Followers

Search Here...

Tuesday 5 December 2017

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)

மஹா பாரத சமயத்தில், வங்காள தேசம்: (West Bengal, Bangladesh)


அங்க தேசம், வங்க தேசம் ஆகிய தேசங்கள் இந்தியாவில் உள்ள "வங்காள தேசத்தில்" (West Bengal)உள்ளது.

பௌண்ட்ரக தேசம், சுஹ்மா தேசம் இன்றைய வங்காள நாடு (Bangladesh).

அங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) மேற்கு திசையில் உள்ள ஒரு பகுதி.

வங்க தேசம் என்ற தேசம், இன்றைய வங்காள தேசத்தின் (West Bengal) கிழக்கு பகுதியையும், வங்காளத்தின் (bangladesh) மேற்கு பகுதியையும் சேர்த்த பகுதி.

பாண்டவர்களை அரக்கு மாளிகையில் வைத்து கொலை செய்ய நினைத்த துரியோதனனிடம் இருந்து தப்பித்து, சில காலம் மறைந்து வாழ்ந்தனர்.

புலிந்த தேசம் சென்று, பின்பு அங்கிருந்து பல இடங்கள் சென்று, இறுதியாக வங்க தேசத்தில் உள்ள 'ஏகசக்ரம்' என்ற ஊரில், ஒரு பிராம்மண குடும்பத்தில் தங்கினர்.
இந்த வங்க தேசத்தில், பகாசுரன் என்ற அரக்கன் மனித மாமிசம் சாப்பிட்டு அங்கிருந்தவர்களை பயமுறித்திக்கொண்டிருந்தான்.
ஊர் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாயினர்.
பகாசுரனை பீமன் கொன்றான்.

இந்த அங்க தேசத்தில் ஒரு சமயம், மும்மூர்த்திகளில் ஒருவரான சிவபெருமான், தன் நெற்றி கண்ணால் காமதேவனை பொசுக்கிய பொழுது, அவன் அங்கம் சிதறிய இடம் என்பதால், அங்க தேசம் என்ற பெயர் பெற்றது.

இந்த அங்க தேசத்தை, பல சிற்றரசர்கள் ஆண்டு வந்தனர்.

பீஹார் என்று இன்று அழைக்கப்படும் தேசம், அன்று மகத தேசம் என்று அழைக்கப்பட்டது.
ஜராசந்தன் மகத தேச (பீஹார்) நாட்டு அரசன்.

ஜராசந்தன், அங்க தேசத்தின் பல பகுதியையும் கைப்பற்றி இருந்தான்.

ஜராசந்தன், துரியோதனன் இருவரும் நட்பு உள்ளவர்கள்.

துரியோதனனின் நட்புக்காக, ஜராசந்தன் "அங்க தேசத்தை" கர்ணனுக்கு கொடுத்து, அவனை சிற்றரசன் ஆக்கினான்.

அங்க தேச அரசர்கள் யாவரும்,
யுதிஷ்டிரர் நடத்திய ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டனர்.

யாகத்திற்கு ஆகும் வரவு-செலவு, யாகத்திற்கு வந்த அனைவருக்கும் வசதி, உணவு ஆகும் வரவு-செலவு பார்க்க தன் கஜானாவின் சாவியை, யுதிஷ்டிரர், அங்க அரசன் கர்ணனிடம் கொடுத்தார்.

கர்ணன் துரியோதனின் பக்கம், மேலும் இவன் தானம் உலகம் அறிந்தது, என்று தெரிந்தும், தன் கஜானாவை காலி செய்தாலும் பரவாயில்லை, யாகமும், வந்த அனைவரும் குறை இல்லாமல் இருக்க வேண்டும் என்ற நோக்கில், கர்ணனை நியமித்தார் யுதிஷ்டிரர்.
கர்ணனை விட உதார குணம் உடையவர் "யுதிஷ்டிரர்" என்ற உண்மையை, இந்த நிகழ்ச்சியில் நாம் அறியலாம்.
பௌண்ட்ரக தேச அரசன், ஸ்ரீ கிருஷ்ணரின் புகழில் காழ்ப்புணர்ச்சி கொண்டவன்.
இதன் காரணமாக, ஸ்ரீ கிருஷ்ணன் போலவே உடை உடுத்தி, கிருஷ்ணனை போலவே தானும் பலசாலி, மாயம் தெரிந்தவன் என்று சொல்லி, தன் பெயரையும் "வாசுதேவ கிருஷ்ணன்" என்று வைத்துக் கொண்டான். பௌண்ட்ரக வாசுதேவன் என்றும் அழைத்தனர்.


பௌண்ட்ரக வாசுதேவன் வங்க தேசத்தின் கிழக்கு பகுதியை கைப்பற்றினான்.

அங்க தேச அரசன் 'கர்ணன்' வங்க தேசத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றினான்.

ப்ரகஜ்யோதிச (அசாம்) தேச அரசன் 'பகதத்தா' வங்க தேசத்தின் வடக்கு பகுதியை கைப்பற்றினான்.

பௌண்ட்ரக வாசுதேவன், மகத அரசன் (பீஹார்) ஜராசந்தனிடம் நட்பு கொண்டவன்.

யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்திற்காக திக்விஜயம் புறப்பட்ட பீமன், சுஹ்ம தேசம், மற்றும் பௌண்ட்ரக தேசத்து அரசர்களையும் தோற்கடித்தான்.

பௌண்ட்ரக வாசுதேவனை போரில் தோற்கடித்து அவன் வைத்து இருந்த பெரிய சங்கை பீமன் எடுத்துக்கொண்டு சென்றான்.

பௌண்ட்ரக வாசுதேவன் யுதிஷ்டிரரின் ராஜசுய யாகத்தில் கலந்து கொண்டான்.

ஒரு சமயம், பௌண்ட்ரக வாசுதேவன் துவாரகைக்கு கடிதம் அனுப்பி, ஸ்ரீ கிருஷ்ணரை போருக்கு அழைத்தான்.
"நீ வாசுதேவனா? இல்லை நானா? என்று பார்த்துவிடலாம்" என்றான்.

சிரித்துக் கொண்ட ஸ்ரீ கிருஷ்ணர், "அப்படி போர் புரிந்து இறக்க ஆசையிருந்தால், சரி" என்றார்.

பௌண்ட்ரக வாசுதேவனுக்கு துணையாக காசி ராஜனும் துணைக்கு வந்து போரிட்டான்.
போரில் பௌண்ட்ரக வாசுதேவன் ஸ்ரீ கிருஷ்ணரை போன்று நீல நிறத்தில் இருப்பதற்காக, சாயம் பூசிக்கொண்டு வந்திருந்தான்.
இதை பார்த்த ஸ்ரீ கிருஷ்ணருக்கு சிரிப்பு தாளவில்லை.

"இப்படி ஒரு கணவனுடன், உன் மனைவி எப்படி குடும்பம் நடத்துகிறாள்?" என்று சிரித்துக்கொண்டே கேட்டார்.
இதனை புரிந்து கொள்ளாமல் மேலும் சண்டைக்கு இழுத்தான்.
ஸ்ரீ கிருஷ்ணர் தன் சுதர்சன சக்கரத்தின் மூலம் காசி ராஜன் தலையையும், பௌண்ட்ரக வாசுதேவன் தலையையும் கொய்து எறிந்தார்.

அங்க தேச, வங்க தேச, பௌண்ட்ரக தேச அரசர்கள் யாவரும் துரியோதனின் பக்கம் நின்று போர் புரிந்தனர்.
இந்த "பௌண்ட்ரம்" என்ற சங்கை, மஹா பாரத போரில், பீமன் விண்ணை பிளக்கும் வகையில் ஊதி, எதிரிகளை கலங்கடித்து, தான் போருக்கு தயார் என்று ஊர்ஜிதப்படுத்தினான்.

போரில் பௌண்ட்ரக வாசுதேவன் இல்லாது இருந்தாலும், அவன் படைகள் துரியோதனின் பக்கம் நின்று, அர்ஜுனனுக்கு எதிராக கடும் போர் புரிந்தனர்.

மஹா பாரத போரில், பீஷ்மர், துரோணர் வீழ்ந்த பின், அங்க அரசன் கர்ணன் தலைமை ஏற்றான்.

கர்ணனுக்கு, தேர் ஓட்ட மாத்ர அரசர் - சல்லியன் (punjab in today's pakistan) நியமிக்கப்பட்டார்.
இது சல்லியனை அவமானம் படுத்துவதாக இருந்தது. இருந்தாலும் சம்மதித்தார்.


போர் புரியும் சமயத்தில், இருவருக்கும் பல வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் கொண்ட கர்ணன், ஓரு சமயம், த்ரிதராஷ்டிரன் சபையில், வேதம் கற்ற ப்ராம்மணர்கள், 'எந்த ஒரு காலத்திலும் வாலிகர்களுடனும், அதே போன்ற செயல்களில் ஈடுபடும் மாத்ர தேசத்தவர்களுடனும் சகவாசம் வைத்துக் கொள்ள கூடாது' என்று கூறியதை நினைவு கூறி, 'நீ அந்த தேச அரசன் தானே?' என்றான்.

வேத மார்க்க வழியில் நடப்பவனை, 'நீ ஒரு வாலிகன்' என்று சொன்னால், அது ஒரு பெருத்த அவமானம்.
சல்லியன் பெரும் அவமானம் கொண்டார்.
இப்படிப்பட்ட வாக்குவாதங்களின் காரணமாக, இக்கட்டான சமயத்தில், தேர் குழியில் சிக்கி கொண்ட சமயத்தில், சல்லிய அரசர், தேரை விட்டு இறங்கி சென்று விட்டார். அங்க அரசன், கர்ணன் அர்ஜுனன் பொழிந்த அம்பு மழையில் மடிந்தான்.

போர் முடிந்த பின், அஸ்வமேத யாகத்திற்காக திக் விஜயம் செய்த அர்ஜுனன், பௌண்ட்ரக தேச நகரத்து சிற்றரசர்களையும் தோற்கடித்து, திரும்பினான்.

No comments:

Post a Comment