Followers

Search Here...

Wednesday 12 September 2018

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை யார் ஆள வேண்டும்? ஒரு அலசல்

ஒரு பெரிய மனிதரை சந்திக்க, அவர் வீட்டுக்குள் நாம் சென்றால், அவர் நம்மை வரவேற்பாரா? என்பது சந்தேகமே.
வரவேற்க வேண்டும் என்ற அவசியம் கூட அவருக்கு இல்லை.
இது சகஜம்.
நம்மை எல்லாம் படைத்தவர் நாராயணன்.



அவரை பார்க்க நாம் கோவிலுக்குள் நுழையும் போது, மனிதர்களை போல மதிக்காமல் இருப்பதில்லை நம் பெருமாள்.
வருவது ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரனாக இருந்தாலும் சரி, வந்திருக்கும் நாம் ஒவ்வொருவருக்கும் தீர்த்தம் கொடுத்து, துளசி கொடுத்து, ஜடாரி வைத்து, தன்னை பார்க்க வந்த நம் அனைவரையும், தன் சார்பில் அர்ச்சகரை அனுப்பி உபசாரம் செய்ய சொல்லி, பின் தன் தரிசனத்தையும் தருகிறார்.
முடிந்தால் புளியோதரை, பொங்கல் என்று தன் பிரசாதத்தையும் நமக்கு தருகிறார்.
கேட்கும் நம் பிரார்த்தனைகளையும், நமக்கு நல்லது கெட்டது பார்த்து கிடைக்க அணுகிரஹமும் செய்து விடுகிறார்.
சும்மா அனுப்புவதே இல்லை பெருமாள்.

க்யூவில் நிற்கும் நாம், பெருமாளை ஒழுங்காக பார்த்தோமா, பார்க்கவில்லையா என்று கூட தெரியாது.
ஆனால் தன்னை தரிசிக்க வரும் அனைவரையும் அவர் பாரத்து விடுகிறார்.

திருமலை போன்ற திவ்ய தேசத்தில், தானே விருப்பப்பட்டு அர்ச்ச அவதாரம் செய்த ஸ்ரீனிவாச பெருமாள், தன்னை தரிசிக்க வரும் பக்தனுக்காக தன் பூஜை, தூக்கம் என்று அனைத்தையும் சுருக்கிக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
வரிசை வரிசையாக வந்து கொண்டே இருக்கும் பக்தர்களை அங்கு இங்கு திரும்பாமல், திரை போட்டு கொண்டு விடாமல், "யார் வந்து இருக்கிறார்கள்? யாருக்கு என்ன அனுக்கிரகம் செய்யலாம்?" என்று நின்று கொண்டே இருக்கிறார் ஸ்ரீனிவாச பெருமாள்.
நாம் மூன்று மணி நேரம் நின்றால், அவரோ நம் வருகைக்காக நாம் பிறந்ததில் இருந்து, எப்பொழுது வருவானோ என்று காத்துக்கொண்டு, நின்று கொண்டே இருக்கிறார்.
இதை நினைத்து பார்க்கும் பக்தன், தான் 3 மணி நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?
அவர் நமக்காக, நம்மை காண, நம் பாவங்கள் பொசுக்க, நமக்கு மோக்ஷம் அளிக்க, நின்று கொண்டே இருக்கிறார் என்று புரிந்து கொண்ட பின்னும், ஒரு பக்தன் தான் 3 மூன்று நேரம் நிற்பதை பெரிதாக நினைப்பானா?

தன் பக்தர்கள் வந்து கொண்டே இருக்க, இந்த கூட்டத்தில் தன்னை பக்தன் பார்த்தானோ இல்லையோ, பெருமாள், பக்தனை கடாக்ஷம் செய்கிறார்.

அரை நொடி தரிசனம் பெற்று வெளியே வரும் பக்தனிடம் 'தரிசனம் கிடைத்ததா? என்று கேட்டால்,
பக்தன் 'மனம் திருப்தி அடைந்தது. ஆஹா... அருமையான தரிசனம்  கிடைத்தது' பூரிப்புடன் சொல்கிறான்.

'ஒரு நொடி தானே தரிசனம் கிடைத்தது?' என்று கேட்டால், 'அந்த ஒரு நொடி தரிசனம் கூட சொல்லமுடியாத திருப்தியை தந்து விட்டது' என்கிறான்.

இந்த திருப்தி நம் மனதில் ஏற்பட காரணம், நாம் அவரை பார்த்ததினால் அல்ல, அவர் நம்மை பார்க்கிறார் என்பதினால் தானே ஏற்படுகிறது.

கூட்டம் தினமும் அலைமோதுவதற்கு காரணம், திருமலையப்பன் கருணையே காரணம்.
நமக்கு எது நல்லதோ அதை நடத்தி வைப்பான் ஸ்ரீனிவாசன்.
கோவிலில் அர்ச்சனை செய்பவர், பகவானின் பிரதிநிதி.
உண்மையான பக்தன் தன்னை பார்க்க வரும் போதும், அர்ச்சனை செய்யும் போதும், பெருமாள் அர்ச்சகர் மூலமாக பக்தனின்  பிரார்த்தனைகளை கேட்கிறார். அனுக்கிரகம் செய்கிறார்.

ப்ராம்மணர்கள் எல்லோரும் அர்ச்சகர் கிடையாது, ஆகி விடவும் முடியாது.

அந்த கோவில்களை கட்டிய அரசர்கள் நியமித்த அர்ச்சகர் குடும்பம் மட்டும் தான் இன்று வரை பூஜை செய்கின்றனர். 

பிராம்மணன் மட்டும் சாமியை தொடலாம், நாங்க தொட கூடாதா? என்று கேட்கும் தெய்வ பக்தி இல்லாத, பொறாமை மற்றும்  காழ்ப்புணர்ச்சி மட்டுமே உடையவர்களுக்கு....

பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைந்து மூலவரை தொட்டு பார்த்து இருக்கிறீர்களா? பிராம்மணன் எல்லோரும், கோவில் கற்பக்ரஹத்தில் நுழைவதும் இல்லை, தெய்வத்தை தொடுவதுமில்லை.
அர்ச்சகரை தவிர, ப்ராம்மணனாக இருந்தாலும், பகவானை தொட யாருக்கும் அனுமதி இல்லை.
அர்ச்சகரின் மனைவி கூட கோவில் மூலவரை தொட முடியாது.

அதேபோல, காளி கோவிலில் ப்ராம்மணன் இல்லாத மற்றவர்கள் அர்ச்சகர்களாக இருக்கின்றனர்.
அவர்களை தவிர, பிராம்மணன் கூட அம்பாளை தொட அனுமதி இல்லை.

தெய்வத்தை வழிபட யாருக்கும் அனுமதி உண்டு.
ஆனால், ஆகம விதிப்படி கோவிலில் அமைந்த தெய்வத்தை, தொடுவதற்கு அனுமதி அனைவருக்கும் கிடையாது.

யாவருக்கும் பெருமாளை தொட வேண்டும் என்கிற ஆசை இருக்கும் என்பதால் தானே, ஒவ்வொரு வீட்டிலும் அதே போன்ற பெருமாளை பஞ்ச லோகத்தில் செய்து வழிபட அனுமதித்தனர். இது மறந்து விட்டதா இந்த பொறாமை புத்தி உடையவர்களுக்கு?

சிறிய விக்ரஹம் முதல் பெரிய விக்ரஹம் வரை, வீட்டில்  வழிபடலாமே, பக்தி இருந்தால்.
தியாகப்ரம்மம் தன் கீர்த்தனைகள் முழுவதும் தன் வீட்டில் இருக்கும் ராம விக்ரஹத்தை பார்த்து தானே பாடினார். அவர் பக்திக்கு, ராமர் காட்சி கொடுத்தாரே.
தன் வீட்டில் இருக்கும் தெய்வ விக்ரஹங்களுக்கு ஒரு நாள் அபிஷேகம், அலங்காரம் செய்தது கிடையாது இந்த காழ்ப்புணர்ச்சி கொண்ட பொறாமை கூட்டம்.
தன் வீட்டில் இருக்கும் தெய்வத்திடம் அக்கறை கிடையாது, பக்தியும் கிடையாது,
பொறாமை குணத்தினால், ஆழ்வார்கள் பாடிய பெருமாளையும்,  நாயன்மார்கள் பாடிய சிவனையும் கோவிலுக்கு சென்று தொட வேண்டுமாம் இவர்களுக்கு.

இது போன்ற கீழ்த்தரமான மனிதர்கள் கண்டிக்கப்படவேண்டும்.

பணம் இருப்பவர்கள் special entrance வழியாக காசு கொடுத்து, பெருமாளை பார்க்கின்றனர்.
அவர்கள் காசு கொடுத்து சென்றாலும் பொறாமை.
இதில் சம்பந்தப்படாத அர்ச்சகரிடமும் பொறாமை.








அரசாங்கம் கோவிலை கைப்பற்றிய காலத்துக்கு முன், எந்த கோவிலில் இது போன்று க்யூ நடைமுறை இருந்தது?
ஒரு காலத்தில் மீனாக்ஷி கோவிலில் எளிதாக தரிசனம் பார்த்த சமயங்களில் அதே அர்ச்சகர்கள் தானே இருந்தனர்.
இப்பொழுது அரசாங்கம் special entrance, vip entrance என்று காசு வாங்கினால், கோபம் அர்ச்சகரிடமா?

தெய்வத்தின் அனுக்கிரகம் வேண்டும் நமக்கு. ஆனால் அவருடனேயே இருக்கும் அர்ச்சகரிடம் பொறாமை.
தீபாவளி ஆனாலும், புது வருடம் ஆனாலும், தன் குடும்பத்தை விட, தினமும் காலை 4 மணி எழுந்து குளித்து, கோவிலுக்கு நுழைந்து இரவு 10-12 மணி வரை தனக்கு தொண்டு செய்யும் அர்ச்சகரை, 'பிச்சைக்காரன், திருடன், சோம்பேறி' என்று சொல்லும் உங்களை, தெய்வம் தண்டிக்குமா? கொண்டாடுமா?

பொறாமை குணத்தால் உங்கள் முகத்தில் தெரியும் அழுக்கை கண்ணாடியில் பாருங்கள். எத்தனை கீழ் தரமானவர்கள் நீங்கள் என்று புரியும்.

நாத்தீகன் தெய்வத்தை நம்பவில்லை. அவனுக்கு கோவிலை பற்றியும் அறிவில்லை, தெய்வத்தை பற்றியும் அறிவில்லை, அர்ச்சகர் பற்றியும் அறிவில்லை, தெய்வ நம்பிக்கையோடு செல்லும் எவரிடமும் நம்பிக்கை இல்லை.

கோவில், தெய்வம் என்ற விஷயத்தில் சம்பந்தமில்லாத இந்த நாத்தீக கூட்டத்தை, தெய்வநம்பிக்கை உடையவர்கள் மதிப்பதே அவர்கள் வழிபடும் தெய்வத்துக்கு அவமானம்.

மானமுள்ள ஆஸ்தீகன் (எந்த மத தெய்வத்தை வழிபட்டாலும்), நாதீகனை மதிப்பதே, அவரவர்கள் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

"உன் தெய்வமே பொய், உன் நம்பிக்கையே பொய்"
என்று சொல்லும் நாத்தீகன் 'உலகையே உனக்கு வாங்கி தருகிறேன்' என்றாலும், அவனை மதிப்பதே பெரும் பாவம்.
அவன் கொடுத்து நாம் வாங்குவதே, நம் தெய்வத்தை அவமானப்படுத்துவதாகும்.

