Followers

Search Here...

Saturday 11 June 2022

அரசாட்சி செய்பவன் செய்யக்கூடாத 18 செயல்கள் என்னென்ன? ராஜ தர்மம் அறிவோம். மஹாபாரதம் சொல்கிறது.

ராஜ தர்மம்:


ஆட்சி செய்பவன் எதை விட்டு விலகி இருக்க வேண்டும்? என்று பீஷ்மர் சொல்கிறார்.


व्यसनानि च सर्वाणि 

त्यजेथा भूरिदक्षिण |

न चैव न प्रयुञ्जीत् 

सङ्गं तु परिवर्जयेत ||

- வியாசர் மஹாபாரதம்

நிரம்ப தானம் அளிப்பவனே! யுதிஷ்டிரா !

அரசாட்சி செய்பவன், வ்யஸனங்களை (தீய விஷயங்கள்) விட்டு விலகி இருக்க வேண்டும்.

எந்த சமயத்திலும், வ்யசனங்களில் ஆசை கொண்டு, செயல் செய்ய கூடாது 


नित्यं हि व्यसनी लॊके 

परिभूतॊ भवत्य उत |

उद्वेजयति लॊकं चाप्य 

अति द्वेषी महीपतिः ||

- வியாசர் மஹாபாரதம்

வ்யஸனமுள்ள (தீய செயல்களை செய்யும்) அரசன் உலகத்தில் அவமதிக்கப்படுவான்.

பிறரை கண்டு வெறுக்கும் குணமுள்ள அரசனாக இருந்தால், அவனை கண்டு உலகம் நடுங்கும்.


வ்யஸனங்கள் (தீய செயல்) மொத்தம் 18 என்று சொல்லப்படுகிறது:

  1. பொழுதுபோக்காக வேட்டை ஆடுவது
  2. பணயம் வைத்து பகடை ஆடுவது (gambling)
  3. பகலில் தூங்குவது
  4. மற்றவரை திட்டுவது
  5. பெண்களிடம் மோகம் கொள்வது
  6. மதம் கொள்வது (கர்வம்)
  7. பொழுதுபோக்க பாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது
  8. கூத்து பார்ப்பது
  9. பொழுதுபோக்க வாத்தியங்கள் இசைக்க சொல்லி கேட்பது
  10. மது குடிப்பது

இந்த 10 வ்யஸனங்கள் காமத்தால் (உலக ஆசை) உண்டாகின்றன.


  1. தெரியாத குற்றத்தை வெளியிடுவது
  2. குற்றமில்லாதவனை தண்டிப்பது
  3. கபடமாக கொல்வது
  4. பிறர் பெருமையை கண்டு பொறாமை அடைவது
  5. பிறர் நற்குணங்களை, தோஷமாக சொல்வது
  6. பிறர் சொத்தை பிடுங்க முயற்சிப்பது
  7. கீழ்த்தரமாக பேசுவது
  8. நியாயமில்லாத தண்டனை கொடுப்பது

இந்த 8 வ்யஸனங்கள் கோபத்தால் உண்டாகின்றன.


கோபமும், காமமும் உள்ள அரசன், இந்த தீய செயல்களை செய்கிறான்.

காமத்தையும், கோபத்தையும் அடக்கி இருக்கும் அரசன், இந்த செயல்களில் ஈடுபடாமல் இருப்பான்.

Friday 10 June 2022

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்?

தம்பதிகளுக்கு ஏன் மஞ்சள் குங்குமம், தேங்காய் ஹிந்துக்கள் கொடுக்கிறார்கள்? 

Gift கொடுப்பதை விட, இதற்கு ஏன் இப்படி முக்கியத்துவம் கொடுத்தார்கள் ஹிந்துக்கள்?

தம்பதிகள் ஒற்றுமையாக இருக்க வேண்டுமானால், "அம்பாள் அணுகிரஹம்" வேண்டும்.

ஜாதகத்தில் "சுக்கிரன் இருவருக்கும் பலமாக" இருக்க வேண்டும். 

அப்பொழுது தான், தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பாக இருப்பார்கள்.


"அம்பாளின் அணுகிரஹம் தம்பதிகளுக்கு கிடைக்க வேண்டும்" என்று பிரார்த்தனை செய்து கொண்டு, நம் ஹிந்துக்கள், கல்யாணமான பெண்ணுக்கு வெத்தலை பாக்கு, கூடவே மஞ்சள் குங்குமம் புடவை வைத்து கொடுக்கிறார்கள்.

அம்பாளை பூஜிப்பதாக நினைத்து கொடுப்பார்கள் 

சுக்கிரன் பலமாக வேண்டுமானால், 

கோ (கறவை பசு) தானம் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.

பசுவை, அனைவராலும் தானம் செய்ய முடியாது. 

பசுவை யார் தானம் கொடுக்கிறானோ, அவனை கண்டு, பசுபதியான சிவபெருமான் திருப்தி கொள்கிறார்.

சிவபெருமானுக்கு மூன்று கண்கள். தேங்காயிலும் மூன்று கண்கள் உண்டு. 


கோ தானம், சிவபெருமானையும், சுக்கரனையும் சம்பந்தப்படுத்துகிறது.

சிவபெருமானாக தேங்காயை நினைத்து கொண்டு, கொடுக்கும் போது, கோ தானம் கொடுத்த பலன் கிடைக்கிறது. 

இதனால் சுக்கிரனும் திருப்தி அடைகிறார்.


இப்படி அம்பாளை பூஜித்தும், சுக்கிரனை திருப்தி செய்தும், வந்த தம்பதிகள் ஒற்றுமையாகவும், அன்யோன்யமாகவும் வாழ ப்ரார்த்திப்பது ஹிந்துக்களிடம் வழக்கமாக இருந்தது. இருக்கிறது.


Gift கொடுப்பது ஒரு புறம் இருந்தாலும், தம்பதிகள் கடைசி வரை சேர்ந்து வாழ பிரார்த்தனை செய்து, பெண்களுக்கு மஞ்சள் குங்குமமும், ஆண்களுக்கு தேங்காயையும் கொடுப்பது ஹிந்து தர்மமாக உள்ளது.


காரணமில்லாமல் ஹிந்துக்கள் எந்த காரியமும் செய்யப்படவில்லை என்று தெரிகிறது 


Listen to the speech..

https://www.youtube.com/watch?v=vRuJuzfeMuo&t=4138s