Followers

Search Here...

Monday 2 October 2017

பிரச்சனை வந்தாலும், உன் கடமையை செய்து கொண்டே இரு

ஆதி சங்கரர் சொல்கிறார், 'பிரச்சனைகள் இல்லாதவர்களே உலகில் கிடையாது. அதனால், பிரச்சனை வந்து விட்டதே என்று உன் காரியத்தை விட்டு விட கூடாது. எந்த பிரச்சனை வந்தாலும், நீ உன் கடமையை செய்து கொண்டே இருக்க வேண்டும். கடமையை செய்து கொண்டே, நீ பகவானையும் பிரார்த்தனை செய்' என்கிறார்.



பகவத் கீதையில், ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனை பார்த்து, "தஸ்மாத் சர்வேஷு காலேஷு மாம் அனுஸ்மர யுத்ய ச" (chapter 8, 7th Sloka) என்று சொல்லும் போது இதையே சொல்கிறார். பிரச்சனை, மனகுழப்பம் இருந்தாலும், நீ உன் கடமையை செய் என்று 'யுத்ய ச' என்று சொல்லி, பகவானான என்னையும் நினைத்துக்கொள் என்று 'மாம் அனுஸ்மர' என்று சேர்த்து சொல்கிறார்.


கவலைகள், பிரச்சனை, மனகுழப்பம் உள்ள யாவருக்கும் தேவையான உபதேசம் இது.

"தளர்ந்து விடாமல், கடமையையும் செய்து, அதே வேளை பகவானையும் பிரார்த்தனை செய்" என்கிறார் ஆதி சங்கரர்.

"பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், சும்மா இருந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், நான் என் கடமையை செய்கிறேன் என்று மட்டும் இருந்து, பகவானை பிரார்த்தனை செய்யாமல் இருந்தும் விடாதே. உன் செயலுக்கு பலன் கொடுப்பவர் அவர் என்று மறந்து விடாதே.
பிரச்சனை காலத்தில், கடமை செய்யாமல், பகவான் காப்பாற்றுவார் என்றும் சும்மா இருந்தும் விடாதே.

நான் என்னுடைய கடமையை செய்கிறேன், அதனோடு பகவானே உன் அனுகிரகத்தையும் எதிர்பார்க்கிறேன் என்று இருக்க வேண்டும்" என்று நமக்கு சொல்லித் தருகிறார் ஆதி சங்கரர்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "மாம் அனுஸ்மர யுத்ய ச" என்று தெளிவாக சொல்கிறார், "பிரச்சனை காலத்தில், துவண்டு விடாமல், என்னை பிரார்த்தித்து கொண்டே, கடமையை செய்" என்கிறார்.

Saturday 30 September 2017

வாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி? எளிதான குறிப்புகள்

வாழ்க்கையில் நன்மைகள் அமைய என்ன வழி?



அக்ருத்வா பரஸந்தாபம்
(மற்றவர்களுக்கு உன்னால் துன்பம் ஏற்படாமல் பார்த்துக்கொள்)

அகத்வா கலனம்ரதாம்
(தீயவன் - குடி, மது, மாது, திருட்டு, பொய்,ஒழுக்கம் இல்லாதவன் என்று தெரிந்தால், விலகியே இரு)

அனுத்ஸ்ருஜ்ய ஸதாம் மார்கம்
(மகான்கள் வழியில் நீயும் செல்ல ஆசைப்படு. 
இந்த பாரத தேசத்தில் மட்டுமே மகான்கள் அதிகம் அவதரித்துள்ளனர், அவதரித்து கொண்டே இருக்கின்றனர். 
ரிஷிகள், முனிகள், வால்மீகி, வியாசர், ராமானுஜர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மீரா, துளசி தாஸ், சூரதாஸ், சொல்லி கொண்டே போகலாம். 
நம் பாட்டனார்கள் கூட சாதுக்களாகவும் மகான்களாகவும் இருந்துள்ளனர்)


யத் ஸ்வல்பம் அபி தத்பஹு
(இந்த மூன்று அறிவுரைகளை முடிந்தவரை சிறிதேனும் நம் வாழ்க்கையில் கடைபிடித்தாலும் அது நன்மை தரும்)




அக்ருத்வா பரஸந்தாபம்
அகத்வா கலனம்ரதாம்
அனுத்ஸ்ருஜ்ய ஸதாம் மார்கம்
யத் ஸ்வல்பம் அபி தத்பஹு

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka