Followers

Search Here...

Showing posts with label ஜாதி. Show all posts
Showing posts with label ஜாதி. Show all posts

Wednesday 25 September 2019

ஜாதிகள் இருந்தாலும், "வர்ண கட்டுப்பாடு" இன்று இல்லை.. இதனால் நாம் இழந்தது என்ன? கல்வியில் மாற்றம் எப்படி கொண்டு வரலாம்?... ஒரு அலசல்.

"பாரத நாட்டை விட்டு, வெளிநாட்டில் போய் வாழலாம். வேலை கிடைக்கும். அதிக பணம் சம்பாதிக்கலாம்"
என்று ஒருவன் கூட போக விரும்பாத காலமாக, பாரத நாடு ஒரு சமயம் இருந்தது..
'பொருளாதாரத்தில்' பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்த சமயம்.
'வர்ணங்கள் கலக்காமல்' இருந்த காலம் அது.
'தொழில்கள் அவரவர்களுக்கு மட்டுமே பாதுகாக்கப்பட்டதால்',  பொருளாதாரத்தில் பாரத நாடு உலகத்தை பொறாமை பட வைத்தது.


பாரத நாட்டில் லட்சக்கணக்கான வருடங்களாக கடைபிடிக்கப்படும் "வேத தர்மத்தை" விட்டுவிட்டு, "புத்தர் வழியில் வாழ்வோம்" என்று போன பாரத மக்களால் வந்தது வினை.. பேரழிவு..
ஈரான் ஆரம்பித்து ஆப்கான், சிந்து தேசங்களில் பெரும்பாலானவர்கள் பௌத்தனாக ஆனதால்,
போர், வீரம் போன்றவை மறந்து, எல்லோரும் சந்நியாசி போல ஆகி இருந்தனர்.

947AD சமயத்தில் இஸ்லாமிய மதம் நுழைந்து, போர் பயிற்சி இல்லாத ஈரான், பாரத நாடான ஆப்கான், சிந்து தேசங்களை கைப்பற்றினர்..
பௌத்தனாக இருந்த ஈரான் அரசன் அமீர் சூரி, இஸ்லாமுக்கு மாறினான். 
ஆப்கானில் உள்ள கோர் (ghor) என்ற இடத்தில் பிறந்ததால், கோரி அரச பரம்பரை உருவானது..
அவன் குடும்பத்தில் தான் "முகம்மது கோரி" என்ற பிறப்பால் இஸ்லாமியன் பிறந்து, பாரத நாட்டை இஸ்லாமிய நாடாக ஆக்க முயன்றான்.

அன்று ஆரம்பித்தது, அந்நிய தர்மங்கள் படையெடுப்பு..
இந்திய பொருளாதாரத்தை கண்டு,
கோவிலில் இருக்கும் செல்வங்களை  கண்டு,,
அரசர்கள், பெண்கள் வைத்திருந்த வைர ஆபரணங்களை கண்டு,
உலகை பொறாமை பட வைத்தது.

அரேபிய நாட்டினர், 
பாரத நாட்டை கொள்ளை அடிக்க "1000 வருடம் நுழைந்தனர்"..

ஒரே ஒரு சோம்நாத் கோவிலை கொள்ளை அடித்தாலே போதும் என்று 18 முறை போர் தொடுத்தான் முகமது கஜினி என்றால், பாரத தேசம் முழுவதும் எத்தனை செல்வம் இருந்து இருக்கும்? என்று நினைத்து பார்க்க வேண்டும்.

1739ADல் ஈரான் தேசத்தில் இருந்து வந்த நாதீர் ஷா (Nadir Shah) என்ற இஸ்லாமியன், ஒரே ஒரு நாள் டெல்லியை தாக்கினான்.
டெல்லியில், ஒரே நாளில், 30000 பொது மக்களை கொன்றான். 
முகலாய அரசன் என்று இருந்த "முகமது ஷா" தோல்வியை ஒப்புக்கொண்டு 'என்ன வேண்டுமோ எடுத்து கொள்ள சொல்லிவிட்டான்'.
நாதீர் ஷா, அந்த ஒருநாளில் கொள்ளை அடித்து போன செல்வத்தை வைத்து கொண்டே, அவன் தன் ஈரான் நாட்டில் உள்ள மக்களுக்கு தொடர்ந்து 3 வருடம் வரியே வாங்கவில்லை.

டெல்லியில் ஒருநாளில் கொள்ளை அடித்தற்கே '3 வருடம் ஒரு தேசத்துக்கு சோறு போட்டான்' என்றால், பாரத தேசம் முழுவதும் எவ்வளவு செல்வங்கள் இருந்திருக்கும்? என்று அனுமானித்து பார்த்தாலே,
நாம் எப்படி வாழ்ந்து இருக்கிறோம்!!.. இப்போது எப்படி வாழ்கிறோம்!!
என்பது புரிந்து கொள்ள முடியும்.

நாட்டின் பொருளாதார நிலையை பார்த்து,
இஸ்லாமியன் மட்டுமா பாரத நாட்டுக்குள் நுழைந்தான்? 

இவர்களை தொடர்ந்து,
1400AD சமயத்தில், கிறிஸ்தவனான போர்ச்சுகல் வந்தான்.. 
இவன் பங்குக்கு,  சுமார் 500 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

இவர்களை தொடர்ந்து,
1600 சமயத்தில், கிறிஸ்தவனான டட்ச் வந்தான்.. 
இவன் பங்குக்கு, சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரிட்டிஷ் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.


அதை தொடர்ந்து,
1600 சமயத்திலேயே, கிறிஸ்தவனான பிரெஞ்ச்காரன் வந்தான்.. 
இவன் பங்குக்கும், சுமார் 300 வருடங்கள் பாரத நாட்டை கொள்ளை அடித்தான்.

அவனவன் அவன் பங்குக்கு கொள்ளை அடித்து, அவர்கள் ஊர்களில் சேர்த்தனர்.

1947ADல் இனி சுரண்ட இடமில்லை என்றபின்,
இரண்டு உலக போர் ஹிட்லரால் அரங்கேற்றப்பட்டதால்,
பாரத நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

போகும் நேரத்தில், சரியான ஆலோசனை செய்யாமல், பாரத நாட்டை பிரித்தனர்.

பாரத தேசத்தின் சிந்து பகுதியை (Today "Pakistan") மிச்சப்பட்ட (பாக்கி) இடமாக கருதி, பாகிஸ்தான் என்று பெயரில் பிரித்தனர்.
இஸ்லாமியர்களாக ஆகி போன, ஹிந்துக்கள் வாழட்டும் என்று வழி செய்தனர்.
விளைவு,
அங்கு இருந்த கோவில்கள் இடிக்கப்பட்டு விட்டன. 
"சிந்து தேசம், கேகேய தேசம்" இன்று இஸ்லாமிய நாடாக மாற்றப்பட்டு விட்டது.

ராமபிரான் புதல்வன் "லவன்" அமைத்த 'லவபுரம்', இன்று லாகூர் (Lahore) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'தக்ஷ சீலம்', இன்று டக்சிலா (Taxila) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
ராமபிரான் சகோதரர் "பரதன்" அமைத்த 'புருஷ புரம்', இன்று பேஷாவர் (Peshavar) என்ற பெயரில் இஸ்லாமிய தேசமாகி விட்டது.
இன்னும் எத்தனை இழந்தோமோ.. !!!



தேசிய கீதத்தில், "சிந்து" என்று சொல்லி வாழ்த்துகிறோம்..
ஆனால் சிந்து தேசம் நம்மிடத்தில் இல்லை.

சிந்துவை பிரித்து விட்டதால், பாரத தேசத்தை பிரிட்டிஷ், அரேபியன் உளறி கொட்டிய "இண்டியா" (INDIA) என்ற பெயரையே நமக்கு கொடுத்து விட்டனர்..
"கிரேக்க, அரேபிய இஸ்லாமியர்கள், பிரிட்டிஷ், போர்ச்சுகல், டச், பிரெஞ்சு" என்று உலக மக்கள் யாவரும். இந்தியாவை நோக்கியே வந்தனர் என்று சரித்திரம் காட்டுகிறது.

இந்திய பொருளாதாரம் எந்த கட்டுமானத்தால் இப்படி வலுவாக இருந்தது? நாம் ஏன் அன்று உலகை நம் பக்கம் இழுத்தோம் என்று கொஞ்சம் புரிந்து கொள்ள வேண்டாமா?

வர்ண கட்டுப்பாடுகள் இருந்த, அந்த காலத்தில், JOB COMPETITION இல்லை.
"அவரவர்கள் அவர்கள் பரம்பரையாக செய்த தொழிலை" செய்தனர்.

"ப்ராம்மணன்", ப்ரம்மத்தை சிந்தித்து கொண்டே இருப்பான். 
"அவனுக்கு உலக ஆசைகள் கூடாது" என்று வர்ணம் கட்டு படுத்துகிறது.

"ப்ராம்மணனுக்கு"
'வைஸ்யனை' போல தொழில் செய்ய திறன் இருந்தாலும்,
'சூத்திரனை' போல கூலிக்காக உழைத்து சம்பாதிக்க திறன் இருந்தாலும்,
'க்ஷத்ரியனை'  போல நாட்டை போரில் முதல் ஆளாக இருந்து காக்க வேண்டும் என்று ஆசை இருந்தாலும்,
"மற்றவர்கள் தொழிலை கற்று கொள்ள அனுமதி தந்ததே தவிர, அந்த தொழில் செய்ய கூடாது" என்று ப்ராம்மணனை வர்ண கட்டுப்பாடு தடுத்தது.

"பிராம்மண" குலத்தில் பிறந்த துரோணர்,
அனைத்து அஸ்திர சாஸ்திர வித்தைகளும் கற்று இருந்தார்.
பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் கற்று கொடுத்தார்.
ஆனால் எளிய வாழ்க்கை தான் வாழ்ந்தார். 

இவர் க்ஷத்ரியனை போல சண்டை போட வந்தபோது, "இது வர்ணத்தை மீறிய செயல்" என்று பாண்டவர்கள் சொல்லியும் சண்டைக்கு வந்தார்.


பிராம்மண தர்மத்தை மீறிய 'துரோணர்' போரில் மரணித்தார். 
"வர்ண கட்டுப்பாடு" கெட்டு போக ஆரம்பித்த காலம், மஹாபாரத காலம் என்று சொல்லலாம்.
3102BCக்கு கொஞ்சம் முன் நடந்தது மஹாபாரத போர். 
3102BCல் கலி யுகம் ஆரம்பம்.

வர்ண கட்டுப்பாடு இருந்ததால்,
வைசியன் (business people) தனக்கு ஒரு வேலை சென்று சம்பாதிக்க முடியும்.. என்று ஆசை இருந்தாலும்,, வர்ண கட்டுப்பாடு "வேலை தேடாதே தொழில் தொடங்கி, வேலை கொடு" என்கிறது..

"ப்ராம்மணன், வைஷ்யன், க்ஷத்ரியன்" இவர்கள் யாவருமே அவரவர்களுக்கு உரிய ஆன்மீக தேடல், தொழில், பாதுகாப்பு போன்றவற்றில் மட்டுமே இருந்ததால்,
அன்றைய காலத்தில், பாரத நாட்டுக்கு "வேலையில்லா திண்டாட்டம்" இல்லாமல் இருந்தது..

வேலைக்கு செல்லும் சூத்திரர்கள் (Employee), தான் படித்த அதே படிப்பை
க்ஷத்ரியனும் படித்து விட்டான்..
ப்ராஹ்மமணன் கூட படித்து விட்டான்.
வைஸ்யனும் படித்து விட்டான் என்ற நிலை ஏற்படாமல், 
தொழில் போட்டி இல்லாமல் இருந்தது.

அவரவர் தொழிலை செய்யுங்கள்..
அடுத்தவர் தொழிலை திறன் இருப்பதால் கற்பேன் என்று கற்றாலும், அதை வைத்து வேலைக்கு சென்று விட கூடாது,
"சூத்திரனாக (employee) இருப்பவர்கள் வாழ்க்கையில் போட்டியை உருவாக்க கூடாது" என்று வர்ண கட்டுப்பாடு வழி காட்டியது..




இதனால்,
"க்ஷத்ரியன், வைஸ்யன், பிராம்மணன்" அனைத்து தொழிலையும் கற்று இருந்தாலும், வேலைக்கு சென்று "சம்பாதிக்க கூடாது" என்று தடை விதிக்கிறது வர்ணம்.

தவத்தில் காலம் கழிக்கும் ப்ராம்மணர்கள் தனக்கு திறமை இருந்தும், மற்றவர்கள் தொழிலை தெரிந்து போட்டியாக வாழ கூடாது என்று இருந்தனர்.
பெரும்பாலும் 1857AD வரை, ப்ராம்மணர்கள் ஏழைகளாக தான் இருந்தனர். அதை பற்றி அவர்களும் கவலைப்படவில்லை.
"இவர்களை காப்பது கடமை" என்று அனைவரும் உதவி செய்தனர்.
அரசர்கள் இவர்களுக்கு கோவிலுக்கு அருகில் இடங்களை கொடுத்து வாழ வழி செய்தனர்.

1800AD சமயத்தில், வீரமுள்ள க்ஷத்ரிய அரசர்கள் இல்லாமல் போய் விட, ப்ராம்மணர்கள் வாழ கூட முடியாத நிலைக்கு ஆகினர்.

கிறிஸ்தவர்கள் "நாட்டை ஆள வேண்டும்" என்று அடித்தளம் போட்ட போது, ஆன்மீக எண்ணமே அதிகம் கொண்ட ப்ராம்மணர்களை தனக்கு கணக்கு வழக்கு எழுத பயன்படுத்தி கொண்டான்..
வாழ வழி தெரியாத சில ப்ராம்மணர்கள், அரசர்கள் இல்லாத நிலையில், உயிர் வாழ்வதே கடினம் என்ற நிலையில், கொடுத்த சம்பளத்தில் ப்ராம்மணன் வாழ ஆரம்பிக்க, ஆரம்பித்தது "பிராம்மண த்வேஷம்".

சூத்திரன் (employment) தொழிலை, பிராம்மணன் செய்ய ஆரம்பித்த காலம் அது.

100 வருடங்கள் ப்ராம்மணன், கிறிஸ்துவ பிரிட்டிஷ்காரர்களுக்கு ஆசிரியர், கணக்காளர் என்று வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
'பிராம்மணன் எதிர்க்க மாட்டான்.. சாது. நியாமாக நடப்பான்' என்பதால், பிரிட்டிஷ்கார கிறிஸ்தவர்கள், ப்ராம்மணர்களை தன் வேலைக்கு சேர்த்து கொண்டான்.

இந்த 100 வருட காலத்தில் தான், பிராம்மண சமுதாயம் தீண்டாமை என்ற பெயரில் வெறுப்பை காட்டினர்.
பாரதியார் போன்றவர்கள் இது பிராம்மண குணம் அல்ல என்று கோபப்பட்டனர்.
இப்படி நியாயம் பேசும் அவரை கூட, பிராம்மண சமுதாயம் மதிக்காமலேயே இருந்தனர். 

அரசர்கள் அழிந்த பின்,
வாழ்க்கையை நடத்த கூட முடியாத படி 900 வருட இஸ்லாமிய ஆட்சியில் பிராம்மணர்கள் நசுக்கப்பட்டதால்,
ஆங்கிலேய காலத்தில் "ஏதோ அரசாங்கம் என்ற பெயரில், மரியாதையாக நடத்துகிறார்கள்" என்றதும், இந்த இடைப்பட்ட காலத்தில் பிராம்மண சமுதாயம் காட்டிய அலட்சியம், 'ஈவே ராமசாமி' போன்றோர் மூலம்,  பிராம்மண வெறுப்பை உமிழ வைத்தது. 

பிராம்மண சமுதாயம் சுதந்திரம் பெற்ற பின்னர், இந்த 100 வருட கிறிஸ்தவ ஆட்சியில் தாங்கள் காட்டிய அலட்சியத்தை உணர்ந்தாலும்,
ஈவே ராமசாமி போன்றோர் தொடர்ந்து பிராம்மண வெறுப்பை உமிழ்ந்தனர்.

ராமபிரானின் பெயரை "ராமசாமி" என்று தானே வைத்து கொண்டு இருந்தாலும்,
"பிராம்மண வெறுப்பால்", அவர்கள் கொண்டாடும் தெய்வங்களையும்  எதிர்க்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது.


பிராம்மண வெறுப்பால், தன் தகப்பன் பாட்டன் வழிபட்ட தெய்வங்களையே உடைக்கும் அளவுக்கு வெறுப்பு உண்டானது. 

இஸ்லாமிய காலத்தில் கோவிலை உடைத்தார்கள், கொள்ளை அடித்தார்கள், மதம் மாற்றினார்கள் என்றால், "கிறிஸ்தவர்கள் ஆட்சியில்" பிராம்மணர்கள் செய்த தீண்டாமையை மறக்க முடியாமல்,
இவர்களும் "பிள்ளையார் சிலையை உடைப்பேன்" என்று உடைக்க, தமிழ்நாடு முழுக்க தெருவுக்கு தெரு பிள்ளயார் அமர்ந்து விட்டார். 

காரணத்தோடு காட்டப்பட்ட பிராம்மண வெறுப்பு, மூடத்தனமான வெறுப்பாக மாறி, ஹிந்துக்கள் அனைவரும் வழிபடும் தெய்வங்களையும் சேர்த்து கிண்டல் செய்யும் அளவுக்கு தரம் தாழ்ந்தது.

ஈவே ராமஸ்வாமி, "பிராமண வெறுப்பை" ஆரம்பித்து,
கடைசியில் "நாத்தீகர்களுக்கு வழிகாட்டி" ஆனார்.

1947ல் விடுதலை பெற்ற போது,
"ப்ராம்மணன் வேலைக்கு செல்கிறான்!!.. விடுதலை கிடைத்து விட்டது!!.. எங்களுக்கு வேலை கொடுங்கள்"
என்று சூத்திரர்கள் (enployee) அரசை கேட்டனர்.
நியாயமான கோரிக்கை.

1947ல் விடுதலை பெற்ற போது, "மீண்டும் வர்ண கட்டுப்பாட்டை கொண்டு வந்து, நாட்டை வழி நடத்துவோம்" என்றார் ராஜாஜி.

ராஜாஜி வழியில் நாம் சென்று இருந்தால், இன்று "ப்ராம்மணன் இருக்கும் கோவிலை, பூஜைகளை, வேதத்தை காப்பாற்றி கொண்டு, பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்."
அரசர்கள் காத்தது போல, அவனுக்கு சிறு மானியம் கொடுத்து இருந்தால், "பேராசை இல்லாமல் அடக்கத்துடன் வாழ்ந்து கொண்டு இருந்திருப்பான்" ப்ராம்மணன்.
"ஈவே ராமசாமி" போன்றவர்கள் ராஜாஜி சொன்னதை புரிந்து கொள்ள முடியாமல் எதிர்க்க,
"அனைவருக்கும் கல்வி, எதுவேண்டுமானாலும் படிக்கலாம்.. யார் வேண்டுமானாலும் படிக்கலாம்" என்று சட்டம் செய்தனர்..

விளைவு,
"நாட்டை காப்பதே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு, வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

"பேராசை, பொருளாசை இல்லாமல் வாழ்ந்த ப்ராம்மணன், தெய்வ சிந்தனையே என் தர்மம்" என்று இருந்தவர்கள் படித்து விட்டு,
வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.

அதே போல வைஸ்யர்களும் (Business) வேலைக்கு சென்று சம்பாதிக்க ஆரம்பித்தனர்.
சுதந்திரம் அடைந்த போது அளிக்கப்பட்ட இந்த "அனைவருக்கும் கல்வி.. அனைவருக்கும் சம வாய்ப்பு" என்ற சட்டம், 70 வருட காலத்திலேயே, "வேலையில்லா திண்டாட்டம்" என்ற பெரிய பிரச்சனையை பாரத மக்களுக்கு தந்து விட்டது.

"அனைவரும் படிக்கலாம்" என்ற சட்டம்,
ப்ராம்மணனுக்கு வைஸ்யனுக்கு பெரும் வாய்ப்பு தர, உலகத்தில் உள்ள பல வேலைகளில் இவர்கள் நுழைந்து விட்டனர்.

சூத்திரன் தன் வாய்ப்பை இழந்தான்..  
"வேலையில்லா திண்டாட்டம்" தலை எடுக்க ஆரம்பித்தது..

வர்ண கட்டுப்பாடு இருந்த காலத்தில், சூத்திரன் சூத்திரனோடு மட்டும் போட்டி போட்டான்.

"வர்ண கட்டுப்பாடு தேவை இல்லை..யாரும் எதுவும் படிக்கலாம்" என்ற நிலை வந்த போது,
சூத்திரன் (employee), "சூத்திரனோடு, சூத்திரனாக ஆகி விட்ட 'ப்ராம்மணன், க்ஷத்ரியன், வைஷ்யன்' என்று அனைவரிடத்திலும் போட்டியை சந்திக்க வேண்டியிருந்தது".

காலப்போக்கில்,
எந்த வேலை அதிகம் பணம் தரும்? என்று பார்க்கும் அறிவு ஏற்பட்ட போது, சூத்திரனிடம் இருந்த பல வித வேலை திறன்கள் அழிந்து போனது...

சிற்ப கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
ஆயுத கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
வேதத்தை அப்படியே மனப்பாடமாக சொல்லும் ப்ராம்மண குடும்பம், தன் வேதத்தை விட்டது..
தலை முடி திருத்தும் கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
நடனத்தில், வாத்தியங்கள் வாசிப்பதில் கை தேர்ந்த குடும்பம், தன் திறனை விட்டது..
விவசாய கலையில் கை தேர்ந்த குடும்பம், தன் விவசாய திறனை விட்டது..

எந்த படிப்பில் பணம் வரும்?
என்று பெரும்பாலானவர்கள் சொல்கிறார்களோ, அதை படிக்கவே கோடிக்கணக்கான பாரத மக்களும் ஆர்வம் காட்டினர்..

இதனால் பல வித தொழில்கள் (business), பல வித திறன்கள் (Skill) உள்ளவர்கள் இல்லாமல்,
பாரத நாட்டில் 120 கோடி மக்கள் இருந்தும், வேலைக்கு தகுதி, திறன் உள்ளவர்கள் குறைவாக ஆகினர்..


60 மார்க் வாங்குபவனும், அதிக பணம் சம்பாதிக்க மருத்துவ படிப்பு எப்படியாவது சேர பார்க்கிறான்!!
கல்லூரிகளில் லஞ்சம் உருவானது.

நடிகன் ஆகி விட்டால், பணம் கிடைக்கும் என்பதால் "படிப்பே வராதவன், நடிகனாக ஆகி விடுவோம்!!" என்று முயற்சிக்கிறான்..
நடிகனாக பெரு முயற்சி செய்கிறான்.

படிப்பே வராதவன், "கிரிக்கெட் விளையாடி, இந்தியாவுக்கு IPL போன்றவற்றில் நுழைந்து ஆகி விடுவோம்" என்று முயற்சிக்கிறான்..
கிரிக்கெட் வீரனாக IPL போன்றவற்றில் விளையாடி விட்டால், "பணம் கிடைக்கும்" என்பதால் பெரு முயற்சி செய்கிறான்.

கோடிக்கணக்கான மக்கள் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" என்ற வட்டத்தையே சுற்றுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடு இல்லாததால்,
ஒவ்வொரு மனிதனும், 120 கோடி மக்களுடன் போராட வேண்டி உள்ளது..

"அதி புத்திசாலிகள், அதிக திறன் கொண்டவர்கள்" ஜெயிக்கிறார்கள்..

கோடிக்கணக்கான மக்கள் இந்த பெரும் போட்டி உலகத்தை கண்டு பயப்படுகின்றனர்.

ஒரு வகுப்பில் கூட ஒருவன் தானே முதல் மதிப்பெண் வாங்குவான். அதே வகுப்பிலேயே சராசரி மாணவனும் உண்டே.. அவனுக்கு வாழ வழி காட்ட முடியாமல் செய்தது. 

அற்புதமான "சிற்ப கலையில்" சிறந்த குடும்பத்தில் பிறந்து, அதை விட்டு  விட்டு, மருத்துவம் சேர வேண்டும் என்று படிக்க வந்து, தோற்று, உலகத்தின் பார்வையில் தோல்வியாளனாக தலை குனிகிறான்.

"சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே அதிக பணம் சம்பாதிக்க வழி என்று ஆனதால்,
இந்த துறையில் திறன் இல்லாதவர்கள், அதி புத்திசாலித்தனம் இல்லாதவர்கள், குடும்பம் கலாச்சாரம் மீது பற்று உள்ளவர்கள், வாழ்க்கையை தொலைத்து
கூலி வேலை, கிடைத்த வேலை என்று செய்து கொண்டு, காலத்தை தள்ளி கொண்டு உள்ளனர்...

வர்ண கட்டுப்பாடு இல்லாததால், "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" மட்டுமே பணம் தரும் வழிகள் என்று நினைத்து, தன் பரம்பரை தொழிலை விட்டனர்...

"இசையே தொழிலாக" கொண்டு இருந்த குடும்பத்தில், "இசை பணம் தராது" என்று முடிவு செய்து, இசையை விட்டனர்....

"சவர தொழில்" செய்தவன், "சவர தொழில் பணம் தராது" என்று முடிவு செய்து, சவர தொழிலை விட்டான்.

எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி சென்றனர்..

இசையை விடாமல் கொண்டு சென்ற ஒரு குடும்பத்தில், திடீரென்று ஒரு இசை ஞானி உருவானவர்.. 
"இசை சோறு போடாது" என்று பலர் போன போது, இசை, இவர் ஏழு தலைமுறைக்கு சோறு போடும் செல்வத்தை கொடுத்தது..

சவர தொழில் பணம் தராது, என்று கைவிட்டவனை, ஸ்பா, unisex சலூன் போன்றவை பார்த்து சிரிக்கிறது...
கோவில்களில் ஒரு "கல்லில் சங்கிலியை உருவாக்கும்" திறன் கொண்ட ஒரு குடும்பம், தன் தொழிலை விட்டதால், இது போன்ற திறன் வெளிநாட்டவர்கள் இன்று செய்து காட்டினால், இந்தியன் வாய் பிளக்கிறான்.

வர்ண கட்டுப்பாட்டை புரிந்து கொள்ளாததால்,
இன்று தொழில் உருவாக்க, வைசியன் இல்லை.. 
வைஸ்ய குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

உலக ஆசைகளில் இருந்து ஒதுங்கி, மற்றவர்களுடன் போட்டி பொறாமை இல்லாத, ப்ராம்மணன் இல்லை.
இன்று மிக குறைவாகவே உள்ளனர். பெரும்பாலும் சூத்திரனாகி (Employee) போன ப்ராம்மணர்களே உள்ளனர்.
ப்ராம்மண குடும்பத்தில் பிறந்தவன், இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு இருக்கிறான்.

"உயிரையே கொடுக்க எப்போதும் தயார்" என்று சொல்லி திரிந்த க்ஷத்ரியன் பரம்பரையும் இன்று படித்து விட்டு வேலை தேடிக்கொண்டு உள்ளனர்.
ராணுவத்தில் எல்லையில் இருப்பபர்களை தவிர, நாட்டை உயிரை கொடுத்து காக்க உண்மையில் யாரும் இல்லை.

வர்ண கட்டுப்பாட்டை விட்டதால், 120 கோடி மக்களும் எனக்கு வேலை வேண்டும்!! என்று கேட்கும் நிலையை ஏற்பட்டு விட்டது.


யார் வேலை தருவார்கள்? 
எந்த வேலை அதிக பணம் தரும்? 
என்ற கேள்வியே எழுவதால்,
அற்புதமான திறன்கள் அழிந்து  விட்டது.
இப்பொழுது "கம்ப ராமாயணம், நாயமார்கள் பதிகங்கள், ஆழ்வார்கள் பாசுரங்கள்" போன்ற தமிழை புரிந்து கொள்ள கூட உரை தேவைப்படுகிறது...

தகப்பன், பாட்டன், முப்பாட்டன் காலம் தொட்டு பரம்பரையாக பெற்ற திறனை விட்டு விட்டு,
எல்லோரும் "சினிமா, மருத்துவம், என்ஜினீயரிங், IT, கிரிக்கெட்" நோக்கி ஓட,
'லட்சத்தில் ஒருவன்' வெற்றி பெற, 
மற்றவர்கள் 'சேற்றில் விழுந்தது போல வாழ்வை தொலைத்து' கொள்கின்றனர்...

"நடிகனாக வேண்டும்" என்று ஆசைப்படும் எவருமே,
"நடிப்பில் சாதிக்க முடியாது.. பணம் கிடைக்காது" என்ற நிலை ஏற்பட்டால் அங்கு கூட செல்ல மாட்டார்கள்..

"கிரிக்கெட் பணம் தரும்" என்பதால் ஆர்வம் காட்டுபவர்கள், "பேட்மின்டன் பணம் தராது" என்று ஒதுக்கினர்..
இன்று ஒரு பெண் அதில் சாதனை செய்து கோடிக்கணக்கான பணத்தை காட்ட, இப்பொழுது அதை நோக்கி ஓடுகின்றனர்..

வர்ண கட்டுப்பாடை விட்டதால், ஆட்டு மந்தை ஆகி விட்டோம்..
செல்வத்தில் புரண்ட பாரத மக்கள், உலக மக்கள் நம் ஊரை தேடி வந்த காரணத்தை புரிந்து கொள்ள முடியாமல்,
அற்புதமான ஹிந்து தர்மத்தை கூட புரிந்து கொள்ள முடியாமல்,
ஆட்டு மந்தை போல புத்தி ஆனதால், 
'ஆடு மேய்ப்பவனை' கூட நம்ப தயாராகி விட்டோம்.

ஆடு மேய்ப்பவன் "பணம் தருகிறேன்" என்றால், நம் குலதெய்வத்தை கூட மறக்க துணிகிறோம்.

வர்ண கட்டுப்பாடு இருந்த வரை, நம் நாட்டை நோக்கி உலகம் படையெடுத்தது..
வெட்கமே இல்லாமல், நம் நாட்டில் 1000 வருடங்கள் இருந்து கொண்டு கொள்ளை அடித்தது.

இவர்களை துரத்திய பின், வர்ண கட்டுப்பாடு அமைத்து ஒரு சமுதாயம் அமைத்து இருந்தால், இந்த 70 ஆண்டுகளில் மீண்டும் இந்திய தேசம் வளர்ந்த நாடாக ஆகி இருக்கும்..

அவனவன் பரம்பரையாக செய்த தொழிலில்,
அனுபவங்களோடு, அற்புதங்கள் புதிய கண்டுபிடிப்புகள் உருவாகி இருக்கும்.
தேசத்தை காக்கும் குடும்பங்கள், தேச நலனிலேயே கருத்தாக இருந்து இருக்கும்..
ப்ராம்மணன், அமைதியாக ஒழுக்கம் மீறாமல் பக்தி செய்து கொண்டு இருந்திருப்பான். வேத ரகசியங்களை விளக்கி இருப்பான்.
வைஸ்யர்கள், புதிய தொழில் கொண்டு வர வேண்டிய அவசியத்தால், சூத்திரர்களிடம் (employee) உள்ள பல வித திறனால் கோடிக்கணக்கான புதிய வியாபாரங்களை இந்தியாவிலேயே ஆரம்பித்து இருப்பார்கள்..

ஒரு இந்தியன் கூட, வெளியூர் சென்று பிச்சை எடுக்க தேவை இல்லை என்று நிலை ஏற்பட்டு இருக்கும்..

ஈவே ராமசாமி போன்ற அறிவு ஜீவிகளின் மழுங்கிய புத்தியால், சரித்திரத்தில் என்ன நடந்தது? என்று புரிந்து கொள்ள முடியாத நிலையால், ப்ராம்மணன் ராஜாஜி மொழிந்த "வர்ண கட்டுபாட்டை"
ப்ராம்மணன் மீது இருந்த கோபத்தால் எதிர்த்தனர்..

இந்திய நாட்டில் இன்று உள்ள பெரும் பிரச்சனையே...
120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது?.. என்பது தான்.  இன்னும் மக்கள் தொகை அதிகமானால், இந்த பிரச்சனையை முடிவில்லாததாக ஆகி விடும். 
தான் வாழ, ஒவ்வொரு மனிதனும், "எதையும் செய்ய துணிந்து விடுவான்".

120 கோடி மக்களுக்கு எப்படி வேலை கொடுப்பது? இந்த எண்ணமே தவறு...

"70 கோடி மக்கள் மட்டுமே", வேலை செய்பவர்களாக (Sudra) ஆக்க வேண்டும்.
120 கோடி மக்களும் வேலைக்கு செல்ல (Sudra) வழி செய்ததே, 
இந்த பெரும் பிரச்சனைக்கு காரணம்.

இதற்கு அவர்களுக்கு (70 கோடி மக்களுக்கு) பல வித திறன்கள் அளிக்கப்பட வேண்டும்.

ஒருவர் சிற்ப வேலை செய்பவராக இருந்தால்,
அவர் குழந்தை பள்ளியில் சேரும்போது, அதே "சிற்ப வேலையை செய்ய ஆர்வம் உள்ளவராக ஆக்க விருப்பமா?" என்று அவர் தந்தையிடம் கேட்க வேண்டும்.
அதன் அடிப்படையில் பாடம் அமைய வேண்டும்..
அந்த குழந்தை வளர்ந்து அதே துறையில் நுழைய ஆசைப்பட்டால், அந்த குழந்தைக்கு இட ஒதுக்கீடு (reservation Quota) தர வேண்டும்..

"ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில்" இட ஒதுக்கீடு கொடுத்து பார்த்து விட்டோமே.
விளைவு..
120 கோடி மக்களும் அனைவரும் படித்து விட்டு, வேலைக்கு நிற்கிறார்கள்...  அனைவருக்கும் வேலை இல்லை.
விவசாயம் செய்ய ஆள் இல்லை. 
கோவிலில் பூஜை செய்ய வேதம் அறிந்த ஆள் இல்லை. 
மர வேலை செய்ய ஆள் இல்லை.
உழைக்கவே ஆள் இல்லை.
தொழில்கள் உருவாக்க ஆள் இல்லை.


போதுமே இந்த ஜாதி அடிப்படையில், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு!!
பிரச்சனையை அதிகமாக்கும், வேலையில்லா திண்டாட்டத்தை உருவாக்கும் இதை மாற்றி அமைக்கலாமே.

தந்தை இப்பொழுது செய்யும் தொழில் சம்பந்தமாகவே பள்ளியில் இருந்து படிக்க ஆரம்பிக்கும் போது, அவர் குழந்தை தன் தந்தையிடமே பல விஷயங்களை தெரிந்து கொள்ளும். 
திறன் இயற்க்கையாக அதிகமாக இருக்கும்.

ஒரு வேளை பள்ளி முடிந்து, சிற்ப கல்வியை கற்றும், வேறு துறை செல்ல ஆர்வம் இருந்தால், இட ஒதுக்கீடு இல்லாமல், தேர்வு வைத்து தேர்ந்தெடுக்க வேண்டும்.

இப்படி இரண்டு தலைமுறைக்கு செய்தால், 70 கோடி மக்களிடம் பல வித திறன்கள் கிடைக்கும்.

20 கோடி மக்கள் தொழில்கள் உருவாக்கி, 70 கோடி மக்களிடம் உள்ள இந்த திறன்களை பயன்படுத்த பழக்க வேண்டும்.
தொழில் செய்பவர்கள், தங்கள் குழந்தைகளை படிக்க வைக்கும் போது, பள்ளிகளில் இவர்களுக்காக தொழில் தொடர்பான கல்வியே கற்று தர தரத்தை உயர்த்த வேண்டும்.

இப்படிப்பட்ட பள்ளிகளில் இவர்கள் சேரும் போது, தொழில் செய்பவர்கள் தன் குழந்தைகளுக்கும் தொழில் அனுபவங்களை சொல்லி சொல்லி தயார் செய்வார்கள்.

20 கோடி மக்களை, நாட்டுக்காக வாழ பயிற்சிக்க வேண்டும்.

10 கோடி மக்களை, ஆன்மீக வாழ்க்கை வாழ்ந்து நல்லதை அவ்வப்போது சொல்லி, அமைதியாக வாழ பயிற்சிக்க வேண்டும்.  வேதத்தை படித்து, அதில் உள்ள ரகசியங்களை வெளிப்படுத்த இவர்களுக்கு உற்சாகம் கொடுக்க வேண்டும்.

2 தலைமுறையில், மீண்டும் இந்தியா தன்னிறைவு பெற்ற நாடாக மாறும்.

"போட்டி, பொறாமை இல்லாமல், stress இல்லாத வாழ்க்கை" இந்தியர்கள் காண முடியும்...

கல்வியில் மாற்றம் தேவை..
சிற்ப கலையில் உள்ள தகப்பன், தன் மகனை அதன் வழியில் கொண்டு செல்ல ஆசைப்பட்டால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

வேதம் கற்ற ப்ராம்மணன் தன் பிள்ளை வேதம் கற்க அனுப்பினால், அதற்கான பாட திட்டங்கள் வேண்டும்.

பள்ளிகளில், தகப்பன் செய்யும் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட, அவன் பிள்ளைக்கு மேலும் தொழிலை வளர்க்க உதவும் பாட திட்டங்கள் பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

விவசாயம் செய்யும் தகப்பன், தன் பிள்ளையை விவசாயம் செய்து பெரும் பணக்காரனாக ஆக்க ஆசைப்படும் விதமாக, விவசாயத்தின் நுணுக்கங்கள், பள்ளியிலேயே சொல்லி தர வேண்டும்.

ஓவிய கலையில் தேர்ந்த தகப்பன், தன் பிள்ளையை பள்ளியில் சேர்த்தால், தகப்பனை மிஞ்சும் அளவுக்கு ஓவியனாக காலத்திற்கு ஏற்ப பாட திட்டங்கள் வகுத்து பள்ளியில் சொல்லி தர வேண்டும்.

கல்வியில் பெரும் புரட்சி தேவைப்படுகிறது.
பல வித கல்விகள் பள்ளிகளிலேயே இருக்க வேண்டும். 

நடக்குமா?
நம் பாரத நாடு மீண்டும் "பொருளாதாரத்தில் மட்டுமின்றி, தன்னிறைவு பெற்ற நாடாக" ஆகுமா?
நாம் நாடு நாடாக அலைந்து, வேலைக்கு செல்லும் நிலை மாறி,
மீண்டும் உலகை நம் நாட்டின் பக்கம் திருப்ப முடியுமா? 

முடியும்..
சிறு சிறு ஊர்களாக எடுத்து, கல்வியில் இந்த மாற்றத்தை கொண்டு வந்தால், முடியும்.
120 கோடி மக்களின் திறன் அளவிட முடியாததாகி விடும் என்பதில் சந்தேகம் இருக்காது.

பாரத தேசத்தை தெய்வங்கள் காக்கிறது.
தெய்வங்கள் நமக்கு வழிகாட்ட, அப்படி ஒரு ஹிந்து தலைவனை கொண்டு, இதை சாதிக்கும் என்று நம்புவோம்.


வாழ்க பாரத நாடு. 
வாழ்க பாரத மக்கள்.


"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், வேலையில்லா திண்டாட்டம் என்ற பேச்சே இல்லாமல், ஒவ்வொருத்தரும் செல்வந்தர்களாக இருந்தோம் என்ற உண்மையை புரிந்து கொள்வோம்.
"வர்ண கட்டுப்பாடு" இருந்ததால் தான், நம் பாரத நாட்டை நோக்கி உலகம் வந்தது என்று உண்மையை அறிவோம்.



Tuesday 5 March 2019

யார் ரிஷி? யார் முனி? யார் த்விஜன்? யார் விப்ரன்? யார் பிராம்மணன்? தெரிந்து கொள்வோமே...

ஒரு பிராம்மண தகப்பனுக்கும், பிராம்மண தாய்க்கும் பிறப்பதால் 'பிராம்மணன்' என்ற பெயரை மட்டுமே பெறுகிறான்.
வெறும் பிறப்பினால் மட்டும், ஒருவன் பிராம்மணத்துவம் அடைவதில்லை. 
பிறக்கும்போது ப்ராம்மணனும் நாளாம் வர்ணத்தவன் தான். சூத்திரன் தான் (employee)






உபவீதம்(பூணுல்) என்ற சம்ஸ்காரம் செய்து, தன் தகப்பானரிடம் மந்திர உபதேசம் பெற்ற பின், "த்விஜன்" என்ற அடுத்த பிறவியை அடைகிறான்.
ப்ரம்மத்தை (பரவாசுதேவனை) உபாசனை செய்ய உலக ஆசைகளை துறக்க தயாராவதால், உபவீதம் அணிந்த பின், இரண்டாம் பிறவி (த்விஜன்) எடுக்கிறான்.
அலங்காரங்கள் ஆசைகள் விட்டு, வேஷ்டி, குடுமி, நெற்றியில் திலகம் வைத்து கொண்டு, கடல் போன்ற வேதத்தை 12 வருடங்கள் அத்யயணம் குருவிடம் இருந்து கற்று, குருவுக்கு பணிவிடை செய்து,  வேதியனாக ஆகும் போது, "விப்ரன்" என்று பெயர் பெறுகிறான்.
வேத மந்திரங்கள் கற்ற வேதியன், வேத மந்திரங்களை ஜபித்து, அந்த மந்திரங்களுக்கு உரிய தெய்வங்களை ஆகர்ஷிக்கும் சக்தி பெறும் போது "ரிஷி" என்ற பெயர் பெறுகிறான்.



பிராம்மண குடும்பத்தில் பிறக்காது போனாலும், "பிராம்மணத்துவம் பெற்றே தீருவேன்" என்று, பல வருடங்கள் ஓங்கார ஜபம் செய்து, காயத்ரி மந்திரத்தை ஆகர்ஷிக்கும் சக்தி பெற்ற பின், க்ஷத்ரியனாக பிறந்த இவர், விஸ்வாமித்ர "ரிஷி" என்று ஆனார்.
ரிஷியாக உள்ளவன், "எங்கும் பாண்டுரங்கனான ஸ்ரீ கிருஷ்ணரே (நாராயணன்) உள்ளார்" என்று எப்பொழுதும் பகவத் தியானத்திலேயே இருப்பவன், "முனி" என்ற பெயர் பெறுகிறான்.

ரிஷிகளும் மதிக்ககூடியவர்கள் முனிகள்.
ரிஷிகளை முனி என்று சொல்வதில்லை. முனியை ரிஷி என்றும் சொல்லலாம்.
அகத்தியர் முனி, பிரம்மாவின் மானஸ புத்ரன் "நாரத முனி" போன்றவர்கள், ரிஷிகளுக்கும் மேலானவர்கள்.
தன் ஆத்ம ஸ்வரூபத்தை உணர்ந்தவன் "ப்ராம்மணன்" (ப்ரம்மத்தை உபாசிக்கும்) ஆகிறான். ப்ராஹ்மணத்துவம் பெறுகிறான்.
ப்ரஹ்ம-பதத்தால் (வேதத்தால்) குறிப்பிடப்படும் பரமாத்மாவைப் பற்றிய ஞானத்தில்(அறிவில்) ஸித்தி அடையும்போதே ‘ப்ராம்மணன்’ ஆகிறான்.

வெறும் பிறப்பால் பிராம்மண குலத்தில் பிறந்து, உலக ஆசைகளோடு வாழ்பவன் பிறரால் ப்ராம்மணன் என்று மதிப்பு பெற மாட்டான்.

சப்த ப்ரஹ்மமாகிய வேதத்தால் குறிப்பிடப்படும் பரமாத்மாவிலேயே ரமிக்கும் ப்ராம்மண குலத்தில் பிறந்தவர்கள் இன்றும் மதிக்கப்படுகிறார்கள். 



sandhyavandanam Evening - Yajur - Hear and understand meaning of each sloka 
HARE RAMA HARE KRISHNA - BHAJAN

sandhyavandanam Afternoon - Yajur - Hear and understand meaning of each sloka 
sandhyavandanam Morning - Yajur - Hear and understand meaning of each sloka  




Saturday 1 December 2018

ஜாதிகள், 4 வர்ணங்கள் பற்றி ஒரு அலசல். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர், குணத்தை வைத்து தான் வர்ணம் என்று சொல்கிறார்.

நான்கு வர்ணங்கள் (குணங்கள், 4 mindsets) கொண்டவர்கள் "சமூகத்தை" நடத்த தேவைப்படுகிறார்கள்.


  1. மோக்ஷத்தை விரும்பும், உலக வசதிகளில் நாட்டமில்லாத, ஆன்மீக சிந்தனை உள்ள, நல்லதை போதிக்கும், ப்ராம்மணர்கள் (Spiritual)
  2. உலக வசதிகளில் நாட்டமுள்ள, பொருளாதார வளர்ச்சி அடைய வியாபாரம் செய்யும் வைஸ்யர்கள் (business)
  3. மற்றவர் கொடுக்கும் வேலைகளை திறம்பட செய்து அதற்கு பதில் கூலியாக சம்பளம் பெற்று, நியாயமாக வாழும் சூத்திரர்கள் (Employee)
  4. இந்த மூன்று குணங்கள் கொண்ட சமுதாய மக்கள், நிம்மதியாக வாழ வேண்டும், இவர்களை எதிரிகள் தாக்காமல் இருக்க அரண் போல இருந்து, உயிர் பற்றி கவலைப்படாமல், போர் வீரனாக இருக்கும் க்ஷத்ரியர்கள் (Protection force)

சூத்திரன் என்ற சொல்லின் அர்த்தத்தை நன்கு புரிந்து கொள்ள, மேலும் அறிய www.proudhindudharma.com/2018/07/Sudra.html படிக்கவும்.

ஒரு சமுதாயம் வளர்ச்சி அடைய, இந்த நான்கு பேரும் தேவைப்படுகிறார்கள்.

இந்த 4 நான்கு வகையில் சேராமல் இருப்பவர்களை, பொதுவாக ஐந்தாம் வகையை (பஞ்சமா) என்று சொல்கிறோம்.

* ஆன்மீகத்திலும் ஆர்வமில்லை,
* தானாக வியாபாரம் செய்து, அதில் நாலு பேருக்கு வேலை கொடுத்து வாழவும் ஆர்வமில்லை,
* வேலைக்கு சென்று இவர்களுக்கு உதவியாகவும் இருந்து, தானும் சம்பாதிக்க விருப்பமில்லை,
* இவர்களை காக்க ஒரு வீரனாக இருக்கவும் ஆர்வம் இல்லை,
என்கிற பொழுது,
அவனை சமுதாய வளர்ச்சிக்கு உதவாதவன் "பஞ்சமன்" என்றனர்.

திருடன், கொள்ளைக்காரன், கொலைகாரன், தன் வயிறு வளர்க்க எதையும் அடித்து தின்பவன், என்று யாரெல்லாம் இருக்கிறார்களோ, அவர்கள் எல்லோருமே, சமுதாய வளர்ச்சிக்கு உபயோகம் இல்லாமல் வாழ்கின்றனர்.

இவர்களை பொதுவாக பஞ்சமன் என்று அழைத்தனர்.

சத்ய யுகம், த்ரேதா யுகம் வரை குணத்தின் அடிப்படையிலேயே வர்ணங்கள் இருந்துள்ளது.
க்ஷத்ரிய அரசனாக இருந்த விஸ்வாமித்ரர், வசிஷ்டர் என்ற ப்ரம்ம ரிஷியை  போல, தானும் பிராம்மணன் ஆவேன் என்று சபதம் செய்தார்.
உலக ஆசைகளை விட்டு, க்ஷத்ரிய குணமான காமத்தையும், கோபத்தையும் விட முடியாமல் சில சமயம் சிக்கி,
மீண்டும் நிதானித்து, முயற்சி செய்து, கடைசியில் கோபத்தையும், காமத்தையும் விட்டு, மந்திர ஸித்தி பெற்றார்.
வசிஷ்டர் "நீயும் பிராம்மணனே" என்று அங்கீகாரம் செய்தார்.

அந்த நாட்களில், அதற்கு பின், 'நீ க்ஷத்ரியன்', 'நீ காமத்துக்கு அடிமை ஆனாய்' என்று கேலியும் யாரும் செய்யவில்லை.

இதற்கு காரணம், அப்பொழுது 4 வர்ணம், குணத்தின் அடிப்படையில் தான் இருந்தது.

க்ஷத்ரிய குணம் இவரை காமத்தில், கோபத்தில் விழ செய்தது என்பதால், ப்ரம்ம ரிஷியான பின், அதை பற்றிய விவாதம் நடைபெறவில்லை.

யுகங்கள் செல்ல செல்ல, வசிஷ்ட ரிஷியின் சிஷ்ய பரம்பரை, விஸ்வாமித்ர சிஷ்ய பரம்பரை, என்று ரிஷிகள் பரம்பரை ஏற்பட, சமுகம் உருவானது.

ஒரு ரிஷியின் வழி வந்த தகப்பன், அதே போன்ற மற்றோரு ரிஷியின் வழியில் வந்த பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால், பிறக்கும் குழந்தைகள் பிறப்பிலேயே ஆன்மீக நாட்டம் உடைய குழந்தைகளாக பெற்றனர்.

அதே போல,
ஒரு க்ஷத்ரிய அரசன், இன்னொரு க்ஷத்ரிய அரசனின் பெண்ணை தன் மகனுக்கு திருமணம் செய்து வைத்தார்.
இதனால், பிறக்கும் குழந்தைகள் பிறப்பிலேயே வீரம், நாட்டுபற்று, உயிர் பயம் இல்லாத குழந்தைகளாக பெற்றனர்.

இதே போல,
வைசிய, சூத்திரர்களும் செய்ய செய்ய, தான் பெற்று எடுக்கும் குழந்தைகள் குணம் 'இப்படி தான் இருக்கும்' என்று தெளிவு கிடைத்தது.

சமுதாயம் மேலும் மேலும் வலுவான அமைப்பை பெற்றது.

சிறந்த அரசனோ, ரிஷியோ, வைத்தியனோ, ஒரு குடும்பத்தில் வரும் போது, அது மேலும் விரிவடைந்து ஜாதிகள் உருவாக ஆரம்பித்தது.

துவாபர யுகத்தில், ஜாதிகள் அதிகம் உருவாக ஆரம்பித்தது.

உதாரணமாக,
யது என்ற க்ஷத்ரிய அரசன் இருந்தார்.
அவரின் தந்தை யயாதி, 'உன் இளமையை கொடு' என்று கேட்க, 'இயற்கைக்கு மாறான அதர்மத்தை செய்ய முடியாது' என்று மறுத்தார்.
தந்தை சொல்லை மீறினார் என்று, 'இனி உனக்கு அரசு ஆளும் உரிமை கிடையாது' என்று சொல்லிவிட்டார் யயாதி.

க்ஷத்ரிய (Army) குணம் கொண்டவராக இருந்தாலும், இனி அந்த வேலையை செய்ய முடியாது என்பதால், மாடுகளை வளர்த்து, அதில் கிடைக்கும் பாலில் இருந்து வியாபாரம் செய்து பிழைக்க வேண்டியதாகியது.

குணத்தின் படி க்ஷத்ரியன் இவர். தொழில் படி வைசியன் ஆனார்.

இரண்டுக்கும் நடுவாக இருப்பதால், இவர்களை 'இடையர்கள்' என்றனர்.

யது என்ற அரசன் மூலம் இது ஆரம்பம் ஆனதால், இவர்கள் "யது குலம்" என்று அழைக்கப்பட்டனர்.

"யாதவர்கள்" என்று அடையாளப்படுத்தப்பட்டனர்
யாதவ குலம் உருவானது.
இந்த யது குலத்தில், பரவாசுதேவன் ஸ்ரீகிருஷ்ணராக அவதாரம் செய்தார் என்பதும் நாம் மறக்க இயலாது.

இது போன்று, பல காரணங்களால் ஜாதிகள் உருவானது.
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு கதை இருக்கும்.

ஒரு அரசனையோ, ஒரு ஞானியையோ, ஒரு ரிஷியையோ பின்பற்றி, சமூகம் உருவாகி, ஜாதிகள் என்று ஆகிவிட்டது.

இது மேலும் சமுதாயத்தின் கட்டமைப்பை வலுவூட்டியது.

இவன் பிள்ளை இந்த குணம் கொண்டிருப்பான், என்று தெளிவாக சொல்ல முடிந்தது.
குணத்தில் கலப்பு ஏற்படாமல் இருந்தது.


ஆச்சர்யமான சிற்ப கலையில் தேர்ச்சி பெற்றவன் பிள்ளையும் இயற்கையாகவே அதே துறையில் அறிவு பெற்று இருந்தான்.

கலைகள், கல்விகள், ஆராய்ச்சிகள், வைத்தியம், போர் என்று அவரவர் தொழிலில் மற்றவர்கள் நுழையாமல் இருந்ததால், வேலையில்லா திண்டாட்டம், போட்டி இல்லாமல் சமூகம் நடந்தது.

படிப்பில் மகா புத்திசாலித்தனம் இருந்தாலும், ப்ராம்மணர்கள் தொழில் செய்தோ, தன் கல்வியை கொண்டு பணம் சம்பாதிப்பதோ கூடாது என்று கட்டுப்பாடு இருந்தது.
ப்ராம்மணர்களுக்கு கோவில் அருகில்  கொஞ்சம் வாழ இடம் கொடுத்து, அரசன் கோவிலையும், வேதத்தையும் காப்பாற்ற மட்டும் அனுமதி தந்தனர்.
ப்ராம்மணராகி போன விஸ்வாமித்ரர், ஸ்ரீராமருக்கு தான் கற்று வைத்திருந்த அனைத்து அஸ்திர, சஸ்திர வித்தைகளை அர்ப்பணம் செய்து விட்டார் த்ரேதா யுகத்தில் என்று பார்க்கிறோம்.

க்ஷத்ரிய அரச குடும்பம் 'மகா வீரர்களை' கொண்டவர்கள், இந்த அரச குடும்பம் 'வீரமும், புத்திசாலித்தனமும்' கொண்டவர்கள் என்று தெளிவாக அடையாளம் கண்டு பிடிக்க ஜாதிகள் உதவியது.

துவாபர யுகம் முடியும் சமயத்தில், ஜாதிகள் அதிகம் இருந்தது.
சிறிது ஜாதி கலப்பும் ஏற்பட்டு இருந்தது.

இதனால் கட்டுப்பாடும் அதிகம் இருந்தது.
ஆங்காங்கு சந்தேகம் கொள்ளும் விதத்தில் சிலர் இருந்தனர்.

'இவனுக்கு இவனை போன்ற குணம் உள்ளவன் தான் பிறப்பான்' என்று பரம்பரையில் ஒரு ஒழுக்கம் பெரும்பாலும் உருவாகி இருந்தது.

சிலர் இதில் வித்தியாசப்பட்டு இருந்தனர்.
பிராம்மண ஜாதியில் பிறந்த துரோணர், வேதம், போர் கலைகள் அனைத்தும் கற்றவர்.

கற்றதை சொல்லிக்கொடுக்க மட்டுமே அதிகாரம் உள்ள பிராம்மண குணம் கொண்ட இவர், லட்சக்கணக்கான க்ஷத்ரியர்கள் கலந்து கொண்ட பாரத போரில், தலைமை ஏற்று போர் புரிந்தார்.
பிராம்மண ஜாதியில் பிறந்த துரோணர், குணத்தில் பிராம்மண குணமும், க்ஷத்ரிய குணமும் கலந்து இருந்தது.
இவர் குடும்பத்தில் யாராவது ஒருவர், க்ஷத்ரிய பெண்ணை திருமணம் செய்திருந்து இருக்கலாம்.




அதே போல,
க்ஷத்ரிய அரசனாக தர்மபுத்திரர் பிறந்தார்.
போர் குணம், வீரம் கொண்ட இவர், அதே சமயத்தில் எல்லை மீறிய பொறுமையை கடைபிடித்தார்.
இவரின் குணத்தில் க்ஷத்ரிய குணமும், பிராம்மண குணமும் கலந்து இருந்தது.
குந்தியின் பரம்பரையை பின்னோக்கி பார்த்தால், க்ஷத்ரிய அரசர் யாராவது பிராம்மண பெண்ணை மணம் செய்து இருக்கலாம்.
இந்த சமயத்தில், குந்தியின் மகன், கர்ணன் 'க்ஷத்ரிய குணம்' கொண்டவனாக இருந்தாலும், ஒரு தேரோட்டியின் மகனாக வளர்ந்தான்.

அர்ஜுனனை எதிர்க்க நினைத்த போது, 'கர்ணன் திறமைசாலி' என்று மதித்தாலும், 'எப்படி ஒரு தேரோட்டி மகனுக்கு இந்த க்ஷத்ரியகுணம் (போர் குணம்) வந்தது?'
என்று கடைசி வரை சந்தேகப்பட்டான் அர்ஜுனன்.

இந்த கேள்வி துரோணருக்கும் ஏற்பட்டது.
பல முறை இதனால் அவமானப்படுத்தபட்டான்.
கர்ணன் இறந்த பின், இவன் குந்தியின் மகன் தான் என்ற அறிந்த போது, தெளிவு பெற்றனர்.

இப்படி குணத்தின் அடிப்படையில் இருந்த 4 வர்ண அமைப்பு, காலபோக்கில் ஒரு அழகான உருவெடுத்து ரிஷிகள், மகான்கள், அரசர்கள் மூலம் ஒரு கட்டுக்கோப்பான பிரிவுகளாக "ஜாதி' என்று பிரிந்தது.

ஜாதிகள் உருவானதால், பிராம்மண வர்ணத்திலேயே
ரிஷி குடும்பம், வைதீக குடும்பம், லௌகீக குடுமபம், ஐயர் குடும்பம், ஐயங்கார் குடும்பம்
என்று பிராம்மண வர்ணத்திலும் "ப்ரம்ம விசாரம் செய்வதில் நாட்டம் உள்ளவர்கள்", "பெருமாள் பக்தி செய்பவர்கள்" என்று பிரிக்க முடிந்தது.

இது மேலும் சமுதாயத்தை கட்டுக்கோப்பாக வளர்க்க உதவி செய்தது.

மகாபாரத சமயத்தில், அர்ஜுனனுக்கு ஜாதி வெறி கிடையாது என்றாலும், கர்ணன் எப்படி போர் குணம் கொண்டவனாக இருக்கிறான்? என்று சந்தேகித்தான்.

"நீ சூத புத்திரன்" (you are employee son)
என்று பல முறை சொல்லி இருக்கிறான் அர்ஜுனன்.

சூத்திரர்களை (employee) தாழ்த்தி பேசும் நோக்கத்தில் அர்ஜுனன் சொல்லவில்லை.
ஆனால், "கர்ணா, நீ எப்படி போர் குணம் கொண்டவனாக உள்ளாய்?" என்று தான் அர்ஜுனன் எப்பொழுதும் சந்தேகித்தான்.

நாம் ஒழுங்காக கவனித்தோம் என்றால்,
கர்ணன் பிறப்பை அறிந்து இருந்த ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில் அர்ஜுனனுக்கு அதனால் தான் "வர்ணம் என்பது குணத்தின் அடிப்படையில் தான்" என்று தெளிவாக சொல்கிறார்.

"குலத்தை வைத்து பேச கூடாது, குணத்தை வைத்து பார்"
என்று சொல்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர்.

இந்த தெளிவு அர்ஜுனன் அண்ணன் "யுதிஷ்டிரனுக்கு" இருந்தது.
யக்ஷன் "யார் பிராம்மணன்?" என்று கேட்கும் கேள்விக்கு,
"குணத்தை வைத்து தான் பிராம்மணன் அறியப்படுகிறான்" என்று பதிலாக சொல்கிறார்.

கர்ணன் உண்மையில் குந்தி புத்திரன் தான் என்று கடைசியில் தெரிந்து கொள்கிறான் அர்ஜுனன்.

ஜாதிகள் இருந்ததால், 'பிறக்கும் குழந்தைகள் இந்த குணத்தோடு தான் பிறக்கும்'
என்ற தெளிவு பிறக்கிறது.
இந்த கட்டுக்கோப்பான அமைப்பு கலியுகத்திலும் தொடர்ந்தது.
புத்தர் பிறந்த பின், பௌத்த மதம் பரவ, அதிகமாக கலப்பு ஏற்பட்டது.

ப்ராம்மண குணம் கொண்ட பெண், க்ஷத்ரியனை மணக்க, அவளுடைய ஆன்மீக எண்ணம், உலக பற்று இல்லாத குணம் அவள் மூலமாக அந்த குடும்பத்தில் பிறந்த மகனுக்கோ, பேரனுக்கோ, எதிர்கால சந்ததிக்கோ வந்தது.


Gene என்று இன்றைய அறிவியல் இதை ஒத்துக்கொள்கிறது.

இப்படி கலப்பு ஏற்பட ஆரம்பித்த பின்,
"பிறக்கும் குழந்தை தன் குணத்தில் இருப்பானா?"
என்று தந்தையால் கூட கணிக்க முடியாமல் போனது.

இப்படி கலப்பு ஏற்பட ஆரம்பித்த பின்,

  • இசையில் தேர்ச்சி பெற்றவனின் பிள்ளை, இசையில் ஆர்வம் இல்லாமல் பிறந்து விடுகிறான்.
  • ஆஸ்தீக குடும்பத்தில், நாத்தீக குணத்தோடு பிறந்து விடுகிறான்.
  • நாத்தீகனுக்கு ஆஸ்தீகன் பிறந்து விடுகிறான்.
  • சேமிக்கும் பழக்கம் உள்ளவனுக்கு ஊதாரி மகனாக பிறந்து விடுகிறான்.

இப்படி பல குழப்பங்கள் ஜாதி கலப்பினால் ஆரம்பம் ஆகி விஸ்வரூபம் எடுத்தது கலியில்.

பௌத்த மதம் வளர்ந்து கொண்டிருக்கும் சமயத்தில் தான், சந்திரகுப்த அரசன் பாரதம் முழுதும் ஆண்டார்.
அலெக்சாண்டர் பாரத தேசத்தில் கால் வைத்து விட்டான் என்றதும் அவனால் நியமிக்கப்பட்ட செலுகாஸ் நிகேடர் என்பவனை தோற்கடித்து, அவன் நட்பு கரம் நீட்டி தன் தங்கையை திருமணம் செய்து வைத்தான். கிரேக்க நாட்டு பெண் இந்திய அரசனை கை பிடித்தாள்.
இவருக்கு பின் வந்த அசோக சக்கரவர்த்தி, மகா வீரனாக இருந்தும், கலிங்க போரின் முடிவில், ஒரு புத்த பிட்சு சொன்ன அஹிம்சை போதனையால் மனம் மாறினான் என்று சொல்லப்படுகிறது.
க்ஷத்ரிய ரத்தம் ஓடும் அசோக சக்கரவர்த்தி "ப்ராம்மண" புத்தி கொண்டதற்கு காரணம் இவர் முந்தைய பரம்பரையில் ஒரு பிராம்மண பெண்ணையோ, ஆணையோ திருமணம் செய்து இருக்கக்கூடும்.

சரித்திரத்தை பின்னோக்கி ஆராய்ச்சி செய்தால் இதன் கலப்பு கண்டுபிடிக்கப்படலாம்.

அசோக சக்கரவர்த்தி காலத்தில், சிற்றரசர்கள் இவரால் பௌத்த மதத்திற்கு இழுக்கப்பட்டனர்.

போர் செய்ய அவசியம் ஏற்படாமல் போக, போர் குணம் இருந்தாலும், பயிற்சி இன்றி இருந்தனர்.
போர் வீரர்கள் பௌத்த மடம் கட்டுவதில் ஈடுபட்டனர்.

விளைவு: ஈரான், ஆப்கான் போன்ற பௌத்த மதம் பரவி இருந்த தேசங்களை இஸ்லாமியர்கள் தாக்கி, "கோரி" அரசாட்சியை நிலை நாட்டினர்.

பௌத்தனாக இருந்த இவர்கள், சந்நியாசி மதத்தில் இருந்து தோற்றதற்கு பதில் இஸ்லாமியன் ஆவோம் என்று மாறி விட்டனர்.
இந்த தேசங்களே இஸ்லாமிய தேசமானது.

ஜாதி கலப்பு அதிகம் ஏற்பட, 
பிறக்கும் குழந்தைகளின் குணம், பெற்றவர்கள் குணத்துடன் வேறுபட ஆரம்பித்தது.

இஸ்லாமியர்கள் இந்த சமயத்தில் பாரத தேசத்தை 1000 வருடங்கள் தாக்கி கொள்ளை, கொலை, கற்பழிப்பு, மத மாற்றம் என்று அழிக்க முயற்சி செய்தனர்.

இந்த போராட்டத்தில் கோடிக்கணக்கான செல்வங்களை இழந்ததை விட, க்ஷத்ரிய குணம் கொண்டவர்கள் பெரும்பாலும் அழிந்தனர்.

இந்த இழப்பு, பிராம்மண, வைசிய, சூத்திர குணம் கொண்ட, அந்த தொழில் செய்து கொண்டிருந்தவர்களுக்கு பெரும் சவாலாக இருந்தது.

சூத்திர (employee) குணம் கொண்டவர்கள் எப்படியோ யாருக்கோ உழைத்து தன் வேலையை செய்து வாழ்ந்தனர்.

வைசியர்கள் வியாபாரம் செய்து  எப்படியோ சமாளித்து வாழ்ந்தனர்.

ப்ராம்மணர்கள் உலக ஆசை இல்லாத வாழ்க்கை வாழ்ந்தாலும், அரசன் இவர்களை காப்பாற்ற இல்லாமல் போக, தனிமை படுத்தப்பட்டனர்.
இருந்த போதும், துளசி தாஸ், ராகவேந்திர, ராமதாசர், கிருஷ்ண சைதன்யர் போன்ற மகான்கள் அவதரித்து, ஏழ்மையிலும் ஹிந்துக்களுக்கு ஆன்மீகத்தை விதைத்தனர்.
ஆதி சங்கரர் கேரளாவில் அவதரித்து, காஷ்மீர் வரை சென்றார். ஒவ்வொரு தேசத்திலும் ஒரு மொழி பேசப்பட்டாலும், பொது மொழியாக சமஸ்கரிதம் இருந்துள்ளது.
காஷ்மீர் வரை சென்று, சமஸ்கரித மொழியில் விவாதம் செய்து வேத மார்க்கத்தை நிலை நாட்டினார்.

இவர் தன் தாய் மொழி மலையாளம் பேசவில்லை.
சமஸ்கரித மொழியில் மற்ற மாநிலங்களில் பேசினார்.

இன்று ஆங்கிலம் போல, அனைவருக்கும் தெரிந்த மொழியாக சமஸ்கரிதம் இருந்துள்ளது.

இந்த 1000 வருட இஸ்லாமிய ஆட்சியில், ஹிந்துக்கள் வர்ணிக்க முடியாத கொடுமைகளை சந்தித்தனர்.

முக்கியமாக, ஹிந்து பெண்களை காப்பது பெரும் சவாலாக இருந்தது.
ராணி பத்மாவதி போன்ற க்ஷத்ரிய பெண்களே, இஸ்லாமியர்களிடமிருந்து  தன் மானத்தை காப்பாற்றி கொள்ள தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டனர் என்றால், பொது மக்கள் நிலை எப்படி இருந்திருக்கும்?

ராமாயண காலத்தில் தசரதன் இறந்த பிறகு வாழ்ந்தனர் அவர் மனைவிகள்.
பாண்டு மகாராஜன் இறந்த பின்னும் குந்தி போன்றவர்கள் வாழ்ந்தனர்.

இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பில், சிக்கிய பாரத மக்கள், கணவன் இறந்து விட்டால், பயத்தினாலும், மானதிற்கு பயந்தும், தீயில் இறங்கினர்.

இந்த பய உணர்ச்சி, அவரவர் குடும்பத்தை விட்டு வெளியூர் சென்று சம்பாத்தியம் செய்வதை தடை செய்தது.

ஏழையாக போனாலும் கூட்டுக்குடும்பமாக இருந்து விடுவோம் என்று வாழ ஆரம்பித்தனர்.

விளைவு, வைசிய, சூத்திர தொழில் செய்பவர்கள் சமஸ்கரித மொழி பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

தமிழ் தேசத்தவர்கள், தெலுங்கு, கன்னட தேசம் சென்றால் தானே, பொது மொழியான சமஸ்கரிதம் பேசி உரையாட தேவைப்படும் !!
பயத்தின் உச்சத்தில் 1000 வருட இருந்த ஹிந்துக்கள், சம்ஸ்க்ரிதம் பேச வாய்ப்பு இல்லாமல் போனது.

100 வருடத்தில் 4 தலைமுறைகள் மாறும் பொது, 1000 வருடங்களில் 40 தலைமுறைகள் இந்த இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் சிக்கி விட்டது.
வெளியூர் சென்று வாணிபம் செய்வது போன்றவை தடைபட்டு, பொது மொழியாக இருந்த சமஸ்க்ரிதம் பேச்சு வழக்கில் இருந்து மறைந்து விட்டது. 

மேலும் தமிழனுக்கு கன்னடக்காரன் பேசும் பாஷை புரியாமல் போக, உட்பூசல் உண்டாகி, சகோதரர்கள் நாம் என்று கூட மறக்கும்படியாக செய்து விட்டனர் இஸ்லாமியர்கள்.     

இந்த 1000 வருடத்தில், கற்பழித்தும், கடத்தியும், கத்தியை காட்டியும் மதம் மாறி போனவர்கள், இன்றைய தேதியில் 40-50 தலைமுறை இஸ்லாமியனாகவே வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களும் ஹிந்துக்கள் தான் என்று சொன்னாலும், குறைந்தது 40 தலைமுறைகளாவது  கடந்து விட்டதால், இஸ்லாமியர்களாகவே இந்திய முகத்தை வைத்துக்கொண்டு வாழ்கின்றனர்.

ப்ராம்மணர்கள் மட்டும் வேதம் ஓதுவதால், சமஸ்கரித மொழி இவர்களிடம் மட்டும் பயன்பாட்டில் இருந்தது.

1000 வருட காலப்போக்கில், ப்ராம்மணர்களுக்கும் பேச்சு வழக்கில் இருந்து சமஸ்கரித மொழி பயன்படாமல் போக, அவரவர் மாநில மொழிகளில் பேச ஆரம்பித்தனர்.
அந்தந்த மாநில மொழிகளில் பக்தி பாடல்கள் உருவானது.


சமஸ்கரித மொழி பயன்பாட்டில் இல்லாமல் மெதுவாக அழிந்தது.

1000 வருட இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்து, கிறிஸ்தவ ஆட்சி ஆரம்பிக்க, படிப்பில் பிராம்மணன் மட்டுமே இருக்கிறான் என்று கவனித்தனர்.
மேலும் கோபம் என்ற குணம் எளிதில் வராதவர்களாக இருப்பதும் நிர்வாகத்துக்கு தேவைப்பட்டது.

க்ஷத்ரியர்கள் இல்லாமல் போய் விட்ட நிலையில், வாழ வழியை தேட, பிராம்மண குடும்பத்தில் ஒரு பிள்ளை ஆங்கிலேயன் கொடுக்கும் வேலைக்கு சென்றான்.
குடுமியை மறைத்து கொண்டு வேலை செல்ல, தலைப்பாகை அணிய ஆரம்பித்தனர்.
மற்ற குழந்தைகள் வேதம் கற்றனர்.
இவன் வருமானத்தில் குடும்பம் நடந்தது.
இது 200 வருட கிறிஸ்தவ ஆட்சியில், சூத்திரர்களுக்கு (employee) வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தியது. கொத்தடிமைகள் ஆக்கப்பட்டனர்.

வைஸ்யர்கள் (Business) தன் பிழைப்பை எப்படியோ பார்த்து கொண்டதால், அவர்கள் எதுவும் சொல்லாமல் இருந்தனர்.

காலப்போக்கில் நான்கு குணத்தில் (Spritual mind, Business Mind, Protection mind, Employee mind) இல்லாத, சமூக முன்னேற்றத்துக்கு உதவாதவர்களை பொதுவாக பஞ்சமர்கள் (திருடன், கொலைகாரன்) என்று அழைக்கப்பட்டவர்களை சமூகத்தில் விஷயங்களில் ஈடுபடுத்தாமல், ஒதுக்கினர்.
ஆங்கிலேய ஆட்சி காலத்தில், சூத்திர (Employee) தொழில் செய்பவர்கள் ஏழைகளாக அவதியுற்றனர்.
கால ஓட்டத்தில், பஞ்சமர்கள் என்று சமூகத்தின் விவாதத்தில் ஒதுக்கப்பட்டவர்களோடு சமூகத்துக்கு பாடுபடும் பலரும் விஷமத்தனமாக ஆங்கிலேயர்களால் பிணைக்கப்பட்டனர்.
அடிமை வாழ்க்கை வாழும் நிலைக்கு தள்ளினார் கிறிஸ்தவர்கள்.

விடுதலைக்கு பின், பஞ்சமர்கள் என்று அழைக்கப்பட்டவர்களில் கலப்பு ஏற்பட்டு இருந்ததால், திருடன், கொள்ளையன் போன்ற சமூக விரோதிகளோடு சேர்த்து, சாதாரண ஏழைகளும் இருந்தனர்.
கிறிஸ்தவ அரசாட்சியில், இவர்களுக்கு தலித் என்ற புதிய பெயரை வைத்தனர் கிறிஸ்தவர்கள்.

திருடன், கொள்ளைக்காரன் போன்ற கும்பலோடு, ஏழைகளாகி போன சமூகத்தினரையும் சேர்த்து அவமானப்படுத்தி, அடிமைகளாக்கி பார்த்தனர் ஆங்கிலேய கிறிஸ்தவர்கள்.
இவர்களது 200 வருட ஆதிக்கத்தில், இவர்களை தாழ்த்தப்பட்டவர்கள்  என்றே அழைத்து அடையாளப்படுத்தினர் கிறிஸ்தவர்கள்.

விடுதலை அடைந்த பின், அம்பேத்கர் பல ஜாதியில் இப்படி ஆங்கிலேயே அரசாட்சியில் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொன்னவர்களை, தலித் என்றே அடையாளப்படுத்தி அவர்களுக்கும் உரிமைகள் கிடைக்க சட்டத்தில் வழி செய்தார்.

இந்தியா விடுதலை அடைந்த பின், சூத்திரர்கள் (employee) ப்ராம்மணர்கள் மட்டும் வேலைக்கு செல்வார்களா? நாங்கள் செல்ல கூடாதா? என்று எதிர்த்தனர்.
ராஜாஜி போனறவர்கள் மீண்டும் "குல கல்வி" கொண்டு வரலாம் என்றார்.
இது தவறு என்று ஏற்க மறுத்தனர்.

ஒரு வேளை "குலகல்வி" கொண்டு வரப்பட்டு இருந்தால்,
இன்று அனைத்து "பிராம்மணர்கள்" வேதம் கற்பதும், கோவில் பூஜைகள் கவனிப்பது என்று மட்டும் தான் இருந்து இருப்பார்கள்.

'குலகல்வி' சட்டம் ஆக்கப்பட கூடாது என்றதால், இன்று ப்ராம்மணர்கள் வைசிய என்று அனைவரும் சூத்திர(employee) தொழில் செய்கின்றனர். Competition உருவானது.

அரசர்கள் இருந்த வரை,
ப்ராம்மணர்களுக்கு அடிப்படை வசதி செய்து கொடுத்து, வேதம், கோவிலை மட்டும் பார்த்துக்கொள்ள செய்தனர். மற்ற தொழில், வேலையில் ஈடுபட கூடாது என்று விதித்தனர்.
மற்ற தொழிலை கற்று கொள்ள அனுமதி உண்டு, ஆனால் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை அன்றைய காலத்தில்.

இந்த உதவியை விடுதலை அடைந்த பின், இந்திய அரசாங்கம் செய்ய தயார் இல்லாததால், ப்ராம்மணர்கள் படித்து தானே சம்பாதிக்க வேண்டியதாகியது.

அனைவரும் படிக்கலாம் என்ற சட்டம், நல்ல நோக்கத்தில் உருவாக்கபட்டாலும், எந்த படிப்புக்கு வேலை வாய்ப்பு அதிகமோ அதில் அனைவரும் முயற்சிக்க ஆரம்பித்தனர்.
இதனால் பல இதர தொழில்கள் அழிந்தன.
ஒரே வேலைக்கு லட்சக்கணக்கான பேர் படிப்பதால், வேலை இல்லா திண்டாட்டம் உருவானது.

படிப்பு ஒன்று, வேலை ஒன்று என்று அலங்கோலம் ஆகி, இன்று குழம்பி போய் இருக்கும் சமுதாயமாக ஆகி விட்டது.
1947ல் ஆரம்பித்து 60 வருடங்கள் ஏழைகள் ஆகி இருந்த ஹிந்துக்கள், தங்கள் குடும்பங்களை நிதானித்து சரி செய்து கொள்ள இரண்டு தலைமுறைகள் ஆகி விட்டது.

இந்தியர்கள் மீண்டும் ஹிந்து மதத்தின் பெருமையை அறிய ஆரம்பித்துள்ளனர்.
தங்கள் குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற, முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

இன்னும் இரண்டு தலைமுறையில் மீண்டும் ஹிந்துக்கள் தங்கள் பெருமையை நிலை நிறுத்துவார்கள்.

அடிப்படை தேவைகளான வீடு, உணவு, உடைக்கு உழைத்து தான் பெற வேண்டும் என்ற நிலையில் இருந்து விடுபட பாடுபடுகின்றனர் இன்றைய தலைமுறைகள்.

அடிப்படை தேவைகள் நிறைந்த சமுதாயம்,
ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள், கலை போன்றவற்றில் ஈடுபட சாமானிய மக்களுக்கும் இடமளிக்கும், நேரம் கொடுக்கும்.

1000 வருட இஸ்லாமிய, 200 வருட கிறிஸ்தவ ஆக்ரமிப்பில் பாரத தேசத்தில் பலர் பயத்தில், கற்பழிப்பில் மதம் மாற்றபட்டாலும், ஹிந்துக்களை காப்பாற்றியது இந்த லட்சக்கணக்கான ஜாதிகளும், வேதத்தில் சொல்லியுள்ள பல தெய்வங்களும் தான்.
இத்தனை ஜாதிகள், இத்தனை தெய்வங்கள் இருந்ததால் தான் , பல பிரிவுகளாக  இருந்த நாம் ஹிந்துக்களாகவே இருக்க முடிந்தது.

ஜாதிகளையும், ஹிந்து தெய்வங்களையும் அழித்தால், கிறிஸ்தவ மதத்தை பரப்பலாம் என்று, இன்று பெரு முயற்சி செய்து கொண்டுள்ளனர் காசுக்காக இன்று மதம் மாறி போனவர்கள்.   

இத்தனை காலத்துக்கு பின்னும், இன்னும் 100 கோடி ஹிந்துக்கள் தன்மானத்துடன் வீறு கொண்டு உள்ளனர்.

20 கோடி ஹிந்துக்கள் இந்த சமயத்தில் மதம் மாற்றப்பட்டனர் என்பது வேதனை என்றாலும், மீண்டும் ஹிந்துக்களை உருவாக்க, பலப்படுத்த ஹிந்துக்கள் விழித்து விட்டனர்.

தன் பெருமைகளை உணர தொடங்கி விட்ட ஹிந்துக்கள், மீண்டும் மலர்வார்கள்.

பிற மதங்கள், மனிதர்களால் காக்கப்படுகிறது.
ஹிந்துக்களை தெய்வங்கள் காக்கிறது. ஜாதி அமைப்புகள் காக்கிறது.

ஜாதியை ஒழிக்க நினைக்கும் திருடர்களை ஒடுக்க வேண்டும்.

"ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று பாடிய பாரதியாரின் நோக்கம் அடுத்த வரிகளில் புலப்படுகிறது.
"குல தாழ்ச்சி உயர்வு சொல்லல் பாவம்" என்று சொல்லும் போது தான், அவர் கீதையின் சாரத்தை சொல்கிறார் என்று தெரிகிறது.

ஜாதிகள் கட்டுப்பாட்டுக்காகவும், ஒரு அரசனையோ, ரிஷியையோ, கொண்டு உருவானது என்று அறிகிறோம்.


ஜாதியை கொண்டு இழிவு சொல்ல கூடாது.
பிறப்பில் பிராம்மண ஜாதியில் இருந்தாலும், குணத்தில் நாத்தீகனாக, திருடனாக, கொள்ளை அடிப்பவனாக இருந்தால், அவன் "பஞ்சமன்" தான்.

ஹிந்துக்களின் எதிரிகள் இந்த பஞ்சம குணத்தில் உள்ளவர்களே.
இவர்கள் அனைவரும் ஒடுக்க பட வேண்டும்.

ஹிந்துக்கள் ஒன்று பட வேண்டும். ஹிந்துக்கள் சேர வேண்டும்.
வாழ்க பாரதம். வாழ்க ஹிந்துக்கள்.


Tuesday 10 July 2018

"சூத்திரன்" என்றால் யார்? யாரை குறிக்கிறது இந்த சொல்? இது ஈன சொல்லா? முதலில் இது தமிழ் வார்த்தையா? தெரிந்து கொள்ள வேண்டாமா? அலசுவோம் ....

பிராம்மணஸ்ய முகம் ஆஸீத் ! (பிராம்மணன் கடவுளின் முகம் போன்றவர்கள்)

பாஹு ராஜன்ய க்ருத: ! (நாட்டை காக்கும் வீரன், அதாவது க்ஷத்ரியன் கடவுளின் தோள் போன்றவர்கள்)

ஊரு ததஸ்ய யத் வைஸ்ய: ! (வியாபாரம் செய்யும் வைஷ்யன், கடவுளின் தொடை போன்றவர்கள்)

பத்ப்யாம் சூத்ரோ அஜாயத: ! (விவசாயம் செய்யும், அனைவருக்கும் உழைக்கும் சூத்திரன் (Sudhra), கடவுளின் கால் போன்றவர்கள்)
Purusha Suktam -  Rig Vida



பொதுவாக இன்றைய தமிழனுக்கு
எது தமிழ்? எது சமஸ்க்ரிதம்? எது ஆங்கிலச் சொல்?
என்பது தெரியவில்லை  என்பது உண்மை.
இந்த அறியாமை தவறல்ல.
ஆனால், இந்த அறியாமையை பயன்படுத்திக்கொண்டு, நம் புத்தியை குழப்பி விட ஒரு கூட்டம் 1940ல் இருந்து வருகிறது.
இது நமக்கு அவமானம்.

Jail, apple, rose போன்ற ஆங்கிலச் சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.

அதேபோல,
கருணாநிதி, கோபாலஸாமி, ராமசாமி, திராவிடம், சூத்திரன் போன்ற சமஸ்க்ரித சொல்லை, இன்றைய தமிழன், தமிழ் சொல்லாக நினைக்கிறான்.

தமிழனின் இந்த கேளிகூத்தான புலமையை, கடந்த 60 ஆண்டுகளாக தமிழன் என்ற போர்வையில் ஏமாற்றி கொண்டு இருக்கின்றனர், போலி தமிழர்கள்.

திராவிடம் என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு, தமிழில் "மூன்று கடல் சூழ்ந்த நிலபரப்பு" என்று பொருள்.

இந்த சொல்லை கர்வபட்டு சொல்வதால், தமிழனுக்கு மட்டும் என்ன பெருமை வந்துவிட போகிறது?

'திராவிடம்' என்ற சமஸ்கிருத சொல்லை பயன்படுத்தி கொண்டு, சமஸ்கிருத மொழியை எதிர்க்கும் போலி தமிழர்களை என்ன சொல்வது?
'திராவிடம்' சமஸ்கிருத சொல், இது இடத்தை குறிக்கும் சொல் என்பதை அறிந்துள்ள, மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள் "நான் திராவிடன்" "நான் திராவிடன்" என்று புலம்புவது இல்லை.

அதே போல,
பிராம்மணன் - பகவானின் முகம் போன்றவன்.
க்ஷத்ரியன் -பகவானின் தோள் போன்றவன்.
வைஷ்யன் - பகவானின் தொடை போன்றவன்.
சூத்திரன் - பகவானின் கால்  போன்றவன்.
என்ற ஸ்லோகமும் இந்த போலி தமிழ் கூட்டத்தால் தவறாக திரித்து பேசப்படுகிறது.

பகவானின் அங்கங்கள் தான், "நாம் அனைவருமே" என்பதில் என்ன இழிவு இருக்க முடியும்?

பிராம்மணனின் (Spritual Person) தொழில் வேதம் ஓதுவது. அவன் பலம் வாக்கில் இருப்பதால், பகவானின் அங்கத்தில் முகம் போன்றவன் என்று சொல்கிறோம்.

க்ஷத்ரியன் (Protection force) தொழில் நாட்டை காப்பதிலும், உதவி செய்வதிலும் இருப்பதால், பகவானின் தோள் போன்றவன் என்று சொல்கிறோம்.

வைஸ்யன் (Business people) தொழில், அமர்ந்தபடி பல வியாபாரங்கள் செய்து, வேலை ஆட்கள் கொண்டு வேலையை முடித்து பொருள் திரட்டுவதால், ஆதலால், பகவானின் தொடை போன்றவர்கள் என்று சொல்கிறோம்.

சூத்திரன் (Employee, Farmer) தொழில், தானே விவசாயமோ, அல்லது பொதுவாக வைஸ்யன், பிராம்மணன், க்ஷத்ரியன் என்று அனைவருக்கும் உழைத்து, அதில் அவர்கள் சம்பளமாக கொடுக்கும் பணத்தை கொண்டு தானும் வாழ்ந்து, அவர்களுக்கும் உதவியாக இருப்பது.
ஆதலால், பகவானின் கால் போன்றவர்கள் என்று சொல்கிறோம்.


ஒரு மனித சமுதாயத்தை ஒழுங்காக நடத்த,
1. நாட்டை காக்க, சட்ட ஒழுங்கை காக்க கொஞ்சம் க்ஷத்ரியன் (protection force) தேவை.

2. அனைத்து மக்களும் நியாயம் அநியாயம், நல்லது கெட்டது, ஆன்மீகம், கடவுள் சிந்தனை பெற, கொஞ்சம் ப்ராம்மணர்கள் (spiritual inclined people) தேவை.

3. பொருளாதாரம் வளர, கொஞ்சம் வியாபாரிகள் (businessman) தேவை.

4. வியாபாரியின் நோக்கத்தை புரிந்து கொண்டு, நியாயமாக உழைக்க அதிகமாக சூத்திரர்கள் (Employee) தேவை.






இப்படி மனித சமுதாயம் அமைக்கப்படும் போது, அந்த நாடு "பாதுகாப்புடன், தர்மத்துடன், முன்னேற்றம்" என்ற பாதையில் வீறு நடை போடும்.

ஒரு நாட்டில்,
க்ஷத்ரியன் குறைவாக இருந்தாலும்,
பிராம்மணன் குறைவாக இருந்தாலும்,
வைஷ்யன் குறைவாக இருந்தாலும் கூட,
மனித சமுதாயம் கொஞ்சம் கஷ்டப்பட்டாலும் சமாளிக்க முடியலாம்.

ஆனால், சூத்திரன் (Employee, Farmer) எண்ணிக்கை குறைந்தாலோ, அல்லது அவர்கள் வைஸ்யனையோ (Businessman), க்ஷத்ரியனையோ (protection force),
பிராம்மணனையோ (Spiritual) ஆதரிக்க மறுத்தாலோ,
அவனால் மற்ற மூன்று தொழில் செய்பவர்களும் சேர்ந்து கஷ்டப்படுவார்கள்.
பிற நாட்டினர் உள்ளே நுழைந்து பெரும் நாசத்திற்கு வித்திட்டு விடும்.

இப்படி மனித சமுதாயத்துக்கு ஆதாரமாக இருப்பதால், 'சூத்திரன்' கால் போன்றவன் என்று சொல்லப்படுகிறது.

'கால்' இல்லாத முடவன், மற்ற உறுப்புகள் இருந்தும் முடங்கி விடுவானல்லவா?.


"கால்" உள்ளவன் மற்ற உறுப்புகள் ஆசைப்படும் இடத்திற்கு அழைத்து செல்வது போல,
சூத்திரன் (farmer, employee) தன் உழைப்பால், மற்ற தொழில் செய்பவர்கள் செய்ய ஆசைப்படும் இடத்திற்கு கொண்டு செல்ல உதவி செய்கிறான்.

போருக்கு செல்லும் படையை ஒரு வண்டியில் அழைத்து செல்லும் ஒரு சூத்திரன் (employee) எல்லையில் இறக்கி விட உதவி செய்கிறான்.
இப்படி சூத்திரன் செய்யும் உதவிக்கு, க்ஷத்ரியன் (Army) இவனுக்கு ஆபத்து நேராமல் பார்த்து கொள்கிறான்.

"சூத்திரன்" என்ற சொல்லை பற்றி மேலும் அலசுவோம்....

பிராம்மணன் மட்டும் என்ன உயர்வா? நாங்கள் மட்டும் என்ன தாழ்வா?
நாம் அனைவரும் அந்த கடவுளின் பிள்ளைகள் தானே?
ஏன் நாங்கள் மட்டும் தலையாக இருக்க கூடாது?
என்று இந்த போலி தமிழர்கள் கூட்டம், நம் ஹிந்து மதத்தை கேள்வி கேட்பதாக நினைத்து, சூத்திரனுக்கு வக்காலத்து வாங்குவதாக நினைத்து, இந்த கேள்வியை கேட்கின்றனர்.

இதே மடத்தனமான கேள்வியை, சரித்திரத்திலும் சிலர் கேட்டு  இருப்பதை நாம் காணலாம்.

கஸ்யபருக்கு பிறந்தவர்கள் அசுரர்கள், தேவர்கள்.
ஒரு அப்பனுக்கு ஒரு நல்ல பிள்ளை, ஒரு திருட்டு பிள்ளை இன்று வரை பிறக்க தான் செய்கிறது.
கஸ்யபர் மட்டும் விதி விலக்கா?

ஒரே தந்தை என்றாலும், அசுரர்களும், தேவர்களும்  குணத்தால் வேறுபட்டார்கள்.

ஒரு சமயம் பாற்கடலில் அம்ருதம் கிடைக்க வாசுகி என்ற பாம்பை மலையில் சுற்றி கடைந்து அம்ருதம் எடுக்க தயார் ஆனார்கள்.

அசுரர்களுக்கு வால் பகுதியை பிடிக்க சொல்லி, தேவர்கள் பாம்பின் தலை பக்கம் சென்றார்கள்.

ப்ராம்மணன் மட்டும் முகத்தில் வந்தான், சூத்திரன் காலில் வந்தானா? 
என்று இன்று கிளப்பி விடும் கூட்டம், இதே போன்ற கேள்வியை அன்றே கேட்டனர் என்று படித்து தெரிந்து கொள்ளலாம்.

அசுரர்கள் இப்படி பாம்பின் வாலை பிடித்து இழுக்க வேண்டும் என்றவனுடன், முரண்டு பிடித்தனர்.

"ஏன் நாங்கள் பாம்பின் கால் பக்கம் இருக்க வேண்டும்?
அது என்ன தேவர்கள் மட்டும் தலை பக்கம்?
நாங்கள் என்ன தேவர்களை விட தாழ்ந்தவர்களா?
இருவருமே கஸ்யபருக்கு தானே பிறந்தோம்?
நாங்கள் தலை பக்கம் நின்று தான் கடைவோம்"
என்று வேலை நிறுத்தம் செய்தனர்.

முட்டாள் தனமாக இப்படி பேசுவார்கள் என்று எதிர்பார்த்து தான், தேவர்கள் இவர்களை வால் பக்கம் நிற்க சொன்னர்கள்.
எதிர்பார்த்தது போலவே,
அசுரர்கள் பிடிவாதம் செய்ய, பாம்பின் தலை பக்கம் நிற்க சொல்லி, தாங்கள் அனைவரும் வால் பக்கம் சென்றனர்.

முட்டாள் அசுரர்கள், பாம்பை வைத்து மலையை கடைய, ஒவ்வொரு இழுப்புக்கும் அது விஷத்தை கக்கியது.
வீம்பு செய்து வாங்கியதால், மெல்லவும் முடியாமல், துப்பவும் முடியாமல், அசுரர்கள் நிலை ஆனது.

இது போன்ற காழ்ப்புணர்ச்சி அசுர ஸ்வபாவம் தான், இந்த போலி தமிழர்கள் நம்மிடையே விதைக்கிறார்கள்.

உண்மையான அர்த்தம் மகத்துவம் வாய்ந்தது.

"சூத்திரம்" என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு,
தமிழில் சொல்ல வேண்டுமென்றால், "அடிப்படை விதிமுறை" என்று அர்த்தம் வருகிறது.

ஆங்கிலத்தில் "Formula" என்று சொல்வார்கள்.



FORMULA:
e=mc2 என்பதை ஐன்ஸ்டீன் கண்டுபிடித்த சூத்திரம் (formula) என்பார்கள்.

சூத்திரத்தை கொண்டுதான், உலகம் இயங்குகிறது.

e=mc2 என்ற சூத்திரம் தன் பணியை ஒழுங்காக செய்யவில்லையென்றால், உலகம் அழிந்து விடும்.
திடீரென்று,
சக்தி (e) தன் சூத்திரத்தை மாற்றிக்கொண்டு mc4 என்று ஆனால், உலகம் அழிந்து விடும்.

இப்படி அடிப்படையாக இருக்கும் இதையே,  சூத்திரம் என்று சொல்கிறோம். Formula என்று ஆங்கிலத்தில் சொல்கிறார்கள்.

இந்த வார்த்தையை கொச்சை படுத்திய கூட்டம், இன்று உள்ள 'போலி தமிழர்கள்'.

இவர்களுக்கு
எது தமிழ்? எது ஆங்கிலம்? எது சமஸ்கரிதம்? என்று தெரியாது.
இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இதற்கு ஒரே வழி, "நம் அறிவை வளர்த்து கொள்வது" ஒன்றே தான்.

அடிப்படை விதிமுறையாக (formula), "மனித சமுதாயத்தில்" விவசாயம் (farmer) மற்றும் மற்றவர்களுக்காக உழைக்கும் (employee) மனிதர்களை, மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள் என்று சொல்கிறோம்.

விவசாயம் செய்யாமல், வேலைக்கு செல்லாமல், "மனித சமுதாயம்" செயல் படவே முடியாது என்பது, கொஞ்சம் அறிவு உள்ளவனுக்கு புரியும்.

90% சதவீத மக்கள், ஒரு வைஸ்யனுக்கோ (businessman), ஒரு ஆன்மீகவாதிக்கோ (spiritual), ஒரு தேசப்பற்று உள்ளவனுக்கோ (protection force), வேலை செய்து, அதற்கு கூலியாக சம்பளம் பெற்று,
தன் குடும்பத்தையும் காப்பாற்றி, சமுதாயமும் ஒரு சீராக நடக்க உதவி செய்கின்றனர்.
சிலர் அதற்கும் மேல் போய், அனைவருக்கும் உயிர் வாழ, "விவசாயம்" செய்து உணவு படைக்கின்றனர்.

"வேலைக்கு செல்லும் அனைவரும்", "விவசாயம் செய்யும் அனைவரும்" இந்த மனித சமுதாயத்துக்கு "சூத்திரம்" போன்றவர்கள்.
இதில் என்ன சந்தேகம் நமக்கு வர போகிறது?

சூத்திரன் என்ற சமஸ்கிருத சொல்லை, இந்த போலி தமிழர்கள் விட்டு விட்டு, "அடிப்படை விதிமுறை" என்று சொல்லட்டுமே?

இந்த போலி தமிழர்களுக்கு அப்படி என்ன சமஸ்கரித சொல்லில் பற்று?

திராவிடம், சூத்திரன், கருணாநிதி என்ற சமஸ்கிருத சொல்லை மாற்றி, அதற்கு ஈடான தமிழ் சொல்லை பயன்படுத்தலாமே ?

இப்படி ஆதாரமாக உள்ள இந்த விவசாயிகள் (farmer), வேலைக்கு போகுபவர்களை (employee), மனித சமுதாயத்தின் சூத்திரன் என்று சொல்வதை, எந்த புத்திசாலி குறையாக சொல்வான்?

கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு.

நம்முடைய வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்ற சூத்திரம் அவர் கையில் உள்ளது என்பதால், அவருக்கு சூத்ரதாரி என்றும் பெயர் கூட உண்டு.

"உன் குடுமி என் கையில்" என்று சொல்வதும் உண்டு.


சூத்திரன் என்ற சம்ஸ்கிருத சொல்லுக்கு பதிலாக, "மனித சமுதாயத்தின் குடுமி", என்று கூட சொல்லலாமே? போலி தமிழர்கள்.
இனியாவது இந்த சமஸ்கிருத மோகத்தை விடுவார்களா?
எது தமிழ், எது சமஸ்கிருத சொல் என்று புரிந்து கொள்வார்களா போலி தமிழர்கள்?

கடவுளுக்கே "சூத்ரதாரி" என்று பெயர் உண்டு என்று சொல்லும் போது, சூத்திரன் என்ற சொல் தமிழ் சொல்லா? ஆங்கில சொல்லா? சமஸ்கிருத சொல்லா? என்று கூட புரியாத இந்த போலி தமிழர்கள், ஊரில் உள்ள தமிழர்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.

இவர்களின் புத்தி மழுங்கிய பேச்சில் இருந்து தப்பிக்க, நம் அறிவை வளர்த்து கொள்வதே சிறந்த வழி.

உண்மை அர்த்தத்தை மற்ற ஹிந்துக்களுக்கு சொல்வதே சிறந்த வழி.

Share it, if worth reading..