Followers

Search Here...

Showing posts with label ரிஷி. Show all posts
Showing posts with label ரிஷி. Show all posts

Thursday 5 May 2022

How to drink water? Everyone must know.. தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை அறிவோம்..

தண்ணீர் எப்படி குடிக்க வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்லும் சூத்திரத்தை அறிவோம்..

तिष्ठन्न् आचामेत् प्रह्वो वा |

आसीनः त्रि: आचामेद् धृदयड़गमाभिः अद्भिः ||

- ஆபஸ்தம்ப சூத்ரம்

tiṣṭhann ācāmet prahvo vā |

āsīnas trir ācāmed-dhṛdayaṅgamābhir adbhiḥ ||

- Apastamba sutra (formula)

ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்...

நின்று கொண்டே தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து கொண்டு, மூன்று முறை, கையில் பட்டாணி அளவுக்கு எடுத்து உட்கொண்ட பிறகு, தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். 

Apastamba rishi says...

One should not drink water while standing.

One must sit and sip water [for purification] thrice in hand and then drink remaining. 

Swayambu Manu (creator of human) elaborate little further on how people in 4 varna should drink..

ஸ்வாயம்பு மனு (மனித குலத்தின் முதல் மனிதர்), மூன்று முறை தண்ணீர் கையில் விட்டு குடிக்கும் போது, 4 வர்ணத்தில் (ஜாதியை சொல்லவில்லை) இருப்பவர்கள் எப்படி குடிக்க வேண்டும் என்று சொல்கிறார்.

பொதுவாக, தூய்மையான இடத்தில் அமர்ந்து கொண்டு, தண்ணீர் குடிக்க வேண்டும்.

கையில் விட்டு கொள்ளும் நீர், நுரைத்து இருக்க கூடாது. ஒரு பட்டாணி அளவுக்கு எடுத்து கொண்டு குடிக்க வேண்டும்.

One must sit in a pure place, and should sip water thrice from his hand, water which is free from bubbles and foam, and which he has attentively regarded, in such a quantity as would cover a Māśa bean. 

The water sipped by a Brahman (today MLA and MPs in assembly who directs other 3 on right and wrong) should be felt reaching his heart.

பிராம்மண வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சட்டசபையில் மற்ற 3 வர்ணத்தில் இருப்பவர்களுக்கு எது தர்மம்/அதர்மம் என்று வழிகாட்ட, மந்திரிகள் என்ற பெயரில் பிராம்மண வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நெஞ்சு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a Kshatriya (protection force, army, police) should be felt reaching his throat.

க்ஷத்ரிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, போலீஸ், ராணுவம் என்ற பெயரில் க்ஷத்ரிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, கழுத்து வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a Vaiśya (employer) should be felt reaching his stomach.

வைசிய வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, சுயதொழில், வியாபாரம் என்ற பெயரில் வைசிய வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, வயிறு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.


The water sipped by a sudra (employee) should be felt reaching his tongue.

சூத்திர வர்ணத்தில் இருப்பவர்கள் (இன்று, மற்றவர்களுக்கு வேலை செய்பவர்கள் (employee) என்ற பெயரில் சூத்திர வர்ணத்தில் உள்ளனர்) நீரை கையில் எடுத்து மூன்று முறை குடிக்கும் போது, நாக்கு வரை போய் சேர்ந்ததை உணரும் படியாக அருந்த வேண்டும்.

Million of years ago, veda talks about this science of drinking water.

Today,
Science is recommending everyone to drink water in sitting position rather standing position.

If every one of readers, spend time on reading all Sutra (formula) given by apastamba, manu, narada, etc many research and development and rediscovery can be made. 

Hail and be proud of Vedic Dharma @ Sanathana Dharma @ Hindu Dharma.

Thursday 17 December 2020

பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

 பெண்ணை மணம் செய்து கொடுப்பவர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார். தெரிந்து கொள்வோமே..

யானஸ்ய பாரா அபினிஹிதஸ்ய 

அதுரஸ்ய ஸ்திரியா இதி சர்வை: தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

வாகனத்திற்கு, சுமையை தூக்கி வருபவர்களுக்கு, நோயாளிக்கு, பெண்களுக்கு, மற்றும் முதியவர்கள், குழந்தைகளுக்கு, வழி விட்டு நடக்க வேண்டும். அவர்களை நடக்கும் பாதையில் தடையாக இருக்க கூடாது.


அஷிஸ்ட பதித மத்த உன்மத்தானாம் ஆத்மா 

ஸ்வஸ்தி அயன அர்த்தேன சர்வை: இவ தாதவ்ய: |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் நலனை கருத்தில் கொண்டு, முட்டாள்களுக்கும், வர்ணத்துக்கு அப்பாற்பட்டு இருப்பவனுக்கும், குடிகாரனுக்கும், பைத்தியத்துக்கும் வழி விட வேண்டும். 





சகோத்ராய துஹிதரம் ந ப்ரயச்சேத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் பெண்ணை, சகோதர உறவு கொண்ட ஒரே ரிஷி கோத்திர பையனுக்கு மணம் செய்து கொடுக்க கூடாது.


ப்ராஹ்மே விவாஹே பந்து ஷீல ஸ்ருத அரோஞானி புத்வா ப்ரஜா சஹத்வ கர்மபய பிரதிபாதயேத் சக்தி விஷயேன அலம்க்ருதே |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

தன் மகள், அவள் கணவனோடு புகுந்த வீட்டில் சேர்ந்து தன் கடமையை ஒழுங்காக செய்ய, திருமணம் ஆகும் முன்பேயே அந்த குடும்பத்தை பற்றியும், பழக்க வழக்கம் பற்றியும், விஷய ஞானத்தை பற்றியும், ஆரோக்கியத்தை பற்றியும் அறிந்து கொண்டு, பிறகு தன்னால் முடிந்த அளவுக்கு தன் பெண்ணுக்கு நகை போட்டு, மணம் செய்து கொடுக்க வேண்டும்.


ந சம்சயே ப்ரத்யக்சவத் ப்ரூயாத் |

-  ஆபஸ்தம்ப சூத்திரம்

நன்றாக புரிந்து கொள்ளாத விஷயத்தை பற்றி, தெளிவாக புரிந்தது போல பேச கூடாது.



Tuesday 15 December 2020

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது? மனிதனின் நோக்கம் என்ன? ஆபஸ்த்மப ரிஷி சொல்கிறார்.. தெரிந்து கொள்வோமே..

பானி சம்க்சுப்தேன உதகேன ஏக பானி ஆவர்ஜிதேன ச ந ஆசாமேத் |

ஆபஸ்தம்ப சூத்திரம் 

கலக்கப்பட்ட வெறும் தண்ணீரை குடிக்க கூடாது. இரு கைகளால் எடுத்து தராமல், ஒரு கையால் தரும் தண்ணீரை குடிக்க கூடாது.


ந அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

யதி  அசௌ மே சபத்ன இதி ப்ரூயாத் | 

த்விசந்தம் ப்ராத்ரவ்யம் ஜனயேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம்

யாரை பார்த்தும் "இவன் என் எதிரி" என்று சொல்ல கூடாது. அப்படி சொல்ல ஆரம்பிக்கும் போது, அவனே உண்மையாகவே எதிரி ஆகி விடுவான்.




திஸ்டான் ஆசாமேத் ப்ரஹவோ வா |

ஆஸீனஸ் த்ரிர் ஆசாமேத் ஹ்ருதய அங்கம அபிர் அத்பி: |   

ஆபஸ்தம்ப சூத்திரம் 

நின்று கொண்டோ அல்லது முன்னோக்கி வளைந்து கொண்டோ, தண்ணீர் குடிக்க கூடாது. 

அமர்ந்து குடிக்க வேண்டும், மூன்று முறை தண்ணீர் நெஞ்சில் செல்லுமாறு தலைதூக்கி குடிக்க வேண்டும்.


குரு-தல்பகாமி ச வ்ருசனம் சிஷ்னம் பரிவாஸ்ய அஞ்சலாவ் ஆதாய தக்ஷிணம் திசம் அநாவ்ருத்திம் வ்ரஜேத் |

ஜ்வாலிதாம் வா சூர்மிம் பரிஸ்வஜ்ய சமாப்னுயாத் |

சுரா ஆபோ அக்னி ஸ்பர்ச சுராம் பிபேத் |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

யார் ஒருவன் தன் குருவின் மனைவியிடம் தகாது உறவு கொள்கிறானோ, அவன் செய்த பாவத்துக்கு, தன்னுடைய ஆண் உறுப்பை தானே முழுவதுமாக வெட்டி இரு கையில் எடுத்துக்கொண்டு, தெற்கு திசை நோக்கி, மரணம் வரும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும்..

