Followers

Search Here...

Sunday 16 August 2020

Who is the best employee to a business owner? Sri Rama says who is best, mediocre, worst employee. படியுங்கள்.

Who is the best employee to a business owner? 

Sri Rama says who is best, mediocre, worst employee.  படியுங்கள்.  

வால்மீகி ராமாயணா ஸ்லோகம்: (யுத்த காண்டம்)


ராமபிரானே பேசிய வாக்கு




இதை படித்தாலேயே நமக்கும் ராம பக்தி வந்து சேரும்.


யோ ஹி ப்ருத்யோ நியுக்தஸ்சன் பர்த்ரா கர்மனி துஷ்கரே !

குர்யாத் தத் அனுராகேன தமாஹு புருஷோத்தமம் !!

Able Servant who does even a difficult job with love and interest, instructed by his master is the best.


நியுக்தோ ய: பரம் கார்யம் ந குர்யான் ந்ருபதே ப்ரியம் !

ப்ருத்யோ யுக்த: சமர்தஸ்ச்ச தமாஹுர் மத்யமம் !!

Able Servant who does not do difficult jobs with love and interest, instructed by his master is the mediocre.


தன்னியோகே நியுக்தேன க்ருதம் க்ருத்யம் ஹனூமதா !

ந சாத்மா லகுதாம் நீத: சுக்ரீவஸ்சாபி தோஷித: !!

Able Servant who does not do any work instructed by his master, being indisciplined is the worst.

Saturday 15 August 2020

கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

 கோவிலை சுற்றி, பிறகு தன்னையே ஒரு சுற்றி கொள்வது ஏன்? தெரிந்து கொள்வோம்..

பொதுவாக நதிகளை 'பெண்ணாகவும்', 

கடல், மலைகளை 'ஆணாகவும்', 

நம் வேத தர்மம் காட்டுகிறது.


நதிகளை "கங்கை, யமுனை, காவேரி, கோதாவரி, சரஸ்வதி,நர்மதா, சிந்து' என்று பெண்ணாகவே அழைக்கிறோம்.


ஒரு தாயை போல நமக்காக ஓடி வந்து, பயிர்களை வளர செய்து, நமக்கு அன்னமும், தாகத்துக்கு நீரும் தருகிறாள்.


'ஹிமாலய மலை, கோவர்த்தன மலை, திருமலை, அழகர் மலை' என்று மலைகள் அனைத்தையும் ஆணாக அழைக்கிறோம்.


மலைகளில் கோவர்த்தன மலையை "கிரி ராஜ்" என்றே இன்றும் அழைக்கிறார்கள்.


கடலை "சமுத்திர ராஜன்" என்று சொல்கிறோம்.





நதிகளுக்கு தகப்பனாக 'மலைகள்' சொல்லப்படுகிறது.


சமுத்திரம் நதிகளின் 'கணவன் என்று சொல்லப்படுகிறது.


மலைகளில் இருந்து ஓடி வரும் நதிகள், சமுத்திரனிடம் வந்து சேர்ந்து விடும்.


பரவாசுதேவன் நாராயணன், ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் செய்த பிறகு, 

கங்கை, காவிரி, கோதாவரி என்று அனைத்து நதிகளும் வருவதை விட, இன்று யமுனை மட்டும் சற்று மந்தமான வேகத்தில் வந்தாள்.


சமுத்திர ராஜனுக்கு 'இவள் மட்டும் ஏன் மந்தமாக தன்னை நோக்கி வருகிறாள்?' என்று தோன்றியது.


யமுனையிடம் "யமுனா! ஏன் இன்று மந்தமாக வருகிறாய்?" 

என்று கேட்டார்.


யமுனா தேவி, தன் கணவனிடம், "உங்களுக்கு தெரியாததா! பகவான் நாராயணன், கிருஷ்ண அவதாரம் செய்து இருகிறார். 

அவர் நான் ஓடும் வழியில் தானே, குழந்தையாக லீலை செய்கிறார்.


ஸ்ரீ பிருந்தாவனம் வழியாக நான் ஓடும் போது, அந்த நீலமேகம் போன்ற கண்ணன் கிளை தாழ்ந்து இருக்கும் மரத்தில் ஏறி, அமர்ந்து கொண்டு குழல் ஊதுகிறான்.


அப்பொழுது அந்த கண்ணனின் சங்கு சக்கரம் ரேகை பதிந்த பாதம், யமுனா நதியாக ஓடும் என் மீது படும் பாக்கியம் கிடைக்கிறது. 

இதை ரசித்து கொண்டே இருக்கும் என்னால், வேகமாக ஓட முடியாமல் மந்தமாகி விடுகிறேன்.


உங்களுக்கும் பரமாத்மாவின் பாத ஸ்பரிசம் கிடைக்க வேண்டும் என்கிற நினைவும் எனக்கு உண்டு.


பத்னியான நான், பரமாத்மாவை உங்களோடு சேர்ந்து அனுபவிக்க முடியாமல் போனாலும், உங்களுக்காக நான் இந்த பூக்களை பிரசாதமாக கொண்டு வந்து இருக்கிறேன்.





யமுனா நதியான என் மீது விழும் பல வித புஷ்பங்களை, தாமரை போன்ற மலர்களை, அந்த கண்ணனின் பாதம் படும்படியாக எடுத்து செல்வேன். 

அவர் பாத ஸ்பரிசம் இந்த மலருக்கு கிடைத்துள்ளது.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தத்தில் அந்த பரந்தாமனை ஒரு வலம் வந்து சுற்றி, பிறகு இந்த பாக்கியம் கிடைத்த என்னையும் தன்னைத்தானே சுற்றி கொண்டு உங்களிடம் வந்து சேர்ந்தேன்"

என்று சொல்லி தான் கொண்டு வந்த பூக்களை தன் பதியான சமுத்திர ராஜனிடம் சேர்த்தாள்.


கிருஷ்ண பிரசாதம் கிடைத்த ஆனந்தம் ஒரு புறம் இருந்தாலும்,

"யமுனாவுக்கு கிடைத்த பாக்கியம், தனக்கு இல்லாமல் உள்ளதே! 

கிருஷ்ண தரிசனமும், அவர் செய்யும் லீலைகளும் பார்க்க முடியாமல் போனதே" 

என்று வருத்தம் கொண்டாராம் சமுத்திர ராஜன். 


அனைவரது அந்தர்யாமியாக இருக்கும் பரமாத்மா, சமுத்திர ராஜனின் மனக்குறையை அறியாமல் இருப்பாரா?..


கம்சனை கொன்ற பிறகு, மதுராவுக்கு அதிபதியான ஸ்ரீ கிருஷ்ணர், சமுத்திர ராஜன் ஆசையை தீர்க்கும் விதமாக, கடலுக்கு நடுவே அதி ஆச்சர்யமாக துவாரகை என்ற நகரை உருவாக்கி, தன் அவதார காலம் முழுக்க, கிருஷ்ண தரிசனமும், கிருஷ்ண லீலையை பார்க்கும் ஆனந்தத்தையும், சமுத்திர ராஜனுக்கும் கொடுத்தார்.


கிருஷ்ண பக்தன் நினைப்பதெல்லாம் கிடைக்கும்.


யமுனா தேவி புஷ்பம் எடுத்து கொண்டு போய் கிருஷ்ண பாதத்தில் வைத்து, பிறகு கிருஷ்ண பிரசாதமாக எடுத்து கொண்டு, கோவிந்தனை வலம் வந்து, தன் பாக்கியத்தை நினைத்து தன்னையே ஒரு சுற்று சுற்றி பிறகு தன் வீட்டுக்கு செல்வது போல, 

நாமும் பெருமாளுக்கு நம் கையால் ஏதாவது கொடுத்து, பெருமாளிடம் பிரசாதமாக பெற்று கொண்டு, பெருமாளை வலம் வந்து, பிறகு தன் பாக்கியத்தை எண்ணி தன்னையே ஒரு சுற்றி கொண்டு, பிறகு நம் வீட்டுக்கு செல்லும் பழக்கம் ஏற்பட்டது.


