Followers

Search Here...

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Saturday 29 August 2020

'ராவணன் பேசிய பச்சை பொய்' தெரிந்து கொள்ள வேண்டாமா .. சீதையின் புலம்பல்.. தமிழன் 'வால்மீகி' கொடுத்த ராமாயணம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

சீதா தேவியை மீட்க, வானர சேனையை திரட்டி கொண்டு, இலங்கையை நோக்கி வந்தார் ராமபிரான்

"சார்தூளா" என்ற ஒற்றன், ராவணனிடம் இதை தெரிவிக்க, "சுகா" என்ற ராக்ஷஸ ஒற்றனை மேலும் விவரம் அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் பிடித்து கட்டி வைத்தனர்.

ஐந்தே நாளில், கடலில் பாலம் அமைத்து, இலங்கையை வந்து அடைந்தார் ராமபிரான்.

பிறகு சுகாவை விடுவித்து அனுப்பினார். 




பிறகும், ராவணன், சுகனோடு 'சாரணன்' என்ற மற்றொரு ராக்ஷஸ ஒற்றனை அனுப்பி, வானர வீரர்களின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவம் மாற்றி கொண்டு, இவர்கள் இருப்பதை கண்டு விபீஷணன் ராமபிரானிடம் தெரிவிக்க, இருவரையும் பிடித்து கட்டினர் வானரர்கள்.

ராமபிரான் இவர்களை விடுவித்து, விபீஷணனையே இவர்களுக்கு முழு படைபலத்தையும் காட்ட சொல்லி, திருப்பி அனுப்பினார்.


'சுக சாரணன்' இருவரும் வானரர்கள் படை பலத்தை ராவணனிடம் பிரமிப்புடன் சொல்ல, சார்தூளா கோபம் அடைகிறான்

எதிரியை போற்றும் படியாக ராவணனிடம் பேசுவதை கண்டித்தான். 

'சுக சாரணன்' இருவரும், அமைதியுடன், 'ராவணனுக்கு வெற்றி உண்டாகட்டும்' என்று சொல்லி விட்டு சபையை விட்டு கிளம்பினர்.

ராவணன், மகோதரன் என்ற ஒரு மந்திரியை பார்த்து, "சிறந்த ஒற்றர்களை" சபைக்கு அழைத்து வர சொன்னான்.

உடனே, தலை சிறந்த ராஜ ஒற்றர்களை, ராவணன் முன் அழைத்து வந்தான் மகோதரன்.

சார்தூலாவின் தலைமையில், அனைத்து ஒற்றர்களையும் ராமபிரானை பற்றி அறிந்து வர அனுப்பினான்.

"ராமனின் திறன் என்ன? ராமனுக்கு பிடித்தமானவர்கள் யார் யார்? 

யாரெல்லாம் ராமனுக்கு நட்பாக இருக்கிறார்கள்? 

ராமன் எப்பொழுது தூங்குவார்? எப்பொழுது விழிப்பார்? 

வேறு என்னவெல்லாம் காரியம் செய்கிறார்? 

என்னவெல்லாம் செய்ய நினைக்கிறார்? 

அனைத்தையும் தெரிந்து கொண்டு என்னிடம் வந்து சொல்ல வேண்டும்" 

என்று உத்தரவு செய்தான்.

மாயாவிகளான இவர்கள் வானர்ர்களோடு கலந்து கொண்டு சுவேல மலையில் இருக்க, கடல் போன்ற வானர சேனையை பார்த்து அச்சம் கொண்டனர்.

விபீஷணன் மீண்டும் இவர்களை கண்டுபிடித்து விட்டார். 

சார்தூளா வானரர்களிடம் மாட்டி கொண்டு விட, இவர்களை வானரர்கள் ரத்தம் வரும் வரை கைகளை மடக்கி குத்தி, முட்டியால் குத்தி, பற்களால் கடித்து உயிர் போகும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

சுவேல மலையில் இருந்த ராமபிரான், மீண்டும் வானரர்களை தடுத்து, அனைவரையும் விடுவித்தார்.

ராவணனிடம் திரும்பி வந்த சார்தூளவும் மற்ற ஒற்றர்களும், பெரும் மரண பீதியில் இருந்தனர்.


ராவணன் இவர்களின் வெளுத்து போன முகத்தை பார்த்து, மனஉளைச்சலுடன் "ஏன் இப்படி சோர்ந்து இருக்கிறீர்கள்? நீங்களும் எதிரிகளின் கட்டுப்பாட்டில் சிக்கினீர்களா?" 

என்று கேட்டான்.


நடந்த விஷயத்தை சொல்லி, குறிப்பாக 'ஒவ்வொரு வானரனும் எந்த தேவனின் அம்சமாக இருக்கிறார்கள்?' என்று சார்தூளா ராவணனிடம் சொல்கிறான்...

"அரசே! வானர அரசன் சுக்ரீவன், ருக்ஷராஜனின் மகன். 

ஜாம்பவான் கட்கதனின் இளைய மகன். தும்ரா கட்கதனின் மூத்த மகன். 

கேசரி ப்ருஹஸ்பதியின் மகன்.

இலங்கையில் புகுந்து ராக்ஷஸரகள் பலரை கொன்ற ஹனுமான் கேசரியின் மகன்.

சுசேனன் சாஷாத் தர்ம தேவதையின் மகன்.

ததிமுகன் சோம தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

சுமுகன் மரண தேவதையின் அம்சமாக தோன்றியவன்.

படைத்தளபதியான நீலன் அக்னி தேவனின் அம்சம்.

ஹனுமான் வாயு தேவனின் அம்சம்.

அங்கதன் இந்திரனின் பேரன்.

மைந்தனும் த்விவிதனும் அஸ்வினி குமாரர்களின் அம்சம்.

கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்தமாதன் அனைவரும் சூரிய தேவனின் பிள்ளைகள்.

10 கோடிக்கும் மேலான வானரர்கள் போர் செய்ய குவிந்து இருக்கிறார்கள்.




இளமையான வீரனாக இருக்கும் ராமன், தசரதனின் பிள்ளை.

அந்த ராமன் தான் கர, தூஷன, த்ரிசிரர்களை கொன்றார்.

யாருமே அந்த ராமனை எதிர்க்க முடியவில்லை.

விராதா மற்றும் கபந்தன் போன்ற ராக்ஷஸர்களையும் கொன்றவர் இந்த ஸ்ரீராமன்.

ஜனஸ்தானத்தில் இருந்த ஒட்டு மொத்த ராக்ஷஸர்களும் வேரோடு அழிந்து விட்டனர்.

கூடவே இருக்கும் லக்ஷ்மணன் விடும் பாணத்தை இந்திரன் கூட தடுக்க இயலாது."

இப்படி வானரர்கள் அனைவரையும் பற்றி சொல்ல, ராவணன் மனகுழப்பம் அடைந்தான்.

சிறிது நேரம் தன் மந்திரிகளிடம் ஆலோசனை செய்து விட்டு, தன் மாளிகைக்கு சென்றான்.


தனது மாளிகையில், "வித்யுஜிஹ்வா" என்ற மாயாவியை அழைத்து இவ்வாறு பேசினான்,

"சீதையை மாயத்தால் குழப்ப வேண்டும். நீ உடனேயே மாயையால் ராமனின் தலையையும், அவன் கையில் வைத்து இருக்கும் அம்பு, வில்லை கொண்டு வா" என்றான்.

(வித்யுஜிஹ்வம் ச மாயாக்யம் அப்ரவீத் ராக்ஷஸாதிப: ! மோஹயிஷ்யாவஹே சீதாம் மாயயா ஜனகாத்மஜாம் !! 

சிரோ மாயாமயம் க்ருஹ்ய ராகவஸ்ய நிஸாசர! த்வம் மாம் சமுபதிஸ்டஸ்வ மஹச்ச சசரம் தனு:!! - வால்மீகி ராமாயணம்)


வித்யுஜிஹ்வா உடனேயே மாயா ரூபமான ராமனின் தலையும், வில்லும் அம்பும் கொடுக்க, ராவணன் அந்த மாயாவிக்கு தான் அணிந்து இருந்த ஆபரணத்தை பரிசாக கொடுத்து அனுப்பினான்.


பிறகு, 

ராவணன் அசோக வனத்தில் இருக்கும் சீதையை பார்க்க ஆவலுடன் சென்றான்.


அபலையான சீதை தலை குனிந்து நிலத்தை பார்த்து கொண்டே, ராமபிரானின் நினைவிலேயே, பயமுறுத்தும் ராக்ஷஸிகள் சூழ அமர்ந்து இருந்தாள்.

மிகவும் உற்சாகமாக தன்னை பற்றி உயர்வாக சீதையை பார்த்து பேசலானான் ராவணன், 

"சீதா! நான் உன்னிடம் எத்தனை மதுரமாக பேசினாலும், அந்த ராமனை நம்பிக்கொண்டு ஏதோ உளருகிறாய். 

பரிதாபம்! கரண் போன்ற ராக்ஷஸரகளை கொன்ற உன் கணவன் இப்பொழுது போரில் கொல்லப்பட்டு விட்டான்.

