Followers

Search Here...

Saturday 3 February 2018

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

உண்மையான சகோதரன் யார் என்பதை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம்? என்ற கேள்விக்கு, சாஸ்திரம் என்ன பதில் சொல்கிறது.

விபீஷணன், ஸ்ரீராமரிடம் சரணாகதி என்று வந்த சமயத்தில், அனைவரும் "இவனை சேர்த்து கொள்ள கூடாது" என்று பல காரணங்கள் ஸ்ரீராமரிடம் கூறினர்.

சுக்ரீவன், "சொந்த அண்ணனை போர் வந்து விடும் என்ற நிலையில், விட்டு விட்டு, நம்மிடம் வருகிறான் என்பதே சந்தேகத்துக்கு வழி வகுக்கிறது" என்றும் சொன்னான்.


ஸ்ரீ ராமர் புன்சிரிப்புடன், லக்ஷ்மணரை பார்த்து கொண்டே, "எல்லோரும் பரதனை போல சகோதரன் ஆகி விட முடியுமா?" என்று சொல்லி,

தான் பகவான் என்று சொல்வதை விட, தசரதன் மைந்தன் என்று சொல்லி கொள்ளவே ஆசைப்பட்ட ஸ்ரீராமர், தன்னை பற்றி பொதுவாக, உயர்த்தி எங்கும் பேசிக்கொள்ள ஆசைப்படாதவர், சுக்ரீவனை பார்த்து,
"ஒரு தகப்பனுக்கு என்னை போல மகன் கிடைத்து விடுவானா?" என்று பெருமிதமாக சொன்னார்.

ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பக்கத்தில் வைத்து கொண்டே, "பரதனை போல ஒரு சகோதரன் உண்டா ?" என்று உயர்த்துகிறார்.

அண்ணனுக்காக, 14 வருடமும் தூங்காமல்,
அண்ணனுக்காக 14 வருடமும் தன் மனைவி, தன் தாயை விட்டு, ஸ்ரீராமருக்கு சேவையே லட்சியம் என்று வந்த லக்ஷ்மணனை அருகில் நிற்க வைத்துக்கொண்டே, ஸ்ரீ ராமர், இப்படி சொன்னார் என்று நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது.

லக்ஷ்மணர் முகமும் இதனால் சுருங்கவில்லை. லக்ஷ்மணர் அமோதித்தது புரிகிறது.

லக்ஷ்மணரை விட பரதனே சிறந்த   சகோதரன் என்ற ஸ்ரீ ராமரே சொல்லி விட்டார்.
அது மட்டுமில்லை, தனக்கு கிடைத்த பரதனை போன்ற சகோதரன் யாருக்கும் கிடைக்கவில்லை என்றார்.

ஸ்ரீ ராமர், வேதங்களை, சாஸ்திரங்களை அறிந்தவர். அவர் பேசும் ஒவ்வொரு சொல்லும்,  வேத சாஸ்திரமானது.

உண்மையான சகோதரனை எந்த சமயத்தில் தெரிந்து கொள்ளலாம் என்ற கேள்விக்கு, சாஸ்திரம் பதில் சொல்கிறது.
"சொத்து விவகாரங்கள் நடக்கும் போது, உண்மையான சகோதரன் யார் என்பதை தெரிந்து கொள்ளலாம்" என்கிறது சாஸ்திரம்.

"அண்ணனோ, தம்பியோ, சகோதரியோ, சொத்து விவகாரம் என்ற பேச்சு ஏற்பட்டவுடன் அதை பற்றியே பேசாமல், முடிந்தவரை பேச விரும்பாமல், அது தன் சகோதரனுக்கு போனாலும் போகட்டும் என்று அதை பற்றி விவாதம் செய்ய கூட விரும்பாமல், விலகி நிற்கிறானோ, அவனே உண்மையான சகோதரன்", என்கிறது சாஸ்திரம்.

14 வருடம் தான் காட்டிற்கு செல்ல வேண்டும் என்ற நிலையில், ஸ்ரீராமரே மகிழ்ச்சியுடன், பரதன் 14 வருடம் அயோத்தியை ஆளட்டும் என்று ஸ்ரீராமர் சொல்லியும், சொத்து அனைத்தையும் தம்பி பரதனுக்கு கொடுத்தும், யாரும் எதிர்க்காத நிலையிலும், சொத்து வேண்டாம் என்று சொல்லி விட்டார் பரதன்.

சொத்து பகை என்ற சமயத்தில், தனக்கு கிடைத்த சொத்து வேண்டாம், என்று இருந்த பரதன், சாஸ்திரப்படி உண்மையான சகோதரன் என்று ஆகிறார்.

பொதுவாக, சொத்து சண்டையால், சகோதரர்கள் சந்தியில் (வீதியில்) நிற்கிறார்கள் என்று சொல்வதுண்டு.

ஆனால், ஸ்ரீ ராமாயணத்தில், சொத்து சண்டையால், சகோதரர்கள் (ஸ்ரீராமரும், பரதனும்) சேர்ந்து இருக்க, சொத்து வீதியில் நின்றது.

இதையும் காரணமாக கொண்டு, ஸ்ரீராமர், "அனைவருக்கும் என்னுடைய பரதனை போல சகோதரன் கிடைத்து விடுவானா?" என்கிறார்.

தசரதர் பரலோகம் சென்ற பின்னர், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணரை பார்த்து ஒரு சமயம்,
"அப்பா இல்லாத குறையே இல்லாமல், நீயே எனக்கு அப்பாவாக இருக்கிறாய். நீ என்னை நம் அப்பா பார்த்து கொள்வது போல, எனக்காக உன்னை வருத்தி கொண்டாலும், அதை பொருட்படுத்தாமல், என்னை உன் குழந்தை போல பாதுகாக்கிறாய்" என்றார்.

ஹனுமான், சீதையை அசோகவனத்தில் பார்க்கும் போது, சீதையும் அதே போல, "தன் கணவனுக்கு அப்பாவாக இருந்து வரும் லக்ஷ்மணனையும் விஜாரித்ததாக சொல்லுங்கள்" என்றாள்.

இதன் மூலம், ஸ்ரீ ராமர், லக்ஷ்மணனை தன் தந்தை ஸ்தானத்தில் வைத்து இருந்தார் என்று தெரிகிறது.

கடைசியாக, சிறந்த மகன் யார் என்று ஸ்ரீராமர் தியானிக்கும் பொழுது, வேறு வழியே இல்லாமல், தான் மட்டுமே சிறந்த பிள்ளை என்ற சத்தியத்தினால்,
"என்னை போல ஒரு மகன், ஒரு தகப்பனுக்கு கிடைத்து விடுவானா?"
என்றார் ஸ்ரீராமர்.

தசரதர் கைகேயிக்கு 2 வரங்களை கொடுத்தார்.
அந்த வரத்தை பயன்படுத்தி, சத்தியத்தை (சொன்ன வாக்கை) மீறாத தசரதரிடம், 14 வருடம் ஸ்ரீ ராமர் வனவாசம், பரதன் அயோத்தி ஆள வேண்டும் என்று கேட்டு விட்டாள்.

தசரதர் உயிரே போனாலும், சத்தியத்தை மீற கூடாது என்ற கொள்கை உடையவர்.

இந்த 2 வரங்களை பற்றி ஸ்ரீ ராமரிடம் சொல்லி, தான் சத்தியத்தை மீற முடியாது, என்பதால், "நீ என்னை சிறையில் தள்ளியாவது, அயோத்தி அரசனாக பட்டம் சூட்டிக்கொள்." என்றார்.

தசரதர் உயிர் மூச்சாக "சத்யம்" என்ற தர்மத்தை, அவர் காலம் முழுவதும் கடைபிடித்தார். சொன்ன சொல் தவற மாட்டார்.

தசரதர் அவர் மனைவிக்கு செய்த சத்தியத்துக்கு, தான் 14 வருடம் காட்டுக்கு போக அவசியமே இல்லை. எளிதாக மறுத்து விடலாம்.
தசரதர் சொன்னது போல, அவரையே சிறையில் தள்ளி, தானே மகுடம் சூட்டி கொள்ளலாம்.

இப்படி எந்த வழியும் தேவையில்லை. தான் 14 வருடம் காட்டுக்கு போவதால், தன் தந்தையின் தர்மம் காக்க படுமானால், தான் எதற்கும் தயார் என்றார் ஸ்ரீ ராமர்.

இப்படி தன் தந்தையின் தர்மத்துக்கு களங்கம் ஏற்பட கூடாது என்று, எதையும் தியாகம் செய்வேன் என்று வந்த ஸ்ரீ ராமர், யார் சிறந்த புதல்வன் என்ற கேள்விக்கு, வேறு யாரும் தனக்கு நிகராக இல்லாததால், தன்னையே காட்டிக்கொண்டார்.

இப்படி தன் தர்மம் காக்கப்பட, மகனான ஸ்ரீராமர் காட்டுக்கு செல்ல, அப்படிப்பட்ட உன்னதமான மகனை இழந்த தசரதர் உயிர் வாழ முடியாமல், பரலோகம் சென்று விட்டார்.

பொதுவாக பேச்சுக்கு தன் பிள்ளையை, "கண்ணே, மணியே" என்று பெற்றோர் சொல்வதுண்டு.

ஸ்ரீ ராமரை பிரிந்தவுடன், தசரதர் உண்மையிலேயே "கண் பார்வை இழந்து விட்டார்". பிரிவு தாங்காமல், உயிரையும் விட்டு விட்டார். 

Monday 29 January 2018

"ஓம் நமோ நாராயணாய" என்ற சொல்லின் அர்த்தம் என்ன? - ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?...

ஓம் என்ற பிரணவம், ஜீவாத்மாவுக்கு, பரமாத்மாவின் உறவை மட்டும் காட்டுகிறது.




ஆனால், யார் அந்த பரமாத்மா? என்று ஓம் என்ற பிரணவம் பெயரிட்டு சொல்லவில்லை.

ஓம் என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள்
Click_Here

இதனால், பிரணவம் குறிப்பிடும் "அந்த பரமாத்மாவை" பக்தனாக இருப்பவன், தன் இஷ்ட தெய்வங்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான்.

இது பக்தியின் லக்ஷணம் என்று தான் எடுத்து கொள்ள வேண்டும்.

"உண்மையில் யார் அந்த பகவான்? யார் அந்த பரமாத்மா? யார் அந்த புருஷன்?"

"ஹரி: ஓம்" என்றும், "லக்ஷ்மியின் கணவன்" என்ற புருஷ சூக்தத்தில் வேதம் அந்த பரமாத்மா, "நாராயணனே" என்று முடிவாக சொல்கிறது.
புருஷன் யார்? பகவான் யார்? என்ற கேள்விக்கு வேதமே பதில் சொல்கிறது. மேலும் படியுங்கள் Click Here


பரமாத்மா/கடவுள் என்று மட்டும் சொன்னால், நமக்கு பக்தி (அன்பு) செய்ய முடியாது. கடவுள் மேல் பயம் வேண்டுமானால் இருக்கும்.

ஓம் என்ற பிரணவம் "பரமாத்மாவுக்கும், நமக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறது".
ஆனால் "இவர் தான் பரமாத்மா, இவைகள் தான் இவருடைய தெய்வீக குணங்கள்" என்று காட்டாததால், நமக்கு பக்தி செய்ய வாய்ப்பு இல்லாமல் போகிறது.




பக்தி இல்லாத ஞானம் தருவதால், பிரணவத்தை மட்டும் சொல்லி மோக்ஷம் அடைபவர்கள், "ஞானியாக" இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

"ஓம்" என்ற பிரணவத்தை புரிந்து கொண்டாலும், சாதாரண மக்களால், பிரணவத்தை மட்டும் சொல்லி "மோக்ஷம்" அடையும் பக்குவம் இருக்காது.

"ஏதோ ஒரு பரமாத்மா நம்மை படைத்து இருக்கிறார்" என்ற அறிவு வேண்டுமானால் வரலாம்.
அதிக பட்சம் "கைவல்யம்" என்ற மோக்ஷம் கூட அடையலாம்.
ஆனால், அந்த பரமாத்மாவை எளிதில் அடைய முடியாது.

"பக்தி கலந்த, பிரணவம்" அனைவருக்கும் மோக்ஷ வாசலை திறந்து விடுகிறது.
இந்த வைகுண்ட வாசலின் சாவியை வைத்து கொண்டிருக்கும், ஸ்ரீனிவாச பெருமாளே நமக்கு பிரணவத்துடன் சேர்த்து, திருஅஷ்டாக்ஷர மந்திரமாக கொடுத்து விட்டார்.
ஸ்ரீனிவாச பெருமாளே, தொண்டைமான் சக்கரவர்த்திக்கு, அந்த பரமாத்மா "நானே" என்று திருஅஷ்டாக்ஷர மந்திரத்தை உபதேசித்தார்.

