tag:blogger.com,1999:blog-5218286518859383202.post6975037468566475647..comments2024-03-15T20:19:59.703-07:00Comments on PROUD HINDU DHARMA: சந்தியா வந்தனத்தில், தலை, மூக்கு, இதயம் தொட்டு செல்லும் ஆவாஹன மந்திரத்தின் பொருள் என்ன? நிச்ருத் காயத்ரி சந்தஸ் என்றால் என்ன?Premkumar Mhttp://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5218286518859383202.post-21120241673852665072019-07-31T22:58:48.671-07:002019-07-31T22:58:48.671-07:00நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...
மனிதர்...நம் நன்றியை காட்டும் அற்புதமான மந்திரம்...<br /><br />மனிதர்களில் சிலர் ரிஷி ஆகிறார்கள், ரிஷியாகும் சிலர் மேலும் முன்னேறி முனிவர்கள் ஆகிறார்கள்..<br />ரிஷி, முனி வித்தியாசம் அறிய https://www.proudhindudharma.com/2019/03/RishiMuniBrahman.html<br /><br />நாம் அனைவருக்கும் "காயத்ரி என்ற வேத மந்திரம்" சப்த ப்ரம்மத்தில் (வேதம்) இருப்பதை கண்டுபிடித்து நமக்கு கொடுத்தவர் விஸ்வாமித்திரர் என்று தெரியும்.<br /><br />வேதமே ஓம் என்ற ஓங்காரத்தில் அடக்கம். அந்த ஓங்காரத்தை நமக்கு கொடுத்த ரிஷி யார்? யாரை தியானித்து அவர் ஓங்காரத்தை கண்டுபிடித்தார்?<br /><br />சந்தியா வந்தனத்தில் இதற்கு பதில் சொல்கிறதே!! <br /><br />பிரம்மாவை படைத்தவர் சாஷாத் பரவாசுதேவன். <br />பரமாத்மாவை தியானித்து கொண்டிருந்த ப்ரம்மாவுக்கு, ஓம் என்ற ஓங்கார மந்திரம் கேட்க, அதிலிருந்து வேத மந்திரங்கள் உருவானது. <br />உலகுக்கு கொடுத்த முதல் ரிஷி ப்ரம்ம தேவன். <br /><br />சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா ப்ராம்மணனுக்கு? அர்த்தம் தெரிந்து கொள்ளும் போது, ஆசை வரும்...<br /><br />ப்ரணவஸ்ய (ஓங்காரத்திற்கு) ரிஷி: ப்ரஹ்மா (பிரம்மாவே ரிஷி) , <br />தேவீ காயத்ரீச் சந்த: (தேவீ காயத்ரீயே சந்தம்) <br />பரமாத்மா தேவதா ! (பரமாத்மா தேவதை)<br /><br />ப்ரம்மா தேவன் ஓங்காரத்தை கண்டுபிடித்து கொடுத்தார் என்ற நன்றியை காட்டவே நாம் தலை மேல் கை குவித்து அவரை நமஸ்கரிக்கும் விதமாக "தலையை" தொடுகிறோம்.<br /><br />ஓங்காரம் ப்ரம்மா காதில் எப்படி கேட்டது? காயத்ரி சந்தஸில் (measurement) கேட்டது. அதே போல நாமும் காயத்ரி சந்தஸில் ஓங்காரத்தை சொல்ல வேண்டும் என்று நம்மை ஜாக்கிரதை படுத்தி கொள்ளவே மூக்கை தொட்டு கொள்கிறோம்.<br /><br />ப்ரம்மா யாரை நினைத்த போது ஓங்காரமந்திரத்தை கண்டுபிடித்தார்? பரவாசுதேவன் நாராயணன்.<br />நாமும் ஓங்காரம் சொல்லும் போது அந்த பரமாத்மாவை மனதில் தியானிக்க வேண்டும் என்று சொல்லி கொண்டே நம் இதயத்தை தொட்டு கொள்கிறோம். <br /><br />தலையை தொட்டு பிரம்மாவுக்கு நன்றியையும், <br />மூக்கை தொட்டு, அப்படியே சொல்ல வேண்டும் என்ற நிதானத்தையும்,<br />மார்பை தொட்டு, பரமாத்மாவை நாமும் தியானிக்கும் போது, பிரம்மாவும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.<br />பரவாசுதேவனும் நம்மை கண்டு ஆனந்தம் அடைகிறார்.<br /><br />இத்தனை சிறிய மந்திரம்.. பெரும் பலனை நமக்கு தருகிறதே....<br /><br />சந்தியாவந்தனம் செய்ய கசக்குமா?<br /><br />Share and comment...<br /><br />மேலும் படிக்க....<br />https://www.proudhindudharma.com/2017/09/nichruthchandaha.htmlPremkumar Mhttps://www.blogger.com/profile/01777514706945294139noreply@blogger.com