Followers

Search Here...

Showing posts with label வேதம். Show all posts
Showing posts with label வேதம். Show all posts

Wednesday 26 June 2019

புராணங்களை சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்லி தருவது இல்லையே!! அது ஏன்? அதற்கு என்ன காரணம்?.. ஒரு அலசல்.

'ராமாயணம், மகாபாரதம், சிவ புராணம், விஷ்ணு புராணம், கந்த புராணம், சக்தி புராணம்'  போன்ற புராணங்களில்,
  • 'தெய்வங்களின் அவதாரத்தை' பற்றியும், 
  • 'தெய்வங்களின் அவதார காரணத்தை' பற்றியும் 
தெரிந்து கொள்கிறோம்.



இந்த புராணங்களை பற்றி  மகான்களும் பெரியோர்களும், 
கோவில்களில், பொது மேடைகளில், உபன்யாசம் செய்து விவரிக்கின்றனர்.

பாகுபாடு இல்லாமல், பொது மக்கள் அனைவருக்கும் இந்த புராணங்கள் சொல்லப்படுகிறது.
இஷ்டப்பட்டவர்கள் கேட்கிறார்கள்.

அது மட்டுமில்லாது,
இந்த புராணங்கள் யாவும் மேடை நாடகமாகவும், புத்தகமாகவும், டிவி, சினிமாக்களில் காட்சியாகவும் நடித்து  காட்டப்படுகிறது.

மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாசங்களை ('இதி' - இவ்வாறு, 'ஆச' - நடந்தது) TV சீரியலாக பார்க்காத பாரத மக்கள் இருக்க மாட்டார்கள்.
பாரத நாட்டில் உள்ள கிறிஸ்தவன், இஸ்லாமியன் கூட, ஸ்ரீ ராமரை பற்றி தெரிந்து கொள்ள செய்தது.
ராமாயணம் பார்த்து,
"ராமனை போல மனிதன் வாழ வேண்டும்" என்று ஆசைப்படாத மனிதன் இருக்க முடியுமா?
  • தன் பெற்றோரை எந்த அளவுக்கு மதித்தார் ஸ்ரீ ராமர்.
  • ஜாதி பேதம் இல்லாமல், வேடுவன் குகனை நண்பன் என்றார்.
  • பலம், பராக்ரமம் இருந்தும், கர்வமே இல்லாமல் அனைவரையும் மதித்தார்.
  • எத்தனை துயரங்கள் தன் வாழ்வில் வரும் போதும் தன் தர்மத்தை விடாமல், மனம் கலங்கி சோர்ந்து விடாமல், வாழ்ந்து காட்டினார் ஸ்ரீ ராமர்.
  • சுயமாக 14000 ராக்ஷர்களை ஒருவனாக போரிட்டு அழிக்கும் பராக்கிரமம் இருந்தும், நல்லோர்களை (விபீஷணன், சுக்ரீவன்) தன்னுடன் சேர்த்து கொண்டார்.
  • கஷ்ட காலத்திலும், பலம் கொண்ட வாலி போன்ற பிறர் மனைவியை அபகரித்து தன் தம்பியை கொலை செய்ய துடிப்பவன் துணையை எதிர்பார்க்கவே இல்லை. தீயவன் பலம் கொண்டவனாக இருந்தாலும், தன் லாபத்திற்காக அவர்களுடன் துணை சேரவில்லை.
  • சீதையை மீட்க பஞ்சவடியில் (nasik) இருந்து, 2000 KM நடந்து சென்று, எதிரியை கொன்று, சீதையை மீட்டு, கடைசி வரை ஏகபத்னி வ்ரதனாகவே வாழ்ந்து மனித சமுதாயத்துக்கு வழி காட்டினார்.
  • காமத்தை ஜெயித்து, கோபத்தை ஜெயித்து, பொறாமையை ஜெயித்து. வெறுப்பை ஜெயித்து, எந்த நிலை ஏற்பட்டாலும் மனிதன் தர்மத்தில் வாழ்ந்து காட்ட முடியும் 
என்று மனிதர்களுக்கு வழிகாட்டியாக இருந்தார் ஸ்ரீ ராமர்.



புராணங்கள் படிப்பதன் மூலம் "தெய்வங்கள் 3 காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்" என்று தெரிந்து கொள்கிறோம்.
1. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (இன்று ஹிந்து தர்மம் என்று சொல்கிறோம்) அழிக்க நினைக்கும் தீயவர்களை ஒடுக்கவும்,

2. ஹிந்து தர்மத்தை காக்கும் சாதுக்களை, இவர்களை போன்ற தீயவர்களிடம் இருந்து காக்கவும்,

3. சனாதன (காலம் காலமாக இருக்கும்) வேத தர்மத்தை, (அதாவது ஹிந்து தர்மத்தை) அழிய விடாமல் என்றுமே நிலை நிறுத்தவும்,
தெய்வங்களின் அவதாரம் உலகில் நடக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறது.

இதை பரமாத்மா வாசுதேவன், ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்த போது, தெளிவாக சொல்கிறார்.
பரித்ராநாய சாதுனாம்
வினாசாய ச துஶ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்த்தாப னார்தாய ஸம்பவாமி யூகே யூகே

தர்மத்தை காக்கும் 'சாதுக்களை காக்கவும்',
தர்மத்தை அழிக்க நினைக்கும் கொடியவர்களை அழிக்கவும்,
தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகவும்,
ஒவ்வொரு யுகத்திலும் நான் தோன்றுகின்றேன்
என்று ஸ்ரீ கிருஷ்ணர், தெய்வங்களின் அவதார ரகசியத்தை தெளிவாக சொல்கிறார்.
ஹிந்து தர்மத்துக்காக வாழ உறுதி கொள்ளும் போது,
'தெய்வம் நமக்கு துணை நிற்கும்' என்ற உண்மை, புராணங்களை படிப்பதன் மூலம் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"ஹிந்து தர்மத்தில் திடமான நம்பிக்கையுடன் வாழ்ந்தால், நம்மை தெய்வங்கள் காக்கும்" என்ற தெளிவு, நாளடைவில், நமக்கு உண்டாகி,
ஒரு இறை உணர்வை நமக்குள் உண்டாக்குகிறது.


புராணங்களை படிப்பதன் மூலம்,
"கடவுள் காப்பாற்றுவார்" என்ற தைரியமும் நமக்கு கிடைக்கிறது. உலகை தைரியமாக சந்திக்க மனோதிடம் உண்டாகிறது.

புராணங்களை படிப்பதன் மூலம்,
"வாழ்வில் துயரங்கள் வந்தாலும், இறைவனின் கருணையை பற்றி கொண்டு, தாண்டி விடலாம்" என்ற நம்பிக்கை நமக்கு கிடைக்கிறது.

புராணங்கள், இதிஹாசங்கள் பற்றி தெளிவாக தெரிந்து, புரிந்து கொள்வதால், வாழ்வில் ஒரு நம்பிக்கை பிறக்கிறது. 
தெய்வத்தை பற்றிய ஒரு புரிதல், ஓரளவுக்காவது உண்டாகிறது.
ஆன்மீக வளர்ச்சிக்கு நம்மை உந்துகிறது.

'தர்மத்தில் நின்று, தர்மத்தில் இருக்கும் சாதுக்களை கேலி செய்யாமல் இருந்தால்', நம்மை நிச்சயமாக தெய்வங்கள் காக்கும்
என்று புராணங்களை படிப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
அற்புதமான புராணங்கள், இதிஹாசங்கள் அனைவருக்கும் ஜாதி பேதமின்றி பொது மக்கள் அனைவருக்கும் சொல்லப்படுகிறது.

புராணங்களை அனைவருக்கும் சொல்லி தருவது போல, மந்திரங்கள், அதன் அர்த்தங்களை அது போல சொல்லி தருவது இல்லையே. அது ஏன்? அதற்கு என்ன காரணம்?

மாந்த்ரீகம் செய்பவர்கள் சில மந்திரங்களை உச்சாடனம் செய்கிறார்கள். "ஓம் ஹ்ரீம் க்லீம் ..." என்று சொல்லி கேட்டு இருப்போம்.

இந்த மந்திரங்கள் பீஜ (seed) மந்திரங்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்த மந்திரங்கள் ஸித்தி ஆனவர்கள், நமக்கு உபதேசம் செய்தால், நமக்கும் அந்த மந்திரங்கள் பலன் அளிக்கும். 

"மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை" என்று சொல்லப்படுகிறது.
அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை பல லட்சம் தடவை உச்சரிக்கும் போது, இந்த மந்திரங்கள் தரும் பலன், சக்தி வாய்ந்தது.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு சில முக்கிய 'காரணங்கள்' உண்டு.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம்: 
காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவர்கள், தகுதி இல்லாதவர்கள், சில மந்திரங்களின் அர்த்தங்கள் புரிந்து கொள்வதால், அதை தெய்வ அனுக்கிரஹம் கிடைக்க பயன்படுத்தாமல்,  தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.
க்லீம் என்ற பீஜ மந்திரத்தை, ஒரு குரு மூலம் உபதேசம் பெற்று,
ஜபம் செய்ய செய்ய,
'எந்த தெய்வத்தை நினைத்து ஜபம் செய்கிறோமோ, அந்த தெய்வங்கள் நமக்கு சப்படுவார்கள்'. சில சமயம் தெய்வங்களின் ஆவேசம் கூட நமக்குள் ஏற்படலாம்.



க்லீம் என்ற பீஜ மந்திரத்தை குரு மூலம் உபதேசம் பெற்று, ஜபம் செய்ய செய்ய, 'யாரை நினைத்து ஜபம் செய்தோமோ, அவர் நம்மை விரும்ப ஆரம்பிப்பார்' என்று பொதுவாக பலன் சொல்லப்படுகிறது.
இந்த பலனை, ஆன்மீக தேடல் இல்லாத ஒருவன், நாத்தீகன், மாந்த்ரீகம் செய்பவன், காமம், கோபம், பொறாமை குணம் கொண்டவன் அறிந்து கொள்ளும் போது,
தெய்வத்தை வசியம் செய்ய முயற்சிக்காமல், பெண்களை வசியம் செய்ய பயன்படுத்த ஆரம்பிக்கிறான். 
சிவபெருமான் தன் மனைவியான பார்வதியை மணந்த பின்னும், கைலாயத்தில் தியான யோகத்திலேயே இருந்தார்.
தான் இருப்பதே நினைவில்லாமல் இருக்கும் சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற, 
பார்வதி தேவி காஞ்சிக்கு வந்து, காஞ்சி வரதனாக இருக்கும் பரவாசுதேவனிடம் வழி கேட்டாள்.

காஞ்சி வரதன் பார்வதிக்கு "க்லீம்" என்ற பீஜ மந்திரத்தை உபதேசம் செய்து, சிவபெருமானை நினைத்து ஜபம் செய்ய சொன்னார். (திருக்கார்வானம் கள்வபெருமாள்)

சிவபெருமானை நினைத்து 'க்லீம்' என்ற பீஜ மந்திரத்தை ஜபம் செய்து தான், சிவபெருமானின் கடாக்ஷத்தை பெற்றாள் பார்வதி தேவி. 
காஞ்சியில், காமாக்ஷி என்ற பெயர் பெற்றாள் பார்வதி. 

"கணவன் மனைவியிடையே பரஸ்பரம் அன்பு இல்லாமல் இருப்பவர்கள்" காஞ்சி காமாக்ஷி கோவிலுக்கு சென்று, காமாட்சியை தரிசித்தால், "தம்பதிகளுக்குள் அன்பு உண்டாகும்" என்று லன் சொல்லப்படுகிறது.

'தெய்வத்தை குறித்து சொல்லும்' சக்தி வாய்ந்த மந்திரங்களை, மாந்த்ரீகம், வசியம் செய்ய பயன்படுத்துவார்கள் என்பதால், மந்திரங்களை, மந்திரங்களின் அர்த்தங்களை சொல்லாமல் இருந்தனர் பெரியோர்கள். 

இது போன்ற ஆபத்துகள் இருப்பதால்,
மந்திரங்கள் அனைவருக்கும் சொல்லப்படாமல், தகுதியும், பக்குவமும் அடைந்தவர்களுக்கே, உபதேசமும், அதன் அர்த்தங்களையும் விளக்கினர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை பொதுவாக சொல்லாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம்: 
"தெய்வங்கள் மூன்று காரணங்களுக்காக அவதாரம் செய்கிறார்கள்", என்று புராணங்களை படிக்கும் போது தெரிந்து கொள்கிறோம் என்று பார்க்கிறோம்.
  1. வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை காக்கவும்
  2. வேத தர்மத்தை அழிக்கும் துஷ்டர்களை அழிக்கவும்,
  3. வேத தர்மத்தை காக்கவும்,
தெய்வங்களின் அவதாரம் நடந்து கொண்டே இருக்கிறது.


'தர்மத்தை காப்பதற்கே' தெய்வங்களின் அவதாரம் நடக்கிறது.

"தர்மத்தை விட்டு விட கூடாது" என்று தெய்வங்கள் ஆசைப்படுகிறார்கள்.
"தர்மத்தை நிலை நிறுத்தத்தான்" தெய்வங்கள் அவதாரமே செய்கிறார்கள் என்று பார்க்கும் போது
ஹிந்துக்களாகிய நாம் "நம் தர்மத்தில் இருக்க வேண்டுமா?" என்று நினைப்பது கூட தவறு.

தர்மத்தை காக்க, கலியில், தெய்வங்கள் தெய்வங்களாக அவதாரம் செய்வதில்லை. சாதுக்களாக அவதாரம் செய்கின்றனர்.

947ல் இருந்து 1947 வரை பாரத பூமியில், அந்நிய மதங்கள் நுழைந்து
வேத தர்மத்தை காக்கும் சாதுக்களை அழிக்கவும், 
வேத தர்மத்தையே அழிக்கவும், 
1000 வருடங்கள் தொடர்ந்து, கடுமையான முயற்சி செய்தனர்.

கலி யுகத்தின் ஆரம்பத்தில் இருந்து, இந்த 1000 வருட இருண்ட காலம் வரை ஹிந்துக்களாகிய  நாம் கொஞ்சம் நிதானத்தோடு கவனித்தால், ஹிந்து மதத்தை யார் காப்பாற்றினார்கள் என்று புரியும்.
பரவாசுதேவனே, கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும் தானே அவதாரம் செய்தார்.
சிவபெருமானே, ஆதி சங்கரராகவும், விவேகானந்தராகவும் அவதாரம் செய்தார்.
பிரகலாதனே, ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்தார்.
நாரதரே, புரந்தர தாசராகவும், தியாகராஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆதிசேஷனே, திருப்பதியில் உள்ள 7 மலைகளாவும், ராமானுஜராகவும் அவதாரம் செய்தார்.
ஆஞ்சநேயரே, ஸமர்த்த ராமதாசராக அவதாரம் செய்தார்.




யோகிகள், ரிஷிகள், ஞானிகள் அனைவரும் கலியில்,
சூர தாஸ், கபீர் தாஸ், துளசி தாஸ், ஆழ்வார்கள், நாயன்மார்கள், பத்ராச்சல ராமதாஸ், மீரா 
என்று பாரத தேசம் முழுவதும் சாதுக்களாக அவதரித்து,  .
அந்நிய மதங்கள்,

  • கோவிலை இடித்தும்,
  • ஹிந்துக்களை கொன்றும்,
  • மதம் மாற்றியும்,

எத்தனை முயற்சி செய்தும், பாரத தேசத்தில் உள்ள
ஹிந்துக்களை அழிக்க முடியவில்லை, 
ஹிந்து தர்மமும் அழியவில்லை என்று இன்று நிரூபணமாகி உள்ளது.
இன்றும், சங்கரன், விஷ்ணு, லலிதா, லீலா, ருக்மிணி என்ற ஹிந்து பெயர்கள் கொண்ட 80 கோடிக்கும் மேல் உள்ள ஹிந்துக்கள் தன்மானத்தோடு வாழ்கிறோம். மேலும் பல கோடி
ஹிந்துக்கள் உலக நாடுகளில் ஹிந்துக்களாகவே வாழ்கின்றனர்.

பிற மதங்களை 'மனிதர்கள் உருவாக்கினார்கள்'.
அதனால், மனிதர்கள் முயற்சி செய்து பிற மதங்களை காப்பாற்றி வருகிறார்கள்.

வேத தர்மம் என்ற ஹிந்து தர்மத்தை, 'தெய்வங்களே உருவாக்கியதால்', இங்கு தெய்வங்களே அவதரித்து ஹிந்துக்களை, ஹிந்து தர்மத்தை காக்கின்றனர். 

ஹிந்துக்களாகிய நாம் நம் ஹிந்து தர்மத்தை காக்கும் போது தான், தெய்வங்கள் நம்மை கண்டு சந்தோஷப்படுவார்கள்.

ஹிந்து தர்மத்தை காக்கும் நம்மை, அழிக்க நினைக்கும் கூட்டம் அதிகரிக்கும் போது, 
ரிஷிகளை, முனிவர்களை அவதாரம் செய்ய வைக்கிறார் பரவாசுதேவன். 
இதுவும் போதாது என்றால், 
விஷ்ணுவாகிய தானே அவதாரம் செய்து, ஹிந்து தர்மத்தை மீண்டும் ஸ்தாபிக்கிறார்.

தர்மத்தை காப்பதற்கு, தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.


ஹிந்து தர்மத்தில் இருப்பது ஹிந்துக்களுக்கு அவசியம். 
ஹிந்து தர்மத்தை நாமே விட்டு விட்டால் என்ன செய்வது? 

சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளும் போது, 
ஆன்மீக பக்குவம் இல்லாத நிலையில் நாம் இருந்தால், நம் ஹிந்து தர்மத்தை கூட விட்டு விட வாய்ப்பு உள்ளது. 
நாம் செய்து கொண்டிருக்கும் கொஞ்சம் ஹிந்து தர்மம் கூட, கெட்டு போகும் என்பதால்,
சில மந்திரங்கள், அதன் அர்த்தங்களை சொல்ல தயங்கினர். 
பிராம்மண குலத்தில் பிறந்து, சந்யாச தர்மத்தையும் ஏற்று கொண்டு, யதிராஜராக ஆகி,
ஸ்ரீ ரங்கதிற்கு மடத்தின் பொறுப்பை ஏற்று, 
கோவில் கைங்கரியமே செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனுஜருக்கு,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் அறிந்து கொள்ள ஆர்வம் உண்டானது.

திருக்கோஷ்டியூர் நம்பிக்கு, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் ரகசிய அர்த்தம் தெரியும் என்று அறிந்து கொண்டார் ராமானுஜர்.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் உட்பொருளை அறிந்து கொள்ள, யதிராஜராக இருந்த ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து, திருக்கோஷ்டியூரை அடைந்தார்.

பிராம்மண குலத்தில் பிறந்து, சன்யாசமும் பெற்று, ரங்கநாதருக்கே தொண்டு செய்யும் ராமானுஜர் வந்தும் கூட,  திரு கோஷ்டியூர் நம்பி திருப்பி அனுப்பி விட்டார்.
ப்ராம்மணனாக பிறந்தால் 'மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தெரிந்து கொள்ளலாம் என்பது கிடையாது' என்று தெரிகிறது.
ராமானுஜருக்கே சொல்ல தயங்கினார் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களின் அர்த்தங்களை தெரிந்து கொள்ள, "சில தகுதிகளை எதிர்பார்த்தார்கள்" என்று தெரிகிறது. .

இது போல 17 தடவை, ஸ்ரீ ரங்கத்தில் இருந்து சுமார் 100KM நடந்து நடந்து, திருக்கோஷ்டியூர் வந்து, நம்பியின் வீட்டிற்கும் முன் நிற்பார்.
ஒவ்வொரு தடவையும், ராமானுஜரை திருப்பி அனுப்பி விடுவார்.

உண்மையில், 'திரு அஷ்டாக்ஷர மந்திரத்தையும், அதன் பொருளையும் சொல்ல தயங்கினார், பயந்தார்' திரு கோஷ்டியூர் நம்பி.

ஏன் பயம்? எதனால் தயக்கம் ஏற்பட்டது?
'தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லிவிட கூடாது' என்ற தயக்கமும்,
'தகுதி இல்லாதவர்கள், இதன் அர்த்தத்தை தெரிந்து கொண்டு, அவர்கள் செய்யும் கொஞ்சம் தர்மமும், தன்னால் தடைபடுமோ!!' என்ற பயமும் தான், இவரை தடுத்தது.

17 தடவை 'நம்பி' திருப்பி அனுப்பியும்,
அர்த்தத்தை தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்ட ராமானுஜர், மீண்டும் மீண்டும் சளைக்காமல், கோபப்படாமல், பொறாமைப்படாமல் நம்பியை பார்க்க வர,
கடைசியாக 18வது முறையாக வந்த போது, ஸ்ரீ ராமானுஜருக்கு பரம சந்தோஷத்துடன்  உபதேசித்தார் என்று பார்க்கிறோம்.

'நான்' என்ற கர்வமே இல்லாமல், "'பெருமாளே கதி' என்று இருக்கும்  யதிராஜருக்கே "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் செய்வதற்கு, அத்தனை தயக்கம் காட்டினார்கள் என்று பார்க்கிறோம்.

மந்திரங்களை, அதன் உட்பொருளை உலகத்திற்கு சொல்ல ஏன் தயக்கம் காட்டினார்?

ஏன் மந்திரங்களை ரகசியமாக வைத்து இருந்தார்கள்?
எதற்காக பயந்தார்கள்?

மந்திரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும், யாருக்கும் தெரிய கூடாது என்று நினைக்கவில்லை.
மந்திரங்களின் வீரியமும், அதன் அர்த்தமும் எல்லோருக்கும் தெரிந்தால், விபரீதமாக முடிந்து விடுமோ என்று பயந்தார்கள்.

யதிராஜரான ராமானுஜரையே 18 தடவை (18×200= 3600KM) நடக்க வைத்த பின்பு தான்,
திருக்கோஷ்டியூர் நம்பி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் செய்து, அதன் அர்த்தம் சொன்னார் என்றால்,
மந்திரங்களை வெளி படுத்தவோ, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்று நினைக்கவில்லை என்று தெரிகிறது.
ஆனால், மந்திரங்கள், அதன் அர்த்தங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்லி விட கூடாதே!! என்று பயந்தார்கள் என்று தெரிகிறது.

சில வேத மந்திரங்கள் உலகிற்கு தெரிந்தாலும், நமக்கே காதில் விழுந்தாலும், அதன் அர்த்தங்கள் வெளி உலகிற்கு வருவதில்லை.

மந்திரங்களின் அர்த்தத்தை சொல்ல, ஏன் பயந்தார்கள்?


பொதுவாக,
மக்களின் இறை பக்குவம், மூன்று நிலைகளில் இருக்கிறது.
1. கடவுள் இருக்கிறார். அவர் நம்மை காப்பாற்றுகிறார் என்று நினைப்பது, முதல் நிலை.
2. கடவுள் நிச்சயமாக உள்ளார் என்று அனுபவத்தில் உணர்ந்து, அவர் யார்? நமக்கும் அவருக்கும் என்ன உறவு? என்று பரமாத்மா வாசுதேவனை பற்றி நினைப்பது, இரண்டாவது நிலை.
3. தனக்கும் பரமாத்மாவாகிய நாராயணனுக்கு உள்ள சம்பந்தம் தெரிந்து கொண்டதால், பிறவிக்கு காரணம் புரிந்ததால், உலக ஆசையை விட்டு, இந்த ஜென்மத்திலேயே தெய்வத்தை அடைய வேண்டும் என்ற பேராவல் உண்டாகி, காதல் கொண்டு உருகுவது, மூன்றாவது நிலை.

நம்மை கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையை, 'புராணங்கள், இதிகாசங்கள்' படிப்பதன், கேட்பதன் மூலம் நாம் பெறுகிறோம்.
அதனால் தான், புராணங்களை, இதிகாசங்களை பொது மேடைகளில், கோவில்களில் மகான்கள், சந்யாசிகள், பெரியோர்கள் என்று அனைவரும், பொது மக்கள் அனைவருக்கும் எடுத்து சொல்லி,
நமக்கு ஆன்மீக வளர்ச்சியும், தர்மத்தில் இருந்தால் கடவுள் காப்பற்றுவார் என்ற நம்பிக்கையையும் வளர்க்கின்றனர்.

"இறைவன் இருக்கிறார்" என்று திடமாக அனுபவத்தில் உணர்ந்தவன்,
புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு கேட்டு,
"தன்னை,  கடவுள் காப்பற்றுகிறார்", "நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்ற அளவில் ஆன்மீக சிந்தனை பெற்ற ஒருவன், தொடர்ந்து புராணங்களை, இதிகாசங்களை கேட்க கேட்க, படிப்படியாக உயர்ந்து,
"தனக்கு கடவுள் என்ன செய்வார்?" என்ற கேள்வியுடன் நிற்காமல்,
'அவர் எப்படி இருப்பார்? 
அவருக்கும் நமக்கும் என்ன உறவு? 
அவர் எப்படியெல்லாம் நம்மிடம் உறவாடுகிறார்?' என்று பல கேள்விகள் உருவாகி,
அவரை தெரிந்து கொள்ள ஒரு கட்டத்தில் ஆர்வம் பெறுகிறான். 

முதல் நிலையிலிருந்து, இரண்டாவது நிலைக்கு முன்னேறுகிறான்.

இந்த ஆர்வத்தை பெற்றவன், மகான்களின் துணையை தேடுகிறான். 
"ஸத் சங்கத்தில்" தன்னை சேர்த்து கொள்கிறான்.
"நாம் ஹிந்து தர்மத்தில் இருக்க வேண்டும்" என்று ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ராம நாமத்தை, பிரணவ மந்திரத்தை, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஒரு ஆத்ம குருவிடம் உபதேசம் பெற்று, அதை எப்பொழுதும் ஜபம் செய்ய ஆசைப்பட ஆரம்பிக்கிறான்.

ஆர்வம் அதிகமாகி, மந்திரங்களின் உண்மையான அர்த்தத்தை புரிந்து கொள்ள ஆசைப்படுகிறான்.
அததற்கு அதிகாரியான, குருவை தேடி அலைந்து, மந்திரங்களின் உட்பொருளை அறிந்து கொண்டு, அர்த்தம் புரிந்து கொண்டு, மந்திரங்களை ஜெபிக்க ஆரம்பிக்கிறான். 
இது இரண்டாவது நிலை.


யதிராஜரான ராமானுஜர், அஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசம் பெற்று, அதன் அர்த்தம் தெரிந்து கொள்ள, 18 தடவை (18×200= 3600KM) நடந்து நடந்து, கடைசியில் தான் நம்பி, அஷ்டாக்ஷர மந்திரத்துக்கு அர்த்தம்  சொன்னார் என்று பார்க்கிறோம்.
  • இறை எண்ணமே இல்லாத நாதீகர்கள்
  • புராணங்கள், இதிகாசங்கள் கேட்டு, ஆன்மீக எண்ணம் உடையவர்கள், 'தன்னை கடவுள் காக்கிறார்' என்ற ஞானம் உடையவர்கள், ஆனால், கடவுளை பற்றி அறிந்து கொள்ள தாகம் இல்லாதவர்கள், 
மந்திரங்களை பற்றியோ, அதன் உள் அர்த்தங்களை பற்றியோ அறிந்து கொள்வது, பெரும் ஆபத்தை தந்து விடும் என்ற பயத்தாலும், தயக்கத்தாலும், மந்திரங்களை, அதன் அர்த்தங்களை ரகசியமாக வைத்தனர்.

மந்திரங்களை, அதன் அர்த்தங்களை சொல்ல கூடாது என்பதற்காக ரகசியமாக வைத்து கொள்ளவில்லை.
இதை தெரிந்து கொள்ள தகுதி உள்ளவர்களாக உள்ளார்களா? என்பது தான் கேள்வியாக உள்ளது.

அஷ்டாக்ஷர மந்திரத்தை ராமானுஜருக்கு சொல்ல ஏன் தயங்கினார்?
"ஓம் நமோ நாராயணாய" என்ற மந்திரத்தின் ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தையும் பார்த்தோம் என்றால்,
"ஜீவனாகிய நாம் சுதந்திரமானவன் இல்லை, நாம் பரமாத்மா நாராயணனுக்கு கட்டுப்பட்டவன். 
அதனால், அவரே கதி என்று சரணாகதி செய்து, 
நான் என்ற கர்வத்தை விட்டு, "பெருமாள் இஷ்டம்" என்று இருக்க வேண்டும்" என்று சொல்கிறது.

திரு அஷ்டாக்ஷர மந்திரத்தின் சாரத்தையே, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
என்று தெளிவாக சொல்கிறார்.
அதாவது,
அனைத்து (சர்வ) தர்மத்தையும் விட்டு,
என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு,
நான் உன் பாவங்கள் அனைத்தையும் மன்னித்து,
நீ உலகத்தில் வாழும்வரை காப்பாற்றி, உனக்கு பிறவா நிலையான மோக்ஷமும் தருகிறேன்
என்று தெளிவாக சொல்கிறார்.


"கடவுள் என்னை காப்பாற்றுகிறார்" என்ற அளவில் மட்டும் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"தெய்வம் எனக்கு என்ன செய்யும்?" என்ற அளவில் ஆன்மீக நாட்டம் உள்ளவர்கள்,
"கடவுளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்" என்ற தாகம் இல்லாதவர்கள்,
திருஅஷ்டாக்ஷர மந்திரத்தின் அர்த்தத்தை, தெரிந்து கொண்டால்,
பகவத் கீதையில் கடைசியாக ஸ்ரீ கிருஷ்ணர் சொன்னதை புரிந்து கொண்டால்,
"நான் பெருமாளிடம் சரண் அடைந்து விட்டேன். அவர் நான் செய்த பாவங்களை எப்படி இருந்தாலும் மன்னித்து விடுவார். அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்.
என் தர்மத்தை விட்டாலும், அவர் என்னை காப்பாற்றுகிறார்"
என்று பேச ஆரம்பித்து விடுவான்.

பிராம்மணன், "பெருமாளை  சரண் அடைந்து விட்டேன், நான் சந்தியா வந்தனம் செய்ய தேவையில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

வியாபாரி, "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வியாபாரத்தில் ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

சூத்திரன் (வேலைக்கு செல்பவன் (employee)), "பெருமாளை சரண் அடைந்து விட்டேன், நான் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கி ஏமாற்றினாலும் பரவாயில்லை. அவர் எனக்கு எப்படி இருந்தாலும் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்று சொல்லிவிடுவான்,

இன்னும் சிலர்,
"ராம" என்ற தாரக மந்திரத்தின் பொருளே "சம்சார சாகரத்தில் இருந்து கடக்க (தாரக) செய்யும்" என்பது தான்.   
"ராம ராம ராம..." என்று தாரக மந்திரத்தை சொன்னாலேயே போதும், பூஜை, ஆசாரம், அனுஷ்டானம் செய்ய வேண்டிய தேவையில்லை." என்றெல்லாம் பேச ஆரம்பித்து விடுவார்கள்.

மந்திரங்களின் அர்த்தங்களை,
நாத்தீகர்கள்,
ஆன்மீக நிலையில் முதல் நிலையில் உள்ளவர்கள்,
காமம் கோபம் பொறாமை குணம் கொண்டவர்கள் தெரிந்து கொள்வதால்,
"தன் தர்மத்தை விட்டாலும், மோக்ஷம் கிடைத்து விடும்" என்று ஆரம்பிப்பார்கள்.
"தர்மத்தை காக்க தான், தெய்வங்களே அவதாரம் செய்கிறார்கள்" என்பதை மறந்து பேசுவார்கள்.

தெய்வங்களை குறித்து ஜபம் செய்ய வேண்டிய சில மந்திரங்களை, பெண்களை மயக்க பயன்படுத்துவார்கள்.

இப்படி பக்குவம் இல்லாத நிலையில் 80% சதவீத மக்கள் இருப்பதால், பொதுவாகவே மந்திரங்கள், அதன் அர்த்தங்கள் பொது மேடைகளில் சொல்லப்படுவதில்லை.

திருக்கோஷ்டியூர் நம்பி, 18 முறை வந்த ஸ்ரீ ராமானுஜர், கோபத்தை, பொறாமையை ஜெயித்தவர் என்று அறிந்து,
"திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தின் பொருளை சொன்னாலும், மோக்ஷம் கிடைக்கும் என்றாலும்,
தன் தர்மத்தை விட்டு விட மாட்டார் என்று நம்பிக்கை கொண்டார்.

"தனக்கு மோக்ஷம் நிச்சயம்" என்றாலும், ஸ்ரீ ராமானுஜர், கடைசி வரை தன் தர்மங்களை விடவில்லை.



தன் தர்மத்தை விட்டு, "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை சொல்லி மோக்ஷம் அடைய ஆசைப்படுபவன், பகவானை ஏமாற்றுகிறான்.
பகவான் தன்னை ஏமாற்றுகிறான் என்று தெரிந்தும், மோக்ஷ வாசலை திறந்து விடுகிறார், கருணையின் காரணத்தால். 
ஆனால்,
உண்மையான பக்தன், தெய்வம் விரும்பும் படியாக உலகில் தர்மத்தில் வாழ்ந்து, பிறகு மோக்ஷம் அடையவே விரும்புவான்.

ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜர்,  "திரு அஷ்டாக்ஷர" மந்திரத்தை உபதேசம் பெற்றதும், 
கோவிலின் உச்சிக்கு சென்று, அங்கு கூடி இருந்த அனைவருக்கும்
"ஓம் நமோ நாராயணாய! என்று சொல்லுங்கள், உங்கள் அனைவருக்கும் மோக்ஷம் நிச்சயம்" என்று சொல்லி விட்டார்.

ஓம் நமோ நாராயணனாய மந்திரத்தின் விளக்கம் இதோ

திருக்கோஷ்டியூர் நம்பி,
தகுதி உள்ளவர்களுக்கே சொல்ல வேண்டும், 
தகுதி இல்லாதவர்களுக்கு சொன்னால், "சரணாகதி செய்து விட்டேன் ! தர்மத்தை விட்டாலும், எனக்கு பகவான் நிச்சயம் மோக்ஷம் கொடுத்து விடுவார்" என்றெல்லாம் பேச ஆரம்பித்து கலி யுகத்தில் அனைவரும் தர்மத்தை விட்டு விடுவார்களே !! என்று பயந்தார்.

"தன்னால் உலகம் அதர்மத்தில் வீழ்ந்தது" என்று ஆகி விட கூடாது என்று பயந்தார்.

பரவாசுதேவனின் படுக்கையாக இருக்கும் ஆதிசேஷனே, ஸ்ரீ ராமானுஜர்.

"தர்மத்தில் இருக்காமல், மோக்ஷம் கிடைத்து விடும் என்று சொல்லி, ஆஸ்தீகர்கள் கூட மந்திரங்களை தவறாக பயன்படுத்தி விடுவார்கள். அதனால், 
இது போன்ற மந்திரங்களை தகுதி இல்லாதவர்களுக்கு சொல்ல கூடாது என்பது தவறில்லை. 
ஆனால், 
இப்படியே மறைத்து வைத்து இருந்தாலும்,
கலியின் ஆக்கிரமிப்பில், சுய நலம் அதிகமாகி, பெரும்பாலான  மக்கள் இனி வரும் காலங்களில், அவர்களே அவரவர்கள் தர்மத்தை விட்டு, பெருமாளையும் அறிந்து கொள்ளாமல், மிலேச்ச மதங்களில், பொய் மதங்களில், பொய் தெய்வங்கள் தனக்கு சொர்க்கம் கொடுக்கும், நன்மை செய்யும் என்று நம்பிக்கொண்டு போய்  விடுவார்கள்'
என்று அறிந்து இருந்தார் ஸ்ரீராமானுஜர்.

'கலியில், 
பெரும்பாலான மக்கள், தங்கள் சுய நலத்தால், எப்படி இருந்தாலும், தர்மத்தை விட்டு விடுவார்கள்' 
என்று அறிந்த நம் ராமானுஜர்,
"தர்மத்தை விட்டாலும் பரவாயில்லை, ஓம் நமோ நாராயணாய!! என்று சொல், பகவான் உன்னை ரக்ஷித்தது, மோக்ஷமும் கொடுப்பார்"
என்று பெரும் கருணை கொண்டு,
மறைத்து வைத்திருந்த திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் கொடுத்து விட்டார்.
"தெய்வம் வந்து இந்த மந்திரத்தை அனைவருக்கும் சொல்லட்டும், தானாக சொல்ல கூடாது" 
என்று இருந்த திருக்கோஷ்டியூர் நம்பி,
கலியில் உலக மக்கள் யாவரும் தர்மத்தை விட்டு, கதி இன்றி இருக்க போகிறார்கள் என்று உணர்ந்து,
திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை அனைவருக்கும் அள்ளி கொடுத்த, ஆதிசேஷன் அவதாரமான ஸ்ரீ ராமானுஜரை கண்டு மனம் மகிழ்ந்தார்.


"ஓம் நமோ நாராயணாய" என்று கூட சொல்லாமல் இருக்கிறார்கள் பலர்.
"இவர்களுக்கும் ஒரு வழி காட்ட வேண்டுமே" என்று, பரவாசுதேவன் நாராயணனே "ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராக" அவதாரம் செய்து, மிகவும் சுலபமான மந்திரமாகவும் இருக்க வேண்டும், கேட்பதற்கும் இசையாக இருக்க வேண்டும் என்று,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
என்று ராம என்ற தாரக மந்திரத்தையும், தன் பிற அவதாரங்களான நரசிம்ம (ஹரே), கிருஷ்ண மந்திரத்தையும் சேர்த்து தொடுத்து, ஒரு இசை மாலையாக கொடுத்து விட்டார்.
இந்த மந்திரத்தை இன்று பாடாத மனிதன் இல்லை. 
ஆன்மீக எண்ணமே இல்லாதவர்களை கூட, இந்த இசை இழுக்கிறது.
வெளிநாட்டினர் பலர், இந்த மந்திர மாலைக்கு மயங்கி கிடக்கின்றனர்.

ஹிந்துவாக பிறந்ததில், பெருமை கொள்வோம்.

மந்திரங்களை அதன் அர்த்தங்கள் புரிந்து கொண்டு, ஜபம் செய்ய செய்ய, இரண்டாம் நிலையில் இருந்து, நாளடைவில், குருவின் துணையால் மூன்றாம் நிலையை அடைகிறோம்.

இந்த மூன்றாம் நிலை அடைந்தவர்களே, நம் பாரத தேசத்தில் வாழ்ந்த மகான்களும், வாழும் மகான்களும்.

ஆழ்வார்கள் பாடிய சில பாசுரங்களை படித்து அர்த்தம் புரிந்து கொண்டால், "தான் ஒரு பெண் போலவும். பெருமாள் தன்னை எப்பொழுது மணந்து கொள்வார்?" என்பது போலவும் பாசுரங்களை பார்க்கிறோம்.

இது போன்ற பாசுரங்களை ஒரு நாத்தீகனோ, ஆன்மீக வளர்ச்சியில் முதல் நிலையிலோ, இரண்டாம் நிலையிலோ இருக்கும் ஆஸ்தீகர்கள் கூட,
"ஏன் இப்படி ஆழ்வார் பாடுகிறார்? ஏன் தன்னை பெண் என்று சொல்லி கொண்டு, பாடுகிறார்?"
என்றெல்லாம் கேட்க தோன்றும்.

4000 திவ்ய பாசுரங்கள், நாயமார் பதிகங்கள், மீராவின் பாட்டுக்கள், மகான்களின் ஸ்லோகங்கள் படிப்பதற்கே, நமக்கு ஒரு தகுதி தேவைப்படுகிறது.

ஆழ்வார்கள் பாசுரத்தை படித்து, இது என்ன காமம் கலந்து இருக்கிறது? என்று கூட சொல்லி விடுவான் நாத்தீகன்.

இறை நிலையில் மூன்றாம் நிலையில் உள்ள இவர்கள்,
உலக நினைவே இல்லாமல், 
மோக்ஷம் வேண்டி கதறி அழும், பாசுரங்கள் உண்டு, காதல் கொண்டு, தன்னை சேர்த்து கொள்ள பிரார்த்திக்கும், பாசுரங்கள் உண்டு.

மோக்ஷத்தை இந்த ஜென்மத்தோடு பெற வேண்டும் என்று மூன்றாம் நிலையில் உள்ள மகான்களால் மட்டுமே, ஆழ்வார்கள் பாடிய  பாசுரங்களை, உண்மையில் புரிந்து கொள்ள முடியும்.


குருவின் கிருபையை பற்றி கொண்டு,
நாமும் புராணங்களை கேட்டு, புரிந்து கொண்டு, படிப்படியாக முன்னேறி, நாம் தர்மத்தில் இருந்தால், பகவான் காப்பாற்றுவார் என்ற பக்குவத்தை பெற்று,
பகவானை பற்றி அறிய "மந்திரங்கள் அதன் அர்த்தங்களை" புரிந்து கொண்டு ஜபம் செய்து,
மேலும் நம் ஆன்மீக நிலையை வளர்த்து கொண்டு,
மோக்ஷம் என்ற பிறவா நிலையை அடைய, நாராயணனை சரண் அடைவோம்.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க ராமானுஜர்.
வாழ்க ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர்,
வாழ்க நம் பாரத பூமியில் வாழும் மகான்கள்.

தர்மத்தை காப்பதற்கு தான், தெய்வங்களே அவதாரம் செய்கின்றனர்.
ஹிந்துக்கள் அவரவர்கள் தர்மத்தில் இருப்பது, ஹிந்துக்களுக்கு அவசியம்.

Sandhya Vandanam is a Key Dharma for Brahmin

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Afternoon (With meaning)

Sandhya Vandanam - Evening (With meaning)




Wednesday 29 August 2018

காலம் கடந்து அனாதி காலமாக இருக்கும் நான்கு விஷயங்கள் என்ன?

நான்கு விஷயங்கள் கால அளவுக்கு உட்படாமல், காலத்தால் கணிக்க முடியாமல், அனாதியாக முடிவே இல்லாமல் இருந்து கொண்டே இருக்கிறது.
அது என்ன?



1. 'உலகம் என்ற ப்ரக்ருதி' அனாதி காலமாக இருக்கிறது.
2. 'ஆத்மா' (நம் உயிர்) அனாதி காலமாக இருக்கிறது.
3. 'பெருமாள்' அனாதி காலமாக இருக்கிறார்.
4. 'வேதம்' அனாதி காலமாக இருக்கிறது.
அனாதி காலமாக இருக்கும் இந்த நான்குக்கும், பிறப்பும் தெரியவில்லை, இறப்பும்/அழிவும் தெரியவில்லை.
ஆனால் இந்த நான்குக்கும் ஆவிற்பாவம் உண்டு.

ஆவிற்பாவம் என்றால், தோற்றம் என்று அர்த்தம் கொள்ளலாம்.

பிறப்பும், தோற்றமும் ஒரே அர்த்தம் இல்லை.
அதே போல,
இறப்பும், மறைவும் ஒரே சொல் அல்ல.

பிறப்புக்கு முன் இறப்பு வராது.
இறப்புக்கு பின், பிறப்பு வராது.

ஆனால்,
தோற்றத்துக்கு முன், மறைவு இருக்க முடியும்.
மறைவுக்கு பின், தோற்றம் இருக்க முடியும்.

பிறப்புக்கும், இறப்புக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்ப் உருவாக்கும் (பிறப்பு) முன், லைட் பல்ப் இருந்து இருக்க வாய்ப்பில்லை.
அது போல,
ஒரு லைட் பல்ப் உடைந்த பின் (இறப்பு), அதே லைட் பல்ப் மீண்டும் உருவாக வாய்ப்பில்லை.
நம் உடல், இந்த லைட் பல்ப் போன்றது.
உடலுக்கு பிறப்பு உண்டு. இறப்பு உண்டு. இறந்த பின், மீண்டும் அதே உடல் பிறக்காது.






தோற்றத்துக்கும், மறைவுக்கும் உள்ள பொருள்:
ஒரு லைட் பல்பில் உருவாகும் வெளிச்சத்துக்கு(தோற்றம்) முன், வெளிச்சம் இல்லாமல் அணைந்து (மறைவு) இருக்க முடியும்.
அது போல,
ஒரு லைட் பல்ப் அணைந்து இருந்த (மறைவு) சமயத்துக்கு முன், வெளிச்சமும் கொடுத்து இருக்க முடியும்.
நம் உயிர் என்ற ஆத்மா, இந்த வெளிச்சம் போன்றது.
இது உடலில் புகுந்து இருக்கும் போது தோற்றம் அளிக்கிறது. உடலை விட்டு வெளியே செல்லும் போது, இல்லாதது போல மறைந்து விடுகிறது. ஆனால் மீண்டும் வேறொரு உடலில் புகுந்து தன்னை வெளிப்படுத்துகிறது.

ஆத்மாவை புரிந்து கொள்ளாதவர்கள், "உடலே நான்" என்று சொல்லிக்கொள்ளும் மடையர்கள், ஒருவனுடைய ஆத்மா உடலை விட்டு வெளியேறிய பின், அவனே 'இறந்து விட்டான்/மரித்து விட்டான்' என்று சொல்லிக்கொள்வர்.

'ஆத்மா ஒன்று உள்ளே இருப்பதால் தான் இந்த உடம்பு இதுநாள் வரை வேலை செய்தது' என்று உணர்ந்திருந்த ஹிந்துக்கள், பொதுவாகவே, உடலை விட்டு பிரிந்த ஆத்மாவை, "இறந்து விட்டார், மரித்து விட்டார்" என்று மடத்தனமாக சொல்லாமல், 'ஆத்மா மறைந்து விட்டது, இறைவனடி சேர்ந்தார். ஆத்மா வைகுண்டம் அடைந்தது, சிவபதம் அடைந்தது' என்று உண்மை அறிந்து சொல்லும் பழக்கம் கொண்டிருந்தனர். உண்மை அறிவு கொண்டிருக்கும் நம் ஹிந்துக்கள்.

1. அனாதி காலமாக உள்ள உலகம், மறைக்கப்பட்டு, மீண்டும் ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஸ்ருஷ்டி" என்று பெயர்.

2. அனாதி காலமாக உள்ள நாம் (ஜீவ ஆத்மா / உயிர்), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "ஜன்மம்" என்று பெயர்.

3.  அனாதி காலமாக உள்ள பெருமாள் (பரம் ஆத்மா), ஒரு உடலுக்குள் புகுந்து, ஆவிர்பவிக்கும் (தோற்றம் அளிக்கும்) போது, அதற்கு "அவதாரம்" என்று பெயர்.

4. அனாதி காலமாக உள்ள வேதம் (பரமாத்மாவின் அறிவு), ஒரு ரிஷியின் காதில் புகுந்து, ஆவிர்பவிக்கும் (கேட்கப்படும்) போது, அதற்கு "ஸ்ருதி" என்று பெயர்.
காதில் கேட்ட வேதத்தை, வாயால் ஆவிர்பவிக்கும் (சொல்லாக வெளிப்படும்) போது, அதற்கு "ஆம்நாயம்" என்று பெயர்.
வாயால் சொன்னதை, காலப்போக்கில் கேட்டது ஒன்று, சொல்வது ஒன்று என்று ஆகி விடாமல், கேட்ட அதே வேத சொற்களை ஒரு காவல்காரனை போல காத்து, பரம்பரை பரம்பரையாக வேத சொற்கள் மாறிவிடாமல், விட்டுப்போகாமல் எடுத்து செல்வதற்கு, "சந்தஸ்" என்று பெயர்.

ஹிந்துக்கள் கொண்டிருந்த இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத பிற பொய் மதங்களில், நம்பிக்கைகளில், ஹிந்துக்கள் வீழ்வதே அவமானம்.
ஹிந்துவாக பிறந்து, பின் மதம் மாறுபவர்கள் அவமானப்படவேண்டும்.

ஆராய்ச்சியின்றி, காரணமின்றி எதுவும் செய்யாத ஹிந்துக்களின் பழக்கம், பேச்சு எல்லாம் உயர்ந்தவை.

ஹிந்துக்களாக பிறந்ததே புண்ணியம்.
வேற்று மதங்கள் கூட, மத மாற்றம் என்ற போர்வையில்,
*ஹிந்துக்களின் காவி உடை அணிந்து பாத யாத்திரை செல்கின்றனர்.
*வெள்ளை உடை அணிந்து தான் தன் கோவிலில் ஆராதனை செய்கின்றனர்.
*சமஸ்கரித மொழியை வெட்கமே இல்லாமல் பயன்படுத்துகின்றனர்.
*தமிழை கொலை செய்கின்றனர்.
*ஹிந்துக்களின் தெய்வீக கர்நாடக இசையை திருட முயற்சிக்கின்றனர்.
*வெட்கமே இல்லாமல் கொலு வைக்கின்றனர்.
*தேர் இழுக்கின்றனர்.
*கோவில் ஸ்தூபம் இருப்பதை பார்த்து, மானம் இல்லாமல் தாங்களும் ஸ்தூபம் வைக்கின்றனர்.
*சுய சிந்தனை இல்லாமல், நம்மிடம் காபி அடித்து, வெட்கமில்லாமல், ஹிந்துக்களை மதம் மாற்றுகின்றனர்.
*மனு என்ற அரசன் முதல் மனிதன் என்று சொன்னதையும் காப்பி அடித்து "Man" என்றனர்.
*நவ க்ரஹங்கள் என்று சொன்ன என்றோ சொல்லி வைத்ததை வைத்து "9 planets" உண்டு என்கின்றனர்.
*செவ்வாய் கிரஹம் சிவப்பு என்று அறிந்து, நவ க்ரஹத்தில் செவ்வாய் தேவதைக்கு இடுப்பில் சிவப்பு துணி கட்டுவதை அடிப்படையாக கொண்டு, "Mars is Red planet" என்றனர்.



*பஜனை செய்வதை பார்த்து, காப்பி அடிக்கிறோம் பேர்வழி என்று பைத்தியம் வராத குறையாக ஆடுகின்றனர்.
*நான்கு மறை வேதம் என்ற சப்த ப்ரம்மத்தின் பெயரை ஒரே ஒரு புத்தகம் எழுதி அதை வெட்கமே இல்லாமல் இதுவும் "வேதம்" என்று ஹிந்துக்களின் வேதம் என்ற பெயரை திருடுகின்றனர்.
*திருட்டு செயலே பழக்கம் ஆகி போனதால், திருட்டு புத்தியுடன், திருட்டு தனமாக, புரியாத ஹிந்துக்களை மதம் மாற்றுக்கின்றனர்.
*இஸ்லாமியன் திருடனை உதைப்பான் என்று இன்று வரை நெருங்க பயப்படுகின்றனர்.
ஹிந்துக்கள் திருடனை அடிக்க வேண்டாம், நம் வீட்டில் உள்ள பொருளை திருடி, நமக்கே காட்டும் திருடன் இவன் என்று தெரிந்து கொண்டாலே போதும்.
*கிருஷ்ணன் மாடு மேய்த்தான், என்றால், பெயரையும் ஏறத்தாழ அதையும் காப்பி செய்து, மாட்டுக்கு பதில் ஆடு மேய்த்தான் என்றனர்.
*உலகம் உருண்டை என்று வராஹ அவதாரத்திலேயே சொன்னதை மறுக்க நினைத்து, கடைசியில் உலகம் உருண்டை தான் என்று அறிவியல் சொல்ல, தன்னுடைய ஒரே கொள்கையில் மரண அடி வாங்கினர்.

இப்படி ஹிந்துக்களை, ஹிந்துக்களின் சின்னங்களை, ஹிந்துக்களின் தத்துவங்களை திருடி பிழைப்பு நடத்தும் பொய் மதத்தில், ஹிந்துவாக பிறந்தவன், இருப்பவன் மாறுவதே அவமானம். மாறியவன் ஹிந்துவாக மாறுவதே புத்திசாலித்தனம்.

இப்படி தறிகெட்டு காசுக்காகவோ, நம் krishணனை கிறிஸ்ஆக பெயர் மாற்றி இந்திய மண்ணிலேயே, ஹிந்துக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் திருடர்களிடம் இருந்து, சுய புத்தியுடன் ஹிந்துக்களாக மீண்டும் திரும்புவதே சிறந்தது.



காப்பி அடித்து பாஸாக துடிக்கும் பொய் மதங்களில் ஹிந்துக்கள் வீழாமல் இருக்க வேண்டும்.
இதற்கு ஒரே வழி.. ஹிந்துக்கள் தன் மதத்தை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துக்களுக்கு பகிர வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள். வாழ்க நாம்.

 நன்றி: எந்தரோ மஹாநுபாபு(...லு) அந்தரிகி வந்தநமு (Salutations to all those great men in this world)





Sunday 28 January 2018

"ஓம்" என்ற ஓங்கார ப்ரணவத்தின் விளக்கம் என்ன? - ஹிந்துக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டாமா?...




'நமோ' என்றால் என்ன?
'நாராயணா' என்றால் என்ன?

ந ம: (நமோ) என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு 'நான் (மம) இல்லை' என்று அர்த்தம். 
நான் என்ற கர்வத்தை போக்குகிறது.

நர அயணம் (நாராயண) என்ற சம்ஸ்க்ரித சொல்லுக்கு 'நரர்களுக்கு (நர) அடைக்கலமாக (அயணம்) இருப்பவர்' என்று அர்த்தம். 

'நமோ நாராயணா' என்று சொல்லும் போது, 'நான் என்ற கர்வம் விட்டு, நமக்கெல்லாம் அடைக்கலம் தரும் அந்த பரமாத்மா வாசுதேவனை தியானிக்க வேண்டும்'

'ஓம்' என்ற சொல் 'பரமாத்மாவே இந்த தேகத்தில் இருக்கிறார்.. அதே சமயம் அவர் தனித்த பொருள்' என்றும் அறிவு தருகிறது...

'ஓம்' என்ற சொல்லுக்கு அர்த்தம் மேலும் தெரிந்து கொள்வோம்....

"ஓம்" என்ற ப்ரணவத்தில் இருந்து தான் "வேதங்கள்" வெளிப்பட்டது.
"ஓம்" என்ற ப்ரணவமே, "பரவாசுதேவன் நாராயணன்" ஸ்வரூபம் தான்.
"ஓம்" என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை காட்டுகிறது

பிரம்மாவை படைத்த நாராயணன், அவரிடம் வேதங்களை கொடுக்க,
அதில் சொன்னது போல, பிரம்மா உலகங்களை ஸ்ருஷ்டி செய்து, 
புண்ணியங்கள் செய்த ஜீவன்களுக்கு "இந்திரன், வருணன், யமன்" என்ற தேவ பதவிகளை கொடுத்து, 
சொர்க்க லோகத்தில் அவர்களை வேலைக்கு அமர்த்தி, 
மோக்ஷம் அடையாத பல ஜீவ கோடிகளுக்கு மீண்டும் பூமியில் பிறக்க வாய்ப்பு கொடுத்து, 
உலகத்தை நடத்தி வருகிறார். 
அனைத்து உலகங்களையும், தேவர்களையும், பிரம்மா முதல் புல் புழு வரை, தன் சங்கல்பத்தால், ஆக்ஞையால் நடத்தி செல்கிறார் நாராயணன்.

மீண்டும் ஒரு முறை கவனத்துடன் படியுங்கள்....

"ஓம்" என்ற ப்ரணவத்தில் இருந்து தான் "வேதங்களே" வெளிப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும்..
"வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம்" என்று அறிகிறோம்.

வேத சொற்களின் அர்த்தம், நமக்கு புரியாமல் போனாலும், வேத சொற்களை நம் காதால் கேட்டால் கூட, அது நமக்கு ஒரு தெய்வீக அனுபவத்தை ஏற்படுத்தும்.
வேதம் என்ற இந்த ஒரு சொல், அனைவரையும் ஈர்க்கிறது என்று பார்க்கிறோம்.

அற்புதமான இந்த வேத சொற்கள், தங்கள் புனித நூலில் இல்லாவிட்டாலும், தங்கள் புனித நூலுக்கு "வேறு பெயர்" இருந்தாலும், அதற்கும் "வேதம்" என்று இவர்களாகவே பெயர் கொடுத்து கொண்டு, 'வேதம்' என்ற சொல்லை நம்மிடமிருந்து திருடி பயன்படுத்துகின்றனர், பாரத நாட்டில் பிறந்தும், மதம் மாறி வாழும் போலிகள்.

வேதம் என்ற சொல்லை, மற்றவர்கள் பயன்படுத்துவதை, அனுமதிப்பது கூட, ஹிந்துக்கள் செய்யும் மாபெரும் தவறே.



இந்த போலிகள், வேதம் என்ற சொல்லை நம்மிடமிருந்து திருடி, தங்கள் நூலுக்கும் 'வேதம்' என்று வைத்து கொண்டாலும்,
நம் வேத மந்திரங்களை கேட்கும் போதும்,
அவர்கள் சொல்லும் அலறலை கேட்கும் போதும்,
எது போலி? என்று தெரிந்து விடுகிறது.

நம் வேதத்தை காதால் கேட்டால் கூட, "தங்க கிண்ணத்தில் பாலும் தேனும் கலந்து குடிப்பதை போன்ற" சுகமளிககும்.
'வேதம்' என்ற சொல்லை மட்டும் நம்மிடமிருந்து திருடி பிழைக்கும் போலிகள் சொல்லும் அலறலை கேட்டால்,
"நாய் ஊளை இடுவது போலவும், நாய்  தோலில் பால் ஊற்றி குடிப்பது போன்ற" உணர்வும் அளிக்கும்.
நம் சனாதன தர்மம், பரவாசுதேவன் நாராயணனை தெய்வம் (பால்) என்று சொல்வது போல, பிற மதங்களும் ஏதோ ஒரு தெய்வத்தை (பால்) சொல்கின்றன. தவறில்லை.

"எந்த தெய்வமும் பரவாசுதேவன் நாராயணனே" என்ற அறிவுள்ள ஹிந்துக்கள், பிற மதத்தில் மூளை மழுங்கி மாறி போனவர்களை கூட தடுப்பதில்லை.

தெய்வத்திடம் குறை காண தேவையில்லை ஹிந்துக்கள்.

பரவாசுதேவன் நாராயணனே பல ரூபங்களில் அவரவருக்கு ஏதோ ஒரு தெய்வமாக காட்சி கொடுக்கிறார் என்ற போதிலும்,
தெய்வத்தை (பால்) பற்றி சொல்லும் பாத்திரம் நம் வேதமாக (தங்க கிண்ணம்) இருந்தால் குடிக்க ஆசையாக உள்ளது.
'நானும் பால் தான் கொடுக்கிறேன்' என்று சொல்லி, ஒருவன் நாய்த்தோலில் கிண்ணம் செய்து, அதில் பாலை ஊற்றி கொடுத்தால்?, குடிப்பானா ஒருவன்!!.

வேதம் அத்தனை மகத்துவம் வாய்ந்தது.

"தங்க கிண்ணம்" போன்ற வேதம், நமக்கு தெய்வத்தை (பால்) காட்டுகிறது.
அந்த தெய்வத்தின் அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது.
அப்படிப்பட்ட வேதமே, 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்றால், இந்த "பிரணவ மந்திரம் எத்தனை அற்புதமானது!!" என்பது நமக்கு புரியும்.



"ஓம்" என்ற ஓங்கார நாதத்தின்
- உட்பொருளை நம் மனதில் உள்வாங்கி கொண்டோம் என்றால்,
- ஒரு ஆத்ம குருவை அடைந்து, அவர் மூலமாக பிரணவ மந்திர உபதேசம் பெற்று கொண்டோம் என்றால்,
- அர்த்தம் புரிந்து கொண்டு நாம் தியானத்தால்,
குருவின் அணுகிரஹ பலத்தால் ஸித்தி பெற்றோம் என்றால்,
அந்த ஓங்கார நாதமே,
நமக்கு மறு பிறவி ஏற்படாமல் செய்து விடும்.

இந்த ஓங்கார பிரணவ மந்திரமே, சம்சார சூழலில் மாட்டி இருக்கும் நம்மை, இறந்த பின் மீண்டும் பிறந்து விடாமல் செய்து, பிறவா நிலை என்ற மோக்ஷத்தை கொடுத்து விடும்.

"மோக்ஷமே கொடுத்து விடும்" என்று சொல்லும் போது, "உலக சௌக்கியம் கிடைக்குமா?" என்ற கேட்பதே குழந்தைத்தனமானது.

"ஓம்" என்ற ஓங்காரத்தில் ஸித்தி ஆனவன், உலக வாழ்வில் ஒரு விஷயமாக ஆசைப்பட்டால், அவை அனைத்துமே, தானாகவே நடக்கும்.

ஆனால், ஓங்காரத்தை சொல்ல சொல்ல, பொதுவாகவே, 
"மோக்ஷம் அடைய வேண்டும், மீண்டும் பிறவி தனக்கு ஏற்பட கூடாது" என்ற எண்ணமே அதிகம் ஏற்படுவதால், 
பொதுவாகவே பிரணவத்தில் ஸித்தி ஆனவர்கள், உலக மக்களோடு பழகுவதை விரும்புவது இல்லை. தனிமையை பெரும்பாலும் விரும்புவார்கள்.

ஒரு சிலர் மட்டும், இரக்கத்தின் காரணமாக, உலக மக்களின் துயரை கண்டு, உலக மக்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் வளர்வதற்காக, தங்களை உலகத்தில் காட்டி கொள்கின்றனர். பழகுகின்றனர்.

இப்படிப்பட்ட யோகிகள், மகான்கள் இன்றும் நம் பாரத தேசத்தில் உள்ளனர். நாம் காணலாம்.



இவர்கள் தன்னை வெளி உலகிற்கு காட்டி கொள்ள நினைத்தால், உலகமே இவர்களை சுற்றிக்கொண்டு மொய்க்கிறது.

சும்மா இருக்கிறார்கள், சாமியார்கள். 
இவர்களுக்கு ஏன் இத்தனை மரியாதை?
இவர்களுக்கு ஏன் இத்தனை கூட்டம்?
இவர்களுக்கு போய் ஏன் பணத்தை கொட்டுகிறீர்கள்?
என்று பொறாமை படுவதை காட்டிலும்,  சற்று யோசித்து பார்த்தால் உண்மை புரியும்.

இவர்கள் ஒரு சமயத்தில், சில காலங்கள் தனிமையில் செய்த யோக பயிற்சிகளே இப்படி ஒரு இடத்தை இவர்களுக்கு கொடுத்துள்ளது என்று தெரிந்து கொண்டால், பொறாமை படுவதை தவிர்த்து, தாங்களும் அந்த இறை நிலையை அடைய, ஸித்திகளை அடைய முயற்சிக்கலாமே என்று தோன்றும்.

"வேதமே" ஓங்காரத்தில் இருந்து தான் வெளிப்பட்டது என்பதை கவனிக்கும் போது தான், ஓம் என்ற ஓங்காரத்தின் பெருமையை நம்மால் உணர முடியும்.

"ஓம்" என்ற ஓங்காரத்தின் உட்பொருளை உணர்ந்து ஸித்தி அடைபவன், வேதத்தையே கற்றவனாகிறான்.
அத்தனை மகத்துவம் வாய்ந்தது "ஓம்" என்ற இந்த பிரணவ மந்திரம்.

"ஓம்" என்ற ஓங்காரத்தை அர்த்தத்துடன் தியானித்து, அதில் ஸித்தி பெற்ற ரிஷிகள், அந்த ஓங்காரத்தில் இருந்து வெளிப்பட்ட "வேத மந்திரங்களை" தியானத்தில் க்ரஹித்து நமக்கு தந்து விட்டனர்.

"வேதத்தின் சாரம், இந்த ஓங்காரத்திலேயே உள்ளது" என்ற உண்மையும் புரியும்.

"ஓம்" என்ற ஓங்காரத்தில் இருந்து வெளிப்பட்ட 4 வேதத்தின் உண்மையான உள்அர்த்தத்தை, ஒரு மனிதன் தன் 100 வயதுக்குள் புரிந்து கொள்வது என்பதே, இந்த கலியில் நடக்காத காரியம்.
ஆனால், ஓம் என்ற பிரணவத்தின் உள் அர்த்தத்தை நாம் அனைவரும் கொஞ்சம் மனதோடு கவனித்தால், புரிந்து கொண்டு விடலாம்.




வேதத்தின் அர்த்தத்தை புரிந்து கொள்வது ஒருபுறம் இருக்கட்டும்..
ஒரே ஒரு வேதத்தை மட்டும், மனப்பாடம் செய்து அதை அப்படியே சொல்வதற்கே, ஒரு மனிதன் தன் வாழ்நாளை அர்ப்பணிக்க வேண்டி இருக்கிறது.

வேத சொற்களை ஒருவன் அர்த்தம் புரியாமல் கேட்டால் கூட, அதன் தெய்வீகத்தை உணர முடியும்.
தடித்த நாக்கு உள்ளவர்கள் வேதத்தை சொல்வதற்கே கஷ்டப்படுவார்கள்.

தவறுதலான உச்சரிப்பு அர்த்தத்தையே மாற்றி விடும். 

கும்பகர்ணன், நித்தியமாக (சாகாமல்) இருக்க வேண்டும் என்று கேட்கலாம் என்று நினைத்து,பிரம்மாவை பார்த்தவுடன், தவறாக உச்சரித்து விட்டான். 

அர்த்தமே மாறி, அவனுக்கு வினையாகி போனது.
நித்யத்துவம் (சாகாமல் இருக்க வேண்டும்) என்று கேட்பதற்கு பதில்,
நித்ரத்துவம் (தூங்கி கொண்டே இருக்க வேண்டும்) என்று கேட்டு விட்டான் கும்பகர்ணன்.

வேதத்தை சொல்வதற்கே தனி மனித ஒழுக்கம், பொறுமை, உலக பற்று இன்மை போன்ற பல விஷயங்கள் தேவைப்படுகிறது.


உணவில் கட்டுப்பாடு, தெய்வீக சிந்தனையே கொண்ட சிலர் மட்டுமே, இந்த வேதத்தை சொல்ல முடியும் என்பதால், 
உலக வாழ்க்கையில் அதிகம் ஈடுபாடு இல்லாத பிராம்மண சமூகம், வேதத்தை படித்து, வேதத்தையே எப்பொழுதும் ஓதிக்கொண்டு, ரிஷிகள் தியானத்தால் கண்டுபிடித்த வேதத்தை இன்று வரை அழியாமல் காப்பாற்றி வருகின்றனர்.


உதாரணத்திற்கு, ஒரு 2 நிமிட வேதத்தை கேட்டு பாருங்கள்.
அர்த்தம் புரியாமல் போனாலும், அதன் தெய்வீகத்தை அனைவரும் உணரலாம்.
இந்த சிறு வேத பாகத்தை கேட்கும் போதே, எத்தனை கடினமானது "வேதம்" என்றும் புரிந்து கொள்ளலாம்.
கடினமானதாக இருந்தாலும், புரியாமல் போனாலும், கேட்கும் போதே ருத்ரன் (சிவ பெருமான்) நம் நினைவுக்கு வருவது மனதிற்கு புரியும்.
இதுவே நம் வேதத்தின் மகிமை. 
தங்க கிண்ணம் போன்றது நம் வேதம்.

கடினமான வேதத்தை நாம் எளிதில் கற்று கொள்ள முடியாது.
"கடினமான வேதத்தை தன் வாழ்நாளை முழுவதுமாக செலவழித்து, இன்று வரை காப்பாற்றும் வேதியர்களை காப்பற்றினாலே, அந்த வேதம் காக்கப்படும்" என்று புரிந்து கொள்ளும் போது தான், 
ஏன் அந்த காலங்களில் அரசர்கள், வைஸ்யர்கள், சூத்திரர்கள் என்று அனைவரும் வேதம் கற்ற ப்ராம்மணர்களை காப்பாற்றினார்கள்? என்று புரிந்து கொள்ள முடியும்.
வேதம் கற்காத இன்றைய கால போலி ப்ராம்மணர்களை சொல்லவில்லை.
இன்றும் 'வேதம்' கற்ற ப்ராம்மணர்கள் உள்ளனர். அவர்கள் இன்றும், என்றும் மதிக்கபட வேண்டும்.

வேதத்தை வாழ்நாள் முழுவதும் சொல்லிக்கொண்டு, வாழ்ந்த இந்த ப்ராம்மணர்களை நாம் காப்பாற்ற வேண்டும், என்று ஏன் க்ஷத்ரிய அரசர்களுக்கு (army), வைஸ்யர்களுக்கு (business), சூத்திரர்களுக்கு (employee) தோன்றியது?
இன்றைய நிலையில், 
ஏன் வேதம் படிக்காத ப்ராம்மணர்களுக்கும், மற்ற சமுதாயத்தில் உள்ளவர்களுக்கும், வேதம் கற்ற வேதியனை காப்பாற்ற வேண்டும் என்று தோன்றவில்லை?
காரணம் உள்ளது..

அன்றைய காலங்களில், அனைவருமே சமஸ்க்ரிதம் மொழி தெரிந்து இருந்தனர். 

அனைவருமே 4 உபவேதங்கள் என்று சொல்லப்படும் ஆயுர் வேதம் (medicine), ஸ்தாபத்யம் (engineering), காந்தர்வ வேதம் (music), தனுர் வேதம் (weaponary) கற்றனர்.
அது மட்டுமல்ல, 
64 கலைகளையும் கற்றனர். 
சமஸ்க்ரித மொழியில் தானே இவை அனைத்தும் உள்ளது. 

சமஸ்க்ரித மொழியின் பெருமை, 4 வேதத்தின் பெருமையை அறிந்து இருந்ததால், அன்று இருந்த க்ஷத்ரிய அரசர்களுக்கு (army), வைஸ்யர்களுக்கு (business), சூத்திரர்களுக்கு (employee), ப்ராம்மணர்களை காப்பாற்ற வேண்டும் தோன்றியது. 

மொழி அறிவு இருந்ததால், வேதத்தின் மதிப்பு தெரிந்ததால், அன்று பிராம்மணர்கள் மதிக்கப்பட்டனர்.


அன்றைய காலங்களில், வைஸ்ய (business), க்ஷத்ரிய (army), பிராம்மண (spiritual) குணங்கள் கொண்ட அனைவரும் வேதம் கற்றனர்.

கற்ற வேதத்தை எப்பொழுதும் அப்யாஸம் செய்து, அந்த தெய்வங்களின் த்யானத்திலேயே இருந்தனர் ப்ராம்மணர்கள். மதிக்கப்பட்டனர்.
மகாபாரதத்தில் "சுதாமா" என்ற ப்ராம்மணன், க்ஷத்ரியனாக அவதரித்த "ஸ்ரீ கிருஷ்ணருடன்" சாந்தீபனியிடம் சேர்ந்து படித்தார்கள்.

க்ஷத்ரியனாக அவதரித்த ஸ்ரீ கிருஷ்ணர் 
  • 4 வேதம் மட்டுமில்லாமல், 
  • 4 உபவேதங்கள், 
  • 6 சாஸ்திரங்கள், 
  • 8 வேதாந்த சித்தாந்தங்கள், மேலும் 
  • 64 கலைகள் என்று அனைத்தையும் கற்றார்.




ஸ்ரீ கிருஷ்ணர் க்ஷத்ரியன். ஆனால் வேதமும் கற்றார்.

இந்திய நாடு இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் 1000 வருடம் சிக்கி, லட்சக்கணக்கான கோவில்கள் இடிக்கப்பட்டு, ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டு, 
அதற்கு பின் 1400ADல் ஆரம்பித்து 1947 வரை கிறிஸ்தவர்களாலும் மதம் மாற்றப்பட்டு, ஆயிரக்கணக்கான அரசர்கள் (வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள் போன்று பலர்) இவர்களால் கொல்லப்பட்டு, 
இவர்கள் அனைவரும் 1947ல் விரட்டப்பட்டு விடுதலை அடைந்த போது, 
ப்ராம்மணர்கள் மட்டுமல்ல, மற்ற வர்ணத்தாரும் பூணுல் அணிந்து வாழ்ந்தனர் என்று பார்க்கிறோம். 
இன்றும் சில ப்ராம்மணர் அல்லாத குடும்பங்களில் கூட, பூணுல் அணிந்து இருப்பதை காணலாம்.

64 கலைகளும் சம்ஸ்க்ரித மொழியில் தானே இருந்தது. 
"குதிரை ஏற்றம், பூ கட்டுதல், நடனம், நாட்டியம், ஓவியம், சிற்பம்" என்று அனைத்து கலைகளும் சம்ஸ்க்ரித மொழி தெரிந்ததால் தானே ஹிந்துக்கள் இதில் சூரர்களாக இருந்து இருக்க முடியும். 
வேதமும் கற்றதால், சமஸ்க்ரித மொழியும் தெரிந்து இருந்ததால், பொதுவாகவே ஹிந்துக்கள் அனைவரும் பூணுல் அணிந்து இருந்தனர்.
.
சம்ஸ்க்ரித மொழி பயன்பாட்டில் இருந்து இஸ்லாமியர்களால், கிறிஸ்தவர்களால் 1200 வருடங்களில் அழிக்கப்பட்டதால், 
இன்று இந்த பொக்கிஷங்களை இழந்து, அந்நிய மொழியை நம்பிக்கொண்டு, நம்மை கோடீஸ்வரனாக வைத்து இருந்த சம்ஸ்க்ரித மொழியை அறிவில்லாமல் எதிர்த்து கொண்டு இருக்கிறோம்.

வேதத்தை கற்று கொள்ள, வேதமே பல தகுதிகளை எதிர்பார்க்கிறது. இன்றைய சூழ்நிலையில், பிராமண குடும்பத்தில் பிறந்தவர்களுக்கே உச்சரிப்பு சரியாக இல்லை. வாழ்க்கை முறையிலும் ஆசைகளை வளர்த்து கொண்டு உள்ளனர். 
வேதத்தை இவர்கள் படிப்பதற்கு அருகதை இழந்து வருகின்றனர். 
ஒரு சில வேதியர்கள் மட்டுமே இன்றும் வேதத்தை அழிந்து விடாமல் காப்பாற்றி வருகின்றனர்.

உச்சரிப்பு சரியாக வராத போது, கும்பகர்ணன் போல தான் வேதத்தை தப்பும் தவறுதலாக உச்சரிப்போம். 

கடினமான வேதத்தை படிப்பதற்கு, தகுதிகள் தேவைப்படுகிறது. 



ரிஷிகள் கிரஹித்து சொன்ன வேதத்தை தவறுதலாக உச்சரித்து நாம் ஒன்று நினைத்து சொன்னால், பலன் வேறாக கூட அமைந்து விடும் அபாயம் உண்டு.

வேதத்தை படிப்பது கடினம். 
ஆனால், அந்த வேதமே ஓங்காரத்தில் அடக்கம் என்று கவனிக்கும் போது, அந்த ஓங்காரத்தை நாம் பிடித்து கொண்டால், வேதத்தை கற்ற பலனும் நமக்கு கிடைக்கும். மோக்ஷமும் கிடைக்கும். 


ஓங்காரத்தின் விளக்கத்தை பாப்போம். 
"ஓம்" என்ற ப்ரணவமே, "பரவாசுதேவன் நாராயணன்" ஸ்வரூபம் தான். 
பரவாசுதேவன் "நாராயணன்" ஓங்காரத்திற்கும் முன்னால் இருக்கிறார். அதனால் தான், "ஹரி: ஓம்" என்று சொல்கிறோம்.
வேதமே 'ஓம்' என்ற பிரணவத்தில் அடக்கம் என்பதால், வேதம் முழுவதும் படிப்பதற்கு சமமானது "ஓம்" என்ற பிரணவ மந்திரம். 

அந்த ஓம் என்ற பிரணவம் மூன்று அக்ஷரங்களால் ஆனது. 



"அ உ ம" என்ற மூன்று அக்ஷரங்களே ஓம் என்ற ஓசையை ஒலிக்க செய்கிறது.. 
  • உலகம் "வேதத்தில்" அடங்குகிறது. 
  • வேதம் "பிரணவத்தில்" அடங்குகிறது. 
  • பிரணவம் "அ" என்ற அக்ஷரத்தில் ஆரம்பிக்கிறது. 
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில்,
"அக்ஷரங்களில் நான் 'அ' என்ற அக்ஷரமாக இருக்கிறேன்" என்கிறார். 
உலகமே "வேதத்தில்" அடக்கம்.
வேதமே "ப்ரணவத்தில்" அடக்கம் என்றால், ப்ரணவத்தின் சக்தி எப்பேற்பட்டது? என்று எண்ணி பார்க்க வேண்டும்
அதனை உணர்ந்து ஜபம் செய்யும் போது மோக்ஷம் கூட கிடைத்துவிடும். 


'அ' என்ற அக்ஷரம்

'அ' என்ற அக்ஷரம், ப்ரணவத்தின் (அஉம) முதல் அக்ஷரமாக உள்ளது

"அ" என்ற அக்ஷரம் "பரமாத்மாவை" குறிக்கிறது. 

அக்ஷரமாக (வெறும் எழுத்தாக) பார்க்கும் போது, 
"அ" என்ற சொல்லை "உயிர் எழுத்து" என்று அழகான பொருத்தமான தமிழ் பெயரில் சொல்கிறோம்.



இதற்கு "உயிர்" (ஆத்மா) என்ற பெயர் கிடைத்ததே, இது "பரமாத்மாவை" குறிக்கிறது என்பதால் தான். 

நாம் (ஆத்மா) அனைவரும் ஜீவாத்மாக்கள்.
நம்மை படைத்தவர், அந்த பேருயிரான பரமாத்மா நாராயணன். 

"அ" என்ற அக்ஷ்ரம் சொல்லும்போது,
"நம்மை படைத்த  பரமாத்மாவை தியானிக்கிறோம்" என்ற கவனத்துடன், கர்வமில்லாமல் சொல்ல வேண்டும்.
இந்த "அ" என்ற உயிர் எழுத்து தனித்து தெரிவதால், இது பரமாத்மாவை குறிக்கிறது. ஜீவாத்மாக்கள் சொல்லவில்லை என்று உணர வேண்டும்.


'' என்ற அக்ஷரம்

'ம' என்ற அக்ஷரம், ப்ரணவத்தின் (அஉம) கடைசி அக்ஷரமாக உள்ளது. 

"ம" என்ற அக்ஷரம் ஜீவாத்மாவான () நாம், இந்த உடலில் (ம்) புகுந்து இருக்கும் நிலையை குறிக்கிறது. 
அக்ஷரமாக பார்க்கும் போது, 
"ம" என்ற சொல்லை, "உயிர்மெய்' எழுத்து என்று அழகான பொருத்தமான தமிழ் பெயரில் நாம் சொல்கிறோம்.



இதற்கு உயிர்மெய்(ம)  என்ற பெயர் கிடைத்ததே, இது ஜீவாத்மாவாகிய(அ) நாம் இந்த உடலில்(ம்) சிக்கி இருக்கும் நிலையை குறிக்கிறது என்பதால் தான்.

அதாவது,
'அ' என்ற உயிரும்,
'ம்' என்ற மெய்யும், சேரும் போது, 'ம' என்ற உயிர்மெய் உருவாகிறது. 

"" என்ற அக்ஷரம், உடலோடு இருக்கும் நம்மை தான் குறிக்கிறது.
பார்ப்பதற்கு 'ம' தனி எழுத்தாக தோன்றினாலும், அது ம் என்ற மெய் (உடல்), என்ற உயிருடன் சேர்ந்ததால் ஏற்பட்ட தோற்றமே என்று விளங்கும்.
"ம்" என்ற அசைவற்ற இந்த உடலில், "" என்ற உயிர் புகுந்து, அசையாத உடல் "உயிருள்ளது போல" காட்டுகிறது என்று அறிந்து கொள்கிறான் ஞானி.

இந்த ரகசியத்தை தான், நாம் "ம" என்ற அக்ஷரம் உச்சரிக்கும் போது  உணர வேண்டும். தியானிக்க வேண்டும்

ம = அ + ம்
உயிர்மெய் = உயிர் + மெய்

"அ உ ம" என்ற 3 அக்ஷரங்கள் சேரும் போது, "ஓம்" (அஉம்) என்ற சப்தம் ப்ரணவ மந்திரம் ஆகிறது. 

"ஓம்" (அஉம்) என்ற ப்ரணவ மந்திரத்தில் இருந்தே, வேதம் உண்டானது. 
வேத சப்தங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளது. 
வேத சப்தங்களே உலகை உருவாக்கின.  
வேத சப்தங்கள் இருப்பதாலேயே உலகம் அதே மாத்திரையில் சுழல்கிறது

உலகமே வேத சப்தத்தால் உருவானது என்று சொல்லும் போது, உலகத்தில் தாறுமாறுகள் நம்மால் ஏற்பட்டால் கூட, வேத சப்தங்களை கொண்டே சரி செய்து கொள்ளலாம். 



மழை பெய்யாமல் போனால், வேதத்தில் "மழைக்கு காரணமான வேத வாக்கியங்களை" வேதியர்கள் சொல்லும் போது, மழை சம்பவிக்கிறது.
வேதத்தாலேயே நோய்கள் குணமாக்கப்பட்டன. 

உலகத்தில் ஏற்படும் அத்தனை இடர்களையும், வேதத்தை கொண்டே சரி செய்தனர் ஹிந்துக்கள். 

மழைக்கான வேத வாக்கியங்களை (சப்தங்களை) பூகம்பம் வராமல் இருக்க பயன்படுத்தினால்? ப்ரயோஜனமில்லை. 
"எந்த வேத மந்திரத்தை எந்த காரியத்துக்கு பயன்படுத்த வேண்டும்" என்று தெரியாமல் செய்தால் பலன் அளிக்காது.

ஆனால், வேதத்திற்கும் மூலமான "ஓம்" என்ற ப்ரணவத்தை அதன் தத்துவத்தை புரிந்து ஜபம் செய்தால், நம்மை சுற்றியுள்ள இயற்கையும், நம் உடலும் தானாக சரி செய்து கொள்ளும். 

இன்றைய விஞ்ஞானம் "உலகம் ஒலியால் (Sound Theory) உண்டாகி இருக்குமா?" என்று ஆராய்ச்சி செய்து கொண்டு இருக்கிறது. 
இதை நம் ரிஷிகள் எப்பொழுதோ சொல்லி விட்டனர். 

ப்ரணவமாக (ஓம் = அஉம்) சொல்லும் போது,
'ம' என்ற உயிர்மெய் எழுத்தாக முடிக்காமல்,
'ம்' என்று மெய் எழுத்தாக சொல்லி முடிக்கிறோம்.

"ம" என்ற அக்ஷரம், ப்ரணவ மந்திரத்தை சொல்லும் போது "ம்" என்று முடிவதற்கு காரணம்,
உடலே (ம்) நான் என்று நினைப்பாயாகில், உயிர் (அ) இல்லாத இந்த உடலை(ம்) கொண்டு கர்வப்பட என்ன இருக்கிறது? என்ற ஞானத்தை நமக்குள் புகட்டவே "ம்" என்று சொல்லி முடிக்கிறோம்..

ப்ரணவத்தை 'ஓம' என்று சொல்லாமல், 'ஓம்' என்று சொல்வதற்கு இதுவே காரணம்.



"அ" என்ற உயிர் (நான்)
"ம" என்ற உயிர்மெய்யில் (உடலில்) மறைந்து இருப்பதை உணராமல், 
'ம்' என்ற மெய் என்ற மனித தேகத்தையே, "நான்" என்று நினைப்பது அஞானியின் லக்ஷணம். 

ஆக,
"ம" என்ற அஷரத்தால், "சரீரமே நான் என்ற புத்தி ஒழிய வேண்டும்" என்று தியானிக்க வேண்டும்.
'ம' என்ற அக்ஷரம் சொல்லும் போதே, "சரீரம்(ம்) வேறு, நான்/ஆத்மா(அ) வேறு" என்று தியானிக்க வேண்டும்.

ஆனால், இதில் ஒரு குறை வந்து விடுகிறது.

'' என்ற உயிர்மெய்யில் உள்ள ஆத்மா (அ), "தான் சுதந்திரமானவன்" என்று நினைத்து விடுகிறான் "அல்லது"
"" என்ற உயிர்மெய்யில் இருக்கும் இந்த உடலில் இருக்கும் "அ" என்ற உயிரும், தனியாக ஓம் என்பதில் முதலாக உள்ள "அ" என்ற "பரமாத்மாவும்" ஒன்று என்று நினைத்து விடுகிறான்.

"தான் தாசன்(ஜீவன்)", தனித்து இருக்கும் தன் எஜமானன் "அந்த பரமாத்மா" என்று அறியாமல்,
தானும் (ஜீவாத்மாவும்), பரமாத்மாவும் ஒன்று என்று நினைத்து, தான் சுதந்திரமானவன் என்று நினைக்கிறான்.

இப்படி "தேகம் வேறு, ஆத்மா வேறு" என்று தெரிந்தும், "உடலில் சிக்கி இருக்கும் ஆத்மா" சுதந்திரமானவன் என்று நினைப்பவனுக்கு,
"கைவல்யம்" பலனாக கிடைத்து விடுகிறது.
ஆனால் வைகுண்டம் கிடைக்காது.

பரமாத்மாவும்(உம என்ற பிரணவத்தின் "அ" என்ற முதல் அக்ஷரம்), 
ஜீவாத்மாவும் ( என்ற அக்ஷரத்தில் ஒளிந்து இருக்கும் "அ" என்ற அக்ஷரம்) ஒன்று என்று நினைக்கும் ஞானி "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை மட்டுமே அடைகிறான். 
வைகுண்டம் என்ற பரமபதம் - இந்த ஞானிக்கு கிடைப்பதில்லை.



'ம' என்ற அக்ஷரம் சொல்லும் போது, அதற்குள் ஒளிந்து இருக்கும் '' என்ற சொல்லை பார்த்து, "தான் சுதந்திரமானவன்" என்று நினைப்பான். 
அது தவறு. 
'ம' என்ற அக்ஷரத்தில் உள்ளே இருக்கும் 'அ' 'ஜீவாத்மாவை' குறிக்கிறது. ப்ரணவத்தின் முதல் அக்ஷரமான 'அ' என்ற சொல்லில் பரமாத்மா தனித்து இருக்கிறார். 

ஜீவாத்மாவாக ('ம'வில் ஒளிந்து இருக்கும் 'அ') தேகத்தின் உள்ளே இருக்கும் "நான், சுதந்திரமானவன் இல்லை, என்னை படைத்த அந்த பரமாத்மாவுக்கே('அ' என்ற பிரணவத்தின் முதல் அக்ஷரம்) சொந்தம்" என்று உணர்பவன், "பரமபதம் அடைகிறான்".

இப்படி, ஒரு தேகத்தில் (ம்) அகப்பட்ட ஜீவாத்மா (), தன்னிலை உணர்ந்து, தான் விடுதலை பெற்று, அந்த பரமாத்மாவை () அடைய வேண்டும் என்று நினைக்க வேண்டும்.

"ஜீவாத்மாவாகிய எனக்கு இந்த உடல் கொடுத்து, ஞானம் அடைவதற்கு கருணை செய்ததே அந்த பரமாத்மா தான்" 
என்று உணரும் போது, தான் இருப்பதற்கே அந்த ஈஸ்வரன் தான் காரணம் என்று புரியும்.
ஜீவாத்மா "தான் செய்கிறோம்" என்ற கர்வதத்தை விடுகிறான்.

உள்ளிருக்கும் ஆத்மா சுதந்திரமானவன் இல்லை, அந்த பரமாத்மாவை அடைவதே லட்சியம் என்று நினைப்பவனுக்கு வைகுண்டம் பலனாக கிடைத்து விடும்.

'' என்ற அக்ஷரம்
'' என்ற ஒலி ஓங்காரத்தின் நடுவில் உள்ள ஒலி

என்ற சப்தம் மூலம், "ஆத்மா வேறு, சரீரம் வேறு" என்று உணர்ந்து கொள்கிறான்.
மேலும் "தான் ஜீவாத்மா" என்றும் புரிந்து கொள்கிறான். 

ஆனால், ஜீவாத்மாவாகிய தன்னை படைத்தவன் யார்? என்ற கேள்விக்கு,
நீ அந்த "அ" என்ற அக்ஷரத்திற்கு உரிமையாளனான "பரமாத்மாவின்" சைதன்யமே என்ற உறவை சொல்வதே "உ" என்ற அக்ஷரம்.

"தான் இந்த உடம்பில் வந்ததும், இந்த உடம்பை விட்டு போவதும் தன் இஷ்டத்தில் இல்லை" என்று உணர்கிறான் ஜீவாத்மா.
அதனாலேயே, "தான் யாருக்கோ அடிமை" என்று மட்டும் புரிந்து கொள்கிறான்.


ஆனால் யாருக்கு அடிமை?
ஜீவாத்மாவாகிய என்னை, யார் படைத்தார்?
என்ற கேள்விக்கு,
'உ' என்ற சப்தத்தின் மூலம், ஜீவாத்மாவை பார்த்து,
'நீ யாருக்கும் அடிமை அல்ல. அந்த பரவாசுதேவனுக்கே அடிமை நீ'
என்ற உறவை உணர்த்துகிறது.
"பரவாசுதேவனுடன்(அ) உள்ள உறவை உணராமல், தானும் (ஜீவாத்மா) பரமாத்மாவும் ஒன்று என்று நினைப்பவன்" கைவல்யத்தை அடைகிறான்.
"உடல் வேறு, உயிர் வேறு" என்ற  ஞானம் மட்டுமே இதில் இருப்பதால், பரவாசுதேவன் "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை கொடுத்து விடுகிறார். 
"கைவல்யம்" பிறவி கடலை தாண்ட வழி வகுத்தாலும், கைவல்யம் பெறுவது "ஆத்மாவுக்கு செய்யும் பெரிய துரோகம்" என்கிறார்கள் ஆன்மீக பெரியோர்கள். 

நம் ஆத்மாவுக்கு "ஜீவன்" என்று பெயர் உண்டு.
இந்த ஜீவாத்மா அந்த "பரமாத்மாவின் சொந்தம்"
ஜீவாத்மா அடைய வேண்டிய இடம் "பரமாத்மாவே".

பரமாத்மாவை அடையாமல், வெறும் சுதந்திரம் மட்டும் பெற்ற ஜீவாத்மா, கைவல்யத்தை அடைகிறது

பிறவி கடலை கடந்து, பரமாத்மாவை அடையும் ஜீவனை, பரமபதம் (வைகுண்டம்) அடைந்தார் என்கிறோம். 

பரமாத்மாவை அடையாமல், பிறவி கடலை மட்டும் கடந்த ஜீவனை, கைவல்யம் அடைந்தார் என்கிறோம்.

பரமாத்மாவாகிய பரவாசுதேவன், ஜீவாத்மாவுக்கு கணவன் போன்றவர். 
ஜீவாத்மாவாகிய நாம் அனைவரும் அந்த பரமாத்மாவுக்கு முன், பெண் போன்றவர்கள். 
உயிர்மெய்யாக(ம), இந்த உடலில்(ம்) புகுந்து இருக்கும் ஜீவாத்மாவாகிய(அ) நாம்,
தனித்து இருக்கும் அந்த பரமாத்மாவை(அ) அடைய எண்ணம் இல்லாமல், எப்படியாவது "இந்த உடலை விட்டு, மீண்டும் பிறக்காத வண்ணம் இருந்தால் போதும்" என்று ப்ரணவம் மட்டும் சொல்லி கொண்டு வந்தால், அது 
"ஒரு ஆயுள் கைதி எப்படியாவது ஜெயிலில் இருந்து விடுதலை அடைந்தால் போதும்" என்று நினைப்பது போன்ற ஆசை. 


விடுதலை ஆக என்னென்ன முயற்சி செய்வானோ அதை செய்து, அந்த பரவாசுதேவன் அணுகிரஹம் செய்து, விடுதலை செய்து விடுகிறான். 

ஆனால் இவன் தன்னை அடைய ஆசை இல்லாமல் இருந்ததால், "கைவல்யம்" என்ற மோக்ஷத்தை கொடுத்து விடுகிறான். 

இது, "விடுதலை அடைந்த ஆயுள் கைதி, தனக்கு சொந்தமான வீட்டுக்கு திரும்பாமல், அங்கு இவனுக்காக காத்து இருக்கும் சொந்தங்களை (பரவாசுதேவனை) காணாமல், நிம்மதியாக அவன் வீட்டிற்கு போய் தங்காமல், விடுதலை அடைந்தோம் என்ற திருப்தியில் தெரு தெருவாக அலைந்து கொண்டு இருப்பது போன்ற நிலை". இதுவே "கைவல்யம்".
"மோக்ஷம் அடைந்தும், அலைந்து கொண்டிருக்கும் நிலை" என்பதால், இது "ப்ரயோஜனம் இல்லாத நிலை, முயற்சி செய்ய கூடாத நிலை" என்று பெரியோர்கள் ஞானிகள் எச்சரிக்கின்றனர். 
இப்படி ப்ரணவ மந்திரம் சொல்லும் போது,
உடல் வேறு, ஆத்மா வேறு என்ற உண்மையை "" என்ற அக்ஷரத்தாலும், 
உடலில் புகுந்து இருக்கும் ஜீவாத்மா சுதந்திரமானவனா? என்ற கேள்விக்கு,
"நீ சுதந்திரமானவன் இல்லை, நீ அந்த பரமாத்மாவுக்கு சொந்தமானவன்" என்ற உறவை "" என்ற அக்ஷரத்தாலும், 
தனித்து முதலில் இருக்கும் "பரமாத்மாவே" 'பகவான்' என்பதை "" என்ற அக்ஷரத்தாலும், 
உணர்ந்து குருவை கொண்டு "ப்ரணவ மந்திரத்தை" உபதேசம் பெற்று, தினமும் ஜபம் செய்பவன், பரமபதம் அடைகிறான்.

ஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.
ஆனால், யார் அந்த பரமாத்மா? என்று சொல்லவில்லை. 

"ஹரி ஓம்" என்றும், லக்ஷ்மியின் கணவன் என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, அந்த "நாராயணனே" என்று முடிவாக சொல்கிறது. 
பரமாத்மா யார்? யார் ஆதி புருஷன்? Whois_Supreme_VedicGod படிக்கவும்.



"பரமாத்மா" என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி செய்ய முடியாது. 
அதனால்,
ஸ்ரீனிவாசபெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு,
அந்த பரமாத்மா "நானே" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை (ஓம் நமோ நாராயணாய) உபதேசித்தார்.

"நமோ நாராயணா" என்ற சொல்லின் அர்த்தம் என்ன? Click Here

Hare Rama Hare Krishna - Listen to Bhajan


Sandhya Vandanam - Morning (with meaning)


Sandhya Vandanam - Evening (with meaning)


Sandhya Vandanam - Afternoon (with meaning)