Followers

Search Here...

Tuesday 12 January 2021

ஹனுமானின் முதல் ராம தரிசனம்.. சிறந்த பேச்சாளனின் அடையாளம் என்ன? ஹனுமான் என்ன பேசினார்? நீங்கள் தெய்வமா? என்று ஹனுமான் கேட்க, ராமபிரான் எப்படி சமாளித்தார்? தெரிந்து கொள்வோமே..வால்மீகி ராமாயணம்

வில்லுடன் வந்து நின்று கொண்டிருக்கும், அந்த இருவரை பார்த்ததுமே, சுக்ரீவன் பயந்தான்.

'இதோ பாருங்கள்' என்று ஹநுமானிடம் சொல்ல, ஹநுமான், ராம லக்ஷ்மணர்களை முதன் முறையாக தரிசிக்கிறார்.

ஹனுமான் பூர்ண ஞானி. சுக்ரீவன் அஞானி.

மஹாத்மா 'ஹனுமான்' அங்கு நின்று கொண்டிருந்த ராமபிரானை பார்த்ததுமே மனதை பறிகொடுத்து விட்டார்.

சுக்ரீவன் 'வாலி அனுப்பித்து இவர்கள் வந்து இருக்கிறார்களோ?!' என்றே பார்த்து பார்த்து பயந்தான்.

ஹனுமான் "வந்து இருக்கும் இருவரும், வாலி அனுப்பித்து வந்து இருக்கிறார்களோ! என்று நீங்கள் நினைக்கிறீர்கள். ஏன் அப்படி விபரீதமாக பார்க்க வேண்டும்? வந்திருக்கும் இவர்களை சிநேகம் கொண்டு, வாலியை நாம் ஒழித்து கட்டலாமே என்று நான் நினைக்கிறன்" என்றார்.  

வில்லுடன் வந்து இருக்கும் இவர்களை பற்றி, தெரிந்து கொண்டு வருமாறு ஹனிமானிடம் சுக்ரீவன் சொல்ல,   





वचो विज्ञाय हनुमान्सुग्रीवस्य महात्मनः |

पर्वताद् रुश्य मूकात्तु पुप्लुवे यत्र राघवौ ||

- वाल्मीकी रामायण

வசோ விஞாய ஹனுமான் 

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

பர்வதாத் ருஷ்ய மூகாத்து 

புப்லுவே யத்ர ராகவௌ ||

- வால்மீகி ராமாயணம்

அவர் சொல்லுக்கு மதிப்பு கொடுத்து, மஹாத்மா 'ஹனுமான்' ருஷ்யமுக மலையிலிருந்து குதித்து, ராம லக்ஷ்மணர்கள் நின்று கொண்டு இருக்கும் இடத்துக்கு விரைந்தார்.

कपिरूपम परित्यज्य हनुमान् मारूतात्मज: |

भिक्षु रूपं ततो भजे सठ बुद्धितया कपिः ||

- वाल्मीकी रामायण

கபிரூபம் பரித்யஜ்ய 

ஹனுமான் மாருதாத்மஜ: |

பிக்ஷு ரூபம் ததோ பஜே 

சட புத்திதயா கபி: ||

- வால்மீகி ராமாயணம்

வந்திருக்கும் இருவர் யார்? என்று பரிக்ஷை செய்யும் எண்ணத்துடனேயே, ஸ்வயம் பிரம்மச்சாரியான யோகேஸ்வரரான ஹனுமான் தன் வானர ரூபத்தை மறைத்துக்கொண்டு, 'ஒரு பிக்ஷு (சந்யாசி) போல' ரூபமெடுத்து கொண்டார்.

ततः स हनुमान् वाचा लक्ष्णया सु-मनोज नया |

विनीत वद् उपागस्य राघवौ प्रणिपत्य च |

आबभाषे तदा वीरौ यथावत् प्रशशंस च ||

सम्पूज्य विधिवद् वीरौ हनुमान् वानरोत्तमः |

उवाच कामतो वाक्यम् मृदु सत्य पराक्रमौ ||

- वाल्मीकी रामायण

தத: ச ஹனுமான் வாசா

லக்ஷ்மணயா சு-மனோஜ நயா |

வினீத வத் உபாகஸ்ய

ராகவௌ ப்ரணிபத்ய ச |

ஆபபாஷே ததா வீரௌ

யதாவத் ப்ரஸசம்ச ச |

ஸ்ம்பூஜ்ய விதிவத் வீரௌ 

ஹனுமான் வானரோத்தம: |

உவாச காமதொள வாக்யம்

ம்ருது சத்ய பராக்ரமௌ ||

- வால்மீகி ராமாயணம்

முதல் முறையாக ஹனுமான் ராமலக்ஷ்மணர்களை நேர் எதிரே இப்பொழுது தான் தரிசிக்கிறார். சந்நியாச ரூபத்தில் தான் வந்து இருக்கிறார். சந்நியாசி யாரையும் நமஸ்கரிக்க கூடாது. தன்னை மற்றவர்கள் நமஸ்கரித்தால் 'நாராயண நாராயண்..' என்று ஹரி ஸ்மரனை செய்யலாம் என்று சந்யாச தர்மம் உள்ளது. இது ஹநுமானுக்கும் தெரியும். ராமபிரானை நேரில் பார்த்தவுடனேயே, ஆசாரம், நியமம் எல்லாம் மறந்து, மரியாதை கலந்த பக்தியுடன், சந்யாச ரூபத்துடனேயே சாஷ்டாங்கமாக ராமபிரான் திருவடியில் விழுந்து விட்டார். மிகவும் பணிவுடன், கை குவித்து கொண்டு, ராமபிரான் அருகில் வந்து, தன் எண்ணத்தில் என்ன சத்தியமாக நினைத்தாரோ, அதையே மிருதுவாக பேசலானார்.

राज ऋषि देव प्रतिमौ तापसौ संशित व्रतौ |

देशं कथमिमं प्राप्तौ भवन्तौ वर वर्णिनौ || 1

- वाल्मीकी रामायण

ராஜ ரிஷி தேவ ப்ரதிமௌ

தாபசௌ சம்ஸித வ்ரதொள |

தேசம் கதமிமம் ப்ராப்தொள

பவன்தொள வர வர்ணிநௌ |

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ராஜ ரிஷி போல காட்சி தருகிறீர்கள். உங்கள் பொலிவை கண்டால், தேவனோ! என்று தோன்றுகிறது. ராஜாவாக இருந்தும், சங்கல்பித்து கொண்டு தபஸ்வி வேஷத்தில் இருப்பது போலவும் இருக்கிறது. இந்த இடத்துக்கு எப்படி வந்தீர்கள்? உங்களுடைய உடல் வர்ணம் பொலிவுடன் காணப்படுகிறதே!

त्रासयन्तौ मृग गणान् अन्यांश्च वनचारिणः |

पम्पा तीर रुहान् वृक्षान् वीक्षमाणौ समन्ततः || 2

- वाल्मीकी रामायण

த்ராசயந்தொள ம்ருக கனான்

அன்யாஸ்ச வனசாரின: |

பம்பா தீர ருஹான் வ்ருஷான்

வீக்ஷமாநௌ சமந்தத: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களை பார்த்ததிலேயே இந்த வனத்தில் இருக்கும் மிருகங்கள், வாழும் மக்கள் அனைவருக்கும் ஒருவித சிலிர்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. நீங்கள் இருவரும் இங்கு இருக்கும் மரம், நதிகளை பார்த்து கொண்டு இருக்கிறீர்கள்.

इमां नदीं शुभ जलां शोभयन्तौ तरस्विनौ |

धैर्यवन्तौ सुवर्ण आभौ कौ युवां चीर वाससौ || 3

- वाल्मीकी रामायण

இமாம் நதீம் சுப ஜலாம்

ஷோபயந்தொள தரஸ்விநௌ |

தைர்ய வந்தொள சுவர்ண ஆபௌ

கௌ யுவாம் சீர வாசசௌ ||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் அருகில் இருக்கும் இந்த குளம் உங்கள் வருகையால் ஷோபித்து காணப்படுகிறது. நீங்கள் பலவானாகவும், தைரியசாலியாகவும் இருக்கிறீர்கள். மர பட்டையையே ஆடையாக அணிந்து இருக்கும் நீங்கள் இருவரும் யார்?

निःश्वसन्तौ वर भुजौ पीडयन्तौ इमाः प्रजाः |

सिंह वि-प्रेक्षितौ वीरौ महाबल पराक्रमौ || 4

- वाल्मीकी रामायण

நிஷ்வசந்தொள வர பூஜௌ

பீடயந்தொள இமா: ப்ரஜா: |

சிம்ஹ விப்ரேக்ஷிதொள வீரௌ

மஹாபல பராக்ரமௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் பெருமூச்சு விடுகிறீர்கள். உங்கள் புஜங்கள் அற்புதமாக உள்ளது. நீங்கள் ப்ரகாசிக்கிறீர்கள். துணிச்சலும் தைரியமும் உள்ள நீங்கள் சிங்கங்கத்தின் கூர்மையான பார்வையுடன் இருக்கிறீர்கள்.

शक्र चाप निभे चापे गृहीत्वा शत्रु सूदनौ |

श्रीमन्तौ रूप सम्पन्नौ वृषभ श्रेष्ठ विक्रमौ || 5

- वाल्मीकी रामायण

சக்ர சாப நிபே சாப

 க்ருஹீத்வா சத்ரு சூதநௌ |

ஸ்ரீமந்தொள ரூப சம்பந்நௌ

வ்ருஷப ஸ்ரேஷ்ட விக்ரமௌ || 

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் பிடித்து இருக்கும் வில், வானவில் போல வளைந்து இருக்கிறது. இளம் காளை போல காணப்படும் நீங்கள் உன்னதமாகவும், சத்தியுள்ளவராகவும்  இருக்கிறீர்கள்

हस्ति हस्त उपम भुजौ द्युतिमन्तौ नरर्षभौ || 6

- वाल्मीकी रामायण

ஹஸ்தி ஹஸ்த உபம புஜௌ

த்யுதிமன்தொள நரர்ஷபௌ || 

- வால்மீகி ராமாயணம்

யானையின் துதிக்கை போல, உங்கள் கைகள்  இருக்கிறது.




प्रभया पर्वत इन्द्रोऽयं युवयोः अवभासितः || 7

- वाल्मीकी रामायण

ப்ரபயா பர்வத இந்த்ரோயம்

யுவயோ: அவபாசித: ||  

- வால்மீகி ராமாயணம்

உங்கள் வருகையால் இந்த மலையே ப்ரகாசிக்கிறது..