பக்தியின் ஒரு வித வெளிப்பாடு இது. ஒரு அற்புதமான அனுபவம்.


எந்த செயலிலும் ஆழ்ந்த கருத்துக்கள் உடைய ஹிந்து தர்மத்தை மற்றவர் கேலி செய்ய மானமுள்ள ஹிந்து அனுமதிக்க கூடாது..

Friday 14 August 2020

பொறுமையின் லாபம் என்ன?.. வால்மீகி ராமாயணம் பதில் சொல்கிறது.. தெரிந்து கொள்வோம்.

கஷ்டம் வரும்போது, நாம் எதை கடைபிடிக்க வேண்டும்?..


ராமாயணத்தில், "14 வருட வனவாசம் முடித்துக்கொண்டு, ராமபிரான் பரத்வாஜ ரிஷியின் ஆசிரமத்துக்கு வந்து விட்டார்.. நீங்கள் ராமபிரானை வெகுசீக்கிரத்தில் பார்க்க போகிறீர்கள்" 

என்று ஹனுமான் பரதனை பார்த்து சொன்னார்.

தசரதர், ராமபிரான் பிரிவை தாளமுடியாமல் தேகத்தை விட்டு, சொர்க்க லோகம் சென்று விட்டார்.


பரதன், கௌசல்யா, அயோத்தி மக்கள் என்று அனைவரும் மீள முடியாத சோகத்தில் மூழ்கினார்கள்


"பொறுமையால்" 14 வருடங்கள் உயிர் தரித்து இருந்தனர்.


14 வருடம் தானும் மரவுரி அணிந்து, ராமபிரானுக்காக காத்து இருந்த பரதன், ஹனுமானை பார்த்து சொல்கிறார்...


கல்யாணி பத காதேயம் 

லௌகிகீ ப்ரதிபாதி மே!

ஏதி ஜீவந்தம் ஆனந்தோ 

நரம் வர்ஷ சதாதபி!!

- தமிழர் "வால்மீகி ராமாயணம்"


कल्याणी बत गाथेयं लौकिकी प्रतिभाति में !

एति जीवंतम आनंदो नरं वर्ष शतादपि !!

- valmiki ramayan





அர்த்தம்:

"பல வருடங்கள் ஒருவனுக்கு கஷ்ட காலமாக அமைந்தாலும், பொறுமையை கடைபிடித்து வாழ்ந்து வந்தால், நிச்சயமாக பேரானந்தம் இவனை வந்து சேரும்.

இந்த வாக்கியம் இன்று சத்தியமாக ஆயிற்று !!"

என்று பரதன் சொல்கிறார். 


Meaning:

"If one survives difficult times patiently, Joy comes to one even after many years.

This saying is auspicious."

Says bharat (brother of rama)


பொறுமையை இழக்கும் போது, மனதுயர் அதிகமாகும், ஆயுள் குறையும்.

கஷ்டங்கள் வரும்போது, நாம் பொறுமையை கடைபிடிக்க வேண்டும்.


அன்பில் என்ற ஊரில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார். 


தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.


"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.

கம்ப ராமாயணமும் கிடைத்தது.


ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை. 

ராமபிரானே "பரவாசுதேவன்" என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்

ராமபிரானே பரவாசுதேவன் என்று நிரூபிக்கும் ஸ்லோகம்.. வால்மீகி ராமாயணம்.
இந்த சிறிய ஸ்லோகத்தை நாம் தினமும் சொன்னால், தமிழர் வால்மீகியை ஆனந்தப்படுத்தும், ராமாயணம் படித்த திருப்தியும் உண்டாகும்..

ப்ரியதே சததம் ராம: ச ஹி விஷ்ணு சனாதன: !
ஆதி தேவோ மஹாபாகு ஹரி நாராயண ப்ரபு: !
சாக்ஷாத் ராமோ ரகு ச்ரேஷ்ட:
சேஷோ லக்ஷ்மண உச்யதே !
- வால்மீகி ராமாயணம் (யுத்த காண்டம் - பட்டாபிஷேகம்)




அர்த்தம்:
அன்பே வடிவான ராமபிரானே காலத்துக்கும் அப்பாற்பட்ட விஷ்ணு.
நீண்ட கைகள் கொண்ட, ரகு குலத்தில் உதித்த ராமரே, ஆதி தேவனான ஹரி நாராயணன்.
நாராயணன் சயனித்து இருக்கும் ஆதிஷேஷனே லக்ஷ்மணன்.

அன்பிலில் அவதரித்து, திருநீர்மலையில் முக்தி பெற்ற "தமிழர் வால்மீகி" உலகுக்கே ராமாயணம் கொடுத்தார்

தமிழர் வால்மீகி த்ரேதா யுகத்தில் பொது மொழியான சமஸ்கரிதத்தில் எழுதினார்.

"தமிழில் வால்மீகியின் ராமாயணத்தை எழுதுவோம்" என்று கலி யுகத்தில் இன்னொரு தமிழ் புலவன் நினைத்தார்.
கம்ப ராமாயணமும் கிடைத்தது.

ராமாயணத்தை கொடுத்த தமிழர் வால்மீகியால், 
உலக மக்களுக்கும், உண்மை தமிழர்களுக்கும் பெருமை.

Sunday 9 August 2020

உணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா? கடவுளுக்கு கோவிலா? அவருக்கே பாதுகாப்பா?. ஞானிகள் உள்ள இந்த பாரத தேசத்தில், எதற்காக கோவில்? நெய்வேத்யம்?பாதுகாப்பு?. ஒரு அலசல்..

பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும்,

வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும்,




'கர்ம யோகி'யாக இருந்து, மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களை உலகத்திற்காக கொடுத்தும், 

ஸ்வயமே 'ஞானி'யான வியாச பகவான், மனதிருப்தி ஏற்படாமல் குறைப்பட்டு கொண்டார்.

"கர்ம யோகி'யாக இருந்தும், 'ஞானி'யாக இருந்தும், பரமாத்மாவை உணர்ந்தும், திருப்தி இல்லையே! மன உருக்கம் ஏற்படவில்லையே! கண்ணீர் வரவில்லையே!" என்று குறைப்பட்டு கொண்டார் வியாசர்.

"பக்தியே 'கர்ம யோகத்தை விடவும், ஞான யோகத்தை விடவும்' ஆனந்தம் தரவல்லது.

ஆதலால் பக்தியை ஊட்டும் கிருஷ்ண சரித்திரத்தை எழுதுங்கள்" 

என்று சொன்னார் நாரதர்.


'கிருஷ்ணனே பரமாத்மா' என்பதால், பிரம்மாவின் ஸ்ருஷ்டியில் ஆரம்பித்து, உலக ஸ்ருஷ்டிகளை வர்ணித்து, பரமாத்மாவின் அவதாரங்களை வர்ணித்து, கடைசியில் கிருஷ்ண அவதாரத்தை விவரித்து சொல்கிறார்

குறிப்பாக பால லீலையை சொல்கிறார்.

அதன் பலனாக,

'பாகவதம்' என்ற பக்தி க்ரந்தம் நமக்கு கிடைத்தது.

பலனை எதிர்பார்க்காமல், பகவான் இஷ்டம் என்று கர்வமில்லாமல் காரியங்களை செய்வது - 'கர்மயோகம்'.

பகவானை பற்றி அறிந்து கொள்வது - "ஞானம்".


'பக்தி' என்றால் என்ன? 

வியாசர் கொடுத்த பக்தி கிரந்தமான பாகவதத்தில், இந்த பக்தி எப்படி உள்ளது?...


'கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாமல், கோவர்த்தன மலைக்கு பூஜை செய்கிறார்கள்' என்றதும், தேவர்களுக்கு அதிபதியான இந்திர தேவனுக்கு மஹாகோபம் வந்தது. 

கோகுலத்தை அழிக்க பிரளய கால மழையை ஏவினான். 

7 வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணன், கிடு கிடுவென்று ஓடி, தன் பிஞ்சு விரலால் கோவர்த்தன மலையையே தூக்கி விட்டான்.

"எல்லோரும் மலைக்கு கீழே வாருங்கள்" என்று அழைத்தான்.


சிறுவன் செய்ய கூடிய காரியமா?

சிறுவனை விடுங்கள். எந்த மனிதனால் மலையை தூக்க முடியும்?

வெளிப்படையாக, குட்டி கிருஷ்ணன் 'பகவானாக' செய்த காரியம் இது.

"இவன் பகவான் தான்" என்ற நம்பிக்கை இருந்ததால் தானே, யசோதை நந்தகோபர் உட்பட அனைத்து கோகுலவாசிகளும், மலைக்கு அடியில் நிற்க சம்மதித்தனர். 


இந்த காட்சியை பார்த்த ஞானிகள், ரிஷிகள் "தெய்வ லீலை... கிருஷ்ண லீலை" என்று கண்டு ஆனந்தப்பட்டனர்.


இந்திர தேவனோ, கிருஷ்ணன் 'பகவான் என்று புரிந்து கொள்ள முடியாமல்', கர்வத்தால் இடைவிடாது 7 நாட்கள் மழையை கொட்டினான்.




கவலையே இல்லாமல், 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு இருந்தான் குட்டி கிருஷ்ணன்.


ஞானிகள் "பரமாத்மா தான் 7 வயது பாலகனாக இருக்கிறார். உலகத்தையே தாங்குபவர் இவர். கோவர்த்தனத்தை தூக்குவது ஒரு பெரிய காரியமா?" 

என்று பரதத்துவத்தை நினைத்து கைக்குவித்து நின்றனர்.


ஞானிகள் இப்படி நினைக்க, 

தானே கரம் யோகியாக இருந்து கோவர்த்தன மலையை தூக்கி, கோகுலத்தில் உள்ள அனைவரையும் தன் பாதுகாப்பில் வைத்து சத்சங்கம் கொடுத்து கொண்டு, 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு நின்றார்.


இந்திரன் இனி மழை பொழிய ஜலம் இல்லை என்கிற அளவுக்கு போய், 7 வயது குழந்தையாக வந்திருப்பது "பகவான்" என்று உணர்ந்தான்.

"பதவி கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டோம்" என்று பயந்தான்.

மழை நின்றவுடன், மலைக்கு அடியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பிறகு இருந்த இடத்திலேயே மலையை வைத்து விட்டு, குட்டி கிருஷ்ணன் கோவிந்தனாக நிற்க, 

இந்திர தேவன் ப்ரத்யஷமாகி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, குடம் குடமாக பால் அபிஷேகம் செய்தான்.

மலையை தூக்கி, 7 நாட்கள் தாங்கி பிடித்து, இந்திரனையே ப்ரத்யஷமாக பார்த்தும், கிருஷ்ணனை "என் குழந்தை" என்றே பார்த்தாளாம் யசோதை.


இந்திரனை பார்த்து, "7 நாட்கள் தண்ணீர் கொட்டினது போதாது என்று, பாலை எடுத்து வந்து என் குழந்தை மேல் கொட்டுகிறானே. ஜலதோஷம் பிடிக்குமே!!" 

என்று கவலைப்பட்டு, ஓடி வந்து தன் குழந்தைக்கு தலையை துவட்டி விட, யசோதையின் இந்த அன்புக்கு அடிமையானார் பரமாத்மா.

"7 வயது குழந்தையாக இருந்து கொண்டு மலையையே தூக்கி காட்டி இருக்கேன். 

இந்திரனையே காலில் விழ செய்து விட்டேன். 

பகவான் என்று கண் எதிரே காட்டி விட்டேன்.. 

இப்பொழுதும்,

எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!! என்றும்,

என் குழந்தை!! 

என்றும் நினைக்கிறாளே..

பகவானுக்கு எதுவும் சாத்தியம் என்று எனது காரியங்கள் அனைத்தையும், ஞானிகள் 'லீலை லீலை' 

என்றே ரசிக்கும் போது, 

எனக்காக அழும் இவள் பக்தி, ஞானத்தை விட சிறந்தது" 

என்று நினைத்தாராம் பரமாத்மா.


"பகவான் தான் உலகை படைத்தார். அந்த உலகில் அவருக்கு ஒரு கோவில் தேவையா?

பகவான் தான் உணவை படைத்தார். அவருக்கு போய் பசிக்குமா?

பகவான் தான் நம்மை காக்கிறார். அவருக்கு நாம் காவலா?.."

இப்படி நாத்தீகன் அல்ல, பரதத்துவத்தை உணர்ந்த ஞானிகள் கூட சொல்ல முடியும்.


அப்படிப்பட்ட ஞானிகள் கோவர்த்தன மலையை 7 வயது குழந்தையாக கிருஷ்ணர் தூக்கியதை பார்த்தும், "பகவானுக்கு இது ஒரு பெரிய காரியமா?" 

என்று நினைத்தார்கள்.





"பகவான் தான் நம்மை படைத்தார், நம்மை காக்கிறார்" 

என்ற ஞானம் இருந்தாலும், அந்த பரமாத்மா நம்மிடம் பழக ஆரம்பித்து விட்டால், அளவிட முடியாத அன்பு (பக்தி), ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


"என்னை பகவான் காப்பாரா?' என்ற ஆரம்பநிலையில் கேட்கும் பக்தன், 

தெய்வம் பழக ஆரம்பிக்க ஆரம்பிக்க, யசோதையின் நிலை ஏற்பட்டு, 

"பகவான் சாப்பிட்டாரா? 

பகவான் அலங்காரம் செய்து கொண்டாரா? 

பகவானை யாராவது கஷ்டப்படுத்தி விடுவார்களா? 

அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கலாமா?" 

என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடுமாம்.

இதுவே பக்தி.


இந்த பக்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஞானத்தை விட உயர்ந்தது என்று பார்க்கிறார்.


இந்திரன் 'பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தோம்' என்ற திருப்தியில் விடைபெற்றார்.


யசோதை, "கண்ணனுக்கு ஜலதோஷம் பிடிக்குமே!" 

என்று வருத்தப்பட, அவளுக்கு குழந்தையாகவே இருந்தான்.

மலையிலிருந்து இறங்கி, யசோதையிடம் ஓடி சென்று 'அம்மா..' என்று கட்டி கொள்ள, நன்றாக தலையை துவட்டி, கண்ணனை பார்த்து 

"கண்ணா.. மூக்கை சிந்து.. மூக்கை சிந்துடா..." 

என்று யசோதை கண்ணனின் ஒரு மூக்கை மூடி கொண்டு கேட்க, 

மூச்சை வெளியே விட தெரியாமல், மூச்சை இழுத்து கொண்டு, அறியா குழந்தையாக நின்றானாம் கண்ணன்.

'அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் தெரியாத குழந்தை போல செய்த கிருஷ்ண லீலை', ஞானிகளையும் மோஹிக்க செய்து, பக்தியின் பெருமையை காட்டியதாம். பெரும் ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


ஞானியான வ்யாஸ்சருக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பகவான் என்று காட்டிய இடங்களை விட, யசோதையின் பக்திக்கு வசப்பட்டு, ஒன்றும் தெரியாத பாலகனாக செய்யும் லீலைகள் கண்ணீரையும், மன உருக்கத்தையும் தந்ததாம்.


பக்தியினால் ஏற்பட்ட இந்த மன உருக்கம், வ்யாஸருக்கு மன திருப்தியை, ஆனந்தத்தை அளித்ததாம்.


ஞானத்தை விட பக்தி ஆனந்தம் தரும். இந்த பக்தியை, நமக்கும் கிடைக்க செய்து, "பாகவதம்" என்ற மோக்ஷ கிரந்தத்தை நமக்கு அருளினார் வியாசர்.


அந்த வ்யாஸருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டு இருக்கிறோம்.


இந்த பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து குந்தி தேவி துதிக்கிறாள்.. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.


இதே பாகவதத்தில் நோய்கள் விலக, எதிரிகள் தோற்க "நாராயண கவசம்" உள்ளது. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.