அல்லது, பெண் உருவத்தை வடித்த இரும்பு சிலையை பழுக்க காய்ச்சி அதை கட்டி பிடித்து கொண்டே உயிர் விட வேண்டும்.

அல்லது, மயக்கம் தரும் மதுவை சுட சுட காய்ச்சி, அளவுக்கு மீறி கொதிக்க கொதிக்க வாயில் விட்டு குடித்து, உயிர் விட வேண்டும்.


புருஷன் ச உபயோர் தேவதானாம் ராஜனஸ் ச |

- ஆபஸ்தம்ப சூத்திரம் 

தெய்வத்தையோ, அரசனையோ கீழ்த்தரமாக பேச கூடாது.


அனஸூயுர் துஷ்ப்ரளம்ப ஸ்யாத் குஹக சத நாஸ்திக பாலவாதேசு |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நயவஞ்சகர்கள், முரட்டுத்தனமானவர்கள், நாத்தீகர்கள் மற்றும் முட்டாள்களின் பேச்சுக்களால் ஒருவர் எரிச்சல் அடைய கூடாது. ஏமாறவும் கூடாது..




சர்வஜனபதேஸ்வ் ஏகாந்த சமாஹிதம் ஆர்யானாம் வ்ருத்தானாம் சம்யக் விநீதானாம் வ்ருத்தானாம் ஆத்மாவதாம் அலொலுபானாம் அதாம்பிகாணாம் வ்ருத்த ஸாத்ருஷ்யம் பாஜேத |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

நம்முடைய செயல்களை, நம் நடத்தையின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும்.

பண்பு உள்ளவர்கள் நன்னடத்தை கொண்டவர்கள். 

அவர்களை பார்த்து, நம்முடைய செயல்களை கட்டுப்படுத்தி, நடத்தையை சரி செய்து கொள்ள வேண்டும்.

யார் பண்பு உள்ளவன் (ஆரியன்)?

நன்கு படித்த, முதிர்ச்சி உடைய, சுய கட்டுப்பாடு கொண்ட, பேராசையிலிருந்து விடுபட்ட, மற்றவர்களுக்காக பாசாங்கு செய்யாதவர்களே 'ஆரியன்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

அத்யாத்மிகான் யோகான் அனுதிஷ்தேன் ந்யாய சம்ஹிதான் அனைஸ்சாரிகான் |

ஆத்ம லாபான் ந பரம் வித்யதே |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஒவ்வொரு மனிதனின் நோக்கமும் 'ஆத்மா'வை (தன்னை) அறிந்து கொள்வதே.

ஆத்மாவை (உன்னை), நீ அறிந்து கொள்வதை விட பெரிய கல்வி கிடையாது.

அத பூத தாஹீயான் தோஷான் உதாஹரிஸ்யாம: |

க்ரோதோ ஹர்ஷோ ரோஷா லோபோ மோஹோ தம்போ த்ரோஹோ ம்ருசோத்யம் அத்யாசா, பரீவாத அவசூயா காம மன்யு அநாத்ம்யம் அயோகஸ் தேஷாம் யோக மூலோ நிர்காத: |

ஆபஸ்த்மப ரிஷி (சூத்ரம்)

ஆத்மாவை (நம்மை ) தெரிந்து கொள்ள விடாமல் தடுப்பது எது?

கோபம், மகிழ்ச்சி, ரோஷம், பேராசை, ஒட்டுதல், தற்பெருமை, துரோகம், பாசாங்கு, பொய், பெருந்தீனி, பொறாமை, சுயநல ஆசை, ரகசியமான வெறுப்பு, புலன்களை அடக்கி வைப்பதில் அலட்சியம், மனதை அடக்குவதில் அலட்சியம் ஆகியவை, ஆத்மாவை (தன்னையே) அறியவிடாமல் தடுக்கிறது. 

இந்த ஆத்மா ஆனந்த ஸ்வரூபமானது. 

தான் ஆனந்தமயமானவன் என்பதை உணர விடாமல் இவை தடுக்கிறது.

இந்த தடையை போக்க வழி சொல்வதே 'யோகம்'.

Monday 14 December 2020

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்? ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

மிச்சமாகிய எச்சில் உணவை என்ன செய்ய வேண்டும்?  ஆபஸ்தம்ப ரிஷி சொல்கிறார்... தெரிந்து கொள்வோமே..

அசக்தொள பூமௌ நிகனேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

மிச்சமாகிய எச்சில் உணவை மண்ணில் புதைக்க வேண்டும்.


அப்சு வா பிரவேசயேத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, மிச்சமாகிய எச்சில் உணவை நீரில் விட்டு விடலாம்.


ஆர்யாய வா பர்யவதத்யாத் |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

பண்பு உள்ள (ஆர்யா) வேதம் இன்னும் கற்று கொள்ளாத (8 வயது குறைந்த) குழந்தைக்கு உச்சிஷ்டமாக கொடுக்கலாம். அந்த குழந்தை, அந்த இலையில் தனக்கு இஷ்டப்பட்ட பழமோ, இனிப்போ எது வேண்டுமானாலும் எடுத்து சாப்பிடலாம்.


அந்தர்தினே வா சூத்ராய |

  - ஆபஸ்த்மப சூத்திரம்

அல்லது, 'தன் வீட்டுக்கு வேலை செய்யும் வேலையாட்களுக்கு' (employee) கொடுக்கலாம்.

நாரதர் பிரம்மாவுக்கு புத்திரனாக தோன்றிய காரணம், அவர் பூர்வ ஜென்மத்தில் சாப்பிட்ட இந்த உச்சிஷ்டம் தான். 

குருவுக்கு முன் அவரை குருவாக ஏற்ற அனைவருமே வேலையாட்கள் தான். குரு சாப்பிட்ட உச்சிஷ்டம் பவித்ரமானது என்று சொல்லப்படுகிறது. அவரது ஞானம் நமக்கு சேரும். அவர் வைகுண்டம் சென்றால், நமக்கும் வைகுண்டம் தானே கிடைக்கும்..

கணவனுக்கு மனைவி வேலை செய்கிறாள். ஆதலால், அவளும் கணவன் இலையில் சாப்பிடுகிறாள். அவன் புண்ணியத்தை தானும் எடுத்து கொள்கிறாள்.


இது எதுவுமே முடியாது என்ற பட்சத்தில், மிச்சம் வைக்காமல் சாப்பிடுவது நல்லது.. 

மிச்சப்பட்ட உணவை ரிஷி சொன்னது போல செய்து, மாடும் இல்லாத பட்சத்தில், இலையை நீரில் கழுவி விட்டு, இலையை குப்பை தொட்டியில் போட்டு விடலாம்..

Monday 7 December 2020

ஆபஸ்தம்ப ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே.. "ஆபஸ்தம்ப" என்றால் என்ன அர்த்தம்? நம் ரிஷிகளின் பெருமையை...

ஒரு சமயம், 
வேதம் கற்ற ப்ராஹ்மணர் ஒருவர் தன் கிரஹத்தில் ஸ்ராத்தம் (திவசம்) செய்தார். 
  
பித்ருக்களுக்கு கொடுக்கும் உணவை ஏற்று, போஜனம் செய்விக்க ஒரு பிராஹ்மணருக்காகக் காத்திருந்தார்.

வெகு நேரம் கழித்து ஒரு பிராஹ்மணர் வந்தார். 
அவர் நல்ல பசியுடன் இருந்தார். 
அவரை அமர்த்தி இலை போட்டு, தானே பரிமாறினார் கர்தா. 

வந்த பிராஹ்மணர், சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். 




"ப்ராஹ்மணனுக்கு நல்ல பசிபோலும்" 
என்று எண்ணி இவரும் கேட்கக் கேட்கப் போட்டார். 

போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்தாவின் கண்களில் முதலில் இருந்த 'வினயம்' மறைந்து 'ஏளனம்' குடிகொண்டது. 
அதைத் தன் செயல்களிலும் காட்டினார். 

அதைப் பொருட்படுத்தாத அதிதி 'இன்னும் போடு!¸ 'இன்னும் போடு!' என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

"அபரிதமாக உண்டும் திருப்தியடையாமல் தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்" 
என்று கர்தா நினைத்தார். 

சமைத்தவை எல்லாம் காலியாகிவிட்டன! 

'இன்னும் வேண்டும்! கொண்டு வா!' 
என்று பிராஹ்மணர் கேட்கவே கர்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. 

காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து பிராஹ்மணரின் இலையின் மேல் கவிழ்த்து 'திருப்தியாயிற்றா!?' 
என்று கேட்டார். 

(போஜனம் முடிந்தபோது கர்தா பிராஹ்மணர்களை 'த்ருப்தாஸ்தா' என்று கேட்கவேண்டும். 
திருப்தியடைந்த ப்ராஹ்மணர்கள் 'த்ருப்தாஸ்ம:' என்று சொல்ல வேண்டும்.
அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்) 

ஆனால் அந்த பிராஹ்மணர் 'ந' ('எனக்கு திருப்தி இல்லை') என்று சொன்னார்! 
 
கர்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. 
'இவர் கேட்க கேட்க கொண்டு வந்து கொட்டினேனே! 
மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை! என்று சொல்லி, என்னை அவமானப்படுத்தி, 
நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த பிராஹ்மணர் கெடுத்துவிட்டாரே!!' 
என்று சினந்தார். 

கர்தா நல்ல தபஸ்வி. 

கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க, கையில் ஜலத்தை எடுத்து அபிமந்திரித்து பிராஹ்மணரின் தலையில் எறிந்தார். 

அப்பொழுது தான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. 

வந்த பிராஹ்மணர் தன் கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தினார்! 

கர்தா இதைப் பார்த்து பிரமித்து நின்றார். 

தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல¸ தன்னை விட உயர்ந்தவர் என்பதை அறிந்தார். 

'பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?' 
என்று கேட்டார்.

அதற்கு அந்த பிராஹ்மணர், 
'நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய்.
உன் பார்வைகளாலும், செயல்களாலும் என்னை அவமதித்தாய்.

'ஸ்ராத்தத்திற்கு வரும் பிராமணர்களிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான்' 
என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய்.

உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். 

'ஸ்ரார்த்தம்' என்றாலே 'சிரத்தை' (ஈடுபாடு) என்று அர்த்தம்.
உன் தகப்பனுக்கு செய்ய, எத்தனை ஈடுபாட்டுடன் நீ இருக்கிறாய், என்பதே முக்கியம்.
எத்தனைக்கு எத்தனை சிரத்தையுடன் செய்கிறாயோ, அத்தனைக்கு அத்தனை பலன் பித்ருக்களிடமிருந்து உனக்கு கிடைக்கிறது.

ஸ்ராத்தத்தை பய பக்தியுடன் கோப தாபங்களை விட்டுச் செய்!' 
என்றார். 

அதற்குக் கர்தா¸ 
'ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். க்ஷமியுங்கள். 
இனி இம்மாதிரித் தவறுகளைச் செய்யமாட்டேன். 
நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! 
அதற்கு என்ன செய்ய வேண்டும்?' 
என்று வினவினார். 

அதற்கு அந்த பிராஹ்மணர்¸
"நான் 'ந' என்று சொல்லி ஸ்ராத்தம் பூர்ணமாகாமல் இருக்கிறது. 
புருஷ சூக்தம் பாராயணம் செய்! 
இந்த தோஷம் பரிகாரம் ஆகும்!" 
என்றார். 




அதை பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார் கர்தா.

ஜலத்தை அந்தரத்தில் நிறுத்தியதால், அவரை "ஆபஸ்தம்பர்" என்று அழைத்தார்கள். 

ஸ்ராத்த காலத்தில், புருஷ சூக்தமும், காடகோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. 

"ஆப" என்றால் நீர்
நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர் ஆபஸ்தம்பரானார்
ஆபஸ்தம்பரின் சூத்ரம் பிரசித்தமானது. 

அதில் சில சூத்திரங்களை தெரிந்து கொள்ள, இங்கே படிக்கலாம்.

Monday 18 May 2020

ச்யவன ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... ச்யவனர் கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

ச்யவனர் (ச்யாவன) ரிஷி கோத்திரம்
'ப்ருகு ரிஷி'யின் பரம்பரையில் வந்த முக்கியமான சில ரிஷிகளின் பெயர்:
  1. ச்யாவன
  2. ம்ருகண்டு
  3. மார்க்கண்டேயர்
  4. ஹேம ரிஷி
  5. ஆப்னவான
  6. ஔர்வ
  7. ஜாமதக்ன்ய (ஜமதக்னி)
  8. பரசுராமர்
ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வந்தவர் ச்யவனர்.
ஆயுர்வேதத்துக்கு ரிஷி இவர்.
இவர் பெயரில் தான் இன்றுவரை "ச்யவன ப்ராசம்" என்ற லேகியம் தயாரிக்கப்படுகிறது.

"ராம நாமம் என்ற தாரக மந்திரமே அனைவருக்கும் மோக்ஷம் தரக்கூடியது" என்று சொன்ன ரிஷி இவர்.

'ச்யவனபிராஸ் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை ஏற்கும் நாம்,
'"ராம" நாமத்தை சொன்னால் ஆத்மாவுக்கு ஆரோக்கியம்' என்று இந்த ரிஷி சொல்வதை கேட்க வேண்டாமா?
சுற்று சிந்தித்து பார்க்க வேண்டும் நாம்.

கடுமையான தவம் செய்வார். ஒரு சமயம் பல வருடங்கள் தவத்தில் அமர்ந்து விட்டார். இவரை சுற்றி புற்று உருவாகி விட்டது.




அந்த சமயம், "சர்யாதி" என்ற அரசன், தன் மகள் "சுகன்யாவுடன்" காட்டுக்கு வேட்டையாட வந்தார்.

ஒரு கூடாரம் போட்டு தங்கினார்கள்.
தன் தோழிகளுடன் சுகன்யா கொஞ்சம் உலாவி கொண்டு இருந்தாள்.

அங்கு ச்யவனர் மேல் சுற்றி இருக்கும் புற்றை கண்டாள்.
அந்த புற்றில் ச்யவனரின் இரண்டு கண்களே இரண்டு ஜோதியாக (வெளிச்சம்) தெரிய... "இது என்னவாக இருக்கும்? குத்தி பார்க்கலாமா?" என்று தன் தோழிகளிடமே கேட்டுக்கொண்டு, ஒரு குச்சியை எடுத்து குத்தி விட்டாள்.
கண்கள் பறிபோய் விட்டது. குருடனாகி விட்டார் ச்யவனர்.

"வயதானவர்..  கோபக்காரர். சபித்து விடுவாரோ!!" என்று பயந்தான் அரசன். தன் மகள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டான்.

"தான் குருடனாகி விட்டதால், இனி துணை இல்லாமல் இருக்க முடியாது. ஆதலால் உன் மகளை எனக்கு துணைவியாக கொடு"
என்று சொல்லிவிட்டார் ச்யவனர்.

மறுபேச்சு இல்லாமல், சுகன்யாவை விதிப்படி மணம் செய்து கொடுத்து விட்டார் அரசர்.

மகளை பார்த்து, "எந்த நிலையிலிலும் கணவருக்கு அபச்சாரம் செய்து விடாதே.. கவனமாக இரு. உனது கற்ப்பாலும், தொண்டினாலும் அவர் சந்தோஷப்படும் படியாக இருக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு, தன் அரண்மனைக்கு திரும்பி விட்டார் அரசர்.

நேற்றுவரை ராஜகுமாரி.. இன்று ரிஷி பத்தினி.
நேற்றுவரை அரண்மனை வாசம்.. இன்று காட்டில் ஆஸ்ரம குடிசையில் வாசம்.
நேற்றுவரை அரண்மனை விருந்து உண்டவள்... இன்று காய், கிழங்கு உண்கிறாள்.
நேற்று பட்டாடை உடுத்திய சுகன்யா... இன்று மரவுரி ஆடை உடுத்திக்கொண்டாள்.

"தன் கணவனே தெய்வம்" என்று வாழ்ந்து வந்தாள் சுகன்யா.
இந்திர தேவன், தேவர்களுக்கான யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு சோமபானம் கிடையாது என்று ஒதுக்கி வைத்து இருந்தார்.
அஸ்வினி குமாரர்கள் தேவர்களுக்கு மருத்துவர்கள்.

தான் வயதானவனாக இருந்தாலும், ரிஷியாக ப்ரம்மச்சர்யத்தில் இருந்தாலும், கற்புடன் தனக்கு சேவை செய்து கொண்டு இருக்கும் சுகன்யாவுக்கு அணுகிரஹம் செய்ய விரும்பினார் ச்யவனர்.

உடனே யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கும் சேர்த்து சோமபானம் கொடுத்தார்.
தன்னை உபசரித்த ச்யவன ரிஷிக்கு, தன்னை போன்றே திவ்யமான தேவ ரூபத்தை கொடுத்து விட்டனர்.
இளமையான ச்யவன ரிஷியாக ஆகி விட்டார்.
சுகன்யா பெரிதும் ஆச்சர்யப்பட்டாள். ஆனந்தமாக இல்லறத்தில் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு சமயம், சர்யாதி தன் மகள் எப்படி காட்டில் இருக்கிறாளோ, என்று பார்க்க வந்தான்.
வந்து பார்த்த போது, இளமையான ஒருவருடன் சுகன்யா இருப்பதை பார்த்து மிகவும் கோபித்து கொண்டார்.

"அப்பா.. இவர் உங்கள் மாப்பிளை தான். தபோ பலத்தால் இளமையாகி விட்டார்" என்றாள் சுகன்யா.

அதற்கு  ச்யவனர், "ராஜனே! சுகன்யா தன் கற்பின் பலத்தால் என்னை இளமையாக்கி விட்டாள்" என்று பெருமையுடன் சொன்னார்.

அரசன் பெருமகிழ்ச்சியுடன் திரும்பினான்.

ஸ்யாவன ரிஷியின் பரம்பரையில் வருபவர்கள் நீங்கா இளமையுடன் இருப்பார்கள்.
ராம பக்தி கொண்டு இருப்பார்கள்.
ஆயுர்வேதம் படிப்பு படித்தால், பெரும் வைத்தியர்கள் ஆவார்கள்.

ப்ருகு ரிஷியின் வம்சத்தில் வருவதால், பெருமாளிடம் பக்தியும், மஹாலக்ஷ்மி அணுகிரஹமும் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.



Sunday 17 May 2020

கௌதம ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... கௌதம கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே!! நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

கௌதம ரிஷி கோத்திரம்

"உலகில் உள்ள அழகையெல்லாம் திரட்டி, ஒரு பெண்ணை ஸ்ருஷ்டி செய்து, வேதம் படித்த ப்ராம்மணனுக்கு மணம் செய்து கொடுக்க வேண்டும்"
என்று ஆசைப்பட்டார் பிரம்ம தேவன்.
அதற்காக தன் மனதால் அஹல்யாவை ஸ்ருஷ்டி செய்தார்.

நேபாளத்தில் (Nepal) மிதிலாபுரியை ஆண்டு கொண்டிருந்த ஜனக மஹாராஜனுக்கு குருவாக இருந்தார் "கௌதமர்".

தனக்கென்று மிதலாபுரியின் சமீபத்தில் ஒரு ஆஸ்ரமம் அமைத்து வசித்தார்.

1. கௌதமர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. பரத்வாஜர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.

இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.




நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.

பெண்கள் ஒதுங்கி இருக்க வேண்டிய காலங்களில் தேவ(கோவில், பூஜை), பித்ரு (திவசம்) போன்ற காரியங்களில் ஈடுபட கூடாது... தானே சமைக்க கூடாது. இதனால் மஹா பாபங்கள் ஏற்படும்.

இதனால் ஏற்படும் பாபங்களின்  நிவிர்த்திக்காக ஒரு சூத்திரம் (formula) அருளினார் கௌதம ரிஷி. 
கௌதம சூத்திரம் சொன்னபடி ரிஷி பஞ்சமி என்ற விரதத்தை பெண்கள் செய்வது கடமையும் கூட.
பிரம்ம தேவன் தன் மானஸ புத்ரியான அகலிகையை கௌதம ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார்.

இவர்களுக்கு சதானந்தர், சிரகாரீ என்ற இரண்டு புதல்வர்கள்.
இந்த சதானந்தர் தான் "ஜனக மஹாராஜனின் குடும்பத்துக்கு ராஜ புரோஹிதராக" இருந்தார்.

இந்திரன் பூமியில் அழகுக்கெல்லாம் அழகுடைய அகலிகையை, கௌதம ரிஷியின் ரூபத்தை எடுத்துக்கொண்டு ஏமாற்றி கெடுத்து விட்டான்.
கௌதம ரிஷி இதை அறிந்து, இந்திரனை சபித்து, தெரியாமல் தவறு செய்து விட்ட அகலிகையையும் "கல்லாக போ" என்று சபித்து விட்டார்.

அந்த சமயத்தில் ராமபிரான் அவதரித்து விட்டார் என்று அறிந்து இருந்ததால், "எப்பொழுது ராமர் பாத துளி உன் மீது படுமோ அப்பொழுது விமோசனம்" என்று வரமும் கொடுத்து கிளம்பி விட்டார்.

இந்திரன், தேவன் தானே!! ஏன் இப்படி செய்தார்?
1000 அஸ்வமேத யாகம் செய்தால், அதற்கு பலன் இந்திர பதவி. 
இது யாருக்கும் பொது நீதி.
மஹா புண்ணியங்கள் செய்யும் போது, யார் வேண்டுமானாலும் இந்திரன் ஆகலாம் என்கிற போது, தவறுகள் ஏற்படும்.

பரமாத்மா நாராயணன் கண்ணபிரானாக அவதரித்த போதும், மனித குழந்தை என்று நினைத்து த்ரேதா யுகத்தில் இருந்த இந்திர தேவன் விருந்தாவனத்தை அழிக்க நினைத்து பிரளய கால மழையை வரவழைத்தான்.
இந்திரனின் கர்வத்தை அடக்க, பரமாத்மாவாகிய கண்ணன், 7 வயது சிறுவனாக இருந்த போதும், தன் சுண்டு விரலால் கோவர்த்தன மலையை தூக்கி ஊர் மக்களை காப்பாற்றினார்.

மேலும், தேவர்கள் சில சமயம் இப்படி சில காரியங்களை செய்து பெருமாளின் பெருமையை காட்ட இப்படி செய்வார்கள்.

கண்ணபிரான் தன்னை விட பலசாலி என்று காட்ட இந்திரன் இப்படி செய்தார்.
அதே போல, ராமபிரானின் சரணத்தில் பதிதர்கள் (மஹாபாபம்) விழுந்தால் கூட பாவனம் (புண்ணிய ஆத்மாவாக) ஆகி விடுவார்கள் என்று காட்ட, இந்திரன் செய்த காரியம் இது.

"இந்திரன் இப்படி கெடுக்காது போனால், ராமபிரானின் பெருமை உலகுக்கு எப்படி தெரியும்?" என்று ஸ்ரீமத்வாச்சாரியார் கேட்கிறார்.



பரத்வாஜ ரிஷியை பற்றி தெரிந்து கொள்வோமே... பரத்வாஜ கோத்திர ரிஷி இவர். தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை, பக்தியை..

பரத்வாஜ ரிஷி கோத்திரம் (பரம்பரை)யில் பிறந்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
1. பரத்வாஜர்
2. கஸ்யபர்
3. அத்ரி
4. ஜமதக்னி
5. கௌதமர்
6. வசிஷ்டர்
7. விஸ்வாமித்திரர்
இந்த 7 ரிஷிகளும் சப்த ரிஷிகள்.




இவர்கள் பிரம்ம ஆயுசு முழுக்க இருப்பவர்கள்.
தேவர்களுக்கும் மேல் இருப்பவர்கள்.
நக்ஷத்திர ரூபமாக இவர்கள் துருவ மண்டலத்தை வலம் வந்து கொண்டு இருக்கின்றனர்.
அங்கீரஸ ரிஷியின் புத்திரர் "பரத்வாஜர்".

'பரத்' என்றால் "நிரம்பிய" என்று அர்த்தம்.
'வாஜம்' என்றால் "அன்னம்" என்று அர்த்தம்.

அன்னதானத்திற்கு பெரும் புகழ் பெற்றவர் இந்த ரிஷி.

துர்வாச ரிஷி ஒருவரே "பத்தாயிரம் பேர் சாப்பிட கூடிய உணவை" சாப்பிட்டு விடுவார். அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.

பரத்வாஜ ரிஷியோ, தன் தபோ பலத்தால் "பத்தாயிரம் பேருக்கு சாப்பாடு போடுவார்".
அவருடைய தபோ பலம் அப்படிப்பட்டது.
தன் தபோ பலத்தை செலவழித்து, எத்தனை பேர் வந்தாலும் அன்னதானம் செய்து விடுவார் பரத்வாஜர்.

பரதன் அயோத்தி மக்களோடு கிளம்பி ராமபிரானை பார்க்க சித்ரகூடம் நோக்கி வந்தார்.

வரும் வழியில் பரத்வாஜர் ஆசிரமத்துக்கு தங்கினார்.

அன்று பரத்வாஜர் போட்ட அன்னதானத்தை சாப்பிட்டுவிட்டு,  "அயோத்தியை ராமர் ஆளட்டும், பரதன் ஆளட்டும். நாம் இங்கேயே இருந்து விடலாம்" என்று சொன்னார்கள் என்றால், பரத்வாஜர் செய்த அன்னதானம் எப்பேர்ப்பட்டது என்று அனுமானிக்கலாம்.




ராமபிரான் வனவாசம் முடிந்து, ராவண வதம் முடிந்து, இலங்கையில் இருந்து அயோத்தி திரும்பும் வழியில், 
இன்று பிரயாக்ராஜ் (பிரயாகை) என்று சொல்லப்படும் இடத்திற்கு புஷ்பக விமானத்தில் (flight) இருந்து இறங்கினார்.
அப்போதும் அனைவருக்கும் அன்னதானம் செய்தார் பரத்வாஜர்.

சாம வேதியான அப்பைய தீக்ஷிதர், பரத்வாஜ கோத்திரத்தை சேர்ந்தவர்.

அன்னதானம் செய்வதை உயர்வாக நினைப்பவனுக்கு பரத்வாஜரே குரு.

பரத்வாஜ ரிஷி பரம்பரையில் (கோத்திரம்) இருப்பவர்கள், அன்னதானம் செய்ய செய்ய, தன் ரிஷியை சந்தோஷப்படுத்துகிறார்கள்.

Wednesday 22 April 2020

யமன் செய்த அவதாரம்... பற்றி தெரிந்து கொள்வோமே

'ஆணிமாண்டவ்ய ரிஷி' ஒரு சமயம் ஆழ்ந்த தியானத்திலிருந்த பொழுது,  அவருடைய ஆஸ்ரமத்துக்குள், திருடர்கள் நுழைந்து அவர்கள் திருடிய பொருட்களை போட்டு விட்டு ஓடி விட்டனர்.
இவர்களை துரத்தி வந்த காவலர்கள், இவருடைய ஆஸ்ரமத்தில் நுழைந்தனர்.
மகரிஷியின் அருகில் அரண்மனையில் திருடிய நகைகள்  கிடப்பதைக் கண்டு இவரை சந்தேகப்பட்டு சிறைப்படுத்தி விட்டனர்.




அந்த காலங்களில், திருடுவதற்கு மக்கள் பயப்படுவார்கள்.
திருட்டுக்கு தண்டனையாக கழுவேற்றி விடுவார்கள். 
கழுவேற்றம் (impalement) என்பது ஒரு மரணதண்டனை. கூர்மைப்படுத்தப்பட்ட மரம் ஒன்றினில் குற்றவாளியை ஆசன வாய் வழியாக ஏற்றி விடுவார்கள்.
அரச தண்டனை மிக கடுமையாக இருந்த காலம் அது.
எதிர்பாராவிதமாக, இவர் திருடவில்லை என்று நிரூபணம் ஆகாமல் போக, அரசன், தண்டனை யாருக்கும் பொது என்ற காரணத்தால், மாண்டவ்ய ரிஷியை ஊசி போல இருக்கும் கழுவில் ஏற்றி  விட்டான். 

தியானம் கலையாமலேயே இருந்த ரிஷி, உடல் நாசமானதால், 
தன் சூக்ஷ்ம ரூபத்துடன் யமலோகம் சென்று விட்டார்.

கழுவேற்றிய மரத்தில் தன் உடல் கிடப்பதை பார்த்த ரிஷி, எம தர்மமனிடமே நியாயம் கேட்டார்.

"தான் செய்யாத குற்றத்துக்கு இத்தனை பெரிய தண்டனையா?"
என்று யமதர்மனை கேட்டார்.

ரிஷியான மாண்டவ்யரை பார்த்து எம தர்மராஜன்,
"ரிஷி ! நீங்கள் சிறு வயதாக இருக்கும் போது, ஒரு தும்பியின் வாலைக் [பட்டாம்பூச்சி] கயிற்றால் கட்டி அதன் அடிப்பகுதியை முள்ளால் குத்தி கொடுமை படுத்தினீர்கள். அதற்கான தண்டனையே இது” என்று சொன்னார்.
இதை கேட்ட மாண்டவ்ய ரிஷி,
“என்ன அநியாயமான சட்டம் இது!! 
அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு இத்தகைய பெரிய தண்டனையா? 
16 வயது வரை நல்லது எது? கெட்டது எது? என்று தெரியாதே !  
குழந்தை பருவத்தில் செய்யும் பாவங்களுக்கு இப்படி ஒரு சட்டம் இருக்குமானால், நான் செய்த தவத்தை நீங்கள் பலனாக ஏற்றுக்கொண்டு, 16 வயது வரை செய்த பாவங்களுக்கு தண்டனை கிடையாது என்று சட்டத்தை மாற்றுங்கள்" 
என்று சொல்லிவிட்டார்.

அவர் செய்த தவத்துக்கு பலனாக, யமதர்மன் "சரி! மாற்றினேன்" என்று உடனேயே சட்டத்தை மாற்றினார்..
உடனே மாண்டவ்ய ரிஷி, யமதர்மனை பார்த்து,
"அறியாப் பருவத்தில் செய்த சிறு தவறுக்கு தண்டனை இல்லை என்று சட்டத்தை மாற்றி விட்டீர்கள். 
இருந்தாலும், அதோ பாருங்கள்..  என் உடல் இன்னும் அதே கழுவில் உள்ளது. 
சட்டம் மாற்றிய பிறகும், நடைமுறையில் இல்லாத சட்டத்தால், தண்டிக்கப்பட்டு இந்த உடல் இன்னும் பூமியில் கிடப்பதால், அதற்கு பிராயச்சித்தமாக, நீங்களும் பூமியில் அவதரிக்குமாறு, நான் சாபமிடுகிறேன்."
என்று சொல்லிவிட்டார்.

"ஸ்ரீ கிருஷ்ணராக அவதாரம் செய்ய போகிறார், நாராயணன்"
என்று தெரிந்ததும், அவருக்கு முன்பாகவே முப்பத்து முக்கோடி தேவர்களும் பிருந்தாவனத்தில் இடையர்களாக அவதாரம் செய்து விட்டனர்..

ரிஷிகள் கோபிகைகளாக வந்து விட்டனர். 

எம தர்மனுக்கு மட்டும் ஓய்வே கிடையாது. 
நரகத்தில் இவருக்கு எப்பொழுதும் வேலை. 

"தானும் கிருஷ்ண  அவதாரத்தில் கலந்து கொள்வோமா? 
தன்  வீட்டுக்கும் கண்ணன் ஒரு முறையாவது வருவாரா?" 
என்று காத்து இருந்த யமதர்மன், ஆணி மாண்டவ்யர் கொடுத்த சாபத்தை அனுகிரஹமாக ஏற்றுக்கொண்டு, தன் சார்பாக சித்ரகுப்தனை சிறிது காலம் பார்க்க சொல்லிவிட்டு,  விதுரராக அவதரித்தார்.
மஹாபாரதத்தில் விதுரர் சொல்லும் தர்மங்கள் "விதுர நீதி" என்று புகழ் பெற்றது. 
தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால், "விதுர நீதி" படித்தாலேயே போதும்.




யமதர்மனுக்கு "ஸ்ரீ கிருஷ்ணரை" பஜிப்பவர்களை கண்டால் பேரானந்தம் உண்டாகும்.  
யமதர்மனே கிருஷ்ண பக்தர் தான், என்கிற போது "யமனை கண்டு நாம் ஏன் அச்சம் கொள்ளவேண்டும்?".

வாழ்க ஸ்ரீ கிருஷ்ணர் புகழ்.
வாழ்க ஹிந்து தர்மம்.
வாழ்க நம் புராணங்கள்.

Tuesday 14 April 2020

வ்யாக்ர பாதர் ரிஷி, தொளமிய ரிஷி பற்றி தெரிந்து கொள்வோமே... தெரிந்து கொள்வோமே நம் ரிஷிகள் பெருமையை..

வ்யாக்ர பாதர் முக்தி ஸ்தலம் "சிறுபுலியூர்".  
வ்யாக்ர பாதர், ஒரு சமயம் கைலாசத்தில் சிவபெருமானிடம் "ஆனந்த தாண்டவம் பார்க்க வேண்டும்"
என்று தன் ஆசையை சொன்னார்.




"புண்டலீகபுரம் என்ற தேசம் தக்ஷிண பாரதத்தில் உள்ளது.
அங்கு கோவிந்தராஜ பெருமாளாக மஹாவிஷ்ணு இருக்கிறார். 
அங்கு உங்களுக்கு தரிசனம் தந்து ஆனந்த தாண்டவம் செய்வேன்" என்கிறார்.
"கோவிந்தராஜ பெருமாள்" இருக்கும் இந்த தேசம், திரு சித்ரகூடம் என்று அழைக்கப்பட்ட காலம் அது.

வ்யாக்ர பாதர், தன்னுடன் பதஞ்சலி முனிவரை அழைத்துக்கொண்டு, இந்த தேசத்துக்கு வந்தார்.
சாயங்கால வேளையில், கோவிந்தராஜனுக்கு முன், சிவபெருமான் ஆனந்த நடனம் ஆட, நந்தி தேவர் தாளம் போட, வ்யாக்ர பாதர் இந்த காட்சியை பார்த்து ஆனந்தம் அடைந்தார்.  
நடனம் ஆடியதால், சிவபெருமானுக்கு இங்கு "நடராஜர்" என்று பெயர் ஏற்பட்டது.

பிறகு, "தனக்கு மோக்ஷம் வேண்டும்" என்று சிவபெருமானிடம் கேட்டார்.

சிவபெருமான் "ஞானம் நான் தருவேன்.. மோக்ஷம் பெருமாள் தருவார்"
என்று சொல்லி, நாராயணனை திரு அஷ்டாக்ஷர மந்திரம் சொல்லி தியானிக்க சொல்லி மறைந்தார்.

இன்று இந்த திவ்ய தேசத்தை, சிதம்பரம் என்றும் சிற்றம்பலம் என்றும் சொல்கிறோம்.

வ்யாக்ர பாதர் (புலி போன்ற கால் உடையவர்) "சிறுபுலியூர்" என்று சொல்லப்படும் திவ்ய தேசத்துக்கு வந்தார்.
அங்கு திரு அஷ்டாக்ஷர மந்திரத்தை ஜபித்து கொண்டே, நாராயணனை தரிசிக்க காத்து கொண்டிருந்தார்.
பெருமாள் கோகுலத்தில் பிறந்த "குழந்தை போல, தூளியில் ஆடிக்கொண்டே திவ்ய காட்சி கொடுத்தார்.

சிறு குழந்தையாக பெருமாளை, புலி போன்ற கால் உடைய வ்யாக்ர பாதர் இங்கு தரிசித்து, இங்கேயே இருந்து முக்தி பெற்றார்.

இதன் காரணத்தாலேயே இந்த ஊருக்கு "சிறு புலியூர்" என்று பெயர் ஏற்பட்டது.

"உபமன்யு" வ்யாக்ர பாதரின் புத்திரர்.
இந்த தமிழ்நாட்டில் தான், தொளமிய ரிஷியின் ஆஸ்ரமத்தில், உபமன்யு படித்தார்.

தன்  தகப்பனார் போலவே சிவபெருமானை  தரிசித்தார். 
இவருக்கு கண் தெரியாமல் போன போது, தொளமிய ரிஷி "காஞ்சி வரதராஜனை (அத்திவரதரை)" வழிபட சொல்ல,
பேரருளாளன் அருளால், கண் பார்வை இவருக்கு மீண்டும் கிடைத்தது.
பெரும் ரிஷி இவர்.

"ஆருணி, வைதன், உத்தங்கர்" போன்றார் உபமன்யுவுடன் படித்தார்கள்.

உத்தங்கர் தன் குருநாதரிடம் வேதம் முழுவதும் படித்து முடித்து விட்டு,
"குரு தக்ஷிணை தர வேண்டுமே" என்று குருவிடம் கேட்டார்.
"தனக்கு எதுவும் வேண்டாம், குருமாதாவிடம் கேள்" என்று சொல்லிவிட்டார்.

"பௌஷ்ய ராஜன் மனைவி வைத்து இருக்கிறாள். அதை வாங்கி கொண்டு வா" என்று  குருமாதா கேட்டாள்.
குருநாதர் "அதையே தனக்கு குரு தக்ஷிணையாக கொண்டு வா" என்று சொல்லிவிட்டார்.

பௌஷ்ய அரசனிடம் சென்று "தனக்கு நாக ரத்தினம் வேண்டும். குருநாதனுக்கு குரு தக்ஷிணையாக கொடுக்க வேண்டும்" என்று கேட்டு விட்டார் உத்தங்கர்.




விலைமதிப்பில்லாத நாகரத்தினத்தை உத்தங்கர் போன்ற வேத பிராம்மணன் தன்  குருநாதருக்காக தானம் கேட்கிறாரே, என்று தாராளமாக கொடுத்துவிட்டாள் அரசனின் மனைவி.

"தக்ஷகன்" என்ற நாகராஜன் பிறந்த இடம் "திருநாங்கூர்".
சிதம்பரம் ஆரம்பித்து திருநாங்கூர் (நாகூர்) தொடர்ந்து நூகூர், நாகப்பட்டினம் வரை "நாகர்கள் ஆண்ட" தேசமாக இருந்தது.

தமிழகத்தில் தான் ரத்தினங்கள் அதிகமாக அந்த காலங்களில் இருந்தது.
பிற்காலத்தில்,
திருநாங்கூரை தலைமையாக கொண்டு, திருமங்கை ஆழ்வார்  ஆட்சி செய்த பிரதேசம் இது.
அதை எடுத்துக்கொண்டு வரும் போது, தக்ஷகன் என்ற நாகராஜன், மனித வடிவெடுத்துக்கொண்டு, ப்ராம்மணனை போல வந்து, பேசிக்கொண்டே திடீரன்று கையில் இருந்த இரத்தின மாலையை எடுத்துக்கொண்டு ஓடி பாம்பு பொந்துக்குள் நுழைந்து விட்டான்.

மனிதன் ஒரு பாம்பு பொந்துக்குள் நுழைந்ததை கண்டு!! 'வந்தது நாகதேவன்' என்று புரிந்து கொண்டார் உத்தங்கர்.
பிறகு, இந்திரா தேவன், அக்னி தேவனின் உதவியால், தக்ஷகனை நாங்கூர் பிரதேசத்தில் இருந்து விரட்டி, ரத்தினத்தை கைப்பற்றினார்.

தன் குருவிடம் நாக ரத்தினத்தை குரு தக்ஷிணையாக கொடுத்து விட்டார்.

தக்ஷகன் பிறகு காண்டவ வனத்தில் இருந்து வந்தான். 
இந்த புதர் வளர்ந்த காட்டை தான், யுதிஷ்டிரருக்கு திருத்ராஷ்ட்ரன் கொடுத்தான். 
அர்ஜுனன் இந்த காண்டவ வானத்தை அழித்து, இந்திரப்பிரஸ்தம் (Delhi) என்ற நகரம் உருவாக்கினார்.
அங்கிருந்து தக்ஷகன் தப்பித்து சென்றான். 
இந்த தக்ஷன் தான், சாபம் காரணமாக பிறகு அபிமன்யுவின் மகன் "பரீக்ஷித்"தை விஷம் தீண்டி கொன்றான்.

பரீக்ஷித் மகன் ஜனமேஜயன் அரியணை ஏறினார்.
அப்போது, இந்த உத்தங்கர் தான், இவரிடம் சென்று
"தக்ஷகன் தான் உன் தகப்பனை கொன்றார்" என்று சொன்னார்..

இதற்கு பழி தீர்க்க, பெரிய சர்ப்ப யாகம் ஏற்பாடு செய்தான்.
தக்ஷசீலா என்ற இடத்தில் யாகம் ஆரம்பித்தான்.
உலகில் உள்ள நாகம் எல்லாம் தானாக அக்னி குண்டத்தில் வந்து விழ ஆரம்பித்தது.
அஸ்தீகர் என்ற ரிஷி, ஜனமேஜயனை சமாதானம் செய்து, யாகத்தை நிறுத்தினார். தக்ஷன் தப்பித்தான்.

ஜனமேஜயன் யாகம் செய்த இடம் இன்று, "தஷீலா (Taxila)" என்ற பெயருடன் இன்றும் இருக்கிறது.  இன்று பாகிஸ்தான் பகுதியாக போய் விட்டது.

பீஷ்மர் "வ்யாக்ரபாத கோத்திரம்". 
யுதிஷ்டிரிடம் "கோத்திரம் என்ன?" என்று விராட அரசன் கேட்ட போது, "தான் வ்யாக்ர பாத ரிஷி கோத்திரம்" என்று சொல்கிறார்.

தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் சிவபெருமானை நமக்கு கொடுத்த, சிறுபுலியூரில் பெருமாளை நமக்கு கொடுத்து,
தமிழ்நாட்டில் மோக்ஷம் அடைந்த வ்யாக்ர பாதர்,
மஹாபாரத குரு வம்சத்துக்கு ரிஷி
என்பது வட பாரதமும், தெற்கு பாரதமும் எத்தனை உறவை கொண்டு இருந்தது என்பது தெரிகிறது.

அர்ஜுனன் இந்த பிரதேசங்களில் ஸ்ரீரங்கம் வரை தீர்த்த யாத்திரை வந்த காரணமும் நமக்கு புரிகிறது.

Wednesday 9 October 2019

ரிஷிகளின் பரம்பரை என்று சொல்லி கொள்ளும் நாம், ரிஷிகளை பற்றி தெரிந்து கொள்வோமே..மஹ ரிஷி யார்? ப்ரம்ம ரிஷி யார்? சூத ரிஷி யார்?..

ரிஷிகள் மனிதர்கள் அல்ல, தேவர்களும் அல்ல.
தேவர்களுக்கும் மேலானவர்கள் ரிஷிகள்.

ரிஷிகள் தேவர்களையும், அசுரர்களையும், ராஷசர்களையும், மனிதர்களையும் படைத்தவர்கள்.



பரப்ரம்மான வாசுதேவனே ரிஷி தான்.
அவரே மும்மூர்த்திகளாக வ்யூஹ அவதாரம் செய்தார்.
மும்மூர்த்திகளும் ரிஷிகள் தான்.

பரவாசுதேவன் மனித அவதாரம் செய்த போது கூட, தன்னை ரிஷியின் பரம்பரையை சேர்ந்தவன் என்று சொல்லிக்கொள்ள பெருமைப்பட்டார்.
ஸ்ரீ ராமர் - வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
சீதை - அவதரித்தது கௌதம கோத்திரம், ஸ்ரீ ராமரை மணம் செய்து கொண்ட பின், வசிஷ்ட கோத்திரம் (பரம்பரை)
ஸ்ரீ கிருஷ்ணா - கர்க கோத்திரம் (பரம்பரை)
தர்மபுத்திரர் - வியாக்ரபாதர் கோத்திரம் (பரம்பரை)

கௌதம கோத்திரம் (பரம்பரை) கௌதம ரிஷியால் உருவானது.
ஜாபாலி என்ற சிறுவன் தன் கோத்திரம் (பரம்பரை) தெரியாமல் இருந்தான்.  கௌதம ரிஷி அவனை ஏற்றுக்கொண்டு, தனது கோத்திரத்தை (பரம்பரை) கொடுத்து, உபநயனம் செய்து, "ஸத்யகாம ஜாபாலி" என்று பெயர் கொடுத்தார்.
கௌதம ரிஷியின் ஆசியால், பெரும் தபோதனராக ஆகி விட்டார் ஜாபாலி.
பிற்காலத்தில், ஜாபாலி கோத்திரம் (பரம்பரை) உருவாகி, இந்த பரம்பரையில் வருபவர்களுக்கு ஜாபாலியே ரிஷியாக ஆனார்.
கௌதம ரிஷியை குருவாக ஏற்ற ஜாபாலி, பெரும்பேர் பெற்றார்.



காஷ்யப கோத்திரம் (பரம்பரை) காஷ்யப ரிஷியால் ஏற்பட்டது.
ப்ரம்மாவின் மானஸ புத்திரர் காஷ்யபர். சப்த ரிஷிகளில் ஒருவர்.
பெரும்பாலான உலக ஸ்ருஷ்டி காஷ்யபரால் தான் உண்டானது.
ஜாம்பவான் அவதரித்த இடம் இன்று 'ஜம்மு' (Jammu) என்று அழைக்கப்படுவது போல,
காஷ்யப ரிஷி பூலோகத்தில் தவம் செய்த இடம் இன்று காஷ்மீர் (kashmir) என்று அழைக்கப்படுகிறது.

வேதம் தழைத்த தேசம் காஷ்மீரம். ஆதி சங்கரர் காஷ்மீரம் வந்து மண்டல மிஸ்ரரிடம் வேதத்தை பற்றி விவாதித்தார் என்று பார்க்கிறோம்.

ஒருவேளை யாருக்காவது தான் எந்த கோத்திரத்தை (பரம்பரை) சேர்ந்தவன்?
என்று தெரியாத பட்சத்தில், தாங்கள் காஷ்யப கோத்திரம் என்று சொல்லி கொள்ள சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.

அதேபோல,
தர்மத்தை சொல்லும் "சூத்ரம்" (Formula to lead life) பல உண்டு. ரிஷிகள் பலர் தர்ம சூத்ரங்கள் இயற்றி உள்ளனர்.

'ஆபஸ்தம்ப சூத்ரம், போதாயன சூத்ரம், வசிஷ்ட சூத்ரம், விஷ்ணு சூத்ரம், கௌதம சூத்ரம்' என்று பல தர்ம சூத்ரங்கள்,
அந்தந்த ரிஷிகளின் பெயராலேயே உள்ளது.

மற்ற சூத்ரத்தில் சொல்லப்பட்ட அனைத்து தர்மங்களும் 'போதாயன' சூத்திரத்தில் அடக்கம்.
அதனால்,
ஒருவேளை யாருக்காவது தான் எந்த சூத்ரத்தை (formula) சேர்ந்தவன்? 
என்று தெரியாத பட்சத்தில், 'போதாயன சூத்திர' படி வாழ்க்கை முறைகளை கடைபிடிக்கலாம் என்று சாஸ்திரம் இடம் கொடுக்கிறது.
ரிஷிகள் அனைவரும் ஒரே தகுதி உள்ளவர்கள் அல்ல.
ரிஷிகள் ஞானிகள் (மெய் அறிவு கொண்டவர்கள்).
ரிஷிகள் தவவலிமையால் வேத மந்திரங்களை கண்டுபிடிப்பதால் இவர்களுக்கு ரிஷி என்று பெயர்.



ரிஷிகள் பலவிதமாக உள்ளனர். ரிஷிகள் அனைவரும் ஒரே பலம் கொண்டவர்கள் என்று நினைக்க கூடாது.
  • மஹ ரிஷி
  • ப்ரம்ம ரிஷி
  • ராஜ ரிஷி
  • வைஸ்ய ரிஷி
  • ஜன ரிஷி
  • தப ரிஷி
  • ஸத்ய  ரிஷி
  • காண்ட ரிஷி
  • தேவ ரிஷி
  • சூத ரிஷி

ரிஷிகளின் மனைவிகள் "ரிஷிகை" என்று சொல்வோம்.

பொதுவாக அனைத்து ரிஷிகளும் தவவலிமையால், சப்த பிரபஞ்சத்தில் (sound energy) மறைந்து இருக்கும் "வேத மந்திரங்களை" கண்டுபிடிக்கும் சக்தி உள்ளவர்கள்..




பிரபஞ்சத்தில் இருக்கும் வேதத்தை கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்கள், "ரிஷி" என்று போற்றப்பட்டனர்.
வேதத்திற்கே "சப்த ப்ரம்மம்" என்று தான் பெயர்.
மறைந்து இருக்கும் இந்த சப்த பிரம்மத்தை, தியானத்தால் கண்டுபிடித்து நமக்கு தந்து விட்டனர் ரிஷிகள்.
மறைந்து இருப்பதால், தமிழில் வேதத்தை "மறை" என்ற சொல் கொண்டு பொருத்தமாக அழைக்கின்றனர்.
சப்த ரிஷிகளில் ஒருவரான அகத்தியரே "தமிழ் முனி"யாக தானே போற்றப்படுகிறார்.
ரிஷியை விட உயர்ந்தவர்கள் முனிகள்.
ரிஷியான நாரதர் முனியாகவும் போற்றப்படுகிறார். தெரிந்து கொள்ள இங்கே படிக்கவும்..
தவவலிமை அதிகமாக உள்ள ரிஷிகளுக்கு,
8 மஹா ஸித்திகளும் கைகூடி, 
அனுகிரஹமும் செய்ய முடியும், 
நிக்ராஹமும் (அழிக்கவும்) முடியும் 
என்ற சக்தி பெரும் போது,
அந்த ரிஷிகள் "மஹ ரிஷி" என்ற அந்தஸ்த்தை பெறுகிறார்.
துர்வாசரை மஹ ரிஷி என்று சொல்வார்கள்.



அழிக்கும் சக்தியும் உள்ளதால், "மஹ ரிஷிகளை" கண்டு க்ஷத்ரியனும், தேவர்கள் கூட, அவர்கள் சாபத்துக்கு பயப்படுவார்கள்.

ப்ராம்மண (Spiritual) பரம்பரையில் பிறந்து, பேராசை கோபம் அற்று, தவவலிமையால், "வேத மந்திரங்களை" கண்டுபிடித்தவர்கள் "ப்ரம்ம ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
பிராம்மண குணம் உள்ளவன் ரிஷியாக உயரும் போது "ப்ரம்ம ரிஷி" ஆகிறான்.
க்ஷத்ரிய குணம் கொண்ட கௌசிகன் என்ற அரசன், ப்ரம்ம ரிஷியான "வசிஷ்டரிடம்" உள்ள காமதேனுவை கைப்பற்ற நினைத்தான்.
தன் படைவீரர்களை கொண்டு காமதேனுவை இழுத்து வர   சொன்னான்.
"ப்ரம்ம ரிஷி" வசிஷ்டர், தன் தவவலிமையால் ஆயிரக்கணக்கான படைவீரர்களை மாயையால் உருவாக்கி, அனைவரையும் ஒழித்தார். 

இத்தனை பலம் ஒரு ப்ரம்ம ரிஷிக்கு இருக்குமானால், க்ஷத்ரிய அரசனாக இருப்பதை விட, ப்ரம்ம ரிஷியாகலாம் என்று நினைத்தார் கௌசிகன்.
அரச பதவியை தன் மகன்களிடம், மந்திரிகளிடம் கொடுத்து விட்டு, தவம் செய்ய புறப்பட்டு விட்டார்.
கோபத்தை விட்டு, காமத்தை விட்டு, பொருள் ஆசையை விட்டு, பிராம்மண குணங்களை கடும் தடைகளுக்கு பிறகு பெற்று, க்ஷத்ரியனாக பிறந்தும், ப்ரம்ம ரிஷியாக ஆசைப்பட்ட கௌசிகன், வசிஷ்டர் வாயால் "ப்ரம்ம ரிஷி" என்று பெயர் பெற்றார். விஸ்வாமித்திரர் என்று உலக புகழ் பெற்றார் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரியனாக (Protector) பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "ராஜ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
ஸ்வாயம்பு மனுவே "ராஜ ரிஷி". 
தசரதர் ஒரு ராஜ ரிஷி. 
ஜனகன் ஒரு ராஜ ரிஷி.
பொதுவாக ராஜரிஷிகள், தன் மகன்கள் ஆட்சிக்கு அமர்த்திய பின், வயோதிக காலத்தை வனத்தில் தவம் செய்து கழிக்க சென்று விடுவார்கள்.



வைஸ்யனாக (Business) பிறந்து, தவவலிமையால்,  சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "வைஸ்ய ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
துலாதரன் என்ற ரிஷி - வைஸ்ய ரிஷி.

"ஜாதி பேதம்" பார்ப்பது காமம், க்ரோதம் உள்ள நமக்கு தான் உண்டு.
ரிஷிகளுக்கு இல்லை.
யார் மெய் அறிவில் (ஞானத்தில்) உயர்ந்து இருக்கிறார்களோ, அவர்களே பெரியவர்.
மஹாபாரதத்தில், ப்ரம்ம ரிஷியான "ஜாஜலி" என்பவர், துலாதரன் என்ற வைஸ்ய ரிஷியிடம் தர்ம உபதேசங்கள் கேட்டதாக உள்ளது.

சூத்ர குலத்தில் பிறந்து இருந்தாலும்,  தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "சூத ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
சூத ரிஷியை, சௌனகாதி ப்ரம்ம ரிஷிகள் பூஜை செய்து, அவரை வ்யாஸ பீடத்தில் அமர்த்தி, அவரிடம் புராணங்களை சொல்ல சொல்லி கேட்டனர்.
ரோம ஹர்ஷனர் என்ற ரிஷியும் சூத ரிஷி.

தேவனாக பிறந்து, தவவலிமையால், சப்த பிரம்மத்தில் உள்ள வேதத்தை அறியும் சக்தி உள்ளவர்கள் "தேவ ரிஷி" என்ற அந்தஸ்தை பெறுகிறார்.
நாரதர் - தேவ ரிஷி
தேவலர் - தேவ ரிஷி
தேவர்கள் திவ்யமான சரீரம் உடையவர்கள்.
அக்னி ஸ்வரூபமானவர்கள்.
இவர்கள் எந்த லோகத்துக்கும் சஞ்சரிக்க இயலும். 
மண்ணால் ஆனா மனிதர்கள் அல்ல இவர்கள்.
பொதுவாக இவர்கள் பூலோகத்து மேல் உள்ள சொர்க்க லோகத்திலோ, ஜன  லோகத்திலோ, தப லோகத்திலோ, ப்ரம்மா இருக்கும் சத்ய லோகத்திலோ வசிக்க கூடியவர்கள்.


ப்ரம்ம (ஸத்ய) லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஸத்ய ரிஷி" என்றும்  அழைக்கப்படுகிறார்கள்.

ப்ரம்மாவின் முதல் படைப்பான சனத்குமாரர்கள் - ப்ரம்ம ரிஷிகள். 
எப்பொழுதுமே 5 வயது பாலகனாகவே இருப்பவர்கள்.
ப்ரம்ம லோகம் அழியும் வரை, ப்ரம்மா அழியும் வரை இருப்பவர்கள்.

ப்ரம்ம இருக்கும் ஸத்ய லோகத்துக்கு கீழே உள்ள தப லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "தப ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

தப லோகத்துக்கு கீழே உள்ள ஜன லோகத்தில் வசிக்கும் தேவ ரிஷிகள், "ஜன ரிஷிகள்" என்று அழைக்கப்படுகிறார்கள்.

வேதத்தில் 4 காண்டங்கள் உள்ளன.
  1. ஆக்னேயம்
  2. ஸோமம்
  3. வைச்வ தைவத்யம்
  4. ப்ராஜா பத்யம்
வேதத்தில் உள்ள ஒவ்வொரு காண்டத்துக்கும் (Chapter) அதற்கான ரிஷிகள் உள்ளனர்.  "காண்ட ரிஷிகள்" என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.
பெண்களில் கூட ரிஷிகள் உண்டு.
"கார்கி"  என்ற பெண் ரிஷி உண்டு.

ரிஷிகளால் மனிதர்கள் படைக்கப்பட்டனர். 
தேவர்களும் வழிபடும் ரிஷிகளின் பரம்பரையில் வந்தவர்கள் நாம்.


வாழ்க ரிஷிகள்.
வாழ்க ஹிந்துக்கள்.