राज्य अर्हाव् अमर प्रख्यौ कथं देशमिह आगतौ |

पद्म पत्र ईक्षणौ वीरौ जटा मण्डल धारिणौ || 8

- वाल्मीकी रामायण

ராஜ்ய அர்ஹாவ் அமர பரக்யௌ

கதம் தேசமிஹ ஆகதொள |

பத்ம பத்ர ஈக்ஷநௌ வீரௌ

ஜடா மண்டல தாரிநௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ராஜ்யத்தை ஆளும் பண்போடு இருக்கிறீர்கள். இந்த பிரதேசத்துக்கு எப்படி வந்தீர்கள்? உங்கள் கண்கள் தாமரை இதழ்கள் போல இருக்கிறது. அதே சமயம் ஜடா முடியுடன் காணப்படுகிறீர்கள்.

अन्योन्य सदृशौ वीरौ देव लोकादिह आगतौ |

यदृच्छयेव सम्प्राप्तौ चन्द्र सूर्यौ वसुन्धराम् || 9

- वाल्मीकी रामायण

அன்யோன்ய சத்ருசௌ வீரௌ

தேவ லோகாதிஹ ஆகதொள |

யத்தருச்ச ஏவ ஸம்ப்ராப்தொள

சந்த்ர சூர்யௌ வசுந்தராம் ||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் இருவருடைய ஜாடையும் ஒன்றாக இருக்கிறது. வானத்தில் உள்ள சூரியனும் சந்திரனும் தான், இங்கு வந்து இருப்பது போல காணப்படுகிறீர்கள். நீங்கள் தாமரை கண்ணன். அணுகிரஹம் செய்ய தான், இங்கு வந்து இருக்கிறீர்கள். 

विशाल वक्षसौ वीरौ मानुषौ देव रूपिणौ |

सिंह स्कन्धौ महा उत्साहौ समदौ इव गोवृषौ || 10

- वाल्मीकी रामायण

விசால வக்ஷசௌ வீரௌ

மானுஷௌ தேவ ரூபிணௌ |

சிம்ஹ ஸ்கந்தொள மஹா உத்ஸாஹௌ

சமதொள இவ கோவ்ருஷௌ ||

- வால்மீகி ராமாயணம்

நீண்ட தோள்பட்டை, பரந்த மார்பு கொண்ட வீரர்களான நீங்கள், மனித ரூபத்தில் வந்துள்ள தெய்வம் என்றே அறிகிறேன். உறுதியான தோள் கொண்ட சிங்கம் போலவும், பலமும், வீரியமும் கொண்ட காளை போலவும் இருக்கிறீர்கள். 

आयताश्च सुवृत्ताश्च बाहवः परिघोत्तमाः |

सर्व भूषण भूषार्हाः किमर्थं न विभूषितः || 11

- वाल्मीकी रामायण

ஆயதாஸ் ச சுவ்ருத்தாஸ் ச

பாஹ்வ: பரிகோத்தமா: |

சர்வ பூஷண பூஷார்ஹா:

கிமர்தம் ந விபூஷித: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய நீண்ட, உறுதியான கைகள் ராஜ ஆபரணங்கள் அணிய தகுதியுடன் இருக்கிறது. இருந்தும், இந்த கைகளில் ஒரு ஆபரணமும் காணப்படவில்லையே.

उभौ योग्यौ अहं मन्ये रक्षितुं पृथिवीम् इमाम् |

स-सागर वनां कृत्स्नां विन्ध्य मेरु विभूषिताम् || 12

- वाल्मीकी रामायण

உபௌ யோக்யௌ அஹம் மன்யே

ரக்ஷிதும் ப்ருதிவீம் இமாம் |

ஸ-சாகர வனாம் க்ருத்ஸ்னாம்

விந்த்ய மேரு விபூஷிதாம் ||

- வால்மீகி ராமாயணம்

விந்திய மலை, மேரு மலை போன்ற மலைகளால் அலங்கரிக்கப்பட்ட இந்த உலகத்தையே காக்க தகுதி உள்ளவர் நீங்கள் என்று அறிகிறேன்.  

इमे च धनुषी चित्रे श्लक्ष्णे चित्र अनुलेपने |

प्रकाशेते यथा इन्द्रस्य वज्रे हेम विभूषिते || 13

- वाल्मीकी रामायण

இமே ச தனுஷீ சித்ரே

ஸ்லக்ஷ்ணே சித்ர அனுலேபனே |

ப்ரகாசேதே யதா இந்த்ரஸ்ய

வ்ஜ்ரே ஹேம விபூஷிதே ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய கையில் உள்ள வில்லை காணும்போது, இந்திரனின் வஜ்ராயுதம் போல ப்ரகாசிக்கிறது. 

सम्पूर्णा निशितैः बाणैः तूणाः च शुभ दर्शनाः |

जीवित अन्तकरै र्घोरैः र्ज्वलद्भिः इव पन्नगैः || 14

- वाल्मीकी रामायण

சம்பூர்ணா நிஷிதை: பாணை:

தூணா: ச சுப தர்சனா: |

ஜீவிதா அந்தகரை கோரை: 

ஜ்வலத்பி: இவ பன்னகை: ||

- வால்மீகி ராமாயணம்

உங்களுடைய அம்புரா-துணியில் காணப்படும் கூர்மையான அம்புகள் அனைத்தும், பார்ப்பதற்கு அபாயகரமானதாகவும், உயிரை பறிப்பதாகவும், விஷத்தை உமிழும் பாம்புகள் பெரும் மூச்சு விட்டு கொண்டு இருப்பது போலவும் காணப்படுகிறது.

महा प्रमाणौ विपुलौ तप्त हाटक भूषितौ |

खड्गौ एतौ विराजेते निर्मुक्त भुजगौ इव || 15

- वाल्मीकी रामायण

மஹா ப்ரமாணௌ விபுலௌ

தப்த ஹாடக பூஷிதொள |

கங்கௌ ஏதொள விராஜிதே

நிர்முக்த புஜகௌ இவ்||

- வால்மீகி ராமாயணம்

உங்கள் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டு இருக்கும் ஒரு கத்திகள், இப்பொழுது தான் தன் பழைய தோலை கழட்டி விட்டு பளபளக்கும் பாம்பு போல காணப்படுகிறது. 

एवं मां परिभाषन्तं कस्माद् वै न अभि भाषथः || 16

- वाल्मीकी रामायण

ஏவம் மாம் பரிபாஷந்தம்

கஸ்மாத் வை ந அபி பாஷாத: ||

- வால்மீகி ராமாயணம்

நீங்கள் ஏன் மௌனமாக இருக்கிறீர்கள்? எனக்கு ஏன் நீங்கள் இன்னும் பதில் அளிக்கவில்லை?

सुग्रीवो नाम धर्मात्मा कश्चिद् वानर यूथपः |

वीरो विनिकृतो भ्रात्रा जगद् भ्रमति दुःखितः || 17

- वाल्मीकी रामायण

சுக்ரீவோ நாம தர்மாத்மா

கஸ்சித் வானர யூதப: |

வீரோ விநிக்ருதோ ப்ராத்ரா

ஜகத் ப்ரமதி துக்கித: ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் என்ற பெயரில் ஒரு மகாத்மா, வானர தலைவனாக இருக்கிறார். அந்த வீரரை அவர் சகோதரன் விரட்டி அடித்ததால், வாழ வழி இல்லாமல், இங்கும் அங்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்.

प्राप्तोऽहं प्रेषितः तेन सुग्रीवेण महात्मना |

राज्ञा वानर मुख्यानां हनुमान् नाम वानरः || 18

- वाल्मीकी रामायण

ப்ராப்தோஹம் ப்ரேஷித: தேன

சுக்ரீவேன மஹாத்மான |

ராஞா வானர முக்யானம்

ஹனுமான் நாம வானர: ||

- வால்மீகி ராமாயணம்

அவர் தான் என்னை இங்கு அனுப்பினார். என் பெயர் ஹனுமான். 

युवाभ्यां सह धर्मात्मा सुग्रीवः सख्यम् इच्छति |

तस्य मां सचिवं वित्तं वानरं पवनात्मजम् || 19

- वाल्मीकी रामायण

யுவாப்யாம் சஹ தர்மாத்மா

சுக்ரீவ: சக்யம் இச்சதி |

தஸ்ய மாம் சசிவம் வித்தம்

வானரம் பவனாத்மஜம் ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் ஒரு தர்மாத்மா. அவர் உங்கள் நட்பை எதிர்பார்க்கிறார். 

भिक्षु रूप प्रति च्छन्नं सुग्रीव प्रिय काम्यया |

ऋश्यमूकाद् इह प्राप्तं कामगं काम रूपिणम् || 20

- वाल्मीकी रामायण

பிக்ஷு ரூப ப்ரதி ச்சன்னம்

சுக்ரீவ ப்ரிய காம்யயா |

ருஷ்ய-முகாத் இஹ ப்ராப்தம்

காமகம் காம ரூபினம் ||

- வால்மீகி ராமாயணம்

நான் நிஜத்தில் சுக்ரீவனின் மந்திரி. சுக்ரீவன் எனக்கு கொடுத்த காரியத்தை நிறைவேற்றவே, நான் பிக்ஷு ரூபத்தில் வந்தேன்."

एवमुक्त्वा तु हनुमांस्तौ वीरौ राम लक्ष्मणौ |

वाक्यज्ञौ वाक्य कुशलः पुनः न उवाच किंचन ||

- वाल्मीकी रामायण

ஏவமுக்த்வா து ஹனுமாம்ஸ்தோ

வீரௌ ராம லக்ஷ்மணௌ |

வாக்யஞௌ வாக்ய குசல:

புன: ந உவாச கிஞ்சன ||

- வால்மீகி ராமாயணம்

முதன்முதலாக ராமபிரானை தரிசனம் பெற்ற ஹனுமான், அழகாக யாரிடமும் பேசுவதில் வல்லவரான ஹனுமான், இப்படி பேசி விட்டு, ராமபிரான் பதிலுக்காக அமைதி காத்தார்.   

சூரிய தேவனிடமே நேரிடையாக வேதங்கள் அனைத்தும் கற்ற ஹனுமான், இதயப்பூர்வமாக, முதல் சந்திப்பிலேயே "நீங்கள் மனித ரூபத்தில் வந்துள்ள தெய்வம் என்றே அறிகிறேன்.' (मानुषौ देवरूपिणौ) என்று சொல்லி, ராமபிரானின் பதிலுக்கு காத்து இருக்க, அவதாரத்தில் தன்னை மனிதன் என்றே காட்டி கொள்ள, சங்கல்பம் செய்து கொண்டு வந்த ஸ்ரீமந் நாராயணன், 

"தான் மனிதன்" என்று இவரிடம் சொன்னால் சத்தியத்தை மறுத்ததாகும் என்பதாலும்,

"தான் விஷ்ணுவே' என்று இவரிடம் சத்தியத்தை சொன்னால், அவதாரம் செய்த நோக்கம் வீணாகும் என்பதாலும், சாமர்த்தியமாக இந்த தர்ம சங்கடத்தை கையாண்டார். 

