Followers

Search Here...

Showing posts with label அர்த்தம். Show all posts
Showing posts with label அர்த்தம். Show all posts

Thursday 25 June 2020

பாசுரம் (அர்த்தம்) - இடங்கொள் சமயத்தை. "பாற்கடலில், ஹரிபக்தி செய்பவர்களின் பக்தி எப்படி உள்ளது?" என்று நம்மாழ்வார் வர்ணிக்கிறார். தெரிந்து கொள்வோமே !

ஒரு சமயம் நாரதர், நர நாராயணனாக வீற்று இருக்கும் பதரிநாத்க்கு வந்தார்.



எப்பொழுதுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நாரதர், முகம் வாடி இருந்தார்..

இதை கவனித்த பதரி நாராயணன், "என்ன காரணம்?" என்று விஜாரித்தார்.

நாரதர் பல உலகங்கள் சஞ்சாரம் செய்பவர்.
எங்கு போனாலும் இவருக்கு மரியாதை, வரவேற்பு தான் கிடைக்கும்.

கம்சன் அரண்மனைக்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும், சிவபெருமானை பார்க்க சென்றாலும் வரவேற்பு கிடைக்கும்.

இவரை மதிக்காதவர் உலகில் இல்லை.

இருந்தாலும், ஒரு சமயம் ஒரு இடத்துக்கு இப்பொழுது தான் முதல் முறையாக சென்றாராம்.

அங்கு இருந்தவர்கள் அனைவரும் ஹரி நாம கீர்த்தனை தான் செய்து கொண்டு இருந்தார்கள்.

நாரதரும் ஹரி நாம கீர்த்தனை செய்பவர் தான்.
ஆசையாக இவர்கள் அருகில் சென்றும், நாரதர் வந்து இருக்கிறார் என்று கூட கவனிக்காமல், 
மெய்மறந்து நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு இருந்தார்களாம். ஆடினார்களாம்.. துள்ளினார்களாம்.. பாடினார்களாம்...குனிந்து நிமிர்ந்து நமஸ்காரம் செய்து ஆடி பாடினார்களாம்...
ஆனால் கடைசி வரை நாரதர் இருப்பதையே கவனிக்க வில்லையாம்...

இப்படி ஒரு ஹரி நாம கீர்த்தனையை நாரதர் கேட்டதே இல்லையாம்.. மேலும், தன்னை கவனிக்காததும் ஆச்சரியம் தர,
பதரி நாராயணனிடம் "இப்படி ஹரிநாம பஜனை செய்யும் இவர்கள் யார்?"
என்று கேட்க,
பதரி நாராயணன் நாரதரை பார்த்து,
"நீங்கள் பார்த்தது க்ஷீராப்தியில் அருகில் உள்ள இடம்.
அதற்கு ஸ்வேத த்வீபம் என்று பெயர்.
விஷ்ணு பக்தி செய்த புண்ணிய ஆத்மாக்கள், இங்கே தடையில்லாமல், தன்னையே மறந்து என்னை பஜித்து கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு நானே லட்சியமாக இருக்கிறேன்.
இதனாலேயே, வந்திருப்பது யார் என்று கூட அவர்கள் கவனிக்கவில்லை.
அவர்கள் பக்தி அலாதியானது"
என்றார்.
விஷ்ணு லோகமான 'க்ஷீராப்தியில் உள்ள உன்னதமான பக்தர்கள் எப்படி பஜனை செய்கிறார்கள்?'
என்று தன் பாசுரத்தில் "நம்மாழ்வார்" நமக்கு காட்டுகிறார்.

இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
தடங்கடல் பள்ளிப் பெருமான்
தன்னுடைப் பூதங்களேயாய் !
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!




'பரமபதத்தில்' நாராயணன் நான்கு கைகளுடன், சங்கு சக்கரம் ஏந்தி அமர்ந்த கோலத்தில் இருக்கிறார்.
அதே நாராயணன்,
'க்ஷீராப்தியில்' விஷ்ணுவாக இருக்கும் போது, இரண்டு கைகளுடன், ஆதிசேஷன் மேல், யோக நித்திரையில் பாற்கடலில் பள்ளி கொண்டு இருக்கிறார்.

'க்ஷீராப்தியில்' ப்ரம்ம தேவன், ருத்ரன், தேவர்கள், ரிஷிகள் பேசி பழகும் படியாக பிரசன்னமாக பாற்கடலில் இருக்கிறார்.

பாற்கடலில் வீற்று இருக்கும் விஷ்ணுவை, ஸ்வேத த்வீபத்தில் இருக்கும் இவர்கள் எப்படி பஜிக்கிறார்கள்? என்று சொல்கிறார் நம்மாழ்வார்.

பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளை (தடங்கடல் பள்ளிப் பெருமான்)
நினைத்து நினைத்து, ஸ்வேத தீவபத்தில் இருக்கும் இவர்கள் ஆனந்தத்தில் திளைக்கிறார்களாம்,
விஷ்ணுவின் நாமத்தை, கைகளில் தாளத்தை வைத்து கொண்டு "நாராயண..நாராயண..நாராயண.." என்று சொல்ல சொல்ல, கோஷ்டியாக 1000 பேர் சேர்ந்து கொண்டு குனிந்து, நிமிர்ந்து ஆடியும் பாடியும் அபிநயமும் செய்து கொண்டு இருக்கின்றனராம்.

பாற்கடலில் இருக்கும் இவர்களுக்கு "நாராயணனை' பஜிப்பதே லட்சியம்.

பெருமாளே இவர்களுக்குள் புகுந்தது போல இருந்தார்களாம் இவர்கள்.
அதையே "பெருமாள் தன்னுடைப் பூதங்களேயாய் !" என்கிறார்.

இப்படி பெருமாள் இவர்களிடம் ஆவேசித்து இருக்க,
க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மேல் படுத்து கொண்டிருக்கிறார் என்று பாடும் போது,
தானும் அது போல அபிநயம் செய்து கிடப்பார்களாம் (கிடந்தும்)
மற்றொரு சமயம்,
பரமபத்தில் அமர்ந்த கோலத்தில் பரவாசுதேவனாக இருக்க, இவர்களும் பரவாசுதேவன போலவே அமர்ந்த படி (இருந்தும்) அபிநயம் செய்வார்களாம்.
மற்றொரு சமயம்,
திருமலையில் ஸ்ரீனிவாசனாக எழுந்து நின்று இருப்பது போலவே நின்று (எழுந்ததும்) அபிநயம் செய்வார்களாம்.

வெறும் அபிநயம் மட்டும் செய்தால் நன்றாக இருக்குமா?... அபிநயத்தோடு பல பல கீதங்கள் பாடுவார்களாம்.

தண்டகாரண்யத்தில் ராமபிரானாக நடந்ததையும், ஸ்ரீ பிருந்தாவனத்தில் கண்ணனாக நடந்ததையும் பாடும் போது,
கண்ணனாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம், ராமபிரானாகவே நடந்து (நடந்தும்) அபிநயம் செய்வார்களாம்.

கருடனில் பறந்து வரும் பெருமாளாக பாடும் போது, தன் கைகளே இறக்கையாக நினைத்து, தானும் பறப்பது போல அபிநயம் (நாடகம்) செய்து ஆடுகிறார்களாம் (குனித்தும்) இவர்கள்.

இதையே,
கிடந்தும் ! இருந்தும் ! எழுந்தும் !
கீதம் பலபல பாடி !
நடந்தும் ! பறந்தும் ! குனித்தும் !
நாடகம் செய்கின்றனவே !!
என்கிறார்.

நெல் விதைக்கப்பட்ட நிலத்தில், தேவையில்லாத கோரை புல் இடையிடையே வளர்ந்து இருக்கும்.
நெல் வளர்ச்சியை தடுக்கும், இந்த கோரை புற்களை முழுமூச்சுடன் உடனே களையெடுக்க, அந்த விவசாயி குனிந்து, நிமிர்ந்து அதை தேடி கண்டுபிடித்து, அறுத்து எரிவார்களாம்,
குனிந்து நிமிர்ந்து வேலை செய்வதால், களைப்பு ஏற்படாமல் இருக்க கிராமத்து பாடல் பாடிக்கொண்டே, அறுத்து எரிவார்களாம்,
கோரை புல்லை பிடுங்கி எரிந்து, நெல்லை காப்பாற்றும் விவசாயி போல, இங்கு இவர்கள் குனிந்தும், நிமிர்ந்தும் ஆடுவதையும், 
களைப்பு தெரியாமல் இருக்க இவர்கள்  "நாராயண.. நாராயண.." என்று சொல்லிக்கொண்டே பாடுவதையும் பார்த்தால், 
எதையோ தூக்கி எரிவது போல தோன்றியதாம்!  நம்மாழ்வாருக்கு.




அப்படி என்ன எறிந்தார்களாம் இவர்கள்?
விஷ்ணு பக்தியை வளர்க்காத போலி மதங்களை எல்லாம், க்ஷீராப்தியில் இருக்கும் இவர்கள் கோரை புல்லை பிடுங்கி எரிவது போல தூக்கி எறிந்தார்களாம்.

மற்ற விஷயங்கள் புகாமல், நாராயணனின் நினைவே க்ஷீராப்தியில் நிரம்பி இருந்தது  என்ற ரீதியில் ரசித்து, 'க்ஷீராப்தியில் உள்ள விஷ்ணு பக்தர்கள் செய்யும் பஜனையை' ரசிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே,
இடங்கொள் சமயத்தை யெல்லாம்
எடுத்துக் களைவன போல !
என்று சொல்கிறார்.

குருநாதர் துணை.

Tuesday 23 June 2020

பாசுரம் (அர்த்தம்) - முனியே நான்முகனே... நம்மாழ்வார் க்ஷீராப்தி நாதனை நினைத்து பாடிய அழகான பாசுரம். சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபதத்தில் (வைகுண்டம்) "நாராயணன்" நித்ய வாசம் செய்கிறார்.
ஆதிசேஷனும், மஹாலக்ஷ்மியும் கூடவே இருக்கிறார்கள்.




மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், பரமபதத்தில், திவ்ய பார்ஷத ரூபத்துடன், பகவானை எப்பொழுதும் பார்த்து கொண்டே இருக்கின்றனர்.

ப்ரம்ம தேவனும் செல்ல முடியாத இடம் 'பரமபதம்'.
ப்ரம்ம தேவனே தரிசிக்காத இடம் "பரமபதம்".
"பரமபதம்" மோக்ஷம் அடைந்தவர்களுக்கு மட்டுமே கிடைக்க கூடியது என்பதால்,
"பிரம்ம தேவன், ரிஷிகள், தேவர்கள் போன்றோர் தன்னை தரிசனம் செய்ய"  'க்ஷீராப்தி என்ற பாற்கடலை' ஸ்ருஷ்டி செய்து கொண்டு, 
அங்கு வ்யூஹ ரூபத்துடன் 'விஷ்ணு'வாக ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டு இருக்கிறார்.
பிறகு, ஒரு சமயம் தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்க, பாற்கடலை கடைய சொல்ல,
மஹாலக்ஷ்மியை பாற்கடலை கடையும் போது, வரச்செய்து தானே மணந்து கொண்டார்.

பிரம்ம தேவனுக்கும், ருத்ரனுக்கும் "அந்தர்யாமியாக" இருக்கும் பரவாசுதேவன்,
இவர்களோடு சமமாக பழக ஆசைப்பட்டு, "விஷ்ணுவாக" அவதரித்து விட்டார்.
பிரம்ம தேவனுக்கு "படைக்கும்" தொழிலை கொடுத்து,
ருத்ரனுக்கு "சம்ஹார" தொழிலை கொடுக்க,
தான் விஷ்ணுவாக "காக்கும்" தொழில் செய்கிறேன்,
என்று வந்து விட்டார்.

தேவர்களுக்கு கஷ்டம் என்றால், இவர்தான் காக்க ஓடுவார்.
ஒரு சமயம், ருத்ரனுக்கே பஸ்மாசுரன் என்ற அசுரனால் கஷ்டம் ஏற்பட, ருத்ரனை காக்க ஓடினார்.

ஆதிபுருஷனாக இருந்தும், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொள்ள ஆசைப்படுகிறார்.

தான் படைத்த பிரம்ம தேவனுக்கு சம ஆசனம் கொடுக்கிறார்.
சுலபமான தெய்வமாக இருக்கிறார் பெருமாள்.
யாருக்கும் கிடைக்கிறார்.

அதுமட்டுமா?
தேவர்களுக்கு மத்தியில் "உபேந்திரன்" என்ற ஒரு தேவனாக அவதரித்தார். தேவர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ரிஷிகள் கூட்டத்தில் தானும் ஒரு ரிஷி என்று "வ்யாஸராக" அவதரித்தார். ரிஷிகளுடன் சுலபமாக பழகுகிறார்.
மனிதர்கள் கூட்டத்தில் தானும் ஒரு மனிதன் என்று "ராமபிரானாக" அவதரித்தார். மனிதர்களுடன் சுலபமாக பழகுகிறார்.

ஒரு சமயம், பன்றி கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு பன்றியாக" கூட அவதரித்து விட்டார்.

மீன் கூட்டத்தின் நடுவே, தானும் "ஒரு மீனாக" கூட அவதரித்து விட்டார்.

இப்படி அனைவரையும் படைத்து, அனைவருக்குள்ளும் தானே அந்தர்யாமியாக இருந்து கொண்டு,
அதுவும் போதாதென்று,
தானும் அவர்களை போலவே சில சமயம் அவதரித்து,
எப்பொழுதும் அனைத்து ஜீவனிடத்திலும் உறவாட ஆசைப்படுகிறார் பெருமாள்.

'தானே அனைத்துமாக இருக்கிறேன்' என்றும் காட்டுகிறார்.




பரப்ரம்மத்தையே உபாசிக்கும் நம்மாழ்வார் 'தனித்த பொருளான பரவாசுதேவன், தன்னை மும்மூர்த்திகளில் ஒருவனாக காட்டி கொண்டு, க்ஷீராப்தியில் இருப்பதை கண்டு ஆசைதீர, அந்த க்ஷீராப்தி நாதனுக்கு மங்களாசாசனம்' செய்கிறார்.

க்ஷீராப்தி - 108 திவ்ய தேசத்தில் ஒன்று.

க்ஷீராப்திக்கு மங்களாசாசனம் செய்த பாசுரம் தெரிந்து கொள்வோமே.

பாசுரம்:
முனியே நான்முகனே!
முக்கண்ணப்பா!
என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !
-- நம்மாழ்வார் (திருவாய்மொழி)

'வைணவ பக்தி' ஆழ்வார்களால் ஒரு புறம் வளர,
'சைவ பக்தி' நாயன்மார்களால் மறுபுறம் வளர்ந்தது.

"பொறாமை இல்லாமல் பக்தியே நம்மிடம் இருந்தது" என்பதற்கு இந்த பாசுரமே சான்று.

இந்த பாசுரத்தில் ஆழ்வார், "தனித்தவரான பரவாசுதேவன் நாராயணன், மும்மூர்த்திகளில் தானும் ஒருவராக தன்னை காண்பித்து கொள்ள க்ஷீராப்தி வந்து விட்டாரே" என்று ஆச்சரியமும், ஆனந்தமும் அடைகிறார்.

வேதம் சொல்லும் மும்மூர்த்திகளை, நம்மாழ்வாரும் இங்கு சொல்கிறார்.
இங்கு ஆழ்வார்,
சிவபெருமானை எப்படி அழைக்கிறார்? என்று பாருங்கள்...

முனியே நான்முகனே! 
முக்கண்ணப்பா!
என்று ஆரம்பிக்கும் போது,
முனிவர்களுக்குள் உயர்ந்த நான்முகனான "ப்ரம்ம தேவனை" முதலில் சொல்கிறார்.
பிறகு,
சிவபெருமானை ஆழ்வார் சொல்லும்போது "முக்கண்ணா" என்று மட்டும் சொல்லி அழைத்து இருக்கலாம்!!
ஆனால்,
மூன்று கண் உடைய சிவபெருமானை "அப்பா" என்று சொல்லி அழைக்கிறார்.

சிவபெருமானை 'அப்பா' என்று வைஷ்ணவரான நம்மாழ்வார் அழைக்கிறார்!!
என்று கவனிக்க வேண்டும்.

எங்கு இருந்தது நமக்குள் சிவ விஷ்ணு வெறுப்பு?...

"சிவ-த்வேஷம் வைணவ-த்வேஷம்" என்று சொல்லி சொல்லி, "ஹிந்துக்களிடையே பிரிவினையை உருவாக்க வேண்டும்" என்று திட்டமிட்டு, வெளி மதத்தை சேர்ந்தவர்கள் இன்றுவரை பெருமுயற்சி செய்கின்றனர்.

சிவபக்தியினால் கிருமிகண்ட சோழன் மட்டும் தான், அவன் காலத்தில் வைஷ்ணவ வெறுப்பை காட்டினான்.
இதை மட்டுமே எப்பொழுதும் காட்டி காட்டி, இன்று வரை ஹிந்துக்களை பிரிக்க நினைக்கின்றனர்.

கிருமிகண்ட சோழனுக்கு முன்னால் இருந்த சோழனும்,
அவனுக்கு பின்னால் வந்த சோழர்களும் தான், 'பல வைணவ கோவிலையும் கட்டினர், பல சிவன் கோவிலையும் கட்டினார்கள்'
என்ற உண்மையை இவர்கள் சொல்ல விரும்புவதில்லை.

ஹிந்துக்களை ஒழிப்பதே இவர்கள் நோக்கமாக உள்ளது.

ஹிந்துக்களை பிரித்து,
ஹிந்துக்களுக்கு இடையே வெறுப்பை உருவாக்கி,
தன் போலி மதத்தை நுழைத்து,
தன் மதத்தில் ஆள் சேர்க்க,
இவர்கள் செய்யும் முயற்சிகளை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

கும்பகோணத்தில் ஒரு தெருவில் சாரங்கபாணி இருக்க,
மறு தெருவில் கும்பேஸ்வரர் இருக்கும் போது,
இப்படி ஹிந்துக்களிடையே பிரிவினை உருவாக்க முயற்சிக்கும் இவர்களை ஹிந்துக்கள் வேரறுக்க வேண்டும்.

ஆழ்வார் சிவபெருமானை அழைப்பதே நமக்கு ஆச்சர்யமாக இருக்க,
இங்கு சிவபெருமானை "முக்கண்ணா" என்று மட்டும் அழைக்காமல் "முக்கண்ணப்பா" என்று ஏன் அழைத்தார் ஆழ்வார்?..

ஒரு தகப்பன், தன் பிள்ளை எப்படிப்பட்டவனாக இருந்தாலும், அவனுக்கு நல்லதே செய்வான்.

'ஆத்மாவே நான்' என்ற அறிவுடன், அனுபவத்தில் வாழும் ஞானிக்கு இந்த உடலே ஒரு சிறையாக தோன்றுமாம்.

இந்த "உடல் இல்லாமல் இருந்தால், அந்த பரமாத்மா நாராயணனை இப்பொழுதே அடைந்து விடலாமே!"
என்று ஞானிகள் ஆசைப்படுவார்களாம்.





'சம்ஹாரம்' என்ற அழிக்கும் தொழிலை செய்யும் சிவபெருமான், "மரணம் என்ற காரியத்தின் மூலம், ஆத்மாவுக்கு இந்த சிறையில் இருந்து விடுதலை கொடுக்கிறார்".

ஒரு தகப்பன் தன் பிள்ளைக்கு பார்த்து பார்த்து நல்லது செய்வது போல, "மரணம் என்ற உபகாரம் செய்து கொடுத்து, இந்த ஜீவ ஆத்மாக்கள் வைகுண்டம் செல்லட்டும் என்று தகப்பன் போல பேருதவி செய்கிறாரே"
என்றதும் சிவபெருமானை 'அப்பா' என்று அழைக்க ஆசை வர, "முக்கண்ணப்பா" என்று நன்றியுடன் அழைக்கிறார் ஆழ்வார்.

ஆழ்வார் பிரம்மாவையும், சிவபெருமானையும் சொல்கிறாரே..
அவருக்கு இஷ்ட தெய்வம் யார்? 
என்ற கேள்விக்கு அவரே இந்த பாசுரத்தில் விடையும் தருகிறார்.
தனித்து இருக்கும் (தனியேன்) ஆதி புருஷனான நாராயணனே, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் "விஷ்ணு"வாக க்ஷீராப்தியில் அவதரித்து இருப்பதை பார்த்து விட்டு,
'என் மாணிக்கமே..என் கள்வா.. என் ஆருயிரே..'
என்று பல தடவை "என்னுடைய, என்னுடைய.." என்று கூப்பிடுகிறார்.

இதன் மூலமே, நாராயணன் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர் ஆழ்வார் என்று தெரிகிறது.

அதே சமயம் மற்ற தெய்வங்கள் மேல் மரியாதையும் உண்டு என்றும் காட்டுகிறார்.

"மரியாதை மற்ற தெய்வங்களிடம் இருக்க வேண்டும்.
ஆனால் நம் இஷ்ட தெய்வத்திடம் ஆசையும் பக்தியும் நமக்கு வேண்டும்" 
என்றும் காட்டுகிறார் நம்மாழ்வார்.

மும்மூர்த்திகளில் பிரம்மாவையும், சிவபெருமானையும் "நான்முகனே! முக்கண்ணப்பா!" என்று மரியாதையோடு அழைக்கிறார்.

"நாராயணனே இவர்களுக்கு உள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார்" என்பதால் அவர்களுக்கான மரியாதையை கொடுக்கிறார்.

ப்ரம்மாவை பார்த்தால் வேத மூர்த்தியாக அமைதியாக இருக்கிறார்.
சிவபெருமானோ ஜடை வளர்த்து, சுடுகாட்டு சாம்பலை பூசிக்கொண்டு யோகி போல இருக்கிறார்.

மரியாதை ஏற்பட்டதேயன்றி, இதயத்தை இவர்களுக்கு கொடுத்து விடவில்லையாம் ஆழ்வார்.

என் ஆசையெல்லாம் உலக விஷயங்களில் மட்டுமே சுற்றிக்கொண்டு இருக்க, ஒருசமயம்,
பரவாசுதேவன் நாராயணனே "விஷ்ணுவாக" இருப்பதை பார்க்க வாய்ப்பு கிடைக்க,
"தன் திருமேனி அழகை காட்டியே, உலக விஷயங்களில் அலைந்து கொண்டிருந்த என்னை திருடி, தனக்கு அடியானாக ஆக்கிக்கொண்டு விட்டாரே, இந்த பொல்லாத பெருமாள்!" என்று பாடுகிறார்.
இவரோ, பிரம்மாவை போல, சிவபெருமானை போல அமைதியாக இருக்காமல், 
தன் அழகான சிரிப்பால் உள்ளத்தை மயக்கி, தன் கண் அழகினாலேயே இவர் இதயத்தை திருடி விட்டார் என்றதும்,
விஷ்ணுவின் தாமரை போன்ற கண்களையும், கனிந்த உதடுகளையும் பார்த்து மயங்கி போனதால், "என் மனதை திருடிய கள்வா, பொல்லாதவனே!" என்றெல்லாம் ஆசை தீர கூப்பிடுகிறார்.

என் பொல்லாக் கனிவாய்த்
தாமரைக்கண் கருமாணிக்கமே!
என் கள்வா !
தனியேன் ஆருயிரே !
என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே!
என்று தனித்து இருக்கும் பரவாசுதேவன், "இப்படி விஷ்ணுவாக, பிரம்மாவுக்கும், சிவனுக்கும் நடுவில் அவதரித்து, திருமேனி அழகினால் தன் இதயத்தை திருடி விட்டாரே!" என்கிறார்.

இங்கு,
விஷ்ணுவாக இருக்கும் நாராயணனை பார்த்து,
"என் தாமரைக்கண் கருமாணிக்கமே' என்று திருமேனி அழகில் மயங்கியதை குறிப்பிடுகிறார்.

தனித்த புருஷனாக (தனியேன்) இருந்தாலும்,
மும்மூர்த்திகளில் தானும் ஒருவர் போல இருந்தாலும்,
இவர் தன் இதயத்தை திருடிவிட்டாரே (கள்வா) என்றதும், "என் பொல்லா" என்கிறார்.

"பல ஜென்மங்களாக உங்களிடம் மட்டும் அகப்படாமல் தப்பித்த என்னை, பொல்லாத நீங்கள், உங்கள் திருமேனி அழகை காட்டி, ஒரு சிரிப்பு சிரித்து இன்று என்னை பிடித்து விட்டீர்களே!" என்கிறார்
"பரவாசுதேவனான உங்களிடம் சிக்கிய பின், இனி நான் சம்சாரத்தில் மீண்டும் விழப்போவதில்லை.
உலக மாயையும் எங்களை இனி ஒன்றும் செய்யாது"
என்று கடைசியில் விஷ்ணுவை சரண் அடைந்தவன் பெரும் பயனை பற்றி சொல்கிறார்.

என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகலொட்டேன் !
என்றும் மாயம் செய்யேல் என்னையே !

க்ஷீராப்தி என்ற பாற்கடலுக்கு,
'சொர்க்க லோகம், ஜன லோகம், தப லோகம், சத்ய லோகம், கைலாசம்' போன்றவற்றில் வசிக்கும் தேவர்களும், ரிஷிகளும், பிரம்மாவும், ருத்ரனுமே சென்று பார்க்க முடியும்.

பூமியில் இருக்கும் நம்மால் இந்த உடலோடு செல்ல முடியாது.
ஆனால்,
க்ஷீராப்தி நாதனை நம் மனதில் இந்த ஆழ்வார் பாசுரத்தின் மூலம் கண்டு விடலாம். 

குருநாதர் துணை...

Sunday 14 June 2020

பாசுரம் (அர்த்தம்) - தாள்களை எனக்கே... நம்மாழ்வார் பரமபத நாதனான விராட் ரூபனாக நினைத்து பாடிய அழகான பாசுரம். சடாரியின் பெருமையை விளக்கும் பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

பரமபுருஷன் "அனைவரிடத்திலும் அந்தர்யாமியாக இருப்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான கண்களுடன், தலையுடன், தானே அனைத்துமாக இருக்கிறார்"
என்று பரவாசுதேவனின் விராட் ரூபத்தை 'புருஷ சூக்தம்' வர்ணிக்கிறது.
இந்த புருஷ சூக்தத்தின் அர்த்தத்தை, தமிழில் பாசுரமாக பாடி கொடுத்து விட்டார் நம்-ஆழ்வார்.




