Followers

Search Here...

Showing posts with label ஏன். Show all posts
Showing posts with label ஏன். Show all posts

Tuesday 13 August 2019

ஆவணி அவிட்டம் என்ற உபாகர்மா மூலம் என்ன செய்கிறோம்?...காரணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"ஆவணி அவிட்டம்" என்று, சொல்லப்படும் நாளில் பிராம்மணர்கள் கூடி பூணல் அணிந்து கொள்கிறார்கள். "ஸ்ராவணம்" என்றும், "உபாகர்மா" என்றும் கூட சொல்கிறார்கள்.



சிலர் ஆணி அவிட்டம், ஆடி அவிட்டம் போன்ற நாட்களிலும் செய்து கொள்கிறார்கள்.

"ஆவணி அவிட்டம்" என்றதும்
"ஒரு வருடமாக போட்டு கொண்டிருக்கும் அழுக்கு பூணலை கழட்டி, புது பூநூல் போட்டு கொள்ளும் நாள்"
என்று லௌகீக பிராமணர்கள் நினைக்கலாம்.

இப்படி நினைப்பதாலோ என்னவோ!!
சில லௌகீக ப்ராம்மணர்கள், வேறு ஒரு புது நூலை தாங்களே வாங்கி மாட்டிக்கொண்டு விடுகின்றனர்.

நம்முடைய ஹிந்து தர்மத்தில், நாம் செய்யும் எந்த செயலிலும் ஒரு அர்த்தம் உண்டு. காரணமும் உண்டு.

இன்று நமக்கு, 'அர்த்தம் தெரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்',
ஹிந்து தர்மம் சொல்லும் எந்த செயலிலும், காரணம் இருக்கும் என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை' வேண்டும்.

இன்றைய நவீன காலத்தில், உலக விஷயங்கள் நம் கையில் கிடைக்கும் நிலையில், காரணங்கள், அர்த்தங்கள் புரிந்து கொள்வது எளிது.

இன்று புரியாமல் போனாலும்,  ஹிந்து தர்மம் சொல்லும் காரியங்களை நம்பிக்கையுடன் கடைபிடிக்க வேண்டும்.
விட்டு விட கூடாது.
அலட்சியம் செய்ய கூடாது.
செய்பவர்களை கேலி செய்ய கூடாது.

"சந்தியா வந்தனம்" என்பது ப்ராம்மணன்" கட்டாயம் செய்ய வேண்டிய கடமை என்று விதிக்கப்பட்டு உள்ளது.
எப்பொழுது 'விதிக்கப்பட்டதோ', அதை ப்ராம்மணன் மீறுவது சரியாக இருக்க முடியாது...

இன்று நமக்கு, சந்தியா வந்தனத்திற்கு அர்த்தம் புரியாமல் போனாலும், காரணம் புரியாமல் போனாலும்,
"காரணம் இல்லாமல், அர்த்தம் இல்லாமல் 'வேத வியாசர்' நமக்கு சொல்லி இருக்க மாட்டார்"
என்ற அளவிலாவது நமக்கு 'நம்பிக்கை, நம் ஹிந்து தர்மத்தில்' இருக்க வேண்டும்.

எந்த காரியத்தை செய்தாலும், அதில் உள்ள காரணம், அர்த்தங்கள் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

"சந்தியா வந்தனம் ஏன் செய்ய வேண்டும்? அதன் அர்த்தங்கள் என்ன?"
என்று வேத ப்ராம்மணர்கள், உண்மையான மகான்கள் மூலம் தெரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் உண்மையான 'ஸ்ரத்தை' (ஈடுபாடு) நமக்கு தானாக ஏற்படும்.

தவறான அர்த்தங்களும் பிறரால் சொல்லப்படலாம்.
அதனால் பல வேத ப்ராம்மணர்கள், மகான்களை அணுகி, சந்தேகம் தீரும் வரை விசாரங்கள் செய்து, அர்த்தங்களை, காரணங்களை தெரிந்து கொள்ள ஆர்வத்தை வளர்த்து கொள்ள வேண்டும்.

பொதுவாகவே, நாம் ஒன்றை தெளிவாக மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதாவது, "ஹிந்து தர்மத்தில் அர்த்தமில்லாத காரியங்கள் எதுவுமே கிடையாது. காரணம் இல்லாமல் எந்த செயலும் நமக்கு சொல்லப்படுவதில்லை"
என்று புரிந்து கொள்ள வேண்டும்.


குறைந்தபட்சம் இந்த அளவிலாவது நம் நம்பிக்கையை ஹிந்து தர்மத்தில் வைத்து இருக்க வேண்டும்.

'தெரிந்து கொள்ள வேண்டும்' என்கிற ஆர்வம் மட்டும் நமக்கு எப்பொழுதும் இருந்தால்,
தகுந்த நேரம் நமக்கு வரும்போது, பெரியோர்கள், மகான்கள் அதன் அர்த்தங்கள், காரணங்களை நமக்கு விளக்குவதை நம் வாழ்க்கையில் அனுபவிக்கலாம்.

வேதத்தை மனப்பாடம் செய்வதற்கே 12 வருடங்கள் ஆகிறது என்கிறார்கள்.

"வேதத்தின் அர்த்தம் முழுமையாக புரிந்தால் தான் வேதத்தை மனப்பாடம் செய்வேன்" என்று ஒருவன் சொன்னால், அவன் ஆயுள் முழுக்க செலவு செய்தாலும் வேதத்தை முழுக்க புரிந்து கொள்ள முடியாது.

ஹிந்து தர்மத்தில் சொல்லப்படும் 'எந்த காரியமும் அர்த்தம் உடையது தான் ' என்ற நம்பிக்கை இருப்பதால் தானே,
உலக ஆசைகளை விட்டு,
"12 வருடங்கள் கடுமையாக வேதத்தை மனப்பாடம் செய்கின்றனர்" வேதம் படிக்கும் பிராம்மண சிறுவர்கள்.
வேதம் உறுதியாக அவர்கள் மனதில் பதிந்த பின்,
வாழ்நாள் முழுவதும் அதன் அர்த்தங்களை, காரணங்களை அறிந்து, மேலும் மேலும் ஸ்ரத்தையை வளர்த்து வேதத்திற்காகவே வாழ்கின்றனர் 'வேதியர்கள்' என்று பார்க்கிறோம்.

புரிந்து கொண்டு சந்தியா வந்தனம் செய்தால், ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படுகிறது.
'கேசவ, நாராயண, மாதவா' என்று சொல்லும் போதே பஜனை செய்யும் ஆனந்தம் மகான்களுக்கு ஏற்படுகிறது.

அதே போல,
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில் என்ன செய்கிறோம்? என்று தெரிந்து கொள்வதால், ஆவணி அவிட்டத்தில் செய்யும் காரியங்களிலும் நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு விதிக்கப்பட்ட எந்த கடமையையும், புரியாமல் போனாலும் நம்பிக்கையுடன் செய்ய வேண்டும்.
காலம் கனியும் போது, அர்த்தங்கள் புரியும் போது நமக்கு மேலும் ஸ்ரத்தை (ஈடுபாடு) கூடலாம்.
காய்ச்சல் வந்தவனுக்கு, டாக்டர் ஒரு மாத்திரை தருகிறார்.

'அது என்ன மாத்திரை?
உடம்பு முழுக்க சூடாக கொதிக்கிறது. இந்த சின்ன மாத்திரை வாயில் போட்டால், உடல் முழுவதும் செல்லுமா?
இந்த மாத்திரை எப்படி உருவானது?
அது எப்படி என் காய்ச்சலை குணம்படுத்தும்?
என்று கேள்வி கேட்டு கொண்டே இருக்கலாம்.


டாக்டர் பதில் சொல்லி,
அந்த மருந்தை தயாரித்தவன் வந்து விளக்கி சொல்லி,
நம்பிக்கை ஏற்பட்ட பின்னர் கூட, உயிரோடு இருந்தால், அந்த மருந்தை எடுத்து கொள்ளலாம்.

மாறாக,
டாக்டர் மீது நம்பிக்கை கொண்டு,
அவர் கொடுக்கும் இந்த "மாத்திரைக்கு காய்ச்சலை சரி செய்யும் திறன் இருக்கும்" என்று நம்பிக்கையிலும் எடுத்து கொள்ளலாம்.
மருந்தை பற்றிய அறிவு 'நமக்கு இல்லாது' போனாலும்,
டாக்டர் மீது இருந்த நம்பிக்கையினால், அதை நாம் வாயில் போட்டு கொள்கிறோம்.

மருந்தின் மீது நம்பிக்கை நமக்கு இல்லாமல் போனாலும், மருந்து நம்மை காப்பாற்றி விடுகிறது.

"மாத்திரை" போன்றது "வேத மந்திரங்கள்".

இங்கு நமக்கு இருக்கும் டாக்டரோ "வேத வியாசர்".

4 வேதங்கள், சந்தியா வந்தனம் போன்ற மாத்திரைகளை,
வேத வியாசர் என்ற மருத்துவர், நமக்கு தந்து விட்டார்.

மாத்திரைகளின் (வேத மந்திரங்கள்) அர்த்தங்களையோ, காரணங்களையோ புரிந்து கொள்ள முடியாமல் போனாலும்,
வேத வ்யாஸரை என்ற மருத்துவரை நம்பி,
மாத்திரைகளை நாம் விழுங்கினாலேயே, அது அதன் பெருமைகளை காட்டும் என்கிறார்கள் மகான்கள்.

வயிறு குளிர்ந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் ஆசிர்வாதம் செய்தால், இன்று கூட பலிக்கும்.

வயிறு எரிந்து, வேதம் கற்ற ப்ராம்மணன் சபித்தால், இன்று கூட பலிக்கும்.
(வேதம் கற்ற பிராம்மணர்கள் என்று சொல்லும் போது, வேதம் கற்காத லௌகீக பிராம்மணன் என்று எடுத்துக்கொள்ள கூடாது.)
ஜூன் மாதம் வரை, தாங்க முடியாத வெயிலில் தவித்தது தமிழகம்.
ஆதி வரதர் ஜூலை மாதம் 2019ல் வெளி வர, வருண ஜபங்கள் வேத ப்ராம்மணர்கள் ஜபிக்க, வானம் மழை மேகத்துடன் திரண்டது..

வருண ஜபம் செய்து மழையா? என்று கேலி செய்தவர்கள் தலை குனிய, ஜூலை மாதத்தில் மழை கொட்டியதே..

ஜூன் மாதம் வரை தாங்க முடியாத வெயில், ஜூலை மாதத்தில் மழை. சென்னை மாகாணம் இது போன்ற மழையை கண்டதுண்டா?






வருண ஜபம் செய்தால் மழை பெய்யும் என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
உண்மையான வேதம் கற்ற ப்ராம்மணர்கள் சொன்னால், மழை வருகிறதே.. 
ப்ராம்மணர்கள் பிராம்மண குலத்தில் பிறந்ததால் மதிக்கப்படுவதில்லை.
ப்ராம்மணர்கள் வேதத்தை கற்றால், மதிக்கப்படுகிறார்கள்.

வேத மந்திரங்கள் மருந்து போன்றது.

அறிவியலால் இன்று வரை கொண்டு வர முடியாத மழையை, வருண ஜபம் செய்து வரவழைக்கும் வேதியர்களை நாம் மதிக்க வேண்டும்.

ஹிந்து தர்மத்தில் நமக்கு சொல்லப்பட்ட எந்த விஷயமும், கடுமையான ஆராய்ச்சி செய்து "ரிஷிகள் என்ற அந்தஸ்தை" பெற்ற மகான்கள் சொன்னது என்பதை நாம் மறக்க கூடாது..
"ரிஷி" என்ற பெயரை பெறுவதற்கு, விஸ்வாமித்திரர் எத்தனை பாடுபட்டார், எத்தனை வருடங்கள் தியானம் செய்தார் என்று பார்க்கும் போது புரிந்து கொள்ள முடியும்.

ஹிந்து தர்மத்தில் சொன்ன விஷயங்களை, மகத்தான பெருமைகள் கொண்ட ரிஷிகள் நமக்கு சொன்னார்கள்.

நமக்கு கிடைத்த அற்புதமான டாக்டர்கள் ரிஷிகள், என்பது ஒரு புறம் இருந்தாலும்,
இன்றைய காலத்தில், போலி மதங்கள் நுழைந்து விட்டதால்,
"போலி டாக்டர்களும் உண்டு" என்பதை மறந்து விட கூடாது.

போலி மதங்களில் உள்ள இவர்கள் கொடுக்கும் எந்த உபதேசமும், நமக்கு நன்மை தராது. மோக்ஷமும் கிடைக்க செய்யாது.
நாம் போலி டாக்டரிடம் சிக்கி விட கூடாது. 

உண்மையான அர்த்தம் தெரிந்தவர்கள் எங்கிருந்தாலும், அவர்களை தேடி சென்று, தெரிந்து கொள்ள ஆர்வம் நமக்கு வேண்டும்.
அப்படி இல்லாத பட்சத்தில், அர்த்தம் தெரிந்தவர்கள் எதேச்சையாக நமக்கு சொல்லும் வரை காத்து இருக்க வேண்டும்.

இன்றைய தேதியில் புரியாத காரணத்தால், எக்காரணம் கொண்டும், ஹிந்து தர்மங்களை நாம் விட்டு விட கூடாது..
கேலி செய்ய கூடாது.
"சந்தியா வந்தனம் செய்வது" ப்ராம்மணனுக்கு உள்ள கடமை.
எந்த காரியத்தை செய்தாலும், நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) இருக்க வேண்டும்.

ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும் போது தான், நாம் செய்யும் செயலை ஆர்வத்தோடு செய்ய முடியும்.


சந்தியா வந்தன அர்த்தமும், காரணமும் புரிந்து கொள்ளும் போது,
சந்தியா வந்தனம் செய்வதில் கூட நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
ஸ்ரத்தை (ஈடுபாடு) ஆர்வத்தை தூண்டும்.

நாம் செய்யும் காரியத்தில் உள்ள காரணமும் அதன் விளக்கமும் புரிந்து கொண்டாலேயே, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்பட்டு விடும்.

ஆவணி அவிட்டம் ஏன்?
என்ன காரணத்துக்காக செய்கிறோம்? என்று தெரிந்து கொள்ளும் போது, நமக்கு ஸ்ரத்தை (ஈடுபாடு) ஏற்படும்.
"ஆவணி அவிட்டம்" என்ற இந்த நாளில்,
பூணல் மாற்றி கொள்ளும் பழக்கம் அந்த காலங்களில் பொற்கொல்லனுக்கும் (goldsmith), சிற்பங்கள் செய்யும் ஸ்தபதிக்கும்(engineer) கூட இருந்தது.
இன்று கூட இவர்களில் பலர் பூணல் அணிந்து கொள்கின்றனர்.

"பிராமணன் மட்டும் பூணல் அணிகிறான்" என்று நினைக்க கூடாது.

பூணலை அறுத்தால், "ஹிந்துக்களின் தர்மத்தை ஒட்டு மொத்தமாக தாக்குகிறார்கள்" என்று தான் அர்த்தம்.

சுயமாக தொழில் செய்யும் அனைவரும் (வைசியன் business),
நாட்டை காக்கும் அனைவரும் (க்ஷத்ரிய)
பூணல் அணிந்து இருந்தனர்.
க்ஷத்ரியனாக அவதரித்த ராமர், கிருஷ்ணர் கூட பூணல் அணிந்து இருந்தார்.

பூணூல் என்றால் என்ன? மூன்று நூல்கள், ப்ரம்ம முடிச்சு எதற்கு? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

பிராம்மண ஜாதியை தவிர பிறர் ஜாதியில் பெரும்பாலானவர்கள் பூணல் அணிவதை இன்று விட்டு விட்டதால், 
ஆவணி அவிட்டம் என்றாலே "பழைய பூணலை கழட்டி, புது பூணல் அணிவது" என்று பிராம்மணர்களே நினைக்கும் அளவிற்கு ஆகி விட்டது.

இன்று கூட,
ஆவணி அவிட்டத்தில், ஸ்தபதி, பொற்கொல்லர் போன்ற ஒரு சிலர் புது பூணல் அணிந்து கொள்கின்றனர். ஆனால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்து விட்டனர்.
தங்கள் பழக்கத்தை விட்டு விட்டனர்.

வேத மந்திரங்கள் இல்லாமல் இருந்தாலும், பூணல் அணிந்து இருந்த இவர்கள், இன்று அணிவதில்லை.

இதனால், "பிராம்மணன் மட்டும் தான் பூணல் அணிகிறான்" என்று நினைப்பு பரவி விட்டது.

வேத மந்திரங்கள் இல்லாவிட்டாலும், ஆவணி அவிட்டம் நாளில், பொதுவாக இவர்கள் அனைவரும் புது பூணலை வேதம் அறிந்த ப்ராம்மணர்களிடம் வாங்கி கொண்டு மாற்றி கொள்வார்கள்.
இது ஒரு வழக்கமாக இருந்தது.

அன்றைய காலத்தில் "குரு  சிஷ்யன்" என்று சொல்லும் வழக்கம் இருந்தது..
குருவிலும் "போலி குரு" ஏற்பட்டதால், இன்று நல்ல குரு என்று பிரித்து காட்ட "ஸத் குரு" என்று சொல்லி உத்தம குருவை அடையாளம் காட்ட வேண்டி இருக்கிறது..

போலி மதங்களில் "மைக் எடுத்தவன் எல்லாம் ஸாது" என்று "போலி சாதுக்கள்" அதிகம் உருவான காரணத்தால்,
ஹிந்து மதத்தில் மெய் (உண்மையான) ஞானத்தை உபதேசிக்கும் குருவை "ஸத் குரு" என்று அடையாளப்படுத்த வேண்டிய காலம் வந்து விட்டது.

அதே போல,
அன்றைய காலங்களில், ப்ரம்மத்தை (பரமாத்மா வாசுதேவன்) வேதங்களால் உபாசனை செய்பவர்களை "ப்ராம்மணர்கள்" என்று மட்டும் தான் அறியப்பட்டார்கள்.

இன்று பல ப்ராம்மணர்கள் வேதத்தை கொண்டு பிரம்மத்தை உபாசிப்பதை விட்டு விட்டனர்.

இன்று, பல ப்ராம்மணரகள்

  • சூத்திர தொழில் செய்வதால் (employee),
  • ராணுவம், அரசியல், காவல் துறையிலும் வேலை செய்வதால்,
  • சுய தொழில், மருத்துவம் செய்வதால்,

அன்றைய காலத்தில் பயன்படுத்திய ப்ராம்மணன் என்ற சொல்லுக்கு மரியாதை தேய்கிறது.
இதை சமாளிக்க,
வேதத்தை விட்ட இவர்களை "லௌகீக ப்ராம்மணன்" என்றும்,
வேதத்தை இன்றும் உபாசிக்கும் ப்ராம்மணர்களை "வேத பிராமணன்" என்றும் அடையாள படுத்த வேண்டி இருக்கிறது.
வேத ப்ராம்மணர்கள் இன்று வரை மடிசார் (பெண்கள்), பஞ்சகஜம், குடுமி (ஆண்கள்) என்று வெளி வேஷத்தில் ஆரம்பித்து, தான் செய்யும் தொழிலும் வேதம் சம்பந்தப்பட்டதாகவே அமைத்து கொண்டு, அரசாங்க உதவிகள் இல்லாத நிலையிலும், வேதம் ஓதுவதால் கிடைக்கும் பணத்தை கொண்டு தங்கள் குடும்பத்தை முடிந்தவரை தர்மத்தில் வைத்து கொண்டு இன்று வரை வாழ்கின்றனர்.

வேதத்தை விட்டு விட்டு வைசியன், சூத்திரன், க்ஷத்ரியன் என்று ஆன லௌகீக ப்ராம்மணர்கள் வேதத்தை விட்டாலும், சந்தியா வந்தனம் செய்ய உரிமை உள்ளவர்கள். கடமையும் கூட.

அன்றைய காலத்தில் வைசியன், க்ஷத்ரியர்கள் கூட சந்தியா வந்தனம் (prayer) என்ற கடமையை செய்தனர்.

சந்தியா வந்தனத்திலும் வேத மந்திரங்கள் உண்டு.

"உபாகர்மா" என்று அழைக்கப்படும் இந்த ஆவணி அவிட்ட நாளில்,
வேத ப்ராம்மணர்கள், "தாங்கள் ஒரு வருடங்களாக தினமும் ஓதி வந்த வேத மந்திரத்துக்கு மீண்டும் ஒரு சக்தியை ஊட்டுகிறார்கள்".

வேத ப்ராம்மணர்கள், மற்ற ஜாதியினருக்கும், லௌகீக ப்ராம்மணர்களுக்கும் தங்கள் கையால் பூணல் கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர்.
இதனால், நாம் செய்யும் சந்தியா வந்தனம் போன்ற கடமைகளில் உள்ள மந்திரங்கள் மீண்டும் சக்தி பெற்று விடுகிறது"

"உப" என்றால் அருகில், கூடுதலாக என்ற அர்த்தம் கொள்ளலாம்.
"கர்மா" என்றால் செயல்.

ஒரு வருட காலத்தில் மந்திரங்கள் அதன் சக்தியை இழந்து இருப்பதால், அந்த மந்திரங்களின் வீரியத்தை மீண்டும் தூண்டி விட, இந்த "உபாகர்மா" மூலம் மீண்டும் மந்திரங்கள் பிரகாசம் அடைகின்றன என்று சொல்லப்படுகிறது.

வேத மந்திரங்கள் உண்மையில் சக்தியை இழப்பதில்லை.
வேத மந்திரங்கள் சுயமே ப்ரகாசமானது. சக்தி கொண்டது.
அந்த மந்திரங்களை வேத ப்ராம்மணனும் உச்சரிக்கிறான்.
அந்த வேத மந்திரங்களை லௌகீக ப்ராம்மணனும், சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மாவை செய்வதன் மூலம் உச்சரிக்கிறான்.

சுயம் பிரகாசமான வேத மந்திரங்கள், தெய்வங்களை ஆகர்ஷிக்கும் வேத மந்திரங்களை, நம் 'எச்சில் வாயால்' சொல்ல வேண்டி இருப்பதால்,
அந்த அசுத்தத்தை நீக்கி மீண்டும் வேத மந்திரத்தின் வீரியம் நமக்கு ஏற்படுவதற்காக செய்யப்படுவதே "உபாகர்மா".
வீட்டுக்கு நல்ல பெயிண்ட் அடித்தும், ஒரு வருடம் ஆனதால், தூசி படிந்து விட்டது.
அந்த தூசியை தட்டி கொஞ்சம், அலங்காரம் செய்து விட்டால், மீண்டும் ப்ளீச் என்று ஆகி விடுவது போல, இந்த "உபாகர்மாவை" ப்ராம்மணர்கள் வேதத்துக்கு ஒரு அலங்காரமாக செய்து கொள்கிறோம்.
"ஆவணி அவிட்டம்" அன்று வேத ப்ராம்மணர்கள் கையால் பூணல் வாங்கி கொண்டு, சங்கல்பம் செய்து கொண்டு,
வேத மந்திரத்துடன் பழைய பூணலை கழட்டி, புது பூணலை மாட்டி கொண்டு, வேத ஆரம்ப மந்திரங்களை சொல்லி உபாகர்மாவை செய்கிறோம்.
அடுத்த நாள் ஏனோதானோவென்று, விளையாட்டாக சந்தியா வந்தனம் செய்தாலும் மந்திரங்கள் உடனே அதன் பலன்களை தரும்.

புதிதாக பூணல் போட்டு கொண்டு வேதங்கள் கற்க ஆரம்பிக்கும் நாளாகவும் ஆவணி அவிட்டம் உள்ளது.

வெயிலில் காய வைத்த தீப்பெட்டியை, 'லேசாக' உரசினால் கூட தீ பற்றி கொள்ளும்.
உபாகர்மா வருடா வருடம் செய்து கொள்வதால், மந்திரங்கள் அதன் சக்தியை பிரகாசமாக காட்டுகின்றன.
சந்தியா வந்தனத்தில் உள்ள ஒவ்வொரு மந்திரமும் பொலிவை பெறுவதால், அரைகுறையாக சொன்னாலும், அதன் பலன்களை காட்டும்.


உபாகர்மா செய்யாமல், தானாக நூல் தானே என்று மாட்டி கொண்டால், மழையில் நனைந்த தீப்பெட்டியை, எத்தனை முறை உரசினாலும் ப்ரயோஜனப்படாதது போல, நாம் ஜபிக்கும் மந்திரங்கள் சக்தி அற்று நிற்கும்.
"ஓம் நமோ நாராயணா", "ஓம் நம சிவாய" போன்ற மந்திரங்கள் யாவருக்கும் பொதுவானது. மகா சக்தி வாய்ந்தது.

நம் எச்சில் வாயால் இறைவன் திருநாமங்களை நாம் உச்சரிக்கிறோம்.
அனைவருக்கும் 'மந்திரங்கள் தீப்பொறி போல பலன் கொடுக்கும்' என்பதாலேயே, ஹிந்துக்கள் அனைவரும் பூணல் அணியும் பழக்கம் கொண்டிருந்தனர். ஆவணி அவிட்டம் அன்று அவர்களும் பூணல் மாற்றிக்கொண்டனர்.

தெய்வங்களை மறந்தோம்.
நம் பழக்கங்களை விட்டோம்.
நம சிவாய என்று மந்திரங்கள் சொல்வதை விட்டோம்.
மந்திரங்கள் வீரியம் நம் எச்சில் வாயால் மந்தமாக கூடாதே என்று வேத ப்ராம்மணர்கள் கையால் ஒரு சிறு பூணல் வாங்கி போட்டு கொள்ள மறந்தோம்.
இன்று வேத ப்ராம்மணர்களை மதிக்க மறந்து, தெய்வங்கள் நாம் கூப்பிட்டால் உதவி செய்ய காத்து இருந்தும், அனாதைகளாக திரிகிறோம்.

மீண்டும் மந்திரங்கள் சக்தி பெற, நாம் சொன்னாலும் பலிக்க, ஆவணி அவிட்டம் என்ற நாளில் உபாகர்மாவை செய்து, புது பூணல் அணிந்து கொள்வோம்.

ஹிந்துக்கள் அனைவரும் பூணல் ஏன் அணிந்து இருந்தார்கள்? என்ற ரகசியத்தை உணர்ந்து, வேத மந்திரங்கள் மூலம் அற்புதங்கள் நிகழ்வதை நம்வாழ்வில் காண்போம்.

"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரம் அனைவரும் ஒரு குருவின் மூலம் உபதேசம் பெற்று சொல்லலாம்.
இதன் அற்புத விளக்கம் இதோ...

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க் நம் குரு.
வாழ்க நம் ரிஷிகள்.
வாழ்க வேதியர்கள்.
வாழ்க ஹிந்து தர்மம்.



Wednesday 24 July 2019

பரிகாரம் செய்தும், துன்பங்கள் வருவது ஏன்?

டாக்டரை பார்க்க சென்றான் ஒரு நோயாளி .

டாக்டரை பார்த்து
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்? என்று கேட்டான்.
தான் நலம் விசாரிக்க வேண்டி இருக்க, இவன் தன்னை நலம் விசாரிப்பதை பார்த்து, டாக்டருக்கே சிரிப்பு வந்து விட்டது.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் டாக்டரும் சங்கடப்பட்டார்.





யாரிடம் நலம் விஜாரிக்கிறோம் என்று கூட அறியாமல் கேட்கிறானே, 'பாவம்' என்று நினைத்தார் டாக்டர்.
உண்மையில்,
நாம் டாக்டரை பார்க்கும் போது, "டாக்டர், நான் ஆரோக்கியமாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால்,
அந்த டாக்டரும், "சரி" என்று சுதந்திரமாக சிகிச்சையோ, சரியான ஆலோசனையோ சொல்வார்.

அதே போல,
நாம் தெய்வத்தையோ, மகானையோ, ஒரு ஞானியையோ பார்க்கும் போது,
"நீங்கள் சௌக்கியமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று கேட்டால், மகான்களும், தெய்வமும் அஞானத்தால் கேட்பவனை கண்டு மந்தஹாசம் செய்வார்கள்.
அஞானியாக இருக்கும் நாம், "நான் ஆரோக்கியமாக, நன்றாக இருக்க நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று கேட்டால், சுதந்திரமாக, நமக்கு உதவி செய்ய முன் வருவார்.

ஒருவன் டாக்டரிடம் சென்று தனக்கு உள்ள நோயை குணப்படுத்த கேட்டான்.

பரிசோதித்த டாக்டர்,
"ஒரு  ஆப்பரேஷன் செய்ய வேண்டும். ஆப்பரேஷன் நல்ல படியாக முடிந்தால் உயிர் பிழைக்கும், 
ஒருவேளை தவறானால், உயிர் போகவும் வாய்ப்பு உள்ளது. 
ஆப்பரேஷன் முடிந்து 3 மாதங்கள் படுத்த படுக்கையாக தான் இருக்க வேண்டி இருக்கும். அதற்கு பின் உடல் சரியாகி விடும்" என்று சொல்லி,
"சரி என்றால் கையெழுத்து போடு" என்று கேட்டார்.
அவனும், 'டாக்டர், நீங்கள் என் உடம்பை கிழித்து ஆப்பரேஷன் செய்யுங்கள். 
இதனால் ஏற்படும் வலியை பல மாதங்கள் ஆனாலும் நான் பொறுத்துக்கொள்கிறேன். 
நீங்கள் என் உடலை கிழித்து ஆப்பரேஷன் செய்வதற்கு, உங்களுக்கு பணமும் தருகிறேன். மேலும், 
ஆப்பரேஷன் fail ஆனால் கூட, நீங்கள் காரணமில்லை என்று  கையெழுத்து கூட போடுகிறேன். காரணம், 
உங்கள் மேல் அவ்வளவு நம்பிக்கை" என்றான்.


அதே போல,
நாமும் தெய்வத்திடம் அந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டு, கையெழுத்து போட்டு தன்னை ஒப்படைத்து விட வேண்டும்.
டாக்டர் செய்த ஆப்பரேஷன் கூட fail ஆகலாம் என்று சொல்ல வாய்ப்பு உண்டு.
ஆனால், பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்தவன் தோற்றதே கிடையாது.

ஆப்பரேஷன் செய்து நோய் குணமாகும் வரை, நமக்கு ஏற்படும் தற்காலிக சங்கடங்கள் போல,  
பெருமாளிடம் தன்னை  ஒப்படைத்த பின், நம் நன்மைக்காக அவர் செய்யும் ஆப்பரேஷனால் ஏற்படும் துன்பம் கூட, ஒரு காரணத்துக்காகவே, தற்காலிக துன்பமே என்று நாம் உணர வேண்டும். அவ்வப்போது வரும் கஷ்டங்கள் தானாகவே பனி போல விலகி விடும்.

மகான்களும் தங்கள் வாழ்வில் ஏற்படும் துன்ப காலத்தை இந்த ஞானத்தினால் உணர்ந்து, துன்ப காலத்தை தைரியம் இழக்காமல் கழிக்கின்றனர்.

"இன்பமும், துன்பமும் தெய்வ இஷ்டம்" என்று இருந்தால், ஸ்ரீக்ருஷ்ணரே நம் குடும்ப பொறுப்பை சேர்த்து நிர்வாகிப்பார்.

சம்சார சூழலில் சிக்கி நோய்வாய்ப்பட்டு இருக்கும் நாம், நாராயணன் (தன்வந்திரி) என்ற வைத்தியரிடம் தன்னை ஒப்படைத்து விட்டால், அந்த வைத்தியரே சரியான சிகிச்சை செய்து, மோக்ஷம் என்ற ஆனந்தம் வரை கிடைக்க செய்திடுவார்..


வாழ்க ஹிந்துக்கள்.. வாழ்க ஹிந்து தர்மம்..

குருவே துணை.  



Saturday 6 July 2019

கோவில்கள் எதற்கு? கோபுரங்களில் சில சிலைகள் ஏன் காமத்தை தூண்டும் விதமாக செதுக்கப்பட்டது? ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

"தியானம் செய்வது, ஜபம் செய்வது" முக்கிய கடமையாக அந்நிய மதத்தினர்களுக்கு சொல்லப்படுகிறது.
.


மாதா கோவில்களில் "ஜபம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த ஜபம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.

மசூதிகளில் "தியானம்" முக்கியம் என்று சொல்கிறார்கள்.
ஏதோ அவர்களுக்கு தெரிந்த தியானம் செய்கிறார்கள். அவர்கள் அவர்கள் மதத்தில் இருக்கிறார்கள்.
"கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமையாக சொல்லப்படுகிறது.

  • கோவில்  உத்சவங்கள் நடந்த வரை, 
  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை,

ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
இன்று,

  • கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொள்ளாமல் இருப்பதாலும்,
  • கோவிலில் உத்சவங்கள் நடக்காமல் இருந்தால், அதை நடத்த முயற்சி செய்யாமல் இருப்பதாலும்,

ஹிந்துக்கள் அழிந்து கொண்டு இருக்கின்றோம். இது ஹிந்துக்களுக்கு பேராபத்து.

ஹிந்துக்கள் "ஹிந்துக்களாக இருக்க வேண்டும்" என்றால், நாம் கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்ய வேண்டும்.

"உத்சவங்கள் நடத்துவதற்காக" தான், ஹிந்து கோவில்கள் அரசர்களால் அமைக்கப்பட்டன.
"தியானம்", "ஜபம்" செய்வதற்காக கோவில்கள் அமைக்கப்படவில்லை.

ஹிந்து தர்மத்தின் நோக்கம், நம் அனைவருக்கும் "தெய்வ சிந்தனையை" ஏற்பட செய்வது தான்.

தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'ஜபமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'தியானமும்' சொல்லப்படுகிறது.
தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு 'புராணங்கள், இதிகாசங்கள், பகவத் கீதை, பாசுரங்கள், பிரபந்தங்கள்' உள்ளது.
ஆனால் இவை அனைத்துக்கும், சில தகுதிகள் தேவைப்படுகிறது.

தியானம் செய்து தெய்வ அனுபவம் ஏற்பட, நமக்கு "வைராக்யம்" வேண்டும்.

உலக ஆசையில் வெறுப்பும், தெய்வத்தை அடைவதில் ஆர்வமும் இருந்தால், தியானம் ஸித்திக்கும்.

யோகத்தை உலகுக்கு கற்றுக்கொடுத்து,
தியானம் எப்படி செய்ய வேண்டும்? என்று சொல்லி கொடுத்து, கூடவே "ஓம்" என்று ஜபமும் 'செய்'
என்று சொல்லி கொடுத்ததே, ஹிந்துக்கள் தானே.


நம்மிடம் இல்லாத விஷயங்கள் பிறரிடம் இல்லை.
நம்மிடம் பிச்சை வாங்கித்தான் அனைவரும் பிழைக்கின்றனர்.
இல்லாதவர்கள் பொறாமைப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  அவ்வளவு தான்.
ஹிந்துக்களின் பெருமையை ஹிந்துக்கள் உணர வேண்டும்.

தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் கூட தேவைப்படவில்லை..
ஆழ்வார்களில், நம்மாழ்வார் கோவிலுக்கு சென்றதே இல்லை.
நம்மாழ்வார் தியானத்திலேயே ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளையும் தரிசனம் பெற்று இருந்தார்.
ஒவ்வொரு திவ்ய தேச பெருமாளும் இவர் இதயத்துக்குள் வந்து தரிசனம் தந்தனர். நமக்கு திவ்ய தேச பாசுரங்கள் கிடைத்தது.
தியானம் செய்ய சக்தி உள்ளவர்களுக்கு, தியானத்தின் மூலம் தெய்வ சிந்தனை ஏற்படுகிறது.

தியானம் மூலம், பெருமாளை தன் இதயத்தில் தரிசனம் செய்யும் திறன் உள்ளவர்களுக்கு, கோவில் தேவை இல்லை.
தியானம் செய்ய கோவில்கள் கட்டப்படவில்லை. தியான மண்டபம் தனியாக உள்ளது.

புலன்கள் அடங்காதவர்கள் தியானம் செய்தும், ஜபம் செய்தும், புராணங்கள் படித்தும் தெய்வ சிந்தனை எளிதில் ஏற்படாது.

கோடிக்கணக்கான மக்களுக்கு, புலன் அடக்கம் கிடையாது. உலக நாட்டமும் அதிகம்.
இவர்களுக்கும் வழி காட்டுவதே நம் "ஹிந்து மதத்தின் நோக்கம்". 
இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட வழி காட்டுவதே நம் ஹிந்து மதத்தின் நோக்கம்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு,

  • வித விதமாக சாப்பிடுவதில் ஆர்வம் (நாக்கு) உள்ளது,
  • வித விதமான காட்சிகளை பார்ப்பதில் ஆர்வம் (கண்) உள்ளது,
  • வித விதமான நறுமணங்கள் நுகர்வதில் ஆர்வம் (மூக்கு) உள்ளது,
  • வித விதமான இசைகளை கேட்க ஆர்வம் (காது) உள்ளது,

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, 'நம்மாழவார் போல தியானம் செய்' என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

இப்படி புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் கோடிக்கணக்கான மக்களை பார்த்து, "கோடி ராம ஜபம் செய்" என்று சொன்னாலும், செய்ய மாட்டார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தெய்வ சிந்தனை ஏற்பட செய்வற்கே 'கோவில் உத்சவங்கள்'.

தியானம் செய்ய கோவில்கள் இல்லை.






முனிவர்களும், ரிஷிகளும், தியானம் செய்ய காட்டிற்கு தான் சென்றனர். தனிமையை தான் விரும்பினர். கோவிலுக்கு செல்லவில்லை.
தியானத்திற்கு தனிமை அவசியம். 

இத்தனை பெரிய கோவில்கள் நம் அரசர்கள் கட்டி, 
நான்கு வீதிகள் அமைத்தது, தியானம் செய்ய இல்லை. 
கோவிலில் உத்சவங்கள் செய்வதற்கே.
இதை ஹிந்துக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கும், தன் தரிசனத்தை எப்படியாவது கொடுத்து, தெய்வ பக்தியை கொடுப்பதற்காக தான், நம் தெய்வங்கள் கோவிலில் வீற்று இருக்கிறார்கள்.

புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை  கொடுக்க நம் ஹிந்து தெய்வங்கள் காத்து இருந்தாலும், இவர்கள் கோவிலுக்கு வர  வேண்டுமே?
தான் கோவில் கர்பக்ரஹத்திலேயே இருந்தால் சரி வராது என்று தான், அம்மன் வீதி உலா, பெருமாள் புறப்பாடு, சிவபெருமான் புறப்பாடு, கந்தன் புறப்பாடு என்று, நம் தெய்வங்கள், கோவிலை விட்டு தானே வெளியே வந்து, புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களுக்கு தன் தரிசனத்திதை கிடைக்க செய்கின்றனர்.

வீதியில் வரும் பெருமாளை, நாத்தீகனும் பார்க்கிறான், புலன் அடங்காதவனும் பார்க்கிறான்.

வீதியில் உலா வரும் தெய்வத்தை நாம் பார்க்கிறாமோ இல்லையோ, தெய்வங்கள் நம் அனைவரையும் பார்த்து விடுவதால், நம்மை அறியாமலேயே நமக்கு தெய்வ சிந்தனை விதைக்கப்படுகிறது.

ஹிந்து மதத்தின் நோக்கமே நம் அனைவருக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்வது தான்.

தன் தரிசனத்தை கொடுத்து, நம் மன அழுக்கை நீக்கி, புலன்களில் வீழ்ந்து கிடைக்கும் நமக்கும் தெய்வ சிந்தனை கொடுக்கவே, கோவிலில் தெய்வங்கள் குடி கொண்டு உள்ளனர்.
தியானத்திலும், ஜபத்திலும் ஸித்தி அடைந்த ரிஷிகளும், முனிகளும், மகான்களும், ஞானிகளும்,
நமக்காக பகவானை பிரார்த்தனை செய்து, அவரை சாநித்யம் குறையாமல் தான் தரிசித்த இடத்திலேயே இருக்க செய்து, அங்கு ஒரு கோவில் அமைத்து, அந்த பெருமாளுக்கு உத்சவங்கள் செய்ய சொல்லி, நமக்கு தந்து விட்டு சென்றனர்.


புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களை, கோவிலுக்குள் வரவழைத்து தன் தரிசனத்தை எப்படி தருவார் பெருமாள்?
கோவிலுக்கு வந்தால் தானே, சிவனோ, பெருமாளோ, அம்மனோ  தன் தரிசனத்தை தர முடியும் !!

தெய்வ தரிசனம் பெற்றால் தானே நம் மன அழுக்குகள் நீங்கும்..
தெய்வ சிந்தனை ஏற்படும்...சித்தம் சுத்தி ஆகும்.. ஞானம் கிடைக்கும் !

இவர்களையும் இழுப்பதற்கே, கோவில் உத்சவங்கள்.. 
கோவிலில் தெய்வ விக்ரகங்களுக்கு செய்யப்படும் ஆராதனைகள், பூஜை, அபிஷேகம், தேர் இழுத்தல், வான வேடிக்கை, இசை, நடனம், நாட்டியம், சிற்பம், யாகங்கள், பிரசாத விநியோகம் எல்லாம், புலன்கள் அடங்காத கோடிக்கணக்கான மக்களையும் இழுத்து, தெய்வத்தின் முன் நிறுத்தத்தான்.

யோகாவினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
தியானத்தால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஜபத்தினால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ப்ரவசனங்களால், உபன்யாசங்களால் சேர்க்க முடியாத மக்கள் கூட்டத்தை,
ஒரே ஒரு கோவில் திருவிழா மூலம் கோடிக்கணக்கான மக்களை கூட்ட முடிகிறது.
ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.

மீனாக்ஷி திருக்கல்யாணம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, மீனாக்ஷி இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அண்ணாமலை தீபம் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை, சிவபெருமான் இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

அழகர் ஆற்றில் இறங்குகிறார் என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறார் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

சமயபுர மாரியம்மனுக்கு திருவிழா என்றால், எத்தனை  கோடிக்கணக்கான மக்களை இழுக்கிறாள் என்று கண்கூடாக பார்க்கிறோம்..

ஹிந்துக்களை ஹிந்துக்களாக வைத்து இருப்பது கோவில் உத்சவங்களே என்பதை யாரும் மறக்க கூடாது.

புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் கோடிக்கணக்கான மக்களுக்காக தான், கோவில் திருவிழாக்கள், ஆராதனைகள் எல்லாம் நடத்தப்படுகிறது.

இவர்கள் அனைவரையும் எப்படியாவது கோவிலுக்குள் இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து, பக்தியை ஊட்டி, ஞானத்தை கொடுக்க நம் தெய்வங்கள் காத்து இருக்கிறார்கள்.
நம் தெய்வங்கள் எத்தனை கருணை கொண்டு இருக்கிறார்கள் என்று, நாம் உணர்ந்து கொண்டாலே போதும்.


"'காதுக்கு நல்ல பாட்டு கச்சேரி கேட்க தான், எனக்கு ரொம்ப பிடிக்கும்'
என்று ஒலியில் (சப்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் கச்சேரி வைக்கிறேன். இங்கேயே வந்து கேள்.
பல வித வாத்தியங்கள், பல அற்புதமான பாடகர்கள் எல்லோரும் வந்து கோவிலில் கச்சேரி செய்வார்கள்.
இங்கேயே உட்கார்ந்து கேட்டு கொண்டிரு."
என்று இழுக்கிறது நம் கோவில்கள்.
யாரோ பெரிய பாடகர் வந்து பாடுகிறாராம் என்று, பாட்டு கேட்கும் ஆசையில் வருபவன், "சரி அப்படியே கர்பக்ரஹத்தில் உள்ள ஸ்வாமியையும் பார்த்து விட்டு செல்வோம்" என்று தரிசனம் செய்து விடுவான்.

புலனிகளில் விழுந்து கிடைக்கும் இவனுக்கு,
நல்ல கச்சேரி கேட்க செய்வது போல செய்து, கோவிலுக்கு வர செய்து, தன் தரிசனத்தை கொடுத்து, தன் தரிசனத்தாலேயே அவனுக்குள் இருந்த மன அழுக்குகளை நீங்க செய்து, தெய்வ சிந்தனை கிடைக்க செய்து, ஞானத்தை கொடுத்து, தன் பக்தனாக்கி, சகல சுகங்களும் கிடைக்க அருள் செய்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு சாப்பிட பிடிக்கும்' என்று சுவையில் (ரஸம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை. கோவிலுக்கு வா.
கோவிலில் அருமையான நெய் சொட்ட சொட்ட உனக்கு சாப்பிட பிரசாதங்கள் கிடைக்க செய்கிறேன்.
கோவில் விழா சமயத்தில் பல விதமான பானங்கள் (மோர், பானகம்), கல்யாண விருந்து போட்டு சாப்பிட செய்கிறேன்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
"'எனக்கு பார்க்க அழகான காட்சிகள் தான் பிடிக்கும்'
என்று பார்வையில் (ரூபம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கட்டாயம் கோவிலுக்கு வா.
தினசரி பெருமாளுக்கு ஒவ்வொரு அலங்காரம் செய்கிறேன். பார்.
கண்ணுக்கு வித வித அலங்காரம் பார்க்க கிடைக்கும்.
கோவிலில் உத்சவங்கள் நடக்கும் போது, கோவிலே அலங்கார விளக்குகளால், பூக்களால் நிரப்பப்பட்டு, கண்ணுக்கு ஆனந்தம் தரும்.
இங்கேயே உட்கார்ந்து கொண்டிரு."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

அதே போல,
'எனக்கு நல்ல வாசனை பிடிக்கும்' என்று நுகருதலுக்கு (கந்தம்) மயக்கமுற்று இருக்கிறாயா?
கவலையே இல்லை.
கோவிலில் தூபம், ஊதுபத்தி என்று வாசனை பொருட்களை ஏற்றி வைக்கிறேன்.
பூக்களின் சுகந்தமும் சேர்ந்து கோவிலே கமகமக்க செய்கிறேன். கோவிலுக்கு வா. இங்கேயே நீ அதை அனுபவிக்கலாம்."
என்று நம்மை நம் போக்கிலேயே சென்று, கோவிலுக்கு இழுத்து, தன் தரிசனத்தை கொடுத்து விடுகிறார்கள் நம் தெய்வங்கள்.

புலன் அடக்கம் இன்றி, காமத்தை அடக்க முடியாதவர்களையும் நம் ஹிந்து மதம் விட்டு விடுவதில்லை.
அவர்களுக்காக கோவில் கோபுரங்களில் கேளிக்கை நிறைந்த சிலைகள், சில ஆபாசமான சிலைகள் கூட கோபுரங்களில் செதுக்கி வைத்து இருப்பார்கள்.
காம சுகத்திலேயே சிக்கி உள்ள இது போன்ற மனிதர்களும், இது போன்ற சிலைகளை பார்ப்பதற்கென்றே கோவிலுக்கு வருவார்கள்.
"ஹாய்.. ஒய்" என்று கோவில் கோபுரத்தில் இருக்கும் சிலைகளை பார்த்து சிரித்து கொண்டே புலன்கள் அடங்காத இவர்கள், கோவிலுக்கு உள்ளேயும் இப்படி தான் இருக்குமோ? என்று நினைத்து வந்து, கடைசியில் பெருமாளை தரிசித்து விட்டு சென்று விடுவார்கள்.

"தன் தரிசனத்தை இது போன்ற ஆசாமிகளுக்கும் கொடுத்து", நாளடைவில் இவர்களுக்கும் தெய்வ சிந்தனை ஏற்பட செய்து, கடைசியில் மோக்ஷத்திற்கான சாவியை கொடுத்து விடுகிறார் பெருமாள்.
தெய்வ சிந்தனை ஏற்பட,
தியானம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும், ஜபம் செய்பவர்கள் தனியாக செய்யட்டும்.. புராணங்கள் படிப்பவர்கள் தனியாக படிக்கட்டும்,,,

நம் ஹிந்துக்களுக்கு, தெய்வ சிந்தனை ஏற்பட, நமக்கு கொடுக்கப்பட்ட கடமை "கோவிலில் உத்சவங்கள் நடக்க செய்து, நாம் கலந்து கொள்வதே.."

'கோவில் திருவிழாக்களில் கலந்து கொண்டு, கோவிலில் உள்ள தெய்வத்தை நாம் தரிசித்து கொண்டு இருந்தாலே' நமக்கு எல்லா நன்மைகளும் தெய்வ அருளாலேயே ஏற்படும்.

காஞ்சியில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு பிறகு வருகிறார்  என்று கேள்விப்பட்டதும், ஹிந்துக்கள் கூடியதை பாருங்கள்.. இதை விட சான்று வேண்டுமா, ஹிந்துக்களை கோவில்களே காக்கிறது என்பதை...




ஹிந்துக்கள் மறக்க கூடாத சில விஷயங்கள் :

  1. "கோவில்களில் உத்சவங்கள் நடத்துவது தான்" ஹிந்துக்களுக்கு முக்கிய கடமை.
  2. கோவில் உத்சவங்கள் நடந்த வரை, கோவில் உத்சவங்களில் நாம் கலந்து கொண்டு இருந்த வரை, ஹிந்துக்கள் ஹிந்துக்களாகவே இருந்தோம்.
  3. கோவில் திருவிழாக்கள் ஒவ்வொரு மாதமும் நடக்க செய்ய வேண்டும்.
  4. கோவில் திருவிழாக்கள் நின்று போன கோவில்களை, ஹிந்துக்கள் சேர்ந்து கொண்டு முயற்சி செய்து மீண்டும் விழாக்களை நடத்த வேண்டும். பணம் படைத்தவர்கள் பொருள் உதவி செய்ய வேண்டும்.  உடலாலும்  தன்னால் முடிந்த உதவி செய்ய வேண்டும்.
  5. கோவிலை சுற்றி உள்ள நான்கு வீதிகள் வரை, நிலங்களையோ, வீடுகளையோ, ஹிந்துக்களுக்கு மட்டுமே விற்க வேண்டும். பணத்திற்காக ஆசைப்பட்டு, பிற மதத்தினருக்கு விற்றால், கோவில் உத்சவங்கள் நின்று போகும். நம் தெய்வங்கள் மீது பொறாமை கொண்டு விழாக்கள் நடக்க விடாமல் செய்து விடுவார்கள். நம்மால் கோவில்கள் அழிந்த பாவத்தை நாம் சுமக்க கூடாது.
  6. ஹிந்துக்கள் ஹிந்துக்களாக வாழ, ஹிந்துக்கள் கோவில் திரு விழாக்கள், பண்டிகைகள் அனைத்திலும் கலந்து கொள்ள வேண்டும்.


வாழ்க ஹிந்துக்கள் 


Sunday 28 April 2019

கண்ணன், மாடு மேய்க்க ஏன் ஆசைப்பட்டார்? நெய்வேத்தியம் காட்டிவிட்டு சாப்பிட்டால் குறைந்து விடுவோமா? நன்றி உணர்ச்சி என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே..





அனைத்து உலகங்களையும், ஜீவராசிகளையும்  'வைகுண்ட'த்தில் இருந்து மேய்த்துக்கொண்டு இருக்கும் ஸ்ரீமந் நாராயணன்,
ப்ரம்மா முதல் சிறு ஜீவராசிகள் வரை ரக்ஷித்துக்கொண்டிருக்கிறார்.
'உலகையே ஆளும் சர்வேஸ்வரன்' என்ற பெருமையை காட்டிலும்,
தன்னை ஒரு மாடு மேய்க்கும், ராஜகோபாலனாக அடையாளப்படுத்தி கொள்ளவே மிகவும் விரும்பினாராம் பரமாத்மா. அது ஏன்?
மக்களையும், உலகங்களையும் மேய்க்கும் எம்பெருமான், தேவர்களும், ரிஷிகளும் வியக்க, ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்யும் போது, 'தான் மாடு மேய்க்கலாம்' என்று வந்து விட்டார்.



பரமாத்மா மாடு மேய்க்க ஆசைப்பட்டார் என்றால், பசுமாட்டுக்கு அப்படி என்ன விசேஷத்தை பரமாத்மா கண்டார்?
உலகையே மேய்க்கும் சக்தி வாய்ந்த பரமாத்மா நாராயணனுக்கு, மாட்டின் மேல் மட்டும், அத்தனை தனிப்பட்ட பிரியம், ஏன் உண்டாயிற்று?

"நாராயணா..., வாசுதேவா..."
என்ற பெயர்கள் சொல்லி அழைப்பதை விட,
"கோவிந்தா.., கோபாலா..."
என்று தன்னை பக்தர்கள் அழைப்பதையே விரும்பினாராம். ஏன்?
திருப்பதியில் அனைவரின் வாயிலும் "கோவிந்த" நாமமே எங்கும் ஒலிக்கிறது.



மாடு மேய்ப்பதை மனமுவந்து ஏற்று, ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார். மாடு மேய்க்கும் கண்ணனாக இருந்தார்.

உலகையே காத்து ரக்ஷிக்கும் எம்பெருமானிடம்,
"நம்மை பகவான் நாராயணன் அல்லவோ ரக்ஷிக்கிறார்!!"
என்ற 'நன்றி உணர்வு இல்லாமல்' நாம் இருக்க,
எம்பெருமான் உலகையே மேய்ப்பதை காட்டிலும், ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் தன் தனிப்பட்ட விருப்பமாக மாடு மேய்க்கலாம் என்று அவதாரம் செய்ய வந்து விட்டாராம்.

மாட்டுக்கு ஒரு "விசேஷ குணம்" உண்டு.
ஜீவனுக்கு 'உடல்' கொடுத்து,
'புத்தி' கொடுத்து,
திடமான 'மனம்' கொடுத்து,
வாழ்வதற்கு 'பூமி'யும், 'ஆகாரமும்' கொடுத்து,
பேராபத்துக்கள் வராமல் இருக்க பஞ்ச பூதத்துக்கு அதிபதியான இந்திரன், வருணன், அக்னி, வருணன் போன்ற தேவர்களையும், தன் ஆணையால் எல்லை தாண்ட விடாமல் செய்து,
ரக்ஷித்து (மேய்த்து) கொண்டும் இருக்கும் "பரமாத்மா நாராயணனை", 
6 அறிவு இருந்தும், நன்றியோடு நினைப்பதில்லை துர்புத்தி உள்ள மனிதர்கள்.






அதே சமயம், எஜமானன், புல் மேய விட்டாலும், அந்த மாடு, மாட்டை மேய்ப்பவனை ஒரு கண்ணால் நன்றியோடு பார்த்து கொண்டே புல் மேயும்.
தன்னை ரக்ஷிக்கும் அந்த இடையனை நன்றியுடன் பார்க்கும்.

தன் எஜமானன் தன்னை ரக்ஷித்து உணவு கொடுக்கிறான் என்ற நன்றி மட்டுமில்லாமல், தன் பாலையே தன் எஜமானனுக்கு திருப்பி தரும்.

ஆனால், இந்த மனிதனோ, தான் மேய்வதற்காக போட்ட தீனியையே 'கபக்..கபக்..' என்று வாயில் போட்டுக் கொண்டு, மேய்ப்பவனை நினைத்து பார்க்காமல் இருக்கிறான்.
"கோவிந்தா" என்று சொல்லி வாயில் போட்டுக்கொண்டால் என்ன?
ஒரு ஐந்து அறிவு பசுவுக்கு இருக்கும் நன்றி உணர்வு, ஆறு அறிவுள்ள மனிதனிடம் இல்லையே!!

தனக்கு இந்த உணவை கிடைக்க செய்தவனை ஒரு க்ஷணம் நினைத்து பார்ப்பதும் இல்லையே!!, நன்றியும் இல்லையே!!.



ஆனால், மாடு அப்படியில்லையே. நன்றியுடன் இருக்கிறதே !!
மாடு, தனக்கு தீனி வைப்பவன் வந்தாலேயே ஆர்வத்தோடு "மா..." என்று தீனி போட்டவனிடம் நன்றி காட்டும்.

