Followers

Search Here...

Thursday 6 May 2021

சீதாதேவியும், ராமபிரானும் எப்படி பேசிக்கொள்வார்கள்? அன்யோன்ய திவ்ய தம்பதிகள்... தெரிந்து கொள்வோம்..

சீதாதேவியும், ராமபிரானும் எப்படி பேசிக்கொள்வார்கள்? 

அன்யோன்ய திவ்ய தம்பதிகள்...

'உத்தமம், மத்யமம், அதமம்' என்று மூன்று ரகம் சொல்வார்கள்.

'சொல்லியும் செய்யாமல் இருப்பது' ஒரு ரகம்..

'சொன்னால் மட்டுமே செய்வது' ஒரு ரகம்.

'வாய் திறந்து சொல்லாமல், மனதில் நினைத்தால் கூட, தெரிந்து கொண்டு செய்வது' உத்தம ரகம்.

'ராமபிரான் என்ன நினைக்கிறாரோ! அதை சீதாதேவி அப்படியே தெரிந்து கொண்டு நடக்கிறாள்" என்று, வால்மீகி, சீதா தேவியை பற்றி சொல்கிறார்.





प्रिया तु सीता रामस्य दाराः पितृकृता इति |

गुणाद्रूपगुणाच्चापि प्रीतिर्भूयोऽभिवर्धते ||

- वाल्मीकि रामायण


ப்ரியா து சீதா ராமஸ்ய

தாரா: பித்ரு க்ருதா இதி|

குணாத் ரூப குணா ச அபி

ப்ரீதி பூயோ அபிவர்ததே ||

- வால்மீகி ராமாயணம்

பெற்றோர்கள் சம்மதத்துடன் ஏற்பட்ட திருமணம் என்பதால், ராமபிரானின் அன்புக்கு பாத்திரமானாள் சீதாதேவி.

சீதாதேவியின் சுய நல்லொழுக்கங்களாலும், அழகினாலும் சீதாதேவியின் மீது ராமபிரானின் அன்பு வளர்ந்தது.

Seetha has become the beloved of Rama as she is wedded with the assent of parents. Further Rama's love for Seetha burgeoned by virtue of Seetha's own virtues and loveliness


तस्याश्च भर्ता द्विगुणं हृदये परिवर्तते |

अन्तर्गतमपि व्यक्तमाख्याति हृदयं हृदा ||

- वाल्मीकि रामायण


தஸ்யா ச பர்தா த்விகுணம்

ஹ்ருதயே பரிவர்ததே |

அந்தர்கதம் அபி வ்யக்தம்

ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா ||

- வால்மீகி ராமாயணம்

கணவனான ராமபிரானின் அன்பினால், சீதாதேவியின் இதயத்தில் ராமபிரான் இரு மடங்கு அளவிற்கு குடிக்கொண்டிருந்தார்.

ராமபிரான் என்ன நினைக்கிறார்? என்று சீதாதேவியும், சீதாதேவி என்ன நினைக்கிறாள்? என்று ராமபிரானும் வெளிப்படையாக பேசி கொள்ள கூட அவசியமில்லாத படி, இதயத்தோடு இதயம் தங்கள் எண்ணங்களைப் தெளிவாக அறிந்து பழகினர்.

(இருவரும் என்ன நினைத்தார்கள், சீதை அக்னி பிரவேசம் செய்கிறேன் என்று ஏன் சொன்னாள் என்ற காரணம் வெளிப்படையாக நமக்கு தெரியாததற்கு காரணம் இதுவே.  மனதில் என்ன நினைத்தார்கள் என்று அறிய..  https://www.proudhindudharma.com/2020/10/story-of-getting-crowned.html




Even Rama as her husband made his mark in Seetha's heart twice as good. They both used to clearly converse about their thoughts in their heart of hearts, just by their hearts

(Due to this reason, why ram spoke harsh words and why sita asked for agni pravesh is unclear when some one read that incident without knowing characteristics of ram and sita.. http://www.proudhindudharma.com/2020/04/agni-pariksha-reason.html)


तस्य भूयो विशेषेण मैथिली जनकात्मजा |

देवताभिः समा रूपे सीता श्रीरिव रूपिणी ||

- वाल्मीकि रामायण


தஸ்ய பூயோ விஷேசேன

மைதிலீ ஜனகாத்மஜா |

தேவதாபி: சமா ரூபே

சீதா ஸ்ரீ: இவ ரூபிணீ ||

- வால்மீகி ராமாயணம்

அதோடு மட்டுமல்ல, விசேஷமாக சீதாதேவி தேவதை போல ரூபத்தில் காட்சி கொடுத்தாள். ஸ்ரீ மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக காட்சி கொடுக்கிறாள்.

In addition, Seetha is identical with goddesses, and she is like personified Goddess Lakshmi. She with all these heaps of natural traits and characteristics, Seetha is rejoicing the heart of Rama


तया स राजर्षिसुतोऽभिकामया

समेयिवानुत्तमराजकन्यया |

अतीव रामः शुशुभे मुदान्वितो

विभुः श्रिया विष्णुरिवामरेश्वरः ||

- वाल्मीकि रामायण


தயா ச ராஜர்ஷி சுதோ அபிகாமயா

சமேயிவான் உத்தம ராஜ கன்யயா |

அதீவ ராம: சுசுபே முதான்விதோ

விபூ: ஸ்ரீயா விஷ்ணு இவ அமரேஸ்வர: ||

- வால்மீகி ராமாயணம்

பரமபொருளான விஷ்ணுவே ராமபிரானாக, மஹாலக்ஷ்மியே ராஜரிஷியான ஜனகரின் உத்தம ராஜ புத்ரியான சீதாதேவியாக, காட்சி தருகிறார்கள்.

When passionately conjugated with such a princess from the irreproachable king Janaka, Rama, the son of sagely king Dasharatha, has enthusiastically shone forth like the God of Gods and the Efficient Cause, namely Vishnu, when He is together with Goddess Lakshmi

Monday 3 May 2021

சிவ தனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்? தெரிந்து கொள்வோம். வால்மீகி ராமாயணம்

சிவதனுஸை எத்தனை பேர் இழுத்து வந்தனர்?

"நிமி சக்கரவர்த்தியின் 6வது தலைமுறையில் வந்த தேவவ்ரதனிடம் சிவதனுஷை சாக்ஷாத் சிவபெருமான் கொடுத்து வைத்தார்.

நான் யாகசாலையில் உழுத போது, பூமியிலிருந்து தானாக கிடைத்த பெண் சீதை.

அவளை என் பெண்ணாக பாவித்து வளர்த்து வருகிறேன்.




அவள் வளர்ந்து மணம் செய்து கொள்ள வேண்டிய பருவம் வந்தவுடனேயே, அவளை மணக்க அரசர்கள் அனைவரும் மிதிலையை முற்றுகை இட்டு விட்டனர்.

'எனக்கு வரதக்ஷிணையாக யார் இந்த சிவதனுஸை எடுத்து நாண் ஏற்றுகிறார்களோ! அவர்களே சீதையை மணம் செய்து தகுதி படைத்தவர்" என்று க்ஷத்ரியர்களான இவர்களுக்கு சொல்ல, அனைவரும் முயற்சி செய்தனர்.

சிவதனுஸை தூக்க முடியாமல், பலர் அசைக்க கூட முடியாமல் தோற்றனர்.

அவமானம் அடைந்த இவர்கள், மிதிலையை முற்றுகை இட்டனர். ஒரு வருடம் இவர்களால் மிதிலாபுரி அவதிப்பட்டது.

என்னுடைய பிரார்த்தனையை ஏற்று, தேவகணங்கள் மிதிலையை நாற்புறமும் சுற்றி கொண்டு, அனைவரையும் அடக்கி விரட்டினர்.

அந்த தனுஸை நான் உங்களுக்கும், கூடவே நின்று கொண்டிருக்கும் ராம, லக்ஷ்மணருக்கும் காட்டுகிறேன்"

என்று சொல்லி, தன் அமைச்சர்களிடம் எடுத்து வர சொன்னார் ஜனகர்.


ஜனகேன சமாதிஷ்டா:

ஸசிவா: ப்ராவிஸன் புரம் |

தத் தனு: புரத: க்ருத்வா

நிர்ஜக்மு அமிதொளஜச: ||

ந்ருனாம் சதானி பஞ்சாஸத்

வ்யாயதானாம் மஹாத்மநாம் |

மஞ்சுஷாம் அஷ்ட சக்ராம்

தாம் சமுஹு: தே கதன்சன ||

- வால்மீகி ராமாயணம்


जनकेन समादिष्ठाः सचिवाः प्राविशन् पुरम् |

तद् धनुः पुरतः कृत्वा निर्जग्मु अमितौजसः ||

नृणां शतानि पंचाशद् व्यायतानां महात्मनाम् |

मंजूषाम् अष्ट चक्रां तां समूहुस्ते कथंचन ||

- वाल्मीकि रामायण

ஜனகரின் ஆணைக்கு இணங்கி, அவருடைய அமைச்சர்கள் சென்று, சிவதனுஸை எட்டு சக்கரங்கள் பூட்டிய பெரிய தேரில் வைத்து, அரச மஹாமண்டபத்துக்குள் வந்தனர்.

பலம் பொருந்திய உயரமான ஆண்கள் 5000 பேர் சேர்ந்து கொண்டு, சிரமப்பட்டு சிவதனுஸை இழுத்து கொண்டு வந்தனர்.

As clearly instructed by Janaka those high souled ministers have gone out and entered the palace-chambers, and they came out with an eight-wheeled coffer in which the bow of Shiva is ensconced, and those ministers got it tugged by five thousand (शतानि पंचाशद्) tall men of illimitable energy who somehow tugged it very difficultly, and thus the ministers have re-entered there keeping that bow afore of them





சிவ தனுஸை காண்பித்த ஜனகர், 

"இதோ இந்த சிவதனுஸை மனிதர்கள் மட்டுமல்ல, தேவர்கள், அசுரர்கள், கந்தர்வர்கள், மஹோரகர்கள், யக்ஷர்கள் போன்ற பலம் பொருந்தியவர்கள் கூட முயற்சி செய்தும், அசைக்க கூட முடியாமல் திரும்பினர்." என்று காண்பித்தார்.


விஸ்வாமித்திரர், 16 வயது கூட நிரம்பாத ராமபிரானை பார்த்து, "அந்த தனுஸை சென்று பார்" என்றார்.


அருகில் சென்று பார்த்த ராமர், விஸ்வாமித்ரரிடம் "ப்ரம்ம ரிஷி! நான் இந்த தனுஸை தொட்டு பார்க்கலாமா? இந்த அழகான தனுஸை எடுத்து நாண் ஏற்றி பார்க்க ஆசைப்படுகிறேன்" என்றார்.

பாடம் இத்யேவ தம் ராஜா

முனி: ச சம பாஷத |

லீலயா ச தனுர் மத்யே

ஜக்ராஹ வசனான் முனே ||

- வால்மீகி ராமாயணம்


बाढमित्येव तं राजा मुनिश्च समभाषत |

लीलया स धनुर्मध्ये जग्राह वचनान्मुनेः ||

- वाल्मीकि रामायण

ஜனகரும், விச்வாமித்ரரும் சம்மதம் தெரிவிக்க, சிவதனுஸின் நடுவே கை வைத்து தூக்கி, விளையாட்டாக எடுத்து விட்டார்.

ஆயிரக்கணக்கானவர்கள் இந்த காட்சியை பார்க்க, ராமர் சர்வ சாதாரணமாக சிவதனுஸை நாண் ஏற்ற ஆரம்பித்தார்.

நாண் ஏற்றுவதற்கு ஒரு முடிச்சை இழுத்து மேலே கட்ட ராமர் முயற்சிக்க, சிவதனுஸ் முறிந்து விழுந்தது.

மலை சுக்கு நூறாக வெடிக்கும் போது ஏற்படும் சத்தத்தை, முறிந்த சிவதனுஸ் ஏற்படுத்தியது.


விஸ்வாமித்திரர், ஜனகர், ராம லக்ஷ்மணர்களை தவிர, நொடி பொழுதில் நடந்து விட்ட இந்த நிகழ்வை பார்த்த அனைவரும், திகைத்து நின்றனர்.

भगवन् दृष्टवीर्यो मे रामो दशरथात्मजः |

अत्यद्भुतमचिन्त्यं चातर्कितमिदं मया ||

- वाल्मीकि रामायण


பகவன் த்ருஷ்ட வீர்யோ

மே ராமோ தசரதாத்மஜ: |

அதி அத்புதம் அசிந்த்யம்

ச அதர்கிதம் இதம் மயா ||

- வால்மீகி ராமாயணம்

ஜனகர் விஸ்வாமித்ரரை பார்த்து, "ப்ரம்ம ரிஷி!  தசரத மைந்தன் ராமரின் வீரம் இன்று கண்கூடாக கண்டேன்.

ஆச்சரியத்துக்கும் ஆச்சர்யம் இது.  அனுமானம் செய்து பார்க்க முடியாத நிகழ்வு. இது நடக்கவே நடக்காது என்றே நான் நினைத்திருந்தேன்.

என் மகள் சீதை, தசரத மைந்தன் ராமனை கணவனாக அடைவதால், ஜனக குலம் பெரும் பெருமை அடைய போகிறது என்று அறிகிறேன்.."

என்று கூறி ஆனந்தப்பட்டார் ஜனக மஹாராஜன்.

Sunday 25 April 2021

முருக பக்தி செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார். தெரிந்து கொள்வோமே வால்மீகி ராமாயணம்

'முருக பக்தி' செய்பவர்களுக்கு என்ன கிடைக்கும்? - விஸ்வாமித்திரர் ராமபிரானிடம் சொல்கிறார்.

இக்ஷ்வாகு குலத்தில் தோன்றிய 'பகீரதன்' தேவலோகத்தில் இருந்த கங்கையை பூமிக்கு கொண்டு வந்தார்.

பகீரதனின் மகன் காகுத்ஸன்.

இந்த குலத்தில் பரவாசுதேவன் நாராயணனே ராமபிரானாக அவதரித்தார்.

தேவர்களுக்கு சேனாதிபதியாக, சிவபெருமான் அம்சத்துடன் கூடிய ஒரு குழந்தை அவதரிக்க செய்ய, கங்கையிடம் தேவர்கள் பிரார்தித்தனர். 

அக்னி தேவனே சிவபெருமானின் அம்சத்தை கங்கையிடம் செலுத்த, கங்காதேவி கர்ப்பம் தரித்தாள்.

தெய்வாம்சம் கொண்ட இந்த புத்ரன் (ஸ்கந்தன்) கங்கையில் குழந்தையாக தோன்றினான்.




இந்த குழந்தையை, 6 கார்த்திகை நக்ஷத்திர தேவதைகள் தாயாக இருந்து வளர்க்க ஆசைப்பட்டனர். 

உடனேயே, அவர்கள் மார்பில் பால் ஊறியது. 

6 தலைகளால் (ஆறுமுகம்) ஆறு தேவதைகள் கொடுத்த பாலை குடித்தது அந்த குழந்தை.

கார்த்திகையின் பிள்ளையாக இருந்த இந்த பிள்ளை (கார்த்திகேயன்), மறுநாளே வாலிபனாக வளர்ந்து, தேவர்களுக்கு படை தளபதியாக ஆகி விட்டார்.

भक्तश्च यः कार्तिकेये 

काकुत्स्थ भुवि मानवः |

आयुष्मान् पुत्र पौत्रश्च 

स्कन्दसा लोक्यतां व्रजेत् || 

- वाल्मीकि रामायण


பக்தஸ்ச ய: கார்த்திகேய

காகுத்ஸ்த புவி மானவ: |

ஆயுஷமான் புத்ர பௌத்ரஸ்ச

ஸ்கந்தஸா லோக்யதாம் வ்ரஜேத் ||

- வால்மீகி ராமாயணம்




ராமபிரானை பார்த்து, விஸ்வாமித்திரர்,

"காகுத்ஸன் வம்சத்தில் உதித்தவனே! கார்த்திகேயனிடம் யார் பக்தி செய்கிறார்களோ! அவர்களுக்கு நீண்ட ஆயுளும், அவர் பிள்ளைக்கும், கொள்ளுப்பேரனுக்கும் சேர்த்து நீண்ட ஆயுளும் கிடைக்கும். உலக வாழ்வு முடிந்த பிறகு, இவர்கள் ஸ்கந்தன் வழி சென்று ஸ்கந்த லோகம் அடைவார்கள்."

என்று ராமபிரானிடம் சொன்னார்.


Viswamithra said

"Rama of Kakutstha! He who is a devotee of Kartikeyaa, he thrives with longevity, also with sons, grandsons on this humanly earth in his mortal life, and on its conclusion he becomes one with Skanda on journeying to Skanda's abode"

Thursday 1 April 2021

திருவேங்கடமுடையானை தரிசிப்பதால், நம் அனைவருக்கும் ஏற்படும் பாக்கியம் என்ன? பாசுரம் (அர்த்தம்) - "உளன் கண்டாய் நன்நெஞ்சே". திருப்பதி பெருமாளை தொழும் பாசுரம். திருமழிசை ஆழ்வார் தன் நெஞ்சையே கேட்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

திருவேங்கடமுடையானை தரிசிப்பதால், நம் அனைவருக்கும் ஏற்படும் பாக்கியம் என்ன? 

திருமழிசை ஆழ்வார் "உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்தின் மூலம், நமக்கு பதில் சொல்கிறார்...

"உள்ளுவார் உள்ளத்து" என்ற பதத்திற்கு அர்த்தத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லும் போது, 

திருவேங்கடமுடையானை தரிசித்த பாக்கியம் பெற்ற பிறகு, நாம் தனியாக முயற்சி செய்து பகவானை நம் நெஞ்சில் புகுத்தி கொள்ள வேண்டிய அவசியமே இல்லையாம்.


திருவேங்கடமுடையானை நாம் பார்த்த மாத்திரத்திலேயே, எம்பெருமானே ஆசையோடு நம் உள்ளத்தில் வலிய வந்து  புகுந்து அமர்ந்து கொள்ள ஓடி வருவாராம் ("உள்ளுவார் உள்ளத்து")





அத்தனை ஆசையோடு நம் நெஞ்சில் புக வரும் எம்பெருமானை, "நான்" என்ற அகம்பாவத்தோடு, நாம் எம்பெருமானை தடுக்காமல் இருந்தாலேயே போதுமாம்.

"நான்" என்ற இந்த அகம்பாவம் தானே, நம் நெஞ்சில் எம்பெருமானை அமர விடாமல் செய்கிறது!

இந்த அகம்பாவத்தை நாம் விட்டொழித்து, அவரை நம் உள்ளத்தில் அமர அனுமதித்தாலேயே போதுமாம். எம்பெருமான் தானாகவே நம் நெஞ்சில் அமர்ந்து விடுவாராம்.

"அகம்பாவம் இல்லாமல் ஸ்ரீனிவாச பெருமாளை பார்த்த என் நல்-நெஞ்சே ! உள்ளத்தில் புகுந்து கொண்டு இருக்கும் எம்பெருமானை பார் (உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்)" 

என்று பாடுகிறார் திருமழிசை ஆழ்வார்.


திருமழிசை ஆழ்வார் (நான்முகன் திருவந்தாதி) பாடுகிறார்...

உளன் கண்டாய் நன்நெஞ்சே!

உத்தமன் என்றும் உளன்கண்டாய்!

உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்!

தன் ஒப்பான் தானாய் உளன் காண் தமியேற்கும்,

என் ஒப்பார்க்கு ஈசன் இமை


குருநாதர் துணை

Saturday 27 March 2021

நமோ என்றால் என்ன? தெரிந்து கொள்வோமே!

"நமோ" என்றால் என்ன? 

'நம:' என்பதே நமோ என்று சொல்கிறோம். 

நம: என்ற சொல், "நான்(ம) எனக்கு இல்லை (ந)" என்று அர்த்தத்தை கொடுக்கிறது.

