Followers

Search Here...

Saturday 16 February 2019

எந்த பலம் நமக்கு இருந்தால், தன்னம்பிக்கை எல்லையில்லாமல் இருக்கும்? ...

"க்ரதுமய புருஷ:" என்று வேதம் (சாந்தோக்ய உபநிஷத்) சொல்லும் போது,
"நம்பிக்கையே வடிவமாக இருப்பவன் மனிதன்" என்று மனிதனின் அடையாளத்தை சொல்கிறது.


"நம்பிக்கையை ஒரு மனிதன் இழந்து விட்டால்", அவன் உலகில் வாழ முடியாது போகிறான்.

உலகில் வாழ்வதற்கே, மனிதனுக்கு முதலில் தேவைப்படுவது "தன்னம்பிக்கை".
எந்த காரியத்தை எடுத்தாலும் "என்னால் செய்ய முடியாது" என்ற நம்பிக்கை இல்லாதவனாக இருந்தால், அவனால் எதிலும் முன்னேற முடியாமல் போகிறது. 
"ஒழுங்காக படிக்கிறாயா?" என்று கேட்டால், ஒரு மாணவன் "ஏதோ படிக்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால்,
அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"வேலை பார்க்கிறாயா?" என்று கேட்டால், ஒருவன் "ஏதோ பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.
"கல்யாணம் செய்து வைக்கலாமா?"
 என்று தகப்பன் கேட்டால், பிள்ளை "செய்து வையுங்கள். குடும்பம் ஏதோ நடத்த பார்க்கிறேன்" என்று தன்னம்பிக்கை இல்லாமல் சொன்னால், அவனுடைய நம்பிக்கையின்மையே ஜெயிக்க முடியாதபடி செய்து விடும்.

இப்படி தன்னம்பிக்கை இல்லாமல் இருக்கும் மனிதன், உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லாமல் போகிறான்.
நான் இந்த படிப்பு படிப்பேன்,
இந்த மாதிரி உத்யோகம் பார்ப்பேன்,
கல்யாணம் செய்து கொண்டு குடும்பம் நடத்துவேன்
என்று சொன்னால் தானே, அது தன்னம்பிக்கைக்கு லக்ஷ்னமாகும்.
படிப்பு, தனக்கு தகுந்த படிப்பா?
உத்யோகம், உயர்ந்த உத்யோகமா?
கல்யாணம் செய்து கொண்ட துணை சரியான துணையா?
என்று பார்ப்பது, ஒரு புறம் இருந்தாலும்,
எப்படி இருந்தாலும் தன்னம்பிக்கையோடு இருப்பேன் என்று சொல்வது தானே மனிதனுக்கு அழகு.


தனக்கு விதிக்கப்பட்ட காரியங்களில் ஸ்ரத்தை (ஈடுபாடு) இல்லாதவன், தன்னம்பிக்கையை இழக்க நேரும்.
இப்படிப்பட்டவர்கள் உலக வாழ்க்கைக்கே லாயக்கு இல்லை.
திடமான தன்னம்பிக்கை உடையவன், எப்பொழுதும் எல்லையற்ற ஆச்சர்யமான காரியங்களை செய்வான்.
இதற்கு யார் சாட்சி? நம் வீர ஹனுமானே சாட்சி.

தன்னம்பிக்கை நமக்கு இரண்டு விஷயங்களை பொறுத்து வருகிறது.

  1. ஒன்று, நம்முடைய உடல், அறிவு பலத்தை அறிந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".
  2. மற்றொன்று, தெய்வம் நமக்கு துணை நிற்கிறது என்பதை உணர்ந்து கொள்வதால் ஏற்படும் "தன்னம்பிக்கை".

சீதா தேவியை கண்டுபிடிக்க, நாற்புறமும் வானரர்கள் சுக்ரீவனால் அனுப்பப்பட்டனர்.
தெற்கு நோக்கி வந்த வானர சைன்யத்தில் (படையில்), ஹனுமான் இருந்தார்.

கடலை தாண்டி, இலங்கை சென்று பார்க்க வேண்டும் என்கிற நிலையில், அனைத்து வானரர்களும் ஒரு கூட்டம் போட்டு ஆலோசித்தனர்.

ஒரு வானரன் "நான் 10 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 20 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,
மற்றொரு வானரன் "நான் 30 யோஜன தூரம் தாண்டுவேன்" என்றான்,

மகா பலசாலியான அங்கதன், "100 யோஜன தூரமும் தாண்டி விடுவேன், ஆனால் திரும்பி வர முடியாது" என்றான்.
"சிறு வயதாக இருந்தால் தாண்டி, சீதா தேவி அங்கு உள்ளாரா என்று பார்த்து விட்டு, திரும்பியும் வந்து விடுவேன்.. வயதாகி விட்டதால் தாண்ட முடியாது" என்றார் ஜாம்பவான்

இப்படியே ஒவ்வொரு வானரனும் தன் உடல், அறிவு பலத்தை அறிந்து கொண்டு, அவரவர்கள் எவ்வளவு தூரம் தாண்ட முடியும் என்று, தன்னம்பிக்கையுடன் பேசினர்.
ஹனுமானை கேட்டதும், "கடலை தாண்டுவேன். சீதையை பார்ப்பேன். மீண்டும் திரும்பி வருவேன்" என்று எல்லையற்ற திடமான தன்னம்பிக்கையுடன் மார்பு தட்டிக்கொண்டு சொன்னார்.





எல்லையற்ற திடமான தன்னம்பிக்கை ஹனுமானுக்கு மட்டும் எப்படி ஏற்பட்டது?

மற்ற வானரர்கள் அனைவரும், தங்கள் உடல் வலிமையை மட்டும் வைத்து ஆலோசித்ததால், தன் சுயபலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

இத்தனை பெரிய காரியத்தை செய்ய வேண்டும் என்கிற போது, தன் பலத்தை கொண்டு ஏற்பட்ட "தன்னம்பிக்கையிலேயே" அவர்களுக்கு அவநம்பிக்கை வந்தது.

ஹனுமான் தான் "ராம பக்தன்" என்று அறிந்தவர்.
மேலும், தன் பக்தியால், ராமரின் அபிமானத்துக்கு பாத்திரமானவர்.
தெய்வம் எல்லோருக்கும் பொதுவானவர் என்றாலும்,
"கடவுளா? எங்கே காட்டு!!" என்று திமிராக பேசுபவனை காட்டிலும்,
"100 கோடி ராம நாமம் சொன்னால் ஸ்ரீ ராமரை தரிசிக்கலாம்" என்று தியாகராஜரை பார்த்து அவர் அப்பா சொல்ல,
"100 கோடி ராம நாம ஜபம் செய்து பார்த்து விட வேண்டும்" என்று ஆவலோடு ஜபம் செய்த அவருக்கு ஸ்ரீ ராமர் தரிசனம் கொடுத்தார் என்று பார்க்கிறோம்.

தன் உடல், அறிவு பலத்தால் ஏற்படும் தன்னம்பிக்கை, உடல், அறிவு பலத்தை தாண்டிய செயல்கள் செய்ய நிலை வரும் போது உடைந்து போகும்.

தெய்வத்திடம் உண்மையாக பக்தி (உறவு, அன்பு, ஆர்வம், உருக்கம் சேர்ந்தது "பக்தி") செய்து, தெய்வம் மனம் குளிர நாம் வாழ்ந்தால், தெய்வ அணுகிரஹத்தால், நாம் செய்யும் எந்த காரியமும் சுபமாக முடியும்.

ஹனுமானின் "ராமபக்தி" உலகம் அறிந்தது.

ஹனுமான் கடலை தாண்ட வேண்டும் என்று மற்ற வானரர்கள் பேசி கொண்டிருக்கும் போது, யோசித்து பார்த்தார்.
"சீதையை தேட லட்சக்கணக்கான வானரர்களை சுக்ரீவன் நாற்புறமும் அனுப்பினார்.  
சீதைக்கு தன் அடையாளமாக காட்ட, ஸ்ரீராமர், தன் கையில் அணிந்திருந்த கனையாழியை (மோதிரத்தை) எந்த வானரனுக்கோ கொடுத்து இருக்கலாம்.
இத்தனை வானரர்களிடையே, அடியேனான என்னை தேர்ந்தெடுத்து எப்பொழுது கூப்பிட்டு, இந்த கனையாழியை (மோதிரத்தை) என்னிடம் கொடுத்தாரோ!!
இதிலிருந்தே, நான் நிச்சயம் சீதா தேவியை பார்க்க போகிறேன் என்று தெரிகிறது.
இந்த தன்னம்பிக்கை என்னுடைய உடல், அறிவு பலத்தால் வந்தது அல்ல,
இந்த எல்லையற்ற தன்னம்பிக்கை, 'ஸ்ரீ ராமர் என்னை தான் தேர்ந்தெடுத்து இருக்கிறார்' என்கிற தெய்வ பலத்தால் என்று அறிகிறேன்"
என்று மனதுக்குள் புரிந்து கொண்டார்.


'தன் சுய பலத்தை காட்டிலும், தனக்கு தெய்வம் பலம் கூட இருக்கிறது' எனறு புரிந்து கொண்ட பின், தன் பலத்தை மீறிய செயலையும் தான் செய்ய முடியும் என்று தன்னம்பிக்கை கொண்டார் ஹனுமான்.

மற்ற வானரர்கள் தங்கள் சுய பலத்தை கருத்தில் கொண்டு யோசித்ததால்,  தன்னம்பிக்கை ஒரு எல்லையுடன் இருந்ததால், கடலை தாண்ட முடியாது என்று நினைத்தனர்.
ஒருவரும் லாயக்கு இல்லை என்று, கடைசியில் ஹனுமானை கேட்டதும், "கடலை இப்பொழுதே தாண்டுவேன். சீதையை பார்ப்பேன், திரும்பி வருவேன்" என்று உற்சாகமாக கிளம்பினார்.
குரு நமக்கு துணை நிற்கிறார் என்று "குருவின் அணுகிரஹ பலத்தையும்",
நாராயணன் நமக்கு துணை செய்கிறார் என்று 'தெய்வ அணுகிரஹ பலத்தையும்" யார் உணர்ந்து கொள்கிறார்களோ,
அவர்களுக்கு எல்லையில்லா திடமா தன்னம்பிக்கை உண்டாகிறது.

தன் சுய பலம், அறிவு பலத்தை மட்டும் நம்பினால், ஓரளவு தான் தன்னம்பிக்கை கிடைக்கும்.

மகான்கள், சாதுக்கள் "தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில்",  நினைத்து பார்க்க முடியாத, பெரிய பெரிய காரியங்களை கூட எளிதில் செய்து விடுகிறார்கள்.
மகான்கள் செய்யும் காரியங்கள்,
"ஸமர்த்த ராமதாசர்" போன்ற மகானின் அன்புக்கு பாத்திரமான "வீர சிவாஜி" போன்றவர்கள் மராட்டிய சாம்ராஜ்ஜியம் அமைத்து, செய்த சாதனைகள் காரியங்கள்
என்று பல ஆச்சர்யங்களை காணலாம்.
தெய்வத்திடம் பக்தி செய்த ப்ருகு, கன்வர், ஹரிதர் போன்ற ரிஷிகள், தங்களின் தெய்வபக்தியால், தெய்வ அணுகிரஹம் பெற்று, தெய்வங்கள் இவர்களுக்காக பாரத தேசம் முழுவதும் சிவனாக, விஷ்ணுவாக, முருகனாக, காட்சி கொடுத்தனர்.
அந்த ரிஷிகளுக்காக அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க சம்மதித்து இருக்கின்றனர்.

ரிஷிகள் தன் தெய்வபக்தியினால்  தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்தி, தெய்வங்கள் காட்சி தந்தவுடன், "சக்தியில்லாத, பக்தி குறைவாக உள்ள நமக்கும் காட்சி கிடைக்கட்டுமே" என்று, தெய்வங்களிடம் பிரார்த்தனை செய்ய, அர்ச்ச அவதாரமாக, அங்கேயே சாநித்யம் குறையாமல் இருக்க, தெய்வத்திடமே சம்மதம் வாங்கி, நமக்கு தந்து விட்டனர்.
ரிஷிகளால் தெய்வ சாநித்யம் அடைந்த இடங்கள், அரசர்களால் கோவில் அமைக்கப்பட்டு, காட்சி கொடுத்த தெய்வங்கள் வேத மந்திரங்கள் மூலம் பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜைகள் செய்ய வேதம் கற்று அறிந்த வேதியர்கள் அமர்த்தப்பட்டு, அந்த இடங்கள் திவ்ய க்ஷேத்ரங்கள் ஆனது.


பாரதம் ஏங்கும், ரிஷிகள் தொடாத இடங்களே இல்லை என்பதால், ஆங்காங்கு தெய்வங்கள் அவர்களுக்கு பிரசன்னம் ஆனார்கள்.
ஊருக்கு ஒரு கோவில் இருப்பது போல,
உலகத்திற்கே ஒரு கோவிலாக நம் பாரத தேசம் உள்ளது.

தெய்வ பக்தி திடமாக இல்லாத நாமும், தெய்வ சிந்தனை ஏற்பட்டு மோக்ஷத்திற்கு வழி செய்து கொள்ள, 
ரிஷிகளின் பக்தியால், நமக்கு தெய்வங்கள் பாரத தேசம் முழுவதும் அர்ச்ச (விக்கிரக) ரூபமாக கிடைத்தார்கள்.

அரசர்களால், அதை சுற்றி கோவில்கள் ஆகம விதிப்படி கட்டப்பட்டது.
ரிஷிகளுக்காக பிரகடனமான தெய்வங்களை, "நாயன்மார்கள், ஆழ்வார்கள், மகான்கள், சித்தர்கள்" போன்ற தெய்வீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் மங்களாசாசனம் செய்து பாடல்கள் பாடி, அவர்கள் சார்பில் நமக்கு பாசுரங்கள், பிரபந்தங்கள், ஸ்தோத்திரங்களை தந்து விட்டு சென்றனர்.
"ராமானுஜர், மாத்வர், சங்கரர்" போன்ற ஆசாரியர்கள் கோவிலில் வீற்று இருக்கும் தெய்வத்திடம் எப்படி பழக வேண்டும், பூஜை செய்ய வேண்டும் என்று முறைகளை காட்டி, கைங்கர்யம் செய்யும் வழியை காண்பித்து சென்றனர்.
இப்படி,
"தெய்வத்தைநமக்காக கொடுத்து விட்டு, ரிஷிகள் சென்றனர்.
"கோவிலை" கட்டி, நமக்காக கொடுத்து விட்டு, அரசர்கள் சென்றனர்.
கோவிலில் சென்று நாமும் பாட, பாசுரங்கள், பிரபந்தங்கள், "ஸ்தோத்திரங்களைநமக்காக கொடுத்து விட்டு, ஆழ்வார்கள். நாயன்மார்கள், மகாத்மாக்கள் சென்றனர்.
தெய்வத்திடம் "கைங்கர்யம் செய்யும் முறையை" ராமானுஜர், மாத்வர், சங்கரர் போன்ற ஆசாரியர்கள் நமக்கு தந்து விட்டு சென்றனர்.

மனிதன் நம்பிக்கையின் மேல் தான் வாழ்கிறான்.
உலக வாழ்க்கை வாழ்வதற்கே, உடல், அறிவு பலத்தின் மூலம் ஏற்படும் தன்னம்பிக்கையில் தான் மனிதன் வாழ்கிறான்.

உலக வாழ்க்கைக்கே தெய்வ பலமோ, சுய பலமோ தேவைப்படும் போது,
தெய்வத்தை பார்க்க வேண்டும் என்றால், கட்டாயம் நமக்கு "தெய்வத்திடம் பக்தி" அடிப்படையாக தேவைப்படுகிறது.

தெய்வ பக்தி இல்லாமல், "கடவுளை காட்டு" என்று திமிராக பேசுபவன், பேசிக்கொண்டே இருக்க வேண்டியது தான்.
ஒரு வேளை இவன் அறிவு மற்றும் உடல் பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கையில் செய்த காரியத்தில் தோற்று போக நேர்ந்தால், மனம் ஒடிந்து போகிறான் மனிதன்.

ரிஷிகளுக்காக ப்ரத்யக்ஷம் ஆகி, 
மகான்கள், நாயன்மார்கள், ஆழ்வார்களுக்காக எப்பொழுதும் கோவிலில் அருள் செய்ய தயாராக இருக்கும் தெய்வத்திடம் 
ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை பாடி பக்தி செய்து, 
தெய்வ பலத்தை பெற நாமும் முயற்சிப்போம்.

உண்மையான பக்தி செய்து, தெய்வ பலத்தை நாம் பெறும் போது,
நாமும் திடமான தன்னம்பிக்கையை பெறுவோம். 
உலக வாழ்க்கையில் திடமான நம்பிக்கையுடன் நாமும் வாழ்வோம்.

தெய்வ பலத்தால் ஏற்பட்ட தன்னம்பிக்கை, எந்த காரியத்தை எடுத்தாலும் நமக்கு வெற்றி தரும்.

சுய பலத்தால் ஏற்படும் "தன்னம்பிக்கையை" காட்டிலும், தெய்வ பக்தியினால் நமக்கு கிடைக்கும் தெய்வ பலம், அசைக்க முடியாத "தன்னம்பிக்கையை" தருகிறது.

கோவிலுக்கு சென்று வழி படுவோம்.
தெய்வத்திடம் பக்தி செய்து, தெய்வ அணுகிரஹத்தை பெறுவோம்.

தெய்வம் நமக்கு துணை நிற்கிறார் என்று ஹனுமானை போன்று உணர்ந்து விட்டால், எதையும் சாதிக்க தன்னம்பிக்கை கிடைக்கும்.

தன்னம்பிக்கையை கொண்டே மனிதன் வாழ்கிறான்.

வாழ்க ஹிந்துக்கள்.
ஹிந்துவாக பிறந்ததே நம் பாக்கியம்.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka






Thursday 7 February 2019

உலகத்தில் ஏற்படும் நான்கு ப்ரளயங்கள் (அழிவுகள்) என்னென்ன? ப்ரம்மாவின் வயது என்ன? தெரிந்து கொள்வோமே ...

உலகத்தில் நான்கு விதமான ப்ரளயங்கள் (அழிவுகள்) ஏற்படுகிறது என்று ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரம் சொல்கிறது.



  • 2012ல் உலகம் அழியும்,
  • 5000 வருடத்திற்கு முன் உலகமே இல்லை,
  • உலகம் தட்டையானது,
  • ஒரே பிறவி தான்,
  • மனிதன் ஆடை இல்லாத, முட்டாள் ஆதாம் ஏவாள் மூலம் வந்தார்கள்,
  • கொலை செய்யப்பட்டவர் மீண்டும் வருவார்
என்று தன் கற்பனைக்கு தோன்றியதை சொல்லி ஏமாற்றும் பழக்கம் ஹிந்துக்களின் சனாதன தர்ம சாஸ்திரத்தில் இல்லை.

உலகம் பல கோடி வருடங்களாக இருந்து கொண்டே இருக்கிறது என்று காலத்தை கணக்கிட்டு சொல்லும் நம் ஹிந்துக்களின் சாஸ்திரம், அழிவை பற்றியும் சொல்கிறது.
தெரிந்து கொள்வோமே...

ஹிந்துக்களின் பெருமை அளவிட முடியாதது.
ஹிந்துவாக பிறந்தவன் பெரும் புண்ணியம் செய்தவன்.
ஹிந்துவாக மாற ஆசைப்படுபவனும், புண்ணியம் செய்தவன்.

நான்கு வகையான ப்ரளயங்கள்:

  1. நித்ய ப்ரளயம்
  2. நைமித்திக ப்ரளயம்
  3. மஹா ப்ரளயம்
  4. ஆத்யந்திக ப்ரளயம்

என பிரளயங்கள் நான்கு சொல்லப்படுகிறது.

1) நித்ய ப்ரளயம்:
நித்ய ப்ரளயம் என்பது "ஒவ்வொரு நொடியும் உலகத்தில் ஏற்பட்டு கொண்டே இருக்கும் அழிவு".
ஒவ்வொரு நொடியும் உலகத்தில் பல லட்சம் உயிர்கள் தன் தேகங்களை விட்டு விட்டு, மரணித்து கொண்டே இருக்கின்றனர்.

இந்த அழிவுகளை, நித்ய பிரளயம் என்கிறது ஹிந்துக்களின் வேத சாஸ்திரம்.

மோக்ஷம் அடையாத உயிர்கள், அவரவர் குணங்களுடன் மீண்டும் உலகங்களில் பிறக்கின்றனர்.
தூக்கம் என்பது கூட நம் "மனதை பொறுத்தியவரை" நடக்கும் நித்ய பிரளயம் தான்.
நாம் தூங்கும் போது மனம் அழிகிறது.
விழித்த பின், மீண்டும் மனம் விழித்து எழுகிறது.


2) நைமித்திக ப்ரளயம்
சத்ய லோகம் என்ற ப்ரம்ம லோகத்தில் இருக்கும் பிரம்மாவுக்கு, அவருடைய பகல் வேளையில், உலக நிர்வாகத்தை 14 மனு அரசர்களை நியமித்து நிர்வாகம் செய்கிறார்.
ஒவ்வொரு மனுவும் 71 சதுர் யுகங்கள் வாழ்கின்றனர். ஆட்சி செய்கின்றனர்.

ஒரு மனு தன் அரசாட்சியை முடித்த பின், ஒரு சத்ய யுக காலம் பூலோகம் நீரில் மூழ்கும்.
அடுத்த மனு அரசர் பணி அமர்த்தப்பட்டு, கடல் தன் எல்லைக்குள் சென்று, மீண்டும் 71 சதுர் யுகங்கள் ஆட்சி நடக்கிறது.

இந்த சரித்திரத்தை, திருடி, மனு அரசனை noah என்று சொல்கின்றனர் பிற மதத்தவர்கள்... போலிகள்.. https://en.m.wikipedia.org/wiki/Noah.

14 மனு அரசர்கள் ஒவ்வொருவரும் 71 சதுர் யுகங்கள் ஆண்ட பின், சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவுக்கு தன் ஒரு நாளில், ஒரு பகல் வேளை முடிகிறது.

"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.

பொதுவாக 14 மனு அரசர்கள் சேர்ந்து மொத்தமாக 14×71 = 994 சதுர் யுகங்களை ஆளுகின்றனர் என்று அறிகிறோம்.
பொதுவாக,
1000 சதுர் யுகங்கள் பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்று சொல்வது வழக்கம்.

பிரம்மாவின் இரவு என்பது இது போன்று 1000 சதுர் யுக காலங்கள் நீண்டது.

ஒரு "சதுர் யுகம்" என்பது, 4 யுகங்களை கொண்டது.

"க்ருத யுகம், த்ரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம்" சேர்ந்தது ஒரு "சதுர் யுகம்".

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது.
துவாபர யுகம், 8,64,000 பூலோக வருடங்கள் கொண்டது.
த்ரேதா யுகம் 12,96,000 பூலோக வருடங்கள் கொண்டது.
க்ருத யுகம் 17,28,000 பூலோக வருடங்கள் கொண்டது.
ஆக,
ஒரு "சதுர் யுகம்" என்பது, 43,20,000 பூலோக வருடங்கள் கொண்டது.
(அதாவது, ஏறத்தாழ 43 லட்ச பூலோக வருடங்கள் ஒரு "சதுர் யுகம்".)

ஒரு மனு அரசர் இது போல 71 சதுர் யுகங்கள் இருந்து பூலோகத்தை ஆட்சி செய்கிறார்.


அதாவது ஒரு மனு அரசர், 71×43,20,000 = 30,67,20,000 பூலோக வருடங்கள் வாழ்கிறார்.
(அதாவது, ஏறத்தாழ 30 கோடி பூலோக வருடங்கள், ஒரு மனு அரசர் வாழ்கிறார்.)

14 மனு அரசர்கள் பிரம்மாவின் ஒரு பகல் வேளையில் நியமிக்கப்படுகின்றனர்.

14× 30,67,20,000 = 429,40,80,000 பூலோக வருடங்கள் பிரம்மாவுடைய பகல் வேளையில், 14 மனு அரசர்கள் ஆட்சி செய்கின்றனர்.
(அதாவது, ஏறத்தாழ 429 கோடி பூலோக வருடங்கள், 14 மனு அரசர்கள் பூலோகத்தை ஆண்டு, பிரம்மாவுடைய ஒரு பகல் வேளையில் ஆளுகின்றனர்.)

ஒரு மனு அரசரின் ஆட்சி முடிந்து, இன்னொரு மனு ஆட்சியில் அமரும் இடைவேளையில் பூலோகம் நீரில் மூழ்குகிறது.
இதன் காலம் 17,28,000 பூலோக வருடங்கள். (ஏறத்தாழ 17 லட்ச பூலோக வருடங்கள்)

ஒரு மனுவுக்கும், இன்னொரு மனுவுக்கும் 13 இடைவெளி வருகிறது.
இந்த 13 இடைப்பட்ட காலத்தில் ப்ரம்மா சிறிது ஓய்வு எடுக்கிறார், சந்தியா வந்தனம் செய்கிறார்.

சத்ய லோகத்தில், 13 முறை கிடைக்கும் இந்த நேரம், அவரை பொறுத்தவரை, இது சில மணி நிமிடங்கள் மட்டுமே.

14 மனு அரசர்கள், தன் பதவி முடிந்து, அடுத்த மனுவுக்கு தன் அரசாட்சியை கொடுத்து விட்டு போகும், இந்த இடைவெளி காலத்தை கணக்கிட்டால், 13×17,28,000 = 2,24,64,000 பூலோக வருடங்கள் என்று தெரிகிறது.
(ஏறத்தாழ 2 கோடி பூலோக வருடங்கள்)




ஆக சத்ய லோகத்தில் உள்ள, பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை என்பது 2,24,64,000 + 429,40,80,000 = 431,65,44,000 பூலோக வருடங்கள்.
அதாவது, ஏறத்தாழ 431 கோடி பூலோக வருடங்கள், பிரம்மாவுக்கு ஒரு பகல் வேளை.

அதிகபட்சம் 100 வயது வாழும் மனிதர்களான நம்மில், "கடவுளை காட்டு, காட்டினால் தான் நம்புவேன்" என்று திமிர் பிடித்து கேட்பவனை பார்த்து, பல கோடி வருடங்கள் இருக்கும் ப்ரம்மா என்ன நினைப்பார்?
அல்ப ஆயுசு இருக்கும் இவனுக்கு ஆசை இருந்தாலாவது பகவான் வருவார், திமிர் பிடித்து இருக்கிறானே என்று  தான் நினைப்பார்.  

சத்ய லோகத்தில் உள்ள ப்ரம்மாவுடைய இரவு, பகலை போன்று 431 கோடி பூலோக வருடங்கள் நீண்டது.
14 மனு அரசர்கள் ஆண்ட இத்தனை நீண்ட அகண்டமான 429 கோடி வருடங்களும், பூலோகத்தில் மறுபடி மறுபடி பிறந்து, ஒரு சமயம் ஹரியை பஜித்தவர்கள் மோக்ஷம் அடைந்து விடுகிறார்கள்.
மீண்டும் அவர்கள் பிறப்பதில்லை.
ஹரி பக்தி இல்லாதவர்கள், அவர்கள் செய்த பாவம், புண்ணியத்துக்கு ஏற்ப, மீண்டும் மீண்டும் பூலோகத்தில் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்.

"இன்று வரை நாம் இருக்கிறோம்" என்று சற்று நம்மை கவனித்தால், மோக்ஷம் அடையாத ஜீவன்களில் நாமும் ஒருவர் என்று புரியும்.
எத்தனை கோடி வருடங்கள் உலகில் பிறந்து கொண்டே இருக்கிறோம் என்று புரியும்.


மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், ப்ரம்மாவின் தூக்க சமயத்தில் அதாவது 431 கோடி பூலோக வருட காலங்கள் "தமஸ்" என்ற இருளில் எங்கு இருக்கிறோம் என்று தெரியாமல் இருந்து கொண்டே இருப்போம்.

இன்று வரை மோக்ஷம் அடையாத, நாம் அனைவரும் இதை அனுபவித்தவர்கள் தான்.
நாம் அனைவரும் இன்று வரை மோக்ஷம் அடையாத ஜீவன் தான்.

நம்மை தட்டி எழுப்பி, மோக்ஷ பாதையை காட்ட, பகவான் நமக்கு ஆன்மீக குருவை உலகில் பிறக்க செய்கிறார். சமயத்தில் அவரே அவதரிக்கவும் செய்கிறார்.

ப்ரம்மா தான் தூங்க போகும் போது, "சொர்க்க லோகம்", அதற்கு கீழ் இருக்கும் "புவர் லோகம், பூலோகம், அதல, விதல, சுதல, தலாதல, மஹாதல, பாதாள, ரஸாதல" போன்ற அனைத்து லோகங்களையும் அழித்து விட்டு தூங்க செல்கிறார்.
தேவர்கள் கூட அழிந்து விடுவார்கள்.
இந்த சமயத்தில் சொர்க்க லோகத்துக்கு மேல் இருக்கும் "மகர லோகம், ஜன லோகம், தப லோகம்" அழிவதில்லை.
சத்ய லோகத்தில் பிரம்மாவே இருப்பதால், இதுவும் அழிவதில்லை.

புண்ணியங்கள் செய்த யோகிகளும், ரிஷிகளும் இந்த லோகங்களில் இருந்து கொண்டே இருக்கின்றனர்.
தப லோகத்துக்கும் மேல் இருக்கும், தன் லோகமான சத்ய லோகத்தில் ப்ரம்மா உறங்குகிறார்.

பூலோக கணக்குப்படி ஏறத்தாழ 431 வருடங்கள் மோக்ஷம் அடையாத நாம் அனைவரும் "தமஸ்" என்ற இருளில், உலகமே இல்லாததால், மாமிச உடலும் இல்லாததால் "கம்" என்று இந்த சமயத்தில் எங்கு இருக்கிறோம் என்று புரியாமல் இருப்போம், இருந்தோம்.
இன்றைய தேதியில், இன்று உள்ள பிரம்மாவுக்கு 50 வயது முடிந்து விட்டது.

பிரம்மா தன் 51 வயதில், முதல் நாளில் அவருடைய பகல் பொழுதில் இருக்கிறார்.

இந்த பகல் வேளையில், 14 மனு அரசர்கள் வரிசையில், "ஸ்வாயம்பு" என்ற முதல் மனு அரசரில் ஆரம்பித்து, இதுவரை 6 மனு அரசர்கள், தங்கள் ஆட்சியில் ஒவ்வொருவரும் 71 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டனர்.

இன்று வரை நாம் மோக்ஷம் அடையவில்லை.

இப்பொழுது பிரம்மாவின் படைப்பான "வைவஸ்வதன்" என்பவர், 7வது மனு அரசனாக 71 சதுர் யூகங்களை ஆண்டு வருகிறார்.
"வைவஸ்வத மனு" ஏற்கனவே 27 சதுர் யூகங்களை ஆண்டு முடித்து விட்டார்.

இப்பொழுது 28வது சதுர் யூகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்.
இதில் 3 யுகங்கள் முடிந்து விட்டது.


நாம் இப்பொழுது 28வது சதுர் யுகத்தின், கலி யுகத்தில் இருக்கிறோம்.

கலியுகம்  ஆங்கிலேய calendar படி 3102BCல் ஆரம்பிக்கிறது.

கலியுகம் ஆரம்பித்து ஏறத்தாழ 5000 வருடங்கள் ஆகி உள்ளது.

கலியுகம் 4,32,000 பூலோக வருடங்கள் கொண்டது என்று பார்க்கும் போது, இந்த கலியுகம் முடிய இன்னும் 4 லட்சத்துக்கும் மேல் வருடங்கள் உள்ளது.

ஆக,
"நைமித்திக ப்ரளயம்" என்பது சத்ய லோகத்தில் உள்ள பிரம்மாவின் இரவு பொழுதில் ஏற்படும் உலக அழிவு.
மகர, ஜன, தப, சத்ய லோகங்களை தவிர்த்து,
மற்ற அனைத்து உலகங்களும் அழிந்து விடும் நிகழ்வை 'நைமித்திக ப்ரளயம்' என்று வேத சாஸ்திரம் சொல்கிறது.

சத்ய லோகத்தில், தூங்கி எழுந்த ப்ரம்மா, மீண்டும் அதே போல அனைத்து லோகங்களையும் ஸ்ருஷ்டி செய்து, மோக்ஷம் அடையாத ஜீவனுக்கு மீண்டும் பிறக்க உலகங்கள் படைத்து, பாவ புண்ணியத்துக்கு ஏற்ப மனித, மிருக, தாவர உடம்பை கொடுத்து, 14 மனு அரசர்களை கொண்டு மீண்டும் உலகை ஆட்சி செய்ய செய்கிறார்.

3) மஹா ப்ரளயம்
மஹா ப்ரளயம் என்பது, பிரம்மாவுக்கு 100 வயது ஆகி, பிரம்மாவின் ஆயுசு முடியும் போது ஏற்படும் பேரழிவு.

ப்ரம்மாவே மறைந்து விடுவதால், அவர் இருக்கும் சத்ய லோகம் ஆரம்பித்து, அதற்கு கீழ் இருக்கும் தப லோகம், ஜன லோகம், மகர லோகம் என்று பாதாள லோகங்களை வரை உள்ள, 14 லோகங்களும் அழிந்து விடும். இந்த அழிவே மஹா பிரளயம்.

பிரம்மாவின் ஆயுசு முடிந்த பின், பஞ்ச பூதங்களும் அழிந்து விடும்.
14 லோகங்களும் பிரளய ஜலத்தில் கரைந்து,
பிரளய ஜலம், பிரளய அக்னியில் வற்றி,
பிரளய அக்னி, ஆகாசத்தில் அடங்கி,
ஆகாசமும் தமஸில் அடங்கி விடும்.

அனைவரும் அழிந்து விடுவார்கள். நாராயணன் ஒருவரே இருப்பார். பிரம்மாவின் ஆயுசு முடிந்தும் மோக்ஷம் அடைய ஆசைப்படாமல், ஹரி பக்தி செய்யாது வாழ்ந்த ஜீவ கோடிகளை தன் இதயத்தில் "தமஸ்" என்ற நிலையில் இருக்க செய்கிறார் பரமாத்மா.
"தமஸ்" என்பது "இருட்டை" சொல்லவில்லை.
"இருள்" என்றும் "அஞான நிலை" என்றும் பொருள் கொள்ளலாம்.
தமஸ் என்பது அறிந்து கொள்ள முடியாத ஒரு நிலையை குறிப்பிடுகிறது.

இந்த தமஸ் என்ற அனுபவத்தை புரிந்து கொள்ள, பகவான் நமக்கு "தூக்கத்தை" கொடுத்து உள்ளார்.
தூங்கும் போது "தமஸ்" என்ற நிலையில் நாம் இருக்கிறோம்.
தூக்க சமயத்தில் "நாம் இருந்தும், இருப்பதை உணராமல்" இருக்கிறோம். இதையே "தமஸ்" என்று சொல்கிறோம்.

இதே நிலையிலேயே, ஆனந்த மூர்த்தியான நாராயணனே இதயத்தில் இருக்கிறோம் என்று தெரியாமலேயே, பல கோடி வருடங்கள், மஹா பிரளயம் ஏற்பட்ட பின் "தமஸ்" என்ற நிலையில் இருப்போம்.

ஹரி பக்தி செய்து மோக்ஷம் அடைந்த ஜீவன்கள், வைகுண்டம் என்ற என்றுமே அழியாத லோகத்தை அடைந்து விடுகின்றனர்.
அவர்கள் மீண்டும் பிறப்பதில்லை.
தேவைப்பட்டால், நாராயணன் சொன்னால், பூலோகம் வரவும், 14 லோகங்களில் எங்கு செல்லவும் அந்த மோக்ஷம் அடைந்த ஜீவனுக்கு அனுமதி உண்டு.
நாராயணனை போலவே இவர்களும் எப்போதும் இருந்து கொண்டே இருப்பார்கள் வைகுண்டத்தில்.
நாராயணன், பரவாசுதேவனாக அங்கு இருந்து கொண்டு, அவர்கள் பூஜையை ஏற்று கொண்டே இருக்கிறார்.

ஹரி பக்தி செய்து, "இது நாராயணன் கொடுத்த பதவி, இது நாராயணன் கொடுத்த பிறவி" என்று நாராயணனிடம் ப்ரேம பக்தி செய்து ப்ரம்மா வாழ்ந்து இருந்தால், பகவான் அந்த பிரம்மாவுக்கு மோக்ஷம் என்ற வைகுண்டம் கொடுத்து விடுகிறார்.

"நான் ப்ரம்ம தேவன், 14 லோகங்களும் எனக்கு கட்டுப்பட்டு நடக்கிறது" என்று நினைத்து இருந்தால், அவர் செய்த புண்ணியத்துக்கு ஏற்ப மீண்டும் உலக ஸ்ருஷ்டி நடக்கும் போது, பூமியில் பிறக்க வேண்டியது தான்.
இந்த சட்டம் அனைவருக்கும் உண்டு.
பிரம்மாவுக்கும் உண்டு.

மஹா பிரளயம் முடிந்து, ஜீவ கோடிகளை தன் இதயத்தில் வைத்து கொண்டு, 14 லோகங்களையும் தன் திருவயிற்றில் வைத்து, நாராயணன் தூங்க செல்கிறார்.

நித்திரை, யோக நித்திரை, விழிப்பு, செயல் என்பது நமக்கு மட்டுமல்ல, பரமாத்மாவுக்கு உண்டு.
பரமாத்மா நாராயணன், உலகை ஸ்ருஷ்டி செய்யலாம் என்று மீண்டும் சங்கல்பத்து விழிக்கும் பொழுது, மீண்டும் பிரம்மாவை படைத்து உலக ஸ்ருஷ்டி செய்ய, வேதம் என்ற தன் அறிவை அவருக்கு உபதேசம் செய்து, சத்ய லோகத்தை படைத்து, மேலும் லோகங்களை படைக்க சொல்லி, தன் இதயத்தில் இருக்கும் ஜீவ கோடிகள் மீண்டும் பிறக்க செய்து, உலக இன்ப துன்பங்களை அனுபவித்து அனுபவித்து அலுப்பு ஏற்பட்டு, இப்பொழுதாவது மோக்ஷம் அடைய ஹரி பக்தி செய்கிறார்களா? என்று யோக நித்திரையில் உலகம் நடப்பதை தன் சுய பலத்தால் நிர்வாகம் செய்து, பார்த்து கொண்டு வருகிறார் பரமாத்மா.

இது ஒரு விளையாட்டு போல இருப்பதால், உலக நிர்வாகத்தை பகவான் லீலையாக செய்கிறார் என்று பொதுவாக சொல்வது உண்டு.

4) ஆத்யந்திக ப்ரளயம்
ஆத்யந்திக ப்ரளயம் என்பது ஜீவனுக்கு சம்சார சூழலில் சிக்கி ஏற்படும் பிறப்பு, இறப்பில் இருந்து ஏற்படும் முற்று புள்ளி. விடுதலை. மோக்ஷம்..
ஹரி பக்தி செய்து,
"உலகத்தில் இனி மீண்டும் பிறந்து இன்ப துன்பங்கள் அனுபவிக்க தயார் இல்லை" என்று திட சித்தம் கொண்டு,
உடலில் ஏற்படும் சுக துக்கத்தை சிறிதும் பொருட்படுத்தாமல்,
ஆத்மா நான் என்ற அறிவுடன்,
இந்த ஆத்மா பரமாத்மாவான ஹரியை சேர்ந்தவன் என்ற குறிக்கோளுடன்,
ஹரி பக்தியே செய்து வைராக்யத்துடன் வாழ்ந்து,
ஹரியை மகிழ்ச்சி படுத்தி,
அந்த பரமாத்மா அந்த ஜீவனின் கடைசி மூச்சு விடும் சமயத்தில் தானே வந்து காட்சி கொடுத்து, எம தர்மன் கூட்டி செல்லாமல், தானே வைகுண்டம் கூட்டி செல்வது மோக்ஷம்.
மோக்ஷம் அடைந்த ஜீவன், இதற்கு பிறகு திரும்பி வர இயலாது.. 

HARE RAMA HARE KRISHNA

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 




Friday 1 February 2019

பொங்கல் அன்று, சந்தியாவந்தனம் செய்யாத பிராம்மணர்களை கண்டு சூரிய தேவனுககு ஏற்பட்ட கோபம். கும்பகோண சக்கரபாணி சமாதானம் செய்தார். தெரிந்து கொள்வோமே...

சூரிய தேவனுக்கு ஒரு சந்தர்ப்பத்தில், உலக ஜனங்களை பார்த்து, அடக்க முடியாத மஹா கோபம் வந்து விட்டது.
அதற்கு காரணம் இருந்தது.


உலக மக்களின் நடத்தையை, சாட்சியாக பார்த்து கோண்டே இருக்கும், சூரிய தேவன், ஜனங்களின் அட்டூழியங்களை கண்டு கோபத்தில்,
"நான் (சூரியன்) ஒருவன் உதிக்காது போனால், இந்த உலகில் இருப்பவர்களுக்கு பகல் தெரியுமா? மதியம் தெரியுமா? இரவு தெரியுமா?

நான் (சூரியன்) என் ஜோதி ஸ்வரூபமான கிரணங்களால் உலகை  பிரகாசப்படுத்தவில்லையென்றால் உலகமே இருண்டு கிடக்கும்.

நாள்,
ஏழு நாட்கள் சேர்ந்தால் ஒரு வாரம்,
15 நாட்கள் சேர்ந்தால் ஒரு பட்சம்.
30 நாட்கள் சேர்ந்தால் ஒரு மாசம்.
என்று காலத்தை இவர்கள் கணிப்பதே, நான் ஒருவன் இருப்பதால் தானே?

காலத்தை கணிக்கவே, நான் தானே காரணம்.
உலகத்தில் உள்ள அனைவரும்  காலத்திற்கு கட்டுப்பட்டவர்கள்.
நானோ காலத்தையே நிர்ணயிப்பவன்.
மற்ற க்ரஹங்கள் எல்லாம், என்னை தான் சுற்றி சுற்றி வருகிறது.
சுக்கிரன் சனீஸ்வரன் என்று அனைவரும் என்னை ஆச்ரயித்தவர்கள்.
ஞானியான ரிஷிகள், தினமும் விடியற் காலையில் எழுந்து ஸ்னானம், தியானம், அர்க்கியம் செய்வது, என் தரிசனத்திற்காக தானே!!.
என் கிரணங்களை ஒடுக்கி கொண்டு, நான் ஒருநாள் உதிக்காமல் இருந்து விடுகிறேன். பின்பு இந்த உலகம் எப்படி இருக்கிறது? என்று பார்க்கிறேன்.
நான் உதிக்காது போனால், எங்கும் இருள் சூழ்ந்து விடும்.

தினமும், அவரவர் கர்மாக்கள் (வேலை) நடப்பதற்காக அனைவரையும் எழுப்பி, அவரவர் காரியங்களை செய்வதற்கு உணர்ச்சி கொடுப்பதும் நான் தான்.
நான் அஸ்தமிக்கும் (மறையும்) போது, உலகத்தில் உள்ள அனைவரும் உணர்ச்சி அற்று போய், சோம்பேறிகள் ஆகி இருட்டில் செயலற்று படுத்து கிடக்கிறார்கள்.



நான் ஒருவன் உதித்தால், உலகமே உணர்ச்சி பெறுகிறது. காரியங்கள் நடக்கிறது.

நான் ஒருவன் அந்த இடத்தை விட்டு மறைந்தால், உலகமே ஸ்தம்பித்து போய் இருட்டில் மூழ்குகிறது.

உலக காரியங்கள் நடப்பதே என்னால் தான்.

அனைவரையும், அவரவர்கள் செய்யும் பாவத்தையும், புண்ணியத்தையும் சாட்சியாக நான் பார்த்து கொண்டே இருக்கிறேன்.

என்னால் தான் இந்த ஜீவனுக்கு (செடி, விலங்கு,மனிதன் etc.,) ஆரோக்கியம் கிடைக்கிறது.

நான் என் கிரணங்களின் சக்தியை கொஞ்சம் குறைத்து கொண்டால் கூட, ஆரோக்கியம் இவர்களுக்கு கிடைக்காது.

இந்த உலகில் உள்ள அனைவருக்கும் ஈஸ்வரன் நான் தான்.
நான் ஒருவன் இல்லையென்றால், உலகத்தில் உள்ளவனுக்கு கண் இருந்தாலும் தெரியாது.
கண் இருந்தும் குருடர்கள் போல வாழ வேண்டியது தான்.

இவர்களை பொறுத்தவரை நானே விஷ்ணு, நானே ப்ரம்மா, நானே ருத்ரன்.

நானே சர்வ தேவதையாகவும் இந்த உலகில் உள்ளவர்களுக்கு இருந்து காக்கிறேன்.

இப்படி இருந்தும், அஞானத்தினால் (மெய் அறிவு இல்லாத) இந்த உலக ஜனங்கள் என்னிடம் நன்றி இல்லாமல், என்னை அலட்சியம் செய்கின்றனர்.

என்னை, இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்வதை கூட, பொறுத்து கொண்டு போகிறேன் என்றாலும்,
இந்த கோரமான கலி யுகத்தில், இந்த ஜனங்கள் வேதத்தில் உள்ள எந்த தெய்வத்தை தான் மதிக்கிறார்கள்?
அனைத்து தெய்வங்களையும், இந்த நன்றி கெட்ட ஜனங்கள் அலட்சியம் செய்கிறார்களே?
இந்த கலியுகத்தில்,
ஒரு பிராம்மணனாவது, விடி காலையில் நான் உதிப்பதற்கே முன்பே எழுந்து, சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கிறானா?

'இவன் அர்க்கியம் கொடுப்பான், பின்பு உதிப்போம்' என்று நான் காத்திருந்தால், எனக்கு விதிக்கப்பட்ட கால சக்கரம் படி, நேரத்துக்கு உதிக்க முடியுமா?

காலத்தில் சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் குறைந்து விட்டனர்.

அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் ஜாஸ்தி ஆகி விட்டனர்.
சந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது.



 இந்த பிராம்மணன், காலை எழுந்தவுடன் தன் வயிற்றுக்கு ஏதாவது (காபி) சாப்பிடலாமா? என்று நினைக்கிறானே தவிர, ஒரு ஸ்நானம் செய்ய வேண்டும் என்று நினைப்பதே இல்லை.



முதல் தீர்த்தமாக 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி, காலையில் முதலில் குடித்து விட்டு,
பிறகு வேறு எதையாவது குடிப்போம் என்று நினைப்பதில்லையே இந்த ப்ராம்மணர்கள்.

ப்ராம்மணர்கள், ப்ராம்மணர்களாக இல்லையே !!

கடமை தவறிய ப்ராம்மணர்களாக போய் விட்டார்கள் இவர்கள்.

ஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை.
எனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் இருப்பதில்லை.

நான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனர் இந்த ப்ராம்மணர்கள்.

க்ஷத்ரியனும் க்ஷத்ரியனாக இல்லை.
தான் தோன்றியாக எவன் எவனோ தன்னை ராஜா என்று சொல்லிக்கொள்கிறான்.
தர்மத்துக்காக உயிரே போனாலும் பரவாயில்லை என்று இருந்த க்ஷத்ரியர்கள் காணவில்லை.
அதர்மத்தை சமூகத்தில் கிளப்பி, புரளி புரட்சி செய்பவர்கள் இன்று க்ஷத்ரிய பொறுப்பை ஆக்கிரமிக்க போராடுகின்றனர்.

வைஸ்யனும் வைஸ்யனாக (business) இல்லை.
எந்த வியாபாரத்திலும் நேர்மை என்பதே துளியும் கிடையாது.

எங்கு பார்த்தாலும் தெய்வ நிந்தனை செய்யும் நாத்தீகர்களும், வேத ப்ராம்மணர்களை கிண்டல் செய்யும் ஜனங்களாகவே இருக்கின்றனர்.
எங்கு பார்த்தாலும் திருட்டு இருக்கிறது.
மது பானம் அருந்துவது, பொய் பேசுவது எங்கும் காணப்படுகிறது.

கொலை செய்வதும், பிறர் மனைவியை அபகரித்து அனுபவிப்பதும் மலிந்து விட்டது.
பெண்கள் தன் சுதந்திரமே லட்சியம் என்று இருக்கிறார்கள்.
'கணவனுக்கு நான் ஏன் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்?'
என்று கேட்கும் பெண்களே இருக்கிறார்கள்.

பெண்கள் கணவனுக்கு பணி செய்வது காணப்படவில்லை, ஆனால் வெளியில் சென்று தனத்திற்காக (பணம்) எவன் எவனுக்கோ பணி செய்கிறார்கள்.
பதி, பத்தினிக்கு சேவை செய்கிறான்.



போன யுகம் வரை, அனைவருக்கும் "ஹரி" ஒருவரே லட்சியமாக இருந்தார். அனைவரின் வாயிலும் "ஹரி ஹரி" என்று நாமமே வந்தது.

இப்பொழுது உள்ள இந்த ஜனங்களுக்கோ, எப்பொழுதும் "தனம் தனம் தனம்..." என்று எப்பொழுதும் தியானம்.
"பணம் போதவில்லையே!!... போதவில்லையே!!...
எப்படி தனம் (பணம்) சம்பாதிக்கலாம்?,
எப்படியெல்லாம் சம்பாதிக்கலாம்?"
என்பது தான் இவர்கள் லட்சியமாக இருக்கிறது.

தனத்திற்காக பிசாசு போல அலையும் இவர்களுக்கு, அலங்காரமும் பிசாசு போல ஆகி விட்டது.
எங்கு பார்த்தாலும் தலை விரி கோலத்தில் பெண்கள் நடமாடுகிறார்கள்.
தலை முடியை வளர்த்து விரித்து வைத்தும்,
ராக்ஷஸர்கள் போல, நகத்தை வளர்த்து அதை கூர்மையாக சீவி கொண்டும், தன்னை அழகு படுத்தி கொள்வதிலேயே ஆர்வமாக அலைகிறார்கள்.
எல்லோருக்கும் 'தாடகை' போலவும், 'சூர்ப்பனகை' போலவும் வேஷம் போடுவதில் தான் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தாடகை வேஷம் போட்டு கொண்டு, தன் அலங்காரத்தை தானே ரசித்து கொள்கிறார்கள்.





சத்தியம் (உண்மை),

அஹிம்சை,
ஜீவ காருண்யம்,
ஏழைகளுக்கு கொடுத்து உதவுவது,
ஆசாரத்தில் (ஒழுக்கம்) திடமாக இருப்பது,
நேர்மையாக பேசுவது,
புண்ணிய கர்மங்களை செய்வது,
யாகங்கள் செய்து தெய்வங்களுக்கு நன்றி தெரிவிப்பது,
என்று எந்த நல்ல செயலும் இவர்களிடத்தில்  காணப்படவில்லையே, இந்த நன்றி கெட்ட ஜனங்களிடம் !! 

எங்கு பார்த்தாலும் சுய நலமே உருவான ஒழுக்கம் கெட்ட, தன் கடமையை மறந்த ஜனங்களாக போய் விட்டனர்.
இப்படி ஒழுக்கம் கெட்டு வாழும் இவர்கள், எப்படியாவது தர்ம வழியில் திரும்புவார்கள் என்று காத்து இருக்கும் போது,
கூரை பிய்ந்து போன குடிசையை, ஒரு யானை பிடுங்கி எறிவது போல,
வெளி மதங்கள், துர் மதங்கள் பிரச்சாரம் செய்து, வைதீக தர்மத்தை தாக்குகிறது.



எல்லோரும் வைதீக ஆசாரங்களை விட்டு விலகுகிறார்கள்.
விசேஷமாக யாராவது சிகை வைத்து கொண்டு, கச்சம் கட்டிக்கொண்டு போனால், "ஓ ஹாய்..." என்று சிரித்து கேலி செய்கிறார்கள்.

அதிலும் யாராவது, நெற்றியில் திருமண் காப்பு இட்டுக்கொண்டு போனால் கேட்க முடியாத கிண்டல் கேலி செய்கிறார்கள் இந்த ஜனங்கள்.
இந்த அதர்மத்தை இனியும் என்னால் சகிக்க முடியாது...
அதனால், நான் இந்த ஜகத்தை முழுவதையும் அழிக்க போகிறேன்."
என்று கோபம் அடைந்தார் சூரிய தேவன்.

அக்ஷ ரேகையை அமைத்து,
'இந்த எல்லையை தாண்டவே கூடாது' என்று பகவான் வாசுதேவன் அனைத்து தேவர்களுக்கும் அவரவர்களுக்கு ஒரு எல்லையை விதித்து உள்ளார்.

வாயு பகவானுக்கு ஒரு எல்லையை பரமாத்மாவான வாசுதேவன் வகுத்து கொடுத்துள்ளார்.
"அதை தாண்டி வர கூடாது" என்று கட்டளை இட்டுள்ளார்.
எவ்வளவு தேவையோ, அந்த அளவு தான் காற்று வீச வேண்டும் என்று விதித்து உள்ளார்.
அதே போல,
சூரிய தேவனுக்கும் ஒரு எல்லை வகுத்து உள்ளார் பகவான்.
"பீஷோதேதி சூர்ய:" என்று வேதம் சொல்கிறது.
"சூரிய தேவன் ஜகத்காரணமான (உலகை படைத்த) பரமாத்மாவுக்கு பயந்து, தன் அக்ஷ ரேகையை தாண்டி வராமல் எப்பொழுதும் இருக்கிறார்" 
என்கிறது வேதம்.

வேதம்:
பீஷாஸ்மாத் வாதப்பவதே, பீஷோ தேதி  சூர்யா:
பீஷாத் தே அக்நி சேந்த்ரிஸ்ச மிருத்யுத் தாவதி பஞ்சம:

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பகவான் இட்ட கட்டளையை மீறியதே இல்லை சூரிய தேவன்.

நன்றி கெட்ட ஜனங்களின் நடத்தையை சாட்சியாக பார்த்து, பொறுத்து கொள்ள முடியாமல், பகவான் இட்ட கட்டளையையும் இன்று மீறி விட்டார் சூரிய தேவன்.

ஈஸ்வரன் ஆணையை மீறி விட்டார்.

இப்படி கோபம் கொண்ட சூரிய தேவன், ஒரு சங்கராந்தி அன்று, தன் அக்ஷ ரேகையை (எல்லையை) மீறி கொஞ்சம் நகர்ந்து பூமி அருகில் வந்து விட்டார்.

பூ மண்டலம் முழுவதும் ஒரே வெப்பக்காற்று வீசியது.
உதய சூரியன், அன்று எதிர்பார்க்காத வெப்பதுடன் தக தகவென்று உதித்தார்.

வெப்பம் தாங்கவில்லை. 
எங்கு பார்த்தாலும் வெயில் சுட்டெரித்தது.
ஜனங்கள் வெப்பம் தாளாமல் 'ஆஆ..: என்று பரிதவித்தார்கள்.

ஏரி குளங்கள், கிணறுகள் எல்லாம் வற்றி போனது.
காவிரி நதியே வற்றி போனது.

பசுக்கள், பக்ஷிகள், தாவரங்கள் எல்லாம் தண்ணீர் இல்லாமல் சாக ஆரம்பித்தது.

ஜனங்களின் வாழ்க்கை ஒரே நாளில் அஸ்தமிக்கும் நிலை வந்தது.
ஜனங்கள் பரிதவிப்பை ரிஷிகள் பார்த்தனர்.

ரிஷிகள் எப்பொழுதும் மத்யஸ்தர்கள்.

ஸ்ரீவத்ச கோத்திரத்தில் வந்த ஹேம ரிஷிக்கு,
பெண்ணாக மஹாலக்ஷ்மியே "கோமளவள்ளியாக" அவதாரம் செய்தாள் கும்பகோணத்தில்.
மஹாவிஷ்ணுவே ஸ்வயமாக பூலோகம் வந்து கோமளவள்ளியை திருக்கல்யாணம் செய்து கொண்டார்.
ஹேம ரிஷி 'மாப்பிள்ளையாக இங்கேயே தங்குங்கள்' என்று பிரார்த்திக்க,
சாரங்கபாணியாக கையில் வில்லுடன் ராஜாவாக வைகுண்டம் கிளம்பலாம் என்று கிளம்பியவர், கும்பகோணத்திலேயே தங்கி இருந்தார்.

சூரிய தேவனின் கோபத்தால், உலகம் அழிந்து விடும் என்று பார்த்த ரிஷிகள், கும்பகோணத்தில் உள்ள சாரங்கபாணியை சரண் அடைந்தனர்.

ரிஷிகள், சாரங்கபாணி பெருமாளை பார்த்து,
"ஹே சாரங்கபாணி !
உலகை காப்பதற்காக தானே நீங்கள் கல்யாண மூர்த்தியாக கோமளவள்ளி தாயாருடன் இங்கு வீற்று இருக்கிறீர்கள்.

சூரிய தேவன் ஜகத்தை கொளுத்தி விடுவார் போல இருக்கிறதே !!

சூரிய தேவனை எப்படியாவது நீங்கள் தான் சமாதானம் செய்ய வேண்டும்"
என்று பிரார்த்திக்க,
பகவான், சூரியனை அடக்க, உடனே தன் சக்கரத்தோடு, சக்கரராஜனாக கிளம்பினார்.

சூரியன் எதிரில் சக்கரபாணியாக  வந்ததும், தாங்க முடியாத கோபத்தில் இருந்த சூரியன் உடனே சமாதானம் அடைந்தார்.

'பகவான் ஆணையை மீறி அக்ஷ ரேகையை தான் தாண்டியது, பகவானுக்கு சம்மதம் ஆகாது'
என்று உணர்ந்த சூரிய தேவன், தன் அபராதத்தை உணர்ந்து,
கையில் சக்கரம் ஏந்திய விஷ்ணு பகவானை சரண் அடைந்தார்.

சூரிய தேவன், சக்கரபாணியான விஷ்ணுவை நமஸ்கரித்து,
"ஹே சக்கரபாணி,
உங்கள் தேஜஸுக்கு முன், என் தேஜஸ் எந்த மூலை?
சூரியனான எனக்கு முன் கற்பூரம் ஏற்றினால் ஒரு சிறு புகை போல இருக்கும்.
அது போல,
உங்கள் தேஜஸுக்கு முன்னால் நான் ஒரு சிறு கற்பூரம் போல உள்ளேன்.
உங்களை மிஞ்ச என்னால் முடியாது.

லோகத்தில் உள்ளவர்கள் அதர்ம மயமாகி விட்டார்களே!!
ஒழுக்கம் கெட்ட பாஷண்டிகள் ஆகி விட்டார்களே!!
என்று எனக்கு ஒரு கோபம் வந்து விட்டதே தவிர, உங்களுக்கு இல்லாத பொறுப்பு எனக்கு என்ன வந்து விட போகிறது? 


நீங்கள் இப்படி தான் உலகம் இருக்க வேண்டும் என்று சம்மதித்தால் நான் என்ன செய்ய முடியும்?"
என்று சூரியன் சொல்ல,
சக்கரபாணியாக உள்ள பகவான் சூரிய தேவனை பார்த்து,
"அப்படி இல்லை சூரிய தேவா!!
யார் என்ன அநியாயம் செய்தாலும், நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

உலக ஜனங்கள் என்ன அதர்மம் செய்தாலும் அது நம்மை தாக்காது.
ஆனால்,
தேவர்களான நாம் சிறிது கோபம் அடைந்தாலும், உலகமே நாசமாகும்.

வாயு பகவான் சிறிது கோபம் அடைந்தால் கூட, கடுமையான புயல் கிளம்பி விடும்.

100 வருடங்கள் மேல் இருக்கும் மஹா வ்ருக்ஷங்களையும் (மரங்கள்) வேரோடு தூக்கி எறிந்து விடுவார் வாயு பகவான்.

வாழை தோட்டம், தென்னை மரங்கள் எல்லாம் வாயு பகவான் கொஞ்சம் கோபப்பட்டால் கூட ஒரு சில மணி நேரத்தில் அழித்து விடுவார்.
தேவர்கள் சீற்றம் அடைந்தால், ஜனங்கள் என்ன செய்ய முடியும்?

தெய்வங்கள் தன் எல்லையை மீறாமல் இருந்தால் தானே மக்கள் வாழ முடியும்.

காவிரி அணை உடையும் அபாயம் இருந்தால் கூட, ஆயிரம் பேர் சேர்ந்து முயற்சி செய்து அணை உடையாமல் காப்பாற்றலாம்.
கடல் பொங்கினால்? அணை போட்டா கடலை தடுக்க முடியும்?

கடல் (நீர்), காற்று, அக்னி, பூமி, ஆகாயம் என்று அனைத்தும் அதன் அதன் எல்லையில் மௌனமாக இருக்கிறது.

பஞ்ச பூதங்களுக்கு தேவதைகளான நீங்கள் அனைவரும் சர்வேஸ்வரனான என் ஆணைக்கு கட்டுப்பட்டு இருக்கிறீர்கள்.

நாம் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
கோபம் நமக்கு வரத்தான் செய்யும்.
ஜனங்கள் செய்யும் அட்டூழியங்களை கண்டால், கோபம் வரத்தான் செய்யும்.
இவர்களின் அட்டூழியம் நம்மை ஒன்றும் செய்து விடாது.
ஆனால்,
நம்முடைய கோபம் அனைவரையும் நொடி பொழுதில் அழித்து விடும்.
அதனால் நாம் பொறுமையாக தான் போக வேண்டும்.

பொதுவாக இரண்டு பேர் பொறுமையாக தான் இருக்க வேண்டும்.
ஒன்று தேவர்கள்.
மற்றொருவர் பூதேவர்கள் (பூலோகத்தில் உள்ள வேத ப்ராம்மணர்கள்)

தேவர்களும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனும் கோபம் கொள்ள கூடாது.
வேதப்ராம்மணனை கண்டால், பொறாமை கொண்ட ஜனங்கள் 'கல்லையே எரிந்தாலும், திட்டினாலும், கேலி செய்தாலும்' செய்யட்டுமே என்று இருக்க வேண்டும்.
காரணம்,
வேத ப்ராம்மணனை கேலி செய்து, "ஹே குடுமி" என்று கேலி செய்து கிண்டல் செய்தாலும், அவர்கள் கொடுக்கும் சாபம் எதுவுமே வேத ப்ராம்மணனை ஒன்றும் செய்யாது. பலிக்கவும் செய்யாது.
ஆனால்,
பூரணமாக வேதம் அத்யயணம் செய்து,
சந்தியாவந்தனம் தினம் மூன்று வேளையும் செய்து,
விஷ்ணு பூஜை தினமும் செய்து கொண்டு,
பிராம்மண லக்ஷணத்துடன் குடுமி, கச்சம் அணிந்து,
உள்ளும், புறமும் ஒழுக்கத்துடன் இருக்கும் ஒரு பிராம்மணன், கிண்டல் செய்பவனையோ, அதர்மம் செய்பவனையோ கண்டு,
மனம் குமுறி, ஏதாவது சொல்லி விட்டான் என்றால் அது நிச்சயமாக பலித்து விடும்.

பூதேவர்களான வேத பிராமணர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்பது போல, தேவர்களும் பொறுமையாக தான் போக வேண்டும்.

இருவருக்கும் பொறுமையே அழகு. பொறுமையே பூஷணம்.

ஏன் இப்படி அதர்மமாக இருக்கிறார்கள்? என்று கேட்டால், அவர்கள் மூர்க்க புத்தியே இதற்கு காரணம்.

மூடர்கள் இப்படி தான் இருப்பார்கள் என்று தேவர்களும், பூதேவர்களும் பொறுமையாக போக வேண்டும். கருணையே செய்ய வேண்டும்.

அதர்மம் 'புத்தியில்' இருப்பதாலேயே இப்படி அதர்மம் ,
செய்கிறார்கள், கிண்டல் செய்கிறார்கள்.



பூதேவர்களும், தேவர்களான நீங்களும் தர்மம் உணர்ந்தவர்கள்.

நீங்கள் தர்மத்தில் இருந்து கொண்டே, அதர்ம புத்தியை பொறுமையாலும், கருணையாலும், நல்ல உபதேசத்தாலும் திருத்தி தார்மீக வழியில் மாற்ற வேண்டும்.

கருணை செய்வதே நம் ஸ்வபாவம் என்று நீங்கள் இருக்க வேண்டும்."
என்றார் பகவான்.

சூரிய தேவன், பெருமாளை பார்த்து,
"அப்படியென்றால், நாம் பொறுமையாகவே போவோம், அவர்கள் பாபங்கள் செய்து கொண்டே இருக்கட்டும் என்று சொல்கிறீர்களா?
நாம் பொறுமையாகவே இருக்கிறோம். ஆனால் அவர்கள் பாபம் குறைய, நல்வழியில் திரும்ப வழி இல்லையா?

கலியில் உள்ள இந்த ஜனங்கள் மஹாபாபத்தை செய்கிறார்களே!!

செய்யக்கூடிய தர்ம காரியங்களை விட்டு விட்டு,
செய்ய கூடாத அதர்ம காரியங்களை தான் தோன்றி தனமாக செய்து கொண்டு, இருக்கிறார்களே!!
இதற்கு என்ன தான் பரிகாரம்?"
என்று சூரியதேவன் கேட்க,

உடனே பகவான்,
"நான் சாரங்கபாணியாக இங்கே இருப்பது போல, சூரிய தேவனான உன் நிமித்தமாக சக்கரபாணியாகவும் அர்ச்ச அவதாரமாக இங்கேயே இருக்க போகிறேன்."
என்றார் பெருமாள்.

கும்பகோணத்தில், நாராயணனே சாரங்கபாணியாகவும், சக்கரபாணியாகவும் உள்ளார்.
சூரியனுடைய கர்வத்தை அடக்குவதற்காக சக்கரபாணியாக வந்த பெருமாள்,
"சங்கராந்தி புண்ய காலத்தில், காவேரி ஸ்நானம் செய்து,
கும்பகோண க்ஷேத்ரம் வந்து, சக்கரபாணியான என்னை யார் தரிசிப்பார்களோ,
அவர்களுக்கு ப்ரம்மஹத்தி முதல் சர்வ பாபங்களும் போய் விடும்.

எல்லாவற்றிற்கும் மேலாக,
என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்பவர்களுக்கும் சர்வ பாபமும் போய் விடும்.
யார் "சாரங்கபாணே ஜகன்னாதா சங்கு சக்ர கதாதரா" என்று என் நாமத்தை சங்கீர்த்தனம் செய்வார்களோ!
அவர்களுக்கு சர்வ பாபமும் போய் விடும்.

என்னுடைய அணுகிரஹத்தால்,
அதர்மத்தில் இருந்து தானே விலகுவார்கள்"
என்று எம்பெருமான் சொல்ல, சூரிய தேவன் சமாதானம் அடைந்தார்.

இந்த எம்பெருமானிடம் ஆழ்வார்கள் மிகவும் அதிகமாக ஈடுபட்டுள்ளார்கள்.

பெரியாழ்வார் திருமொழியில், சக்கரபாணியை "பால கோபாலனாக" நினைத்து வழி படுகிறார்.
பாசுரம்:
தூநிலா முற்றத்தே போந்து விளையாட
வானிலா அம்புலீ
சந்திரா வாவென்று
நீநிலாநின்புகழாநின்ற ஆயர்தம்
கோநிலாவக்கொட்டாய் சப்பாணி
குடந்தைக்கிடந்தானே. சப்பாணி

சிறு குழந்தைகளுக்கு, பெற்ற தாயார்,
"கிருஷ்ணா ராமா கோவிந்தா, ராமா கிருஷ்ணா கோவிந்தா" என்றும்,
"ஏழு மலையானுக்கு கோவிந்தா கோவிந்தா" என்றும்
சொல்லி கொடுத்து, கை தூக்கி, கை கொட்டி ஆனந்தமாக பஜனை செய்ய பழக்குவாள்.
ஒரு பாரத பெண்மணி இப்படி தானே தன் குழந்தையை வளர்ப்பாள்.

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், சக்கரபாணியை குழந்தை கண்ணனாக பாவித்து பாடுகிறார்.
சக்கரபாணி கோவிலில் ஆண்டாள் சன்னதி அருகே விசாலமான முற்றம் இருப்பதை பார்த்து, யசோதை கண்ணனை தாலாட்டியது எண்ணத்தில் உதிக்க, அதையே பாசுரமாக பாடுகிறார்.


யசோதை தன் குழந்தை,  கண்ணனை மடியில் உட்கார வைத்து கொண்டு,
கை கொட்டு சொல்லி தருகிறாளாம்.

கண்ணனோ துறு துறுவென்று இருப்பானாம். அங்கும் இங்கும் தவழ்ந்து முற்றம் முழுவதும் தூணை சுற்றி சுற்றி விளையாட போவானாம். (தூநிலா முற்றத்தே போந்து விளையாட)

உலகத்திற்கே மூலப்பொருளான பரமாத்மா, அறியா குழந்தை போல, முற்றத்தில் தெரியும் நிலாவை பார்த்து, தளிர் நடை (சப்பாணி) நடந்து, வானில் தெரியும் அம்புலியை,
சந்திரனை "வா"வென்று என்று அழைக்கிறானாம்.

அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் அறியாதவன் போல, தளிர் நடை நடந்து நிலாவை பார்த்து கை கொட்டி ஆனந்த படும் ஆச்சர்யத்தை, சர்வேஸ்வரன் சக்கரபாணி (சப்பாணி) பெருமாளிடம் மட்டுமே பார்க்கலாம்.
குடந்தையில் பால கோபாலனாக தளிர் நடை நடக்கும் சக்கரபாணியை காண வாருங்கள் என்று நம்மையும் அழைக்கிறார் பெரியாழ்வார். (குடந்தைக்கிடந்தானே)

கும்பகோணம் என்ற குடந்தைக்கு சென்று அனைவரும் "சாரங்கபாணியையும், சக்கரபாணியையும்" தரிசிப்போம்.

குருநாதர் துணை..  


Purchase and download the audio of Sri Sri Anna for divine experience

HARE RAMA HARE KRISHNA - BHAJAN


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




தூக்கத்தில் என்ன நடக்கிறது? கனவை பற்றி ... ஒரு அலசல்

கனவை பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் பல நடந்து கொண்டே இருக்கிறது..
நம் ஹிந்து தர்மத்தில் தூக்கத்தில் என்ன நடக்கிறது?
என்று சாஸ்திரத்தை அறிந்தவர்கள் சொல்லும் போது,
ஆழ்ந்த தூக்கத்தில் ஆத்மாவாகிய நாம், யோக நித்திரையில் இருக்கும் பரவாசுதேவன் 'நாராயணன்' இதயத்தில் சென்று ஒடுங்குகிறோம் என்கிறது.
(ஸ்ரீ ரங்கத்தில், இந்த யோக நித்திரையில் தான் எம்பெருமான் இருக்கிறார்)


ஆனந்த ஸ்வரூபமான பகவானின் இதயத்தில் ஒடுங்குவதால், ஆழ்ந்த தூக்கம் பெற்றவர்கள் மறுநாள் எழுந்திருக்கும் போது, சுறு சுறுப்பாகவும், "நன்றாக தூங்கினேன்" என்ற திருப்தியும் அடைகிறார்கள்.

இது நமக்கு தெரியாமலேயே தினமும் அனைத்து ஜீவனுக்கும், ஆழ்ந்த தூக்கத்தில் நடக்கிறது.

ஆழ்ந்த உறக்கம் கிடைத்தால், நாம் இன்று நன்றாக தூங்கினோம் என்ற அனுபவம் மட்டுமே ஏற்படுகிறது.

தூக்க சமயத்தில் என்ன நடந்தது? என்று அறியாத இருட்டடிக்கப்பட்ட நிலையை "தமஸ்" என்று சொல்கிறோம்.

தமஸ் என்று அறியாமை என்ற இருட்டினால், 'நாம் தூக்கத்திலும் உயிரோடு இருந்தோம்' என்று எழுந்த பின் உணர்ந்தாலும்,
தூக்க சமயத்தில் எங்கு இருந்தோம்? என்ன செய்தோம்? என்ற அறியாமையிலேயே (தமஸ் என்ற நிலையில்) தூங்குகிறோம்.

இந்த அறிவை பெறுவதற்கு பல ஆராய்ச்சிகள் நவீன அறிவியல் செய்து கொண்டிருக்கிறது.

வராஹ மூர்த்தியாக பகவான் அவதரித்து, உருண்டையான பூமியை பிரளய ஜலத்தில் இருந்து காப்பாற்றினார் என்று சொன்ன ஹிந்துக்களின் அறிவை ஒத்துக்கொள்ளாத பொய் மதங்கள், "உலகம் தட்டை" என்று பிதற்றியது..
அறிவியல் ரீதியாக 'உலகம் உருண்டை தான்' என்று சொன்ன கலிலியோவை பாவ மன்னிப்பு கேட்க சொல்லி, அடித்து துன்புறுத்தி மன்னிப்பு கேட்க வைத்தது பொய் மதங்கள்.
"மனிதனால் கற்பனையாக உருவாக்கப்பட்ட" பொய் மதங்கள்
2012ல் உலகம் அழியும்,
உலகம் தட்டை,
மறு பிறவி கிடையாது,
எல்லாம் வல்ல இறைவனாக இருந்தாலும், மனிதனாக அவரால் வர முடியாது
என்று தான் தோன்றி தனமாக எழுதி முட்டாள்களை சேர்த்து கொண்டு மதமாக்கியது.
மஹா அறிவாளியாக இருக்கும் பாரத மக்கள், 1000 வருடங்கள் பொய் மதங்கள் ஆக்ரமித்தும், உருட்டியும், மிரட்டியும் பொய்களை சொல்லி ஏமாற்ற முயற்சி செய்தும்,
ஹிந்துக்கள் இவர்கள் பொய் மதத்தில் போகவில்லை.

"நான் நாதீகனாக கூட இருந்து விட்டு போகிறேன், ஆனால் உன் பொய் மதத்துக்கு வர மாட்டேன்"
என்று விதண்டாவாத புத்தி கொண்ட சில பாரத மக்கள் கூட விலகி இருக்கிறார்கள். ஹிந்துவாகவே இருக்கிறார்கள்.


இன்றும் இந்தியாவில் 90 கோடி ஹிந்துக்கள் உள்ளனர்.
வெளி நாடுகளிலும் பல கோடி ஹிந்துக்கள் உள்ளனர்.
மஹா பிரளயம் ஏற்பட்டு, பிரம்மாவும் அழியும் சமயத்தில், மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனும், பல லட்ச காலங்கள் பரவாசுதேவன் இதயத்தில் இதே போன்று சென்று ஒடுங்குகிறது.

இந்த பல லட்ச காலமும் நாம் அனைவரும் இருக்கிறோம் என்ற அறிவை தவிர, எங்கு இருக்கிறோம்? என்ன செய்கிறோம்?
என்று தெரியாத தமஸ் என்ற அறியாமையிலேயே பகவானின் இதயத்தில் இருந்து, மீண்டும் பகவான் ஸ்ருஷ்டி செய்த பின், உலகங்களில் பிறக்கிறோம்.

எந்த நொடியில் நாம் தூங்கி போனோம்?
தூக்கத்தில் நான் என்ன செய்தேன்?
எங்கு இருந்தேன்?
என்று அஞானியான நம்மால் உணர முடிவதில்லை.

ஆனால், பாரத தேசத்தில், இருந்த ரிஷிகள், அவர்களின் தவ, யோக பயிற்சியியால் யோகஸித்தி பெற்றவர்களாக இருந்தனர்.

புத்தி அடங்கிய பின் வருவது தூக்கம்.
புத்தியை கொண்டு, தூக்கத்தில் என்ன நடக்கிறது? என்று நாம் முயற்சிக்கும் போது, தூக்கம் வந்தவுடன் புத்தி அடங்கிபோனதால், அஞானியான நம்மால் அதற்கு மேல் என்ன நடக்கிறது? என்று கவனிக்க முடியவில்லை. தூங்கி விடுகிறோம்.
யோக ஸித்தி பெற்ற ரிஷிகள், ஆத்மாவின் சக்தியை கொண்டு, புத்தி அடங்கிய பின்னும், தூக்க நிலையில் என்ன நடக்கிறது? என்று கண்டுபிடிக்கிறார்கள்.

கலியில், ஒரு நாள் ஏகாதேசி விரதம் இருக்க கூட சக்தி இல்லாத நாம், யோக ஸித்தி அடைவது நினைக்க முடியாத முயற்சி.
இரண்டு வேளை சாப்பிடாமல் இருந்தாலேயே நமக்கு தலை சுற்றி விடும்.

துவாபர, த்ரேதா, க்ருத யுகங்களில் யோகிகள் ரிஷிகள் மட்டுமல்ல, அசுரன், ராக்ஷஸன் கூட பல மாதங்கள் சாப்பிடாமல், தவம், யோகம் செய்யும் வலிமை கொண்டிருந்தனர்.

கலியில் "தெய்வம் இல்லை" என்று நாத்தீகம் பேசும் மடையர்களை காண்கிறோம்.
போன யுகங்கள் வரை பொதுவாக பார்த்தால், ராக்ஷஸர்கள் கூட கடும் முயற்சி செய்து, சிவபெருமானையும், ப்ரம்மாவையும் பார்த்தனர் என்று பார்க்கிறோம்.

அசுரர்கள், ராக்ஷஸர்கள் "தெய்வம் இல்லை" என்று கலியில் உள்ள நாத்தீகனை போல சொன்னதில்லை.
அளவுக்கு மீறிய பலம் தனக்கே இருந்ததால், தெய்வங்களையே மிரட்ட பார்த்தனர் என்று பார்க்கிறோம்.
அப்படி சக்தி உள்ள எதிரிகளை, தெய்வங்கள் அவதாரம் செய்து வதம் செய்து ஒடுக்கினார்கள் என்று புராணங்களில் பார்க்கிறோம்.


கலியில் கடும் தவம் செய்து தெய்வத்தை பார்த்து, மிரட்டும் சக்தி இல்லாத மடையர்கள்,
"தெய்வம் இல்லை. இருந்தால் வர சொல்" என்று சொல்லும் போது, தெய்வங்கள் இவர்களை மதிப்பது கூட இல்லை.

தனக்கு ஏற்ற எதிரியும் இல்லை,
தன்னை அடைய நினைக்கும் பக்தனும் இல்லை
என்கிற போது, தெய்வங்கள் இந்த நாத்தீக மடையர்களை பார்த்து, "அல்ப ஆயுசு" என்று சிரிக்கும்.




போன யுகம் வரை, கனவில் என்ன நடக்கிறது? என்பது,  அனுபவத்திலேயே பலருக்கு இருந்துள்ளது.
கலியில் படித்து மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்போது ஆரோக்கியத்தையும் சுறு சுறுப்பையும் அடைகிறோம்.

ஆத்மா ஆழ்ந்த தூக்கம் அடையும் முன்னர், புத்தி, மன சஞ்சலத்தால் இடையுறும் போது, பல மணி நேரம் தூங்கியும், தூங்காதது போல உணர்கிறோம்.
ஆழ்ந்த தூக்கம், அதாவது பரவாசுதேவன் இதயத்தை அடையும் முன்,
மனம் சஞ்சலம் ஏற்படும் போது, நமக்கு கனவுகள் உண்டாகிறது.
 
நம் திறமைக்கு ஏற்ப கதாபாத்திரங்கள் படைக்கிறோம்.
முடிந்தால் நாமே கூட ஒரு கதாபாத்திரம் ஏற்று கனவில் வாழ்கிறோம், அழுகிறோம், பயப்படுகிறோம்.
கனவு காணும் சமயத்தில் "உண்மை" என்றே நினைத்து அனுபவிக்கிறோம்.
விழித்த பின், "பொய்" என்று உணர்கிறோம்.

ஆத்மா ஆழ்ந்த தூக்கம் (அதாவது பரமாத்மாவை அடையும் முன்) அடையும் முன், மன சஞ்சலத்தால் உருவாக்கப்படும் படைப்பே கனவு.
பரமாத்மா "இந்த உலகை தன் மனதால் படைக்கிறார்" என்று சொல்வதை,
நாம் மனதில் படைக்கும் "கனவை" உதாரணமாக கொண்டு புரிந்து கொள்ளலாம்.

நாம் படைக்கும் கனவில்,
பல கதாபாத்திரம் படைக்கும் திறன் நமக்கு ஏற்படுகிறது.

அது போதாது என்று,
நாம் படைக்கும் கனவில் நாமே அவதாரம் செய்யவும் முடிகிறது.
அதுவும் போதாது என்று,
உண்மையிலேயே நாம் அந்த கனவில் கஷ்டங்கள், சந்தோஷங்கள் அனுபவிப்பதாகவும் நம்மை நாமே நம்பவும் முடிகிறது.

"கனவு பொய், இது நான் படைத்த பொய் கதை" 
என்று தூக்கத்தில் இருந்து எழுந்த பின் நம்பும் நாம்,
தூக்கத்தின் போது, கனவுலகில் நிஜம் என்று நம்புகிறோம்.

இந்த அஞான (அறிவு இல்லாத) நிலை கனவில் நமக்கு ஏற்படுகிறது.
தூக்கம் கலைந்த பின்,
"கனவில் நாம் நிஜம் என்று நினைத்து அனுபவித்தது பொய்" என்று ஞானம் (அறிவு) தானாகவே ஏற்படுகிறது.


நாம் காணும் இந்த உலகங்கள், பரமாத்மாவின் மனதில் இருந்து வெளிப்பட்ட படைப்பு, 
என்று பார்க்கும் போது, அவரை பொறுத்தவரை, அவர் திறமையால் படைக்கப்பட்ட ஒரு கனவு உலகம் இது.
(World is a stage. We are just actors doing specific roles for short period)

ஜீவாத்மாவாகிய நாம் படைக்கும் கனவில் நாமும் அவதாரம் செய்வது போல,
பரமாத்மாவும் தன் மனதால் படைக்கப்பட்ட இந்த உலகங்களில் அவதாரம் செய்கிறார்.

நாம் ஜீவாத்மாவாக இருப்பதால், 
நம் அஞானத்தால் (மெய் அறிவு இல்லாததால்) கனவை படைத்து, அவதாரம் செய்து, மாட்டிக்கொண்டு கனவில் வேதனை, துக்கம் அடைகிறோம்.
பரமாத்மா தன்னுடைய கனவான இந்த உலகங்களை படைத்து,
கனவிலும் விழிப்பு நிலையில் இருப்பதால் (யோக நித்திரை),
பல கோடி ஜீவன்களை உருவாக்கி, உலகங்களை படைத்து,
அதில் ஆச்சர்யமான நிர்வாகமும் செய்து,
தானும் தேவைப்படும் போது அவதாரம் செய்து,
தான் அவதாரம் செய்து உள்ளோம் என்று அறிவுடன்,
தான் படைத்த உலகத்தில், தான் படைத்த ஜீவன்களுடன் உறவாடி,
மீண்டும் தன்னை மறைத்து கொண்டு,
உலகம் தொடர்ந்து நடக்க செய்து,
யோக நித்திரையில் இருந்து கொண்டே, தான் படைத்த இந்த உலகத்தில் நடக்கும் அனைத்தையும் நிதானத்துடன் பார்த்து கொண்டே இருக்கிறார் பெருமாள்.

மஹா பிரளயம் என்ற சமயத்தில், 14 உலகங்களும் அழிந்து, பிரம்மாவும் இறந்த பின்,
மோக்ஷம் அடையாத அனைத்து ஜீவனையும், தன் இதயத்தில் வைத்து கொண்டே, உறங்குகிறார்.

மீண்டும் உலகை படைக்கலாம் என்று சங்கல்பித்து, மீண்டும் யோக நித்திரையில் ஆழ்ந்து மீண்டும் ப்ரம்மா முதல் படைக்க ஆரம்பிக்கிறார். மோக்ஷம் அடையாத ஜீவன்களை மீண்டும் உலகங்களில் படைத்து லீலை செய்கிறார்.

நம்மை பொறுத்தவரை உலகம் அமைப்பாக தெரிந்தாலும், அவர் படைப்பை பார்த்தால், பல விஷயங்கள் நம்மால் புரிந்து கொள்ளவே முடியாது.

உலகத்தை விட்டு வெளியே இருந்து பார்த்தால்,
தரையில் ஸ்திரமாக நின்று கொண்டு இருக்கிறோம் என்று நினைக்கும் நாம் அனைவரும் உண்மையில், ஒரு பெரிய கல் உருண்டையில் (பூமியில்) ஒட்டிக் கொண்டு இருக்கிறோம்.
அதுவாவது பரவாயில்லை...
ஒரு சிறிய கல்லை கூட அந்தரத்தில் ஒரு துணை இல்லாமல், நாம் தொங்க வைக்க முடியாது.
ஆனால் அத்தனை பெரிய கல் உருண்டை ஆகாயத்தில் தொங்கி கொண்டு இருக்கிறது.

அதுவாவது பரவாயில்லை...
தொங்கி கொண்டிருக்கும் இந்த உலகம் கால நேரம் தவறாமல், ஒரே பாதையில் உருண்டு கொண்டே உள்ளது.
அதில் ஒட்டி கொண்டுள்ள நாம் விழவும் இல்லை.
அதுவாவது பரவாயில்லை...


இது போன்று பல பெரும் பெரும் கல் உலகங்கள் அது அது ஒரு பாதையில் போய் கொண்டிருக்கிறது.

வானத்தை பார்த்தால், பல லட்சம் நக்ஷத்திரம் தெரிகிறது.

இவை எல்லாம் என்ன? எதற்காக இவை எல்லாம் இருக்கிறது? என்று நாம் சிந்தித்தால், தலை சுற்றுவது நிச்சயம்.

உலகை விட்டு வெளியே சென்ற ஒருவன், ஒரு வேளை இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட சாட்டிலைட்டை பார்த்தால் என்ன நினைப்பான்?

சாட்டிலைட் உள்ளே சென்று பார்த்தால், யாருமே இல்லை.
ஆனால் தானாக சுற்றுகிறது.

தானாக சாட்டிலைட் சுற்றுவதால், உலகமும் தானாக தான் சுற்றுகிறது என்று நினைத்தால் எத்தனை முட்டாள் தனம் அது?
யாரும் இல்லாத சாட்டிலைட்டை எங்கிருந்தோ ஒருவன் அனுப்பினான். அவனே எங்கோ இருந்து கொண்டு இயக்குகிறான் என்று அறிந்தவன், இயற்க்கையாக ஆத்மா இல்லாத பொருட்கள் தானாக இயங்குவதில்லை என்று அறிவை கொண்டு உணர்கிறான்.

தானாக சுற்றி கொண்டிருக்கும்  சாட்டிலைட்டை பூமியில் ஒருவன் இயக்குவது போல, 
அதை விட பல மடங்கு பலம் உள்ள பல உலகங்களை, நக்ஷத்திரங்களை ஒரே பாதையில் ஓடிக்கொண்டு இருக்க செய்பவனும் இருக்க வேண்டும்

என்று கொஞ்சம் அறிவு உள்ள மனிதன் கூட அறிந்து கொள்கிறான்.

அதனால் தான், 6 அறிவு உள்ள மக்கள் கூட்டத்தில்,
உலகங்களில் உள்ள 97% மக்கள் கடவுள் உண்டு என்பதை தனக்கு கொடுக்கப்பட்ட அறிவை கொண்டு உணர்கின்றனர்.
ஒரு 3% சதவீத மடையர்கள் கடவுள் இல்லை என்று, பகுத்து அறிய தெரியாமல் உளறுகின்றனர்.
கடவுள் இல்லை என்று சொல்லும் இந்த முட்டாள் கூட்டத்துக்கு ஆதரவு செய்வது, "தெய்வம் உண்டு" என்று சொல்லும் மனித அறிவு கொண்ட எவருக்குமே அவமானம்.

கடவுள் உண்டு, அவர் தான் உலகங்களை படைத்தார் என்று பொதுவாக ஒரு மனிதன் சொன்ன சித்தாந்தத்தை வைத்து பல பொய் மதங்கள் உருவாகின.
ஆனால் பொய் மதங்கள் தானாகவே மக்கள் வரவேற்பை பெறாமல் அழிந்து போகும்.

யோகத்தாலும், தவத்தாலும் ரிஷிகள் உண்மைகளை கண்டுபிடித்ததால், ஹிந்துக்கள் மட்டும் அழிக்க முடியாதவர்களாக இருக்கின்றனர்.

அந்த பகவான் "நாராயணனே" என்றும், அவர் யார்? எப்படி இருக்கிறார்? உலகம் உருண்டையா தட்டையா? என்று பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது.

ஹிந்து மதத்தின் பதிலை, ஆராய்ச்சிகளை பார்க்கும் வெளி நாட்டவர்கள் ஹிந்து மதத்தை தன் வாழ்க்கை முறையாக ஆக்கி கொண்டு, வாழ்கிறார்கள்.

பொய் மதங்கள் தானாகவே அழிந்து விடும்.
மக்களின் பல கேள்விகளுக்கு பொய் மதங்களில் பதில் கிடையாது.
"கலிலியோ"வை உலகம் உருண்டை என்று சொன்னதற்கு தண்டனை வழங்கியவர்கள் பொய் மதத்தவர்கள்.

ஹிந்துக்கள் பெறுக, இருக்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்தி கொண்டாலே, தெரிய படுத்தினாலே, மனித அறிவு உள்ள எவனும் ஹிந்துவாக மாற ஆசைப்படுவான்.

உலகம் தட்டை என்று உளறி, கலிலியோவை சித்திரவதை செய்த பொய் மதங்கள், தன்னிடம் ஓட்டை பாத்திரம் மட்டுமே உள்ளது என்று அறிந்து, இன்று திருட்டு வேலைகள் செய்கிறது.

கோவிலில் உள்ள ஸ்தூபம் போல தனக்கும் செய்து கொள்கிறார்கள்.
வேதம், ஜெயம், ஜபம் போன்ற சமஸ்கரித வாக்கியங்களை சொந்த சரக்கு இல்லாமல் திருடுகிறார்கள்.
தூய்மைக்கு வெண்மை உடை, சந்நியாசிக்கு காவி உடை என்பதை திருடி வெட்கமில்லாமல் தனக்கு பயன்படுத்துகிறார்கள்.

அடுத்தவன் புத்தகத்தில் காப்பி அடித்து, ஓட்டை பாத்திரம் கொண்ட பொய் மதங்களை, கொஞ்சம் அறிவு பெற்ற மக்கள் கூட நிராகரிப்பார்கள்.

ஹிந்துவாக இருப்பவன் "தங்க கிண்ணத்தில்" பால் குடிப்பவன்.
அந்த பாலை கொஞ்சம் திருடி, நாய் தோலால் செய்யப்பட கிண்ணத்தில் ஊற்றி குடிக்க சொன்னால், மானமுள்ள ஹிந்து மதம் மாறுவானா? 

வெளி நாட்டினர் பலர் ஹிந்துக்களாக ஆகி வருகின்றனர்.
பாரத நாட்டில் விழிப்புணர்வு செய்தாலே, பொய் மதங்களை விட்டு பாரத மக்கள் விலகி விடுவார்கள்.
2000 வருடங்களாக தலையில் தூக்கி வைத்து இருந்த பௌத்த மதத்தை, தூக்கி எறிந்து விட்டனர் பாரத மக்கள் என்று சரித்திரத்தில் பார்க்கிறோம்.

தனி மனிதனால் உருவாக்கப்பட்ட,
அடுத்தவன் புத்தகங்களை காப்பி அடித்து வாழ நினைக்கும் எந்த பொய் மதத்தையும்
அறிவுள்ள பாரத மக்கள் சில காலம் ஏற்று கொள்வது போல இருந்தாலும், கடைசியில் தூக்கி எறிந்து விட்டு, அருமையான ஹிந்து மதமான வேதம் சொன்ன சனாதன தர்மத்தையே மீண்டும் எடுத்து கொள்கிறார்கள்.
ஹிந்துக்களை விழிப்புடன் இருக்க செய்து, பொய் மதங்களில் போன நம் பாரத மக்களையும் தன் பெருமையை உணர செய்தாலேயே, பாரத நாடு மட்டுமல்ல, உலகமே ஹிந்து மதமாகும்.

முயற்சி திருவினையாக்கும்.
ஹிந்துக்கள் ஒன்றுபடுவோம்.

பாரத மக்கள் அனைவரும் அறிவாளிகளே. அனைவரும் ஹிந்துக்களே.

HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 




sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka