Followers

Search Here...

Showing posts with label தமிழன். Show all posts
Showing posts with label தமிழன். Show all posts

Saturday 5 March 2022

பழங்குடி தமிழன் பற்றி தெரிந்து கொள்வோம். அந்தணன் யார்? அவன் கடமை என்ன? என்ன சாப்பிடுவான்? சங்க இலக்கியம் என்ன சொல்கிறது? யார் தமிழன்?

வேதத்தில் "வேள்விகள் சொல்லப்பட்டு இருக்கிறது" என்று புறநானூறு சொல்கிறது.

"வேத வேள்வி தொழில் முடித்ததுவும்" (வேதத்தில் சொல்லப்பட்ட விதிப்படி வேள்வியை செய்யவும்) என்று புறநானூறு சொல்கிறது.

அதே போல, 

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி.. "வேதத்தை எப்படி ஓதுவார்கள் அந்தணர்கள்?" என்று சொல்கிறது.


"தாதுண் தும்பி போது முரன்றாங்கு ஒதல் அந்தணர் வேதம் பாட" (வண்டு ரீங்காரம் செய்வது போல (in resonance), அந்தணராகள் வேதம் ஓதுவார்கள்) என்று சொல்கிறது.

சங்க இலக்கியமான மதுரை காஞ்சி சொல்வதை போல, பல ஆயிரக்கணக்கான வருடங்கள் ஆகியும், இன்றும் தமிழ் அந்தணர்கள் வேதத்தை ஓதுகிறார்கள் என்று பார்க்கும் போது, இந்த அந்தணர்கள் சங்க இலக்கியத்தின் சத்தியத்தை நிரூபிப்பது தெரிகிறது. 


வாழ்க தமிழ் பழங்குடி அந்தணர்கள்.


'உலக வாழ்க்கை, சம்பாத்தியம் போன்றவற்றில் ஈடுபடாமல், வேதத்தை ஓதும் பெரும் பொறுப்பை அந்தண சமூகம் ஏற்று இருந்தது' என்ற தொடர்பை சங்க இலக்கியம் 'அந்தணர் அருமறை', 'அந்தணர் வேதம்' போன்ற சங்க இலக்கியங்கள் நமக்கு வாக்கு மூலம் கொடுக்கிறது.


வேதத்தை ஓதும் இந்த அந்தணர்கள் யார்? 

அந்தணர்கள் பண்பாடு எப்படி இருந்தது? 

என்று சங்க இலக்கியமே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் இதற்கான பதில் வருகிறது…

"இரு மூன்று எய்திய இயல்பினின் வழாஅது…" 

என்று தொடங்கும் பாடலில், 'அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு' என்று சொல்கிறது.


வேதத்தில் உள்ள தர்ம சாஸ்திரம் அந்தணர்களுக்கு (ப்ராம்மணர்களுக்கு) சொல்லும் 6 கடமைகளை, சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையும் சொல்கிறது.

அந்தணர்களின் 6 கடமைகள் என்ன?

ஓதல் (அத்யயனம் - வேதத்தை கற்பது), 

ஓதுவித்தல் (அத்யாபனம் - வேதத்தை கற்று வைத்தல்) , 

வேட்டல் (யஜனம் - வேள்வியை நடத்துதல்) , 

வேட்பித்தல் (யாஜனம் -வேள்வியை மற்றவருக்கு நடப்பித்தல்), 

ஏற்றல் (ப்ரதிகிரஹம் - தானத்தை ஏற்றுக்கொள்ளுதல்), 

ஈதல் (தானம் - தானம் கொடுத்தல்), 

ஆகிய 6ம் அந்தணர்கள் விடக்கூடாத கடமைகள் என்று சங்க இலக்கியம், வேத தர்ம சாஸ்திரம் சொன்னபடியே சொல்கிறது.

சங்க இலக்கியமான, திருமுருகாற்றுப்படையில் 

'6 கடமைகள் (இரு மூன்று எய்திய) என்று தானே சொல்லி உள்ளது? அது வேத தர்ம சாஸ்திரம் சொன்ன அதே 6 கடமையை தான் சொல்கிறது என்று எப்படி சொல்ல முடியும்?' என்ற கேள்விக்கு பதிலை, மற்றொரு சங்க இலக்கியமான, பதிற்றுபத்து சொல்கிறது.

"ஓதல், வேட்டல், அவை பிறர்ச் செய்தல், ஈதல், எற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர்..' 

என்று தெளிவாக 'அந்தணர்களின் 6 கடமைகள் என்னென்ன?' என்று பதிற்றுபத்து பதில் சொல்கிறது.

மேலும், 

"இருவர் சுட்டிய" என்ற பதம் மூலம், 'இந்த அந்தணனை, பெற்ற தாய்-தந்தையர்கள் தூய்மையான நடத்தை உடையவர்களாக இருந்தார்கள்' என்று கொண்டாடுகிறது.


பழங்குடியினருக்கு சலுகைகள் அரசாங்கம் கொடுக்கிறது... 

ஆனால், உண்மையான பழங்குடி யார்? என்று அரசாங்கம் சங்க இலக்கியங்களை படித்து முடிவு செய்ததாக தெரியவில்லை.


சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", அந்தணர்களே தமிழகத்தில் இருந்த "பழங்குடியினர்" (தொல்குடி) என்று தெளிவாக சொல்கிறது.

அதிலும், 

அந்தணர்கள் பல ரகங்களில் இருக்கிறார்கள் என்று சொல்கிறது. (சாம வேதம் அறிந்தவர், ரிக் வேதம் அறிந்தவர், யஜுர் வேதம் அறிந்தவர், அதர்வண வேதம் அறிந்தவர், இரண்டு வேதங்கள் (த்விவேதி) அறிந்தவர், மூன்று வேதங்கள் ஒரு சேர அறிந்தவர் (த்ரிவேதி), நான்கு வேதமும் அறிந்தவர் (சதுர்வேதி))

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை,  “பலவேறு தொல்குடி அந்தணர்கள் இருந்தார்” என்று தெளிவாக சொல்கிறது. 


"இருமூன்று எய்திய இயல்பினில் வழாஅது இருவர் சுட்டிய பல்வேறு தொல்குடி

என்ற பாடலில், 

பழங்குடியான அந்தணர்களுக்கு 6 கடமைகள் உண்டு. 

அவர்கள் பெற்றோர்கள் உயர்ந்த பண்புகள் கொண்டு இருந்தார்கள். 

ஆதியில் இருந்தே அந்தணர்கள் தான் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் தொல்குடியினர் 

என்று சான்றிதழ் கொடுக்கிறது. 


வாழ்க திருமுருகாற்றுப்படை..

மேலும், 

"முத்தீ" என்று சொல்லுமிடத்தில், இந்த அந்தணர்கள், 'மூன்று விதமான தீயை வளர்ப்பவர்கள்' என்றும் சொல்கிறது.

யாகம் செய்ய 'நாற்சதுரம், முக்கோணம், வில் வடிவம்' என்ற அமைப்பில் அமைத்து, கார்ஹ-பத்தியம், ஆகவனீயம், தக்ஷிணாக்னியம் என்ற 'மூன்று வேள்வி தீ' அக்னிஹோத்ரியான  பிராம்மணர்கள் வீட்டில் எப்பொழுதும் எரிந்து கொண்டே இருக்கும். 

இதையே 'முத்தீ' என்று திருமுருகாற்றுப்படையில் சொல்லப்படுகிறது.


இதே சொல்லை, "மூத்தீ மறையாவான்" என்று இரண்டாம் திருவந்தாதியில், பூதத்தாழ்வார் பயன்படுத்துகிறார் என்று பார்க்கலாம்.


மேலும், சங்க இலக்கியமான "திருமுருகாற்றுப்படை", 

"இருபிறப்பாளர்" என்று சொல்லுமிடத்தில், 'அந்தணர்கள், இரு முறை பிறக்கிறார்கள்' என்றும் சொல்கிறது.


பிராம்மண குழந்தைகள், "காயத்ரி மந்த்ர" உபதேசம் பெறும் போது, இரண்டாவது பிறவி கொள்கிறார்கள் என்று சொல்வதுண்டு. 

இதையே சங்க இலக்கியமும் நமக்கு ஊர்ஜித படுத்திக்கிறது.


இது மட்டுமல்ல, 

சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை

"மூன்று புரி நுண்ஞாண்" என்று சொல்லும் போது, "இந்த அந்தணர்கள், மூன்று நூல்கள் சேர்ந்த பூணூலை அணிந்து உள்ளார்கள்" என்று அந்தணர்களின் அடையாளத்தை காட்டுகிறது.


மேலும், சங்க இலக்கியமான திருமுருகாற்றுப்படை

"உச்சிக்கூப்பிய கையினர்" என்று சொல்லுமிடத்தில், "இந்த அந்தணர்கள், முருகப்பெருமான் சந்நிதியில் கையை தலைக்கு மேல் உயர்த்தி நமஸ்கரித்து நிற்கின்றனர்" என்று அவர்களின் முருக பக்தியை காட்டுகிறது.


கையை தலைக்கு மேலே உயர்த்தி, முருகப்பெருமானை நமஸ்கரித்து கொண்டு மட்டும் இருக்கவில்லையாம் இந்த அந்தணர்கள்.

இந்த அந்தணர்கள், அருமறைக் கேள்வி என்ற வேத மந்திரங்களை மிகவும் சத்தமாக சொல்லாமல், நாக்கும் வாயும் அசைய, ஜபம் போல அழகாக முருகப்பெருமானை நோக்கி பாடினார்கள், என்று "அருமறைக் கேள்வி நாஇயல் மருங்கில் நவிலப் பாடி" என்று பாடுகிறது.


மேலும், 

அந்தணர்கள் எப்படி வாழ்ந்தார்கள்? 

அவர்கள் வீடு எப்படி  இருந்தது? 

என்று மற்றொரு சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு சொல்கிறது.


செழுங் கன்று யாத்த சிறுதாட் பந்தர் (இந்த அந்தணர்கள் வீட்டில் புஷ்டியான கன்றுகள் வீட்டின் வாசலில் சிறு பந்தல் போட்டு நின்று கொண்டிருக்குமாம்)

பைஞ்சேறு மெழுகிய (மேலும், அந்தணர்கள் வீடே, பசுஞ்சாணியால் தரை மெழுகப்பட்டு இருக்குமாம்.) 

படிவ நல்நகர் (மேலும் தெய்வத்துக்கு பூஜைகள் செய்ய ஒரு அறை வைத்து இருப்பார்களாம்)

மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது (மேலும், அந்தணர்கள், கோழி, நாய் வளர்க்க மாட்டார்கள்)

வளைவாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் (மேலும், அந்த வீட்டில் உள்ள அந்தணர்கள் வேதம் சொல்லி சொல்லி, அந்த வீட்டில் உள்ள கிளிகள் திரும்ப சொல்லுமாம்)

மறை காப்பாளர் உறைபதிச் சேப்பின் (இப்படிப்பட்ட, வேதத்தை காப்பாற்றி வரும் இந்த அந்தணர்களின் வீட்டுக்கு சென்றால்)

பெருநல் வானத்து வடவயின் விளங்கும்

சிறுமீன் புரையும் கற்பின் நறுநுதல்

வளைக்கை மகடூஉ வயின்அறிந்து அட்ட 

சுடர்க்கடை பறவைப் பெயர்ப்படு வத்தம்

(மிக பெரிய வானத்தில் ஜொலிக்கும் அருந்ததி நக்ஷத்திரம் போன்ற கற்புக்கரசியான அந்தண பெண், கைகள் வலைகள் குலுங்க, ராஜ ஹம்சம் என்ற அன்னபறவை பெயர் கொண்ட ராசான்னம் என்ற ஆஹுதிக்கு ஏற்றதான அரிசியை மட்டுமே, பதம் அறிந்து சோறு சமைத்து வைத்து இருக்கிறாள்

சேதா நறுமோர் வெண்ணெயின் மாதுளத்து

உருப்புற பசுங்காய்ப் போழொடு கறி கலந்து 

கஞ்சக நறுமுறி அளைஇ பைந்துணர் (கருவேப்பிலை, மிளகு கலந்து சமைக்கப்பட்ட காய்கறியோடு, மாவடு ஊறுகாய் தொட்டு கொண்டு, மாதுளம் பழம் சேர்த்த மோர் சாதத்தை அந்தணர்கள் சாப்பிடுகிறார்கள்)

இவ்வாறு, 

அந்தணர் வீடும், அந்தணர் உணவு முறையும் எப்படி இருந்தது? என்று சங்க இலக்கியமான "பெரும்பாணாற்றுப்படை" நமக்கு தெளிவாக  சொல்கிறது.  


சங்க இலக்கியத்தில் காணப்படும் பழக்கம் இன்றும் பிராம்மணர்களிடம் உள்ளது. 


சங்க இலக்கியம் தெரியாமல் போனாலும், ஆதி தமிழர்களான பிராம்மணர்களின் பழக்கத்தை பார்த்து, "தயிர்சாதம்' என்று கிண்டல் செய்யும் கூட்டமும் இன்று இருக்கிறார்கள். 


"ஆதி தமிழ் குடிமகன் பிராம்மணன் தான்" என்று சொல்கிறோம் என்று புரியாமலேயே, ப்ராம்மணனை கேலி செய்வதாக நினைத்து, பெரும்பாணாற்றுப்படை சொல்லும் அந்தணர் பழக்கம் இன்றும் உள்ள பிராம்மண சமுதாயத்துக்கு சான்றிதழ் கொடுத்து வலு சேர்க்கிறார்கள்.


Deep Dive.. Must Listen Speech of Sri Ranganji -  வேதம் நிறைந்த தமிழ்நாடு....

https://www.youtube.com/watch?v=FCEFIuYpews&t=960s

Thursday 3 February 2022

கனவு உண்மையா? பல கனவுகள் ஏற்படுகிறது.. ஆண்டாள், ஆழ்வார்கள் கனவில் பெருமாள் வந்ததாக சொல்கிறார்கள். நம்மில் சிலருக்கு தெய்வங்கள் கனவில் காட்சி கொடுக்கிறார்கள். பல சமயம் கெட்ட கனவுகள், நல்ல கனவுகளும் வருகிறது. கனவுகள் உண்மையா? ராமானுஜர் என்ன சொல்கிறார்? தெரிந்து கொள்வோம்...

'கனவு' என்பது அவஸ்தை (அனுபவம்) தானே! அதை எப்படி உண்மை என்று நம்ப முடியும்?

ராமானுஜர் தனது ஸ்ரீ பாஷ்யத்தில், 

"விழித்து இருக்கும் போது நாம் காணும் காட்சிகள் எந்த அளவுக்கு சத்தியமோ!, அது போல, கனவில் காணும் காட்சிகளும் சத்தியமே" என்கிறார்.

ஒருநாள், 

ஒருவன் திடீரென்று காக்கையாகி விட்டான். காகம் போல கறைந்து கொண்டு பறக்கிறான். தன் வீட்டை பார்த்ததும், வாசல் வழியாக நுழைய முயன்றான். அவன் மனைவியே "சூ சூ..." என்று துரத்தி விட்டாள்.

"ஐயோ! என் நிலைமை இப்படி ஆகி விட்டதே!"

என்று புலம்பி அழ, விழித்துக்கொண்டு விட்டான்.

"அட.. சீ! என்ன கனவு இது!" என்று பெருமூச்சு விட்டான். கனவு பொய் என்று நினைத்தான்.

ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். ஏதோ ஒரு பூர்வ ஜென்மத்தில் காக்கையாக இருந்திருப்பான், அந்த வாசனை இன்னும் போகாததால், இப்படி ஒரு கனவு கண்டான்" என்கிறார்.


ஒருநாள், 

திடீரென்று நான்கு பேர் சேர்ந்து கொண்டு, இவனை அடி அடியென்று அடித்து நொறுக்கி விட்டார்கள். ரத்தம் சொட்ட, வலி தாங்க முடியாமல், உயிருக்கு பயந்து இவன் ஓட, விழித்துக்கொண்டு விட்டான்.

"அப்பாடா! பெரிய கஷ்டத்தில் இருந்து தப்பித்தோம்! .. சீ! என்ன கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த அனுபவத்தை கனவில் கொடுத்து,  பாப கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 

'நியாயமாக இவன் பெருமாளுக்கு நன்றி சொல்ல வேண்டும்' என்கிறார்.

'கெட்ட கனவும், பாபத்தை கழிக்கவே வருகிறது. இது பெருமாளின் கருணையையே காட்டுகிறது' என்கிறார்.


ஒருநாள், 

பெரிய மாளிகையில், பெரிய சிம்மாசனத்தில் இவன் அமர்ந்து இருக்கிறான். 

ஆயிரக்கணக்கான வேலைக்காரர்கள் சூழ, பல வித உணவுகள் இருக்க, சகல வசதியுடன் இருக்கிறான். 

'ஆஹா எத்தனை சுகமான வாழ்க்கை' என்று அனுபவித்து கொண்டு இருக்கும் போது, விழித்துக்கொண்டு விட்டான்.

ஒட்டு வீட்டில், வெறும் தரையில் படுத்து கொண்டு இருக்கிறான்.

"அடடா.. என்ன அற்புதமான கனவு இது!" என்று நினைத்தான்.


ராமானுஜரிடம் கேட்டால்,

"இந்த கனவு சத்தியம் தான். இவனுக்கு இப்படி ஒரு அவஸ்தை விழிப்பு நிலையில் இவனது பூர்வ கர்மாவால் நடக்க வேண்டியிருக்க, பெருமாளின் கருணையால், இந்த சௌக்கியமான அனுபவத்தை கனவில் கொடுத்து,  புண்ணிய கர்மாவின் கணக்கை கழித்து விட்டார்." என்கிறார். 


'நல்ல கனவு, புண்ணியத்தை கழிக்கவே வருகிறது. இதுவும் பெருமாளின் கருணையே' என்கிறார்.

பெரிய மாளிகை கட்டி, வசதியாக வாழும்படி நிஜத்தில் நடத்தி இருக்க கூடாதா? என்று கேட்டால்,

'வசதி நிஜத்தில் கொடுத்து இருக்கலாம். கஷ்டம் இருந்தால், பெருமாளை கொஞ்சமாவது நினைப்பான்.

அதீத வசதி கொடுத்தால், பெருமாளை விட்டு விலகி சென்று விடுவானே! மீண்டும் சம்சார சுகத்தில் வீழ்ந்து விடுவானே! அதனால் தான் அந்த புண்ணிய அனுபவத்தையும் கனவில் கொடுத்து, அதையும் கழித்து விடுகிறார்" என்கிறார்.


இப்படி, நல்ல கனவும், கெட்ட கனவும், 'பூர்வ ஜென்ம வாசனையாலும், சில பாவ கர்மாக்களை கழிக்கவும், சில புண்ணிய கர்மாக்களை கழிக்கவும்' ஏற்படுகிறது என்கிறார்.

சிலருக்கு ஆச்சர்யமாக கனவில் பெருமாள் தோன்றுகிறாரே!

ஆண்டாள் தனது கனவில் பெருமாள் வந்து தன்னை கரம் பிடித்ததாக கண்டேன் என்று சொல்கிறாளே!  மற்ற ஆழ்வார்களும் கனவில் பெருமாளை தரிசித்தேன் என்று சொல்கிறார்களே!

நமக்கும், எப்பொழுதாவது, 

தெய்வீக காட்சிகள் ஏற்படுகிறதே! அதற்கு காரணம் என்ன? என்று கேட்டால்,

ராமானுஜர், "அந்த திவ்ய காட்சிகள் சத்தியமே! என்கிறார்.


பெருமாள் நேரில் வந்தால் தாங்க முடியாது. நேரில் பார்த்த ஆழ்வார்களால் உலகத்தோடு பழக முடியவில்லை. நேராக தெய்வம் வந்து பேசினால் பித்தனாகி விடுவோம். உலக விஷயங்களில் பிறகு மனம் செல்லவே செல்லாது. 

ஆதலால், பெருமாள், பக்குவம் இல்லாத தன் பக்தனிடம், பழக ஆசைப்படும் போது, முதலில் கனவில் வருகிறார்.

'நாளைக்கு பெருமாளை கனவில் பார்க்க போகிறேன்' என்று சொல்லி யாரும் பார்த்து விட முடியாது. 

'பெருமாள் கனவில் வருவது நம் சாமர்த்தியத்தால் அல்ல, அவர் கருணையால் மட்டுமே!' என்பதால் கனவில் எற்படும் திவ்ய காட்சிகளை சத்தியம் என்றே உணர வேண்டும்.


தன்னிடம் பழக தெய்வம் வருகிறார் என்று கனவில் பார்த்த பக்தன், மேலும் மேலும் நம் பக்தியை வளர்த்து கொள்ள வேண்டும்.


வேதத்தில் இல்லாத, சொல்லாத உருவங்கள், போலி தெய்வங்கள் கனவில் ஏற்பட்டால், அது இந்த ஜென்மத்தில் பழகிய வாசனையே என்று உதற வேண்டும்.

Friday 17 December 2021

ஜாதிகள் எப்படி உருவானது? "ஜாதி", "மதம்", 'வர்ணம்' - இரண்டையும் அழிக்க வழி என்ன? ஒரு அலசல்

"ஜாதி", "மதம்" - இரண்டையும் அழிக்க வழி.
'நாகரீகமுள்ள, கட்டுப்பாடான, அமைதியான சமுதாயத்தை மனிதர்கள் உருவாக்க ஆசைப்பட்டால், நான்கு வர்ணங்களில் மனிதர்கள் இருக்க வேண்டும்' என்று ஹிந்து தர்மம் சொல்கிறது.
"பிராம்மண, க்ஷத்ரிய, வைசிய, சூத்ர என்ற நான்கு வர்ணங்கள் என்னால் படைக்கப்பட்டது" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவானாக சொல்கிறார்.
சாதுர் வர்ணம் மயா ஸ்ருஷ்டம்
(அத்யாயம் 4 - ஸ்லோகம் 13) - பகவத் கீதை

"சாதுர் ஜாதி மயா ஸ்ருஷ்டம்" - நான்கு ஜாதி என்னால் படைக்கப்பட்டது என்று சொல்லவில்லை.

'ஜாதி' வேறு. 'வர்ணம்' வேறு.

நான்கு வர்ணத்தில் வாழாதவர்களை பெயர் கொடுக்காமல், 'பஞ்சமன்' ("ஐந்தாவது" வர்ணத்தில் இருப்பவன்) என்று பொதுவாக சொல்கிறது.

வர்ணம் என்றால் நிறம்.. 4 shades of people.
ஜாதி என்றால் caste.

ஹிந்து தர்மம் சொல்லும் இந்த 4 வர்ணத்தை எந்த சமுதாயம் அழிக்க நினைக்கிறதோ, அவர்களால் நிம்மதியாக வாழ முடியாது.

உலகம் முழுவதும் இந்த நான்கு வர்ணத்தில் தான் இருக்கிறது.