"ஓம் நமோ நாராயணா" என்ற இந்த மந்திரத்தில்,

"ஓம்" என்ற பிரணவத்தின் விளக்கம் தெரிந்து கொள்ள, படியுங்கள் Click_Here
இனி,
"நமோ நாராயணா" என்பதின் விளக்கத்தை கவனிப்போம்.

2. நமோ
நம: என்ற சமஸ்கிருத சொல்லையே, தமிழில் "நமோ" என்கிறோம்.
a)
'ம' என்ற சொல், "மம"காரத்தை குறிக்கும்.
தமிழில் "நான்" "எனது" என்ற அகம்பாவத்தை குறிக்கும்.
b)
'ந' என்ற சொல், "இல்லை" என்பதை குறிக்கும்.
ஆக,
"நமோ" என்று சொல்லும் போது, "நான் (ஜீவாத்மா) செய்கிறேன், இது என்னுடைய (ஜீவாத்மாவின்) திறமையால் கிடைத்தது என்ற அகம்பாவத்தை விட்டு, நான் (ஜீவாத்மா) செய்யவில்லை"
என்று உணர்த்துவதே இந்த "நம:" என்ற சப்தத்தின் பொருள்.



மோக்ஷமே கிடைத்தாலும்,
துக்கமே வந்தாலும்,
சுகமே வந்தாலும்,
என்ன நடந்தாலும்,
"அது அந்த பரமாத்வாவின் இஷ்டம்"
என்று இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதே "நமோ" என்ற சொல்லின் அர்த்தம்.
இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.

திருப்பதி சென்று, ஸ்ரீனிவாசனை தரிசனம் செய்தாலும்,
அவரிடம் பக்தி செய்யவும், அவருக்கு சேவை செய்யவும் ஆசை வர வேண்டுமே தவிர,
"அவரிடம் இது வேண்டும், அது வேண்டும்" 
என்று கேட்க கூடாது. இதுவே வைஷ்ணவனின் லக்ஷணம்.

"நாம் கேட்காமலேயே நம் தேவை அறிந்து அவரே தருவார்" என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.

"அவரை பார்க்க வேண்டும்" என்ற ஆசை தான் முக்கியம்.
அவருடைய இஷ்டத்துக்கு நம்மை காப்பாற்ற விட வேண்டும்.

"நமக்கு எஜமானன் அவர்" என்ற உண்மையை உணர்ந்து,
"எப்பொழுதும் நம்மை காப்பாற்றுகிறார்" என்ற உண்மையை உணர்ந்து, எப்பொழுதும் சந்தோஷமாக வாழ வேண்டும்.

இடையூறுகள் வந்தாலும், எப்படி ஸ்ரீனிவாச பெருமாள் நம்மை காப்பாற்ற போகிறார்!! என்ற ஆச்சர்யத்துடன், ஆவலுடன், அவர் எப்படி காப்பாற்றுகிறார் என்று பார்க்கிறேன்? என்று வெளி மனிதன் போல பார்க்க வேண்டும்.

"துக்கங்கள் யாவும் அவர் பார்த்து கொள்வார்" என்ற புத்தியுடன், "சேவை செய்வதே நம் கடமை" என்று, "நான்" என்ற எண்ணம் இல்லாமல், சந்தோஷமாக இருக்க வேண்டும்.

"என்னுடைய எஜமானன் (பரமாத்மா) என்னை படைத்து இதுவரை காப்பாற்றி கொண்டு இருக்கும் பொழுது, நான் தனியாக முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை" என்ற நிலையை உணர்த்தவே, "நமோ" என்று சொல்கிறோம்.

3. நாராயணாய
ஓம் என்ற பிரணவத்தில் அந்த பரமாத்மாவை சேர்ந்தவன் ஜீவாத்மா என்று உறவை உணர்த்துகிறது.
யார் அந்த பரமாத்மா? என்ற கேள்விக்கு, "நரனாக (மனிதர்களாக) பிறப்பு எடுத்த அனைத்து ஜீவாத்மாக்களுக்கும் கதியாக இருப்பவனே நாராயணன். அந்த நாராயணனே பரமாத்மா" என்று "நாராயணா" என்ற சப்தம் நமக்கு வழி காட்டுகிறது.

"நாராயணாய" என்று சொல்லும் போது, "ஆய" என்ற சப்தம், *நாராயணன் "ஒருவனே" பகவான், வேறு யாரும் பகவான் இல்லை, மற்ற தேவதைகள் யாவும் இவர் அங்கங்களே" என்று உறுதி செய்கிறது.
திட விசுவாசம், ஏக பக்தியே மோக்ஷத்திற்கு வழி.

நாராயணனே
என்ற தமிழ் சொல், சம்ஸ்கிருத சொல்லான நாராயணாய என்ற சொல்லுக்கு ஈடாக உள்ளது.

இப்படி, திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை உணர்ந்து சொல்ல, அந்த நாராயணன் பிறவி கடலில் இருந்து நம்மை கை தூக்கி, பரமபதம் என்ற தன் வைகுண்டத்தை கொடுத்து நித்யமாக வாழ வைக்கிறான்.

ஓம் நமோ நாராயணாய.

"ஓம்" என்ற பிரணவத்தை யார் வேண்டுமானாலும் சொல்ல முடியாது.



பிரணவத்தை தகுந்த குருவை கொண்டு உபதேசம் பெற்று,
அதற்குரிய காலத்தில்,
அதற்குரிய நியமத்துடன் சொல்ல வேண்டும்.
உண்மையான ஞானத்த்துடன் சொல்ல வேண்டும்.
உணவிலும், பழக்கத்திலும் ஒழுக்கம் தேவை.

இப்படி பல நியமங்கள் கொண்ட பிரணவ மந்திரம், தன்னை தானே சுலபமாக்கி கொண்டு, "ராம" என்ற மற்றொரு பிரணவ மந்திரமாக தன்னை வெளிப்படுத்தியது.

ராம நாமத்தை யாரும் சொல்லலாம்.
ராம நாமத்தை எங்கும் சொல்லலாம்.
ராம நாமத்தை குண சீலனும், குணம் கெட்டவனும் சொல்லலாம்.
ராம நாமத்தை சனாதன தர்மத்தில் உள்ளவனும் சொல்லலாம்,
ராம நாமத்தை மற்ற பொய் மதங்களில் விழுந்து தடம் மாறியவனும் சொல்லலாம்.
ஆஞ்சநேயர் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
சிவபெருமான் காசியில் அனுதினமும் சொல்வது "ராம" மந்திரமே.
வால்மீகியை ராமாயண காவியம் எழுதும் முன், அவருக்கு ஞானத்தை கொடுத்ததும், "ராம" நாம மந்திரமே.
ஞானம் அடைந்த வால்மீகியை, ப்ரம்ம தேவன் காண வந்து, அந்த ராம நாமத்திற்கு சொந்தக்காரரான பரவாசுதேவன், ஸ்ரீ ராமராக அவதரிக்க போவதை சொல்லி, ஸ்ரீ ராமாயணம் எழுத சொன்னார்.
ஸ்ரீ ராமரை அவதரிக்க செய்ததும், ராம நாமமே.



பிரணவ (தாரக) மந்திரமான "ராம" நாமத்தை சொல்ல சொல்ல, பரவாசுதேவனை அறியும் ஞானம் கிடைக்கும்.
உலக சுகங்கள் யாவும் தானாக வந்து சேரும்.

தாரக மந்திரம் என்ற "ராம" நாமத்தை, யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்.

"தாரகம்" என்றால் "கடப்பது" என்று பொருள்.
ராம நாமத்தை சொல்பவன், பிறவி என்ற கடலை கடந்து விடுகிறான். வைகுண்டம் அடைகிறான். பரமாத்மாவை அடைகிறான்.

ஓம் என்ற தாரக மந்திரம், தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே.
தன்னை சுலபமாக்கி கொண்ட "ராம" என்ற தாரக மந்திரம், அனைவருக்கும் சொந்தமானது. 

அனைவரும் எப்பொழுதும் சொல்வோம் ராம ராம ராம....

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Morning (With meaning)



Sandhya Vandanam - Evening (With meaning)

Sandhya Vandanam - Afternoon (With meaning)