தான் பதில் சொன்னால், "நான் தான் பரமாத்மா" என்று ஹநுமானுக்கு உண்மையை சொல்லியாக வேண்டும். இதை தவிர்க்க, லக்ஷ்மணரை பேச வைக்க தீர்மானித்தார்.


एतत् श्रुत्वा वचस्तस्य रामो लक्ष्मणम् अब्रवीत् |

प्रहृष्ट वदनः श्रीमान्भ्रातरं पार्श्वतः स्थितम् ||

- वाल्मीकी रामायण

ஏதத் ஸ்ருத்வா வசஸ்தஸ்ய

ராமோ லக்ஷ்மணம் அப்ரவீத் |

ப்ரஹ்ருஷ்ட வதன: ஸ்ரீமான்

ப்ராதரம் பார்ஷ்வத: ஸ்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத ஹனுமானின் பேச்சை கேட்ட ராமபிரான், மந்தஹாசம் செய்து கொண்டே, அருகில் நின்று கொண்டிருந்த லக்ஷ்மணரை பார்த்து பேசலானார். 




सचिवो अयं कपीन्द्रस्य सुग्रीवस्य महात्मनः |

तमेव काङ्क्षमाणस्य मम अन्तिकम् उपागतः || 1

- वाल्मीकी रामायण

சசிவோ அயம் கபீந்த்ரஸ்ய

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

தமேவ காங்க்ஷ-மானஸ்ய

மம அந்திகம் உபாகத: ||

- வால்மீகி ராமாயணம்

லக்ஷ்மணா! இவர் மஹாத்மா சுக்ரீவனின் மந்திரி. நானும் இவரை தான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். அவரே இங்கு வந்து விட்டார்.

तम् अभ्यभाष सौमित्रे सुग्रीव सचिवम् कपिम् |

वाक्यज्ञम् मधुरैः वाक्यैः स्नेह युक्तम् अरिन्दम || 2

- वाल्मीकी रामायण

தம் அப்யபாஷ சௌமித்ரே

சுக்ரீவ சசிவம் கபிம் |

வாக்யஞம் மதுரை: வாக்யை:

ஸ்னேஹ யுக்தம் அரிந்தம் ||

- வால்மீகி ராமாயணம்

அழகான சொற்களால், நட்போடு இவரிடம் நீயே பேசு.

न अन् ऋग्वेद विनीतस्य ना यजुर्वेद धारिणः |

ना साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || 3

- वाल्मीकी रामायण

ந அந் ருக்வேத வினீதஸ்ய

நா யஜுர்வேத தாரிண: |

நா சாம வேத விதுஷ:

சக்யம் எவம் விபாஷிதும் ||

- வால்மீகி ராமாயணம்

ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மூன்றிலும் அர்த்தம் புரிந்து தேர்ச்சி அடையாதவர்களால், இப்படி பேச இயலாது. இவருடைய பேச்சில் ஒரு பிழை கூட காணப்படவில்லை. 

नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |

बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || 4

- वाल्मीकी रामायण

நூனம் வ்யாகரணம் க்ருத்ஸ்னம்

அனேந பஹுதா ஸ்ருதம் |

பஹு வ்யாஹரதா அனேந

ந கிஞ்சித் அப சப்திதம் ||

- வால்மீகி ராமாயணம்

நிச்சயமாக இவர் இலக்கணமும் நன்கு அறிந்தவர் என்று தெரிகிறது. 

न मुखे नेत्रयोः च अपि ललाटे च भ्रुवोः तथा |

अन्येषु अपि च सर्वेषु दोषः संविदितः क्वचित् || 5

- वाल्मीकी रामायण

ந முகே நேத்ரயோ: ச

அபி லலாடே ச ப்ருவோ: ததா |

அந்யேஷு அபி ச சர்வேஷு

தோஷ: சம்விதித: க்வசித் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் பேசும் போதுந முகே நேத்ரயோ: ச அபி லலாடே ச ப்ருவோ: ததா |

அந்யேஷு அபி ச சர்வேஷு தோஷ: சம்விதித: க்வசித் ||

- வால்மீகி ராமாயணம் இவர் முகத்தில், கண்களில், நெற்றியில், புருவத்தில், மேலும் மற்ற அங்கங்களில் ஒரு இடத்தில் கூட எனக்கு குறை காணப்படவில்லை. 

अविस्तरम् असंदिग्धम् अविलम्बितम् अव्यथम् |

उरःस्थम् कण्ठगम् वाक्यम् वर्तते मध्यमे स्वरम् || 6

- वाल्मीकी रामायण

அவிஸ்தரம் அஸன்திக்தம்

அவிலம்பிதம் அவ்யதம் |

உர: ஸ்தம் கண்டகம் வாக்யம்

வர்ததே மத்யமே ஸ்வரம் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் சுருக்கமாக பேசினார். அதே சமயம் குழப்பாமல் பேசினார். மிகவும் வேகமாகவும் பேசவில்லை, மிகவும் மெதுவாகவும் பேசவில்லை. இவர் பேச்சின் வேகம் சீராக மிதமாக இரண்டுக்கும் நடுவிலேயே இருந்தது.

संस्कार क्रम संपन्नाम् अद्भुताम् अविलम्बिताम् |

उच्चारयति कल्याणीम् वाचम् हृदय हर्षिणीम् || 7

- वाल्मीकी रामायण

சம்ஸ்கார க்ரம சம்பன்னாம்

அத்புதாம் அவிலம்பிதாம் |

உச்சாராயதி கல்யாணீம்

வாசம் ஹ்ருதய ஹர்ஷிணீம் ||

- வால்மீகி ராமாயணம்

இவர் பேசும் போது எந்த இடத்திலும் கத்தவும் இல்லை, முனகவும் இல்லை. இவர் பேச்சிலேயே பண்பு தெரிகிறது. இவர் பேச பேச கேட்க ஆசை இதயத்தில் ஏற்படுகிறது. இனிமையான குரல், இடத்துக்கு தகுந்த சரியான சொற்களை பயன்படுத்தும் புத்திசாலித்தனம், சொற்களை சரியாகப் பிரித்தல், சுருக்கமாக மற்றும் நம்பிக்கையுடன் பேசுதல், தாளம் தப்பாமல் பேசுதல் ஆகிய 6 லக்ஷணங்கள் ஒரு பேச்சாளனுக்கு இருக்க வேண்டும். இவரை அனைத்தும் ஒரு குறை இல்லாமல் ஹநுமானிடம் இருப்பதை கண்டு ப்ரஸன்னமானார் ராமபிரான்.

अनया चित्रया वाचा त्रिस्थान व्यंजनस्थयाः |

कस्य न आराध्यते चित्तम् उद्यत् असे अरेः अपि || 8

- वाल्मीकी रामायण

அனயா சித்ரயா வாசா

த்ரிஸ்தான வ்யஜனஸ்தயா: |

கஸ்ய ந ஆராத்யதே சித்தம்

உத்யத் அசே அரே: அபி ||

- வால்மீகி ராமாயணம்

கையில் வாளுடன் கொலை செய்ய வரும் எதிரி கூட, இவர் பேச்சுக்கு கட்டுப்பட்டு விடுவான்.

एवम् विधो यस्य दूतो न भवेत् पार्थिवस्य तु |

सिद्ध्यन्ति हि कथम् तस्य कार्याणाम् गतयोऽनघ || 9

- वाल्मीकी रामायण

ஏவம் விதோ யஸ்ய தூதோ

ந பவேத் பார்திவஸ்ய து |

சித்த்யந்தி ஹி கதம் தஸ்ய

கார்யாணாம் கதயோ அனக ||

- வால்மீகி ராமாயணம்

இது போன்று சாமர்த்தியமாக பேச தெரிந்தவர்கள் இல்லாது போனால், பெரிய பெரிய காரியங்களை எப்படி சாதிக்க முடியும்?

एवम् गुण गणैर् युक्ता यस्य स्युः कार्य साधकाः |

तस्य सिद्ध्यन्ति सर्वेऽर्था दूत वाक्य प्रचोदिताः || 10

- वाल्मीकी रामायण

ஏவம் குண கநைர் யுக்தா

யஸ்ய ஸ்யு: கார்ய சாதகா: |

தஸ்ய சித்த்யந்தி சர்வே அர்தா

தூத வாக்ய ப்ரசோதிதா: ||

- வால்மீகி ராமாயணம்

இப்படி அற்புதமாக பேச திறன் படைத்த ஒருவரை யார் தன்னிடம் வைத்து கொண்டு இருக்கிறாரோ, அவர் எந்த காரியத்தையும் சாதித்து விடலாமே!"

एवम् उक्तः तु सौमित्रिः सुग्रीव सचिवम् कपिम् |

अभ्यभाषत वाक्यज्ञो वाक्यज्ञम् पवनात्मजम् ||

- वाल्मीकी रामायण

ஏவம் உக்த: து சௌமித்ரி: 

சுக்ரீவ சசிவம் கபிம் |

அப்ய பாஷத வாக்யஞோ 

வாக்யஞம் பவனாத்மஜம் ||

- வால்மீகி ராமாயணம்

இப்படி ஹனுமானை ராமபிரானே புகழ, லக்ஷ்மணன், சுக்ரீவனின் மந்திரியான ஹனுமானை பார்த்து பேசலானார். 

विदिता नौ गुणा विद्वन् सुग्रीवस्य महात्मनः |

तम् एव च अवाम् मार्गावः सुग्रीवम् प्लवगेश्वरम् || 1

- वाल्मीकी रामायण

விதிதா நௌ குணா வித்வன்

சுக்ரீவஸ்ய மஹாத்மன: |

தம் ஏவ ச அவாம் மார்காவ:

சுக்ரீவம் ப்லவக ஈஸ்வரம் ||

- வால்மீகி ராமாயணம்

"ஹே புத்திமான்! நாங்கள் சுக்ரீவனை பற்றி தெரிந்து கொள்ளவே இங்கு வந்தோம். அவரை தேடி தான் வந்தோம்.

यथा ब्रवीषि हनुमान् सुग्रीव वचनाद् इह |

तत् तथा हि करिष्यावो वचनात् तव सत्तम || 2

- वाल्मीकी रामायण

யதா ப்ரவீஷி ஹனுமான்

சுக்ரீவ வசநாத் இஹ |

தத் ததா ஹி கரிஷ்யாவோ

வசநாத் தவ சத்தம ||

- வால்மீகி ராமாயணம்

சுக்ரீவன் உங்களுக்கு சொன்னபடியே, நீங்கள் சொன்னபடி அவரை சந்தித்து ஒரு சம்பந்தம் ஏற்படுத்தி கொள்ளலாம்.

तत् तस्य वाक्यम् निपुणम् निशम्य

प्रहृष्ट रूपः पवनात्मजः कपिः |

मनः समाधाय जय उपपत्तौ

सख्यम् तदा कर्तुम् इयेष ताभ्याम् ||

- वाल्मीकी रामायण

தத் தஸ்ய வாக்யம்

நிபுணம் நிசம்ய

ப்ரஹ்ருஷ்ட ரூப:

பவனாத்மஜ: கபி: |

மன: சமாதாய

ஜய உபபத்தொள

சக்யம் ததா கர்தும்

இயேஷ தாப்யாம் ||

- வால்மீகி ராமாயணம்

இதை கேட்ட ஹனுமான் பெரு மகிழ்ச்சி அடைந்தார். இவர்களின் நட்பால், சுக்ரீவனின் வாழ்வு மலரப்போவது நிச்சயம் என்று மகிழ்ந்தார்.

Saturday 9 January 2021

மனிதனின் நோக்கம் என்ன? விலங்குக்கு உள்ள நோக்கம் தான் மனித நோக்கமா? மனித நோக்கத்தை அறிந்து கொள்ள, எந்த மொழிகளை தமிழன் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும்?

மனிதன் எதை நோக்கி செல்ல வேண்டும்?

சிலர் "மரணத்தை நோக்கி பிறந்தோம்' என்று சொல்கிறார்கள்..

இறப்பு என்பது விலங்குக்கும் உண்டு. 

அனைவருக்கும் பொதுவான முடிவு "இறப்பு".

விலங்குக்கும், மனிதனுக்கும் பொதுவான 'இறப்பே' மனித பிறவியின் நோக்கம்! 

என்று சொல்லிவிட்டால், மனிதனும், விலங்கும் ஒன்று என்று ஆகி விடும்.


மனிதன் மற்ற விலங்குகளிடமிருந்து வேறுபட்டு இருக்கிறான் என்று தெளிவாக தெரியும் போது, 'மனித நோக்கம் தனித்துவமாக தான் இருக்க வேண்டும்' என்று தெரிகிறது.

"மனிதர்களாகிய நாம் எதை நோக்கி செல்ல வேண்டும்?" என்று வேதாந்தம் வழி காட்டுகிறது.


மனித நோக்கம் என்ன? என்பதை புரிந்து கொள்ள, 

* 'எந்த விஷயம் மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக உள்ளது?' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்..

* 'எந்த விஷயம் மனிதனுக்கு மட்டும் அதிக சலுகையுடன் கொடுக்கப்பட்டு உள்ளது? மற்ற விலங்குகளுக்கு கொடுக்கப்படவில்லை' என்று கவனித்துப் பார்க்க வேண்டும்.. 

வேதாந்தம்.. சொல்கிறது

மனிதனுக்கும், விலங்குக்கும் பொதுவாக கொடுக்கப்பட்ட விஷயங்கள் பல.. அதில் ஒரு சில…

* கேட்பதற்கு 'காது' 

* சுவைக்க 'நாக்கு'

* பார்க்க 'கண்'

* தொடுவதை உணர 'தோல்'

* முகர்ந்து உணர 'மூக்கு'

* மரணம்





விலங்குக்கும், மனிதனுக்கும் பொதுவாக இருக்கும் விஷயத்தையே 'மனித நோக்கம்' என்று நினைத்தால், 

அவனை 'விலங்கு' என்று தானே சொல்ல வேண்டும்..


மனிதனுக்கு மட்டும் பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட, விலங்குகளிடம் காணப்படாத விஷயங்கள் சில உண்டு.. அதில் ஒரு சில…

* சுவைக்க செய்யும் 'நாக்கு', மனிதனை மட்டும் 'பேச' வைக்கிறது

* படுத்தவாறே வளர்கிறது விலங்குகள். 

   மனிதன் மட்டும், முதுகு நிமிர்ந்து மேல் நோக்கி வளருகிறான்.


இப்படி விலங்குக்கு இல்லாத சில சலுகைகளை, மனிதன் மட்டும், அந்த பரம்பொருளாக இருக்கும் பரப்ரம்மத்தின் கருணையால், பூர்வ ஜென்மத்தில் செய்த புண்ணியத்தால் பெற்று இருக்கிறான்.

ஏன் மனிதனை மட்டும் முதுகு நிமிர்த்தி படைத்தார்?

ஏன் மனிதனுக்கு மட்டும் நாக்கை வைத்து பேசும் சக்தியை கொடுத்தார்?

இது மட்டுமா கொடுத்தார்? இப்படி கொடுத்த வாக்கை, காரணத்தை விசாரித்து சிந்திக்க, 6வது அறிவையும் மனிதனுக்கு கொடுத்து இருக்கிறார் பரமாத்மா.

* ஏன்? எதற்கு? இது நல்லதா? இது கெட்டதா? இது தான் லட்சியமா? இது புண்ணியமா? இது பாபமா? என்று அறிந்து செயல்பட, 6வது அறிவான விசார புத்தியையும் மனிதனுக்கு ஆசையோடு கொடுத்தார்.


இந்த 6வது அறிவை (புத்தியை) பயன்படுத்தாமலோ, பயன்படுத்த தெரியாமல் இருப்பதால், மனிதர்களில் பலருக்கு, மிருகத்திற்கு உள்ள ஆசையே இருக்கிறது. 

* சிலருக்கு, உணவே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, பல வித உலக காட்சிகளை பார்ப்பதே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, பல வித உலக பொருட்களை நுகர்வதே லட்சியமாக இருக்கிறது.. 

* சிலருக்கு, தொடுவதே லட்சியமாக இருக்கிறது..

* சிலருக்கு, பல வித உலக விஷயங்கள் கேட்பதே லட்சியமாக இருக்கிறது..

அதற்காக தனக்கு பிரத்யேகமாக கொடுக்கப்பட்ட 6வது அறிவை பயன்படுத்தி, பல பாவ, புண்ணிய காரியங்கள் மனிதர்கள் செய்கிறார்கள்..

விலங்குகளை பார்.  

அனைத்தும் படுத்தபடி நீள வாக்கில் வளருகிறது.  நீ மட்டும் ஏன் முதுகு நிமிர்ந்து வளருகிறாய்?

அதிலிருந்தே, மனித நோக்கம் தெரியவில்லையா?

'முதுகு நிமிர்ந்து, உன் நோக்கமும் மேல் நோக்கி போவது தான் உன் லட்சியம் என்று அறிந்து கொள்' என்று வேதாந்தம் காட்டுகிறது. 


உன் உடல் வளர்ச்சியை  கவனித்தே, உன் மனித பிறவியின் நோக்கத்தை புரிந்து கொள்" என்கிறது வேதம்.


அதே போல, 

கண், காது, மூக்கு, தோல், நாக்கு என்ற 5 உறுப்புகள், பார்க்கவும், கேட்கவும், முகரவும், தொடவும், சுவைக்கவும் இருக்கிறது.

இது மனிதனுக்கும் உள்ளது. மிருகத்துக்கும் உள்ளது.


சுவைக்க வைக்கும் நாக்கே, மனிதனுக்கு மட்டும் கூடுதலாக, பேச வைக்கும் கருவியாகவும் இருப்பதை காட்டி, 

உனக்கு கொடுக்கப்பட்ட இந்த அருமையான பேச்சை மேல் நோக்கிய விஷயங்களுக்கே பயன்படுத்து

உனக்கு தெய்வம் கொடுத்த இந்த அருமையான 'வாக்கை' உலக விஷயமான விஷயங்களை பார்க்கவோ, கேட்கவோ, சுவைக்கவோ, நுகரவோ, தொடவோ செலவு செய்து மீண்டும் விலங்காக ஆகாதே! 

பார்க்க ஆசைப்பட்டால். கோவிலுக்கு சென்று தெய்வத்தை பார்

கேட்க ஆசைப்பட்டால். தெய்வத்தை பற்றி சொல்லப்படும் மகான்கள் பேச்சை, பாடல்களை கேள்

சுவைக்க ஆசைப்பட்டால், கோவிலில் கொடுக்கப்படும் பல வித பிரசாதங்களையே சாப்பிடு

முகர ஆசைப்பட்டால், மனம் கமழும் பல வித பூக்களால் தெய்வத்துக்கு அர்ச்சனை செய்து அந்த பிரசாதத்தை நுகர்ந்து கொள்.

தொட ஆசைப்பட்டால், உன் வீட்டிலேயே கணபதி, முருகன், கிருஷ்ணர், ராமர், சிவன் என்று மூர்த்திகளை ஸ்வாமி அறையில் வைத்து, அவர்களுக்கு பக்தியுடன் நீயே தொட்டு தொட்டு அபிஷேகம், அலங்காரம் செய். 

நல்லது கெட்டது, பாவ புண்ணிய வித்தியாசம் அறிய உனக்கு கொடுக்கப்பட்ட இந்த 6வது அறிவை தெய்வத்தை நோக்கி மேல் நோக்கி திருப்பு' 

என்று சொல்கிறது..





எப்பொழுது மிருகத்தை விட அதிகப்படியாக, மனிதனுக்கு வாக்கும், 6வது அறிவும் கொடுக்கப்பட்டதோ, அதிலிருந்தே, 'விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை விட,  மனிதனுக்கு அதிக சுகம் கொடுக்க பரமாத்மாஆசைப்படுகிறார்! என்று புரிந்து கொள்', 

என்று சொல்கிறது..


மிருகங்களுக்கு நல்லது கெட்டது பிரிக்கும் விசார புத்தி இல்லை. அதனால் அவைகளுக்கு பாபமும் சேர்வதில்லை. புண்ணியமும் சேருவதில்லை. 

அதன் லட்சியம் சாப்பிடுவதோடு (நாக்கு), உறவு (தொடுவது) கொள்வதோடு முடிந்து விடுகிறது

சுகத்தை அனுபவிக்கிறோம் என்று கூட புரிந்து கொள்ள தெரியாது. 

மரணம் நிச்சயம். மீண்டும் ஒரு விலங்காகவே பிறந்து விடுகிறது.


மகான்களின் திருவடி பட்டால், மகான்கள் கருணையோடு ஒரு விலங்கையோ, மரத்தையோ பார்த்தால், அவர்களின் ஆசையை நிறைவேற்ற, தெய்வம் இந்த ஆத்மாக்களுக்கு மனித பிறவி தருகிறது..


மகான்கள் பாதம் எங்கும் பட வேண்டும் என்பதால் தான், பொதுவாகவே சந்நியாசிகள், மகான்கள் பல ஊர்களுக்கு செல்கிறார்கள்

அவர்கள் பாத தூளி பட்ட, அவர்கள் பார்வையில் பட்ட மரங்கள், செடி கொடிகள், விலங்குகள், பறவைகள் அனைத்துக்கும், அடுத்த ஜென்மமாக மனித பிறவி கிடைக்கிறது.

மிருகத்தை காட்டிலும், வாக்கு கொடுத்தும், விசார புத்தி கொடுத்தும், மிருகத்தை விட அதிக சுகம் ஒரு மனிதன் அனுபவிக்கவில்லை என்றால், அதற்கு காரணம் கீழ் நோக்கிய லட்சியங்களே!


விலங்கும் உணவுக்காக அலைகிறது. கொஞ்சம் கஷ்டப்படுகிறது. 

கிடைக்காமல் போனாலும் வேதனை அடைவதில்லை.. தேடிக்கொண்டே இருக்கிறது.

இன்று உணவு கிடைத்தால் சாப்பிட்டு விட்டு அமைதியாக இருந்து விடுகிறது. நாளை கிடைக்குமா? என்று கவலைப்படுவது இல்லை.


மனிதனும் தன் லட்சியமாக உணவுக்காகவே அலையும் போது, விசார புத்தி இருப்பதால், கிடைக்கவில்லையென்றால் வேதனை படுகிறான். 

இன்று கிடைத்தாலும், நாளை கிடைக்குமா? என்று வேதனை படுகிறான்.

இது போல, 

உலக விஷயங்களை மிருகம் போல சுவைக்கவும், கேட்கவும், முகரவும், பார்க்கவும், தொடவும் லட்சியமாக கொள்ளும் போது

விசார புத்தி (6வது அறிவு) இவனுக்கு இருப்பதால், 'போதவில்லையே!!' என்று தோன்றி, விலங்கு அனுபவிக்கும் சுகத்தை கூட அனுபவிக்க முடியாமல், வேதனையில் மூழ்கி கிடக்கிறான். 

அடுத்த பிறவியாக சில ஆத்மாக்கள், மீண்டும் விலங்காகவோ, மரமாகவோ பிறந்து, மீள முடியாத சம்சார சூழலில் சிக்கி விடுகிறார்கள்.


4000 திவ்ய பிரபந்தங்கள், நாயன்மார் கொடுத்த அள்ளி கொடுத்த பதிகங்கள், தமிழ் மொழியில் உள்ளது.

மூல ராமாயணம் வால்மீகி எழுதினார்.  

ஆபஸ்தம்ப சூத்திரம் (formula), நாரத பக்தி சூத்திரம் என்று பல வித சூத்திரங்கள் சம்ஸ்க்ரித மொழியில் உள்ளது.

கணாத ரிஷி சொன்ன சூத்திரத்தை அப்படியே நியூட்டன் சொல்கிறான். ஆனால் நமக்கு தெரியவில்லை.

இவை படித்து புரிந்து கொள்ள, 

அனைவரும் 'ஒரு வருடமாவது' தன் வாழ்க்கையை சங்க தமிழ் கற்கவும், சம்ஸ்க்ரிதம் கற்கவும் செலவு செய்ய வேண்டும்.. 

இதை பல முறை, காஞ்சி மஹா பெரியவர். ஹிந்துக்களுக்கு சொல்லி இருக்கிறார். 

ஆனந்த விகடன், கல்கி படிப்பதால், நம் நோக்கம் மேல் நோக்கி செல்லாது.. 

கொஞ்சம் கஷ்டப்பட்டு குறைந்த பட்சம் சங்கதமிழ் மொழியையும், சம்ஸ்க்ரித மொழியையும் கற்று கொண்டு விட்டால்

அனைவரும் ஆராய்ச்சியாளர்கள் ஆகி விடலாம்.

அனைவரது சிந்தனையையும் 4000 திவ்ய பிரபந்தமும், பதிகங்களும் தானே உயர்த்தி கொண்டு சென்று விடும்.

வேத மந்திரங்கள் அர்த்தம் தானாக புரிந்து விடும்

அர்த்த விவாதங்கள் ஏற்படும். ஆன்மீக வளர்ச்சி ஏற்படும்.


கணாத ரிஷி சொன்னதை நியூட்டன் சொன்னான்.. அது போல பொதிந்து கிடக்கும் பல ரகசியங்கள் நமக்கு புரிய ஆரம்பிக்கும்.

நம் மூதாதையர்கள், 

மண்ணை தங்கமாக்கியது எப்படி? என்ற ஆராய்ச்சிகள் தொடங்கும்.

12 லட்சம் வருடம் முன், த்ரேதா யுகத்தில் நடந்த ராமாயணம், வானில் பறக்கும் புஷ்பக விமானத்தை (flight) பற்றி சொல்கிறது

இதன் வேத சூத்திரங்களை தொலைத்து இருக்கிறோம் இன்று.

கோவில்கள், அதன் சிற்பங்களை பார்த்தால் தலை சுற்றுகிறது.. 

அதனை வடித்த சிற்பி படித்த. சிற்ப வேத சாஸ்திரம் இன்று புரியவில்லை, காணவில்லை.

இன்று அனைவரும் அம்பு தயாரித்து பானம் விடுவது எப்படி? என்று கற்று கொள்கிறார்கள்.. 

சாதாரணமான பானங்கள் பயன்படாத போது, பலவித அஸ்திரங்கள் (bomb) பயன்படுத்தி பல ஆயிரம் பேரை ஒரே நேரத்தில் வீழ்த்தினார் என்று சொல்கிறது.  

இதை இப்போது Atom Bomb, Nuclear Bomb என்று வெளிநாட்டவர்கள் கண்டுபிடித்து நமக்கே கொடுத்து விற்று விட்டார்கள்

அஸ்திரங்கள் எப்படி பயன்படுத்தினார்கள்? என்ற ரகசியம், நமக்கு சம்ஸ்க்ரிதம் தெரியாததால் அழிந்து விட்டது. 

இந்த சம்ஸ்க்ரித மொழியை வெளிநாட்டவர்கள் கற்று கொண்டு, பல ரகசிய சூத்திரங்களை என்றோ திருடி கொண்டு சென்றுவிட்டனர்.

சம்ஸ்க்ரித மொழியில் ராமாயணம் எழுதிய வால்மீகி முனி "தமிழன்" என்று கூட தெரியவில்லை தமிழனுக்கு. 

அவர் பிறந்த 'அன்பில்' என்ற ஊரில் உள்ளவர்களுக்கு மட்டும் தெரிந்து இருக்கிறது.. 

அவர் முக்தி ஸ்தலம் சென்னைக்கு அருகில் உள்ள 'திருநீர்மலை' என்பதும் அங்கு இருப்பவர்களுக்கு மட்டும் தெரிகிறது.

அகத்தியர் 'தமிழ் முனி' என்று தெரிகிறது. அதே தமிழ் முனி தான், ராமபிரானுக்கு போர் சமயத்தில், எதிரிகளை வெற்றி கொள்ள 'ஆதித்ய ஹ்ருதயம்' என்ற சம்ஸ்க்ரித மந்திரம் சொன்னார் என்று தெரியவில்லை. அதன் அர்த்தமும் சம்ஸ்க்ரித மொழி தெரியாததால் புரியவில்லை.


'அறம் பொருள் இன்பம் வீடு' என்ற தமிழ் சொல் மட்டும் தெரிகிறது. 

'தர்ம, அர்த்த, காம, மோக்ஷ' என்று அதே வரிசையில் சமஸ்க்ரிதமும் சொல்கிறதே? என்று ஆராய்ச்சி அறிவு இல்லை.

ஆனால், மோக்ஷம் என்ற அர்த்தத்தை குறிக்கும் சொல்லுக்கு நிகரான சொல் 'விடுதலை' தானே? ஆனால் வீடு என்று குறிப்பிட்டு தமிழ் சொல்கிறதே? என்று காரணம் புரியவில்லை. 

அதன் அர்த்தத்தை விளக்கும் சங்க தமிழை புரிந்து கொள்ள, தமிழன் தமிழனாக இல்லை. 

அதுபோல,

'அறம் பொருள் இன்பம் (தர்ம, அர்த்த, காம)' என்று இந்த வரிசையில் குறிப்பாக ஏன் சொன்னார்கள்? 

பொருள் தானே!! மிக மிக முக்கியம்.. 

'பொருள் இன்பம் அறம்  (அர்த்த, காம, தர்ம)' என்று சொல்லி இருக்கலாமே? என்று யோசிக்க கூட முடியவில்லை தமிழனால்.. 

ஆராய்ச்சி செய்வதற்கு கூட சங்கதமிழ் தெரிந்து இருப்பது அவசியமாகிறது.





மிகவும் எளிதான தமிழில் எழுதப்பட்ட ஆத்திசூடிக்கும், திருக்குறளுக்கும், இன்றைய தமிழனுக்கு தமிழுக்கு தமிழ் உரை தேவைப்படுகிறது.

இதன் காரணத்தால், அர்த்தங்கள் புரியாத நிலையில், பாசுரங்கள் வெறும் பாட்டாகவே ஆகி விட்டது..

பதிகங்கள் கோவில் சுவரில் ஒதுங்கி அழிந்து கொண்டு இருக்கிறது. 


இந்த நிலை மாற வேண்டும் என்றால், மகான்கள் ஆசைப்படும் படி, அனைவரும் குறைந்தது, 

உண்மையான சங்க தமிழை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், 

உண்மையான சம்ஸ்க்ரித மொழியை அறிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


இன்றைய இன்டர்நெட் காலத்தில், 

வால்மீகி ராமாயணம் சம்ஸ்க்ரித ஸ்லோகம் என்ன? அதன் சொல்லுக்கு அர்த்தம் என்ன? 

என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கினால், நமக்கே பல விஷயங்கள் உண்மையாகவே புரிந்து விடும்.

கணாத ரிஷி சூத்திரம் என்னென்ன? என்ன சொல்கிறார்? என்ற தேடுதல் நமக்குள் ஏற்பட்டால், பல அற்புதங்கள் நமக்கே தெரிய வரும்.


4000 பாசுரம், பதிகங்கள் என்ன சொல்கிறது?  