தாள்களை எனக்கே
தலைத்தலை சிறப்ப தந்த பேருதவி 
கைம்மாறா !! 
தோள்களை ஆரத் தழுவி !
என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ !!

தோள்கள் ஆயிரத்தாய் !
முடிகள் ஆயிரத்தாய் ! துணைமலர்க் கண்கள் ஆயிரத்தாய் !
தாள்கள் ஆயிரத்தாய் !
பேர்கள் ஆயிரத்தாய் !
தமியனேன் பெரிய அப்பனே !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)


தன் பலத்தால் "பூலோகம் முதல் ப்ரம்ம லோகம் வரை" பிடித்து வைத்து இருந்த பலி சக்கரவர்த்தி,
தானமாக, தான் சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் கொடுத்தான்.

"7 லோகங்களையும் அடமானம் வைத்தாலும், தன் திருவடிக்கு ஈடு ஆகாது"
என்று மிரட்டி, 'மூன்றாவது அடி எங்கே?' என்று பெருமாள் கேட்க,
தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்து நின்றான் பலி சக்கரவர்த்தி.
தன் சொத்தையும், தன்னையும் சமர்ப்பணம் செய்த பிறகு, அதற்கு கைமாறாக பெருமாள் தன் திருவடியை தொடும் ஆனந்தத்தை பலி சக்கரவர்த்திக்கு கொடுத்தார்.
இது வாமன அவதார சரித்திரம்.   




பெருமாளின் திருவடியை தான் நமக்கு கோவிலில் "சடாரி" என்று வைக்கிறார்கள்.

"பெருமாளின் திருவடி சம்பந்தம் கிடைக்க", பலி சக்கரவர்த்தி தன் சொத்து அனைத்தையும் கொடுத்து, தன்னையே கொடுத்தான்.
ஆனால்,
ஒன்றுமே கொடுக்காத நமக்கு, கைம்மாறு எதிர்பார்க்காமல் பெருமாள் தன் திருவடி (சடாரி) கொடுத்துவிட்டாரே !!

"கைம்மாறு எதிர்பார்க்காமல், தன் திருவடியை (தாள்களை) என் தலை மேல் வைத்து சிறப்பித்து (எனக்கே தலைத்தலை சிறப்ப தந்த) பேருதவிக்கு நான் என்ன செய்வேன்?" என்று திகைக்கிறார்.

பெருமாள் திருவடி (சடாரி) தன் தலை மீது பட்டதால், தன் சரீரமே பெருமாள் சொத்து ஆகி விட்டது என்ற பூரிப்பில், நம்மாழ்வார் தன்னையே ஆரத்தழுவி கொண்டு (தோள்களை ஆரத் தழுவி) "எனது ஆத்மாவை, அந்த பரஞ்சோதியான நாராயணனுக்கு பரிபூரணமாக சமர்ப்பணம் செய்து விட்டேன் (என் உயிரை அறவிலை செய்தனன் சோதீ)"
என்று தன்னையே அர்ப்பணம் (ஆத்ம நிவேதனம்) செய்கிறார்.
தானே அனைத்துமாக விராட் புருஷனாக இருக்கும் பெருமாள், 
ஒவ்வொருவரின் உள்ளிலிருந்து கொண்டு, பார்க்க செய்கிறார், கேட்க செய்கிறார் என்பதால், 
அவரே ஆயிரக்கணக்கான தோள்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான தலைகள் உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கண்களை உடையவராகவும்,
அவரே ஆயிரக்கணக்கான கால்களாகவும், 
அவரே ஆயிரக்கணக்கான பெயர்களுடனும்,
இருக்கிறார், என்று புருஷ சூக்த்தத்தை அப்படியே தமிழில் நமக்கு கொடுத்து விட்டார்.

பலி சக்கரவர்த்தி தன்னையும், தன் சொத்துகள் அனைத்தையும் கொடுத்தார். அதற்கு கைமாறாக தன் திருவடியை கொடுத்தார்.
ஆனால்,
திறன் இல்லாத நமக்கு (தமியனேன் எனக்கு), கைம்மாறு எதிர்பார்க்காமல் தன் திருவடியை கொடுத்த பெருமாள், நமக்கு "அப்பா" என்று உறவு காட்டி அழைக்கிறார்.

நம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடு இல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.




பெருமாளின் திருவடி (சடாரி) நம் மீது பட்டாலே, அனைத்து பாவங்களும் போய் விடும் என்று ராமபிரானின் சரித்திரம் மூலமே நிரூபணம் ஆனது.
நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றுநம்மிடம் எதுவுமே எதிர்பார்க்காமல், 7 உலகங்களுக்கும் ஈடுஇல்லாத தனது திருவடி நமக்கு கொடுத்து, "பயப்படாதே" என்று அபயம் தருகிறார்.

நம் தகப்பனான பெருமாளை "நம் பெருமாள்" என்றும் "எம் பெருமாள்" என்று
ம் உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம். ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள். "எம் பெருமாள்" என்று
உறவு சொல்லி கொண்டாடுவோம்.
நம் சொந்த வீடான மோக்ஷத்தை இந்த பிறவி முடிந்ததும் பெறுவோம்.

வாழும்வரை பெருமாளிடம் பக்தி செய்வோம்.
ஆழ்வார்கள் பாசுரங்களை அர்த்தம் புரிந்து படிப்போம்.

வாழ்க ஹிந்துக்கள்.

Saturday 13 June 2020

பாசுரம் (அர்த்தம்) - சூழ்ந்தகன்று ஆழ்ந்துயர்ந்த... நம்மாழ்வார் வைகுண்டம்) பரமபத நாதனான நாராயணனை நினைத்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)

** பிரளய காலத்தில் உலகம் இருண்டு கிடக்க,
** மோக்ஷம் அடையாத ஆத்மாக்கள் உறங்கி கிடக்க,
** சில ஆத்மாக்கள் கைவல்யம் என்ற மோக்ஷத்தை அனுபவித்து கிடக்க,
** பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
திருவாய்மொழியில் உள்ள அருமையான பாசுரம்.




சூழ்ந்து அகன்று ஆழ்ந்துயர்ந்த
முடிவில் பெரும் பாழேயோ !
என்று சொல்லும் போது,
"ப்ரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பிரளய ஜலத்தால், 14 உலகங்களும் சூழப்பட்டு, அழிந்து போய், பேரிருள் சூழ்ந்திருக்கும் நிலையை" சொல்கிறார் ஆழ்வார்.
"தமஸ்" என்ற சமஸ்க்ரித சொல்லையே இங்கு தமிழில் "பாழ்" என்று சொல்கிறார் நம்மாழ்வார்.
"பாழ்" என்றால் "இருள்" என்றும் அர்த்தம் கொள்ளலாம்.
ஆத்மாவுக்கு அழிவே இல்லை.
ஆதலால்,
உலகங்கள் அழிந்தாலும், பரமாத்மா நாராயணன் அழிவதில்லை, கோடிக்கணக்கான ஜீவாத்மாக்களும் (நாமும்) அழிவதில்லை.

"மோக்ஷம் அடைந்த ஜீவ-ஆத்மாக்கள், பரமாத்மாவை அடைந்து இருப்பது போல,
பிரம்மாவின் ஆயுசு முடிந்தும், இன்னமும் மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்களும் அழியாமல் பரமாத்மா நாராயணனிடம் 'பாழ்' என்ற இருள் நிலையில், 'தான் எங்கு இருக்கிறோம்?' என்றே அறியாமல் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார்.

இப்படி மகா பிரளய காலத்தில், பரமாத்மாவோடு இருந்த போதிலும், தான் எங்கு இருக்கிறோம்? என்றே அறியாமல்" மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் உறங்கி கொண்டு இருக்கிறார்கள்.

"மீண்டும் உலக ஸ்ருஷ்டி செய்ய பரவாசுதேவன் சங்கல்பிக்கும் வரை, 'தமஸ் என்ற பாழ் இருளில்' இந்த ஜீவாத்மாக்கள் இருக்கிறார்கள்"
என்கிறார்.
அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய பர
நன் மலர் சோதீயோ !
என்று சொல்லும் போது,
"14 உலகங்களும் அழிந்த நிலையிலும், மோக்ஷம் அடையாத ஜீவ ஆத்மாக்கள் அழியாமல் 'நன் மலர் ஜோதியாக' பிராகாசித்து கொண்டே நாராயனிடம் ஒடுங்கி கிடக்கிறது.
ஆனால், ஒரே ஒரு குறை.
அந்த மோக்ஷம் அடையாத ஜீவன்கள் இருளில் (பாழேயோ) கிடக்கிறார்கள்"
என்கிறார் நம்மாழ்வார்.

அதாவது,
"'நாராயணிடம் தான், நாம் இருக்கிறோம்' என்று அறியாமலேயே, மோக்ஷம் அடையாத ஜீவாத்மாக்கள் 'தமஸ்' என்ற நிலையிலேயே கிடக்கிறார்கள்"
என்கிறார்.



"குழந்தை தன் தாய்மடியில் தூங்கிக்கொண்டிருக்கும் போது, தாயின் அரவணைப்பை, சுகமான தூக்கத்தை அனுபவித்தாலும், தான் தாயின் மடியில் தான் தூங்குகிறோம் என்று தெரியாமலேயே (தமஸ்) இருப்பது போல,
மோக்ஷம் அடையாமல் இருக்கும் ஜீவாத்மாக்கள், பிரளய காலத்தில் நாராயணின் இதயத்திலேயே உறங்கி கொண்டு இருந்தாலும், அவரிடம் தான் நாம் இருக்கிறோம் என்று அறிந்து கொள்ளாமல் தூங்கி கொண்டு இருக்கிறார்கள்"
என்கிறார் ஆழ்வார்.

பிரளய காலத்தில் மட்டுமல்ல, நாம் தினசரி தூங்கும் போது கூட, இந்த சேர்க்கை அனைவருக்கும் நடக்கிறது.

"தூங்கினால் சுகமாக உள்ளது" என்று மட்டுமே அறிகிறோம்.
ஆனால், "யார் மடியில் உறங்கினோம்?..யார் சுகமான தூக்கத்தை கொடுத்தார்கள்?"
என்று அறியாமலேயே தூங்குகிறோம்
என்று சாஸ்திரம் சொல்கிறது.

அதனால் தான் தூக்கத்தை "தாமஸ" குணம் என்று சொல்கிறோம்.
புத்தி விழிப்பு இல்லாத நிலை அது.

"தாமஸ்" விரட்டி அடிக்கப்பட வேண்டிய விஷம்.
மூளையை மழுங்க செய்வது தாமஸ். 'இருள் போன்றது' தாமஸ்.
ஹிந்துக்கள் இந்த தாமஸிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

அடுத்ததாக,
சூழ்ந்து அதனில் பெரிய சுடர்
ஞான இன்பமேயோ !
என்று சொல்லும் போது,
"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள், பிரளய காலத்தில், சம்சாரத்தில் இருந்து முழு விடுதலை அடைந்து, கைவல்யம் என்ற மோக்ஷத்தை அடைந்து 'சுதந்திர காற்றை' (ஞான இன்பம் என்று சொல்கிறார்) அனுபவிக்கிறார்கள்"
என்று சொல்கிறார்.

இரண்டு விதமான மோக்ஷம் சொல்லப்படுகிறது.
ஒன்று : கைவல்யம் (விடுதலை)
மற்றொன்று : பரமபதம் என்ற வைகுண்டம் (வீடு)

"உடல் நானல்ல..ஆத்மாவே நான்" என்ற அத்வைத ஞானத்தை (அறிவை) மட்டும் பெற்றவர்கள் "நானே பரமாத்மா" என்ற அனுபவத்திலேயே இருப்பதால், கைவல்யம் (விடுதலை) என்ற மோக்ஷத்தை அடைகிறார்கள்.

உடல் நானல்ல..ஆத்மாவே நான் என்ற ஞானம் அனுபவத்தில் உள்ளதால், 
சம்சாரத்தில் மீண்டும் இவர்கள் பிறப்பதில்லை.

ஜெயில் பல வருடம் சிறை கைதியாக இருந்த ஒருவன், ஒருநாள் விடுதலை பெற்றது போன்ற நிலையே "கைவல்யம்".

சிறையில் இருந்து விடுதலை அடைந்தோமே!!
என்ற சந்தோஷத்தில் இன்பமாக ஊர் முழுக்க அலைபவன் போல,
கைவல்யம் பெற்றவனும் இருக்கிறான்.
இதையே "ஞான இன்பமேயோ" என்று சொல்கிறார்.

"கைவல்யம்" என்ற மோக்ஷத்தை விட, "பரமபதமே" நமக்கு சிறந்தது என்பதால்,
கடைசியாக,
சூழ்ந்து அதனில் பெரிய என்
அவா அறச் சூழ்ந்தாயே  !
என்று சொல்லி பரமபதத்தை நமக்கு காட்டுகிறார் ஆழ்வார்.

அத்வைத ஞானம் பெற்றவன், நானே பரமாத்மா என்று நினைப்பதால், கைலவல்யம் மட்டுமே அடைகிறான்.
அதாவது "விடுதலை" மட்டுமே அடைகிறான்.
ஆனால் "வீடு" போய் சேர்வதில்லை.

ஜெயிலில் பல வருடம் அடைபட்டு, விடுதலை அடைந்தவன், "விடுதலை அடைந்தேன்" என்பதிலேயே திருப்தி அடைவது போல "கைவலயம்".

"உடல் நானல்ல, ஆத்மாவே நான்" என்ற ஞானத்தோடு,
"என் வீடு எது? என் தகப்பன் யார்? என்னை படைத்தவன் யார்?" என்று அறிந்தவன், மோக்ஷம் அடையும் போது, பரமபதம் என்ற வீடு போய் சேருகிறான்
என்கிறார் ஆழ்வார்.

"பரமபதம் என்ற மோக்ஷத்தை அடையும் (அடையபோகும்) தன்னை போன்ற விஷ்ணு பக்தர்களை பரவாசுதேவன் நாராயணன் அரவணைத்து கொள்கிறார்"
என்று பரமபதத்தின் பெருமையை பாடுகிறார் நம்மாழ்வார்.
இதையே
"என் அவா அறச் சூழ்ந்தாயே"
என்கிறார் நம்மாழ்வார்.

பரமபத நாதனான நாராயணனை தொழுவோம்.

குருநாதர் துணை.

Sunday 5 April 2020

பாசுரம் (அர்த்தம்) - கோட்டுமண் கொண்டு... பெரியாழ்வார் (மதுரை) கள்ளழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கோட்டு மண் கொண்டு இடந்து 
குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும் 
அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு 
விமலன் மலை
ஈட்டிய பல்பொருள்கள் எம்பிரானுக்கு அடி உறையென்று
ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே
- திருமொழி (பெரியாழ்வார்)

வராக அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பிரளய ஜலத்தில் இருந்து தூக்கிய (இடந்து) அதே பகவான் (கோட்டு மண் கொண்டு இடந்து)




வாமன அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) பலிசக்கரவர்த்தியிடம் இருந்து மீட்க உலகை அளந்த அதே பகவான் (குடம் கையில் மண் கொண்டு அளந்து மீட்டும்)

கிருஷ்ண அவதாரம் செய்த போது இந்த பூமியை (மண்) உண்டு, லோகங்கள் அனைத்தும் தனக்குள் அடக்கம் என்று யசோதையிடம் லீலை செய்த (விளையாடு) அதே பகவான் (அஃது உண்டு உமிழ்ந்து விளையாடு)

இந்த அழகர் மலையில் கள்ளழகனாக வீற்று இருக்க (விமலன் மலை)

இங்கு வாழும் பலதரப்பட்ட பக்தர்களான கள்ளர்கள், மறவர்கள், பிராம்மணர்கள் எவரானாலும், தனக்கு கிடைத்த கேழ்வரகானாலும், ஆடு கோழியானாலும், பால், நெய் என்று எந்த பொருளானாலும் (ஈட்டிய பல்பொருள்கள்)
அதில் ஒரு பாகம் என் அழகருக்கு (எம்பிரான்) என்று உரைத்து அவர் பாதத்தில் சமர்ப்பித்து விடுகிறார்கள் (எம்பிரானுக்கு அடி உறையென்று).

அழகர் பெருமாள் ஜாதி பார்க்காமல், குணம் பார்க்காமல் இங்கு மட்டும் தான், அவரவர்கள் ஜாதிக்கு ஏற்ப, அவரவர்கள்  பேச்சுக்கு ஏற்ப, அவரவர்கள் நாகரீகத்து ஏற்ப, அவரவர்கள் சாப்பாடுக்கு ஏற்ப, அவரவர்கள் குணத்திற்கு ஏற்ப பழகுகிறார்.

பொருளை கொள்ளை அடிக்கும் கள்ளர்களின் மத்தியில் நின்று கொண்டு, கள்ளர்களின் மனதையும் கொள்ளையடிக்கும் கள்ளனுக்கு கள்ளனாக கள்ளழகர் இங்கு இருக்கிறார்.

ஸ்ரீரங்க நம்பெருமாள் போல இங்கு கள்ளழக பெருமாள் இருக்க மாட்டார். 
அங்கு ஸ்ரீரங்கபெருமாள், யார் கொடுத்தாலும் ஏற்க மாட்டார்.
இங்கோ,
கம்பு சாப்பிடுவீர்களா? என்று கேட்டால், "சாப்பிடுவேனே !" என்று சொல்வாராம் கள்ளழக பெருமாள்.

"கள்ளர்களை போல கருப்பு துணி கட்டி கொள்வீர்களா?"
என்று கேட்டால், "சரி" என்று கட்டி கொள்வாராம்.

பெருமாள் ஒரு நாள் கருப்பு துணி கட்டிக்கொள்ளும் அதிசயம் அழகர்மலையில் மட்டுமே காண முடியும்.
கள்ளர்களும் ரசிக்க கருப்பு துணி, கருப்பு தொப்பி அணிந்து கொண்டு, கையில் ஒரு கோலுடன் தரிசனம் தருகிறார் அழகர்.

அழகரை பார்த்தால் அனைவருக்குமே என் பெருமாள் (எம்பிரான்) என்று தோன்றிவிடும்.

மற்ற ஊர்களில் பெருமாளுக்கு நேரடியாக எதையும் சமைத்து நெய்வேத்யம் செய்து விட முடியாது.


பெருமாள் இங்கு மிகவும் சுலபமாக இருப்பதால்,
அழகர்மலையை சுற்றி ஆயிரக்கணாக்கான மாக்கள், நூபுர கங்கையில் (சிலம்பாறு) ஸ்நானம் செய்து விட்டு,
தாங்களே அடுப்பு மூட்டி, பொங்கல் வைத்து பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்யும் அழகை நாம் ரசிக்கலாம். 

சமயத்தில், தான் சாப்பிடும் ஆடு கோழியை கூட இவர்கள் சமர்ப்பிக்க இந்த பெருமாள் அதை ஏற்கிறார்.

இப்படி பிரார்த்தனை எல்லாம் இங்கு பலித்து விடும் என்பதால்,
பெரியாழ்வார் பெற்ற ஆண்டாள், ஸ்ரீ ரங்க பெருமாளை மணக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து, நம் அழகருக்கு பொங்கல் செய்து சமர்ப்பித்தாள். இதை ஆண்டாளே  பாடுகிறாள்.

கள்ளர்கள் முதல் ஆழ்வார்கள் வரை, பழகுவதற்கும், ஆசைப்பட்ட அனைத்தும் நிறைவேறவும் அனுகிரஹிக்கும் பெருமாளாக கள்ளழகர் இருக்கிறார்.

சித்ரா பௌர்ணமி அன்று, ஒவ்வொரு பக்தன் தனக்கு சமர்ப்பிக்க ஆசைப்படும் உணவை ஏற்றுக்கொள்ள,
தானே வெயிலை பார்க்காமல், அழகர் மலையை  (மாலிருஞ்சோலை) விட்டு கிளம்பி, ஒவ்வொரு வீடாக நுழைந்து, அமர்ந்து, அவர்கள் கொடுக்கும் உணவை ஏற்று கொண்டு வைகை நதி செல்லும் வரை அனைவரிடமும் பழகி கொண்டே செல்கிறார். 




லட்சம் ஜனங்கள் இந்த அழகரை பார்க்க கூடும் அழகை கண் படைத்தவர்கள் காண வேண்டும். நம் வீட்டு பெருமாள் போல பழகும் அழகை மதுரையில் காணலாம். (ஓட்டரும்தண் சிலம்பாறுடை மாலிருஞ்சோலையதே)

Monday 30 March 2020

பாசுரம் (அர்த்தம்) - அடியோமோடும் நின்னோடும்... பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம், பல்லாண்டு!
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும், பல்லாண்டு!
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
--  பெரியாழ்வார் (மதுரை) கூடலழகர் பெருமாளை பார்த்து பாடிய அழகான பாசுரம் (திருமொழி

தெய்வத்திடம் "சாமானியன் பழகும் முறை" வேறுபடுகிறது. 



தெய்வத்திடம் "பக்தன் பழகும் முறையும்" வேறுபடுகிறது.

"தன்னை பெருமாள் பார்த்து கொள்ள வேண்டுமே!என்று சாமானியன் நினைக்கிறான்.

"தான் பல்லாண்டு பாட, பெருமாள் தனக்கு வேண்டுமே ! அவர் நன்றாக இருக்க வேண்டுமேஎன்று பக்தன் நினைக்கிறான்.
"தான் செய்யும் பஜனையை பார்க்க, பெருமாள் ரூபத்துடன் வேண்டுமே" என்று பக்தன் கேட்க,
ரூபம் கடந்த, குணங்கள் கடந்த, நாமங்கள் கடந்த பரமாத்மா, 
"பக்தன் செய்யும் பஜனைக்காக, நாம, ரூப, குணங்களை எடுத்துக்கொண்டு" பாரத தேசம் முழுவதும் விபவ அவதாரமும், அரச்ச அவதாரமும் செய்து தோன்றி விட்டார்.

பக்தனான பெரியாழ்வாருக்கு "பெருமாள் பல்லாண்டு சுகமாக இருக்க வேண்டும்" என்று தோன்ற, 
"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு 
பலகோடி நூறாயிரம் ஆண்டு" 
என்று மங்களாசாசனம் செய்கிறார். 

"பெருமாள் மட்டும் பல்லாண்டு இருந்தால் போதுமா? 
பெருமாளுக்கு பல்லாண்டு பாடும் பக்தனும் பல்லாண்டு இருக்க வேண்டுமே" 
என்று நினைவு வர, பெருமாளும் (நின்னோடும்), பக்தனும் (அடியோமோடும்) பிரியாமல் பல்லாண்டு இருக்க வேண்டும் என்று மங்களாசாஸனம் செய்கிறார்.



அதையே
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு 
என்கிறார்.


அடுத்ததாக பெருமாளின் ஸ்ரீவத்சம் உடைய திருமார்பில் பிராட்டி இருக்க, மஹாலக்ஷ்மி  தாயாருக்கும் பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவாய் நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
என்கிறார்.

பெருமாள் மட்டுமே அழகு, அவர் கையில் வைத்து இருக்கும் சக்கரமும் (சுடராழி), சங்கும் (பாஞ்சசன்யமும்) கூட அழகாய் இருக்க, 
அந்த சங்கு சக்கரத்துக்கு பல்லாண்டு பாடுகிறார் பெரியாழ்வார்.
அதையே
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும், பல்லாண்டு!
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.




பாஞ்சசன்யம் (சங்கும்) பெருமாள் கையில் தான் உள்ளது.
பெருமாள் பெரியாழ்வாருக்கு  எதிரில் தான் காட்சி கொடுக்கிறார். 

கண் எதிரே தெரியும் பாஞ்சசன்யத்தை பார்த்து, "இந்த பாஞ்சசன்யம்" என்று சொல்லாமல்,
"அந்த பாஞ்சசன்யம்" (அப் பாஞ்சசன்யமும்) 
என்று குறிப்பிட்டு சொல்கிறார் பெரியாழ்வார்.

ஏன் அப் பாஞ்சசன்யமும் என்று குறிப்பிட்டு சொன்னார்?
அவர் மனதை அறிந்த மகான்கள் அதன் ரகசியத்தை நமக்கு சொல்கிறார்கள்.
பெருமாள் வைத்திருக்கும் சங்கு வெண்மையானது
அன்ன பக்ஷியும் வெண்மையானது.
அன்ன பக்ஷிக்கு ஒரு பக்கம் கொண்டையும், கூரான மூக்கும் இருப்பது போல, சங்கிற்கும் உண்டு

அன்ன பக்ஷி ஒரு தாமரை பூவில் இருந்து மற்றொரு தாமரை பூவில் அமரும் போது, "கீச்" என்று கூவுவது போல, 

பெருமாளின் கையில் இருக்கும் இந்த வெண் சங்கு, அவர் கையிலிருந்து அவர் உதரத்துக்கு (உதட்டுக்கு) அருகில் சென்றது, சங்க நாதம் முழங்குமாம்.
 "பாஞ்சசன்யமும் பல்லாண்டே" 
என்று பாட வந்த பெரியாழ்வாருக்கு இந்த நினைவு வர, அந்த நிமிஷத்தில் கண்ணை மூடி பெருமாளை தியானிக்க,
வெண் சங்காக இருந்த அந்த பாஞ்சசன்யம், பெருமாளின் கொவ்வை சிவப்புடன் உள்ள உதரத்திற்கு அருகில் சென்றதும்,
வெண் சங்கு, சிவப்பாக தெரிய, பெருமாளின் அழகில் மயங்கி நின்ற பெரியாழ்வார், 'சிவப்பு ஏறிய அந்த பாஞ்சசன்யத்துக்கு பல்லாண்டே' என்று மங்களாசாசனம் செய்கிறார்.

அதையே
படைபோர்புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்யமும், பல்லாண்டே!
என்கிறார்.

அனைவரும் கூடலழகரை தரிசிப்போம். பல்லாண்டு பாடுவோம்.



பாசுரம் (அர்த்தம்) - பலபல நாழம் சொல்லி. பெரியாழ்வார் கள்ளழகர் (மதுரை) அழகர்மலையை பார்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையை கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.


பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)




"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.




பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.


இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார்மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.