Followers

Search Here...

Friday 13 December 2019

பிரபந்தங்கள், பதிகங்கள், பஜகோவிந்தம், கந்த ஷஷ்டி கவசம் சொல்லி பிரார்த்தனை செய்வதற்கும், வேத மந்திரங்களை சொல்வதற்கும் வித்யாசம் உண்டா? தெரிந்து கொள்ள வேண்டாமா?

தெய்வ சாந்நித்யம்:
"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், சரியாக உச்சரிக்க படும்போது,
தெய்வங்கள் அந்த இடத்தில் தன் சாந்நித்யத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

"தெய்வ சாந்நித்யம்" அதிகம் உள்ள இடத்தில், எளிதாக "தெய்வ அருள்" பாமரனுக்கும் கிடைத்துவிடும்.



தெய்வ அருள்:
ஆழ்வார்கள் பாசுரங்களும், நாயன்மார்கள் பதிகங்களும் பாடும் போது,
தெய்வத்தை நாம் ஸ்துதி (போற்றி) செய்வதால், பக்தனுக்கு பக்தி வளர்கிறது..
தெய்வ அருள் (அனுக்கிரஹம்) கிடைக்கிறது.


4000 திவ்ய பிரபந்தங்கள் "வேதத்துக்கு ஈடானது" என்று கூறுகிறார்கள் பெரியோர்கள்.

"தமிழ் மறை" என்று திவ்ய பிரபந்தத்தை கூறுகிறார்கள் பெரியோர்கள்.

வேதத்தை அறிந்த, சர்வ சாஸ்திரமும் கரை கண்ட 'ஸ்வாமி வேதாந்த தேசிகர்', 
கடைசியாக ஆழ்வார்கள் தமிழில் அருளிய "திவ்ய பிரபந்தங்களை" எடுத்து படிக்கும் போது,
'தான் கற்ற வேதத்தின் சாரம் அனைத்தும் 4000த்தில் அடங்கி இருப்பதை கண்டு பிரமித்தார்' என்று அறிகிறோம். 
"தெளியாத மறை நிலங்கள் தெளிகின்றோமே" என்று திவ்ய பிரபந்தத்தை வேதத்துக்கு நிகராக உயர்த்தி பேசுகிறார்.
"மறையில் (வேதத்தில்) தெளியாத அர்த்தங்கள் எல்லாம், பிரபந்தங்கள் மூலம் தெளிந்தது" என்று திவ்ய பிரபந்தத்தின் பெருமையை உரைக்கிறார் தேசிகர் என்று அறிகிறோம்.

அதே போல, யதி ராஜரான "ராமானுஜர்", 
திவ்ய பிரபந்தத்தை அனைத்து வைஷ்ணவ கோவில்களிலும் பெருமாளுக்கு முன் பாட வேண்டும் என்று, பெரும் சீர்திருத்தம் செய்தார். 
"திவ்ய பிரபந்தம் கேட்காத பெருமாள் கோவில் உலகில் இல்லை" என்ற அளவுக்கு தமிழ் மொழியில் உள்ள "திவ்ய பிரபந்தத்தை" உலகெங்கும் பரப்பினார்.

இப்படி "திவ்ய பிரபந்தத்தை பெருமாள் முன் கட்டாயம் பாட வேண்டும்" என்று தமிழை முன் நிறுத்தினார் ராமானுஜர்.

வேதத்துக்கு நிகரான 'திவ்ய பிரபந்தத்தை பெருமாளே உகந்து கேட்கிறார்' என்றதும், 
அதற்காக, உடனே ராமானுஜர்,
"இனி வேத மந்திரங்கள் ஓத வேண்டாம்.. பூஜை விதிகளை மாற்றுங்கள். திவ்ய ப்ரபந்தமே போதும்!!" என்று சொல்லி விடவில்லை.
இதை நாம் கவனிக்க வேண்டும்.. 
இதில் உள்ள ரகசியத்தை அறிந்து கொள்ள முயற்சிக்கவேண்டும்..

வேதமும், திவ்ய ப்ரபந்தமும் இரண்டையும் அறிந்தவர் ராமானுஜர். 
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையை அறிந்தவர்.. 

"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை அறிந்தவர் ராமானுஜர்.
"ஸ்துதி (prayer) வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை  நாமும் உணர வேண்டும்..
"திவ்ய ப்ரபந்தமோ, பதிகங்களோ, கந்த சஷ்டி கவசமோ, கந்த குரு கவசமோ, அபிராமி அந்தாதியோ" மந்திரங்கள் அல்ல.. 
இவை அனைத்துமே "தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள்".

"ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள், தெய்வத்தை பற்றிய ஸ்துதிகள், பாடல்கள் அல்ல.. 




'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், சிவபெருமானை போற்றி பாடவில்லை.
மாறாக,
ஏகாதச ருத்ரர்களையே (11 ரூபத்தில் உள்ள சங்கரனை) அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது. 
சிவபெருமானை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
சிவபெருமானையே ஆவிர்பவிக்க செய்கிறது ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள்.
இந்த வேற்றுமையை நாம் உணர வேண்டும்.




'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள் உச்சரிக்க படும் போது, அந்த வேத ஒலிகள், ப்ரம்ம தேவனை படைத்த, உலக சிருஷ்டிக்கு காரணமான மூலமான பரமாத்மா நாராயணனை வெறுமனே போற்றி பாடுகிறது என்று நினைக்க கூடாது.
மாறாக, பரமாத்மா நாராயணனையே அங்கு ஆவிர்பவிக்க செய்கிறது.
நாராயணனை போற்றி பாடும் வெறும் பாடல் அல்ல 'புருஷ சூக்தம்' போன்ற வேத மந்திரங்கள்.
நாராயணனை ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரங்கள் இவை என்று அறிய வேண்டும்.

நாராயணனை, போற்றி பாடப்படும் திவ்ய ப்ரபந்தமும்,
நாராயணனை, ஆவிர்பவிக்க செய்யும் வேத மந்திரமும் 
ஒன்று என்று நினைக்க கூடாது.
இந்த வேற்றுமையை ஹிந்துக்கள் நாம் உணர வேண்டும்.

தமிழில் அர்ச்சனை செய்தால் கடவுளுக்கு புரியாதா?
என்று கேட்பது வீண் பிடிவாதம்..
மனிதர்களுக்கு இடையே உள்ள காழ்ப்புணர்ச்சியை, தெய்வத்திடம் நாம் காண்பிக்க கூடாது. 
2000 வருடத்துக்கு முன்பேயே, பெருமாள் தமிழ் பிரபந்தங்களை கேட்டு கொண்டு தான் இருக்கிறார். 
ஊமை தன் மனதில் பிரார்த்தனை செய்தாலும் புரிந்து கொள்கிறார்.
காழ்ப்புணர்ச்சியை ருத்ரம்' போன்ற வேத மந்திரங்கள் மீீது காண்பிக்க கூடாது. 

தெய்வ சாந்நித்தியம் வேத மந்திரங்களால் மட்டுமே ஏற்படுகிறது.
தெய்வ சாந்நித்தியம் உள்ள கோவில்களில்,
நாம் போய் நின்று"கோவிந்தா.. கோவிந்தா..." என்று ஸ்துதி செய்தால் கூட, நினைத்த காரியங்கள் நிறைவேறுகிறது.

தெய்வத்துக்கு எந்த மொழியும் தடையில்லை.. ஊமை பாஷையும் அறிந்தவர் அவர்.
ஆனால், நாம் செய்யும் பிரார்த்தனைகள் பலிக்க, அந்த தெய்வங்கள் தன் சாந்நித்யத்தை காட்ட, வேத மந்திரங்கள் அவசியம். 

வேதத்தை ஒதுக்கி, வழிபடும் இடங்களில், தெய்வ சாந்நித்யம் குறைகிறது. 

ஹிந்து தர்மத்தின் மீது பொறாமை கொண்டவர்கள், 'வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க கூடாது' என்று பெருமுயற்சி செய்கின்றனர். 
கோவிலை காப்பது ஹிந்துக்களின் கடமை.

வேத மந்திரங்கள் கோவிலில் ஒலிக்க செய்வது ஹிந்துக்களின் கடமை.

கோவிலில் 'பாசுரங்கள், பதிகங்கள், கந்த சஷ்டி கவசம்' பாடுவதும் நமக்கு உள்ள கடமை.

இதை ஹிந்துவாக பிறந்த எவரும் மறக்க கூடாது. 





ஹிந்து கலாச்சாரத்தை கெடுத்து, தன் போலி தெய்வங்களை பாரத மண்ணில் விதைக்க முயலும் கீழ்தரமானவர்களை ஒடுக்க வேண்டியது, ஒவ்வொரு ஹிந்துவுக்கும் கடமை.


"ஸ்துதி வேறு, மந்திரங்கள் வேறு" என்ற வேற்றுமையை நாமும் உணர வேண்டும்..

கோவிலில், "ருத்ரம், புருஷ சூக்தம்" போன்ற வேத மந்திரங்கள் ஓதி அர்ச்சகர்கள், தெய்வ சாநித்தியம் குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.. அர்ச்சகர்கள் பார்த்து கொள்கிறார்கள்.
கோவிலில் "பாசுரங்கள், பதிகங்கள், பஜனைகள் பாடி" பக்தர்கள் தன் பக்தியை வெளிப்படுத்தி, தெய்வ சாந்நித்யம் நிறைந்த அந்த இடத்தில், தெய்வ அனுகிரஹத்தை பெற முயற்சிக்க வேண்டும்.

'வேத மந்திரங்கள் கூடாது, பாசுரங்கள், பதிகங்கள் மட்டுமே சொல்ல வேண்டும், தமிழில் போற்றி பாட வேண்டும்' 
என்று சொல்ல சொல்லி அர்ச்சகரை தடுக்க கூடாது.

"தெய்வ சாநித்யத்தை" வேத மந்திரங்களால் நிலைக்க செய்வது, அர்ச்சகர்கள் கடமை.
"தெய்வ அருளை" பாடல்கள் மூலம் ஸ்துதி (prayer songs) செய்து பெற வேண்டியது நம் கடமை.. 

தமிழில் உள்ள பக்தி பாடல்களை, பாசுரங்களை பாட தான், 'நாம்' இருக்கிறோம். மறக்க கூடாது.

கோவிலுக்கு சென்று ஏதாவது பாட 'நாம்' ஆசைபட வேண்டும்.
கோவிலுக்கு சென்று  'நமோ நாராயணா, சிவாய நம, முருகா போற்றி' என்றும், பாசுரங்களை, பதிகங்களை 'நாம்' ஸ்துதி செய்ய வேண்டும்.

வெறும் மரம் போல தெய்வத்துக்கு முன் நின்று விட்டு வெளியே செல்வது, கோடீஸ்வரனிடம் சென்று 1 ரூபாய் பிச்சை வாங்குவது போல ஆகும்.  


கோவிலுக்கு செல்லும் நாம், அர்ச்சகர் என்ன சொல்ல வேண்டும்? என்று சொல்வதை விட, நாம் என்ன சொல்ல வேண்டும்? என்று கவனிக்க வேண்டும்.

அர்ச்சகர் தெய்வ சாந்நித்யம் குறையாமல் வேத மந்திரங்களை சொல்ல வேண்டும்.
பக்தர்களான நாம், தெய்வ அனுகிரஹத்தை பெற அவரை போற்றி பாட வேண்டும். 
இதற்காக தானே, நமக்கு இத்தனை பக்தி பாடல்களை நமக்கு சித்தர்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் கொடுத்து இருக்கிறார்கள். 
சிந்திக்க வேண்டாமா ஹிந்துக்கள்??.


Thursday 12 December 2019

மாயை என்றால் என்ன? ப்ரம்மம் என்றால் என்ன? புரிந்து கொள்வோமே...

ஞானிக்கு, 'ப்ரம்மம்' மட்டுமே தெரிகிறது. ஞானி நிற்குணமாகவே எப்பொழுதும் இருக்கிறார்.


அஞானிக்கு 'மாயை' மட்டுமே தெரிகிறது. ரஜோ குணமும், தமோ குணமும், சத்வ குணமும் கொண்டு இருக்கிறான்.

'ப்ரம்மம்' என்று ஒன்று இருப்பதை ஞானியும் அறிகிறான், அஞானியும் அறிகிறான்...
ஆனால், அஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் இல்லாததால், மாயையில் சிக்குகிறான். 
ஞானி, ப்ரம்மத்திடம் திட சித்தம் கொண்டு இருக்கிறான். அதனால், மாயையில் சிக்குவதில்லை. 

புரியவில்லையா?..  
இதோ எளிதான விளக்கம்...




ப்ரம்மத்தில் இருந்து தான், உலகம் வெளிப்பட்டது..
ப்ரம்மத்தில் இருந்து தான், ப்ரம்மா வெளிப்பட்டார்..
ப்ரம்மத்தில் இருந்து தான், ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் என்று வரிசையாக படைக்கப்பட்டார்கள்..





அந்த ப்ரம்மமே "பரவாசுதேவன்",
அந்த ப்ரம்மமே "நாராயணன்"
என்று வேதம் சொல்கிறது..

அந்த ப்ரம்மமே, மாயையை உருவாக்கி, தன்னை மறைத்து (வாசு) கொண்டு ஜீவனிடம் லீலை செய்கிறது.
'தன்னை மறைத்து கொள்வதால்', அந்த ப்ரம்மத்தை 'வாசுதேவன்' என்று பெயர் சொல்லி வேதம் அழைக்கிறது.

"ஞானிக்கு, மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மமே தெரிவதால், மாயை தெரிவதில்லை..."
என்று வேதம் சொல்கிறது..

"அஞானிக்கு, மாயை மட்டுமே தெரிவதால், மறைந்து இருக்கும் அந்த ப்ரம்மம் தெரியாததால்,
அந்த 'மாயை கொடுக்கும் அனுபவத்துக்கு' கட்டுப்பட்டு சுக-துக்கங்களை அனுபவிக்கிறான்..."
என்று வேதம் சொல்கிறது..

அந்த 'மாயையை அஞானிக்கு காட்டுவதும்' அந்த ப்ரம்மம் தான்.

அந்த மாயை தரும் அனுபவத்தில், சுகங்களை, துக்கங்களை அனுபவிக்கும் அஞானி, அந்த ப்ரம்மத்திடம் பக்தி செய்து மாயையை விலக்க பிரார்த்தனை செய்யாதவரை, அவர் மாயையை விலக்குவதும் இல்லை, தன்னை வெளிப்படுத்தி கொள்வதும் இல்லை.
"நாராயணனை பக்தி செய்யாமல், மாயை விலகவே விலகாது"
என்று வேதம் கூறுகிறது.

மேல் சொன்னதை, நம் அனுபவத்தில் புரிந்து கொள்ள, இதோ எளிதான உதாரணம்.. 
குருவே துணை...
ஒருவன் ஒரு சினிமா தியேட்டருக்கு சென்று, அமர்ந்தான்..
அங்கு இருக்கும் விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.
அடுத்த நொடி,
பெரிய பெரிய மலைகள், பெரிய பெரிய உருவங்கள், பல விதமான ஒலிகள், ஒளிகள் அவன் முன் வந்துபோயின..

அந்த காட்சியினால், பல விதமான அனுபவங்களை (சிரிப்பு, துக்கம், கோபம், பொறாமை) தானும் அனுபவித்தான்...
காட்சிகள் மாற, காட்சிகள் மாற, 
ஒரு சமயம் உண்மையாகவே அழுதான்..
ஒரு சமயம் உண்மையாகவே சிரித்தான்..
ஒரு சமயம் உண்மையாகவே பயந்தான்...
இப்படி பல அனுபவங்கள் அவனுக்குள் உண்டானது...





திடீரென்று, காட்சிகள் மறைந்தன..
விளக்குகள் எரிந்தது..
பல வித காட்சிகளை இது வரை காட்டி, தனக்கு பல வித அனுபவங்களை கொடுத்த அந்த திரை,
இப்பொழுது தூய்மையான வெள்ளை திரையாக இருந்தது..

அவன் இதுவரை அனுபவித்த அனுபவங்கள் அனைத்துமே "பொய்" என்று உடனே உணர்ந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம். 
அது தான் இப்படி வித விதமான காட்சிகளை தந்தது என்று அறிந்தான்..

வெள்ளை திரை தான் நிஜம்..அது தான் என்றுமே உள்ளது.. 
என்று அறிந்தான்.

அந்த வெள்ளை திரை தான், தன்னை மறைத்து கொண்டு, 
பல வித காட்சிகளை தனக்கு தந்து, 
தன்னை அழ வைத்தது, 
தன்னை சிரிக்க வைத்தது 
என்று அறிந்தான்..

ஆபரேட்டர், காட்சிகளை நிறுத்தியதும்,
அவன் கண்களுக்கு தெரிந்த காட்சிகள் மறைந்ததும்,
மீண்டும் வெள்ளை திரையே மீண்டும் வெளிப்பட்டதை உணர்கிறான்..

"வெள்ளை திரையை "ப்ரம்மம்" என்று ஒப்பிட்டு,
அந்த ஆபரேட்டரை "ஞானி" என்று ஒப்பிட்டு,
அதில் காணப்பட்டும் பல வித காட்சிகளை, நாம் உலகத்தில் காணும் காட்சிகளாக (மாயை) ஒப்பிட்டு பார்க்கும் போது"
வேதம் சொல்லும், மேல் சொன்ன ரகசிய தத்துவங்கள்,
நமக்கும் எளிதாக புரிந்து விடுகிறது..

ஞானியான மகாத்மாக்கள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்கி விடும் சக்தி கொண்டுள்ளதால், அந்த மாயை தரும் அனுபவங்களில் அவர்கள் சிக்குவதில்லை..."
அவர்கள் மறைந்து கொண்டிருக்கும் ப்ரம்மத்தையே கவனிப்பதால், எப்பொழுதும் சமநிலையிலேயே உள்ளனர்..
ஞானியான மகாத்மாக்கள் பரபரம்ம அநுபவத்திலேயே உள்ளனர்.

அஞானிகள், "உலகத்தில் நடக்கும் விஷயங்களை 'மாயை' என்று ஒதுக்க முடியாததால், அந்த மாயை தரும் அனுபவங்களில் சிக்கி விடுகின்றனர்..

'இது வெறும் காட்சி தான், நாம் இந்த உடலை விட்டு ஒரு நாள் நிச்சயம் சென்று விடுவோம்' என்று தெரிந்தாலும், உலக மாயையை 'பொய்' என்று உதற முடியாமல் தவிக்கின்றனர்..
காட்சிகளுக்கு கட்டுப்பட்டு, பல வித அனுபவங்களை மாயை என்று தெரிந்தாலும் அனுபவிக்கின்றனர்..

இப்படி, தானே மாயையை விலக்க முடியாத அஞானிகள், ஒரு ஆத்ம ஞானியை "குருவாக" சரண் அடைந்தால், திரைக்காட்சிகளை விலக்கும் ஒரு ஆபரேட்டர் போல, குருநாதர் வந்து மாயை என்ற திரையை விலக்கி விட்டு விடுகிறார்...

குருவை சரண் அடைந்த அஞானியும், ஞானி அனுபவிக்கும் ப்ரம்மத்தை அறிந்து கொள்கிறான்.. 

இந்த உதாரணத்துடன், இப்பொழுது மீண்டும் முதலில் இருந்து படித்து பாருங்கள்...
அப்பொழுதுதான், 
ஞானி, "பிரம்மத்தை எப்படி பார்க்கிறார்?".. 
ஞானி, "எப்படி உலகில் நிகழும் பலவித காரியங்களை பார்க்கிறார்?". 
ஞானி "எப்படி சுக-துக்கங்களை சமமாக பார்க்கிறார்?" 
என்று புரிந்து கொள்ள முடியும்.

அருமையான ஹிந்து தர்மத்தை விட்டு, போலி மதங்களுக்கு போக மனம் வருமா?.. 
அற்புதங்களை தேக்கி வைத்துள்ள ஹிந்து தர்மத்துக்கு, போலி மதங்களை விட்டு, வெளிநாடுகளில் பலர் வந்து குவிகின்றனர்...
பாரதத்தில் உள்ள ஹிந்துக்கள் தங்கள் பெருமையை உணர வேண்டாமா?... சிந்திக்க வேண்டும்..

ஹிந்து தர்மத்தின் பெருமையை உலகுக்கு சொல்வோம்...

ஹிந்துக்களை போற்றுவோம்..
ஞானிகள், சந்நியாசிகள், மகாத்மாக்களை போற்றுவோம்..
இடியும் நிலையில் உள்ள கோவில்களை புதிது செய்து காப்போம்..




வாழ்க ஹிந்துக்கள்.