Followers

Search Here...

Saturday 8 June 2019

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா? தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? ஒரு அலசல்...

இறைவனுக்கு சமஸ்கரித மொழியில் பூஜைகள் செய்தால் தான் பலன் கிடைக்குமா?
தன் தாய் மொழியாக இருக்கும் மொழியில் பூஜைகள் செய்தால் பலன் கிடைக்காதா? (ஹிந்தி, தமிழ், தெலுங்கு...!!)

இந்த கேள்வி,
உண்மையான இறைபக்தி உள்ளவனுக்கு வருகிறது.

இதே கேள்வி,
இறைபக்தியே இல்லாத நாதீகனுக்கும், 
வேறு மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தையும், தெய்வத்தையும் எப்படி சீர்குலைக்கலாம்? என்று அலையும் கூட்டத்துக்கும் உள்ளது.

"தமிழை வளர்ப்பது தான் நோக்கம்" என்றால்,
தமிழில் அர்ச்சனை செய்ய ஒரு தமிழன் ஆசைப்பட்டால், தமிழில் அர்ச்சனை சொல்லும் முன்,
'கேட்பவனும் அந்த தெய்வத்துக்கு முன் ஒரு பாசுரமாவது, திவ்ய பிரபந்தமாவது சொல்ல வேண்டும்'
என்று 'சட்டம்' கொண்டு வந்தால் தான், 'தமிழும் வளரும்', 'பக்தியும் வளரும்'.
உண்மையான பக்தன்,
'இறைவன் முன் நாயன்மார்கள் நமக்காக கொடுத்த பதிகத்தில் ஒரு ஸ்லோகத்தையாவது சொல்ல தனக்கு பாக்கியம் கிடைத்ததே'
என்று திருப்தி கொள்கிறான். திருப்தி கொள்வான்.

இப்படிப்பட்ட பக்தன் வந்தால், அர்ச்சகர் தமிழில் ஆனந்தமாக இறைவனுக்கு அர்ச்சனை செய்வார்.


பதிகங்களை பாடி, நாயன்மார்களை நினைவுபடுத்திய நம்மை கண்டு 'ஈசனும்' மகிழ்கிறார்.
இறை அருளும் கிட்டும். 
நாயன்மார்களின் ஆசியும் கிட்டும். 
தமிழும் வாழும்.

வெறும் சம்ஸ்க்ரித மொழியினால் ஏற்பட்ட பொறாமை தான், இது போன்ற கேள்வியை கேட்க வைக்கிறது என்றால், 
இறை பக்தியும் வளராது...தமிழும் வளராது..

கடந்த 60 ஆண்டுகளில்,
'தமிழை காக்கிறேன்' என்று நாத்தீக கூட்டமும்,
பிற மதத்தில் இருந்து கொண்டு 'தமிழை வளர்க்கிறேன்' என்று போர்வை போட்டு கொண்டு ஏமாற்றி வரும் கூட்டமும்,
பாசுரங்களை, பதிகங்கள் சொன்ன ஓதுவார்களை, கோவிலில் இருந்து அகற்றினர்.
கம்ப ராமாயணத்தை பற்றி பேசினால், 
தமிழோடு, 'ராம பக்தியும்' வளருமே என்று பேசாமல் இருந்தனர்.

பதிகங்களை சொல்லி தமிழ் வளர்த்தால், 
தமிழோடு 'சிவ பக்தி வளருமே' என்று பதிகங்கள் சொல்லும் ஓதுவார்களை கோவிலில் இருந்து விரட்டினர்.
கோவிலையே அரசாங்க கைக்குள் போட்டு கொண்டு, 
நாயன்மார், ஆழ்வார் பாடிய பாடல்களால் நிரம்பி இருந்த ஆயிரக்கணக்கான கோவில்களில் தமிழை ஒழித்தனர்.
"கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம்" போன்ற தமிழ் பாடல்களை வளர்த்தால், 
தமிழோடு 'முருக பக்தி' வந்து விடுமே என்று அதையும் அழிக்க முயன்றனர். 


அது மட்டுமா!!
முருகனையே "பாட்டன் என்றும்", "ஏதோ மனிதன் போலவும்" மாற்றி,
இவர் ஒரு தமிழர் என்ற அளவில் ஆக்க பெரும் "ஏமாற்று புரட்சி" மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை சிறுமை படுத்த முயற்சி நடக்கிறது.
தமிழோடு சிவபக்தி வளருமே!!.. அதனால் பாசுரம் வேண்டாம்.

தமிழோடு பெருமாள் பக்தி வளருமே!!..அதனால் பிரபந்தங்கள் வேண்டாம்.
தமிழோடு சக்தி வழிபாடு வளருமே!!.. அபிராமி அந்தாதி வேண்டாம்.

தமிழோடு முருக பக்தி வளருமே!!..  கந்த கவசம் வேண்டாம்.
தமிழோடு ராம பக்தி வளருமே!!... கம்பன் எழுதிய ராமாயணம் வேண்டாம்.

"தமிழை வளர்த்த இவை எதுவுமே நமக்கு வேண்டாம்.." 
என்று திட்டமிட்டு இந்த நாத்தீக கூட்டமும், பிற மதத்தில் இருந்து கொண்டு, ஹிந்து தர்மத்தை, தெய்வங்களை எப்படி கேலி செய்யலாம்!!, ஏமாற்றி நம் பொய் மதத்துக்கு மாற்றலாம் என்று 60 ஆண்டுகாலமாக தமிழகத்தில் குறிப்பாக முயற்சி நடக்கிறது.


இன்று வரை ஹிந்துக்களை ஏமாற்ற முடியவில்லை.
போலிகள், போய் சேர்ந்து விட்டனர்.
சமயபுர மாரியம்மனுக்கும், மதுரை அழகருக்கும் கூட்டம் குறையவில்லை.

போலிகளை ஹிந்துக்கள் எட்டி உதைக்க வேண்டும். இவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
நாதீகனுக்கும், பிற மதத்தில் உள்ளவனுக்கும் இங்கு என்ன வேலை? என்று கடுமையாக எதிர்க்க வேண்டும்.
தெய்வத்திடமே பக்தி இல்லாத போலிகள், "தமிழை மொழியை காக்கிறேன்" என்று சொல்லி
"பதிகங்கள், திவ்ய பிரபந்தங்கள், கந்த சஷ்டி கவசம்,  அபிராமி அந்தாதி போன்ற தமிழை கற்று கொள்ள வேண்டும்" என்று சொல்லாத நாத்தீக போலிகளை, 
பிற மதத்தில் இருந்து கொண்டு, கேலி பேச காத்து இருக்கும்  திருட்டு போலிகள் துரத்தப்பட வேண்டும்.

ஆழ்வார்கள், நாயன்மார்கள் பாடிய "தமிழ்" பாடல்களை "தெய்வங்கள்" ஏற்று கொள்கிறார்கள்..

ஸ்ரீ ரங்கத்தில் திருபள்ளி எழுச்சியே "தமிழில்" தான் பாடப்படுகிறது.
மார்கழி மாதம் முழுவதும் "தமிழ் திருப்பாவை" தான் எங்கும் ஒலிக்கிறது.
அபிஷேகம் போன்ற வைதீக ஆராதனைகள் நடக்கும் போது புருஷ சூக்தம், ருத்ரம் போன்ற வேத சப்தங்கள் சொல்லப்படுகிறது.


சமஸ்கரித மொழியில் "ஒரே ஒரு சிறு ஸ்லோகம்" சொல்லி,
"சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே"
சிறு பூஜை செய்தால் கூட,
நம்மை பார்த்து மிகவும் ஆனந்தப்படுகிறார்.
இதற்கு காரணம் உண்டு.

"ஓம்" என்ற பிரணவ ஒலியில் இருந்து தான் "வேதம் வெளிப்பட்டது".
வேதத்தை கொண்டு ப்ரம்ம தேவன் பஞ்ச பூதங்களை படைத்தார் (ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், மண் (உலகங்கள்))

ப்ரம்ம தேவனையும் படைத்தவர் "பரவாசுதேவன் நாராயணன்".

ப்ரம்ம தேவன் தன் தியானத்தால் "ஓம்" என்ற பிரணவ மந்திரத்தை வெளிப்படுத்தினார்.
('ப்ரணவஸ்ய ரிஷி ப்ரம்மா' என்று சொல்லி, பிரணவத்தை வெளிப்படுத்திய பிரம்மாவுக்கு தலை மேல் கை கூப்பி வணங்குவதாக பாவித்து, "தலையில் தொட்டு கொள்வது" சந்தியா வந்தனத்தில் உள்ளது)

உலகம் 'ஒலி'யால் சூழப்பட்டு உள்ளது.
சப்தத்திலேயே சமஸ்கரிதம் உள்ளது.
மற்ற மொழிகள், ரிஷிகளால் இலக்கணத்தோடு உருவாக்கப்பட்டது. 
அகத்திய முனியால் "தமிழ்" கொடுக்கப்பட்டது.
சில பாரத தேச மொழிகள், பிற நாடுகளில் உள்ள மொழிகள், மனிதர்களாலும் உருவாக்கப்பட்டது.

'ஓம்' என்ற மூல பிரணவத்தை (சம்ஸ்க்ரிதம்),
ஒரு பாத்திரத்தை காதில் மூடி வைத்து கேட்டால், நம்மாலும் 'அஉம்' என்ற பிரணவ சப்தத்தை உணர முடியும்..

தன் தியான சக்தியால், பிரணவ மந்திரத்தை ஸித்தி ஆக்கிய ரிஷிகள், பிரணவத்தில் மறைந்து இருக்கும் தேவ பாஷையில், இருந்த வேத மந்திரங்களை ரிஷிகள் வெளிப்படுத்தினர்.
வேத மந்திரங்களை மட்டுமா கொடுத்தார்கள் ரிஷிகள்?

தேவ பாஷையில் இருந்த
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
என்று அனைத்தையும் உலக மக்களுக்கு, படித்து தெரிந்து கொள்ள கொடுத்து விட்டனர் நம் ரிஷிகள்.




தேவர்களும், ப்ரம்ம தேவனும் பயன்படுத்தும் மொழி சமஸ்கரிதம் என்பதையும் ரிஷிகள் அறிந்தனர்.

ஆதலால் பொதுவாக சம்ஸ்க்ரித மொழியை 'சப்த பிரம்மம்' (ஒலியிலேயே ஒளிந்து இருப்பதால்) என்றும் 'தேவ பாஷை' (மேல் உலக தேவர்கள் பேசும் பாஷையாகவும் இருப்பதால்) என்று சொல்கிறோம்.

நமக்கு மேல் உள்ள தேவர்கள், ப்ரம்மா, ப்ரம்மாவையும் படைத்த பரவாசுதேவனால்,
மனிதன் உருவாக்கிய மொழி மட்டுமல்ல,
அவன் ஊமையாக இருந்து மனதில் உருவாக்கும் மௌன பாஷையை கூட அறிந்து கொள்வார்கள்..
நாம் எந்த மொழியில் பேசினாலும், தெய்வங்களுக்கு புரியும். அதில் சந்தேகமில்லை.

கடவுள் அணுகிரஹம் செய்ய, மொழி தடை இல்லை..

ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது நம்முடைய "பக்தி எப்படிப்பட்டது?" என்பது தான்.

ஒரு தந்தை (தமிழ் தந்தை என்று வைத்து கொள்வோம்), தன் மகனுக்கு தமிழ் கற்று கொடுத்தான்.
வளர வளர, அவன் பல சமுதாய மக்களுடன் சகஜமாக பழகி கொள்ள ஏதுவாக இருக்க, "மலையாளம், கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், சீன" மொழி என்று பல மொழிகளும் கற்று கொள்ள, சூழ்நிலை ஏற்படுத்தி கொடுத்தான். தானும் அறிந்து இருந்தான்.
அந்த குழந்தை அனைத்து மொழியும் தெரிந்து கொண்டு, 
உலகில் எங்கு சென்றாலும் தன் எண்ணங்களை பறைசாற்றி,
தன் தாய் மொழியான தமிழில் உள்ள திவ்ய பிரபந்தங்கள், பாசுரங்கள், கம்ப ராமாயணத்தில் உள்ள கவித்துவம் என்று அனைத்தையும் உலகம் அறிய செய்தான்.
மற்ற மொழிகள் பேசும் மக்களுக்கு கூட,
இவன் மொழியான தமிழை கற்று கொள்ள ஆர்வம் உண்டானது.

மற்ற மொழிகள் கற்றதால், 'தன் தாய் மொழி தமிழை மறந்து விடுவான்' என்று நினைத்தால், 
இவன் 'தமிழ் மொழியில் எழுதப்பட்ட கம்ப ராமாயணத்தை, பாசுரங்களை உலக அரங்கில் பரப்பி பிரசித்தி ஆக்கினான்'.

ஒரு நாள், இந்த மகன், தன் தந்தையை பார்க்க வந்தான்.

இந்த மகன், தெலுங்கில் பேசினாலும், ஹிந்தியில் பேசினாலும், பிரெஞ்சில் பேசினாலும் புரிந்து கொள்வார் இவன் தந்தை.
மகிழ்ச்சியும் அடைவார்.
"இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்" என்றும் ஆசைப்படுகிறார்.

இந்த மகனோ, மிகவும் உத்தமான பிள்ளை.
தன் பெருமைகளை விரும்பாதவன். நன்றி உடையவன்.

மகன், தன் தந்தையின் தாய் மொழியான தமிழில் பேச ஆரம்பிக்க, "தன்னால் முதலில் கொடுக்கப்பட்ட மொழியான தமிழில் என்னுடன் பேசுகிறானே!!.. 
இது என்னுடைய தாய் மொழி என்று அறிந்து, அந்த மொழியில் பேச ஆசைப்படுகிறானே என் மகன்" 
என்று பேரானந்தம் அடைகிறார்.

'இவன் எது கேட்டாலும் கொடுக்க வேண்டும்' என்று ஆசைப்படுவதோடு நிற்காமல்,
"இப்படி ஒரு உத்தம பிள்ளையை பெற்றோமே" என்று "இவன் என் மகன்.. என் மகன்"
என்று தன் மகனை நினைத்து தானும் பெருமிதம் கொள்கிறார் தந்தை.

பல மொழிகள் தெரிந்தாலும், பல தேசங்களில் தன் புகழ் பேசப்பட்டாலும், தன் தாய் நாட்டை, தன் தாய் மொழியை மறக்காத உத்தம பிள்ளைகள் பாரத மண்ணில் உண்டு.
அதே போல,
சம்ஸ்க்ரிதம் என்ற சப்த பிரம்மம், பரவாசுதேவனால் ஜீவாத்மாக்களுக்கு கொடுக்கப்பட்ட மொழி.


947AD வரை,
பாரத நாட்டில் அனைவரும் ஆங்கிலம் போல, பொது மொழியாக மற்ற மொழி தேசத்துடன் பேசிக்கொண்டு இருந்த மொழி 'சம்ஸ்க்ரிதம்'.
'ராஜ ராஜ சோழன், ஆதி சங்கரர், ஸ்ரீ ராமானுஜர்', காஷ்மீர் வரை சென்ற பொழுது, பொது மொழியான 'சம்ஸ்க்ரித மொழியில்' தான் வர்த்தகங்கள், உரையாடல் நடந்தது.
அந்த அந்த தேசத்தில், 
ரிஷிகள் உருவாக்கிய 'தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்' போன்றவையும் செழித்து வளர்ந்தது. 
'சம்ஸ்க்ரிதம்' என்ற சப்த பிரம்மம்,
பொது பாஷையாகவும்,
ஆயுர்வேதம் (medicine), 
ஸ்தாபத்யம் (engineering, architect marvel), 
காந்தர்வ வேதம் (music), 
தனுர் வேதம்(weapon), 
64 கலைகள், 
யோகம் 
போன்றவை கற்று கொள்ளவும்,
தெய்வங்களை உபாசிக்கவும் பிரத்யேகமாக பயன்படுத்தப்பட்டது பாரத தேசம் முழுவதும்.

நம் தாய் மொழியில் பேசினாலும், ஊமை பாஷை பேசினாலும் இறைவன் புரிந்து கொள்வார்.
ஆனால்,
சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் 'ஒரு ஸ்லோகம்' சொல்லி நமஸ்காரம் செய்தாலும்,
"என் பிள்ளை கஷ்டப்பட்டு சப்த பிரம்மமாகிய சமஸ்கரிதத்தில் ஒரு ஸ்லோகத்தை மனப்பாடம் செய்து என்னிடம் நிற்கிறானே!!.
எத்தனை பிரியம் என்னிடம் இருந்தால், எனக்காக கஷ்டப்பட்டு இந்த ஒரு சமஸ்கரித ஸ்லோகத்தை கற்று இருப்பான். 
இவன் காட்டும் பிரியத்துக்கு நான் செய்யும் கருணை போதாது" 
என்று பூரிப்பு கொள்கிறார்.



உண்மையான இறை பக்தி உள்ளவன்,
'இறைவனை நெருங்க எப்படியெல்லாம் முயற்சி செய்து பக்தி செய்யலாம்?!! 
என்று நினைப்பான். 

'தனக்காக சிரமப்பட்டு ஸ்லோகங்கள் சமஸ்க்ரிதத்தில் இருந்தாலும் படித்து சொல்கிறானே' என்று, பக்தனின் பக்தி சிரத்தையை கண்டு, இறைவன் கருணையை பொழிகிறார்.

தான் இருப்பதை மறைமுகமாகவும், 
பக்தி வளர வளர 'யாரோ வந்து உதவியது போலவும்', 
மேலும் பக்தி வளர வளர 'கனவில் திவ்ய காட்சிகள் கிடைக்க செய்தும்', 
மேலும் பக்தி வளர வளர 'தன் திவ்ய ரூபத்தை பக்தன் விரும்பியபடி ராமராகவோ, கிருஷ்ணராகவோ, நாராயணனாகவோ, சிவனாகவோ பரவாசுதேவன் காட்சி கொடுத்து 
மோக்ஷத்திற்கு வழி காட்டுகிறார்.

இறை நம்பிக்கை உள்ள பக்தன்,
"தெய்வத்துக்கு தமிழ் தெரியாதா?" என்று கேட்டு நேரத்தை வீணடிப்பதை விரும்புவதில்லை.
மனித ஆயுள் 100 வயது போல தோன்றினாலும், இது ஒரு அற்ப காலம் தான். காலம் பொன் போன்றது.
மாறாக,  
"தமிழில் கொட்டிக்கிடக்கும் பதிகங்கள், 4000 பிரபந்தங்களை, கந்த சஷ்டி கவசம், போன்றவற்றை படித்து, 
ஆழ்வார்கள்  போலவும், 
நாயன்மார்கள் போலவும், அருணகிரி நாதர் போலவும், கிருபானந்த வாரியார் போலவும், 
பாரத மண்ணில் இருக்கும் மகான்கள் போலவும், எப்படி தன்னுடைய பக்தியை உயர்த்தி கொள்ளலாம்!!" என்று தான் இறை நம்பிக்கை உள்ள பக்தன் நினைப்பான்.



பக்தி உயர உயர,
பிரபந்தங்கள், பதிகங்கள் பாட பாட,
"நாம் சமஸ்க்ரித மொழியில் பகவானே தன் திருவாயால் சொன்ன "பகவத் கீதையை" நாமும் சொல்லலாமே" என்று நினைக்கிறான்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ
மோக்ஷ இஷ்யாமி மா சுச:
(எல்லா தர்மங்களையும் விட்டு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. 
உன் பாபங்கள் அனைத்தையும் மன்னித்து, மோக்ஷம் வரை உனக்கு கொடுக்கிறேன். கவலைப்படாதே)
என்று பரமாத்மா கிருஷ்ணரே தன் திருவாயால் நமக்கு சொன்ன ஆறுதல் வார்த்தை (ஸ்லோகம்) ஆயிற்றே.. 
இதன் அர்த்தம் புரிந்து கொண்டு, பெருமாள் முன்னால் நின்று கொண்டு சொல்லலாமே... 
வீட்டில் உள்ள பூஜை அறையில் தெய்வத்திடம் சொல்லலாமே..

இப்படியே இன்னும் என்ன சொல்கிறார் நம் கிருஷ்ணர் என்று மேலும் பல சுலோகங்களை அர்த்தத்துடன் தெரிந்து கொண்டு, தினமும் அனுபவித்து சொல்லலாமே.. 
பகவான் சொன்ன சொல்லை நாமும் சொல்ல, நமக்கு பக்தி தானே முக்கியம்.

"பகவான் நாமும் சமஸ்க்ரித மொழியில் ஒரு சுலோகம் சொல்வதை பார்த்து, ஆச்சர்யப்படுவாரே? நம் மீது விசேஷமாக கடாக்ஷம் செய்வாரே" 
என்று இறை பக்தியில் உருக்கம், ஆர்வம் போன்ற அனுபவங்களை பெறலாமே.

"தெய்வத்துக்கு இந்த மொழி தெரியாதா? அந்த மொழி தெரியாதா?" 
என்ற கேள்விகள் நாத்தீக போலிகள், பிற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை கிண்டல் செய்ய காத்திருக்கும் போலிகள் எழுப்புகிறார்கள்.
இவர்களுக்கு நம் பாசுரங்களும் தேவையில்லை. 
ஹிந்து தெய்வங்களும் தேவையில்லை. 
ஹிந்துக்களே தேவையில்லை. 

இறை பக்தி வளர, 
தமிழன், மீராவின் கீர்த்தனைகளை பாடினாலும் தெய்வம் ஏற்று கொள்ளும். 

இறை பக்தி வளர, 
தமிழன் பதிகங்களை, பிரபந்தங்களை  பாடினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.
இறை பக்தி வளர, 
எதுவுமே பேசாமல், மௌன மொழியில் பேசினாலும், தெய்வம் ஏற்று கொள்ளும்.

தேவ பாஷையான, இந்த உலகில் உள்ள ஒலியில் மறைந்து (மறை) இருக்கும் வேத மந்திரங்கள் கொண்டு பாடினால், 
பகவத் கீதையில் ஒரு சுலோகம் சொன்னாலும், 
தெய்வம் பெருமகிழ்ச்சி அடைந்து, நமக்கு நல்லவைகள் மட்டுமே நடக்க அருள் செய்கிறார்.

"ஹிந்து தெய்வத்தை கிண்டல் செய்து விட்டோம்" 
என்று நினைத்து, பிற மதத்தில் உள்ளவன் நினைத்தால், அந்த பாபங்களே அவனை படு குழியில் தள்ளி, அவன் வணங்கும் போலி தெய்வங்களும் அவனை கை விட்டு விடும்.

என் கனவிலும் பெருமாள் வருவாரா? 
தெய்வ காட்சிகள் கிடைக்குமா? 
நான் ஒழுக்கமாக வாழ்கிறேனா? 
என்று தன்னை தானே ஹிந்துவாக பிறந்த அனைவரும் கேட்டுக்கொள்ள வேண்டும்...



ஹிந்துக்கள் பக்தியை வளர்த்து கொள்ள முயற்சிக்க வேண்டுமே தவிர, "தெய்வம் புரிந்து கொள்ளுமா?" 
என்று திமிர் பிடித்த கேள்விகளை, 
நாத்தீகன் கேட்கிறானே ! பிற மதத்தில் இருந்து கொண்டு நம் மதத்தில் நுழைந்து கொண்டு இப்படி கேள்வி கேட்கிறானே !! நாமும் கேட்கலாமா என்று நினைக்க கூடாது... 

இறைவனுக்கு நம் மொழியும் தெரியும்.  
ஆனால், 
அவருக்காக நாம் ஒரு படி முன் வைத்தால், அவர் நம்மை நோக்கி 10 படி முன் வைத்து தான் இருப்பதை உணர செய்கிறார். 
பக்தி முக்கியமே தவிர...  விதண்டாவாத பேச்சுக்கள், தெய்வங்களை காட்ட உதவாது. 
விதண்டாவாத பேச்சுக்கள், அழிவையே தரும்.    

ஹிந்துக்கள், போலிகளை அடித்து துரத்த வேண்டும்.  

நாயன்மார்கள், சித்தர்கள், ஆழ்வார்கள், ராமானுஜர், சங்கரர், அகஸ்தியர், கம்பர் போன்றவர்கள், நடந்த இந்த தமிழத்தை, 
நாத்தீக போலிகள், மற்ற மதத்தில் இருந்து கொண்டு ஹிந்து தெய்வங்களை எப்படி குறை சொல்லலாம்? மதம் மாற்றலாம்? என்று போலி தெய்வங்களை வைத்து கொண்டு இருக்கும் போலிகளுக்கு இடம் தரவே கூடாது. 

வாழ்க ஹிந்துக்கள்.  

உலகில் எங்கு பிறந்தாலும் சோற்றுக்கு அலையும், போலி தெய்வங்களை வணங்கும் மனிதனாக பிறந்து இருப்போம். 
உலகில் ஹிந்துவாக பிறப்பதே அரிது. 
அதிலும் தமிழகத்தில், ஆழ்வார்கள், நாயன்மார்கள், ராமானுஜர், அருணகிரி நாதர் போன்ற மகான்கள் கால் பட்ட தேசத்தில் ஹிந்துவாக பிறப்பது கோடி புண்ணியம். 

"ஹிந்துவாக பிறந்தோமே" என்று பெருமிதம் கொள்வோம்.  
வாழ்க்கையை வீணடிக்காமல், இறை சிந்தனையை உயர்த்தி கொள்ளவும், போலிகளை எதிர்க்கவும் முயல்வோம்.



வாழ்க ஹிந்துக்கள். 

Hare rama, Hare Krishna (Listen to Bhajan)

Sandhya Vandanam (Morning with meaning)



Sandhya Vandanam (Afternoon with meaning)

Sandhya Vandanam (Evening with meaning)




Friday 7 June 2019

இன்றைய கால மக்களின் குணங்கள் பொதுவாக எப்படி உள்ளது? யாரை போல உள்ளது? நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?

மஹாபாரதம், துவாபர யுகத்தில் சுமார் 3102BCக்கு முன் நடந்தது.

3102BCக்கு பின், கலியுகம் ஆரம்பித்தது.


கலியுகத்தில் பெரும்பாலான மக்களின் குணம், பழக்கவழக்கம்,
"த்ருதராஷ்டிரன் போல" இருப்பதை கவனிக்கலாம்.
த்ருதராஷ்டிரனை, 
முழுமையாக 'நல்லவன்' என்றும் சொல்ல முடியாது,
முழுமையாக 'கெட்டவன்' என்றும் சொல்ல முடியாது.

த்ருதராஷ்டிரனுக்கு,
எது நியாயம்? என்று நன்றாக தெரியும், 
ஆனாலும் சுயநலத்தினால், ஏதேதோ காரணங்கள் சொல்லிக்கொண்டு,  அநியாயத்துக்கு துணை நிற்பான்.

தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும் என்று நினைப்பான். 
ஆனால் பாசத்துக்கு கட்டுப்பட்டு, அதர்மத்தில் நின்று கொண்டு நல்லவர்களையே எதிர்பார்ப்பான்.
பீஷ்மர், வியாசர், விதுரர் போன்ற மகாத்மாக்களிடம் பேசும் போது, நல்லவனாக தான் இருப்பான்.
"இனி அதர்மத்துக்கு துணை போக மாட்டேன்" என்று உறுதி கூறுவான்.
அடுத்த நிமிடம்,
தன் மகன் துரியோதனன் ஆசைப்பட்டான் என்றால், அதர்ம செயல்கள் செய்யவும் உறுதுணை செய்வான்.
தன் சபையிலேயே, தான் அரசனாக இருந்தும்,
தன்  மருமகள் அவமானப்படுவதை, தன் மகன் மீது இருந்த பாசத்தால் அனுமதித்தான்.
திரௌபதி 'சாபம் கொடுக்க போகிறேன்' என்றதும், தன் மகன்களுக்காக மன்னிப்பு கேட்டு, தான் நல்லவன் போல காட்டி கொண்டான்.

"த்ருதராஷ்டிரனை போன்று தான்", கலியில் பொதுவாக ஜனங்கள் பிறக்கிறார்கள்.

"துரியோதனன், கர்ணன், சிசுபாலன், கம்சன்" போன்ற சுத்தமான கெட்டவன் கூட கலியுகத்தில் கிடையாது.

"தர்மத்துக்காக, சத்தியத்துக்காக எதையும் தியாகம் செய்வேன்" என்று வாழ்ந்த பீஷ்மர், தர்ம புத்ரர் போன்ற மகாத்மாக்களை காண்பதும் அரிது.

மகாபாரதத்தில் த்ருதராஷ்டிரனை தவிர, மற்ற அனைவரும் ஒரே குணம் கொண்டவர்கள்.
"துரியோதனன்" பீமனை சிறுவனாக இருக்கும் போதே விஷம் கலந்த உணவு கொடுத்து கடலில் எரிந்து விட்டான்.
கடைசி வரை பாண்டவர்களை எதிர்த்தான்.
கடைசி வரை பகைவனாகவே வாழ்ந்தான்.

கெட்டவன் கெட்டவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.
நல்லவன் நல்லவனாகவே உள்ளும் புறமும் வாழ்ந்தான்.

'த்ருதராஷ்டிரனுக்கு' மட்டும், நல்ல குணம், கெட்ட குணம் மாறி மாறி வரும்.


பொதுவாக, இவனை "இரட்டை நாக்கு' உடையவன் என்று அடையாளமாக சொல்வார்கள் பெரியோர்கள்.
இரட்டை நாக்கு பொதுவாக பாம்புக்கு தான் உண்டு.
த்ருதராஷ்டிரனை "நல்ல பாம்பு"க்கு சமமாக சொல்வார்கள் பெரியோர்கள்.

நல்ல பாம்புக்கு உள்ளுக்குள் விஷம் அதிகம்.
ஆனால் பெயர் மட்டும் "நல்ல" பாம்பு.
நல்ல பாம்பு போல,
வெளியில் பார்த்தால், மிகவும் நல்லவன் போல இருப்பான் த்ருதராஷ்டிரன்.
ஆனால் உள்ளுக்குள். பாசம், சுயநலம் போன்ற விஷம் கொண்டவன்.

'வெளியில் பார்த்தால் மிகவும் நல்லவன் போல இருக்கிறானே, இவனுக்கு புத்தி மதி சொன்னால், இவன் புரிந்து கொள்வான்' 
என்று பல முறை பீஷ்மர், விதுரர், வியாசர் போன்றவர்கள் தர்ம உபதேசங்கள் செய்வார்கள்.
அவர்கள் சொல்வதை பொறுமையாக கேட்பான்.
கேட்கும் போது தன் தவறை உணர்ந்து சில சமயம், அழ கூட செய்வான்.
"இனி சரியாக இருப்பேன், துரியோதனன் தவறை கண்டிப்பேன். பாண்டவர்களும் என் பிள்ளைகள் தான்" என்று சொல்வான்.

இவர்கள் போனவுடனேயே, தன் மகனை பற்றி நினைவு வந்து விடும்.
'தன் மகன்கள் வாழ வேண்டும் என்றால், அதற்கு பாண்டவர்கள், தன் தம்பியின் மகன்கள் செத்தாலும் பரவாயில்லை' என்றளவுக்கு குருட்டு பாசம் இவனுக்கு.

பொதுவாக தாய் தந்தைக்கு குழந்தைகள் வளர்வதை "பார்க்க பார்க்க", பாசம் வளரும். 
பாசம் சுயநலத்தை வளர்க்கும்.

இதில் ஆச்சர்யம் என்னவென்றால்,
பிறந்ததில் இருந்தே கண் தெரியாத த்ருதராஷ்டிரன்,
தன் 100 மகன்களையும் பார்த்தது கூட இல்லை.
தன் பிள்ளைகளின் பெயரை காதால் கேட்டதற்கே இப்படி ஒரு பாசம் வைத்து இருந்தான் என்றால்,
கண்ணால் பார்த்து இருந்தால், என்ன செய்து இருப்பான் இவன்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

தன் மகன் வாழ வேண்டும் என்றால்,
தன் சகோதரன் மகன்கள் 12 வருடம் காட்டில் அலைந்தால் கூட பரவாயில்லை என்று நினைத்தான்.
பாண்டவர்களை விழாவுக்கு அழைப்பது போல அழைத்து,  மாளிகையில் தங்க வைத்து, மாளிகைக்கே தீ வைத்து கொளுத்தினான் என்று தெரிந்தும், தன் மகனை பாசத்தின் காரணமாக எதிர்க்காமல், நாடு கடத்தாமல் இருந்தான்.


தன் மருமகளை தன் சபையில் வைத்து அவமானப்படுத்துகிறான் துச்சாதனன் என்று தெரிந்தும்,
அவனை பார்த்து ஒரு சொல் சொல்லவில்லை.
மகனுக்காக எந்த அதர்மத்தையும் செய்ய தயாராக இருந்தான்.

"போர் வர போகிறது, உன் 100 மகன்களும் கூண்டோடு அழிய போகிறார்கள்" என்று பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரே சொல்லியும், பாசத்தின் காரணமாக, தெய்வம் எச்சரித்தும் கேட்க மறுத்தான்.
பரவாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணர், தன் விஸ்வரூபத்தை காட்டியும், இதை பிறவி குருடன் த்ருதராஷ்டிரனும் பார்க்கட்டும் என்று அணுகிரஹம் செய்தும்,
அதர்மத்தை பிடித்து கொண்டு, தர்மத்தின் பக்கம் தான் தெய்வம் துணை போகும் என்று தெரிந்தும்,
குருட்டு நம்பிக்கையில் தன் 100 பிள்ளைகள் ஜெயித்து விடுவார்கள் என்று நம்பினான்.

சுய நலத்துக்காக, தன் பாசத்துக்காக, 
தெய்வமே எதிர் அணியில் இருந்தாலும், தான் ஜெயித்து விடலாம் என்று குருட்டு நம்பிக்கை கொண்டிருந்தான்.

த்ருத்ராஷ்டிரனின் சுய நலத்தாலும், குருட்டு பாசத்தாலும் "குரு வம்சமே அழிய போகிறது" என்று அறிந்த வேத வியாசர்,
இத்தனை நாள் தன்னிடமும் தர்மங்களை கேட்டானே (ஸத் சங்கம்) என்ற கருணையால்,
இவனும் 'வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை, தர்மத்துக்காக வாழ்ந்து இருக்கலாமே' என்ற ஞானத்தையாவது இவன் அடையட்டும் என்று நினைத்தார்.
சஞ்சயனை அழைத்து போரில் நடக்கவிருக்கும் அனைத்தையும் சபையில் இருந்து கொண்டே பார்க்க ஞான திருஷ்டி கொடுத்தார்.
சஞ்சயன் மூலமாக போரில் நடக்கவிருப்பதை த்ருத்ராஷ்டிரன் கேட்கட்டும் என்று சங்கல்பித்தார்.
வியாசரின் அருளால்,
அர்ஜுனன் மட்டுமே பார்த்த விஸ்வரூபத்தை சஞ்சயனும் கண்டு, பாசத்தாலும், சுய நலத்தாலும் மயங்கி கிடக்கும்
த்ருத்ராஷ்டிரனுக்கு அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள்? (பகவத்கீதை) என்பதை கூற,
தன் பிள்ளைகள் அழிய போவது நிச்சயம், தெய்வம் பாண்டவர்கள் பக்கம் என்று அமைதி ஆனான் த்ருத்ராஷ்டிரன் .




த்ருத்ராஷ்டிரனை போன்றே நாமும் இரட்டை நாக்கு உடையவர்களாக தான் வாழ்கிறோம்.

நல்லவனாக வாழ ஆசைப்பட்டாலும், பிள்ளைகள், சுற்றத்தார், சமுதாயம் என்று ஏதேதோ சால்ஜாப்புகள் சொல்லி கொண்டு, அதர்மம் என்று தெரிந்தும் பல காரியங்கள் செய்கிறோம்.
அதர்மம் செய்தவர்களுக்கு துணையும் செய்கிறோம்.

"நல்லவனுக்காக எந்த நிலையிலும் துணை நிற்பேன்,
எனக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை விடவே மாட்டேன்",
என்ற உறுதி பெரும்பாலான மக்களிடம் கலியுகத்தில் காணப்படவில்லை.

நீ ஏன் உன் கடமைகளை செய்யவில்லை? 
ப்ராம்மணன் ஏன் ப்ராம்மணனாக இல்லை? 
பெண்கள் தங்கள் எல்லைகளுக்குள் இல்லை? 
ஹிந்துக்கள் நெற்றியில் ஏன் ஒரு திலகம் கூட இல்லை?
ஏன் ஹிந்துக்கள் பாசுரங்கள், திவ்ய பிரபந்தங்கள், கீதையை படிக்க வில்லை?
என்று கேள்விகளை மகான்கள் கேட்டால்,
"சமுதாயம் கெட்டு விட்டது. 
சமுதாயத்தை ஒத்து தானே போக வேண்டும் சார்" 
என்று சொல்லும் கூட்டம் இந்த கலியில் அதிகம் காணப்படுகின்றனர்.


வெகு சில மகாத்மாக்கள், இன்றும் தங்கள் கடமைகளை செய்து கொண்டு, அதர்மத்தை எதிர்த்து, தர்மத்தில் நின்று, உறுதியான முதுகெலும்புடன் வாழ்கின்றனர்.

ஆனால் பெரும்பாலானவர்கள், த்ருத்ராஷ்டிரனை போல தான் வாழ்கிறோம்..

வெளியில் பார்க்க "நல்லவன் போலவும்",
உண்மையில்,
ஹிந்து தர்மத்துக்கே கூட எதிராக செயல்கள் செய்து கொண்டும், 
கொடுக்கப்பட்ட கடமைகளையும் செய்யாமல், 
கோவிலுக்கு செல்லாமல், 
பூஜை, ஒழுக்கம் என்ற எந்த கடமையும் செய்யாமல், 
பெயரளவில் "ஹிந்து" என்று இரட்டை வேடம் போடுகிறோம்.

இப்படி உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசும் மக்களே, எங்கும் காணப்படுகின்றனர் கலியுகத்தில்.
'சிசுபாலனை போல, கம்சனை போல, ராவணனை போல', 
உள்ளும் புறமும் உண்மையான தீயவனாக இருந்து, நல்லவர்களை தாக்கினால்,
பெருமாள் பெருமாளாகவே அவதாரம் செய்வார்.

கலியுகத்தில் சுத்தமான கெட்டவன் கூட கிடையாது.
எதிலும் போலி தனம் காணப்படும் என்று சொல்லப்படுகிறது.

த்ருத்ராஷ்டிரனை போன்ற இரட்டை நாக்கு கொண்ட நல்ல பாம்பை அடிக்க பெருமாள், பெருமாளாக வருவதில்லை.

சிசுபாலனை, கம்சனை போல, அடித்து ஒழிக்க வேண்டிய அளவுக்கு தீயவர்கள் இல்லை என்பதால்,
அவர்கள் மனதில் உள்ள அழுக்கை அகற்றி, ஞானத்தை கொடுக்க,
சாதுக்களாக, மகாத்மாவாக பெருமாள் கலியுகத்தில் அவதரிக்கிறார்.

வெளியில் நல்லவன் போல நடித்து,
மனதில் ஹிந்து தர்மத்தின் படி வாழ தெரியாமல் இருக்கும் நம் மனதை திருத்தினாலே போதும் என்பதால் தான்,
சமயத்தில் பகவானே,
மகாத்மா கிருஷ்ண சைதன்யராகவும், ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சாராகவும் அவதாரம் செய்து கோடிக்கணக்கான மக்களின் மனதை நல்வழிப்படுத்தினார்.
ஆதிஷேஷனே ஸ்ரீ ராமானுஜராக, பிரகலாதனே ஸ்ரீ ராகவேந்திரராக அவதாரம் செய்து,
சூர தாஸ், கபீர் தாஸ், மீரா, துளசி தாஸ், புரந்தர தாஸ், ராம தாஸ், தியாகராஜர், ஆழ்வார்கள், நாயன்மார்கள்,  வள்ளலார் என்று ஆயிரக்கணக்கான மகான்களை பாரத தேசம் முழுவதும் அவதரிக்க செய்து, ஹிந்துக்களின் இதயத்தில் ஹிந்து தர்மத்தை பதிக்க,
பெருமாள் அணுகிரஹம் செய்தார்.
இவர்கள் எழுதிய பக்தி பாடல்கள், இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வழி காட்டுகிறது.


த்ருத்ராஷ்டிரனுக்கு, பெருமாள் வியாசர் என்ற ஒரு குருவை மட்டுமே காண்பித்தார்.

நமக்கோ, பாரத தேசத்தில் எங்கு கால் வைத்தாலும் அங்கு ஒரு மகானை ஸ்ருஷ்டி செய்து,
நம்முடைய இந்த இரட்டை வாழ்க்கையை நினைவு படுத்தி,
உள்ளும் புறமும் ஹிந்துவாக வாழ தானே உதவுகிறார்.
இது போதாது என்று,
ஊருக்கு ஊர் தனக்கு ஒரு கோவிலை அமைத்து கொண்டு,
தன் தரிசனத்தை அவ்வப்போது கொடுத்து கொண்டு,
நம் மனதில் உள்ள அழுக்கை நமக்கே புரிய வைக்கிறார். அகற்றுகிறார்
"இப்படி இரட்டை வாழ்க்கை வாழ்கிறோமே"
என்று உண்மையாக "வருத்தப்படும்" மனிதர்களுக்கு,
பெருமாளே, அவன் பக்திக்கு ஏற்ற ஒரு ஆதம் குருவை காண்பித்து,
அவர் மூலமாக மேலும் ஸத் சங்கம் கிடைக்க செய்கிறார்.

கலியில், உள்ளும் புறமும் கெட்டவன் பிறப்பதில்லை என்பதால்,
கொஞ்சம் நல்லவன் கொஞ்சம் கெட்டவன் என்று பிறப்பதால்,
பெருமாள், மகான்களாக, சாதுக்களை போன்று அவதாரம் செய்கிறார்.
பெருமாளே மகாத்மாவாக அவதாரம் செய்யும் போது,
அவரையே ஆத்ம குருவாக கலியில் கிடைக்கப்பட்டவர்கள் மகா பாக்கியசாலிகள்.
"ஸ்ரீ கிருஷ்ண சைதன்யராகவும், ராமகிருஷ்ணராகவும்" பரவாசுதேவனே அவதரித்தார்.

சிவபெருமானே "விவேகானந்தராகவும்", "காஞ்சி மஹா பெரியவராகவும்", "ஆதி சங்கரராகவும்" அவதரித்தார்.

ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
மெதுவாக த்ருத்ராஷ்டிரனை போல வாழும் இரட்டை வாழ்க்கையை வெறுக்க ஆரம்பிக்கிறான்.
ஸத் சங்கம் கிடைத்த ஜீவன், 
தர்மத்துக்காக வாழ தயாராகிறான். 
பக்தி செய்ய ஆரம்பிக்கிறான்.

ஆத்ம குருவை பூரணமாக சரண் அடைந்த பக்தன், 
மோக்ஷ வாசலை நெருங்கி விடுகிறான்.

ஆத்ம குருவின் கருணையால் உள் அழுக்குகள் அழிந்து, உள்ளும் புறமும் சுத்தமானவனாக ஆன பின்,
மீண்டும் பிறவாத மோக்ஷத்தை பெருமாள் அணுகிரஹித்து விடுகிறார்.

வெளியில் நல்லவன் போலவும், 
உண்மையில் ஆசாரம் இல்லாமல் தன் இஷ்டப்படி வாழ்ந்து கொண்டும், 
இரட்டை நாக்குடன் த்ருத்ராஷ்டிரனை போல வாழும் நாம், 
த்ருத்ராஷ்டிரனை போல, 
நல்லவர்கள் சொல்வதை கடைபிடிக்காமல் போனாலும், 
அவ்வப்போது ஸத் சங்கங்களில் கலந்து கொண்டு இருந்தாலே, 
மகான்களின் கருணைக்கு ஒரு நாள் பாத்திரமாகி, குரு கடாக்ஷத்தினால் நாமும் ஒரு நாள் சித்தசுத்தி பெற்று, 
உள்ளும் புறமும் தர்மத்தில் வாழ்ந்து, கிருஷ்ண சரணத்தை அடைவோம்.

ஹிந்துவாக பிறப்பதே புண்ணியம்.

நமக்கு ஆன்மீக வளர்ச்சி ஏற்பட எதை பற்றிக் கொள்ள வேண்டும்?
இரட்டை வாழ்க்கை வாழும் நமக்கு, "ஸத் சங்கமே கதி".

நல்லோர்கள், மகான்கள், தர்ம சிந்தனை உடையவர்கள் பேசுவதை, மகான்கள் சரித்திரத்தை கேட்டு கொண்டும், 
அவர்களுக்கு நம்மால் முடிந்த தொண்டு செய்து கொண்டும் இருப்பதே "ஸத் சங்கம்".

இப்படி வாழ முயற்சி செய்ய ஆரம்பித்தாலே, 
குருவின் கருணை ஒருநாள் நம் மீதும் பட்டு, நம் அழுக்குகள் நீங்கி, இறுதியில் பகவானை அடையலாம்.

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - (Listen to Bhajan)

Sandhya Vandanam - Morning (With Meaning)


Sandhya Vandanam - Evening (With Meaning)

Sandhya Vandanam - Afternoon (With Meaning)




Tuesday 4 June 2019

நாடிகள் உடம்பில் சரியாக இயங்க என்ன செய்ய வேண்டும்? மனதில் அமைதி, விவேக புத்தி, உடல் ஆரோக்கியம் கிடைக்க என்ன வேண்டும்? தெரிந்து கொள்வோமே ...

சைக்கிள் பழகுபவன், 
பல தடவை விழுந்தபிறகு, நேரே விடுவதற்கு தெரிந்து கொள்வது போல,


பிராணாயாமம் செய்பவன், 
பல தடவை பிராணனை அடக்க முடியாமல் போய், முடிவில் வெற்றிக் காண்பான்.
அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றவாறு,
பிராணாயாமத்தினால் சில மாதங்களிலோ, சில ஆண்டுகளிலோ, பலன் தெரியும்..

குண்டலினி சக்தியை உயிர் பெற செய்ய, முதலில், நம் உடம்பில் உள்ள நாடிகள் சரியாக இயங்க வேண்டும்.

உடம்பில் உள்ள "நாடிகள் யாருக்கு  சுத்தமாக" உள்ளதோ!!, அவர்கள்
மனதில் அமைதி இருக்கும்
விவேக புத்தியுடன் செயல்படுவார்கள். 
உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

நம் உடம்பில் உள்ள நாடிகளை சுத்தி செய்ய என்ன செய்ய வேண்டும்?

8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு இடது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, வலது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.
8 தடவை பிரணவத்தை (அஉம்) நிதானமாய் மனதில் உச்சரித்துக்கொண்டு வலது மூக்கு வழியாக பூரகம் செய்து (மூச்சை இழுத்து),
16 தடவை உச்சரித்து, இடது மூக்கு வழியாக ரேசகம் (மூச்சை விட்டு) செய்ய வேண்டும்.

இது ஒரு எண்ணிக்கை.
இது போல, 64 எண்ணிக்கை வரை ஏற்றிக் கொண்டு போகலாம். 

இவ்வாறு 6 மாதம் செய்தால், நாடி சுத்தி ஏற்படும்.

நாடி சுத்தி ஏற்பட்டவன்,
குண்டலினி சக்தி எழுவதற்கு, மற்றொரு பிராணாயாம பயிற்சி செய்ய தகுதி பெறுகிறான்...

முதலில் நாடி சுத்தி அடைய முயற்சி செய்வோம்....

வாழ்க ஹிந்துக்கள்.  வாழ்க ஹிந்து தர்மம்.


Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - Afternoon (With Meaning)

Sandhya Vandanam - Evening (With Meaning)



Sandhya Vandanam - Morning (With Meaning)






Sunday 2 June 2019

வில்வ மரம் பற்றி...துளசி அர்ச்சனையை ஏற்கும் திருப்பதி பெருமாள், எதற்காக ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்? தெரிந்து கொள்வோமே...

வில்வ மரம் பற்றி...



எப்பொழுதும், துளசி அர்ச்சனையை ஏற்கும் பெருமாள்,
எதற்காக திருப்பதியில் மட்டும், ஒரு சமயம் வில்வ அர்ச்சனை செய்து கொள்கிறார்?

ஒவ்வொரு மரமும், செடியும், ஒரு தெய்வத்துக்கு விசேஷமாக சொல்லப்படுகிறது.

பெருமாளுக்கு துளசி உகந்தது என்று சொல்லப்படுகிறது.
துளசியை கொண்டு அர்ச்சனை செய்யும் போது, பெருமாள் மிகவும் உகந்து ஏற்று கொள்கிறார் என்று அறிகிறோம்.


அது போல,
ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒரு ஸ்தல வ்ருக்ஷம் (மரம்) உண்டு.
மகாலட்சுமிக்கு 'வில்வ மரம்" உகந்தது என்று ஸ்ரீசூக்தம் நமக்கு காட்டுகிறது.

தாயார் வில்வ இலையால், புஷ்பத்தால் அர்ச்சனை செய்தால், மிகவும் ப்ரீதி அடைகிறாள் என்று அறிகிறோம்.

ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஸ்ரீரங்க நாச்சியார் சந்நிதி அருகில் தாயாருக்காக வில்வ மரம் இருக்கிறது. 
"வில்வ மரத்தடியில் எப்பொழுதும் மகாலட்சுமி தாயார் இருக்கிறாள்,
துளசி வனத்தில் பெருமாள் இருக்கிறார்" என்று பக்தர்கள் பக்தி கண்ணோட்டத்தோடு பார்க்கிறார்கள்.

மற்ற மதங்களில் உலகில் உள்ள அனைத்தும் தான் அனுபவிக்கவே என்று போதிக்கப்படுகிறது.
நம் சனாதன தர்மமோ, ஒரு செடியை பார்த்தாலும், ஒரு மரத்தை பார்த்தாலும், ஒரு நதியை பார்த்தாலும், அதற்கு சம்பந்தமான தெய்வங்கள் நினைவுக்கு வரவழைத்து, நம்மை எப்பொழுதும் இறை முன்னேற்றத்துக்கே அழைக்கிறது.





அற்புதமான ஹிந்து மதத்திற்கு வெளிநாட்டவன் கூட ஈர்க்கப்படுகிறான். பக்தி செய்கிறான்.
ராஸலீலையின் போது பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், 8 வயது கோபாலனாக, ஒவ்வொரு கோபிக்கும் ஒவ்வொரு கிருஷ்ணனாக ஆகி, எங்கும் கண்ணன் என்று ஆகி ராஸ நடனம் ஆட, திடீரென்று மறைந்த விட்டார்.
கோபியர்கள் கண்ணன் எங்கே? கண்ணன் எங்கே? என்று தேடும் போது, துளசி செடியை பார்த்ததும், துளசி செடியை பார்த்து 'கண்ணனை பார்த்தீர்களா?" என்று கேட்டனர் என்று பாகவதம் நமக்கு காட்டுகிறது.
அதே போல,
ராமாயணத்தில், சீதையை தொலைத்து, ஸ்ரீ ராமர் "சீதையை கண்டீர்களா? என்று அங்கு இருந்த 'வில்வ மரத்தை' பார்த்து கேட்டார் என்று வருகிறது.


இது போன்ற சம்பவங்களை கவனிக்கும், வேதத்தின் சாரம் அறிந்தவர்கள், 'ஸ்ரீ ராமரும், ஸ்ரீ கிருஷ்ணரும் சாக்ஷாத் நாராயணனே' என்று அறிந்து கொள்கின்றனர்.

திருப்பதி பெருமாளுக்கு தனுர் மாத சமயத்தில், வில்வத்தால் அர்ச்சனை செய்யப்படுகிறது என்று பார்க்கிறோம்..
துளசி இலையால் அர்ச்சனை செய்தால், பெருமாள் உகப்பு (மகிழ்ச்சி) கொள்கிறார்.
திருப்பதி பெருமாளுக்கு எதற்காக 'வில்வ அர்ச்சனை' செய்கிறார்கள்? 

மற்ற கோவில்கள் போல, திருப்பதியில் தாயாருக்கு தனி சந்நிதி இல்லை.
இங்கு தாயார், பெருமாளின் வக்ஷஸ்தலத்தில் (மார்பிலேயே) இருக்கிறாள்.
ஸ்ரீ (லக்ஷ்மி) பெருமாள் வக்ஷஸ்தலத்திலேயே இருப்பதால் தான், பெருமாளுக்கு இங்கு 'ஸ்ரீனிவாசன்' என்று பெயர்.

"தாயாருக்கு உகக்குமே" என்று, வில்வ அர்ச்சனையை பெருமாள் ஏற்று கொள்கிறார் திருப்பதியில்.

திருவேங்கடமுடையானுக்கு வில்வ அர்ச்சனை செய்யும் போது, அது தாயாருக்கு செய்யப்படுகிறது என்று பக்தர்கள் அறிகிறார்கள்.

சமஸ்கரிதத்தில் வில்வத்துக்கு "ஸ்ரீபலம்" என்றும் பெயர் உண்டு.

மகாலக்ஷ்மிக்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து, லக்ஷ்மி கடாக்ஷத்தை பெறுவோம்.
வில்வ அர்ச்சனை சிவபெருமானுக்கும் உகந்தது. 


ஞானமும் (மெய் அறிவு),
செல்வமும்,
ஆயுளும்,
வில்வ அர்ச்சனை மூலம்,
லட்சுமியும், பெருமாளும், சிவபெருமானும் நமக்கு அருள்கின்றனர்.

ஹிந்துக்களாக வாழ்வதே பெருமை...

வாழ்க ஹிந்துக்கள்..

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam - afternoon (with meaning)



Sandhya Vandanam - morning (with meaning)


Sandhya Vandanam - evening (with meaning)