'உன் தாய் வேசி' என்று சொல்லிவிட்டு, 'நீ நல்லவன்' என்று சொல்பவனை ஒரு நல்ல தாய்க்கு பிறந்தவன் ஏற்றுக்கொள்வானா?
நாத்தீகனுக்கு மரியாதையும், மதிப்பும் கொடுப்பதே ஆஸ்தீகனுக்கு பாவத்தை சேர்க்கும்.

கடந்த 60 ஆண்டுகளில் நாத்தீகனை அரசு பதவியில் அமர்த்தியதன் விளைவை தான் இன்று தமிழகம் பார்க்கிறது.
தமிழை வளர்த்த தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் பாடிய ஓதுவார்கள் ஓரம் தள்ளப்பட்டனர்.
தமிழை வளர்த்த இந்த தெய்வ பாசுரங்களை இவர்கள் நாத்தீக புத்தியால் தடுக்கப்பட்டது.
தமிழ் மொழியை அழித்து, இன்று தமிழை படிக்க தெரிந்த தலைமுறை இல்லாமல் செய்து, கோவில்களில் சொத்துகள் சுரண்டப்பட்டு, கோவில் சொத்துக்கள் அரசுக்கும் மற்ற மதக்காரர்கள் செலவுக்கும் அனுப்பி, கோவில்கள் நிறைந்த தமிழ்நாட்டை, நாத்தீக மடமாக்கி விட்டனர்.

நல்லவனாக இருந்தாலும் அந்த நாத்தீகனை புறக்கணிப்போம்.

ஒரு ஆன்மீக எண்ணம் கொண்ட ஒரு நல்லவன் அரசாள செய்வோம். தெய்வ பாசுரங்கள் மீண்டும் தானே துளிர்க்கும். தமிழ் வளரும்.

தமிழர்கள் அறிவாளிகள் என்பதை உலகம் நம்பிய காலம் போய், இந்த நாத்தீக கூட்டத்தால், "தமிழர்கள் முரண்டு செய்பவர்கள், நாத்தீகம் தலைக்கு எரியதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர்கள், மடையர்கள், மதராசி திருடர்கள்" என்ற பிரமையை நீக்க வேண்டிய கட்டாயம் ஆன்மீக எண்ணம் கொண்ட அனைத்து தமிழனுக்கும் உண்டு.

கோவில்கள் நிரம்பிய தமிழகத்தை ஆன்மீகவாதியே ஆள வேண்டும்.
பதவி ஆசை பிடித்த நாத்தீக கூட்டம் ஒடுக்க பட வேண்டும்.

பெருமாளை விட்டு விடாமல், எப்பொழுதும் கூடவே இருந்து கைங்கர்யம் செய்யும் அர்ச்சகருக்கு 5 ரூபாய் தட்டில் போட்டால் குறைந்து விடுவோமா?
தெய்வத்தின் முன் நின்றும் பொறாமை குணம் நமக்கு வேண்டுமா?
நாம் தரிசனம் செய்ய செல்லும் பகவானை, கூடவே இருந்து பார்த்து கொள்ளும் அர்ச்சகர் மீது மரியாதை வேண்டாமா?
நம் குறைகளை பெருமாளிடம் போய் சேர்க்கும் அர்ச்சகரிடம் பொறாமை உள்ளவனுக்கு, அடுத்த பிறவியில் மனித பிறவி கிடைக்குமா?
ஊரில் உள்ளவன் எல்லாம், படித்து டாக்டர் ஆகலாமா? வெளிநாடுகள் செல்லலாமா? சைடு பிசினஸ் பண்ணலாமா? என்று பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்க,
தான் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தாலும், ஏழையாக இருந்தாலும் பரவாயில்லை, குடுமி வைத்து இருப்பதை பார்த்து கேலி செய்தாலும் பரவாயில்லை, ஊர் மக்கள் அனைவரும் காலி செய்து, பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்றாலும் பரவாயில்லை, கோவிலை சுற்றி இருந்த  ஹிந்துக்கள் மானங்கெட்டு தன் வீட்டை பிற மதத்த்தவனுக்கு  விற்று விட்டு கோவில் உத்ஸவம் நடத்த முடியாமல் செய்தாலும் சரி, இந்த கோவிலே எனக்கு கதி, கல்யாணம் செய்து கொள்ள பெண் கொடுக்க மறுத்தாலும் இந்த கோவிலில் தீபம் ஏற்ற நான் என் வாழ்க்கையை தியாகம் செய்கிறேன்' என்று இன்றும் 'பெருமாள் ஒன்றே சரணம்' என்று வாழும் அர்ச்சகர்கள் மீது பொறாமையா?
இவர்களிடம் நீங்கள் காட்டும் பொறாமை உங்கள் வம்சத்தையும் சேர்த்து சபிக்குமே!

108 திவ்ய தேசங்களில் திருப்பதி ஒன்று தான் இந்த பொறாமை குணம் கொண்டவர்களுக்கு தெரியுமா?
எத்தனை கோவில்கள் கும்பாபிஷேகம் கூட செய்யப்படாமல், ஏழை அர்ச்சர்கள் எதையும் எதிர்பார்க்காமல் தினமும் காலையிலிருந்து இரவு வரை உள்ள சேவைகளை செய்து கொண்டு இருக்கின்றனர்.
தவ வாழ்க்கை வாழும் அர்ச்சர்கள் குடும்பத்தை இந்த பொறாமைக்காரர்கள் கண்டதுண்டா?
காஞ்சியில் உள்ள திவ்ய தேச கோவில்களின் நிலைமையும், கும்பாபிஷேகம் கூட செய்ய முன் எடுக்காத இந்த ஹிந்துக்களின் நடுவே, அந்த கோவில் உள்ள பெருமாளுக்கு, பூஜைகளை காலம் தவறாமல் செய்து கொண்டு, வரும் ஒரு சில பக்தர்களிடமும் "கோவில் கும்பாபிஷேகத்திற்காகவாவது முயற்சி செய்யுங்களேன்" என்று கூட கேட்காமல், பெருமாளை காட்டி, துளசியும் தீர்த்தமும் கொடுத்து உபசாரம் செய்கிறார்களே. இவர்களிடம் கூட பொறாமையா?

பெருமாளுக்கு, பணக்காரனும் ஒன்று தான், ஏழையும் ஒன்று தான்.
அவரை பொறுத்தவரை, தன் மரியாதையை, வரவேற்பை தராமல் இருப்பதில்லை.

பணம் கொடுத்து பார்த்தத்தினால் மட்டும் பகவான் தரிசனம் தந்து விடுவாரா?
தெய்வத்தை பொறுத்தவரை 'பக்தி இருக்கிறதா?' என்று தான் நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

பக்தி இல்லாமல், கோவிலுக்கு வந்து பணம் கொடுத்து வேகமாக தரிசனம் செய்தாலும், ஒன்றும் கொடுக்காமல், சாதாரண க்யூவில் ஒரு மணி நேரம் நின்று, தரிசனம் செய்தாலும்,
பகவான் மகிழ்ச்சி அடையப்போவதில்லை.

உண்மையான பக்தி உள்ளவன், தரிசனம் செய்வதே பாக்கியம் என்று கருதுவான்.



உண்மையான பக்தி உள்ளவன், பணக்காரன் காசு கொடுத்து வேகமாக தரிசனம் பெற்று செல்வதை பார்த்து கூட பொறாமைப்பட மாட்டான்.
மாறாக, தான் வெகு நேரம் கோவிலில் அவருக்காக காத்து இருந்து தரிசிப்பதை ப்ரயோஜனமாக கருதுவான்.

பகவான் சிலருக்கு வேகமாக தரிசனம் தந்து விட்டு, அனுப்பி விடுவார்.
பக்தனான தன்னை கொஞ்ச நேரம் தன் சந்நிதியில் நிறுத்தி, தன்னிடம் கொஞ்சம் அதிக நேரம் இங்கே இருக்க வைத்த கருணையை நினைப்பான்.
பக்தன் க்யூவில் காத்து இருந்தாலும், "பெருமாள் தன்னை இங்கேயே தன் சந்நிதியில் கொஞ்ச நேரம் நில் என்று சொல்கிறார் போலும்" என்று நினைத்து அதிலும் ஆனந்தப்படுவான்.

பொறாமை குணம் கொண்ட, பக்தி இல்லாதவன், எவனோ காசு கொடுத்து பார்த்தான் என்று, அர்ச்சகரிடமும், காசு கொடுத்து பார்த்தவனிடமும், அரசிடமும் கோபப்பட்டு, இறுதியில் கடவுளிடமும் கோபப்பட்டு, சாபத்தை வாங்கி கொள்கிறான்.

பொறாமை குணத்தை விட்டு, பக்தியை வளர்த்துக்கொள்வோம்.

தமிழ்நாட்டை இனி ஆன்மீக எண்ணம் கொண்டவர்களே ஆள அனுமதிப்போம்.

கோவிலில் பாசுரங்கள் மீண்டும் புத்துயிர் பெற செய்வோம். தமிழை எப்படி வளர்த்தோமோ, அதே போன்று மீண்டும் வளர்ப்போம்.

இடிந்து போன நிலையில் உள்ள ஆயிரக்கணக்கான தமிழக  கோவில்களை புதுமை படுத்துவோம்.

காட்டுவாசி போன்ற, நாத்தீகம் பேசும் மடையர்கள் அல்ல தமிழர்கள்,
இறையாண்மை உள்ள தமிழக மக்கள் என்ற உண்மையை மற்ற மாநில அரசுக்கும், மக்களுக்கும்  காட்டுவோம்.

கூடி வாழ்வோம்.

ஹிந்துவாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
  • கோவில்கள் கொட்டி கிடக்கும் தமிழகத்தில்,
  • 63 நாயன்மார்கள் பிறந்த தமிழகத்தில்,
  • 12 ஆழ்வார்கள், ராமானுஜர், ஸ்ரீ ராகவேந்திரர் போன்ற மகான்கள் அவதரித்த தமிழகத்தில்,
  • அகஸ்தியர் போன்ற ரிஷிகள் அவதரித்த தமிழகத்தில்,
  • ஆயிரக்கணக்கான சித்தர்கள் அவதரித்த தமிழகத்தில்,
பிறந்தவர்கள் என்று பெருமை கொள்வோம். புரிய வைப்போம்.



நாத்தீகம் பேசுபவனை தலையெடுக்க விடுவதே தமிழகத்தின் கலாச்சாரத்தையும், நம்பிக்கையையும், ஆயிரக்கணக்கான கோவில்களையும் அவமானப்படுத்தியதாகும்.
ஆன்மீகம் துளிர்க்க செய்வோம்.
ஆன்மீக அரசியலை வரவேற்போம்.
ஆன்மீக எண்ணம் கொண்ட நல்லவர்களுக்கு துணை நிற்போம்.
தமிழை காப்போம்.




Friday 7 September 2018

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு". யோகம் என்றபொருள் என்ன?

யோகம் என்ற இந்த சமஸ்கரித சொல்லுக்கு "சேர்க்கை" என்று தமிழில் பொருள் கொள்ளலாம்.

ஒரு புத்தகத்தை, நாம் மீண்டும் மீண்டும் படிக்கும் போது, அந்த விஷயங்கள் நம் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக சேருகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.

ஒரு விஷயத்தை, தொடர்ந்து செய்யும் போது, ஒரு சமயத்தில் படித்தது எல்லாம் இதயத்தில் சேர்ந்து விடுகிறது.
இந்த சேர்க்கையை தான் 'யோகம்' என்று சொல்கிறோம்.
இதயத்தில் பதிந்துவிட்ட பின், அதுவே - ஸித்தி பெற்ற நிலை.
ஒரு விஷயத்தில் ஸித்தி அடைந்தவனை "ஸித்தன்" என்கிறோம். யோகி என்கிறோம்.

ஸித்தி பெற்ற (மனதில் பதிந்து விட்ட) நிலையில், வெளி புத்தகம் இனி தேவையில்லை என்ற நிலைக்கு வருகிறான்.
தானே புத்தகம் ஆகிறான்.
புத்தகத்தை விட ஆச்சர்யமாக விளக்கி சொல்லும் அளவுக்கு ஆற்றல் பெறுகிறான்.

அவரவர் தகுதி, திறமைக்கு ஏற்ப, ஒவ்வொரு நிலையில் இந்த யோகம் ஏற்படுகிறது.

ஒரு மாணவனுக்கு, ஒரு முறை ஒரு புத்தகத்தை படித்தாலே அது மனதில் சேர்ந்து (யோகம்)  விடுகிறது.
இன்னொரு மாணவனுக்கு பத்து முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.
ஒரு மாணவனுக்கு ஆயிரம் முறை திரும்ப திரும்ப ஒரு புத்தகத்தை படித்த பின், அது மனதில் சேர்ந்து (யோகம்) விடுகிறது.

அவரவர் தகுதி, திறமை அடிப்படையில் அனைவரும் யோகியாக முடியும், ஆனால்  முயற்சியில் தான் வேறுபாடு உள்ளது என்று தெளிவாக சொல்வது சனாதன தர்மம் என்ற இன்றைய ஹிந்து மதம்.

அனைவரும் ஒரு ஜென்மத்தில் மோக்ஷம் அடைவார்கள் என்று சொல்லும் மதமும், ஹிந்து மதம் தான்.
'நிரந்தர நரகம் செல்வான்' என்று உளராத மதம், ஹிந்து மதம்.

மீண்டும் மீண்டும் ஒரே காரியத்தை செய்யும் பொழுது, அந்த விஷயம் மனதில் சேருகிறது (யோகம்).
ஒரு சமயம் ஸித்தி ஆகிறது.
எப்பொழுது யோகம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும் என்பது நம் தகுதி, திறனை பொறுத்தது.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால், நமக்கே நம் திறன், தகுதி என்ன? என்று கண்டுபிடிக்க முடியாது.

எத்தனை தடவை மீண்டும் மீண்டும் முயற்சி செய்யவேண்டும்?
எப்பொழுது ஞானம் (இந்த சேர்க்கை) நமக்கு ஸித்தியாகும்? என்பது நம்மால் கணிக்க முடியாது.

இதன் காரணமாக தான், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
"கர்மன் ஏவ அதிகாரஸ்யே,
மா பலேஷு கதாசன |"
என்று சொல்லும் போது,
"உன் கடமையை செய்து கொண்டே இரு" என்கிறார்.

"பலன் எப்பொழுது கனிய வேண்டுமோ அப்பொழுது தானாக கனிந்து விடும்.
முயற்சி செய்து கொண்டே இரு" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

பகவத் கீதையில் இல்லாத உபதேசங்கள் உண்டா? ஸ்ரீ கிருஷ்ணரை தெய்வம் என்று புரிந்து கொள்ளாதவன், மனித வாழ்க்கையை வீண் செய்கிறான்.

இந்த யோகம் என்ற சேர்க்கை பல உண்டு.
ஒரு புத்தகத்தை திரும்ப திரும்ப படித்து, அதன் விஷயங்களை தனக்குள் சேர்ப்பவன் (யோகம்), கல்வி யோகி ஆகிறான்.

பல வித யோகத்தை(சேர்க்கை) பற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொல்கிறார் என்று அறிகிறோம்.
"பகவானாகிய தன்னை அடைய, பல வழிகளை சொல்கிறார்.
பக்தி யோகம்,
கர்ம யோகம்,
ஞான யோகம் 
என்று பல யோக வழிகள் பற்றி சொல்கிறார்"

பக்தி யோகம் = ஸ்ரீ கிருஷ்ணனிடம் அன்பை (பக்தியை) எப்பொழுதும் நம் மனதில் சேர்ப்பதே பக்தி யோகம்.
செய்த பக்தியை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

கர்ம யோகம் = ஒழுக்கமான செயலை (கர்மா) எப்பொழுதும்  சேர்ப்பதே கர்மயோகம்.
செய்த கர்மாவை, பகவானிடம் ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

ஞான யோகம் = உலகம் நிரந்தமற்றது, ஆத்மாவே நான் என்ற உண்மையான அறிவை (ஞான) எப்பொழுதும் சேர்ப்பதே ஞானயோகம்.
இந்த ஜீவாத்மா, பரமாத்மாவின் அங்கம் என்று அறிந்து பகவானிடம் தன்னை ஒப்படைத்து விடுவது மோக்ஷத்திற்கு வழி வகுக்கும்.

அதில்,
* கர்ம யோகத்துக்கு 'ஆசாரம்' அடிப்படை தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.
உள்ளும் புறமும் ஒழுக்கமாக இருந்தால், கர்ம யோக வழியில் சென்று, பகவானை அடையலாம் என்கிறார்.

* பக்தி யோகத்துக்கு 'திடமான விசுவாசம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகமே எதிர்த்து நின்றாலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இருந்தால், பக்தி யோக வழியில் சென்று, பகவானான என்னை அடையலாம் என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

* ஞான யோகத்துக்கு 'திட  வைராக்கியம்' தேவை என்று வலியுறுத்தி சொல்கிறார்.
உலகம் பொய், நாம் நிச்சயமாக இந்த உடலை விட்டு ஒரு நாள் வெளியேறி விடுவோம். உலகம் நம்மை பொறுத்தவரையாவது  நிரந்தரமற்றது என்று எப்பொழுதும் நினைவில் கொண்டு, சுகம் துக்கம், மானம் அவமானம், வெற்றி தோல்வி, ஆரோக்கியம் ரோகம், எல்லாம் வந்தால் வரட்டும், கவலையில்லை என்று வைராக்கியத்தோடு இருந்தால், ஞான யோக வழியில் சென்று, பகவானை அடையலாம்.

நம் கண்ணுக்கு தெரியாத  தெய்வத்திடம் "திடமான நம்பிக்கையுடன் அன்பு (பக்தி) வை"
என்று பக்தி யோக முறைக்கு அடிப்படையாக சொல்லப்படுகிறது.

கண்ணுக்கு எதிரே தெரியும் ஒருவரிடம் அன்பு காட்டவே, நம்மால் முடியவில்லை.




பக்தி யோகம் என்ற முறையிலோ, 'கண்ணுக்கு இன்னும் புலப்படாத பகவானிடம் அன்பு வை' என்கிறது.

ஒருவனை பார்த்து பழகி கூட, நமக்கு அன்பு வராமல் இருக்கிறது, அது எப்படி பார்க்க முடியாத தெய்வத்திடம் அன்பு வைக்க முடியும்?
ஒருவரை பார்க்காமல், பேசி பழகாமல் அன்பு வைப்பது என்பது சாதாரண விஷயமில்லையே.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தி (அன்பு) இல்லாமல், பக்தி யோகம் செய்வது வீண்.

பகவானிடம் திடமான நம்பிக்கையுடன் கூடிய பக்தியுடன் (அன்பு), பக்தி யோகம் செய்தால், பகவான் நம்மிடம் படிப்படியாக தான் இருப்பதை உணர வைப்பார், பேசுவும் செய்கிறார். நம் பாரதத்தில் பிறந்த எண்ணிலடங்கா மகான்களின் சரித்திரம் இதற்கு சான்று.

பிரகலாதன் என்ற சிறுவனுக்கு அடிப்படையாக இருந்தது இந்த திட நம்பிக்கையே.
கஷ்டம் வந்த காலத்திலும், பகவான் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையை துளி கூட விடவில்லை.
இந்த திட நம்பிக்கையை மனதில் சேர்த்து சேர்த்து(யோகம்) வைத்து இருந்தான் பிரகலாதன்.
இதற்கு பலனாக,  நாராயணன் நரசிம்மமாக காட்சி கொடுத்தார்.

பக்தி யோகம் செய்ய, குருவின் அனுக்கிரகம் தேவை. குரு இல்லாமல் நமக்கு இந்த திட நம்பிக்கை பகவானிடம் வரவே வராது.

காட்டுவாசியிடம் போய் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
நாகரீகம் உள்ள ஒருவனிடம் கேட்டாலும் கடவுள் உண்டு என்பான்.
கடவுள் உண்டு என்று சொல்வது மனிதனுக்கு உள்ள அடிப்படை தகுதி.

மிருகத்திடன் கடவுள் உண்டா? என்று கேட்டால், அதன் மூளைக்கு இது புரியவே புரியாது.
நம்மை ஒருவர் படைத்து, நாம் வாழ உலகத்தையும் படைத்து இருக்கிறார் என்று மிருகத்தினால் உணர முடியாது.
ஆதலால் தின்று, தூங்கி, இன விருத்தி செய்து கொண்டு,  இருக்கும் காலம் வரை வாழ்ந்து சாகிறது.

நம்மை எல்லாம் ஒருவர் படைத்து இருக்கிறார் என்று பகுத்து அறியும் புத்தியுடைய மனிதனால் உணர முடிகிறது.
====
கடவுள் உண்டு என்று சொல்லும் இனமே மனிதர்கள் மட்டும் தான்.

மனிதனுக்கு மட்டுமே, அறிவு இருப்பதால் "கடவுள் உண்டு" என்கிறான்.

கடவுள் உண்டு என்று சொல்வது "மனித இயல்பு".

காட்டுவாசியில் ஆரம்பித்து ஹிந்து, முஸ்லீம், பௌத்தன், ஜைன, யூத என்று எவரும் "கடவுள் உண்டு" என்பதை மறுப்பதில்லை.

உலகத்தில் பெரும்பாலான மனிதர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதால் தான், 98 சதவீத மனித சமுதாயம் 'கடவுள் உண்டு' என்று சொல்கிறது.

மீதம் உள்ள மனித சமுதாயம், மிருகத்தின் மூளை அளவுள்ள புத்தி கொண்டுள்ளதால், பயன்படுத்த முடியாத நிலையில், கடவுள் உண்டு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

யோசிக்க முடியாத மிருகத்திடம்  "கடவுள் உண்டு" என்றால் புரியாது.
அதுபோல, சில மனித கூட்டத்துக்கும், யோசிக்கும் திறன் இல்லாமல் போவதால், அவர்களுக்கும் புரிவதில்லை.
இவர்களை கண்டு பரிதாபப்படலாம். அவ்வளவு தான்.

"கடவுள் இல்லை" என்று மிருகம் அளவிற்கு மூளை உள்ளவன் சொல்வதை ஆதரிப்பவன் ஹிந்துவாக இருந்தாலும், இஸ்லாமியனாக இருந்தாலும் அவன் 'தன் உள்ளுணர்வை, தன் அறிவை, தன் தெய்வத்தை' அவமானப்படுத்துகிறான் என்று தான் சொல்ல வேண்டும்.

"கடவுள் இல்லை" என்று சொல்பவன் அறிவில்லாதவன். அதாவது முட்டாள் மிருகம்.

மிருகத்திற்கு கடவுள் இருப்பது புரியாமல் இருப்பதற்கு காரணம் அது கடவுளை நேரில் பார்த்ததில்லை. பேசியதில்லை.

ஒரு நாய், தன் எஜமானனிடம் அன்பு செலுத்துவதற்கு காரணம், அவனை அது பார்த்தும், அவன் பேச்சை கேட்டும் இருக்கிறது.
கேட்டதாலும், பார்த்ததாலும் தான் அன்பு வருகிறது மிருகத்திற்கு.
பார்க்க இயலாத விஷயங்களில் மிருகத்திற்கு அன்பு வராது.

இதே போல, "கடவுள் இல்லை" என்று சொல்லும் கூட்டமும் மிருக அளவு கொண்ட புத்தி உடையவர்கள்.

நன்றாக கவனித்தால், இந்த முட்டாள் மிருக அளவு புத்தியுடைய, மனித கூட்டம் மட்டுமே "கடவுளை காட்டு.  காட்டு.. காட்டு" என்று கேட்பார்கள்.

மிருகத்தை போன்று, இவர்களும் பார்த்தால் தான், அன்பு வைக்க முடியும், நம்ப முடியும் என்கிற அளவில் மூளை உள்ளவர்கள்.

மனிதனால் மட்டுமே, கண்ணால் காணமுடியாவிட்டாலும், பேசிக்கொள்ள முடியாவிட்டாலும், அறிவை கொண்டு மட்டும் ஒருவனிடம் அன்பு செலுத்த முடியும்.

ராஜசோழன், திருவள்ளுவர், வீர சிவாஜி, ராமானுஜர், மஹாத்மா காந்தி இன்று இல்லை. நாம் பார்த்ததும் இல்லை.
விவேகானந்தர் இன்று இல்லை.
இன்று இருக்கும், நமக்கு பிடித்த தேச தலைவர்களை கூட நாம் நேரில் கண்டது இல்லை, பேசியதும் இல்லை.
இருந்தாலும் அவர்கள் நாட்டுக்கு செய்த சேவை, நமக்காக இவர்கள் செய்த தியாகம் போன்றவற்றை 'அறிவை' கொண்டு தியானிக்கும் போது, அவர்களிடம் ஒரு அன்பு உண்டாகிறது.
உறவு கொள்ள முடிகிறது.

அறிவு இருந்தால், பார்க்காமல் போனாலும், பேச முடியாமல் இருந்தாலும், ஆராய்ந்து பார்க்கும் போது, சிலர் மீது அன்பு வருகிறதே?

கண்ணால் காட்டினால் தான் எனக்கு புரியும் என்று இருக்கும் மிருக அளவு புத்தியுள்ள முட்டாளை என்ன செய்ய முடியும்? முட்டாள் முட்டாள் தானே.

இந்த உலகை மிக சக்திவாய்ந்த ஒரு கடவுள் உருவாக்கி இயக்கிக்கொண்டு இருக்கிறார் என்பதை கொஞ்சம் அறிவு இருந்தால் கூட புரிந்து கொள்வது எளிதாயிற்றே.

கடவுள் இருக்கிறார் என்பதை பொதுவாக மக்கள் புத்தியை பயன்படுத்தி, ஒத்துக்கொள்கின்றனர்.

98 சதவீத மக்கள், உலகில் 'கடவுள் உண்டு' என்று அறிவு சொல்வதால் நம்புகின்றனர். 'கடவுள் இருக்க வாய்ப்பு உண்டு' என்று அனுமானிக்கின்றனர்.

இன்னும் கொஞ்சம் மேலே போய், எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள், துக்கங்கள், சுகங்கள், அதிர்ஷ்ட வாய்ப்புகள் போன்றவற்றை உணரும் போது, 'கடவுள் இருப்பது மட்டுமல்ல, அவர் நமக்கு உதவியும் செய்கிறார்' என்று அவ்வப்போது உணருகின்றனர்.

கடவுள் இருப்பதை புத்தியால் உணருவதும், கடவுள் நம்மை காக்கிறார் என்று அவ்வப்போது உணருவதும் பொதுவாக எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கிறது.

தான் சில இக்கட்டான காலங்களில் அதிர்ஷ்டவசமாக (கண்ணுக்கு புரியாத) காப்பாற்றப்படுவது இறை செயல் என்று உணரும் போது, 'கடவுள் இருக்கிறார்' என்ற நிலையை விட, ஒரு படி மேலே போய், 'தன்னை இந்த சக்தி (கடவுள்) காக்கிறது' என்றும் உணர்கிறான்.

அதற்கும் ஒரு படி மேலே போய், தனக்கும், அந்த கடவுளுக்கும் சம்பந்தம் உண்டு. அவரிடமிருந்து தான் நாம் வந்துள்ளோம். அதனால் தான், கடவுள் நம்மை  மறைமுகமாக நின்று காக்கும்போது, சில சமயங்களில் நம் புத்திக்கு புரிகிறது.
ஒரு குரு, உபதேசம் செய்து, நமக்கும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் உள்ள சம்பந்தத்தை சொல்லும் போது, 'நம்மை காப்பவரே இவர் தான்' என்ற தெளிவு பிறக்கிறது.

இதுவே திட நம்பிக்கையாக மாறும் பொழுது,
"கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்" என்று சந்தேகம் இல்லாமல் நம்பும் போது, அவன் தெய்வத்திடம் அன்பை (பக்தியை) செலுத்த ஆரம்பிக்கிறான்.
உலக பயத்தை விடுகிறான்.

யோகம் என்றால் சேர்க்கை என்று முன்னமே சொன்னது போல, தெய்வத்திடம் அன்பை (பக்தியை) திடமான நம்பிக்கையுடன் மீண்டும் மீண்டும் செய்து கொண்டே இருக்க, இவன் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக இறை பக்தி சேர ஆரம்பிக்கிறது (யோகம்).
இதுவே, நாளைடைவில், இவன் இதயத்தில் உள்ள காமம், கோபம், பொறாமை போன்ற குணங்கள் அழித்து, இதயம் சுத்தமாகி, அதில், இவன் தினமும் திட நம்பிக்கையுடன் அன்பு செய்த ஸ்ரீ கிருஷ்ணர் தானாகவே வந்து அமர்ந்து விடுகிறார்.
பக்தி யோகத்தில் ஸித்தி பெற்றவன், இதயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் இருப்பதால், பேரானந்தத்தை பெறுகிறான். இவர்கள் மோக்ஷம் என்ற பரமபத ஆனந்தத்தை இம்மையிலும் மறுமையிலும் அனுபவிக்கிறார்கள்.
இவர்களே யோகிகள். இவர்களே மகாத்மா. இவர்களை தரிசித்தாலே நமக்கும் பக்தி உண்டாகும்.

கடவுள் தன்னை, மனித சமுதாயத்துக்கு உணர செய்தாலும், மறைந்து இருப்பதற்கு காரணம், நாம் நம் தகுதியை இன்னும் உயர்த்த வேண்டும் என்பதற்காக தான்.

பக்தி யோகத்தில் முயற்சி செய்து, கண்ணால் கடவுளை தரிசித்தவர்கள் உண்டு. புரந்தரதாசர், ஆழ்வார்கள், நாயன்மார்கள் என்று அடுக்கலாம்.

பக்தி யோகத்தில், திட விசுவாசம் (நம்பிக்கை) முக்கியம்.

இன்று பகவானை காண முடியாவிட்டாலும், "இருக்கிறார்" என்பதை அறிவு சொல்வதால்,
நம்முடைய இந்த நிலையில், பகவானை காண முடியவில்லை என்றாலும், அவரை காண முடியும் என்கிற நம்பிக்கையை (விசுவாசம்) வளர்த்துக்கொள்ள வேண்டும்.
பகவான் என்னை காக்கின்றார் என்பதை உணர்கிறேன். அவரின் இந்த அன்பு, எனக்கும் திடமாக உள்ளது என்று நம்பிக்கை வேண்டும்.

கடவுள் உள்ளார் என்று அறிவை கொண்டு எப்படி புரிந்து கொள்ள முடியும்?
சிறிய கல்லை எடுத்து வானத்தை நோக்கி வீசினால், அப்படியே வானத்தில் நிற்காமல் கீழே விழுந்து விடுகிறது.

உலகம் என்ற மிகபெரிய கல் உருண்டை ஆகாயத்தில் சுழன்று கொண்டே உள்ளது. அதுமட்டுமல்ல,
ஒரே மாதிரி சுழற்சியுடன் சுற்றுகிறது.
அந்த கல்லில் நாம் அனைவரும் குத்திட்டு ஒட்டிக்கொண்டு இருக்கிறோம்.
இது ஆச்சர்யமல்லவா?

இந்த பூமியை போல, நாமும் ஒரு சாட்டிலைட் விட்டு பார்க்கும் போது, இன்னும் சில உண்மை புரிகிறது.

வெளியில் பார்க்க சாட்டிலைட்டில் ஒரு ஆள் கூட இல்லாமல், தானாக சுற்றுவது போல தெரிந்தாலும், எங்கிருந்தோ ஒருவன் பூமியில் இருந்து கண்காணித்து இயக்குகிறான் என்று நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

சாட்டிலைட்டை விட பல மடங்கு பெரிய இந்த உலகங்கள் ஒழுங்காக சுற்றுவதை பார்த்த பின்னும், இவை அனைத்தும் தானாகவே சுற்றுகிறது என்று நினைப்பவனை என்ன சொல்வது?

முற்பிறவி வரை மிருகமாக இருந்து, முதல் முறை, மனித பிறவியை இப்பொழுது தான் அனுபவிக்கிறான் என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
மூளை வேலை செய்யாத இவர்களிடம் பரிதாபம் மட்டுமே படலாம்.

ஒரு ரோபோ தானாக வேலை செய்வது போல தோன்றினாலும், மோட்டார் தானாக ஓடினாலும், அதை ஒருவன் ஸ்டார்ட் செய்து இயக்கி உள்ளான் என்று கொஞ்சம் பகுத்தறிவு உள்ள மனிதனுக்கு கூட புரியுமே.

'கடவுள் இல்லை' என்று சொல்பவனை விட, 'எங்கேயோ ஒரு கடவுள் இருக்கிறார், அவருக்கு பயப்பட வேண்டும்' என்று காட்டுமிராண்டி தனமாக சொல்லும் கூட்டம் கூட உயர்ந்தவர்கள் தான்.

நமக்கு ஆசாரம், அல்லது திட விசுவாசம் அல்லது திட வைராக்கியம் என்று ஏதாவது ஒன்று இருக்கும் பட்சத்தில், எந்த யோகத்தின் வழியிலும் சென்று பகவானை உணரலாம், தரிசிக்கலாம், மோக்ஷம் அடையலாம் என்று ஸ்ரீ கிருஷ்ணர் காட்டுகிறார்.

பகவானை தரிசிக்க வேண்டும் என்ற உண்மையான எண்ணம் கொண்டவன், ஆசாரம்(நல்லொழுக்கம்) என்ற தகுதி இருக்குமாகில், கர்மாவை (செயலை) யோகமாக(சேர்க்கையாக) செய்து, அதை பகவானுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று கிருஷ்ணர் சொல்கிறார்.

ஞான யோகம், பக்தி யோகம் குரு இல்லாமல் புரியாது. என்ன செய்ய வேண்டும் என்பதே புரியாத போது, திரும்ப திரும்ப எப்படி செய்ய முடியும்? ஞான மார்க்கத்துக்கும், பக்தி மார்க்கத்துக்கும் குருவே துணை.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம். வாழ்க ஹிந்துக்கள்.