Followers

Search Here...

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Friday 27 March 2020

மதுரை திருமாலிருஞ்சோலை (அழகர்மலை) - கள்ளலழகர் சரித்திரம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

உத்தர மதுரையில் (வடமதுரை) இருக்கும், "திருமாலிருஞ்சோலை" (அழகர்மலைசரித்திரம்.

"திருமாலிருஞ்சோலை" என்றும் அழைக்கப்படும் அழகர் மலை, புராணத்தில் "வ்ருஷபாசலம்" என்று அழைக்கப்பட்டது.
"பலராமர் 'தீர்த்த யாத்திரையாக' வரும் போது, 'வ்ருஷபாசலம்' வந்து பெருமாளை சேவித்து விட்டு, மேலும் தீர்த்த யாத்திரை தொடர்ந்தார்"
என்று பாகவதமும் சொல்கிறது.




பெருமாளுக்கு "கள்ளலழகர்" என்று பெயர்.
கள்ளர்களுக்கு இஷ்ட தெய்வமாக இங்கு பெருமாள் இருக்கிறார்.

இங்கு வாழ்ந்த கள்ளர்கள், பெருமாளை பார்த்து, "ஒரு பாதி உனக்கு தருகிறேன்.. மறு பாதியை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று சொன்னால், திருட்டு தொழிலும் பலிக்குமாம்.
"அனுகூல தெய்வமாக" பெருமாள் இங்கு கள்ளர்களுக்கு குலதெய்வமாக இருக்கிறார்.

கள்ளர்கள் வழிபட்ட தெய்வம். 
கள்ளர்களுக்காகவே நிற்கின்ற தெய்வம் இவர்.
பெருமாளுக்கு "ஜெகதீஸ்வரன்" என்றும் பெயர் உண்டு.

ஜகத்தில் (உலகத்தில்) நல்லவர்கள் மட்டும் தான் உண்டா?

உலகத்தில் உள்ள அனைவருக்கும் 'தானே தெய்வம்' என்றும்  காட்டும் பெருமாள், இங்கு "கள்ளர்களுக்கும் நானே தெய்வம்" என்று காட்டுகிறார்.

ஒரு சமயம் மண்டூகர் என்ற ரிஷி "க்ருதமாலா" என்று அழைக்கப்பட்ட வைகை நதியில்  கடுமையான தவம் செய்துகொண்டிருந்தார்.
"விஷ்ணுவை சாஷாத்கரிக்கவேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்தார்.

மண்டூக ரிஷி கொடுத்த உபநிஷத்தின் பெயர் தான் "மாண்டூக்ய உபநிஷத்.

உபநிஷத்துக்களிலேயே மிகவும் உயர்ந்தது  "மாண்டூக்ய உபநிஷத்" என்று போற்றப்படுகிறது..

ஒருவன் "'மாண்டூக உபநிஷத்' அர்த்த ஆழத்துடன் தெரிந்து கொண்டு விட்டால், மோக்ஷத்துக்கு  (முமுக்ஷு) தேவையான விஷயங்கள் எல்லாம் தெரிந்தாயிற்று"
என்று சொல்வார்கள்.

த்ரேதா யுகத்தில் பெருமாள் 'ராமபிரானாக அவதாரம்' செய்தார்.
த்ரேதா யுகம் 12 லட்சம் வருடம் முன்பு நடந்தது.
ராமபிரான் மண்டூக ரிஷியின் உபநிஷத்தை பற்றி அனுமனிடம் பேசுகிறார்.
"உபநிஷத்துகளில் சிறந்தது மாண்டோக்ய உபநிஷத்"
என்று ஹனுமனை பார்த்து சொல்கிறார்.
மண்டூக ரிஷியின் பெருமை என்ன? என்று ஒரு புறம் நமக்கு இதிலேயே புரிகிறது.

அதே சமயத்தில், 12 லட்சம் வருடம் முன்பே நம் கள்ளழகர் இருந்தார் என்று கவனிக்கும் போது தான் கள்ளழகர் பெருமை நமக்கு புரியும்.




ராமபிரானால் உயர்த்தி பேசப்பட்ட மண்டூகர் கள்ளழகரை தரிசிக்க ஆசைப்பட்டார் என்றால், கள்ளழகர் பெருமை அளவிடமுடியாதது என்று தெரிகிறது.

வெகு காலம் ஆகி விட்டது. ஆகாரம் உட்கொள்ளவில்லை.
தவம் செய்து கொண்டிருந்தார் மண்டூகர்.
அந்த சமயங்களில் வடமதுரை காட்டு பிரதேசமாகவே இருந்தது.


ஒரு சமயம், அந்த காட்டின் வழியாக, அவர் எதிரே மிகவும் அழகு பொருந்திய ஒரு வேடுவ சிறுவன் குதிரை மேல் ஏறி வந்து இறங்கினான்.

பார்ப்பதற்கு 20-22 வயது வாலிபன் போலவும் இருந்தான்.
தங்க ஆபரணங்கள் அணிந்து இருந்தான். தலையில் தொப்பி வைத்து இருந்தான். பார்ப்பதற்கு அதிசுந்தரமாக இருந்தான்.
குதிரையில் இருந்து இறங்கி, வைகை என்ற க்ருதமாலா ஆற்றில் தண்ணீர் குடிக்க வந்தான்.

அதி சுந்தரமாக இருந்த இந்த சிறுவனை பார்த்து, மண்டூக மகரிஷி, "நீ யாரப்பா?" என்று விஜாரித்தார்.

அந்த சிறுவன்,
"நான் வ்ருஷபாசலம் என்ற சோலைமலையில் இருக்கிறேன். கள்ளர்களுக்கெல்லாம் தலைவன்"
என்று சொல்ல,
"சரி.. உன் பெயர் என்ன?" என்று இவர் கேட்க,
"என் பெயர் சுந்தர தோளினான் (சுந்தரபாகு)."
என்று பதில் சொன்னான்.

"அது சரி, தவளை தான் தண்ணீரிலும் நிலத்திலும் இருக்கும்.  நீங்கள் ஏன் தவளை போல தண்ணீரில் நின்று கொண்டு இருக்கிறீர்கள்?"
என்று ரிஷியை பார்த்து கேட்டான்.
"உண்மை தான். எனக்கும் மண்டூகன் (தவளை) என்று தான் பெயர்.
உங்களை பார்த்ததிலேயே, நீங்கள் யார் என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன்.
குதிரையில் நீங்கள் வந்த அழகும், அதிலிருந்து நீங்கள் இறங்கிய  விதத்தையும் பார்த்ததுமே நீங்கள் யார் என்று புரிந்து கொண்டு விட்டேன் !"
என்று மண்டூகரிஷி சொன்னார்.

மண்டூகர் அழகரை பார்த்து சொக்கிப்போனதில் ஆச்சர்யமா?
இன்று சித்திரை மாதம் மதுரைக்கு சென்று பார்த்தால், அழகர் ஆற்றில் இறங்கும் போது 5 லட்சம் மக்கள் கூடுவதை நம் கண்ணால் காணலாம்..

அழகர் குதிரையில் வரும் வீதியெல்லாம் மக்கள் கூடி விடும் ஆச்சர்யத்தை இன்றும் காணலாம்.
சித்ரா பௌர்ணமி அன்று, வைகையில் ஒரு க்ஷணம் இறங்கி விட்டு, மண்டூக ரிஷிக்கு தரிசனம் தந்த வைபவம் இன்றும் நடக்கிறது.

