Followers

Search Here...

Sunday 26 July 2020

Does Hinduism believe in "One God"??? Is "Brammam" is supreme god?

Does Hinduism believe in "One God"??? Is "Brammam" is supreme god?
Veda talks about Bramman. Yes. Brammam is the supreme who has no form, and creator. He is the supreme soul like ocean. Like waves in ocean which appears as white and extremely agile, we jeevatma exist in para brammam. Both are same.. Both have no form. Yet, jeevatma can't be paramatma unless paramatma agree to merge. 




Who created ocean?
Can't say. But Definitely we can say, Waves didn't create oceans. 

But when we ask, who created this waves? Its ocean.

Similarly, Supreme soul (brammam) created jeevatma (us). Reverse is not true. Hence paramatma is powerful than jeevatma (us) Waves can't become calm like ocean unless ocean decides. Just like that, jeevatma (us) can't decide to become para brammam, unless parabrammam wish to stop us becoming a waves again and again. For that, brammam who is of no form, gives a chance for jeevatma who is also of no form, to take human form.
When a jeevatma takes human form (actually jeevatma resides inside) and tries to do bhakti (devotion to brammam of no form) only few jeevatma could perceive brammam who is of no form. Only few yogi, or like prahaladha could think about brahmam who is beyond form, imagination. When millions of souls who took human form and try to do bhakti to reach salvation, that supreme brammam himself takes human form as rama, krishna vamana, and also as god like vishnu, to help jeevatma to understand and see and meditate that figure and create love and affection to brammam.



Knowing that vishnu is the same para brammam gives not just satisfaction but a chance to medidate supreme. If brammam can give form to jeevatma as human, bird etc.. It's childish to say he won't come with form or he can't come with form. If people look cautiously, the sound brahmam, is the same which is used by Judaism in a twisted way as Abraham.. Both "Brahmam, Abraham" sounds similar. Foreigners are known to twist sanskrit words. Even today, iskcon devotees can't pronounce Krishna. They twist somehow and pronounce him as Kisina.. Judaism is followed by Yahudi.

Yahudi are now christened as Jews to hide this original name. If we look back Similar name "Yadhava" is heard in Mahabharat which happened 5000yrs ago around 3102BCE.
After krishna departure, he ordered all yadhava to spread across world ruled by pandava who ruled the entire world after epic world war. All yadhav community migrated to all directions. People from yadhava community would have spreaded across yavana (till Greece) kingdom as well during that time. These people worshiped krishna and the name krishna is common name for their child. Even christ must be a twisted name of krishna.
His father joseph must be a devotee of krishna as bible also says when christ born, his father was in a temple worshiping god. It does not say which god he was worshiping? which temple he was praying?..
These are cheaters.. You can read bible verses from luke and matthew here.. What LUKE and Matthew says in BIBLE on CHRIST BIRTH??
Similarly,
the sound "brahmam" is used with similar sound by islam as "ibrahim".. It's very clear that, Hinduism was exist everywhere..
only problem is ...
Unlike iskcon where even though they pronounce krishna as kisina but they have tilak, b.gita in their hand, to represent their identity. Thanks to prabhu pada to insist on outer appearance as key aspect.
Otherwise,
western people would have created a god called "kisina" and may even criticize actual krishna and might have created "Kisiniyanity" religion. May be some of this yadhav community who migrated in these regions, didn't followed any such appearance or specific restrictions it seems..



This would have lead to destruction of hindu dharma in these region, and losing their identity and fall into real of fake twisted religions. Sound of Abraham, ibrahim are same as sound of Brahmam.. Sound of Christ is same as Krishna. Only problem is Christ is tongue twisted meaningless name. Western world must wake up..
Rather worshiping fake gods or some twisted names, they should start introspect to worship real vedic gods.

பாசுரம் (அர்த்தம்) - "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த". கண்டம் என்னும் கடிகையில் (தேவப்ரயாகையில்) வீற்றுஇருக்கும் ராமபிரானை தொழும் பாசுரம். பெரியாழ்வார் வர்ணிக்கிறார். அர்த்தம் தெரிந்து கொள்வோமே !

பரவாசுதேவன் நாராயணன், ராமபிரானாக அயோத்தியில் அவதாரம் செய்து விட்டார்.

வனவாச சமயத்தில் பரத்வாஜ ரிஷியை சந்தித்தார் ராமபிரான். பிறகு சித்ரகூடம் சென்று தங்கி இருந்தார்.

14 வருட வனவாசத்தில்,
அயோத்தியில் ஆரம்பித்து, ராமேஸ்வரம் வரை நடந்தே வந்தார் ராமபிரான்.

ராமபிரானின் பாதம் படும் பாக்கியத்தை அயோத்திக்கு தெற்கே உள்ள பாரத தேசங்கள் முழுவதும் பெற்றது.



இலங்கையில் இருந்த ராக்ஷஸன் ராவணனின் தலையை கொய்து, அவன் தம்பி விபீஷணனுக்கு முடி சூட்டிவிட்டு, அயோத்தியில் இருந்து இலங்கை வரை தன் ஆளுமையை பறைசாற்றினார் ராமபிரான்.

பிறகு, சீதா தேவியுடன் பட்டாபிஷேகம் செய்து, அயோத்தியை அரசாட்சி செய்து கொண்டிருந்தார்.

அயோத்தியில் ஆரம்பித்து, ராமரின் பாதம் தெற்கு பாரதம் முழுக்க பட்டுவிட்டது.
ஆனால், அயோத்திக்கு மேல் உள்ள ஹிமாசலம் போன்ற வ்டபாரத தேசங்கள் ராம பாதம் கிடைக்காமல் இருந்தது.

"புனிதமான கங்கை நதி பாயும் ஹிமாலயத்திலும் ராமபிரான் பாதம் படவேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பரத்வாஜ ரிஷி.

அதற்காக கண்டம் என்னும் கடிகையில், சித்ரகூடம் போலவே ஒரு குடில் அமைத்து, அயோத்தி மன்னன் னை அழைத்தார்.
பரத்வாஜ ரிஷி அழைப்பை ஏற்று, ராமபிரான் புனிதமான கங்கை ஓடும் இந்த கடிகையில் வந்து சிலகாலம் தங்கினார்.

இந்த 'கடிகை' என்ற திவ்ய தேசமே 'தேவப்ரயாகை' என்றும் அழைக்கபடுகிறது.

இங்குள்ள ரகுநாத் கோவிலில், ராமபிரான் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கிறார்.

"பாரத தேசம் முழுவதும் ராம ராஜ்யமே"
என்று பறைசாற்றினார்.



"கங்கையில் நின்று, எங்கும் தன் புகழை பரப்பி, பாரத தேசம் முழுவதும் ஆளும் என் புருஷோத்தமனே"
என்று பெரியாழ்வார் மங்களாசாசனம் செய்கிறார் இந்த பாசுரத்தில்.

தங்கையை மூக்கும்
தமையனைத் தலையும் தடிந்த
எம் தாசரதி போய்
எங்கும் தன் புகழாய் இருந்து
அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை
கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்
கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற
கண்டம் என்னும் கடிநகரே
திருமொழி (பெரியாழ்வார்)
கண்டம் என்னும் கடிநகர், இன்று "தேவப்ரயாகை" (Uttarakhand) என்ற பெயருடன் இருக்கிறது.

வீட்டில் உள்ள வாளி ஜலத்தில் குளிக்கும் போது "கங்கே கங்கே" என்ற சொன்னால் கூட, அந்த சொல்லே குளிப்பவனின் பாவங்களை போக்கி, புனிதமாக்கிவிடும். (கங்கை கங்கை என்ற வாசகத்தாலே
கடுவினை களைந்திடகிற்கும்)

'கங்கை' என்ற சொல்லுக்கே அத்தனை மகத்துவம் சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட பெருமைமிகு கங்கை, கடிகை என்ற தேவப்ரயாகையில் ஓடிக்கொண்டு இருக்க, ராமேஸ்வரம் முதல் ஹிமாச்சலம் வரை தன் பாதம் பதித்த ராமபிரானை கண்டு (எம் தாசரதி போய் எங்கும் தன் புகழாய் இருந்து அரசாண்ட எம் புருஷோத்தமன் இருக்கை),
'அந்த கங்கையில் மேல் நின்ற என் புருஷோத்தமனே' என்று ராமபிரானை கை தொழுது சேவிக்கிறார், பெரியாழ்வார். (கங்கையின் கரைமேல் கைதொழ நின்ற)

ஆண்டாளை பெற்ற பெரியாழ்வார், வடதேசத்தில் உள்ள  தேவப்ரயாகை வரை சென்று ராமபிரானை சேவித்து இருக்கிறார் என்பது தெரிகிறது.
"ராமபிரான் பாரத தேசம் முழுவதும் தன் பாதத்தை பதித்து, கங்கையில் வந்து ரகுநாதனாக நிற்கிறார். அந்த ரகுநாதனை தொழுவோம்"
என்று மட்டும் பெரியாழ்வார் சொல்லி இருக்கலாமே!
ஆனால்,
ஏன், சூர்பனகை மூக்கை அறுத்த, அவள் அண்ணன் ராவணன் தலையை அறுத்த ராமபிரான் என்று சேர்த்து சொன்னார்?

ராக்ஷஸ தாயாருக்கும், ரிஷியான விஸ்ரவசுக்கும் பிறந்தவன் ராவணன். ராவணனும் ஒரு விதத்தில் பிராம்மணன். வேதம் கற்றவன். 
பெரியாழ்வார் பிராம்மணர்.
இப்படி ராவணன் தலையை கொய்து எறிந்த ராமபிரான் என்று சொல்ல காரணம் என்ன?

இதற்கான காரணத்தை பெரியவாச்சான் பிள்ளை சொல்லியிருந்தாலும், அந்த அர்த்தங்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டது.
அதற்கு பின் வந்த மணவாள மாமுனிகள், பெரியாழ்வார் என்ன காரணத்தினால் இப்படி சொன்னார்? என்று நமக்கு காட்டுகிறார்.

உண்மையான பக்தன் பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்கவே விரும்புவான். பிரித்து வைக்க விரும்பமாட்டான்.
ஹனுமான் ராமபிரானையும், சீதையும் சேர்க்க பாடுபட்டார். பிரிந்து இருப்பதை கண்டு வருத்தப்பட்டார்.
சேர்த்து வைக்க ஆசைப்பட்ட ஹநுமானுக்கு ராமபிரான் பெரும் புகழை கொடுத்தார்.



ஹனுமானுக்கு கோவில் காட்டினால், அங்கு ஒரு சிறிய சன்னதியில் கூட ராமபிரான் இருக்க சம்மத்தித்து விடுகிறார்.
ராமருக்கே கோவில் காட்டினாலும், அங்கு இருக்கும் சிறு ஹனுமான் சன்னதியை சுற்றுபவர்களே அதிகம்.
ஹநுமானுக்கு ஏன் எந்த ஏற்றம்? 
பெருமாளையும், பிராட்டியையும் சேர்த்து சேவிக்க ஆசைப்பட்டதால், ஹநுமானுக்கு எந்த ஏற்றம் கிடைத்தது.
பெருமாளை பிராட்டியிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டாள் - 'சூர்ப்பனகை'.
இந்த பாபத்துக்கு மூக்கு அறுபட்டு தண்டிக்கப்பட்டாள்.

பிராட்டியை பெருமாளிடமிருந்து பிரித்து பார்க்க ஆசைப்பட்டான் - 'ராவணன்'.
தலையே போனது அவனுக்கு.

பக்தன் 'பெருமாளையும் பிராட்டியையும் பிரித்து பார்க்க கூடாது' என்று நமக்கு சொல்லவே  பெரியாழ்வார் "தங்கையை மூக்கும் தமையனைத் தலையும் தடிந்த" என்று மணவாள மாமுனிகள் நமக்கு விளக்குகிறார்..

ராமபிரானையும், சீதாதேவியையும் சேர்த்தே வணங்குவோம்.
ஹநுமானை போல, பெருமையை அடைவோம்.

குருநாதர் துணை.



Monday 13 July 2020

ஹிந்து மக்களின் பெருமைகள் என்ன? தெரிந்து கொள்வோம்...

ஹிந்துவின் பெருமையை உணருவோம்.. 

விஷ்ணு பகவான் 'கருமை நிறம்'. அவர் பத்னியான மஹாலக்ஷ்மியோ 'பொன்னிறம்'.

விஷ்ணு (கள்ளழகர்) மீனாக்ஷியை தன் தங்கையாக கருதினார்.
மீனாக்ஷி 'கருமை நிறம்'. 
இவள் மணந்து கொண்ட சிவபெருமானோ 'பொன்னிறம்'.

முருகன் தன் மாமனை போன்று பேரழகன், நிறத்தில் தந்தையை போன்று 'பொன்னிறம்'.

விநாயகன், மகா புத்திசாலி..யானை என்ற 'மிருகத்தின் உருவத்தை' ஏற்றவர். பிரம்மச்சாரி.

நீ கருப்பா?..  உனக்கு இருக்கிறார் 'கருமை நிற பெருமாள்'.. 

நீ வெளுப்பா?.. உனக்காக இருக்கிறார் 'சிவபெருமான்'.

நிற வெறி காட்டாத உன் ஹிந்து தெய்வங்களை விட்டு விட்டு, வெளிநாட்டில் பிறந்து இறந்து போன, நிறவெறியை தூண்டும் blonde தெய்வம் உனக்கு தேவையா?...

"கடவுளுக்கு உருவம் கிடையாது" என்ற சித்தாந்தம் உனக்கு இருந்தால், உனக்காக தானே அத்வைத மார்க்கம் உள்ளது..  




ஆதி சங்கரரை விட அத்வைதி உண்டா?..
கோவிலுக்கு கூட செல்லாமல், காடுகளில் இருந்த படியே,  ரூபமற்ற பிரம்மத்தை (கடவுளை) மனதிலேயே தியானித்த ரிஷிகள் உன் கண்ணுக்கு தெரியவில்லையா?..

'கட்டுக்கோப்புடன் வாழ்' என்று சொல்லி பழக்கிய போது சமுதாயங்கள் ஏற்படுவது இயற்கை தானே..

டாக்டர் சமுதாயம், வக்கீல் சமுதாயம் என்று இன்று கூட சமுதாயங்கள் உருவாகி கொண்டே தானே இருக்கிறது..

அதில் சில நல்லவர்கள் உதிக்கும் போது அவர் பெயரால் சமுதாயம் விரிவடைவதும் இயற்கை தானே..

ஷத்ரிய குலத்தில் தோன்றிய யது என்ற அரசன் புகழ் ஓங்கியதால், அவன் வழி வந்த சில லட்சம் ஷத்ரியர்கள் தங்களை "யாதவர்கள்" என்றும் "கோனார்' என்றும் சொல்லிக்கொள்வது இயற்கை தானே...

'எம்ஜிஆர் வழி, காந்தி வழி' என்று இன்று சொல்கிறார்களே.. இது சொல்வது இயற்கை தானே...

இந்த பல தரப்பட்ட சமுதாயங்கள் கட்டுக்கோப்பான அமைப்பை நம் பூமியில் ஏற்படுத்தியதால் தானே, ஆங்காங்கு நடந்த சிறு சிறு பிரச்சனைகளை ஆங்காங்கே பஞ்சாயத்து கூட்டி சரி செய்தனர்.

பல பிரச்சனைகள் கோர்ட்டு வரை செல்லாமலேயே நான்கு பெரியவர்களால் பேசி முடிக்கப்பட்டதே..

இந்த சமுதாய அமைப்பை சிதைத்து, நம்மை ஒழித்து கட்ட, கிறிஸ்தவ வெளிநாட்டினர், நம் சமுதாய அமைப்பை ஜாதி என்ற முத்திரை குத்தி, ஒரு சமுதாயத்துக்கும், இன்னொரு சமுதாயத்துக்கும் பகையை கிளப்பி, ஊர் பஞ்சாயத்துக்களை குலைத்து, கலாச்சாரத்தை கெடுத்தனர்.

இன்றுவரை, 1000 வருடங்களாக எங்களை அடிமை படுத்தி இருந்தனர் ப்ராம்மணர்கள் என்று உளரும் சிலர், 1000 வருடம் நம் நாட்டில் ஆட்சி செய்தது அந்நிய இஸ்லாமியர்களும், அந்நிய கிறிஸ்தவர்களும் தான் என்று ஏன் புரிந்து கொள்ளவில்லை?..

1000 வருடங்கள் முன் நன்றாக இருந்த காலத்தில், ஹிந்துக்களை ஹிந்து தானே ஆட்சி செய்தான்.

கும்பகோணத்தை ஆட்சி செய்த சோழர்கள் ஒரு தெருவில் சிவனுக்கு கோவில் கட்ட, மறு தெருவில் பெருமாளுக்கும் கோவில் கட்டி உள்ளானே.. 
வேலைவாய்ப்பு பலருக்கு கொடுத்து, அதே சமயம் அவரவர் சிற்ப, கட்டிட கலைகளை கூட ஊக்குவித்து இருக்கிறார்களே..

இன்று, ஒரு வீட்டில் நடக்கும் விவகாரம் ஆரம்பித்து, நாட்டில் நடக்கும் விவகாரம் வரை, ஒரே ஒரு நிதிமன்றம் தன் தலையில் எடுத்து கொண்டு, எதற்கும் தீர்வு கொடுக்க முடியாமல் தவிக்கிறதே!!

நிறவெறி இல்லாத நம் தெய்வங்களை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் நமக்கு எதற்கு? வெளிநாட்டவனுக்கும் இந்த நிறவெறி தூண்டும் போலி தெய்வம் எதற்கு?..




அனைவரையும் ஹிந்துவாக ஆக்குவோம். 
உனக்கு கருப்பு கடவுள் விருப்பமா?.. பெருமாளை வணங்கு..
உனக்கு ஸ்படிகம் போல வெண்மையான தெய்வம் விருப்பமா? சிவனை வணங்கு.
தெய்வம் குழந்தை போல இருக்க வேண்டுமா? முருகனை வணங்கு.
உனக்கு இயற்கையே தெய்வமா? சக்தியை வணங்கு.
உனக்கு ஒரே தெய்வம் மட்டுமே வேண்டுமா? ஆதி மூலமான நாராயணனை வணங்கு.

அந்த ஆதிபுருஷனும் உருவம் ஏற்று இருக்க கூடாது என்று நினைக்கிறாயா? பரப்ரம்மம், பரஞ்சோதி என்று வணங்கு.

கடவுளே வேண்டாம், என் தாயே தெய்வம் என்று நினைக்கிறாயா? உன் தாயையே வணங்கு..

தெய்வங்களே தங்களுக்குள் சொந்தம் கொண்டாடும் ஹிந்து தர்மத்தை விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வம் உனக்கு எதற்கு?

தெய்வங்களுக்கு பொறாமை கூட இங்கு இல்லையே...

மஹாவிஷ்ணுவே கிருஷ்ணராக தோன்றியும், அர்ஜுனன் சிவபெருமானிடம் பாசுபத அஸ்திரம் கேட்டு தவம் செய்ய போகிறேன் என்றான். 
கிருஷ்ணர் எதிர்க்கவில்லையே.. 
தெய்வங்களுக்குள் சண்டை இல்லையே!

நெல்லையப்பர் கோவிலுக்கு செல்.. 
மஹாவிஷ்ணு, தன் மாப்பிள்ளை சிவபெருமானுக்கு தன் கையால் பூஜை செய்கிறார்..
சிவபெருமான், காசியில் "ராம ராம" என்று ராம நாமத்தை ஜபம் செய்கிறார்.
மதுரைக்கு சென்றால், மாமன் வீற்று இருக்கும் கள்ளழகர் மலையில், முருகன் வந்து விட்டார்.
திருப்பதி செல்ல ஆரம்பித்தால், காளஹஸ்தி என்ற இடத்தில் சிவபெருமான் இருக்கிறார்.
108 திவ்ய தேசத்தில் ஒன்றாக இருக்கும் சித்ரகூடம் என்ற சிதம்பரத்தில், பெருமாள் நடராஜருக்கு முக்கியத்துவம் கொடுத்து கொண்டு இருக்கிறார்.

கும்பகோணம் சென்றால், ஒரு தெருவில் கும்பேஸ்வரர் இருந்தால், மறு தெருவில் சாரங்கபாணி இருக்கிறார்.

தெய்வங்கள் சொந்தம் கொண்டாடி கொண்டு இருக்கும் போது, கட்டுக்கோப்பான சமுதாயங்கள் பிற்காலத்தில் ஜாதி என்ற பெயரால் அழைக்கப்பட்டாலும், வெறுப்பை நமக்குள் ஊட்டியதே, நிறவெறி கொண்ட கும்பல் தானே..

வெளிநாட்டில் இருந்து வந்த இந்த அந்நியர்கள் நிறவெறி குணத்தை அடைந்தற்கு காரணமே, அவர்கள் வழிபட்ட நிறவெறி தூண்டும் போலி தெய்வங்கள் தானே..

சிந்திப்போம்... 
நிறவெறி தூண்டும் வெளிநாட்டு தெய்வங்களை பௌத்த மதத்தை வீசியது போல வீசுவோம்..

நம் தெய்வங்கள் நமக்கு உறவு அல்லவா...
எத்தனை தேர் திருவிழா கண்டு இருப்போம். 
தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..
நம் தெரு வழியாக, நம் வீடு தேடி  தெய்வங்கள் வீதி உலா வருவதை பார்த்தும், தெய்வங்கள் நம்மிடம் உறவு கொள்வது புரியவில்லையா?..

ப்ரம்ம தேவன் "உலகை படைத்தார். நம்மையும் படைத்தார்" என்று ஹிந்து தர்மம் சொல்கிறது..
ப்ரம்ம நமக்கு பிதா அல்லவா..

ப்ரம்ம தேவன், தன்னை படைத்த நாராயணனை "தனக்கு பிதா" என்கிறார். 

அப்படியென்றால் நாராயணன் நம் பாட்டனார் இல்லையா.. 

விஷ்ணு சஹஸ்ரநாமம், "பெருமாள் நம் சொந்த பாட்டனார்" என்று உறவு சொல்கிறதே.. கவனிப்பது இல்லையா?

சொந்தம் கொண்டாடும் தெய்வத்தை விட்டு விட்டு, நிறவெறி தூண்டும் போலி தெய்வத்தை ஏற்பானா மனசாட்சி உள்ளவன்?..

சிந்திப்போம்...  
700 கோடி உலக மக்களில், எங்கு வேண்டுமானாலும் நாம் பிறந்து இருக்கலாம்...
ஆனால், 
80 கோடி ஹிந்துக்கள் கூட்டத்தில் நாம் ஹிந்துவாக பிறந்து இருக்கிறோம் என்றால், நாம் எத்தனை புண்ணியம் செய்தவர்கள் என்று புரியும்.

கிடைத்தற்கரிய இந்த ஆயுளையும், போலி தெய்வத்திடம் செலவழித்து விரயம் செய்து வீணாக்கி விட கூடாது..

கையில் வைரம் கிடைத்தும், கண்ணாடி என்று தூக்கி போடுவது எத்தனை முட்டாள்தனமோ, அது போல, ஹிந்துவாக பிறந்தும் தன் பெருமையை அறிந்து கொள்ளாமல் இருப்பது...

வேதத்தில் சொன்ன தெய்வங்கள் நிஜமானவை..

இந்த தெய்வங்கள் தரிசனம் பெற்றவர்கள் அநேகம்... ஆதிசங்கரர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், யோகிகள், மகான்கள், சாதுக்கள், பக்தர்கள் இந்த 80 கோடி ஹிந்து கூட்டத்தில் தான் தோன்றினார்கள் என்பதை மறக்க கூடாது...

ஹிந்து தர்மம் சொல்லும் போதனைகளை, போலி மதங்கள் திருடி 'தான் சொல்வது போல சொன்னாலும்', ஹிந்துக்கள் ஏமாற கூடாது..

நாம் சொல்லாத எந்த நல்ல தர்மங்களையும் இவர்கள் சொல்லவில்லை. 

"நல்ல விஷயம் தானே சொல்கிறான்" என்று ஏமாற கூடாது..

'பால் தான் குடிக்க கொடுக்கிறான்' என்றாலும், 'நாய் தோலில் செய்த பாத்திரத்தில் ஊற்றி கொடுத்தால் சாப்பிடுவாயா...?'

தங்க பாத்திரத்தில் பால் ஊற்றி கொடுத்தால் சாப்பிடலாம்.

நம் ஹிந்து தர்மம் தங்க பாத்திரம் போன்றது.. அது சொல்லும் பால் போன்ற தர்மங்களை பருகுவதே நல்லது.

நம்மிடம் தங்க பாத்திரத்தில் பால் இருக்கும் போது, நாய் தோலில் செய்யப்பட்ட பாத்திரம் நமக்கு எதற்கு?

சிந்திப்போம். 
நம் கோவில் தெய்வங்களில் விளக்கு எறிய செய்வோம். திருவிழா நடக்க செய்வோம். 
தேர் இழுப்போம்.

ஹிந்துவாகவே வாழ்வோம்..

Friday 10 July 2020

Racism must Die... You must become Hindu. World Must become Hindu. WHY??

You are a Black? 
Ram and Krishna are black. 
Gods Statue inside Temple is also made Black. 
You have a God. No Racism.

You are not Black?
Shiva is snow white. You have a God. No Racism.



You believe in non idol worship? 
Meditate on para brammam, who is the supreme source of all creation and who is beyond the imagination.

You believe in Idol worship?
Same Para brammam took the form of Narayana (black), Shiva (white) and further manifested himself as Adi Sankara, Rama, Krishna, Narasimha, Vaamana..  If you want create an Idol of them.  
God is everywhere. he can show his presence in your IDOL as well.  
You believe in equality?
Supreme Para brammam appeared himself not just as Humans, Demi Gods, as Vishnu, Shiva..  he appeared himself as Varaha (pig), Mathsya (fish) as well. Thus, Supreme Para Brammam, showed that he resides in everyone not just human and showing equality.

Only in Hindu community, 
you will see, husband and wife with different colors, but still love each other.
Only in Hindu community, 
brother and sisters with different skin tones, but still living happily.

If you want to worship white God with golden hair,
Don't go for dead souls and get cheated.  They never come.
You have Shiva.  You have Karthikeya. 

If you are Black,
Come on! Krishna is your God. 
Why do you need a Blond white skinned twisted Kris, in this racist world?

If you believe in God who is beyond imagination,
Read Advaita.  
Follow Adi Sankara. 
Follow many Rishi who meditated that supreme Parabrammam sitting alone. Be a Yogi, if you believe God (para brammam) is formless and can't imagined. 
Hinduism embrace all.. 
It allows you to live in community and a structured way. 
If you want to name community as Caste. Go ahead. 
But it just a way to live in streamlined way.

Are you an Atheist?
Come on.. You are also allowed to be Hindu.
Atheist is also encouraged here, because you are also needed to keep Theist to analyze more on God and improve his belief.




Let's embrace Hinduism..
World peace is possible...Only if people leave the Blond Dead Gods.
RACISM must die. 

You can be krishna devotee. 
At the same time, Your spouse can be shiva devotee. 
Your son can be ganesh devotee. Your daughter can be shakthi (nature) devotee.
Still Just being a hindu, 
you will learn to respect other believes and still live together and live for each other.
Do you believe in family and its values?
Even Hindu Gods show family Values. 
Shiva's son Karthikeya calls Vishnu as his uncle.
Vishnu calls Parvati as her sister.
Brahma calls Narayana as his father.
Rishi says Brahma is their father.
We say, We are from lineage of Rishis.
We relate even Gods as our Family.

Krishna says in B.Gita, "i am karthikeya in mid of warriors" (senaaninaam skanda)

It shows that Para brammam who is the supreme, came as Krishna. And he is present everywhere.

To make the world peace, blond dead gods must be buried.

Racism must die. 
Devotion to Shiva (shiva) and Krishna (Black) is the way to stop Racism.

Time for world to embrace Hinduism. 


Thursday 2 July 2020

'யாகத்தில் பலி' உண்டா? வேதம் எதற்காக இது போன்ற பலியை அனுமதிக்கிறது? அதை பற்றி ஒரு அலசல்..

வேதத்தில் சில இடங்களில் 'யாகத்தில் பலி'  பற்றி சொல்கிறது.
"இது சரியா, தவறா?" என்ற கேள்விக்கு முன்,
'வேதத்தின் நோக்கம் என்ன?'
என்று முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...
முக்கியமாக ஹிந்துக்கள்.

ஹிந்து தர்மம், மற்ற போலி புத்தகம் போல, 'ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தையும் காட்டு' என்று உளரும் புத்தகம் அல்ல,
"கடவுள் அரூபமானவர்" என்று மட்டும் சொல்லி
குறுகிய மனப்பானமாய் கொண்ட  புத்தகமும் அல்ல..
நம் ஹிந்து தர்மம், சந்யாசியிடம் "அடித்தாலும் அமைதியாக இரு" என்று சொல்லும்.
அதே சமயம்,
நாட்டை காக்க எல்லையில் நிற்கும் வீரனை பார்த்து அதே போதனையை கூறி உளராது.
"உன் எதிரி அடிப்பான் என்று தெரிந்தால் கூட அவனை அடித்து நொறுக்கி விடு"
என்று அவர்கள் குணம், நிலைக்கு ஏற்ப தர்மங்களை சொல்லும்.
அத்வைத யோகிகளை பார்த்து "கடவுள் அரூபமானவர்" என்று சொல்லும் ஹிந்து தர்மம்.
அதே சமயம், அத்வைதம் புரியாத பல கோடி மக்களுக்காக 'தெய்வம் உருவம் கொண்டு உறவாடும். தைரியமாக பக்தி செய்." என்றும் சொல்லும்.
"எல்லாம் வல்லவர். ஆனால்,தெய்வத்தால் உருவம் எடுத்து வர முடியாது" என்று தெய்வத்தை தரம் தாழ்த்தி பேசாது ஹிந்து தர்மம்.

வேதத்தின் நோக்கம் என்ன?
'அனைத்து தரப்பு ஜீவனையும் மோக்ஷம் அழைத்து செல்வது தான்', வேதத்தின் நோக்கம்.
நம்மில் சிலர்
ஆன்மீக வளர்ச்சி அடைந்து இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக தேடலில் இருப்பார்கள்..
சிலர் ஆன்மீக எண்ணமே கூட இல்லாமல் இருப்பார்கள்.

பல தரப்பட்ட நிலையில் உள்ள மக்களுக்கு, பல வித உலக ஆசைகளும் உண்டு.

வேதத்தின் நோக்கமோ, இவர்கள் அனைவரையும் மோக்ஷ பாதையில் இழுக்க வேண்டும், பரமாத்மா நாராயணனை சேர வைக்க வேண்டும்.
ஆன்மீக சிந்தனையும் ஊட்ட வேண்டும்.
பிறகு
வேதத்தில் உள்ள தெய்வங்களில் ஏதாவது ஒரு வழியில் பக்தியை வளர்க்க வேண்டும்.
கடைசியில்,
மூல தெய்வம் பரவாசுதேவனே என்ற உண்மையை புரிய வைக்க வேண்டும்.
மோக்ஷத்துக்கு தயார் செய்ய வேண்டும்...
இதுவே "வேதத்துக்கு நோக்கம்".

மனிதர்கள் பலதரப்பட்ட குணத்துடன், பக்குவத்துடன் இருக்கிறார்கள்.

பூஜையில் கூட குணத்தால் மனிதர்கள் வேறுபடுகிறார்கள்.
தெய்வத்துக்கு ஏதாவது "துளசி, பூ, பழம் வைத்து பூஜை செய்"
என்று சொன்னால் சிலர் ஏற்பார்கள்.. சிலர் மறுப்பார்கள்..




நாயன்மார்கள் சிவ பக்தி செய்தார்கள்..
"வில்வ பூஜை செய்தாலே, சிவன் ப்ரீதி அடைவார், நமக்கு அணுகிரஹம் செய்வார்" என்று வாழ்ந்தார்கள்.

அதில் கண்ணப்பநாயனார் வேடுவன்.
சிவபூஜை செய்ய ஆசைப்பட்டார். ஆனால் அவர் பக்தி அவர் குணத்துக்கு ஏற்றவாறு ரஜோ குணத்துடன் இருந்தது..
சிவபெருமானுக்கு தான் வேட்டையாடிய மிருகங்களின் மாமிசத்தை பூஜைக்கு வைப்பார்.
ஒரு சமயம், இவனிடம் லீலை செய்த சிவபெருமான், கல் ரூபத்தில் இருந்தாலும், ரத்தம் வடியுமாறு லீலை செய்தார்.

சிவபெருமான் மேனியில் இருந்து ரத்தம் வடிவதை பார்த்து, தன் கண்ணையே பிடுங்கி அந்த சிவலிங்கத்தில் வைத்து விட்டார்.

பயங்கரமான பூஜை தான்...
ஆனால், மற்றவன் கண்ணை பிடுங்கி இருக்கலாமே வேடுவன்?..
அப்படி செய்யவில்லையே...
சங்கரன் என்ற பெயர் எப்படி ஏற்பட்டது...

வேடனான கண்ணப்பன் எப்படி இருந்தாலும் மாமிசம் சாப்பிடத்தான் போகிறான்.

"பகவானுக்கு கொடுத்து விட்டு பிறகு சாப்பிடுவோம்" என்று நினைவே, அனாவசிய மிருக வதையை பெரும்பாலும் குறைத்து விடும்.

இன்றைய உலகில் அளவுக்கு மீறி மிருக வதை நடப்பதற்கு சுயநலமும், தான் சாப்பிடுவதை தெய்வத்துக்கு காட்டி விட்டு சாப்பிடாததே காரணம்.

"தன் வயிரே முக்கியம்" என்ற சுயநலம் மனிதனுக்கு அதிகமானதால், விலங்குகள் நிலை அந்தோ பரிதாபம் என்று உள்ளது..

சாத்வீக தெய்வமான பரவாசுதேவனை, மாமிசம் உண்ணும் ஒருவன் வழிபடும் போது, சிறிது காலத்தில், ஜீவ ஹிம்சை செய்து இந்த வயிறை வளர்க்க வேண்டுமா? என்று மனதை மாற்றி விடுவார்.

பெருமாள் பக்தி செய்வதே நாம் அனைவருக்கும் இன்று தேவை.

தெய்வத்திடம் உண்மையான பக்தி இருந்தால், சில சமயம் இப்படிப்பட்ட பயங்கராமான பூஜைகள் தான் தெரியும் என்ற பக்தனுக்கும் தெய்வங்கள் அருள் செய்து விடுவார்கள்..
சிவபெருமான் கண்ணப்பருக்கும் காட்சி கொடுத்தார்.

ஆனால் பெரும்பாலான சிவ பக்தர்கள், விஷ்ணு பக்தர்கள், முருக பக்தர்கள் நெய், பூ, பழம் போன்ற சாத்வீக பூஜை தான் செய்கின்றனர்.

இப்படி வேதத்தில், அங்குமிங்கும் பலி இடும் யாகங்கள் சொல்லப்ட்டு இருப்பதற்கு காரணம்,
மனிதர்களில் சிலர், ரஜோ குண பூஜையை தான் விரும்புவார்கள் என்பதால் தான் வேதம் ஆங்காங்கு அப்படிப்பட்ட பூஜையை சொல்கிறது.

கண்ணப்பன், ராவணன் போன்றோர் செய்த ரஜோ குண பூஜையையும் தெய்வங்கள் ஏற்கிறது..
இதுவே முக்கிய காரணம்.

ராவணன் கூட சிவபக்தன் தான்.
அவன் குணத்துக்கு, பூ, பழம் வைத்து பூஜை செய்தால், முழு திருப்தி இருக்காதாம்..

ஒரு மிருகத்தை பலி இடலாமா?
என்று நினைத்தால், அதுவும் இவனுக்கு திருப்தியாக இருக்காதாம்.

ஒரு நரபலி கொடுத்தால் தான் இவனுக்கு திருப்தி ஏற்படுமாம்..

அதிலும் 'தானே அந்த நரபலியாக இருக்க வேண்டும்' என்று நினைப்பானாம்.

பொதுவாக ரஜோ குணம் அதிகம் உள்ளவர்கள் விஷ்ணு பக்தி செய்ய தயங்குவவதற்கு  காரணமும் இதுவே.
விஷ்ணு சாத்வீக மூர்த்தி. 
பெரும்பாலும் பலி போன்ற பூஜைகளை விட, துளசி, பூ, பழம் கொடுத்து பூஜை செய்யும் பக்தனுக்கு அணுகிரஹம் செய்து விடுவார் விஷ்ணு.

சம்ஹார மூர்த்தியான ருத்ரனோ, படைப்பு தொழிலை ஏற்ற ப்ரம்ம தேவனோ, இது போன்ற பூஜைக்கும் அணுகிரஹம் செய்து விடுவார்கள்..

நாயன்மார் தங்கள் பக்தியால் தரிசித்த சிவபெருமானை, 
ராவணன் தன் 10  தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து சிவபூஜை செய்து தரிசனம் செய்வானாம்.
அது மட்டுமா! ஒரு சமயம்,
'கைலாய மலையை சிவபெருமானோடு தூக்கி' தன் பலத்தை சிவனுக்கே காட்ட வேண்டும் நினைத்தான்.
கர்வமே இல்லாமல் இருந்தார்கள் நாயன்மார்கள்.
ராவணன் கர்வமே ரூபம் கொண்டவனாக இருந்தான்..




ஆனால், இருவருமே சிவபக்தர்கள்.
இருவருமே சிவனை தரிசித்தவர்கள். ஆனால் குணம் வேறு.

வேதத்தின் நோக்கம்,
குணம் கெட்டவனாக இருந்தாலும், நாதீகனாக இருந்தாலும், அவரவர்களுக்கும் வாய்ப்பு தந்து, அவர்கள் விருப்பப்படி தெய்வத்துடன் சம்பந்தம் செய்து கொள்ள வேத தெய்வங்கள் அனுமதிக்கிறது.

ரஜோ குணம் அதிகம் உள்ள ராவணன் போன்றவர்களும், அவர்கள் குணத்துக்கு ஏற்ப பூஜை செய்ய, ஆங்காங்கு உயிர் பலி சம்பந்தமான அதர்வண மந்திரங்கள் உள்ளது.

ஆனால்,
"பெரும்பாலான பூஜை சாத்வீகமாகவே உள்ளது" என்பதை ஹிந்துக்கள் கவனிக்க வேண்டும்.

பலி இடும் சம்பந்தமான பூஜைகள் இருப்பதற்கு காரணம் உண்டு.

ராவணனாக இருந்தால் கூட, கடவுளே இல்லை என்று நாதீகனாக இருந்தால் கூட, அவனையும் ஹிந்துவாக வைத்து கொள்ள, நம் தெய்வங்கள் வழி செய்கிறது.

கடவுள் நம்பிக்கையே இல்லாமல் இருப்பவனுக்கு, திடீரென்று ஒரு நாள் திருப்பதி கோவிலுக்குப் போன பின், வர இருந்த பெரிய ஆபத்து தானாக விலகி விடுகிறது.. அல்லது திடீரென்று லாபம் கிடைக்கிறது..

அதுவரை நாதீகனாக அலைந்தவன், 'சரி திருப்பதி மட்டும் செல்வோம்" என்று நினைக்கிறான்.

தனக்கு தேவையானதை பிரார்த்தனையாக வைக்கிறான்..
ஒரு சில பிரார்த்தனைகள் பலித்து விடுகிறது.

"நம் நம்பிக்கையில் தான் குறைவோ!" என்று யோசிக்கிறான்..

திருப்பதி பெருமாள் படத்தை வாங்கி தன் வீட்டில் வைத்து கொள்கிறான்.

மெதுவாக, இவனில் மாற்றம் நடக்கிறது...
சுயநலம் அகன்று பக்தி வளர்கிறது...

இப்படி வேதம் அனைவருக்கும் வழி காட்டி, கடைசியில், நம்மை பெருமாள் வரை கூட்டி சென்று விடும் அற்புத சக்தி கொண்டது.

ஆங்காங்கு வேதத்தில் காணப்படும் பலி யாகங்கள், 
ராவணன் போன்ற ரஜோ குண புத்தி உள்ளவர்களும் பகவானை பூஜை செய்யட்டும்
என்ற காரணமே அன்றி, வேதத்தின் பொதுவான அபிப்ராயம் நாயன்மார், ஆழ்வார்கள் செய்த சாத்வீக பூஜையே.

த்ரேதா யுகத்தில் இருந்த ராவணன் போல, தன் தலையையே அறுத்து பூஜை செய்யும் ராக்ஷஸ பூஜை செய்பவர்கள், இந்த கலியில் கிடையாது.

இன்று பொதுவாக தாமஸ, சாத்வீக குணங்கள் உடைய மக்களாகவே இருப்பதால், இது போன்ற யாகங்கள் நமக்கு தேவையுமில்லை.
ஆதலால், ஆங்காங்கு காணப்படும் இது போன்ற பலி யாகங்களை ஹிந்துக்கள் ஏற்பதில்லை.

"இதை காட்டியாவது, ஹிந்துக்களை குழப்பலாமா?.. 
நம் போலி புத்தகத்தை காட்டி ஏமாற்றலாமா?"
என்று மூடர் கூட்டம் அலைகிறது.

"ஒரு கன்னத்தில் அடித்தால், மறுகன்னத்தையும் காட்டு"
என்று பேசும் இந்த மூடர் கூட்டத்தின் வீட்டில் போய் தங்கி விட்டால், வீட்டையே எடுத்துக்கொள் என்று சொல்வார்களா?..

"போதனை ஒன்று, செயல் வேறு" என்று வாழ்ந்து,
ஊரை ஏமாற்றி,
நிலத்தை மட்டுமில்லாது, மலையையும் அபகரித்து திருடும் இந்த கூட்டம், நசுக்கப்பட வேண்டும்.

ஹிந்துக்கள், தங்கள் பெருமையை அறிய வேண்டும்.

ஹிந்து தர்மத்தில்,
ராவணனுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
நாயன்மார் போன்ற பக்தர்களுக்கும் தெய்வ பக்தி செய்ய இடம் உண்டு.
வாழ்க ஹிந்துக்கள்..
வாழ்க ஹிந்து தர்மம்.