Followers

Search Here...

Monday 11 June 2018

14 மனு அரசர்கள் யார்? பிரம்மாவின் வயது என்ன?

ஒரு மன்வந்தரம் என்பது 71 சதுர் யுகம் ஆகும்.
ஒரு ஸம்தி காலம் என்பது 17,28,000 வருடங்கள் ஆகும்.




இந்த ஸம்தி காலத்தில் (அதாவது ஒரு சத்ய யுக காலம் வரை) உலகம் நீரில் மூழ்கிவிடும்.

14 மன்வந்த்ரம், மேலும் 15 ஸம்தி காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு பகல்.

அதற்கு சமமான காலம் என்பது ப்ரம்மாவின் ஒரு இரவு.
ப்ரம்மாவின் இந்த இரவில், பிரபஞ்சம் அனைத்தும் இல்லாமல் அடங்கிவிடும்.

ப்ரம்மாவின் ஒரு நாள், கல்பம் என்று அறியலாம்.




ஒவ்வொரு மன்வந்த்ரமும், ஒரு மனுவால் ஆளப்படுகிறது.

இப்பொழுது நடப்பது - 7வது மன்வந்தரமான "வைவஸ்வத" மன்வந்தரம். சூரியனுடைய மைந்தனான வைவஸ்வதர் இப்பொழுதுள்ள மனு.

1 மன்வந்த்ரம் - ஸ்வாயம்பு மனுவால் ஆளப்படுகிறது. இந்த மனு ப்ரம்மாவின் மானசீக புத்ரன். ஸ்வாயம்பு மனு வழிபடுவதற்காக, தான் ப்ரம்ம லோகத்தில் வழிபட்ட "யோக நித்திரையில் உள்ள நாராயணரை" இவருக்கு தந்தார். இந்த பெருமாளே பின்பு, ஸ்ரீ ராமர் அயோத்தியில் தன குல தெய்வமாக வழிபட்டார். பின்பு, ஸ்ரீ ராமர் விபீஷணனுக்கு கொடுத்தார். விபீஷணர் அயோத்தியிலிருந்து இலங்கை நோக்கி எடுத்து செல்லும் போது, சந்தியா வந்தனம் செய்ய காலம் வந்தவுடன் இறக்கி விட, அன்று முதல், இன்று வரை ரங்கநாதராக - ஸ்ரீ ரங்கம் என்ற ஊரில் காட்சி கொடுக்கிறார்.
2 மன்வந்த்ரம் - ஸ்வரோசிச மனுவால் ஆளப்படுகிறது.
3 மன்வந்த்ரம் - உத்தம மனுவால் ஆளப்படுகிறது.
4 மன்வந்த்ரம் - தாமஸ மனுவால் ஆளப்படுகிறது.
5 மன்வந்த்ரம் - ரைவத மனுவால் ஆளப்படுகிறது.
6 மன்வந்த்ரம் - சாக்ஷுச மனுவால் ஆளப்படுகிறது.
7 மன்வந்த்ரம் - வைவஸ்வத மனுவால் ஆளப்படுகிறது.

தற்போதைய "வைவஸ்வத" மன்வந்தரம் முடிந்தபின், வரப்போகும் ஏழு மனுக்களின் பெயர்களும் புராணங்களில் கூறப்பட்டிருக்கின்றன.

இன்றைய மன்வந்தரமான வைவஸ்வத மன்வந்தரத்தில், 27 மகாயுகங்கள் முடிந்து விட்டன.

இப்பொழுது நடப்பது, 28-வது மகாயுகம். அதில் கலியுகம் நடந்துகொண்டிருக்கிறது.

கலியுக ஏறத்தாழ 3102 BC ஆண்டில் ஆரம்பிக்கிறது.

கலியுகம் முடிய இன்னும் பல லட்சம் ஆண்டுகள் உள்ளன.
பூமியில் 4,32,000 வருடங்கள் என்பது 1 கலி யுக காலம்.


8 மன்வந்த்ரம் - ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
9 மன்வந்த்ரம் - தக்ஷ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
10 மன்வந்த்ரம் - ப்ரம்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
11 மன்வந்த்ரம் - தர்ம ஸாவர்னி  மனுவால் ஆளப்படுகிறது.
12 மன்வந்த்ரம் - ருத்ர ஸாவர்னி   மனுவால் ஆளப்படுகிறது.
13 மன்வந்த்ரம் - ரௌச்ய தேவ ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.
14 மன்வந்த்ரம் - இந்திர ஸாவர்னி மனுவால் ஆளப்படுகிறது.

பிரம்மாவின் ஆயுட்காலம் 100 பிரம்ம ஆண்டுகள்.




அந்தக் காலத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு 'பரார்த்தங்கள்' என்று புராணங்களில் சொல்லப்படுகின்றன

இன்றைய பொழுதில், ப்ரம்மாவிற்கு 50 வயது ஆகியுள்ளது.

இன்று ப்ரம்மா தன் 51வது வயதில், முதல் நாளை கொண்டாடுகிறார்.

50 வயதை கடந்துவிட்டதால், ப்ரம்மா இப்பொழுது தன் இரண்டாவது பரார்த்தத்தில் உள்ளார்.



பக்தி யோகம் என்றால் என்ன?




  • கர்ம யோகம், 
  • ஞான யோகம், 
  • பக்தி யோகம்
இவற்றில் பக்தி யோகம் அனைவராலும் கடை பிடிக்க கூடிய யோகம்.

கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை, தன் முயற்சியால் முன்னேற வேண்டியுள்ளது.
இந்த யோகங்கள் ஸாதனை வடிவமானது.
ஸாதனைக்கு மட்டும், பகவான் அவ்வளவு சுலபமாய் கிடைப்பதில்லை.

பக்தி யோகத்திலோ, 
பக்தன் பகவானிடம் பக்தி செய்கிறான்.
பகவான் பக்திக்கு வசமாகிறான்.
பகவான் பக்தனை கரையேற்றுகிறான்.
அதனாலேயே பக்தன் எதிலும் கவலை படமாட்டான்.




"என் பக்தன் நாசமாக மாட்டான்" (நமே பக்த: ப்ரணஸ்யதி) என்று பகவான் ப்ரதிக்ஞை செய்கிறான்.

தன் பக்தன் வழி தவறிப் போனால் கூட, பகவான் அவனை தடுத்து ஆட்கொண்டு, நேர் வழியில் திருப்பி விடுகிறான்.

இங்கு பக்தன் என்பவன் யார்?
பகவானிடம் பக்தி செய்பவன் பக்தன்.

கடினமான தவம் செய்து ராவணன், இரணியன் போன்றோர்கள், தேவர்களை, பிரம்மாவை, சிவனையும் வசம் செய்து வரம் பெற்றனர்.
ஆனால் அவர்களால் இந்த கடின தவத்தின் மூலம், பகவான் - நாராயணனை வசம் செய்ய முடியவில்லை.
ஹரிபக்தி இல்லாத கர்ம யோகம் (தவம், தானம், யாகம், வேதாத்யயனம்) ஞான யோகம் எதற்கும் பகவான் வசமாவதில்லை.

பக்தி என்றால் என்ன?
பகவானிடம் வைக்கும் ப்ரியம் தான் பக்தி.



Sunday 10 June 2018

திராவிட என்பது சமஸ்கரித மொழி. சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?

திராவிட என்பது சமஸ்கரித மொழி.  இதில் என்ன பெருமை?
சமஸ்கரித மொழியை பயன்படுத்துகிறோம் என்பதை தவிர, இதில் என்ன பெருமை?




1900 வரை பொதுவாக வேறு மாநிலத்தில் உள்ளவர்களிடம் இன்று english  போல சமஸ்கரிதம் பேசினார்கள்.
அனைவருக்கும் இந்த மொழி தெரிந்தற்கு காரணம், அனைவருமே வேதத்தை அடிப்படையாக கொண்டவர்கள்.  

வேதத்தில் சொன்ன முருகன் தான், சிவன் தான், பெருமாள் தான் கன்யாகுமரியில் இருந்து ஹிமாலயா வரை எங்கும் கோவிலாக அமைந்துள்ளது. 
ஸ்ரீ ரங்கமாக இருந்தாலும் சரி, சிதம்பரம் நடராஜர் ஆக இருந்தாலும் சரி.

ராமானுஜர் 12 வருடம் மேல்கோட்டையில் இருந்தார். பாரத தேசம் முழுவதும் யாத்திரை சென்றார். பொது மொழியான சமஸ்க்ரித மொழி தானே பேசினார்? 
இவர் பேசினார் என்றால், ஊர் மக்கள் அனைவரும் பொது மொழியான சமஸ்க்ரித மொழி பேசினார்கள் என்று தெரிகிறதே.

மதுரையில் பிறந்து ஸ்ரீ ராகவேந்திரர், பாரத தேசம் முழுவதும் கொடி கட்டினாரே..  

இப்படி பொது பாஷையாக சமஸ்கிருதம் இருந்ததால் தான், 
ஆதி சங்கரர் காஷ்மீர் சென்று மந்தனமிஸ்ரரிடம் வாதத்தில் ஈடுபடும் போது, "நீங்கள் எங்கு இருந்து வருகிறீர்கள்?" என்று சமஸ்கிருத மொழியில் கேட்க...
"நான் திராவிட தேசத்தில் இருந்து வருகிறேன்" என்று சமஸ்கிருத மொழியில் பேசிக்கொண்டனர். 
மலையாளத்திலா பேசினார்?