"விஷ்ணுவை சாஷாத்கரிக்க வேண்டும்"
என்ற சங்கல்பத்துடன் தவம் செய்து கொண்டிருந்த மண்டூகரிஷி, 
மேலும் சொன்னார்,
"நீங்கள் ஒரு ராஜகுமாரனை போல குதிரையில் வந்து இறங்கினீர்கள்.
நீங்கள் யார் என்று அறிந்து கொண்டேன். 
நீங்கள் எனக்கு திவ்யமான ரூபத்துடன் காட்சி தரவேண்டும்.
நீங்கள் கோவிலில் எப்படி தரிசனம் தருகிறீர்களோ, அது போல தரிசனம் கொடுங்கள்."
என்று சொல்ல,

சங்கு சக்கர கதையுடன், நீல மேக ஸ்யாமள ரூபத்துடன், பீதாம்பரம் அணிந்தவராக, ஸ்ரீவத்சம் உடைய மார்புடன், எம்பெருமான் காட்சி கொடுக்க,
உடனே,
மண்டூக ரிஷி கைகளை குவித்துக்கொண்டு, ஸ்தோத்திரம் செய்கிறார்...
"'ஓம்' என்ற பிரணவம், வேத மந்திரங்கள் அனைத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.

'ஓம்' என்ற பிரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்று ஒலிகள் (அக்ஷரங்கள்) அடக்கம்.

மூன்றும் சேர்ந்த நிலையே 'ஓம்' என்ற பிரணவம் 
'ஓம்' என்ற ப்ரணவத்துக்குள், "அ", "உ", "ம" என்ற மூன்றும் அடக்கம்.

"அ", "உ", "ம" என்று பிரித்து உபாசனை செய்பவர்களும் உண்டு.
"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு.




பரமாத்மாவுக்கு 'மூன்று நிலைகள்' உண்டு.
அதுபோல
ஜீவனுக்கும் 'மூன்று நிலைகள்' உண்டு.

இதை நமக்கு ஓம் என்ற பிரணவம் "அ", "உ", "ம" என்ற மூன்று நிலைகளை காட்டி விளக்குகிறது.

அனைத்து ஜீவனுக்கும் மூன்று நிலைகள் இருக்கிறது.

  1. 'விழித்து (ஜாக்ரத்) இருக்கிறான்' என்பது முதல் நிலை.
  2. 'கனவு (ஸ்வப்னம்) காணுகிறான்' என்பது இரண்டாவது நிலை.
  3. 'தூங்குகிறான் (சுஷுப்தி)' என்பது மூன்றாவது நிலை.
இந்த மூன்று நிலையிலும் 'ஜீவன் ஒருவன் தான்' இருக்கிறான். ஆனால் மூன்றும் வேறு வேறு நிலை.

  1. விழித்து (ஜாக்ரத்) இருக்கும் நிலையில் ஜீவனுக்கு, 'விஸ்வன்' என்று பெயர்.
  2. கனவு (ஸ்வப்னம்) காணும் நிலையில் ஜீவனுக்கு, 'தைஜஸன்' என்று பெயர்.
  3. தூங்கும் (சுஷுப்தி) நிலையில் ஜீவனுக்கு, 'பிராக்ஞன்' என்று பெயர்.

ஜீவனாகிய நமக்கே மூன்று நிலைகளில், மூன்று பெயர் உண்டு.

ஜீவன் மூன்று நிலையில் இருப்பது போல,
பரமாத்மா வாசுதேவனும், "மூன்று நிலையில் இருக்கிறார்".


  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது, ஒரு நிலை.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  இரண்டாவது நிலை.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை பரமாத்மா செய்யும் போது,  மூன்றாவது நிலை.
இப்படி ஜீவனை போலவே, பரமாத்மாவும் மூன்று நிலைகளில் இருக்கிறார்.

  1. படைத்தல் (ஸ்ருஷ்டி) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "ப்ரத்யும்னன்" என்று பெயர். ப்ரத்யும்னன் அம்சமாக 'ப்ரம்ம தேவன்' இருக்கிறார்.
  2. காத்தல் (ஸ்திதி) என்ற காரியத்தை செய்யும் போது, , பரமாத்மாவுக்கு "அனிருத்தன்" என்று பெயர். அனிருத்தன் அம்சமாக 'மஹா விஷ்ணு' இருக்கிறார்.
  3. அழித்தல் (சம்ஹாரம்) என்ற காரியத்தை செய்யும் போது, பரமாத்மாவுக்கு "சங்கர்ஷணன்" என்று பெயர். சங்கர்ஷணன் அம்சமாக 'ருத்ரன்' இருக்கிறார்.


  • படைத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ரஜோ குணத்துடன் ப்ரம்மாவாக இருக்கிறார்.
  • காத்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, ஸத்வ குணத்துடன் விஷ்ணுவாக இருக்கிறார்.
  • அழித்தல் என்ற நிலையில் நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, தமோ குணத்துடன் ருத்ரனாக இருக்கிறார்.
பரவாசுதேவனே, மும்மூர்த்திகளாக, மூன்று நிலைகளில் இருக்கிறார். 




விழித்து இருப்பதும், தூங்குவதும், கனவு காண்பதும் 'ஒருவனே' என்பது புரிந்து கொள்ளும் போது, 
பரவாசுதேவனே மூன்று நிலைகளில் ப்ரம்ம தேவனாகவும்,  ருத்ரனாகவும், மஹாவிஷ்ணுவாகவும் இருக்கிறார் என்ற சத்தியம் புரியும். 

இந்த ரகசியத்தை 'ஓம்' என்ற பிரணவம் தாங்கி பிடித்து இருக்கிறது. 
'அ உ ம' என்ற மூன்றும் பிரித்து பார்க்கும் போது, 
என்ற சப்தம்  "படைத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம்  "காத்தல்" என்ற நிலையையும், 
என்ற சப்தம் "அழித்தல்" என்ற நிலையையும்,  
காட்டுகிறது.

இந்த மூன்றும் சேர்ந்த நிலையில் பரவாசுதேவன் மட்டுமே இருக்கிறார்.
ஓம் என்ற பிரணவம், "பரவாசுதேவனை குறித்து தியானிக்க செய்கிறது".

அ என்ற படைத்தல் நிலையிலும், 
உ என்ற காத்தல் நிலையிலும், 
ம என்ற அழித்தல் நிலையிலும் தன்னை காட்டிக்கொண்டு,
மூன்றுமாகவும் இருக்கும் பரமாத்மா தன்னை மறைத்து கொண்டு இருப்பதால், "வாசுதேவன்" என்று பெயர். 

ராஜஸ, ஸத்வ, தாமஸ போன்ற குணங்களை தாண்டி,  நிர்குணமான, சித்ஸ்வரூபமான நிலையை குறிக்கிறது பரவாசுதேவனின் ஸ்வரூபம்

நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் இருக்கிறார்.

குணங்களால் பேதங்கள் காட்டும் பரமாத்மா, குணங்களை தனக்குள் அடக்கி, தான் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கும் நிலையிலேயே பரமாத்மா வாசுதேவன் இருக்கிறார்.

தன் ப்ரம்ம ஸ்வரூபத்தை மறைத்து கொண்டு இருப்பவர் பரமாத்மா.

வைகுண்டத்தில் இருக்கும் இந்த பரவாசுதேவனையே "ஓம்" என்ற பிரணவம் குறிக்கிறது. 

"அ", "உ", "ம" என்று பிரித்து "ப்ரம்ம தேவனை" மட்டும்,  "விஷ்ணுவை" மட்டும், "ருத்ரனை" மட்டும் உபாசனை செய்பவர்களும் உண்டு.

"ஓம்" என்று சேர்த்து உபாசனை செய்பவர்களும் உண்டு. 

'ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன்' என்ற மூன்று நிலைகளையும் தன்னில் அடக்கி, நிர்குணமாக இருப்பவர் 'பரவாசுதேவனே' என்ற ஞானத்துடன்  உபாசனை செய்பவர்களும் உண்டு.

இந்த இரண்டு உபாஸனையையும் நம் உபநிஷத் அனுமதிக்கிறது.

விழிப்பு, சொப்பனம், தூக்கம் என்ற மூன்று நிலையை அனைத்து ஜீவனும் அனுபவிக்கிறார்கள். 
நான்காவது நிலையையும் சில உத்தம ஜீவன்கள் அனுபவிக்கிறார்கள். 
அந்த நிலைக்கு "சமாதி" என்று பெயர்.
அந்த நிலையில் இருப்பவனை "துரீயன்" என்று சொல்கிறோம்.

விழிப்பு நிலையில், ரஜோ குணமும்,
ஸ்வப்ன நிலையில், சத்வ குணமும்,
தூக்க நிலையில், தமோ குணமும் வெளிப்படுகிறது.

எப்படி ஓம் என்ற நிலையில், இந்த மூன்று குணங்களும் அடங்கி, நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவன் "சர்வஞன்" என்ற நிலையில் மட்டுமே இருக்கிறாரோ,
அதுபோல,
சமாதி என்ற நிலை ஒரு ஜீவனுக்கு ஏற்படும் போது, குணங்களை கடந்த நிலையை ஜீவன் பெறுகிறான்.




ஓம் என்ற பிரணவத்தின் மூல பொருளான பரவாசுதேவனை, சமாதி நிலையில் ஜீவன் சேருகிறான்.
இந்த நிலையில், ஜீவனும் குணங்களை கடந்து, நிர்குண நிலையை அடைந்து ப்ரம்மத்தோடு லயிக்கிறான்.
இப்படி சமாதி நிலையில், ஓம் என்ற பிரணவத்தின் அர்த்தமான நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனை புரிந்து கொள்ள வேண்டும்
என்று சாஸ்திரம் சொல்லி இருக்க,
அதே நிர்குண பரவாசுதேவன் இந்த திருமாலிருஞ்சோலையில் அர்ச்சா விக்ரக ரூபத்துடன் நமக்கு காட்சி கொடுக்கிறாரே !!"
என்று ஸ்தோத்திரம் செய்தார்.

"சமாதி நிலையில் அறியக்கூடிய நிர்குண ப்ரம்மமான பரவாசுதேவனே, யாரும் பார்க்கும்படியாக தன்னை சுலபமாக்கிக்கொண்டு, கள்ளலழகராக இருக்கிறார்" 
என்று மண்டூக ரிஷி, பெருமாளை பார்த்து ஸ்தோத்திரம் செய்தார்.

இந்த மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கள்ளழகர் சோலைமலையை விட்டு, 20 கிலோமீட்டர் குதிரையில் வந்தார்.
அந்த காட்சியை இன்று சித்திரை மாதம் போனாலும், கள்ளழகர் 20 கிலோமீட்டர் குதிரையில் வந்து, வைகையில் ஒரு நொடி இறங்கிவிட்டு, நேராக மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் உற்சவத்தை நம் கண்ணால் ரசிக்கலாம்.

நம்மாழ்வார் (திருவாய்மொழி) நம் கள்ளழகரை மங்களாசாசனம் செய்து பாடுகிறார்.

முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் நின்பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ? 
திருமாலே கட்டுரையே
நம்மாழ்வார் (திருவாய்மொழி)
அர்ச்சா திருமேனியுடன் தான் கள்ளழகர் இருக்கிறார்.
இருந்தாலும்,
பரமபதத்தில் அப்ராக்ருத (Beyond Nature) திவ்ய மங்கள வடிவை கொண்ட பரவாசுதேவன் எப்படி இருப்பாரோ, அது போலவே இருக்கிறார் கள்ளழகர்.

கள்ளழகரை பார்க்கும் போது, இவர் அர்ச்சா திருமேனி  என்று தோன்றவே தோன்றாது.

இவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டு இருக்கிறார்?
என்றே சொல்ல முடியாத படி, தனித்து இருக்கிறார்.
இன்றைக்கு சென்று, நம் ஊன கண்ணால் பார்த்தாலும் இந்த அதிசயத்தை நாம் உணரலாம்.

எந்த கோவிலுக்கு சென்று போய் பார்த்தாலும், கள்ளழகருக்கு உள்ள அந்த அழகு, பொலிவு வேறு எங்கும் பார்க்க முடியாது.

திருமஞ்சனம் செய்யட்டும், செய்யாமாலே இருக்கட்டும், இவர் திருமேனி மட்டும் தக தக வென்று அப்படி ஒரு பொலிவுடன் இருக்கும்.
நம்மாழ்வார் ஹ்ருதயத்தில் அத்தகைய பொலிவுடன் கள்ளழகர் காட்சி தர, அந்த பொலிவை வர்ணிக்கிறார்.

தக தக வென ஜொலிக்கும் பெருமாளின் "கன்னத்தில் (முக) வெளிப்பட்ட பொலிவு (ஜோதி) தான் கிரீடமாக (முடிச்சோதி) இருக்கிறதோ?"
என்று பார்த்து பிரமிக்கிறார் நம்மாழ்வார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்கிறார்.

தங்க ஆபரணங்களை தனியாக பார்க்கும் போது ஜொலி ஜொலிக்குமாம்.
அதே தங்க ஆபரணங்களை கள்ளழகர் அணிந்துகொண்டு விட்டால், இவருடைய மேனி பொலிவுக்கு முன், தங்க நகைகள் பொலிவு இல்லாதது போல தெரியுமாம். 
இந்த அனுபவத்தை இன்று கள்ளழகரை சென்று பார்த்தால் கூட நாமும் அனுபவிக்க முடியும். 




கள்ளழகர் கன்னத்தை பார்த்தால், எதிரே நிற்பவர்களின் பிம்பம் தெரியுமாம். 
அத்தனை பொலிவு உடைய கள்ளழகரின் பொலிவை கண்டு மயங்கி, 
"முடிச்சோதியாய் உனது முகச்சோதி மலர்ந்ததுவோ?"
என்று நம்மாழ்வார் ஆச்சர்யப்பட்டு கேட்கிறார்.

பெருமாளின் முகப்பொலிவை கண்ட பிரமித்த நம்மாழ்வார், "சரி திருவடியை பார்ப்போம்" என்று கவனிக்க,
கள்ளழகரின் திருவடியின் அடிப்பகுதி சிவந்து பெரும் பொலிவை தர,
அந்த "திருவடி பொலிவுதான் சிவந்த தாமரையாக மலர்ந்து இருக்கிறதோ?" என்று கேட்கிறார்.
கள்ளழகரை தான் பார்த்த காட்சியையே,  
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ?
என்கிறார்.

பெருமாள் இடுப்பில் பீதாம்பரம் அணிந்து இருந்தாலும், அந்த வஸ்திரத்தையும் மீறிக்கொண்டு, அவர் திருதொடையின் பொலிவு, பீதாம்பரத்துக்கும் மேல் பிரகாசிக்குமாம்.

இப்படி அடி முதல் முடி வரை தங்கம் போல (பைம்பொன்) தக தகவென ஜொலிக்கும் அழகரை கண்டு பிரம்பிக்கிறார் நம்மாழ்வார்.

