Followers

Search Here...

Showing posts with label ஆபஸ்தம்ப. Show all posts
Showing posts with label ஆபஸ்தம்ப. Show all posts

Thursday 5 May 2022

How to drink water? Everyone must know.. தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை அறிவோம்..

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை அறிவோம்..

तिष्ठन्न् आचामेत् प्रह्वो वा |

आसीनः त्रि: आचामेद् धृदयड़गमाभिः अद्भिः ||

- ஆபஸ்தம்ப சூத்ரம்

tiṣṭhann ācāmet prahvo vā |

āsīnas trir ācāmed-dhṛdayaṅgamābhir adbhiḥ ||

- Apastamba sutra (formula)

ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்...

நின்று கொண்டே தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து கொண்டு, மூன்று முறை, கையில் பட்டாணி அளவுக்கு எடுத்து உட்கொண்ட பிறகு, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

Apastamba rishi says...

One should not drink water while standing.

One must sit and sip water [for purification] thrice in hand and then drink remaining. 

Swayambu Manu (creator of human) elaborate little further on how people in 4 varna should drink..

ஸ்வாயம்பு மனு (மனித குலத்தின் முதல் மனிதர்), மூன்று முறை தண்ணீர் கையில் விட்டு குடிக்கும் போது, 4 வர்ணத்தில் (ஜாதியை சொல்லவில்லை) இருப்பவர்கள் எப்படி குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

பொதுவாக, தூய்மையான இடத்தில் அமர்ந்து கொண்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

கையில் விட்டு கொள்ளும் நீர், நுரைத்து இருக்க கூடாது. ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்து கொண்டு குடிக்க வேண்டும்.

One must sit in a pure place, and should sip water thrice from his hand, water which is free from bubbles and foam, and which he has attentively regarded, in such a quantity as would cover a Māśa bean. 

The water sipped by a Brahman (today MLA and MPs in assembly who directs other 3 on right and wrong) should be felt reaching his heart.

பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சட்டசபையில் மற்ற 3 வர்ணத்தில் இருப்பவர்களுக்கு எது தர்மம்/அதர்மம் என்று வழிகாட்ட, மந்திரிகள் என்ற பெயரில் பிராம்மண வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நெஞ்சு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a Kshatriya (protection force, army, police) should be felt reaching his throat.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, போலீஸ், ராணுவம் என்ற பெயரில் க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, கழுத்து வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a Vaiśya (employer) should be felt reaching his stomach.

வைசிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சுயதொழில், வியாபாரம் என்ற பெயரில் வைசிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, வயிறு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a sudra (employee) should be felt reaching his tongue.

சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, மற்றவர்களுக்கு வேலை செய்பவர்கள் (employee) என்ற பெயரில் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நாக்கு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.

Million of years ago, veda talks about this science of drinking water.

Today,
Science is recommending everyone to drink water in sitting position rather standing position.

If every one of readers, spend time on reading all Sutra (formula) given by apastamba, manu, narada, etc many research and development and rediscovery can be made. 

Hail and be proud of Vedic Dharma @ Sanathana Dharma @ Hindu Dharma.

Thursday 17 December 2020

பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

 பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

யானஸ்ய பாரா அபினிஹிதஸ்ய 

அதுரஸ்ய ஸ்திரியா இதி சர்வை: தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

வாகனத்திற்கு, சுமையை தூக்கி வருபவர்களுக்கு, நோயாளிக்கு, பெண்களுக்கு, மற்றும் முதியவர்கள், குழந்தைகளுக்கு, வழி விட்டு நடக்க வேண்டும். அவர்களை நடக்கும் பாதையில் தடையாக இருக்க கூடாது.


அஷிஸ்ட பதித மத்த உன்மத்தானாம் ஆத்மா 

ஸ்வஸ்தி அயன அர்த்தேன சர்வை: இவ தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் நலனை கருத்தில் கொண்டு, முட்டாள்களுக்கும், வர்ணத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவனுக்கும், குடிகாரனுக்கும், பைத்தியத்துக்கும் வழி விட வேண்டும். 





சகோத்ராய துஹிதரம் ந ப்ரயச்சேத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் பெண்ணை, சகோதர உறவு கொண்ட ஒரே ரிஷி கோத்திர பையனுக்கு மணம் செய்து கொடுக்க கூடாது.


ப்ராஹ்மே விவாஹே பந்து ஷீல ஸ்ருத அரோஞானி புத்வா ப்ரஜா சஹத்வ கர்மபய பிரதிபாதயேத் சக்தி விஷயேன அலம்க்ருதே |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் மகள், அவள் கணவனோடு புகுந்த வீட்டில் சேர்ந்து தன் கடமையை ஒழுங்காக செய்ய, திருமணம் ஆகும் முன்பேயே அந்த குடும்பத்தை பற்றியும், பழக்க வழக்கம் பற்றியும், விஷய ஞானத்தை பற்றியும், ஆரோக்கியத்தை பற்றியும் அறிந்து கொண்டு, பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு தன் பெண்ணுக்கு நகை போட்டு, மணம் செய்து கொடுக்க வேண்டும்.


ந சம்சயே ப்ரத்யக்சவத் ப்ரூயாத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

நன்றாக புரிந்து கொள்ளாத விஷயத்தை பற்றி, தெளிவாக புரிந்தது போல பேச கூடாது.



Tuesday 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.




திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..




சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Monday 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Monday 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

Sunday 6 December 2020

குருவிடம் எப்படி பழக வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். சிலவற்றை தெரிந்து கொள்வோமே..

குருவிடம் எப்படி பழக வேண்டும்? 
'ஆபஸ்தம்ப ரிஷி' சொல்கிறார். தெரிந்து கொள்வோமே.. 
1.
ந ச ஏனம் அபிப்ரசாரயீத 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன் கால் நீட்ட கூடாது. 

2. 
கச்சந்தம் அனுகச்சேத் அணுகம்
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நடந்தால், அவருக்கு பின்னால் நடக்க வேண்டும். 




3.
தாவந்தம் அனுதாவேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஓடினால், அவரை தொடர்ந்து ஓட வேண்டும் 

4. 
ந ஸ உபான: வேஷ்டிதசிரா அவஹித பானிர் அவதா வா ஆசீதேத் | 
அத்வா ஆபன்னாஸ் து கர்ம யுக்தோ வா ஆசீதேத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை சந்திக்கும் போது, காலில் செருப்போ, தலைப்பாகை வைத்து கொண்டோ போக கூடாது. 
ஆனால், பயணத்திலோ, வேலையிலோ இருக்கும் போது, குருவை சந்திக்க நேர்ந்தால், தவறில்லை. 

5. 
ந சேத் உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகில் அமர கூடாது. 

6. 
தேவம் இவ ஆசார்யம் உபாசீத அவிகதயண் 
அவிமனா வாசம் சுஸ்ரூசமானோ ஸ்ய 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவை அணுகும் போது, தெய்வத்தை அணுகுவது போல அணுக வேண்டும். ப்ரயோஜனமற்ற பேச்சுக்கள், கதைகள் பேசவே கூடாது. அவர் சொல்வதை கவனத்துடன், ஆசையுடன் கேட்க வேண்டும். 

7. 
அனுபஸ்த க்ருத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன், ஒரு கால் மேல் போட்டு கொண்டு அமர கூடாது. 

8. 
அணுவாதி வீத: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
காற்று நம் மீது பட்டு பிறகு அவர் மீது படும் படி இருக்க கூடாது. உடனேயே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வேறு இடமாக பார்த்து அமர வேண்டும். 


9. 
அப்ரதிஷ்டப்த: பாணினா 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, கையை ஊன்றிக்கொண்டு இருக்க கூடாது. 

10. 
அனபஸ்ரிதோ நியத்ர 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் உட்கார்ந்து இருக்கும் போது, எதிலும் சாய்ந்து கொண்டு இருக்க கூடாது. 

11. 
அபிமுகோ ந அபிமுகம் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவின் முகம் பார்த்து இருக்க வேண்டும். ஆனால், அதே சமயம் குருவின் முகத்துக்கு எதிரே இருக்க கூடாது. 

12. 
அனாஸன்னோ ந திதூரே | 
யாவத் ஆசீனோ பாஹுப்யாம் ப்ராப்நுயாத் || 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு மிக அருகிலோ, மிகவும் தூரத்திலோ அமர கூடாது. 
குரு கையை உயர்த்தி கூப்பிடும் தூரத்தில் அமர வேண்டும். 

13.
ஏக அதயாயீ தக்ஷிணம் பாஹும் ப்ரதி உபசீதேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
ஒரே ஒரு சிஷ்யனாக இருக்கும் சமயத்தில், குருவுக்கு வலது பக்கம் அமர வேண்டும். 

14. 
யதா அவகாசம் பஹவ: 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவுக்கு முன்னால் பலர் இருந்தால், அவரவர் சௌகர்யத்துக்கு அமர்ந்து கொள்ளலாம். 

15. 
திஷ்டதி ச ந ஆசீத அனாசன யோக விஹிதே | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு நிற்கும் போது, அமர்ந்து இருக்க கூடாது. 
குருவுக்கு அமர இடம் இல்லாத சமயத்தில், தனக்கு இடம் கிடைத்தாலும் அமர கூடாது. 

16. 
ஆசீனே ச ந சம்விசேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஆசனத்தில் அமராமல் தரையில் அமர்ந்து இருக்கும் போது, நாம் ஆசனத்தில் (chair) அமர கூடாது. 

17. 
சேஷ்டதி ச சிகீர்ஷன் தச் ஷக்தி விசயே 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஏதாவது காரியத்தை செய்ய முனையும் போது, சிஷ்யனின் அனுமதியை பொறுத்து, தன்னால் முடிந்த வரை உதவி செய்யலாம்.. 

18. 
ந ச யஸ்ய சகாஸே ந வக் ஸ்தானினம் உபசம்க்ருஹ்நீயாத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு இருக்கும் போது, அவருக்கு கீழ் உள்ள எவருக்கும் (பெரியோர்கள் ஆனாலும், தகப்பனே ஆனாலும்) காலில் விழ கூடாது. 

19. 
கோத்ரேன வா கீர்த்தயேத் 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் கோத்திர பெருமையை குருவுக்கு முன் பேச கூடாது. 

20. 
ந ச ஏனம் ப்ரதி உத்திஷ்ட்டே அனூத்திஷ்ட்டே வா | 
அபி சேத் தஸ்ய குரு ஸ்யாத் | 
தேசாத் த்வ ஆசனாச் ச சமஸர்பேத் | 
யஸ்மிம்ஸ் த்வ அனாசார்ய சம்பந்தாத் கௌரவம் 
வ்ருத்திஸ் தஸ்மின் அன்வக் ஸ்தாநீய பை ஆசார்யஸ்ய |
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன் குருவை மீறி அவரை விட தாழ்ந்த தகுதி உள்ள குருவை சந்திக்க கூடாது, அல்லது அவர்களை தன் குருவுக்கு இணையாக உயர்த்த கூடாது. 
குருவின் குருவே வந்தாலும் சரி. இது தன் குருவுக்கு அவமானம் செய்ததாகும். தேவைப்பட்டால், அமைதியாக அந்த இடத்தை விட்டு அப்போதைக்கு நகர்ந்து விடலாம். அல்லது, தன் குருவுக்கு கொடுக்கும் மரியாதை கொடுக்கலாம். 




21. 
ந ஸ்மயேத | 
யதி ஸ்மயேத அபிக்ருஹ்ய ஸ்மயேத இதி ஹி ப்ராஹ்மணம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
வாயை திறந்து கொட்டாவி விட கூடாது. 
அப்படி நேர்ந்தாலும் குனிந்து, வாயை கையால் மூடிக்கொள்ள வேண்டும் 

22. 
விசம கதே த்வம ஆசார்ய உக்ரதா: சூத்ரதோ வா ஆஹரேத் | 
சர்வதா சூத்ரதா உக்ரதோ வா ஆசார்ய 
அர்தஸ்ய ஆஹரணம் தார்ம்யம் இதி ஏகே | 
தத்வா ச ந அனுகதயேத் | 
க்ருத்வா ச ந அனுஸ்மரத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
தன்னால் முடிந்தவரை சம்பாவனை செய்தும், குரு முழுதிருப்தி அடையவில்லை என்றால், வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். 
தேவைப்பட்டால், முழு சம்பாவனையுமே வைஸ்யர்களிடமோ (business class), சூத்திரர்களிடமோ (employee class) யாஸித்து தானம் வாங்கி திருப்தி செய்யலாம். குருவுக்கு கொடுத்ததை பெருமை பேசி கொள்ள கூடாது. 
குருவுக்கு செய்த சம்பாவனையை மறந்து விடுவது நல்லது. 

23. 
ஸய்யா ஆசனே ச ஆசரிதே ந ஆவிசே |  
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு அமர்ந்த ஆசனத்தில் அமர கூடாது. 

24. 
ந அநபிபாஷிதோ குரும் அபிபாஷேத ப்ரியாத் அன்யத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு கூப்பிடாமல், நல்ல விஷயத்தை தவிர மற்ற எதுவும் அவரிடம் சென்று பேச கூடாது. 

25. 
சமாவ்ருத்தஸ்ய அபி ஏதத் ஏவ சாமயாசாரிகம் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குருவிடம் உபதேசம் பெற்று, வீடு திரும்பினாலும், அவரிடம் பழகும் விதம் கடைசி மூச்சு வரை கடைபிடிக்க வேண்டும். 

26. 
சஹ வசன் சாயம் ப்ராத: 
அநாஹுதோ குரும் தர்சன அர்தோ கச்சேத் | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு ஒரே ஊரில் இருந்தால், அவர் கூப்பிடாமலேயே காலையும் மாலையும் அவரை பார்க்க செல்ல வேண்டும். 

27. 
முஹும்ஸ் ச ஆசார்ய குலம் தர்சன அர்தோ கச்சேத் 
யதா சக்தி அதிஹஸ்த்யம் ஆதாய அபி தந்த ப்ரக்ஸாலனானி இதி | 
  - ஆபஸ்தம்ப சூத்திரம் 
குரு வேறு ஊரில் இருந்தால், முடிந்தவரை அடிக்கடி அவரை பார்க்க செல்ல வேண்டும்.
தன் கையால் அவருக்கு ஒரு வேப்பங்குச்சியாவது பல் துலக்க கொடுக்க வேண்டும்.

குருநாதர் துணை

Saturday 5 December 2020

For Business/Spiritual/Defence Class people (excluding employee) - 'உபநயனம் எப்பொழுது செய்து கொள்ள வேண்டும்?' என்று ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

ஆபஸ்தம்ப சூத்திரம் என்ன சொல்கிறது?

வஸந்தே ப்ராஹ்மனம் உபனயித க்ரிஷ்மே ராஜன்யம் 

சரதி வைஸ்யம்

கர்பாஸ்தமேசு ப்ராஹ்மனம் 

கர்பைகாதசேசு ராஜன்யம்

கர்ப த்வாதசேசு வைஸ்யம் 

   - ஆபஸ்தம்ப ரிஷியின் சூத்திரம்


'சூத்திர' என்ற சொல்லுக்கு அர்த்தத்தை இங்கு தெரிந்து கொள்ளலாம்.





ப்ராம்மணர்கள் (ப்ரம்மத்தை உபாசிப்பவர்கள்) வசந்த ருது (இளவேனில் காலம்)(spring) காலத்தில் (April to June) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


க்ஷத்ரியர்கள் (காவலர்கள்) கிருஷ்ம ருது (முதுவேனில்காலம் வெயில் காலம் / summer) காலத்தில் (June to August) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


வைஸ்யர்கள் (வியாபாரிகள்) சரத் ருது / குளிர்காலம் (autumn) காலத்தில் (October to December) உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


ப்ராம்மணர்கள் -> 8 வயதிலும்.

க்ஷத்ரியர்கள் -> 11 வயதிலும்.

வைஸ்யர்கள் -> 12 வயதிலும்

உபநயனம் போட்டுக்கொள்ள வேண்டும்.


சப்தமே ப்ரஹ்ம வர்சஸ காமம்

- ஆபஸ்த்மப சூத்ரம்

மிக முக்கியமாக, 

ஏழு வயதில், ப்ரம்மத்தை பற்றி அறிந்து கொள்ள ஆவலை வளர்க்க வேண்டும்.


On Upanayana :

Brāhmaṇa be initiated in spring, 

Kṣhatriya in summer, 

Vaiśya in autumn, 


Brāhmaṇa in the eighth year of age, 

Kṣhatriya in the eleventh year,

Vaiśya in the twelfth year.