Followers

Search Here...

Friday 15 March 2019

சாம, தான, பேத, தண்ட நீதிகள் எப்படி கடைபிடிக்கப்பட்டது? தாய் மொழிகள், சமஸ்க்ரித மொழி அழிந்து கொண்டு வருகிறது. இதற்கு காரணம் யார்?

"சாம, தான, பேத, தண்ட" என்ற ராஜ நீதிகள் (law) பாரத தேசத்தில் கடைபிடிக்கப்பட்டது.
சரியாக புரிந்து கொள்ளப்படாமல் இருந்தாலும், இன்று வரை பாரத தேசம் கடைபிடிக்கின்றது.


ஹிந்துக்களுக்கு "யோகா, தியானம், கடவுளை வழிபடுவது" மட்டும் தான் தெரியும் என்று நினைத்து விட கூடாது.
"உலகையே ஒரு குடையில் ஆண்ட" மகாவீரர்களை பெற்றெடுத்ததும் இந்த பாரத மண் தான்.

இந்தியாவை தேடி, நாயாக கடலில் அலைந்து திரிந்து தான், "கொலம்பஸ்" தவறுதலாக அமெரிக்காவில் கரை இறங்கினான்.
"அடுத்தவன் வீட்டில் எதை கொள்ளை அடிக்கலாம். யாரை ஏமாற்றலாம்?"
என்று தேடி தான், இந்தியாவை நோக்கி தொப்பியும், ரொட்டியும் மட்டுமே பார்த்த, போர்ச்சுகல், டச், பிரெஞ்ச், பிரிட்டிஷ் போன்றவர்கள் நுழைந்தனர்.
இந்தியாவின் செல்வத்தை பார்த்து தான் "கஜினி முகம்மது" 17 முறை உள்ளே நுழைய பார்த்தான்.
17 முறை ஹிந்து அரசனிடம் தோற்றவன் இவன்.
17 முறையும், ஹிந்து அரசனிடம் மன்னிக்கப்பட்டவன்.
18வது முறை திடீரென்று தாக்கி சோம்நாத் கோவிலில் உள்ள தங்கத்தை எடுத்து கொண்டு ஓடினான்.
18 முறை ஒரே ஒரு கோவிலை மட்டுமே குறி வைத்து கொள்ளை அடித்தான் என்றால், பாரத பூமி முழுவதும் எத்தனை செல்வங்கள் இருந்து இருக்கும் என்று நினைத்து பாருங்கள்..

"இந்தியாவுக்குள் நுழைந்த பின்னர் தான் இவர்களுக்கு அறிவியல் வளர்ச்சி மட்டுமல்ல, அறிவு வளர்ச்சியே ஏற்பட்டது" 
என்பதற்கு சான்று, இன்று வரை இவர்கள் கண்டுபிடித்த அறிவியல் சாதனைகள் தான்.
ராமாயண காலத்தில், "ராவணன் புஷ்பக விமானம் (flight) வைத்து இருந்தான்" என்று வால்மீகி எழுதி உள்ளார்.
சீதையை, இலங்கையில் இருந்து அயோத்திக்கு ஸ்ரீ ராமர் அதே புஷ்பக விமானத்தில் ஏற்றி கொண்டு, ஓரே நாளில் திரும்பினார் என்றும் பார்க்கிறோம்.
பரதன், தன் அண்ணன் ஸ்ரீ ராமரை மீண்டும் அயோத்திக்கு கூட்டி வர புறப்பட்ட போது,
தன்னுடன் வந்த அயோத்தி மக்கள் வசதிக்காக,
  • போகும் வழியெல்லாம், உடனுக்குடன் சாலைகள் அமைத்து,
  • தண்ணீர் உணவு ஆங்காங்கு ஏற்பாடு செய்து,
  • பெரிய பெரிய மரங்களை காட்டிலிருந்து வேரோடு எடுத்து, சாலைகள் இருபுறமும் நட்டு,




தன் மக்களுக்கு வெயில் கூட படாமல் கூட்டி சென்றான் என்று பார்க்கும் போது, ஹிந்துக்களின் அறிவியல் வளர்ச்சி எப்படி இருந்துள்ளது என்று தெரிகிறது.
எத்தனை அற்புதங்களை இழந்து நிற்கிறோம் என்று தெரிகிறது.

இன்றைய என்ஜினீயரிங் படிப்பு மூலம், இது போன்று
ஒரே நாளில் ரோடு போட்டு,
மரங்களை ஒரு இடத்தில் இருந்து எடுத்து சாலை நெடுக வைத்து,
சாப்பாடு வசதி செய்து விட முடியுமா? என்பது கூட சந்தேகம் தான்.

12 லட்ச வருடம் முன்பு இருந்தது த்ரேதா யுகம்.
த்ரேதா யுகத்தில் "ராமர்" அவதாரம் நிகழ்ந்தது.
அந்த சமயத்திலேயே பாரத மக்களாகிய (நாம்), இத்தனை அறிவியல் முன்னேற்றம் பெற்று இருந்தனர் என்று பார்க்கிறோம்.

பொதுவாகவே, த்ரேதா யுகத்தில், "யோகம், தியானம், விரதம்" போன்ற பயிற்சிகளால் அனைவருக்கும் ஆயுசும் அதிகமாக இருந்தது.
16000 வருடங்கள் வாழ்ந்த தசரதன், தன் மகன் "ஸ்ரீ ராமனுக்கு முடி சூடலாம்" என்று நினைத்த போது,
அவர் தலைமுடியில் 'ஒரு முடி மட்டும் வெள்ளையாக இருந்ததை கவனித்தார்' என்றால், அன்று இருந்த அறிவியலை என்னவென்று சொல்வது?
"தலை முடி கொட்டாமல், தலை முடி நரைக்காமல் இருக்க" ராஜ யோகங்களை கடைபிடித்தனர் அரசர்கள் என்று சொல்கிறது இதிகாசங்கள்.

"மேலை நாடுகளின் உதவியால் தான் அறிவியல் முன்னேற்றம் ஏற்பட்டது"
என்று யாராவது சொன்னால், அவர்களிடம் ஒரே கேள்வி தான் ஹிந்துக்கள் கேட்க வேண்டும்.
இந்தியாவுக்குள் இவர்கள் அனைவரும், நுழைவதற்கு முன் என்ன அறிவியல்  கண்டுபிடிப்பு செய்தார்கள் இவர்கள்?
ஒரு ஊசியில் நூல் கோர்க்க, ஊசியில் எங்கு ஓட்டை போடுவது? என்று கூட தெரியாமல் இருந்தனர் என்பது தான் உண்மை.
ஆதி காலத்தில் இவர்கள் உடை அலங்காரத்தை பார்த்தால்,
நம் அரசர்களின் அலங்காரத்தை பார்த்தாலே,
நம் பாரத மக்கள் ஆடையில் எத்தனை ஆச்சர்யமான வண்ணங்கள் கொண்ட ஆடைகளை அணிந்தவர்கள் என்று தெரியும்.
1000 வருடங்களில், தேவ பாஷையில் (சமஸ்கரித மொழியில்) உள்ள,
ரகசிய க்ரந்தங்கள், சாஸ்திரங்கள் எல்லாவற்றையும் max muller முதல் பல வெளிநாட்டவர்கள் படித்து,
அதன் சூத்திரத்தை (formula) அவர்கள் நாட்டிற்கு எடுத்துக்கொண்டு, ஆராய்ச்சிகள் பல செய்து கண்டுபிடிக்க ஆரம்பித்தனர்.
இந்த 1000 வருடத்தில், நாம் அனைவரும் பேசி வந்த தேவ பாஷையை பயன்படுத்த முடியாமல்,
"கொலைகள், கொள்ளைகள், கற்பழிப்புகள்" என்று பாரத தேசம் முழுவதும் அரங்கேற்றி,
பல ஹிந்துக்களை கத்தியை காட்டி மதமும் மாற்றி,
தமிழ் நாட்டில் தமிழும், சமஸ்கரிதமும் அறிந்த நம்மை,
ஊர் விட்டு ஊர் சென்று வியாபாரமோ, வேலையோ செய்ய விடாமல்,
உயிர் பயத்தை உருவாக்கி,
தனியாக பெண்களை வீட்டில் விட்டு சென்றால், "எவன் வீட்டுக்குள் புகுவானோ?"
என்ற பயத்தில், அடுத்த தேசங்களான கர்நாடக தேசம் கூட செல்ல முடியாமல், பாரத மக்கள் அவரவர் தெருவிலேயே கிடைத்ததை வைத்து வாழ ஆரம்பித்தனர்.



தசரதன் இறந்த பின், அவருடைய மனைவிகள் யாரும் தீக்குளிக்கவில்லை.  ஸ்ரீ ராமர் திரும்பி வரும்போது, கோசலை வரவேற்றாள்
பாண்டு இறந்த பின்னும் குந்தி தேவி வாழ்ந்தாள்.
பெண்களின் பாதுகாப்புக்கு அச்சம் தலை விரித்து ஆடிய இந்த 1000 வருடத்தில்,
கணவன் இறந்தால், விதவைகளாக போன பெண்கள் கணவனோடு உடன் கட்டை ஏறினர். 
எத்தனை உயிர் பயம் இருந்தால் பொது மக்கள் இந்த காரியத்தை செய்ய துணிந்து இருப்பார்கள்?
ராஜஸ்தான் சித்தூர் கோட்டையை கில்ஜி படையினர் தகர்த்து விட்டனர் என்றதும், தன் கணவன் போரில் இறந்து விட்டான் என்றதும்,
மகாராணியே தன்னோடு சேர்த்து பல ஹிந்து பெண்களுடன் தீக்குளித்தால் என்றால், பொது மக்களின் (பெண்களின்) கற்புக்கு என்ன பாதுகாப்பு இருந்து இருக்க முடியும் இந்த சமயத்தில்?
ஹிந்துக்களின் இருண்ட காலங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

குறைந்தது 1000 வருடங்களில் (947AD to 1947AD),
நம் 40 தலைமுறை பாட்டனார்களாவது இந்த பேராபத்தில் அவதிப்பட்டு இருப்பார்கள்.

தமிழன் கன்னடகாரனோடு பேச பொது மொழியாக இருந்த 'சமஸ்கரித மொழி' பயன்பாட்டில் இல்லாமல் போக, பாரத மக்களுக்குள் தொடர்பு அகன்றது.

"நான் தமிழன்", "நான் தெலுங்கன்" என்று இன்று பிரித்து பேசும் குணம், 1000 வருட வெளி ஆக்ரமிப்பால், நமக்கு வந்த சிறுமை எண்ணங்கள்.
இது முதலில் தொலைய வேண்டும்.
நாம் அனைவருமே ஹிந்துக்கள். பாரத தேசத்தவர்கள்.

சம்ஸ்க்ரிதம், பேச்சு வழக்கில் இருந்து மெதுவாக நம்மிடம் அழிய, இஸ்லாமிய ஆட்சி முடிந்த சமயத்தில்,
கிறிஸ்தவர்கள் தங்கள் மொழியை பிரபலப்படுத்த, வர்த்தகம் செய்ய, ஆங்கிலத்தை புகுத்தி, பொது மொழியாக "ஆங்கிலம்" உருவாக,
பள்ளிகளை கட்டி, அங்கு படிக்கும் ஹிந்துக்களுக்கு கணக்கு எழுதும் வேலை, கூர்க்கா வேலை தருவதாக பிச்சைக்கார அடிமை வேலைகள் கொடுத்து,
ஆங்கில மோகத்தை உருவாக்கி, முதலில் ஆதரவு இல்லாமல் விடப்பட்ட பிராம்மண சமுதாயத்தை ஆசை காட்டி இழுத்தனர்.

ப்ராம்மணன் ஆங்கிலம் கற்று, அரசாங்கத்திற்கு, கணக்கு எழுத போனான்.
சமஸ்கரிதம் பேச்சு வழக்கில் அழிந்ததும், அந்த மொழியை வைத்து தான்,
வேதம் என்ன சொல்கிறது?
யோக சாஸ்திரம் என்ன சொல்கிறது?
நாட்டிய  சாஸ்திரம் என்ன சொல்கிறது?
சிற்ப சாஸ்திரம் என்ன சொல்கிறது?
என்று கற்று வந்த பாரத மக்கள், அதை திருடி ஆராய்ச்சிகள் செய்து,
அதையே ஆங்கிலத்தில் நமக்கு கொடுத்து,
ஆங்கிலத்தில் மருத்துவம்,
ஆங்கிலத்தில் கணிதம்,
ஆங்கிலத்தில் இன்ஜினியரிங்,
ஆங்கிலத்தில் கவிதை
என்று நமக்கே திருப்பி கொடுத்து விட்டனர் ஆங்கிலேயர்கள்.

சமஸ்கரித மொழியை அறிந்து கொள்ள முடியாததால், பல அற்புதமான ரகசிய சூத்திரங்கள் இன்றும் கண்டுபிடிக்க படாமலேயே உள்ளது.
"பொன்னான சமஸ்கரித மொழியை 1200 ஆக்கிரமிப்பால் இழந்தோம்"
என்ற அறிவு இல்லாமல்,
சுதந்திரம் அடைந்த பின்னும்,
மீண்டும் சமஸ்கரித மொழியை படித்து ஆராய்ச்சிகள் செய்து சுயமாக பாரத மக்கள் வாழ வழி செய்யாமல்,
கடந்த 70 வருடங்களாக மெக்காலேயின் கிறிஸ்தவ பாட புத்தகத்தை கொண்டே கல்வியை தொடர்ந்தது நேருவின் அரசாங்கம்.


விளைவு, வேற்று மொழியான ஆங்கிலத்தில் தமிழன் படித்து, அதை பற்றிய மேலும் ஆராய்ச்சி செய்ய, அவர்கள் என்ன எழுதியுள்ளார்கள்? என்றே படித்து,
வாணிபம், தொழில், படிப்பு என்று எதை எடுத்தாலும் வெளிநாட்டிடம் பிச்சை எடுக்கும் நிலை வந்தது.

ஜப்பான் போன்ற சிறு நாடுகள் கூட அவர்களுக்கான மொழியிலேயே படிக்கிறார்கள். அவர்கள் எந்த நாட்டையும், இன்று வரை நம்பி வாழவில்லை.

இந்தியா முழுவதும் அவரவர் தாய் மொழியும், பொது மொழியாக சம்ஸ்க்ரிதமும் வளர்க்கப்பட்டு இருந்தால்,
இன்று சிற்ப சாஸ்திரம் படிப்பவன், வேதத்தில் சொன்ன ரகசியங்களை அறிந்து, உலகமே இவன் சிற்பங்களை வாங்க அலைய வைத்து இருப்பானே!!
தமிழ் முனி என்று பெருமையாக நாம் சொல்லும் "அகத்தியர்",
வனவாசமாக "ஸ்ரீ ராமர்" வந்த பொழுது, பொது மொழியான சமஸ்கரித மொழியில் பேசி, தான் வைத்து இருந்த அஸ்திர சஸ்திரங்களை ஸ்ரீ ராமரின் பாதத்தில் சமர்ப்பித்தார் என்று பார்க்கிறோமே..
பாரத பூமி முழுவதும் மொழி பிரச்சனை இல்லாமல் தமிழன் சுற்றி இருக்கிறானே!!

திருச்சி அருகில், வனமாக இருந்த "அன்பில்" என்ற ஊரில் பிறந்த வேடுவன் தானே "பிரம்மாவை, நாரதரை" தரிசித்தான்.
தமிழனாக பிறந்து "வால்மீகி" என்ற முனியாக ஆகி, சமஸ்கரித மொழியில் "ராமாயணம்" எழுதி உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளாரே!!
வால்மீகி "தமிழன்" என்று கூட தெரிய கூடாது என்ற அளவுக்கு, தமிழனை மூளை சலவை செய்தது யார்?
70 வருட காங்கிரஸ் அரசாங்கம் தானே!!
ஸ்ரீ ராமர் அவதார காலம் வரை உத்தர பிரதேசம் சென்று ராமாயணத்தை எழுதி முடித்து,
மீண்டும் தமிழகம் வந்து "திருநீர்மலையில் ராமர் இவருக்கு காட்சி கொடுத்து, வைகுண்டம் அழைத்து சென்றார்"
என்பதும் தமிழனுக்கு தெரியாமல் மறைக்கப்பட்டதே !!
வால்மீகியின் முக்தி ஸ்தலம் அல்லவா திருநீர்மலை !!. 
நம் தமிழன் அல்லவா வால்மீகி.
இதன் காரணமாக தானே, கம்பன் ஸ்ரீ ராமாயணத்தை "தமிழில்" எழுத ஆசைப்பட்டான்.
தமிழனின் பொக்கிஷம் அல்லவா ராமாயணமும், வால்மீகியும்.
ஆதி சங்கரர் கேரள தேசத்தில் பிறந்தும், பாரதம் முழுவதும் சஞ்சரித்தார் என்று பார்க்கிறோம்.
மற்றவர்களுடன் மலையாளமா பேசினார்?
பொது பாஷையான சம்ஸ்க்ரித மொழியில் தானே பேசினார்.

ஆங்கில வழி கல்வியால், தமிழையும் இழந்து விட்டான் தமிழன்.




தமிழில் எழுதி உள்ள,
  • திருக்குறளுக்கும்,
  • கம்ப ராமாயணத்துக்கும்,
  • ஆழ்வார்கள் பிரபந்தங்களுக்கும்,
  • நாயன்மார்கள் பாசுரங்களுக்கும்

இன்றைய தமிழனுக்கு உரை தேவைப்படுகிறதே!! 

இதை விட அவமானம் நமக்கு என்ன இருக்கப்போகிறது?.


1947ல் சுதந்திரம் அடைந்து, 70 வருடங்கள் நாட்டை மறைமுகமாக அடிமை நாடாக ஆக்கி விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம். 
காங்கிரஸில் அன்று இருந்த அனைவருமே, ஆங்கில வழி கல்வி கற்றவர்கள். நாட்டின் கல்வியை சீர்படுத்த கிடைத்த வாய்ப்பை கோட்டை விட்டனர்.
1200 வருட சுரண்டலில் இந்தியர்கள் அனைவரும் பிச்சைகாரர்களாக விடப்பட்ட சூழ்நிலையில்,
காங்கிரசில் உள்ள முக்கிய தலைவர்கள் ஆங்கில வழி கல்வி கற்றவர்கள் என்பதை நாம் மறந்து விட முடியாது.

இன்று பல இந்தியர்கள் "வெளி நாடு சென்று வேலை பார்த்தால் தான், அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்" என்று நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
வெளிநாடு சென்று, மேற்கத்திய கலாச்சாரம் ஊடுருவ,
இன்று முதியோர்கள் அனாதைகளாக யாரும் பார்க்க ஆளில்லாமல் தனி வீட்டில் வாழ்கின்றனர்.

இந்த அவலம் போக வேண்டும் என்றால்,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வி ஆக்க வேண்டும்.

"சம்ஸ்க்ரிதமும், தமிழும்" கற்ற ஒரு தமிழன்,
அகத்தியர், சித்தர்கள் அருளிய ஆச்சர்யமான சித்த மருத்துவ நூல்களின் ரகசியங்களை புரிந்து கொண்டு வெளி கொண்டு வரலாம்.
சம்ஸ்க்ரிதமும் தெரிவதால்,
வேத சாஸ்திரங்கள், யோக சாஸ்திரங்கள், சிற்ப சாஸ்திரங்கள் என்ன சொல்கிறது? என்று ஆராய்ச்சி செய்து,
எந்த நாட்டையும் நம்பி பிழைப்பு நடத்தும் அவசியம் பாரத மக்களுக்கு இல்லை, என்று ஆக்கலாம்.

இதற்கு கல்வியில்,
தாய் மொழியும், சமஸ்கரித மொழியும் கட்டாயப்படுத்தியே ஆக வேண்டும்.

பாரத மக்களில் பல லட்சக்கணக்கான ஹிந்துக்கள், இன்று இஸ்லாமிய, கிறிஸ்தவர்களாக வாழ்கின்றனர்.
இவர்கள் சமஸ்கரித மொழியை படிக்க மறுத்தால், அவர்களுக்கு தாராளமாக விலக்கு அளிக்கலாம்.
கோடிக்கணக்கான ஹிந்துக்கள் சமஸ்கரித மொழியை கற்று கொள்ளும் வாய்ப்பை அரசு தர வேண்டும்.
இந்த மொழிகளை கற்றுக்கொள்ளும் போது தான், நாம் இன்று பார்க்கும் கோவிலில்,

  • கல்லில் எப்படி சங்கிலி செய்தார்கள்?
  • கல் தூணில் எப்படி சப்த ஸ்வரங்கள் கேட்கிறது?

என்று ஆராய முடியும்.

இது போன்ற சட்டம், ஆங்கில மோகம் கொண்ட அரசால் நமக்கு கிடைக்கவே கிடைக்காது.
சமஸ்கரித மொழி, அவரவர் தாய் மொழியை வளர்க்க, 
முன் வரும் கட்சிகளே நம் பாரத மக்களுக்கு தேவை.

70 வருடங்களாக ஆங்கில மோகம் கொண்ட அரசுகள், 
நம் வாழ்க்கையே வெளிநாட்டுக்காரனுக்கு வேலை செய்து பிச்சை வாங்கும் நிலையில் தான் வைத்து உள்ளது.

இந்த நிலை மாற,
நம் தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கட்டாய கல்வியாக ஆக்க முயற்சி செய்யும் அரசே நமக்கு தேவை.

மொழி அறிவு நமக்கு வரும் போது, 
தொலைந்த பொக்கிஷங்களை நாமே தோண்டி எடுத்து விடலாம்.

ஆயிரம் மொழிகளை கற்று தேர்ச்சி அடைய புத்தியுடைய நமக்கு,
தாய் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்பது என்ன கஷ்டமா? புத்திசாலிகள் தானே நாம் !!.

ஹிந்துவாக பிறந்தோம்!! என்ற பெருமையில் மேலும் தொடர்வோம்...

இரண்டு எதிரிகள் (எதிர் கொள்கை) ஒன்று சேர்ந்து,
ஹிந்துக்களை அழிக்க நினைக்கும் போது,
"பேத நீதியை" கையாள வேண்டும் என்று சொல்கிறது நம் சாஸ்திரம்.

ஹிந்துக்களை எதிர்க்கும் இரண்டு எதிரிகளுக்கு இடையே உள்ள பகையுணர்வை காட்டி, பிரச்சாரம் செய்து, கலகத்தை அவர்களுக்குள் உருவாக்கி, "எதிரிகள் ஒன்று சேர விடாமல் அவர்களுக்குள் பகையை உண்டாக்க வேண்டும்" என்பது பேத நீதி.

பாகிஸ்தான் போன்ற சிறிய நிலப்பரப்பை கொண்ட எதிரிகள்,
"ஆப்கான், சீன" தேசத்தோடு சேர்ந்து கொண்டு,
இந்தியாவை தாக்கும் போது,
பாகிஸ்தான் போன்ற எதிரியின், பலத்தை துண்டிக்க "பேத நீதியை" எடுத்துக்கொள், என்கிறது.

ஆப்கான் இன்று இந்தியாவுடன் நட்பு நாடாக ஆகி,
பாகிஸ்தான் நம்மிடம் கடந்த 70 வருடங்களாக சுதந்திரமாக செய்த தீவிரவாதத்திற்கு தடை ஆனது.

சீனாவுடன் வர்த்தக அனுமதி கொடுத்து, இந்தியாவை எதிர்க்க நினைக்கிறது பாகிஸ்தான்.
சீனாவை பாகிஸ்தானுடன் பேத படுத்த, இந்தியா சீனாவின் எல்லையில் இருக்கும் பலம் வாய்ந்த ரஷ்யாவுடன் நட்பு கொண்டது.
மிகவும் பலம் வாய்ந்த ஜப்பான், அமெரிக்காவுடனும் நட்பு கொள்ள,
சீனா பாகிஸ்தான் விவகாரத்தில் தலையிட்டு இந்தியாவை தாக்க பயப்படுகிறது.

"சாம தான பேத தண்ட" என்ற ராஜ நீதிகளை, ஹிந்துக்களான நாம் லட்சக்கணக்கான வருடங்களாக பின்பற்றி வருகிறோம்.

"சரியாக இந்த ராஜ நீதிகளை பயன்படுத்த படும் போது, எதிரிகளை அடக்கி, அரசாங்கத்தை செயல் படுத்த முடியும்" என்கிறது நம் சனாதன தர்மம்.

"சாம, தான, பேத" நீதி செல்லுபடியாகவில்லை என்றால்,
போர் என்ற "தண்ட" நீதியை கடைசியாக பயன்படுத்த வேண்டும்
என்கிறது சாஸ்திரம்.

பெரும்பாலான எதிரிகளை, போர் செய்து அழிப்பதை விட,
பேத நீதியை பயன்படுத்தி எதிரிகள் சேர விடாமல், அவர்களுக்குள் உள்ள சண்டையை கிளப்பி, கலகம் செய்து, போரை நம் வரையில் தவிர்க்க வேண்டும்.

த்ரேதா யுகத்தில்,
ராவணன் சீதையை இலங்கைக்கு கொண்டு சென்று விட்டான் என்ற நிலையிலும், உடனே "தண்டனை", "போர்" என்று ஸ்ரீ ராமர் தண்ட நீதியை எடுத்துக்கொள்ளவில்லை.
கோபத்தையும் ஒரு கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார் ஸ்ரீ ராமர்.

மகா தவறு செய்த ராவணனை, காலில் விழுந்தால் மன்னிக்கவும் தயாராக இருந்தார் ஸ்ரீ ராமர்.

1. முதலில் "போர் வேண்டாம்" என்று சமாதான முயற்சி செய்ய அங்கதனை அனுப்பினார்.
"சீதையை திருப்பி அனுப்பி, மன்னிப்பு கேட்டால்" மன்னிக்க தயாராக இருந்தார். ராவணன் மதிக்கவில்லை..
"சமாதான" நீதி தோற்றது.
2. 'அரசனான நான் சீதையை அபகரித்தேன். அபகரித்த அனைத்தும் என் சொத்து' என்று பிடிவாதம் செய்தான் ராவணன்.
போரில் உயிர் சேதம் அளவில்லாமல் ஏற்படும்.
"போரை தவிர்க்க தானமாக நினைத்தாவது சீதையை திருப்பி கொடு" என்று கேட்டும், மறுத்தான் 10 தலைக்கனம் கொண்ட ராவணன் (பிராம்மண குலத்தில் பிறந்தும் ராக்ஷசன்).
"தான" நீதி தோற்றது.

3. விபீஷணன், தன் அண்ணன் செய்யும் காரியம் "அநாகரிகமானது" என்று சொல்லி திருத்த பார்த்தான்.
தர்மம் சொன்ன விபீஷணனை சபையில் எட்டி உதைத்தான் ராவணன்.
விபீஷணன் "தர்மம் ஸ்ரீ ராமர் பக்கம் இருப்பதை பார்த்து" ஸ்ரீ ராமரை சரணம் அடைந்தார்.
ராவணன் தம்பியை பேதப்படுத்தியும், ராவணன் சீதையை கொடுக்க மறுத்தான்.
ராவணனின் இன்னொரு தம்பி கும்பகர்ணனிடம் விபீஷணன் பேசியும், "ராவணன் தவறே செய்தாலும் அவன் பக்கமே நிற்பேன், உயிர் துறப்பேன்" என்று அதர்மத்திற்கு துணை நின்றான்.
ராவணனின் முக்கிய பலமான கும்பகர்ணனை பேத படுத்த முயன்றும் அந்த முயற்சி வீணானது.
"சீதையை திருப்பி அனுப்ப மாட்டேன்" என்று பிடிவாதமாக இருந்தான் ராவணன்.
"பேத" நீதியும் தோற்றது.
4. சமாதானம், தானம், பேதம் செல்லுபடியாகவில்லை என்றதும், ஸ்ரீ ராமர், தண்ட நீதியை எடுத்தார்.
பல நூறு வருடங்களாக இலங்கையை தலைமையாக கொண்டு,
சொர்க்க லோகத்தில் உள்ள வேதத்தில் சொல்லியுள்ள தேவர்களையும் அடக்கி கொண்டு,
உலகையே மிரட்டி,
தேவைப்படும் போது சூரியனை உதிக்க செய்தும், வருணனை மழை பொழிய செய்தும்,
அழிக்க முடியாத ராக்ஷஸ படைகளுடன் ஆட்சி செய்த ராவணன்,
ஸ்ரீ ராமரின் அம்பு மழையில் ஒரு ராக்ஷஸன் கூட மிஞ்சாத படி இழந்து, பிள்ளை, சகோதரன் என்று அனைவரையும் இழந்து, 10 தலையும் மண்ணில் உருண்டு வீழ்ந்தான்.

பின் வந்த துவாபர யுகத்தில்,
துரியோதனன் பாண்டவர்களை சூதாடி ஏமாற்றி, பாண்டவர்கள் ராஜ்யத்தை பிடுங்கினான். 
"க்ஷத்ரியனாக இருந்தால் போர் செய்து உன் சொத்தை திரும்ப வாங்கி கொள்" என்று பாண்டவர்களை அவமதித்தான்.


1. ஸ்ரீ கிருஷ்ணர் போரை தவிர்க்க, சமாதான தூதுவனாக சென்றார்.
சூதாடி ஏமாற்றிய பாண்டவர்கள் சொத்தை திருப்பி தர கேட்டும் பிடிவாதமாக மறுத்தான் துரியோதனன்.
"சமாதான" நீதி தோற்றது.
2. "தானமாக 5 கிராமத்தை தந்தால் கூட போரை தவிர்க்கலாம்" என்று கேட்டும், "ஒரு குண்டூசி முனை கூட பாண்டவர்களுக்கு தர முடியாது" என்று மறுத்தான் துரியோதனன்.
"தான" நீதியும் தோற்றது.

3. துரியோதனனின் முக்கிய பலமான கர்ணனை "அநீதி செய்யும் துரியோதனனுக்கு துணை போகாதே" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லியும், உலக சாமானிய நீதிகளை சொல்லி, தர்மத்தை மீறி, துரியோதனன் பக்கம் நின்றான் கர்ணன்.
"பேத" நீதியும் தோற்றது.
4. சமாதானம், தானம், பேதம் செல்லுபடியாகவில்லை என்றதும், ஸ்ரீ கிருஷ்ணர் தண்ட நீதியை எடுத்தார். 
அதர்மம் செய்கிறான் என்று தெரிந்தும், துரியோதனன் பக்கம் துணை நின்ற அனைத்து அரசர்களும், துரியோதனோடு பிறந்த மற்ற 99 சகோதரர்களும், கர்ணன், பீஷ்மர், துரோணர், துரியோதனன் உட்பட அனைவரும் அழிந்தனர்.

இதே நீதி, பாரத நாடு சுதந்திரம் அடைந்த போதும் கடைபிடித்தது.

கோரி ஆட்சி, சயீத் ஆட்சி கில்ஜி ஆட்சி, துக்ளக் ஆட்சி, லோடி ஆட்சி, முகலாய ஆட்சி என்று 1000 வருட இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் பாரத நாடு சிக்கிய போது,
லட்சக்கணக்கான ஹிந்துக்கள் அடிமைகளாக, கைதிகளாக ஆக்கப்பட்டு, உயிருக்கு பயந்தவர்கள் இஸ்லாமிய மதத்துக்கு மாற்றப்பட்டனர்.
கற்பழிக்கப்பட்ட பெண்கள் பெற்ற குழந்தைகள் இஸ்லாமியனாக வளர்க்கப்பட்டனர்.

1857ல் இஸ்லாமிய அந்நியர்களின் கொட்டம் அழிந்த நிலையில், 
வியாபாரம் செய்ய வந்த பிரிட்டீஷ் போர்ச்சுகல் ட்ச், பிரெஞ்ச் போன்ற கிறிஸ்துவ நாடுகள் பாரத நாட்டை ஆக்கிரமித்து விட்டனர்.

1000 வருடங்களாக இஸ்லாமியனாக மாறி இருந்த ஹிந்துக்கள், கோடிக்கணக்கான ஹிந்துக்களுடன் சேர்ந்து, கிறிஸ்தவர்களை எதிர்த்து சுதந்திர போராட்டம் செய்தனர்.

1947ல் இரண்டு உலக போர் நடந்து முடிந்த சமயத்தில்,
பிரிட்டிஷ் அரசால், பாரத நாட்டில் ஏற்படும் எதிர்ப்பையும் சமாளிக்க முடியாமல், சுதந்திரம் தர முடிவு செய்தனர்.

இந்த சமயத்தில் இந்தியாவில் சிந்து தேச பகுதியிலும், வங்காள பகுதியிலும் லட்சக்கணக்கான ஹிந்துக்கள் இஸ்லாமியார்களாக வாழ்ந்து கொண்டிருந்தனர்.
ஆங்காங்கு கன்யாகுமரி முதல் பாரதம் முழுவதும் இஸ்லாமியர்கள் பரவி இருந்தனர்.
மதம் மாறி போன இஸ்லாமியர்கள், இனி ஹிந்துக்களோடு சேர்ந்து வாழ முடியாது என்று ஹிந்துக்களிடம் சண்டை செய்தனர்.

40 தலைமுறைகளாக இஸ்லாமியனாக வாழும் இவர்கள், மீண்டும் ஹிந்துக்களாக மாறுவதும் இனி இயலாத காரியம். 
40 தலைமுறைகள் இஸ்லாமியனாக வளர்ந்த இவர்களும்,  ஹிந்துக்களின் தெய்வ வழிபாட்டில் விரோத போக்கை காண்பித்தனர்.
"ஜின்னா" தலைமையில்,
இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்த இன்றைய பாகிஸ்தான் (சிந்து தேசம்), மற்றும் வங்காள தேசத்தில் (bangladesh), "ஹிந்துக்கள் இருக்கக்கூடாது" என்று படுகொலைகள் ஆயிரக்கணக்கில் நடக்க ஆரம்பித்தது.

விடுதலை பெறும் சமயத்தில் பாரத நாடு ரத்த காடானது.
"ஜின்னா" - "இஸ்லாமியர்களுக்கு தனி இடம் கொடுத்து பிரித்து விடுங்கள்" என்று காந்தியிடம் கேட்க,
பங்களாதேஷ் மற்றும் சிந்து தேசத்தில் உள்ள ஹிந்துக்கள் அனைவரையும் கிளம்பி வர சம்மதித்தார் காந்தி.

முக்கால்வாசி இஸ்லாமியர்கள் "பங்களாதேஷ் மற்றும் சிந்து தேசத்திற்கு" சென்றனர்.
"தமிழகம், தெலுங்கு தேசம்" என்று ஆங்காங்கு இருந்த இஸ்லாமியர்கள் "பங்களாதேஷ் செல்ல தூரம் அதிகம் நாங்கள் இங்கேயே வாழ்கிறோம்" என்று மறுத்தனர்.
இப்படி பல இடங்களில் இடம் பெயர மறுத்தனர்.


ஜின்னா 1947ல் aug 14ல் சிந்து தேசத்தை "பாகிஸ்தான்" என்ற பெயரிலும், கிழக்கு பங்களாதேஷ் என்ற "கிழக்கு பாகிஸ்தான்" என்ற பெயரிலும் மாற்றி, "இஸ்லாமிய தேசம்" என்று சட்டத்தில் மாற்றி, ஆட்சியில் அமர்ந்தார்.
அங்கு இருந்த கோவில்கள் எல்லாம் இடிக்கப்பட்டு,
நாளடைவில் இருந்த கொஞ்சம் ஹிந்துக்கள் அழிக்கப்பட்டு
இன்று வரை "இஸ்லாமிய நாடாக"
இந்த பாரத தேச பகுதிகள் மாறி உள்ளது.

ஸ்ரீராமரின் தம்பி "பரதன்" உருவாக்கிய "தக்ஷசிலா" (பாம்புகள் அதிகம் இருந்த பிரதேசம்) என்ற தேசம், இன்று இஸ்லாமிய நாடாக "Taxila" என்று ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

பரதன் உருவாக்கிய "புருஷபுரா" என்ற மற்றொரு தேசம், இன்று இஸ்லாமிய ஊராக "Peshavar" என்று ஆகி, ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

ஸ்ரீ ராமரின் மகன் 'லவன்" உருவாக்கிய "லவபுரம்", இன்று இஸ்லாமிய ஊராக "Lahore" என்று ஆகி, ஹிந்துக்களை விட்டு போய் விட்டது.

சிந்து தேசத்தில் இருந்த கோவில்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டது.
பங்களாதேஷில் இருந்த கோவில்கள் இன்று அழிக்கப்பட்டு விட்டது.

இஸ்லாமிய நாடாக, இந்த பிரிக்கப்பட்ட  பிரதேசங்களை ஜின்னா சொன்ன பொழுது,
போக மறுத்த இஸ்லாமியர்கள் "இங்கேயே இருக்கட்டும்"
என்று நேரு அமைதி காத்து, பாரத தேசத்திற்கு "இந்தியா" என்று (சிந்து என்ற சொல்லை இந்தியா என்று உளறிய கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய சொல்லை) பெயர் வைத்து,
லட்சக்கணக்கான இஸ்லாமியர்களும் இங்கேயே தங்கி விட்டதால்,
"இந்தியா ஹிந்து தேசம்" என்று சொல்லாமல் இருந்தார் நேரு.
"நேருவின் மகள் இந்திரா ஒரு இஸ்லாமியனை மணம் செய்து இருந்தார்" என்ற காரணமாகவும் இருக்கலாம்.

பாகிஸ்தான் "இஸ்லாமிய நாடு" என்று அறிவித்த பின், அங்கு இருந்த கோவில்கள் அழிந்தன.

தன் குடும்பமே கலப்பு திருமணம் செய்த காரணத்தால்,
இந்தியா "ஹிந்து தேசம்" என்று அறிவிக்காமல்,
கோடிக்கணக்கான ஹிந்துக்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் அரசாங்கம்.

பாபர் என்ற முதல் ஈரான் தேசத்தவன், இடித்த அயோத்தி ராமர் கோவிலை, 
பின் வந்த ஔரங்கசீப் இடித்த கண்ணன் பிறந்த மதுரா கோவிலை,
ஔரங்கசீப் இடித்த சிவ பெருமானின் காசி விஸ்வநாத் கோவில்கள் 
இன்று வரை மீட்கப்படாமல் சட்ட சிக்கலில் உள்ளது.

"ஹிந்து தேசம்" என்று அறிவிக்காமல், சுய லாபத்திற்காக அமைதி காத்து, பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் இது தான் "எல்லை கோடு" என்பதையும் தீர்மானமாக சொல்லாமல் விட்டனர் காங்கிரஸ் அரசாங்கம்.

1. "போராட்டம் வேண்டாம். சமாதானமாக இருங்கள்." என்று மகாத்மா காந்தி  என்று சொல்லி பார்த்தார். ஜின்னா ஒப்புக்கொள்ளவில்லை.
"சமாதானம்" தோற்றது.

2. சரி, சிந்து தேசத்தையும், வங்காள தேசத்தையும் தானமாக தருகிறோம் என்று சொல்ல,  ஜின்னா ஒப்புக்கொண்டார்.
"தான" நீதி ஜெயித்தது.

"தான" நீதியை பின்பற்றிய காங்கிரஸ் அரசு, அதை ஒழுங்காக அமுல்படுத்தாமல் கோட்டை விட்டது.

பாரத தேசத்தின் தலையையும், இடது கையையும் வெட்டி தானம் கொடுக்க துணிந்த காங்கிரஸ் அரசாங்கம், 
"பாகிஸ்தான் "இஸ்லாமிய தேசம்" என்றால், இந்தியா "ஹிந்து தேசம்" என்று அறிவிக்க மறந்தது."
"இரண்டு நாட்டுக்கும் எல்லை எது என்பதையும் தெளிவாக சொல்ல மறந்தது".

இன்று வரை காஷ்மீர் கலவரம் ஓயவில்லை.
ஸ்ரீராமரின் தம்பி பரதன் உருவாக்கிய தேசங்கள்,
லவன் உருவாக்கிய தேசங்கள் இஸ்லாமிய தேசங்களாக ஆனது மட்டுமில்லாமல்,
ஸ்ரீராமர் அவதரித்த அயோத்தியில், ராமருக்கு கோவில் கட்டமுடியாமல், இன்று வரை கலவர பூமியாக உள்ளது.

காங்கிரஸ் ஆட்சியாளர்கள் முதுகு எலும்பு இல்லாமல் செய்த தவறுகளுக்கு இன்று வரை சுதந்திரம் அடைந்தும், ஹிந்துக்களால் ஒரு கோவில் கட்ட கூட முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. 

"ஹிந்து தேசம்" என்று அறிவிக்காத காங்கிரஸ் அரசால்,
பின்னாளில் இஸ்லாமியர்கள் அதிகமாகி போன தேசங்களில் ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்டனர்.
"காஷ்மீர் தேசம்" முழுவதும் இஸ்லாமிய ஆக்கிரமிப்பு ஏற்பட்டு, அருகிலேயே பாகிஸ்தான் தேசமும் இருப்பதால், ஆயிரக்கணக்கான காஷ்மீர் ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
ஆதி சங்கரர் காஷ்மீர் வரை சென்று போது, அவருடன் தர்கத்திற்கு காஷ்மீரை சேர்ந்த வேத பண்டிதர்கள் வந்தனர் என்று பார்க்கிறோம்.


இன்று காஷ்மீரை சேர்ந்த வேத பண்டிதர்கள் உயிருடன் இல்லை.
தப்பி ஓடி வந்த பலர் இந்தியாவுக்குள் தஞ்சம் அடைந்தனர்.
அநுபம்கேர் போன்ற பாலிவுட் நடிகர்கள் உட்பட, இந்த இஸ்லாமிய பயங்கரவாதத்தால் ஓடி வந்தவர்கள் தான்.

சுதந்திரம் அடைந்தும் ஹிந்துக்களை ஹிந்துக்களாக வாழ விடாமல் செய்தவர்கள் காங்கிரஸ் அரசாங்கம்.

காஷ்மீர் ஹிந்துக்கள் கொலை செய்யப்பட்ட போதும், 
காங்கிரஸ் குடும்பத்திலேயே கலப்பு மணங்கள் நிகழ்ந்ததால் ஹிந்துக்கள் அழிவை வேடிக்கை பார்த்தனர். 

தற்போதைய நிலைக்கு காரணம், தான நீதி ஜெயித்த போதும், அதை முழுவதுமாக கடைபிடிக்காமல் விட்டதே காரணம்.

காங்கிரஸ் அரசால்,
இந்திய தேசம் "ஹிந்து தேசம்" என்று அறிவிக்கப்படாததால்,
காஷ்மீர் எல்லையும் இவர்களால் சரியாக நிர்ணயிக்கப்படாததால்,
சிந்து (பாகிஸ்தான்) தேசத்துக்கு பிரிந்து சென்ற பல பாகிஸ்தானியர்களின், இஸ்லாமிய உறவினர்கள் இன்னும் இந்தியாவுக்குள் இருப்பதால், இந்திய தேசத்திடம் தீராத பகை கொண்டுள்ளனர்.
தானம் கொடுத்து பாரத தேசத்தை பிரித்தும்,
இந்தியாவில் உள்ள ஹிந்துக்கள் மீது பாகிஸ்தான் இஸ்லாமியர்கள் வெறுப்பை உமிழ்ந்தனர்.
விளையாட்டில் கூட இவர்கள் வெறுப்பு காணப்பட்டது.

ஆஸ்திரேலியாவுக்கும், இங்கிலாந்துக்கும் நடக்கும் விளையாட்டில் பரபரப்பு அதிகமாக காணப்படும். ஆனால் பகை இருக்காது
ஆனால்,
பாகிஸ்தான், இந்தியா விளையாட்டில் வீரர்களுக்கு மட்டுமல்ல, பார்க்கும் இரு தேசத்தவர்களுக்கும் பகை காணப்பட்டது.
இது விளையாட்டினால் ஏற்பட்ட பரபரப்பு அல்ல, பாகிஸ்தான் தேசத்தில் உள்ள ஹிந்துக்களாக 40 தலைமுறை முன் வாழ்ந்த இன்றைய இஸ்லாமியர்களின் பகை உணர்வே.
இது போன்ற நாடுகளுடன் உறவு வைத்து கொள்வதே தவறான முயற்சி.

தான நீதியை பின்பற்றி, பிரித்து கொடுத்த பின்பும், 
இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களை தூண்டிவிட்டு, ஹிந்துக்களிடம் பகை உணர்வை தூண்டி, இந்தியாவுக்குள்ளும், எல்லையிலும் இன்று வரை அட்டகாசம் செய்து வருகின்றனர் பாகிஸ்தானியர்கள்.

தன் தேசம் இந்தியாவை விட சிறியது என்பதால், இந்தியாவை விட பெரிய அண்டை நாடான சீனாவுடன் வர்த்தகங்கள் செய்து, நட்பு நாடாக்கி கொண்டு, அமெரிக்கா போன்ற நாட்டிலும் தீவிரவாதிகளை அழிக்க உதவி செய்வதாக சொல்லி கோடிக்கணக்கில் பணம் வாங்கி நாட்டை ஓட்டுகிறது பாகிஸ்தான்.

இந்தியாவுக்குள் தாக்குதல்,
இஸ்லாமியர்களை ஹிந்துக்களுக்கு எதிராக திருப்ப தீவிரவாத அமைப்புகள்
என்று பல வேலைகள் செய்து, சீனா போன்ற பலம் வாய்ந்த நாடுகள் துணை நிற்பதால், இந்திய நாட்டை நிலைகுலைய செய்ய 1947ல் இருந்து இன்றுவரை முயற்சி செய்கிறது.

"தான" நீதிக்கு பின்னும் திருந்தாத பாகிஸ்தானியர்களை, அடக்க, இன்றைய அரசாங்கம் இவர்கள் பலமென்று வைத்து இருக்கும் சீனா மற்றும் அமெரிக்க நாடுகளிடம் நட்பு கரம் நீட்டி, பேத நீதியை கையாளுகிறது.

அமெரிக்கா போன்ற கிறிஸ்துவ நாடுகள், இஸ்லாமியர்களால் பெரும் பாதிப்புக்கு உள்ளாயினர். இது இந்தியாவுக்கு பலன் தந்தது.
ஆனாலும் சீனா போன்ற தேசங்கள் இன்னும் முழுவதும் பாகிஸ்தான் போன்ற தேசங்களுடன் ஓரளவு நட்பு கரம் நீடிக்கிக்கொண்டு தான் உள்ளது.


சீனாவை அடக்க, அவர்கள் அண்டை நாடான ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் இன்றைய அரசாங்கம் நட்பு கரம் நீட்ட, சீனாவுக்கு இந்தியாவை எதிர்க்க சிக்கலானது.

பேத நீதி ஓரளவு ஜெயித்தாலும்,
மீண்டும் இந்தியாவில் கலவரங்கள் உருவாக்க நினைத்தால், எல்லையில் கலவரம் செய்தால், முதுகெலும்பு இல்லாத காங்கிரஸ் அரசாங்கம் போல இல்லாமல், தண்ட நீதியை எடுப்பதே சரியான முடிவு.
தண்ட நீதியை எடுத்த பின், பின்வாங்குவது தோல்வியை தரும்.
பாகிஸ்தான் போன்ற நாட்டுடன் கைகோர்க்கும் எந்த நாடாக இருந்தாலும் அவர்களையும் சேர்த்து எதிர்த்து போரிடுவது ஒன்றே,
இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி தரும்.

எப்பொழுதுமே அதர்மம் செய்பவர்கள் கொஞ்சம் அதிகமாக தான் சேர்ந்து கொள்வார்கள்.
தர்மத்தின் பக்கம் கொஞ்சம் தான் சேருவார்கள்.
ஆனால் தர்ம பக்கமே என்றும் ஜெயிக்கும்.
இரு மடங்கு அதிகம் சேனை கொண்ட துரியோதனன் அடியோடு அழிந்தான்.
பல மடங்கு அதிக சேனை கொண்ட ராவணன் கூண்டோடு அழிந்தான்.

சாம, தான, பேத நீதிக்கு பின்னும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் கலவரம் செய்தால்,
தண்ட நீதியை எடுத்து முற்று புள்ளி வைக்க வேண்டியது தான் சரியான முடிவாக இருக்க முடியும்.

பொதுவாக, இரண்டு நல்லவர்கள் சண்டை போட்டால், மூன்றாவது நபராக இருக்கும் நாம், முதலில் இருவருக்கும் இடையே சமாதானம் செய்ய முயற்சிக்க வேண்டும். சண்டை நிகழ விட கூடாது.

ஒரு நல்லவனை இரண்டு தீயவர்கள் சேர்ந்து எதிர்த்தால், நாம்,
அந்த இரு தீயவர்கள் சேர விடாமல், இருவருக்கும் இடையே வெறுப்பை கலகம் செய்து மூட்டி விட வேண்டும்.
எதிரிகள் கூட்டணி சேர விடாமல் அவர்களுக்குள் பகையை உண்டு பண்ண வேண்டும்.

ஹிந்துக்களிடம் யோகா, ஆன்மீகம் மட்டுமா இருந்தது?
அரசியல் தர்மங்கள், நுணுக்கங்கள், ஆயுர்வேதம், என்று கடலாக அனைத்து விஷயங்களும் சொல்லப்பட்டு உள்ளது.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.
ஹிந்துவாக பிறந்தும், மதம் மாறி போனவர்களும் மீண்டும் ஹிந்துக்களாக ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை.

பாரத மக்கள் போலி மதங்களை சில ஆயிரம் வருடங்கள் மதிப்பது போல தோன்றினாலும், கடைசியில் விட்டு விட்டு தாய் மதத்திற்கு திரும்பி விடுகிறார்கள்.

புத்த மதம் 500BCல் ஆரம்பித்து, சுமார் 1500 வருடங்கள் இந்தியாவில் கால் ஊன்றி, நிலை பெற்று விட்டோம் என்று நினைத்த சமயத்தில்,
ஒட்டு மொத்த பாரத மக்களும் பௌத்த மதத்தை தூக்கி எறிந்து விட்டு, ஹிந்துவாக மாறினார்கள்.

பாரத மக்கள் அறிவுள்ளவர்கள். என்றுமே அறிவுள்ளவர்கள்.


பொய் மதங்கள் நிலை பெறுவது போல தோன்றினாலும், தானாகவே பொய் மதங்கள் அழிந்து விடும்.
மக்களிடம் மதிப்பை இழக்கும், செல்வாக்கை இழக்கும். 

பிற மதங்களை "மனிதர்கள்" காக்கின்றனர்.
ஹிந்து தர்மத்தை, வேதத்தில் குறிப்பிடப்பட்ட தேவர்களும், அவர்களுக்கும் மேல் உள்ள ப்ரம்மா, விஷ்ணு, சிவன் போன்ற தெய்வங்களாலும், அவர்களுக்கும் மேல் உள்ள பரப்ரம்மம் என்ற பரவாசுதேவன் என்ற நாராயணனாலும் காக்கப்படுகிறது.

வாழ்க ஹிந்துக்கள்.

Hare Rama, Hare Krishna - Bhajan

Sandhyavandanam - Afternoon Prayer with meaning

Sandhyavandanam - Evening Prayer with meaning




Sandhyavandanam - Morning Prayer with meaning




Wednesday 13 March 2019

காலையில் எழுந்தவுடன் முதலில் காபி. இது சரியா? தெய்வம் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? தெரிந்து கொள்வோம்..

குளிக்காமல், காலை எழுந்தவுடன் எதுவும் (காபி) சாப்பிட கூடாது.




அப்படியும் காபி குடிக்க நேர்ந்தால், 'ப்ராசன மந்திரம்' சொல்லி தீர்த்தம் பருகி விட்டு, 
பிறகு பத்ம புராணத்தில் உள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி விட்டு செய்யலாம்.
ஹிந்துவாக பிறந்த அனைவரும் சொல்ல வேண்டும்.
அர்த்தம் புரிந்து சொன்னால், ஈடுபாடு நமக்கு வரும். அர்த்தத்தை கவனித்து, இந்த ஸ்லோகம் சொல்ல வேண்டும்.
அபவித்ர: பவித்ரோ வா 
ஸர்வ அவஸ்தாம் கதோபி வா |
ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் 
ஸ பாஹ்ய அப்யந்தர: ஸுசி: ||  
(ஸ்ரீ பத்ம புராணம் 9.80.12)
தூய்மையாக இருக்கின்றானோ (பவித்ர)
தூய்மையாக இல்லையோ (அபவித்ர)
அவன் எத்தகைய நிலையில் இருந்தாலும் (ஸர்வாவஸ்தாம்), தாமரைக்கண்ணன்
பகவான் ஸ்ரீ விஶ்ணுவை
நினைத்த மாத்திரத்திலேயே
ஒருவன் உள்ளும் புறமும்
தூய்மையடைகிறான் (ஸுசி).

இன்றைய "காலத்தில்" சந்தியா வந்தனம் செய்து, அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணர்கள் மிக குறைவே. 

அர்க்கியம் கொடுக்கும் ப்ராம்மணனை விட, கொடுக்காதவர்கள் இன்று அதிகம் ஆகி விட்டனர்.

சந்தியா வந்தனமே செய்யாத பிராம்மணர் கூட்டம் ஜாஸ்தியாகி விட்டது. 
இந்த பிராம்மண கூட்டம், காலை எழுந்தவுடன் "முதலில் காபி சாப்பிடலாமா?" என்று நினைக்கிறானே தவிர, 
'ஸ்நானம் செய்ய வேண்டும்' என்று கூட நினைப்பது இல்லை.
" 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' 
என்ற சந்தியா வந்தனத்தில் வரும் மந்திரத்தை சொல்லி 'முதலில் இந்த தீர்த்தம் குடிப்போம்' பிறகு, 
"வேறு எதையாவது குடிப்போமே" 
என்று கூட இந்த ப்ராம்மணர்கள் நினைப்பதில்லை!! 

"காபி குடிப்பதே முதல் காரியம்" என்று ஆகி விட்டார்கள்.
ப்ராம்மணர்கள், ப்ராம்மணர்களாக இல்லையே !!

கடமை தவறிய ப்ராம்மணர்களாக ஆகி விட்டார்களே இவர்கள்.

ஒருத்தனும் சந்தியா வந்தனம் செய்வது இல்லை. 

எனக்கு முன்பே எழுந்து அர்க்கியம் விட்டு, உதய காலத்தில் என்னை தரிசக்க இவர்கள் காத்து இருப்பதில்லையே! 

நான் உதித்தும் தூங்கி கொண்டு இருக்கின்றனரே இந்த ப்ராம்மணர்கள்" 
என்று சூரிய தேவன் ஒரு முறை கோபம் கொண்டார்.

உலகத்தை அழிக்கும் எண்ணத்தில் தன் எல்லையை கொஞ்சம் தாண்டியே வந்து விட்டார். 
பூமி வெப்ப காற்றால் வெந்தது.

ரிஷிகள் சாரங்கபாணி பெருமாளிடம் பிரார்த்திக்க, 
பெருமாள், "திருக்குடந்தையில் சக்கரபாணியாக அவதரித்து, தர்மத்தை மீறி வாழும் மனிதர்களை கண்டு கோபம் கொண்ட சூரிய தேவனை பிறகு சமாதானம் செய்தார்
என்பது நாம் அனைவரும் அறிந்த சரித்திரமே.

ப்ராம்மணர்கள், குறைந்த பட்சம், காபி சாப்பிடும் முன், 'சூர்யஸ்ய மாமன்யுஸ்ச... ஸ்வாஹா' என்று சொல்லி அந்த தீர்த்தையாவது முதலில் குடித்து விட்டு, பிறகு காபியோ மற்ற பானங்களோ குடிக்கலாம். 

ப்ராசன மந்திரம் சொல்லி தீர்த்தம் பருகி விட்டு, பிறகு காபி குடிக்கலாமே!!!




அர்க்கியம் என்றால் என்ன?
கை அலம்ப கொடுக்கப்படும் நீர் "அர்க்கியம்" என்று சொல்வார்கள்.
பாத்யம் என்றால் என்ன?-
கால் அலம்ப கொடுக்கப்படும் நீர் "பாத்யம்" என்று சொல்வார்கள்.

அப உப ஸ்பர்ஸ்ய என்றால் என்ன?
அருகில் (உப) வைக்கப்பட்டுள்ள ஜலத்தை (அப) தொடு (ஸ்பர்ஸ்ய) என்று அர்த்தம். 
இதை சொல்லி, வலது கையினால் ஜலத்தை தொட்டு, கையை துடைத்து கொண்ட பின் தான், வீட்டில் உள்ள ஸ்வாமியை (தெய்வங்களை) தொட வேண்டும்.

ஹிந்துக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சிறு குறிப்புகள் இவை.


sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
Hare Rama, Hare Krishna - Bhajan

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka 







Sunday 10 March 2019

கடவுளை பார்க்க முடியுமா? பார்த்தவர்கள் என்ன செய்தார்கள்? கடவுள் என்ன சொல்கிறார்?

"பகவானை பார்க்க வேண்டும்" என்ற ஆசை நமக்கு உண்மையாக இருக்குமானால்,
வேத சாஸ்திரங்கள் சொன்ன வழியில் சென்று முயற்சி செய்ய வேண்டும்.


வெறும் வாய் வார்த்தையில், விதண்டாவாத பேச்சுக்களால், பகவானை தரிசிக்க முடியாது.

நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு, அதற்கான பலன்களை தந்து விடுகிறார் பகவான்.
பலன்களை தருவதற்கு பகவான் வரவேண்டிய அவசியமில்லை.
பகவான் நமக்கு தரிசனம் தர, சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்.
க்ருத யுகத்தில், "பிரகலாதன்" தன்னுடன் படிக்கும் அசுர குழந்தைகளை பார்த்து சொல்கிறார்,
"புலன்கள் (கண், காது, மூக்கு, தொடுதல், சுவை) வழியாகவே இன்பங்களை அனுபவித்து,
இந்த புலன்களை சந்தோஷப்படுத்துவதற்காகவே தன் வாழ்நாள் முழுவதும் உபயோகப்படுத்துகிறீர்களே !!

இத்தனை முயற்சி கூட நீங்கள் செய்ய தேவையில்லையே பகவானை சந்தோஷப்படுத்துவதற்கு !!

பகவான் சொல்லியுள்ள வழியில், நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்தால் கூட, பகவான் உங்களுக்கும் அருள் பாலித்து விடுவாரே !!

பகவானை ப்ரத்யக்ஷமாக அனைவரும் பார்க்க முடியும்.
பகவானை பார்க்க முடியாது என்பதே இல்லை.

அசுரனாக இருந்தாலும் பகவானை பார்க்கலாம்.
இவர் தான் பகவானை பார்க்க முடியும், இவர் பார்க்க முடியாது என்பதே இல்லை.

யார் வேண்டுமானாலும் பகவானை பார்க்க முடியும்.
ஆனால்,
அந்த பகவானை பார்க்க வேண்டும் என்றால் 'திடமான நம்பிக்கையும், பேரன்பும்' அவனிடத்தில் நமக்கு வேண்டும். அவ்வளவுதான்."
என்றார் பிரகலாதன். க்ருத யுகம் 16 லட்ச வருடம் முன் இருந்த காலம்.
5000 வருடம் முன் துவாபர யுகம் முடியும் சமயம்.
துவாபர யுக முடிவு சமயத்தில், பகவான் நாராயணன் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தார்.
"என்னை எப்படி ஒருவன் பார்க்க முடியும்?"
என்று பகவானே, உத்தவனுக்கு, தன் திருவாயால் சொல்கிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர்,
"ந ஸாதயதி மாம் யோக: |
ந சாங்க்யம் தர்ம உத்தவா ||"
என்று சொல்லும்போது,
"என்னை சாங்க்ய முறையிலோ (துறவு பெற்றதனால் மட்டும்),
அல்லது
இல்லற தர்மத்தை நியாயமாக நடத்திக் கொண்டிருந்தோ,
அல்லது
யாகம், யோகம் போன்ற கர்மாக்களை செய்தோ,
எந்த சாதனை செய்தாலும் அதற்கான பலன் உண்டே தவிர, 
என் தரிசனம் கிடையாது" என்கிறார்.
மேலும்,
"பக்த்யாஹாம் ஏகயா க்ராஹ்யா
ஸ்ரத்தயாத்மா"
என்று சொல்லும்போது,
"என்னை பார்க்கவேண்டுமென்று, என் மீது
உண்மையான பக்தியும் (அன்பும்),
ஸ்ரத்தையும் (திட நம்பிக்கையும்)
ஒருவன் கொண்டிருந்தால், அவர்களுக்கு நான் என் தரிசனத்தை அளிப்பேன்" என்றார்.

இந்த சம்பாஷணை (உரையாடல்) ஸ்ரீமத்பாகவதத்தில் (11.14.20-21) உள்ளது.


இப்படி,
"யார் ஒருவனுக்கு பகவானிடத்தில்
உண்மையான "ப்ரேமையும்" (அன்பு/பக்தி),
உண்மையான "திட நம்பிக்கையும்"
இருக்குமோ, அவர்களுக்கு பகவத் தரிசனம் நிச்சயமாக கிடைக்கும்"
என்று வேத சாஸ்திரமும் சொல்கிறது.

பகவத் தரிசனம் பெற்ற பிரகலாதனும் "ப்ரேமையும்" (அன்பு/பக்தி), திட நம்பிக்கையும்" நமக்கு வேண்டும் என்று சொல்கிறார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் தன்னை தரிசனம் செய்ய, இதுவே தகுதி என்று நிச்சயப்படுத்துகிறார்.

பகவானை தரிசனம் செய்ய அனைவருக்கும் "ஆசை" உள்ளது. 
பகவான் தான் நம்மை அனைவரையும் படைத்தவர் என்றும் புரிகிறது.
ஆனால், பகவான் நாராயணனிடம் நமக்கு "பிரியம்" (அன்பு) எப்படி ஏற்பட செய்வது?
நமக்கு "அவர் மீது நம்பிக்கையை" எப்படி உண்டாக செய்வது?
பொதுவாக,
நமக்கு ஒருவரிடம் பிரியம் ஏற்பட வேண்டுமென்றால், அவரிடம் நமக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியும் போது, "பிரியம்" (அன்பு) ஏற்படுகிறது.

இந்த "சம்பந்தம்" (உறவு) எத்தனை நெருக்கமாக உள்ளதோ, அந்த அளவுக்கு நமக்கு அவர்கள் மீது பிரியம் ஏற்படுகிறது.
ஒரு தாய்க்கு, "தன் பிள்ளை" மேல் அலாதியான பிரியம் ஏற்படுகிறது.
ஆனால், தன் பிள்ளையின் வயதிலேயே உள்ள பக்கத்து வீட்டு பையனிடம் அத்தனை பிரியம் ஏற்படுவதில்லை. ஏன்?

இவன் "என் பிள்ளை" என்ற "சம்பந்தம்" (உறவு) அந்த தாய்க்கு தெரிவதால், தன் பிள்ளையிடம் பேரன்பு கொள்கிறாள் ஒரு தாய்.
அந்த "சம்பந்தம்" (உறவு) நெருக்கமாக இல்லாத, பக்கத்து வீட்டு பையன் "எங்கோ வெளிநாடு போகிறேன்" என்றாலும் கவலை அடைவதில்லை.
அதே சமயம், தன் பிள்ளை, வெளி நாடு சென்று விட்டால், "தன் பிள்ளை என்ன செய்கிறானோ? சாப்பிட்டானோ?" என்று கவலை பட ஆரம்பிக்கிறாள் தாய்.

ஆக,
"பிரியம்" (அன்பு, பிரேமை) என்பது, நமக்கும், பிறருக்கும் உள்ள சம்பந்தத்தை (உறவை) புரிந்து கொள்வதால் ஏற்படுகிறது
என்று அறிகிறோம்.
"நாராயணன்" என்ற நாமத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்டாலேயே, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்து விடும்.


"நர" (மனித) சமூகத்திற்கு யார் இருப்பிடமாக (அயனம்), அபயம் அளிப்பவராக, அடைக்கலம் தருபவராக இருக்கிறாரோ? 
அவரே "நாராயணன்".

அந்த நாராயணன் சங்கம் சக்ரம் ஏந்தி, ஆதிசேஷன் மேல் பாற்கடலில் உள்ளார்.
மகாலட்சுமி அவருடைய பத்னி என்று அடையாளப்படுத்துகிறது.

நமக்கு அடைக்கலம் தருபவர் "நாராயணனே",
நமக்கு 'அபயம்' (பயத்தை போக்குபவர்) தருபவரும் "நாராயணனே",
நாம் பிறவி கடல் தாண்டி, மோக்ஷம் என்ற வைகுண்டம் என்ற இருப்பிடத்தை அடைய காரணமாக இருப்பவரும் "நாராயணனே",
நம்முடனேயே எப்பொழுதும் இருப்பவரும் "நாராயணனே"
என்று நாம் உணரும் போது, நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) இயற்கையாகவே புரிந்து விடுகிறது.

நமக்கும், பகவானுக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, நமக்கு பகவான் மீது "ப்ரேமை என்ற அன்பு என்ற பக்தி" இயற்கையாகவே உண்டாகி விடும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் "பக்தியும், ஸ்ரத்தையும் (திடநம்பிக்கையும்) தன்னிடம் யாருக்கு இருக்குமோ, அவர்களுக்கு தன்னுடைய தரிசனம் கிடைக்கும்" என்கிறார்.

நமக்கும், பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்தாலேயே,  நாளடைவில் நமக்கு ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்படும்.

ஆக பகவானை காண வேண்டும் என்றால், முதலில் நமக்கும் பகவானுக்கும் உள்ள சம்பந்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாராயணனுக்கும் நமக்கும் உள்ள "சம்பந்தம்" (உறவு) புரியாதவரை, கோவிலுக்கே சென்று பெருமாளை பார்த்தாலும் "ப்ரேமபக்தி" வரவே வராது.

நாராயணன் யாரோ!! நாம் யாரோ!! என்று "சம்பந்தம்" (உறவு) புரியாத வரை, நாம் பிறவி எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியது தான்.

"நாராயணனே பரமாத்மா. 
மனிதனாக பிறந்த நாம் அனைவரும், அவரிடம் நமக்கு உள்ள உறவை (சம்பந்தத்தை) புரிந்து கொண்டு, பக்தி செய்ய வேண்டும்" 
என்று காட்டுவதற்காக தானே, ஆழ்வார்களும், ஆசாரியர்களும், "நாராயணன்" என்று சொல்லாமல் "நம் பெருமாள்" என்று உறவை காட்டுகிறார்கள்.
சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
நமக்கும், நாராயணனுக்கும் உள்ள சம்பந்தத்தை காட்டுவதற்காக தானே, நாராயணனை "நம் பெருமாள்" என்றும், "எம் பெருமான்" என்றும், சொல்கிறோம்.
சற்று யோசித்து பார்க்க வேண்டும்.
ஆழ்வார்கள் "எம் பெருமானே" என்று பல இடங்களில் சொல்லி அழைப்பதை பார்க்கும் போது, தனக்கும் நாராயணனுக்கும் உள்ள உறவை (சம்பந்தம்) காட்டி பக்தி செய்தார்கள் என்று பார்க்கிறோம்.





நாராயணனை "நம் பெருமாள்" என்று சொல்லிக்கொள்ள ஆசை வராதவரை நமக்கு பக்தி ஏற்படாது.

நமக்கும் நாராயணனுக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிந்தாலேயே, "நம் பெருமாள்" என்று பகவானிடம் நமக்கு உறவு கொள்ள தோன்றும்.
இதுவே பக்திக்கு வித்திடும்.
ஒரு தாய்க்கு "தன் மகன்" என்ற உறவு கொள்ள தோன்றுவதால் தானே அவளுக்கு அளவு கடந்த ஆசை வருகிறது. பிறருடைய மகன் என்றால் அத்தனை ஆசை வராதே..

பகவானை பார்க்க, முதல் படியாக நமக்கு பகவானிடம் ஒரு உறவு வேண்டும்.
உறவை புரிந்து கொண்டால் மட்டும் போதாது,
பகவானிடத்தில் "எம்பெருமான்" என்று ஆசையோடு சொல்லிக்கொள்ளும் கலையாத பேரன்பு (இஷ்ட நிஷ்டை) நமக்கு வேண்டும்.

"அவர் தான் வைகுண்டம் நமக்கு அளிப்பார். அவர் தான் பரமாத்மா" என்று சம்பந்தம் மட்டும் புரிந்து, ஆர்வம் (அவர் மீது ஆசை) இல்லாது போனால், நமக்கு பக்தியே வராது.

"சம்பந்தம்" (உறவு) புரிந்தும், ஆசை இல்லாமல் இருந்தால், 'அவர் யாரோ, நாம் யாரோ' என்று தான் இருப்போம். பக்தி ஏற்படாது.
இந்த ஆசையை நமக்கு ஊட்டுவதற்காகவே ஆழ்வார்கள் நம்மை கூப்பிட்டு "இவர் நம் பெருமாள்" என்று ஆர்வத்தை ஊட்டி, பெருமாளிடம் நாமும் பக்தி செய்ய உற்சாகப்படுத்துகின்றனர்.

நாலாயிரம் திவ்ய பிரபந்தத்தை பாடி, "நம் பெருமானின் மகத்துவத்தை நமக்கு காட்டி" ப்ரேமையை வளர்த்து, பக்தியை வளர்க்கின்றனர்.

ஒரு தாய்க்கு தன் பிள்ளையிடம் தனக்கு உள்ள "சம்பந்தம்" (உறவு) புரிகிறது.
"என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால், தாய்க்கு தன்  பிள்ளையிடம் பேரன்பு ஏற்படுகிறது.
"என் பிள்ளை" என்று சொல்லிக்கொள்வதால் ஏற்படும் இந்த பேரன்பு, அந்த தாய்க்கு எப்பொழுதும் அவன் பிள்ளையின் நினைவையே தருகிறது.
தன் கூடவே இருந்து வளர்ந்த பிள்ளை, திடீரென்று ஒரு சமயம் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டான்.
பிள்ளையை பிரிந்த சோகத்தில், தாய் அழுகிறாள். "எப்பொழுது மீண்டும் என் பிள்ளையை காண்பேனோ" என்று காண துடிக்கிறாள்.
அவனிடம் பேச முயற்சிக்கிறாள்.
சென்று பார்க்கலாமா? என்று யோசிக்கிறாள்.


தன் தாய் தனக்காக அழுவதை பார்க்க முடியாத பிள்ளை, "ஒரு நாள் வருவதாக" செய்தி அனுப்புகிறான்.

"தன் பிள்ளையை காண போகிறோம். இத்தனை மணிக்கு கிளம்பி இருப்பான். இத்தனை மணிக்கு வந்து விடுவான்"
என்ற "ஆர்வம்" அந்த தாயை தொற்றிக்கொள்கிறது.
"இத்தனை தேதிக்கு வருகிறேன்" என்று சொன்ன பிள்ளை, ஏதோ வேலை காரணத்தால் "வர முடியவில்லை" என்று சொல்ல, காண முடியாத துக்கத்தில்,
"ஓ"வென்று அழ ஆரம்பிக்கிறாள்.
இதுவே விரகம் என்று சொல்லப்படுகிறது.

சாதாரண பிள்ளையாக இருப்பதால், தன் தாய்க்கு  ஏற்பட்ட இந்த சோகத்தை உடனே போக்க முடியாது போகிறது.
எல்லாம் வல்ல பகவான்,
எந்த பக்தன் தன் "சம்பந்தத்தை" (உறவை) உணர்ந்து,
"எம் பெருமான்" என்று ஆசையோடு உறவு (ப்ரேமபக்தி) பாராட்டிக்கொண்டு,
எம் பெருமான் மகத்துவத்தை, கருணையை தினமும் ஸ்மரித்து, கோவிலில் அர்ச்ச அவதாரத்தை தரிசித்து கொண்டே,
தன் பக்தியை (அன்பை) மேலும் மேலும் வளர்த்துக்கொண்டு இருக்கிறானோ,
அப்படிப்பட்ட பக்தனுடன் உறவாட ஆரம்பிக்கிறார்.

ப்ரேமை என்ற அன்பு (பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனுக்கு, ஸ்ரத்தை (திடநம்பிக்கை) ஏற்பட, வருவது போல வந்து, பின் மறைந்து, காண வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டி, விரக அனுபவத்தை கொடுத்து, கடைசியில் தன் தரிசனத்தை தந்து விடுகிறார்.

ப்ரேமை (அன்பு/பக்தி) தன்னிடம் ஏற்பட்ட தன் பக்தனிடம், ஆரம்ப நிலையில், நேரிடையாக தரிசனம் தந்து விடாமல், யார் மூலமாகவோ உறவு கொள்ள ஆரம்பிக்கிறார்.

ஒரு பக்தன், தன் கஷ்டத்தை சொல்ல கோவிலுக்கு வந்து எம்பெருமானை சொல்லிக்கொள்கிறான். தெய்வம் பார்த்து தான் தன் கஷ்டத்தை தீர்க்க வேண்டும் என்று நினைக்கிறான்.
அப்பொழுது, கோவில் அர்ச்சகர் யாரை பார்த்தோ "கவலையே படாதீர்கள்.  பெருமாள் பார்த்துக்கொள்வார்" என்று சொல்லி பிரசாதம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.
இதை கேட்டவுடன் பக்தனுக்கு "இந்த சமாதானம் எனக்கு சொன்னது போல இருக்கிறதே" என்று தோன்ற, பெருமாள் தன் கஷ்டம் போக வழி செய்வார் என்ற நம்பிக்கையுடன் செல்கிறான்.

இப்படி முதல் படியில் பகவான் நாராயணன், தன் பக்தனிடம் பேச ஆரம்பிக்கிறார்.

அவன் நினைத்த கஷ்டம் வராமல் போக, அவனுடைய ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது.

எப்பொழுதும் எம்பெருமான் நினைவாகவே இருக்க, அவனிடம் பேச ஆரம்பிக்கிறார்.
கோவிலில் அர்ச்ச அவதாரமாக எம்பெருமான் பேசாதது போல இருந்தாலும் பக்தனிடம் பேசுகிறார்.

பகவான் பக்தனின் தகுதிக்கு தக்கபடி பேசுகிறார்.
பக்தியை உயர்த்த உயர்த்த, பகவான் நேரிடையாகவே பேச ஆரம்பிக்கிறார்.

"இந்த காரியம் எப்படி நடக்குமோ!!" என்று நினைத்துக்கொண்டே படுத்து உறங்கும் போது, கனவில் "திருப்பதி செல்" என்று யாரோ ஒரு பெரியவர் சொல்வது போல தோன்ற, "இது ஏதோ தெய்வ வாக்கு" என்று நினைத்து திருப்பதி செல்கிறான்.
அங்கு போய் தன் பிரார்த்தனையை செய்ய, அவன் நினைத்த காரியம் நடக்க ஆரம்பிக்கிறது.

இதனால் இன்னும் இவன் ஸ்ரத்தை (நம்பிக்கை) எம்பெருமானிடம் அதிகமாகிறது, "எம்பெருமானே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான்.
"கோவிலே கதி" என்று வாழ ஆரம்பிக்கிறான்.
உலக விஷயங்களில் ஆசையை குறைத்து கொண்டு, ஸத் சங்கங்களில் நேரத்தை செலவிட ஆரம்பிக்கிறான்.

பக்தியை உயர்த்தி கொண்டே போக, தன் பக்தனின் கனவிலேயே யாரோ போல வராமல், சங்கு சக்ர கதையுடன், திவ்ய தரிசனமே கொடுத்து பேச ஆரம்பிக்கிறார்.
கனவில் தான் கண்ட காட்சியை நினைத்து "நாம் இப்படி ஒரு காட்சி கண்டோமே" என்று ஆச்சர்யப்படுகிறான் பக்தன்.

ஆண்டாளுக்கே "தானே கல்யாணம் செய்து கொள்வதாக" முதலில் கனவில் தானே வந்து சொன்னார் ஸ்ரீ ரங்கநாதர்.
அதனால் தானே, "கனா கண்டேன், தோழி நான்" என்று ஆண்டாளே சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.

தெய்வ கனவு எதுவுமே வீணான கனவே இல்லை. தெய்வ கனவு இயற்கைக்கு மாறானது.
அருவெறுக்கத்தக்க கனவுகள் தான் அனைவருக்கும் எப்பொழுதும் வரும்.

தெய்வ கனவுகள் மிகவும் அபூர்வமாக வரும்.
தெய்வ கனவுகள் அடிக்கடி வருவதில்லை.
அடிக்கடி கன்னாபின்னா கனவுகள் வருகிறது இயற்கை.

தெய்வ கனவுகள் நமக்கு வந்தால், அது "தெய்வ அருள்" என்று புரிந்து கொள்ள வேண்டும்.

பகவான் நமக்கு ஏதாவது சொல்ல நினைத்தால் பக்தியின் நிலை பொறுத்து, கனவில் பேசுகிறார். திவ்ய காட்சி கொடுக்கிறார்.

பக்குவம் இல்லாத பக்தனிடம், நேர் எதிரில் வந்து தரிசனம் தந்து விட்டால், பக்தன் தாங்க மாட்டான் என்பதால், படிப்படியாக பக்தனிடம் நெருங்குகிறார் பகவான்.
பக்தியில் உன்னத நிலையில் இருந்த ராமகிருஷ்ண பரமஹம்சர், கிருஷ்ண சைதன்யர் போன்றவர்கள் கூட, பகவத் தரிசனம் பெற்ற பின் உன்மத்தர்கள் ஆகிவிட்டனர் என்று பார்க்கிறோம்.

பகவத் தரிசனம் பெற்றும், உலகத்தில் இருக்கும் காலம் வரை வாழ பகவத் தரிசனம் பெற்றதை ஜீரணிக்கும் சக்தி வேண்டுமே..

பக்தி குறைவாக உள்ள நமக்கு, கனவில் பேச ஆரம்பிக்கிறார்.

அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், நம் வாழ்விலேயே யாரோ ஒருவன் போல வந்து பழகி விட்டு, மறைந்து லீலை செய்ய ஆரம்பிப்பார்.

பக்தர்களின் கதைகளில் பெரும்பாலும் நாம் இதை கவனிக்கலாம்.
பாண்டுரங்கனே, சக்குபாய், ஜனாபாய், நாம தேவர் போன்ற பக்தர்களிடம், மனிதன் போல விளையாடினான் என்று பார்க்கிறோம்.

அதைவிட பக்தியை நாம் உயர்த்தினோம் என்றால், அர்ச்ச அவதாரமாக உள்ள எம்பெருமான் பேச ஆரம்பித்து விடுவார்.

திருமழிசை ஆழ்வாருக்காக, அரச்சா திருமேனியுடன் உள்ள சொன்ன வண்ணம்செய்த பெருமாள் எழுந்து கொண்டு விட்டார்.
ராமானுஜரிடம் அர்ச்ச அவதாரமாக இருக்கும் ஸ்ரீ ரங்க பெருமாளும், மேல்கோட்டையில் உள்ள செல்ல பிள்ளை பெருமானும் பேசினார்கள் என்று பார்க்கிறோம்.
துளசி தாசர் சொன்னார் என்பதற்காக, காசி விஸ்வநாதர் ஆலயத்தில் கல்லாக உள்ள நந்திகேஸ்வரர், அவர் கொடுத்த உணவை, ஊர் பார்க்க உண்டு விட்டார் என்று அவர் சரித்திரத்தில் பார்க்கிறோம்.

இது வெளி ஜனங்களுக்கு ஆச்சர்யமாக தோன்றினாலும், பக்தனுக்கு மேலும் பக்தியை வளர்த்து கொள்ள உற்சாகம் அளிக்கிறது.

கோவிலில் உள்ள பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
கோவிலில் அர்ச்சனையை சமஸ்கரிதத்தில் பண்ணலாமா?
தமிழில் பண்ணலாமா? என்று சண்டை போட்டுக்கொண்டிருந்தால், பகவான் நம்மிடம் பேசவே மாட்டார்.

பெருமாளுக்கு நம்மிடம் பேச வேண்டும் என்ற ஆசையும் உண்டு. ஆர்வமும் உண்டு.
ஆனால் நம்மிடம் அவர் எதிர்பார்ப்பது சமஸ்கரித பாஷையோ, தமிழ் பாஷையோ இல்லை. அவர் நம்மிடம் எதிர்பார்ப்பது ப்ரேம பாஷை என்ற அன்பு பாஷை.
தனக்கும் எம்பெருமானுக்கும் சம்பந்தம்(உறவு) புரிந்து அன்பு ஏற்படும் போது,
இந்த அன்பே, பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் போது,
அன்பும் ஆர்வமும் சேர்ந்த தன் பக்தனுக்கு திவ்ய தரிசனம் தந்து விடுகிறார் எம்பெருமான் நாராயணன்.

திருக்கோவிலூரில் "பூதத்தாழ்வார், பொய்கை ஆழ்வார், பேயாழ்வார்" மூவரும்,
ஒரே சமயத்தில் உலகளந்த பெருமாளை சேவிக்க வந்த போது,
பொய்கை ஆழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஞான தீபத்தை ஏற்ற, 
பேயாழ்வார் "ஞான தீபத்தின் பலனாக, எம்பெருமானை கண்டேன்" என்று ஆரம்பிக்கிறார்.

"அன்பு" என்ற விளக்கில்,
"ஆர்வம்" என்ற நெய் ஊற்றி,
"உருக்கம்" (இன்புருகு சிந்தை) என்ற திரி இட்டு,
ஞான தீபம் ஏற்ற, 
இனி இன்னொரு விளக்கில்  தீபம் ஏற்ற தேவையில்லாமல் போக, 
அந்த ஞான தீபத்தில், எம்பெருமானை கண்டேன் 
என்று பேயாழ்வார் ஆரம்பிக்கிறார்.
எம்பெருமானிடத்தில் நமக்கு
அன்பும் (ப்ரேமை/பக்தி),
அவரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வமும்,
இன்னும் காணமுடியவில்லையே என்ற "உருக்கமும்" இருக்குமானால், பகவானே மெய் ஞானத்தை கொடுத்து,
தான் இருப்பதை காட்டிவிடுகிறார்.

வையம் தகளியா
வார்கடலே நெய்யாக,
வெய்ய கதிரோன் விளக்காக, - செய்ய சுடராழி யானடிக்கே சூட்டினேஞ்சொன் மாலை,
இடராழி நீங்குகவே என்று.
- பொய்கை ஆழ்வார்

அன்பே தகளியாய்
ஆர்வமே நெய்யாக,
இன்புருகு சிந்தை யிடுதிரியா, - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ்புரிந்த நான்.
- பூதத்தாழ்வார்

திருக்கண்டேன்
பொன்மேனி கண்டேன்,
திகழும் அருக்கன் அணிநிறமும் கண்டேன்,
செருக்கிளரும் பொன்னாழி கண்டேன்
புரி சங்கம் கைக்கண்டேன்,
என்னாழி வண்ணன்பால் இன்று.
- பேயாழ்வார்

sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 



Hare Rama Hare Krishna  - Bhajan

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 

sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka