரிமளரங்கநாதர்

தாயார்: பரிமள ரங்கநாயகி என்ற புண்டரீகவல்லி