Followers

Search Here...

Saturday 6 October 2018

ராமபிரானுக்கு "மரியாதை ராமன்" என்று ஏன் பெயர் ஏற்பட்டது? நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? - காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம்

மரியாதை ராமன்

மரியாதை என்ற சமஸ்கரித சொல்லுக்கு "எல்லை" (Boundary) என்று பொருள்.

தன் எல்லைகளை உணர்ந்தவனை, "மரியாதை தெரிந்தவன்" என்று பொதுவாக சொல்வோம்.



  1. காம, 
  2. க்ரோத, 
  3. லோப, 
  4. மோக, 
  5. மத, 
  6. மாத்ஸர்யம்


என்ற 6 விஷயங்களில் மனிதன் எல்லை தாண்ட கூடாது. இப்படி எல்லை தாண்டாதவன் தன் மரியாதையை காத்துக்கொள்கிறான்.
பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீராமராக மனித அவதாரம் செய்து, இந்த 6 விஷயங்களில் எல்லை தாண்டாமல், வாழ்ந்து காட்டினார். இதனாலேயே ராமரை, மரியாதை ராமன், மரியாதா புருஷன் என்று அழைக்கிறோம்.

1. காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
சூர்ப்பனகை ஒரு அழகான பெண் வடிவம் எடுத்து, ஸ்ரீ ராமரை மயக்க நினைத்தாள்.
ஆனாலும், ஸ்ரீ ராமர் அவளிடம் மயங்கவில்லை. தான் மணமானவன் என்றும் சொல்லி விலகினார்.
அவளே வந்து மயக்க நினைத்த போதும், "இம்மையில் இரு மாதரை சிந்தையிலும் தொடேன்" என்று எல்லை தாண்டாமல் இருந்தார் ஸ்ரீராமர்.
காமத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

2. க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
தன் மனைவியை ஒரு அசுரன் காக்கை வடிவில் வந்து தீண்ட பார்த்ததற்கே, ஒரே ஒரு ராம பாணத்தில் ஏழு லோகங்கள் ஓடியும் அவனை துரத்தி காலில் விழ வைத்தார்.
தன் மனைவியை இலங்கை தூக்கி சென்று விட்ட ராவணனை, நின்ற இடத்திலேயே ராம பாணத்தால் கொல்லும் சக்தி இருந்தும், கோபத்தை ஒரு  எல்லைக்குள் கட்டுப்படுத்தி, வானர சேனை உருவாக்கி, வானரர்கள் துணை கொண்டு சேது அமைத்து, இலங்கை சென்று, ராவணனுக்கு எச்சரிக்கை கொடுத்து, போரில் ஒரு முறை அவனை மன்னித்து, கடைசியில் அவனை கொன்று சீதையை மீட்டார்.
க்ரோதத்தை (கோபத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.






3. லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி 24 வயது ஸ்ரீராமரை பார்த்து, "உன் அரச பதவியை பரதனுக்கு கொடுத்து விட்டு, நீ காட்டுக்கு போ" என்று சொல்ல,
கொஞ்சம் கூட சலனமில்லாமல்,
"இருக்கட்டுமே. என் தம்பிக்கு தானே கொடுக்கிறேன். பரதனே ஆளட்டும்" என்று தாராள மனதோடு காட்டுக்கு சென்றார்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த அண்ணன், தம்பி, தங்கை, அக்காக்களே இன்றைய காலத்தில் சொத்து என்றதும் சண்டை போட்டு கொள்ளும் அலங்கோலத்தை நாம் பார்க்கிறோம்.
பரதன் வேறு தாய்க்கு பிறந்தாலும், பணத்தில் பேராசை இல்லாமல் இருந்தார் ஸ்ரீ ராமர்.
லோபத்தை (பண பேராசை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