எந்த சமுதாயத்தில் ஒரு வர்ணத்தில் இருப்பவர்கள் தங்கள் கடமையை தவறுதலாக பயன்படுத்துகிறார்களோ, அவர்களால் அந்த சமுதாயம் நிலை குலையும்.
க்ஷத்ரியர்கள் என்ற "ராணுவத்தினர், போலீஸ்காரர்கள்" இன்றும் உள்ளனர்.

ஆயுதம் வைத்திருக்கும் இவர்கள் நினைத்தால், பெரும் நாசத்தை உண்டாக்கி விடமுடியும்.
க்ஷத்ரியர்கள் தன் எல்லை மீறி, நாட்டு மக்களை துன்புறுத்திய போது, பரசுராமராக விஷ்ணுவே அவதரித்து, 21 தலைமுறை க்ஷத்ரியர்களை அடக்கினார் என்று பார்க்கிறோம்.

பாகிஸ்தான் போன்ற நாடுகளில், ராணுவத்தின் அதிகாரமே அதிகமாக இருப்பதை பார்க்கிறோம். அந்த நாட்டின் பொருளாதார நிலை, அமைதி எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்றும் பார்க்கிறோம்.

ராணுவம், போலீஸ் போன்ற க்ஷத்ரியர்கள் என்ன செய்ய வேண்டும்? எது நியாயம்?" என்று சொல்லி வழிநடத்த , ப்ராம்மணர்கள் என்ற வர்ணத்தில் இன்று, சட்டசபையில் அமைச்சர்கள் பலர் கூடி, முடிவெடுத்து க்ஷத்ரியர்களை, வைசியர்களை, சூத்திரர்களை வழி நடத்துகின்றனர்.

ப்ராம்மணர்கள் சொல்படி நடக்கும் க்ஷத்ரியர்கள், மக்களை துன்புறுத்தாமல் இருக்கின்றனர். தேவைப்பட்டால் உதவி கூட செய்கின்றனர். நாட்டை உயிரை கொடுத்து காக்கின்றனர்.

வைசியர்கள் என்ற வியாபாரிகள், முதலாளிகள் (employer) நாட்டிற்கு வருமானத்தையும், வேலைவாய்ப்பையும் கொடுக்கின்ற்னர்.

வேலை செய்ய, சூத்திரர்கள் (employee) கோடிக்கணக்கில் இருக்கின்றனர்.
வேலை செய்யாமல் சூத்திரர்கள் இருந்தால், வியாபாரம் நடக்கமுடியாது,
சட்டசபையில் இருக்கும் அமைச்சர்களுக்கு வேலை செய்ய ஆள் (employee) இருக்காது. அஸ்திவாரமே ஆட்டம் கண்டு விடும்.
ஆதலால், ஹிந்து மதம், சூத்திரம் (formula) போன்று வேலை செய்பவர்கள் இருப்பதால், இவர்களை "சூத்திரன்" என்று பெயர் கொடுத்தது.

சமஸ்கரித மொழியின் அர்த்தம் தெரியாத சில மடையர்கள், ஏதோ அவமான பெயர் போல, தமிழ்மொழி என்று நினைத்து, வேலைக்கு செல்பவர்களை கேவலப்படுத்துகின்றனர்.

வர்ணம் அழிந்தாலோ, வர்ணத்தில் உள்ளவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்யாமல் இருந்தாலோ, சமுதாயம் அழிந்து விடும்

அனைத்து நாடுகளிலும் நான்கு வர்ணத்தால் தான் சமுதாயம் கட்டமைக்கப்பட்டு உள்ளது.
சிலர் ராணுவம், போலீஸ் என்ற க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கின்றனர்.
சிலர் எது நியாயம், எது நன்மை என்று சொல்லுமிடத்தில் அரசாங்கத்தில் உள்ளனர்.
பல வியாபாரிகள், வைசிய வர்ணத்தில் உள்ளனர்.
பல வேலைக்கு செல்பவர்கள் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்.

க்ஷத்ரிய அரசர்கள் இன்று இல்லாமல் போனதால், க்ஷத்ரிய வர்ணம் அழிந்து போனதாக நினைத்து கொள்ள கூடாது.

இன்று, க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள், தங்களை ராணுவத்தினர், போலீஸ் என்று அடையாளப்படுத்தி கொள்கின்றனர்.

அன்று பிராம்மண வர்ணத்தில் இருந்து தர்மம், அதர்மம் பற்றி விளக்கி சொன்ன சமுதாய மக்கள், ஆசாரம், வேதத்தை இன்றும் காப்பாற்றி வருவதால், பிராம்மண குணத்தை இன்னும் இழக்கவில்லை. ஆனால் பலர் பிராம்மண வர்ணத்தை இழந்து விட்டனர்.

இப்பொழுது உள்ள இந்த பிராம்மண சமுதாயத்தை, 'பிராம்மண வர்ணம்' என்று சொல்ல கூடாது. 'பிராம்மண ஜாதியாக' உள்ளது.

ஜாதிகள் ஒரு உன்னதமான குருவையோ, அரசனையோ, தெய்வதையோ வைத்து உருவானது.

யாதவ ஜாதி, "யது" என்ற அரசனை பின்பற்றி வந்தது.
அது போல,
ராமானுஜர், ஆதி சங்கரர், மத்வர், ரிஷிகளை பின்பற்றி வாழ்ந்த, பிராம்மண சமுதாயம், பிராம்மண ஜாதியாக இன்றும் இருக்கிறார்கள்.

பிராம்மண ஜாதியில்,
இன்று சிலர் பிராம்மண வர்ணத்தில் இருக்கிறார்கள்,
இன்று சிலர் க்ஷத்ரிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் வைசிய வர்ணத்தில் இருக்கிறார்கள்.
இன்று சிலர் சூத்திர வர்ணத்தில் இருக்கிறார்கள்.

யது என்ற அரசனை பின்பற்றி யாதவ ஜாதி வந்தது போல, "ஜாதிகள்" ஒவ்வொரு தலைவனை பின்பற்றி உருவானது.

வர்ணத்தை எப்படி எளிதில் ஒழிக்க முடியாதோ! அது போல,
ஜாதியை எளிதில் ஒழிக்கவே முடியாது.

இன்று சிலர் நாங்கள் "அண்ணா வழி" என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
இதுவே பலரால் பின்பற்ற படும்போது, ஒரு நாள் ஜாதியாக மாறும்.
ஒரு நாள் அம்பேத்கார் ஜாதி, அண்ணா ஜாதி என்ற ஜாதிகள் உருவாகி, ஜாதி மறுப்பு திருமணம் அவர்களுக்கிடையே நடக்கும் போது சண்டையிட்டு கொள்ளும்.

"யது" அரசனின் வழியில் வந்தவர்கள், 5000 வருடத்துக்கும் மேலாக இன்றும் இருக்கிறார்கள்.
யது வழியில் வந்தவர்கள், காலப்போக்கில் 'யது குலம்' என்றும், யாதவ ஜாதி என்று அடையாளப்படுத்தபட்டார்கள்.
"புத்தர் வழி" என்று சொல்லி ஒரு கூட்டம் வந்தது.
காலபோக்கில் "புத்த ஜாதி" என்பதை விட இன்னும் போய் "புத்த மதம்" என்று ஆகி விட்டது.

அது போல,
சில பொய் மதங்கள் உருவாகின.

ஜாதி பெரிதாகும் போது, மதம் என்று அந்த சமுதாய மக்கள் அடையாளப்படுத்தி, அந்த தலைவனை கொண்டாட ஆரம்பித்தனர்.

'தன் தலைவன் தான் உயர்ந்தவர்' என்று மதங்கள் ஆரம்பித்து, ஒரே ஒரு ரிஷி, தலைவன் என்று இல்லாத சனாதன தர்மத்தில் வாழும் சமுதாயத்தை பார்த்து, "ஹிந்து மதம்" என்று சொல்லி பாரத மக்களை அடையாளப்படுத்தினர்.

'தன் மத தலைவன் சொன்னது தான் சரி' என்று பாரத மக்களை 1000 வருடங்கள் கொள்ளை அடித்தனர்.

புத்த மதத்தில் உள்ள ஒருவளை, புத்தரை மதிக்காத ஒருவன் மணக்க நினைத்தால், எப்படி அந்த மக்கள் ஒத்து கொள்ளமாட்டார்களோ, அது போல,
ஹிந்து மதத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும், அவர்கள் நம்பிக்கையை குலைக்கும் மற்றவர்களை மணக்க சம்மதிப்பதில்லை.

தேவர் ஜாதியில் உள்ள நம்பிக்கையை அவமதிக்கும் புத்தி உள்ளவன், அவர்கள் ஜாதியில் உள்ள பெண்ணை மணக்க நினைக்கும் போது, மானமுள்ள தேவர் ஜாதியில் உள்ளவர்களுக்கு வேதனை உண்டாகிறது.

ஜாதிகள், 'ரிஷிகள், தெய்வங்கள் வழியே வந்தது' என்று மட்டும் நினைக்க கூடாது.
'அரசர்கள், தலைவர்கள்' வழியாகவும் வருகிறது.

