Followers

Search Here...

Showing posts with label ஹிந்து. Show all posts
Showing posts with label ஹிந்து. Show all posts

Wednesday 27 March 2019

குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன், என்று ஏன் ஹிந்து பெயர் வைக்க வேண்டும்? கட்டுமரம் (wood), இடி(thunder) என்று இயற்கை பெயர்களை உண்மையான ஹிந்துக்கள் வைத்துக்கொள்வதில்லையே, ஏன்?

'க்ஷத்ரபந்து' என்று ஒருவன் இருந்தான். பிறப்பால் ஒரு "பிராம்மணன் அவன். 
இருந்தாலும், "ஆத்ம ஞானத்தை" சம்பாதிக்க நாட்டம் இல்லாமல் இருந்தான்.
"தெய்வ சிந்தனை இல்லாமல்", வாழ்க்கையை செலவழித்து கொண்டிருந்தான்.


"பரப்ரம்மத்தை" உபாசிக்காமல், அவனுடைய செயல்கள் "க்ஷத்ரிய" ஸ்வபாவத்திலேயே இருந்தது.

ஒரு க்ஷத்ரியனை போல, 'சண்டை செய்வதிலும், வேட்டை ஆடி பிராணிகளை ஹிம்சை செய்வதிலும்', ஆர்வம் இருந்ததால்,
இவன் 'ப்ரம்ம பந்து'வாக இல்லாமல், க்ஷத்ரியர்களின் பந்துவாக (உறவு) இருந்ததால், இவனுக்கு "க்ஷத்ர பந்து" என்று பெயர் அமைந்தது.

பிராம்மணனாக பிறந்தும், பிராம்மணனுக்கு உரிய காரியங்கள் இவனிடத்தில் இல்லை.
க்ஷத்ரியனை போல வாழ்ந்து கொண்டிருந்த இவனுக்கு, நாளைடைவில் மதுபானம் செய்வது, மாமிசம் உண்பது போன்ற பழக்கங்களும் ஏற்பட, பாவங்கள் அவனுடன் சேர்ந்து கொண்டன.

நரகத்திற்கு சென்று, செய்த பாவத்திற்கு தண்டனை அனுபவித்தால் தான், இவன் செய்த பாவ காரியங்கள் தொலையும், மறு ஜென்மம் கிடைக்கும் என்ற அளவுக்கு இவன் வாழ்க்கை இருந்தது.

ஒரு சமயம் வேட்டையாட, காட்டில் அலைந்து கொண்டிருந்தான் க்ஷத்ர பந்து.

அப்போது வழியில் "சௌனகர்" என்ற ரிஷியை எதேச்சையாக பார்த்து விட்டான்.
சாதுக்களை தரிசித்தாலேயே, நம் சித்தம் ஸுத்தி ஆகி விடும் என்கிறது சாஸ்திரம்.
இது சாதுக்களின் பெருமை.

தீய எண்ணம் கொண்டவனுக்கும் ஒரு சாதுவை கண்டால் 'மன மாற்றம் ஏற்படும்'. நல்வழியில் செல்ல ஆர்வம் ஏற்படும்.

சௌனக ரிஷியை பார்த்த 'க்ஷத்ரபந்து', மனதுக்குள் நினைத்துக்கொண்டான்,
"இவரும் ப்ராம்மணன். நானும் ப்ராம்மணன்.
நான் எப்படி வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்?. இவர் எப்படி வாழ்கிறார் !!
எப்பொழுதும் நாராயணனை மனதில் தியானம் செய்து கொண்டு இருக்கிறாரே இவர் !!
நாமோ இப்படி ஒரு வாழ்க்கை வாழ்கிறோமே!!
ஐயோ !! நாமும் அவரை போல வாழ்ந்து இருக்க கூடாதா?"
என்று தன்னை தானே வெறுத்துக்கொண்டான்.

இப்படி நினைத்து கொண்டே, தன் கையிலிருந்த வில், அம்பை முறித்து தூக்கி எறிந்தான்.

நேராக சௌனக ரிஷியின் அருகில் வந்து, சரணத்தில் விழுந்து,
"எனக்கு சன்மார்க்கத்தை (நல்வழியை) காட்டுங்கள்" என்று பிரார்த்தித்தான்.

சௌனக ரிஷி, க்ஷத்ரபந்துவை பார்த்து,
"இனி மது மாமிசம் சாப்பிடுவதை விடு. வேட்டையாடுவதை விடு.
இதுநாள் வரை செய்த பாபங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொள். தபசு செய்ய இப்பொழுதே கிளம்பி விடு"
என்று சொல்ல,



க்ஷத்ரபந்து,
"நான் என்னை நம்புவதற்கு இல்லை.
உறைந்து போன நெய்யை, வெயிலில் காட்டும் போது, உருகுவது போல உருகும்.
சரி, உருகி விட்டதே என்று உள்ளே எடுத்து வைத்தால், மீண்டும் உறைந்து விடும்.
அதுபோல,
என் மனதில் ஏதாவது ஒரு உருக்கம் ஏற்பட்டது என்றால், அது உங்கள் ப்ரபாவத்தால் ஏற்பட்டதே தவிர, என் ஸ்வபாவம் இல்லை.
என்னை தனியாக போய் தவம் செய் என்று சொல்கிறீர்கள்.
உங்களை விட்டு சிறிது விலகி சென்றாலும், என் ஸ்வபாவம் மேலோங்கி விடும்.
உருகிய உள்ளத்தோடு இருக்கும் நானே, உங்களை விட்டு விலகி சென்றால், மீண்டும் உறைந்து விடுவேன்.
இரக்கமற்ற வாழ்க்கை மீண்டும் வாழ ஆரம்பித்து விடுவேன். என்னை நானே நம்புவதற்கு இல்லை.
அதனால், என்னை நீங்கள் அதை செய், இதை செய் என்று சொல்லக்கூடாது.
எதற்கும் தகுதி அற்றவன் நான்.
உங்கள் கருணையினால் தான் என்னை நீங்கள் காப்பாற்றவேண்டும்"
என்று சொல்ல,

சௌனக ரிஷி,
"சரி. நீ இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய்?"
என்று கேட்க,
"நான் இந்த காட்டில் தான் அலைந்து கொண்டிருப்பேன். ஏதோ கிடைத்ததை வேட்டையாடுவேன்.
கையில் பணம் வேண்டுமென்றால், யார் வீட்டிலாவது புகுந்து கொள்ளையடிப்பேன்.
மற்ற நேரங்களில், நான் வீட்டில் மாடு வைத்து இருக்கிறேன். நேரம் போக, அந்த மாட்டை கவனித்து கொண்டு இருப்பேன்."
என்றான் க்ஷத்ரபந்து.
சௌனக ரிஷ,
"மாட்டை நீ இல்லாத சமயத்தில் பார்த்து கொள்ள வேறு யாரையாவது வைத்து இருக்கிறாயா?"
என்று கேட்க,
"ஆமாம், ஒரு சின்ன பையன் இருக்கிறான். அவன் மாட்டை பார்த்து கொள்கிறான்"
என்று சொன்னான்.
"அவன் பெயர் என்ன?"
என்று சௌனக ரிஷி கேட்க,
"அவன் பெயர் கோவிந்தன்" 
என்று க்ஷத்ரபந்து சொல்ல,
"சரி.. நீ தவம் செய்ய செல்ல வேண்டாம். அடிக்கடி அந்த இடையன் பெயரை கூப்பிட்டு கொண்டே இரு. போ"
என்று அணுகிரஹம் செய்து அனுப்பினார்.





அன்றிலிருந்து, அடிக்கடி
"கோவிந்தா.. மாட்டுக்கு தீனி வைத்தாயா?
கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் கொடுத்தாயா?"
என்று அடிக்கடி அவன் பெயரை சொல்லி சொல்லி கூப்பிட்டு கூப்பிட்டு, "கோவிந்த" நாமத்தை அவன் ஆவர்த்தி செய்து கொண்டே வாழ்ந்து வந்தான்.

மரண காலம் அவனை நெருங்கி விட்டது.
யாருக்கு என்ன கவலை இருக்குமோ, அதை பற்றிய எண்ணம் தான் சாகிற சமயத்திலும் வரும்.

கடைசி மூச்சு போகும் சமயத்தில்
"மாட்டுக்கு தண்ணீர் வைத்தானோ இந்த கோவிந்தன்?" என்று கோவிந்தனின் நினைவு வர,
"கோவிந்தா... மாட்டுக்கு தண்ணீர் வைத்தாயா?.." என்று கேட்க வாயெடுத்த க்ஷத்ரபந்து, "கோவிந்தா..." என்று சொல்லும் போதே உயிர் பிரிந்து விட்டது.
கடைசி நேரத்தில் கோவிந்த நாமத்தை சொன்ன பலனாக, மோக்ஷத்தை கொடுத்துவிட்டார் எம்பெருமான் நாராயணன்.
"கத்திர பந்து மன்றே
பராங்கதி கண்டு கொண்டான்" 
என்று தொண்டரடிப்பொடியாழ்வார் திருமாலையில், 
'பாவங்களையே செய்து வாழ்ந்த க்ஷத்திர பந்துவும் கடைசி மூச்சு விடும் சமயத்தில் "கோவிந்தா" என்று சொன்னதால் நற்கதியான மோக்ஷம் அடைந்து விட்டான்' என்கிறார்.

'க்ஷத்ரபந்து' 'நாராயணனை' நினைத்து, கோவிந்த நாமத்தை சொல்லவில்லை
அந்த இடையனை நினைத்து தான் அழைத்தான். 
ஆனால் பகவன் நாமம் அவனை காப்பாற்றி விட்டது.

பகவானின் நாமத்தை அடிக்கடி சொல்லி சொல்லி, நாக்கும் மனசும் பழகி போக, கடைசி மூச்சு விடும் சமயத்தில், அந்த நாமமே க்ஷத்ரபந்துவை காப்பாற்றிவிட்டது.
அஜாமிளன் போன்று, பகவானின்  நாமத்தை உயிர் போகும் சமயத்தில் சொல்லியதால், மோக்ஷம் அடைந்தான் 'க்ஷத்ரபந்து'


பகவானின் நாமத்தை அடிக்கடி நாம் சொல்லிக்கொண்டு இருந்தால், நம் மரண காலத்திலும், அந்த பகவன் நாமமே நம்மை மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுக்கும்.

"கோவிந்தா... கோவிந்தா..." என்று அடிக்கடி கூப்பிட்டு கூப்பிட்டு பழகி போன, 'க்ஷத்ரபந்து' மரண சமயத்திலும் "கோவிந்தா..." என்று அழைக்க, அந்த 'கோவிந்தன்' என்ற பெயரின் நிஜமான உரிமையாளன், திவ்ய காட்சி கொடுத்து, "பரம் என்ற வைகுண்டம்" கூட்டி சென்றார்.
பாவங்களையே சம்பாதித்த 'க்ஷத்ரபந்து', பகவன் நாமாவை கடைசி மூச்சு விடும் சமயத்தில் சொல்லி மோக்ஷம் அடைந்து விட்டான்.

'அடிக்கடி பகவன் நாமாவை நாம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்' என்று பெரியோர்கள் சொல்வதற்கு காரணமும் இது தான்.

நாம் எதை அடிக்கடி வாக்காலும், மனதாலும் செய்கிறோமோ, அதே எண்ணங்கள் தான் மரண சமயத்தில் ஞாபகத்துக்கு வரும்.
'ராம... ராம... ராம..' என்று எப்பொழுதும் சொல்லிக்கொண்டே இருப்பவர்கள், இறுதி மூச்சு விடும் போதும் "ராம" நாமத்தை சொல்லிக்கொண்டே உடலை விட்டு பிரிகிறார்கள்.

பகவன் நாமாவை சொல்லாமல், உலக, குடும்ப விஷயங்களிலேயே அடிக்கடி எண்ணம் உடையவர்கள், அது போன்ற விஷயங்களை நினைத்துக்கொண்டே உயிர் விடுகிறார்கள். அது சம்பந்தமாகவே மறு பிறவி எடுக்கின்றனர்.
"பரத ரிஷி", கடைசி மூச்சு விடும் சமயத்தில், தான் வளர்த்த 'மானை இனி யார் காப்பாற்றுவார்களோ?' என்று மான் நினைவுடனேயே உயிரை விட்டார். மறு ஜென்மத்தில் மானாக பிறந்து விட்டார்.

"நாராயணா, ராமா, கோவிந்தா' என்று உயிர் பிரியும் சமயத்தில் சொல்லும் பாக்கியவான்கள், வைகுண்டம் அடைந்து விடுகிறார்கள்.

நாமும் மறு பிறவி எடுக்காமல் "வைகுண்டம்" அடைய, அடிக்கடி பகவன் நாமாவை சொல்ல வேண்டும்.

உலக வாழ்க்கையில் துக்கமே அதிகம்.
உலக வாழ்க்கை நிரந்தரமற்றதும் கூட. இளமையும் நிரந்தரமில்லை.

உலகம் நிரந்தரமற்றது, துக்கமே நிறைந்தது என்று அறிந்து, மறு பிறவி எடுக்காமல், மோக்ஷத்திற்கு ஆசை பட வேண்டும் என்று மகான்கள் நமக்கு வழி காட்டுகிறார்கள்.


பகவத் கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர்
"அநித்யம் அசுகம் லோகம், இமம் ப்ராப்ய பஜஸ்வ மாம்"  (9 Chapter, 33 sloka)
என்று சொல்லும் போது,
'இந்த உலகம் உன்னை பொருத்தியவரை  'நிரந்தரமற்றது, துக்கம் நிறைந்தது' என்று அறிந்து, உலகத்தின் மீதான  பற்றை விட்டு விட்டு, என் நாமத்தை எப்பொழுதும் பஜித்து ( சொல்லி) கொண்டிரு' 
என்கிறார்.

"ராம நாம ஜபம் தினமும் 2 மணி நேரமாவது செய்" என்று சொன்னாலும், கலியில் உள்ள மனிதர்களால் முடிவதில்லை.

"உடல் அளவில், மனதளவில் உறுதி இல்லாதவர்களாக" கலியில் பிறக்கிறோம்.

ஒரு நாள் ஏகாதேசி அன்று மட்டும் 'பட்டினி இரு' என்று சொன்னால், கலியில் உள்ள நம்மால், ஒரு வேளை கூட சாப்பிடாமல் இருக்க முடிவதில்லை. 

கடந்த யுகங்களில், ரிஷிகள் பல நாட்கள் தவம் செய்தது ஆச்சர்யமில்லை.
அசுரன், ராக்ஷஸர்கள் கூட, பல நாட்கள் சாப்பிடாமல் தவம் செய்து தெய்வங்களிடம் வரம் வாங்கினர் என்று பார்க்கிறோம்.
சிலர், தெய்வங்களையே அடைக்கவும் முயற்சித்தனர் என்றும் பார்க்கிறோம்.

பகவன் நாமாவை தொடர்ந்து சொல்ல கூட முடியாத நிலையில் துர்பலமாக இருக்கும் நமக்கு, ஆழ்வார்கள் வழி காட்டுகிறார்கள்.

வெறுமனே "ராம ராம ராம..." என்று சொல்லும் போது, ஆரம்பத்தில் தூக்கம் கூட வர வாய்ப்பு உண்டு.
ராம நாமம் அடிக்கடி சொல்லி சொல்லி பழகியவர்களுக்கு, அந்த நாமமே ருசிக்க ஆரம்பித்து விடும்.
அடிக்கடி பகவன் நாமத்தை நம் நாக்கு சொல்ல பழக்க வேண்டும்..
ஆரம்ப நிலையில், வெறும் நாமமாக சொன்னால் தூக்கம் வருகிறது.
"அடிக்கடி நம் வாயில் பகவானின் நாமம் வருவதே முக்கியம்" என்பதால்,
நம் குழந்தைகளுக்கு "கோபால்", "கோவிந்தன்" "ராமன்" என்று பெயர் வைத்து, குழந்தைகளை பெயர் சொல்லி அழைத்து கொண்டே இருங்கள், என்று பக்தியை நமக்கு சுலபமாக்கி கொடுத்தார்கள் ஆழ்வார்கள் .

குழந்தைக்கு பகவானின் நாமாவை பெயராக வைத்து கூப்பிட்டு கொண்டே இருங்கள். குழந்தையை அழைக்கும் போதெல்லாம் பகவான் நாமாவை அடிக்கடி சொல்லி சொல்லி பழக, நம் உயிர் போகும் தருவாயில், அந்த நாமத்தின் உரிமையாளன் "நாராயணன்" நமக்கு காட்சி கொடுத்து பரலோகமான வைகுண்டம் அழைத்து செல்வான் என்கிறார் பெரியாழ்வார்

நம் பிள்ளைக்கு "கோபால்" என்று பெயர் வைத்து விட்டால், பிள்ளையை கூப்பிடும் சாக்கில், "கோபாலா.. கோபாலா..." என்று கூப்பிடலாம்.
தாய் தகப்பனுக்கு மட்டுமல்ல, குடும்பத்தில் உள்ள அனைவருமே, பகவானின் நாமாவை பஜனை செய்த புண்ணியத்தை பெறுகின்றனர்.
ஹிந்து குழந்தைகளுக்கு ஹிந்து தெய்வங்களின் பெயர் வைப்பது அவசியம். அதன் மூலமாக நாம் அனைவரும் அவன் நாமத்தை அடிக்கடி உச்சரிக்கும் பாக்கியத்தை பெறுகிறோம்.

ஹிந்துக்கள் செய்யும் எந்த காரியமும் காரணம் இல்லாமல் இல்லை.

Hare Rama Hare Krishna - Bhajan

Sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

Sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



Sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka




Friday 16 March 2018

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தனை முட்டாள் தனம்?

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து.

நமக்கும் மேல் உள்ள கடவுளை,
நம்மால் உணர முடியாத கடவுளை,
நம்மையும் படைத்த கடவுளை,
ஒரு வடிவமாக அமைத்து வழிபடுவது என்பது, எத்தனை முட்டாள் தனம்?



அதை விட முட்டாள் தனம், கல்லையே "கடவுள்" என்று நம்புவது.
அதை விட முட்டாள் தனம், அந்த கல்லிடம் போய் பேசுவது, பாடுவது, வரம் கேட்பது.


இப்படி ஒரு கேள்வி, ஹிந்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

உண்மையில்,
ஒரு சிறு குழந்தையை, கோவிலுக்கு கூட்டிச்சென்று "இது உம்மாச்சி" என்று சிவலிங்கத்தை பார்த்து கும்பிட சொன்னால், சில குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வியும் இது தான் "இது கல்லு தானே'" என்று.

மிக சாதாரண கேள்வி.
பெரும்பாலும் பாரத குழந்தைகள் கூட இது போன்ற கேள்வியை கேட்பதில்லை.
காரணம் பாரத குழந்தைகள் கூட அறியும், "இது ஒரு சாதாரண கேள்விஎன்று.

வளர்ந்த பின்னும், இந்த கேள்வி சிலருக்கு மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
பதில் சொன்னாலும் புரியாது.

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து என்று வளர்ந்து, முடி நரைத்த பின்னும், சிர் இன்று கூட இந்த கேள்வியை, கேட்பதை உலகத்தில் நாம் பார்க்கலாம்.

கல்லை "கடவுள்" என்று ஏன் ஹிந்து வழிபடுகிறான்?  
இதற்கு பதில் இல்லாமலா கோடிக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்?  சற்று யோசிப்போம்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள், பண்பு உடையவர்கள்.
இதை உலகமே ஒத்துக்கொள்கிறது.



பெரும்பாலும் ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள் என்றால், பெரும்பாலான ஹிந்துக்கள் வழிபடும் சிலை வழிபாடும் சரியாக தான் இருக்க வேண்டும்.

அறிவாளிகள் என்பதால் தான், இன்று வரை சிலை வழிபாடு செய்கின்றனர்.

"கல்லை 'கடவுள்' என்று கும்பிடுகிறான்" என்று கேள்வி கேட்பவர்கள், இதோடு, இன்னொரு கேள்வியும் கேட்கலாமே?
ஏன், அதே கல்லில் செய்யப்பட்ட, அதே கடவுள் சிலையை, தூண்களிலோ கோபுரத்திலோ, கடைகளிலோ, மியூசியத்திலோ காணும் போது, மிஞ்சி போனால், மரியாதையாக பார்க்கிறானே தவிர, பூஜையோ, வேண்டுதலோ, செய்யவில்லை?

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை "தெய்வமா?" என்று ஹிந்துவிடம் கேட்டால், "இது சிலை" என்கிறான்.

காலில் விழுந்து, சூடம் ஏற்றி வரம் கேட்காமல், "இது சிலை" என்கிறான்.
செருப்பு அணிந்து கொண்டு அருகில் நிற்கிறான்.

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை 'தெய்வ சிலை' தானே?" 
என்று கேட்டால்,
"ஆம், தெய்வ சிலை தான், ஆனால் இதுவே தெய்வம் இல்லை. தெய்வ சிலையாக இருப்பதால்மரியாதை செய்கிறேன்.
ஆனால் வழிபட வேண்டும் என்று தோன்றவில்லை" என்கிறான்.

அப்படியென்றால், பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்என்று நினைக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது யோசிக்கவும் வைக்கிறது.

அழகான கடவுள் சிலை, கோவில் தூணில் இருந்தால், பார்த்து "அழகாக இருக்கிறது" என்று ரசிக்கிறானே தவிர கும்பிடுவதில்லை.
தூணில் இருக்கும் சிலையை, "தெய்வத்தின் பிம்பம்" என்று தான் பார்க்கிறான். அதுவே "தெய்வம்" என்று பார்க்கவில்லை.

நமக்கு பிடித்த ஒருவரின் போட்டோவை, சிலையை வைத்து இருப்பது போல தான், தூணில் இருக்கும் தெய்வத்தை பார்க்கிறான்.
அதிக பட்சம் தெய்வ சிலையை பார்த்தால், மரியாதை செய்கிறான்.
இதுவே "தெய்வம்" என்று நினைப்பதில்லை

ஒரு தூணில் இருக்கும் தெய்வ சிலையை, "தெய்வம்" என்று நினைக்காவிட்டாலும், தெய்வ சிலையாக உள்ளதால்மரியாதையாக பார்க்கிறான்.




ஆனால்,
தூணில் இருக்கும் தெய்வ சிலையையும், கோவிலில் கர்ப்க்ரஹத்தில் உள்ள சிலையையும் ஹிந்து ஒன்றாக பார்க்கிறானா ?
பதில்: இல்லை.
இதில் தான் ரகசியம் அடங்கி இருக்கிறது.

தூணில் இருக்கும் சிவனின் சிலை, பிரம்மாண்டமாக மிக அழகாக கூட இருக்கும்.
அந்த சிலையை, "கல் சிலை" என்று பார்க்கிறான் ஹிந்து.

கோவிலில் எங்கு பார்த்தாலும் கடவுள் சிலைகள்.
அனைத்தையும் "கல் சிலை" என்றே பார்க்கிறான்.

ஆச்சர்யம் எங்கே என்று கவனித்தால்?
அந்த கோவிலில் கர்ப்க்ரஹத்தில் இருக்கும்,
அழகான உருவம் கூட இல்லாத,
பார்ப்பதற்கு, நிமிர்த்தி வைத்த அம்மி கல் போன்ற கல்லை,
"சிவன்" என்று சொல்கிறான்.

தூணில் மிக அழகாக வடித்து வைத்து இருந்த சிவனின் சிலையை, 'சிவன் சிலை" என்று பார்த்த இந்த ஹிந்து,
இந்த லிங்க கல்லை, "தெய்வம்" என்று பார்க்கிறான்.
"சிவன்" என்று தீர்மானமாக சொல்கிறான்.

அதை விட ஆச்சர்யம், அதை "தெய்வம்" என்று நினைப்பதால், அந்த கல்லை, "சிவன்" என்று பார்த்து, தன் பிரார்த்தனைகளை செய்து வழிபடுகிறான்.

பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலே அழகு உடையவர்.
அவருடைய சிலையை, உருவத்தை பார்த்தாலே அழகாக இருக்கும்.

நாதீகனுக்கும், கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கு கூட, ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தை உருவத்தை பார்த்தால் பிடித்து போகும்.
பூரி ஜகன்நாத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் பார்க்கும் போது, நம்மை ஒரு நிமிஷம் பதற வைக்கும்.
மர கட்டையில், பெரிய முழியுடன் கை கால் விழுந்தது போன்ற நிலையில் இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.



(இது என்ன காரணம் என்று அறிய ஆவல் இருந்தால், இங்கு படிக்கவும் ... http://proudhindudharma.blogspot.in/2017/12/odisha-orissa.html?m=1)

ஆச்சர்யம் என்னவென்றால், கர்ப்க்ரஹத்தில் இருக்கும் லிங்கத்தை பார்த்து கடவுள் என்று உணருவது போல, இந்த மர சிலையை பார்த்தாலும், ஏற்படுகிறது.

கர்ப்க்ரஹத்தை விட்டு, இந்த ஹிந்துக்கள் வெளியே வந்த பிறகு, அதே போன்ற சிலையை வெளியில் காண்பித்தால், "சிலை" என்கிறான்.

ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்" என்று வழிபாடு செய்வது போல தெரியவில்லையே?


  • கடவுள் நம்மை படைத்தார்.
  • கடவுள் நம் கற்பனைக்கு, புத்திக்கு எட்டாதவர்.

இப்படி நம் வேதத்தில் சொல்லி இருக்கிறது.

எங்கும் உள்ள இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
ஆனால்,
நமக்கு, இறைவன் ஒரு இடத்தில், ஒரு உருவத்தில் தேவைப்படுகிறான்.

"எல்லாம் ப்ரம்மமயம்" என்று இருக்கும் அத்வைத "ஞானி"
கல்லை தெய்வம் என்று கும்பிடுவதில்லை.

எங்கும் அந்த கடவுள் இருக்கிறார் என்று இருந்த ஞானி யார்? என்று பார்க்கும் போது, நமக்கு தெரிபவர், "பிரகலாதன்".
பிரகலாதன், "நாராயணன் எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார்.

தன் தந்தை ஹிரண்யகசிபு பல வழிகளில் கொலை செய்ய முயற்சி செய்தும், பிரகலாதன் நாராயணனை உதவிக்கு கூப்பிடவில்லை.

ஏன்?

அனைத்துமே நாராயணன் என்று பார்த்து கொண்டிருந்த பிரகலாதன், தன் தந்தை, மலை, விஷம், தன்னை கொலை செய்ய வருபவன், தான் உட்பட அனைத்தையும் நாராயணனாகவே பார்த்தான்.
இவை எல்லாம் வேறு, நாராயணன் வேறு என்று தோன்றினால் தானே, "நாராயணா, காப்பாற்று" என்று ஒருவன் சொல்லுவான்?

இந்த நிலையில் எங்கும் கடவுளை பார்த்த பிரகலாதன், விஷம் குடிக்க சொன்னாலும், அதுவும் நாராயணனே என்று விஷத்தை குடித்தான்.  

ஒன்றும் ஆகவில்லை என்றதும் ஹிரண்யகசிபு குழம்பினான்.
ஆனால் பிரகலாதன், 'தான் பிழைத்தற்கு நன்றி' என்று கூட நாராயணனுக்கு சொல்லவில்லை.
தான் பிழைத்தது பற்றி ஆச்சர்யப்பட கூட இல்லை.

இப்படிப்பட்ட ஞானிக்கு, சிலை வழிபாடு தேவை இல்லை.

எப்படி சிலை வழிபாடு தோன்றியது?
ஏன் கர்ப்க்ரஹத்தில் இருக்கும் கல்லை "தெய்வம்" என்று சொல்கிறான்?  
 அதே கல்லை கோவிலில் கோபுரத்தில் பார்த்தால் "சிலை" என்கிறான். என்ன ரகசியம் இது?



இதற்கு பதிலையும், பிரகலாதன் வாழ்க்கையிலேயே கண்டு பிடித்து விடலாம்.

தூணில் உள்ள தெய்வ சிலை தெய்வமில்லை, ஆனால் கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை "தெய்வம்" என்று எப்படி ஆனது

ஹிரண்யகசிபு, தன் மகனை பார்த்து, "அந்த நாராயணன் எங்கடா இருக்கிறான்?" என்று ஆத்திரத்தோடு கேட்கிறான்.

எங்கும் நாராயணனை பார்க்கும் பிரகலாதனுக்கோ, இவன் கேட்கும் கேள்விக்கு, "இங்கு தான் உள்ளார்" என்று ஒரு இடத்தை பார்த்து சொல்ல முடியவில்லை.
அதனால், "நாராயணன் எங்கும் உள்ளார்." என்றார்.

தெய்வம் எங்கும் உள்ளார் என்று புரிந்து கொள்ள முடியாத ஹிரண்யகசிபு,
"ஏதாவது ஒரு இடத்தை காட்டி இங்கு உள்ளார் என்று சொல் அவனை கொன்று விடுகிறேன்" என்கிறான்.

எங்கும் நாரராயணனை பார்க்கும், பிரகலாதனால், எந்த இடத்தை காட்டி சொல்ல முடியும்?

இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான் என்று ஹிரண்யகசிபு, தானே, கல் மண் கொண்டு கட்டிய தூணை பார்த்து, "இதில் இல்லையா உன் நாராயணன்?" என்றான்.

இந்த கேள்வி பதில் சொல்ல எளிதாக இருந்தது பிரகலாதனுக்கு.

"எங்கும் நாராயணனே இருக்கிறார் என்கிற பொழுது, இந்த தூணிலும் இருக்கிறாரே. உங்களுக்கு தெரியவில்லையா?" என்றான் பிரகலாதன்.

நான் கட்டிய கல் தூணில், என் மாளிகையில் உள்ள இந்த தூணில், நாராயணன் இருக்கிறானா? என்றான்.

பிரகலாதனுக்கு "நாராயணன் தூணுக்குள் தெரியவில்லை, தூணும் நாராயணனாக தான் தெரிந்தது".

அதனால், பிரகலாதன், "இதோ இருக்கிறாரே" என்றான்.

ஹிரண்யகசிபு, தூணுக்கு உள்ளே நாராயணன் இருக்கிறான் போல, அதை தான் தன் மகன் பார்க்கிறான் போல என்று நினைத்து,  
இந்த தூணை உடைத்து, உள்ளே இருக்கும் நாராயணனை பிடித்து கொன்று விடுவோம் என்று நினைத்தான்.

தன் கையாலேயே, தான் கட்டிய கல்தூணை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
இடி விழுந்தது போன்ற சத்தத்தில், தூண் இரண்டாக பிளக்க, கல் தூணில் இருந்து, படு பயங்கர உக்கிர மூர்த்தியாக, சிங்க முகத்தில், மனித உடம்பை கொண்டு, "நரசிங்கமாக" வெளி வந்தார் 'நாராயணன்'.

கல் எப்படி தெய்வம் ஆகிறது?
இப்பொழுது புரிந்து இருக்கும்.

பார்க்கும் கல்லை எல்லாம், ஹிந்துக்கள் தெய்வம் என்று கும்பிடுவதில்லை.  
அந்த தெய்வ பிம்பத்திற்கு மரியாதை தான் செய்கின்றனர்.

சில கல் மட்டும், தெய்வம் ஆகிறது.
 
கல் தெய்வம் ஆனது ஏன்?

பிரகலாதன் போன்ற ஞானியும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும், பக்தர்களும், ஏதோ ஒரு சமயத்தில்
ஒரு கல்லையோ, மரத்தையோ, மலையையோ தெய்வம் என்று பூஜித்து, அதில் தெய்வம் வெளிப்பட்டு அவர்களுக்கு அணுகிரஹம் பெறுகிறார்கள்.



பாரத மண்ணில் மட்டும் தான் ஞானிகள் மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகின்றனர்.

இவர்களால் பூஜிக்கப்பட்ட கல் சிலையில், தெய்வங்கள் காட்சி கொடுக்க, இரக்க குணம் கொண்ட நம் ரிஷிகள், ஞானிகள், யோகிகள், அந்த தெய்வத்திடம், தான் மறைந்தாலும், இந்த கல்லில், மரத்தில், மலையில் சாந்நித்யதோடு இருக்குமாறு வரம் வாங்கி விடுகின்றனர்.

இங்கு வந்து பிரார்த்திக்கும் சாதாரண ஜனங்களுக்கும், இது கல் என்று தோன்றாமல், தெய்வம் என்று மனதில் எண்ணம் உருவாக்கி, அவர்கள் குறைகள் யாவையும் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்து, வரமாக வாங்கி விடுகின்றனர்.

"சாதாரண ஜனங்கள், உன்னை போன்ற நம்பிக்கை இல்லாதவன் ஆயிற்றே. ஒழுக்கம் இல்லாதவன் கூட என்னிடம் வந்து நிற்பானே
என்று நாராயணன் கேட்டால்,
"தனக்காக இந்த சாதாரண ஜனங்கள் செய்யும் பிழை, பாவத்தை பொறுத்து கொண்டு, அணுகிரஹம் மட்டுமே செய்ய வேண்டும்"
என்று தங்கள் பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு கோவிலுக்கு சென்று, அந்த மூல விக்ரஹ சிலை யாரால் அமைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டால், யாரோ ஒரு ரிஷியோஞானியோ, யோகியோ, மகானோ, பக்தனோ ஏதோ ஒரு அணுகிரஹத்தால் அமைத்து இருப்பார் 
அவரின் பிரார்த்தனை பொறுத்து, அந்த கோவில் தெய்வங்கள் அணுகிரஹம் செய்கிறது.

அதனால் தான்,

  • இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், குழந்தை பிறக்கும்.
  • இந்த சிவன் கோவிலுக்கு போனால், கணவன் மனைவி சண்டை தீர்ந்து, அன்பு வளரும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் மோக்ஷம் கிடைக்கும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் செல்வம் கிடைக்கும்.

என்று ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பலன் சொல்கின்றனர்.

ஒரே சிவன் தான்.
ஏன் இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், இந்த பலன்?
அந்த சிவன் கோவிலுக்கு சென்றால் உன்னொரு பலன்? என்று வித்யாசம் சொல்கின்றனர்?
சிவனுக்கு ஏன் ஒரே கோவிலில் அணைத்து பலனையும் கொடுக்க சக்தி இல்லையா?

இதற்கு காரணமும் இப்பொழுது புரிந்து இருக்கும்.
ஏன் திருப்பதியில் மட்டும் இத்தனை கூட்டம்

ஒரு கல்லில் தன்னை வெளிப்படுத்தி, ஏதோ ஒரு பக்தனுக்காக வருகிறார் பெருமாள்.
அந்த பக்தன் கேட்ட வரத்திற்கு ஏற்ப அந்தந்த கோவிலில் அணுகிரஹம் செய்கிறார்.

ஆனால், திருப்பதி பெருமாள் மட்டும், எந்த பக்தனுக்காகவும் வந்தவர் இல்லை.
தானே இஷ்டப்பட்டு, சிலையாக வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்தவர்.
இந்த காரணத்தால், திருப்பதி பெருமாளுக்கு மட்டும், வரும் பக்தனுக்கு கருணை செய்ய தடையே இல்லை.
அனைத்து பலனையும் தானே தருகிறார்.
வேண்டுவதெல்லாம் பலிக்கிறது.

இதனால் தான் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் கூட்டம் அலை மோதுகிறது.

கல் கடவுள் இல்லை. ஆனால், கடவுள் ஒரு பக்தனுக்காக வருகிறான்.
அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறான்.

நம் வீட்டில் உள்ள, சிறு கிருஷ்ண விக்ரஹத்தையும், சிறு சிவ லிங்கத்தையும் கூட, அந்த பிரகலாதன் போன்று பக்தி செய்தால், நம் வீட்டில் உள்ள குட்டி சிலையிலும் பகவான் தன் சாந்நித்யத்தை வெளி காட்டுவார்.



நம்மிடம் பேசும் அளவிற்கு பக்தி செய்ய முடிந்தால், ஞானிகள் போன்று, உலகத்திற்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம்,
நம் குடும்பத்தில் பிறக்கும் தலைமுறைகள் நோய் இல்லாமல், சிறப்போடு, பக்தியுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து, பகவானிடம் நம் பக்தியால் வரம் வாங்கி கொடுத்து விடலாம்.

கோவிலில் கர்ப்கிரஹ சிலையில் தெய்வம் இருக்க செய்த ஞானிக்கு, ரிஷிக்கு, மகானுக்கு, பக்தனுக்கு நாம் என்ன பதில் செய்ய முடியும்?

இவர்கள் நமக்காக கடவுளை பக்தியால் ஒரு கல்லில் கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால்,
வானத்தை பார்த்து, "கடவுளே, கடவுளே எங்கு இருக்கிறாய்?" என்று ஹிரண்யகசிபு போல கத்தி கொண்டு இருந்து இருப்போம்.

தெய்வ அணுகிரஹம், ஒரு ஞானியின் சிபாரிசு மூலம் நமக்கு கோவிலில் கிடைத்து விடுகிறது.

தெய்வ அனுக்கிரகம் நாமே சம்பாதிக்க, நமக்கோ தெய்வ பக்தி இல்லை.  

தெய்வ அணுகிரஹம் இல்லாமல் போனால், செய்யும் பாவங்கள் எறிக்கொண்டே போகும்.
செய்த புண்ணியத்துக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.
தெய்வ அணுகிரஹத்தால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது எத்தனை முக்கியம் என்று இப்பொழுது புரிந்து இருக்கும்.
யாரோ ஒரு ஞானி, நமக்காக தெய்வத்தை தன் பக்தியால் கட்டி போட்டு இருக்கிறார்.

நாம் போய், பிரார்த்தனை செய்வது ஒன்றே போதுமானது. தெய்வம் வேறு வழி இல்லாமல் அணுகிரஹிக்கும்.

பலன் அடைந்தால், "நன்றி" அந்த தெய்வத்துக்கு சொல்கிறோமோ இல்லையோ,  
அந்த தெய்வத்தை நிறுத்திய அந்த ஞானிக்கோ, மகானுக்கோ நாம் செய்ய வேண்டும்.

"நன்றி உள்ள மனிதன்", ஞானிகளையோ, மகான்களையோ, யோகிகளையோ, பக்தனையோ மறக்க மாட்டான்.
தெய்வத்தை நமக்கும் அணுகிரஹம் செய்ய வைத்த, அந்த மகானே நமக்கு குரு.

வாழ்க ஹிந்து

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhyavandanam - Morning Prayer (With meaning)

Sandhyavandanam - Afternoon Prayer (With meaning)




Sandhyavandanam - Evening Prayer (with meaning)