இதையே
படிச்சோதி யாடையொடும் பல்கலனாய் 
நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ
என்கிறார்.

எப்பொழுதுமே தங்கம் போல ஜொலிக்கும் கள்ளழகர் .
ஒரே ஒரு சமயம் மட்டும், பச்சை திருமேனியாக ஆகி விடுகிறார்.

கள்ளழகர் ஒரு சமயம் மலை மீது ஏறி, நூபுர கங்கைக்கு செல்வார்.
இந்த மலையோ பச்சை பசேல் என்று சோலையாக இருக்கும். 

போகும் வழியில், இரண்டு பக்கமும் பச்சை பசேல் என்று இருப்பதால், அந்த சாயம் இவர் கன்னத்தில் பிரதிபலித்து, பெருமாளே பச்சை வர்ணமாக காட்சி தருவார்.
அங்கு மட்டும் கள்ளழகர் பச்சை வண்ண பெருமாளாக இருப்பார்.
மற்ற சமயங்களில் எல்லாம், பெருமாள் மணிவண்ணனாகவே இருப்பார்.

இப்படி பெருமாளின் பொலிவை கண்டு ஆனந்தப்படுகிறார் நம்மாழ்வார்.

நம்மாழ்வார் பெருமாளை கொஞ்ச, 
கள்ளழகர் வீற்று இருக்கும் சோலைமலையையே கொஞ்ச வேண்டும் என்று ஆவல் வந்து விட்டது, பெரியாழ்வாருக்கு.
"சோலைமலை" தான்  பெரியாழ்வாருக்கு முக்தி ஸ்தலம்.
பெரியாழ்வார் சோலைமலையையே கொஞ்சி பாடுகிறார்.




பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
அலங்காரன் மலை 
குலமலை
கோலமலை 
குளிர்மாமலை
கொற்றமலை
நிலமலை
நீண்டமலை 
திருமாலிருஞ்சோலையதே  
- பெரியாழ்வார் (திருமொழி)

"அலங்காரன் மலை (அழகர் மலை), குலமலை, கோலமலை, குளிர்மாமலை, கொற்றமலை, நிலமலை, நீண்டமலை
என்று திருமாலிருஞ்சோலையின் அழகை கொஞ்சி கொஞ்சி ரசிக்கிறார் பெரியாழ்வார்.
திருப்பதியில் உள்ள திருமலையை கூட ஆழ்வார்கள் இப்படி கொஞ்சியதாக தெரியவில்லை. 
ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார் வாத்சல்ய பாவம் கொண்டவர்.

இந்த வாத்சல்யம் சோலைமலையை பார்த்ததும் பெரியாழ்வாருக்கு ஏற்பட்டு, இப்படி ஆசை தீர கொஞ்சுகிறார்.

சிசுபாலனுக்கு நல்ல வார்த்தையே வாயில் வராதாம். 

சிலர் பேசும்போது, ஸ்தோத்திரம் செய்வது போல வெளியில் இருக்கும், ஆனால் கவனித்து பார்த்தால் உண்மையில் கிண்டல், கேலி இருக்கும்.

சிலர் பேசும்போது, வெளியில் திட்டுவது போல இருக்கும், ஆனால் உண்மையில் ஸ்தோத்திரம் செய்து இருப்பார்கள்.
ஸ்ரீ கிருஷ்ணன் சிறு பாலகனாக இருக்கும் போது வெண்ணை திருடி லீலை செய்தார். 
பக்தர்கள், "சோரன்" (திருடன்) என்று கிருஷ்ணனை சொல்வார்கள். வெளியில் திட்டுவது போல தெரியும்..
ஆனால், உண்மையில் அதீத கிருஷ்ண பிரேமையால், இப்படி ஸ்தோத்திரம் செய்வது புரியும்.

"நேரடியாக திட்டுவதோ, நேரடியாக கொஞ்சுவதோ நாகரீகம் இல்லை" என்று பண்புள்ளவர்கள் நினைப்பார்கள்.
"பிடிக்காதவர்கள் வந்தாலும், நேரடியாக திட்டுவது நாகரீகம் இல்லை"
என்று நினைப்பார்கள்.

இந்த சிசுபாலனோ, நாகரீகம் கொஞ்சமும் இல்லாதவன். 
உள்ளொன்று வெளியொன்று என்று இல்லாமல், பச்சையாக கிருஷ்ண பரமாத்மாவை திட்டுவானாம்.
 "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவானாம்.

நம்மாழ்வார் "கேட்பார் செவி சுடும்" என்பது போல, சிசுபாலன் பேசுவான் என்கிறார்..

பீஷ்மர், விதுரர் போன்றோர் கண்ணன் "பரமாத்மா" என்று தெரிந்தவர்கள்
கண்ண பரமாத்மாவை யாராவது கேலி பேசினால் இவர்களுக்கு தாங்காது. 
பெருமாளிடம் பக்தி உள்ளவர்களுக்கு, பெருமாளை பற்றி அவதூறு பேசினால் தாங்காது.  இதுவும் இயற்க்கையான ஸ்வபாவம்.தான்.




ராஜசூய யாகத்தில், சிசுபாலன் கிருஷ்ணரை கண்டபடி சபையில் பேச ஆரம்பிக்க, விதுரர் கோபப்பட்டு சிசுபாலனை அதட்டினார். இது எதிர்பார்த்த ஒன்று தான்.  

நம்மாழ்வார், "அடியார் செவி சுடும் படி சிசுபாலன் பேசுவான்" என்று சொல்லி இருக்கலாம்.
மாறாக, "கேட்பார் செவி சுடும்" படி சிசுபாலன் பேசினான்" என்று சொல்கிறார்.

சிசுபாலன் கிருஷ்ணரை பச்சையாக திட்டுவதை கேட்டால், அடியார்களுக்கு மட்டும் செவி சுடும் படியாக இருக்காதாம்,
கிருஷ்ணரை கிண்டல் செய்ய சொல்லி கேட்டு ரசிக்கும் குணம் கொண்ட, கிருஷ்ணரை பிடிக்காத துரியோதனன், சகுனி போன்றவர்களுக்கே இவன் பேச்சை கேட்டால் "செவி சுடுமாம்".
சிசுபாலன் பேசுவதை கேட்பவன் அனைவருக்குமே செவி சுடும்படி கீழ்த்தரமான வசவுகளே பேசி அவமதிப்பானாம் சிசுபாலன்.

இவன் பேச்சை கேட்டு, ராஜசூய யாகத்தில் கிருஷ்ணரை தானே நிந்திக்கும் குணமுடைய துரியோதனனே எழுந்து "சிசுபாலா, இப்படி பேசாதே!!" என்று சொல்லும் அளவுக்கு கீழ்த்தரமாக பேசுவானாம் சிசுபாலன்.

அதன் காரணத்தாலேயே நம்மாழ்வார் 
"கேட்பார் செவி சுடும் கீழ்மை வசவுகளே வெய்யும் ..சிசு பாலன்" 
என்கிறார்.
இப்படி பகவானை தான் பிறந்ததிலிருந்து பல முறை நிந்திப்பதே (பல பல நாழம்) தொழிலாக வைத்து இருந்த சிசுபாலனின் அற்பத்தனத்தையும் (அலவலைமை) தவிர்த்து விட்டு,
அவனுக்கு தன் அழகான ரூபத்தை காட்டி, அவன் பேசிய பேச்சுக்கு சக்கரத்தை விட்டு அவன் உயிரை பறிக்க, உயிர் பிரிந்த போது, சிசுபாலனின் ஆத்மஜோதி, சபையில் இருந்த அனைவருக்கும் தெரிய, கண்ணனின் பாதத்தில் சேர்ந்து விட்டது.

பிறகு ஒரு சமயம், தர்மபுத்திரர், நாரதரிடம் இது பற்றி கேட்கிறார்.
தர்மபுத்திரர், 
"என்ன அநியாயம் இது!! 
பகவத் பக்தி செய்பவனுக்கு மோக்ஷம் கிடைக்கலாம். 
இந்த சிசுபாலன் பிறந்ததில் இருந்து கீழ்த்தரமான வார்த்தைகளை கொண்டே கிருஷ்ணரை இகழ்ந்து பேசுவான். அவனுக்கு போய், தன் திவ்ய தரிசனமும் கொடுத்து, நாங்கள் பார்க்க, அவன் ஜோதி கண்ணனின் பாதத்தில் சேர்ந்ததே!! 
மனிதர்கள் அநியாயம் செய்தாலே தவறு. 
இங்கு பகவான் அநியாயம் செய்கிறாரே! 
தன்னை நிந்தனை செய்தவனுக்கு போய் மோக்ஷம் கொடுத்துவிட்டாரே?"
என்று கேட்டார்.

"தன் அழகு பொருந்திய திவ்ய தரிசனம் சிசுபாலனுக்கு கிடைத்ததால், அந்த திவ்ய தரிசனத்தின் பலனாக மோக்ஷம் கொடுத்தார்"
என்று நாரதர் பதில் சொன்னார்.

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? என்று பெரியாழ்வார் மேலும் சொல்கிறார்.
சிசுபாலன் பேசிய பேச்சுக்கும் சக்கரத்துக்கு சரியாகி விட்டதாம்.
ஆனால், தன் அழகான தரிசனத்தை சிசுபாலனுக்கு காட்டி, அவன் மனத்திலும் உள்ளுக்குள்
"இத்தனை அழகான கிருஷ்ணனையா திட்டினோம்? அனாவசியமாக எதற்காக கிருஷ்ணனை திட்ட வேண்டும்?" 
என்று மனதுக்குள் நினைத்தானாம்.




தன் அழகால் சிசுபாபலன் போன்ற கீழ்த்தரமாக பேசுபவர்கள் நெஞ்சிலும், இடம் பிடித்து, அவன் தன்னை தரிசித்த பலனாக, சிசுபாலனுக்கும் மோக்ஷம் கொடுத்துவிட்டாராம். 

கிருஷ்ண பரமாத்மா யாரிடமிருந்து இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்? 
"அழகுக்கு உரிமையாளனான திருமாலிருஞ்சோலையில் இருக்கும் கள்ளழகரிடமிருந்து, இந்த அழகை எடுத்து சிசுபாலனுக்கு காண்பித்தார்" 
என்று பெரியாழ்வார் கொஞ்சுகிறார்.!!

அதையே,
பல பல நாழம் சொல்லி 
பழித்த சிசுபாலன் தன்னை
அலவலைமை தவிர்த்த அழகன்
என்று ரசிக்கிறார்.

இப்படி,
அழகே உருவான நம் கள்ளழகர், தன் அழகை மேலும் பிரகாசிக்க செய்வது போல, 'கிரீடம், வைஜயந்தி மாலை, பீதாம்பரம், கௌஸ்துபம்' என்று அலங்காரமும் செய்து கொண்டு (அலங்காரன்) சோலைமலையில் வீற்று இருக்க,
இந்த சோலைமலை எப்படி இருக்கிறது? என்று பார்த்த பெரியாழ்வார், மலையை வர்ணிக்கிறார்.

"அனைவருக்கும் குல தெய்வமாக (குலமலை), 
அழகு மலையாக (கோலமலை), 
குளிர்மாமலை, 
தனக்கு அபிமானத்துக்கு பாத்திரமான பக்தனுக்கு  ஸம்ஸாரம் துக்கம், வாசனைகள் புகாதபடி செய்து, வெற்றியை கொடுக்கும்  மலையாக (கொற்றமலை), 
நல்ல மரங்கள் முளைக்கும் நிலத்தையுடைய மலையாக (நிலமலை), 
நீண்டமலையாக இருக்கும் திருமாலிருஞ்சோலையில் நம் கள்ளழகர் வீற்று இருக்கிறார்" 
என்று மலையை கொஞ்சி வர்ணிக்கிறார்.

தெய்வத்தை தவேஷிக்கும் சிசுபாலன் போன்ற கீழ்தரமானவர்கள் கூட அர்ச்ச ரூபத்தில் இருக்கும் கள்ளழகரை தன் ஊன கண்களால் பார்த்தால் கூட, மனம் மாறி விடுவான். 
"அழகர் என் குலதெய்வம்" என்று சொல்ல ஆரம்பித்து விடுவான்.

சிசுபாலன் போன்றவர்களுக்கு கூட மோக்ஷத்தை தன்னை தரிசனத்தின் பலனாக கொடுத்து விடும் பெருமாள், மதுரையில் அழகர்கோவில் இருக்கிறார்.

"அழகரை தரிசித்தாலே மோக்ஷம்" என்பதால்,
பேரழகு உடையவர் என்பதால்,
கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, பிறகு மண்டூக ரிஷிக்கு மோக்ஷம் கொடுக்கும் காட்சியை பார்ப்பதற்காகவே, 5 லட்சம் மக்கள் சித்ரா பௌர்ணமி அன்று கூடி விடுகிறார்கள்.

அனைவரும் அழகரை கண்களால் தரிசிப்போம்.
நாம் அனைவரையும் கள்ளழகரை, அவர் வீற்றுஇருக்கும் அழகர்மலையை காண அழைக்கிறார்.



Friday 20 March 2020

மரியாதை சொற்கள் பற்றி தெரிந்து கொள்வோமே...

தெய்வத்துக்கு சமமாக பூஜிக்க  தகுந்த மாகாத்மாக்களை கண்டால், "தேவரீர்" என்று அவரை சொல்கிறோம்.
நர்குணங்கள் நிரம்பிய இவர்களை காணும் போது,
நம்மை "தாசன்" என்றும், "இவன்" என்றும், "இது" என்றும் கூட சொல்லிக்கொள்கிறோம்.

"தாசன், இவன், இது" என்று நம்மை சொல்லிக்கொள்வது, நம்மை தாழ்த்திக்கொள்வதற்காக அல்ல.
நம்மை தாழ்த்தி, அவரை உயர்த்தி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையால், குருநாதரின் உயரிய குணத்தால், இப்படி சொல்கிறோம்.

ஹனுமான் ராமபிரானை விட வயதில் மூத்தவர். நன்கு படித்தவர், ஞானம் உடையவர்.
இருந்தாலும், ராமபிரானின் எல்லையில்லா நற்குணங்கள் இவரை "தாசன்" என்று சொல்லிக்கொள்ள செய்தது.

பூஜிக்க தக்கவர்களிடம், கர்வத்தை காட்டும் படியாக  "நான்" என்று கூட சொல்லிக்கொள்வதில்லை.

வைஷ்ணவர்கள், தன்னை
"அடியான்" என்றும்,
"தாசன்" என்றும்
பெருமாளை பார்த்தும்,
ஆச்சாரியனை பார்த்தும், மற்ற வைஷ்ணவர்களை பார்த்தும், இப்படி தன்னை சொல்லிக்கொள்வார்கள் என்று பார்க்கிறோம்.

