Followers

Search Here...

Showing posts with label ராமானுஜர். Show all posts
Showing posts with label ராமானுஜர். Show all posts

Thursday 28 February 2019

அன்பே சிவம் என்றும் செயலே தெய்வம் என்று சொல்லும் போலிகளுக்காக ஒரு அலசல்...

நாம் செய்யும் செயலுக்கு, தானாகவே பலன் கிடைத்துவிடும். நடுவில் கடவுள் எதற்கு? என்று கேட்கிறார்கள் சில மூடர்கள். கடவுளை எப்படியாவது மறுக்க வேண்டும் என்பதற்காக, இவர்கள்
"செயலே (கர்மா) தெய்வம்" என்று விஷமமாக பேசுகிறார்கள்..


"கடமையே தெய்வம்", "செயலே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள், கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.
அதே போல,
இன்னும் சிலர்,
"அன்பே சிவம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்,
"தமிழே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

இன்னும் சிலர்
"அறிவே தெய்வம்" என்று சொல்லி, கடவுளை மறுக்க முயல்கிறார்கள்.

உண்மையை உணர்ந்த ஞானியோ,
"அன்பு மட்டும் தான் தெய்வமா? 
தமிழ் மட்டும் தான் தெய்வமா?
அறிவு மட்டுமே தெய்வமா? 
செயல் (கர்மா) மட்டுமே தெய்வமா? 
எல்லாமுமே தெய்வம் தான்." என்கிறார்கள்.


"தமிழே தெய்வம்" என்று சொன்னால், உலகத்தில் உள்ள பிற மொழிகள் எல்லாம் தெய்வம் இல்லையா?
இப்படி சொல்லும் பிரிவினைவாதிகள் அனைவருமே போலிகள். இவர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள். மனித சமுதாயத்துக்கே ஒரு கறை போன்றவர்கள்.

தெலுங்கு பேசுபவனுக்கு "தெலுங்கே தெய்வம்",
ஹிந்தி பேசுபவனுக்கு "ஹிந்தியே தெய்வம்".
அவனவனுக்கு அவன் தாய் மொழி தெய்வம்.

"தாய் மொழியை மதிக்கிறேன்" என்று சொல்லிக்கொண்டு பிற மொழிகளை மிதிக்கலாமா?

இப்படி "தமிழே தெய்வம்" என்று பேசுபவர்கள், "தமிழ் மொழியே தெய்வம், என்று சொல்லி சொல்லி, தெய்வத்தை மறுப்பது மட்டுமில்லாது, பிற மொழி வெறுப்பையும் விதைக்கிறார்கள்.

இவர்கள் உண்மையில் திருடர்கள். இவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்களை ஒதுக்க வேண்டும்.

"தமிழே தெய்வம்" என்று சொல்ல ஆரம்பிக்கும் போதே,
"சமஸ்கரிதம் தெய்வமில்லை, கன்னடம் தெய்வமில்லை. ஜப்பானிய மொழி தெய்வமில்லை" 
என்றெல்லாம் பேச வைக்கும்.

இப்படி பேசுவதாலேயே, நமக்குள் ஒரு விஷம் ஏற்றப்படுகிறது. பிறமொழி பேசும் சக மனிதனிடம் பகை உண்டாக்கப்படுகிறது.


குறுகிய மனப்பான்மை கொண்டு, தெய்வத்தை மறுத்து, ஒரு மொழியை மட்டும் தெய்வம் என்று ஏமாற்றும் கூட்டத்தை கண்டிக்க வேண்டும்.

"என் மொழி உயர்ந்தது, தொன்மை வாய்ந்தது" என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளலாம்.
அதற்காக தெய்வத்தை மறுத்து, தன் மொழியையே தெய்வம் என்று சொல்லலாமா? 
தமிழ் வேதமாக போற்றப்படும் 4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் பாசுரங்கள் தமிழ் மொழியில் தானே எழுதப்பட்டது? 
"தமிழே தெய்வம்" என்று சொல்லும் இந்த போலிகள் பாசுரங்களை மேடைகளில் சொல்லி தமிழை வளர்க்கிறார்களா, வளர்ப்பார்களா? 
தமிழ் பாசுரங்களை, பிரபந்தங்களை ஏற்காமல், அந்த பாசுரங்கள் துதிக்கும் தெய்வங்களை ஏற்காமல், "தமிழே தெய்வம்" என்று பேசும்போதே இவர்கள் போலிகள் என்று தெளிவாக தெரிந்து விடுகிறது.





தமிழை வளர்த்த சித்தர்கள், மகான்கள், சிவனையும், நாராயணனையும் தானே தெய்வம் என்றனர்?
தெய்வத்தை ஒதுக்கி விட்டு, 
இவர்கள் தந்த பாசுரங்களையும் ஒதுக்கி விட்டு, இன்றைய நாத்தீக  போலிகள் "தமிழே தெய்வம்" என்று சொல்லி, ஊரை  ஏமாற்றுகின்றனர். 

"செயலே தெய்வம்" என்றும்,
"மொழியே தெய்வம்" என்றும்,
"அன்பே தெய்வம்" என்றும்
சொல்லி, நம் தெய்வத்தை நிராகரிக்கும் இந்த போலிகளை உதைத்து விரட்டுவோம்.

"அன்பே தெய்வம்" என்று தெய்வத்தை மறுத்து பேசும் போலிகளுக்கு, திருமங்கை ஆழ்வார் சொல்கிறார்,
"அன்பு மட்டுமா தெய்வம்?. பாவமும் தெய்வம் தான், புண்ணியமும் தெய்வம் தான். நரகமும் தெய்வம் தான். சொர்க்கமும் தெய்வம் தான்" என்கிறார்.

அன்பு என்பது ஒரு குணம் தானே.
ஒரு குணமே எப்படி தெய்வமாக முடியும்?

தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் மட்டுமே "அன்பே சிவம்" என்று சொல்லி, தெய்வத்தை நிராகரிக்க முயல்வார்கள். 
இது போன்ற போலிகளை ஒரு போதும் வளர்க்க கூடாது.

நாயன்மார்களை கேட்டால், அந்த அன்பு என்ற கருணை உடையவன் ஈசன் என்று சொல்லி, "சிவமே அன்பு" என்று அன்பு என்ற குணம் சிவனில் அடக்கம் என்று, சொல்கிறார்கள்.
அப்படி இருக்க ஒரு குணம் மட்டும் எப்படி தெய்வம் என்று சொல்ல முடியும்?
இது தான் தெய்வத்தை மறுப்பவர்கள் பகுத்தறிவா? வெட்கக்கேடு..
இது போன்ற உரையாடல் தான் யாதவப்ரகாசருக்கும், ஸ்ரீ ராமானுஜருக்கும் ஏற்பட்டது. 


யாதவப்ரகாசர் தன் சிஷ்யர்களிடம் "அறிவே தெய்வம்" என்று பேசினார்.

"அறிவே தெய்வம்" என்று சொல்வதால், வேதத்தில் சொன்ன பரமாத்மா 'தெய்வம்' இல்லை என்று சொல்வது போல ஆகி விட்டது.
ஸ்ரீராமானுஜர் எழுந்து
"அறிவே தெய்வம் என்று சொல்கிறீர்களே...
அறிவே தெய்வமா? அல்லது, அறிவு உடையவன் தெய்வமா?" 
என்று திருப்பிக்கேட்டார்.

மேலும்,
"'அறிவே தெய்வம்' என்று சொன்னால் கேட்பதற்கு நன்றாக இருக்கலாம்.
ஆனால், தெய்வத்தை மறுத்து 'அறிவே தெய்வம்' என்று நம்மை சொல்லச் சொல்லவிலலையே?

இப்படி சொல்ல ஏன் அனுமதித்தார்கள்? என்று பார்க்க வேண்டி இருக்கிறது.

பெற்ற அறிவை (கல்வியை) பொக்கிஷம் போல, தன் உயிர் போல, ஒருவன் பாதுகாக்க வேண்டும். அறிவை வளர்த்துக்கொள்ள எப்பொழுதும் முயற்சி செய்ய வேண்டும் என்பதற்காக, "அறிவே தெய்வம்' என்று சொல்லும் பழக்கம் வந்ததே தவிர, தெய்வத்தை மறுத்து, அறிவு மட்டுமே தெய்வம் என்று சொல்வதற்காக சொல்லப்படவில்லை.

'அன்பே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நாம் அனைவரும் பிற உயிர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும்" என்பதற்காக சொல்லப்பட்டது. அன்பு என்ற குணம் மட்டுமே தெய்வம் என்று சொல்லி, தெய்வத்தை மறுப்பதற்காக சொல்லப்படவில்லை.

அது போல,
'தமிழே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம், "நம்முடைய தாய் மொழியாக உள்ள தமிழை அப்படி உயிராக நினைக்க வேண்டும், பற்று வர வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே தவிர, தெய்வத்தை மறுத்து, தமிழ் என்ற மொழியையே தெய்வம் என்று சொல்வதற்காக இல்லை.
கடவுளை மறுப்பவன், இது போன்ற சொல்லை பயன்படுத்தினால், கண்டிக்க வேண்டியது ஹிந்துக்களின் கடமை.

அது போல,
'கர்மாவே தெய்வம்', 'கடமையே தெய்வம்' என்று சொல்வதன் நோக்கம்,
"அவனவனுக்கு விதிக்கப்பட்ட கடமையை உயிராக நினைத்து செய்ய வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதேயன்றி, தெய்வத்தை மறுத்து, செயலே தெய்வம் என்று பேசுவதற்காக இல்லை. 

ஒரு செயலே எப்படி தானாக பலன் கொடுக்க முடியும்?
நியாயமாக உழைத்தால் அதற்கு தகுந்த கூலி அந்த செயலாலேயே கிடைத்து விடும் என்றால், எதற்காக சம்பளம் போதாது என்று போராட்டம் நடக்கிறது?
செய்த செயலுக்கு கூலி கிடைக்கவில்லையே என்று போராட்டங்கள் ஏன் நடக்கிறது? 
கர்மாவே தெய்வம் என்றால், போராட்டங்கள் எதற்கு? 

அவனவன் செயலுக்கு, அந்த செயலே கூலி தரும் என்று பேசினால், வேலையை செய்து விட்டு, கூலி தானாக கிடைக்கும் என்று அமைதியாக இருக்கலாமே?

உலக வழக்கில் பார்த்தாலே, நாம் செய்த கர்மாவுக்கு (செயலுக்கு), கூலியை ஒரு முதலாளி தானே, நமக்கு கொடுக்கிறான்.

முதலாளியின் பிரியத்தை சம்பாதித்தவன், தான் செய்யும் செயலுக்கும் மீறி, அதிகமாக கூட கூலி பெறுகிறானே...
கர்மாவே தெய்வமா? கர்மாவுக்கு பலன் கொடுக்கும் முதலாளி தெய்வமா?
யோசிக்க வேண்டாமா?

சில அசட்டு பக்தன், தெய்வம் காப்பாற்றுவார் என்று தன் கடமையை கூட செய்யாமல் இருந்து விடுவான்.

தனக்கு விதிக்கப்பட்ட கர்மாவை செய்யாமல் இருக்க கூடாது, "கர்மாவை செய்" என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார் என்று பார்க்கிறோம்.
அர்ஜுனனை பார்த்து "க்ஷத்ரியனான நீ, உன் கடமையை செய். தர்மத்துக்காக போரிடு. என்னிடம் பக்தியுடன் இரு. நான் உன் கடமைக்கு ஏற்ற கூலியை கிடைக்க செய்கிறேன்" என்கிறார்.

'கர்மாவை செய்' என்று தன் பக்தனுக்கும் சேர்த்து சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
"கர்மாவை செய்.. பலனை எதிர்பார்த்து கர்மாவை செய்யாதே.. பலன் கொடுப்பதை என்னிடம் விட்டுவிடு" என்கிறார்.

தன்னை சரண் அடைந்தவனும் கர்மாவை செய்ய வேண்டும் என்று சொல்லும் ஸ்ரீ கிருஷ்ணர்,
தன் பக்தன் செய்யும் செயலில் குற்றம் குறை இருந்தாலும், முதலாளியாக இருக்கும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், செயலுக்கு தகுந்த பலன் மட்டும் கொடுக்காமல், அவன் எதிர்பார்த்ததை விட அதிகமாக பலன்களை, உலக சௌக்கியங்கள் ஆரம்பித்து, மோக்ஷம் வரை வழி செய்து கொடுத்து விடுகிறார்.
"கர்மாவே தெய்வம்" அதனால் வேறு தெய்வம் இல்லை என்று நாத்தீகனை போல பேசும் மூடர்கள் செய்த கர்மா அளவுக்கு மட்டும் பலனை பகவானிடம் இருந்தே பெற்று, கடவுள் இல்லை, கர்மாவே தெய்வம் என்று உலறுக்கிறார்கள்.

தெய்வத்தை மறுத்து,
"அன்பே சிவம்" என்றும்,
"தமிழே தெய்வம்" என்றும்,
"அறிவே தெய்வம்" என்றும் 
பேசும் போலிகளை ஒடுக்குவோம்.

சனாதன தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
போலிகளை ஒடுக்குவோம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




Saturday 14 July 2018

Ramanuja Prediction and how earth looks like. உலகம் எப்படி இருக்கிறது ? சஞ்சயன் கூறினான். ராமானுஜர் வரைந்த படம்

உலகம் எப்படி இருக்கிறது? என்று, இந்த ஸ்லோகத்தை சஞ்சயன் த்ருதராஷ்டிரனிடம் சொல்கிறார்.

After getting divine vision from Vyasa, sanjaya was able to see the entire world. 
He says how the earth looks like? from the moon view to dhritharashtra.




யதா ஹி புருஷ: பஸ்யேதா 
தர்ஸே முகமாத்மந: !
ஏவம் சுதர்சன த்வீபோ 
த்ருஷ்யதே சந்திர மண்டலை !!
த்விரம்ச பிப்பல தத்ர !
த்விரம்சே ச சசோ மஹான் !!    
       - பீஷ்ம பர்வா - மகாபாரதம்.

यथा हि पुरुषः पश्येदादर्शे मुखमात्मनः।
एवं सुदर्शन द्वीपो दृश्यते चन्द्रमण्डले॥
द्विरंशे पिप्पल: तत्र द्विरंशे च शशो महान्।।-
(भीष्म पर्व, महाभारत)






"ஒரு மனிதன் தன் முக பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பது போல, நான் இந்த பூமியை இந்த அண்டத்தில் இருந்து பார்க்கிறேன்.

இந்த உலகம் பார்க்க ஒரு பக்கம் அரச மர இலை போலவும், மறுபக்கம் முயல் போலவும் தெரிகிறது. "
இவ்வாறு சஞ்சயன் கூறினான்.

Here, Sanjaya says "Just like the way a human looks at the mirror and see his inverted image, i could clearly see this earth. 
I see that earth looks like a 2 peepal leaf and like a rabbit in other side.

1017ADல் ஸ்ரீபெரும்புதூரில், அவதரித்த ராமானுஜர் இந்த ஸ்லோகத்தை கவனித்து ஒரு படம் வரைந்து காட்டினார்.

Ramanuja, an incarnation of Adishesha born around 1017AD in Shriperumbudhur, near Chennai, Tamilnadu, while reading this sloka draw this picture. 
That time, people might have just trusted the words of Sanjaya and picture of ramanuja...

With current advancement, it is proved to be true. The words of Sanjaya during end of Dwapara Yuga is exactly the earth.  
When we invert the picture drawn, we see the truth. 
அப்போது இதை புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இன்று நாம் கொஞ்சம் கவனித்தால், சஞ்சயன் எப்படி இந்த உலகை பார்த்தான் என்பது புரியும்

வாழ்க ஹிந்துக்கள்.  
Hail Hindus. Hail Sanathana Dharma.  Hail the divine vision. Hail Bharata. Hail Vyasa bhagavan. Hail ramanuja.





Saturday 2 December 2017

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார். மேல்கோட்டை செல்லப்பிள்ளை சம்பந்தமாக ராமானுஜர் வாழ்வில் நடந்த சம்பவம்.

கைங்கர்யம், செல்லப்பிள்ளை



ஸ்ரீ ராமானுஜர், வரதராஜனுக்கு காஞ்சியில் சேவை செய்து கொண்டிருந்தார்.

பின்னர், ஸ்ரீரங்கநாதர், இங்கு வந்து கைங்கர்யம் செய்யுமாறு அழைக்க, கடைசி வரை ஸ்ரீரங்கநாதருக்கே சேவை செய்து கொண்டு ஸ்ரீ ரங்கத்திலேயே இருந்தார்.

ஸ்ரீ ராமானுஜருக்கு, பெருமாளுக்கு முன் தான் 'தாஸன்' என்ற மனோபாவம் உண்டு. அவரே புருஷன் என்பதால், அவருக்கு ஸ்திரீ ஆகிறான்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், காஞ்சிபுரம் இவருக்கு பிறந்த ஊராக மனோபாவம்.
காஞ்சி வரதனே இவரின் 'தந்தை'.

காலத்தில் ஒரு தகப்பன் நல்ல வரன் பார்த்து, தன் பெண்ணை கல்யாணம் செய்து கொடுத்து அனுப்புவது போல,
இவரை ஸ்ரீ ரங்கநாதருக்கு சேவை செய்ய அனுப்பி விட்டார்.

இதனால், ஸ்ரீ ராமானுஜருக்கு, தான் ஸ்திரீ என்ற நிலையில், ஸ்ரீரங்கம் இவருக்கு புகுந்த ஊராக மனோபாவம்.
ரங்கநாதரே இவரின் 'கணவன்'. கம்பீரமானவர்.

சோழ அரசன் "கிருமி கண்ட சோழன்" சைவ வெறி தலைக்கு ஏறி, ஸ்ரீ ரங்கத்தையே கலவர பூமியாக்கினான்.

ஸ்ரீ ராமானுஜர் கலவரத்தால் வெளியேறி, 12 வருடங்கள் கர்நாடகாவில் உள்ள திரு நாராயணாபுரம் என்ற மேல்கோட்டையில் வாசம் செய்தார்.
அங்கு இவருக்காகவே, செல்லப்பிள்ளையாக பெருமாள் கிடைத்தார். அங்கேயே தங்கி, செல்லப்பிள்ளைக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருந்தார்.

12 வருடங்கள் ஆகி விட்டதால், ஸ்ரீரங்க பெரிய பெருமாளுக்கு, ஸ்ரீ ராமானுஜர் மேல் கோட்டையிலேயே இருந்து விடுவாரோ!! என்று கூட தோன்றி விட்டது.
அதனால், பெரிய பெருமாளே, ராமானுஜரை உடனே  திரும்பி வர சொல்லி விட்டார்.

ராமானுஜருக்கோ நிலை கொள்ள முடியாத நிலை.
ஸ்ரீ ரங்கம் சென்றால், செல்லப்பிள்ளையை விட்டு பிரிய வேண்டும்.

அப்பொழுது தான் யதியாக (சந்யாசி) இருக்கும் ஸ்ரீராமானுஜருக்கு ஒரு தாய், தன் பிள்ளையை விட்டு பிரிய வேண்டும் என்கிற நிலையில், எத்தனை மனத் துயரம் அடைவாள் என்ற அனுபவம் கிடைத்ததாம்.

தன் பிள்ளை வேலைக்காக எங்கோ சென்று வாழ்கிறான்.
வயதான கணவனோ தான் இருக்கும் இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று அடம் பண்ணுகிறார்.

பிள்ளை ஒழுங்காக சாப்பிட்டானோ?!! 
நல்ல உடை உடுத்திக் கொள்கிறானோ?!! 
என்று கவலைப்பட்டு, ஒரு வாரம் அவனோடு இருக்கலாம் என்று தன் பிள்ளையுடன் தங்கினாள்.

ஒரு வாரம் ஆனதும், தானும் வர மாட்டேன் என்று இருக்கும் கணவன் ஞாபகமும் வர, அவர் என்ன சமைத்தாரோ!! உடம்புக்கு ஏதாவது வந்தால் யார் பார்த்துக் கொள்வார்கள்? என்று இரக்கமும் வந்து, பிள்ளையையும் பிரிய முடியாமல் தவித்தாள்.

பிள்ளைக்கு தேவையான அனைத்து பக்ஷணம், வீட்டுக்கு தேவையான அனைத்தும் வாங்கி கொடுத்து, அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் போய், தன் பிள்ளைக்கு ஒன்றும் தெரியாது, கொஞ்சம் பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு, பிள்ளையை பிரிய முடியாமல் ஒரு தாய், தன் கணவன் இருக்குமிடம் திரும்பிச்  செல்கிறாள்.



அதே மனநிலையில் இருந்த ஸ்ரீ ராமானுஜர், தனக்காக கிடைத்த "செல்லப்பிள்ளை"யான நாராயணனை தான் பெற்ற பிள்ளையாக 12 வருடம் ஆசையோடு வளர்த்து வந்தார்.

பெரிய பெருமாள் கூப்பிட, அவருக்கு தன்னை விட்டால் யார் ஒழுங்காக  பார்த்துக்கொள்வார்கள் என்று மனைவி நினைப்பது போன்று, ஸ்ரீ ராமானுஜர் ஒத்துக்கொண்டு, மேல்கோட்டையில், பெரிய பெருமாளுக்கு என்ன என்ன உத்ஸவங்கள் உண்டோ, பூஜை உண்டோ அனைத்தையும் ஏற்பாடு செய்து, வைஷ்ணவர்களை குடி அமர்த்தி, ஒரு குறையும் தன் செல்ல பிள்ளைக்கு வந்து விடக்கூடாது என்று எல்லாவிதமான ஏற்பாடுகளும் செய்து விட்டு திரும்பி புறப்படுகிறார்.

கிளம்பும் போது, அங்கு இருந்த வைஷ்ணவர்களை பார்த்து, யதிராஜர், தானே ஒரு தாயாகி, கண்களில் கண்ணீர் ததும்ப,
"செல்லப்பிள்ளையை கிணத்தடி பிள்ளைபோல கவனித்து கொள்ளுங்கள்" என்றாராம்.

"கிணற்றுக்கு அருகில் அம்மா துணி தோய்த்து கொண்டிருந்தாலும், குளித்து கொண்டிருந்தாலும் கூட, தன் பிள்ளை அந்த கிணற்றுக்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தால், கவனிக்காமல் தவறி விழுந்து விட போகிறதே என்ற பயத்தில் ஒரு கண் தன் பிள்ளை மீதே வைத்துக்கொண்டு தன் காரியங்களை செய்வது போல, வைஷ்ணவர்களாகிய நீங்களும் உங்கள் காரியத்தை செய்து கொண்டிருந்தாலும், செல்லப்பிள்ளையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்றாராம் ஸ்ரீ ராமானுஜர்.

எப்படி ராமானுஜர் செல்லப்பிள்ளையை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாரோ, அதே போல தான், நம்மிடமும் சொல்லிவிட்டு சென்றார் என்று உணரும் போது, நமக்கும் அரச்சா அவதாரத்தில் பக்தி வரும்.

பெருமாளிடம் என்ன வரம் வாங்கலாம்? என்ற எண்ணத்தை விட, நமக்காக இங்கேயே தங்கி விட்டாரே!! இவருக்கு நாம் என்ன சேவை செய்யலாம்? என்று எண்ணம் தோன்றும்.
இதுவே பக்தி.

நமக்காக வைகுண்டத்தை விட்டு ஸ்ரீ ரங்கநாதனாகவும், திருமலையப்பனாகவும், வரதராஜனாகவும், பத்ரி நாதனாகவும், அர்ச்ச அவதாரம் தாங்கி சேவை செய்வதற்கு வாய்ப்பு தருகிறார் பக்தனுக்கு.

நாம் சாப்பிடும் உணவில், தினமும் ஒரு கைப்பிடி அரிசியாவது, அருகில் தீபம் கூட ஏற்றாமல் இருக்கும் கோவிலில் சென்று கொடுக்கலாம்.

தன் வீட்டில் விளக்கு ஏற்றும் பொழுது, அருகில் உள்ள கோவிலுக்கு சென்று ஒரு தீபம் ஏற்றலாம்.

சேவை செய்ய எனக்கு கிடைத்த வாய்ப்பு இது !! என்று உணர்ந்தால், நமக்காக பெருமாள் அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பது புரியும்.

நாம் செய்யும் மிக சாதாரணமான சேவையையும் ஏற்பதற்கே அர்ச்ச அவதாரத்தில் இருக்கிறார் என்பதை உணர்ந்தால், ஒரு உண்மையான பக்தனுக்கு, சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?



இந்த உணர்வு, ஹிந்துக்களுக்கு வந்தாலே, அரசாங்கமும் தேவை இல்லை, கோவில் நிர்வாகமும் தேவை இல்லை.
அனைத்து கோவில்களிலும் தீபம் எரியும்.

நமக்காக அல்லவோ அர்ச்ச அவதாராமாக நிற்கிறார் என்ற 'உணர்வு' வந்தாலே போதும், நமக்கு சேவை செய்ய வேண்டும் என்ற புத்தி வந்து விடும்.

சக்கரவர்த்தியாக இருந்த அம்பரீஷன், தன் மனைவி கோவிலில் கூட்டி பெருக்க, தான் பெருமாளுக்கு தீவெட்டி பிடிப்பாரராம்.

அவர் மாளிகையில், அவருக்கு பணிவிடை செய்ய 100 வேலைக்காரர்கள் உண்டு.
பின்பு ஏன் இப்படி செய்கிறார்?
கோவிலை பெருக்க ஆள் போடலாமே?
தீவெட்டி பிடிக்க ஆள் போடலாமே?
என்றால், அம்பரீஷன் சொல்கிறார்,
"நான் இந்த தேசத்துக்கு சக்கரவர்த்தி, ஆனால் எம்பெருமானோ அகிலத்துக்கும் சக்கரவர்த்தி ஆயிற்றே.
அவர் அர்ச்ச அவதாரம் எடுத்து இருக்கும் போது, இந்த சந்தர்ப்பத்த்தில்  நானே சேவை செய்யாமல் எப்படி இருக்க முடியும்?.
மேலும் நான் இந்த சேவையை என் வேலைகாரனிடம் கொடுத்து செய்ய சொன்னால், அது புண்ணியமாகி போகும். கர்மாவாகிவிடும்.
நானே செய்தால்,பெருமாளுக்கு நான் செய்யும் சேவையாகி விடும். மோக்ஷத்திற்கு வழி செய்யும். நான் அதையே விரும்புகிறேன்" என்றார்.

நம்மால் முடிந்த அளவு சிறிது அரிசி, பூ, தீபம் ஏற்றினால் கூட அர்ச்ச அவதாரமாக இருக்கும் பகவான் நம் சேவையை பரிபூரணமாக ஏற்று, அணுகிரஹிக்கிறான்.

வீட்டில் இருக்கும் விக்ரஹமும், நாம் எந்த அளவு சேவை செய்ய ஆசையோடு இருக்கிறோம் என்று தான் காத்துக் கொண்டு இருக்கிறார்.

நாம் பூஜை செய்யாமல், அழுக்காக விக்ரஹ ரூபத்தில் உள்ள தெய்வங்களை அவமதித்திக்க கூடாது.
என்றாவது ஒரு நாள் இவன் நமக்கு சேவை செய்வானா?
இவனுக்கு அதன் பலனாக மோக்ஷமும் கொடுத்து விடலாமா?
என்று நமக்காகவே நம் வீட்டிலும், கோவிலிலும் அர்ச்சா திருமேனியுடன் நாம் செய்யும் அபச்சாரங்களை சகித்துக்கொண்டு, சேவை செய்வானா? என்று காத்துக்கொண்டு இருக்கிறார்.

பெருமாளின் சேவையே பக்தி. பெருமாளின் சேவையே மோக்ஷத்திற்கு வழி.

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhya Vandanam - Morning




Sandhya Vandanam - Evening

Sandhya Vandanam - Afternoon