Followers

Search Here...

Friday 6 March 2020

நமஸ்காரம், சரணம் (சரணாகதி) - இரண்டுக்கும் என்ன வித்யாசம்? தெரிந்து கொள்ள வேண்டாமா ஹிந்துக்கள்?...

நமஸ்காரத்துக்கும் (கும்பிடுதல்), சரணாகதிக்கும் (சரணம்) உள்ள வேற்றுமை என்ன? 

ஒரு கற்புள்ள பெண்,
"தன் கணவனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பான்"
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கும் திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் தனியாக பிற முயற்சிகள் (சாதனை) செய்யாமல் இருப்பாள்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை என்று இருப்பாள்.



அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்"
என்று திடமாக நம்புவாள்.
"இன்னொரு புருஷன் இவனை விட புத்திசாலி திறமைசாலி என்றாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், தன் புருஷனே தன்னை காப்பாற்றுவான்" என்று இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பாள்.
அதேபோல, கற்புள்ள பெண்,
"தன் புருஷன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி! கெட்டது செய்தாலும் சரி!"
என்று தனக்கு என்ன லாபம்? என்று சிந்திக்காமல் இருப்பாள்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பாள்.

இது கற்புக்கரசிகளுக்கான 'லட்சணம்'.  அன்ய சாதனை செய்யாமல், அன்ய ஆஸ்ரயம் தேடாமல், அன்ய பலனில் எதிர்பார்ப்பு இல்லாமல், கற்புக்கரசி பெண்கள் இருக்கின்றனர்.
இதையே "சரணம்" (சரணாகதி)  என்று சொல்கிறோம்.

கற்புக்கான 'லட்சணம்' தான், "வைஷ்ணவ ஸித்தாந்தம்".

"பெண்" என்ற இடத்தில் நாராயணன் மீது பக்தி கொண்ட நம்மை போன்ற வைஷ்ணவர்களை மாற்றி கொண்டு,
"கணவன்" என்ற இடத்தில் "நாராயணன்" என்று மாற்றி போடும் போது, வைஷ்ணவர்கள் "நிலை" நமக்கு புரியும்.
வைஷ்ணவ "சித்தாந்தமும்" நமக்கு புரியும்.

சிவன் கோவிலுக்கு போய் "சிவபெருமானே !! சரணம்.. சரணம்" என்று சொல்லிவிட்டு,
அடுத்து ஐயப்பன் கோவிலுக்கு சென்று "சரணம் சரணம் ஐயப்பா" என்று சொன்னால், அது சரணம் ஆகாது. சரணாகதி ஆகாது.

பெயரளவில் "சரணம் சரணம்" என்று கத்தி விட்டால், அது சரணாகதி ஆகி விடாது. 
இப்படி செய்வது "நமஸ்காரம்" (கும்பிடுதல்) என்று சொல்கிறோம்.

அலுவலகத்தில், நமக்கு மேல் உள்ள அதிகாரியை பார்த்து சல்யூட் வைப்பதும், பெரியவர்களை கண்டால் வணக்கம் செய்வதும், நம்  மரியாதையை காட்ட மட்டுமே !

அதுபோல,
தெய்வத்துக்கு மரியாதை தரும் அளவில் உள்ள பக்தன், எந்த கோவிலுக்கு போனாலும் அந்த தெய்வத்தை தனக்கு தெரிந்த அளவுக்கு "சரணம், போற்றி, வாழ்க" என்று துதி செய்கிறான்.


"மரியாதை உள்ள பக்தன்" என்று இப்படிப்பட்டவர்களை தெய்வங்களும் அறிந்து கொள்கிறார்கள்.

"இவன் சரணம் சரணம் என்று சொல்லிவிட்டான்" என்பதற்காக "சரணாகதி" செய்து விட்டான் என்று தெய்வங்களும் நினைப்பது இல்லை.

ஒரு கற்புள்ள பெண், "தன் கணவனே என் தெய்வம்" என்று இருப்பது போல, "நாராயணனே என் தெய்வம்" என்று சொல்லும் பக்தன் (வைஷ்ணவன்), ஒரு கற்புள்ள பெண் எப்படி இருப்பாளோ! அது போல, தானும் தன் தெய்வத்துக்கு நேர்மையாக இருக்கிறான். 

"நாராயணனே என் தெய்வம்!" என்று சரணாகதி செய்த வைஷ்ணவன் எப்படி இருக்கிறான்?
1.
"நாராயணனே தனக்கு தேவையான அனைத்தையும் சாதித்து கொடுப்பார்" 
என்று தீர்மானம் செய்து கொண்டு,
"தனக்கு திறமை இருக்கிறதே!!" என்று தன் வரையில் "தனியாக ஒரு யோகாஸனம்  செய்வோமா? தியானம் செய்வோமா?"
என்று கூட நினைக்காமல் இருப்பான்.
அதாவது
"வேறு சாதனைகள் செய்வது (அன்ய சாதனை) இல்லை" என்று இருப்பான்.






2.
அதேபோல,
"நாராயணனே தன்னை காப்பாற்றுவார்"
என்று திடமாக நம்புவான்.
"இன்னொரு தெய்வம் இருக்கிறார், அவர் அருள் உடனே செய்து விடுவார். உடனே கல்யாணம் நடக்கும், வேலை கிடைக்கும்"
என்று யார் சொன்னாலும், ஏறெடுத்தும் பார்க்காமல், "நாராயணனே தன்னை காப்பாற்றுவார்" என்று திடமாக நம்புவான்.
அதாவது,
"வேறு ஒருவரை நம்புவது (அன்ய ஆஸ்ரயம்) இல்லை" என்று இருப்பான்.

அதேபோல,
"நாராயணன் பார்த்து தனக்கு நல்லது செய்தாலும் சரி, கெட்டது செய்தாலும் சரி. அவர் இஷ்டம்"
என்று தனக்கு லாபமா, நஷ்டமா என்று சிந்திக்காமல் இருப்பான்.
அதாவது,
"வேறு ஒரு பலனை எதிர்பார்ப்பது (அன்ய பலன்) இல்லை" என்று இருப்பான்.

"நமஸ்காரம் செய்பவர்களால், சரணாகதி செய்தவர்கள் மனநிலையை புரிந்து கொள்ள முடியாததற்கு" இதுவே காரணம்.

நமஸ்காரம் வேறு!...  சரணாகதி வேறு! என்று அறிவோம். 

ஒரு தெய்வத்திடம் சரணாகதி செய்தவனை, வெறும் நமஸ்காரம் செய்து தெய்வத்துக்கு மரியாதை செய்பவன்,
"நீங்கள் இந்த கோவிலுக்கு தான் போவீர்களா? அந்த கோவிலுக்கு போக கூடாதா?" 
என்று எளிதாக கேட்டு விடுவான்.

ஒரு கற்புள்ள பெண்ணை பார்த்து,
"உன் கணவன் நல்லவன் தான்!! 
ஆனால், பக்கத்து வீட்டுக்காரனும் நல்லவன் தான்! 
நீ அவனையும் வந்து பார்க்க கூடாதா?" என்று கேட்டால், அந்த பெண் எத்தனை ஆத்திரப்படுவாளோ! எரிச்சல் அடைவாளோ! அதே நிலையை சரணாகதி செய்தவன் அனுபவிக்கிறான்.

இந்த வித்யாசத்தை அந்த காலங்களில் அறிந்து இருந்தார்கள். 
அவரவர் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்தாமல் இருந்தார்கள். 

வெளிநாட்டிலிருந்து வந்த வந்தேறிகள், "தனக்கு ஒரு தெய்வம் உண்டு" என்று சொன்ன போது, இதன் காரணத்தால்,
"அவர்களை மத மாற்றம் செய்யவோ, அவர்கள் தன் தெய்வத்தை பார்த்தால் என்ன?" என்றோ கேட்கவே இல்லை.

இந்த கீழ்த்தரமான புத்தி, அந்நியர்களின் நுழைவு 947ADக்கு பின்னர் பாரத மக்களிடம் விதைக்கப்பட்டது.
"ஏன் எங்கள் தெய்வத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ள கூடாது.. வந்து பாருங்கள்"
என்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் முக்கியமாக கிறிஸ்தவ நுழைவுக்கு பின்னர் அதிகமானது.

வாஸ்கோட காமா என்ற கிறிஸ்தவன் 1498ADல் காலடி எடுத்து வைத்த காலத்திலிருந்தே இந்த பேச்சுக்கள் இந்தியாவில் பரவப்பட்டது. 
அந்நிய தேச இஸ்லாமியர்கள் வடபாரத தேசங்களை பிடித்துக்கொண்டு இருந்த சமயத்தில், 
அந்நிய தேச கிறிஸ்தவர்கள் தென் பாரத தேசங்களை பிடித்து கொண்டார்கள். 
அந்நிய தேச இஸ்லாமியர்கள், கட்டாயத்தால் மதம் மாற்ற,
அந்நிய தேச கிறிஸ்தவர்கள், இது போன்ற கீழ்த்தரமான பேச்சுக்கள் மூலமாகவும், 
கொஞ்சம் இடம் கொடுத்தால், அடுத்தவன் வணங்கும் தெய்வத்தையே கேலி செய்யும் அளவுக்கும் போனார்கள். 
சமயம் கிடைத்த போதெல்லாம், கோவிலை தாக்குவதும் நடந்தது.
சென்னையில் உள்ள கபாலீஸ்வரர் இருந்த கோவிலை இடித்து, சாந்தோம் சர்ச் கட்டிவிட்டனர். 
மற்றவன் தெய்வ நம்பிக்கையை கொச்சை படுத்த இயற்கையாகவே விரும்பாத பாரத மக்கள், ஒரு மைல் தள்ளி இன்று உள்ள கபாலீஸ்வரர் கோவிலை அமைத்துக்கொண்டனர்.




காளையார் சிவன் கோவிலுக்கு கோபுரங்கள் கட்டி அழகு பார்த்த, மருது சகோதரர்களை, பிடிக்க முடியாமல் பிரிட்டிஷ் நாட்டு  கிறிஸ்தவர்கள்,
நம் நாட்டின் குறுநில அரசனை பிடிக்க, "காளையார் கோவிலை வெடி வைத்து தகர்த்து விடுவோம்" என்று சொல்லி மிரட்ட,
கோவிலை காப்பாற்ற, மகா வீரர்களான மருது சகோதரர்கள் தானாக வந்து சரண் அடைந்தனர்.


கோவிலை வைத்து இவர்களை பிடித்து, இருவரையும் பொது மக்கள் பார்வையில் தூக்கில் போட்டு கொன்றனர்.
கிறிஸ்தவர்கள், நம் நாட்டில் ஆதிக்கம் செலுத்திய போக்கு இது என்பதை சரித்திரம் நமக்கு காட்டுகிறது.

சரணாகதி என்றால் என்ன புரிந்து கொள்ள முடியாத அந்நியர்கள், செய்த பெரும் குழப்பமே, இன்று வரை நம்மிடையே நீடிக்கிறது.

ஹிந்துக்கள் அறிவு பெற வேண்டியது அவசியம்.

"வெட்கமில்லாமல் எங்கள் தெய்வத்தை வந்து பாருங்கள்" 
என்று சொல்லும் போலி மதங்களுக்கு ஏமாற்றப்பட்டு போன பாரத மக்களை, மீண்டும் ஹிந்துவாக ஆக்க வேண்டியதும் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க ஹிந்துக்கள்.
வாழ்க நம் ஹிந்து தர்மம்.

குருவே துணை... 

Thursday 5 March 2020

சீமான் யார்? சீமான் சரியா, தவறா? தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

"கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்.
"புத்தி" உள்ளவனை "புத்திமான்" என்று சொல்கிறோம்.
'ஸ்ரீ'யை உடையவனை "ஸ்ரீமான்" என்று சொல்லகிறோம்.
"ஸ்ரீ" என்ற சப்தம் "சமஸ்க்ரித் சொல்". இதை தமிழன் அறிந்து கொள்ள வேண்டும்.
"ஸ்ரீ" என்ற ஒரு சொல்லுக்கு 6 அர்த்தங்கள் சொல்லப்படுகிறது. இதை அறிய...இங்கே படிக்கவும்.




6 அர்த்தங்கள் உடைய "ஸ்ரீ" என்ற சமஸ்க்ரித சொல்லைதமிழில்
"திரு" என்று சொல்கிறார்கள்.

"திரு" என்ற ஒரு சொல்லுக்குள் இந்த 6 அர்த்தங்கள் இல்லை.
உண்மையில்,
"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு 6 அர்த்தங்களும் உடைய ஈடான தமிழ் சொல்லே கிடையாது.
இருந்தாலும்,
மரியாதைக்கான சப்தமாக, செல்வத்தை குறிக்கும் சப்தமாக,
தமிழர்கள் "ஸ்ரீ" என்ற இடத்தில் "திரு" என்று சொல்லை பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

"ஸ்ரீ" என்ற 6 அர்த்தங்கள் கொண்ட இந்த சொல்லுக்கு, "திரு" என்ற எழுத்தே ஈடாகாது என்று சொல்லும் போது,
"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பதிலாக "சீ" என்றும் பயன்படுத்துவது மஹா முட்டாள்த்தனம்.
தமிழ் அறிவுள்ளவன் ஏற்கமுடியாத சொல் இது.

ஸ்ரீ என்ற எழுத்து தமிழில் இல்லாததால், 'ஸ்ரீ' என்ற எழுத்துக்கு பதிலாக "சீ" என்ற எழுத்தை பயன்படுத்துகின்றனர்.
இது மஹா முட்டாள்த்தனம். 
தமிழ் அறிவுள்ளவன், ஏற்கமுடியாத சொல் இது. 
இதனால் ஏற்படும் அர்த்தத்தை, தமிழ் அறிவுள்ளவன் ஏற்கவே முடியாது.


"ஆகஸ்ட்" என்ற ஆங்கில சொல்லையும், "ஸ்" என்ற எழுத்து தமிழில் இல்லாததால், அதற்கு பதிலாக "ஆகத்து" என்று பயன்படுத்துகின்றனர்.
"ஆகஸ்ட்" என்ற ஆங்கில  வார்த்தைக்கு அர்த்தம் பெரிதாக ஒன்றும் இல்லை என்பதால், "ஆகத்து" என்று சொன்னாலும் குறையில்லை.

ஆனால்,
6 அர்த்தங்களை உடைய "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பதிலாக "சீ" என்று மாற்றினால், அர்த்தமே மாறி விடுகிறது.
இதனால் ஏற்படும் அர்த்தத்தை தமிழ் அறிவுள்ளவன் ஏற்கவே முடியாது.

"சீ"யை உடையவன் "சீமான்" என்பதற்கு அர்த்தம் "ஸ்ரீமான்" அல்ல.

"சீமான்" என்ற சொல்லுக்கும், ஸ்ரீமான் என்ற சொல்லுக்கும். சம்பந்தமே இல்லை.

"சீ" என்ற தமிழ் சொல்லுக்கு "வெறுப்பு" என்று அர்த்தம்.

"சீ"யை உடையவன் "சீமான்" என்பதற்கு, "வெறுப்பை உடையவன் சீமான்" என்று அர்த்தம்.

"சீமான்" என்ற பெயர்!! வெறுப்பை உமிழும் குணம் கொடுக்கும் என்பதாலேயே லக்ஷ்மிக்கும் சீமானுக்கும் ஆகாது.

ஆதலால்,
உண்மையான தமிழ் அறிவு உள்ள தமிழன், "சீமான்" என்ற பெயரை தமிழர்கள் அறவே ஒதுக்க வேண்டும்.

வெறுப்பை உமிழும் "சீமான்" என்ற பெயரை தமிழ் உணர்வு உள்ளவன் வெறுப்பான்.

ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியை உடைய "ஸ்ரீமான்" நாராயணனே நமக்கு கதி என்று தெய்வ பக்தியுடன் வாழ்வோம். தமிழ் எது என்று தெரியாத போலி தமிழனை ஒதுக்குவோம்.

ஆங்கில பெயரான ஆகஸ்ட் என்ற பெயரை கூட ஆகத்து என்று மாற்றி பேசி மற்றவர்களை குழப்புவதாலும், 
மேலும் பல குறைகளாலும் தமிழ் மொழி தேசிய மொழியாகவும் ஆக முடியாத நிலையில் உள்ளது.  தமிழ் மொழியில் உள்ள குறைகளை அறிய இங்கே படிக்கவும்.




"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அர்த்தம் என்ன? இதன் 6 அர்த்தங்களை அறிந்து கொள்வோம்.

"புத்தி" உள்ளவனை "புத்திமான்" என்று சொல்கிறோம்.
"கல்வி" உடையவனை "கல்விமான்" என்று சொல்கிறோம்.
அது போல,
"ஸ்ரீ"யை உடையவனை "ஸ்ரீமான்" (ஸ்ரீமந்) என்று சொல்கிறோம்.
'ஸ்ரீ'யை உடையவர் யார்?
என்ற கேள்விக்கு பதிலாக "ஸ்ரீமந் நாராயண" என்று சொல்லி,
"ஸ்ரீயை உடையவர் அந்த நாராயணனே!" என்று பரமாத்மாவை பஜிக்கிறோம்.




"ஸ்ரீ" என்ற சப்தம் 6 அர்த்தங்களை உடையது. 
இந்த 6 அர்த்தங்களையும் உடையவளாக மஹாலக்ஷ்மி ஒருவளே இருப்பதால்,
மகாலட்சுமிக்கு "ஸ்ரீ" என்றும் பெயர்.

அந்த மஹாலக்ஷ்மி (ஸ்ரீ), நாராயணனின் இதயத்திலே (வக்ஷஸ்தலம்) இருப்பதால், பெருமாளுக்கும் "ஸ்ரீ" என்ற பெயர் சேர்ந்து "ஸ்ரீவத்சன்" என்று இருக்கிறார்.

ஆதலால், "ஸ்ரீ" என்ற சொல் மஹாலக்ஷ்மியையும் குறிக்கிறது, பெருமாளையும் குறிக்கிறது.

"ஸ்ரீ மந் நாராயண" என்று நாமமே அபேதமாகவும், பேதமாகவும் உள்ளது.

மஹாவிஷ்ணு, ஸ்ரீ என்ற மஹாலக்ஷ்மியை உடையவர் (ஸ்ரீமான் /ஸ்ரீமந்) என்ற ரீதியில் பார்த்தால், மஹாலக்ஷ்மி வேறு, மஹாவிஷ்ணு வேறு என்பது போல பேதமாக தெரியும்.

மகாவிஷ்ணுவே ஸ்ரீயாக இருக்கிறார் (ஸ்ரீமான்) என்ற ரீதியில் பார்த்தால், மகாலட்சுமியும் அவர்தான், மஹாவிஷ்ணுவும் அவர்தான் என்று அபேதமாக தெரியும்.
பாற்கடலில், மகாவிஷ்ணுவுக்கு பத்தினியாக மஹாலக்ஷ்மி பேதமாக தெரிகிறாள்.

வைகுண்டத்தில், பெருமாள் மட்டுமே இருக்க அபேதமாக தெரிகிறார். அங்கு, இதயத்தில் மஹாலக்ஷ்மி என்ற ஸ்ரீ மறைந்து இருக்கிறாள்.
இப்படி "பேதமாகவும், அபேதமாகவும்" இருக்கும் "ஸ்ரீ மந் நாராயண" என்ற நாமத்தை மனதில் எப்பொழுதும் சொல்லிக்கொண்டு இருந்தாலே நமக்கு அனைத்து சௌக்கியங்களும் உண்டாகிவிடும்.

"ஸ்ரீ" என்ற சொல்லுக்கு பொதுவாக "திரு" என்று தமிழில் சொல்வார்கள்.

உண்மையில் "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு ஈடான தமிழ் சொல்லே கிடையாது.
"ஸ்ரீ" என்ற சப்தம் 6 அர்த்தங்களை உடையது என்று பார்த்தோம்.
6 அர்த்தங்கள் கொண்ட இந்த ஒரு சொல்லுக்கு, உண்மையாக "திரு" என்ற ஒரு சொல் ஈடாகாது.

