Followers

Search Here...

Showing posts with label தெய்வ. Show all posts
Showing posts with label தெய்வ. Show all posts

Thursday 30 January 2020

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன?... தெய்வத்திடம் காதல் கொண்டு ஆழ்வார்கள் பாடுகிறார்கள் என்று பார்க்கிறோம்... ஆழ்வார்கள் நிலை என்ன? தெரிந்து கொள்ள வேண்டாமா... ஹிந்துக்கள்.

தெய்வ பக்தியின் மூன்று நிலைகள் என்ன? 
தெரிந்து கொள்வோமே !!

1. காம்யார்த்தமான பக்தி:

  • உலக ஆசை உடையவர்கள். 
  • தெய்வம் தனக்கு அணுகிரஹம் செய்யும் என்று உணர்நதவர்கள். 
  • தெய்வத்திடம் பக்தி செய்து, விரதம் இருந்து, தெய்வ அணுகிரஹத்தால் தன் உலக ஆசைகளை பூர்த்தி செய்து கொள்பவர்கள்.




கோவிலுக்கு செல்வது, 
தெய்வ விக்ரஹங்களை சிலையாக பார்க்காமல் பெருமாளாக பார்ப்பது, 
விரதம் இருப்பது, 
மந்திரங்கள் ஜபிப்பது போன்றவை செய்கிறார்கள்

2. சாதனா பக்தி:

  • உலக ஆசை குறைந்து இருப்பவர்கள்.
  • தெய்வத்தின் அருளை அனுபவத்தில் உணர்நதவர்கள்.
  • உலக ஆசைகளை தெய்வத்திடம் பிரார்த்திப்பதை விட, அந்த தெய்வத்தை பற்றி, நன்கு புரிந்து கொள்ளவே ஆர்வம் மிக்கவர்கள். 
  • அதற்கு தேவையான சாதனைகளை செய்பவர்கள்.




கோவிலின் தத்துவத்தை அறிய முயல்பவர்கள்,
மந்திரங்களின் ஆழ்ந்த அர்த்தத்தை அறிந்து கொள்ள முயல்பபவர்கள்,
தெய்வத்தின் புராண சரித்திரங்கள், குணங்கள் போன்றவற்றில் ஆழ்ந்து உணருபவர்கள்,
தெய்வத்தை பற்றி அறிய தனி மனித ஒழுக்கம் என்று உணர்நதவர்கள்,
தியானம் யோகம் செய்து புலன்களை கட்டுப்படுத்தி வைத்து இருப்பவர்கள்.

ராமானுஜர் "திருவஷ்டாக்ஷர மந்திரத்தின் பொருள் அறிய", தான் யதிராஜராக இருந்த போதும்,
'ஸ்ரீரங்கத்தில் இருந்து திருக்கோஷ்டியூர் வரை' நடந்து சென்றும், 'திருக்கோஷ்டியூர் நம்பி' அதன் அர்த்தத்தை தகுதி இல்லாதவர்க்கு சொல்லி விட கூடாதே என்று தயங்கி மறுத்தார்.




ஸ்ரீரங்கம் திரும்பிய ராமானுஜர் சற்றும் மனம் தளரவில்லை.
17 முறை தொடர்ந்து ஸ்ரீரங்கத்திற்கும் திருக்கோஷ்டியூருக்கும் நடையாய் நடந்தார்.
இவ்வாறு தொடர்ந்து 17 முறை ராமானுஜர் வந்தபோதும், நம்பி அர்த்தத்தை சொல்ல தயங்கி மறுத்தார்.

அந்த பாதயாத்திரையின் பலன் 18வது சந்திப்பில் கிடைத்தது. 
உண்மையான ஆர்வமும்,
அலுப்பு அடையாமல்,
தன் மீது கோபமும் இல்லாமல் இருக்கும் ராமனுஜரே, மந்திரத்தின் பொருளை அறிய தகுதி ஆனவர்,
என்று அறிந்து, அர்த்த விஷேஷத்தை போதித்தார்.

சாதனா பக்தியில், எப்படி ஒரு பக்தன் இருப்பான்? என்று தன் சரித்திரத்திலேயே காண்பித்தார் ஸ்ரீ ராமானுஜர்.
ஞானத்தில் பூர்ணரான ராமானுஜர், 'நாதீகனும், காம்யார்த்த பக்தி செய்பவனும் கூட, பரமபதம் இதே ஜென்மத்தில் அடைந்து விட வேண்டும்' என்ற பரந்த நோக்கில், தான் கஷ்டப்பட்டு பெற்ற உபதேசத்தை இலவசமாக அனைவருக்கும் கிடைக்கும் படியாக கொடுத்து விட்டார்.

3. ஞான பக்தி :

  • உலக வாழ்க்கையை மதிக்காதவர்கள். 
  • செல்வம் சேர்ந்தாலும், ஏழையானாலும் குறைபட்டு கொள்ளாதவர்கள்.
  • இந்த ஆத்மா எப்பொழுது இந்த உடலை விட்டு, பரந்தாமனை அடையுமோ என்று தவிப்பவர்கள்.




ஜீவனாகிய தன்னை பெண்ணாகவும்,
பரமாத்மா நாராயணனே தன் புருஷனாகவும்,
"தன் கணவனிடம் சேரும் காலம் எப்பொழுதோ!!"
என்று பரமபதத்தையே எதிர்பார்த்து, தெய்வத்திடம் விரக தாபத்தில் இருப்பவர்கள்.
(ஆழ்வார்கள் இந்த நிலையிலேயே இருந்தனர்) 
ஆழ்வார்கள் தன்னை காதலியாகவும், பெருமாளை காதலானாகவும் கதறி அழுது பாடும் பாசுரங்கள், இவர்களின் ஞான பக்தி நிலையை நமக்கு காட்டுகிறது.

இந்த அனுபவத்தில் ஆழ்வார்கள் பாடிய பாசுரங்களை, நாத்தீகன் மட்டுமல்ல, காம்யார்த்தமான பக்தி செய்பவனும், சாதனா பக்தி செய்பவன் கூட படித்தாலும், "ஆழ்வார்கள் எந்த நிலையில் இப்படி பாடினார்கள்!!" என்று புரிந்து கொள்ள முடியாமல், "இது ஏதோ உலகத்தில் காணும் காதல் பாடல்" என்றே நினைப்பார்கள்.


இதன் காரணமாகவோ என்னவோ!! வைஷ்ணவ சம்ப்ரதாயத்தில், ஆழ்வார்கள் பாசுரங்களை, அதன் அர்த்தத்தை விஷ்ணு சஹஸ்ரநாமம் போல, அனைவருக்கும் தராமல், ஞானத்தின் தகுதி பார்த்தே பகிர்ந்துள்ளனர் என்று தெரிகிறது..

நமக்கு ஞான பக்தி இல்லாமல் போனாலும், ஆழ்வார்கள் நிலை வராது போனாலும்,
குறைந்தபட்சம் நாதீகர்களாகவாவது வாழாமல், காம்யார்த்த பக்தியாவது செய்து கொண்டு, தெய்வ அணுகிரஹத்தால், குருவின் துணையால், மேலும் மேலும் ஆன்மீக வளர்ச்சி நோக்கி செல்வோம்.

வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.






Wednesday 15 May 2019

ஹிந்துக்கள் ஏன் கேலிக்கு ஆளாக வேண்டி உள்ளது?ஹிந்துக்கள் நெற்றியில் திலகம், பாரம்பரிய உடை அணிந்து, தெய்வ சம்பந்தமான விஷயங்களில் இருப்பது பற்றி ஒரு அலசல்... ஹிந்துக்கள் சிந்தனைக்கு...




ஆஃபீஸில் சேர்ந்து விட்டு, அதற்கான ஆடை அணியாமல் இருந்தால் அங்கு மரியாதை கிடைக்காது
போலீஸ் வேலையில் சேர்ந்து விட்டு, 'காக்கி துணி அணியமாட்டேன், க்ராப் செய்து கொள்ள மாட்டேன்' என்று சொன்னால், 'போடா வெளியே.. உனக்கு இங்கு வேலை கிடையாது' என்று அனுப்பி விடுவார்கள்..
கோர்ட்டில் வக்கீலாக இருந்து கொண்டு, அதற்கான ஆடை அணிய மாட்டேன் என்றால், உள்ளே அனுமதிக்கவும் மாட்டார்கள். மரியாதையும் கிடைக்காது.

கூர்க்கா வேலை செய்தாலும் அதற்கான ஆடை, ஒழுக்க விதிகள் சொல்லப்படுகிறது.
பள்ளி செல்லும் போது அதற்கான யூனிபார்ம் போட மாட்டேன், பனியன் போட்டு தான் வருவேன் என்று சொன்னால், பள்ளியில் சேர்த்து கொள்ள மாட்டார்கள்.
செருப்பு காலோடு சர்ச்சுக்குள் செல்லும் கிறிஸ்தவனுக்கு கூட, "பாதிரியார்" என்று ஆகும் போது, அதற்கான பாவாடையை அணிந்து கொள்கிறான். 
'ஊர் கேலி செய்யுமே!! அவமானமாக இருக்குமே!! ' என்று நினைத்து அதற்கான ஆடை அணியாமல் இருப்பதில்லை கிறிஸ்தவன்.

பாதிரியை பார்த்து கிறிஸ்தவ மக்களும் 'ஒய்.. பாவாடை' என்று கிண்டல் செய்வதும் இல்லை. பாதிரிக்கு கொடுக்கப்பட்ட உடை அது என்று வரம்பு தெரிந்து இருக்கிறார்கள்.
உலகமே நாகரீகம் என்ற பெயரில் அலைந்து கொண்டு இருக்க, இஸ்லாமிய பெண்கள் இன்றும் தங்களை, கருப்பு ஆடை கொண்டு மறைத்து கொண்டு தான் வெளியில் வருகின்றனர்.
'உலகத்தோடு ஆட்டம் பாட்டம் போட முடியவில்லையே!!' என்று தனக்குள் நினைத்தாலும், விதித்த ஒழுங்கு முறையை இன்று வரை அவர்கள் விடவில்லை.



மீசையை மழித்து, தாடி மட்டும் வைத்து உலகமே 'தீவிரவாதி' என்று பார்க்கும் அளவிற்கு போன நிலையிலும், 'அதற்கும் என் ஆடைக்கும் சம்பந்தம் இல்லை' என்று இஸ்லாமிய ஆண்கள் அவர்களுக்கு சொல்லப்பட்ட ஆடை ஒழுக்கத்தை கடைபிடிக்கின்றனர்.
'அடேய்.. தீவிரவாதி..' என்று நம்மை சொல்வானோ என்று இஸ்லாமியன் தனக்கு கொடுக்கப்பட்ட வேஷத்தை மாற்றிக்கொள்ளவில்லை. கவலைப்படவும் இல்லை.

ஒரு முல்லாவை பார்த்து, மற்ற இஸ்லாமியன் "மானத்தை வாங்காதே... ஊர் உலகம் போல ஜீன்ஸ் போட்டு, க்ராப் செய்து, ஷேவ் செய்து கொள், வேஷத்தை மாற்று" என்று சொல்வதும் இல்லை, கேலி செய்வதும் இல்லை.
ஆனால்,
ஒரு வேதியன், நெற்றியில் விபூதியும், குடுமியும், கச்சமும் கட்டி, கோவிலுக்கு பூஜைக்கு சென்றால், 'ஒய்.. குடுமி.. !! பூ வாங்கி போ' என்று ஹிந்துவே கேலி செய்கிறான். இப்படி கிண்டல் செய்பவனை மற்ற ஹிந்துக்கள் தடுத்து, மன்னிப்பு கேட்க செய்வதும் இல்லை.
எங்கே போகிறான் ஹிந்து?
ஹிந்துக்கள் அனைவருமே, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, குழந்தையாக இருந்தாலும் சரி, நெற்றியில் விபூதியோ, சந்தனமோ, குங்குமமோ ஏதாவது இட்டு கொள்ள வேண்டும் என்று சொன்னாலும், இட்டுக்கொள்ள வெட்கப்படுகிறான்.
நெற்றியில் ஒன்றும் இல்லாத இவன் ஹிிந்துவா? கிறிஸ்தவனா? என்று குழம்பும் அளவுக்கு இவனே தன்னை காட்டி கொள்ள, மத மாற்றத்துக்கும் இடம் கொடுக்கிறான்.






பெண்கள் "பெரிது பெரிதாக நகம் வளர்க்க கூடாது, தலை விரித்து அலைய கூடாது, நெற்றியில் கண்ணுக்கு தெரியும் அளவுக்காவது குங்குமம் இட்டுக்கொள்ள வேண்டும்" என்று சொன்னால், இன்றைய பெண்களால் எதையுமே ஏற்க முடியவில்லை.
அதே சமயம், இஸ்லாமிய பெண்களுக்கு "முகத்தை காட்டவே அனுமதி இல்லை" என்று சொன்னாலும், இது நம் ஆசாரம் என்று வாழ்கின்றனர் இன்று வரை.

"நீ வழிபடும் தெய்வங்களே நெற்றியில் இட்டுக்கொண்டு உள்ளதே, உனக்கு என்ன?" என்று கேட்டால், 'ஊரார் ஏதாவது சொல்வார்களோ!!' என்று நினைக்கிறான்.
தன் தெய்வம் இட்டு கொள்ளும் திலகத்தை தானும் இட்டு கொண்டு, 'நான் உன்னை சேர்ந்தவன்' என்று சொல்லிக்கொள்ள ஆசை இல்லை. ஊரை மகிழ்விக்க ஆசைப்படுகிறான்.


"தெய்வங்கள் தன் செயலை பார்த்து மகிழ வேண்டும்" என்று நினைப்பதை விட, "உலகத்தில் தன்னை பற்றி என்ன சொல்வார்களோ?" என்று நினைத்து சுய மரியாதை என்ற பிரமையில், வாழ போகும் 100 வருட வாழ்க்கைக்காக, தெய்வ அனுகிரஹத்தை இழக்க துணிகிறான்.

கோவிலுக்கு வந்தால் மட்டுமாவது, "பாரம்பரிய ஆடையான வேஷ்டி, புடவை அணிந்து செல்" என்றாலும் கேட்பதில்லை.
"போலீஸ் வேலை சேர்ந்தால்", போலீஸ் ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"ஆஃபீஸ் சென்றால்", அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன்,
"கூர்க்கா வேலை செய்தாலும்" அதற்கான ஆடை அணிய எதிர்ப்பு தெரிவிக்காமல், வாய் பேசாமல் ஒப்புக்கொள்ளும் இவன், 
"மற்ற மதத்தவன்" அவன் கலாச்சார ஆடை, வேஷம் போட்டு அலைவதை பார்த்தும்,
தன் கோவிலுக்கு செல்லும் போது, "நான் ஏன் வேஷ்டி அணிய வேண்டும்? நான் ஏன் புடவை அணிய வேண்டும்? இந்த ஆசாரம் எதற்கு? அது எதற்கு?" என்று கேட்கிறான்.

ஆபிஸ், கோர்ட், கூர்க்கா வேலை செய்தால், "அந்த அந்த இடத்துக்கான ஆடை ஒழுக்கத்தில் இருக்க வேண்டாமா?" என்று வேதாந்தம் பேசும் இவர்கள்,
"கோவிலுக்கு செல்லும் போது வேஷ்டி கட்ட வேண்டுமா? புடவை கட்ட வேண்டுமா?" என்று கேட்க துணிகிறார்கள்..

'தான் அவமானப்படுவோமோ' என்ற பயத்தை மறைக்க, பேடித்தனத்தை மறைக்க,
லட்சக்கணக்கான வருடங்களாக இருக்கும் பாரத தேசத்தில் இருக்கும் ஒழுக்கத்தை கெடுக்க கூட துணிகிறான்.

உலக கிண்டலுக்காக கோவிலையும் கெடுக்க முயலுகிறான்.
ஆசாரத்தையும் அழிக்க முயலுகிறான்.

"கோவிலில் உள்ள மூல விக்ரஹத்தை நானும் தொட்டால் என்ன?" என்று கேட்கிறான்.
'உனக்கு வழிபட உன் வீட்டிலேயே அதே போல விக்ரஹம் செய்து வழிபட அனுமதி உள்ளதே!' என்று சொன்னாலும், பக்தி இல்லாத, பொறாமை மட்டுமே கொண்டுள்ள இவர்கள், 'ஏன் நான் கோவிலில் உள்ள சிவபெருமானை தொட கூடாது?' என்று ஆசாரத்தை கெடுக்க முயலுகிறார்கள்.
இது பக்தியா? பொறாமை அல்லவா இது !! 
இது போன்று பேசுபவர்களை  ஹிந்துக்கள் அடக்க வேண்டாமா?

'பக்தி தான் காரணம், பொறாமை இல்லை என்றால்' சிதம்பரம் கோவிலுக்கு அருகிலேயே, 1000 ஏக்கர் நிலம் வாங்கி, உலகிலேயே பெரிய கோவிலை தாங்களே கட்டி, உலகிலேயே பெரிய சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து தன் கையாலேயே பூஜை செய்யலாமே?.. யார் தடுத்தார்கள்?
அப்படி ஒரு பக்தி செய்தால், தெய்வம் அணுகிரஹம் கூட செய்யுமே... 

பொறாமையை லட்சியமாக கொண்டு, காலம் காலமாக உள்ள ஆசாரத்தை கெடுத்து, தானும் ஆசாரம் இல்லாமல் வாழும் இவர்களை என்ன சொல்வது? அடக்க பட வேண்டியவர்கள் அல்லவா இது போன்ற விஷமிகள்.

இப்படி ஆசாரத்தை கெடுக்க முயற்சித்து கொண்டும்,
'தன் ஆடைக்கு தகுந்தாற்போல கோவில் ஆசாரத்தை மாற்றுவேன்' என்று சொல்லி கொண்டும்,
தன்னை யாரும் கேலி செய்வார்களோ! என்று நினைத்து, இவன் தகப்பனார் வரை காத்து வந்த  அற்புதமான கலாச்சாரத்தை இவன் காலத்தோடு அழிக்க முயலுகிறான்.


பக்தன் இப்படி தாறுமாறாக சென்று கொண்டு இருக்க,
கோவிலில் மூல விக்ரஹ தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள அர்ச்சகனும் தடம் புரண்டு ஓடுகிறான். இது அதைவிட வேதனையான விஷயம்,

தெய்வத்தை தொட்டு அர்ச்சனை செய்ய பாக்கியம் உள்ள "அர்ச்சகனுக்கு",

  • "வேதம்" தெரிந்து இருக்க வேண்டும்.
  • சிவ பெருமானை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால் ருத்ரம், நாயன்மார் பாசுரம் தெரிந்து இருக்க வேண்டும்.
  • பெருமாளை தொட்டு அபிஷேகம் செய்பவன் என்றால், புருஷ சூக்தம், ஆழ்வார் பாசுரங்கள் தெரிந்து இருக்க வேண்டும்.
  • எந்த தெய்வங்களை தொட்டு அலங்காரம் செய்ய அர்ச்சகனுக்கு அனுமதி உள்ளதோ, அந்த தெய்வத்திடம் அசையாத 'பக்தி' வேண்டும்.
  • பணத்தில் விரக்தியும், பக்தியில் ஆர்வமும் வேண்டும்.
  • நாவடக்கம் வேண்டும்.
  • இன்முகம் உள்ளவனாக, வரும் பக்தர்களை கடிந்து கொள்ளாதவனாக இருக்க வேண்டும்.
  • ஆயுஸில் அசைவம் தொடாத, சாத்வீக உணவே உண்பவனாக இருக்க வேண்டும்,
  • 'குடுமி' வைத்து இருக்க வேண்டும்.
  • 'கச்சம்' கட்டி இருக்க வேண்டும்.
  • வீண் பொழுது போக்காமல் தெய்வ சிந்தனையே உள்ளவனாக, அது சம்பந்தமான திவ்யமான நூலை படித்து கொண்டு இருக்க வேண்டும்

என்று அர்ச்சகனுக்கும் விதி உள்ளது.
இப்படிப்பட்ட அர்ச்சகன் தன்னை தொடும் போது, அந்த பக்தனான அர்ச்சகரிடம் பேசுகிறார் பெருமாள்.

ஒழுக்கம் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து,
குடுமி, கச்சம் இல்லாமல்,
வேதம் கற்காமல்,
ஒழுக்கமில்லாமல் வாழும் அர்ச்சகன் தொடும் போது,
அர்ச்ச அவதாரத்தில் உள்ள 'தெய்வங்கள் அருவெறுப்பு கொள்கிறார்கள்'.  
இதனால் பெரும் பாபத்தை சம்பாதிக்கிறான். குல நாசத்தை தனக்கே தோண்டிக்கொள்கிறான்.

அர்ச்ச அவதாரங்கள் செய்யும் தெய்வங்கள், ஆசாரங்களை மீறி, செய்யப்படும் ஒழுக்க கேடான செயல்களுக்கு சரியான தண்டனையை கொடுத்து விடுகிறார்கள்.
கோவிலில் உள்ள தெய்வங்கள் எதிர்பார்க்கும் முறைகளை கடைபிடிக்காமல்,
'ஏன்.. நான் இப்படி செய்தால் என்ன?..
நான் trouser போட்டு வந்தால் என்ன?
குடுமி இல்லாமல் பூஜை செய்தால் என்ன?, வேதம் ஓதாமல் மூல விக்ரகத்தை தொட்டால் என்ன?' 
என்று விதண்டா வாதம் செய்து தெய்வத்தை பழிக்கிறார்கள்.


மற்ற மதத்தவன் அவனவன் ஆடை ஒழுக்கத்தில் இருக்கிறானே, நாமும் இருந்தால் என்ன மோசம்? என்று நினைக்காமல் பேடியாக, உலகத்திற்கு பயந்து வாழ்கிறார்கள்.
வாழ்க்கை இழுக்கும் திசையெல்லாம் ஓடி, அடிமை வாழ்க்கை வாழ்கிறார்கள்.

கோவிலுக்கு வரும் பக்தர்களும் வேஷ்டி, புடவை கட்டிக்கொண்டு வருவதில்லை.
அர்ச்சகனுக்கும் குடுமி, கச்சம் இல்லை, வாயில் வேதமும் இல்லை, த்ரி கால சந்தியும் இல்லை.

இருவருக்குமே, தான் வழிபடும் தெய்வத்துக்கு பிடித்தமாதிரி வாழவேண்டும் என்றும் எண்ணம் இல்லை.

ஹிந்துக்கள் மற்றவர்களுக்காக வாழும் வரை, முதுகெலும்பு இல்லாதவரை, மற்றவர்கள் கேலிக்கு ஆளாக வேண்டியது தான்.

ஹிந்துக்கள் சிந்தனைக்கு...

Hare Rama Hare Krishna - Listen to Bhajan

Sandhya Vandanam -  Morning (With Meaning)



Sandhya Vandanam -  Afternoon (With Meaning)

Sandhya Vandanam -  Evening (With Meaning)