நம: என்ற சொல், "நான் எனக்கு சொந்தம் இல்லை. நான் பரமாத்மாவுக்கே சொந்தமானவன்" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும்.

நம: என்ற சொல் "நான் வாகனம் மட்டுமே. என்னை சாரதியாக இருந்து ஓட்டுபவன் அந்த பார்த்தசாரதியே" என்ற சரணாகதி புத்தியை கொடுக்கும். 




நம: என்ற அக்ஷரத்தின் அர்த்தம் புரிந்து, உணர்ந்து கொள்ளும் போது தான், 

'இனி நாமாக எந்த முயற்சியும் செய்யாமல்.. என்னை சேர்த்து கொள்ள வேண்டிய முயற்சியை பரமாத்மாவே செய்யட்டும். 

என்னை ரக்ஷிக்கும் பொறுப்பு அவர் கையில் இருக்கும் போது, நானும் தனியாக அவரை அடைவதற்கு எதற்காக முயற்சி செய்ய வேண்டும்? 

அவர் எப்போது வருவார் என்று எதிர்பார்த்து காத்து கொண்டே இருப்பதே என் வேலை

என்று சரணாகதியின் உண்மையான நிலை ஏற்பட்டு விடும்.


சரணாகதி லக்ஷணத்தை காட்டும் "நம:" என்ற சொல்லுக்கு நிரூபணம் காட்டினாள் சீதாதேவி. 

ராவணன், ராமபிரான் இல்லாத சமயம் பார்த்து, சீதாதேவியை கடத்தி, இலங்கைக்கு தூக்கி சென்று  விட்டான். அசோக வனத்தில் கடுங்காவல் வைத்து, நரமாமிசம் உண்ணும் ராக்ஷஸிகள் மத்தியில் சிறைப்படுத்தி விட்டான்

தினமும் சீதாதேவியிடம், ஆசைவார்த்தை சொல்லி, ராமபிரானை அவமானப்படுத்தி தன் பெருமையை மெச்சி பேசி, மிரட்டி, கெஞ்சி எப்படியாவது சம்மதிக்க முயற்சி செய்து கொண்டிருந்தான்.

தன் "கற்பு என்ற அக்னியாலேயே" ராவணனை பொசுக்கி விடும் சக்தி இருந்தும், சீதாதேவி பொறுமை காத்தாள்.

தானே தப்பிக்க, சிறு முயற்சியும் செய்யாமல், சீதா தேவி "ராமபிரான் வருவார்" என்று காத்து இருந்தாள்.


ஹனுமான் இலங்கை வந்து போது, சீதாதேவியிடம் "இப்பொழுதே தூக்கி சென்று ராமபிரான் முன் நிறுத்தி விடுகிறேன்" என்று சொல்லியும், பிறர் உதவி வேண்டாம் என்று மறுத்தாள். 

இதுவே சரணாகதி தத்துவம். 





"பகவான் காப்பாற்றுவார்" என்று நிச்சய புத்தி உள்ளவனுக்கு, 'பகவான் காப்பாற்றுவாரோ?' என்ற சந்தேகம் ஏற்படாது. 

'எதற்கும் நாமும் ஒரு சில முயற்சி செய்து வைப்போமே!', "எதற்கும் இன்னொரு கோவிலுக்கும் சென்று பிரார்த்தனை செய்து வைப்போமே!" என்ற சபல புத்தி ஏற்படாது.  


சீதாதேவியை ராவணன் தூக்கி சென்ற போது, ராமபிரானுக்கு சீதாதேவி எங்கு சென்றாள்? என்று கூட தெரியாது.


சரணாகதி செய்த சீதாதேவி, "ராமபிரான் எப்படியும் தான் எங்கு இருக்கிறோம் என்று கண்டுபிடித்து விடுவார், நம்மை காப்பாற்றி விடுவார்" என்று திடநம்பிக்கையுடன் இருந்தாள். 


நம: என்ற சொல்லுக்கு நிரூபணமாக இருந்தாள் சீதாதேவி.


சீதாதேவி சரணாகதி என்றால் என்ன? என்று நமக்கு காட்டினாள்.

குருநாதர் துணை