அன்னத்தை ஸ்ருஷ்டி செய்த நாராயணன், அந்த அன்னத்தை போட்டுக்கொள்ள நமக்கு 'வாயை'யும், வயிற்றையும் படைத்தார். 
'சுவை'யும் அவர் தானே கொடுத்தார். 
'பசி'யையும் ஸ்ருஷ்டி செய்தார், 
வாயில் போட்டு கொள்ள 'கை'யையும் அவர் தானே ஸ்ருஷ்டி செய்து நமக்கு கொடுத்தார்.
ஒரு மாட்டிடம் காணப்படும் நன்றி உணர்வு, இந்த மனிதனுக்கு இல்லையே? என்று வயிற் எரிய சொல்கிறார் ஆழ்வார்.
"கோவிந்தா...கோவிந்தா..." என்று சொல்லிக்கொண்டே இந்த மனிதர்கள் நன்றி உணர்வோடு தனக்கு கிடைத்த உணவை வாயில் போட்டுக்கொண்டால் என்ன?


ஒருவன் ஒரு கையால் சாப்பிடுகிறான்..
ஒருவன் இரண்டு கையாலும் சாப்பிடுகிறான்.
ஒருவன் பாய்ந்து கொண்டு சாப்பிடுகிறான்.
இப்படி சோற்றுக்கு பாய்ந்து பாய்ந்து சாப்பிடும் இவர்கள், கொடுத்தவனை ஒரு முறை நினைத்து "அரங்கா..." என்று சொல்லிவிட்டு சாப்பிட்டால் குடியா முழுக போகிறது? 
அரங்கனை நன்றியோடு நினைக்கும் அடியவர்கள், "ரங்கா...ரங்கா.." என்று சொல்லிக்கொண்டே நன்றி உணர்வோடு சாப்பிடுகிறார்கள்.


6 அறிவு இருந்தும், நன்றி இல்லாத இவர்களுக்கு "கோவிந்தா..." என்ற நாமம் வாயில் வரவில்லையே!!
பசுக்களை தானே மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணனாக அவதாரம் செய்ய, பசு மாடுகள் கண்ணனை பார்த்து விட்டால், தனக்கு மிகவும் பிடித்தமான புல் மேய கிடைத்தாலும் கூட, புல் மேய்வதை மறந்து கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமாம்.
பசு மாடு நன்றியுடன் இருப்பது ஆச்சரியமில்லை...
அதன் கன்று குட்டி, ஆசையோடு தன் தாய் பசுவிடம் பால் குடிக்க ஓடும் போது, அங்கு கண்ணனை பார்த்து விட்டால், தாய் பசுவின் மடியில் வாய் வைத்து, பால் சுரந்து கொண்டு இருக்கும் போதும், அந்த பாலை குடிக்க கூட நினைவில்லாமல், தன் எஜமானன் கண்ணனை நன்றியுடன் பார்த்து கொண்டு இருக்குமாம். 
தனக்கு மிகவும் பிடித்த உணவை, தன் தாயின் பாலையும் குடிக்க மறந்து தன் எஜமானனான குட்டி கண்ணனையே பார்த்து கொண்டு இருக்குமானால் நன்றி விசுவாசம் என்றால் என்ன என்று புரிகிறது.

ஆனால் 6 அறிவு உள்ள மனிதனோ, தனக்கு கிடைத்த உணவை, சாப்பிடுவதில் ஆர்வம் காட்டுகிறானே ஒழிய, இதை கிடைக்க செய்தவன் அந்த கோவிந்தன் தானே என்று ஒரு நன்றி விசுவாசம் காட்டுவதில்லையே!! 

இப்படி நன்றி கெட்டு சாப்பிடும் ஜனங்களை, உலகை மேய்க்கும் தொழில் விட, தான் ஒரு இடையன் என்று சொல்லிக்கொண்டு, இந்த நன்றியுள்ள மாடுகளை மேய்க்க தயாராகி விட்டாராம். 
உலக நிர்வாகம் ஒரு கடமையாக என்று நிர்வகிக்கும் பரவாசுதேவன், தானே இந்த பசுக்களை மேய்க்க ஒரு தனி அவதாரமாக கோபாலனாக வந்து விட்டார். 
நமக்கு உணவு கிடைக்க செய்வதே பகவான் தான். பசுவுக்கு புல் கிடைக்க செய்தவரும் அவர் தான். நமக்கு சாப்பிட உணவு கொடுத்ததும் அவர் தான். அவர் நம் உணவை சாப்பிட போவதில்லை. ஆனால் பசுவுக்கு தன் எஜமானன் மீது உள்ள நன்றியை போல, இந்த மக்கள் தன்னிடம் நன்றியை காட்டுகிறானா என்று தான் பார்க்கிறார். 
"நெய்வேத்தியம் செய்து சாப்பிட்டால் என்ன குறைந்து விடும்?" ஹிந்துக்களின் பழக்கம் அல்லவா.. 
அத்தனை நன்றி கெட்டு போய் விட்டானா மனிதன்?
எஜமானனுக்கு நன்றி காட்டும் குணம் 5 அறிவுள்ள நாயிடம், பசுக்களிடம் உள்ளதே. அந்த நன்றி நமக்கு வேண்டாமா.. ஈஸ்வரனிடம் ஒரு நன்றி உணர்ச்சி, நாம் சாப்பிடும் போது காட்ட வேண்டாமா? நெய்வேத்தியம் காண்பித்து, 'கோவிந்தா... கோவிந்தா..' என்று சொல்லிக்கொண்டே சாப்பிட்டால் என்ன குறைந்து விடும் மனிதனுக்கு?
பசுவை தங்கள் உயிராக ஹிந்துக்கள் நினைப்பதில் காரணம் இல்லாமல் இல்லையே. எஜமானனிடம் நன்றி காட்டும் குணம் அல்லவா பசுவிடம் உள்ளது.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியத்திலும் காரணம் உண்டு.



எம்பெருமான் திருநாமம் சொல்லாமல் சாப்பிடும் நன்றி கெட்டவர்களை பார்த்து ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.

இலைக்கு முன் போட்ட சோற்றை, 'கோவிந்தா' என்று சொல்லாமல், ஒரு கையை ஊன்றி கொண்டு, இலைக்கு முன் உடகார்ந்து கொண்டு "கபக்.. கபக்.." என்று போட்டுக்கொள்ளும் நன்றி கெட்டவர்களை பார்த்து, 'அந்த சோற்றை நாய்க்கு போட்டாவது கொஞ்சம் நன்றியுடன் இருக்குமே' என்கிறார்.
தெய்வத்துக்கு நெய்வேத்தியம் காட்டாமல், நன்றி கெட்டு சாப்பிடுவதை காட்டிலும், அந்த சோற்றை ஒரு நாய்க்கு கொடுத்தால், அது கூட நன்றி உணர்ச்சியை காட்டுமே என்று, நெய்வேத்தியம் காட்டாமல், கோவிந்தா என்று சொல்லி உண்ணாத நன்றி கெட்டவர்களை பார்த்து கடிந்து கொள்கிறார் தொண்டரடிபொடியாழ்வார்.

நாய்க்கு, ஒரே ஒரு நாள், இலையில் ஓரமாக கொஞ்சம் உணவு வைத்தாலும், சோறு போட்டவனுக்கு நன்றியுடன் இருக்குமே. இப்படி வயிற் நிறைய சாப்பிட்டும், 'ஆமாம்.. என்ன பெரிதாக கொடுத்து விட்டார்?' என்று அகம்பாவம் கொண்டு தெய்வத்தை நிந்தனை செய்கிறானே!! நன்றி இல்லாது சாப்பிடுபவர்களை ஆழ்வார் கடிந்து கொள்கிறார்.
திருமாலையில், 'கோவிந்தா' என்று சொல்லாமல் நன்றிகெட்டு உண்ணும் நம்மை கடிந்து கொள்ளும் பாசுரம்...
அணி திருவரங்க மென்னா, 
மிண்டர் பாய்ந்துண்ணும் சோற்றை 
விலக்கி நாய்க்கு இடுமி னீரே !!
-----  தொண்டரடிப்பொடியாழ்வார்.
மேய்ப்பவனை நன்றியுடன் நினைக்கும் ஸ்வபாவம் கொண்ட சாத்வீக குணம் கொண்ட பசுவை மேய்க்க, பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்தார்.



நாமும் நன்றி மறவாமல், நாராயணன் மீது அன்பு செலுத்துவோம்.

Hare Rama, Hare Krishna - Bhajan

Sandhya vandanam - Morning
Sandhya vandanam - Evening



Sandhya vandanam - Afternoon