4. மதம் (ஆணவத்தை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
ஆண்மை, வீரம், கல்வி, எல்லையில்லா நற்குணங்கள் என்று அனைத்தும் இருந்தும், ஸ்ரீ ராமர், மஹரிஷிகளை எங்கு பார்த்தாலும், ஆணவமே இல்லாமல், உடனே அவர்களை வணங்கி, பாத சேவை செய்வார்.
தான் அரசன் மகன் என்ற ஆணவம் துளி கூட காட்டமாட்டார்.
மதம் என்ற ஆணவத்தை ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

5. மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
வனவாசம் முடிந்து, ராவணனிடம் அகப்பட்ட சீதையை மீட்டு, ராம பட்டாபிஷேகம் செய்து கொண்டு, பல ஆண்டுகள் ஆட்சி செய்து கொண்டு வந்தார் ஸ்ரீராமர்.
ஒரு சமயம், ஒரு சலவை தொழிலாளி "ராவணன் தூக்கி சென்ற சீதையை ஸ்ரீ ராமர் ஏற்றுக்கொண்டார். நானாக இருந்தால் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்" என்று சீதையை தரம் தாழ்த்தி பேசி விட்டான்.
இந்த செய்தி ஸ்ரீராமருக்கு எட்டியது.
தான், தன் குடும்பம், என்ற  மோகத்தை (விருப்பத்தை) விட, மக்களின் மனம் கோணக்கூடாது என்று இருப்பவர் ஸ்ரீராமர்.



அரசன் எடுக்கும் நல்ல முடிவுகளை புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைக்க வேண்டும்.

அரசன் எடுத்த தவறான முடிவை மக்கள் கண்டித்தால், அரசன் அதை ஆராய்ந்து, எடுத்த தவறான முடிவுகளை சரி செய்ய  வேண்டும்.

இன்னும் சில சமயங்களில்,
அரசன் எடுக்கும் நல்ல முடிவை கூட புரிந்து கொள்ளாமல், மக்கள் தவறான அபிப்ராயம் கொண்டிருந்தால், அரசன் அதன் நியாயங்களை சொல்லி புரிய வைப்பது சாத்தியமில்லை என்று தெரிந்தால், அது நல்ல முடிவாக இருந்தாலும் மக்களின் மனம் கோணாமல் இருக்க, நல்ல முடிவுகளையும் கைவிட வேண்டும்.

சீதை கலங்கமற்றவள், என்று இலங்கையில் வானரர்கள், விபீஷணன் முன்னிலையில் அக்னி பிரவேசம் செய்து நிரூபித்தாள்.

ஆனால், அயோத்தியில், சீதையின் மேல் சொல்லப்பட்ட அவதூருக்கு, மீண்டும் அக்னி பிரவேசம் செய்து காட்டு என்று சொன்னால், இது போன்று வேறு யாராவது சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள்.
ஒவ்வொரு முறையும் சீதையை அக்னி பிரவேசம் செய் என்று சொல்ல முடியாது. இது சீதைக்கு இழைக்கும் அநியாயம்.

மக்களை பற்றி கவலையில்லை என்று அரசனால் இருக்க முடியாது. ஸ்ரீ ராமரோ அயோத்திக்கு அரசர்.
இதற்கு நிரந்தர நியாயம் வழங்க முடியாது. இதற்கு ஒரே வழி, அரசனான தன் மோகத்தை (ஆசையை) தியாகம் செய்வது ஒன்றே என்று
நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாலும் காலம் தாமதிக்காமல், சீதையை தியாகம் செய்து காட்டுக்கு அனுப்பினார். மீதி காலங்களை சீதை வால்மீகி ஆஸ்ரமத்தில் கழித்தாள் சீதை.

அரசனாக இருப்பதால், தன் தனிப்பட்ட மோகத்தை (விருப்பத்தை) கூட எல்லையில் வைத்தார் ஸ்ரீ ராமர்.
மோகத்தை (விருப்பம்) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

6. மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்:
கைகேயி தசரதனிடம் வாங்கிய இரண்டு வரங்களை கொண்டு, தன் மகன் பரதன் நாட்டை ஆள வேண்டும், ஸ்ரீ ராமன் காடு செல்ல வேண்டும் என்று கேட்க, ஸ்ரீ ராமர், நாட்டை பரதனே ஆளட்டும் என்று ஏற்று, தான் காட்டுக்கு புறப்பட்டார்.

விஷயம் அறிந்து சிந்து தேசம் சென்றிருந்த பரதன் அழுது, வனத்தில் இருக்கும் ஸ்ரீ ராமர் இருக்கும் இடத்திற்கு வந்து அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்க வந்தான்.
ஸ்ரீ ராமர், இன்றைய நிலையில் பரதன் அரசனாக இருப்பான் என்பதால்,
"தசரத சக்கரவர்த்தியின் குமாரனான இன்றைய சக்கரவர்த்தியே என் வணக்கம்" என்று உள்ளம் உகந்து, துளி கூட மாத்ஸர்யம் (பொறாமை) இல்லாமல் வரவேற்று பேசினார் ஸ்ரீராமர்.



ஸ்ரீ ராமரின் இந்த குணத்தை கண்டு, துக்கத்தில் நெஞ்சம் வெடித்து விடும் நிலையில் பரதன் இருந்தார். தன்னை பற்றி துளி கூட பொறாமையோ, கோபமோ இல்லாமல் இருக்கிறாரே ஸ்ரீராமர் என்று அழுதார் பரதன்.
மாத்ஸர்யம் (பொறாமை) ஒரு எல்லைக்குள் வைத்து இருந்தவர் ஸ்ரீராமர்.

இப்படி காம, க்ரோத, லோப, மோக, மத, மாத்ஸர்யம் என்ற 6 விஷயங்களில் ஒரு மனிதன் எல்லை தாண்ட கூடாது, என்று தன் வாழ்வில் நடத்தி காட்டிய ஸ்ரீராமரை "மரியாதை ராமன்" என்று தானே சொல்ல வேண்டும்.

ஸ்ரீ ராமரை வெறுப்பவன், மனித நற்குணங்களை வெறுக்கிறான். அப்படிப்பட்டவர்களை  விலங்குக்கும் கீழ்நிலை குணம் உடையவர்கள் என்று ஒதுக்குவதே சிறந்தது.

ஸ்ரீ ராமர் வாழ்க. மரியாதை ராமன் வாழ்க.




Tuesday 2 October 2018

குடும்ப வாழ்க்கையில் குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டுமா? ஒரு அலசல்...

"ஒரு குழந்தை போதும்அந்த ஒரு குழந்தைக்கு தரமான கல்வி, வசதிகள் செய்து கொடுத்து வாழ்க்கையில் உயர்த்துவோம்"
என்ற எண்ணம் பொதுவாக இன்றைய இந்தியர்களிடம் வந்துள்ளது.


இதற்கு முன் 1970,1980களில் இருந்தவர்கள், "இரண்டு குழந்தை போதும்" என்று எண்ணினார்கள்.

1960களில் அதற்கும் முன் இருந்த காலங்களில் இருந்தவர்கள், :குழந்தைகள் பிறப்பை எண்ணிக்கை அடிப்படையில் தடுக்கவில்லை".
மேலும்,
1970களில் கருத்தடை சாதனங்கள், ஆப்பரேஷன் போன்றவை அன்று இல்லை.
இதனால், பொதுவாக, ஒரு கணவன் மனைவிக்கு "குறைந்தது 5 குழந்தைகள்" இருந்தனர்.

இன்று, 80-90 வயதில் வாழும் இவர்களுக்கு, வாழ ஒரு இடம் உள்ளது. 

5 குழந்தைகளை பெற்ற இவர்கள், தன் 90 வயதில், இரண்டு மூத்த குழந்தைகளை கூட இழந்து இருக்க வாய்ப்பு உண்டு.
மற்ற இரண்டு பேர், வெளிநாட்டில் இருக்கவும் வாய்ப்பு உண்டு.
அல்லது, தன் குடும்ப பொறுப்புகளில் சிக்கி இருக்கவும்  வாய்ப்பு உண்டு.

குறைந்த பட்சம் ஒரு பிள்ளையாவது!! ஆரோக்கியம் உள்ளவனாக, தன் 90 வயது பெற்றோரை வைத்து காப்பாற்ற கூடியவனாக இருப்பான்.
இன்று கூட, சில வீடுகளில் 90 வயது கிழவன்/கிழவி நிம்மதியாக இருப்பதை நாம் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு.

"இந்த நிம்மதியை, நம்முடைய வயதான காலத்தில் நாம் அனுபவிக்க போவதில்லை" என்பதையே இதில் கவனிக்க வேண்டும்.
பெரும் அபாயம் நமக்கு முன் காத்துக்கொண்டு இருக்கிறது.




பல குழந்தை பெற்ற இவர்கள், தங்கள் குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வி கொடுக்க இயலாமல் போனாலும், குடும்ப பொறுப்பு ஒருவன் தலையில் மட்டும் ஏறாமல் இருக்க உதவி செய்தனர்.
தம்பியின் கஷ்டத்தில் அண்ணன் கை கொடுப்பதும்,
அண்ணன் கஷ்டத்தில் தம்பி கை கொடுப்பதும்,
தங்கை தம்பியிடம் பாசத்தை பொழிவதும்,
அண்ணன் தங்கைக்கு தான் சேர்த்த பொருளை கொடுத்து சுகமாக வைப்பதும் இன்றுவரை நடந்துள்ளது. 
இனி நடக்கப்போவது இல்லை..

துக்கமும், சுகமும் ஒருவருக்கு ஒருவர் பகிரப்பட்டதால், நோய் இல்லாமல் இருந்தனர். எதிர்கால பயமே இல்லாமல் இருந்தனர்.

பல குழந்தை பெற்று இன்று வயதாகி விட்ட முதியவர்களுக்கு ஒரு மகனோ, மகளோ இருக்கின்றனர்.
இது இன்று வரை நாம் பார்க்க கூடிய காட்சி.
இனி பார்க்க இயலாத காட்சி.

1980-90களில் "இரண்டு குழந்தை போதும்" என்று இருந்தனர் முந்தைய தலைமுறைகள்,

இரு குழந்தைகள் பெற்று 60 வயதை கடந்து நிற்கும் இவர்கள்,
"6 மாதம் ஒரு பையன் வீடு, 6 மாதம் மற்றொரு பையன் வீடு" என்று நாடோடி வாழ்க்கை வாழ்கின்றனர்.
இரண்டும் பெண் குழந்தையாக இருந்தால், "அனாதைகளாக" தனியாக தன் 60 வயதுக்கு மேல் வாழ ஆரம்பிக்கின்றனர்.
இன்று நாம் பார்க்க கூடிய காட்சி !!

இதில் கணவன் இறந்து, வயதான மனைவியின் வாழ்க்கை அந்தோ பரிதாபம்.
அதை விட கொடுமை,
மனைவி இறந்து, 60 வயதுக்கு மேல் கணவன் மட்டும் வாழும்  தனிமை வாழ்க்கை.
பிறந்த 2 இரண்டு குழந்தைகளில் ஒன்று இறந்து, மற்றொருவனும் பணமில்லாமல் கஷ்டப்படும் வாழ்க்கை, அதை விட நரகம்

வயதான காலத்தில் நோய், பார்த்துக்கொள்ள ஆள் இல்லை. இது அதை விட நரகம்.

இவை எல்லாம் இன்று 60 வயதை கடந்து நிற்கும் ஆண்களும், பெண்களும் சந்திக்கும் நிஜங்கள்..

இன்று "ஒரே குழந்தை போதும். அந்த குழந்தைக்கு தரமான கல்வி தருவது ஒன்றே லட்சியம்" என்று வீறுநடை போடும் தலைமுறை, 60 வயதுக்கு மேல் உயிருடன் இருப்பதே தேவையா? என்ற நிலைக்கு நிச்சயம் கொண்டு போகப்போகிறது.

