Followers

Search Here...

Sunday 20 January 2019

How Srivathsa Gothra (Vamsa) came? All Hindus must know their Rishi dynasty.. Let's know...

How Srivathsa Gothra or Srivatsa Gothra (Vamsa) came? 
All Hindus must know their Rishi dynasty.
It is a pride for Hindus to know about their Rishis.



The name of the more important 4 other Rishis in the "Brugu Rishi" Parampara (Lineage) are:

  • Chyawana
  • Apnavana
  • Aurva
  • Jaamataknya


Like these, there are many more Rishis, Sadhus and Mahatmas in this dynasty.


Brugu Rishi is also known as "Bhargava" Rishi.


Hindus used to "self introduce" themselves by saying the "names of the Rishis lineage". 
Hindus used to self introduce themselves by saying "I am born of this rishi parampara"

The idea of self intro for hindus is to say that their ancestors are rishis, mahatma, sadhus, yogi.

Today the Brahmin community alone introduce themselves by saying their Rishi Parampara when they do Abivadhaye (Self Intro) to their elders and mahatma. 

Other community people are also from the Rishi Parampara. So it is important for everyone to know about their Rishi Parampara and their way of Spiritual life.  
Its a pride for Hindus to say that "Our Ancestors are Rishi"
The descendant of the Brugu Rishi is 'Chyawana'.

He prepared and gave us a medicine based on Siddha Method. The Jam is prepared with his name which helps to restore his youth & vitality. Even today, We go and buy from the stores to buy Chyawanprash. People buy this to gain Endurance and immunity to the body.


Let us not forget that, the same Chywana Rishi, also told us that taraka mantra, "Rama Nam" is so powerful and if recited always (Hanuman), it gives moksha from rebirth.
We swallow "Cyawanprash" Jam because it is "Good for the Body".





Should not we say "Ram Ram Ram Ram..." to the "Health of the Soul"?  
Hindus should think and introspect.

Since the lineage got originated by Brugu Rishi (aka., Bhargava), the people in this lineage belong to the "Bhargava Gothra" (dynasty or Parampara)
Hindus from Sanathana Dharma wont be interested to say, "they are from the Lineage of Nude and adulterated "Adam and Eve" Parampara.
Is there anything more shame than saying this for Hindu from sanathana Dharma?


Hindus in the Vedic Dharma introduce themselves to the wisdom of the Rishis, who are wise in the wisdom and the penance, the divine and the siddha Medicine.
If a person from Sanathana Dharma planning to convert to other religion and says "The rishis were not my Ancestors, the nude and adultered fool named "Adam and Eve" are my Ancestors" itself is a disgrace for convert!

Meantime, 
The descendants of Brugu Rishi who is supposed to say that "They are from Bhargava Gothra" instead used to introduce themselves as "They are from Srivathsa Gothra".


Why "Bhargava Gothra" became "Srivathsa Gothra"? There is a reason behind this...
The word 'Sri' refers to Mahalakshmi.
The term 'vathsa' refers to the child.
Shriman Narayanan does not have karmic life cycle of birth and death. 
Similarly, Mahalakshmi also don't have Karmic cycle of Birth and Death.


Mahalakshmi is always omnipresent. She always Exist.
Shriman Narayanan, who is always present and exist, 
one time did avatar as a child of Dasaratha,
He also became the son of Kashyapa.
Similarly,
Mahalakshmi who is always present and exist, 
one time did avatar from the Ksheerapthi,
Also, born as a girl to Brugu Rishi.


Shriman Narayanan, Mahalakshmi and Adi Shesan always omnipresent in Vaikuntam.
As a world's play, they incarnate themselves in earth, swarka and any worlds. They are Independent and not slaves of anyone and not bound by limitations. 


Mahalakshmi born as Brugu Rishi's girl, and Mahalakshmi was also known as "Bhargavi".

For whom Mahalakshmi (sri) is baby (Vathsa), he is known as Srivathsan. Hence, Brugu Rishi is known as "Srivathsan" as well.

People from Brugu Lineage who say, "We are descendent from Bargava Gothra" were proud of saying that "Mahalakshmi was born in our dynasty" 

As Brugu Rishi is also known as "Srivatasan" as he is the father of Mahalakshmi, People from Brugu Lineage were excited to say, "We are descendent from Srivathsa Gothra" as it connects Brugu as well as Mahalakshmi.




Maharishi Bhrigu, once decided to test and decide who was pre-eminent among gods. 

After testing, Brahma, Rudra, he went to Ksheerapthi. He kicked the chest of the great Lord Vishnu. Lord Vishnu didn't got angry. 
Lord Narayana (Vishnu) asked him, 
“Maharishi, are you hurt in your foot? My chest is strong but your foot is not so strong". 
Seeing the decorum of Lord Vishnu, Bhrigu was pleased and declared him superior amongst the Tridev.

His purpose was to recognize the sadhweega god and supreme god. He accepted vishnu as "devotional deity" and became devotee of lord vishnu.
That strike by Maharishi Bhrigu, left a foot print on Lord Vishnu's chest. 
Foot print is also known as "Shri Vatsa" which is the other name of Bhrigu.


Lord Vishnu gave his chest to Goddess Mahalakshmi as a place to reside always with him which also has a connection of her Pithru (father).

In North India, in few places, people refer this foot print in Lord Vishnu's Chest as "Brugu Chinha" instead of "SriVatsa"

Generally speaking, referring foot print as Srivatasam is liked by Vaishnavas. 

Mahalakshmi herself prefers to say that "she resides in Srivatsa of Lord Vishnu" than saying "She resides in brugu Chinha of Lord Vishnu"

In the temples, we can see Purohit perform marriage ceremony for Lord Vishnu and Goddess Mahalakshmi.


Normally, if we get married, father of bride used to say "I give my bride, who is born in this Rishi Parampara, to the bridegroom who is born in this Rishi Parampara."

How to mention Gothra for Lord Vishnu and Goddess Mahalakshmi who are eternal and supreme? 
Vaikaanasa Rishi provided an answer to this, which was approved by Lord Venkatesa of Tirupati.

According to Vaikaanasa,
Lord Vishnu was the son of Kashyapa. He did avatar as Vamana. 
Similarly, Mahalakshmi born as daughter of Bhargava (Bhrigu). 
Hence, during marriage ceremony of divine couples, 
Vishnu will be introduced as "Bridegroom from Kashyapa Gothra"
and

Mahalakshmi will be introduces as "Bride from Bhargava Gothra"



Even Today, In all Vishnu temple, divine marriage of Lord Vishnu and Goddess Mahalakshmi conducted.
Perumal is referred as "Bridegroom from Kashyapa Gothra", and 

Mahalakshmi referred as "Bride from Bhargava Gothra"

HARE RAMA HARE KRISHNA - Bhajan


Interested to Read More? Click Here -> How was West Bengal during Mahabharata Period? Who were ruling?


Friday 18 January 2019

ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது? ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும். சிந்திக்க வேண்டும்

ப்ருகு ரிஷியின் பரம்பரையில் வந்த முக்கியமான மேலும் 4 ரிஷிகளின் பெயர்:
  • ம்ருகண்டு
  • மார்க்கண்டேயர்
  • ஹேம ரிஷி
  • சௌனகர்
  • ச்யாவன
  • ஆப்னவான
  • ஔர்வ
  • ஜாமதக்ன்ய



இவர்களை போல, மேலும் பல ரிஷிகள், சாதுக்கள், மகாத்மாக்கள் இந்த பரம்பரையில் தோன்றி உள்ளனர்.

ப்ருகு ரிஷியை, "பார்கவ" ரிஷி என்றும் அழைப்பது உண்டு.
இந்த ரிஷிகளின் பெயர்களை ஸ்மரித்து கொண்டே,
'நான் இந்த ரிஷிகளின் கோத்திரத்தில் (வம்சத்தை) பிறந்தவன்'
என்று அபிவாதயே (self intro) சொல்வது ஹிந்துக்களுக்கு வழக்கம்.
இன்று பிராம்மண சமுதாயம் மட்டும், ரிஷிகளின் வம்சத்தை சொல்லி கடைபிடிக்கிறது.
மற்ற சமுதாய மக்களும் ரிஷி பரம்பரையில் இருந்து வந்தவர்கள் தான்.

ஹிந்துக்கள் அனைவரும், தன் ரிஷி பரம்பரையை அறிந்து கொள்ள வேண்டும்.
தெரிந்து கொள்வது மிகஅவசியம். கௌரவமும் கூட.
அந்த ரிஷிகளை பற்றி நன்கு தெரிந்து இருக்கவும் வேண்டும்.
ப்ருகுவின் பரம்பரையில் வந்தவர் 'ச்யவனர்' என்ற ரிஷி.
இவர் ஸித்த மருத்துவ முறைப்படி நமக்கு தயாரித்து தந்தது தான், நாம் இன்று கடையில் வாங்கி வாங்கி விழுங்கும் ஸ்யவன்ப்ராஸ் (Chyawanprash) என்ற லேகியம்.

இது உடலுக்கு எதிர்ப்பு சக்தி தரும், ஆரோக்கியம் என்று விழுங்கும் நாம்,
அதே ரிஷி தாரக மந்திரமான "ராம நாமத்தை" எப்பொழுதும் சொல்பவனுக்கு மோக்ஷம் நிச்சயம் என்ற வழியையும் சொன்னார் என்பதை மறக்க கூடாது.
ஸ்யவன்ப்ராஸ் (Cyavanprash) உடம்புக்கு நல்லது என்று விழுங்கும் நாம்,
ஆத்மாவின் ஆரோக்கியத்துக்கு "ராம" நாமத்தையும் சொல்ல வேண்டாமா?
கொஞ்சம் ஹிந்துக்கள் சிந்திக்க வேண்டும்.


ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் மூலம் தோன்றிய பரம்பரை என்பதால், இந்த பரம்பரையில் உள்ளவர்கள், "பார்கவ கோத்திரத்தை" (வம்சத்தை) சேர்ந்தவர்கள் என்று அறியலாம்.
ஆடையில்லாது, அறிவில்லாது திரிந்த "ஆதாம் ஏவாள்" வழியில் வந்த 'மடையர்கள்' என்று சொல்லிக்கொள்வதில்லை வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள்.
இப்படி சொல்லிக்கொள்வதை விட அவமானம் ஏதாவது உண்டா?

ஞானத்திலும், தவத்திலும், தெய்வீகத்திலும், ஸித்த மருத்துவத்திலும் தேர்ந்த,  ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் என்று வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்களை அறிமுகப்படுத்தி கொள்கின்றனர்.
அறிவாளியாக இருந்த ரிஷிகள் என் முப்பாட்டன் இல்லை, முட்டாள் "ஆதாம், ஏவாள்" தான் என்று என் முப்பாட்டன் என்று சொல்வதே, மதம் மாறுபவனுக்கு அவமானமல்லவா !!.

ப்ருகு என்ற பார்கவ ரிஷியின் பரம்பரையில் வந்தவர்கள் "பார்கவ கோத்திரம்" என்று சொல்லாமல், "ஸ்ரீவத்ஸ கோத்திரம்" என்று சொல்லி கொள்ள ப்ரியப்படுவதை நாம் கவனிக்கலாம்.




பார்கவ கோத்திரத்துக்கு, ஸ்ரீவத்ஸ கோத்திரம் என்று எதனால் பெயர் ஏற்பட்டது?
இதற்கு காரணம் உண்டு...
'ஸ்ரீ' என்ற சொல், மஹாலக்ஷ்மியை குறிக்கும்.
'வத்ஸ' என்ற சொல், குழந்தையை குறிக்கும்.
ஸ்ரீமந் நாராயணனுக்கு எப்படி பிறப்பு இல்லையோ,
அது போல,
மஹாலட்சுமிக்கும் பிறப்பு இல்லை.
எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறாள் மஹாலட்சுமி.



எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும் ஸ்ரீமந் நாராயணனே, ஒரு சமயம்
தசரதனுக்கு பிள்ளையாகவும்,
கஷ்யபரின் பிள்ளையாகவும் அவதாரம் செய்து விடுகிறார்.
அது போல,
மஹாலட்சுமியே,
ஒரு சமயம்,
ப்ருகு ரிஷிக்கு பெண்ணாக அவதாரம் செய்து இருக்கிறாள்.
பாற்கடலில் இருந்து தோன்றியும் இருக்கிறாள்.

ஸ்ரீமந் நாராயணனும், மஹாலட்சுமியும், ஆதிசேஷனும் நித்யமாக எப்பொழுதும் வைகுண்டத்தில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
லீலையின் காரணமாக, பாற்கடலில், பூலோகத்தில் என்று பல்வேறு லோகங்களில் அவதாரம் செய்கின்றனர். சுதந்திரமானவர்கள், யாருக்கும் அடிமைப்பட்டவர்கள் அல்ல.

ப்ருகு ரிஷியின் பெண்ணாக மஹாலட்சுமி பிறந்ததால், மஹாலட்சுமிக்கு "பார்கவி" என்றும் பெயர் உண்டானது.

யாருக்கு மஹாலக்ஷ்மி (ஸ்ரீ) குழந்தையோ (வத்ஸ), அவரே ஸ்ரீவத்ஸன் என்பதால், ப்ருகு ரிஷிக்கு "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டது.

இதன் காரணமாக, "பார்கவ (ப்ருகு) வம்சத்தில் வந்தவர்கள் நாங்கள்" என்று சொல்வதை விட,
"எங்கள் வம்சத்தில் மகாலக்ஷ்மியே குழந்தையாக அவதரித்தாள்" என்று சொல்லி பெருமைப்படும் விதமாக, ப்ருகுவுக்கும் "ஸ்ரீவத்ஸன்" என்று பெயர் ஏற்பட்டதால், "ஸ்ரீ வத்ஸ" கோத்திரம் என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.

பொதுவாக,
மஹாலக்ஷ்மியே ப்ருகுவுக்கு மகளாக அவதரித்ததால், மஹாலக்ஷ்மியிடம் வாத்ஸல்ய (தன் குழந்தை) பக்தி இந்த கோத்திரத்தில் வந்த ரிஷிகளுக்கு எப்பொழுதுமே உண்டு.

ப்ருகு ரிஷி, 
யார் சாத்வீக தெய்வம்? என்று தெய்வத்தையே பரீக்ஷை செய்ய ஒரு சமயம் எண்ணினார்.
ப்ரம்மா, ருத்திரன், தேவர்கள் என்று யாருமே சாத்வீக தெய்வம் இல்லை என்று உணர்ந்து, யோக நித்திரையில் இருந்த மகா விஷ்ணுவின் மார்பை காலால் உதைக்க,
இவரின் நோக்கம் அறிந்த எம்பெருமான், கோபத்தை துளியும் காட்டாமல், வரவேற்று உபசரிக்க, நாராயணனே "சாத்வீக தெய்வம்" என்று விஷ்ணு பக்தனானார் ப்ருகு.
ப்ருகுவின் கால் பட்டதால் எம்பெருமாள் மார்பில் மரு ஏற்பட்டது.
பித்ரு (அப்பாவின்) சம்பந்தம் ஏற்பட்ட தன் மார்பில், மகாலட்சுமிக்கு இடம் கொடுத்தார் பெருமாள்.


மகாலட்சுமியை பெற்றதால், ப்ருகுவுக்கு 'ஸ்ரீவத்ஸன்' என்று பெயர் ஏற்பட்டது போல,
ப்ருகு ரிஷியால் தன் மார்பில் ஏற்பட்ட மருவுக்கும் "ஸ்ரீவத்ஸ" என்று பெயர் ஏற்படுமாறு செய்தார் எம்பெருமான்.

வடக்கில் பெருமாளின் மார்பில் இருக்கும் இந்த மருவுக்கு "ப்ருகு சின்னம்" என்று இன்றும் சில கோவில்களில் சொல்கின்றனர்.

பொதுவாக ஸ்ரீவத்ஸம் என்று சொல்வதே உசிதமானது.
மஹாலக்ஷ்மி ஸ்ரீவத்ஸம் உள்ள எம்பெருமான மார்பில் வாசம் செய்கிறாள் என்று சொல்வதே பொருத்தமும், அழகும் கூட.

கோவிலில் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவதை நாம் பார்த்து இருப்போம்.

சாதாரணமாக நமக்கு திருமணம் நடந்தால், "இந்த கோத்திரத்தில் (வம்சம்) பிறந்த மணப்பெண்ணை, இந்த கோத்திரத்தில் பிறந்த மணமகனுக்கு கன்னிகாதானம் செய்து கொடுக்கிறேன்" என்று சொல்லி, கன்னிகாதானம் செய்து கொடுப்பது வழக்கம்.

பிறப்பே இல்லாத பெருமாளுக்கும், பிராட்டிக்கும் எந்த வம்சத்தை சொல்லி திருக்கல்யாணம் செய்வது?
அதற்கான பதிலை, வைகானஸ ரிஷி நிர்ணயம் செய்ய, வெங்கடேச எம்பெருமானே அதை அங்கீகரித்தார்.

வைகானஸ முறைப்படி,  திருகல்யாண உத்ஸவம் செய்யும் போது,
தான் கஷ்யபருக்கு புத்திரனாக வாமன அவதாரம் செய்ததால், தன்னை காஷ்யப கோத்திரத்தை சேர்ந்தவன் என்றும்,

மஹாலக்ஷ்மி ப்ருகுவுக்கு புத்ரியாக அவதாரம் செய்ததால், பார்கவ கோத்திரத்தை சேர்ந்தவள் என்றும் சொல்லலாம் என்று அங்கீகரித்தார் பெருமாள்.
எந்த கோவிலாக இருந்தாலும்,
பெருமாள் "காஷ்யப" கோத்திரம் என்றும்,
பிராட்டி "பார்கவ/ஸ்ரீவத்ஸ" கோத்திரம் என்றும் சொல்லி,
திருக்கல்யாண உத்சவங்கள் இன்று வரை நடந்து வருகிறது. 




HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 




Monday 14 January 2019

பசுவதையை பாரத மக்கள் எதிர்க்க காரணம் என்ன? மனித பண்புள்ள ஹிந்துக்கள் என்ன செய்ய வேண்டும்? கொஞ்சம் அலசுவோம்...

பாற்கடலில் தோன்றிய காமதேனு, பகவான் விஷ்ணுவை ஆச்ரயித்தாள்.
பகவான் காமதேனுவுக்கு கோலோகம் என்ற லோகத்தை ஸ்ருஷ்டி செய்து அங்கு இருக்க அணுகிரஹம் செய்தார்.



பகவான் சொன்னபடி பூவுலகில் எங்கும் பசு மாடுகள், ரிஷபங்கள் ஸ்ருஷ்டி செய்தாள்.
உலகத்திலேயே அழகான மிருகம் பசுக்கள் தானே !!
பசுவை போல, மானும் அழகான மிருகம் என்ற போதிலும், மானால் அனைவருக்கும் உபயோகம் இல்லை.

ஒவ்வொரு மிருகத்தின் கண்களிலும் ஒரு குணம் வெளிப்படும்.
நாயின் கண்களில் நன்றி தென்படும்.
பசுவின் கண்களில் தாய் உள்ளம் தென்படும்.

பசுக்களின் உபயோகத்தையோ, சொல்லி மாளாது...
அந்த பசுவில் உண்டாகும் "பால்" நமக்கு உபயோகம் தருகிறது.
அந்த பாலில் இருந்து உருவாகும், தயிர், மோர், வெண்ணெய், நெய் என்று கடைசி சொட்டு வரை நமக்கு உபயோகம் தருகிறது.

பசு, சாணி போட்டாலும் நமக்கு உபயோகம்.
சாணியை காய வைத்து எரித்தாலும், அந்த சாம்பல் கூட நமக்கு உபயோகம் தருகிறது.

பசு மூத்திரம் கூட மருந்தாக நமக்கு உபயோகம் தருகிறது.
பசுவின் சாணி மண்ணில் விழுந்தாலும், மண்ணுக்கு உரமாகி நமக்கு பயிர் செய்ய உபயோகம் தருகிறது.
பசு காளை கன்றுகுட்டி ஈன்றாலும் விவசாயத்திற்கும், வண்டி இழுக்கவும் நமக்கு உபயோகம் தருகிறது.
பசு கிடாகன்று குட்டி ஈன்றாலும், அடுத்தபடி பால் கறக்க நமக்கு உபயோகம் தருகிறது.

உபயோகம் இல்லாத ஒரு பொருளும் பசுவினிடத்தில் இல்லை.

இப்படி எந்த விதத்திலும்,
பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்கிறது பசுக்கள்.

பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்பவர்களை
"தெய்வமாக" நினைக்காதவன் மனித பண்பு உள்ளவனா?


இப்படி எந்த விதத்திலும்,
பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழும் பசுக்களை,
கண் எதிரே உள்ள தெய்வமாக மனித பண்புள்ள ஹிந்துக்கள் கொண்டாடுவது ஆச்சர்யமில்லையே.
வேத தர்மத்தில் உள்ள ஹிந்துக்கள், உயர் மனித பண்பு உள்ளவர்கள் ஆயிற்றே.

இந்த பசுவிடமிருந்து 5 அம்ருதங்கள் நமக்கு உபயோகம் ஆகிறது என்கிறது வேத சாஸ்திரம்.
பால், தயிர், வெண்ணெய், கோமியம், கோமூத்திரம்.
இது அனைத்தும் ஆரோக்கியத்தை தர வல்லது.
தெய்வங்கள், பசுவில் உண்டான பால், தயிரால் செய்யப்படும் அபிஷேகத்தை மகிழ்ச்சியுடன் ஏற்கின்றனர்.
பசுவின் பாலை எடுத்து, தனக்கு அபிஷேகம் செய்தவனுக்கு, தெய்வங்கள் அணுகிரஹம் செய்கின்றனர்.

பிறருக்காகவே வாழும் பசுவை, வேதத்தில் உள்ள தெய்வங்கள் கொண்டாடுகின்றனர்.

தெய்வங்களே தன் தலையில் வைத்து கொண்டாடும் பசுவை, மனித பண்பு உள்ள மனிதன் வழிபடாமல் எப்படி இருப்பான்?

இப்படி பசுக்கள் நம் அனைவருக்கும் கண்ணெதிரே தெய்வமாக இருந்து, பிறருக்காகவே பிறந்து,
பிறருக்காகவே வாழ்ந்து, 
பிறருக்காகவே சஞ்சரித்து வருகிறது.

பசு மாட்டின் சாணத்தை எடுத்து வீட்டை அலம்பினால், அந்த வீடு மங்களம் அடைகிறது என்கிறது சாஸ்திரம்.
கிருமி நாசினியாக உள்ளது மாட்டின் மலம் கூட.

ஒரு வேளை, பச்சிளம் குழந்தை பிறந்து, தாய் இறந்து விட்டால் கூட, அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து, பசுமாடு தன் பாலை (கோ பால்) கொடுக்கிறது.
அந்த பசும்பாலை கொடுத்து, அந்த குழந்தையை வளர்த்து விடலாம்.
மற்ற எந்த மிருகத்தின் பாலும் பசுவின் பாலுக்கு ஈடு இல்லை. ஆரோக்கியமும் இல்லை.

தாயில்லாத குழந்தைகளுக்கு தாயாக பசு இருக்கிறது.
அது மட்டுமா?
தாயுள்ள குழந்தைகளுக்கும் தாயாக பசு இருந்து, தன் பாலை கொடுக்கிறது.
அது மட்டுமா?
அந்த தாய்க்கும், தாயாக பசு இருந்து, தன் பாலை கொடுக்கிறது.






தாய் சிறிது காலம் தான் பால் தருகிறாள் தன் குழந்தைக்கு. 
ஆனால்,
உலகத்தில் உள்ள மனிதர்கள் அனைவருக்கும் பிறந்தது முதல் கடைசி மூச்சு வரை, அனைவருக்கும் தாயாக இருந்து, பசு தன் பாலை கொடுக்கிறது.
மனித பண்புள்ள ஹிந்துக்கள் பசுவை "கோமாதா" என்று தானே சொல்வார்கள்.

நாம் அனைவரும் அந்த பசுவின் பாலை குடிக்கிறோம் என்பதால் தானே, பசுவை தன் தாய்க்கும் மேல் மதித்து "கோமாதா"என்று சொல்கிறோம்.
நம்மை தாய் போல வளர்கிறதே பசுக்கள்.

குழந்தை, குமரன், குமரி, வயதானவர்கள் என்று எல்லோரும் அந்த பசுவின் பாலை தானே குடிக்கிறோம்.
நம்மை பெற்ற தாய் கூட, ஓரிரு வருடங்கள் தான், தன் பாலை கொடுத்து வளர்க்கிறாள்.

பசுவோ, நம் வாழ்நாள் முழுக்க தாயாக இருந்து, நமக்கு பால் கொடுக்கிறதே.
புத்தியுள்ளவன், நன்றியுள்ளவன், மனித இதயம் உள்ளவன், பசுவுக்கு தன் தாய்க்கு கொடுக்கும் மரியாதையை தராமல் இருப்பானா?

எல்லா மனிதர்களுக்கும் பசுக்கள், தாயாக பால் கொடுக்கிறது.
தான் சிறு குழந்தையாக இருந்த போது, தன் தாயிடம் பால் குடித்து, பால் குடித்து வளர்ந்து விட்டான்.

அந்த தாய் பால் கொடுக்க முடியாத பின், அவனுக்கு சாதம், சாதமாக போட்டு, பெரியவனாக வளர்த்து விட்டாள்.
இப்பொழுது வயதாகி, முடியாத நிலைக்கு வந்து விட்டாள்.
இவள் நன்றாக இருக்கும் வரை இவளிடம் பால் குடித்து, பின்னர் இவள் கையால் சாதம் சாப்பிட்டு, இனி இவளால் இவனுக்கு ப்ரயோஜனமில்லை என்றதும்,
"சனியன், இது உயிரோடு இருந்து தொந்தரவாக உள்ளது.. இது இனிமேல் வீட்டுக்கு சுமை தான். இவளை வைத்துக்கொண்டு இனி எவன் சோறு போடுவான்? ஏதாவது அனாதை ஆசிரமம் இருந்தால் இந்த கிழவியை அனுப்பி விடலாமா?"
என்று நன்றியில்லாத அவன் நினைப்பது போல,
காலம் முழுக்க "பசுவுடைய பாலை குடித்து விட்டு", அந்த பசு வயதாகி இனி பால் கொடுக்காது என்றதும்,
"இது மலட்டு மாடாகி போய் விட்டது. இது இனிமேல் வீட்டுக்கு சுமை. இதை வைத்துக்கொண்டு இனி எவன் தீனி போடுவான்? இதை கொலைகாரன் எவனுக்காவது கொடுத்து காசு வாங்கி கொள்ளலாம். அவன் இந்த மாட்டை எங்கோ இழுத்து கொண்டு போய் கொலை செய்து கொள்ளட்டும்"
என்று நினைப்பவன், எப்பேர்ப்பட்ட கல் நெஞ்சம் உடையவனாக, நெஞ்சில் துளியும் இரக்கம் இல்லாதவனாக இருக்க வேண்டும்?

மனித இதயம் செய்யக்கூடிய காரியமா இது?



இருக்கும் வரை தாயின் பாலை, உழைப்பை உறிஞ்சி விட்டு,
அனாதையாக விடுபவன்,
உழைக்கும் வரை உழைப்பையும், பாலையும் உறிஞ்சி விட்டு,
மாட்டை கொலைகாரன் கையில் கொடுத்து, காசுக்கு விற்பவன்,
மனித இதயம் உள்ளவனா?
மனித இதயம் உள்ள ஒருவன் இப்படி செய்வானா?

பசுக்களை அதன் கடைசி காலம் வரை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?
பெற்றவர்களை கடைசி காலம் வரை காக்க வேண்டும் என்ற எண்ணம் வேண்டாமா?
இது தானே மனித பண்பு !!

அந்த காலங்களில் ஒவ்வொரு கிராமங்களிலும்,
வயதான பசுக்களை வைத்து காப்பாற்ற முடியாதவர்களுக்காக, அந்த ஊரில் உள்ள செல்வந்தர்கள் சேர்ந்து "பசு மடம்" கட்டி வைத்து இருப்பார்கள்.
தானே ரக்ஷிக்க முடியாத நிலையில், வயதான பசுவை "பசு மடத்தில்" விடுவார்கள்.
ஊரில் உள்ள செல்வந்தர்கள், பசுமடங்களில் உள்ள பசுக்களை கடைசி வரை காப்பாற்றுவதை கடமையாக நினைத்தனர்.

இந்த தர்மங்கள் எல்லாம் இப்போது எங்கே போனது நம் நாட்டில்?
இன்று உள்ள செல்வந்தர்களிடம் இது போன்ற தர்மங்கள் காணப்படவில்லையே !!
அரசாங்கமும் பசுக்களை காக்க வேண்டும் என்று நினைக்கவில்லையே? 

மனித உயிர்கள் மட்டும் தான் மதிப்பா? எங்கே போனது மனித பண்பு?

மனித பண்பு உள்ள எவனும் பசுவை கொல்வது தாயை கொல்வதற்கு சமம் என்று நினைப்பானே?

பஞ்சமர்கள், மிலேச்சர்கள், வாலிகர்கள் போன்றவர்களில் உள்ள மனித பண்பு இல்லாதவர்கள், இது போன்ற காரியங்களை தன் வயிறு வளர்க்க செய்கின்றனர்.

பஞ்சமர்கள் யார்?  Panchama படிக்கவும்.

மிலேச்சர்கள், வாலிகர்கள் யார்? Mlecha_Vahlika படிக்கவும்.

இன்றைய உலகில் பால் கறக்கும் மாடுகள் தென்படுகிறதே தவிர, வயதான கிழ மாடுகள் தென்படுவதே இல்லையே?

பசு மடங்கள் வைத்து பரிபாலிக்க "செல்வந்தர்களும்" முன் வரவில்லை இன்று.
இந்த கிழ மாடுகள் எங்கே போகின்றன?



லாரிகளில் ஏற்றி கசாப்பு கடைக்கு அனுப்பப்படும் அவலம், கலாச்சார சீர்கேடு, 
மனித பண்புக்கு பெயர் எடுத்த பாரத தேசத்தில் நடந்து கொண்டு இருக்கிறதே?

இதை பார்க்கும் மனித இதயம் கொண்ட சாதுக்கள், கண்ணீர் விடுகின்றனர்.
சில சாதுக்கள் சேர்ந்து கொண்டு, தங்களால் முடிந்த வரை பசுக்களை காக்கின்றனர்.
மனித இதயம் பாரத தேசத்தில் உள்ளவர்களுக்கு எங்கே போனது?

நாட்டு மக்களுக்கும் இந்த அவலத்தை பார்த்து சொரணை இல்லை. அரசும் இந்த அவலம் நடக்க அனுகூலம்.

அப்படி கொலை செய்ய மாடு, மற்ற மிருகங்களை போல துஷ்ட மிருகமா?
தன் வாழ்நாள் முழுவதும் உனக்கு எத்தனை உபயோகமாக இருந்தது !!

மனிதனுக்கு மனிதனே நன்றி கெட்ட பிறகு,
பெற்றெடுத்த அப்பா, அம்மாவிடமே, பிள்ளை நன்றி கெட்டவன் ஆன பிறகு,
மாட்டிடமா நன்றி இருக்க போகிறது?

ஹிந்துக்கள் ஹிந்துக்களாக இல்லையே !!

உயர்ந்த பண்பு கொண்டிருந்த ஹிந்துக்கள், சுயநலமே குணமாகி இப்படி ஆகி இருக்கிறார்களே!!
என்று மனம் வருந்தி, கண்ணீர் விடுகிறார்கள் சாதுக்களும், மகான்களும்.
பசுக்களிடம் அனைத்து தெய்வங்களும் குடி கொண்டுள்ளனர்.

பசுவை தெய்வமாக நினைத்து, தினமும் குளிப்பாட்டி, அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, பசுவை வலம் வந்து நமஸ்கரித்து, கோமாதாவாக வழிபட்ட காலங்கள் போய் விட்டதே !!
ஜீவ காருண்யம் கொண்ட ஹிந்துக்கள் உள்ள இந்த பாரத தேசத்தில், பசுக்கள் சித்ரவதை செய்யப்படுவதை தடுக்க வேண்டும்.

செல்வந்தர்களும் தினமும் மாட்டின் பால், தயிர், வெண்ணெய் குடிப்பவர்கள் தானே? ஒரு குழுவாக சேர்ந்து கிராமம் கிராமமாக பசு மடங்கள் ஏற்படுத்தி, பால் கறக்காத மாடுகள் மாட்டு இறைச்சி தின்று வயிறு வளர்ப்பவனிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்.
மாட்டு இறைச்சி தின்பவன், நாயையும், பன்றியையும் தின்று வாழட்டுமே !!

மாட்டு இறைச்சி தின்பவன் கீழ் நிலை கொண்ட நன்றி கெட்டவன்.

இவர்களை சட்டத்தாலும் ஒடுக்க வேண்டும்.
மாடுகள் இவர்கள் கையில் சிக்காமல் இருக்க, செல்வந்தர்கள் கூடி வந்து பசு மடங்கள் அமைத்து, பசுக்கள் தங்கள் வாழ்நாளை முழுவதும் நன்றி கெட்டவர்கள் கையில் சிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

சிந்திக்க வேண்டும், மனித இதயம் உள்ள ஹிந்துக்கள்.
தாயை கொன்றதற்கு சமமான பசு வதை நடக்க இந்திய மக்களில் ஒருவன் கூட காரணமாக இருக்க கூடாது.

ஹிந்துக்களே பண்புள்ளவர்கள்.
ஹிந்துக்களே மனித பண்புள்ளவர்கள்.
பசுவை தாய்க்கு சமமாக மதித்த இந்திய மக்கள், கிராமம் கிராமமாக பசு மடங்கள் அமைய, அமைக்க முயற்சிக்க வேண்டும். 

HARE RAMA HARE KRISHNA - Bhajan

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 





Friday 11 January 2019

தெய்வத்தால் ஆகாதேனினும் முயற்சி - வள்ளுவன் வாக்கு என்ன சொல்கிறது?


தெய்வத்தால் ஆகாதேனினும்
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும் -
திருக்குறள்.




தெய்வம் தன் சக்தியின் மூலம், நமக்கு அருள் (நன்மை) செய்ய இயலாமல் போனாலும்,
கடுமையான மனித முயற்சியால் நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்.

இப்படி அர்த்தம் கொள்பவன் அறிவில்லாதவன்.
இப்படி அர்த்தம் கொள்பவன் "போலி தமிழன்"
தெய்வ நம்பிக்கை உள்ள வள்ளுவர், தெய்வ பலத்தை தாழ்த்தி, மனித முயற்சியை உயர்த்தி சொல்ல தேவையுமில்லை.




மனிதனின் முயற்சிக்கு பலன் கொடுப்பது இறைவனே, என்கிற பொழுது, 'இறைவனால் முடியாத ஒன்றை, மனித முயற்சியினால் பெற முடியும்' என்று வள்ளுவர் போன்ற தமிழ் புலவர்கள், தெய்வ புலவர்கள் சொல்லி இருக்க மாட்டார்கள். 
தமிழ் சங்கமும் ஏற்று இருக்காது.

தமிழ் இலக்கணம் அறிந்த "உண்மை தமிழன்" இதன் உண்மை பொருளை அறிகிறான்.

தமிழ் இலக்கணப்படி, தெய்வம் என்ற சொல்லுக்கு "விதி" என்றும் பொருள் உண்டு.









"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன்" ..
என்று வள்ளுவன் கடவுளை "பகவான்" என்ற சொல் கொண்டு அழைக்கிறார்.
'அ' என்ற அகர எழுத்தே பரமாத்மாவை தான் குறிக்கிறது.
எழுத்துக்களில் 'அ' என்ற அகரமாக இருக்கிறேன் 
என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் "அக்ஷரானாம் அகாரோஸ்மி" என்று சொல்வதை தான்,
வள்ளுவர் தன் முதல் குறளிலேயே பயன்படுத்துகிறார். 
"ஆதி பகவன்" என்று பரமாத்மாவை குறிப்பிடுகிறார்.




ஓம் என்ற ஓங்காரம், 'அ' என்ற அகர ஓசையில் தான் ஆரம்பிக்கிறது என்றும் நாம் அறிவோம்.
ஓம் என்ற சொல்லின் பொருளை அறிய, https://www.proudhindudharma.com/2018/01/WhatisAumOM.html?m=1
படிக்கவும்.

தெய்வம் என்ற சொல்லுக்கு தமிழ் இலக்கண படி "விதி" என்று பொருள் இருப்பதை கவனித்தால், 
வள்ளுவர் நமக்கு சொல்லும் பொருள் விளங்கும்.





நாம் இதுவரை செய்த பாவ புண்ணியங்களால் ஏற்படும் எதிர்வினை தான் "விதி" என்கிறோம்.


"விதியின் காரணத்தால், நமக்கு சில காரியங்கள் தடைப்பட்டாலும், நம் கர்ம விதியையும் மாற்ற, நல்ல காரியங்கள் விடாமல் செய்து வந்தால், விதிப்பலனையும் நல்ல காரியங்களால் மாற்றி, நாம் ஆசைப்படுவதை அடைய முடியும்"
என்கிறார் வள்ளுவர்.


HARE RAMA HARE KRISHNA - BHAJAN
sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka






Thursday 10 January 2019

கடவுளின் பெயரால், பாவ மன்னிப்பு கொள்கைகள் ஏற்படுத்தும் ஒழுக்க கேடுகள். ஹிந்துக்கள் வழிபடும் முறை என்ன? ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

"கடவுளின் பெயரால்"
என்று 'கடவுள் மேல் பழியை போட்டு', நல்லதோடு, கெட்ட காரியங்களையும் சேர்த்து செய்வதை, பிற மதங்கள் கொள்கையாக கொண்டுள்ளன.
இது வேதனைக்குரியது. சிந்திக்க வேண்டியதும் ஆகிறது.



இதற்கு மாறாக,
"பரமேஸ்வரன் என்னை பார்த்து 'இவன் என் பக்தன்' என்று மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையும் படி, நான் நற்செயல்களை மட்டுமே செய்ய ஆசைப்படுகிறேன்"
என்று ஹிந்துக்களை பிரார்த்திக்க வைக்கிறது வேத தர்மம்.

இந்த கொள்கையினாலேயே பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள்
"எந்த காலத்திலும்
அடுத்தவன் வீட்டில் புகுந்தோ,
அடுத்தவன் நாட்டில் புகுந்தோ
குண்டு வைத்தோ!, கொள்ளை அடித்தோ!
அடுத்தவன் நாட்டுக்கு சென்று அவர்கள் வழிபடும் ஆலயத்தை அழித்தோ!
நாசம் செய்ததில்லை"
ஸ்ரீ ராமர், இலங்கை சென்று ராவணனை கொன்று, சீதையை மீட்டார். ப்ராம்மண குலத்தில் பிறந்தாலும் விபீஷணனை போல நல்ல குணம் ராவணனிடத்தில் இல்லை. பிறர் மனைவியை அபகரித்த குணம் கெட்ட ராவணன் அழிந்தான்.

இலங்கை முழுவதையும் தன் கையில் கொண்டு வந்தும், விபீஷணனை இலங்கைக்கு அரசனாக்கி, அந்த ஊரில் உள்ள ஒரு சிறு தங்கத்தை கூட வரியாகவோ, மரியாதைக்காகவோ எடுத்துக்கொள்ளவில்லை ஸ்ரீ ராமர்.
சீதையுடன், மரவுரி அணிந்த ஸ்ரீ ராமராகவே அயோத்தி திரும்பினார்.
பிறர் சொத்தில் துளியும் ஆசை இல்லாதவராக இருந்த ஸ்ரீ ராமர் நம் அனைவருக்கும் தெய்வமாக உள்ளார்.
தெய்வத்திடம் ஒழுக்கம் இருக்கும் போது, ஹிந்துக்கள் ஒழுக்கமாக இருப்பதில் ஆச்சர்யமில்லையே.

மனித பண்பு உள்ள எவனும் ஸ்ரீ ராமரை போல வாழ ஆசைப்படுவான் அல்லவா?
பிராம்மண ஜாதியில் பிறந்த ராவணனை விட, அவன் தம்பி விபீஷணன் நியாயத்தின் பக்கம் நின்றார்.

இன்றுவரை, ஹிந்துக்கள் எங்கும் வரவேற்கப்படுகின்றனர்.
இதற்கு காரணம்,
இவர்களிடம் காலம் காலமாக தகப்பன், அவன் தகப்பன் என்று ஊறி உள்ள ஹிந்து கொள்கைகள் தான்.

வேத தர்மத்தில் இருக்கும் ஹிந்துக்கள், எண்ணத்தில் கூட உயர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.
இது ஹிந்துக்களின் பெருமை.

பொதுவாக மற்ற மதங்களில், "நாம் செய்யும் பாவங்களை கடவுள் மன்னிப்பார்"
என்று பாவ மன்னிப்பை "முக்கிய கொள்கையாக" வைத்து உள்ளது.


"பாவத்திற்கு மன்னிப்பு" என்பதை முக்கிய கொள்கையாக வைத்து உள்ளதாலேயே,
அந்த மதங்களில் "பாவம் செய்யலாம்" என்று சொல்லாமலேயே இடம் தருகிறது.

இதனாலேயே அவர்களிடத்தில் ஒழுக்கம் இல்லை.
ஒழுக்கத்தை இவர்களுக்கு, போதிக்க வேண்டியுள்ளது.

எதற்கும் "சட்டம்" இயற்றினால் தான், இவர்களுக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த முடிகிறது.
கடுமையான சட்டங்கள், இவர்கள் நாட்டில் இருப்பதற்கு காரணம் இந்த "பாவ மன்னிப்பு" கொள்கையே..

பாவத்திற்கு அஞ்சாதவனை, சட்டத்தால் தான் ஒடுக்க வேண்டி இருக்கிறது.

"பாவம் செய்தால், கடவுள் மன்னிப்பார்" என்கிறது மற்ற மதங்கள்.
"பாவம் செய்யாதே, தெய்வம் தண்டிக்கும்" என்று பாவத்திற்கு அஞ்ச வைத்து, ஒழுக்கத்தை போதிக்கிறது நம் வேத தர்மம்.

பாவத்திற்கு அஞ்சும் ஹிந்துக்கள் உள்ள பாரத நாட்டில், சட்டம் கடுமையாக இல்லாமல் இருந்தாலும், "தானாகவே சுய ஒழுக்கத்துடன்" பெரும்பான்மை ஹிந்துக்கள் இருக்கிறோம். வாழ்கிறோம்.
இங்கு, ஒருவன் கையிலும் துப்பாக்கி இல்லை, உயிர் பயமும் இல்லை.
இதற்கு காரணம் நம் ஹிந்து கொள்கையே..

ஹிந்துக்களை தெய்வமே காக்கிறது.
உருவாக்கப்பட்ட மற்ற மதங்களில், மனிதர்கள் மதத்தை காக்கிறார்கள்.

20 வருடம் ஒரு தம்பதிகள் மற்ற மதங்களில் சேர்ந்து வாழ்ந்தாலே, அது ஆச்சரியமாகவும், உயர்வாகவும் மதிக்கப்படுகிறது.
ஒழுக்கம் உள்ளவனை அங்கு தேட வேண்டியுள்ளது.

இந்தியாவில், ஹிந்துவாக பிறந்து, நாத்தீக புத்தி கொண்டவன் கூட 'மனசாட்சிக்கு கட்டுப்பட்டோ', 'தாய் தந்தையே தெய்வம்' என்று நினைத்தோ, ஒரு ஒழுக்கத்தில் வாழ்கிறான்.

ஒழுக்கம் என்ன விலை? 
என்று கேட்கும் சமுதாயமாக உள்ளனர் வெளி மதத்தினர் கொள்கையின் காரணமாக.

"பாவம் செய்தால் மன்னிப்பு கிடைக்கும்"
என்று மத கொள்கைகளே இடம் தருவதால்,
இன்னொரு ஜீவன் மேல் கருணை ஏற்படுவதில்லை.
"மிருகங்களை கொல்லாதே...கருணையாக இரு"
என்று தனியாக சங்கம் வைத்து, அதையும் இவர்களுக்கு போதிக்க வேண்டியுள்ளது.

மனித பண்பான ஜீவகாருண்யம் இவர்களிடம் இல்லை. பணமும், உணவுமே இவர்களின் முக்கிய தேடல்.
இவர்கள் மதங்களில் மிருகங்களை கொல்வது கூட இறைவன் பெயரால் தான். இவர்களிடம் சிக்கும் விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம்.
கொலை செய்த பாவத்தை "இறைவன் மேல்" போடுகின்றனர் மத கொள்கையினாலேயே.



இன்னும் ஒரு படி மேலே போய், பிற நாட்டில் உள்ளே புகுந்து ஆயிரக்கணக்கான மனிதர்களை இறைவன் பெயரால் கொலை செய்கின்றனர்.
பணத்தாலும்,
பாவ மன்னிப்பு போன்ற பிதற்றல் கொள்கையாலும்,
கத்தி முனையிலும்
மதம் மாற்றுகின்றனர்.

ஏமாறும் மனிதர்கள்,
ஒழுக்கத்தில் ஆர்வம் இல்லாதவர்கள்,
பண தேவை உள்ள அப்பாவிகள் 
இவர்கள் மதத்தில் தாவுகின்றனர்.






இது இன்று அல்ல, இந்த கொள்கைகள் விதிக்கப்பட்டு பிற மதங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே, நடந்து கொண்டு இருக்கிறது.

இதற்கு குறையாக பிற மதத்தவர்களை சொல்ல முடியாது.
அவர்களும் மனிதர்கள் தானே.

பொதுவாக, மனிதர்கள்
தான் சார்ந்த மத கொள்கைகளாலும்,
அவர்களை சுற்றி இருக்கும் மனிதர்களின் ஒழுக்கத்தாலும் வளர்க்கப்படுகின்றனர்.

ஆதலால் பிற மதத்தில் உள்ள மனிதர்களை குறை சொல்லி பயனில்லை.
ஆனால்,
பிற மதங்களில் உள்ள சில கொள்கைகளில் உள்ள ஓட்டைகள் தான், மனிதர்களை தவறான பாதைக்கு இழுத்து செல்கிறது..

இதை அவர்கள் புரிந்து கொள்கிறார்களோ இல்லையோ, ஹிந்துக்கள் தெரிந்து கொண்டால், குறைந்த பட்சம் பொய் மதங்களில் விழுந்து விடாமல் இருக்கலாம்.
பிறமத கொள்கை "பாவ மன்னிப்பை" முக்கிய கொள்கையாக அனுமதிப்பதால், தன் புத்திக்கு தோன்றிய நியாயத்தில் காரியங்கள் செய்து, அதை "கடவுளின் பெயரால்" என்று மொத்த பாவத்தையும் கடவுள் மேல் போடுகின்றனர் பிற மதத்தினர்.
நமக்கோ கருட புராணம் போன்ற பெரிய தர்ம சாஸ்திரத்தை காண்பித்து, "தண்டனை நிச்சயம்" என்று எச்சரிக்கிறது.


ஹிந்துக்களுக்கு
நாராயணனின் பெருமை தெரியுமோ, இல்லையோ,
சிவபெருமானின் பெருமை தெரியுமோ, இல்லையோ,
ஆனால் அனைவருக்கும் பாவம் என்றால் என்ன? யமன் யார்? என்று தெரிகிறது.
பாவத்தையும், மரணத்தையும் காட்டி, ஹிந்துக்களை ஒழுக்கத்தில் நிறுத்துகிறது நம் வேத தர்மம்.

ஹிந்துவாக பிறப்பதற்கே கோடி ஜென்மங்கள் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
உலகத்தில் எந்த மூலையிலும் நாம் பிறந்து இருக்கலாம்.
ஆனால் ஹிந்துவாக, ஒரு ஹிந்துவுக்கு பிறந்துள்ளோம்.

அதிலும் ஹிந்துவின் பெருமை உணர்ந்தவனாக வாழ்வதற்கு அதை விட கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

நாயன்மார், ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள் போன்றவர்கள் சொன்ன அருள் மொழிகளை கேட்கும் பாக்கியமும் பெற்று இருந்தால், அதை விட கோடி புண்ணியம் செய்தவராக இருக்க வேண்டும்.

ஹிந்துவாக பிறப்பதற்கு, நாம் எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும்? என்று எண்ணி பார்த்தாலே, நம்மை நாமே மெச்சிக்கொள்ள தோன்றும்.

பாவத்திற்கு தண்டனையை காட்டி, ஒழுக்கத்தில் வாழ வைக்கிறது நம் தர்மம்.

செய்த பாவத்திற்கு தண்டனை போதாது என்றால், மறு பிறவியும் நிச்சயம்,
அதுவும் போதாது என்றால்,
குருடனாக, நொண்டியாக, திருடனுக்கு மகனாக, மகளாக பிறக்க நேரும்,
அதுவும் போதாது என்றால்,
பிற மதங்களில் பிறக்க நேரும்,
அதுவும் போதாது என்றால்,
மரமாகவும், விலங்காகவும் பிறக்க நேரும்
என்று பாவத்தை கண்டு அஞ்ச வைத்து, 'பாவம் செய்யாதே' என்று வழி நடத்துகிறது வேத தர்மம்.

பிற மதத்தில் உள்ள "ஒழுக்க குறைபாடு, தீவிரவாதம்" தீர்க்க முடியாத சிக்கல்.
இந்த மதங்களில் பிறந்தவர்கள்,  தன் மனசாட்சியை உண்மையாக கேட்டு கொண்டால் ஒழிய இதற்கு தீர்வு இல்லை.

"எந்த பாவத்தையும் கடவுள் மன்னிப்பார்" என்பதால், பாவம் செய்ய தூண்டுவதே இதற்கு காரணமாக உள்ளது.
இது வருந்தத்தக்கது.

பல நல்ல விஷயங்கள் மற்ற மதங்களிலும் உள்ள போதிலும், இந்த "பாவ மன்னிப்பு" கொள்கையும், "கடவுளின் பெயரால்" செயல் செய்யும் அனுமதிப்பும், ஒழுக்கத்தில் இருந்து நழுவ செய்கிறது.
பகுத்தறிவு உள்ளவன் சிந்திப்பான்.

சமுதாய சீர்கேட்டுக்கு முக்கிய காரணம் ஆகிறது, இந்த கொள்கைகள்.


உலகத்தில் உள்ள பிராணிகள் அனைத்தும், "மனிதன் பயன்படுத்தவும், தின்பதற்குமே" என்று கொள்கையாக வைத்து உள்ளது பிற மதங்கள்.
இது வேதனைக்குரியது.

நம் வேத தர்மத்தில், மனித சமுதாயத்தை பார்த்து,
  • சத்தியம் பேசு,
  • தர்ம வழியில் செல்,
  • தாய் தந்தையை தெய்வம் போல நினை,
  • உன் உயிருக்கு நீ கொடுக்கும் மதிப்பை, மற்ற உயிர்களுக்கும் கொடு, ஜீவ ஹிம்சை முடிந்தவரை செய்யாதே,
  • உனக்கே கூட ஜீவ ஹிம்சை செய்து கொள்ளாதே.. தற்கொலை எண்ணம் கொள்ளாதே,
  • குருவை தெய்வம் போல நினை,
  • உன் வீட்டுக்கு நேரம் காலம் சொல்லாமல் வரும் விருந்தாளியையும் (அதிதி) தெய்வம் போல நினை,

நீ எந்த செயல் செய்தாலும் உனக்குள் இருக்கும் இறைவன் 'உன் செயலை பார்த்து மகிழ்ச்சி அடைவாரா?' 
என்று எப்பொழுதும் கேட்டுக்கொண்டே, கவனித்து எந்த காரியமும் செய்
என்று ஆச்சர்யமாக வழிகாட்டுகிறது வேத தர்மம்.

பொய் பேசும் போது,
ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழும் போது,
நல்ல குணம் இல்லாத போது,
நமக்குள்ளேயே இருக்கும் பரமாத்மா நம் செயலை கண்டு அறுவருப்பார்.

ஒரு தகப்பன் நல்ல பிள்ளையை கண்டு மகிழ்ச்சியோடு "இவன் என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வார்.
அதே தகப்பனுக்கு பொய் பேசும், கெட்ட குணங்கள் உள்ள இன்னொரு பிள்ளை இருந்தால், வேதனையுடன், ஒரு வித வெறுப்புடன் "இவனும் என் பிள்ளை தான்" என்று சொல்வார்.

நாம் அனைவரும் பகவான் நாராயணனின் பிள்ளைகள் தான்.
நற்செயல்கள் செய்தால், பகவான் நம்மை ஒரு நல்ல பிள்ளையை போல பார்க்கிறார். 'இவன் என் பக்தன்' என்று பெருமிதமாக சொல்லிக்கொள்கிறார்.
தீய செயல்களை செய்தால், வெறுப்போடு அணுகிரஹம் செய்கிறார்.

மனித பண்பு உள்ள நாம், தீய குணத்தில் இருந்து விலகி இருக்க சொல்கிறது நம் வேத தர்மம்.

எந்த காரியம் செய்தாலும் "இந்த காரியம் எனக்குள் அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மாவுக்கு மகிழ்ச்சி தருமா?" என்று  தன்னையே நாம் கேட்டுகொண்டாலே, ஒழுக்கமாக வாழ ஆரம்பிப்போம்.
இந்த அற்புதமான வாழ்க்கை நெறியை சொல்லிக்கொடுப்பது நம் வேத தர்மமே.

"அந்தர்யாமியாக நமக்கு உள்ளேயே, பகவான் இருக்கிறார்" என்று தெரிந்த பின்னும், ஒருவன் தீய குணத்துடன், ஒழுக்கமில்லாத வாழ்க்கை வாழ்வானா மனித பண்பு உள்ள ஒருவன்?

"கடவுள் எங்கேயோ ஆகாசத்தில் இருக்கிறார்" என்று சொல்லாமல், "உன் இதயத்தில் அமர்ந்து இருக்கிறார்" என்று சொல்லி எச்சரிக்கிறது நம் வேத தர்மம்.
நாத்தீகன் உள்ளிருந்து நம்மிடம் பேசும் நாராயணனை "மனசாட்சி" என்று சொல்கிறான்.

"உள்ளே ஒருவன் பேசுகிறான்" என்பதை எவனும் மறுப்பதில்லை.
ஜீவாத்மாவாகிய நம்மோடு, "எப்பொழுதும் அந்த பரமாத்மா கூட இருந்து பேசுவதை" கவனித்து வாழ்பவர்கள் மனித பண்பு உள்ளவர்கள்.

"வானத்தில் மட்டும் இல்லை, எங்கும் இருக்கிறார் பகவான். அந்தர்யாமியாக நமக்கு உள்ளேயே, பகவான் இருக்கிறார்" என்று ஹிந்துக்கள் உணர்வதால், நல்ல குணத்துடன், ஒழுக்கமான வாழ்க்கை வாழ்ந்து,
உள்ளிருக்கும் பரமாத்மா சந்தோஷப்படுவதை உணர்கிறார்கள்.
ப்ராம்மணர்கள் தினமும் செய்யும் சந்தியாவந்தனத்தில்,
அனைவரும் செய்யும் "கல்யாணம், திவசம்" போன்ற காரியங்களில் ஆரம்பிக்கும் போது கூட, பரமாத்மா மகிழ்ச்சி அடைய இதே பிரார்த்தனை தான் செய்கிறோம்.
நன்றாக கவனித்தோமென்றால், எத்தனை அற்புதமான வழிகாட்டியாக வருகிறது நம் வேத தர்மம் என்று நமக்கு புரியும்..

கல்யாணம், திவசம், சந்தியா வந்தனம் என்று எதை செய்தாலும்,
"மமோபாத்த சமஸ்த... " என்று சங்கல்பம் செய்ய சொல்லும் போது, "பரமேஸ்வர ப்ரீத்யர்தம்" என்று சொல்லி ஆரம்பிக்கிறோம்.
இதற்கு பொருள் என்ன?
நான் செய்யப்போகும் திவசம்/கல்யாணம்/சந்தியா வந்தனம் போன்ற கடமைகளை பார்த்து, பரமேஸ்வரன் மகிழ்ச்சி அடைவார்" என்று கடவுள் நம் செயலை கண்டு மகிழ்வார் என்ற ஆர்வத்தோடு கடமையாக செய்கிறோம்.
சுயநலத்தை விட, நான் என் பெற்றோருக்கு செய்யும் திவசத்தை கண்டு, பரமேஸ்வரன் 'என்னை பார்த்து பெருமிதம்' கொள்வார் என்று நோக்கில் கடமையாக செய்கிறோம்.

நாம் செய்யும் திவசமோ, சந்தியா வந்தனமோ, கோவிலுக்கு செல்வதோ, பரமேஸ்வரனை மகிழ்ச்சி படுத்தும் என்று தெரிந்தும், இதை செய்யாமல் இருப்பானா ஒரு ஹிந்து?

இன்றைய நிலையிலும், சில ப்ராம்மணர்கள் இன்று வரை சந்தியா வந்தனம் போன்ற விதிக்கப்பட்ட கடமையை செய்வதற்கு காரணமும் இதுவே.
இறைவனின் மன உகப்புக்காக வாழ்கின்றனர் வேதியர்கள்.

95% ப்ராம்மணர்கள், இன்று  சந்தியாவந்தனம் செய்வதில்லை.
இது ப்ராம்மணருக்கு மட்டுமல்ல, பிராம்மண பெண்களுக்கு மட்டுமல்ல, மற்ற அனைவருக்கும் செய்யும் துரோகம்.

சந்தியாவந்தனத்தில், உலகத்தில் உள்ள எல்லோருக்காகவும் பிராம்மணன் தெய்வத்திடம் பிரார்த்திக்கிறான்.
இதை செய்யாமல் தனக்கும் துரோகம் செய்து, மற்றவர்களுக்கும் துரோகம் செய்கிறான்.
ப்ராம்மணர்கள் தங்களை தானே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி இது.

"முக்கால்வாசி பிராமணர்கள் சந்தியாவந்தனம் செய்யவில்லையே, நீங்கள் சிலர் மட்டும் விடாமல் செய்வதற்கு காரணம் என்ன?" என்று கேட்டால்,
"கடமைக்காக செய்யவில்லை, பணத்திற்காகவும் செய்யவில்லை.
"இது எனக்கு கொடுக்கப்பட்ட கடமை.
இதை செய்தால் எனக்கு என்ன நன்மை ஏற்படும்? என்பதை விட... எனக்கு கடமையாக கொடுக்கப்பட்ட இந்த  சந்தியாவந்தனம் செய்தால், என் உள்ளிருக்கும் பகவான் மகிழ்ந்து "சபாஷ்..." என்று சொல்வாரே என்பதால் செய்கிறேன் என்பார்கள்.

சந்தியா வந்தனம் செய்யும் போதும், நாம் என்ன சொல்லி ஆரம்பிக்கிறோம், என்ன சொல்லி முடிக்கிறோம் என்று பார்த்தால், எத்தனை அற்புதம் என்று நமக்கு புரியும்.

சந்தியா வந்தனம் ஆரம்பிக்கும் போது, "பரமேஸ்வர ப்ரீத்யர்தம்" என்று சொல்லி, "நான் செய்யும் இந்த நித்ய கடமையை (Daily Duty), பார்த்து பரமேஸ்வரன், என்னை கண்டு சந்தோஷம் அடைவார்" என்று உற்சாகத்துடன் ஆரம்பிக்கிறோம்.

கடைசியில், "நாராயணாயேதி சமர்பயாமி" என்று முடிக்கும் போது,
"அனைத்து பலன்களையும் நாராயணன் பாதத்தில் சமர்ப்பித்து விட்டு" கடமையை செய்தோம், என்ற மட்டில் திருப்தி அடைகிறோம்.

பகவத் கீதையில், "கடமையை செய். பலனை எதிர்பார்க்காதே" என்று ஏன் சொன்னார்? என்பது இப்போழுது புரிந்து கொள்ள முடியும்.

மற்ற மதங்களில் உள்ளவர்கள்,
"எனக்கு பெரிய குடும்பம். எனக்கு கடமைகள் உள்ளது. நான் தான் பார்த்து கொள்ள வேண்டும்.
என்னை கடவுள் காக்க வேண்டும், எனக்கு அது வேண்டும், இது வேண்டும்" என்று கடவுளிடம் பிரார்த்திப்பார்கள்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், நம்மை பார்த்து,
"உன் குடும்பம், உன் கடமை என்று நினைப்பதை நிறுத்து.
நீயும், உன் குடும்பமும் என் குடும்பம் என்று தெரிந்து கொள்.
உன் கடமையை என் குடும்பத்தில் ஒருவனாக, சந்தோஷமாக செய்து கொண்டு இரு.
நீ உன் கடமையை செய்வதை பார்த்தே நான் சந்தோஷப்படுகிறேன்.
நீ உன் கடமையை குறையாக செய்தாலும், நிறையாக செய்தாலும்,
நீ ஆசைப்படுவதை விட அனைத்து பலன்களும் கிடைக்க செய்து, அதோடு எதிர்பாராத ஆபத்துக்களையும் வராமல் செய்து, நான் காக்கிறேன். குடும்ப கவலையை குடும்ப தலைவனான என்னிடம் ஒப்படைத்து விட்டு, நீ என் குடும்பத்தில் உள்ள ஒரு உறுப்பினர் என்ற நினைவோடு, தைரியமாகவும், சந்தோஷமாகவும் கடமையை செய்து கொண்டிரு. உன் குடும்ப நலன் என் பொறுப்பு"
என்ற அர்த்தத்தில் "கர்மாவை செய், பலனை எதிர்பார்க்காதே" என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இந்த காரியம் செய்தால், பகவான் ப்ரீதி அடைவார்,
இந்த காரியம் செய்தால், பகவான் வெறுப்பு அடைவார்,
என்று எந்த காரியத்தையும் செய்வதற்கு முன், இது பகவானுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துமா?
என்று கேள்விகேட்டு கொண்டு வாழ்ந்தாலே, இந்த கலியிலும் எந்த தவறான வழியிலும் நம்மை போக விடாமல், நல்ல வழியையே நமக்கு காட்டி, நம் ஆயுசு முடியும் சமயத்தில் திவ்யகாட்சி கொடுத்து, வைகுண்டமும் கூட்டி செல்வார்.

சந்தியா வந்தனம், ஏகாதசி விரதம் இருப்பவரை கண்டால், பகவான் "இவன் என் பக்தன்' என்று பெருமிதம் கொள்கிறார்.


சந்தியா வந்தனம் பிராம்மணர்கள் மட்டும் செய்ய கூடிய கடமை.
ஏகாதேசி விரதம் அனைவருக்கும் பொதுவானது.
ஓம் என்ற ஓங்காரம் உச்சரிக்க, பொதுவாக சந்யாசிகளுக்கு (உலக வாழ்க்கை விட்ட) மட்டுமே அதிகாரம்.
ப்ரணவத்திற்கு ஈடான "ராம" மந்திரம் அனைவருக்கும் பொது.

"ராம ராம" என்றோ, "நாராயணா" என்றோ, "விஸ்வநாதா" என்றோ, "சிவ சிவ' என்றோ சொல்ல அனைவருக்கும் தகுதி உண்டு.

வேதங்கள் புராணங்கள் எல்லாம், இந்த தெய்வங்களை தான் வழிபடுகிறது.
அந்த தெய்வங்களை நேரிடையாக நாமும் அழைக்கலாம் என்று அந்த தெய்வங்களின் பெயரை சொல்ல நாம் எல்லோருக்கும் அனுமதி உள்ளது.

எதற்காக எப்பொழுதும் "சிவ சிவ", "ராம ராம" என்று சொல்கிறாய்? என்றால், அதற்கு பதிலும் இதுவே.
"ராம ராம" என்று சொல்வதால் ஏற்படும் புண்ணியத்தை விட,
"ராம ராம" என்று சொல்லும் போது, "அந்த பகவான் இவன் என்னை சேர்ந்தவன், இவன் என் பக்தன்" என்று நம்மை பார்த்து ஆனந்தப்படுவார்.

இந்த வாக்கியத்தின் அழகை உற்று கவனித்து பார்த்தால் தான், சந்தியா வந்தனத்தின் அருமை கூட நமக்கு புரியும்..

சந்தியா வந்தனத்தை இன்றும் சிலர் உயிர் மூச்சாக ஏன் விடாமல் செய்கிறார்கள்? என்று புரியும்.

ஹிந்துக்களாக பிறந்ததில் பெருமை கொள்வோம்.
பாவ மன்னிப்பும் வேண்டாம், இறைவன் பெயராலும் செயலையும் செய்ய வேண்டாம்.
இறைவன் மகிழ்ச்சி அடையும் படி, மனசாட்சி (பரமாத்மா) விருப்பப்படி வாழ்ந்து, இறைவன் நம்மை கண்டு மகிழும் படியாக வாழுவோம். இதுவே பரமாத்மா நம்மிடம் எதிர்பார்க்கிறார்.

ஹிந்துக்கள் ஒன்று படுவோம்.
ஆதி காலத்தில் அனைவரும் ஹிந்துக்களே. ஹிந்துக்களாக அனைவரையும் ஆக்குவோம். 

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 



sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka