Followers

Search Here...

Friday 12 April 2024

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்? மஹாபாரத சரித்திரம் அறிவோம்

யமன், ஏன் விதுரனாக பிறந்தார்?

वैशंपायन उवाच। வைசம்பாயனர் ஜனமேஜெயனுக்கு மஹாபாரத சரித்திரத்தை சொன்னார்..


பழமையான ஒரு காலத்தில், வேதத்தின் அர்த்தம் அறிந்த, பெரும் புகழுடைய மகிமையுள்ள ஒரு ப்ரம்ம ரிஷி, திருடாமல் இருந்த போது,  திருடி விட்டார் என்று நினைத்து, அரசன் கழு மரத்தில் ஏற்றி விட்டான்.

वैदार्थविच्च भगवान् ऋषि: विप्रो महायशाः।

शूले प्रोतः पुराणर्षि: अचोर: चोर शङ्कया।।

ஆணீமாண்டவர் என்ற அறியப்பட்ட அந்த ரிஷி, யம லோகம் சென்று, தர்ம தேவனான யமதர்மனை பார்த்து இவ்வாறு சொன்னார்.

अणीमाण्डव्य इत्येवं विख्यातः स महायशाः।

स धर्ममाहूय पुरा महर्षि: इदमुक्तवान्।।


"தர்மனே! நான் சிறுவனாக இருந்த போது, ஒரு பறவையை இரும்பினால் குத்தி இருக்கிறேன். அந்த பாபம் தான் என் நினைவில் இருக்கிறது. வேறு பாபம் செய்யவில்லை. அந்த பாபத்தை நான் இதுவரை செய்த 1000 மடங்காக அளவற்று நான் செய்த தபசு எப்படி போக்காமல் இருந்தது? உயிர் கொலை பாபம் என்றால், பிராம்மணனை கொன்ற மஹாபாபம் உனக்கும் உண்டு. அந்த பாபத்தினால் நீ சூத்திரனின் யோனியில் பிறப்பாய்" என்று சபித்தார்.

इषीकया मया बाल्याद्विद्धा ह्येका शकुन्तिका।

तत्किल्बिषं स्मरे धर्म न अन्यत् पापम् अहं स्मरे।।

तन्मे सहस्रममितं कस्मान्नेहाजयत्तपः।

गरीयान् ब्राह्मणवधः सर्वभूतवधाद्यतः।।

तस्मात्त्वं किल्बिषाद् तस्मात् छूद्र योनौ जनिष्यसि।

இந்த சாபத்தின் காரணமாக, தர்ம தேவன், வித்வானாக, தர்மம் அறிந்தவனாக சூத்திர யோனியில் விதுரனாக பிறந்தார்.

तेन शापेन धर्मोऽपि शूद्रयोनावजायत।।

विद्वान् विदुर रूपेण धार्मिकः किल्बिषात् ततः।

- aadi parva (vyasa mahabharata)

Friday 23 February 2024

திருப்பதி செல்லும் போது என்ன பிரார்த்தனை செய்து கொண்டுபயணிக்க வேண்டும்? ஜாம்பவதி சொன்ன பிரார்த்தனையை நாமும் சொல்வோம்.

திருப்பதி ஶ்ரீனிவாசனை வழிபட்டதன் பயனாக, அடுத்த ஜென்மத்தில் ஜாம்பவதியாக பிறந்து, ஶ்ரீ கிருஷ்ணரை மணந்தாள்.

அவளுடைய முன் ஜென்மத்தில், 

பகவான் விராட் ரூபத்தில் 14 லோகங்களாகவும் இருக்கிறார். அவரே திருமலையில் ஸ்ரீனிவாசனாக இருக்கிறார். அந்த ஶ்ரீனிவாசனை "எப்பொழுது தரிசிப்பேன்? எப்பொழுது தரிசிப்பேன்?" என்ற தாபத்தோடு பிரார்த்தனை செய்து கொண்டே சேஷாசலம் நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


ஜாம்பவதி முன் ஜென்மத்தில், திருமலையில் ஏறும் போது, செய்த பிரார்த்தனை.

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य वक्षः श्रीवत्स रत्नै: भूषितं विस्तृतं च ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य तुन्दं वलित्रयेणाङ्कितं सुंदरं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य कण्ठं महर्लोकस्य आश्रयं कंबु तुल्यम् ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य नाभिं सदा अन्तरिक्षस्य आश्रयं वै सुपूर्णम् ॥

कदा द्रक्ष्ये वदनं वै मुरारे: जन-लोकस्य आश्रयं सर्वदैव ॥

शिरः कदा श्रीनिवासस्य द्रक्ष्ये सत्यस्य लोकस्य आश्रयं सर्वदैव ।

कटिं कदा श्रीनिवासस्य द्रक्ष्ये भूर्लोकस्य आश्रयं सर्वदैव ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य च ऊरु तलातलस्य आश्रयं सर्वदैव ।

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जानु सुकोमलं सुतलस्य आश्रयं च ॥

कदा द्रक्ष्ये श्रीनिवासस्य जङ्घे रसातलस्य आश्रयेः सर्वदैव ।

कदा द्रक्ष्ये पादतलं हरेश्च पाताल-लोकस्य आश्रयं सर्वदैव ॥

- गरुडपुराणम् - ब्रह्मकाण्डः (मोक्षकाण्डः)


கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய வக்ஷ:? ஶ்ரீவத்ஸ  ரத்னை: பூஷிதம் விஸ்த்ருதம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய துந்தம்? வலித்ரயேன அங்கிதம் சுந்தரம் ச !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய கண்டம்? மஹர் லோகஸ்ய ஆஸ்ரயம் கம்பு துல்யம் !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய நாபிம்? ஸதா அந்தரிக்ஷஸ்ய ஆஸ்ரயம் வை சுபூர்ணம் !

கதா த்ரக்ஷே வதனம் வை முராரை:? ஜன லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

ஸிர: கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? சத்யஸ்ய லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கடிம் கதா ஶ்ரீநிவாஸஸ்ய த்ரக்ஷே? பூலோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !!

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ச ஊரு? தலாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜானு ஸு கோமளம்? சுதலஸ்ய ஆஸ்ரயம் ச !

கதா த்ரக்ஷே ஶ்ரீநிவாஸஸ்ய ஜங்கே? ரஸாதலஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

கதா த்ரக்ஷே பாத தலம் ஹரே: ச? பாதாள லோகஸ்ய ஆஸ்ரயம் ஸர்வ தைவ: !

"ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளம் கொண்ட ஶ்ரீநிவாசனின் திருமார்பை எப்பொழுது  தரிசிப்பேன்? 

மூன்று மடிப்புகள் கொண்ட ஶ்ரீநிவாசனின் திவ்யமான திரு வயிற்றை எப்பொழுது தரிசிப்பேன்?

மகர லோகத்தில் இருப்பவர்கள் வழிபடும் ஶ்ரீநிவாசனின் சங்கம் போன்ற கழுத்தை எப்பொழுது நான் தரிசிப்பேன்? 

அனைத்து அந்தரிக்ஷமும் ஆஸ்ரயிக்கும் ஶ்ரீநிவாசனின் திரு நாபியை எப்போது தரிசிப்பேன்?

ஜன லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் முராரியின் திரு முக மண்டலத்தை எப்பொழுது நான் காண்பேன்? 

ஸத்ய லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் சிரஸை எப்பொழுது தரிசிப்பேன்?

பூ லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் இடையை எப்பொழுது தரிசிப்பேன்?

தலாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் தொடையை எப்பொழுது தரிசிப்பேன்?

சுதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் கோமளமான முழங்காலை எப்பொழுது தரிசிப்பேன்?

ரஸாதலத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

இரு கால்களை எப்பொழுது தரிசிப்பேன்?

பாதாள லோகத்தில் உள்ளவர்கள் ஆஸ்ரயிக்கும் ஸ்ரீனிவாசனின் 

திரு பாதங்களை எப்பொழுது தரிசிப்பேன்?

என்று ஸ்ரீனிவாசனின் தரிசனம் கிடைக்க வேண்டுமே என்ற தவிப்போடு தீர்த்த யாத்திரை செய்தாள்.

Sunday 21 January 2024

மஹாபாரதம் (கேள்வி 2) - நான்கு யுகங்களில் உள்ள மனிதர்களை பற்றி பீமனுக்கு சொன்னது யார்? என்ன சொன்னார்?

நான்கு யுகங்களை பற்றி பீமனுக்கு யார் சொன்னார்?

பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்து கொண்டிருந்தார்கள்.

காற்றில் ஒரு சமயம் சௌகந்திக மலர் ஒன்று திரௌபதி அருகில் வந்து விழுந்தது.

அது போல மேலும் பல மலர்கள் வேண்டும் என்று பீமனிடம் கேட்டாள்.

பீமன் அந்த மலரை தேடி கொண்டு கிளம்பினான். போகும் வழியில், ஹனுமானை கண்டான்.

ஹனுமானிடம் இலங்கையை தாண்டுவதற்காக பெரிய ரூபத்தை எடுத்து கொண்ட காட்சியை தனக்கு காட்ட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தான்.


एवमुक्तः स तेजस्वी प्रहस्य हरिरब्रवीत् - Aranya kAndam (Vyasa Mahabharata)

இதை கேட்டு ஹனுமான் புன்முறுவல் செய்தார்.


न तच्छक्यं त्वया द्रष्टुं रूपं नान्येन केनचित्।
कालावस्था तदा ह्यन्या वर्तते सा न सांप्रतम्।
ततोऽद्य दुष्करं द्रष्टुं मम रूपं नरोत्तम ।।

अन्यः कृतयुगे कालश्रेतायां द्वापरे परः।
अयं प्रध्वंसनः कालो नाद्य तद्रूपमस्ति मे ।।

பீமனை பார்த்து, "அந்த உருவம் உன்னாலும் மற்றவர்களாலும் இப்போது பார்க்க இயலாது. க்ருத யுக காலம் வேறு. த்ரேதா யுக காலம் வேறு. துவாபர யுக காலம் வேறு.

அடுத்த அடுத்த காலங்களில் சக்திகள் குறைகிறது.

அந்த ரூபத்தில் நானும் இப்போது இல்லை.


भूमिर्नद्यो नगाः शैलाः सिद्धा देवा महर्षयः।
कालं समनुवर्तन्ते यथा भावा युगेयुगे ।। 

कालंकालं समासाद्य नराणां नरपुङ्गव।
बलवर्ष्मप्रभावा हि प्रहीयन्त्युद्भवन्ति च ।।

तदलं बत तद्रूपं द्रष्टुं कुरुकुलोद्वह।
युगं समनुवर्तामि कालो हि दुरतिक्रमः ।।

யுகங்கள் அதனதன் சக்திக்கு ஏற்று நடப்பது போல, இந்த பூமியும், நதிகளும், மரங்களும், மலைகளும், சித்தர்களும், தேவர்களும், ரிஷிகளும் காலத்தை ஏற்று அனுசரித்து நடக்கிறார்கள்.

மனிதர்களுடைய தேக பலமும் யுகம் செல்ல செல்ல குறைகிறது. முந்திய யுகங்களில் தேக பலம் அதிகமாக இருக்கிறது.

காலத்தை அனுசரித்து நான் இருப்பதால், நீயும் அந்த ரூபத்தை பார்க்க ஆசைப்பட வேண்டாம். காலத்தை மீறி நாம் இருக்க கூடாதல்லவா?"

என்றார் ஹனுமான்.


युगसङ्ख्यां समाचक्ष्व आचारं च युगेयुगे।
धर्मकामार्थभावांश्च कर्मवीर्ये भवाभवौ ।।

"யுகங்களின் கால அளவை அந்த யுகங்களில் இருந்த ஆசாரங்களை, அறம் பொருள் இன்பம் போன்றவைகளின் உண்மையான அர்த்தத்தை, பாவம் புண்ணியம் பற்றியும், ஆற்றலையும், பிறப்பையும், இறப்பையும் பற்றி எனக்கு நீங்கள் சொல்ல வேண்டும்"

என்று கேட்டான் பீமன். 


कृतं नाम युगं श्रेष्ठं यत्रधर्मः सनातनः।
कृतमेव न कर्तव्यं तस्मिन्काले युगोत्तमे ।। 

न तत्र धर्माः सीदन्ति क्षीयन्ते न च वै प्रजाः।
ततः कृतयुगं नाम कालेन गुणतां गतम् ।।

ஹனுமான், பீமனை பார்த்து,

"க்ருத யுகத்தில் தர்மம் (அறம்) நிலையாக இருந்தது. அந்த யுகத்தில் நல்ல தர்மங்களே (அறமே) செய்யப்பட்டது. அதர்மமாக (அறமில்லாமல்) காரியங்கள் செய்யப்படவில்லை. அந்த யுகத்தில் தர்மம் (அறம்) வாடவே இல்லை. மக்களும் குறையாமல் இருந்தனர். இதனாலேயே இந்த யுகம் க்ருத யுகம் என்று அழைக்கப்பட்டது.


देव दानव गन्धर्व यक्ष राक्षस पन्नगाः।
नासन्कृतयुगे तात तदा न क्रयविक्रयः ।।
न सामऋग्यजुर्वर्णाः क्रिया नासीच्च मानवी।
अभिध्याय फलं तत्र धर्मः संन्यास एव च ।।
न तस्मिन्युगसंसर्गे व्याधयो नेन्द्रियक्षयः।
नासूया नापि रुदितं न दर्पो नापि वैकृतम् ।। 

க்ருத யுக சமயத்தில், தேவர்களும், அசுரர்களும், கந்தர்வர்களும், யக்ஷர்களும், ராக்ஷஸர்களும், பன்னகர்களும் இந்த பூமியில் இருக்கவில்லை. 

அந்த யுகத்தில், வாங்குவது-விற்பது என்ற காரியங்கள் இல்லை.

ருக், யஜு ஸாம என்று தனித்து இல்லாத காலம் அது.. மனிதர்களுக்கு உழைக்க அவசியமும் இல்லை. 

அந்த யுகத்தில் நினைத்த மாத்திரத்தில் அனைத்தும் கிடைத்தது. 

அனைவருக்கும் ஸந்யாஸமே (மோக்ஷ எண்ணமே) இருந்தது.

அந்த யுகத்தில் நோய் யாருக்குமே இல்லை.

அந்த யுகத்தில் புலன்கள் தன் சக்தியை இழப்பதே இல்லை.

அந்த யுகத்தில் யாருமே மற்றவரின் நல்ல குணத்தை பார்த்து அஸூயை படாமல் இருந்தனர்.

அந்த யுகத்தில் யாரும் அழுவதில்லை. யாருக்கும் தன்னை பற்றி அகங்காரம் இல்லை. யாரும் கபடம் செய்வதில்லை. 


न विग्रहः कुतस्तन्द्री न द्वेषो न च पैशुनम्।
न भयं नापि संतापो न चेर्ष्या न च मत्सरः ।।

யாரும் சண்டை இடுவதும் இல்லை.

அந்த யுகத்தில் யாருக்கும் சோம்பல் கிடையாது. யாரிடமும் விரோதமும் கிடையாது. யாருமே மற்றவரை கோள் சொல்வதும் கிடையாது. 

எதை நினைத்தும் பயமும் கிடையாது. 

கிடைக்கவில்லையே என்ற தாபமும் யாருக்கும் கிடையாது. பொறாமையும் கிடையாது. 

யாருக்கும் மற்றவரை கண்டு எரிச்சலும் இல்லை. 


ततः परमकं ब्रह्म सा गतिर्योगिनां परा।
आत्मा च सर्वभूतानां शुक्लो नारायणस्तदा ।। 

அப்படிப்பட்ட க்ருத யுகத்தில், 

எவர் யோகிகளுக்கு கதியாக இருக்கிறாரோ, எவர் அனைத்து உயிருக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறாரோ, எவர் பரமானந்தத்துடனேயே இருக்கிறாரோ, அந்த பரம ஸ்வரூபியான நாராயணன், க்ருத யுகத்தில் "வெண்மையாக" இருந்தார்.


ब्राह्मणआः क्षत्रिया वैश्याः शूद्राश्च कृतलक्षणाः।
कृते युगे समभवन्स्वकर्मनिरताः प्रजाः ।।

समाश्रयं समाचारं समज्ञानं च केवलम्।
तदा हि समकर्माणो वर्णा धर्मानवाप्नुवन् ।।

க்ருத யுகத்தில் இருந்த க்ஷத்ரியர்கள் (army,police), பிராம்மணர்கள் (vedic scholars with 6 duties), வைசியர்கள் (employer), சூத்திரர்கள் (employee) அவர்களுடைய இயற்கையான குணத்தில் கலப்படம் இல்லாமல் இருந்தனர். தங்கள் கடமையை பற்றுடன் செய்து கொண்டிருந்தார்கள்.

அந்த க்ருத யுகத்தில் இருந்த நான்கு வர்ணத்து மக்களும், 

பிரம்மத்தை அடைவதையே நோக்கமாக கொண்டிருந்தனர்.

அந்த பிரம்மத்தை அடைவதற்காக ஒழுக்கத்தோடு எப்பொழுதுமே இருந்தார்கள்.

பிரம்மத்தை பற்றிய அறிவும் கொண்டிருந்த இவர்கள் அதற்கான காரியங்களே செய்து கொண்டிருந்தார்கள். பிரம்மத்தை அடையும் தகுதியோடு இருந்தார்கள்.


एकदेवसदायुक्ता एकमन्त्रविधिक्रियाः।
पृथग्धर्मास्त्वेकवेदा धर्ममेकमनुव्रताः ।। 

வர்ணத்தை (குணத்தை) பொறுத்து, வெவ்வேறு தர்மங்களோடு வாழ்ந்தாலும், பிரம்மத்தை மட்டுமே அனைவரும் தியானித்தார்.

அனைவரும் ஓம் என்ற ப்ரணவத்தையே ஜபம் செய்து கொண்டிருந்தார்கள்.

ஒன்றாக இருந்த வேதத்தையே ப்ரமாணமாக கொண்டு வாழ்ந்தார்கள். 

தர்மத்திலேயே அனைவரும் வாழ்ந்தார்கள்


चातुराश्रम्य युक्तेन कर्मणा कालयोगिना।
अकामफल संयोगात्प्राप्नुवन्ति परां गतिम् ।।

செய்யும் காரியத்தில் பலனை எதிர்பார்க்காமல், தன் காரியங்களை ஈடுபாட்டுடன் செய்து கொண்டே, 4 வரணத்து மக்களும் உத்தம கதியை அடைந்தார்கள்.


आत्मयोग समायुक्तो धर्मोऽयं कृतलक्षणः।
कृते युगे चतुष्पादश्चातुर्वर्ण्यस्य शाश्वतः ।।

ஆத்மாவை ப்ரம்மத்துடனேயே இணைத்து கொண்டு, 4 வரணத்து மக்களும் வாழ்ந்தார்கள். 

தவம் (மன அடக்கம்), சௌசம் (தூய்மையான நடத்தை), தயை (இரக்கம்), உண்மை (சத்யம்) என்ற நான்கு தர்மமும் இந்த மக்களால் காக்கப்பட்டது இந்த க்ருத யுகத்தில்.


कामः कामयमानेषु ब्राह्मणेषु तिरोहितः'।
एतत्कृतयुगं नाम त्रैगुण्यपरिवर्जितम् ।। 

மோக்ஷமே குறிக்கோள் என்று வாழ்ந்த இந்த மக்களால், அறம் பொருள் இன்பம் என்பதில் இன்பம் என்ற காமம் நசிந்து கிடந்தது.

ஸத்வ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்ற மூன்று குணமும் இல்லாத யுகமாக க்ருத யுகம் இருந்தது.


त्रेतामपि निबोध त्वं यस्मन्सत्रं प्रवर्तते।
पादेन ह्रसते धर्मो रक्ततां याति चाच्युतः ।।

த்ரேதா யுகத்தை பற்றியும் சொல்கிறேன் கேள்…

த்ரேதா யுகத்தில், யாகங்கள் நிரம்ப செய்யப்பட்டது.

த்ரேதா யுகத்தில் தர்மத்தின் ஒரு கால் குறைந்தது.

இந்த த்ரேதா யுகத்தில் அச்சுதனான நாராயணன் "சிவப்பு" நிறத்தில் இருந்தார்.


सत्यप्रवृत्ताश्च नराः क्रिया धर्मपरायणाः।
ततो यज्ञाः प्रवर्तन्ते धर्माश्चविविधाः क्रियाः ।।

த்ரேதா யுகத்தில் அனைவரும் சத்தியத்தில் திட சித்தத்தோடு இருந்தார்கள்.

தர்ம காரியங்களில் ஈடுபட்டார்கள்.

பல வித யாகங்கள், பல வித தர்மங்கள், பல வித கிரியைகள் செய்தனர்.


त्रेतायां भावसंकल्पाः क्रियादानफलोपगाः।
प्रचलन्ति न वै धर्मात्तपोदानपरायणाः।

स्वधर्मस्थाः क्रियावन्तो नरास्त्रेतायुगेऽभवन् ।।

த்ரேதா யுகத்தில், கிரியை செய்தால் தான் பலன் கிடைக்கும்.

அதன் காரணத்தால், பல வித கொடைகள் செய்தார்கள்.

த்ரேதா யுகத்தில், தவம், தானம் இரண்டையும் கடைப்பிடித்தார்கள். இதனாலேயே எவரும் தர்மத்தில் இருந்து விலகாமல் இருந்தனர்.

த்ரேதா யுகத்தில் இருந்த மனிதர்கள் தங்கள் தர்மத்தில் இருந்து கொண்டு, தங்கள் காரியங்களை செய்து கொண்டு இருந்தார்கள்.


द्वापरे च युगे धर्मो द्विभागो नः प्रवर्तते।
विष्णुर्वै पीततां याति चतुर्धा वेद एव च ।।

த்வாபர யுகத்தில் தர்மத்தின் கால்களில் இரண்டு குறைந்தது.

த்வாபர யுகத்தில் விஷ்ணுவானவர் "பொன்" நிறத்தில் இருக்கிறார்.

த்வாபர யுகத்தில் வேதம் நான்காக பிரிந்தது.


ततोऽन्ये च चतुर्वेदास्त्रिवेदाश्च तथा परे।
द्विवेदाश्चैकवेदाश्चाप्यनृचश्च तथा परे ।। 

த்வாபர யுகத்தில் சிலர் சதுர் வேதிகளாகவும், சிலர் த்ரிவேதிகளாகவும், சிலர் ஒரு வேதம் அறிந்தவர்களாகவும், சிலர் வேதமே அறியாதவர்களாகவும் ஆனார்கள்.


एवं शास्त्रेषु भिननेषु बहुधा नीयते क्रिया।
तपोदानप्रवृत्ता च राजसी भवति प्रजा ।।

வேத சாஸ்திரமும் பிரிந்ததால் கிரியைகளும் பிரிந்தன. த்வாபர யுகத்தில் உள்ள மக்கள் ரஜோ குணத்தால் தவத்திலும் தானத்திலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டனர். 


एकवेदस्य चाज्ञानाद्वेदास्ते बहवः कृताः।
सत्यस्य चेह विभ्रंशात्सत्ये कश्चिदवस्थितः ।।
सत्यात्प्रच्यवमानानां व्याघयो बहवोऽभवन्।
कामाश्चोपद्रवाश्चैव तदा वै दैवकारिताः ।। 

ஒன்றாய் இருந்த வேதத்தை முழுவதும் அறிய முடியாததால் வேதம் பிரிக்கப்பட்டது.

த்வாபர யுகத்தில் மனிதனின் புத்தி சக்தி குறைந்ததால், சத்தியத்தில் யாரும் நிலையாக இருப்பதில்லை.

சத்தியத்தில் இருந்து நழுவியதால், பல வித நோய்களும், ஆசைகளும், தெய்வ தண்டனையால் கஷ்டங்களும், உண்டாகின்றன.


यैरर्द्यभानाः सुभृशं तपस्तप्यन्ति मानवाः।
कामकामाः स्वर्गकामा यज्ञांस्तन्वन्ति चापरे ।

एवं द्वापरमासाद्य प्रजाः क्षीयन्त्यधर्मतः।

சிலர், இந்த கஷ்டத்தை போக்கி கொள்ள தவம் செய்கின்றனர்.

சிலர், உலக விஷயங்கள் கிடைப்பதற்காக யாகங்கள் செய்கிறார்கள்.

சிலர் ஸ்வர்கத்தை விரும்பி யாகங்கள் செய்கிறார்கள்.

மனிதர்கள் துவாபர யுகத்தை அடைந்து அதர்மத்தால் இவ்வாறு குறைவடைகிறார்கள்.


पादेनैकेन कौन्तेय धर्मः कलियुगे स्थितः ।
तामसं युगमासाद्य कृष्णो भवति केशवः।
वेदाचाराः प्रशाम्यन्ति धर्मयज्ञक्रियास्तथा ।।
கலி யுகத்தில் தர்மம் ஒரே ஒரு காலில் நிற்கும்.
கலி யுகத்தில் தமோ குணமே மேலோங்கி இருக்கும். 
இந்த யுகத்தை அனுசரித்து கேசவன் கருமை நிறத்தில் இருக்கிறார்.
வேதங்கள் (அறிவு), ஆசாரங்கள் (ஒழுக்கம்) மட்டுமின்றி, தர்மமும் (அறமும்) யாகங்களும் (service) மற்ற கிரியைகளும் (work) குறைந்து காணாமல் போகும்.

ईतयो व्याधयस्तन्द्री दोषाः क्रोधादयस्तथा।
उपद्रवाः प्रवर्तन्ते आधयो व्याधयस्तथा ।
युगेष्वावर्तमानेषु धर्मो व्यावर्तते पुनः।
கலி யுகத்தில், பல வித உபாதைகள், வியாதிகள், கோபமும், சோம்பறித்தனமும் உண்டாகும்.
பெரும் தொந்தரவுகளும், மனோ வியாதியும் உண்டாகும்.
பெரும் பயம் உண்டாகும். கலி யுகம் செல்ல செல்ல, தர்மங்கள் (அறம்) குறைந்து விடும். 

धर्मे व्यावर्तमाने तु लोको व्यावर्तते पुनः ।
लोके क्षीणे क्षयं यानति भावा लोकप्रवर्तकाः।
युगक्षयकृता धर्माः प्रार्थनानि विकुर्वते ।। 
மனிதர்களிடம் தர்மம் (அறம்) குறைய குறைய, உலகம் க்ஷீணமாகும். 
உலகம் க்ஷீணமாக, உலகில் நடைபெற்ற தர்மங்கள், ஞானம் (அறிவு) குறைந்து போகும்.
கலியின் இறுதியில் செய்யப்படும் தர்மங்கள், விரும்பிய பலனை தராமல் எதிர்வினையாக பலன் தந்து விடும்.

एतत्कलियुगं नाम अचिराद्यत्प्रवर्तते।
युगानुवर्तनं त्वेतत्कुर्वन्ति चिरजीविनः ।।
கலி யுகம் என்பது வெகு சீக்கிரத்தில் வர போகிறது.
சிரஞ்சீவிகள் யுகத்தை அனுசரித்து இருக்கிறார்கள். 

यच्च ते मत्परिज्ञाने कौतूहलमरिंदम।
अनर्थकेषु को भावः पुरुषस्य विजानतः ।।
एतत्ते सर्वमाख्यातं यन्मां त्वं परिपृच्छसि।
युगसङ्ख्यां महाबाहो स्वस्ति प्राप्नुहि गम्यताम् ।।
பகைவர்களை அடக்குபவனே! என்னை (விஸ்வரூபத்தை) பற்றி நீ அறிய ஆவல் படுகிறாய். மனிதனுக்கு ப்ரயோஜனமில்லாத விஷயத்தில் என்ன பிடிவாதம்? 
யுகங்களின் வரலாற்றை பற்றி நீ கேட்டதால், நான் சொன்னேன். க்ஷேமமாக இரு. நீ போகலாம்" என்கிறார் ஹனுமான். 

மஹாபாரதம் (கேள்வி 1) - சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இருந்தானா?

பாண்டவர்கள் வன வாசம் சென்றார்கள். 

ஒரு சமயம், திரௌபதி திவ்யமான நறுமணம் கொண்ட 1000 இதழ்கள் கொண்ட தாமரை மலரை கண்டாள். 

சௌகந்திக மலரை பறிக்க சென்றான் பீமன். 

அந்த சமயம் சகோதரர்களோடு அர்ஜுனன் இருந்தானா? 


பீமன் வரவில்லையே என்று தர்மபுத்திரர் திரௌபதி, நகுலன், சகாதேவனோடு, அங்கிருந்த ப்ராம்மணரைகளையும் கடோதகஜன் உதவியோடு அழைத்து கொண்டு, கந்தமாதன் என்ற மலையை அடைந்தார்கள்.

குபேரன் "பீமன் சௌகந்திக மலர்களை வேண்டுமளவுக்கு எடுத்து கொள்ளட்டும்" என்று அனுமதி கொடுத்த பிறகு, பீமன் மலர்களை பறித்து கொண்டான்.


ऊषुर्नातिचिरं कालं रममाणाः कुरूद्वहाः |

प्रतीक्षमाणआ बीभत्सुं गन्धमादनसानुषु || 

- ஆரண்ய காண்டம் (மஹாபாரதம்)

கந்தமாதன் என்ற அந்த மலை அடிவாரத்திலேயே சில காலம் பீபத்ஸு என்ற பெயர் கொண்ட அர்ஜுனனை எதிர்பார்த்து வசித்து வந்தார்கள்.


பதில்: சௌகந்திக மலரை பீமன் பறிக்க சென்ற போது, பாண்டவர்களோடு அர்ஜுனன் இல்லை

Saturday 20 January 2024

ஆபத்துக்கள் நீங்க.. இமம் மே வருண ஸ்ருதி என்ற மந்திரத்தின் அர்த்தம் தெரிந்து கொள்வோம்..

பெரிய ஆபத்துக்கள் நீங்க… சொல்ல வேண்டிய மந்திரம். எந்த அனுபவத்தில் சொல்ல வேண்டும்?

வேத மந்திரம்: 

இமம் மே வருண ஸ்ருதி....


ஶ்ரீ ஶ்ரீ அண்ணா (ஶ்ரீ கிருஷ்ணப்ரேமி ஸ்வாமிகள்) இந்த ஒரு வரிக்கு மட்டும் கொடுக்கும் ஆச்சர்யமான விளக்கம்…  (visit srisrianna.com to download discourses)

इमम् मे वरुण श्रुधि

Rigveda: Mandala 1 - Suktam 25 Mantra 19  

YajurVeda: Chapter 21 Mantra 1

இமம் மே வருண ஸ்ருதி.... என்ற வேத மந்திரம், பொதுவாக வருணனை குறித்து சொல்லப்படுகிறது. 

ஆனால், 

இதே மந்திரம், சந்தியா வந்தனத்தில், சூரியனை பார்த்து சொல்லும்படியாகவும் இருக்கிறது என்று பார்க்கிறோம்

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்பது இந்த மந்திரத்துக்கு அர்த்தம்.


சூரியனை பார்த்து, "ஹே வருணா" என்று சந்தியாவனத்தில் அழைக்கிறோம்.

சூரியனும், வருணனும் வேறு வேறு தேவன் அல்லவா? இந்த சந்தேகம் பொதுவாக உண்டாவது சகஜம்.

பொதுவாக, எந்த வேத மந்திரத்தை எடுத்தாலும், அதில் 3 தெய்வங்கள் அடக்கம்...  ராம மந்திரம், திருவஷ்டாக்ஷர மந்திரத்துக்கும் இது பொருந்தும்.


1. "ராம நாமமே (சப்தமே) பகவான் தான்" என்று தியானிப்பது ஒரு முறை 

(ஹனுமான் ராம நாமத்தை ஜபம் செய்து கொண்டிருந்தார். ராம நாமத்திலிருந்தே, பகவான், ஶ்ரீ ராமபிரானாக அவதாரம் செய்தார்.

2. ராம ஜபம் செய்யும் போது, ராமபிரானை தியானிப்பது ஒரு முறை

3. ராம ஜபம் செய்யும் போது, பரமாத்மா நாராயணனை தியானிப்பது ஒரு முறை.

இவ்வாறு, ராம நாமம் என்ற தாரக மந்திரத்தை, மூன்று விதத்தில் ஜபிக்கலாம்.


இங்கு "வருணா" என்று சொல்லும் போது, 

1. வருணன் என்ற வேத மந்திரமே (ஒலியே) பரமாத்மா தான் என்று ஜபிப்பது ஒரு நிலை.

2. வருணன் என்று சொல்லும் போது, வருண தேவனை தனியாக தியானித்து ஜபிப்பது ஒரு நிலை.

3. வருணன்  என்று சொல்லும் போது, அந்த வருண தேவனும் விராட் ஸ்வரூபமாக இருக்கும் நாராயணனுக்குள் அடக்கம் என்று உணர்ந்து, நாராயணனை ஜபிப்பது ஒரு நிலை.

உண்மையான மெய் ஞானிகள் 3ம் நிலையில் இருந்து கொண்டு த்யானம் செய்கிறார்கள்.


பரவாசுதேவன் நாராயணனின் அறிவு "வேதம்" என்று சொல்லப்படுகிறது.

ப்ரம்ம தேவன் படைக்கப்பட்ட போது, வேதத்தை கொடுத்தார்.

வேதம் சொன்னபடி உலகங்கள் படைக்கப்பட்டன. சப்த ரிஷிகள் படைக்கப்பட்டனர். அவர்கள் மூலம் தேவர்கள், அசுரர்கள், பக்ஷிகள், மிருகங்கள், மனிதர்கள் படைக்கப்பட்டனர்.


இந்திரன் படைக்கப்படும் முன்பேயே வேதம் இருந்தது. வேதம் "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்கிறது 

தேவர்களை படைத்த ப்ரம்ம தேவன், "இந்திராய ஸ்வாஹா" என்று சொல்லும் போது, தன்னை படைத்த நாராயணனின் புஜமே இந்திரன் என்று த்யானம் செய்கிறார். 

தான் படைத்த தேவேந்திரனை ப்ரம்மா தியானிப்பது இல்லை. 

அந்த தேவேந்திரன் நாராயணனின் புஜமாக இருக்கிறான் என்றே த்யானம் செய்கிறார்.


ஞானிகள் வேதத்தில் சொல்லப்படும் தெய்வத்தின் பெயர்களை, விராட் ரூபமாக உள்ள நாராயணனின் அங்கங்களாகவே தியானிக்கிறார்கள்.


இங்கு "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, இந்த வேத மந்திரமே பரமாத்மா தான் என்று நினைப்பது ஒரு முறை.

"ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, வருண தேவனை நினைத்து ஜபம் செய்வது ஒரு முறை. வருண தேவன் மூலம் நமக்கு புஷ்டியும், மழையும் (தண்ணீர்) கிடைக்கும்.


அதே சமயம் "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி), என்று சொல்லும் போது, 

ஞானிகள், வருணன் என்ற பெயரில் கருணையை வர்ஷிக்கும் நாராயணனின் கண்களை த்யானிக்கிறார்கள்.


பகவான் எங்கேயோ வைகுண்டத்தில் இருக்கிறார். நாம் கூப்பிடுவது அவர் காதில் கேட்குமா?

கஜேந்திரன் என்ற யானை, "ஹே ஆதி மூலமே" என்று அழைத்தது. பகவான் நாராயணனுக்கு கேட்டதே! 

உடனே அபயம் கொடுத்து காப்பாற்றினாரே ! 

அது மட்டுமா!

பகவான், மனித வடிவம் எடுத்து ஶ்ரீ கிருஷ்ணனாக துவாரகையில் இருக்கிறார்

மனித உருவில் தான் இருக்கிறார் 

பல மைல் தூரத்தில் உள்ள ஹஸ்தினாபுர அரச சபையில், யாருமே காப்பாற்ற முடியாத நிலையில் இருக்கும் திரௌபதி, தன் மானத்தை இழக்கும் பேராபத்தில் இருந்த போது, மனித உருவத்தில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணன் தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று திடமாக நம்பினாள்.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், துவாரகையிலிருந்து எப்படி உடனே வருவார்? என்று சந்தேகப்படவில்லை.

உடனே "ஹே கோவிந்தா" என்று அழைத்தாள்.

பல மைல் தூரம் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணருக்கு இவள் அழைப்பது கேட்டது.

மனித உருவில் இருக்கும் ஶ்ரீ கிருஷ்ணர், தேரை கிளப்பி கொண்டு அஸ்தினாபுரம் வரை சென்று திரௌபதியை காப்பாற்றலாம். ஆனால் அதற்கு இப்பொது அவகாசமில்லை.

அப்பொழுது துவாரகையில் ருக்மணியோடு சொக்கட்டான் ஆடி கொண்டிருந்தார். 

திரௌபதி காப்பாற்ற படவேண்டும் என்று சங்கல்பித்து "அக்ஷயம்" என்று சொக்கட்டானை உலுக்கி போட, துச்சாதனன் திரௌபதியின் புடவை பிடித்து இழுக்க, மலை மலையாக பல பல வண்ண வண்ண புடவைகள் திரௌபதி அணிந்திருந்த புடவை வழியே வெளி வர தொடங்கியது.

எதிரியான துச்சாதனன் களைத்து விட்டான்..  இன்னும் புடவைகள் திரௌபதியை காக்க காத்து இருந்தது.

திரௌபதியின் ஆபத்து விலகியது.


உள்ளும் புறமும் உண்மையாக பகவானை நினைத்து, தன்னை நிச்சயம் காப்பாற்றுவார் என்று நினைத்த கஜேந்திரன், திரௌபதி இருவரும், பகவானின் பெயரை, சந்தேகமில்லாமல், திடமான எண்ணத்தோடு சொல்லி  பயனை அடைந்தார்கள்.

அது போல, 

ஸாயங்கால சந்தியா வந்தனம் செய்யும் போது, கஜேந்திரன், திரௌபதி கொண்டிருந்த விசுவாசத்தை போல, "ஹே வருணா! என்று நான் கூப்பிடுவதை கேளுங்கள்" (இமம் மே வருண ஸ்ருதி) என்று அழைத்தால், நமக்கு நேர இருக்கும் பெரும் ஆபத்திலிருந்து பகவான் நம்மை நிச்சயம் காப்பாற்றுவார். 


இப்படி ஒரு அர்த்தம் கொண்ட சாயங்கால சந்தியா வந்தனத்தை தெரிந்து கொண்ட பிறகும், ஒருவன் செய்யாமல் இருக்க முடியுமா?