Followers

Search Here...

Showing posts with label ஞானி. Show all posts
Showing posts with label ஞானி. Show all posts

Thursday 15 June 2023

இசைஞானி என்றும், ஆத்மஞானி என்றும் சிலரை சொல்கிறோம். ஞானம் என்றால் என்ன? ஞானி என்றால் என்ன?

இசைஞானி, ஆத்மஞானி.. ஞானம் என்றால் என்ன?

பல புத்தகங்களை ஒருவன் படிக்கும் போது, அதில் சொல்லப்பட்ட விஷயங்களை பற்றிய அறிவு அவனுக்கு ஏற்படுகிறது.


உதாரணத்திற்கு, 

ஆத்மா என்றால் என்ன? 

சரீரம் என்றால் என்ன? 

என்று விளக்கும் பல சாஸ்திர புத்தகங்களை படிக்கிறோம். பகவானே தன் திருவாயால் பகவத்கீதையில் ஆத்மா, சரீரம் பற்றி விளக்கி சொல்கிறார்.


இதை படிக்கும் போது, "ஆத்மாவாகிய நாம் இந்த உடலில் இருக்கிறோம். இந்த உடல் ஒரு வாடகை வீடு தான். யமன் என்ற சொந்தக்காரன் எப்பொழுது காலி செய் என்று சொல்வானோ அப்பொழுதே ஆத்மாவாகிய நாம், போட்டது போட்டபடி விட்டுவிட்டு, கிளம்ப வேண்டியது தான்" என்று அறிவு பெறுகிறோம். 

அறிவு வேறு. 

ஞானம் வேறு.


நமக்கு படிப்பு அறிவு இருந்தும், அனுபவத்தில் உணரப்படாத வரை, உடல் பற்றிய கவலையிலேயே இருக்கிறோம். 

பகவானிடத்தில் அன்பு செய்வதையே, ஆத்மா விரும்பும் என்று தெரிந்தும், உலக விஷயங்களிலேயே அன்பு செலுத்துகிறோம். 

 

"நான் ஆத்மா. நான் இப்போது இந்த உடலில் வாடகைக்கு இருக்கிறேன். பகவான் கூப்பிடும் வரை இந்த உடலை அவ்வபோது சரி செய்து கொண்டு, அவரிடமே அன்பு (பக்தி) செய்து கொண்டிருப்பேன்" என்ற இந்த அனுபவ உணர்வோடு வாழ்பவர்களையே "ஞானி" என்று சொல்கிறோம். குறிப்பாக "ஆத்ம ஞானி" என்று சொல்கிறோம் 


ஆத்மாவை பற்றிய அறிவு, படிப்பதால் ஏற்படுகிறது.

ஆத்மாவை பற்றிய அறிவோடு, ஆத்மாவே நான் என்பதை வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள், "ஆத்மஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


அது போல, 

இசையை பற்றிய அறிவு, இசை சம்பந்தமான புத்தகங்களை படிப்பதால் நமக்கு ஏற்படுகிறது.


இசையை பற்றிய அறிவோடு, இசையை தன் வாழ்க்கையில் அனுபவ ரீதியாக உணர்பவர்கள்,  "இசைஞானி" என்று அழைக்கப்படுகிறார்கள்.


Sunday 9 August 2020

உணவை படைத்த கடவுளுக்கு, பசிக்குமா? கடவுளுக்கு கோவிலா? அவருக்கே பாதுகாப்பா?. ஞானிகள் உள்ள இந்த பாரத தேசத்தில், எதற்காக கோவில்? நெய்வேத்யம்?பாதுகாப்பு?. ஒரு அலசல்..

பரமாத்மாவை அறிந்தும், பரமாத்மா தத்துவத்தை அறிந்தும்,

வேதத்தை 4காக வகுத்து கொடுத்தும்,




'கர்ம யோகி'யாக இருந்து, மஹாபாரதம் மற்றும் 18 புராணங்களை உலகத்திற்காக கொடுத்தும், 

ஸ்வயமே 'ஞானி'யான வியாச பகவான், மனதிருப்தி ஏற்படாமல் குறைப்பட்டு கொண்டார்.

"கர்ம யோகி'யாக இருந்தும், 'ஞானி'யாக இருந்தும், பரமாத்மாவை உணர்ந்தும், திருப்தி இல்லையே! மன உருக்கம் ஏற்படவில்லையே! கண்ணீர் வரவில்லையே!" என்று குறைப்பட்டு கொண்டார் வியாசர்.

"பக்தியே 'கர்ம யோகத்தை விடவும், ஞான யோகத்தை விடவும்' ஆனந்தம் தரவல்லது.

ஆதலால் பக்தியை ஊட்டும் கிருஷ்ண சரித்திரத்தை எழுதுங்கள்" 

என்று சொன்னார் நாரதர்.


'கிருஷ்ணனே பரமாத்மா' என்பதால், பிரம்மாவின் ஸ்ருஷ்டியில் ஆரம்பித்து, உலக ஸ்ருஷ்டிகளை வர்ணித்து, பரமாத்மாவின் அவதாரங்களை வர்ணித்து, கடைசியில் கிருஷ்ண அவதாரத்தை விவரித்து சொல்கிறார்

குறிப்பாக பால லீலையை சொல்கிறார்.

அதன் பலனாக,

'பாகவதம்' என்ற பக்தி க்ரந்தம் நமக்கு கிடைத்தது.

பலனை எதிர்பார்க்காமல், பகவான் இஷ்டம் என்று கர்வமில்லாமல் காரியங்களை செய்வது - 'கர்மயோகம்'.

பகவானை பற்றி அறிந்து கொள்வது - "ஞானம்".


'பக்தி' என்றால் என்ன? 

வியாசர் கொடுத்த பக்தி கிரந்தமான பாகவதத்தில், இந்த பக்தி எப்படி உள்ளது?...


'கோகுலவாசிகள் தனக்கு பூஜை செய்யாமல், கோவர்த்தன மலைக்கு பூஜை செய்கிறார்கள்' என்றதும், தேவர்களுக்கு அதிபதியான இந்திர தேவனுக்கு மஹாகோபம் வந்தது. 

கோகுலத்தை அழிக்க பிரளய கால மழையை ஏவினான். 

7 வயதே ஆன ஸ்ரீ கிருஷ்ணன், கிடு கிடுவென்று ஓடி, தன் பிஞ்சு விரலால் கோவர்த்தன மலையையே தூக்கி விட்டான்.

"எல்லோரும் மலைக்கு கீழே வாருங்கள்" என்று அழைத்தான்.


சிறுவன் செய்ய கூடிய காரியமா?

சிறுவனை விடுங்கள். எந்த மனிதனால் மலையை தூக்க முடியும்?

வெளிப்படையாக, குட்டி கிருஷ்ணன் 'பகவானாக' செய்த காரியம் இது.

"இவன் பகவான் தான்" என்ற நம்பிக்கை இருந்ததால் தானே, யசோதை நந்தகோபர் உட்பட அனைத்து கோகுலவாசிகளும், மலைக்கு அடியில் நிற்க சம்மதித்தனர். 


இந்த காட்சியை பார்த்த ஞானிகள், ரிஷிகள் "தெய்வ லீலை... கிருஷ்ண லீலை" என்று கண்டு ஆனந்தப்பட்டனர்.


இந்திர தேவனோ, கிருஷ்ணன் 'பகவான் என்று புரிந்து கொள்ள முடியாமல்', கர்வத்தால் இடைவிடாது 7 நாட்கள் மழையை கொட்டினான்.




கவலையே இல்லாமல், 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு இருந்தான் குட்டி கிருஷ்ணன்.


ஞானிகள் "பரமாத்மா தான் 7 வயது பாலகனாக இருக்கிறார். உலகத்தையே தாங்குபவர் இவர். கோவர்த்தனத்தை தூக்குவது ஒரு பெரிய காரியமா?" 

என்று பரதத்துவத்தை நினைத்து கைக்குவித்து நின்றனர்.


ஞானிகள் இப்படி நினைக்க, 

தானே கரம் யோகியாக இருந்து கோவர்த்தன மலையை தூக்கி, கோகுலத்தில் உள்ள அனைவரையும் தன் பாதுகாப்பில் வைத்து சத்சங்கம் கொடுத்து கொண்டு, 7 நாட்களும் மலையை தூக்கி கொண்டு நின்றார்.


இந்திரன் இனி மழை பொழிய ஜலம் இல்லை என்கிற அளவுக்கு போய், 7 வயது குழந்தையாக வந்திருப்பது "பகவான்" என்று உணர்ந்தான்.

"பதவி கர்வத்தால் பெரும் தவறு செய்து விட்டோம்" என்று பயந்தான்.

மழை நின்றவுடன், மலைக்கு அடியில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பி, பிறகு இருந்த இடத்திலேயே மலையை வைத்து விட்டு, குட்டி கிருஷ்ணன் கோவிந்தனாக நிற்க, 

இந்திர தேவன் ப்ரத்யஷமாகி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு, குடம் குடமாக பால் அபிஷேகம் செய்தான்.

மலையை தூக்கி, 7 நாட்கள் தாங்கி பிடித்து, இந்திரனையே ப்ரத்யஷமாக பார்த்தும், கிருஷ்ணனை "என் குழந்தை" என்றே பார்த்தாளாம் யசோதை.


இந்திரனை பார்த்து, "7 நாட்கள் தண்ணீர் கொட்டினது போதாது என்று, பாலை எடுத்து வந்து என் குழந்தை மேல் கொட்டுகிறானே. ஜலதோஷம் பிடிக்குமே!!" 

என்று கவலைப்பட்டு, ஓடி வந்து தன் குழந்தைக்கு தலையை துவட்டி விட, யசோதையின் இந்த அன்புக்கு அடிமையானார் பரமாத்மா.

"7 வயது குழந்தையாக இருந்து கொண்டு மலையையே தூக்கி காட்டி இருக்கேன். 

இந்திரனையே காலில் விழ செய்து விட்டேன். 

பகவான் என்று கண் எதிரே காட்டி விட்டேன்.. 

இப்பொழுதும்,

எனக்கு ஜலதோஷம் பிடிக்குமே!! என்றும்,

என் குழந்தை!! 

என்றும் நினைக்கிறாளே..

பகவானுக்கு எதுவும் சாத்தியம் என்று எனது காரியங்கள் அனைத்தையும், ஞானிகள் 'லீலை லீலை' 

என்றே ரசிக்கும் போது, 

எனக்காக அழும் இவள் பக்தி, ஞானத்தை விட சிறந்தது" 

என்று நினைத்தாராம் பரமாத்மா.


"பகவான் தான் உலகை படைத்தார். அந்த உலகில் அவருக்கு ஒரு கோவில் தேவையா?

பகவான் தான் உணவை படைத்தார். அவருக்கு போய் பசிக்குமா?

பகவான் தான் நம்மை காக்கிறார். அவருக்கு நாம் காவலா?.."

இப்படி நாத்தீகன் அல்ல, பரதத்துவத்தை உணர்ந்த ஞானிகள் கூட சொல்ல முடியும்.


அப்படிப்பட்ட ஞானிகள் கோவர்த்தன மலையை 7 வயது குழந்தையாக கிருஷ்ணர் தூக்கியதை பார்த்தும், "பகவானுக்கு இது ஒரு பெரிய காரியமா?" 

என்று நினைத்தார்கள்.





"பகவான் தான் நம்மை படைத்தார், நம்மை காக்கிறார்" 

என்ற ஞானம் இருந்தாலும், அந்த பரமாத்மா நம்மிடம் பழக ஆரம்பித்து விட்டால், அளவிட முடியாத அன்பு (பக்தி), ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


"என்னை பகவான் காப்பாரா?' என்ற ஆரம்பநிலையில் கேட்கும் பக்தன், 

தெய்வம் பழக ஆரம்பிக்க ஆரம்பிக்க, யசோதையின் நிலை ஏற்பட்டு, 

"பகவான் சாப்பிட்டாரா? 

பகவான் அலங்காரம் செய்து கொண்டாரா? 

பகவானை யாராவது கஷ்டப்படுத்தி விடுவார்களா? 

அவருக்கு நாம் பாதுகாப்பாக இருக்கலாமா?" 

என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விடுமாம்.

இதுவே பக்தி.


இந்த பக்தியை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், ஞானத்தை விட உயர்ந்தது என்று பார்க்கிறார்.


இந்திரன் 'பகவானுக்கு பால் அபிஷேகம் செய்தோம்' என்ற திருப்தியில் விடைபெற்றார்.


யசோதை, "கண்ணனுக்கு ஜலதோஷம் பிடிக்குமே!" 

என்று வருத்தப்பட, அவளுக்கு குழந்தையாகவே இருந்தான்.

மலையிலிருந்து இறங்கி, யசோதையிடம் ஓடி சென்று 'அம்மா..' என்று கட்டி கொள்ள, நன்றாக தலையை துவட்டி, கண்ணனை பார்த்து 

"கண்ணா.. மூக்கை சிந்து.. மூக்கை சிந்துடா..." 

என்று யசோதை கண்ணனின் ஒரு மூக்கை மூடி கொண்டு கேட்க, 

மூச்சை வெளியே விட தெரியாமல், மூச்சை இழுத்து கொண்டு, அறியா குழந்தையாக நின்றானாம் கண்ணன்.

'அனைத்தும் அறிந்தவன், ஒன்றும் தெரியாத குழந்தை போல செய்த கிருஷ்ண லீலை', ஞானிகளையும் மோஹிக்க செய்து, பக்தியின் பெருமையை காட்டியதாம். பெரும் ஆனந்தம் ஏற்பட்டு விடுமாம்.


ஞானியான வ்யாஸ்சருக்கு, ஸ்ரீ கிருஷ்ணர் தன்னை பகவான் என்று காட்டிய இடங்களை விட, யசோதையின் பக்திக்கு வசப்பட்டு, ஒன்றும் தெரியாத பாலகனாக செய்யும் லீலைகள் கண்ணீரையும், மன உருக்கத்தையும் தந்ததாம்.


பக்தியினால் ஏற்பட்ட இந்த மன உருக்கம், வ்யாஸருக்கு மன திருப்தியை, ஆனந்தத்தை அளித்ததாம்.


ஞானத்தை விட பக்தி ஆனந்தம் தரும். இந்த பக்தியை, நமக்கும் கிடைக்க செய்து, "பாகவதம்" என்ற மோக்ஷ கிரந்தத்தை நமக்கு அருளினார் வியாசர்.


அந்த வ்யாஸருக்கு நாம் அனைவருமே கடமைப்பட்டு இருக்கிறோம்.


இந்த பாகவதத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்து குந்தி தேவி துதிக்கிறாள்.. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.


இதே பாகவதத்தில் நோய்கள் விலக, எதிரிகள் தோற்க "நாராயண கவசம்" உள்ளது. 

அதன் அர்த்தத்தை அறிந்து கொள்ள இங்கே பார்க்கவும்.




Sunday 1 September 2019

ஞானியையும் புரிந்து கொள்ள முடியவில்லை. ஞானியை ஆஸ்ரயித்த பக்தனையும் புரிந்து கொள்ள முடியவில்லையே... ஏன்? தெரிந்து கொள்வோமே.

ஞானியின் செயலை, ஞானியின் அனுபவத்தை, புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.



"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் நினைப்பதே தவறு..

"ஞானியை புரிந்து கொண்டேன்" என்று அஞானிகளான ஜனங்கள் சொல்வதே பொய்.
கோடியில் ஒருவன் ஞானியாக பிறக்கிறான்.

சாதாரண மக்களும் வி(பி)ருந்தாவனம் போய் பார்க்கிறார்கள்.
புலன்களின் தூண்டுதலால் மனதில் ஏற்படும் எண்ணங்களேயே ஆதாரமாக கொண்டு பார்க்கும் சாதாரண மக்களுக்கு, உத்திர பிரதேசத்தில் உள்ள ஸ்ரீபிருந்தாவனமும், டில்லியை போன்று இன்னொரு ஊராக தான் தெரிகிறது.
ஞானியோ ஸ்ரீபிருந்தாவனம் என்றதுமே, கிருஷ்ணர் கால் பட்ட பிரதேசமாகவே அனுபவிக்கிறார்கள்.

உலகத்தில் எது எதையெல்லாம் பார்க்கிறோமோ, அனுபவிக்கிறோமோ அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே..

எதை பார்த்தாலும் சரி, எதை கேட்டாலும் சரி, எதை பற்றி மனதால்  சிந்தனை செய்தாலும் சரி அது எல்லாம் இயற்கையினால் வந்த ஸ்வபாவமே.

மனம் அழிந்து போன பிறகு, ஜென்ம ஜென்ம புண்ணியங்களால் ஏற்படக்கூடிய அனுபவமே இயற்க்கைக்கு அப்பாற்பட்டது. இந்த அனுபவத்தை ஞானிகள் மட்டுமே அனுபவிக்கிறார்கள். 

கண் காது மூக்கு, தோல், நாக்கு, மனம் போன்ற இந்திரியங்களால் நாம் அனுபவிக்கும் அனைத்து விஷயங்களும் 'காமமே'.
எந்த அனுபவத்தை மனமும் அழிந்த பிறகு அனுபவிக்கிறாயோ அதுவே 'பிரேமை'
என்று ஸ்ரீ கிருஷ்ண சைதன்யர் சொல்கிறார்..

அந்த பிரேமை சுயநலமில்லாதது. எதிர்பார்ப்பு இல்லாதது.
இந்த பிரேமை பகவானிடத்திலும், சத்குருவிடம் மட்டுமே ஏற்படும்.
மற்ற யாரிடத்திலும் நாம் கொள்ளும் அனுபவங்கள் எல்லாம் காமமே.

புலன்களால் தூண்டப்படாத, மனதுக்கு அப்பாற்பட்ட அனுபவங்கள் ஞானிக்கு ஏற்படுகிறது.

விஷய சுகத்திற்கு அப்பாற்பட்ட ஒரு நிலையை அனுபவிக்கிறார்கள் ஞானிகள்.

சாதாரண மக்களுக்கு "உறக்கம்", "விழிப்பு" என்ற நிலை ஏற்படுகிறது.

மகான்களுக்கு விழிப்பு நிலையில் "சமாதி" என்ற நிலையும் ஏற்படுவதுண்டு..
"சமாதி" நிலையில் "மூச்சும்" நின்று விடுகிறது..
கிருஷ்ண சைதன்யர் பிருந்தாவனம் வந்த போது, சமாதி நிலைக்கு சென்று விட்டார்.



சாதாரண மக்களால் இவர் நிலையை புரிந்து கொள்ள முடியுமா?

'கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் உயிரை பிரித்து கொண்டு விட்டாரா, இல்லை சமாதி நிலையில் தான் இருக்கிறாரா?'
என்று புரிந்து கொள்ள முடியாத பக்தர்கள், செய்வதறியாது,
அவரை சுற்றிக்கொண்டு அவருக்கு உயிரான "ஹரே ராம ஹரே கிருஷ்ண" மந்திரத்தை உரக்க சொல்ல ஆரம்பித்தனர்.
சமாதி நிலையில் உள்ள சைதன்யர் மூச்சு நின்று விட்டாலும், உடல் ஜில்லிட்டு போகவில்லை. உடல் கட்டை போல கிடக்கிறது.

ஒரு வாரம் ஆகியும், சைதன்யர் சமாதி நிலையை விட்டு வரவில்லை.

ஒரு ஞானியின் நிலையை, ஞானி மட்டுமே தெரிந்து கொள்ள முடியுமல்லவா...

அப்பொழுது ஸ்ரீ பிருந்தாவன யாத்திரையாக ராமச்சந்திர கவிராயர் என்பவர் வந்து இருந்தார்.

"கிருஷ்ண சைதன்யர் இப்படி கிடக்கிறார்... ஒரு வாரம் ஆகியும் நினைவு திரும்பவில்லை"
என்று பக்தர்கள் கவலைப்பட்டு சொல்ல,
கிருஷ்ண சைதன்யர் சமாதி நிலையில் கிடப்பதை பார்த்த கவிராயர், அவர் அருகிலேயே தானும் மூர்ச்சை ஆகி விழுந்து விட்டார்..
சிறிது நேரத்தில் இருவரின் சமாதியும் கலைந்து எழுந்து விட்டனர்.

கிருஷ்ண சைதன்யர் என்ற கௌரங்கர், சகஜ நிலைக்கு திரும்பினார்.
பக்தர்கள் ஆச்சர்யப்பட்டனர்.

என்ன நடந்தது?
ஏன் சைதன்யர் இப்படி ஆனார்?
என்று சாதாரண ஜனங்களுக்கு ஞானிகளின் எண்ண ஓட்டம், நிலை புரியுமா !!
ஒரு ஞானியை ஞானியே அறிய முடியும் அல்லவா.
ஸ்ரீ பிருந்தாவனம் வந்த சைதன்யர் (கௌரங்கர்), "பரமாத்மா ஸ்ரீ கிருஷ்ணர் இங்கு தானே லீலைகள் செய்தார்" என்ற அனுபவத்திலேயே, தியானத்தில் இருந்தார்.

அப்பொழுது, ராதையின் மோதிரம் யமுனையில் விழுவது போல ஒரு காட்சி.
அப்பொழுது ஸ்ரீ கிருஷ்ணர் வந்து கொண்டிருப்பது தெரிந்து, ஸ்ரீராதையின் தோழிகள்,
"நாங்கள் யமுனையில் இறங்கி, மோதிரத்தை தேடி எடுத்து கொண்டு வருகிறோம்"
என்று சொல்லி ராதையை அனுப்பி, யமுனையில் இறங்கி தேட ஆரம்பித்தனர்.






இந்த காட்சியை கண்ட கிருஷ்ண சைதன்யர், தானும் கௌரங்கி என்ற ஒரு கோபிகையாக ஆகி விட்டார்.
"மோதிரத்தை நான் தேடி எடுத்து வருகிறேன். ஸ்ரீ கிருஷ்ணரும் ராதையும் உங்களுக்காக காத்து இருப்பார்கள். நீங்கள் எல்லோரும்  செல்லுங்கள்" 
என்று அவர்களையும் ஸ்ரீ கிருஷ்ண தரிசனம் செய்ய அனுப்பி விட்டு, தானே யமுனையில் குதித்து மோதிரத்தை தேட ஆரம்பித்தார் கோபியான கௌரங்கி.

தானே ஒரு கோபியாக ஆகி, சமாதியில் லயித்து இருந்தார் சைதன்யர்.
ஒரு வாரம் ஆகி விட்டது... மோதிரம் கிடைக்கவில்லை..

கிருஷ்ண சைதன்யரின் இந்த அனுபவத்தை புரிந்து கொண்ட ஞானியான ராமச்சந்திர கவிராயர், தானும் அதே சமாதி நிலைக்கு சென்று, யமுனையில் தானும் குதித்து, விழுந்த ராதையின் மோதிரம் கிடைத்து விட்டதாக காட்ட, பரம ஆனந்தத்தை அடைந்து சகஜ நிலைக்கு திரும்பினார் கிருஷ்ண சைதன்யர்.

ஞானியின் நிலையை மற்றொரு ஞானி தானே அறிந்து கொள்கிறார். அறிந்து கொள்ள முடியும்.

நம்முடன் ஞானிகள் பழகினாலும், மனித ரூபம் எடுத்து விட்டதால்,
நம்மை போலவே ஞானிகள் கஷ்டப்படுகிறார்கள், சாப்பிடுகிறார்கள், உறங்குகிறார்கள் என்று தோன்றினாலும், "ஞானிகள் வேறு, நாம் வேறு" என்று அறிந்து பழக வேண்டும்.

"நம்மை போன்றவர் தான்" என்று நினைத்து ஏமாற கூடாது.

ஞானிகள் நிலையை, அனுபவத்தை, புலன்களை கொண்டு பார்க்கும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்பதை இந்த சம்பவத்திலேயே நாம் புரிந்து கொள்ளலாம்.

ஞானியை புரிந்து கொள்ள முடியாது என்பது ஒரு புறம் இருக்க,
இதை விட இன்னொரு ஆச்சர்யம்..
ஞானியை ஆச்ரயித்த ஜனங்களையும் உலகத்தார்களால் புரிந்து கொள்ள முடியாது.
பல கோடி புண்ணியங்களின் பலனாக, வைதீக லக்ஷணம் கொண்ட மகாத்மாவை, கோடியில் சிலர் ஸத்குருவாக அடைகிறார்கள்.

இப்படி வைதீக பூரணமான ஞானியான ஸத்குருவை அடைபவர்களையும், இந்த உலகில் உள்ள ஜனங்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

உலகத்தில் இருக்கும் மற்றவர்களை போல, இவர்கள் இருப்பதில்லை.
அன்பே (ப்ரேமை) உருவான, தெளிந்த ஞானம் உடைய, பகவானை நாம் நெருங்கி சென்று பார்த்தாலேயே,
அவருக்காக நாம் வாழ வேண்டும், அவருக்காக நாம் இருக்க வேண்டும் என்று மனம் மாறி விடும்.



இந்த அன்பு 'பகவானிடத்தில்' மட்டும் தான் ஏற்படும் என்று நினைத்து விட கூடாது...
நமக்கு பகவானை காட்டும் 'உத்தம குருவை' பார்த்தாலும் இதே போன்ற மனநிலை நமக்கு ஏற்பட்டு விடும்.
அன்பு எல்லையில்லாமல் ஊற்றெடுக்கும்.

ஆழ்வார்கள், பகவானிடம் ஏற்பட்ட இந்த ஈர்ப்பால், "எனக்கு உள்ள ஆசைக்கு இறுக கட்டி கொள்வேன்... கடித்து விழுங்கியே விடுவேன்" என்ற அளவுக்கு அன்பு மிகுதியால் பாடுகிறார்கள்...
இதே போன்ற எல்லையில்லா அன்பு, ஸத்குருவை பார்த்தாலும் தோன்றும்.

ஸத்குருவை அடைந்த இவர்களும், மற்றவர்கள் போல குடும்பம் நடத்துகிறார்கள்.. படிக்கிறார்கள்..  கஷ்டப்படுகிறார்கள்.. சிரிக்கிறார்கள்.. வேலைக்கு செல்கிறார்கள்.
என்னதான் இவர்கள் உலகத்தில் பழகினாலும், 'இவர்கள் வேறு மாதிரி தான் இருக்கிறார்கள்' என்று சாதாரண ஜனங்களுக்கு தோன்றுகிறது.
குருவையே தியானத்து கொண்டு,
குரு கொடுத்த பாகவதத்தையே எப்பொழுதும் படித்து கொண்டு இருக்கும் இவர்களுக்கும், வாழ்க்கையில் 'துக்கம் ஏற்படுகிறது, சுகம் ஏற்படுகிறது'

எத்தனை பெரிய துக்கம் வந்தாலும், சுகம் வந்தாலும், ஏதோ ஒரு சக்தி இவர்களுக்கு உள்ளேயே ரகசியமாக இருந்து கொண்டு, ஏதோ ஒரு 'ஆனந்தத்தை, தைரியத்தை' கொடுத்து கொண்டே இருக்கிறது.

அதுவே அவர்களை எந்த நிலையிலும், விடாமல் பக்தி செய்ய வைக்கிறது..
"பாகவதம் பாகவதம் என்று இதை கட்டி கொண்டு அழுகிறாயே!! என்ன கிழித்து விட்டாய்?.. " என்று கூட கோபத்தில் கேட்டு விடுவார்கள்.

"ஏன் இப்படி இருக்கிறோம்?" என்ற கேள்விக்கு ஸத்குருவின் கிருபைக்கு பாத்திரமான அவர்களால் கூட பதில் சொல்ல முடியாது...

"பாகவதம் படித்து என்ன பலன்? என்று என்னிடம் கேட்டு ப்ரயோஜனமில்லை.
நான் ஏன் படிக்கிறேன்? என்று என்னிடம் கேட்காதே..
உலகத்தில் என்ன தான் சகஜமாக பழகினாலும், ஏதோ ஒன்று எனக்குள்ளே உட்கார்ந்து கொண்டு இப்படி செய்ய வைக்கிறது... 
உனக்கு பதில் வேண்டுமென்றால், நேராக என் குருவிடம் சென்று கேள்"
என்று சொல்லி விட வேண்டுமாம்.
அதுவே உண்மையும் கூட.



சாதாரண ஜனங்களுக்கு, ஞானியான குருவை ஆச்ரயித்த பக்தனையே எளிதில் புரிந்து கொள்ள முடியாத போது,
ஒரு உண்மையான ஞானியை, நம் புலன்களை கொண்டு பார்த்து, புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைத்து விட முடியுமா!!

ஞானியின் செயலைஞானியின் அனுபவத்தை,
புலன்கள் வழியாகவே பார்க்கும் அஞானிகளான சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்ளவே முடியாது.

சாதாரண ஜனங்கள் கஷ்டம் வர கூடாது என்பதற்காக பல முயற்சிகள் செய்வார்கள்.
கஷ்டம் வந்தால் கவலைப்படுவார்கள். தைரியத்தை இழப்பார்கள். 

கஷ்ட காலத்திலும் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் தவிப்பார்கள்.

உத்தம ஞானியை குருவாக ஆச்ரயித்த பக்தன், அஞானியாக இருந்தாலும், கஷ்டம் வந்தாலும் கலங்காமல், ஏதோ ஒரு சக்தி உள்ளிருந்து காக்கிறது என்று மட்டும் உணர்ந்து வாழ்க்கையை தைரியமாக எதிர்கொள்கிறான்.

உத்தம ஞானியோ, புலன்களால் உந்தப்பட்டு, மனதால் ஏற்படும் எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல், தெய்வ சிந்தனையுடனேயே எப்பொழுதும் இருக்கின்றனர்.

உலகில் கோடீஸ்வரனுக்கும் வியாதி உண்டு, மரணம் உண்டு, துக்கம் உண்டு.

வாழ்க்கை (சம்சாரம்) என்றாலே அதில் துக்கமும் உண்டு, சுகமும் உண்டு.

சாதாரண ஜனங்கள், துக்கத்தை கண்டு அஞ்சுகின்றனர்.
துக்கம் வரக்கூடாதே என்று அஞ்சுகின்றனர்

வரும் துக்கத்திலும் நிதானமாக, ஆனந்தமாக மனதை ஆக்கி கொள்ள, ஸத் சங்கமே வழி.

ஆனந்தத்தையே எப்பொழுதும் அனுபவிக்கிறார்கள் 'ஞானிகள்'.

உத்தம குருவின் கருணைக்கு பாத்திரமான பக்தன்,
 அஞானியாக இருந்தாலும்,
குடும்ப கடமைகளை செய்து கொண்டிருந்தாலும்,
அவன் உள்ளிருந்து அனுபவிக்கும் ஆனந்தமும், குருநாதரின் நினைவும், அவனை வேறுபடுத்தி காட்டி விடுகிறது..
ஞானியை போன்று இவர்களும் சுகம் துக்கம் இரண்டையும் குருவின் அணுகிரஹ பலத்தால், சமமாக பார்க்க ஆரம்பிக்கிறார்கள்.

சுகம் வந்தாலும் அதிகமாக குதூகலிக்காமல்,
துக்கம் வந்தாலும் எல்லை மீறி கோபமோ துக்கமோ ஏற்படாமல்,
அஞானியாக இருந்தும், இவர்கள் சம நிலையில் இருக்கிறார்கள்.



சுகத்தையும், துக்கத்தையும் சமமாக பார்க்கும் இந்த அனுபவத்தை ஏப்படி அஞானியாக இருந்தும், இவர்கள் அடைகிறார்கள்? என்று கண்டுபிடித்து, அதற்கு காரணமான அந்த ஆத்ம ஞானியை நாமும் சரண் அடைவோமே என்று சாதாரண ஜனங்கள் அனைவரும் நினைக்க வேண்டும்..

ஸத் சங்கத்தை, நாம் அனைவரும் நாட வேண்டும்.

ஸத் சங்கத்தில் அஞானியாக இருக்கும் ஜனங்கள் கூட, வைதீகமான ஞான பூர்ணனான ஸத்குருவை ஆச்ரயித்தவர்கள் என்பதை மறக்க கூடாது.

ஸத் சங்கத்தை நாம் நாடு செல்லும் போது, நமக்காக அந்த ஞான குரு நன்மை தேடி வருவார்.
நமக்கும் ஞான அனுபவங்கள் ஏற்படும்.

உலக வாழ்க்கையில் ஏற்படும் துக்கங்களை எதிர்கொள்ள,
துக்க காலங்களிலும் ஆனந்தம் பாதிக்க படாமல் வாழ,
ஸத் சங்கத்தை, வைதீகமான ஞானியான ஸத்குருவை நாம் அனைவரும் ஆச்ரயிக்க வேண்டும்.

வாழ்க ஹிந்துக்கள்.

வாழ்க ஞானிகள்.  வாழ்க ஞானிகளை தொடரும் பக்தர்கள்.


Friday 21 June 2019

ஞானி எப்படி இருப்பார்? தெரிந்து கொள்வோமே

யார் பண்டிதன்? யார் ஞானி?
'எந்த காரியத்தை செய்தாலும், அது அந்த வாசுதேவனின் ஆராதனை' என்று உணர்ந்து செய்பவனே உண்மையான பண்டிதன்.






ஞானியின் அடையாளம்:
எப்பொழுதுமே ஒரு பலனை கருதி செய்யக்கூடாது.

நான் தான் செய்கிறேன் என்ற கர்வதோடும் செய்யக்கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், பலன் அடையும் மனிதர்களையோ, தெய்வங்களையோ நினைத்தும் செய்ய கூடாது.

நாம் செய்யும் காரியத்தால், தெய்வங்களோ, மனிதனோ தனக்கு ஏதாவது பலனாக தருவார்களா? என்றும் எதிர்பார்க்க கூடாது.

எந்த காரியத்தை செய்தாலும் சரி,
அது தெய்வத்துக்காக இருந்தாலும் சரி,
ஒரு மனிதனுக்காக இருந்தாலும் சரி,
விலங்கிற்காக ஆனாலும் சரி,
செய்யும் காரியம் அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கே' என்று மட்டும் உணர்ந்து,
'எதிர்பார்ப்பு, எரிச்சல், ஏமாற்றம், கோபம்' எதுவும் இல்லாமல், 
அந்தர்யாமியாக உள்ள அந்த 'பரமாத்மாவுக்கு ஆராதனை செய்ய நமக்கு கிடைத்த வாய்ப்பாக நினைத்து செய்பவனே - உண்மையான பண்டிதன்.
அவனே ஞானி.
ஞானி ஒரு செயலை செய்து, அதில் பலன் எதிர்பார்ப்பதில்லை.
காரணம், அவன் செய்யும் செயல்கள் யாவும் அந்த அந்தர்யாமியான வாசுதேவனை ஆராதனை செய்வதற்கே.



ஒரு செயல் செய்ததிலேயே, ஞானி திருப்தி அடைகிறான். 
'ஆராதனை செய்தோம்' என்ற திருப்தியில் இருக்கிறான். 
இவனே பண்டிதன். அவனே ஞானி.

சர்வேஸ்வரனே செய்கிறார், 
சர்வேஸ்வரனுக்கே இந்த பலன் சேருகிறது,
என்று இருப்பவன் பண்டிதன். அவனே ஞானி.

இப்படி செய்யும் எந்த கர்மாவின் பலன்களும், அவனிடம் சேராது. 

இப்படி செய்யும் எந்த கர்மாவும், அவனுடைய மோக்ஷத்திற்கு வழி செய்து கொடுத்து விடும்.


Monday 20 August 2018

யாரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது? இரண்டு ஞானிகள் உண்டு! சாஸ்திர ஞானி, சம்யக் ஞானி - ஒரு அலசல்

நமக்கு, ஞானம் இரண்டு விதத்தில் ஏற்படும், என்று வேதம் சொல்கிறது.
தெய்வத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
உலகத்தை பற்றிய ஞானமானாலும் சரி,
ஞானத்தை (ஒரு விஷயத்தை பற்றிய உண்மை அறிவு), இரண்டு வகையில் பெறலாம்.




ஒன்று : சாஸ்திர ஞானம். (Academic)
மற்றொன்று : சம்யக் ஞானம். (Experienced)

ஒருவன் ஒரு விஷயத்தை பற்றிய உண்மையான அறிவை (ஞானத்தை) பெற, அதற்கு சம்பந்தமான புத்தகங்களை (சாஸ்திரங்களை) படித்து தெரிந்து கொள்கிறான். இப்படி படித்ததினால் ஏற்படும் ஞானத்தை "சாஸ்திர ஞானம்" என்று சொல்கிறது வேதம்.

"கல்கண்டு சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும், மாம்பழம் சாப்பிட்டால் இனிப்பாக இருக்கும்" என்பதை ஒரு புத்தகத்தை படித்தே தெரிந்து கொள்ளலாம்.
இதை "சாஸ்திர ஞானம்" என்று சொல்லுவார்கள்.
படித்ததினால் உண்டாகும் அறிவு இது.

படித்ததை படித்ததோடு மட்டும் நிறுத்தாமல், அதை அனுபவத்தில் கொண்டு வந்தவனை, 'சம்யக் ஞானம்' உடையவர்கள் என்று சாஸ்திரம் சொல்கிறது.

மாம்பழத்தை சாப்பிட்டு, கல்கண்டையும் சாப்பிட்டு அனுபவித்தவன், எழுத்தால் வர்ணிக்க முடியாத இனிப்பு என்ற சுவையை, உண்மையில் அனுபவிக்கிறான்.
இதை 'சம்யக் ஞானம்' என்று சொல்லுவார்கள்.

படிக்காமல் ஒருவனுக்கு சம்யக் ஞானம் வராது.
முதலில் சாஸ்திர ஞானத்தை பெற்று, பின்னரே ஒருவன் சம்யக் ஞானத்தை அடைகிறான்.

பிறக்கும் பொழுதே சம்யக் ஞானியாக தோன்றிய சம்பந்தர், ரமணர் போன்றோர், முற்பிறவியில் சாஸ்திர ஞானம் ஸித்தி பெற்று, பிறக்கும் போதே சம்யக் ஞானியாக பிறக்கின்றனர்.

சாஸ்திர ஞானி, சம்யக் ஞானியிடம் தோற்றுவிடுவார்கள்.

முதலில் சாஸ்திர ஞானியாக இருந்து, பின் அனுபவத்தால் சம்யக் ஞான நிலை அடைவதால், உண்மையான ஞானிகள், சாஸ்திரத்தை ஒதுக்க மாட்டார்கள்.

ஒருவேளை சாஸ்திர ஞானத்தை சம்யக் ஞானி மறுத்தால், நாம் அவரை குருவாக ஏற்றுக்கொள்ள கூடாது.

குரு என்ற சமஸ்கரித சொல்லுக்கு, இருளை (அஞானத்தை) போக்குபவர் என்று அர்த்தம்.







சாஸ்திர ஞானியாகவும் இருந்து, சம்யக் ஞானியாகவும் இருக்கும் ஒரு ஞானி, யாருக்கு குருவாக கிடைகிறாரோ!! அவர்களே பாக்கியவான்கள். அப்படிப்பட்ட ஞானியே உண்மையான குரு.

ஸ்ரீ கிருஷ்ணர், தான் பகவானாக இருந்தும், சம்யக் ஞானியாகவே இருந்தும், உலகத்திற்கு வழி காட்டும் பொருட்டு, தானே குருகுல வாசம் செய்து சாஸ்திர பாடங்களை கற்று, சாஸ்திர ஞானத்தின் முக்கியத்துவத்தை காட்டினார்.

சாஸ்திரத்தை மீறி செய்யும் எந்த காரியமும், அதர்மமே!
எது அதர்மம் என்று தெரிந்து கொள்ள, சாஸ்திர ஞானம் அடிப்படை தேவையாகிறது.

ஒரு விஷயத்தை பற்றிய சாஸ்திர ஞானம் உயர்ந்தது தான்.
அதை விட உயர்ந்தது சம்யக் ஞானம்.

அமெரிக்காவில் உள்ள ஒருவன் தன் நாட்டை பற்றி புத்தகம் எழுதுகிறான். வேறு தேசத்தில் உள்ளவனுக்கு அதை படிப்பதினால் "சாஸ்திர ஞானம்" ஏற்படுகிறது.
எழுதினவன் உண்மையை எழுதி உள்ளானா? பொய்யான விஷயங்களை எழுதி உள்ளானா? என்பது, சாஸ்திர ஞானத்தால் மட்டும் புரிந்து கொள்ள முடியாது.
உண்மையில் அமெரிக்கா சென்று, 10 வருடங்கள் இருந்து, அவன் படித்த புத்தகம் உண்மை என்று உணர்ந்தால், அதுவே சம்யக் ஞானம்.

பொதுவாக, பாரத தேசத்தில், ஆத்மாவை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.
மற்ற நாடுகளில், உலகை அறிந்து கொள்ள விரும்பும் ஞானிகள் உதித்து கொண்டே இருக்கின்றனர்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.
அதே போல,
மற்ற நாடுகளில், உலக விஷயங்களை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்த "சாஸ்திர ஞானிகளை" காணலாம்.

பாரத தேசத்தில், ஆத்மாவை பற்றிய ஆராய்ச்சியில் பல சாஸ்திரங்களை படித்து, அதை பின்பற்றி, அதை அனுபவத்தில் கொண்டு வந்த சம்யக் ஞானிகளையும் காணலாம். இவர்களே மகாத்மாக்கள். இவர்களே மெய் ஞானிகள்.
மெய் ஞானிகளை, குருவாக பெற்றவர்கள் பாக்கியவான்கள்.

தெய்வத்தை காண, வேத சாஸ்திரங்கள் வழி சொல்கின்றன.
சாஸ்திர அறிவு மட்டும் பெற்றவன் "சாஸ்திர ஞானி".
அது சொன்ன படி வாழ்க்கையை அமைத்து, தெய்வத்தை தன் அனுபவத்தில் உணர்ந்தவர்களே "சம்யக் ஞானி".

சாஸ்திரம் தெய்வத்தை காண, பல நிபந்தனைகளை விதிக்கிறது.
மனசு, வாக்கு, மெய் (உடல்) இந்த மூன்றாலும் ஒழுக்கமாக இருக்க சொல்கிறது.
இப்படி ஒழுக்கம் உள்ள ஒருவனுக்கு, பகவானை அடைய பல வழிகளையும் சொல்கிறது.

தஞ்சாவூர், திருவையாற்றில் பிறந்த தியாகராஜர், சிறுவனாக இருந்த போது, அவர் தந்தை மரண படுக்கையில் இருந்தார்.

தன் மகனுக்கு கொடுக்க சொத்து ஒன்றும் இல்லை அவரிடம்.
தியாகராஜரை அருகில் கூப்பிட்டு, "100 கோடி தடவை "ராம ராம" என்று சொல். ஸ்ரீ ராமர் வெறும் சொப்பனத்தில் தரிசனம் தராமல், நேரில் வந்து காட்சி தருவார்' என்று சொல்லி உயிர் துறந்தார்.

அனுபவத்தில் கொண்டு வந்து,
ஸ்ரீ ராமரை பார்த்தே தீர வேண்டும் என்று அன்றிலிருந்தே ஆரம்பித்தார் தியாகராஜர்.
தினமும் ராம நாம ஜபம் என்று உட்கார்ந்து கணக்கு வைத்துக்கொள்வார்.

80 கோடி முடித்த சமயத்தில், அவர் வீட்டின் கதவை திறந்து கொண்டு, ஸ்ரீ ராமர், தன்னுடன் சீதை, லக்ஷ்மணன், ஹனுமான் என்று அனைவரும் சூழ தியாகராஜர் வீட்டுக்குள் கண்ணால் காணும்படியாக உள்ளே நுழைந்தார். தியாகராஜரின் மனைவி என்ற காரணத்தாலேயே, அவளும் இந்த அற்புதமான தரிசனத்தை பெற்றாள்.

"80 கோடி தானே முடிந்தது, 100 கோடி இன்னும் சொல்லவில்லையே?" என்று தியாகராஜர் கேட்க,




"ஜபம் தவிர்த்து, நடக்கும் போதும், அமரும் போதும், எப்பொப்பொழுதெல்லாம் ராம நாமம் சொன்னீர்களோ, அதையும் நான் கணக்கு எடுத்து கொண்டிருந்தேன். இப்பொழுது 100 கோடி முடிந்து விட்டது. தரிசனம் தர வந்து விட்டேன்"
என்றாராம் ஸ்ரீ ராமர்.
இப்படி கதவை திறந்து, ஸ்ரீ ராமர் உள்ளே வந்த போதுதான், தியாகராஜர், கண்ணுக்கு நேர் நிற்கும் ஸ்ரீ ராமரை பார்த்து
"பால கனக மய ... "
என்று பாடுகிறார். 
(ராமர் காட்சி கொடுத்த போது, தியாகராஜர் பரவசத்துடன் உள்ளே வரவேற்கும் போது பாடிய பாடல் கேட்க
https://youtu.be/sw9lE0VKd1A
https://www.dailymotion.com/video/x1e607u )
அனுபவத்தில் கொண்டு வந்த ஞானிகளே "சம்யக் ஞானிகள்".
சம்யக் ஞானிகளை குருவாக கொண்டவர்கள் பாக்கியசாலிகள்.



Friday 16 March 2018

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து. எத்தனை முட்டாள் தனம்?

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து.

நமக்கும் மேல் உள்ள கடவுளை,
நம்மால் உணர முடியாத கடவுளை,
நம்மையும் படைத்த கடவுளை,
ஒரு வடிவமாக அமைத்து வழிபடுவது என்பது, எத்தனை முட்டாள் தனம்?



அதை விட முட்டாள் தனம், கல்லையே "கடவுள்" என்று நம்புவது.
அதை விட முட்டாள் தனம், அந்த கல்லிடம் போய் பேசுவது, பாடுவது, வரம் கேட்பது.


இப்படி ஒரு கேள்வி, ஹிந்துக்கள் முன் வைக்கப்படுகிறது.

உண்மையில்,
ஒரு சிறு குழந்தையை, கோவிலுக்கு கூட்டிச்சென்று "இது உம்மாச்சி" என்று சிவலிங்கத்தை பார்த்து கும்பிட சொன்னால், சில குழந்தைகள் கேட்கும் முதல் கேள்வியும் இது தான் "இது கல்லு தானே'" என்று.

மிக சாதாரண கேள்வி.
பெரும்பாலும் பாரத குழந்தைகள் கூட இது போன்ற கேள்வியை கேட்பதில்லை.
காரணம் பாரத குழந்தைகள் கூட அறியும், "இது ஒரு சாதாரண கேள்விஎன்று.

வளர்ந்த பின்னும், இந்த கேள்வி சிலருக்கு மனதில் எழுந்து கொண்டே இருக்கும்.
பதில் சொன்னாலும் புரியாது.

கல்லை, "கடவுள்" என்று கும்பிடுகிறான் ஹிந்து என்று வளர்ந்து, முடி நரைத்த பின்னும், சிர் இன்று கூட இந்த கேள்வியை, கேட்பதை உலகத்தில் நாம் பார்க்கலாம்.

கல்லை "கடவுள்" என்று ஏன் ஹிந்து வழிபடுகிறான்?  
இதற்கு பதில் இல்லாமலா கோடிக்கணக்கான வருடங்களாக ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்?  சற்று யோசிப்போம்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள், பண்பு உடையவர்கள்.
இதை உலகமே ஒத்துக்கொள்கிறது.



பெரும்பாலும் ஹிந்துக்கள் சிலை வழிபாடு செய்கின்றனர்.

பாரத மக்கள் பெரும்பாலும் அறிவாளிகள் என்றால், பெரும்பாலான ஹிந்துக்கள் வழிபடும் சிலை வழிபாடும் சரியாக தான் இருக்க வேண்டும்.

அறிவாளிகள் என்பதால் தான், இன்று வரை சிலை வழிபாடு செய்கின்றனர்.

"கல்லை 'கடவுள்' என்று கும்பிடுகிறான்" என்று கேள்வி கேட்பவர்கள், இதோடு, இன்னொரு கேள்வியும் கேட்கலாமே?
ஏன், அதே கல்லில் செய்யப்பட்ட, அதே கடவுள் சிலையை, தூண்களிலோ கோபுரத்திலோ, கடைகளிலோ, மியூசியத்திலோ காணும் போது, மிஞ்சி போனால், மரியாதையாக பார்க்கிறானே தவிர, பூஜையோ, வேண்டுதலோ, செய்யவில்லை?

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை "தெய்வமா?" என்று ஹிந்துவிடம் கேட்டால், "இது சிலை" என்கிறான்.

காலில் விழுந்து, சூடம் ஏற்றி வரம் கேட்காமல், "இது சிலை" என்கிறான்.
செருப்பு அணிந்து கொண்டு அருகில் நிற்கிறான்.

"மியூசியத்தில் இருக்கும் இந்த சிலை 'தெய்வ சிலை' தானே?" 
என்று கேட்டால்,
"ஆம், தெய்வ சிலை தான், ஆனால் இதுவே தெய்வம் இல்லை. தெய்வ சிலையாக இருப்பதால்மரியாதை செய்கிறேன்.
ஆனால் வழிபட வேண்டும் என்று தோன்றவில்லை" என்கிறான்.

அப்படியென்றால், பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்என்று நினைக்கவில்லையா? என்ற கேள்வி எழுகிறது. இது யோசிக்கவும் வைக்கிறது.

அழகான கடவுள் சிலை, கோவில் தூணில் இருந்தால், பார்த்து "அழகாக இருக்கிறது" என்று ரசிக்கிறானே தவிர கும்பிடுவதில்லை.
தூணில் இருக்கும் சிலையை, "தெய்வத்தின் பிம்பம்" என்று தான் பார்க்கிறான். அதுவே "தெய்வம்" என்று பார்க்கவில்லை.

நமக்கு பிடித்த ஒருவரின் போட்டோவை, சிலையை வைத்து இருப்பது போல தான், தூணில் இருக்கும் தெய்வத்தை பார்க்கிறான்.
அதிக பட்சம் தெய்வ சிலையை பார்த்தால், மரியாதை செய்கிறான்.
இதுவே "தெய்வம்" என்று நினைப்பதில்லை

ஒரு தூணில் இருக்கும் தெய்வ சிலையை, "தெய்வம்" என்று நினைக்காவிட்டாலும், தெய்வ சிலையாக உள்ளதால்மரியாதையாக பார்க்கிறான்.




ஆனால்,
தூணில் இருக்கும் தெய்வ சிலையையும், கோவிலில் கர்ப்க்ரஹத்தில் உள்ள சிலையையும் ஹிந்து ஒன்றாக பார்க்கிறானா ?
பதில்: இல்லை.
இதில் தான் ரகசியம் அடங்கி இருக்கிறது.

தூணில் இருக்கும் சிவனின் சிலை, பிரம்மாண்டமாக மிக அழகாக கூட இருக்கும்.
அந்த சிலையை, "கல் சிலை" என்று பார்க்கிறான் ஹிந்து.

கோவிலில் எங்கு பார்த்தாலும் கடவுள் சிலைகள்.
அனைத்தையும் "கல் சிலை" என்றே பார்க்கிறான்.

ஆச்சர்யம் எங்கே என்று கவனித்தால்?
அந்த கோவிலில் கர்ப்க்ரஹத்தில் இருக்கும்,
அழகான உருவம் கூட இல்லாத,
பார்ப்பதற்கு, நிமிர்த்தி வைத்த அம்மி கல் போன்ற கல்லை,
"சிவன்" என்று சொல்கிறான்.

தூணில் மிக அழகாக வடித்து வைத்து இருந்த சிவனின் சிலையை, 'சிவன் சிலை" என்று பார்த்த இந்த ஹிந்து,
இந்த லிங்க கல்லை, "தெய்வம்" என்று பார்க்கிறான்.
"சிவன்" என்று தீர்மானமாக சொல்கிறான்.

அதை விட ஆச்சர்யம், அதை "தெய்வம்" என்று நினைப்பதால், அந்த கல்லை, "சிவன்" என்று பார்த்து, தன் பிரார்த்தனைகளை செய்து வழிபடுகிறான்.

பொதுவாக ஸ்ரீ கிருஷ்ணர் என்றாலே அழகு உடையவர்.
அவருடைய சிலையை, உருவத்தை பார்த்தாலே அழகாக இருக்கும்.

நாதீகனுக்கும், கிறிஸ்தவனுக்கும், முஸ்லிமுக்கு கூட, ஸ்ரீ கிருஷ்ணனின் குழந்தை உருவத்தை பார்த்தால் பிடித்து போகும்.
பூரி ஜகன்நாத்தில் இருக்கும் ஸ்ரீ கிருஷ்ண விக்ரஹம் பார்க்கும் போது, நம்மை ஒரு நிமிஷம் பதற வைக்கும்.
மர கட்டையில், பெரிய முழியுடன் கை கால் விழுந்தது போன்ற நிலையில் இருக்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.



(இது என்ன காரணம் என்று அறிய ஆவல் இருந்தால், இங்கு படிக்கவும் ... http://proudhindudharma.blogspot.in/2017/12/odisha-orissa.html?m=1)

ஆச்சர்யம் என்னவென்றால், கர்ப்க்ரஹத்தில் இருக்கும் லிங்கத்தை பார்த்து கடவுள் என்று உணருவது போல, இந்த மர சிலையை பார்த்தாலும், ஏற்படுகிறது.

கர்ப்க்ரஹத்தை விட்டு, இந்த ஹிந்துக்கள் வெளியே வந்த பிறகு, அதே போன்ற சிலையை வெளியில் காண்பித்தால், "சிலை" என்கிறான்.

ஹிந்துக்கள் பார்க்கும் கல்லை எல்லாம் "கடவுள்" என்று வழிபாடு செய்வது போல தெரியவில்லையே?


  • கடவுள் நம்மை படைத்தார்.
  • கடவுள் நம் கற்பனைக்கு, புத்திக்கு எட்டாதவர்.

இப்படி நம் வேதத்தில் சொல்லி இருக்கிறது.

எங்கும் உள்ள இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
இறைவனுக்கு, கோவில் தேவை இல்லை.
ஆனால்,
நமக்கு, இறைவன் ஒரு இடத்தில், ஒரு உருவத்தில் தேவைப்படுகிறான்.

"எல்லாம் ப்ரம்மமயம்" என்று இருக்கும் அத்வைத "ஞானி"
கல்லை தெய்வம் என்று கும்பிடுவதில்லை.

எங்கும் அந்த கடவுள் இருக்கிறார் என்று இருந்த ஞானி யார்? என்று பார்க்கும் போது, நமக்கு தெரிபவர், "பிரகலாதன்".
பிரகலாதன், "நாராயணன் எங்கும் உள்ளார்" என்ற அத்வைத நிலையிலேயே இருந்தார்.

தன் தந்தை ஹிரண்யகசிபு பல வழிகளில் கொலை செய்ய முயற்சி செய்தும், பிரகலாதன் நாராயணனை உதவிக்கு கூப்பிடவில்லை.

ஏன்?

அனைத்துமே நாராயணன் என்று பார்த்து கொண்டிருந்த பிரகலாதன், தன் தந்தை, மலை, விஷம், தன்னை கொலை செய்ய வருபவன், தான் உட்பட அனைத்தையும் நாராயணனாகவே பார்த்தான்.
இவை எல்லாம் வேறு, நாராயணன் வேறு என்று தோன்றினால் தானே, "நாராயணா, காப்பாற்று" என்று ஒருவன் சொல்லுவான்?

இந்த நிலையில் எங்கும் கடவுளை பார்த்த பிரகலாதன், விஷம் குடிக்க சொன்னாலும், அதுவும் நாராயணனே என்று விஷத்தை குடித்தான்.  

ஒன்றும் ஆகவில்லை என்றதும் ஹிரண்யகசிபு குழம்பினான்.
ஆனால் பிரகலாதன், 'தான் பிழைத்தற்கு நன்றி' என்று கூட நாராயணனுக்கு சொல்லவில்லை.
தான் பிழைத்தது பற்றி ஆச்சர்யப்பட கூட இல்லை.

இப்படிப்பட்ட ஞானிக்கு, சிலை வழிபாடு தேவை இல்லை.

எப்படி சிலை வழிபாடு தோன்றியது?
ஏன் கர்ப்க்ரஹத்தில் இருக்கும் கல்லை "தெய்வம்" என்று சொல்கிறான்?  
 அதே கல்லை கோவிலில் கோபுரத்தில் பார்த்தால் "சிலை" என்கிறான். என்ன ரகசியம் இது?



இதற்கு பதிலையும், பிரகலாதன் வாழ்க்கையிலேயே கண்டு பிடித்து விடலாம்.

தூணில் உள்ள தெய்வ சிலை தெய்வமில்லை, ஆனால் கர்பக்ரஹத்தில் உள்ள சிலையை "தெய்வம்" என்று எப்படி ஆனது

ஹிரண்யகசிபு, தன் மகனை பார்த்து, "அந்த நாராயணன் எங்கடா இருக்கிறான்?" என்று ஆத்திரத்தோடு கேட்கிறான்.

எங்கும் நாராயணனை பார்க்கும் பிரகலாதனுக்கோ, இவன் கேட்கும் கேள்விக்கு, "இங்கு தான் உள்ளார்" என்று ஒரு இடத்தை பார்த்து சொல்ல முடியவில்லை.
அதனால், "நாராயணன் எங்கும் உள்ளார்." என்றார்.

தெய்வம் எங்கும் உள்ளார் என்று புரிந்து கொள்ள முடியாத ஹிரண்யகசிபு,
"ஏதாவது ஒரு இடத்தை காட்டி இங்கு உள்ளார் என்று சொல் அவனை கொன்று விடுகிறேன்" என்கிறான்.

எங்கும் நாரராயணனை பார்க்கும், பிரகலாதனால், எந்த இடத்தை காட்டி சொல்ல முடியும்?

இவன் இப்படி கேட்டால் சொல்ல மாட்டான் என்று ஹிரண்யகசிபு, தானே, கல் மண் கொண்டு கட்டிய தூணை பார்த்து, "இதில் இல்லையா உன் நாராயணன்?" என்றான்.

இந்த கேள்வி பதில் சொல்ல எளிதாக இருந்தது பிரகலாதனுக்கு.

"எங்கும் நாராயணனே இருக்கிறார் என்கிற பொழுது, இந்த தூணிலும் இருக்கிறாரே. உங்களுக்கு தெரியவில்லையா?" என்றான் பிரகலாதன்.

நான் கட்டிய கல் தூணில், என் மாளிகையில் உள்ள இந்த தூணில், நாராயணன் இருக்கிறானா? என்றான்.

பிரகலாதனுக்கு "நாராயணன் தூணுக்குள் தெரியவில்லை, தூணும் நாராயணனாக தான் தெரிந்தது".

அதனால், பிரகலாதன், "இதோ இருக்கிறாரே" என்றான்.

ஹிரண்யகசிபு, தூணுக்கு உள்ளே நாராயணன் இருக்கிறான் போல, அதை தான் தன் மகன் பார்க்கிறான் போல என்று நினைத்து,  
இந்த தூணை உடைத்து, உள்ளே இருக்கும் நாராயணனை பிடித்து கொன்று விடுவோம் என்று நினைத்தான்.

தன் கையாலேயே, தான் கட்டிய கல்தூணை ஓங்கி ஒரு குத்து விட்டான்.
இடி விழுந்தது போன்ற சத்தத்தில், தூண் இரண்டாக பிளக்க, கல் தூணில் இருந்து, படு பயங்கர உக்கிர மூர்த்தியாக, சிங்க முகத்தில், மனித உடம்பை கொண்டு, "நரசிங்கமாக" வெளி வந்தார் 'நாராயணன்'.

கல் எப்படி தெய்வம் ஆகிறது?
இப்பொழுது புரிந்து இருக்கும்.

பார்க்கும் கல்லை எல்லாம், ஹிந்துக்கள் தெய்வம் என்று கும்பிடுவதில்லை.  
அந்த தெய்வ பிம்பத்திற்கு மரியாதை தான் செய்கின்றனர்.

சில கல் மட்டும், தெய்வம் ஆகிறது.
 
கல் தெய்வம் ஆனது ஏன்?

பிரகலாதன் போன்ற ஞானியும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும், பக்தர்களும், ஏதோ ஒரு சமயத்தில்
ஒரு கல்லையோ, மரத்தையோ, மலையையோ தெய்வம் என்று பூஜித்து, அதில் தெய்வம் வெளிப்பட்டு அவர்களுக்கு அணுகிரஹம் பெறுகிறார்கள்.



பாரத மண்ணில் மட்டும் தான் ஞானிகள் மீண்டும் மீண்டும் பிறக்க ஆசைப்படுகின்றனர்.

இவர்களால் பூஜிக்கப்பட்ட கல் சிலையில், தெய்வங்கள் காட்சி கொடுக்க, இரக்க குணம் கொண்ட நம் ரிஷிகள், ஞானிகள், யோகிகள், அந்த தெய்வத்திடம், தான் மறைந்தாலும், இந்த கல்லில், மரத்தில், மலையில் சாந்நித்யதோடு இருக்குமாறு வரம் வாங்கி விடுகின்றனர்.

இங்கு வந்து பிரார்த்திக்கும் சாதாரண ஜனங்களுக்கும், இது கல் என்று தோன்றாமல், தெய்வம் என்று மனதில் எண்ணம் உருவாக்கி, அவர்கள் குறைகள் யாவையும் தீர்க்க வேண்டும் என்று பிரார்த்தித்து, வரமாக வாங்கி விடுகின்றனர்.

"சாதாரண ஜனங்கள், உன்னை போன்ற நம்பிக்கை இல்லாதவன் ஆயிற்றே. ஒழுக்கம் இல்லாதவன் கூட என்னிடம் வந்து நிற்பானே
என்று நாராயணன் கேட்டால்,
"தனக்காக இந்த சாதாரண ஜனங்கள் செய்யும் பிழை, பாவத்தை பொறுத்து கொண்டு, அணுகிரஹம் மட்டுமே செய்ய வேண்டும்"
என்று தங்கள் பக்தியால் கட்டிப்போட்டு விடுகின்றனர்.

இப்படி ஒவ்வொரு கோவிலுக்கு சென்று, அந்த மூல விக்ரஹ சிலை யாரால் அமைக்கப்பட்டது என்று அறிந்து கொண்டால், யாரோ ஒரு ரிஷியோஞானியோ, யோகியோ, மகானோ, பக்தனோ ஏதோ ஒரு அணுகிரஹத்தால் அமைத்து இருப்பார் 
அவரின் பிரார்த்தனை பொறுத்து, அந்த கோவில் தெய்வங்கள் அணுகிரஹம் செய்கிறது.

அதனால் தான்,

  • இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், குழந்தை பிறக்கும்.
  • இந்த சிவன் கோவிலுக்கு போனால், கணவன் மனைவி சண்டை தீர்ந்து, அன்பு வளரும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் மோக்ஷம் கிடைக்கும்.
  • இந்த பெருமாள் கோவிலுக்கு போனால் செல்வம் கிடைக்கும்.

என்று ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு பலன் சொல்கின்றனர்.

ஒரே சிவன் தான்.
ஏன் இந்த சிவன் கோவிலுக்கு சென்றால், இந்த பலன்?
அந்த சிவன் கோவிலுக்கு சென்றால் உன்னொரு பலன்? என்று வித்யாசம் சொல்கின்றனர்?
சிவனுக்கு ஏன் ஒரே கோவிலில் அணைத்து பலனையும் கொடுக்க சக்தி இல்லையா?

இதற்கு காரணமும் இப்பொழுது புரிந்து இருக்கும்.
ஏன் திருப்பதியில் மட்டும் இத்தனை கூட்டம்

ஒரு கல்லில் தன்னை வெளிப்படுத்தி, ஏதோ ஒரு பக்தனுக்காக வருகிறார் பெருமாள்.
அந்த பக்தன் கேட்ட வரத்திற்கு ஏற்ப அந்தந்த கோவிலில் அணுகிரஹம் செய்கிறார்.

ஆனால், திருப்பதி பெருமாள் மட்டும், எந்த பக்தனுக்காகவும் வந்தவர் இல்லை.
தானே இஷ்டப்பட்டு, சிலையாக வைகுண்டத்தில் இருந்து இறங்கி வந்தவர்.
இந்த காரணத்தால், திருப்பதி பெருமாளுக்கு மட்டும், வரும் பக்தனுக்கு கருணை செய்ய தடையே இல்லை.
அனைத்து பலனையும் தானே தருகிறார்.
வேண்டுவதெல்லாம் பலிக்கிறது.

இதனால் தான் திருப்பதி பெருமாளுக்கு மட்டும் கூட்டம் அலை மோதுகிறது.

கல் கடவுள் இல்லை. ஆனால், கடவுள் ஒரு பக்தனுக்காக வருகிறான்.
அவன் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறான்.

நம் வீட்டில் உள்ள, சிறு கிருஷ்ண விக்ரஹத்தையும், சிறு சிவ லிங்கத்தையும் கூட, அந்த பிரகலாதன் போன்று பக்தி செய்தால், நம் வீட்டில் உள்ள குட்டி சிலையிலும் பகவான் தன் சாந்நித்யத்தை வெளி காட்டுவார்.



நம்மிடம் பேசும் அளவிற்கு பக்தி செய்ய முடிந்தால், ஞானிகள் போன்று, உலகத்திற்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம்,
நம் குடும்பத்தில் பிறக்கும் தலைமுறைகள் நோய் இல்லாமல், சிறப்போடு, பக்தியுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தித்து, பகவானிடம் நம் பக்தியால் வரம் வாங்கி கொடுத்து விடலாம்.

கோவிலில் கர்ப்கிரஹ சிலையில் தெய்வம் இருக்க செய்த ஞானிக்கு, ரிஷிக்கு, மகானுக்கு, பக்தனுக்கு நாம் என்ன பதில் செய்ய முடியும்?

இவர்கள் நமக்காக கடவுளை பக்தியால் ஒரு கல்லில் கட்டுப்படுத்தாமல் இருந்து இருந்தால்,
வானத்தை பார்த்து, "கடவுளே, கடவுளே எங்கு இருக்கிறாய்?" என்று ஹிரண்யகசிபு போல கத்தி கொண்டு இருந்து இருப்போம்.

தெய்வ அணுகிரஹம், ஒரு ஞானியின் சிபாரிசு மூலம் நமக்கு கோவிலில் கிடைத்து விடுகிறது.

தெய்வ அனுக்கிரகம் நாமே சம்பாதிக்க, நமக்கோ தெய்வ பக்தி இல்லை.  

தெய்வ அணுகிரஹம் இல்லாமல் போனால், செய்யும் பாவங்கள் எறிக்கொண்டே போகும்.
செய்த புண்ணியத்துக்கு மட்டுமே பலன் கிடைக்கும்.
தெய்வ அணுகிரஹத்தால் கிடைக்கும் பலன்கள் கிடைக்காமல் போகும்.

கோவிலுக்கு சென்று வழிபடுவது எத்தனை முக்கியம் என்று இப்பொழுது புரிந்து இருக்கும்.
யாரோ ஒரு ஞானி, நமக்காக தெய்வத்தை தன் பக்தியால் கட்டி போட்டு இருக்கிறார்.

நாம் போய், பிரார்த்தனை செய்வது ஒன்றே போதுமானது. தெய்வம் வேறு வழி இல்லாமல் அணுகிரஹிக்கும்.

பலன் அடைந்தால், "நன்றி" அந்த தெய்வத்துக்கு சொல்கிறோமோ இல்லையோ,  
அந்த தெய்வத்தை நிறுத்திய அந்த ஞானிக்கோ, மகானுக்கோ நாம் செய்ய வேண்டும்.

"நன்றி உள்ள மனிதன்", ஞானிகளையோ, மகான்களையோ, யோகிகளையோ, பக்தனையோ மறக்க மாட்டான்.
தெய்வத்தை நமக்கும் அணுகிரஹம் செய்ய வைத்த, அந்த மகானே நமக்கு குரு.

வாழ்க ஹிந்து

Hare Rama Hare Krishna - Bhajan
Sandhyavandanam - Morning Prayer (With meaning)

Sandhyavandanam - Afternoon Prayer (With meaning)




Sandhyavandanam - Evening Prayer (with meaning)