நாங்கள் "அண்ணா வழி", நாங்கள் "மகாத்மா வழி" என்று சொல்லி கொள்வதை இன்று பார்க்கிறோம்.
"ஜாதியை ஒழிக்க வந்தேன்" என்று சொல்லி, மக்கள் சேர சேர கடைசியில் இவர்களே ஒரு நாள் ஒரு 'மூத்திர ஜாதி'யாக ஆகி விடுவார்கள்.

இப்படி நாங்கள் "யது வழி", நாங்கள் "ராமானுஜர் வழி", நாங்கள் "ஸ்ரீவத்ஸ ரிஷி வழி", என்று சொன்னதை, ஜாதியாக இன்று மாற்றி விட்டார்கள்.

நாங்கள் 'கிறிஸ்து வழி' என்று ஒரு சமுதாயம் வெளிநாட்டில் ஆரம்பித்து, அது ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

அதை தொடர்ந்து, 'நபிகள் வழி' என்று ஒரு சமுதாயம் ஆரம்பித்து, அதுவும் ஜாதியை தாண்டி, மதமாகி விட்டது.

ஜாதியும், மதமும் ஒரு தலைவனை கொண்டு உருவானது என்பதால், கிறிஸ்தவ நாடுகளுக்கு, கிறிஸ்து என்ற தன் தலைவனை ஏற்காத இஸ்லாமியனை கண்டால் வெறுப்பு.
அதே போல, இஸ்லாத்தை வெறுக்கும் கிறிஸ்தவ நாடுகளை அழிக்க இஸ்லாமியர்கள் நினைக்கின்றனர்.

வர்ணம் அழியும் போது, அந்த சமுதாயம் அழிந்து விடும்.
பாகிஸ்தான் போன்ற நாடுகளில் க்ஷத்ரிய வர்ணம் மற்ற வர்ணத்தில் உள்ளவர்களை அடக்குகிறார்கள். இதனால், தானாகவே இந்த சமுதாயம் அழிந்து போகும்.

அந்தந்த ஜாதியை படைத்த தலைவர்கள், ரிஷிகள், அரசர்கள், ஞானிகள், மகாத்மாக்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த ஜாதி மட்டும் அழியும்.

பிராம்மண ஜாதி அழியவேண்டுமென்றால், 12 ஆழ்வார்கள், நாயன்மார்கள், வேதம், பெருமாள், சிவன், முருகன், விநாயகர், சரஸ்வதி, பார்வதி, லட்சுமி, ஆதி சங்கரர், மத்வர், ராமானுஜர், துளசி தாசர் என்று அனைவரும் பொய் என்று ஆக்க வேண்டும்.
ஆக்கினால், ப்ராம்மண ஜாதி அழியும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

பொதுவாக ஹிந்துக்களை அழிப்பது என்பது நடக்கவே நடக்காத காரியம்.. ஹிந்துக்களை அழிக்க வேண்டுமென்றால், ஜாதிகள் அழிய வேண்டும்..
உதாரணத்திற்கு, யாதவ ஜாதி அழிய வேண்டுமென்றால், அவர்களுக்கு கிருஷ்ணர் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
யது என்ற அரசனின் மீது அவநம்பிக்கை ஏற்பட வேண்டும்.
இது நடக்கவே நடக்காத காரியம்.

உருவான மற்ற மதத்தை அசைக்க, அவர்கள் நம்பும் விஷயத்தை கேள்விக்குறியாக்கினால் போதுமானது. மக்களின் மனதில் கேள்விகளை விதைத்தால் தானாக விலகி விடுவார்கள்.

அந்தந்த மதத்தை படைத்த தலைவர்கள் மீது நம்பிக்கையை அந்த சமுதாய மக்கள் அடியோடு வெறுக்கும் போது, அந்த மதமும் அழியும்.

இந்தியாவில் ஹிந்து தர்மத்தை விட்டு விட்டு, அசோக சக்கரவர்த்தியின் முட்டாள்த்தனத்தால் சில நூறு வருடங்கள் பௌத்த மதத்தை தழுவி இருந்தார்கள் சில கோடி ஹிந்துக்கள்.

'அன்பு சமாதானம்' என்று அனைவரையும் முட்டாளாக்கிய புத்தமத கொள்கையால், அரசர்கள் தூங்கி விட, 1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பை பாரத மக்கள் அனுபவிக்க நேரிட்டது.

'புத்தனும் வேண்டாம், பௌத்த மதமும் வேண்டாம்' என்று தூக்கி எறிந்த பாரத மக்கள், மீண்டும் சனாதன தர்மத்திற்கு வந்தனர்.

இன்று சிலர் மறுபடியும் சில போலி மதங்களில் விழுந்துள்ளனர்..
வழக்கம் போல, அடி வாங்கும் போது, மறுபடியும் ஹிந்து தர்மத்தில் வந்து விடுவார்கள் என்பது நிச்சயம்.