அடுத்த நிலையில், மரியாதைக்கு உரியவர்களை, "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.
இவர்களிடம் "நீங்கள்" என்ற சொல் கூட மரியாதை குறைவான சொல் என்று தோன்றும். ஆதலால், "தாங்கள்" என்று சொல்லி அழைக்ககிறோம்.

இவர்களிடம் பேசும் போது, "தாங்கள் நம் வீட்டுக்கு வர வேண்டும்" என்று விண்ணப்பம் செய்வோமே தவிர,
"நீங்கள் என் வீட்டுக்கு வர வேண்டும்" என்று சொல்வது கூட, அதிக பிரசங்கி தனமோ என்று கூட நமக்கு தோன்றும்.




அதற்கும் கொஞ்சம் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீங்கள்" என்று சொல்கிறோம்.
நம்மைவிட வயதில் மூத்தவர்களை "நீங்கள்" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீர்" என்று சொல்கிறோம்.

அதற்கும் கீழ் உள்ளவர்களிடம் பழகும் போது, "நீ" என்று சொல்கிறோம்.
நண்பர்களை "நீ" என்று பொதுவாக சொல்வது வழக்கம்.

பொதுவாக இவை அனைத்துமே குணத்தை வைத்து ஏற்பட்ட மரியாதை சொற்கள்.

அவரவர் யோக்யதைக்கு தக்கபடி, இப்படி பல வித மரியாதை சொற்களை பயன்படுத்துகிறோம்.

Wednesday 11 March 2020

ஆன்மீக பூமியாக நம் தேசத்தை மாற்றுவது எப்படி? பொருளாதார சுதந்திரம் கிடைக்குமா? ஒரு அலசல்...


இன்ரைய உலகில்,
120 கோடி இந்திய மக்களும், "பணம் அதிகம் தரும் ஒரே வேலையை நோக்கியே" போட்டி போட்டு ஓடுகிறோம்.
பல அற்புதமான வேலைகள்,
பல அற்புதமான ஆராய்ச்சிகள்,
பல அற்புதமான தொழில் சிந்தனைகள் இருந்தும்,
ஒரே வேலையை நோக்கி ஓடும் காரணத்தால், 120 மக்களின் மனதில் இருந்து இந்த சிந்தனைகள் அழிந்து விட்டது...




சுய தொழிலை விட்டதால், திறன் இல்லாத சமுதாயமாக, 
வேலை இல்லா திண்டாட்டம், பொருளாதார சரிவு, மக்கள் தொகை, 1000 வருட இந்திய சரித்திரத்தை மட்டுமே பார்த்து கொண்டு, ஹிந்துக்கள் இந்த காலங்களில் அந்நியர்களால் ஆக்ரமிப்பு பட்டு இருந்தார்கள் என்ற அறிவே இல்லாமல், ஹிந்துக்களையே அழிக்க நினைக்கும் மதவாத போக்கு, பொறாமை, அறியாமை, இவையெல்லாம் சேர்த்து கொண்டு, 
பெரும் அபாயத்தை நோக்கி 120 கோடி இந்திய மக்களும் சென்று கொண்டு இருக்கிறோம்.

"நிம்மதி" என்பது ஒருவர் நெஞ்சிலும் இல்லை.
நம் தெய்வங்கள் தான் ஆங்காங்கு நிம்மதியை தந்து கொண்டு இருக்கின்றனர்.

அரசாங்கம், இதை சரி செய்ய பெரும் முயற்சிகள் செய்கிறது.. 
ஆனால்!!
இவர்கள் எடுக்கும் எதுவும் இதை சரி செய்ய போவதில்லை.

அரசாங்கம், "நம் பாரத நாடே, உலகத்துக்கு கோபுரம் போல இருப்பதை" அறிய வேண்டும்.
ஒவ்வொரு தேசத்துக்கும் சில குணங்கள் உண்டு. 
உலகத்துக்கு நடு பகுதியில், 'உலகத்துக்கே கோவிலாக' இருக்கும் இந்த தேசத்தை, வணிக தேசமாக ஆக்கி முன்னேற்றுவது!! மஹா முட்டாளத்தனம்.

தேசத்துக்கு, வணிகம் தேவைதான்..  
ஆனால், நம்முடைய பொருளாதாரத்தை வலுப்படைய செய்யும் சக்தியாக, அந்நிய தேச வணிகமே இருக்கும் படி செய்து விட கூடாது.

அந்த வணிக பாதையை நோக்கியே, கடந்த 20 ஆண்டுகளாக நடை போட்ட நம் பாரத நாடு, 
இன்று "உலக பொருளாதாரம் வீழ்ந்தால், இந்திய பொருளாதாரமும் வீழும்"
என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.

மற்ற நாடுகளில் "பொருளாதாரம் வீழும் போது",
மக்கள் தொகை அதிகம் இல்லாத அந்த நாட்டினர் பெரிதும் அச்சம் கொள்வதில்லை.
நம் பாரத நாட்டிலோ 120 கோடி மக்கள்!!
"அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் உணவு"
என்பது இது போன்ற உலக பொருளாதாரத்தை ஒட்டி அமைக்கப்படுவது பேராபத்து. 

மற்ற நாட்டில் உள்ளவனுக்கு, இந்தியன் வேலை செய்து, வேலை செய்து, பலரது தூக்கமும், சொந்தமும் பறிக்கப்பட்டு விட்டது.
இன்று,
ஒவ்வொரு இந்தியர்கள் நெஞ்சிலும் வேலை பதட்டமும், அச்சமும் கொன்று தின்கிறது.
இதை சரி செய்ய வழி உண்டா? கட்டாயம் உண்டு...

பாரத நாட்டை தேடிக்கொண்டு கொலம்பஸ் அலைந்தான். 
அவன் காணாத வெற்றியை,

வாஸ்கோடகாமா என்ற கிறிஸ்தவ வணிகன் பெற்றான் என்று ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

"ஒரு கொள்ளையன் அடுத்தவன் வீடு புகுந்ததை மற்ற கொள்ளையர்கள் கொண்டாடுவது போல", ஐரோப்பா கண்டமே அவனை புகழ்ந்தது.

இவனை தொடர்ந்து, பிரெஞ்சு, ட்ச், பிரிட்டிஷ் நாடுகளில் இருந்து ஐரோப்பிய கிறிஸ்தவர்கள் முழுவதுமாக 600 வருடங்கள் ஆக்ரமித்தனர் நம் பாரத நாட்டை.

"அறிவியல் கண்டுபிடுப்புகள் செய்தோம்!!" 
என்று இன்று மார்தட்டும் கிறிஸ்தவர்கள், 947ADக்கு முன்,
உலகத்திற்கு பயனாக என்ன அறிவியல் கண்டுபிடிப்புகள் செய்தார்கள்? ஒன்றுமே இல்லையே!!
இந்தியாவுக்கு நுழைவதற்கு முன், உலகத்திற்கு பயனாக ஒரு கண்டுபிடிப்பு கூட இவர்களிடம் காண முடியவில்லையே ஏன்?

947ADல் அமீர் சூரி (Amir Suri) என்ற புத்தனாக மாறி இருந்த ஹிந்து அரச குடும்பத்தை சேர்ந்தவன் (அசோக மன்னனின் பௌத்த மத பிரச்சாரத்தால் ஏற்பட்ட வினை),
பாரசீக (இன்று Iran) நாட்டை கைப்பற்றி இருந்த சபாரித்து இஸ்லாமிய அரசனிடம் (Saffarid dynasty) தோற்று இஸ்லாமிய மதத்தை ஏற்றான்.

அவன் சந்ததி, கோரி (Ghori) என்ற இஸ்லாமிய வம்சத்தை பாரத மண்ணில் கொண்டு வந்தது. 
பாரத நாடாக இருந்த ஆப்கான், சிந்து (பாகிஸ்தான்), வங்கம் (பங்களாதேஷ்) இன்று இஸ்லாமிய நாடாக கொடுக்கப்பட்டு விட்டது.
பாலைவனத்தையே பார்த்து இருந்த அந்நிய தேச இஸ்லாமியர்கள், பாரத நாட்டில் நுழைந்தனர்.  நம் பாரத நாட்டை முழுவதுமாக 1000 வருடங்கள் ஆக்ரமித்தனர்.




1498ADல் "ஆடும், தேனும், ரொட்டியுமே பார்த்த கிறிஸ்தவ ஐரோப்பியர்கள்" இந்தியாவில் காலடி வைத்தனர்.
தங்கத்தில் புரண்டுகொண்டிருந்த கோழிக்கோடு சமுத்திர கரையை ஆண்ட கேரள மன்னனிடம், "மஞ்சள், மிளகு" போன்ற தானியத்துக்கு பதிலாக "தொப்பி, ஆட்டின் தோலால் செய்யப்பட்ட துணியை" பண்டமாற்றம் செய்ய கேட்டான்,
வாஸ்கோடகாமா என்ற கொள்ளையன்.
தங்கத்துடன் பண்டை மாற்ற வியாபாரம் செய் என்று அரசன் சொல்ல, இந்த திருடன், ஐரோப்பா தேசம் சென்று படைகள் திரட்டி வரலாம் என்று திரும்பும் போது, அங்கு இருந்த நகரையே கொளுத்தி விட்டு ஓடினான்.


என்ன கண்டுபிடித்து இருந்தார்கள் கிறிஸ்தவர்கள், நம் நாட்டிற்கு வருவதற்கு முன்? 
ஒரு உலகத்துக்கு நன்மை தரும் கண்டுபிடுப்பும் ஒன்று கூட இவர்கள் செய்யவில்லையே!!
தையல் தெய்க்கும் ஊசி கூட, இந்தியாவுக்கு நுழைந்த பின்னர் தானே இவர்கள் மூளையில் உதித்தது?  
யோசித்து பார்க்க வேண்டாமா நாம்?

அந்நிய இஸ்லாமியர்கள் நுழைவுக்கு முன், 947ADக்கு முன், நம் பாரத நாட்டின் சரித்திரம் எப்படி இருந்தது? என்று கவனிக்கும் போது,
இந்திய பொருளாதாரம், இந்தியாவின் தனித்தன்மையை மீண்டும் பெற வழிகள் தெரிகிறது.
*** அரசாங்கம், கோவில்களை தன் கட்டுப்பாட்டில் இருந்து விட வேண்டும்.

**** தெய்வங்களை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட வேண்டும். கோவிலை வைத்து நிர்வாகம் (கமிட்டி) அமைக்கப்பட கூடாது.

*** ஒவ்வொரு கோவிலையும் அந்த கோவிலின் பக்தர்கள் கவனித்து கொள்ளட்டும் என்று விட்டு விட கூடாது.
காரணம்,
சிதம்பரம் கோவிலை பார்த்து கொள்ளும் சிவ பக்தர்கள், வைத்தீஸ்வரன் கோவில் சிதிலமடைந்தால் கவனிக்க மாட்டார்கள்.

*** ஒரு மாநிலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் அனைத்துமே ஜீயர் போன்ற மடாதிபதிகள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.
*** ஒரு மாநிலத்தில் இருக்கும் சிவபெருமான் கோவில் அனைத்துமே காஞ்சி, மற்றும் பிற சைவ மடங்கள் தலைமையாக கொண்டு, கமிட்டி அமைக்கப்பட வேண்டும்.

*** எந்த தெய்வத்தின் மேல் பக்தி உண்டோ, அந்த பக்தர்களை கொண்டு கமிட்டி அமைத்து, மாநிலம் (ஸ்டேட்) அளவில் உள்ள அனைத்து கோவிலுக்கும் உரிய பொறுப்பை கொடுக்க வேண்டும் அமைக்க வேண்டும்.

இதற்கு மடாதிபதிகள், ஜீயர்கள், அடிகளார் ஏற்கனவே உள்ளனர்.
இதை ஒழுங்கு படுத்தி அரசாங்கம் இவர்களிடம் ஒப்படைத்தாலே போதுமானது.

*** அந்தந்த பக்தர்களை கொண்டு தமிழகம் முழுவதும் கமிட்டி அமைக்க வேண்டும்.

*** பெருமாள் கோவில்கள் அனைத்தும், பெருமாள் கோவிலுக்காக அமைத்த கமிட்டி நிர்வகிக்க வேண்டும்.
*** அது போலவே முருகனுக்கு, சிவனுக்கு, சக்திக்கு என்று அமைக்க பட வேண்டும்.

*** பெருமாள் பக்தனை, "சிவன் கோவிலையையும் பார்த்து கொள்!" என்று செய்ய கூடாது..   
பக்தி இல்லாத பூஜை நடக்கும் படியாக அமைந்து விட கூடாது.

*** எந்த தெய்வத்திடம் அதிக ஈடுபாடோ! அந்த கோவில் கமிட்டியில் மட்டுமே இருக்குமாறு செய்ய வேண்டும்.

இது 2 பெரிய லாபத்தை நமக்கு தரும்:
1.
வேதத்தை விட்டு, பிழைப்புக்கு ஓடிய பிராம்மணன், "தன் பிள்ளை பூஜை செய்வான்" என்று நம்புவான்.

"கோவிலில் பூஜை செய்வோம்" என்ற இந்த நம்பிக்கை தன் மகனை வேதம் படிக்க வைக்க செய்யும்.
பிராம்மணன் முதலில் அவனுக்கு கொடுக்கப்பட்ட வேலைக்கு திரும்ப இது வழி செய்யும்.




2.
பிராம்மணன் உலக படிப்பை விட்டு விலகும் போது, வேலை வாய்ப்பு அடுத்த சமுதாய மக்களுக்கு அதிகரிக்கும்.
பிராம்மணன் உலக கல்வி கற்றாலும், "கோவில் பூஜை கட்டாயம் செய்ய வேண்டும்" என்ற நிலை வந்தால்,
தான் கற்ற கல்வியை இலவசமாக சொல்லி கொடுக்கவும் ஆரம்பிப்பான்.

இந்த 2 நன்மையை தவிர,
3.
சிவ பக்தர்களால் ஏற்பட்ட கமிட்டி, 
பெருமாள் பக்தர்கள் மூலம் பெருமாளுக்கு நடக்கும் உத்சவங்களை பார்த்து, 
தாங்களும் சிவன் கோவில் திருப்பணி, உற்சவம் என்று ஆரம்பிப்பார்கள்.. பக்தியில் போட்டி ஏற்படும்

4.
பெருமாள் பக்தன் பாசுரங்கள் வாசித்து கொண்டு போனால்,
நடராஜருக்கு முன்னால் பதிகங்கள் பாடி செல்வார்கள்.

பக்தியில் போட்டி ஏற்படும்.
கோவில் திருப்பணிகள் ஏற்படும்.
தமிழ் மொழி "பாசுரங்கள், பதிகங்கள், கந்த புராணம்" போன்றவைகளால் உயிர்த்து ஏழும்.

5.
கோவில் திருப்பணியான கோவில்களை காண, தெய்வங்களை தரிசிக்க, பக்தர்கள் வருவார்கள்.
பக்தர்கள் வருகையால், அந்த ஊரில் வியாபாரங்கள் செழிக்கும்.

நாடு எளிதாக சுய சார்புள்ள நாடாக ஆகும்.

"என் பெருமாளுக்கு பெரிய கோவில் அமைப்பேன்" என்று ஒரு கோடீஸ்வரன் நினைத்தால்,
மற்றொரு கோடீஸ்வரன்
"முருகனுக்கு அதை விட பெரிய கோவில் கட்டுவேன்" என்று ஆசைப்படுவான்.
கலைகள் தானாகே வளரும். 
வேலைகள் நம் ஊரிலேயே மீண்டும் உற்பத்தி ஆகும்.

"ஒரு திருப்பதி, ஒரு பழனி" - ஊர் மக்களுக்கே சோறு போடுகிறது என்பதை நாம் மறந்து விட கூடாது.

நம் தெருவில் உள்ள கோவில் தெய்வங்களுக்கு சரியான காலத்தில் பூஜைகளும், திருவிழாவும், தேரும் இழுத்தாலேயே, தானாக பணம் வந்து கொட்டும்.
தெய்வத்தை மதித்தால், நமக்கு சோறு போடும்.
அன்ன தானம் பிறருக்கு போட, தெய்வமே நமக்கு செய்ய சக்தியும்  அளிக்கும்.




தெய்வங்களை நாம் பார்த்துக்கொண்டால், தெய்வங்கள் ஊருக்கே சோறு போடும்.  கோவில்கள் எதற்கு?. தெரிந்து கொள்ள இங்கே படியுங்கள்.

பாரத நாட்டில், "தெருவுக்கு தெரு கோவிலை வைத்து கொண்டு, பிச்சை எடுப்பது" துரதிருஷ்டம் அல்லவா!!..

தெய்வங்களை அலட்சியம் செய்து, பூஜைகள், மாதா மாதம் உற்சவங்கள் செய்யாமல் விட்டதால், இன்று பிச்சை எடுக்கிறோம் வெளிநாட்டிடம்.

நம் கலாச்சாரத்தை வெளிநாட்டவன் புரிந்து கொள்ள வேண்டிய நிலையில் நாம் இருக்க, சோற்றுக்காக, அவனுடைய  கீழ்த்தரமான கலாச்சாரத்தை நமக்கு சொல்லி தருகிறார்கள். 
வெட்கக்கேடு அல்லவா!

நம் நாடே சுற்றுலா நகரமாக ஆக்க முடியுமே?

சிறப்பாக நிர்வகிப்படும் கோவிலை பார்க்க வராத மக்கள் உண்டா? 

சரியாக தெய்வங்களை வைத்து கொண்டால், நம் தெய்வங்கள் எத்தனை பேருக்கு அன்னதானம் செய்யும் தெரியுமா? 
போய் பாருங்கள், திருப்பதியை.
போய் பாருங்கள் பழனி முருகனை .

தெய்வத்தை நாம் போற்றினால், தெய்வம் நம்மை நொடிப்பொழுதில் காத்து விடும்.
கோவிலை சுற்றியே வேலையும் கொடுப்பார். 

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் கற்பனை தெய்வங்கள் அல்ல. 
இதை புரிந்து கொள்ள வேண்டும் ஹிந்துக்கள்.

போற்றி பாருங்கள் நம் தெய்வங்களை. 
கூரையை பிய்த்து கொண்டு செல்வத்தை நமக்கு கொட்டி விடும்.

முருகன் பழனியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?
பெருமாள் திருப்பதியில் மட்டும் தான் அருள் புரிகிறார் என்று நினைப்பா?

உங்கள் தெருவில் உள்ள பெருமாள் கோவிலை அலங்கரியுங்கள்..  அதிசயம் நடக்கும்.  

உற்சவங்கள் மாதம் தோறும் செய்யுங்கள்... வியாபாரம் கிடைக்கும்.. 
ப்ராம்மணனை வேதம் படிக்க செய்யுங்கள்..
ப்ராம்மணனை பூஜை, கோவில் உத்சவங்கள் செய்ய சொல்லி,
உங்கள் வியாபாரத்தை, கோவிலை சுற்றி தொடங்குங்கள்..
பணமும் கொட்டும்... ப்ராம்மணான்னும் உங்கள் வேலையை தேட மாட்டான். 

947க்கு முன் இப்படி சுய சார்புள்ள இருந்த இந்தியாவை பார்த்து தானே, கிறிஸ்தவன் ஓடி வந்தான்? இஸ்லாமியன் ஓடி வந்தான்? 
யோசிப்போம் ஹிந்துக்களே ! யோசியுங்கள்..

சக்தியுள்ள "கந்தனை, பெருமாளை, சக்தியை, சிவபெருமானை, கணேசனை" மதிக்க தெரியாதாதால், நாம் பலரிடம் பிச்சை எடுக்கிறோம்.

மேல் மருவத்தூர் போய் பாருங்கள். 
ஒரே கோவில் தானே அங்கு உள்ளது.
ஆனால்,
அந்த ஆதிபராசக்தியை ஒரு உண்மையான பக்தன் பார்த்து கொள்ளும் போது, அந்த ஊரே பிரபலமாகி இருக்கிறது.

அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அன்னதானம் போடுகிறாள் பாருங்கள்.
அந்த ஆதிபராசக்தி, எத்தனை பேருக்கு அங்கேயே வியாபாரம் செய்ய தொழில் தருகிறாள் பாருங்கள்.




இந்த ரகசியம் எங்கெல்லாம் நடைமுறையில் உள்ளதோ, அங்கெல்லாம், மக்கள் நிம்மதியாக அங்கேயே தொழில் செய்து கொண்டு, நிம்மதியாக இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

இந்தியா முழுவதும் இந்தியாவை கோவில் நகரமாக ஆக்கினால், கோடிக்கணக்கான மக்கள், அந்நிய தேசத்தில் இருந்து வருவார்கள். 

இவர்கள் வருகையை நமக்கு பல கோடி வர்த்தகத்தை தரும். 

"யோசிக்க்க வேண்டும்" நம் அரசாங்கம்.
நம் நாடு வணிக நாடல்ல. விவசாய நாடல்ல..
இது ஒரு ஆன்மீக பூமி.

ஆன்மீக ஈடுபாடு வளர வளர, தெய்வங்கள் நம்மை காக்கும்,

இன்று கோவிலுக்கு நடுவில் கிறிஸ்தவ ஆலயம் கட்ட அடிபோடும் மதம் மாறி போன ஹிந்து,
"பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு வந்தது போல" திரும்பி ஓடி வருவான்.

பெரும் புரட்சி நடக்கும் இந்த மாற்றத்தை,
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்து விட்டால்,
பொருளாதாரம் உலகில் வீழ்ந்தாலும்,
சக்தி வாய்ந்த கோவில் தெய்வங்கள், தன்னை காக்கும் நம்மை, 'ரக்ஷிக்கும், சோறு போடும்'.

அரசாங்கம் கோவிலை விட்டால் மட்டும் இது சாத்தியமில்லை..
அந்தந்த தெய்வத்தை விரும்பும் பக்தர்களை கொண்டு, அந்தந்த தெய்வத்தை நிர்வகிக்க செய்ய கமிட்டி அமைக்க வேண்டும்.

இதை செய்து விட்டால், பெரும் மாற்றங்கள் 5 வருடங்களில் நடந்து விடும்.

"ஆன்மீக பூமி" தன்னை தானே சரி செய்து கொள்ளும்.