Followers

Search Here...

Wednesday 10 February 2021

'அச்சமில்லை அச்சமில்லை' என்று பாரதி எந்த மனோநிலையில் பாடினார்? அநீச: (Aneesh) என்றால் பொருள் என்ன? விஷ்ணு சஹஸ்ரநாமம்.. தெரிந்து கொள்வோமே

 उदीर्णः सर्वत: चक्षु: अनीशः शाश्वत स्थिरः ।

भूशयो भूषणो भूतिर् विशोकः शोक नाशनः

உதீர்ண: ஸர்வத: சக்ஷு:

அனீஸ: சாஸ்வத ஸ்திர: |

பூசயோ பூஷணோ பூதிர்‌

விஸோக: சோக நாஸன: ||

- விஷ்ணு சஹஸ்ரநாமம்





அர்த்தம்

மிகவும் உயர்ந்தவர். இவருக்கு மேல் உயர்ந்ததோ, உயர்ந்தவரோ கிடையாது என்று இருப்பவர் (உதீர்ண),

இவருக்கு தெரியாமல் யாரும் ஒரு காரியம் செய்து விட முடியாது. அனைத்தையும் பார்த்து கொண்டே இருப்பவர் (ஸர்வத: சக்ஷு:). 

இவருக்கு ஆணை இட, யாரும் இல்லை என்று இருப்பவர். இவருக்கு மேல் ஒரு ஈசன் கிடையாது என்று இருப்பவர் (அனீஸ), 

அன்று இருந்தார், இன்று இல்லை என்று இல்லாமல், த்ரேதா யுகத்தில் தோன்றிய அதே ராமபிரான், சமீபத்தில் தோன்றிய தியாகராஜ ஸ்வாமிக்கும் தரிசனம் கொடுத்தார். சாஸ்வதமாக என்றுமே இருப்பவர் (சாஸ்வத ஸ்திர:),

பூமியையே படுக்கையாக போட்டு சயனித்து இருப்பவர். 14 வருடங்கள் ராமபிரானாக அவதரித்து பூமியிலேயே படுத்தவர், ஸ்தல சயன பெருமாளாக மஹாபாலிபுரத்தில் இருப்பவர் (பூசய:), 

அலங்காரம் (பூஷணம்) செய்து கொள்ள விரும்புபவர், இந்த பூமியில் பல அவதாரம் தானே செய்து செய்து, இந்த பூலோகத்துக்கே பூஷணமாக இருப்பவர் (பூஷண:), 

சோகமே இல்லாதவர் (விசோக:), 

இவர் சரித்திரத்தை கேட்பவனுக்கு கூட சோகம் மறைந்து போகும் படி செய்பவர். சோகத்தை நாசம் செய்பவர் (சோக நாசன:)


"சோக நாசன:" என்ற சொல்லை நிரூபணம் செய்தவர் வேத பிராம்மணன் மஹாகவி பாரதி.

"காக்கை சிறகினிலே நந்தலாலா நிந்தன் கரிய நிறம் தோன்றுதடா நந்தலாலா...

என்று கண்ணனே எங்கும் தனக்கு தெரிவதாக பாடும் பாரதிக்கு, 

'கண்ணன் தன் நெஞ்சில் இருக்கிறார்' என்றதும், பாரதியின் ஏழ்மை, சோகம் மறைந்து விட்டது. 




அது மட்டுமில்லாமல், 

இவர் அந்த அனுபவத்தில் பாடிய பாடலை நாம் இன்று கேட்டால் கூட நமக்கு உள்ள சோகமும் அகன்று விடும் போல இருக்கிறது. 


'சோக நாசன:' என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டுகிறார் மஹாகவி.

துக்கத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்து பல பாடல்கள் பாடிய பாரதியாருக்கு, கண்ணனை நினைத்த மாத்திரம், தன் வறுமை, சோகம் கூட மறந்தது மட்டுமில்லாமல், கண்ணன் தன்னிடம் இருக்கிறான் என்ற கர்வத்தில் பாடிய பாடல் இதோ.


அச்சமில்லை! அச்சமில்லை!

அச்சமென்பதில்லையே!

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


இச்சகத்து உள்ளோரெல்லாம்

எதிர்த்து நின்ற போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if every human in this world stands up against me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!

துச்சமாக எண்ணி நம்மை 

தூறு செய்த போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I was denigrated and slandered,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!





பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை

பெற்று விட்ட போதிலும் !

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I obtained a life where I have to beg to even eat,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!

இச்சைகொண்டே பொருளெலாம் 

இழந்துவிட்ட போதிலும் !

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I loose all the objects that I had desired,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


கச்சணிந்த கொங்கை மாதர் 

கண்கள் வீசு போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even when sensual and attractive women cast their eye over me to distract,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


நச்சை வாயிலே கொணர்ந்து 

நண்ப ரூட்டு போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if I am fed with poison by my own friends,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


பச்சை ஊன் இயைந்த 

வேற் படைகள் வந்த போதினும்!

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if the flesh desiring armies come with their spears to fight me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


உச்சிமீது வானிடிந்து

வீழுகின்ற போதினும்! 

அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே!

Even if the sky above crumbles and falls down on me,

I have no fear, I have no fear, There is not even a speck of fear in me!


சோகத்தை நாசம் செய்யும் (சோக நாசன:) கண்ணனை நினைத்த மாத்திரத்தில், வேத பிராம்மணனான, ஏழையான, ஞானியான, மஹா கவிஞனான பாரதியின், சோகம் நாசமானது.


கண்ணனை நினைத்து கொண்டு அவர் பாடிய இந்த பாடலை கேட்டால் கூட, நமக்கும் சோகம் அகன்று விடும்.  

'கிருஷ்ண பக்தன் நாசமாக மாட்டான்' (ந மே பக்த ப்ரணஸ்யதி) என்று ஸ்ரீ கிருஷ்ணரே சொல்கிறார்.


பாரதியின் வாழ்க்கை எத்தனை துன்பங்கள் தந்தாலும், சோகமே இல்லாமல் கடைசி வரை வாழ்ந்தார். இன்றும் அழியாமல் இருக்கிறார்.


இன்று வரை, 'சோகத்தை அழிக்கும்' பாரதியின் இந்த பாடல் கூட நாசமாகவில்லை. ப்ராம்மணரான பாரதியும் மறக்கப்படவில்லை.


சோக நாசனனாக இருக்கும் கிருஷ்ணரை, நாம் பக்தி செய்தால், நம்மை சோகம் தாக்காது என்று அறிவோம்.


ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா! 

வாழ்க ஹிந்து தர்மம்..

Sunday 31 January 2021

Why krishna contradict his own statement?.. Did you notice?.. Did he contradict? Bhagavad Gita

 Why krishna contradict his own statement?.. Did you notice?..

Sri Krishna when speaking to Arjuna, says 

"Arjuna! I am seated in the heart of all living beings. I am the beginning, middle, and end of all beings"


आदित्यानामहं विष्णुर्ज्योतिषां रविरंशुमान् |

मरीचिर्मरुतामस्मि नक्षत्राणामहं शशी ||

 (10 chapter) - Bhagavad Gita





After saying his above statement (reside in all)  Then he immediately contradicts by saying, he resides in specifics as below.


Why did he say that?.... 


Krishna says...

  1. Among sons of Aditi, i am Upendra (vamana), 
  2.  Among luminous objects, I am the sun
  3. Among Maruts, I am the Marichi
  4. Among stars, I am the moon.
  5. Among Vedas, I am the sama veda.
  6. Among celestial gods, I am the indra.
  7. Among senses, I am the mind.
  8. Among rudra, I am shankara.
  9. Among vasus, I am agni.
  10. Among yaksha, I am kubera.
  11. Among mountains, I am meru.
  12. Among priests, I am Brihaspati.
  13. Among warriors, I am Kartikeya (skanda /muruga).
  14. Among reservoirs of water, I am ocean.
  15. Among great rishi, I am bhrigu.
  16. Among sounds, I am sound of A ('a' sound in apple) (Aum / sounds like Om).
  17. Among immovable, I am himalaya.
  18. Among trees, I am peepul tree.
  19. Among celestial sages, I am narada.
  20. Among Gandharvas, I am chitraratha.
  21. Among siddha, I am kapila muni.
  22. Among horses, I am Ucchaihshrava appeared in ksheerapti.
  23. Among Elephant, I am Airavata.
  24. Among humans, I am the king.
  25. Among weapons, I am Vajra (Thunder).
  26. Among cows, I am Kamadhenu.
  27. Among god of love, I am Kaama deva.
  28. Among serpents (sarpa), I am Vasuki.
  29. Among snakes (naga), I am Ananthan.
  30. Among aquatics, I am varuna.
  31. Among departed ancestors, I am Aryama.
  32. Among dispensers of law, I am Yama Dharma.
  33. Among demons, I am prahalada.
  34. Among all that controls, I am time.
  35. Among Animals, I am lion.
  36. Among Birds, I am Garuda.
  37. Among purifiers, I am wind.
  38. Among wielders of weapons, I am ShriRama.
  39. Among water creatures, I am crocodile.
  40. Among flowing rivers, I am Ganges.
  41. Among sciences, I am spirituality.
  42. Among debates, I am the logical conclusion.
  43. Among letters, I am starting letter "A" (sounds like 'a' in apple).
  44. Among grammatical compounds, I am dual word.
  45. Among creators, I am brahma.
  46. Among feminine qualities, I am fame (goddess keerthidevi), wealth (sridevi), fine speech (vaak devi), memory (smruthi devi), intelligence (medhaa devi), courage (dhruthi Devi), and forgiveness (kshama devi).
  47. Among hymns in sama veda, I am Brihatsaama.
  48. Among poetic meters, I am gayatri.
  49. Among 12 months, I am Margashirshya.
  50. Among 6 seasons, I am spring.
  51. Among cheats, I am gambler.
  52. Among splendid, I am splendour.
  53. Among victorious, I am victory.
  54. Among resolute, I am resolve.
  55. Among virtuous, I am virtue.
  56. Among descendants, I am Vrishni.
  57. Among Pandavas, I am you, Arjuna.
  58. Among muni, I am vyasa.
  59. Among great thinkers, I am Shukracharya.
  60. Among preventing lawlessness, I am punishment.
  61. Among those who seek victory, I am proper conduct.
  62. Among secrets, I am silence.
  63. Among wisdom, I am wise.
  64. Among all living being, I am seed.


Sri krishna started by saying  'he resides in everything', and immediately says, he resides in specifics among each.. why?..


Let us understand Krishna's heart..


When Sri Krishna told Arjuna that 'he is seated in the heart of all living beings, the ultimate truth'

Sri krishna also understood that common people who read this ultimate truth may say that,

"Yes. Krishna paramatma (god) resides in everything. It is the truth.

Yes. Advaita Devotee like Prahalad was able to practically felt this truth.

Prahalad could not see hiranyakasipu as his father, poison as poison, weapon as weapon, elephant as elephant, mountain as mountain, ocean as ocean, killing sword as sword.

He saw everything as Narayana.

But,

How come common people like us, can perceive this ultimate truth?

How come a common people like us, can see his enemy as krishna paramathma?

How come a common people like us, can see animal as krishna paramatma?

Is there a way one can achieve such ultimate truth in practical life?"





By understanding this implicit question which will arise from common people, sri krishna immediately starts by guiding common people like us, towards 1st steps to reach this ultimate truth.


By saying, 

Among Animals, i am lion, 

Among Birds, i am Garuda and so on..

Sri krishna guides us towards ultimate truth by saying, 

"My dear Devotee! It might be tough at initial stage to see myself in everything like prahalad.. 

I can very well understand your challenge...

But, 

to kick start and to realize my presence, start 'remember me' when you,

see a lion, garuda, 

hear sama veda, hear about shankara, 

hear about kartikeya/muruga, 

hear about Himalaya, 

hear about ganges, 

hear about victory, 

hear about forgiveness, 

hear about wealth, 

hear about courage etc...


This initial steps of identifying me among big groups, will raise your spiritual consciousness towards me...

Whenever you see lion, u will start think of me.. My Narasimha Avatar may come up in your mind..


By starting this 1st step, you will start to become a Sadhveega Person (who hates killing others for their interest) . You may start seeing me in lion 1st in this practice... But gradually you will get matured to see me in every animals"





This bhakthi is enough for Sri Krishna to lift his devotee to next steps and make them realize his presence in everything they see.


This chapter is termed as Vibhuthi (limitless) yoga


By just following his 1st step, every reader of Bhagavad Gita 10th chapter, will start feeling the presence of unlimited  presence of krishna paramatma (ultimate  supreme god)


Hail Sri Krishna...

Hail our Sanathana (beyond time) Dharma (Rules).

Hail Everyone who chants Vedic God Names..

Friday 29 January 2021

"காயேன வாசா மனசே ... நாராயணாயேதி சமர்ப்பயாமி' என்று நாம் சொல்லும்போது, நாராயணன் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்? தெரிந்து கொள்வோமே!!

ஐந்து வயது குழந்தை 'கிணறு...' என்று எழுத ஆசைபட்டது..

எப்படியாவது எழுதி , தன் அப்பாவிடம் காட்டி, மகிழ வேண்டும் என்று  ஆசைபட்டது.

கொஞ்சம் முயற்சி செய்து, 'கிணறு'க்கு பதில்,"கனாரு.." என்று கஷ்டப்பட்டு தப்பாக எழுதி, தன் அப்பாவிடம் ஆசையோடு கொடுத்தது.

"தன் குழந்தை கஷ்டப்பட்டு எழுதி, அதை தன்னிடம் ஆசையோடு காட்டுகிறதே!!" என்று ஆனந்தம் அடைந்த தகப்பன், "தானே அதை சரி செய்து 'அம்மா.. அப்பா..' என்று எழுதி விட்டு... அது போதாதென்று, தன் குழந்தைக்கு 100க்கு 100 மதிப்பெண் போட்டு, தன் குழந்தையை கொஞ்சி மகிழ்ச்சிப்படுத்தினான்.





அது போல நாம்,

எந்த உலக காரியம் செய்தாலும், தவறாகவே செய்து இருந்தாலும், 

நமக்கு தாயாகவும் தகப்பனாகவும் இருக்கும், ப்ரம்ம தேவனையும் படைத்த நாராயணனிடம் காட்ட வேண்டும் என்ற ஆசையுடன், 

அப்பாவிடம் தான் செய்ததை ஆசையோடு காட்டிய குழந்தை போல, நாம் செய்ததை சமர்ப்பணம் செய்தால், 

தன்னிடம் ஆசையோடு சமர்ப்பணம் செய்யும் நம்மை கண்டு மகிழ்ந்து, 

நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், 

தானே அதை சரி செய்து, 

நன்றாக செய்தது போல ஆக்கி, 

முழு பலனையும் தந்து விடுகிறார் பரமாத்மா நாராயணன்.


சந்தியாவந்தனம், சஹஸ்ரநாமம் என்று ஏதுவாக இருந்தாலும், முடிவாக, இந்த மந்திரம் சொல்வதற்கு காரணமும் இதுவே... 


ஸ்லோகம், சந்தியாவந்தனம் செய்ததில் குறை இருந்தாலும், அப்பாவிடம் காண்பித்து, அவரே குறையை சரி செய்து, முழு பலனை கொடுக்கட்டும் என்ற 'புத்தியுடன்' இந்த மந்திரத்தை நாம் சொல்ல வேண்டும் .


எந்த காரியத்தை செய்தாலும், செய்த காரியத்தை, நம் அனைவருக்கும் அப்பாவாக உள்ள நாராயணனிடம், ஒரு குழந்தை தன் தகப்பனிடம் காட்டுவது போல காட்ட வேண்டும்.

உணவு செய்தாலும், பெருமாளுக்கு காட்டி விட்டு, பிறகு சாப்பிட வேண்டும். 

அப்படி செய்தால், உணவில் உள்ள தோஷங்கள் (தெய்வ சிந்தனை இல்லாமல் சமையல் செய்தது) நீங்கி விடும்.

 

ஹிந்துக்கள் அனைவரும் சொல்ல வேண்டிய மந்திரம்...

"காயேன வாசா மனசே இந்த்ரியர்வா புத்த்யாத்மனா வா ப்ரக்ருதே ஸ்வபாவாத் கரோமி யத் யத் சகலம் பரஸ்மை நாராயணாயேதி சமர்பயாமி"


அர்த்தம்

நான் உடலாலும், மனதாலும், இந்த்ரியங்களாலும், புத்தியாலும் செய்த தவறுகள் அத்துனையையும் நாராயணனுக்கே அர்பணிக்கிறேன்.





மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வதை விட, நாராயணனிடம் அர்பணித்தற்கு  காரணத்தை உணர்ந்து சொல்லும் போது, நமக்கும், பெருமாளுக்கும் உள்ள உறவு புரியும்.


நாம் செய்த காரியத்தில் இருந்த குறையை அவர் அப்பாவாக இருந்து சரி செய்து கொடுக்கிறார் என்ற அனுபவம் ஏற்படும் போது, இந்த மந்திரத்தின் பெருமை நமக்கு புரியும்..


நாராயணன் என்ற சொல்லுக்கு "மனிதர்களுக்கு (நர) ஆதாரமாக (அயணம்) இருக்கும் பரமாத்மா" என்று அர்த்தம்.


நமக்கு ஆதாரமாக இருக்கும் தகப்பனிடம், நாம் செய்த காரியத்தை காட்டும் போது, தகப்பன் என்ற உறவு இருப்பதால், நாம் செய்த காரியத்தில் குறை இருந்தாலும், சரி செய்து முழு பலனை கொடுத்து விடுகிறார்.


வாழ்க ஹிந்து தர்மம்...

Wednesday 27 January 2021

ஸ்ரீகிருஷ்ணர் ஏன் முரணாக பேசினார்? "நான் எல்லா உயிரினங்களின் இருக்கிறேன்" என்று அத்வைதமாக சொல்கிறார். பிறகு, கிருஷ்ணரே "நான் விலங்குகளில் சிங்கமாக இருக்கிறேன், அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்" என்று த்வைதமாக சொல்கிறார். பகவத் கீதை... தெரிந்து கொள்வோமே

 ஸ்ரீகிருஷ்ணர் ஒரு இடத்தில், "பரமாத்மாவாகிய நான் அனைத்திலும் இருக்கிறேன்" என்று சொல்கிறார்.

அடுத்த ஸ்லோகத்திலேயே இதற்கு முரணாக, 

"நான் ருத்ரர்களில் சங்கரனாக இருக்கிறேன், 

சேனை தளபதிகளில் கந்தனாக இருக்கிறேன்,

பாண்டவர்களில் அர்ஜுனனாக இருக்கிறேன்,

வேதத்தில் சாம வேதமாக இருக்கிறேன்,

ரிஷிகளில் ப்ருகு ரிஷியாக இருக்கிறேன்.

மலைகளில் ஹிமாலயமாக இருக்கிறேன்,

மனிதர்களில் அரசனாக இருக்கிறேன்,

அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன்,

விலங்கில் சிங்கமாக இருக்கிறேன்,

பறவைகளில் கருடனாக இருக்கிறேன்" 

என்று சொல்லிக்கொண்டே போகிறார்.


'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லிவிட்டு, 

அதற்கு முரணாக

'மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன்' என்று சொல்கிறாரே! 

அனைத்திலும் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு, மற்ற விலங்கில் பரமாத்மா இல்லை என்பது போல பேசிவிட்டாரே!!





'அனைத்திலும் நான் இருக்கிறேன்' என்று சொல்லி விட்டு, 'மிருகங்களில் குறிப்பாக சிங்கத்திடம் நான் இருக்கிறேன்' என்று ஏன் சொல்கிறார்?


கிருஷ்ண பரமாத்மாவின் மனதில் என்ன ஓடியது?


பரமாத்மாவில் இருந்து தான் அனைத்துமே உற்பத்தியானது. இதுவே சத்தியம்.  

இந்த சத்தியத்தை அனுபவத்தில் கொண்டு வந்த மகான்களில் பிரகலாதன் தலைசிறந்தவர்.


ஹிரண்யகசிபு பிரகலாதனை விஷம் கொடுத்தும், சூலத்தால் குத்தியும், மலையில் இருந்து தள்ளியும், கடலில் கல்லை கட்டி தள்ளியும், யானையை விட்டு மிதக்க முயன்றும், எதுவுமே பிரகலாதனை தாக்கவில்லை..

பிரகலாதனை பார்த்து, "எப்படி உன்னை எதுவும் கொல்ல முடியவில்லை.. மலையில் இருந்து உருட்டினால் இயற்கை நியதிப்படி யார் விழுந்தாலும் அடி படுமே! கருநாகத்தின் விஷம் குடித்தால், அதன் குணப்படி சாக வேண்டுமே!"

என்று கேட்டான்.


ஹிரண்யகசிபுவுக்கு 

கல் கல்லாக தெரிந்தது. 

விஷம் விஷமாக தெரிந்தது. 

தான் அரசன் என்று தெரிந்தது. 

மந்திரிகள், போர் வீரர்கள் வித்தியாசம் தெரிந்தது. 

உலகம் உலகமாக தெரிந்தது.


ஆனால், பிரகலாதனுக்கோ, "ஹிரண்யகசிபுவே நாராயணனாக தெரிந்தான். 

அவன் போர் வீரர்களை ஏவி கொலை செய்ய சொல்ல, அந்த வீரர்களும்  நாராயணனாக தெரிந்தனர். 

குத்த வரும் சூலமும், விஷமும், மலையும், தானும் கூட நாராயணனாகவே தெரிந்தனர்.

நரசிம்மாக நாராயணனே வந்த போது, தேவர்களும் 'இது என்ன பயங்கரமான அவதாரம்!' என்று அருகில் செல்லவே பயந்தனர்..

'நரசிம்மாக வந்ததும் நாராயணனே!' என்று பார்த்த பிரகலாதன், துளியும் பயப்படவில்லை.


'பரமாத்மா அனைத்திலும் இருக்கிறார்' என்ற சத்தியத்தை, பிரகலாதன் நிரூபித்தான்.





ஸ்ரீ கிருஷ்ணர், அர்ஜுனனிடம் பிரகலாதனை மனதில் நினைத்து கொண்டு, 'அர்ஜுனா! நான் நிஜத்தில் அனைத்திலும் இருக்கிறேன்.. பிரகலாதன் போன்ற ஞானிகள் நான் அனைத்திலும் இருப்பதை பார்க்கின்றனர்." என்று சொல்கிறார்.

உடனே, அர்ஜுனன், "ஐயோ கிருஷ்ணா!! இது பிரகலாதன் போன்ற ஞானிக்கு வேண்டுமானால் அனுபவத்தில் ஏற்படலாம்.. 

நீ அனைத்திலும் இருக்கிறாய் என்பது உண்மை என்றாலும், அனுபவம் எங்களுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லையே! 

'எதை பார்த்தாலும், நீ அதில் இருக்கிறாய்' என்று பார்க்கும் பக்குவம் எங்களுக்கு ஏற்படாதே! 

நாங்கள் அஞானி..  நாங்கள் பிரகலாதன் போன்ற ஞானியின் அனுபவத்தை அடையவே முடியாதே!!"

என்று நினைத்து சோர்ந்து விடுவானோ! என்று நினைத்து, அவனை பேச விடாமல், அவன் மனதில் எழும் சந்தேகத்தை போக்க, வழி சொல்ல உடனே பேசினார்..


"அர்ஜுனா! நான் அனைத்திலும் இருக்கிறேன் என்ற அனுபவம் மிக உயர்ந்த நிலை.. 

நீ அந்த அனுபவத்தை அடைய முடியாது என்று நீயாகவே நினைத்துக்கொண்டு முயற்சிக்காமல் இருந்து விடாதே...

ஞானத்தை அடைய முயற்சி உடையவன் நாசமாக மாட்டான். 

பிரகலாதனை போன்ற நிலை உனக்கும் வரும்..

அதன் முதல் படியாக, அனைத்து மிருகத்திலும் நான் இருக்கிறேன் என்று உன்னால் பார்க்க முடியாது போனாலும், அதில் சிங்கத்தை பார்க்கும் போது மட்டுமாவது, 'நரசிம்மா..' என்று நினைக்க ஆரம்பி..

ருத்ரர்களில் மன்யு, சிவன் என்று பல ரூபங்கள் உண்டு.. அனைவரிடத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் ஆரம்ப நிலையில் ஏற்படாது.

ஆனால் ருத்ர ரூபத்தை துறந்து, சாந்த ரூபத்துடன் இருக்கும் சங்கரனை பார்க்கும் போதாவது என்னை நினைத்து கொள். 


காக்கை பறந்தாலும், புறா பறந்தாலும் அனைத்திலும் நானே இருக்கிறேன் என்ற அனுபவம் உனக்கு ஆரம்ப நிலையில் ஏற்படாது.. 

அதனால், பறவைகளில் கருடன் பறந்து சென்றால், அதில் நான் இருக்கிறேன் என்று பார்.

இப்படி நீ பார்க்க ஆரம்பி.. இந்த முதல் படியே உன்னை கொஞ்சம் கொஞ்சமாக அனைத்திலும் நான் இருப்பதை உணர செய்து விடும். 


ஜீவ காருண்யம் முதலில் உனக்கு தோன்றும்.

மிருகத்தின் மாமிசத்தை தின்று தான் இந்த வயிற்றை வளர்க்க வேண்டுமா? என்று தோன்ற ஆரம்பிக்கும்..





படிப்படியாக உன் ஞான நிலை உயர்வதை நீயே அனுபவிக்கலாம்.


தெய்வம் உன்னிடம் கனவில் பேசுவதும், காட்சி தருவதும், யாரையோ அனுப்பி தக்க சமயத்தில் உன்னை ஆபத்துகளில் இருந்து காத்தும், நல்லவர்கள் நட்பு கிடைக்குமாறு வாழ்க்கை அமைவதையும் நீயே அனுபவிப்பாய்.. 


ஆதலால், அனைத்திலும் என்னை பார்க்க, முதல் படியாக, ஒரு வஸ்துவையாவது பார்க்கும் போது என்னை நினைத்து கொள்ளும் பழக்கத்தை கொள்.

தானாக ஞானி நிலை ஏற்பட்டு விடும்.."


இந்த மனோ நிலையில், கிருஷ்ண பிரமாதமா, 10வது அத்தியாயத்தில், 'நான் அனைத்திலும் இருக்கிறேன்' என்று சொல்லி, அர்ஜுனன் 'இந்த நிலை எனக்கு வராது' என்று சொல்லிவிடுவானோ என்று நினைத்து, அவனை கேட்பதற்கு முன்பேயே, உடனேயே இப்படி பேச ஆரம்பித்தார்.


अहमात्मा गुडाकेश सर्वभूताशयस्थित: |

अहमादिश्च मध्यं च भूतानामन्त एव च ||

- bhagavad Gita (பகவத் கீதை)

அஹம் ஆத்மா குடாகேச சர்வ பூத ஆஸய-ஸ்தித: |

அஹம் ஆதி: ச மத்யம் ச பூதானாம் அந்த ஏவ ச ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, அர்ஜுனனை பார்த்து சொல்கிறார்..

"அர்ஜுனா ! நான் எல்லா உயிரினங்களின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் ஆரம்பம், நடுத்தர மற்றும் முடிவாக இருக்கிறேன்".

Arjuna ! I am residing in everyone's heart. i am residing in all living entities. I am the beginning, middle, and end of all beings.




प्रह्लादश्चास्मि दैत्यानां काल: कलयतामहम् |

मृगाणां च मृगेन्द्रोऽहं वैनतेयश्च पक्षिणाम् ||

ப்ரஹ்லாத ச அஸ்மி தைத்யானாம்

கால: கலாயதாம் அஹம் |

ம்ருகானாம் ச ம்ருக-இந்த்ர அஹம்

வைநதேய : ச பக்ஷிணாம் ||

- chap 10 - 20 vibhuti yoga  (பகவத் கீதை)

அர்ஜுனா ! நான் அசுரர்களில் ப்ரகலாதனாக இருக்கிறேன். நான் எல்லா உயிரினங்களின் காலமாக இருக்கிறேன். மிருகங்களில் சிங்கமாக இருக்கிறேன். நான் பறவைகளில் கருடனாக இருக்கிறேன்.


அஞானியும் 'ஞானி ஆக முடியும்' என்று காட்டும் அற்புதமான உபதேசம்.


பகவத் கீதை மனிதனாக பிறந்த அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது...


வாழ்க ஹிந்து தர்மம்.

Monday 25 January 2021

ராமரின் வயது... வனம் செல்லும் போது, ராமபிரானுக்கு வயது என்ன? சீதாதேவிக்கு வயது என்ன? வால்மீகி ராமாயணம் தெரிந்து கொள்வோமே !!

ராமபிரானும், சீதாதேவியும் வனம் செல்வதற்கு முன், எத்தனை வருடங்கள் அயோத்தியில் இருந்தார்கள்? 

வனம் செல்லும் போது, ராமபிரானுக்கு வயது என்ன? 

சீதாதேவிக்கு வயது என்ன? 




सन्निदेशे पितुस्तिष्ठ यथा तेन प्रतिश्रुतम्।

त्वयाऽरण्यं प्रवेष्टव्यं नव वर्षाणि पञ्च च।।

- वाल्मीकि रामायण

சந்நிதேசே பிது: திஷ்ட

யதா தேன ப்ரதிஸ்ருதம் |

த்வயா அரண்யம் ப்ரவிஷ்டயம்

நவ வர்ஷாணி பஞ்ச ச ||

- வால்மீகி ராமாயணம்

"அப்பாவின் புகழை நிலைநிறுத்த, அவர் எந்த வாக்குறுதி எனக்கு கொடுத்தாரோ! அதன்படி, ராமா! நீ 9+5 = 14 வருடங்கள் வனத்திற்கு செல்" என்றாள் கைகேயி.



13 வருட வனவாசம் முடிந்து விட்டது. 

விச்வாமித்ரரோடு வந்து, சீதையை மணம் செய்து கொண்ட போது.. ராமருக்கு வயது 12. இதை மாரீசன் ராவணனை பார்க்கும் போது சொல்கிறான்..


மாரீசன் ராவணனிடம் ராமபிரான் 12 வயது பாலகனாக இருக்கும் போதே, தன்னை அடித்து துரத்தியதை சொல்லும் போது, ராமபிரான் வயதை குறிப்பிட்டு சொல்கிறான்.


बालो द्वादश वर्षो अयम् अकृत अस्त्रः च राघवः |

कामम् तु मम यत् सैन्यम् मया सह गमिष्यति ||

- वाल्मीकि रामायण


பாலோ த்வாதச வர்ஷோ அயம்

அக்ருத அஸ்த்ர: ச ராகவ: |

காமம் து மம யத் ஸைன்யம்

மயா சஹ கமிஷ்யதி ||

- வால்மீகி ராமாயணம்


விஸ்வாமித்திரர் தசரதரிடம் ராமனை அனுப்பும் படி கேட்க, அப்பொழுது அனுப்ப மனமில்லாமல், தசரதர், "என் பிள்ளை ராமனுக்கு 12 வயது தான் ஆகிறது. அவன் யுத்தம் செய்ய தயாராக இல்லை' என்று சொல்லி பார்த்தார். அப்படிப்பட்ட பாலகன் ராமன்,  அஸ்திரங்களை பயன்படுத்த தெரியாதவன் சிறுவன் என்று நினைத்து, தைரியமாக ராக்ஷஸ படையுடன் யாகத்தை தடுக்க சென்றேன். என்று மாரீசன் ராமபிரானின் பலத்தை சொல்லி எச்சரித்து பார்த்தான்.

இன்னும் ஒரு வருடமே மீதம் உள்ள நிலையில், பஞ்சவடியில் மாரீசனின் உதவியை கொண்டு, ராமபிரானையும், லக்ஷ்மணரையும் அகற்றி விட்டு, தனியாக இருக்கும் சீதாதேவியிடம், போலி சாமியாராக தன்னை உருமாற்றி கொண்டு வந்தான் 10 தலை ராவணன்.


வந்திருப்பது பிராம்மணன் என்று மதித்து, ராமபிரானும், லக்ஷ்மணரும் வெளியில் சென்று இருப்பதால், கால் அலம்பி கொள்ள தீர்த்தம் கொடுத்து அமர சொன்னாள் சீதாதேவி.. 


பிறகு தன்னை பற்றி சொல்லும் போது, சீதாதேவி ராவணனிடம் சொன்னது... 


उषित्वा द्वादश समा इक्ष्वाकुणां निवेशने।

भुञ्जाना मानुषान्भोगान्सर्वकामसमृद्धिनी।|

- वाल्मीकि रामायण

உஷித்வா த்வாதச சமா

இக்ஷ்வாகு நாம் நிர்வசனே |

புஜ்ஜானா மானுஷான் போகான்

சர்வ காம ஸம்ருத்தினீ ||

- வால்மீகி ராமாயணம்

12 (த்வாதச) வருடங்கள் நான் இக்ஷ்வாகு குடும்பத்தில் வசித்து வந்தேன். மனிதன் விரும்பும் அனைத்து விதமான சுகத்தையும் அனுபவித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தேன்.


ततस्त्रयोदशे वर्षे राजामन्त्रयत प्रभुः।

अभिषेचयितुं रामं समेतो राजमन्त्रिभिः।।

- वाल्मीकि रामायण

தத: த்ரயோதசே வர்ஷே 

ராஜ அமந்த்ரயத ப்ரபு: |

அபிஷேசயிதும் ராமம்

சமேதோ ராஜ மந்த்ரிபி: ||

- வால்மீகி ராமாயணம்

அதன் பிறகு, 13வது வருடத்தில், சக்கரவர்த்தியான அரசர், அரச மந்திரிகளை சபை கூட்டி, ராமபிரானுக்கு முடிசூட்ட ஆலோசித்தனர்.



मम भर्तामहातेजा वयसा पञ्चविंशकः।

अष्टादश हि वर्षाणि मम जन्मनि गण्यते।|

- वाल्मीकि रामायण

மம பர்தா மஹாதேஜா

வயசா பஞ்ச-விம்ஸக: |

அஷ்டாதச ஹி வர்ஷாணி

மம ஜன்மணி கன்யதே ||

- வால்மீகி ராமாயணம்

மஹா தைரியசாலியான என் கணவருக்கு அப்போது 25 வயது. நான் 18 வயது பூர்த்தி ஆகி இருந்தேன்.