திராவிடன் என்றால் தமிழ் மொழி அல்ல..




நான் திராவிடன் என்ற சொல்லை பயன்படுத்த ஆசைப்படுபவன், சமஸ்கிருத மொழி பேசுபவன் என்பதை தவிர ஒன்றும் விசேஷமில்லை.
இது சமஸ்கரித வார்த்தை.

"திராவிடன்" என்ற சொல்லை தமிழில் சொல்ல ஆசைப்பட்டால்
"மூன்று கடல் சூழ்ந்த நிலப்பரப்பு" என்று பொருள். அவ்வளவு தான்.
இதில் கர்வபட என்ன இருக்கிறது?

இதனால் தான், சமஸ்கிருத மொழி தெரிந்த கேரளகாரன், "நான் திராவிடன்" என்று சொல்லிக்கொள்வதில் இந்த போலி தமிழனுக்கு ஏன் இப்படி கர்வம்? என்று புரியாமல் இருக்கிறான்.

நான் மூன்று கடல் சூழ்ந்த இடத்தை சேரந்தவன் (அதாவது திராவிடன்) என்பதை "திராவிடன்" என்று சமஸ்கரிதத்தில் சொன்னதால் சமஸ்கரித பற்று தெரிகிறதே ஒழிய, இதில் வேறு என்ன சாதித்ததாக பெருமை கொள்ள முடியும்?

இன்று English உள்ளது போல அனைவராலும் பேசப்பட்ட சம்ஸ்க்ரிதம் வாழ்க. 


திருடுவது தவறு. கண்ணபிரான் ஏன் வெண்ணை திருடினார்? தெரிந்து கொள்வோம்...

ஸ்ரீ கிருஷ்ண பகவான். காரணமே இல்லாமல் ஒரு காரியமும் செய்ததில்லை.
குழந்தை கிருஷ்ணன்  வெண்ணெய் திருடுவது மட்டும் காரணம் இல்லாமல் இருக்குமா?
ராம அவதாரத்தில் ஏக பத்னி வ்ரதனாகவும், கம்பீர புருஷனாகவும் வாழ்ந்து காட்டினார்.




அரசனின் சந்ததி மிக முக்கியம் என்ற காரணத்தால் அரசனுக்கு மட்டும் பல திருமணம் அனுமதிக்கப்பட்டது.
இப்படி இருந்தும், ஏக பத்னி வ்ரதனாகவே இருந்தார் ஸ்ரீ ராமர்.

அவர் அனைவரிடமும் பேதம் இல்லாமல் அன்புடன் பழகுவார் என்றாலும், அவரை பார்த்தாலே அவர் கம்பீரம் அவரை நெருங்க விடாமல் தடுக்குமாம்.

ராமர், ஹனுமானின் பக்திக்கு ஈடு இல்லை என்று சொல்லி ஆலிங்கனம் செய்து கொள்கிறார்.


ஸ்ரீ ராமர் இத்தனை சுலபமாக இருந்தாலும், ஹனுமான் ஸ்ரீ ராமரின் கம்பீர தோற்றத்தை பார்த்து நெருங்க முடியாமல், அவர் அருகில் நெருங்கி கை கூப்பி நிற்கிறார். சகஜமாக பேச முடிவதில்லை.
ஹனுமனுக்கே இப்படி நிலை என்றால், எத்தனை ரிஷிகளுக்கு, ஸ்ரீ ராமர் 'பகவான்' என்று தெரிந்தும் பழக முடியாத படி, இவர் கம்பீரமாக உள்ளாரே என்று நினைத்து இருப்பார்கள்?
கம்பீரத்தை காட்டினால், பக்தன் தன்னை நெருங்க கூசுகிறான், என்பதால், விஷ்ணு தன் அடுத்த அவதாரமான கிருஷ்ண அவதாரத்தில் மிகவும் சுலபமாக தன்னை ஆக்கி கொண்டு, சிரித்து கொண்டு, அனைவரிடமும் சகஜமாக உறவு சொல்லிக்கொண்டு பழகினார்.

இவர் பகவத் கீதையை அர்ஜுனனுக்கு சொல்லும்போது குருவாக இவர் ஞானத்தை உபதேசிக்கும் போது கூட,
அர்ஜுனன் தேரின் மேல் அமர்ந்து கோண்டே, கிருஷ்ணர் சாரதியாக கீழே அமர்ந்து கொண்டே சொன்னார்.
அர்ஜுனன் "கிருஷ்ணர் தன் நண்பன் தானே" என்று நினைக்கும் அளவிற்கு தன்னை சுலபமாக்கி கொண்டார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இன்று வரை யாரும் சுலபமாக நினைக்கும் படியாக தன் ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தை செய்து கொண்டார்.

