Followers

Search Here...

Monday 20 August 2018

யாரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது? இரண்டு ஞானிகள் உண்டு! சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்

நமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.
தெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
உலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
ஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.




ஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)
மற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)

ஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை "சாஸ்திர ஞானம்" என்று சொல்கிறது வேதம்.

"கல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும்" என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.
இதை "சாஸ்திர ஞானம்" என்று சொல்லுவார்கள்.
படித்ததினால் உண்டாகும் அறிவு இது.

படித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, 'சம்யக் ஞானம்' உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

மாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.
இதை 'சம்யக் ஞானம்' என்று சொல்லுவார்கள்.

படிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.
முதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.

பிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிறக்கின்றனர்.

சாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.

முதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.

ஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.

குரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.







சாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ!! அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.

ஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.

சாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும், அதர்மமே!
எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.

ஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது தான்.
அதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.

அமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் "சாஸ்திர ஞானம்" ஏற்படுகிறது.
எழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா? பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா? என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.

பொதுவாக, பாரத தேசத்தில், ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற நாடுகளில், உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.
அதே போல,
மற்ற நாடுகளில், உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.
மெய் ஞானிகளை, குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

தெய்வத்தை காண, வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.
சாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் "சாஸ்திர ஞானி".
அது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே "சம்யக் ஞானி".

சாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.
இப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.

தஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.

தன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம்.
தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, "100 கோடி தடவை "ராம ராம" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.

அனுபவத்தில் கொண்டு வந்து,
ஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.
தினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.

80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.

"80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே?" என்று தியாகராஜர் கேட்க,




"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்"
என்றாராம் ஸ்ரீ ராமர்.
இப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து
"பால கனக மய ... "
என்று பாடுகிறார். 
(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க
https://youtu.be/sw9lE0VKd1A
https://www.dailymotion.com/video/x1e607u )
அனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே "சம்யக் ஞானிகள்".
சம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.



Wednesday 8 August 2018

வைஷ்ணவம் இஸ்லாம்





வைஷ்ணவம்:
சாத்வீக உணவே உண்ண வேண்டும்.
மாமிசம் ராஜஸ உணவு. கோபம், பரபரப்பு போன்ற குணங்கள் உண்டாகும்.
மது தாமச உணவு. அழுகை, சோம்பேறித்தனம், தூக்கம் போன்ற குணங்கள் உண்டாகும். மூளையை குழப்பும்.

கோப குணமும், சோம்பேறித்தனமும் ஒருவன் தெய்வத்தை அணுக முடியாதபடி செய்யும் எதிரியாகும்.
ராஜஸ, தாமச உணவு உண்ண கூடாது. இது மனதை சஞ்சலப்படுத்தும்.

காய் கறிகளிலும் தாமச மற்றும் ராஜஸ உணவு உண்டு. அப்படிப்பட்ட  காய் கறிகளை தவிர்க்க வேண்டும்.
எப்பொழுதும் சாத்வீக உணவே உண்ண வேண்டும். முடிந்தால் மற்றவர் சமைத்த உணவை உண்ணாமல், தானே சாத்வீக உணவை சமைத்து உண்ண வேண்டும்.




இஸ்லாம்:
மது குடிக்க கூடாது.
வளர்க்கப்படும் விலங்குகளை சாப்பிடலாம்.
பன்றி, வேட்டையாடும் விலங்குகள், வேட்டையாடும் பறவைகள், இறந்த விலங்குகள் தவிர மற்ற அனைத்தையும் உண்ணலாம்.


வைஷ்ணவம்:
நாராயணனின் 5 வித அவதாரங்களில், ஒன்று அந்தர்யாமி.
அந்தர்யாமியாக ஒவ்வொரு ஜீவனுடனும் சேர்ந்தே உள்ளார். யோகிகள் யோகத்தினால் பகவானை தானே அடைகின்றனர். இது எல்லோருக்கும் எளிதல்ல.
இப்படி தெய்வத்துடன் பேசும் சக்தி உள்ள மகான்கள் கொண்டே, பகவானை அடைய முடியும். ஒரு தேச பிரதமரை தானே முயற்சி செய்து பார்க்கலாம், இல்லை அவருக்கு மிகவும் தெரிந்தவரை கொண்டும் பார்க்கலாம்.

இஸ்லாம் :
கடவுளின் மீதான நம்பிக்கை கொண்டு ஒவ்வொருவரும் தானே கடவுளை அடையலாம். தேவ தூதர், போதனைகள் செய்பவர்கள் யாவரும் அறிவுரை சொல்பவர்களே. இவர்கள் கடவுளை அடைய தேவையில்லை.


வைஷ்ணவம்:
ஒருவன் பிச்சைக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், கஷ்டப்படுவதும், பணக்காரன் குடும்பத்தில் பிறப்பதும், சுகமாக இருப்பதும் அவன் செய்த பூர்வ ஜென்ம பாப, புண்ணியத்தினால் மட்டுமே.

பிறக்கும் போது ஒருவன் பாபம், புண்ணியம் செய்யவில்லை. பூர்வ ஜன்மம் இல்லை என்றால்,
ஏன் ஒரு பாவமும் செய்யாத ஒருவனை ஏழை குடும்பத்தில் பிறக்க வைத்தான்?
ஏன் வேறு மதங்களில், வேறு தேசங்களில் பிறக்க வைத்தான்? என்று கடவுள் மீது குறை உண்டாகும்.

கடவுள் காரணமே இல்லாமல் பலரை ஏழை குடும்பத்திலும், மற்ற மதத்திலும் பிறக்க வைக்கிறார் என்று ஆகும்.

வைஷ்ணவம் பூர்வ ஜென்மம் உண்டு, இன்னும் பல கோடி ஜென்மங்கள் உண்டு என்றும் சொல்கிறது.

எப்பொழுது எந்த பிறவியில், பாவ புண்ணியம் செய்யாமல், நாராயணனை சரணாகதி செய்து வாழ்கிறானோ, அப்பொழுது மோக்ஷம் அடைவான்.

இஸ்லாம் :
முற் பிறவி இல்லை. வயது வரும்வரை பாவங்கள் கடவுளால் எடுத்து கொள்ளப்பட மாட்டாது.
பின் செய்யும் பாவங்களுக்கு அவனுக்கு தண்டனை கடவுளே கொடுப்பார்.
செய்யும் பாவங்களுக்கு கடவுளிடம் மன்னிப்பு கேட்டால் மட்டுமே போதும். இதற்கு மத போதகர்கள் தேவை இல்லை.
நேரடியாக வேண்டினாலே கடவுள் பாவங்களை மன்னிப்பார்.
இறந்த பின் புண்ணியம் செய்தவர்கள் சொர்க்கமும், பாவம் செய்தவர்கள்  நரகம் போவார்கள்.
மீண்டும் பிறப்பு வாய்ப்பில்லை.
ஏழையாக ஏன் பிறக்கிறார்கள்? மற்ற மதங்களில் ஏன் பிறக்கிறார்கள்? இப்படி கேள்வி கேட்க கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார். அதில் அர்ச்ச அவதாரமே கோவில்களிலும், வீடுகளிலும் உள்ள விக்ரஹங்கள்.
பக்தியும், ஞானமும் வளர, சர்வ சக்தி உள்ளவர் அர்ச்ச அவதாரத்தில் பிரவேசித்து மகான்களிடம் பேசுகிறார். நம்பிக்கையை பொறுத்து மூடனுக்கு கூட அவன் கேட்டதை செய்கிறார்.

இஸ்லாம்:
கடவுள் இருக்கிறார். அவர் எப்படி இருப்பார் என்று கற்பனை செய்ய கூடாது. அவர் பெயரை கொண்டு கட்டிடம் கட்ட கூடாது.


வைஷ்ணவம்:
நாராயணன் சர்வ சக்தி உள்ளவர் என்பதால், மகான்களை உலகிற்கு அனுப்பி (ராமானுஜர், காந்தி, ஆதிசங்கரர்) உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
வேத தர்மம் உலகில் வீழ்ச்சி அடையும் போது தானே அவதாரங்களை செய்தார், செய்கிறார்.
அவர் 5 விதமாக (பரம், வ்யுகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்ச) அவதாரங்கள் எடுக்கிறார் என்று வைஷ்ணவ தர்மம் காட்டுகிறது.




இஸ்லாம்:
கடவுள் சர்வ சக்தி உள்ளவர் என்றாலும், மகான்களை (ஆபிரகாம், மோசஸ், நபி போன்றோரை) உலகிற்கு அனுப்பி உலகிற்கு போதனைகள் கிடைக்க வழி செய்கிறார்.
ஆனால் அவரே அவதாரம் செய்ய மாட்டார்.


வைஷ்ணவம்:
ஒரே கடவுள். முழு முதற்கடவுள் நாராயணணே. அவரே ஆண் (புருஷ)
அவரே பரமாத்மா.
நாம் எல்லோரும் தேவர்கள் உட்பட ஜீவாத்மா (பெண்).
நம் லட்சியம் அந்த பரமாத்மாவை அடைவதே.
அவர் பார்க்க எப்படி உள்ளார், எங்கு உள்ளார், எப்படியெல்லாம் உள்ளார் என்று சொல்கிறது வைஷ்ணவம்.

இஸ்லாம்:
ஒரே கடவுள். கடவுள் எங்கு உள்ளார், எப்படி உள்ளார், அவர் ஆனா பெண்ணா என்று கேட்க கூடாது. உலகையும், மனிதனையும் படைத்த கடவுளை உருவகப் படுத்தக் கூடாது. இருக்கிறார் என்று மட்டும் நம்பவேண்டும்.

Monday 16 July 2018

வேறு தெய்வங்கள் மேல் த்வேஷம் உள்ளவனா வைஷ்ணவன்? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.

வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவனா? வைஷ்ணவ தர்மம் என்ன? பெரியாழ்வார் பாசுரத்தை கொண்டு, புரிந்து கொள்வோம்.





பெரியாழ்வார், திருவேங்கடமுடையானை பார்த்து, 
"என்னுடையவன் நீ என்று, என்னை எடுத்து கொண்டு விட்டீர்கள்"
என்கிறார்.

பெரியாழ்வார், "திருவேங்கடமுடையானை" பார்த்து  பாடுகிறார்,

சென்னி ஓங்கும்
தண் திருவேங்கடம் உடையாய் !
உலகு தன்னை வாழ நின்ற நம்பீ ! தாமோதரா !
சதிரா !
என்னையும்,
என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு
நின் அருளே புரிந்திருந்தேன்
இனி என் திருக்குறிப்பே
--   பெரியாழ்வார் திருமொழி.

"உலகமெல்லாம் வாழும்படியாக, சாநித்யத்துடன் திருவேங்கடத்தில் நின்றுள்ள எம்பெருமானே !
ஒரு பெண்ணிற்கு, ஒருவன் தாலி கட்டி, அவள் 'என்னை சேர்ந்தவள்' என்று சேர்த்து கொள்வது போல,
உங்களுடைய சம்பந்தம் உள்ளவன் 'நான்', என்பதை, முத்திரை இட்டு, உன் சம்பந்தமான சங்கம், சக்கரம் சாற்றிக்கொண்டு, நெற்றியில் திருமண் காப்பு, 'எனக்கும், என் உடமைகளுக்கும்' இட்டுக் கொண்டு விட்டேன்.
முத்திரை இட்டு, நான் உங்களுக்கு அடிபணிந்தேன்.
என்னுடையவன் நீ, என்று சேர்த்து கொண்டீர்கள்.
எப்பொழுதும் உங்கள் கருணையை எதிர்பார்த்தே இருப்பேன்"
என்கிறார் பெரியாழ்வார்.

பெரியவாச்சான் பிள்ளை, இந்த பாசுரத்துக்கு விளக்கம் சொல்லும் போது,
"நம்மாழ்வார், 'என் உடைமையை' என்று சொல்லும் இடத்தில் சரீரத்தையும்,
 'என்னையும்' என்று சொல்லும் இடத்தில், ஆத்மாவையும் சொல்கிறார்" என்று ஆச்சர்யமாக, நம்மாழ்வார் பாடியதின் உண்மை பொருளை பிரதிபலிக்கிறார்.

"என் உடைமையையும்
உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு"
என்று சொல்லும்போது,
'உடைமை' என்று தன் சரீரத்தையும் சேர்த்து, சொல்கிறார் நம்மாழ்வார்.

அதனால் தான், 
'வைஷ்ணவர்கள்', தன் வீடு வாசல், தன் சரீரம், என்று அனைத்திலும் சங்கம் சக்கரம் முத்திரை இட்டு, 'இந்த உடைமை அனைத்தும், உன்னை சேர்ந்தது' என்று ப்ரபத்தி செய்கின்றனர்.

சரீரத்தில் வேண்டுமானால், 'சங்கம், சக்கரம்' போன்ற முத்திரை இட்டு கொள்ளலாம்.
நெற்றியில் 'திருமண் காப்பு' இட்டு கொண்டு,
'நான் எம்பெருமானை சேர்ந்தவன், எம்பெருமானுக்கு சம்பந்தப்பட்டவன்'
என்று வெளி உலகுக்கு காட்டி கொள்ளலாம்.

அது எப்படி ஆத்மாவுக்கு முத்திரை இட முடியும்?
'ஆத்மா' கண்ணுக்கு தெரியாதது ஆயிற்றே?




"என்னையும், உன் சக்கரப்பொறி ஒற்றிக்கொண்டு" 
என்று பெரியாழ்வார் சொல்லும் போது,
'ஆத்மாவுக்கும் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொண்டேன்' என்கிறாரே?

இதன் பொருள் என்ன?


இதற்கும் பெரியவாச்சான் பிள்ளையே, நம்மாழ்வார் எண்ணத்தை அப்படியே நமக்கு விளக்கி தருகிறார்.

"அந்நிய தேவதைகள், 'சம்பந்தமே' ஆத்மாவில் இருக்க கூடாது" என்பதே, 'ஆத்மாவுக்கு செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்கிறார்.

'ஸ்ரீனிவாசனை தவிர எனக்கு வேறு எந்த தெய்வமும் தெரியாது' 
என்று ஆத்மாவில் ஸ்ரீனிவாசனை மட்டும் முத்திரையாக இடுவதே - 'ஆத்மாவில் செய்யும் பஞ்ச சம்ஸ்காரம்' என்று அர்த்தத்தை விளக்குகிறார்.




ஒரு தர்மபத்னி, கணவனை 'மட்டுமே' தன் நெஞ்சில் சுமப்பது போல, ஆத்மாவில் ஸ்ரீனிவாசனுக்கு மட்டுமே இடம்,
என்று ஆத்மாவில் பஞ்ச சம்ஸ்காரம் செய்து கொள்ள வேண்டாமா?

உடம்பில் மட்டும் சங்கு சக்கர முத்திரை அணிந்து,
மனதில் வேறு தெய்வங்களுக்கும் இடம் உண்டு என்று சொன்னால், "வைஷ்ணவன்" என்று சொல்லி என்ன பயன்?

ஆதலால்,
ஆத்மாவிலும் 'நீ மட்டுமே',
உடம்பிலும் 'உன் சம்பந்தமான திரு சின்னமே' அணிந்து,
நான் உன்னை சேர்ந்தவன் என்று, உன் கருணையையே எதிர்பார்த்து இருக்கிறேன்"
என்று பெரியாழ்வாரின் வைஷ்ணவ தர்மத்தை, விளக்கி தருகிறார் பெரியவாச்சான் பிள்ளை.

வைஷ்ணவ தர்மமே, "பதிவ்ரதா தர்மம்" தான்.

'வேறு அந்நிய தேவதை, சம்பந்தமே இல்லாமல் இரு. ஸ்ரீனிவாசனையே நினை'
என்று ஆத்மாவுக்கு பஞ்ச சம்ஸ்காரம் செய்யும் வைஷ்ணவ தத்துவத்தை மேலோட்டமாக பார்த்து விட்டு,
'வேறு அந்நிய தேவதைகள் மேல் த்வேஷம் உள்ளவன் வைஷ்ணவன்',
 என்று நினைத்து விட கூடாது. அது அர்த்தம் இல்லை.

ஏற்கனவே சொன்ன மாதிரி, வைஷ்ணவ தர்மமே, பதிவ்ரதா தர்மம் தான்.

ஒரு தர்ம பத்னி, தன் கணவனை, தவிர வேறொரு அந்நிய புருஷனை ஏறெடுத்து கூட பார்க்க மாட்டாள் அல்லவா?
இதுவே பதிவ்ரதா தர்மம்.
மற்ற புருஷனையும் தன் கணவனாக நினைப்பாளா ஒரு தர்மபத்னி?

"ஏன் இப்படி பாகுபாடு செய்கிறாள்?
மற்ற புருஷர்கள் மேல் இவளுக்கு ஏன் இப்படி த்வேஷம்?
மற்ற புருஷர்கள் என்ன தாழ்ந்தவர்களா?
அடுத்த வீட்டு புருஷனை இவள் ஏறெடுத்து கூட பார்க்க மாட்டேன் என்கிறாளே?"
என்றா இன்னொரு பெண் சொல்லுவாள்?

ஒரு தர்மபத்னிக்கு, அவள் கணவன் மட்டுமே லட்சியம்.
அவளை பொருத்தியவரை, அந்நிய புருஷன் "குபேரனாகவே" இருந்தாலும், "மன்மதனாக" இருந்தாலும் திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லையே?

இப்படி அந்நிய புருஷனை திரும்பி பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று இருப்பது ஒரு பதிவ்ரதைக்கு "பூஷணமே" (அணிகலன்) அன்றி, அது "தூஷணம்" ஆகாது.

வெளியில் பார்க்க, வெறும் தாலி மட்டும் கட்டிக்கொண்டு, மனதில் தன் கணவனுடன் மற்றொருவனுக்கும் இடம் தந்தால், அது எப்படி பதிவிரதை தர்மமாகும்?
அந்த கற்பு "இதயத்தில்" இருந்தால் தானே, திருமாங்கல்யத்துக்கும் மதிப்பு.

திருமாங்கல்யம் போல, "திருமண் காப்பு".
திருமாங்கல்யம் போல, "துளசி மணி மாலை".
திருமாங்கல்யம் போல, "சங்கு சக்கர முத்திரைகள்".
இந்த உடைமைகள், உன்னை சேர்ந்தது என்று குறிக்கின்றதே தவிர, "ஆத்மாவையும் அர்ப்பணம்" செய்யாது போனால், அவன் எப்படி வைஷ்ணவன் ஆக முடியும்?

எம்பெருமானுக்கே ஆட்பட்டவன், என்று ஆத்மாவையும் அர்ப்பணம் செய்பவனல்லவா சுத்தமான வைஷ்ணவன்?

அதேபோல, நெற்றியில் "திருமண்" இட்டு, "சங்கம் சக்கர" முத்திரையும் இட்டு, பார்க்க வைஷ்ணவன் போல இருந்து, "மனதில் வேறு தெய்வத்துக்கும் இடம் உண்டு" என்று சொன்னால், அது பதிவிரதை தர்மம் ஆகாதே?

இந்த பதிவ்ரதா தர்மத்தை தானே, வைஷ்ணவமும் காட்டுகிறது.

ஆதலால்,
"எம்பெருமான் ஒருவனுக்கே நான் ஆட்பட்டு இருப்பேன்" 
என்று சொல்லும் ஒரு வைஷ்ணவன்,
"பிற தெய்வங்களை பார்ப்பது இல்லை" என்று சொல்வது, அந்த தெய்வங்களிடம் உள்ள த்வேஷத்தால் (வெறுப்பு) அல்ல.

"என் தெய்வம் எம்பெருமான் நாராயணன் மட்டுமே" 
என்ற பதிவ்ரதை தர்மத்தில் இருப்பதே காரணம்.
இதில் த்வேஷம் (வெறுப்பு) இல்லை.

இந்த ஆத்மாவுக்கு 'ஒரு தெய்வம்' தானே இருக்க முடியும்?
வேதமோ, அந்த பரமாத்மா 'நாராயணன்' என்று தெளிவாக கூறுகிறது.
இதை பற்றி படிக்க  www.proudhindudharma.com/2017/12/blog-post_7.html Click செய்யவும்,

நாம் அனைவருக்கும் நாராயணனே அனைத்துமாக (மாதா, பிதா, கணவன் எல்லாம்) உள்ளார்.

ஒரு பதிவ்ரதைக்கு, எப்படி தன் கணவன் மட்டுமே தெரியுமோ,
அதுபோல,
நாராயணனால் படைக்கப்பட்ட நாமும், ஒரு பதிவிரதை போல, அவரால் படைக்கப்பட்ட அந்நிய தெய்வங்களின் சம்பந்தம் கொள்ளாமல், நாராயணனே நம் தெய்வம் என்று இருக்க வேண்டும்"
என்று வழி காட்டுகிறது வைஷ்ணவம்.

இப்படி உயர்ந்த பதிவிரதை தத்துவத்தை கொண்டு,
"நாராயணனை தவிர, வைஷ்ணவனுக்கு வேறு தெய்வம் தெரியாது", 
என்று சொல்லும் போது,
"ஏன் இப்படி பாகுபாடு?
மற்ற தெய்வங்கள் என்ன தாழ்ந்தவர்களா?
ஏன் அந்நிய தேவதைகளை மட்டும் வைஷ்ணவர்கள் வணங்க கூடாது?"
என்று கேட்பதே முட்டாளத்தனம்.




இப்படி "சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்தி,
'நான் உன்னை சேர்ந்தவன்' என்று இருப்பதே" வைஷ்ணவ லக்ஷணம்.

சரீரத்தையும், ஆத்மாவையும் எம்பெருமானுக்கு ஆட்படுத்திய பின், எப்படி இருப்பான் ஒரு வைஷ்ணவன்?
"எம்பெருமான் இஷ்டம்" என்று இருப்பான்.
சுகம் கொடுத்தாலும் உன் இஷ்டம், துக்கம் கொடுத்தாலும் உன் இஷ்டம் என்று இருப்பான்.

புருஷன் கைவிட்டு விட்டான் என்பதற்காக, ஒரு தர்மபத்னி வேறொரு புருஷனை நினைப்பாளா? (கண்ணகி போன்று தானே நம் பாரத தேசம் முழுவதும் பெண்கள் கற்பை உயிராக நினைத்து, தர்மத்தை மீறாமல் இருந்தனர், இருக்கின்றனர்)

அதுபோல,
"எம்பெருமான் துக்கமே கொடுத்தாலும்,  உன்னுடைய கருணை ஒன்றையே ஆச்ரயித்து இருக்கிறேன்"
என்கிற அர்த்தத்தில், நம்மாழ்வார்,
"நின் அருளே புரிந்திருந்தேன், இனி என் திருக்குறிப்பே" என்று சொல்கிறார்.

ஒரே பாசுரத்தில் திருவேங்கடமுடையானிடம்
சரீரம் மற்றும் ஆத்மாவை, ஒரு பதிவிரதை தன் கணவனிடம் தன்னை சமர்பித்து, அவன் 'கருணையை', அவன் 'அன்பை' எதிர்பார்ப்பது போல, சரண் அடைகிறார்.

திருவேங்கடமுடையானை தரிசிக்கும் போது, பெரியாழ்வார் பாசுரத்தை நாமும் அர்த்தத்துடன் ஸ்மரிக்கலாம்.

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.


Saturday 14 July 2018

Ramanuja Prediction and how earth looks like. உலகம் எப்படி இருக்கிறது ? சஞ்சயன் கூறினான். ராமானுஜர் வரைந்த படம்

உலகம் எப்படி இருக்கிறது? என்று, இந்த ஸ்லோகத்தை சஞ்சயன் த்ருதராஷ்டிரனிடம் சொல்கிறார்.

After getting divine vision from Vyasa, sanjaya was able to see the entire world. 
He says how the earth looks like? from the moon view to dhritharashtra.




யதா ஹி புருஷ: பஸ்யேதா 
தர்ஸே முகமாத்மந: !
ஏவம் சுதர்சன த்வீபோ 
த்ருஷ்யதே சந்திர மண்டலை !!
த்விரம்ச பிப்பல தத்ர !
த்விரம்சே ச சசோ மஹான் !!    
       - பீஷ்ம பர்வா - மகாபாரதம்.

यथा हि पुरुषः पश्येदादर्शे मुखमात्मनः।
एवं सुदर्शन द्वीपो दृश्यते चन्द्रमण्डले॥
द्विरंशे पिप्पल: तत्र द्विरंशे च शशो महान्।।-
(भीष्म पर्व, महाभारत)






"ஒரு மனிதன் தன் முக பிம்பத்தை கண்ணாடியில் பார்ப்பது போல, நான் இந்த பூமியை இந்த அண்டத்தில் இருந்து பார்க்கிறேன்.

இந்த உலகம் பார்க்க ஒரு பக்கம் அரச மர இலை போலவும், மறுபக்கம் முயல் போலவும் தெரிகிறது. "
இவ்வாறு சஞ்சயன் கூறினான்.

Here, Sanjaya says "Just like the way a human looks at the mirror and see his inverted image, i could clearly see this earth. 
I see that earth looks like a 2 peepal leaf and like a rabbit in other side.

1017ADல் ஸ்ரீபெரும்புதூரில், அவதரித்த ராமானுஜர் இந்த ஸ்லோகத்தை கவனித்து ஒரு படம் வரைந்து காட்டினார்.

Ramanuja, an incarnation of Adishesha born around 1017AD in Shriperumbudhur, near Chennai, Tamilnadu, while reading this sloka draw this picture. 
That time, people might have just trusted the words of Sanjaya and picture of ramanuja...

With current advancement, it is proved to be true. The words of Sanjaya during end of Dwapara Yuga is exactly the earth.  
When we invert the picture drawn, we see the truth. 
அப்போது இதை புரிந்து கொண்டார்களோ இல்லையோ, இன்று நாம் கொஞ்சம் கவனித்தால், சஞ்சயன் எப்படி இந்த உலகை பார்த்தான் என்பது புரியும்

வாழ்க ஹிந்துக்கள்.  
Hail Hindus. Hail Sanathana Dharma.  Hail the divine vision. Hail Bharata. Hail Vyasa bhagavan. Hail ramanuja.





Tuesday 10 July 2018

"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்? இது ஈன சொல்லா? முதலில் இது தமிழ் வார்த்தையா? தெரிந்து கொள்ள வேண்டாமா? அலசுவோம் ....

பிராம்மணஸ்ய முகம் ஆஸீத் ! (பிராம்மணன் கடவுளின் முகம் போன்றவர்கள்)

பாஹு ராஜன்ய க்ருத: ! (நாட்டை காக்கும் வீரன், அதாவது க்ஷத்ரியன் கடவுளின் தோள் போன்றவர்கள்)

ஊரு ததஸ்ய யத் வைஸ்ய: ! (வியாபாரம் செய்யும் வைஷ்யன், கடவுளின் தொடை போன்றவர்கள்)

பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: ! (விவசாயம் செய்யும், அனைவருக்கும் உழைக்கும் சூத்திரன் (Sudhra), கடவுளின் கால் போன்றவர்கள்)
Purusha Suktam -  Rig Vida



பொதுவாக இன்றைய தமிழனுக்கு
எது தமிழ்? எது சமஸ்க்ரிதம்? எது ஆங்கிலச் சொல்?
என்பது தெரியவில்லை  என்பது உண்மை.
இந்த அறியாமை தவறல்ல.
ஆனால், இந்த அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, நம் புத்தியை குழப்பி விட ஒரு கூட்டம் 1940ல் இருந்து வருகிறது.
இது நமக்கு அவமானம்.

Jail, apple, rose போன்ற ஆங்கிலச் சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.

அதேபோல,
கருணாநிதி, கோபாலஸாமி, ராமசாமி, திராவிடம், சூத்திரன் போன்ற சமஸ்க்ரித சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.

தமிழனின் இந்த கேளிகூத்தான புலமையை, கடந்த 60 ஆண்டுகளாக தமிழன் என்ற போர்வையில் ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர், போலி தமிழர்கள்.

திராவிடம் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு, தமிழில் "மூன்று கடல் சூழ்ந்த நிலபரப்பு" என்று பொருள்.

இந்த சொல்லை கர்வபட்டு சொல்வதால், தமிழனுக்கு மட்டும் என்ன பெருமை வந்துவிட போகிறது?

'திராவிடம்' என்ற சமஸ்கிருத சொல்லை பயன்படுத்தி கொண்டு, சமஸ்கிருத மொழியை எதிர்க்கும் போலி தமிழர்களை என்ன சொல்வது?
'திராவிடம்' சமஸ்கிருத சொல், இது இடத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்துள்ள, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் "நான் திராவிடன்" "நான் திராவிடன்" என்று புலம்புவது இல்லை.

அதே போல,
பிராம்மணன் - பகவானின் முகம் போன்றவன்.
க்ஷத்ரியன் -பகவானின் தோள் போன்றவன்.
வைஷ்யன் - பகவானின் தொடை போன்றவன்.
சூத்திரன் - பகவானின் கால்  போன்றவன்.
என்ற ஸ்லோகமும் இந்த போலி தமிழ் கூட்டத்தால் தவறாக திரித்து பேசப்படுகிறது.

பகவானின் அங்கங்கள் தான், "நாம் அனைவருமே" என்பதில் என்ன இழிவு இருக்க முடியும்?

பிராம்மணனின் (Spritual Person) தொழில் வேதம் ஓதுவது. அவன் பலம் வாக்கில் இருப்பதால், பகவானின் அங்கத்தில் முகம் போன்றவன் என்று சொல்கிறோம்.

க்ஷத்ரியன் (Protection force) தொழில் நாட்டை காப்பதிலும், உதவி செய்வதிலும் இருப்பதால், பகவானின் தோள் போன்றவன் என்று சொல்கிறோம்.

வைஸ்யன் (Business people) தொழில், அமர்ந்தபடி பல வியாபாரங்கள் செய்து, வேலை ஆட்கள் கொண்டு வேலையை முடித்து பொருள் திரட்டுவதால், ஆதலால், பகவானின் தொடை போன்றவர்கள் என்று சொல்கிறோம்.

சூத்திரன் (Employee, Farmer) தொழில், தானே விவசாயமோ, அல்லது பொதுவாக வைஸ்யன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று அனைவருக்கும் உழைத்து, அதில் அவர்கள் சம்பளமாக கொடுக்கும் பணத்தை கொண்டு தானும் வாழ்ந்து, அவர்களுக்கும் உதவியாக இருப்பது.
ஆதலால், பகவானின் கால் போன்றவர்கள் என்று சொல்கிறோம்.


ஒரு மனித சமுதாயத்தை ஒழுங்காக நடத்த,
1. நாட்டை காக்க, சட்ட ஒழுங்கை காக்க கொஞ்சம் க்ஷத்ரியன் (protection force) தேவை.

2. அனைத்து மக்களும் நியாயம் அநியாயம், நல்லது கெட்டது, ஆன்மீகம், கடவுள் சிந்தனை பெற, கொஞ்சம் ப்ராம்மணர்கள் (spiritual inclined people) தேவை.

3. பொருளாதாரம் வளர, கொஞ்சம் வியாபாரிகள் (businessman) தேவை.

4. வியாபாரியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, நியாயமாக உழைக்க அதிகமாக சூத்திரர்கள் (Employee) தேவை.






இப்படி மனித சமுதாயம் அமைக்கப்படும் போது, அந்த நாடு "பாதுகாப்புடன், தர்மத்துடன், முன்னேற்றம்" என்ற பாதையில் வீறு நடை போடும்.

ஒரு நாட்டில்,
க்ஷத்ரியன் குறைவாக இருந்தாலும்,
பிராம்மணன் குறைவாக இருந்தாலும்,
வைஷ்யன் குறைவாக இருந்தாலும் கூட,
மனித சமுதாயம் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சமாளிக்க முடியலாம்.

ஆனால், சூத்திரன் (Employee, Farmer) எண்ணிக்கை குறைந்தாலோ, அல்லது அவர்கள் வைஸ்யனையோ (Businessman), க்ஷத்ரியனையோ (protection force),
பிராம்மணனையோ (Spiritual) ஆதரிக்க மறுத்தாலோ,
அவனால் மற்ற மூன்று தொழில் செய்பவர்களும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள்.
பிற நாட்டினர் உள்ளே நுழைந்து பெரும் நாசத்திற்கு வித்திட்டு விடும்.

இப்படி மனித சமுதாயத்துக்கு ஆதாரமாக இருப்பதால், 'சூத்திரன்' கால் போன்றவன் என்று சொல்லப்படுகிறது.

'கால்' இல்லாத முடவன், மற்ற உறுப்புகள் இருந்தும் முடங்கி விடுவானல்லவா?.


"கால்" உள்ளவன் மற்ற உறுப்புகள் ஆசைப்படும் இடத்திற்கு அழைத்து செல்வது போல,
சூத்திரன் (farmer, employee) தன் உழைப்பால், மற்ற தொழில் செய்பவர்கள் செய்ய ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்கிறான்.

போருக்கு செல்லும் படையை ஒரு வண்டியில் அழைத்து செல்லும் ஒரு சூத்திரன் (employee) எல்லையில் இறக்கி விட உதவி செய்கிறான்.
இப்படி சூத்திரன் செய்யும் உதவிக்கு, க்ஷத்ரியன் (Army) இவனுக்கு ஆபத்து நேராமல் பார்த்து கொள்கிறான்.

"சூத்திரன்" என்ற சொல்லை பற்றி மேலும் அலசுவோம்....

பிராம்மணன் மட்டும் என்ன உயர்வா? நாங்கள் மட்டும் என்ன தாழ்வா?
நாம் அனைவரும் அந்த கடவுளின் பிள்ளைகள் தானே?
ஏன் நாங்கள் மட்டும் தலையாக இருக்க கூடாது?
என்று இந்த போலி தமிழர்கள் கூட்டம், நம் ஹிந்து மதத்தை கேள்வி கேட்பதாக நினைத்து, சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து, இந்த கேள்வியை கேட்கின்றனர்.

இதே மடத்தனமான கேள்வியை, சரித்திரத்திலும் சிலர் கேட்டு  இருப்பதை நாம் காணலாம்.

கஸ்யபருக்கு பிறந்தவர்கள் அசுரர்கள், தேவர்கள்.
ஒரு அப்பனுக்கு ஒரு நல்ல பிள்ளை, ஒரு திருட்டு பிள்ளை இன்று வரை பிறக்க தான் செய்கிறது.
கஸ்யபர் மட்டும் விதி விலக்கா?

ஒரே தந்தை என்றாலும், அசுரர்களும், தேவர்களும்  குணத்தால் வேறுபட்டார்கள்.

ஒரு சமயம் பாற்கடலில் அம்ருதம் கிடைக்க வாசுகி என்ற பாம்பை மலையில் சுற்றி கடைந்து அம்ருதம் எடுக்க தயார் ஆனார்கள்.

அசுரர்களுக்கு வால் பகுதியை பிடிக்க சொல்லி, தேவர்கள் பாம்பின் தலை பக்கம் சென்றார்கள்.

ப்ராம்மணன் மட்டும் முகத்தில் வந்தான், சூத்திரன் காலில் வந்தானா? 
என்று இன்று கிளப்பி விடும் கூட்டம், இதே போன்ற கேள்வியை அன்றே கேட்டனர் என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

அசுரர்கள் இப்படி பாம்பின் வாலை பிடித்து இழுக்க வேண்டும் என்றவனுடன், முரண்டு பிடித்தனர்.

"ஏன் நாங்கள் பாம்பின் கால் பக்கம் இருக்க வேண்டும்?
அது என்ன தேவர்கள் மட்டும் தலை பக்கம்?
நாங்கள் என்ன தேவர்களை விட தாழ்ந்தவர்களா?
இருவருமே கஸ்யபருக்கு தானே பிறந்தோம்?
நாங்கள் தலை பக்கம் நின்று தான் கடைவோம்"
என்று வேலை நிறுத்தம் செய்தனர்.

முட்டாள் தனமாக இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்த்து தான், தேவர்கள் இவர்களை வால் பக்கம் நிற்க சொன்னர்கள்.
எதிர்பார்த்தது போலவே,
அசுரர்கள் பிடிவாதம் செய்ய, பாம்பின் தலை பக்கம் நிற்க சொல்லி, தாங்கள் அனைவரும் வால் பக்கம் சென்றனர்.

முட்டாள் அசுரர்கள், பாம்பை வைத்து மலையை கடைய, ஒவ்வொரு இழுப்புக்கும் அது விஷத்தை கக்கியது.
வீம்பு செய்து வாங்கியதால், மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல், அசுரர்கள் நிலை ஆனது.

இது போன்ற காழ்ப்புணர்ச்சி அசுர ஸ்வபாவம் தான், இந்த போலி தமிழர்கள் நம்மிடையே விதைக்கிறார்கள்.

உண்மையான அர்த்தம் மகத்துவம் வாய்ந்தது.

"சூத்திரம்" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு,
தமிழில் சொல்ல வேண்டுமென்றால், "அடிப்படை விதிமுறை" என்று அர்த்தம் வருகிறது.

ஆங்கிலத்தில் "Formula" என்று சொல்வார்கள்.



FORMULA:
e=mc2 என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சூத்திரம் (formula) என்பார்கள்.

சூத்திரத்தை கொண்டுதான், உலகம் இயங்குகிறது.

e=mc2 என்ற சூத்திரம் தன் பணியை ஒழுங்காக செய்யவில்லையென்றால், உலகம் அழிந்து விடும்.
திடீரென்று,
சக்தி (e) தன் சூத்திரத்தை மாற்றிக்கொண்டு mc4 என்று ஆனால், உலகம் அழிந்து விடும்.

இப்படி அடிப்படையாக இருக்கும் இதையே,  சூத்திரம் என்று சொல்கிறோம். Formula என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

இந்த வார்த்தையை கொச்சை படுத்திய கூட்டம், இன்று உள்ள 'போலி தமிழர்கள்'.

இவர்களுக்கு
எது தமிழ்? எது ஆங்கிலம்? எது சமஸ்கரிதம்? என்று தெரியாது.
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி, "நம் அறிவை வளர்த்து கொள்வது" ஒன்றே தான்.

அடிப்படை விதிமுறையாக (formula), "மனித சமுதாயத்தில்" விவசாயம் (farmer) மற்றும் மற்றவர்களுக்காக உழைக்கும் (employee) மனிதர்களை, மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள் என்று சொல்கிறோம்.

விவசாயம் செய்யாமல், வேலைக்கு செல்லாமல், "மனித சமுதாயம்" செயல் படவே முடியாது என்பது, கொஞ்சம் அறிவு உள்ளவனுக்கு புரியும்.

90% சதவீத மக்கள், ஒரு வைஸ்யனுக்கோ (businessman), ஒரு ஆன்மீகவாதிக்கோ (spiritual), ஒரு தேசப்பற்று உள்ளவனுக்கோ (protection force), வேலை செய்து, அதற்கு கூலியாக சம்பளம் பெற்று,
தன் குடும்பத்தையும் காப்பாற்றி, சமுதாயமும் ஒரு சீராக நடக்க உதவி செய்கின்றனர்.
சிலர் அதற்கும் மேல் போய், அனைவருக்கும் உயிர் வாழ, "விவசாயம்" செய்து உணவு படைக்கின்றனர்.

"வேலைக்கு செல்லும் அனைவரும்", "விவசாயம் செய்யும் அனைவரும்" இந்த மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள்.
இதில் என்ன சந்தேகம் நமக்கு வர போகிறது?

சூத்திரன் என்ற சமஸ்கிருத சொல்லை, இந்த போலி தமிழர்கள் விட்டு விட்டு, "அடிப்படை விதிமுறை" என்று சொல்லட்டுமே?

இந்த போலி தமிழர்களுக்கு அப்படி என்ன சமஸ்கரித சொல்லில் பற்று?

திராவிடம், சூத்திரன், கருணாநிதி என்ற சமஸ்கிருத சொல்லை மாற்றி, அதற்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே ?

இப்படி ஆதாரமாக உள்ள இந்த விவசாயிகள் (farmer), வேலைக்கு போகுபவர்களை (employee), மனித சமுதாயத்தின் சூத்திரன் என்று சொல்வதை, எந்த புத்திசாலி குறையாக சொல்வான்?

கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு.

நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற சூத்திரம் அவர் கையில் உள்ளது என்பதால், அவருக்கு சூத்ரதாரி என்றும் பெயர் கூட உண்டு.

"உன் குடுமி என் கையில்" என்று சொல்வதும் உண்டு.


சூத்திரன் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு பதிலாக, "மனித சமுதாயத்தின் குடுமி", என்று கூட சொல்லலாமே? போலி தமிழர்கள்.
இனியாவது இந்த சமஸ்கிருத மோகத்தை விடுவார்களா?
எது தமிழ், எது சமஸ்கிருத சொல் என்று புரிந்து கொள்வார்களா போலி தமிழர்கள்?

கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு என்று சொல்லும் போது, சூத்திரன் என்ற சொல் தமிழ் சொல்லா? ஆங்கில சொல்லா? சமஸ்கிருத சொல்லா? என்று கூட புரியாத இந்த போலி தமிழர்கள், ஊரில் உள்ள தமிழர்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.

இவர்களின் புத்தி மழுங்கிய பேச்சில் இருந்து தப்பிக்க, நம் அறிவை வளர்த்து கொள்வதே சிறந்த வழி.

உண்மை அர்த்தத்தை மற்ற ஹிந்துக்களுக்கு சொல்வதே சிறந்த வழி.

Share it, if worth reading..