என்ன தமிழ் சொல் பயன்படுத்தி இருக்கிறார்கள்? 

என்று ஒரு வருடம் முயற்சி செய்தால் கூட, பல அற்புத அனுபவங்கள் நமக்குள் ஏற்படும்.

1000 வருட அந்நிய மத ஆக்ரமிப்பால், நாம் இழந்தது அதிகம்..

ஆனால், இன்றும் ஹிந்துக்கள் என்று நாம் இருக்கும் போது, மேலும் நம் ஹிந்து தர்மத்தை அழிய விட்டு விட கூடாது.

நம் சொத்துக்கள் சங்கதமிழ் மொழியில் எழுதப்பட்டு ஒளிந்து கொண்டு இருக்கிறது.

நம் சொத்துக்கள், சம்ஸ்க்ரித மொழியில்  எழுதப்பட்டு, ஆயுர் வேதம், சிற்ப சாஸ்திரம், நாரத பக்தி சூத்திரம், ஆபஸ்தம்ப சூத்திரம், கன்வ சூத்திரம், ஆதித்ய ஹ்ருதயம், கருட புராணம், வால்மீகி ராமாயணம் என்று பல வித ரூபத்தில் ஒளிந்து கொண்டு இருக்கிறது.

இதை வேரோடு அழித்து விடாமல், இன்றே நாம் தண்ணீர் ஊற்றி பாதுகாக்க முயற்சித்து விட்டால், 80 கோடி ஹிந்துக்கள் ஒன்று சேர்ந்தால், மீண்டும் மந்திரங்களை சொல்லியே அஸ்திரங்கள் தயாரித்து காட்டலாம்.

மண்ணை தங்கமாக்கலாம்.

கல் என்று நாம் நினைக்க, ஆழ்வார்களுடன் பேசிய தெய்வத்திடம் நாமும் பேச தகுதி பெறலாம்.


நமது இன்றைய கடமை: 

ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது 

தமிழில் தேவாரமோ, திருவெம்பாவையோ, திவ்ய பிரபந்தோமோ ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு தமிழ் சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு தமிழனும், ஒரு வருடமாவது 

தமிழன் வால்மீகி சம்ஸ்க்ரித மொழியில் கொடுத்த  ராமாயணத்தையோ, ஆயுர் வேத சம்ஸ்க்ரித வாக்கியங்களோடு உடைய ஆயுர் வேதத்தையோ, ஒன்றை எடுத்து கொண்டு, ஒவ்வொரு சம்ஸ்க்ரித சொல்லுக்கும் என்ன அர்த்தம்? என்று புரிந்து கொள்ள வேண்டும்.


இந்த அறிவு ஆராய்ச்சியை, 80 கோடி ஹிந்துக்களும் செய்ய ஆரம்பித்தால், ஒரு வருடத்தில் பல ரகசிய படைப்புகள் வெளி வந்து விடும்.


"ராமபிரான் சீதைக்கு சித்தப்பா" என்று ஒருவன் சொன்னால்,

"ராமபிரான் மனிதன் என்று சொன்னால்" என்று ஒருவன் சொன்னால்,

வால்மீகி ராமாயணம் படித்த புரிந்து கொண்டவர்களுக்கு, பேசுபவன், 'ராமபிரானை தன் இஷடத்துக்கு சொல்லி, மதம் மாற்ற பார்க்கிறான், நாதீகனாக்க பார்க்கிறான்' என்பது புரியும்.

நம் அறிவை வளர்த்து கொள்வதே ஹிந்துக்களாகிய நமக்கு பலம்.

இந்த அறிவை வளர்க்க, நம்மிடம் உள்ள பொக்கிஷங்கள் 'சங்க தமிழ்' ரூபத்திலும், 'சம்ஸ்க்ரித மொழி'யிலும் ஒளிந்து கிடக்கிறது.


12 லட்சம் வருடம் முன் த்ரேதா யுகத்தில், இரண்டு தமிழர்கள் "வால்மீகி" (வேடுவ ஜாதியில் பிறந்தவர்) அகத்தியர் - தமிழும் அறிந்து இருந்தார்கள், சமஸ்கரிதமும் அறிந்து இருந்தார்கள்.

காலங்கள் கடந்து அழியாமல் இன்றும் வாழ்கிறார்கள்.

இந்த அறிவை நாம் அறிய, குறைந்த பட்சம் இவர்கள் நமக்கு கொடுத்த வைத்திய முறைகளை, ராமாயணத்தை, ஒவ்வொரு சொல்லின் அர்த்தத்தோடு ஒரு வருடத்துக்குள் புரிந்து கொள்ள முயற்சி செய்து விட வேண்டும்.

நம் பெருமையை, நாமே படித்து உணர, நமக்கு கட்டாயம் சங்க தமிழ் அறிவும், சமஸ்க்ரித மொழி அறிவும் கட்டாயம் வேண்டும்.

சங்க தமிழும், சமஸ்க்ரிதமும் நமக்கு தெரிந்தால், அனைத்தும் தெரிந்து விடும்.

ராமாயணம், பாசுரங்கள், பதிகங்கள் அர்த்தம் புரிந்து கொண்டு படிக்க, முதுகு நிமிர்ந்து படைக்கப்பட்ட மனித பிறவி, மேல் நோக்கிய சிந்தனையை நிச்சயம் இறை அருளால் பெற்று விடும்.

இறை அருள் பெறும் போது, விலங்குகள் அனுபவிக்கும் சுகத்தை காட்டிலும், ஆனந்தம் நமக்கு கிட்டும்.

Sunday 3 January 2021

ஹனுமானுக்கு ஏற்பட்ட சோகம் (Hanuman in Stress).. கோபத்தின் விளைவை எண்ணி வருத்தப்படுகிறார்... தெரிந்து கொள்வோமே ! வால்மீகி ராமாயணம்

'சீதா தேவியை அனுப்ப முடியாது' என்று தீர்மானித்து,  ஹனுமானின் வாலில் தீ வைக்க சொல்லி ராக்ஷஸர்களுக்கு ஆணையிட்டான் ராவணன். 
ஊர் முழுக்க ஹனுமானை கட்டி இழுத்து சென்று, ஊரில் இருந்த அனைத்து ராக்ஷஸ குழந்தைகள், பெண்கள், வயோதிகர்கள் உட்பட அனைவரும் கேலியாக சிரித்தனர். 
ஹனுமான் இவர்கள் செய்யும் அட்டகாசங்கள், கேலிகள் அனைத்தையும் பார்த்தும், பொறுமையாகவே இருந்தார்.

இதற்கிடையில் ஸீதா தேவியிடம் அங்கிருந்த ராக்ஷஸிகள் 'உன்னை பார்க்க வந்த தூதன் பிடிபட்டு விட்டான். இன்று அந்த வானரன் வாலில் தீ வைத்து, ஊர் முழுக்க இழுத்து கொண்டு போகிறார்கள்" என்று சொல்ல, 
சீதா தேவி 'என் கணவனுக்கே நான் சேவை செய்தது உண்மையென்றால், நான் பதிவ்ரதை என்பது உண்மை என்றால், ராமபிரானின் ஒழுக்கம் உண்மை என்றால், ஏ அக்னியே! ஹனுமானை நீ தொடும் போது, குளிர்ச்சியாக இரு' என்று பிரார்த்தித்தாள்.
அதே சமயத்தில், வாலில் வைத்து இருந்த தீ, திடீரென்று குளிர்ந்த நீர் பட்டது போல ஆனதை உணர்ந்தார் ஹனுமான்.

உடனே உற்சாகம் அடைந்த ஹனுமான், இது வரை கேலி செய்து கொண்டிருந்த ராக்ஷஸர்களுக்கு ஒரு பாடம் புகட்ட, இலங்கையையே தீயிட்டு விட்டார்.

ஒவ்வொரு மதில் சுவராக தாவி, 
விபீஷணன் மாளிகையை மட்டும் விட்டு விட்டு, ராவணன் மாளிகை உட்பட அனைத்தையும் தீயிட்டு விட்டார்.
லங்காம் சமஸ்தாம் சந்தீப்ய லாங்கூலாக்னிம் மஹாகபி: |
நிர்வாபயாமாஸ ததா சமுத்ரே ஹரி சத்தம: ||
लङ्कां समस्तां सन्दीप्य लाङ्गूलाग्निं महाकपिः |
निर्वापयामास तदा समुद्रे हरिसत्तमः ||
இலங்கையை கொளுத்திய பிறகு, ஹனுமான் தன் வாலில் ராக்ஷஸர்கள் வைத்த தீயை கடலில் அணைத்தார்.

சந்தீப்யமானாம் வித்வஸ்தாம் த்ரஸ்தரஷோ கனாம் புரீம் |
அவேக்ஷ்ய ஹானுமான் லங்காம் சிந்தயாமாச வானர: ||
सन्दीप्यमानां विध्वस्तां त्रस्तरक्षो गणां पुरीम् |
अवेक्ष्य हानुमाँल्लङ्कां चिन्तयामास वानरः ||
இலங்கை நகரமே தீயில் கொழுந்து விட்டு ஏறிந்து கொண்டிருக்க, அலறி அடித்து ராக்ஷஸர்கள் அங்கும் இங்கும் ஓடி கொண்டு இருப்பதை கண்ட ஹனுமானுக்கு, திடீரென்று தாங்க முடியாத சோகம் ஏற்பட்டது.
தஸ்ய அபூத் சமுஹாம் த்ராச: குத்ஸா ச ஆத்மன்ய ஜாயத |
லங்காம் ப்ரதஹதா கர்ம கிம் ஸ்வித் க்ருதம் இதம் மயா ||
तस्याभूत्सुमहांस्त्रासः कुत्सा चात्मन्यजायत |
लङ्कां प्रदहता कर्म किंस्वित्कृतमिदं मया ||
ஹனுமான் இதயத்துக்குள் பெரும் கவலை குடி கொண்டது. ஹனுமான் தன்னையே வெறுத்துக்கொண்டார். 
"சீ! இலங்கையை கொளுத்தி என்ன காரியம் செய்து இருக்கிறேன்!!

தன்யாஸ்தே புருஷ ஸ்ரேஷ்ட யே புத்தயா கோபம் உத்திதம் |
நிருன்தந்தி மஹாத்மனோ தீபதம் அக்னிமிவாம்பசா ||
धन्यास्ते पुरुषश्रेष्ठ ये बुद्ध्या कोपमुत्थितम् |
निरुन्धन्ति महात्मानो दीप्तमग्निमिवाम्भसा ||
இந்த கொழுந்து விட்டு எரியும் தீயை தண்ணீர் விட்டு அணைக்க முற்படும் அனைவரும் தன்யர்கள்.. அந்த மஹாத்மாக்களுக்கு என் நன்றி..




க்ருத்த: பாபம் ந குர்யாத் க:  க்ருத்தோ ஹன்யாத் குருநபி |
க்ருத்த: பருஷயா வாசா நர: ஸாதூனதிக்ஷிபேத் ||
क्रुद्धः पापं न कुर्यात् कः क्रृद्धो हन्यात् गुरूनपि ।
क्रुद्धः परुषया वाचा नरः साधूनधिक्षिपेत् ॥
கோபத்திற்கு ஆட்பட்ட, யார் தான் தவறு செய்யாமல் இருக்க முடியும்? கோபமடைந்தவன் தனது குருவை கூட கொல்ல துணிந்து விடுவானே!! கோபம் அடைபவன் நல்லவர்களை கூட கடும் சொற்களை பேசி அவமானப்படுத்தி விடுவானே!!

வாச்யாவாச்யம் ப்ரகுபிதோ ந விஜானாதி கர்ஹிசித் |
நாகார்யம் அஸ்தி க்ருத்தஸ்ய நாவாச்யம் வித்யதே க்வசித் ||
वाच्यावाच्यं प्रकुपितो न विजानाति कर्हिचित् ।
नाकार्यमस्ति क्रुद्धस्य नावाच्यं विद्यते क्वचित् ॥
கோபம் அடைந்தவன் என்ன பேச வேண்டும்? என்பதையும் மறக்கிறான். என்ன பேச கூடாது? என்பதையும் மறக்கிறான். 
கோபம் அடைந்தவனுக்கு எந்த செயலும்! செய்ய கூடாத செயல் இல்லை. கோபம் அடைந்தவனுக்கு எந்த வார்த்தையும்! பேசக்கூடாத வார்த்தை இல்லை.

ய: சமுத்பதிதம் க்ரோதம் க்ஷமயைவ நிரஸ்யதி |
யதோரகஸ்த்வசம் ஜீர்ணாம் ச வை புருஷ உச்யதே ||
यः समुत्पतितं क्रोधं क्षमयैव निरस्यति ।
यथोरगस्त्वचं जीर्णां स वै पुरुष उच्यते ॥
பாம்பு தன் பழைய தோலை கழட்டி விட்டு செல்லும். அது போல, யார் ஒருவன் தன் கோபத்தை கழட்டி எரிந்து விட்டு, மன்னிக்கும் குணத்தை பெறுகிறானோ! அவனே உண்மையான நாயகன்.

திகஸ்து மாம் சுதுர்புத்திம் நிர்லஜ்ஜம் பாபக்ருத்தமம் |
அசிந்தயித்வா தாம் சீதாம் அக்னிதம் ஸ்வாமிகாதகம் ||
धिगस्तु मां सुतुर्बुद्धिम् निर्लज्जम् पापकृत्तमम् |
अचिन्तयित्वा तां सीतामग्निदं स्वामिघातकम् ||
சீ! அவமானம். நான் ஒரு புத்தி கெட்டவன்! வெட்கமில்லாதவன்! பாவி! சீதாதேவியை பற்றி நினைவு இல்லாமல், இப்படி இலங்கையை கொளுத்தி விட்டேனே!! என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!

யதி தக்தா த்வியம் லங்கா நூனமார்யாபி ஜானகீ |
தக்தா தேன மயா பர்துர்ஹதம் கார்யம் அஜானதா ||
यदि दग्धा त्वियं लङ्का नूनमार्यापि जानकी |
दग्धा तेन मया भर्तुर्हतं कार्यमजानता ||
இந்த இலங்கை நகரம் முழுவதும் இப்போது எரிந்து சாம்பலாகி விட்டால், அதில் சீதா தேவியும் எரிந்து விடுவாளே! 
என்னுடைய முட்டாள்தனத்தால், என் பிரபு கொடுத்த காரியத்தை கெடுத்து விட்டேனே!!  செய்த அனைத்து முயற்சியும் வீணாகி போனதே! 

யதர்தம் அயம் ஆரம்ப: தத் கார்யம் அவசாதிதம் |
மயா ஹி தஹதா லங்காம் ந சீதா பரி ரக்ஷிதா ||    
यदर्थम् अयम् आरम्भ: तत् कार्यम् अवसादितम् |
मया हि दहता लङ्कां न सीता परिरक्षिता ||
நான் இலங்கையை கொளுத்துவதற்கு முன்னால், சீதா தேவியை பத்திரமாக வைத்து விட்டு செய்து இருக்கலாமே!!

ஈசத் கார்யம் இதம் கார்யம் க்ருதம் ஆஸீன் ந சம்சய: |
தஸ்ய க்ரோத அபிபுதேன மயா மூலக்ஷய: க்ருத: ||
விநஷ்டா ஜானகீ வ்யக்தம் ந ஹ்யதக்த: ப்ரத்ருஷ்யதே |
லங்காயா: கஸ்சித் உத்தேச: சர்வா பஸ்மீக்ருதா புரீ ||
யதி தத்விஹிதம் கார்யம் மயா ப்ராஞா விபர்யயாத் |
இஹைவ ப்ராண சந்யாசோ மமாபி ஹ்யதிரோசதே ||
ईषत्कार्यमिदं कार्यं कृतमासीन्न संशयः |
तस्य क्रोधाभिभूतेन मया मूलक्षयः कृतः ||
विनष्टा जानकी व्यक्तं न ह्यदग्धः प्रदृश्यते |
लङ्कायाः कश्चिदुद्देशः सर्वा भस्मीकृता पुरी ||
यदि तद्विहतं कार्यं मया प्रज्ञाविपर्ययात् |
इहैव प्राणसंन्यासो ममापि ह्यतिरोचते ||
என் பிரபு கொடுத்து அனுப்பிய காரியத்தில் பெரும்பாலான காரியங்கள் முடிந்து, இன்னும் கொஞ்சம் தானே மிச்சம் இருந்தது. என் கோபத்தால், செய்த காரியம் அனைத்தையும் அடியோடு நாசமாக்கி விட்டேனே!
என்ன செய்கிறேன் என்றே தெரியாமல், புத்தி கெட்டு, நான் வந்த காரியத்தை நானே கெடுத்து கொண்டேனே! நான் இங்கேயே சாக வேண்டும்…

கிமக்நௌ நிபதாம் யத்ய ஆஹோஸ் வித்வங்வாமுகே |
சரீரம் ஆஹோ ஸத்த்வானாம் தத்மி சாகர வாசினாம் || 
किमग्नौ निपताम्यद्य आहोस्विद्वडवामुखे |
शरीरमाहो सत्त्वानां दद्मि सागरवासिनाम् ||
இந்த தீயிலேயே விழுந்து உயிர் விட்டு விடுவோமா? என் உடலை இந்த கடல் எடுத்து கொள்ளட்டுமா?

கதம் ஹி ஜீவிதா சக்யோ மயா த்ரஷ்டும் ஹரீஸ்வர: |
தொள வா புருஷ சார்தூலௌ கார்ய சர்வஸ்வகாதினா ||  
कथं हि जीवता शक्यो मया द्रष्टुं हरीश्वरः |
तौ वा पुरुषशार्दूलौ कार्यसर्वस्वघातिना ||
இப்படி வந்த காரியத்தை நாசம் செய்து விட்டு, இனி, சுக்ரீவ மஹாராஜனையும், அந்த இரு நர ச்ரேஷ்டர்களையும் எந்த முகத்தை வைத்து கொண்டு பார்ப்பேன்? 

மயா கலு ததே வேதம் ரோஷதோஷாத் ப்ரதர்ஷிதம் |
ப்ரதிதம் த்ரிஷு லோகேஷு கபித மனவஸ்திதம் ||
मया खलु तदेवेदं रोषदोषात्प्रदर्शितम् |
प्रथितं त्रिषु लोकेषु कपितमनवस्थितम् ||
கோபம் என்ற கறையால், நான் வானர குணத்தை காண்பித்து விட்டேனே! மூவுலகத்தில் உள்ளவர்களும் வானரர்கள் நிலையில்லா புத்தி கொண்டவர்கள் என்று சொல்வதை இன்று நானும் நிரூபித்து விட்டேனே!!

திகஸ்து ராஜசம் பாவமனீஷ மன வஸ்திதம் |
ஈஸ்வரேநாபி யத் ராகான் மயா சீதா ந ரக்ஷிதா ||
धिगस्तु राजसं भावमनीशमनवस्थितम् |
ईश्वरेणापि यद्रागान्मया सीता न रक्षिता ||
சீ! அவமானம்! எனக்குள் எழுந்த இந்த ராஜஸ குணத்தால், சீதா தேவியை காப்பாற்ற வழி இருந்தும், புத்தி கெட்டு காப்பாற்றாமல் போனேனே!!

வினஷ்டாயாம் து சீதாயாம் தாவுபௌ விநசிஷ்யத: |
தயோர்விநாசே சுக்ரீவ: ச-பந்து:  விநசிஷ்யத: ||
विनष्टायां तु सीतायां तावुभौ विनशिष्यतः |
तयोर्विनाशे सुग्रीवः सबन्धुर्विनशिष्यति ||
சீதாதேவிக்கு ஆபத்து விளைவித்து, ராம லக்ஷ்மணர்களையும் நாசம் செய்து விட்டேன்! ராம லக்ஷ்மணர்கள் தங்கள் உயிரை விட்டு விட்டால், சுக்ரீவ மகாராஜனும் அவருடன் இருக்கும் அனைவரும் தங்களை அழித்து கொள்வார்கள்.




ஏததேவ வச: ஸ்ருத்வா பரதோ ப்ராத்ரு வத்சல: |
தர்மாத்மா ஸஹ சத்ருக்ன: கதம் சக்ஷ்யதி ஜீவிதும் ||
एतदेव वचः श्रुत्वा भरतो भ्रातृवत्सलः |
धर्मात्मा सहशत्रुघ्नः कथं शक्ष्यति जीवितुम् ||
சகோதர்கள் மடிந்ததை கேட்டால், பரதனும், சத்ருக்னனும் எப்படி உயிர் வாழ்வார்கள்?

இக்ஷ்வாகு வம்சே தர்மிஷ்டே கதே நாசம் அஸம்சயம் |
பவிஷ்யந்தி ப்ரஜா: சர்வா: சோக சந்தாப பீடிதா: ||
इक्ष्वाकुवंशे धर्मिष्ठे गते नाशमसंशयम् |
भविष्यन्ति प्रजाः सर्वाः शोकसन्तापपीडिताः ||
என் காரியத்தால், இக்ஷ்வாகு குலமே சோகத்தால் அழிய போகிறது. 

ததஹம் பாக்ய ரஹிதோ லுப்த தர்மார்த சங்க்ரஹ: |
ரோஷ தோஷ பரீதாத்மா வ்யக்தம் லோக விநாசன: ||
तदहं भाग्यरहितो लुप्तधर्मार्थसङ्ग्रहः |
रोषदोषपरीतात्मा व्यक्तं लोकविनाशनः ||
என்ன ஒரு துர்பாக்கியம்!! என்னிடம் படிந்த இந்த கோபம் என்ற கறையால், நல்லதையும், நல்லவர்களையும் இழக்க போகிறேன். என் கோபத்தால், பலர் அழிய போகிறார்கள்."
இதி சிந்தயதஸ் தஸ்ய நிமித்தான் யுபபேதிரே |
பூரம் அப்யு பலப்தானி சாஷாத் புனரசிந்தயத் ||
इति चिन्तयतस्तस्य निमित्तान्युपपेदिरे |
पूरमप्युपलब्धानि साक्षात्पुनरचिन्तयत् ||
இப்படி ஹனுமான் ஒடிந்து போய், சிந்தித்து கொண்டு இருக்க, மனதில் எதேச்சையாக 'சுப சகுனம்' தோன்றியது. 
"சோகத்தை அடைபவன், மேலும் மேலும் சோகத்தை மனதில் வளர்த்து கொண்டால், அது அவனை தற்கொலை வரை கொண்டு சென்று விடும்.
சோகத்தை ஒழிக்க ஒரே வழி மனதை உற்சாகப்படுத்துவதே!" என்று நினைத்து கொண்ட, ஹனுமான், மேலும் சிந்திக்கலானார்.  

அத வா சாரு சர்வாங்கீ ரக்ஷிதா ஸ்வேன தேஜஸா |
ந நிஷிஷ்யதி கல்யாணி ந அக்னிரக்னௌ ப்ரவர்ததே ||
अथ वा चारुसर्वाङ्गी रक्षिता स्वेन तेजसा |
न नशिष्यति कल्याणी नाग्निरग्नौ प्रवर्तते ||
"சீதா தேவி தன் கற்பு என்ற அக்னியுடன் இருப்பதால், நாம் தீயிட்ட இந்த அக்னியில் ஒன்றும் ஆகி இருக்க மாட்டாள். ஒரு அக்னி இன்னொரு அக்னியை கொளுத்த முடியுமா?

ந ஹி தர்மான் மனஸ்தஸ்ய பார்யாம் அமிததேஜச: |
ஸ்வசாரித்ர அபிகுப்தாம் தாம் ஸ்ப்ரஷ்டும் அர்ஹதி பாவக: ||
न हि धर्मान्मनस्तस्य भार्याममिततेजसः |
स्वचारित्राभिगुप्तां तां स्प्रष्टुमर्हति पावकः ||
இந்த அக்னி நிச்சயம் சீதாதேவியை கொளுத்தி இருக்காது. அவள் தன் நடத்தையாலேயே நன்கு பாதுகாக்கப்பட்டு இருப்பாள். எல்லையற்ற ஒளியான ராமபிரானின் பெண்மணி அவள்

நூனம் ராம ப்ரபாவேன வைதேஹ்யா: சுக்ருதேன ச |
யன்மாம் தஹன கர்மாயம் நாதஹத்தவ்ய வாஹன: ||
नूनं रामप्रभावेन वैदेह्याः सुकृतेन च |
यन्मां दहनकर्मायं नादहद्धव्यवाहनः ||
சீதாதேவியின் கற்பின் பலத்தாலும், ராமபிரானின் ப்ரபாவத்தாலும் தான் இந்த அக்னி என்னை சூடாமல் இருந்ததுஎன்று உணர்கிறேன்.

த்ரயானாம் பரதாதீனாம் ப்ராத்ருனாம் தேவதா ச யா |
ராமஸ்ய ச மன: காந்தா சா கதம் வினசிஷ்யதி ||
त्रयाणां भरतादीनां भ्रातॄणां देवता च या |
रामस्य च मनःकान्ता सा कथं विनशिष्यति ||
அருமையான பரதன் போன்ற மூன்று சகோதரர்கள் இருக்க, ராமபிரானுடைய மனதை கவர்ந்தவளாக இருக்கும் சீதா தேவி எப்படி இந்த தீயில் அழிந்து இருக்க முடியும்?

யத்வா தஹன கர்மாயம் ஸர்வத்ர ப்ரபுரவ்யய: |
ந மே தஹதி லாங்கூலம் கதம் ஆர்யாம் ப்ரதக்ஷ்யதி ||
यद्वा दहनकर्मायं सर्वत्र प्रभुरव्ययः |
न मे दहति लाङ्गूलं कथमार्यां प्रधक्ष्यति ||
அனைத்தையும் கொளுத்தி சாம்பலாக்கும் குணம் கொண்ட அக்னி என்னையே அழிக்காத போது, சீதா தேவியை எப்படி அழித்து இருக்க முடியும்?" என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்.

புன: ச சிந்தயத் தத்ர ஹனுமான் விஸ்மித: ததா |
ஹிரண்ய நாபஸ்ய கிரே: ஜல மத்யே ப்ரதர்சனம் ||
पुन: च चिन्तयत्तत्र हनुमान् विस्मित: तदा |
हिरण्य नाभस्य गिरे: जल मध्ये प्रदर्शनं ||
ஹனுமான் கடலை கடந்து கொண்டிருக்கும் போது, தான் இளைப்பாற இடம் கொடுக்க, ப்ரம்ம தேவனால் அனுப்பப்பட்ட மைனாக மலை கடலிலிருந்து வெளிவந்த ஆச்சர்யத்தை நினைத்து பார்த்தார்.

தபஸா சத்ய வாக்யேன அனன்யத் வாச்ச பர்தரி |
அபி சா நிர்தஹேதக்னி ந தாமாக்னி: ப்ரதக்ஷ்யதி ||
तपसा सत्यवाक्येन अनन्यत्वाच्च भर्तरि |
अपि सा निर्दहेदग्निं न तामग्निः प्रधक्ष्यति ||
சீதாதேவியின் தபசும், சத்தியமும், பதிவ்ரதா தன்மையுமே அக்னியை பொசுக்கி இருக்கும். அக்னி சீதையை பொசுக்கி இருக்காது."

ச ததா சிந்தயம் தத்ர தேவ்யா தர்மபரிக்ரஹம் |
சுஸ்ராவ ஹனுமான் வாக்யம் சாரனானாம் மஹாத்மனாம் ||
स तथा चिन्तयंस्तत्र देव्या धर्मपरिग्रहम् |
शुश्राव हनुमान्वाक्यं चारणानां महात्मनाम् ||
இப்படி ஹனுமான் தனக்குள் ஏற்பட்ட சோகத்தை நம்பிக்கை வார்த்தைகளால் மாற்றி கொண்டு இருக்க, அப்போது வானத்திலிருந்து தேவர்கள் பேசுவது கேட்டது.

அஹோ கலு க்ருதம் கர்ம துர்விஷஹ்யம் ஹனுமதா |
அக்னிம் விஸ்ருஜதாபீக்ஷ்னம் பீமம் ராக்ஷஸ சத்மணி ||
अहो खलु कृतं कर्म दुर्विषह्यं हनूमता |
अग्निं विसृजताभीक्ष्णं भीमं राक्षससद्मनि ||
"ஹனுமான் ராவணனின் பவனத்தை கொளுத்தி அபாரமான காரியம் செய்து விட்டார். 

ப்ரபலாயித ரக்ஷ: ஸ்த்ரீ பால வ்ருத்த சமா குலா |
ஜனகோ லோஹ லாத்மாதா க்ரந்தன்தீவாத்ரி கந்தரே || 
प्रपलायित रक्ष: स्त्री बाल वृद्ध समा कुला |
जनको लोह लाध्माता क्रन्दन्तीवाद्रिकन्दरे || 
ராக்ஷஸ பெண்கள், குழந்தைகள், வயோதிகர்கள் அனைவரும் தப்பித்து விட்டனர். இவர்கள் அனைவரும் மலை உச்சியில் பேசி கொண்டிருப்பது கேட்கிறது.




தக்தேயம் நகரீ லங்கா சாட்டப்ராகார தோரனா |
ஜானகீ ந ச தக்தேதி விஸ்மயோ அத்புத ஏவ ந: ||
दग्धेयं नगरी लङ्का साट्टप्राकारतोरणा |
जानकी न च दग्धेति विस्मयोऽद्भुत एव नः ||
இலங்கையின் மதில் சுவர்கள், நுழைவாயில் அனைத்தும் எரிந்து போனாலும், ராவணனின் மாளிகை அழிந்தும், அதற்கு உட்பட்ட அசோக வனம் பாதிப்பு அடையவில்லை. சீதா தேவி அக்னியால் பொசுக்கப்படவில்லை. இது பெரும் ஆச்சரியம்…

ச நிமித்தை: ச த்ருஷ்டார்தை: காரணை: ச மஹாகுணை: |
ருஷி வாக்யை: ச ஹனுமான் பவத் ப்ரீத மானஸ: ||
स निमित्तैश्च दृष्टार्थैः कारणैश्च महागुणैः |
ऋषिवाक्यैश्च हनुमानभवत्प्रीतमानसः ||
இதை கேட்ட ஹனுமான் உற்சாகம் அடைந்தார். தான் உணர்ந்த நல்ல சகுனத்தையும், தனக்குள் ஏற்பட்ட நல் எண்ணங்களையும், இப்பொழுது கேட்ட தேவ வாக்கினையும் நினைத்து, ஹனுமான் ஆனந்தம் அடைந்தார்.

தத: கபி: ப்ராப்த மனோரதார்தஸ்
தாமக்ஷதாம் ராஜசுதாம் விதித்வா |
ப்ரத்யக்ஷதஸ்தாம் புனரேவ த்ருஷ்ட்வா
ப்ரதி ப்ரயானாய மதிம் சகார ||
ततः कपिः प्राप्तमनोरथार्थस्
तामक्षतां राजसुतां विदित्वा |
प्रत्यक्षतस्तां पुनरेव दृष्ट्वा
प्रतिप्रयाणाय मतिं चकार ||
'சீதா தேவிக்கு ஒன்றும் ஆகவில்லை' என்று நம்பிக்கை பிறந்த பின், ஒரு முறை சீதா தேவியை பார்த்து விட்டு, கிளம்பி செல்லலாம் என்று முடிவு செய்து மீண்டும் அசோகவனம் சென்று சீதா தேவியை தரிசித்தார்.