"ஸ்ரீ மந்நாராயண" என்ற சொல்லும் போது, "ஸ்ரீ" என்ற சொல்லின் 6 அர்த்தங்களை கொஞ்சம் மனதில் அசைபோட்டு நாம் பார்த்தால் கூட,  நமக்கு ஏற்படும் பலவித அனுபவங்கள்,
"திரு நாராயண" என்று சொல்லும் போது ஏற்படாது.

6 அர்த்தங்களும் தெரிந்த எவருமே இதை  உணர்வார்கள்.
அந்த 6 அர்த்தங்களை இனி பார்ப்போம்.
"ஸ்ரீ" என்ற சப்தத்துக்கு 6 அர்த்தங்கள் என்ன?:

1. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு சகல தோஷங்களையும் போக்கிவிடுபவள் (ஸ்ருனாதி)  என்று ஒரு அர்த்தம்:

மஹாலக்ஷ்மி நமக்கு தாய்.
பூமியாக இருப்பவளும் அவளே!
இயற்கையாக இருப்பவளும் அவளே!
நாம் என்ன குதித்தாலும், மிதித்தாலும், உடைத்தாலும் பூமி மாதா கோபம் கொள்ளாமல் இருப்பதிலேயே நமக்கு இது புரியும்.
நமக்கு தாயான மஹாலக்ஷ்மி, நாம் தவறு செய்து விட்டு அவள் முன் நின்றாலும், தாய் என்ற பாசத்தினாலேயே நம் குற்றங்களை கண்டு கொள்ள மாட்டாள். 
மேலும்,
நமக்காக நம் அப்பாவான பெருமாளிடம் சிபாரிசு செய்து நமக்கு வேண்டியதை அவரே செய்ய சொல்லி தந்து விடுவாள்.




பெருமாள், நாம் அனைவருக்குமே தந்தை.
இருந்தாலும் லோகத்தை நிர்வகிப்பவர். 

தன் பிள்ளையே ஆனாலும், லோகத்தை கெடுக்கும் காரியங்களை, மற்ற பிள்ளைகளை கெடுக்கும் காரியங்களை செய்து விட்டு தன் முன் வந்து நின்றால், தவறு செய்தால் தண்டித்து விடுவார்.

இத்தனை செய்தும் திருந்தவில்லையே இவன்! என்று நம் தோஷங்களை பார்த்து எரிச்சல் அடைவார்.

"என்ன தான் தவறு செய்தாலும், நம் குழந்தைகளின் தோஷங்களை பார்க்க கூடாது"
என்று பெருமாளிடம் சிபாரிசு செய்பவள் மஹாலக்ஷ்மி.
தாயார் சொன்னால், பெருமாள் தோஷங்களை பார்க்காமல் அனுக்கிரஹம் செய்கிறார்.
ஆதலால் தான்,
கோவிலுக்கு சென்றால் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பெருமாளை பார்க்கும் பழக்கம் நம்மிடம் இருக்கிறது.

மஹாலக்ஷ்மி சீதையாக அவதரித்த போது, 
"இவள் கண்ணை பிடுங்கு! மூக்கை திருகு! நாக்கை இழு! இதயத்தை பிள!"
என்று 8 மாதங்களாக ராக்ஷஸிகள் ஓயாது மிரட்டிக்கொண்டே இருக்க, சீதாதேவி தாங்கமுடியாத துக்கத்தை அனுபவித்தாள்.

சீதாதேவியை தேடி இலங்கை வந்த போது இவர்கள் இப்படி பேசுவதை ஹனுமானே பார்த்து கோபப்பட்டார்.
மரங்களையும், ராக்ஷஸர்களையும் ஒரே அடியில் வீழ்த்திவிடும் மஹாபலசாலியான ஹனுமான்,
"இந்த ராக்ஷஸிகளின் கண்ணை பிடுங்கி எறிந்து விடவா? இவர்கள் மூக்கை திருகி விடவா? இவர்கள் நாக்கை அறுத்து விடவா? இவர்கள் இதயத்தை பிளந்து விடவா?"
என்று ஆத்திரத்தோடு சீதா தேவியிடம் அனுமதி கேட்க, சீதா தேவி என்ன பதில் சொன்னாள்? என்று நாம் கவனிக்கும் போது தான், நமக்கு மஹாலக்ஷ்மி தாயாரின் குணம் என்ன என்று புரியும்...

சீதா தேவி ஹனுமனை பார்த்து சொல்கிறாள்,
"குழந்தைகள் தவறு செய்தால் தண்டிக்க முடியுமா? 
அவரவர்கள் ஸ்வபாவம் (குணம்) தானே தவறு செய்ய வைக்கிறது. இவர்களுக்கு இப்படி பேசுவது தான் ஸ்வபாவம் (குணம்) என்றால், என்னை திட்டிக்கொண்டே இருக்கட்டுமே ! 
கொலையே செய்து விடுவேன்! என்று சொல்பவர்களிடத்திலும், ஆரியர்கள் (உயர்ந்த பண்புள்ளவர்கள்) கருணையே செய்ய வேண்டும்.
ஆதலால், 
நான் மட்டுமல்ல, ஹனுமான்!! நீயும் இவர்களை மண்ணிக்க வேண்டும். 
ஸ்ரீ ராமர் இவர்கள் செய்யும் அபசாரங்களை கேட்டால், அபசாரங்களை மன்னித்தாலும், சிறிது கண் சிவக்கும். 
இவர்கள் செய்த அபச்சாரங்களை கண்டு கொள்ள கூடாது என்று ஸ்ரீ ராமரிடம் நான் சொன்னேன் என்று சொல். 
இதையே எதிர்பார்க்கிறேன் என்று சொல்."
என்று சொன்னாள்.

இதுவே மஹாலக்ஷ்மி தாயாரின் தாயுள்ளம்.  
தாயாரிடம், பாபங்கள் செய்து விட்டு நாம் நின்றாலும், தோஷங்களை பார்க்காமல், சகல தோஷங்களையும் போக்கிவிடுபவள் (ஸ்ருனாதி) என்பதால் மகாலட்சுமிக்கு 'ஸ்ருனாதி' என்று பெயர்.

2. ஸ்ரீ என்ற சொல்லுக்கு குணபரிபூரணியாக இருப்பவள் (ஸ்ரீநாதி ச குணை: ஜகத்) என்று ஒரு அர்த்தம்:

தாயாரின் குணங்களை ஒருவன் அறிந்து கொண்டாலே, பேரானந்தம் அடைவானாம்!



இவளிடம் உள்ள குணங்களே, நமக்கு பேரானந்தத்தை தந்து விடுமாம்.

மற்றவர்களுக்கு பேரானந்தத்தை தரக்கூடிய குணங்களை கொண்டிருக்கிறாளா? எப்படி?
அனசூயை போன்ற ரிஷி பத்தினிகள், சீதா தேவியின் குணத்தை கண்டு பேரானந்தம் அடைந்தாள் என்பது பெரிய ஆச்சர்யமில்லை.




அசோகவனத்தில்,
த்ரிஜடை என்ற ஒரு ராக்ஷஸியை "சீதையை அங்கும் இங்கும் போக விடாதே, கண்காணித்து கொள்" என்று காவலுக்கு வைத்தான் ராவணன்.

காவலுக்காக வந்த இந்த ராக்ஷஸி, சில நாட்கள் சீதாதேவியுடனேயே இருக்க இருக்க,
"இப்படி ஒரு பெண் உலகத்தில் இருப்பாளோ? 
இப்படி ஒரு தாயுள்ளம் ஒரு பெண்ணுக்கு இருக்குமா? 
இப்படி ஒரு குணமா?" 
என்று பார்த்து பார்த்து பிரமித்து போனாள்.
காவலுக்கு வந்த இவள், சீதாதேவியின் குணத்தாலேயே ஈர்க்கப்பட்டு, சீதாதேவியின் தாசி போல இருந்து,
மிரட்டும் மற்ற ராக்ஷஸிகளை அடக்கி கொண்டு,
சீதாதேவிக்கு அனுகூலமாக இருந்தாள்.
சீதாதேவிக்கு அந்தரங்க சகி ஆகிவிட்டாள். 
பக்தையாகி விட்டாள்.
தாயாரின் குணங்களை இவள் அறிந்து கொண்டதாலேயே, பேரானந்தம் அடைந்தாள்.
ஒரு சிறு குழந்தை நமக்கு முன்னால் தன் சிறு கைகளை குவித்து கொண்டு வணங்கி நின்றால், அது தனக்கு ஏதாவது வேண்டும் என்று கேட்காமல் போனாலும், அந்த குழந்தைக்கு ஏதாவது நம் கையால் கொடுக்க வேண்டும் என்று தோன்றுமல்லவா?
அது போல,
ஆயிரம் பாவங்கள் செய்து விட்டு வந்தாலும்,
எதிர்பார்த்து வந்தாலும், எதிர்பார்க்காமல் வந்தாலும்,
ஒரு முறை தாயார் சன்னதி முன் நாம் கை குவித்து நின்று விட்டால் கூட, தாயார் "என் குழந்தை கை குவித்து நிற்கிறதே!!" என்று மனம் பதைபதைத்து, தன் ஐஸ்வர்யத்தையே அள்ளி கொடுத்துவிடுவாளாம்.
சிறிது நேரத்தில், "ஐயோ இந்த ஐஸ்வர்யம் இந்த பிறவிக்கு தானே!! நிரந்தரமானது இல்லையே!" என்று நினைத்து, கைவல்யம் என்ற மோக்ஷமும் கிடைக்க அனுகிரஹித்து விடுவாளாம்.
சிறிது நேரத்திலேயே, தனக்கு முன்னால் தன் குழந்தை கை குவித்து நிற்கிறதே !! கைவல்யம் போதாதே ! இவன் தந்தை நாராயணன் இருக்கும் வைகுண்டம் என்ற வீடு கிடைக்க செய்து விடுவோம்"
என்று நினைத்து பெருமாளிடம் மோக்ஷம் வரை சிபாரிசு செய்து விடுவாளாம் மஹாலக்ஷ்மி தாயார்.

மோக்ஷமும் கிடைக்க சிபாரிசு செய்த போதும், தாயார் தலை குனிந்து வருத்தப்படுவாளாம். 

இத்தனை கொடுத்தும் "என் குழந்தை எனக்கு எதிராக கை குவித்து நின்றதே!" என்று தாபம்  நீங்காமல் தலை குனிந்து வருத்தப்படுவாளாம்.
ஒரு முறை விளையாட்டாக கை குவித்து நின்றதற்கே தாயார் இப்படி நமக்காக பரிதவிப்பாள் என்றால், மஹாலக்ஷ்மியின் தாயுள்ளத்தை என்னவென்று சொல்வது?

சீதாதேவியை மிரட்டி கொண்டே இருக்கும் பிற ராக்ஷஸிகளை பார்த்து, த்ரிஜடை இதே விஷயத்தை எச்சரித்து சொல்கிறாள் என்று பார்க்கிறோம்.




த்ரிஜடை மற்ற ராக்ஷஸிகளை பார்த்து,
"நீங்கள் ராவணன் சொன்னபடியே மிரட்டுங்கள், திட்டுங்கள். தடுக்கவில்லை!! 
ஆனால், சீதை உங்களிடம் கோபம் கொள்ளாமல் இருப்பதற்காகவாவது, நீங்கள் திட்டுவதற்கு முன், ஒரு முறை கை கூப்பி வணங்கி விட்டு, பிறகு திட்டிக்கொள்ளுங்கள்"
என்று சொல்கிறாள் என்று கவனிக்கும் போது தான், தாயாரின் உள்ளம் எத்தகையது என்று நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

தாயாரின் குணங்களை பார்த்து, கெட்டவன் கூட "குணபரிபூரணியாக இருக்கிறாளே!"  என்று நினைக்கும்படியாக, மகாலட்சுமி இருப்பதால், அவளுக்கு "ஸ்ரீநாதி" என்றும் பெயர்.

3 "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு அனைவராலும் ஆச்ரயிக்க படுகிறாள் (ஸ்ரீயதே) என்று ஒரு அர்த்தம்:




72 சதுர் யுகங்கள் ஹிரண்யகசிபு "தானே ஈஸ்வரன்" என்று 14 லோகங்களையும் சேர்த்து ஆண்டுகொண்டிருந்தான்.
பெருமாள் "உண்மையில் இவன் தன்னுடைய துவார பாலகன் தானே!" என்று அமைதியாக இருந்து விட்டார்.
கடைசியாக,
பிரகலாதன் "தூணில் இருக்கிறார்" என்று சொல்ல,
அவன் வாக்கை சத்தியம் செய்வதற்காக நரசிம்மராக வெளிப்பட்டு நிற்க, ஹிரண்யகசிபு வாளை எடுத்துக்கொண்டு வெட்ட வர, அவனுடன் சண்டையிட்டு, தன் மடியிலேயே போட்டு, கிழித்து எறிந்து விட்டார்.

இப்படி உலகையே மிரட்டிக்கொண்டிருந்த ஹிரண்யகசிபுவை சம்ஹாரம் செய்து விட்டு, சிங்க பெருமாளாக உட்கார்ந்து கொண்டு இருக்க,
இதை பார்த்த தேவர்கள், சித்தர்கள், யக்ஷர்கள், கின்னரர்கள், கருடர்கள், கந்தர்வர்கள் எல்லோரும் ஒரு பக்கம் மகிழ்ந்தாலும், 
அப்பா கடும்கோபம் கொண்டு இருக்கும் போது, பிள்ளை அம்மாவிடம் தான் ஓடுவது போல,
இவர்கள் அனைவரும், சிங்கப்பெருமாள் கோபத்தை பார்த்து விட்டு, தாயாரை ஆச்ரயிக்க ஓடினாரகள்.
ஆதலால், தாயாருக்கு "ஸ்ரீயதே" என்றும் பெயர்.

நமக்கு உள்ள கெட்ட குணங்களை பார்த்து, தந்தை கோபப்படுவாரோ!! என்று பயந்து, ஒரு குழந்தை தன் தாயிடம் ஓடி அடைக்கலம் கேட்பது போல,
கோவிலில், மஹாலக்ஷ்மி தாயார் நமக்கெல்லாம் ஆச்ரயமாக (ஸ்ரீயதே) இருந்து,
அப்பாவிடம் செல்ல சங்கோஜமாக இருந்தால் என்னிடம் வந்து சொல்! நான் உனக்காக பேசி, உனக்கு தேவையானதை எல்லாம் வாங்கி தருவேன்! 
என்று இருக்கிறாள்.

4. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மியே அந்த பரமாத்மாவை (நாராயணனை) ஆஸ்ரயித்து இருக்கிறாள் (ஸ்ரயதே ச பரம் பரம்) என்று ஒரு அர்த்தம்.

தேவர்கள், அசுரர்கள் அம்ருதம் கிடைக்க பாற்கடலை கடைந்த போது,
பல ஆச்சர்யமான பொருட்கள் வெளிப்பட்டன.
சிவபெருமான் தனக்கு குளிர்ச்சியாக இருக்கட்டுமே என்று பிறை சந்திரனை எடுத்து தன் தலையில் சூட்டிக்கொண்டு விட்டார்.




மேலும் ஐராவதம், உச்சைஸ்ரவஸ், பாரிஜாத, காமதேனு, அப்சரஸ், வாருணி போன்றவை வெளிப்பட்டன.
அசுரர்களும், தேவர்களும் பிரித்துக்கொண்டனர்.
ஒரு சமயம் மஹாலக்ஷ்மி வெளிப்பட, லட்சுமி கடாக்ஷம் யாருக்கு தான் வேண்டாம் என்பார்கள்?
யோகத்தில் இருக்கும் ரிஷிகள், தேவர்கள், அசுரர்கள் அனைவரும்,
"தனக்கு மஹாலக்ஷ்மி மாலை இடுவாளோ?" என்று வரிசையாக நிற்க, "தான் ஆச்ரயிக்க வேண்டியவர் ஸ்ரீ மந்நாராயணனே!" என்று மகாவிஷ்ணுவுக்கு மாலையிட்டாள்.
மஹாலக்ஷ்மியை நாம் ஆச்ரயிக்க, 
மஹாலக்ஷ்மியே ஆஸ்ரயிக்கும் பெருமை மிக்கவர் பெருமாள்.

விஷ்ணு உலகத்தை படைத்தவர். 
ஆதலால் இவரே "ஜகத் பிதா". 

விஷ்ணு பத்தினியாக இருக்கும் மஹாலக்ஷ்மி "ஜகன் மாதா" என்று பெயர் பெற்றாள்.

விஷ்ணு பத்தினியாக இருக்கும் மகாலட்சுமிக்கு, தான் படைத்த உலகையே எழுதி வைத்து, முழு சுதந்திரம் கொடுத்து விட்டார் பெருமாள்.

இப்படி ஜகன்மாதாவாக விஷ்ணுவை ஆஸ்ரயித்து, இருக்கும் மஹாலக்ஷ்மி, நாம் பெருமாளை ஆச்ரயித்தால், இந்த உலகத்தில் வாழும்வரை தன் ஐஸ்வர்யங்களை கொட்டி கொடுத்து, அதற்கு பிறகு வைகுண்டம் வரை செல்ல அனுமதித்து விடுகிறாள்.

5. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மி நாம் சொல்வதை கூட கேட்கிறாள் (ஸ்ருனோதி) என்று ஒரு அர்த்தம்.

பெருமாளுக்கு ஒரு ஸ்வபாவம் உண்டு.
தன்னிடம் பக்தி இல்லாத, ஒழுக்கம் இல்லாத, மோக்ஷத்தில் விருப்பம் இல்லாத நம்மை போன்றவர்கள் வந்து பேசினால் முகம் கொடுத்து பேசமாட்டார். 

சொன்னதை கேட்காத பிள்ளையாக இருக்கிறானே! என்று தகப்பன் என்ற ஸ்தானத்தினாலும்,
நியாயம் அநியாயம் பார்க்கும் உலக நிர்வாகி என்ற பொறுப்பினாலும், பெருமாள் நம்மிடம் அத்தனை எளிதாக முகம் கொடுத்து பேசமாட்டாராம்.

பக்தனே சொன்னாலும் கூட சில சமயம் கேட்க மாட்டார். சுதந்திரமானவர். யாரும் அவரை கட்டுப்படுத்த முடியாது.

நாம் பேசினாலும் கேட்டாரா? கேட்கவில்லையா? என்று கூட தெரியாதாம்.

ராம அவதாரத்தில், "தேசம் பார்க்காமல், காலம் பார்க்காமல் உங்களுக்கே சேவை செய்வேன்" என்று சொல்லி லக்ஷ்மணர் ராமபிரானுடன் அயோத்தியை விட்டு வனவாசத்திற்கு கிளம்பி விட்டார்.
கங்கை கரை கடந்ததும், ராமபிரான் லக்ஷ்மணரை பார்த்து 
"பரதனும் சத்ருக்கனனும் இப்போது அயோத்தியில் இல்லை. அப்பா துக்கப்படுவார். ஆதனால் லக்ஷ்மணா! நீ அயோத்திக்கு திரும்பி செல்" 
என்று சொல்லிவிட்டார்.
"தான் கால தேசம் பார்க்காமல் உங்களுக்கு சேவகனாக இருப்பேன்" என்று சொல்லும் போது ஒன்றுமே சொல்லாமல் இருந்த ராமபிரான், தன்னை திடீரென்று "அயோத்தி திரும்பி செல்" என்று சொல்லிவிட்டாரே! என்றதும்,
லக்ஷ்மணன் செய்வதறியாது திகைத்து விட்டார்.
ராமபிரானை மீறவும் முடியாது, அவர் இல்லாமல், ஒரு க்ஷணம் கூட லக்ஷ்மணர் உயிர் தரிக்க மாட்டார்.  





துக்கம் தாளாமல், ராமபிரான் காலில் விழுந்த லக்ஷ்மணன், தன்னை திருப்பி அனுப்பிவிடுவாரோ என்ற அச்சத்தில், ராமபிரானை பார்க்காமல், 
"அண்ணா ! குளத்தில் உள்ள மீனை எடுத்து வெளியில் போட்டு விட்டால், அந்த மீன் துடி துடித்து இறந்து விடும்..  அதுபோல, சீதா தேவியையோ, என்னையோ நீங்கள் உங்களிடத்திலிருந்து பிரித்தீர்களானால், நாங்கள் துடி துடித்து இறந்து விடுவோம்" 
என்று சொல்லிக்கொண்டே, "அண்ணாவிடத்தில், தனக்கு சிபாரிசு செய்யவேண்டும்!!"
என்று அருகில் நின்று கொண்டிருந்த சீதாதேவியை கண்களாலேயே பிரார்த்தித்தார்.

அயோத்தியில், அத்தனை நேரம் பேசியும், ராமபிரான் லக்ஷ்மணர் சொன்னதை கேட்டாரா? என்பதே தெரியவில்லை.
ஆனால்,
லக்ஷ்மணர் ராமபிரானை பிரிய முடியாமல், செய்வதறியாது தன் சிபாரிசுக்கு எதிர்பார்த்து பேச, தாயாரான சீதாதேவி, லக்ஷ்மணர் சொல்வதை கவனமாக கேட்டாள் (ஸ்ருனோதி).

பக்தன் படும் பாட்டை கேட்டு (ஸ்ருனோதி), எம்பெருமானிடம் சமயம் பார்த்து சொல்லி சாதித்து கொடுப்பவள் தாயார்.

"லக்ஷ்மணன் உங்களை விட்டு பிரிந்து இருக்க கூடாது. லக்ஷ்மணனும் கூடவே வரட்டும்" என்று சீதை ராமபிரானை பார்த்து சொல்ல,
உடனேயே சம்மதித்துவிட்டார் பெருமாள்.
சீதாதேவியின் இந்த ஒரு வார்த்தைக்கு கட்டுப்பட்டு, தன் அவதார காலம் வரை லக்ஷ்மணரை பிரிந்து இருக்கவில்லை பெருமாள்
தாயார் பேச்சுக்கு அத்தனை கௌரவம் கொடுப்பாராம் பெருமாள்.  

அதனால், தாயார் சந்நிதியில் சென்று நாம் என்ன பிரார்த்தனை செய்தாலும், ஒவ்வொரு வார்த்தையையும் காது கொடுத்து கேட்கிறாள் என்பதால் தாயாருக்கு "ஸ்ருனோதி" என்றும் பெயர்.


6. "ஸ்ரீ" என்ற சொல்லுக்கு மஹாலக்ஷ்மி நாம் சொல்வதை கேட்டு, அதை பெருமாளிடம் சொல்கிறாள் (ஸ்ராவயதி) என்று ஒரு அர்த்தம்.

மஹாலக்ஷ்மி நாம் பேசுவதை கேட்டு, நாம் சொன்னதை நேரம் பார்த்து, நமக்காக பெருமாளிடத்தில் சொல்கிறாள் என்பதால் தாயாருக்கு "ஸ்ராவயதிஎன்றும் பெயர்.

நமக்கு அப்பாவான பெருமாளை பற்றியும், அவர் நம் மீது எத்தனை அன்பு கொண்டவர் என்பதையும் தாயான மஹாலக்ஷ்மி நமக்கும்  சொல்கிறாள்  என்பதாலும், அவளுக்கு "ஸ்ராவயதி" என்று பெயர்.

நம்மிடம் பேசும்போது
"நீ நன்றாக இருக்க வேண்டும்..  சுகமாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டால்! உன் அப்பாவான பெருமாள் சொல்வதை கேள். 
நீ உண்மையாக அவருக்கு ஆட்பட்டு விட்டால், உன்னை கைவிடவே மாட்டார் என்பது எனக்கு தெரியும்"
என்று மஹாலக்ஷ்மி நம்மிடம் சொல்கிறாள்.

சீதாதேவியை ஒரு அசுரன் காகம் போல வடிவம் எடுத்துக்கொண்டு சீதையை தொட, மஹாகோபாம் கொண்ட ராமபிரான் தன் கையிலிருந்த தர்ப்பை புல்லையே மந்திரம் ஜபித்து ஆயுதமாக ஏறிய, (வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று காட்டினார்)
உயிர் பயம் ஏற்பட்ட காகாசுரன், சீதாதேவியின் சரணத்தில் விழுந்து மன்னிப்பு கேட்க, தன் கோபத்தை விட்டு, மன்னித்து விட்டார் ராமபிரான்.

"கொஞ்சம் உன் கர்வத்தை விட்டுவிட்டு, கொஞ்சம்  தலைவணங்கினாலும்!! பெருமாள் உன்னை மன்னித்து, உன்னை கடைசி வரை ரக்ஷிப்பார்"
என்று தாயார் நமக்கு புத்திமதி சொல்கிறாள்.



நமக்கு மட்டும் புத்திமதி சொல்வதில்லை தாயார்.
பெருமாளுக்கு புத்திமதி சொல்வாளாம்.
அதனால் அவளுக்கு (ஸ்ராவயதி) என்று பெயர்.
பெருமாளுக்கு என்ன புத்திமதி தாயார் சொல்வாள்?

ராமபிரான் வனவாசமாக வந்த போது, ஆயிரக்கணக்கான எலும்புகளின் குவியல் கிடப்பதை பார்த்து, "இங்கு என்ன நடந்தது?" என்று அங்கு இருக்கும் முனிவர்களை கேட்க,
"இந்த எலும்புகள் எல்லாம் இங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவர்களின் எலும்பு தான். ராக்ஷஸர்கள் இங்கு நடமாடுகின்றனர். அவர்கள் இங்கு இருக்கும் சாதுக்களை அப்படியே நரமாமிசமாக விழுங்கி, எலும்பை துப்பி விட்டு சென்ற குவியல் இது!"
என்று சொல்ல, ராமபிரான்,
"ஜன நடமாட்டம் உள்ள இந்த பிரதேசத்தில் ஒன்றுமே செய்யாத சாதுக்களை கொலை செய்து அட்டகாசம் செய்யும் ராக்ஷஸர்களை கூண்டோடு ஒழித்து கட்டுவேன்" என்று சொல்ல, 
ராமபிரானை பார்த்து சீதாதேவி ஆச்சர்யமாக சொல்கிறாள் (ஸ்ராவயதி),
"நீங்கள் ஸத்யம் மீறாதவர், தர்மம் தெரிந்தவர், அனைத்து ஐஸ்வர்யங்களும் உடையவர், நற்குணங்கள் நிறைந்தவர். 
இத்தனை நல்ல விஷயங்களும் உங்களிடம் எதற்கு இருக்கிறது? நிரபராதியான ராக்ஷஸர்களை கூண்டோடு ஒழிப்பேன் என்று சொல்லிவிட்டீர்களே?!"
என்று கேட்கிறாள்.

கண் எதிரே மலை போல எலும்பு குவியலை பார்த்தும்!! தாயார் இப்படி சொல்கிறாள், என்றதும் ரிஷிகளுக்கே பிரமிப்பாக இருந்தது.

தாயாரின் குணம் என்ன? எத்தனை கருணை வாய்ந்தது!!
என்று அறிந்த ராமபிரான், சீதையை பார்த்து சிரித்துக்கொண்டே,
"சீதா ! உன்னுடைய கண்ணுக்கு ஒன்றே ஒன்று தான் தெரிகிறது. 
பச்சையான அபராதம் செய்து விட்டு ஒருவன் உன் முன்னால் வந்து நின்றாலும், உன் கண்ணை வாத்சல்யம் (தாயுள்ளம்) மறைக்கிறது. 
இந்த வாத்சல்யம் உனக்கு யாரிடத்திலும் இருப்பதால், யாரையுமே தண்டிக்காதீர்கள் என்று சிபாரிசு செய்கிறாயே?"
என்று சீதா தேவியின் குணத்தை கண்டு பெருமாளே ஆச்சரியப்படுகிறார்.
குற்றமே செய்தாலும், தாயுள்ளம் மறைப்பதால், ராக்ஷஸர்களுக்கே பரிந்து பேசக்கூடிய தாயார், நமக்காக பெருமாளிடம் பேசமாட்டாளா?
இப்படி நமக்கும், பெருமாளுக்கும் பாலம் போல இருந்து பேசுவதால், மகாலட்சுமிக்கு (ஸ்ராவயதி) என்று பெயர்.

இப்படி 6 அர்த்தங்கள் ஒரு சேர உடைய மஹாலக்ஷ்மி "ஸ்ரீ" என்ற பெயர் பெற்றாள்.



Wednesday 4 March 2020

அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? இதற்கு அர்த்தம் என்ன? எதற்காக இதை செய்கிறோம்? யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம், சமாதி

'சம்சார ஆசைகள்' நம்மை விட்டு இயற்கையாக விலகி, மோக்ஷ பாதையில் செல்ல,
  1. "பக்தி யோகம்"
  2. "சரணாகதி" 
என்ற இரண்டு வழிகள் சொல்லப்படுகிறது.



இதில் "பக்தி யோகம்" என்ற வழியில் செல்ல ஆசைப்படுபவர்கள்,
"8 நிலையை கடந்து செல்ல வேண்டும்"
என்று வழிகாட்டுகிறது நம் சனாதன வேத தர்மம் (ஹிந்து தர்மம்).





பக்தி யோகத்தின் 8 அங்கங்கள் என்ன? என்று பார்ப்போம்.

மனதை அடக்கி தியானம் செய்வதை தான் "யோகம்" என்று சொல்கிறோம்.

'மனதை அடக்குவது' என்பது சாதாரண விஷயமில்லை.

மனதை அடக்கி, தியானம் என்ற யோகத்தை அடைய சூத்திரம் (formula) எழுதியவர் "பதஞ்சலி" முனிவர்.

"திடமான முயற்சி இருந்தால் மனதை அடக்க முடியும்" என்று சொல்கிறார் பதஞ்சலி.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

பதஞ்சலி அருளிய யோகசூத்திரமே "அஷ்டாங்க யோகம்" என்று சொல்கிறோம்.

அஷ்டாங்க யோகம், 8 அங்கங்களை கொண்டுள்ளது:
அவை,
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யஹாரம், தாரணை, தியானம், சமாதி"
என்பதாகும்.