60 வயதுக்கு மேல், நோய் வந்தால், பெற்ற ஒரு மகன்
மொத்த செலவை சமாளித்து, 
பெற்றவர்கள் உடம்பையும் பார்த்துக்கொள்வான் 
என்று எதிர்பார்க்க முடியாது.

தன் கஷ்டங்களை, சுகங்களை தன் உடன்பிறந்த தம்பி தங்கைகளிடம் சொல்லிக்கொள்ள கூட ஆளில்லாமல், பெற்ற ஒரு மகனே, stress, tension என்று முழித்து, நமக்கு முந்தி கொண்டு இறக்கவும் வாய்ப்பு உண்டு.

பண தேவைகளை சமாளிக்க முடியாமல் மகனும்,
நோய் வந்ததால் உதவிக்கு ஆள் இல்லாமல் பெற்றவர்களும்,
சுக துக்கங்களை பகிர முடியாமல் இருவரும் 
"குடும்ப வாழ்க்கையே நரகம்" 
என்று தோன்ற வைத்து, "இனி குழந்தையே வேண்டாம்!!" என்று நிலைக்கு வந்து விடுவோம்.

அப்படியே பெற்றாலும், "பிள்ளையை அரசு காப்பாற்ற வேண்டும். வயதான பின், அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்" என்று பயமுறுத்தவும் வாய்ப்பு உண்டு.

இப்படி குடும்ப வாழ்க்கை பொதுவாக அழிந்தாழும்,
இன்றும்
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழும் எவரும்,
இது போன்ற துன்பங்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள போவதில்லை என்பதே உண்மை.

மார்வாடி, நகை செட்டியார் போன்றவர்கள் இன்று வரை,
சொந்தமாக தொழில் செய்து,
இரண்டுக்கு மேல் குழந்தை பெற்று, மேலும்
கூட்டு குடும்பமாக வாழ்கின்றனர்.
இவர்கள் இப்படியே இருக்கும் வரை, இவர்கள் சுகமாகவே வாழ்வார்கள்.

"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.
ஆனால், "குடும்ப வாழ்க்கை அமைத்து கொள்வது நம் கையில் உள்ளது", என்பதை மறக்க கூடாது.

இரண்டு மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்வது வளர்ப்பதற்கு கடினமாக இருந்தாலும், அது  குழந்தைகளுக்குள் ஒரு பாதுகாப்பு உணர்வை தரும். எதிர்கால பயத்தை , அநாதை என்ற பயத்தை போக்கும்.

ஒரு குழந்தை போதுமே !
குழந்தையே வேண்டாமே !
தனியாக வாழ்கிறோமே !
என்ற சிந்தனை உடைய இன்றைய சமுதாயம், "தனக்கும் 60, 80 வயதாகும்!!" என்பதை சிந்திக்க வேண்டி இருக்கிறது.

70 வயதில், பெற்ற ஒரு  பிள்ளையும் 40 வயதை கடந்து இருப்பான். 
அவனும் உடல் பலமில்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவனும் பண வசதி இல்லாமல் இருக்க வாய்ப்பு உண்டு.
அவன் கஷ்டத்தை யாரிடமும்  சொல்லிக்கொள்ள முடியாமல் இருக்க வாய்ப்புண்டு.
அவனும் பென்ஷன் இல்லாத வாழ்க்கை வேறு வாழ வேண்டும்.


80 வயதுக்கு மேல் வாழ நேர்ந்தால், காப்பாற்ற பெற்ற ஒரு மகனும் உயிருடன் இருப்பானா? என்று கூட தெரியாது.
"நோயும், ஆயுசும் நம் கையில் இல்லை" என்பதை மறக்க கூடாது.

சிதறிய குடும்பங்கள்,
குழந்தை இல்லாத குடும்பங்கள்,
ஒரே குழந்தை பெற்ற குடும்பங்கள்,
சீரழிய வாய்ப்புக்கள் கோடி உள்ளது.

பாரத நாட்டின் தனித்துவம் "குடும்ப கலாச்சாரமே".  
அது அழியாமல் இருக்க, சற்று சிந்திப்போம்..  பகிர்வோம்.