இதில் மிகவும் ரசிக்கும் படியாக இருப்பது, குழந்தை பருவம் (little krishna).
இவர் செய்த வெண்ணெய் லீலை மிக பிரசித்தம்.
கோகுலத்திலேயே பணக்காரர், ஊர் தலைவன் நந்தபாபா.
இவர் வீட்டில் இல்லாத வெண்ணெயா!! மற்றவர்கள் வீட்டில் இருக்க போகிறது?

திருடுபவன் வெண்ணையா திருடுவான்?
அதுவும் கோகுலத்தில் இருக்கும் வரை தான் இந்த லீலை! ஸ்ரீ கிருஷ்ணர் செய்தார் என்பதை கவனிக்க வேண்டும்.




ஸ்ரீ கிருஷ்ணர் குழந்தையாக இருக்கும் போது, யாராவது "கிருஷ்ணா.. இந்தா வெண்ணெய். சாப்பிடு" என்று கொடுத்தால், "வேண்டாம். எனக்கு வெண்ணெய் பிடிக்காது."
என்று சொல்லி சிரித்துக்கொண்டே மறுப்பான்.

கோகுலத்தில் இன்று சென்றாலும் கூட, தயிர், மோர், வெண்ணெய் பிரசித்தம்.

கோபியர்கள் வெண்ணெய் தயாரித்து தினமும் அருகில் உள்ள மதுராவில் கொண்டு போய் வியாபாரம் செய்வார்கள்.
இவர்கள் தயாரிக்கும் வெண்ணெய்
  • வெண்மையாக இருக்கும். 
  • அதே சமயம், மிருதுவாக இருக்கும். 
  • கொஞ்சம் வெயில் பட்டாலும் இளகி விடும்.
இப்படி அருமையாக செய்த வெண்ணெயை, அவர்கள் வீட்டில் மிக உயரத்தில் யாருக்கும் தெரியாதபடி ஒளித்து வைத்து விடுவர்.
கண்ணன், யாருமில்லாத சமயம் பார்த்து, மெதுவாக சென்று, ஏறி கண்டுபிடித்து, வெண்ணையை எடுத்து சாப்பிட்டு, காலியான பானையையும் உடைத்து விட்டு சிரிப்பான்.

இந்த லீலை குழந்தை விளையாட்டு போல இருந்தாலும், பகவான் செய்யும் லீலைகளில் காரணம் இருக்குமே !

கிருஷ்ண பக்தன், தன் பக்தியை மற்றவர்களுக்கு வெளி காட்டாமல் உலகத்திற்கு பயந்து தன்னை ஒளித்துக்கொள்வான்.
உலக விஷயங்களில் நாட்டமில்லாமல், உயர்ந்த லட்சியமான "கிருஷ்ண பக்தியே லட்சியம்" என்று இருப்பான்.
அவன் மனதும் மிகவும் ம்ருதுவானதாக இருக்கும்.
'கிருஷ்ணா' என்ற சொல்லை கேட்டாலே மனம் இளகி விடும்.
மனதை எப்பொழுதும் தூய்மையாக வைத்து இருப்பான்.

இப்படி தன் பக்தியை மறைத்து கொண்டு உலகத்திற்கு தன்னை வெளிப்படுத்தி கொள்ள பயந்து கொண்டு இருக்கும் மகாத்மாக்களை, யார் கவனிக்கிறார்களோ இல்லையோ, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கவனிக்கிறார்.
இப்படிப்பட்ட ஞானிகளுக்கு தானே, வலிய சென்று தன்னை வெளிக்காட்டுகிறான். 

"ஒளிந்து இருக்கவே ஆசைப்படும் தன் பக்தனை" உலகிற்கு காட்டி மகிழ்கிறார்.
"சூரதாஸ், மீரா, ஆழ்வார்கள், ராமகிருஷ்ணர், கிருஷ்ண  சைதன்யர், துளசி தாசர்..." என்று தன்னை பற்றி வெளிக்காட்டி கொள்ளாத எத்தனை மகாத்மாக்கள், இந்த பாரத பூமியில் இருந்தார்கள், இருக்கிறார்கள்.

உண்மையான பக்தனை, கிருஷ்ண பரமாத்மாவே உலகிற்கு காட்டி விடுகிறார் என்று பார்க்கிறோம்.

குழந்தையாக இருந்த போது "வெண்ணெய் திருடும் லீலையாக" இந்த ரகசியத்தையே காட்டினார் ஸ்ரீ கிருஷ்ணர்.
  1. உயரத்தில் வைத்த வெண்ணையை போல, நம் பக்தியை உயர்வான கிருஷ்ணரிடம் வைத்தோம் என்றால், 
  2. ஒளித்து வைத்த வெண்ணையை போல, நமக்கும் கிருஷ்ணருக்கும் உள்ள பக்தியை ரகசியமாக வைத்துக்கொண்டோம் என்றால்,
  3. வெண்மையாக இருக்கும் வெண்ணெய் போல, நாமும் மன தூய்மை உள்ளவராக இருந்தோம் என்றால்,
  4. துளி வெயில் பட்டாலே உறுகிவிடும் வெண்ணெய் போல, நம் இதயமும் 'கிருஷ்ணா' என்ற சொல் கேட்டவுடனேயே மனம் உருகும் என்றால்,
  5. மிருதுவாக இருக்கும் வெண்ணெய் போல, நம் குணமும் மிருதுவாக இருக்கும் என்றால்,
ஸ்ரீ கிருஷ்ணனே வந்து, அந்த வெண்ணெய்  போன்ற மனதை தான் உண்டு, பானையை உடைப்பது போல, இந்த பிறவி கடலை உடைத்து, வைகுண்ட வாசலை திறந்து விடுகிறார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்.

நம் வீட்டிலோ, கோவிலிலோ, நாமும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு வெண்ணெய் கொடுக்கும் போது, "அழுக்கான இந்த மனதையும்,  இந்த வெண்ணெய் போன்று தூயமையாகவும், ம்ருதுவாகவும், இளகும் படியாகவும் ஆக்கு" என்று பிரார்த்திக்க வேண்டும்.

மகான்களின் குணத்தை போன்று, நாமும் நமக்கு இருக்கும் சிறு பக்தியை மற்றவர்களுக்காக ஆடம்பரத்துக்காக வெளிக்காட்டி கொள்ளாமல், ஒளித்து வைத்து கொண்டு, உயர்ந்த கிருஷ்ண பக்தியே லட்சியமாக வைத்து இருக்க முயற்சிக்க வேண்டும்.

இப்படி இருந்தால், குருவின் அருளால், ஸ்ரீ கிருஷ்ணரின் அருளால், இந்த ஜென்மத்தோடு நம் சம்சார கடல் சுழற்சி முடிந்து, கிருஷ்ணனின் திருவருளால் மோக்ஷம் என்ற வைகுண்டத்தை அடைந்து விடலாம்.

கிருஷ்ண பக்தி சுலபம். கிருஷ்ணனும் சுலபம்.
கிருஷ்ண கதையும் சுலபம். வாருங்கள் ஸ்ரீ கிருஷ்ண பக்தி செய்வோம்.

Sunday 3 June 2018

பிராம்மணர்கள் - சற்று மனசாட்சியுடன் சிந்திப்போமே!!

நாம் பிராம்மணன் என்று சொல்லி கொள்ள, அடிப்படையான சில விஷயங்களை நாம் கடைபிடிக்கிறோமா?
சற்று மனசாட்சியுடன் சிந்திப்போமே!!

பிராம்மணனுக்கு கடமையாக கொடுக்கப்பட்டது சந்தியா வந்தனம்.
இதை செய்ய வேண்டாமா?

பூணல் வேறு சில ஜாதியினரும் போட்டு கொள்கின்றனர் தெரியுமா?
பூணல் போட்டால் மட்டும் ப்ராம்மணனா?
வேறு ஜாதியினர் சந்தியா வந்தனம் செய்ய முடியமா? மற்றவர்களுக்கு கிடைக்காத இந்த பொக்கிஷம் கிடைத்தும் பிராம்மணன் சந்தியா வந்தனம் செய்யாமல் இருக்கலாமா? அடுத்த ஜென்மத்தில் இந்த வாய்ப்பு கிடைக்குமா?

பிராம்மண பெண்ணாக இருந்தால், தீட்டு, எச்சல் பார்த்து, ஆசாரம் நழுவாமல் தானும் இருந்து, தன் கணவனையும் அவன் பிராம்மணன் என்ற கடமையை செய்ய உற்சாக படுத்த வேண்டாமா?
'சந்தியா வந்தனம் செய்தால் தான் சாப்பாடு' என்று கணவனை, குழந்தையை தர்மத்தில் இருக்க செய்பவள் தானே தர்ம பத்னி. வெறும் பத்னியாக இருந்தால் போதுமா?

சமைத்த உணவை, வீட்டில் உள்ள பிரியமான ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யாமல் ஒரு பிராம்மண குடும்பம்  சாப்பிடுமா?

ஸ்வாமி அறை என்ன அலங்கார பொம்மைகள் என்று நினைப்பா?
பூஜை மட்டும் தான் செய்வானா பிராம்மணன்?
தன் வீட்டில் உள்ள ஸ்வாமிக்கு தினமும் நெய்வேத்யம் செய்யாமல் சாப்பிடுவானா?

அபார்ட்மெண்ட் மயமாகி போன இந்த உலகில், சுற்றி எத்தனை பிராம்மணன் இருந்தாலும், இன்றைய பத்தில் ஒன்பது பிராம்மணன், 6 மணிக்கு பஞ்சாத்ரம் எடுத்து சந்தியா வந்தனம் செய்வதில்லை.
அரை டவுசர் போட்டு பார்க்கில் ஒடுகின்றனர், நடக்கின்றனர்.
இவர்களுக்கு பிராணாயாமம் நாடி சுத்தி செய்யும் என்று புரியவில்லையா?
அபிவாதையே சொல்லும் போது குனிந்து நிமிர்ந்து சொல்லும் போதும் மந்திரம் ஒரு புறம் இருக்க, உடல் ஆரோக்கியமும் உள்ளதே என்று புரியவில்லையா?
பார்க்கில் அலைவதற்கு பதில், அதே நடையை ஒரு கோவிலை சுற்றி வரலாமே.
கொஞ்சம் யோசிக்கலாமே பிராம்மணர்கள்.

நாமும் மற்றவர்களை போல இருந்தால், பிள்ளைகள் வேறு ஜாதி திருமணம் செய்து கொள்ளாமலா இருக்கும்?
யோசிக்க வேண்டாமா ப்ராம்மணர்கள்?

இன்றைய பிராம்மண வீட்டில், இருக்கும் பெண்கள், விலகி இருக்கும் சமயமா, இல்லையா என்று கூட தெரிவதில்லை.
உண்மையான வைதீக பிராம்மணர்கள், லௌகீக ப்ரம்மணர்களை கண்டால் பயப்படுவார்கள்.
சில உண்மையான வைதீக பிராம்மணர்கள், நாம் பிராம்மணர்கள் என்று சொன்னாலும் தீர்த்தம் குடிக்க கூட தயங்குவது அவர்கள் தவறில்லை. நம் மீது உள்ள ஆசார பயம் தான்.

பெண்களுக்கு மாதம் 2 நாள் இயற்கையே ஓய்வு கொடுத்து இருக்கும் போது, அன்று ஆண் சமைத்து போட்டு, வீட்டை பார்த்துக்கொண்டான்.





இன்றைய பிராம்மண குடும்பத்தில் விலகி இருக்க வேண்டிய காலத்திலும் பெண்களே சமைக்கின்றனர்.
சமைத்த உணவை அவர்களே சாப்பிடுகின்றனர்.
அவர்கள் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு அன்று ஏகாதேசியா?

நெய்வேத்தியம் செய்யும் பழக்கம் இல்லை என்றால், நம் வீட்டில் உள்ள தெய்வங்களுக்கு காட்டாமல் சாப்பிடுகிறோம் என்று தானே அர்த்தம்?

நெய்வேத்தியம் செய்யாமல் சாப்பிடும் இந்த பழக்கம் தானே இன்று, விஸ்வரூபம் எடுத்து, பிராம்மண குடும்பத்தில், பெண்கள் தீட்டு காலங்களிலும் இன்று சமைப்பதற்கு காரணம்.

அப்படி சமைத்து சாப்பிடுவதை விட, பானகம், மோர் என்று சமாளிக்கலாமே.
அதையே ஸ்வாமிக்கு நெய்வேத்தியம் செய்யலாமே.
நம் வீட்டில் உள்ள ஸ்வாமி பட்டினி என்றால், நாமும் பட்டினி இருக்கலாமே.

இப்படி தீட்டு பார்ப்பதும், நெய்வேத்யம் செய்த பின் பிரசாதமாக சாப்பிடுவதும், சந்தியா வந்தனமும், நம் பிராம்மண சமூகத்திடம் 1940ல் இருந்து இன்று வரை பிறந்த பிராம்மணர்களால் அழிக்கபட்டுவிட்டது பெரிய துரதிர்ஷ்டமே.
இதற்கு முன் இருந்த ப்ராம்மணர்கள் ஆசார சீலர்களாகவே இருந்துள்ளனர்.

இன்று, பிராம்மண குடும்பத்தில், பிறக்கும் பிள்ளைகள் வேறு ஜாதி, முடிந்தால் வேறு மதம் என்று போய், கலப்பு திருமணம் செய்து கொள்கின்றனர்.

இது இவர்கள் தவறு என்று மட்டும் சொல்லிவிட முடியுமா? இல்லை.
இவர்கள் பெற்றோர்கள் செய்த தவறு.

இந்த காலகட்டங்களில் பிறந்த பெரும்பாலான பிராம்மணர்கள் தங்கள் கடமையை செய்ய தவறியதே இதற்கு காரணம்.

ஒவ்வொரு ஜாதியிலும் அடி முட்டாள் இருப்பான். அதி புத்திசாலியும் இருப்பான்.

இன்றைய உலகில் நாம் அனைவரிடமும் பழகுகிறோம்.

நம் வீட்டில் உள்ள பிராம்மண பையன், வேறு ஜாதியில் அடக்கம், அன்பு, அழகு, திறமை, செல்வம் எல்லாம் சேர்ந்த பெண்ணை பார்க்கிறான். இருவருக்கும் பிடித்து போகிறது. கல்யாணம் செய்து கொள்கின்றனர்.

பையனை பெற்ற பெற்றோர் எந்த முகத்தை வைத்து, தடுக்க முடியும்?
நாம் பிராம்மணன். இது தவறு என்று சொன்னால் எடுபடுமா?

இதே சமயத்தில், பெற்றோர்கள் உண்மையான பிராம்மண கடமைகளை செய்து, நான் ஏன் இதை செய்கிறேன் என்று சொல்லி தந்து இருந்தால், பிராம்மண பையன்,
தேவதையை பார்த்தாலும்
"நீ தேவதையாக இருந்தாலும் வேண்டாம். உன் குலத்தில் உள்ள ஒரு பையனை திருமணம் செய்து கொள். எனக்கு பிராம்மண பெண் தான் மனைவியாக வேண்டும்" என்று தானே கேட்பான்.

அழகான வேறு ஜாதி பெண்ணை பார்த்தாலும்,
"இவள் நல்லவள் தான். ஆனால், என் பெற்றோருடன், என் தாத்தாவுடன், என் குடும்பத்துடன் இவள் பழக வேண்டுமே.
இவள் உணவு பழக்கம் எனக்கு கிடையாதே. எங்கள் உணவு பழக்கம் இவள் ஒத்துக்கொள்ள வேண்டுமே?
இவளை திருமணம் செய்து கொண்டால் நான் எப்படி பிராம்மணன் ஆவேன்? என் தந்தை எனக்கு கொடுத்த சந்தியா வந்தனம் எப்படி செய்வேன்?
எனக்கு பிறக்கும் குழந்தை எப்படி பிராம்மண குழந்தை என்று சொல்வது?
இவள் தீட்டு பார்ப்பாளா? இவள் எனக்காக பார்த்தாலும், இவள் குடும்பம் பார்க்குமா? என் பெற்றோர் எப்படி இவர்கள் குடும்பத்துடன் பழக முடியும்?
இப்படி பல தர்ம சங்கடம் கொடுத்தாவது, இந்த காமம் தேவையா? இப்படியாவது இந்த தேவதையை மணந்து கொள்ள வேண்டுமா? அவள் ஜாதியில் உள்ள ஒரு நல்ல பையன் இவளை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டுமே. நாம் ஏன் நம் பிராம்மண குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வாழ கூடாது?
அப்படி சுயநலம் ஏறி விட்டதா எனக்கு?
நம்மோடு ஏன் நம் குலத்திற்கு அழிவு கொடுக்க வேண்டும்?"
என்று நினைப்பான்.

பிராம்மண பெண்ணாக இருந்தாலும் இந்த உறுத்தல் அவளை நிதானிக்க செய்யும்.

ஆணின் மனதை விட, பெண்ணின் மனது எளிதில் இளகி விடும்.

பிராம்மண குடும்பங்களில் பிராம்மண கட்டுப்பாடு மட்டும் விதித்து, ஏன்? எதற்கு? என்று சொல்லாமல் பெண்ணை வளர்த்தால், அவள் உலகில் பலருடன் பழகும் போது, புரியாத கட்டுப்பாடு பெற்றோரிடம் பார்த்து விட்டு, அன்பாக பேசும் நன்றாக சம்பாதிக்கும் ஒரு வேறு ஜாதி ஆணை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விடுகிறாள்.

இன்றைய காலத்தில், பிராம்மண பெண்ணும் வேலைக்கு செல்கிறாள் என்பதை மறுக்க முடியுமா? மற்றவர்களுடன் பழகுவது தவறு என்றும் சொல்ல முடியுமா?

இதே சமயத்தில், பெற்றோர்கள் உண்மையான பிராம்மண கடமைகளை செய்து, நான் ஏன் இதை செய்கிறேன் என்று சொல்லி தந்து இருந்தால், பிராம்மண பெண்,
இந்திரதேவனை பார்த்தாலும் "நீ அறிவாளியாக, பணம் உள்ளவனாக, பண்பு உள்ளவனாக, அழகானவனாக இருந்தாலும் வேண்டாம். உன் குலத்தில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள். எனக்கு பிராம்மண பையன் தான் புருஷனாக வேண்டும்" என்று தானே கேட்பாள்?