அஷ்டாங்க யோகத்தால், 8 ஸித்திகள் ஏற்படும்.
அவை,
"அணிமா, லகிமா, மஹிமா, கரிமா, ஈசிதா, வசிதா, ப்ராகாம்யம், ப்ராப்தி".
இந்த ஸித்திகள் ஏற்பட்டும், இதனை ஒதுக்கி விட்டு, ஈஸ்வரனை அடைவதே லட்சியம் என்று இருக்கும் யோகி, மோக்ஷம் அடைகிறான்.


  1. யமம் (புலன் ஒழுக்கம் உண்டாக தயார் செய்து கொள்வது)-
    உலக ஆசைகள் நீங்கி, நாம் மோக்ஷம் பெறுவதற்கு, "பக்தி மார்க்கத்தில்" முதல் படியாக நமக்கு தேவைப்படுவது "புலன் அடக்கம்".
    ஸத்தியம், அஹிம்ஸை, பொறுமை முதலிய நல்லொழுக்கத்திற்கு "யமம்" என்று பெயர்.
    நல்லொழுக்கம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.

    சூதாடிக் கொண்டும், அரட்டை அடித்துக் கொண்டும், வேசி வீட்டிற்குப் போய்க் கொண்டு பொழுது போக்கும் வணிகன் வியாபாரத்தில் லாபம் காண முடியாது.
    அதுபோல,
    நல்லொழுக்கமின்றி வீண்பொழுது போக்குபவன் யோகத்திலும் பயன்பெற முடியாது.

    நமக்கு நம் புலன்களை அடக்கும் சக்தி முதலில் ஏற்பட வேண்டும். அதற்கு தயார் செய்து கொள்வதே "யமம்"
    .

    * அஹிம்சை (பிற உயிரை கொல்லாமல் இருப்பது, மாமிசம் எக்காரணம் கொண்டும் உண்ணாமல் இருப்பது),
    * சத்தியம் (எந்த நிலையிலும் சத்தியத்தை பேசுவது),
    * பிரம்மச்சர்யம் (காம வசப்படாமல் அனைவரையும் தன் தாயாக, தன் தங்கையாக, தன் அண்ணனாக, தன் தந்தையாகவே பார்ப்பது),
    க்ஷமா (தவறு செய்தாலும் பொருட்படுத்தாமல் மன்னிப்பது),
    தயை (பணக்காரன் முதல் ஏழை வரை யாரிடத்திலும் இரக்கம் காட்டுவது, அலட்சியம் செய்யாமல் இருப்பது),
    சகிப்புத்தன்மை (பிறரின் கேலி, பொறாமை, வெறுப்பை கண்டு கொண்டும் அமைதியாக இருப்பது)

    மேல் சொன்ன 6 குணங்களையும் ஒருவன் தன் பழக்கத்தில் கொண்டு வரும் போது, அவன் புலன்கள் அவனுக்கு அடங்கி இருப்பதை அவனே உணர்கிறான்.
    அவன் இஷ்டப்படாமல், புலன்கள் அவனை தீய செயல்களில் இழுக்காது என்ற நிலையை அடைகிறான்.
    இதையே "யமம்" என்று சொல்கிறோம்.

    99% சதவீத பிராம்மணர்கள், இன்றுவரை, இந்த 6 குணங்களை கடைபிடிக்கின்றனர்.
    பிராமண சமுதாயம் என்பது 720 கோடி உலக மக்கள் தொகையில், மிஞ்சிப்போனால் 2 கோடி பேர் மட்டுமே இருக்கின்றனர்!!..
    99% சதவீத உலக மக்கள், 'மாமிசம்' உண்பவர்களாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறோம்.

    'அஹிம்சை'  என்ற கொள்கையே 99% சதவீத மக்களுக்கு பெரும் சவாலாக  இருக்கிறது என்று பார்க்கிறோம்.

    லட்சக்கணக்கான வருடங்களாகபரம்பரை பரம்பரையாக, 'தாய்' வழியிலும், 'தந்தை' வழியிலும் ஒருவன் கூட மாமிசம் சாப்பிடாத பரம்பரையாக, பிராம்மண சமுதாயம் இருக்கிறது
    .

    பல விதமான குணங்கள் கொண்ட மனிதர்களை ஒரு வட்டத்துக்குள் கொண்டு வந்து, மாமிசம் உண்ணாத பரம்பரையாக லட்சக்கணக்கான வருடங்களாக நிலை நிறுத்தி வைத்து இருப்பது பிராம்மண சமுதாயத்தின் பெரும் வெற்றி.
    பல விதமான மனித குணங்களை பார்க்கும் போது தான், "இது அசாதாரணமான கட்டமைப்பு" என்பது நமக்கு புரியும்.

    காலம் பல கடந்த, இந்த பிராம்மண சமுதாயத்தின் கட்டமைப்பே "ஒரு அசாதாரண செயல், ஆச்சர்யமான கட்டமைப்பு" என்பது புரியும் போது தான், இந்த சமுதாயத்தின் மேல் நமக்கு மரியாதை ஏற்படுகிறது.

    தன் குடும்ப பழக்கத்திலேயே இந்த 6 குணங்களை இவர்கள் பெற்று விடுவதால், பயிற்சி செய்து இந்த 6 குணங்களை பெற அவசியமில்லாமல் இயற்கையாகவே இந்த குணங்களை கொண்டு இருக்கின்றனர் பிராம்மணர்கள்.
    மற்ற ஜாதிகளில், ஒருவர் அஹிம்சை வழியில் மாமிசம் சாப்பிடாமல் இருக்க நினைத்தாலும், அவர் தாய், தந்தை, உறவினர்கள் என்று பார்க்கும் போது, பலருக்கு மாமிசம் உண்ணும் பழக்கம் இருக்கிறது.

    இது போன்ற குடும்ப அமைப்பில், "தான் மட்டும் அஹிம்சையை கடைபிடிப்பது" என்பதே பெரும் சவாலான விஷயமாகிறது..

    மோக்ஷத்தில் பேராசை, உலக ஆசைகள் மீது வெறுப்பு போன்றவை இவர்களுக்கு தேவைப்படுகிறது.

    'குடும்பமே மாமிசம் உண்டாலும், தான் அஹிம்சை தர்மத்தில் இருப்பேன்' என்று சொல்வது பெரும் சவாலான விஷயமாகிறது. பிராம்மணர் அல்லாத வீடுகளிலும், ஆன்மீகத்தை தேடி வந்த சாதுக்கள், மகான்கள் இன்று கூட காண்கிறோம். ஆனால், பிராம்மண சமுதாயத்தின் சிறப்பு என்று பார்க்கும் போது, இவர்களின் பரம்பரையே 99% சதவீதம் காய் கனிகளை மட்டுமே உண்டு, அஹிம்சையை கடைபிடித்தவர்கள் என்று அறிகிறோம்.

    பொதுவாகவே, தனியாக முயற்சி செய்யாமலேயே, பிராம்மணர்கள், பக்தி யோகத்தின் முதல் படியில் (யமம்) இருப்பதை அனைவரும் உணரலாம்..

    'அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை' போன்ற 6 குணங்களை ஒருவன் முயற்சி செய்து பழக்கத்தில் கொண்டு வரும் போது, "யமம்" என்ற முதல் படியை கடந்து விடுகிறான்.

    ப்ராம்மணர்களுக்கு இது இயற்கையாகவே பழக்கத்தில் உள்ளது. மற்ற ஜாதியினரும், வெளிநாட்டினரும் கூட, முயற்சி செய்தால் வெற்றி பெறலாம்.

    மோக்ஷம் அடைய விரும்பும் அனைவருமே "அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சர்யம், க்ஷமா, தயை, சகிப்புத்தன்மை " என்ற 6 குணங்களை பெற முயற்சிக்க வேண்டும்.


  2. நியமம் (உடல் ஒழுக்கம் உண்டாக)
    விடி காலையில் சூரியன் உதிக்கும் முன் ஸ்நானம் செய்வது,
    சந்தியா வந்தனம் (தேவ, ரிஷி தர்ப்பணம்),
    ஏகாதசி உபவாசம்,
    விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம்,
    பாகவத, பகவத் கீதை பாராயணம்,
    போன்ற உடல் சம்பந்தமான தினசரி கடமைகளை செய்து கொண்டே இருப்பது, "நியமம்" என்று சொல்கிறோம்.

    இந்த நியமங்கள் மூலம், உடல் ரீதியாக, நம்மை தெய்வ சம்பந்தமான காரியங்களில் அதிக நேரம் நம்மை ஈடுபடுத்திக் கொள்கிறோம்
    .

    வெளி உலக காரியங்களுக்கு நேரம் செலவிடுவதை இது போன்ற நியமங்கள் இயற்கையாகவே குறைத்து விடும்.




    நியமத்தில் இருப்பவனுக்கு
    - டிவி பார்க்கவும்,
    - வீண் பேச்சு பேசுவும்,
    - தூங்கவும்,
    - ஊர் வம்பு பேசவும் நேரம் இல்லாமல் போகும்.
    நியமத்தில் இருப்பவன் லட்சியவாதியாக இருப்பான்.
    இப்படி இருப்பவர்களை "நியமமாக இருப்பவர்கள் என்று பொதுவாக நாம் சொல்வதுண்டு.
    பெரும்பான்மையான பிராம்மணர்கள், இன்று வரை, நியமமாக தான் இருக்கின்றனர். 


    "மிதமான ஆஹாரம், மிதமான நித்திரை, மிதமான பேச்சு, மிதமான உழைப்பு' இவைகளுக்கு "நியமம்" என்று பெயர்.

    நியமம் இல்லாதவனுக்கு யோகம் பலிக்காது.
    இரு கரைகளால் கட்டுப்படுத்தப்பட்ட ஒரு ஆறுதான் கடலை நோக்கிச் செல்ல முடியும்.
    கரை உடைந்த ஆறு கடலை அடைய முடியாமல் சிதறிப் போய்விடும்.
    அதுபோல,
    நியமத்துடன் கூடியவன்தான் தனது யோகத்தின் லட்சியத்தைப் பெற முடியும்.
    நியமம் இல்லாதவன் யோக மார்க்கத்தில் சிதறிப் போவான்.

  3. ஆசனம் (புத்துணர்ச்சி உண்டாக)
    * பத்மாசனம் (இரு பாதங்களை இரு தொடைகளுக்கு மேல்புறத்தில் உள்ளங்கால்கள் மேலே தெரியும்படியாக தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்வது)
    ஸ்வஸ்திகாஸனம் (இரு பாதங்களையும் மடித்து இரு தொடைகளுக்கு அடியில் அடக்கி உட்கார்வது)
    ஸித்தாஸனம் (ஒரு குதிகாலை பிறப்புறுக்கும் ஆசனவாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் வைத்து, மறு குதிகாலை பிறப்புறுப்பின் மேல் வைத்து கொண்டு,
    இடது உள்ளங்கையின் மீது வலது பின்னங்கையை வைத்து தொடைகளுக்கு இடையில் வைத்து கொண்டு,
    முதுகுத்தண்டை நேராக நிமிர்த்தி, அமர்ந்து கொண்டு,
    புருவ மத்தியை நோக்கிப் பார்வையைச் செலுத்துவது),
    போன்ற பலவித முறையில் உடலை ஒரு நிலையில் வைக்க பயிற்சி கொடுப்பது "ஆசனம்" என்று சொல்கிறோம்.




    இடுப்பு, தண்டுவடம் போன்ற உடல் உறுப்புகள் பலப்படும்.
    தண்டுவடத்தில் தான் முக்கியமான சுஷும்னா நாடி உள்ளது. அதை தட்டி எழுப்ப, உடல் உறுதி மிக அவசியமாகிறது.
    அதற்கு நம்மை தயார் செய்வதே யோக ஆசனங்கள்.
    ஆசனங்கள் செய்ய செய்ய, சுறுசுறுப்பு அதிகரிக்கும். இரத்தம் நன்கு சுத்திகரிக்கப்படும். உடல் புத்துணர்ச்சி பெறுகிறது.


  4. பிராணாயாமம்  (மனதை மயக்கி அடக்குவது)- 
    ஆசனங்கள் மூலம் உடல் தகுதி பெற்றவன், 'பிராணாயாமம்' என்ற மூச்சு பயிற்சி மற்றும் பிரணவ மந்திரத்தின் மூலம் சுஷும்னா நாடியை எழுப்பி, 8 விதமான ஸித்திகளை, தெய்வங்களின் அனுகிரஹத்தை, மோக்ஷத்தை அடைய முயற்சி எடுக்கிறான்.

    'பிராணாயாமம்' என்பது
    * பூரகம் (மூச்சை முறைப்படி உள் இழுத்து),
    கும்பகம் (முறைப்படி மூச்சை அடக்கி),
    ரேசகம் (மூச்சை முறைப்படி வெளியில் தள்ளி)
    போன்றவற்றின் மூலம் "நாடிகளை சுத்தி" செய்யும் பயிற்சி.

    சுஷும்னா நாடியை பிராணாயாமத்தால் எப்படி எழுப்புவது? பூணூல் ஏன் அனைவரும் அணிய வேண்டும்? தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்.

    பிராணாயாமம் செய்ய செய்ய, அங்கும் இங்கும் அலையும் மனம் ஓய்வதை உணரலாம். மகுடி ஊதி ஊதி, "கருநாகம்" அதன் அசைவால் மயங்கி இருப்பது போல, பிராணாயாம பயிற்சியால் மனம் மயங்கி இருக்கும்.
    மனம் அடங்கி மூச்சு நிதானமாக ஓடுவதை அனுபவத்திலேயே உணரலாம். எந்த நிலையிலும், பதட்டம் அடையாத நிலையில் தான் இருப்பதை அனுபவத்திலேயே உணரலாம்.


  5. ப்ரத்யாஹாரம் (மயங்கி கிடக்கும் மனதில் இஷ்ட தெய்வத்தை காட்டுவது)
    அங்கும் இங்கும் அலையும் நம் மனம், பிராணாயாம பயிற்சியால் மயங்கி இருக்க,
    நம் மனதை மெல்ல நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி,
    நம் மனதை நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே 'நிலை நிறுத்த' செய்வதற்கு 'ப்ரத்யாஹாரம்' என்று பெயர்.

    மாட்டை மனதுக்கு உதாரணமாக காட்டுவதுண்டு.
    வெளியில் அலைந்து அலைந்து மேய்ந்து பழகிய மாட்டை, தொழுவத்தில் அலையாமல் நிறுத்த, அதை சாமர்த்தியமாக அழைத்து வந்து, கயிறு கொண்டு கட்டுவது போன்றது
    "ப்ரத்யாஹாரம்". மயங்கி இருக்கும் மனதை கட்டு படுத்தாமல் (ப்ரத்யாஹாரம்) இருந்தால், சுதாரித்து கொண்டு மீண்டும் ஓடி விடும். பிறகு, மீண்டும் பிராணாயாமம் செய்து மயக்கி, பிறகு கட்டுப்படுத்த (ப்ரத்யாஹாரம்) வேண்டியதாகி விடும்.

    மனதை கட்டி போடுவது (ப்ரத்யாஹாரம்) எப்படி? இந்த சமயத்தில் பெருமாளின் குணங்களை பற்றி சொல்லும் சாத்வீக புராணங்களான வராஹ புராணம், பாகவதம் போன்றவை படிக்க படிக்க, மனம் பெருமாளின் மீது காதல் கொள்ள ஆரம்பிக்கும்.
     


  6. தாரணை (இஷ்ட தெய்வத்திடமே மனதை கட்டி போடுவது)
    சாமர்த்தியமாக கட்டப்பட்ட மாடு, "தன்னை தொழுவத்தில் கட்டி விட்டான்" என்றதும் அறுத்துக்கொண்டு ஓட பார்க்கும்.
    அது போல,
    மயங்கி கிடக்கும் மனம், "நம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்தை பார்த்தாலும்" விஷய சுகங்கள் அனுபவித்து இருப்பதால், அறுத்துக்கொண்டு அங்கேயே ஓட பார்க்கும்.
    ஆதலால், "ப்ரத்யாஹாரம்" என்ற நிலையிலேயே இருந்து விட கூடாது.
    "தாரணை" என்ற நிலைக்கு மனதை கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.
    அதற்கு அந்த தொழுவம் பிடித்து போகும்படியாக செய்து, வெளியில் போக முடியாத படி நல்ல கயிறு கொண்டு பல நாள் கட்டிப்போட்டு விடுவது போன்றது "தாரணை"
    மனம் நம் தெய்வத்தின் ரூபத்தை காட்டி காட்டி, இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நிறுத்தி விட்ட நிலையே "தாரணை" என்று சொல்லப்படுகிறது.


  7. தியானம் (சிரமமில்லாமல் நிலையாக இஷ்டதெய்வத்தை தியானம் செய்வது) 
    தொழுவத்தில் பலநாள் கட்டப்பட்ட மாடு, தொழுவத்திலேயே இருக்க பழகிய நிலையில், வெளியில் மேய கூட்டிக்கொண்டு போனால், ஆசையோடு நன்றாக மேயும்.
    அதே சமயம்,
    மீண்டும், தொழுவத்தில் கூட்டிக்கொண்டு வந்தாலும் அடம்பிடிக்காமல் அமைதியாக இருக்கும்.
    இதுவே தியான நிலை.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "உலக விஷயங்களில் போ!" என்றால் வெளி விஷயங்களில் ஈடுபடும்.
    தியானம் ஸித்தி ஆனவன், தன் மனதை "போதும் நிறுத்து.. 4 மணிக்கு பெருமாளை தியானம் செய்!" என்றால் மனம் எதிர்க்காமல், அவன் ஆசைப்பட்ட நேரத்தில், உலக நினைவை இவனுக்கு கொண்டு வராமல், "பெருமாளை மட்டுமே தியானம் செய்யும்"
    இந்த தியான நிலையை "பரத யோகி" அடைந்து இருந்தார்.
    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்து விட்ட நிலையே "தியானம்" என்று சொல்லப்படுகிறது.


  8. சமாதி (இஷ்ட தெய்வத்தோடு கலந்து விடுவது)
    'தியானம்' ஸித்தியான பரத யோகி, "சமாதி" என்ற மோக்ஷ நிலையை அந்த ஜென்மத்திலேயே அடைய முடியவில்லை.

    தொழுவத்திலேயே இருக்க பழக்கப்பட்ட மாடு, ஒரு நிலையில், வெளியில் கூட்டிகொண்டு போனாலும், மேய ஆசைப்படாமல், மீண்டும் தொழுவத்திற்கே செல்ல ஆசைப்படும். இதுவே "சமாதி" நிலை.

    சமாதி நிலையில் ஸித்தி ஆனவன், மனதை "வெளி விஷயங்களில் போ" என்றாலும், மனம் பகவானை மறக்க முடியாமல் இருக்கும்.
    உலக விஷயங்களில் இவர்கள் ஈடுபட்டாலும், ஈடுபட முடியாத நிலையில் இருப்பார்கள்.
    இந்த நிலையிலேயே ஸ்ரீ சுகர் இருந்தார்.
    இந்த நிலையிலேயே கிருஷ்ண சைதன்யர் இருந்தார்.

    மனம் இஷ்ட தெய்வத்தின் ரூபத்திலேயே நின்று, உலகமே மறந்த நிலையில்,
    தெய்வத்தோடு ஒன்றி விட்டோம் என்றால், அதுவே "சமாதி" நிலை.


    இந்த சமாதி நிலையில் கிருஷ்ண சைதன்யர் பல முறை மூர்ச்சை ஆகி விடுவார் என்று பார்க்கிறோம்.
    பிருந்தாவனத்தில், கிருஷ்ண சைதன்யர் இந்த சமாதி நிலையை அடைந்த போது நடந்த சுவையான சம்பவத்தை அறிய இங்கே படிக்கவும்
    .
பக்தி யோகத்தின், இந்த 8 அங்கங்களை, பொதுவாக "அஷ்டாங்க யோகம்" என்றும் சொல்லுவார்கள்.

பரத ரிஷி (ராஜ ரிஷி) தன் முயற்சியால் பகவானை அடைய ஆசைப்பட்டார், மோக்ஷம் அடைய ஆசைப்பட்டார்.

பக்தி யோகத்தில் சொல்லப்பட்டுள்ள அஷ்டாங்க யோகத்தை எடுத்து கொண்டார்.
ராஜ்யத்தை விட்டு,
மனைவி மக்களையும் விட்டு,
ஆசைகளை, சொத்துக்களை எல்லாம் தியாகம் செய்து விட்டு,
காட்டுக்கு சென்றார்.
"யமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாஹாரம், தாரணை, தியானம்" வரை அதே ஜென்மாவில் ஸித்தி ஆகி விட்டது...

தன் முயற்சியால் மோக்ஷம் அடைய நினைக்கும் தீரர்களான இவர்களுக்கு சோதனைகளும் வரும்.
பரிக்ஷைக்கு தயார் என்று சொல்பவனை பகவான் அவன் ஆசைப்படியே பரிக்ஷிக்கிறார்.

தன் மனைவி மக்களையே விட்ட இவர், ஒரு குட்டி மானை அந்த காட்டில் வளர்க்க,


அந்த குட்டி மான் வளர்ந்ததும் அவரை விட்டு ஓடிவிட, அது என்ன ஆனதோ? என்ன ஆனதோ? என்று மானை நினைத்து புலம்பிக்கொண்டே உயிரை விட்டு விட்டார்.
அடுத்த பிறவியில் மானாகவே பிறந்து விட்டார்.
அதற்கு பிறகு ஜட பரதராக, 7 யோகங்களை கடந்து, 8வது நிலையான சமாதி நிலையிலேயே பிறந்தார். 
கடைசி வரை சமாதி நிலையை விட்டு கொஞ்சமும் வராமல், வாழ்ந்து, கடைசியில் மோக்ஷம் பெற்றார். 

இந்த பக்தி யோகத்தின் வழியாக மோக்ஷம் அடையலாம் என்று நமது ஹிந்து தர்மம் வழி காட்டுகிறது.





பக்தி யோக மார்க்கம் கடினமாக இருப்பதாக தோன்றினால், "சரணாகதி" என்ற மார்க்கமும் நமக்கு காட்டப்படுகிறது
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கடைசி மார்க்கமாக நமக்கு "சரணாகதி" மார்க்கத்தை சொல்கிறார்.
"சர்வ தர்மான் பரித்யஜ்ய 
மாம் ஏகம் சரணம் வ்ரஜ 
அஹம் த்வா சர்வ பாபேப்யோ 
மோக்ஷ இஷ்யாமி மா சுச:" 
என்று சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய நமக்கு திறன் இல்லை என்றால், நமக்கு 'மோக்ஷம் கிடையாது என்று நினைக்க வேண்டாம்'.. 

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "உனக்கு விதித்த தர்மங்கள் அனைத்தையும் விடு, என்னை ஒருவனையே சரண் அடைந்து விடு. உன் அனைத்து பாவங்களையும் நான் பொசுக்கி, உனக்கு என் இஷ்டத்தால், உனக்கு மோக்ஷம் தந்து விடுகிறேன். கவலையே அடையாதே !  
என்று சரணாகதி மார்க்கத்தை கடைசியாக சொல்கிறார்.

பக்தி யோகம் செய்ய விருப்பமுள்ளவர்கள், அஷ்டாங்க யோகம் செய்து, மோக்ஷம் அடையலாம்.
நாராயணனே கதி என்று இருக்க விருப்பமுள்ளவர்கள், சரணாகதி செய்து, மோக்ஷம் அடையலாம்.

ஹிந்து தர்மம் மற்ற போலி மதங்களை போல, ஒரே வழி, ஒரே தத்துவம் என்று நம்மை கொடுமை படுத்துவதில்லை.

அவரவர் திறனுக்கு ஏற்ற வழியை காட்டி, அனைவருக்கும் தெய்வ அருள் கிடைக்க செய்து, அனைவரையும் மோக்ஷம் அடைய செய்கிறது.

வாழ்க ஹிந்து தர்மம்.
ஹிந்துவாக வாழ்வதே நமக்கு பெருமை.. 

மேற்சொன்ன விளக்கம் மகாத்மா - ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ அண்ணா) உபன்யாசத்தில் இருந்து தொகுக்கப்பட்டது.
இந்தியா மற்றும் அதன் வரலாறு, மதிப்புகள், வேதக் கடவுள்கள் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள, விரும்பும் அனைத்தையும் பற்றிய நுண்ணறிவைப் பெற srisrianna.comஇலிருந்து தெய்வீக சொற்பொழிவுகளைப் பதிவிறக்கவும்.


Monday 2 March 2020

பாசுரம் (அர்த்தம்) - ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை - திருமங்கையாழ்வார் திருக்கண்ணமங்கை பெருமாளுடன், திருநின்றவூர் பெருமாளை சேர்த்து பாடிய அழகான பாசுரம். தமிழன் அர்த்தம் தெரிந்து கொள்ள வேண்டாமா?

திருமங்கை ஆழ்வார், திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
அதே பெயரில் திருநின்றவூரில் இருக்கும் பக்தஜீவன பெருமாளின் நினைவு வர, அவரையும் சேர்த்து இங்கு மங்களாசாசனம் செய்தார்.




இரண்டு திவ்ய தேசங்களை சேர்த்து கொண்டு மங்களாசாசனம் செய்கிறார்.

பாசுரம்:
ஏற்றினை இமயத்துள் எம் ஈசனை!
இம்மையை மறுமைக்கு மருந்தினை!
ஆற்றலை அண்டத் அப்புறம் உய்த்திடும் ஐயனை!
கையில் ஆழி ஒன்று ஏந்திய கூற்றினை!
குரு மாமணிக் குன்றினை!
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை!
காற்றினை!
புனலை!
சென்று நாடிக் கண்ணமங்கையுள் 
கண்டு கொண்டேனே!
- (பெரிய திருமொழி)
என்று திருக்கண்ணமங்கையில் உள்ள பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது பாடுகிறார் திருமங்கை ஆழ்வார்.




திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ணமங்கையில் எழுந்தருளி இருக்கும் பக்தவத்சல பெருமாளை பார்க்கும் போது, திருநின்றவூரில் எழுந்தருளி இருக்கும் பக்தஜீவனன் என்ற பெயருடைய பெருமாள் ஆழ்வாருக்கு வலுவில் வந்து தரிசனம் தர,
'நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை'
என்று இந்த திவ்ய தேச பெருமாளை கொஞ்சி மங்களாசாசனம் செய்கிறார்.

பரமபதத்தில் (வைகுண்டம்) எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
க்ஷீராப்தியிலும் (பாற்கடல்) எம்பெருமான்  எழுந்தருளி இருக்கிறார்.
யாரும் எளிதில் போக முடியாத இமயமலையில் பதரிநாத் போன்ற திவ்ய தேசங்களிலும் எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார்.
நம்மால் அத்தனை தூரம் வர முடியுமோ!! என்று கருணை கொண்டு, அதே எம்பெருமான், மஹாலக்ஷ்மி ஸ்திரமாக நிற்கும் திருநின்றவூருக்கு நமக்காக வந்து நிற்கிறாரே!!
என்று பகத்ஜீவனனாக இருக்கும் எம்பெருமானை கொஞ்சி மகிழ்கிறார், திருமங்கை ஆழ்வார்.
திருநின்றவூரில் நிற்கும் எம்பெருமான், 'ஒரு முத்து குவியல் போல' பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் கண் எதிரே தரிசனம் தர, "குரு மாமணிக் குன்றினை" என்று கொஞ்சுகிறார்.




இங்கு "நித்தில தொத்தினை" என்று திருநின்றவூர் எம்பெருமானை என்று அழைக்கிறார்.
"நித்தில தொத்து" என்றால் "பவள கொத்து" என்று அர்த்தம்..
பவளத்திற்கு இயற்கையாகவே ஒரு குளிர்ச்சி உண்டு.
பவள மணியை, மாலையாக கழுத்தில் போட்டு கொண்டால், உடல் குளிர்ச்சியாகும்.

இங்கு, "பவள கொத்து" என்று திருநின்றவூர் எம்பெருமானையே சொல்லி கொஞ்சுகிறார் திருமங்கை ஆழ்வார்.

ஒரு முத்து குவியல் போல பேரழகுடன், குளிர்ந்த திருமேனியுடன் இருக்கும் திருநின்றவூர் பெருமாளை பார்த்ததுமே, 'பெருமாளையே ஒரு பவள மாலையாக ஆக்கிக்கொண்டு, தன் கழுத்தில் போட்டு கொண்டு விட வேண்டும்' என்று ஆசை உண்டாகி விட்டது ஆழ்வாருக்கு.

வெயிலில் வாடி, வியர்த்து போன ஒருவனுக்கு, தென்றல் காற்று வீசினால் எப்படி சுகமாக இருக்குமோ!  அது போல, உலகத்தில் ஏற்படும் பலவித சிரமங்களால் துக்கப்பட்டு துவண்டு போகும் நமக்கு, இவர் தரிசனமே குளிர்ந்த காற்று வீசுவது போல சுகத்தை தருகிறதே!! என்றதும் "காற்றினை" என்று கொஞ்சுகிறார்.

வெயிலில் வாடி, உடம்பில் தண்ணீர் வற்றி, உயிர் போய் விடும்!! இனி தாளாது!! என்று தாகத்தால் தவிக்கும் ஒருவனுக்கு, சுவையான நீர் கிடைத்தால் எத்தனை சுகம் அடைவானோ, அது போல, தாபத்தோடு வரும் பக்தனுக்கு, தாபத்தை போக்கும் புனல் (தண்ணீர்) போல திருநின்றவூர் எம்பெருமான் தரிசனம் தருகிறாரே!! என்றதும் "புனலை" என்று கொஞ்சுகிறார்.

திருக்கண்ணமங்கையில் பக்தவத்சல பெருமாளை மங்களாசாசனம் செய்யும் போது,
திருநின்றவூர் பக்தஜீவனன்  (பக்தவத்சல என்றும் சொல்கிறார்கள்) என்ற எம்பெருமான், வலிய இடையில் புகுந்து கொண்டு, திருமங்கை ஆழ்வாரிடம் தனக்கும் ஒரு மங்களாசாசனம் வாங்கி கொண்டு விட்டார்.