உன் நம்பிக்கை அனைத்தும், என்னால் வேர் அறுக்கப்பட்டு சின்னாபின்னம் ஆக்கப்பட்டு விட்டது. 

(கர ஹந்தா ச தே பர்தா ராகவ சமரே ஹத:! சின்னம் தே சர்வதோ மூலே தர்பஸ்தே விஹிதோ மயா!  - வால்மீகி ராமாயணம்)

கலங்கி இருக்கும் சீதா, இனி நீ என்னுடைய மனைவியாக ஆக போகிறாய்.

(வ்யசனே ஆத்மன: சீதே மம பார்யா பவிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

சீதா! முட்டாள்த்தனமான நம்பிக்கையை விடு..  செத்துபோனவனை வைத்து என்ன செய்ய போகிறாய்?

(விஸ்ருஜே மாம் மதிம் மூடே கிம் ம்ருதேன கரிஷ்யசி  - வால்மீகி ராமாயணம்)

ஒழுக்கமானவளே! என் மனைவிகள் அனைவருக்கும் மேலே உன்னை ஆக்கி, பட்டத்து ராணியாக உன்னை ஆக்குகிறேன்.

(பவஸ்ய பத்ரே பார்யானாம் சர்வாசாம் ஈஸ்வரி மம  - வால்மீகி ராமாயணம்)

அல்ப புண்ணியங்கள் கொண்டவளே! மூடத்தனமாக நீ உன்னையே எல்லாம் தெரிந்தவள் என்று நினைத்து கொண்டு இருக்கிறாய்.

(அல்ப புண்யே நிவ்ருத்தார்த்தே மூடே பாண்டிதம் ஆனினி!  - வால்மீகி ராமாயணம்)

சொல்கிறேன் கேள்... உன் கணவன் ராமன் கொடூரமாக கொல்லப்பட்டு விட்டான்.

(ஸ்ருணு பர்த்ரு வதம் சீதே கோரம் வ்ருத்ர வதம் யதா!  - வால்மீகி ராமாயணம்)

இந்த ராமன் சுக்ரீவன் தலைமை ஏற்ற பெரும் படையை கூட்டிக்கொண்டு, என்னை கொல்வதற்கு கடற்கரை பக்கம் போர் புரிய வந்தான்.

(சமாயாத சமுத்ராந்தம் மாம் ஹந்தும் கில ராகவ:!  - வால்மீகி ராமாயணம்)

சூரியன் மறைந்த வேளையில், வடக்கு சமுத்திர கரையில் படைகளுடன் தங்கி இருந்தான்.

பயண களைப்பில் சோர்ந்து இருந்த இவர்கள் ஓய்வு எடுத்து கொண்டு இருந்தனர்.

என்னுடைய ஒற்றர் படை அங்கு சென்று இதை கவனித்தனர்.

ப்ரஹஸ்தன் தலைமையில் பெரும் ராக்ஷஸ படை அங்கு சென்றனர்.

(தத் ப்ரஹஸ்த ப்ரணீதேன பலேன மஹதா மம! - வால்மீகி ராமாயணம்)

ராமனின் மொத்த படைகளும் இரவோடு இரவாக அழிக்கப்பட்டது.

ராக்ஷஸர்கள் தங்களிடம் இருந்த பிராணிகளை பிடிக்கும் ஆயுதங்களை கொண்டும், கதையை கொண்டும், சக்கரத்தை கொண்டும், கம்புகளை கொண்டும், கத்தியை கொண்டும், அம்புகளை கொண்டும், கூர்மையான ஆணிகள் பதித்த கதையை கொண்டும், ஏவுகணை போன்ற ஆயுதங்களை கொண்டும் அடியோடு வானர கூட்டத்தை அழித்தனர்.

அந்த சமயத்தில், தூங்கி கொண்டிருந்த ராமனின் அருகில் சென்ற ப்ரஹஸ்தன் தன் கூரிய வாளால் ராமனின் தலையை சீவி விட்டான். அங்கு அவனை எதிர்ப்பதற்கு ஒரு ஆள் இல்லை.

(அத சுப்தஸ்ய ராமஸ்ய ப்ரஹஸ்தேன ப்ரமாதினா! அசக்தம் க்ருத ஹஸ்தேன சிரஸ் சின்னம் மஹாசினா! - வால்மீகி ராமாயணம்)


விபீஷணன் சிறைபிடிக்கப்பட்டான்.

லக்ஷ்மணன் எஞ்சி இருந்த வானர கூட்டத்துடன் விரட்டி அடிக்கப்பட்டான்.

சுக்ரீவன் கழுத்து நொறுக்கப்பட்டு கீழே வீழ்ந்தான்.

ஹனுமான் ராக்ஷஸர்களால் தாடை உடைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.

ஜாம்பவான் மண்டி இட்டு காலில் விழுந்தான். அவனை ஈட்டியால் குத்தி மரத்தை சாய்ப்பது போல சாய்த்து விட்டனர்.

மைந்தன், த்விவிதன் இருவரும் வீழ்த்தப்பட்டனர். 

அனைவரும் வெட்டப்பட்டு, ரத்த வெள்ளத்தில் அழுது விழுந்தனர்.

பனசன் பனச மரத்தை போல விழுந்தான்.

தரீமுகன் பலமுறை வெட்டப்பட்டு கீழே விழுந்தான்.

குமுதன் அம்புகளால் வீழ்த்தப்பட்டான். வலியால் கதற கூட முடியாமல் இறந்தான்.

அங்கதன் பல ஆயிரம் அம்புகளால் தாக்கப்பட்டு வீழ்ந்தான்.

வானர கூட்டம் யானைகளால் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

பலர் தேரிலும் குதிரைகளின் கால்களிலும் மிதிக்கப்பட்டு கொல்லப்பட்டனர்.

யானைகள் சிங்கத்தால் பின் பக்கத்தில் இருந்து தாக்கப்படுவது போல, ராக்ஷஸர்கள் வானரர்களை தாக்கினர். 

பலர் கடலில் விழுந்து உயிர் விட்டனர்.

பல வானரர்கள் கடற்கரையிலும், மலைகளிலும், மரங்களுக்கு இடையிலும் ராக்ஷஸர்களால் கொல்லப்பட்டனர்.

இப்படி என்னுடைய படைகள் உன் கணவனையும் அவன் படையையும் அழித்து விட்டனர்.

உனக்காக புழுதி படிந்த ரத்தம் ஒழுகும் ராமனின் தலையை கொண்டு வந்து இருக்கிறேன்."

இப்படி சொல்லிக்கொண்டே, அருகில் இருந்த ஒரு ராக்ஷஸியை பார்த்து, 

"வித்யுஜிஹ்வாவை போரிலிருந்து கொண்டு வந்த ராமனின் தலையோடு இங்கு வரச்சொல்" 

என்று கட்டளை இட்டான்.

வித்யுஜிஹ்வா மாயா ரூபமான ராமனின் தலையுடன், ராமபிரான் வைத்து இருக்கும் அம்பு வில்லை காண்பித்தான்.

ராவணன், வித்யுஜிஹ்வாவை பார்த்து, 

"அந்த ராமனின் தலையை சீதைக்கு முன் வை. கடைசி முறையாக அவள் கணவனை பார்த்து கொள்ளட்டும்." என்றான்

(அக்ரத குரு சீதாயா சீக்ரம் தாசரதே சிர:! அவஸ்தாம் பஸ்சிமாம் பர்த்ரு க்ருபனா சாது பஸ்யது!! - வால்மீகி ராமாயணம்)


உடனே வித்யுஜிஹ்வா சீதையின் முன் மாயா ரூபமான ராமபிரான் தலையை வைத்தான்.


ராவணன், மாயா ரூபமான ராமனின் வில்லை சீதையின் முன் வீசிவிட்டு, சீதையை பார்த்து,

"இதோ பார்.. ராமனின் நாண் ஏற்றப்பட்ட வில். இரவோடு இரவாக அந்த மனிதன் கொல்லப்பட்ட பின், ப்ரஹஸ்தன் இதை கொண்டு வந்தான்.

சீதா! நீ எனக்கு வசமாகி விடு."

என்று பேசினான்.

ராமபிரானின் தலையையும், தலை கேசத்தையும், அவர் அணிந்து இருந்த குண்டலம் போன்ற ஆபரணங்களையும், வில்லையும் பார்த்த சீதை, ராவணன் சொன்ன வார்த்தையை நம்பி விட்டாள்.

கதறி அழுத சீதை, நிலை தடுமாறி பேசலானாள். 

"கைகேயி! சந்தோஷமாக இருங்கள். இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய உத்தமர் கொலை செய்யப்பட்டு விட்டார்.

உங்களால் குலமே நாசமாகி விட்டது.

மற்றவர்கள் துயரத்தில் நீங்கள் ஆனந்தப்படுங்கள்.

எந்த விதத்தில் உங்களுக்கு ராமபிரான் துன்பம் செய்தார்?

எதற்காக அவருக்கு மரவுரி அணிந்து வனம் செல்ல செய்தீர்கள்?"

இப்படி சொல்லிக்கொண்டே வேரோடு சாய்க்கப்பட்ட வாழை மரம் போல சீதை மயங்கி விழுந்தாள்.


சிறிது நேரத்தில் தன்னை சுதாரித்து கொண்டு, ராமபிரானின் தலையை முகர்ந்து கொண்டே, புலம்ப ஆரம்பித்தாள்...

"ஐயோ! நான் இறந்து விட்டேன். 

நீண்ட கைகள் உடைய என் நாதா! 

சத்தியத்தை கடைபிடிக்கும் நாயகா! நான் இறந்து விட்டேன்!

ஐயோ! நான் விதவை ஆனேனே! 


மனைவிக்கு முன்னால் கணவன் போவது நியாயமா?

ஒழுக்கத்தில் சிறந்தவரே! என்னை முந்தி கொண்டு நீங்கள் சென்று விட்டீர்களா?

என்னுடைய சோகத்திலிருந்து இனி என்னை மரணம் மட்டுமே மீட்க முடியும்..

ஐயோ! கன்றை இழந்த தாய் பசு போல, என் மாமியார் கௌசல்யா தவிப்பாளே!

உங்களுக்கு நீண்ட ஆயுசு என்று ஜாதகம் கணித்தார்களே!! 

அவர்கள் சொன்ன சொல் பொய் போனதே! இப்படி சிறுவயதோடு உங்கள் வாழ்வு முடிந்து விட்டதே!

எந்த நேரமும் சுதாரிப்புடன் இருக்கும் உங்களையும், காலம் விழுங்கி விட்டதா?

அரசாங்க அறிவு உள்ளவராயிற்றே நீங்கள்.. எப்படி நீங்கள் இப்படி உடலை விட்டு பிரிந்து இருக்க முடியும்?

பெரும் அபாயகரமான சூழ்நிலையிலும் தப்பித்து கொள்ளும் திறன் கொண்டவரல்லவா நீங்கள்?

உங்களை எப்படி இந்த இரவு கொள்ளை கொண்டது?

ஓ தாமரை கண்ணா! என்னை விட்டு பிரிந்து விட்டீர்களே!

எளிமையான என்னை விட்டு விட்டு, பூமியின் மேல் உள்ள ஆசையால் சென்று விட்டீர்களா?

இந்த அற்புதமான வில்லை நான் எத்தனை முறை மலர்களால் பூஜித்து இருப்பேன்.

குறை இல்லாதவரே! நீங்கள் உங்கள் மூதாதையர்களும், என் மாமனார் தசரதர் இருக்கும் லோகத்துக்கு சென்று விட்டீர்களா?

உங்களுடைய ஒழுக்கமான நடத்தையால் நீங்கள் நக்ஷத்திரமாக இருந்து கொண்டு இருக்கிறீர்களா?

ஏன் நீங்கள் என்னை பார்க்க வில்லை? 

என்னிடம் ஏன் பேசவில்லை?

இளமை காலத்தில் உங்களை மணந்த பின், உங்களை தானே நான் தொடர்கிறேன்.

மணமேடையில் என் கை பிடித்து, என்னை ஒருபோதும் விட மாட்டேன் என்று சொன்னீர்களே!

அதை ஞாபகபடுத்தி கொண்டு, உடனே என்னையும் அழைத்து கொள்ளுங்கள்.

(சம்ஸ்ருதம் க்ருஹ்னதா பாணிம் சரிஷ்யாமீதி யத் த்வயா! ஸ்மர தன் மம காகுத்ஸம் நய மாமபி துக்கிதாம்!! - வால்மீகி ராமாயணம்)

என்னை இந்த உலகத்தில் விட்டு விட்டு, வேறு உலகத்துக்கு ஏன் சென்றீர்கள்?

அடைக்கலம் தருபவரே! என்னால் அணைக்கப்பட்ட உங்கள் தேகத்தை, பிராணிகள் எப்படி இழுத்து செல்ல முடியும்?

வேத காரியங்கள் பல செய்தீர்களே. உங்களுக்கு வேத முறைப்படி இறுதி காரியங்கள் ஏன் கிடைக்கவில்லை?

நாம் மூன்று பேரும் வனவாசம் வந்தோம்.

இப்பொழுது லக்ஷ்மணன் மட்டுமே திரும்பி செல்கிறான்.

கௌசல்யா மாதா லக்ஷ்மணனை கேட்பாளே!! 

லக்ஷ்மணன் ராக்ஷஸர்களால் இரவில் நடந்த பேரழிவை சொல்லவேண்டி வருமே!

நான் இந்த ராக்ஷஸர்களிடம் சிக்கி இருப்பதையும், ராமபிரானை விண்ணுலகம் சென்றதையும் கேட்டால், கௌசல்யா மாதாவின் இதயம் சுக்கு நூறாகி விடுமே!!

இவர் எனக்காக கடல் கடந்து வந்தது பலன் அளிக்கவில்லையே!!

இந்த சிறிய சண்டையில் இவர் கொல்லப்பட்டு விட்டாரே!!

மனைவி என்ற பெயரில் நானே மரணமாக வந்து தொலைந்தேனே! 

இதை தெரிந்து கொள்ளாமல் ராகவன் என்னை மணந்து கொண்டு விட்டாரே!

நான் போன ஜென்மத்தில் ஏழைகளுக்கு தானம் செய்வதை நிறுத்தி இருக்கிறேன். அதனால் தான் யாருக்கும் அபயம் தரும் இவருக்கு மனைவியாக இருந்தும், இத்தனை துன்பத்தை அனுபவிக்கிறேன்.

ராவணா! என் உடலையும் ராமபிரானின் உடலோடு வைத்து விடு.

என் கணவனோடு என்னையும் எரித்து விடு. இந்த புண்ணிய காரியத்தையாவது செய்.

என் தலை ராமபிரான் தலையோடு சேரட்டும்.. என் தேகம் ராமபிரானின் தேகத்தோடு சேரட்டும். நான் அந்த உயர்ந்த ஆத்மாவான ராபிரானையே தொடர்கிறேன்!"

இவ்வாறு தன் கணவனின் தலையையும், வில்லையும் பார்த்து பார்த்து புலம்பினாள் சீதை.

இப்படி இவள் அழுது கொண்டு இருக்க, ராக்ஷஸ படையில் இருந்து சிலர் அங்கு வந்து கை குவித்து நின்றனர்.

பிறகு ராவணனை பார்த்து, 

"ப்ரஹஸ்தன் அனைத்து மந்திரிகளுடன் வந்து இருக்கிறார். உங்களை பார்க்க ஆவலாக இருக்கிறார். இது ஒரு அவசர செய்தி. தயவு செய்து உங்கள் அமைச்சர்களை பார்க்க அழைக்கிறோம்" என்றார்கள்.

இதை கேட்ட ராவணன் உடனே அசோக வனத்தை விட்டு, தன் சபையை நோக்கி சென்றான்.

ராவணன் நகர்ந்து போன உடனேயே, அங்கு இருந்த மாயா ரூபமான ராமபிரான் தலையும், வில்லும் மறைந்து போயின.

(அந்தர்தானம் து தச்சீர்ஷம் தச்ச கார் முகம் உத்தமம்! ஜகாம ராவணஸ்யைவ நிர்யான சமன் அந்தரம்!! - வால்மீகி ராமாயணம்)










Thursday 27 August 2020

கிருஷ்ணகிரி என்ற ஊர் எத்தனை பழமை வாய்ந்தது? வால்மீகி ராமாயணம் காட்டுகிறது.. மூன்று விதமான மனிதர்கள் இருந்தார்கள் என்றும் வால்மீகி ராமாயண சொல்கிறது. தமிழன் தெரிந்து கொள்ள வேண்டாமா?..

ராமாயணம் நடந்த காலம் த்ரேதா யுகம்.. 
சுமார் 8 லட்சம் வருடம் முன்பு நடந்த அவதாரம்.
கலியுகம் ஆரம்பித்து (3102BCE) 5000 வருடங்கள் ஆகிறது.
கலியுகம் முன் துவாபர யுகம். இந்த யுகம் 8,64,000 வருடங்கள்.
துவாபர யுகத்திற்கு முன் த்ரேதா யுகம்.
ராமாயணம் த்ரேதா யுகத்தில் நடந்த சரித்திரம்.

அன்று த்ரேதா யுகத்தில், 'மூன்று விதமான மனிதர்கள்' இருந்ததாக சொல்கிறது - 'மனிதர்கள், வானரர்கள், ராக்ஷஸர்கள்'.

மனிதர்களை விட பலசாலிகளாகவும், மாயம் தெரிந்தவர்களாகவும், படித்தவர்களாகவும் இவர்கள் இருந்ததாக சொல்கிறது. 
ஆனால் குரங்கு போன்ற நிலையில்லா புத்தி 'வானரர்களுக்கும்', 
மனித மாமிசம் பச்சையாக உண்ணும் பழக்கம் 'ராக்ஷஸர்களுக்கும்' இருந்ததாக சொல்லப்படுகிறது.



ஹோமோசபியன் (home Sapien) என்ற நம்மை போன்ற உருவமைப்பு உள்ள மனிதர்களாக அகத்தியர், ராமபிரான், அயோத்தி மக்கள், மிதிலை மக்கள் என்று பலர் ராமாயணத்தில் காட்டப்படுகிறார்கள்.

இதை எழுதிய 'தமிழன் வால்மீகி' உட்பட மனித வர்க்கமாக காட்டப்படுகிறார்கள்.

ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்டவர்கள் பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ எரக்டஸ் (homo Erectus) என்ற மனித உருவம் கொண்ட, தாவும் திறன் உள்ள ஹனுமான், சுக்ரீவன், அங்கதன் போன்ற வான்-நரர்கள் (வானரர்கள்) எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது. 

ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, பலசாலியான, மனித மாமிசம் உண்பவர்கள், பல லட்சம் வருடம் முன்பு இருந்தார்கள் என்று ஆராய்ச்சிகள் சொல்கிறது.
ஹோமோ நைன்டெர்தல் (homo naenderthal) என்ற மனித உருவம் கொண்ட, மனித மாமிசம் உண்ணும் சூர்பனகா, கும்பகர்ணன், ராவணன், மாரீசன் போன்ற ராக்ஷஸர்கள் எப்படி இருந்தார்கள்? என்று ராமாயணம் காட்டுகிறது.

ராமாயணம் நடந்ததற்கு இலங்கை சாட்சி, ராம சேது (அணை) சாட்சி, கிருஷ்ணகிரி சாட்சி, அயோத்தி சாட்சி, மிதிலை சாட்சி..

இடம் மட்டுமல்ல, அறிவியல் காட்டும் 3 வகை மனிதர்களை பற்றி, அவர்கள் எப்படி இருந்தார்கள்? என்பதற்கும் ராமாயணம் சாட்சி.






அயோத்தி என்ற நகரம் மட்டும் பழமையானதல்ல, 'அயோத்தி' என்ற பெயர் கூட பழமையானது. 
இந்த நகரம்' ராமபிரான் காலத்துக்கும் முன்பேயே இருந்து இருக்கிறது.
குறைந்தபட்சம் 8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது என்பதே 'அயோத்திக்கு' பெருமை.
இன்று வரை, அயோத்தி என்ற பெயரிலேயே இருக்கிறது.

அது போல 
'கிருஷ்ணகிரி' என்ற பெயரும் வால்மீகி எழுதிய ராமாயணத்தில் வருகிறது. 
8 லக்ஷம் வருடம் ஆகியும், நகரத்தின் பெயர் நிலைத்து இருக்கிறது. 

8 லட்ச வருடங்களுக்கும் மேல் இந்த பெயரை தனக்கே உரிமையாக கொண்டுள்ளது இந்த ஊர்.

வால்மீகி ராமாயணத்தில் 'யுத்த காண்டத்தில்' கிருஷ்ணகிரி என்ற இந்த ஊரின் பெயரும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது...

தாமரை போன்ற கண்களையுடைய ராமபிரான் மஹேந்திர மலையின் உச்சிக்கு சென்றார்.
அங்கிருந்து ஆமைகளும், மீன்களும் நிரம்பி இருக்கும் சமுத்திரத்தை கண்டார்.

பிறகு, வானர சேனையுடன், சஹ்ய மலை, மலய மலையை கடந்து, பிறகு வேலாவனம் என்ற காட்டை கடந்து கடற்கரையை அடைந்தார்கள். (இன்று ராமேஸ்வரம் என்று பெயர்)

(தே சஹ்யம் சமதிக்ரம்ய மலயஸ்ச மஹா கிரிம்! ஆசேதுரானுபூர்வ்யேன சமுத்ரம் பீமநிஸ்வனம்!
அவருஹ்ய ஜகாமாஸு வேலாவனம் அனுத்தமம் - வால்மீகி ராமாயணம்)

இதற்கு பிறகு விபீஷணன் ராமபிரானை சரண் அடைகிறார்.
சமுத்திர தேவன் ராமபிரான் முன் காட்சி கொடுத்து, 'நலன்' இந்த பாலத்தை கட்ட ஆரம்பிக்கட்டும், நான் அதை காக்கிறேன் என்று உறுதி அளித்தார்.

அப்பொழுது ராவணனின் ஒற்றன் 'சார்தூளா' என்பவன் ராமபிரான் கடற்கரை வரை வந்து விட்டதை தெரிவித்தான்.
ராவணன்  'சுகா' என்ற ராக்ஷஸ ஒற்றனை என்ன நடக்கிறது என்று பார்த்து வர உத்தரவு இட்டான். 

மாயாவியான இவன் பறவை ரூபம் எடுத்து பறந்து வர, அவனை வானரர்கள் பிடித்து இறக்கைகளை வெட்டி, சிறை பிடித்தனர்.

'தூதுவனை கொல்ல கூடாது' என்று இவன் கதற, ராமபிரான் அனைவரையும் தடுத்து விட்டார்.

'வெறும் 5 நாட்களில் பாலம் அமைத்து விட்டார்' நலன்
ராம சேது அமைக்கப்பட்டு, படைகளுடன் இலங்கையை வந்து அடைந்தார்.
இலங்கை வந்ததும் ராமபிரான் 'சுகா' என்ற ஒற்றனை விடுவிக்க சொல்லி விட்டார்.

'உயிர் போய் விடுமோ' என்ற பயந்து இருந்த சுகா, ராவணனிடம் ஓடி சென்று, 'ராமபிரான் படைகளோடு வந்து இலங்கைக்கே வந்து விட்டார்' என்று சொன்னான்.

அப்பொழுது ராவணன் சிரித்த கொண்டே,
"என்ன இது? ஏன் இப்படி இரண்டு கைகளும் ஒடிந்து இருக்கிறாய்? அந்த நிலையான புத்தி இல்லாத வானரர்களிடமா (homo erectus) மாட்டி கொண்டு விட்டாய்?" 
என்று சிரித்தான்.
(கச்சின்ன அநேக சித்தானாம் தேஷாம் த்வம் வசமாகத? - வால்மீகி ராமாயணம்)

"இலங்கைக்கே வந்து விட்டார்கள்" என்றதும், ராவணன், சுகா மற்றும் சாரண என்ற இருவரை அழைத்து மீண்டும் படைகளின் பலத்தை அறிந்து வர அனுப்பினான்.

வானரர்கள் போல உருவத்தை மாற்றி இவர்கள் வானர கூட்டத்தின் பலத்தை வேவு பார்க்க ஆரம்பித்தனர்.

விபீஷணன் இவர்களை கண்டுபிடித்து, ராமபிரானிடம் சொல்ல, இருவரையும் வானரர்கள் பிடித்து நிறுத்தினர்.




'ராவணன் தான் தங்களை அனுப்பினார்' என்று சொல்ல, ராமபிரான் சிரித்து கொண்டே, 
"உன் அரசன் சொன்ன வேலையை செய்து விட்டீர்களா? முழு படை பலத்தையும் பார்த்து விட்டீர்களா? இன்னும் பார்க்க வேண்டுமா? பார்த்து விட்டால் கிளம்புங்கள். 
இன்னும் பார்க்கவில்லை என்றால், விபீஷணனே உங்களுக்கு எங்கள் படைபலத்தை காட்டுவார்". 

இப்படி ராமபிரான் அனுமதியோடு அனைத்தும் விஷயங்களும் அறிந்து கொண்ட பின், ராவணன் இருக்குமிடம் சென்றனர்.

நடந்த விஷயங்களை கூறி, பல வானர வீரர்கள் பற்றியும், அவர்கள் எந்த தேசத்தில் இருந்து வந்துள்ளார்கள் என்றும் சொல்கின்றனர்.

சாரணன் ராவணனிடம், ஒரு வானரனை காண்பித்து சொல்கிறான், 

"இதோ, சிங்கம் போல பிடரி மயிருடன் இருக்கிறானே! 
மனதில் என்ன நினைக்கிறான் என்று முக பாவனை கொண்டு அறிய முடியாதபடி இருக்கிறானே! 
கொளுத்தும் நெருப்பை போல இலங்கையை பார்க்கிறானே! 
அந்த வானர வீரனின் பெயர் தான் 'ரம்போ'. 
இவன் விந்திய மலை, கிருஷ்ண கிரி, சஹ்ய மலை, சுதர்சன மலை பகுதிகளை ஆட்சி செய்கிறான்" 
என்று ராவணனிடம் சொன்னான்.

(விந்த்யம் க்ருஷ்ணகிரிம் சஹ்யம் பர்வதம் ச சுதர்சனம்! ராஜன் சததம் அத்யாஸ்தே ரம்போ நாமைஷ யூதப:!! - வால்மீகி ராமாயணம்)

'கிருஷ்ணகிரி' என்ற பெயர் 8 லட்சம் பழமை வாய்ந்தது என்று தெரிகிறது.

'அன்பில்' என்ற பிரதேசத்தில் அவதரித்த 'தமிழன் வால்மீகி' கொடுத்த ராமாயணத்தை, தமிழன் அனைவரும் படிக்க வேண்டும்.


Sunday 9 August 2020

உணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா? கடவுளுக்கு கோவிலா? அவருக்கே பாதுகாப்பா?. ஞானிகள் உள்ள இந்த பாரத தேசத்தில், எதற்காக கோவில்? நெய்வேத்யம்?பாதுகாப்பு?. ஒரு அலசல்..

பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும்,

வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும்,




'கர்ம யோகி'யாக இருந்து, மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களை உலகத்திற்காக கொடுத்தும், 

ஸ்வயமே 'ஞானி'யான வியாச பகவான், மனதிருப்தி ஏற்படாமல் குறைப்பட்டு கொண்டார்.

"கர்ம யோகி'யாக இருந்தும், 'ஞானி'யாக இருந்தும், பரமாத்மாவை உணர்ந்தும், திருப்தி இல்லையே! மன உருக்கம் ஏற்படவில்லையே! கண்ணீர் வரவில்லையே!" என்று குறைப்பட்டு கொண்டார் வியாசர்.

"பக்தியே 'கர்ம யோகத்தை விடவும், ஞான யோகத்தை விடவும்' ஆனந்தம் தரவல்லது.

ஆதலால் பக்தியை ஊட்டும் கிருஷ்ண சரித்திரத்தை எழுதுங்கள்" 

என்று சொன்னார் நாரதர்.


'கிருஷ்ணனே பரமாத்மா' என்பதால், பிரம்மாவின் ஸ்ருஷ்டியில் ஆரம்பித்து, உலக ஸ்ருஷ்டிகளை வர்ணித்து, பரமாத்மாவின் அவதாரங்களை வர்ணித்து, கடைசியில் கிருஷ்ண அவதாரத்தை விவரித்து சொல்கிறார்

குறிப்பாக பால லீலையை சொல்கிறார்.

அதன் பலனாக,

'பாகவதம்' என்ற பக்தி க்ரந்தம் நமக்கு கிடைத்தது.

பலனை எதிர்பார்க்காமல், பகவான் இஷ்டம் என்று கர்வமில்லாமல் காரியங்களை செய்வது - 'கர்மயோகம்'.

பகவானை பற்றி அறிந்து கொள்வது - "ஞானம்".


'பக்தி' என்றால் என்ன? 

வியாசர் கொடுத்த பக்தி கிரந்தமான பாகவதத்தில், இந்த பக்தி எப்படி உள்ளது?...


'கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாமல், கோவர்த்தன மலைக்கு பூஜை செய்கிறார்கள்' என்றதும், தேவர்களுக்கு அதிபதியான இந்திர தேவனுக்கு மஹாகோபம் வந்தது. 

கோகுலத்தை அழிக்க பிரளய கால மழையை ஏவினான். 

7 வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணன், கிடு கிடுவென்று ஓடி, தன் பிஞ்சு விரலால் கோவர்த்தன மலையையே தூக்கி விட்டான்.

"எல்லோரும் மலைக்கு கீழே வாருங்கள்" என்று அழைத்தான்.


சிறுவன் செய்ய கூடிய காரியமா?

சிறுவனை விடுங்கள். எந்த மனிதனால் மலையை தூக்க முடியும்?

வெளிப்படையாக, குட்டி கிருஷ்ணன் 'பகவானாக' செய்த காரியம் இது.

"இவன் பகவான் தான்" என்ற நம்பிக்கை இருந்ததால் தானே, யசோதை நந்தகோபர் உட்பட அனைத்து கோகுலவாசிகளும், மலைக்கு அடியில் நிற்க சம்மதித்தனர். 


இந்த காட்சியை பார்த்த ஞானிகள், ரிஷிகள் "தெய்வ லீலை... கிருஷ்ண லீலை" என்று கண்டு ஆனந்தப்பட்டனர்.


இந்திர தேவனோ, கிருஷ்ணன் 'பகவான் என்று புரிந்து கொள்ள முடியாமல்', கர்வத்தால் இடைவிடாது 7 நாட்கள் மழையை கொட்டினான்.




கவலையே இல்லாமல், 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு இருந்தான் குட்டி கிருஷ்ணன்.


ஞானிகள் "பரமாத்மா தான் 7 வயது பாலகனாக இருக்கிறார். உலகத்தையே தாங்குபவர் இவர். கோவர்த்தனத்தை தூக்குவது ஒரு பெரிய காரியமா?" 

என்று பரதத்துவத்தை நினைத்து கைக்குவித்து நின்றனர்.


ஞானிகள் இப்படி நினைக்க, 

தானே கரம் யோகியாக இருந்து கோவர்த்தன மலையை தூக்கி, கோகுலத்தில் உள்ள அனைவரையும் தன் பாதுகாப்பில் வைத்து சத்சங்கம் கொடுத்து கொண்டு, 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு நின்றார்.


இந்திரன் இனி மழை பொழிய ஜலம் இல்லை என்கிற அளவுக்கு போய், 7 வயது குழந்தையாக வந்திருப்பது "பகவான்" என்று உணர்ந்தான்.

"பதவி கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டோம்" என்று பயந்தான்.

மழை நின்றவுடன், மலைக்கு அடியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பிறகு இருந்த இடத்திலேயே மலையை வைத்து விட்டு, குட்டி கிருஷ்ணன் கோவிந்தனாக நிற்க, 

இந்திர தேவன் ப்ரத்யஷமாகி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, குடம் குடமாக பால் அபிஷேகம் செய்தான்.

மலையை தூக்கி, 7 நாட்கள் தாங்கி பிடித்து, இந்திரனையே ப்ரத்யஷமாக பார்த்தும், கிருஷ்ணனை "என் குழந்தை" என்றே பார்த்தாளாம் யசோதை.


இந்திரனை பார்த்து, "7 நாட்கள் தண்ணீர் கொட்டினது போதாது என்று, பாலை எடுத்து வந்து என் குழந்தை மேல் கொட்டுகிறானே. ஜலதோஷம் பிடிக்குமே!!" 

என்று கவலைப்பட்டு, ஓடி வந்து தன் குழந்தைக்கு தலையை துவட்டி விட, யசோதையின் இந்த அன்புக்கு அடிமையானார் பரமாத்மா.

"7 வயது குழந்தையாக இருந்து கொண்டு மலையையே தூக்கி காட்டி இருக்கேன். 

இந்திரனையே காலில் விழ செய்து விட்டேன். 

பகவான் என்று கண் எதிரே காட்டி விட்டேன்.. 

இப்பொழுதும்,

எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!! என்றும்,

என் குழந்தை!! 

என்றும் நினைக்கிறாளே..

பகவானுக்கு எதுவும் சாத்தியம் என்று எனது காரியங்கள் அனைத்தையும், ஞானிகள் 'லீலை லீலை' 

என்றே ரசிக்கும் போது, 

எனக்காக அழும் இவள் பக்தி, ஞானத்தை விட சிறந்தது" 

என்று நினைத்தாராம் பரமாத்மா.


"பகவான் தான் உலகை படைத்தார். அந்த உலகில் அவருக்கு ஒரு கோவில் தேவையா?

பகவான் தான் உணவை படைத்தார். அவருக்கு போய் பசிக்குமா?

பகவான் தான் நம்மை காக்கிறார். அவருக்கு நாம் காவலா?.."

இப்படி நாத்தீகன் அல்ல, பரதத்துவத்தை உணர்ந்த ஞானிகள் கூட சொல்ல முடியும்.


அப்படிப்பட்ட ஞானிகள் கோவர்த்தன மலையை 7 வயது குழந்தையாக கிருஷ்ணர் தூக்கியதை பார்த்தும், "பகவானுக்கு இது ஒரு பெரிய காரியமா?" 

என்று நினைத்தார்கள்.





"பகவான் தான் நம்மை படைத்தார், நம்மை காக்கிறார்" 

என்ற ஞானம் இருந்தாலும், அந்த பரமாத்மா நம்மிடம் பழக ஆரம்பித்து விட்டால், அளவிட முடியாத அன்பு (பக்தி), ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


"என்னை பகவான் காப்பாரா?' என்ற ஆரம்பநிலையில் கேட்கும் பக்தன், 

தெய்வம் பழக ஆரம்பிக்க ஆரம்பிக்க, யசோதையின் நிலை ஏற்பட்டு, 

"பகவான் சாப்பிட்டாரா? 

பகவான் அலங்காரம் செய்து கொண்டாரா? 

பகவானை யாராவது கஷ்டப்படுத்தி விடுவார்களா? 

அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கலாமா?" 

என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடுமாம்.

இதுவே பக்தி.


இந்த பக்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஞானத்தை விட உயர்ந்தது என்று பார்க்கிறார்.


இந்திரன் 'பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தோம்' என்ற திருப்தியில் விடைபெற்றார்.


யசோதை, "கண்ணனுக்கு ஜலதோஷம் பிடிக்குமே!" 

என்று வருத்தப்பட, அவளுக்கு குழந்தையாகவே இருந்தான்.

மலையிலிருந்து இறங்கி, யசோதையிடம் ஓடி சென்று 'அம்மா..' என்று கட்டி கொள்ள, நன்றாக தலையை துவட்டி, கண்ணனை பார்த்து 

"கண்ணா.. மூக்கை சிந்து.. மூக்கை சிந்துடா..." 

என்று யசோதை கண்ணனின் ஒரு மூக்கை மூடி கொண்டு கேட்க, 

மூச்சை வெளியே விட தெரியாமல், மூச்சை இழுத்து கொண்டு, அறியா குழந்தையாக நின்றானாம் கண்ணன்.

'அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் தெரியாத குழந்தை போல செய்த கிருஷ்ண லீலை', ஞானிகளையும் மோஹிக்க செய்து, பக்தியின் பெருமையை காட்டியதாம். பெரும் ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


ஞானியான வ்யாஸ்சருக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பகவான் என்று காட்டிய இடங்களை விட, யசோதையின் பக்திக்கு வசப்பட்டு, ஒன்றும் தெரியாத பாலகனாக செய்யும் லீலைகள் கண்ணீரையும், மன உருக்கத்தையும் தந்ததாம்.


பக்தியினால் ஏற்பட்ட இந்த மன உருக்கம், வ்யாஸருக்கு மன திருப்தியை, ஆனந்தத்தை அளித்ததாம்.


ஞானத்தை விட பக்தி ஆனந்தம் தரும். இந்த பக்தியை, நமக்கும் கிடைக்க செய்து, "பாகவதம்" என்ற மோக்ஷ கிரந்தத்தை நமக்கு அருளினார் வியாசர்.


அந்த வ்யாஸருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டு இருக்கிறோம்.


இந்த பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து குந்தி தேவி துதிக்கிறாள்.. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.


இதே பாகவதத்தில் நோய்கள் விலக, எதிரிகள் தோற்க "நாராயண கவசம்" உள்ளது. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.




Monday 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  




ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..




அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Thursday 2 July 2020

'யாகத்தில் பலி' உண்டா? வேதம் எதற்காக இது போன்ற பலியை அனுமதிக்கிறது? அதை பற்றி ஒரு அலசல்..

வேதத்தில் சில இடங்களில் 'யாகத்தில் பலி'  பற்றி சொல்கிறது.
"இது சரியா, தவறா?" என்ற கேள்விக்கு முன்,
'வேதத்தின் நோக்கம் என்ன?'
என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...
முக்கியமாக ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மம், மற்ற போலி புத்தகம் போல, 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று உளரும் புத்தகம் அல்ல,
"கடவுள் அரூபமானவர்" என்று மட்டும் சொல்லி
குறுகிய மனப்பானமாய் கொண்ட  புத்தகமும் அல்ல..
நம் ஹிந்து தர்மம், சந்யாசியிடம் "அடித்தாலும் அமைதியாக இரு" என்று சொல்லும்.
அதே சமயம்,
நாட்டை காக்க எல்லையில் நிற்கும் வீரனை பார்த்து அதே போதனையை கூறி உளராது.
"உன் எதிரி அடிப்பான் என்று தெரிந்தால் கூட அவனை அடித்து நொறுக்கி விடு"
என்று அவர்கள் குணம், நிலைக்கு ஏற்ப தர்மங்களை சொல்லும்.
அத்வைத யோகிகளை பார்த்து "கடவுள் அரூபமானவர்" என்று சொல்லும் ஹிந்து தர்மம்.
அதே சமயம், அத்வைதம் புரியாத பல கோடி மக்களுக்காக 'தெய்வம் உருவம் கொண்டு உறவாடும். தைரியமாக பக்தி செய்." என்றும் சொல்லும்.
"எல்லாம் வல்லவர். ஆனால்,தெய்வத்தால் உருவம் எடுத்து வர முடியாது" என்று தெய்வத்தை தரம் தாழ்த்தி பேசாது ஹிந்து தர்மம்.

வேதத்தின் நோக்கம் என்ன?
'அனைத்து தரப்பு ஜீவனையும் மோக்ஷம் அழைத்து செல்வது தான்', வேதத்தின் நோக்கம்.
நம்மில் சிலர்
ஆன்மீக வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக தேடலில் இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக எண்ணமே கூட இல்லாமல் இருப்பார்கள்.

பல தரப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு, பல வித உலக ஆசைகளும் உண்டு.

வேதத்தின் நோக்கமோ, இவர்கள் அனைவரையும் மோக்ஷ பாதையில் இழுக்க வேண்டும், பரமாத்மா நாராயணனை சேர வைக்க வேண்டும்.
ஆன்மீக சிந்தனையும் ஊட்ட வேண்டும்.
பிறகு
வேதத்தில் உள்ள தெய்வங்களில் ஏதாவது ஒரு வழியில் பக்தியை வளர்க்க வேண்டும்.
கடைசியில்,
மூல தெய்வம் பரவாசுதேவனே என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும்.
மோக்ஷத்துக்கு தயார் செய்ய வேண்டும்...
இதுவே "வேதத்துக்கு நோக்கம்".

மனிதர்கள் பலதரப்பட்ட குணத்துடன், பக்குவத்துடன் இருக்கிறார்கள்.

பூஜையில் கூட குணத்தால் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.
தெய்வத்துக்கு ஏதாவது "துளசி, பூ, பழம் வைத்து பூஜை செய்"
என்று சொன்னால் சிலர் ஏற்பார்கள்.. சிலர் மறுப்பார்கள்..




நாயன்மார்கள் சிவ பக்தி செய்தார்கள்..
"வில்வ பூஜை செய்தாலே, சிவன் ப்ரீதி அடைவார், நமக்கு அணுகிரஹம் செய்வார்" என்று வாழ்ந்தார்கள்.

அதில் கண்ணப்பநாயனார் வேடுவன்.
சிவபூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவர் பக்தி அவர் குணத்துக்கு ஏற்றவாறு ரஜோ குணத்துடன் இருந்தது..
சிவபெருமானுக்கு தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை பூஜைக்கு வைப்பார்.
ஒரு சமயம், இவனிடம் லீலை செய்த சிவபெருமான், கல் ரூபத்தில் இருந்தாலும், ரத்தம் வடியுமாறு லீலை செய்தார்.

சிவபெருமான் மேனியில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து, தன் கண்ணையே பிடுங்கி அந்த சிவலிங்கத்தில் வைத்து விட்டார்.

பயங்கரமான பூஜை தான்...
ஆனால், மற்றவன் கண்ணை பிடுங்கி இருக்கலாமே வேடுவன்?..
அப்படி செய்யவில்லையே...
சங்கரன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது...

வேடனான கண்ணப்பன் எப்படி இருந்தாலும் மாமிசம் சாப்பிடத்தான் போகிறான்.

"பகவானுக்கு கொடுத்து விட்டு பிறகு சாப்பிடுவோம்" என்று நினைவே, அனாவசிய மிருக வதையை பெரும்பாலும் குறைத்து விடும்.

இன்றைய உலகில் அளவுக்கு மீறி மிருக வதை நடப்பதற்கு சுயநலமும், தான் சாப்பிடுவதை தெய்வத்துக்கு காட்டி விட்டு சாப்பிடாததே காரணம்.

"தன் வயிரே முக்கியம்" என்ற சுயநலம் மனிதனுக்கு அதிகமானதால், விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம் என்று உள்ளது..

சாத்வீக தெய்வமான பரவாசுதேவனை, மாமிசம் உண்ணும் ஒருவன் வழிபடும் போது, சிறிது காலத்தில், ஜீவ ஹிம்சை செய்து இந்த வயிறை வளர்க்க வேண்டுமா? என்று மனதை மாற்றி விடுவார்.

பெருமாள் பக்தி செய்வதே நாம் அனைவருக்கும் இன்று தேவை.

தெய்வத்திடம் உண்மையான பக்தி இருந்தால், சில சமயம் இப்படிப்பட்ட பயங்கராமான பூஜைகள் தான் தெரியும் என்ற பக்தனுக்கும் தெய்வங்கள் அருள் செய்து விடுவார்கள்..
சிவபெருமான் கண்ணப்பருக்கும் காட்சி கொடுத்தார்.

ஆனால் பெரும்பாலான சிவ பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், முருக பக்தர்கள் நெய், பூ, பழம் போன்ற சாத்வீக பூஜை தான் செய்கின்றனர்.

இப்படி வேதத்தில், அங்குமிங்கும் பலி இடும் யாகங்கள் சொல்லப்ட்டு இருப்பதற்கு காரணம்,
மனிதர்களில் சிலர், ரஜோ குண பூஜையை தான் விரும்புவார்கள் என்பதால் தான் வேதம் ஆங்காங்கு அப்படிப்பட்ட பூஜையை சொல்கிறது.

கண்ணப்பன், ராவணன் போன்றோர் செய்த ரஜோ குண பூஜையையும் தெய்வங்கள் ஏற்கிறது..
இதுவே முக்கிய காரணம்.

ராவணன் கூட சிவபக்தன் தான்.
அவன் குணத்துக்கு, பூ, பழம் வைத்து பூஜை செய்தால், முழு திருப்தி இருக்காதாம்..

ஒரு மிருகத்தை பலி இடலாமா?
என்று நினைத்தால், அதுவும் இவனுக்கு திருப்தியாக இருக்காதாம்.

ஒரு நரபலி கொடுத்தால் தான் இவனுக்கு திருப்தி ஏற்படுமாம்..

அதிலும் 'தானே அந்த நரபலியாக இருக்க வேண்டும்' என்று நினைப்பானாம்.

பொதுவாக ரஜோ குணம் அதிகம் உள்ளவர்கள் விஷ்ணு பக்தி செய்ய தயங்குவவதற்கு  காரணமும் இதுவே.
விஷ்ணு சாத்வீக மூர்த்தி. 
பெரும்பாலும் பலி போன்ற பூஜைகளை விட, துளசி, பூ, பழம் கொடுத்து பூஜை செய்யும் பக்தனுக்கு அணுகிரஹம் செய்து விடுவார் விஷ்ணு.

சம்ஹார மூர்த்தியான ருத்ரனோ, படைப்பு தொழிலை ஏற்ற ப்ரம்ம தேவனோ, இது போன்ற பூஜைக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்கள்..

நாயன்மார் தங்கள் பக்தியால் தரிசித்த சிவபெருமானை, 
ராவணன் தன் 10  தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து சிவபூஜை செய்து தரிசனம் செய்வானாம்.
அது மட்டுமா! ஒரு சமயம்,
'கைலாய மலையை சிவபெருமானோடு தூக்கி' தன் பலத்தை சிவனுக்கே காட்ட வேண்டும் நினைத்தான்.
கர்வமே இல்லாமல் இருந்தார்கள் நாயன்மார்கள்.
ராவணன் கர்வமே ரூபம் கொண்டவனாக இருந்தான்..




ஆனால், இருவருமே சிவபக்தர்கள்.
இருவருமே சிவனை தரிசித்தவர்கள். ஆனால் குணம் வேறு.

வேதத்தின் நோக்கம்,
குணம் கெட்டவனாக இருந்தாலும், நாதீகனாக இருந்தாலும், அவரவர்களுக்கும் வாய்ப்பு தந்து, அவர்கள் விருப்பப்படி தெய்வத்துடன் சம்பந்தம் செய்து கொள்ள வேத தெய்வங்கள் அனுமதிக்கிறது.

ரஜோ குணம் அதிகம் உள்ள ராவணன் போன்றவர்களும், அவர்கள் குணத்துக்கு ஏற்ப பூஜை செய்ய, ஆங்காங்கு உயிர் பலி சம்பந்தமான அதர்வண மந்திரங்கள் உள்ளது.

ஆனால்,
"பெரும்பாலான பூஜை சாத்வீகமாகவே உள்ளது" என்பதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.

பலி இடும் சம்பந்தமான பூஜைகள் இருப்பதற்கு காரணம் உண்டு.

ராவணனாக இருந்தால் கூட, கடவுளே இல்லை என்று நாதீகனாக இருந்தால் கூட, அவனையும் ஹிந்துவாக வைத்து கொள்ள, நம் தெய்வங்கள் வழி செய்கிறது.

கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருப்பவனுக்கு, திடீரென்று ஒரு நாள் திருப்பதி கோவிலுக்குப் போன பின், வர இருந்த பெரிய ஆபத்து தானாக விலகி விடுகிறது.. அல்லது திடீரென்று லாபம் கிடைக்கிறது..

அதுவரை நாதீகனாக அலைந்தவன், 'சரி திருப்பதி மட்டும் செல்வோம்" என்று நினைக்கிறான்.

தனக்கு தேவையானதை பிரார்த்தனையாக வைக்கிறான்..
ஒரு சில பிரார்த்தனைகள் பலித்து விடுகிறது.

"நம் நம்பிக்கையில் தான் குறைவோ!" என்று யோசிக்கிறான்..

திருப்பதி பெருமாள் படத்தை வாங்கி தன் வீட்டில் வைத்து கொள்கிறான்.

மெதுவாக, இவனில் மாற்றம் நடக்கிறது...
சுயநலம் அகன்று பக்தி வளர்கிறது...

இப்படி வேதம் அனைவருக்கும் வழி காட்டி, கடைசியில், நம்மை பெருமாள் வரை கூட்டி சென்று விடும் அற்புத சக்தி கொண்டது.

ஆங்காங்கு வேதத்தில் காணப்படும் பலி யாகங்கள், 
ராவணன் போன்ற ரஜோ குண புத்தி உள்ளவர்களும் பகவானை பூஜை செய்யட்டும்
என்ற காரணமே அன்றி, வேதத்தின் பொதுவான அபிப்ராயம் நாயன்மார், ஆழ்வார்கள் செய்த சாத்வீக பூஜையே.

த்ரேதா யுகத்தில் இருந்த ராவணன் போல, தன் தலையையே அறுத்து பூஜை செய்யும் ராக்ஷஸ பூஜை செய்பவர்கள், இந்த கலியில் கிடையாது.

இன்று பொதுவாக தாமஸ, சாத்வீக குணங்கள் உடைய மக்களாகவே இருப்பதால், இது போன்ற யாகங்கள் நமக்கு தேவையுமில்லை.
ஆதலால், ஆங்காங்கு காணப்படும் இது போன்ற பலி யாகங்களை ஹிந்துக்கள் ஏற்பதில்லை.

"இதை காட்டியாவது, ஹிந்துக்களை குழப்பலாமா?.. 
நம் போலி புத்தகத்தை காட்டி ஏமாற்றலாமா?"
என்று மூடர் கூட்டம் அலைகிறது.

"ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தையும் காட்டு"
என்று பேசும் இந்த மூடர் கூட்டத்தின் வீட்டில் போய் தங்கி விட்டால், வீட்டையே எடுத்துக்கொள் என்று சொல்வார்களா?..

"போதனை ஒன்று, செயல் வேறு" என்று வாழ்ந்து,
ஊரை ஏமாற்றி,
நிலத்தை மட்டுமில்லாது, மலையையும் அபகரித்து திருடும் இந்த கூட்டம், நசுக்கப்பட வேண்டும்.

ஹிந்துக்கள், தங்கள் பெருமையை அறிய வேண்டும்.

ஹிந்து தர்மத்தில்,
ராவணனுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
நாயன்மார் போன்ற பக்தர்களுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.

Friday 19 June 2020

பிராணாயாமம் - ஓம் பூ:, ஓம் புவ:, ஓம் ஸுவ: என்று ஏன் சொல்கிறோம்? 7 பாதாள லோகங்களை சொல்வதில்லையே... ஏன்?

பூலோகத்துக்கு (பூ:) கீழே, 7 பாதாள லோகங்கள் உள்ளது.
பலி சக்கரவர்த்தி பூலோகம் முதல் பிரம்ம லோகம் (ஸ்த்ய லோகம்) வரை பிடித்து விட்டார்.
பலி சக்கரவர்த்தியிடம் வாமன அவதாரம் செய்து தானமாக வாங்கி தேவர்களை, மனிதர்களை, ரிஷிகளை வாழ வைத்தார் பரவாசுதேவன்.


7 பாதாள லோகங்களில் ஒன்றான "சுதலம்" என்ற லோகத்தில், பலி சக்கரவர்த்தியை இருக்க சொல்லி, அவனுக்கு காவலனாக தானே "கதாதரனாக" நிற்கிறார்.
"அடுத்த தேவ இந்திரன் பலி சக்கரவர்த்தி" என்றும் ஆசிர்வதித்து விட்டார்.

இனி,
பிராணாயாமம் சொல்லும் போதும், 
காயத்ரி மந்திரம் சொல்லும் போதும், 
இந்த பாதாள லோகங்களை சொல்வதில்லை. இது ஏன்?

மாறாக,
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று நமக்கு மேல் இருக்கும் லோகங்களை சொல்கிறோம்.
பூலோகத்தில் (ஓம் பூ:) இருக்கும் நாம், நம்முடைய புண்ணியங்களை உயர்த்தி உயர்த்தி, 

  • பித்ருக்கள் உள்ள லோகமான புவர் லோகத்துக்கும்
  • தேவர்கள் உள்ள சொர்க்க லோகத்துக்கும்
  • துருவனை போன்றோர் நக்ஷத்திரமாக இருக்கும் மகர லோகத்துக்கும்
  • ரிஷிகள், யோகிகள், முனிகள் வாழும் ஜன மற்றும் தப லோகத்துக்கும்
  • பிரம்ம தேவன் வசிக்கும் சத்ய லோகத்துக்கும் 

செல்ல ஆசைப்பட வேண்டுமே தவிர, கீழ்த்தரமான வாழ்க்கை வாழ்ந்து,
'பாதாள லோகங்களுக்கு சென்று விட கூடாது' என்று நம்மை நிதானப்படுத்துகிறது.




சத்ய லோகத்துக்கும் காரணமான வைகுண்ட நாதனை அடைய ஆசைப்படும் புண்ணிய ஆத்மாக்கள், பிரம்ம தேவன் படைத்த இந்த 14 உலகங்களையும் விட்டு விட்டு, வைகுண்டம் என்ற பரமபதம் அடைந்து விடுகிறான்.

புண்ணியங்கள் செய்து, 
ஜீவ ஹிம்சை செய்யாமல், 
ஜீவ ஹிம்சையான உணவு உண்ணாமல், 
மற்றவர்களுக்கு உபயோகமாக வாழ்ந்து, 
தெய்வத்திடம் பக்தி கொண்டு மனிதன் வாழ வேண்டும் 
என்று வழிகாட்டுகிறது இந்த மந்திரங்கள்..
"ஓம் பூ, ஓம் புவ, ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓஹும் சத்யம்"
என்று சொல்லும் போதே, நாம் செல்ல வேண்டிய பாதை என்ன? என்று காட்டுகிறது..

இந்த அனுபவத்துடன் பிராணாயாமம் செய்வோம். ஆத்மாவை உயர்த்துவோம்..

Wednesday 17 June 2020

சோகத்தில் உள்ளவர்களுக்கு தர்மம் உபதேசிக்க வேண்டுமா? ஞானத்தை உபதேசிக்க வேண்டுமா?.. எது முதலில் தேவை?. ரகசியத்தை தெரிந்து கொள்வோம்..

சோகத்தில் உள்ளவனை எப்படி சமாதானம் செய்ய வேண்டும்? 
என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் காட்டுகிறார்...
சோகத்தில் இருப்பவனிடம் உடனேயே தர்மம் பேச கூடாது. 
சோகத்தில் இருப்பவனிடம் தர்மம் பேசினால் கேட்க மாட்டான்.
மேலும்
சோகத்தில் இருப்பவனிடம் 'தர்மம் பேச பேச, கேட்பவனுக்கு சோகம் அதிகமாகிவிடும்'.




சோகம் இல்லாமல் இருக்கும் போது தான் "தர்மம் பேச வேண்டும்".

"சோகம் இல்லாமல் இருக்கும் போது தான், தர்மம் புரியும்.
ஆதலால், 
சோகத்தை முதலில் நீக்கி விட்டு தான், தர்மம் பேச வேண்டும்"
என்று நமக்கு காட்டுகிறார் கிருஷ்ண பரமாத்மா.
"கர்ம யோகம், ஞான கர்ம சந்யாச யோகம், கர்ம சந்யாச யோகம், தியான யோகம், ஞான விஞ்ஞான யோகம்,ராஜ வித்யா யோகம், பக்தி யோகம்"
என்று பல வித தர்மங்களை சொன்னார் ஸ்ரீகிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்த போது, உடனே "கர்ம யோகம் என்ற தர்மத்தை சொல்கிறேன் கேள்" என்று ஆரம்பிக்கவில்லை என்று கவனிக்க வேண்டும்.

"சோகத்தில் மூழ்கியவனிடம் முதலில் ஞான யோகத்தை (ஸாங்க்ய யோகம்) (Jnana Yoga) பேசி விட்டு தான், 
பிறகு பல வித தர்மங்களை பற்றி பேசுகிறார்" 
ஸ்ரீ கிருஷ்ணர் என்று கவனிக்கலாம்.

"பாண்டவர்களுக்கு குண்டூசி சொத்து கூட தர முடியாது" என்று சொன்ன துரியோதனிடம் போரிடலாம் என்று வந்த அர்ஜுனன், இப்படி என் தாத்தாவையும், குருவையும் எதிர்க்கும் படியாக செய்து விட்டானே! 
இப்படி சொத்துக்காக என் தாத்தாவை கொன்று, குருவை கொன்று, என்ன சாதிக்கப்போகிறேன்?  
நான் போர் செய்ய மாட்டேன். 
பிச்சை எடுத்தாவது வாழ்கிறேன்"
என்று காண்டீபத்தை கீழே வைத்து விட்டான் அர்ஜுனன்.

சோக கடலில் மூழ்கி விட்டான் அர்ஜுனன்.

உடனே "கர்ம யோகம் சொல்கிறேன் கேள்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் ஆரம்பிக்கவில்லை.

கர்ம யோகப்படி,
"கர்மாவை செய். நீ ஷத்ரியன். க்ஷத்ரியனாக போர் செய்.
தாத்தாவாக இருந்தாலும், குருவாக இருந்தாலும், அதர்மம் செய்யும் துரியோதனன் பக்கம் இருக்கும் இவர்களை கொன்று விடு.
பலனை என்னிடம் விடு"
என்று உடனேயே கர்ம யோகம் பேசி இருந்தால்,
அர்ஜுனன் மேலும் சோகத்தில் ஆழ்ந்து போயிருப்பான்.




சோகம் உள்ளவனிடம், தர்மத்தை பேசுவதை காட்டிலும், "ஆத்ம ஞானத்தை சொன்னால் தான் சோகம் அடங்கும்".

பகவத் கீதை, முதல் அத்யாயத்திலேயே அர்ஜுனன் சோகத்தில் ஆழ்ந்து விடுகிறான்.

கிருஷ்ண பரமாத்மாவை சரணடைந்து வழி கேட்கிறான்.
முதலில் அவன் சோகத்தை போக்க "ஆத்மாவின் உண்மையான நிலை என்ன?" என்று சொல்லி,
ஞான யோகத்தை சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இரண்டாவது அத்யாயம் முழுக்க "ஞான யோகத்தை" (ஸாங்க்ய யோகம்) பேசி, அவன் சோகத்தை முழுவதுமாக போக்கிவிடுகிறார்.

இரண்டாவது அத்யாயம் முடிவிலேயே அர்ஜுனன் சோகத்தை விட்டு விடுகிறான்.

சோகம் இல்லாமல் இருக்கும் அர்ஜுனன் பிறகு பல கேள்விகள் தர்ம விஷயமாக கேட்கிறான்.
அவன் கேட்கும் பல கேள்விகளுக்கு, பல தர்மங்களை சொல்லி உபதேசம் செய்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர் என்று பார்க்கிறோம்.

சோகம் அதிகமாக இருப்பவர்கள், இரண்டாவது அத்தியாயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் உபதேசங்களை படித்தாலே சோகம் பறந்து விடும்.
சோகத்தில் சிக்கியவர்களை பார்த்து, கிருஷ்ணர் என்ன சொல்கிறார் என்று பாருங்கள்...
"கவலை பட தகுதியில்லாத உலக விஷயங்களுக்கு நீ சோகப்படாதே !
போனவனை பற்றியும் கவலை படாதே!  இப்போது சில காலம் இருப்பவனை பற்றியும் கவலைப்படாதே! 

அல்ப காலம் இந்த உடலில் இருக்க போகும் நீ, இதற்கெல்லாம் கவலை படுவதே வீண்!
உடல் அழியக்கூடியது.  
இது சம்பந்தமாக கவலைப்படுவதே வீண் !




ஆத்மா அழியாதது.  
நீயும், நானும் ஆத்மாவே! 
நாம் என்றுமே அழிவதில்லை. 
எந்த ஆத்மாவும் அழிவதில்லை.

இந்த ஆத்மா இந்த உடலுக்குள் சில காலம் இருந்தது. 
இந்த உடல் சிறு குழந்தையாக, சிறுவனாக, வாலிபனாக, கிழவனாக ஆகி விழுந்து விட்டது. 
ஆனால் உள்ளே இருக்கும் ஆத்மா இந்த உடலுக்குள் இருந்த போது எப்படி இருந்ததோ அதே போல எப்பொழுதும் இருந்தது... 
உடல் விழுந்தவுடன், இந்த ஆத்மா வேறு உடலுக்கு போகிறது. 
அவ்வளவு தான்.

இந்த உடலும், மனதும் தான் சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வியை கொடுக்கிறது, அனுபவிக்கிறது.  
நீயோ ஆத்மா !  
இந்த உடல் தரும் இந்த வெற்றியையும் லட்சியம் செய்யாதே ! அவமானங்களையும் லட்சியம் செய்யாதே !
சாதாரணமாகவே இரு.
நீ தனியானவன்.  
நீ ஆத்மா.  

சிறிது காலம் இந்த உடலில் இருக்கிறாய். 
இந்த உடலை வைத்து என்ன நல்ல காரியங்கள் செய்ய முடியுமோ செய். 

மற்றபடி இந்த உடலால், மனதால் வரும் அனுபவங்களை சிறிதும் மதிக்காதே !"
என்று "ஞான யோகத்தை" சொல்லி, அர்ஜுனனின் சோகத்தை சரி செய்கிறார் கிருஷ்ணர்.
சோகம் தெளிந்து இருக்கும் அர்ஜுனனுக்கு பிறகு, 'கர்ம யோகம், பக்தி யோகம்' என்று பல வித தர்மங்களை சொல்லி...
"எந்த தர்மமும் உன்னால் கடைபிடிக்க முடியாது என்றால், என் மீது நம்பிக்கை வைத்து என்னையே சரணடைந்து விடு. நான் உன்னை காத்து, மோக்ஷம் வரை கூட்டி செல்கிறேன்"
என்று கீதையை முடிக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

சோகத்தில் இருப்பவர்கள், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொன்ன 2வது அத்தியாயம் கட்டாயம் அர்த்தம் புரிந்து படிக்க வேண்டும். 
நம்மைவிட்டு, சோகம் ஓடி விடும்.

தர்மங்கள் தெரிந்து கொள்ள ஆசை இருந்தால், 3வது அத்தியாயம் ஆரம்பித்து பல தர்மங்களை அர்த்தம் புரிந்து படிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர்.
வாழ்க குருநாதர்.