அன்பான, சொக்கதங்கமாக வேறு ஜாதி பையனை பார்த்தாலும்,
"இவன் நல்லவன் தான். ஆனால், என் பெற்றோருடன், என் தாத்தாவுடன், என் குடும்பத்துடன் இவன் பழக வேண்டுமே?
நான் அவர்கள் குடும்பத்துக்கு புக வேண்டுமே?
இவர் உணவு பழக்கம் எனக்கு கிடையாதே?
எங்கள் உணவு பழக்கம் இவன் ஒத்துக்கொள்ள வேண்டுமே?
இவனை திருமணம் செய்து கொண்டால் நான் எப்படி பிராம்மண பெண் ஆவேன்?
என் தாய் எனக்கு கொடுத்த ஆசாரம் எப்படி அவர்கள் வீட்டில் செய்வேன்?
எனக்கு பிறக்கும் குழந்தை எப்படி பிராம்மண குழந்தை என்று சொல்வது?
இவன் தீட்டு பார்ப்பானா?
இவன் எனக்காக பார்த்தாலும், இவனது குடும்பம் பார்க்குமா? தீட்டு காலங்களிலும் நான் சமைத்து போட வேண்டும் என்றால் என்ன செய்வது? நெய்வேத்தியம் செய்து சாப்பிடும் பழக்கம் என்னோடு அழிய வேண்டுமே?
என் பெற்றோர் எப்படி இவர்கள் குடும்பத்துடன் பழக முடியும்?
இப்படி பல தர்ம சங்கடம் கொடுத்தாவது, இந்த காமம் தேவையா?
இப்படியாவது இந்த நல்லவனை, அன்பானவனை  மணந்து கொள்ள வேண்டுமா?
அவன் ஜாதியில் உள்ள ஒரு நல்ல பெண் இவனை திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழட்டுமே.
நாம் ஏன் நம் பிராம்மண குடும்பத்தில் உள்ள ஒரு பிராம்மண பையனை திருமணம் செய்து கொண்டு வாழ கூடாது?
அப்படி சுயநலம் ஏறி விட்டதா எனக்கு?
நம்மோடு ஏன் நம் குலத்திற்கு அழிவு கொடுக்க வேண்டும்?"
என்று நினைப்பாள்.

பிராம்மணர்களின் பெருமையை பெற்றோரின் நடவடிக்கையிலும், பேச்சிலும் கேட்டு இருந்தால், நாமம் போட்ட ஐயங்கார் பையனை கண்டால், இந்த காலத்திலும் தான் பெருமாளின் திருவடியை நெற்றியில் இட்டு கொள்வேன் என்று உண்மையான ஆண் மகனாக இருக்கும் பிராம்மண பையனை பார்த்து அல்லவா பெருமைப்படுவாள்?

உலகிற்கு பயந்து வெளி வேஷத்தை மாற்றும் பிராம்மணன் நெஞ்சு உரம் உள்ளவனா?
இல்லை இன்றும் குடுமி வைத்துக்கொண்டும், நெற்றியில் நாமம் இட்டுக்கொண்டும் இருக்கும் ஒரு சில பிராம்மண பையன்கள் நெஞ்சு உரம் மிக்கவர்களா?

உலக கேலிகளை சந்திக்காமலா இவர்கள் இருப்பார்கள்?
இஸ்லாமியன் வெட்கப்படுவதில்லை. மீசை இல்லாமல் தாடி வைத்து பெரும்பாலும் ஹிந்துக்கள் இருக்கும் இந்தியாவில் நடக்கிறோமே, கேலி செய்வார்களே என்று தன் வேசத்தை மாற்றி கொள்வதில்லை.
வைஷ்ணவனான நானும் வெட்கப்படுவதில்லை என்று இருக்கும் நெஞ்சு உரம் மிக்க பிராம்மண பையன்கள் இன்றும்  இருக்கின்றனர்.

முதலில் நாம் பிராம்மணன் ஆக இருப்போம்.
சந்தியா வந்தனம் செய்வோம்.
நெய்வேத்தியம் செய்து விட்டு பிரசாதமாக சாப்பிடும் பழக்கத்தை கொள்வோம்.
தீட்டு, ஆசாரம் பார்ப்போம்.

தானாக பிராம்மண தலைமுறை திருந்தும்.

தானாகவே இந்த கலப்பு திருமணங்கள் நின்று போகும்.

சட்டத்தை கொண்டு தடுக்க முடியுமா மனதில் எழும் காமத்தை?
நம்மால் நமக்கு பின் வரும் பிள்ளைகள் பிராம்மணத்துவத்தை இழக்க நேரிடும் என்ற ஆழ் மனதில் தோன்றும் அச்சமே, நம்மை பிராம்மணனாக வாழ வைக்க முடியும்.